தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, May 07, 2016

மோக முள் - தி. ஜானகிராமன் (302-398)


மோக முள் - தி. ஜானகிராமன் (302-398)
23

"ஜபமா? நடந்துகொண்டே செய்வோமே..." "ஏண்டா நேத்திக்கு வரலெ?"

"மெட்ராஸிலேர்ந்து எங்கண்ணா வந்திருந்தான்." "அண்ணா இருக்கானா உனக்கு ?" "ஒன்றுவிட்ட அண்ணா."

签302签

தி. ஜானகிராமன்

மெட்ராஸிலே என்ன பண்றான்?"

_தோ கம்பெனியிலே வேலையாயிருக்கான்."

_அவனோட சுத்தினியாக்கும்?"

"சுத்தினவன் இங்கேயும் எட்டிப் பார்த்துவிட்டுப் போதுதானே _ாயு மாதிரி இங்கே ஒரு கிழம் இருக்கு பாாறானனு அண்ணா பகுக் காமிக்கப்படாதோ'

தம்புராவில் சுருதி சேர்க்க வழக்கம்போல் கால் மணிக்கு மலாயிற்று அவருக்கு.

"இன்னிக்கி என்ன இவ்வளவு சுருக்க வந்துட்டே'

"சுருக்க எழுந்துட்டியாக்கும்."

"அண்ணா ஊருக்குப் போயிட்டானா?".

"போய்ட்டான்."

போகாட்டா இன்னிக்கும் வந்திருக்கமாட்டே."

வந்திருப்பேன்."

போடா போ. உன்னைத் தெரியாதா எனக்கு: யார் வந்தா என்னடா அதுக்காக நம்ம காரியத்தை விட்டுவிட முடியுமா? மழையோ, பனியோ, மனுஷாளோ யார் வந்தா என்ன P காரியம்னா முக்கியம். அண்ணா வந்திருக்கான், தம்பி வந்திருக்கான்னு கூடச சுத்திண்டிருக்க முடியுமோ? - ம்."

தம்புராவை மீட்டிக்கொண்டிருந்தார் ரங்கண்ணா கேட்டுக் கொண்டே இருந்தார். பாபுவும் கேட்டுக்கொண்டே இருந்தான்.

அதன் தூய நாதம், குறையின்றி சுருதி சேர்ந்த நாதம் காந்தாரக் கார்வையுடன் அலை அலையாக ஒன்றன்பின் ஒன்றாக எழுநது பரவிக்கொண்டேயிருந்தது.

உள்ளத்தில் அடித்த புயல் அடங்கிவிட்டது. மரங்கள் நிமிர்ந்து அமைதியுடன் நின்றன. இருள் அகன்று காலையிளம் கதிரவனின் மெல்லிய கிரணங்கள், சூடில்லாத கிரணங்கள், அதில் விழுந்திருந்தன.

"சுருதி சேரேண்டா"

சுருதி சேர்த்தான் பாபு.

婆303 婆

மோக முள்



கிழவர் அவனைக் கண் கொட்டாமல் பார்த்தார்.

ஒரு நிமிஷமாயிற்று. கிழவர் அவனையே பார்த்துக்கொண்டிருந் தார். எதற்காகப் பார்க்கிறார் இப்படி?

சட்டென்று தம்புராவை வருடிய விரல்கள் நின்றன. "ஏண்டா, உடம்பு கிடம்பு சரியா இல்லையா?" "இல்லையே." "ஏன் இப்படிக் கிழம் தட்டிப்போச்சு?"

o ஆ

"நடுங்கறதேடா குரல்... ஆரமிச்சதிலேருந்து பார்க்கிறேன். ஒரு இழை கீழே நிக்கறே-இல்லாட்டா மேலே நிக்கறே... இல்லை வேற எங்கேயாவது ஞாபகமோ?"

- "பசியாயிருக்கா? காலமே வயத்துக்கு ஏதாவது போட்டியோ இல்லியோ காபி சாப்பிட்டியா?"

"சாப்பிட்டேன்."

"அண்ணாவோட சினிமா, டிராமான் எதுக்காவ போயிருந்தியோ?" னு எது து

"இல்லை."

"பின்னே ஏன் இப்படி விலகி விலகி ஒடறது. சரி ஜாக்ரதையா, கவனிச்சுப் பிடி"

பாபு மறுபடியும் தொடங்கினான்.

- # சரி. பாடு" என்று அலுத்தாற்போலச் சொன்னார் ரங்கண்ணா. பாடறபோது சரியா வந்துடும்."

பாபு பாடும்போது முகத்தை முகத்தைச் சுளித்துக்கொண்டார் ரங்கண்ணா.

"ஏண்டா, இன்னிக்கி என்ன வந்துடுத்து உனக்கு ஏன் இப்படி ஒரே கோணலாயிருக்கு ?"

பாபு தலையைக் குனிந்துகொண்டான். "ஜுரம் கிரம் அடிக்கிறதா?”

"இல்லை." "எங்கே கையைக் காட்டு" என்று நீட்டினார் ரங்கண்ணா.

"இல்லை" என்று கையைப் பின்னுக்கிழுத்துக்கொண்டான் பாபு.

இ 304 ஆ. தி. ஜானகிராமன்

அவர் கேட்ட கேள்விகள் புதிதாக ஒரு நடுக்கத்தைப் புகுத்தி _ன.

"ஜுரம் கிரம்னா தொட்டுப் பார்க்கறேனேடா."

"ஜுரமில்லை. நல்ல வேளையாகத் தொடாமல் தப்பித்தார் பண்ணா, நாமும் தப்பித்தோம்.

"சரி, உடம்பு கிடம்பு ஜாட்யமா இருக்கும். கிணத்துலே குளிச்சியோ?" o

"இல்லை." "புதுத்தண்ணி முறை விட்டிருப்பான் காவேரியிலே, அமராவதி தண்ணியோ என்னமோ. சித்தெ கலங்கலா இருக்கும். உடம்பு வலி எடுத்திருக்கும். சாப்பிடறயே. அங்கே கொஞ்சம் வெந்நீரைப் போட்டுத் தரச்சொல்லிக் குளிக்கப்படாதோ?”

"உடம்பு ஒண்ணுமில்லையே." பின்னே ஏன் இப்படித் தவிக்கிறே சுருதியிலே சேராமே..? சரி. இன்னிக்குப் போரும். எழுந்திரு. நாளைக்குப் பார்த்துக்க லாம். உடம்பு ஏதாவது பண்ணித்துன்னா சொல்லு கஷாயம், கஞ்சி ஏதாவது போட்டுத்தரச் சொல்றேன்."

"வேண்டாம். ஒண்னுமில்லே." "சரி, எழுந்திரு." பாபு எழுந்து நின்றான். "எங்கேடி சாம்பன். ஊருக்குப் போயிருக்கானோ அவன். எனக்கு ஞாபகமில்லை. நேத்து சாயங்காலம்தானே சொல்லிவிட்டுப் போனான். ராம ராம" என்று எழுந்துகொண்டே தாழ்வாரத்தில் கிணற்றங்கரையைப் பார்க்க நடந்தார். ரங்கண்ணா. பாபு பின் தொடர்ந்தான்.

"என்ன சேதி" என்று திரும்பினார் அவர் கிணற்றங்கரையில்,

"ஒண்ணுமில்லை." "இன்னும் போகலியா நீ?" "வெந்நீர் நான் எடுத்து வைக்கிறேன்." "உனக்கு என்னத்துக்குடா இதெல்லாம்!" "இல்லை. எடுத்துவைக்கிறேன்." "வாண்டாம் வாண்டாம், நான் பாத்துக்கறேன் போ" பாபு கேட்கவில்லை. அடுப்பிலிருந்த அண்டாவிலிருந்து வெந்நீரை எடுத்து விளாவி ஜோட்டியில் கொட்டினான்.

மோக முள் 婆305 婆



- "நீ என்னத்துக்குடா சிரமப்படறே ஐயோ... சாம்பன் செய்யறான்னா நீயும் செய்யனுமா. போடா போ."

அவர் ஈர வேஷ்டியைக் கீழே போட்டதும், ஜோட்டியில் அவற்றைப் போட்டுத் தோய்க்க ஆரம்பித்தான் பாபு.

"ஏய், என்னது. நீ போடு. அவ தோச்சுப்ப. உன்னைத் தாண்டா."

பாபு கேட்கவில்லை. "ஏய் செவிடு, உன்னைத்தான், சும்மா இரு” - - - - - - - o ரு எனறு அவா *. கத்திக்கொண்டே அவன் கையிலிருக்கும் வேஷ்டியைப் டுங்கினார். போடு கீழே உனக்கு எதுக் கெல் - பேசாம உள்ளே போ" கு எதுக்குடா இதெல்லாம்:

"இல்லே."

- "இல்லையாவது ஒட்டையாவது. நீ போ சொல்றேன் ... உன்னாலே முடியாது.டா. பூஞ்சை உடம்பு உனக்கு."

"முடியும்."

கிழவர் அடம் பிடித்தார் லில் - - - - முதலில் வெறுப்பு மாதிரி இருந்தது. இவருக்கு ஏதாவது நம்மைப்பற்றித் தெரியுமா... என்ன?

நான் இதுக்குக்கூடப் பாவம் பண்ணிவிட்டேனா' என்று சொல்லும்போது பாபுவுக்குத் தழதழத்துவிட்டது.

திகைத்துப்போய் அவன் முகத்தைப் பார்த்தார். ரங்கண்ணா. - “チrf} போ. உன் இஷ்டம்." என்று கையை விட்டார். ஆலேஜிலேயும் கீலேஜிலேயும் படிக்கிறவனுக்கு எதுக்குடா இதெல்லாம்: இதுக்கு நட்டாமுட்டி ஒருத்தன் இருக்கானே ... சாமபன அவன் போதாதா? நீ வேறயா?"

- "என்ன இரைச்சல் பேட்டுண்டிருந்தேள் இத்தனை நாழியா?" என்று கொல்லை நிலையில் வந்து நின்றாள் அவர் சம்சாரம்

"ஒண்னுமில்லே. வேட்டியைத் தோய்க்கிறேன்னான். வாண்டாம்னு சொல்லிப் பார்த்தேன். அழக் கிளம்பி விடுவன் போலிருந்தது. விட்டுட்டேன்."

"கிழிச்சுப்பிடாம தோய்டாப்பா - - - - - - - ... இநத் சாம்ப வட்டம் வந்துடும் ஏதாவது." இ னுககு நாலுநாள் "சாம்பன் என்னடி பண்ணுவன் மூணு வயிறு நம்பிண்டிருக்கே

- - - - - டிரு அவனை இங்கே வந்து தந்தனப்பாட்டுப் பாடிண்டிருந்தா நடக்குமா?" என்று அவர் சொல்வதற்குள் உள்ளே போய்விட்டாள் கிழவி.

பாபுவின் மனம் உண்மையில் சோர்ந்துதான் கிடந் - - - - ந்தது. இந்தச் சிறு பணிவிடையால் கிடைத்த அனுமதி போதவில்லை. உலகத்தின்

婆306 淺 தி. ஜானகிராமன்

_நகைக்கும் கண்கள், அவன் கற்பனையில் விச்வரூபம் _து. பார்த்துப் பார்த்தே எரிப்பது போலிருந்தது. வெளியே _உடல் கூசிற்று. இந்த வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டால் _ இந்த வீட்டில் வேலைக்கா குறைச்சல் ஒட்டடையடிக்கலாம், _ப் பெருக்கலாம், தண்ணிர் விட்டுக் கழுவலாம், கொல்லையில் _வாழைகள், துளசி, நந்தியாவட்டை இவற்றிற்குத் தண்ணிர் _றலாம். கொத்திவிடலாம் ... கிழவியிடம் திட்டம் கேட்டுக் _ாண்டு சமைக்கலாம் ...

_ஏண்டா நிக்கறே நாழியாகலையா உனக்கு போய்ட்டு _என்றார். ரங்கண்ணா.

பாபு தலையைக் குனிந்துகொண்டே நடந்தான்.

அறைக்கு வந்ததும் வழக்கம்போல அவன் மொட்டை மாடிக் _வைத் திறக்கவில்லை. அங்கே பார்க்கும் ஜன்னலின் கதவுகளையும் ாத்திவிட்டான்.

அறை, இரவின் நினைவுகளைக் கொணர்ந்து மனதை நாலு பக்கமும் நாய்களைப்போலப் பிடுங்கி இழுத்தது. நீரின் பீச்சல்களுக்கு நடுவில் எண்ணெய்க் கம்பத்தில் ஏறுகிறவனைப்போல விழுந்து விழுந்து மனம் மேலே ஏற முயன்று கொண்டிருந்தது.

வாசலில் அங்காடிக்காரி கூவிக்கொண்டே போனாள். இந்த அறையை விட்டால் வேறு போக்கிடம் இல்லையா? எங்கெங்கோ சுற்றிவிட்டு இங்குதானா வர வேண்டும்? அங்காடி மாதிரி தெருத் தெருவாகச் சுற்றிக்கொண்டிருந்தால் என்ன?

"பாபு, பாபு."

கைலாசத்தின் சம்சாரத்தின் குரல் மாடிப்படியில் கேட்டது.

"ஏன் ?"

"நீ இருக்கியா? ... எப்ப வந்தே?"

"கால் மணியாச்சு."

"உன்னை யாரோ தேடிண்டு வந்தா."

"யாரு?"

"யாரோ பையன். துக்காம்பாளையத் தெருவிலே உனக்கு யாரோ தெரிஞ்சவாளாமே. அவா வீட்டிலே உன்னை வரச்சொன்னா ளாம். வரதுக்கு ஒம்பது மணியாகுமேன்னேன். கொஞ்சம் காத்திண் டிருந்தான். அப்புறம் சமாசாரத்தைச் சொல்லிவிடுங்கோன்னு போயிட்டான்."

"வரச் சொன்னாளாமா ?”

மோக முள் 婆307婆



"ஆமாம். முடிஞ்சா உடனே வரச்சொன்னாளாம். இல்லாட்டா சாயங்காலமாவது கட்டாயம் வரச்சொல்லணும்னான் அந்தப் பிள்ளை."

“grsf."

துயரத்திலிருந்தும், கலக்கத்தினின்றும் விலகி நின்ற பாபுவுக்கு இப்போது வெட்கமாயிருந்தது. எதற்காக அந்த விடியற்காலையில் அங்கு போனோம்? போன உடனேயே பிரமை பிடித்தாற்போல எதையோ சொல்லிவிட்டு எதற்காக எழுந்து வந்தோம்: ராஜத்தின் வீட்டைக் கடந்தவன், இவள் வீட்டையும் கடக்காமல் ஏன் உள்ளே போனேன். ஏன்?"

O

ராஜத்தின் முன்னால் முகத்தில் அழுக்கில்லாமல், கலக்க மில்லாமல் எப்படி நிற்பது என்றுதான் புரியவில்லை. பார்த்தவுடன் அவனும் சந்தேகப்பட்டால், நடந்ததைச் சொல்லிவிடத்தான் வேண்டும். அவன் சந்தேகப்ப ட்டது எவ்வளவு சரியாக நடந்துவிட்டது! முதல் முதல் பார்த்த அன்றே அவன் சந்தேகப்படவில்லையா?

கல்லூரிக்குப் போனபோது அன்று ராஜம் வரவில்லை, கடலங்குடித் தெருவிலிருந்து வரும் இன்னொரு பையனைக் கேட்டபோதும், ராஜத்திற்கும் உடம்பு சரியாயில்லை என்று தெரிந்தது.

"என்ன உடம்பு ?"

"ஜுரம் மாதிரியிருக்காம். அவன் அப்பாதான் லீவ் லெட்டரைக் கொண்டு கொடுத்தார்."

"எனக்கு ஏதேனும் சொன்னாரோ?" என்று கேட்டான் பாபு.

"ஒண்ணும் சொல்லலியே."

இந்த ராஜம் எப்போதுமே இப்படித்தான். ஜூரம் என்று எனக்குச் சொல்லி அனுப்பினால் என்ன? வா என்று சொல்லி

யனுப்பினால் என்ன? எப்போதுமே தனியாக நிற்கிறவன் இவன். கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

நல்ல வேளையாக வரவில்லை' என்று உடனேயே சமாதானப் படுத்திக்கொண்டான்.

மாலையில் யமுனா என்ன கேட்பாள், எப்படிக் கேட்பாள், எப்படிப் பதில் சொல்வது என்று திட்டம் போட்டுக்கொண்டான்.

இவள் ஒரு அதிசயப்பிறவி, ஜபத்திற்கு உட்கார்ந்து கண்ணை மூடும்போது இதயத்தில் கொண்டு பாதத்தை வைப்பவள். நம்பிக்கை யும், தைரியமும் ஊட்டுகிறவள். மனத்துணிவை வற்றாத தன் கண்ணிலிருந்து ஊட்டுகிறவள். ஆனால் ... ஆனால் ... எதற்காக இப்படி இப்படி...

婆308婆 தி. ஜானகிராமன்

எல்லாருக்கும் இந்த அன்பு இவளுடைய பரிவும், அன்பும் _க்கக் கூடியவைகளா? இடைத்துக்கொண்டேயிருக்கின்றனவா _று யாரும் அங்கு வரவில்லையே? ... எனக்குத்தானே இந்த _பு. இந்தப் பிடிவாதம் பிடிக்கும் அன்பு: இந்த அன்புக்கு

_அவ்வளவுதானா அர்த்தம்!

எதற்காக இந்த இரட்டை உருவம்: ஜபம் செய்யும்போது _ய்வம்! அப்புறம் ... அழகான பெண்ணாக, யெளவனத்தில் _மாந்த கோலாஹலமாக, வனப்பை மூடும் மறைவைக் கழற்றி, நினைவைக் கவ்வி, நினைவழிந்து ...

ஆனால் இரண்டுமாக இருக்க முடிகிறதே இவளால்! காலையில் நான் அங்கு போனதும் இதனால்தானா? என்னை அங்கு இழுத்துச் சென்றது எது?

O

மாலையில், "பாபுவா வா" என்று கிணற்றடியில் முகத்தையும் _ாலையும் சோப்புத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்த யமுனா வரவேற்றாள்.

"உட்காரு பாபு, வந்துவிட்டேன்" என்று இடுப்பில் செருகியிருந்த புடவை முனையை எடுத்துக் கணைக்காலை மறைத்துக்கொண்டாள் - அவள்.

கொல்லையிலிருந்து நெல் புழுக்கும் சூட்டு வாடை வந்தது. பார்வதி அடுப்பண்டை உட்கார்ந்து கண்ணை இடுக்கிப் புகையோடு மன்றாடுவது தெரிந்தது.

இதயத்தில் பாதம் மட்டும் இல்லை. சந்தனக்கட்டையில் செதுக்கிய நீர் ஜாடியைப் போல, மது ஜாடியைப் போல, அநதக கணைக் கால்களும் பாதத்தின் மேல் வந்து நின்றன. கணனைச களித்தும் அந்தத் தோற்றத்தைக் கண்ணைவிட்டுப் பெயர்க்க முடிய வில்லை. இந்த இதயத்தின் சேற்றில் அந்த இரண்டு காலகளும கணைக்கால்களும் முழுங்காலும் ஆழப்பதிந்துவிட்டன. எப்படி எடுக்க முடியும்?

இந்த இதயமா சேறு இல்லை .. இல்லை . . .

உடல் சற்றுச் சிலிர்த்தது அவனுக்கு.

இந்த இதயமா சேறு?... இல்லை, இல்லவே இல்லை .. வந்து வந்து நிற்கும் இந்தக் காலை எப்படி மறக்க முடியும்? இந்த நினைவை, எதற்காக மூடி மறைக்க வேண்டும்? தகாதது என்று தோன்றினால் தானே மூடி மறைக்க:

"என்ன பாபு: காலேஜ் விட்டாச்சா?" என்று முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டே வந்தாள் யமுனா. கழுத்திலும்

மோக முள் 签309签



கன்னத்திலும் நீர் நனைத்திருந்தது. கழுத்தடியில் சோப்பு நுரை ஒரு சுட்டி, புடவையில் அங்குமிங்கும் சுட்டி சுட்டியாக ஈரம் படர்ந்து கிடந்தது.

"மணி அஞ்சரை ஆச்சே" என்றான் பாபு. "ம், காலமே ரூமில் இல்லையாமே நீ?" "ஆமாம், வெளியிலே போயிருந்தேன். வீட்டுக்காரா சொன்னா"

"என்னத்துக்குக் காலமே வந்தே, உட்கார்ந்தே விறுக்குன்னு எழுந்து போனே?"

"அம்மா என்ன பண்றா?"

தி அம்மா காதிலே விழாது. கொல்லைத் தாவாரத்திலே உட்கார்ந்

ருக்கா ..."

பாபு தலையைக் குனிந்து உட்கார்ந்துகொண்டிருந்தான். "எழுந்திருக்கவே இல்லேன்னியே... ராத்திரி தூங்கலையா?"

“Lh ""

இல்லை என்ற பாவனையில் தலையசைத்தான் அவன். "எங்கேயாவது போயிருந்தியா?"

"இல்லை."

"நேரே ரூம்லேருந்துதான் வந்தியா?"

"ஆமாம்."

"எப்ப கிளம்பினே ?"

"நாலு மணிக்கு."

"நாலு மணிக்குக் கிளம்பி இங்கே வரதுக்கு ஒண்ணே கால் மணி நேரமாச்சா?"

"இல்லை."

"எங்கே போனே ?"

"பக்தபுரி அக்ரகாரத்தோட போய் மாமாங்குளத்துக்குப் போனேன்" "மாமாங்குளத்துக்கா! எதுக்கு."

"அப்புறம் நேரே கடலங்குடித்தெரு வழியா, கடைத்ெ வழியா இங்கே வந்தேன்." தமதரு

"மாமாங்குளத்துக்கு எதுக்குப் போனே?"

签310签 தி. ஜானகிராமன்

m -

பாபு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். யமுனா, என் உயிரை வாங்காமல் இருக்க முடியாதா உனக்கு" என்றான் தாழ்ந்த குரலில்

யமுனா தலையைக் குனிந்துகொண்டாள். கொல்லை வாசல் தெரியும்படியாகத் தாழ்வாரத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு _ார்ந்துகொண்டாள்.

"உன் உயிரை வாங்கத்தான் கூப்பிட்டேன்னு நெனச்சா நான் அப்பறம் என்னத்தைக் கேட்கிறது?" என்றாள். "ஒண்னும் கேட்கப் படாதுன்னா சொல்லிவிடு."

"என்ன யமுனா. கோபம் வந்துவிட்டதா?”

"பின்னே என்ன? கூப்பிடறவளை மதிச்சுப் பதில் சொன்னால் தேவலை."

"மதிக்காமலா இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன் உன்னை மதிக்காமலா? உன்னை மதிக்காமல்” உன்னையில் அதிக அழுத்தம் விழுந்ததைக் கேட்டு யமுனா சற்றுத் திகைத்துப் போய்ப் பார்த்தாள்.

"என்ன பாபு இது?"

"மறுபடியும் அழப்போறியா?"

இல்லை என்று சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டே தலையசைத்தான் அவன்.

"பச்சைக் குழந்தை மாதிரி, என்ன பாபு இது எதுக்கு இப்படிக் கண் கலங்கறே: காலமே வந்தியே, எதுக்கு அழுதே அப்படி?"

"எதோ சொல்லணும்னுதான் வந்தேன். சொல்ல முடியலெ."

"இப்ப சொல்லு"

"முடியாது."

"பரவாயில்லே, சொல்லு, எங்கிட்ட வந்து சொல்லணும்னுதானே தோணித்து காலமே, அப்படின்னா சொல்லேன்."

"உங்கம்மா கேட்டுக்கொண்டு வந்துவிடுவள்."

"அம்மாவுக்குத் தெரியாமல், நீ எங்கிட்ட என்ன ரகசியம் சொல்லப் போறே?"

பாபு திகைத்துப்போய் நிமிர்ந்தான். "அப்படியா நீ நினைக்கிறே?"

"ஆமாம், அப்படித்தான். அம்மாவுக்குத் தெரியாத எதைச் சொல்லப்போறே நீ?"

மோக முள் 婆311婆



"அப்படின்னா நான் எப்பவுமே சொல்ல முடியாது." "அம்மாவுக்கு தெரிஞ்சாலும் பரவாயில்லேன்னு நினைக்கிறேன்."

"நீ நினைக்கலாம். நான் நினைக்கவில்லை. தனியாகத் தாங்கிக் கொள்கிற இரகசியங்கள் இருக்கிறபோது, மூன்றாவது பேரை எப்படி பரவாயில்லைன்னு சேர்த்துக்க முடியும் மனசிலே பாரமா யிருந்தது. சொல்லி விடட்டுமா ? எனக்கு முடியல்லெ. உங்கிட்ட சொல்லலாம்னு ஓடி வந்தேன். அப்பா, அம்மா, அக்கா, ராஜம் . ஒருத்தர் கிட்டவும் என்னாலெ இதைச் சொல்ல முடியாது."

"ராஜம் யாரு?"

"என் சிநேகிதன்." "சிநேகிதன் கிட்ட சொல்ல முடியாத ரகசியமா?" "ஆமாம்."

"என்ன ரகசியம்."

"உனக்குத் துரோகம் பண்ணின ரகசியம்." "துரோகமா? எனக்கா?" "ஏன் ? நீ நம்பவில்லையா?" "அப்படி என்ன எனக்குத் துரோகம் பண்ணிவிட்டே?” "யமுனா, நீ நிறுத்திக்கமாட்டியா?" "முக்கால்வாசி சொல்லியாச்சு. அப்புறம் என்ன?”

நான் கும் வச்சிண்டிருக்கேனே அதுக்கு அடுத்த வீட்டிலே குடியிருக்கா ஒருத்தர். கிழவர். அவர் இரண்டாவது கலியாணம் பண்ணின்டு வந்திருக்கார்."

"அழகாயிருப்பாளா?"

"ரொம்ப."

பாபு அலிகார் பூட்டையும் தேள்கடி மருந்து வாங்கிக் கொடுத்ததையும், கடிதங்களையும், தான் உதைத்துக்கொண்டு கிடந்ததையும் பின்பு மறந்ததையும் சொன்னான்.

"ஹ்ம்" என்று பெருமூச்செறிந்தாள் யமுனா.

"நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்குமேல் இருக்கும். படுத்துக்கப்போறபோது திடீர்னு அவ வந்து என் ரூம் நிலையிலே, மொட்டை மாடி நிலையிலே வந்து நின்னா ... அவர் ஊரில் இல்லியம் ... உள்ளே வந்தா... நான் போயிடு போயிடுன்னு கெஞ்சினேன். போகலெ, ரண்டு மணி நேரத்துக்கு அப்பறம்தான்

姿312签 தி ஜானகிராமன்

ானா. நான் முன்னாலேயே இறங்கி கீழே போயிடலாம்னு பாத்தேன். முடியலே "

யமுனா தலையைக் குனிந்துகொண்டாள். முகம் சற்றுக் கடுத்தது பாலிருந்தது. நிமிர்ந்தபோது சர்க்கரை போடாத நன்றாகக் காய்ச்சாத பாஸ்போல ஒரு புன்னகை தவழ்ந்தது.

விறுக்கென்று பாபு எழுந்தான்.

"இதைத்தான் அம்மா இருக்கும்போது சொல்லனுமான்னு பாத்தேன்."

"ஏன் எழுந்துவிட்டே' போகணும்." _ால்லாம் சொல்லியாச்சா" _எல்லாம் சொல்லனுமா?"

"எல்லாத்தியும் சொல்லுவாங்களா ? நீ சொல்ல வேண்டிய தெல்லாம் சொல்லிட்டியா?"

"இல்லை."

"சொல்லேன்."

வேண்டாம்."

_அம்மா இப்ப வரமாட்டாள்." "வராட்டாலும்தான்." "எனக்கு என்ன துரோகம் இதனாலெ?"

பிச்சுப் பிச்சுச் சொன்னாத்தான் புரியுமா உனக்கு யமுனா? இல்லை. நான் சொல்லவே போறதில்லை."

"ஏன் p"

"உனக்குப் புரிஞ்சுதோ புரியலியோ? நீ கேட்டுண்டே இருக்கே சொல்லு சொல்லுன்னு. இனிமேலும் சொன்னா மட்டும் புரிஞ்சுடப் பொறதா? சொல்லாமல் புரியாதது சொல்லியா புரியப்போறது?"

அவன் எழுந்து நாற்காலியை, கொல்லையைப் பார்க்கும்படி யாகப் போட்டுக்கொண்டான்.

"என்ன யமுனா ?"

"D."

"இன்னும் புரியும்படியாக் சொல்லணுமா?"

"வாண்டாம்."

மோக முள் ※ 313 蔓



பாபு பேசாமல் உட்கார்ந்திருந்தான். யமுனாவும் பேசவில்லை.

ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், ஆறேழு நிமிஷம் ஆயிற்று.

யமுனா குனிந்த தலை நிமிரவில்லை; இடது கட்டை விரல் நகத்தை வலது விரலால் ராவிக்கொண்டே இருந்தாள்.

அவள் முகத்தில் கதவு திறந்திருக்கிறதா, அடைத்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"என்ன யமுனா ?"

"լb."

"நான் சொன்னது பிடிக்கலியா?

"11)."

"சொல்லேன்."

"பிடிக்கிறதோ பிடிக்கலையோ, நான் ஒன்றும் சொல்லத் தயாராயில்லை இப்ப."

"நான் சொல்லத் தயாராயில்லாததைச் சொல்லு சொல்லுன்னு அவசரப்படுத்தினியே."

"தப்புதான். நான் இதை எதிர்பார்க்கவில்லை."

"அப்படின்னா?"

"எதிர்பார்க்கவில்லை."

"நான் எதிர்பார்த்துண்டு இருந்தேன்!"

"பாபு என்று கெஞ்சுவது போல் நிமிர்ந்தாள் அவள் வேண்டாம் பாபு வேண்டாம்." அவள் குரல் ஆழத்தில் கம்மிக் கிடந்தது. உயிரற்று முனகுவதுபோல் தொண்டைக்குள் தேய்ந்தது.

"ஏன்? ஏன் வேண்டாம்கறே அதோ அம்மா வரா."

"என்ன பாபு, காலமே வந்தியாம். பொசுக்குனு வந்த உடனே கிளம்பிட்டயாமே. பல் தேய்ச்சுட்டு வர்றதுக்குள்ளேயும் நகந்துட்டியே" என்று சொல்லிக்கொண்டே வந்தாள் பார்வதி.

"சும்மா உலாவிட்டு வந்திண்டிருந்தேன் விடியகாலமே. எட்டிப் பார்த்துட்டுப் போனேன்" என்று மெதுவாகச் சொன்னான் அவன்.

"என்ன யமுனா, பேசிட்டே உட்கார்ந்திருக்கியே. காபி கீபி கொண்ணாந்து தரப்படாதா அதுக்கு ?"

"எனக்கு வேண்டாம்."

"உட்காரு பாபு, கொண்டுவந்து தரேன்" என்று உள்ளே எழுந்துபோனாள் யமுனா.

婆314婆 தி. ஜானகிராமன்

_lங்க ரெண்டுபேரும் பேச ஆரமிச்சாதான் பூலோகமா _ாசமான்னு ஆயிடுதே "

_ஆமா, நீங்க என்ன கொல்லையிலேயே ஆணியடிச்சு _ாந்துட்டேள்?"

_ஆமாம், நெல்லு புழுக்கனும் புழுக்கணும்னு ஒரு வாரமாப் பயிட்டே இருந்தது. இன்னிக்கி உட்கார்ந்துகிட்டேன். யமுனாவும 1_பதுக்கு முன்னாடிதான் கிளம்பினா கொஞ்சம் இரு வந்துடறேன். _லெல்லாம் அனலும் சொணையுமா ஒட்டிக்கிட்டிருக்கு சமாச்சாரம் நிறைய இருக்கு சொல்லனும் நீ பாட்டுக்கு யமுனா கிட்ட ால்லிக்கிட்டு கிளம்பிடாதே" என்று மீண்டும் கொல்லையில் பானாள் பார்வதி.

பாபுவுக்கு உட்கார இஷ்டமில்லை. யமுனாவின் முகம் அனல் பட்ட பூவாக வாடிக்கிடந்தது. நான் சொன்னதைத் தவறாக படுத்துக்கொண்டுவிட்டாளா? நான் சரியாக முழுவதையும சொல்லவில்லை. வேண்டாம் பாபு வேண்டாம்" என்ற அவள் குரல் கம்மிக் கிடந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்றா பொன்னாள் :

இரண்டு நிமிஷம் கழித்து யமுனா காப்பியைக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் இருக்கும் கிண்டலும் மலர்ச்சியும் இறந்துவிட்டாற் போலிருந்தது.

"யமுனா ?”

"தவறா நினைச்சுட்டியா?" "நீதான் என்னை நினைச்சுட்டே அப்படி"

"நான் தவறா நினைச்சேன். ஆனா நான் நினைக்கிறது அவ்வளவும் மனப்பூர்வமா நினைக்கிறேன். என் அப்பாவும் நானும் !பூஜை பண்ற தெய்வத்தின் ஆணையாக என் நம்பிக்கை, என் வார்த்தை யெல்லாம் உண்மையானது. மனப்பூர்வமானது."

"காப்பியைச் சாப்பிடு."

"வருத்தமாயிருக்கா?"

- - - - - - 2. - - "வருத்தம் என்ன? எதை நெனைச்சு வருததபபடது. சாப்பிடு என்று யமுனா கொல்லைப்பக்கம் போனாள்.

வேண்டாம் பாபு, வேண்டாம்."

இதற்கு என்ன அர்த்தம்: இவ்வளவு வேதனை எதற்காக: நாம்தான் முழுவதும் மனதில் படும்படி சொல்லவில்லையா? என்னைச் சரியாகப் புரிந்துகொண்டால் வேதனைப்பட இடம்

மோக முள் 婆315婆



ஏது? என் மனசை முழுவதும் சொல்வதென்றால் இந்தத் தனிமை போதாது. பயமும் கூச்சமும் பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருக்கும் இந்தத் தனிமை போதாது. பார்வதி இல்லாத சமயத்தில்தான் எல்லாவற்றையும் சொல்ல முடியும்.

பார்வதி கொல்லையில் குளிக்கப் போயிருந்தாள். இப்பொழுது யமுனா வரமாட்டாளா?

யமுனா வரத்தான் வந்தாள். வேறு புடவை உடுத்திக்கொண்டு குங்குமததை விரலால் எடுத்துக் கைக்கண்ணாடியில் பார்த்து நெற்றியில் வைத்துக்கொண்டிருந்தாள்.

"யமுனா ?”

"என்ன ?"

"இப்படி உட்காரேன்." 'எதுக்கு" என்று கேட்டுக்கொண்டே முன்போலவே கொல்லை

கண்ணுக்குத் தெரியும்படியாக முற்றத்தில் உள்ள பெஞ்சின்மீது உட்கார்ந்தாள் யமுனா.

"அம்மா என்ன பண்ணிண்டிருக்கா?”

"குளிக்கிறா கொல்லைத் தாவாரத்திலே இருக்கு குளிக்கிற உள்ளு காதில் விழாது."

இந்தப் பதிலைக் கேட்டு பாபுவுக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது. பதிலின் பொருளில் உள்ள உற்சாகம் குரலில் இல்லை.

"நான் சொன்னது வேதனையாயிருக்கா?" "ஆமாம்." "வேதனைப்படும்படியாக என்ன சொல்லிவிட்டேன் நான் "

"எனக்கு வேதனையாயிருக்கு அவ்வளவுதான். நீ சொன்னது சாதாரணமாயிருக்கலாம்." யமுனா நிமிராமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நான் சொன்னது நியாயப்பிசகாகப் படுகிறதா?”

“Lh ?"

"எனக்கு ஒண்ணுமே புரியவில்லை." "தகாத காரியமாகப் படுகிறதா?” "அதுவும் புரியவில்லை." "பின்னே வேதனையாக மட்டும் இருக்குங்கிறியே."

姿316签 தி. ஜானகிராமன்

"வேதனையாகத்தான் இருக்கு."

_ாரணம் ?"

"காரணம் தெரியவில்லை. மனசு சங்கடப்படுகிறது."

வேதனை படர்ந்த அந்த முகத்தைச் சற்றுக் கூர்ந்து கவனித்தான்

"சங்கடப்படுகிறதுன்னா, நீ தைரியமாகச் சொல்லேன் எதனா _று. நான் நியாயத்தவறாகப் போகலேன்னு எனக்குப் பூர்ணமாக நம்பிக்கையிருக்கு அப்படி இருந்தும் உன் மனது சங்கடப்படுகிறதுன்னா

_று வாயைவிட்டுச் சொல்லலாம்."

"பாபு."

"என்ன ?"

"இப்படியெல்லாம் எங்கிட்ட பேச எப்படித் துணிஞ்சது _ாக்கு ?"

ஒரு கணம் பாபுவைக் கலங்கச் செய்துவிட்டது இந்தக் கேள்வி. யமுனாவின் முகத்தில் கோபமில்லை. கடுமையில்லை. கண்மட்டும் அவனையே பார்த்தது. நாலைந்து விநாடிக்குமேல் அதைப் பார்க்க _தியில்லாததுபோல, பாபு வேறு எங்கோ கண்ணைத் திருப்பிக் கொண்டான். சற்று மெளனமாக இருந்துவிட்டுச் சொன்னான்.

"எப்படித் துணிஞ்சுதுன்னு கேக்கறியா? ... யமுனா, நீ ஏன் ஒண்ணும் புரிஞ்சுக்கமாட்டேன்னு பிடிவாதம் பண்றே நான் இப்படி ஒரு நாள் கேட்பேனென்று நானும் எதிர்பார்க்கத்தான் இல்லை. நாலைந்து மாசமாகத்தான், வெவ்வேறு ஜோடியிலிருந்து பொறுக்கின இரண்டு செருப்பைப் போட்டுக்கொண்டு நடக்கிறாற் போல இருக்கிறது."

"பாபு, சரியாகச் சொல்லு, எனக்குப் புரியவில்லை."

"ஒரு எண்ணம், தெய்வத்தைப் போல - தெய்வம் என்றுதான். நான் ஸ்வாமி என்று நினைத்துக்கொள்கிறபோதெல்லாம் உன் முகம்தான் என் முன் வந்து நிற்கும். உன் பாதம்தான் வந்து நிற்கும். உன்னை சாதாரண மனித ஸ்திரீயாகவே நான் நினைக்கிறதில்லை. குளிக்கிறதும் சாப்பிடுகிறதும் சாதாரணமாகப் பேசுகிறதும், கலியாணம் செய்துகொள்கிறதும் குடித்தனம் நடத்துகிறதும் அம்மாவாக ஆகிறதும் -சாதாரண ஸ்திரீகள்-செய்கிற காரியம். நீ அதற்கெல்லாம் மேம்பட்டவள் என்ற எண்ணம்தான் எனக்கு உனக்குக் கலியாணம் என்றால் புரிகிறதில்லை எனக்கு கோயம்புத்துரிலிருந்து வந்தானே அவனைப் பார்த்ததும் கோபம் கோபமாக வந்தது எனக்கு . அவன் முரண்டிக்கொண்டு போனதும் எனக்கு அப்பாடா என்று குளிர் விட்டாற்போலிருந்தது."

மோக முள் 签317签



"உனக்கு ஒரு போட்டி ஒழிஞ்சு போச்சுன்னா?”

"அப்படித்தான் இருக்க வேண்டும். நீ சொல்லும்போதுதான் தெரிகிறது. இப்போதுதான் படுகிறது. அந்த சமயத்தில் காரணம் தெரியாத கோபம்தான் இருந்தது. இவ்வளவு முட்டாளாக இருக்கிறானே என்று கோபமாக வந்தது."

"பொறாமையாகன்னு சொல்லு."

"இருக்கலாம்." "செருப்பை சேராத ஜோடியா எப்பப் பண்ணிண்டே?”

"எனக்குத் தெரியவில்லை. நாலைந்து மாசத்துக்குள்தான் - என்று, எந்த நிமிஷம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை."

"உனக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது?"

"நான் ஸ்வாமி என்று நினைக்கிறபோது யார் முகத்தை நினைக்கிறேனோ அவர்களைத்தான் கேட்க வேண்டும்."

"இப்பவும் செருப்பு விச்சோடியாகத்தானிருக்கா? இல்லே, புது செருப்போட ஜோடி கிடைச்சுட்டுதா"

"கிடைத்துவிட்ட மாதிரி இருக்கிறது. பழையதைக் காணவில்லை இப்போது எப்பொழுதாவது மறுபடியும் வந்துவிட்டாற் போலிருக்கிறது."

"அதனாலே சொல்றதுக்கும் துணிச்சல் வந்துவிட்டதா?"

"ஆமாம், நேற்று ராத்திரி வரையில் இது அவ்வளவும் தெளிவாகக் கூடத் தெரியவில்லை. ராத்திரிதான் எனக்கு பளிச்சென்று தெரிந்தது. அப்பொழுதும் சொல்லத் துணியவில்லை. இப்போது நீயாக என் மனசையும் வாயையும் பிடுங்கிவிட்டாய்."

"நான் பிடுங்கினது தப்புதான்." "பிடுங்காவிட்டால் உள்ளேயே புதைந்து எரிந்துகொண்டிருக்கும்." "வேண்டாம் பாபு, வேண்டாம்." "நீ இதைப்பற்றி நினைக்கக்கூட மாட்டியா p" "நினைப்பேன். எப்படி உனக்கு என்னைப் பார்த்து இந்த எண்ணம் வந்தது என்று நினைச்சு ஆச்சர்யப்பட்டுட்டே இருப்பேன்."

"அப்புறம்?"

"ஆச்சரியப்பட்டுட்டே இருப்பேன். அவ்வளவுதான். இப்ப அதிர்ச்சியாகக்கூட இருக்கு."

"அதிர்ச்சியாகவா?”

婆318婆 தி. ஜானகிராமன்

எங்கேயோ பாத்துகிட்டு நிக்கறபோது திடீர்அ பின்னாடி

_ குத்தினா, அதிர்ச்சியாகத்தான் இருக்கும்." "உண்மையாக நீ எதிர்பார்க்கவில்லையா?"

உண்மையாக இல்லை."

"இந்த மாதிரிதான் நான் நினைப்பேன் என்று எங்கேயாவது, _ாருசமாவது சந்தேகப்படக்கூட இல்லையா?"

"நீ அப்படி நடந்துக்கவே இல்லியே." பாபு பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

"எனக்கு ஏன் இது நியாயமாகப்படுகிறது?" என்று சற்றுக் அழித்துக் கேட்டான்.

-- o

"தப்பான எண்ணம், தகாத எண்ணம் என்று எனக்கு குறுகுறுக்கக்கூட இல்லியே"

"நான் தப்பு, அநியாயம்னு சொல்லவில்லையே இப்ப"

"என்ன யமுனா தப்பு, சரி, நியாயம், அநியாயம்ன்னு பெரிய தர்க்கமாயிருக்கே? என்ன என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பார்வதி. பாபுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வருவதைக் கவனிக்கவில்லை. கொல்லை யைப் பார்த்து உட்கார்ந்திருக்கிற யமுனா ஏன் எச்சரிக்கைகூட செய்யவில்லை; அம்மாவுக்கும் தெரியட்டும் இது மூடிவைக்கத் தேவையில்லாத விஷயம் என்று நினைத்துவிட்டாளா? இல்லை, வழக்கமாக இருக்கிற குறும்பா?

"ஒண்னுமில்லேம்மா" என்றாள் யமுனா.

"நியாயம், நல்லது எல்லாம்தான் வெள்ளம் அடிச்சிகிட்டுப் போயிடிச்சே இனிமே அதைப்பத்தி என்ன?" என்று ஜோட்டியை முற்றத்து ஒரமாக வைத்தாள் பார்வதி.

பாபுவுக்கு வயிற்றை நமநமவென்றது. கேட்டுக்கொண்டுதான் வந்துவிட்டாளா? தகாத எண்ணம் இல்லை என்று சொன்னோமே, ஏன் இப்படிப் பயப்படுகிறோம் என்று அவனுக்கே புரியவில்லை. யாரை நினைத்துப் பயப்படுகிறோம் இப்போது: பார்வதி தெரிந்து கொண்டுவிடப் போகிறாள் என்றா? உலகம் தெரிந்துகொண்டுவிடப் போகிறது என்றா? யார் தெரிந்துகொண்டால் என்ன? நான் இதைத் தவறென்று எண்ணவில்லை.

"வெள்ளம் அடிச்சுகிட்டுப் போனாலும் பேசத்தானே வேண்டி யிருக்கு டாக்டர் சவத்தை அறுத்தாத்தானே மோசடியிலே போன

மோக முள் 簽319婆



கேஸா, தானாப்போன கேஸான்னு தெரியும். நிஜம் தெரிஞ்சுக் கிறதுன்னா பேசித்தானே ஆகணும்" என்றாள் யமுனா.

"பேசுங்க போன உசிரு என்னமோ திரும்பி வராது. அப்படி எதைப்பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க நியாயம்தான் உங்க அப்பாவோட போயிடிச்சே, அதைப்பற்றித்தானே பேசிக்கிட்டிருக்கீங்க."

"அதுன்னு குறிப்பாகப் பேசலை. ஏதோ உலகத்திலே நடக்கிற தெல்லாம் பற்றிப் பேசினோம்" என்றாள் யமுனா.

"உலகம் என்ன? உங்க அண்ணா செஞ்சிட்டு வர்றதைத்தான் சொல்லேன். நியாயம் அநியாயத்தைப் பற்றிப் பேச அதைவிட ஒரு பேச்சு இருக்க முடியுமா?"

"நீயே பேசிக்கவேன்."

"நான் பேசத்தான் போறேன். அதுக்காகத்தான் அதை இருக்கச் சொன்னேன். இரு பாபு, இதோ வந்துவிடறேன்" என்று ஊஞ்சலைக் கடந்து காமிரா உள்ளைப் பார்க்கச் சென்றாள் பார்வதி ஸ்நானம் செய்துவிட்டு துணியால் ஈரத்தலையை முடிந்துகொண்டிருந்தாள் அவள் குளித்த புதுமை அந்த உடலில் அவவ்ளவு பொலியவில்லை. ஏதோ பழைய மண் பொம்மையைத் துணியால் தூசி தட்டினாற் போலிருந்தது. உடல் பாதியாக இளைத்துக் கிடந்தது. விதவைக் கோலம் -நெற்றி, மூக்கு கைகள், கழுத்து கால் விரல் அனைத்தையும் சூன்யமாக்கியிருந்தது. தோல் வறண்டு கிடந்தது. கண்ணின் கீழ் வறண்டு சுருங்கியிருந்தது. புதிதாக ஒரு சிறு கூனல் விழுந்திருந்தது. கன்னத்தில் வறட்சி; மூப்பு விறுவிறுவென்று யாரோ கொஞ்சம் இடங்கொடுத்ததும் மடத்தைப் பிடுங்குவதுபோல் உடல் எங்கும் பரவி ஆக்ரமித்துக்கொண்டிருந்தது.

"அம்மா ஏன் இப்படி இளைச்சுக் கிடக்கா" என்று கேட்டான் பாபு.

"ஆமாம். ராத்திரி சாப்பிடறதே இல்லை. மத்யானம் உட்கார்ந்து கொறிக்கிறா. நெனச்சு நெனச்சு கண்ணாலெ ஜலம் விடறா. ஒரு வேளை சாப்பாடுதான். மத்த வேளைகளில் காபி.”

"உடம்பு பாதியாய்ப் போயிடுத்தே இப்படி?" "சொன்னால் கேட்டால்தானே."

"ஏதாவது வியாதியிலே கொண்டு விட்டுவிடும் இப்படி பட்டினி போட்டுண்டிருந்தா..."

"நீ சொல்லு. நான் சொன்னா ஏறாது அவளுக்கு."

"அண்ணா என்ன செய்தார்?"

"அண்ணாவா? பணம் இருக்கிறவங்க செய்யறதைத்தான் செய்தான்."

签320签

தி. ஜானகிராமன்

_அப்படின்னா?”

எனக்குப் பிடிக்கல்லே பாபு அதைப்பற்றிப் பேச அம்மாவே _லட்டும். எனக்கு இதெல்லாம் நெனச்சாலே மனசு கசந்து _றது. எல்லா மனுஷங்களிடமுமே நம்பிக்கை நல்லெண்ணம் _ாம் குறைஞ்சு போயிடும் போலிருக்கு."

_அவ்வளவு தூரம் கசந்துகொள்ளும்படியாக செய்துவிட்டானா"

பார்வதி அறையிலிருந்து வந்தாள்.

உங்கப்பா ஒண்ணும் எழுதலியா பாபு உனக்கு" என்று _ாள்.

"எதைப்பற்றி?"

"இவ அண்ணனைப் பற்றி"

"இல்லையே."

"ரண்டு மூனுநாள் கழிச்சு உங்கப்பாதுக்கம் கேக்கப் போனாங் _ாம். நீ ஊர்லேந்து வந்து, அப்பா நெல்லுவண்டி நாலஞ்சு நாள்ளே அனுப்பறேன்னு சொன்னாங்கன்னு சொல்லலியா?

"ஆமாம்."

"அந்த நெல்லு வரவே இல்லை."

"வரவேயில்லையா!"

"ம்ஹம் அனுப்பிக்க வாண்டாம். வித்து இஞ்ச பணமா அனுப்பிச்சிடுங்க. நான் இங்கேருந்து அனுப்பிச்சுக்கறேன்னானாம் இவ. அண்ணன். உங்கப்பா சரிதான்னு அப்படியே செஞ்சிட்டாங்க பதினஞ்சு நாளுக்கப்பறம் ஒரு வண்டி அனுப்பிச்சான் வணடி ஓட்ற ஆளுக்கிட்டவே ஒரு லெட்டரும் கொடுத்தனுப்பிச்சான். யமுனா, அந்த லெட்டரைக் கொண்டாயேன். இதுவும்தான் பார்க்கட்டுமே."

"நாம வேதனைப்படறது போதாதுன்னா ?" என்றாள் யமுனா. "வேதனை என்ன ..."

"கொண்டாயேன் யமுனா" என்று பாபு சொன்ன பிறகு யமுனா எழுந்து உள்ளேயிருந்து கடிதத்தைக் கொண்டு வந்தாள்.

"வாசிச்சுப் பாரு உலகம் எப்படி மாறுதுன்னு பாரு." கடிதத்தைப் பிரித்தான் பாபு. "இரைஞ்சுதான் வாசியேன்."

அவன் வாசித்தான்.

婆321 婆

மோக முள்



"ஒரு வண்டி நெல் இத்துடன் வருகிறது."

"பார்த்தியா ஆரம்பத்தை... முன்னெல்லாம் சின்னம்மாவுக்கு அநேக நமஸ்காரம்னு எளுதுவான். இப்ப சின்னம்மான்னு கூப்பிடக் கூட பிடிக்கல்லே. நமஸ்காரம் பண்ண வாண்டாம், சின்னம்மாவுக்கு எழுதிக்கொண்டதுன்னாவது எளுதினா வந்து ஒட்டிக்கப் போறாங் கன்னு நெனச்சான் போலிருக்கு ... அப்பறம் வாசி. இன்னும் வேடிக்கையெல்லாம் இருக்கு."

"சிறுமணிய நெல்லுதான். பழைய நெல்லாக நல்லதாகப் பார்த்து அனுப்பியிருக்கிறது. கடைசி தடவையாதலால் எனக்குக் கண்ட நெல்லை அனுப்ப மனசு வரவில்லை. நெல்லைக் குதிருக்குள் போடச் சொல்லி சாக்குகளைக் கொடுத்தனுப்பிவிடவும். யமுனா செளக்யம் என்று நம்புகிறேன். இப்படிக்கு சுந்தரம்."

வாசித்துவிட்டு "கடைசி தடவைன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டான் பாபு.

"அதான் எங்களுக்கும் புரியல்லெ, எழுதிக் கேட்கலாமான்னு பார்த்தேன். இவதான் வாண்டாம் வாண்டாம்னு குறுக்கே விழுந்து தடுத்தா. நாலு நாளுக்கப்புறம் அவனே வந்தான். என்ன சுந்தரம் என்னமோ எழுதியிருந்தியேன்னு கேட்டேன். ஆமாம்னு தலையைக் குனிஞ்சிக்கிட்டே சொன்னான். அப்பா நாலாயிரம் ஐயாயிரத்துக்கு நகை பண்ணிப் போட்டுட்டார். வீடும் கொடுத்திட்டார். இத்தனை நாளாக் காப்பாத்திட்டும் போயிட்டார். எவ்வளவுதான் செய்ய முடியும்? அங்கேயும் சம்சாரம் குறைச்சலாயிருக்கான்னான்."

"விடேம்மா அந்தப் பேச்சை" என்றாள் யமுனா.

"விடாம என்ன செய்யப் போறேன். அவன் தீர்த்துவிட்டுப் போய்ட்டான் ஒரு முடிவா. நான் விடாம என்ன ? என்னமோ வேத்து ஆள் மாதிரின்னா பேசிட்டுப் போனான். அதான் எனக்கு ஆறமாட்டேங்குது, சொல்றேன்."

"முடிவாச் சொல்லிவிட்டுப் போயிட்டாரா" என்று கேட்டான் பாபு.

"முடிவாச் சொல்லிவிட்டுப் போயிட்டான். நகையை வித்து பெண்ணுக்குக் கலியாணம் பண்ணனுமாம். அப்புறம் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு சின்ன வீடா பார்த்துக்கிட்டுப் போயி அந்த வாடகையை வச்சிகிட்டு சாப்பிடணுமாம்."

"ஏன் அவன் சொல்றதிலே என்ன தப்பு: என்று கேட்டாள் யமுனா. பார்வதியை நிறுத்துவதற்காக அவள் எதிர்க் கட்சியைப் பிடித்துக்கொண்டதுபோல் தோன்றிற்று.

"என்ன தப்பா?"

婆322 婆 தி. ஜானகிராமன்

_ஆமாம். அப்பா செய்ய வேண்டிய கடமை செஞ்சுப்பிட்டாரு. அப்புறம் பிள்ளையும் செய்யனுமா? நான்தான் கேட்கிறேன்."

செய்யனுமோ? இல்லியோ இவனுக்கு எப்படி திடீர்னு மதுக்க மனசு வந்ததுன்னுதான் நினைச்சு நினைச்சுப் பார்க்கிறேன். _குப் புரியலே." _யமுனா நீ சொல்றமாதிரிதானே உங்கம்மாவும் சொல்றா."

'எனக்கும் ஆச்சரியமாத்தானிருக்கு திடீர்னு இப்படி ஆயிட்டா _று. அம்மா சொல்லிச் சொல்லி அலட்டிக்கிறதிலே என்ன ாம். அதான் அந்தப் பேச்சை விட்டுவிடுங்கறேன்."

"நான் எடுத்து எடுத்து, தூக்கித் தூக்கி வளர்த்தேன். எனக்கு _ாதானம் பண்ணிக்க முடியலை."

"இவன் கொடுக்கட்டா பட்டினி கிடந்துடப்போறோமா? மானமா வாழாம இருந்துடப் போறோமா?" என்றாள் யமுனா.

பார்வதி பதில் பேசவில்லை.

பாபுவுக்குத் திகைப்பாகத்தான் இருந்தது.

“வந்தானே அங்கிருந்து கலியாணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கியா, போனியா வந்தியா ஏதாவது கேட்டாங்கிறியா? மஹம்" என்றாள் பார்வதி.

கேட்டா, நீ பணம் கேட்பே."

"அப்படியும் பயந்திருக்கலாம். ஒரு வார்த்தையாவது கேட்கக் கூடாதாங்கறேன். பணம் கேட்டா இல்லைன்னு சொல்லவிட்டுப் போறான், இப்ப சொன்ன மாதிரி. அது தெரிஞ்சுதானிருக்கு. இருந்தாலும் ஒரு வார்த்தை"

"பின்னே இங்கே எதுக்குத்தான் வந்தாராம் அவர்' என்று கேட்டான் பாபு.

"என்னத்துக்கா? இனிமே பணம், கிணம்னு எழுதித் தொந்தரவு பண்ணாதே இப்பவே சொல்லிவிட்டுப் போயிடறேன்னு காமிக்கத் தான்."

"மறுபடியும் கேக்கறேன். முடிவாச் சொல்லிட்டாரா?" என்று பாபு கேட்டதற்கு முடியா தீர்மானமுமா" என்று அழுத்தமாகச் சொன்னாள் பார்வதி.

"நான் போய் கேட்கிறேனே அவரை."

"நீயா அவனையா? உன்னையெல்லாம் ஒரு மனுஷனா மதிச்சுப் பேசுவானா அவன்! உங்கப்பா போனபோது கேட்காமலா இருந்திருப் பாங்க கட்டாயம் கேட்டிருப்பாங்க எல்லாத்துக்கும் அணைச்சுப் பதில் சொல்லியிருப்பான் அவன்."

மோக முள் 婆323 婆



"நான்போய்க் கேட்டுப் பார்க்கறேனே. ஒரு சமயம் அப்பாவும் கேட்காமல் இருந்திருந்தால்?"

"நீ கேட்டாலும் சரி, உங்கப்பா கேட்டாலும் சரி, எல்லாத்துக்கும் ஈடு கொடுப்பான் அவன். அவனை நல்லாத் தெரியும். எனக்கு உடம்பைக் கூடப் பார்க்கவிடாம சும்மா வெறும் தந்தியை என்னிக்குக் கொடுத்தானோ, அன்னியிலிருந்தே எனக்குச் சந்தேகந்தான், பயந்து கிட்டேதான் இருந்தேன். ஆனா இப்படி ஆயிடுவான்னு நினைக்கல்லே." "எனக்கும் இந்தச் சந்தேகம் ஏற்பட்டுது. அதுதான் உங்ககிட்டே சொன்னேன் அப்ப."

"இரு வந்திட்டேன்" என்று உள்ளே எழுந்துபோனாள் பார்வதி. பெட்டியைத் திறந்து மூடும் சத்தம் கேட்டது.

வெளியே வந்து பாபுவின் அருகில் வந்து "இந்தா" என்று எதையோ நீட்டினாள்.

"என்ன இது?"

"மூக்குத்தி."

பாபு வாங்கி வெளிச்சத்தில் பிடித்தான். பொலபொலவென்று நீலம் சிதறிப் பூரித்தது அது.

"ப்ளு ஜாகர் மாதிரியிருக்கே"

"ப்ளு ஜாகர்தான்."

பாபு அதைக் கோணங்களை மாற்றி மாற்றி, எட்டியும் அருகில் பிடித்தும் பார்த்துக்கொண்டிருந்தான்.

"எப்ப வாங்கினது?"

"இப்ப விற்றாகணும். எப்ப வாங்கியிருந்தா என்ன? வாங்கி நாற்பது வருஷம் இருக்கும்."

"விற்கணுமா?"

"இப்ப உபயோகமில்லாதது இதுதான். இதைத்தான் விற்கணும்."

"எதுக்காக?"

"சாப்பிடத்தான்."

"என்னது!"

"ஆமாம். பாபு நீ திகைச்சுப்போய் என்ன? அதுதான் நிலைமை இப்ப!"

"ரொக்கமா ஒண்ணும் வைக்கிலியா இவர்?"

"ரொக்கமா மாசா மாசம் கொடுப்பாரு. இப்ப என்ன? ஒரு வண்டி நெல்லேதான் கடைசி வண்டியாப் போச்சே, இதை வித்தா

姿324姿 தி. ஜானகிராமன்

இறு ருபாய்க்குக் குறையாம கிடைக்கும். இப்ப வைரம் தூக்கலா _ாம் விலை. அதை வச்சுக்கிட்டு கொஞ்சநாள் தள்றது."

_துக்காக இதைப் போயா விக்கறது? இது ரொம்பக் கிடைக்காத _ இருக்கும் போலிருக்கே... என்ன யமுனா இதையா _றது."

_ஆமாம்." "தோன் யாரிட்டவாவது கொடுத்து, ரண்டு நாளுக்குள்ளே _த்தரணும். இங்கே வேற யாரிடமும் கொடுக்க இஷ்டமில்லே _கு எதிர்த்த வீட்டுக்காரங்க தெரிஞ்சவங்கதான். இருந்தாலும் _தையெல்லாம் கொடுக்கறதுன்னா இந்தப் பழக்கம் போதாது. _குத்தான் உன்னைச் சிரமப்படுத்த வேண்டியிருக்கு."

"எனக்கு என்ன சிரமம்?"

"ஒடியாடி நாலஞ்சு பேரைப் பார்க்கனுமே." "எனக்கு அதெல்லாம் சிரமமில்லே. இப்படி நீங்க இறங்கும்படியா ஆயிடுத்தேன்னு சிரமமாயிருக்கு மனசுக்கு இப்படிப் பேத்தல் பண்ணிட்டானே அவன்!"

"பேத்தல் என்ன பாபு மூத்த தாரம், இளையதாரம் இருக்கிற இடங்கள்ள நடக்கிறதுதான் இது இங்கே இருக்கிறதுக்குக் கேக்கணுமா? அவங்க பழகினதுக்கு இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்திருக்க முடியாது. அதுதான் மனசைக் கொஞ்சம் பாதிக்குது."

"அந்த அம்மாளும் ஒண்ணும் சொல்லலையா?” "அந்த அம்மா என்ன செய்யும்? இதமாச் சொல்லிப் பார்ப்பாங்க அவ்வளவுதான். கேக்கலேன்னா என்ன செய்யறது? சின்னப் பிள்ளையா அதிகாரம் பண்றதுக்கு அவங்க?"

பாபு யோசனையில் ஆழ்ந்து சற்று மெளனமாயிருந்தான்.

"சரி, இதை நான் விற்றுத் தருகிறேன். இருந்தாலும் அவனைப் போய்க் கேட்காமல் இருக்க முடியாது என்னாலே கேட்கத்தான் போறேன்."

"நீ சும்மா இரு பாபு, உனக்கென்னத்துக்குப் பொல்லாப்பு: நீ யாரு கேட்கன்னு கேட்டான்னா உனக்கு ரோசமாயிருக்கும்." "தகாத காரியத்தைச் செஞ்சா யாருக்கும் கோபம்தான் வரும். சம்பந்தமில்லாதவர்கள்கூடக் கோபித்துக்கொள்ள உரிமை உண்டு. கேட்க உரிமை உண்டு."

"கேட்கிறே. இல்லேன்னு சொன்னா?" "கேட்கிறபடி கேட்டா இல்லேன்னு சொல்ல முடியுமா?"

மோக முள் 签325婆



"எப்படி கேட்கப் போறே?"

"எங்கப்பாவை அழச்சிண்டு போய்க் கேட்கிறேன். நான் கேட்கிறேன். இன்னும் அவனுக்குத் தெரிஞ்சவங்களைக் கொண்டு சொல்லச் சொல்றது. ஒண்ணுக்கும் மசியாட்டா கோர்ட் இருக்கு."

"கோர்ட்டிலே போய் நாக்கிலே நரம்பு இல்லாம வக்கீல்னு ஒருத்தன் சாக்கடை வாயாலே கேள்வி கேட்பான். அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு நிக்கினும் கிறியா" என்று யமுனா குறுக்கிட் டாள். அவள் கண் கோபத்தில் ஜொலித்தது.

"நியாயம்னா இதெல்லாம் பார்க்க முடியுமா யமுனா ?" என்று தணிந்த குரலில் சொன்னான் பாபு.

"நியாயம் என்ன? அவன் சொத்து கொடுக்க முடியாதுன்னு சொன்னா என்ன பண்றது? பிள்ளையாப் பிறந்திருந்தாலும் சரிங்கலாம்."

"உங்கம்மாவுக்குச் சேர வேண்டியது கூடவா கிடையாது?"

"பாபு, நீ சுத்திச் சுத்திப் பேசி என்ன செய்யறது? கோர்ட்டுக்குப் போனா, வேணுமின்னே அவமானத்தை நம்ம வாயிலே திணிப்பான் வக்கீல். இதையெல்லாம் கேட்கறதுக்கு நாம் பிறக்கலே, சும்மா இரு கையும் காலும் இருக்கு. சம்பாதிச்சுக்கறோம். அப்பவே பிடிச்சு இதையே பேசிக்கிட்டிருந்தா எனக்குப் பிடிக்கலே."

"சரி, வேண்டாம்" என்று பேசாமலிருந்தான் பாபு.

சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

"பாபு, நான் கோவிச்சுக்கறேன்னு வருத்தப்படாதே என்னமோ அண்ணா நடந்துகிட்டதை நெனச்சா எனக்குக் கசப்பா இருக்கு. கோபம் வந்திடுது. படபடன்னு பேசிப்பிட்டேன்... வருத்தப்படாதே 虜"

"வருத்தம் என்ன யமுனா, நீ சொன்னதுதான் சரி. கெளரவமான மனுஷாளை வக்கீல்கள் விட்டுவைக்க மாட்டார்கள். தெரியும். எனக்கும் அது தோன்றவில்லை."

"அதான் சொன்னேன் ... எப்படியாவது பார்த்துக்கறோம். உலகத்திலே ஏழைகள் இல்லையா? உழைச்சுச் சாப்பிடலியா? என்னமோ அவன் கொடுக்கலேன்னு நமக்கு இவ்வளவு கோபம் வருவானேன்? கொடுத்து வச்சிருக்கோமா?"

பாபு ஒன்றும் சொல்லவில்லை.

"ரண்டு மூணு நாளுக்குள்ளாக வித்துக்கொடுத்தாத்தான் தேவலை" என்றாள் பார்வதி.

"கட்டாயம் ... நான் வரட்டுமா?"

婆326婆

தி. ஜானகிராமன்

_ாரதை, இனிமே யாரு மனுசங்க எங்களுக்கு?" என்று

_க்கொண்டே பார்வதி பூஜை அலமாரி விளக்கை எடுத்துக்

_டு, எண்ணெய் போடுவதற்காக உள்ளே சென்றாள். உரத்த _ விடைபெற்றுக்கொண்டு அவன் கிளம்பியதும் யமுனாவும் _ வரையில் வந்தாள்.

_ாயற வீட்டிலே பிடுங்கினாற்போல நானும் ஏதோ கேட்டு வ_ப்பிட்டேன்" என்றான் பாபு இடைகழியைக் கடந்ததும்.

_அதுக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை பாபு. பணமும் நெல்லும் _ விஷயம்" என்றாள் யமுனா.

'இதுதான் பெரிய விஷயமா? _என்னமோ, இதை நான் மறக்கவே முடியாது." "நானும்தான்." மறுபடியும் சொல்றேன். வேண்டாம் நல்லாப் படி கெளரவமா பாஸ் பண்ணு. அப்பா, அம்மா எல்லார் மனசையும் குளிரப்பண்ணு.

"அப்பா, அம்மா, பாஸ் பண்றது -இதோடு எல்லாம் சரியாப் _ாச்சா?"

"நீ போயிட்டுவா. திண்ணையிலே நின்னு வேறே தர்க்கமா?" "மறுபடியும் எப்ப வரேன்னு கேட்கிற வழக்கமாச்சே நீ" "இப்பவும் போயிட்டுவான்னுதான் சொன்னேன்." "வரத்தான் போகிறேன்" என்று சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கினான் பாபு.

இருள் கவிந்துகொண்டிருந்தது. தெரு மின்சார விளக்குகள் நன்றாக இருட்டிய பிறகுதான் என்று சொல்வது போலப் பளிச்சென்று ஒளி வீசின. தொண்டர் கடையில் ராஜம் வந்தானா எனறு விசாரித்துவிட்டு, பெரிய தெருவில் புகுந்தான் அவன். ಅಕಿಮಿ கோயில் வாசல் கடையில் நாலு சாத்துக்குடிகளை வாங்கிக்கொண்டு தெற்கு நோக்கி நடந்தான்.

O

"என்ன ராஜம்! என்ன உடம்பு!”

ராஜம் பெஞ்சில் மெத்தையும் தலையணையும் போட்டு மல்லாந்து படுத்திருந்தான்.

"வா, பாபு. ஒண்னுமில்லை, ஜலதோஷம், ஜூரம். நீ வாங்கி வந்த ஆரஞ்சை நாளன்னிக்குத்தான் சாப்பிடணும்."

"சாப்பிடு."

姿327婆

மோக முள்



அரைமணிநேரம் படுத்தபடியே பேசிக்கொண்டிருந்தான் ராஜம்

செருப்புச் சத்தம் கேட்டது. "பாபுவா" என்றார் உள்ளே வந்த தியாகராமன்.

"ஆமாம்."

"இன்னிக்குப் பேச ஆளில்லாம தவிச்சுப் போயிட்டாண்டாப்பா, நல்ல வேளையா வந்தியே வந்து ரொம்ப நாழியாச்சா?"

"அரைமணியிருக்கும்."

"ஜுரத்திலே அரை மணி பேசினால் போதும்டா ராஜம் அவனையும் கொஞ்சம் பேசவிடேன்!"

ராஜம் சிரித்துக்கொண்டான்.

"இனிமே பாபுதான் பேசப்போறான். நீ சொல்லிக்கோப்பா" என்றான்.

"என்னடா பாபு ?"

"அவனுக்கு என்னமோ நகை விற்கனுமாம்."

"நகையா?"

"ஆமாம் சார் சிநேகிதர்கள். இதை விற்கும்படியா அவர்களுக்கு ஒரு முடை வந்திருக்கு" என்று கடுதாசு மடிப்பைக் கொடுத்தான் பாபு.

"என்னது?"

"மூக்குப் பொட்டு."

"வைரமா?"

"நல்ல ஜாதி வைரம்." உள்ளே போனார், மூக்குக் கண்ணாடியை எடுத்து வர.

"பாபு, அவருக்கு வைரப் பரீட்சை தெரியும்னு தெரியுமோ உனக்கு?" என்று கேட்டான் ராஜம்

"எனக்குத் தெரியாதே."

"காலமே வந்துபார். வாசல்லே நித்யம் ரண்டுமூணு பேராவது எதையாவது கொண்டு வராமலிருக்கமாட்டான். பென்ஷன்னாலெ வந்த நஷ்டத்திலே பாதி ஈடு பண்ணிவிடுவார்" என்று மெதுவாகச் சொன்னான் ராஜம்

"நான் இப்படி நேரும்னு எதிர்பார்க்கலெ ராஜம் யார் கிட்டடா போறதுன்னு தவிச்சிண்டிருந்தேன். உங்கிட்ட சொல்றபோது ஏதோ தற்செயலாகத்தான் சொன்னேன்."

签328姿 தி. ஜானகிராமன்

"நாளைக்கே பணம் வந்துவிடும், போதுமா?"

"நான் எதிர்பார்க்கவே இல்லை."

_அப்படி என்ன பணமுடை அவர்களுக்கு ?"

_அண்ணன்காரன் கையை விரிச்சுப்பிட்டான்."

-போன மாசம்தானே காலமானார் அவர்."

"ாண்டு மாசம் ஆகிறது."

_அதுக்குள்ளேயுமா இந்த மாதிரி ..."

"என்ன செய்யறது?"

'வயிற்றிலே பிறந்தவங்களே அரிவாமணையை ரண்டா வெட்டி பாகம் பண்ணுங்கறான். இது மாற்றாந்தாய் விஷயம். அதிலேயும் _ப்பு கேட்பானேன். இப்ப நீதான் கார்டியனாக்கும்?"

"அப்படித்தான்."

"முப்பது வயசுப் பெண்ணுக்கு இருபது வயசு கார்டியனா? வாரஸ்யமா இருக்கே" என்றான் ராஜம். அவன் புன்சிரிப்பில் விமம் தவழ்ந்தது.

'அதனால் என்ன? பெரிய வயசா இருந்தாத்தான் கார்டியனா இருக்க முடியுமா?"

"எதுதான் முடியாது?" என்றான் ராஜம்

"என்ன ராஜம் சிரிக்கிறே?"

"சிரிப்பென்ன, உன் தைரியத்தைக் கண்டு எனக்கு ஆச்சரியமா யிருக்கு."

"இதில் என்ன தைரியம்? அவர்களுக்கு மனிதர்கள் யாரு மில்லைன்னு தீர்ந்துபோச்சு. நான்தானே கைகொடுக்கணும்."

"நெஜமாகவே கையையும் கொடுத்துவிடுவே போலிருக்கே நீ" என்றான் ராஜம். பாபுவுக்குச் சிரிப்பு வந்தது.

“தேவை வந்ததுன்னா அதையும் செய்ய வேண்டியதுதான்."

தியாகராமன் உள்ளே வந்தார்.

"ரொம்ப நல்ல ஜாதின்னுதான் தோண்றது. பாபு. இது யாருது:” "எங்கள் சிநேகிதர்களது."

"ரொம்ப நல்லதாயிருக்கே. ஏன் விற்கணும்?"

"அசாத்தியமான பணமுடை."

மோக முள் 签329签



“ரொம்ப நன்னாயிருக்கு இருந்தாலும் காலமே ஒரு தடவை பார்த்தால் தேவலை, கல்லைப் பெயர்த்துவிட்டுப் பார்த்தாலும்

பார்க்கும்படியாயிருக்கும்."

"எப்படிப் பார்த்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் வேண்டும்.

அவ்வளவுதான்."

"அப்ப எடுத்துண்டுபோய் காலமே கொண்டு வறியா?" "இங்கேயே இருக்கட்டுமே."

"சரி ... அப்ப நீ காலமே ஒன்பது மணிக்கு வா. ரங்கண்ணா வீட்டுக்கு வர்றியோ இல்லியோ?"

"வரேனே."

"அவர் எப்ப விடறார் உன்னை ?"

"ஒன்பதரை மணியாகும்."

"ஒன்பதரையாகுமா? அப்படீன்னா சாயங்காலம் வந்தாப் போதும் அப்ப இங்கேயே இருக்கட்டுமா இது” என்றார் தியாகராமன்.

"இருக்கட்டும் சார்."

"ரங்கண்ணாகிட்ட பாடம் எல்லாம் எப்படி நடக்கிறது?" என்று அவர் மேலும் பேச்சுக்குத் தயாரானார்.

"உங்கள் உதவியை மறக்க முடியாது சார்" என்றான் பாபு.

"என்ன ?"

"சமுத்ரம் மாதிரியிருக்கிறது அவருடைய ஞானம். அதைவிடப் பெரிதாக இருக்கிறது அவருடைய சுபாவம். பெரிய மனிதர். அது ஒன்றே போதும்."

"சந்தேகம் என்ன? மனிதனுடைய நல்ல அம்சங்களெல்லாம் உருவாகி வந்தவர் அவர் ... அவரோடு பழகுவதே போதும். அவர்கூட இருந்தாலே போதும், உன்னையும் அறியாமல் நீ பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பாய். அவர் பேசக்கூட வேண்டாம். நல்லார் ஒருவர் உளரேல் என்று சொல்லுகிறாற்போல, இந்த மாதிரி மனிதர்கள் சுத்தாத்மாக்கள் இருந்துகொண்டிருந்தாலே உலகம் க்ஷேமம் அடையும். அவர்கள் யாருக்கும் வாயைத் திறந்து உபதேசமோ நல்ல வார்த்தை களோ சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மாதிரி மகான் களினால் உபயோகமில்லை என்று லோகாயதவாதிகள் சொல்லலாம். ஆனால், லோகாயதவாதிகளுக்கே பதில் சொல்ல முடியும் - அவர் களுடைய வாதத்தை வைத்துக்கொண்டு. வேறு ஜன்மம் - முன் ஜன்மமோ பின் ஜன்மமோ -இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இந்த வாழ்க்கையில் சாப்பிடுவது, குழந்தைகள் பெறுவதைத் தவிர மனிதர்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகச் செய்வதில்லை.

婆330婆 தி. ஜானகிராமன்

_ மாதிரியாகவும் இல்லை. இல்லாவிட்டால் ನುಡಿಖTಣರು _ தலைவன் என்று ஒருவன் இருப்பானேன்? அவனுககு _ாரும் கீழ்ப்படிவானேன்? அறிவாளி, விஞ்ஞானி எனறு _பர் இருப்பானேன்? அவர்களை மற்றவர்கள பெரியவர்களாக

பகொள்வானேன்? அப்படியே சிறந்த குழந்தைகளையே பிறக்கச் _வது சிறந்த ஆதி மனிதர்களாக எல்லாரையும ஆக்கிவிடுவது _று விஞ்ஞானம் முன்னேறினால்கூட அநதக சூட்டத்திலும் _பரியவன் ஒருவன் இருப்பான். தன்னைக் கட்டுப்படுத்தி, சாதாரண _ ைஇன்பங்களுக்கு மேல் நின்று, பெரிய வாழககை வாழ முயல்கிற ஒருவன் இருப்பான். அவனைப பாாககும எலுலா _ங்களும் கண்ணகல வியப்புடன் பார்த்துக்கொண்டுதாணிருப் பாகள். அவனுடைய வார்த்தைக்குக் கெளரவம் கொடுப்பார்கள் அவன் இருந்தாலே தங்களுக்குப் பக்கபலம் எனறு :: ான சராசரி வாழ்க்கையிலிருந்து முயற்சி செய்து ಕ್ಲ பழுப்பிக்கொண்டு உயர்ந்து நிற்கிறவர்கள் எப்போதும் சிலர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.

தியாகராமன் தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து பேசிக்கொண் டிருந்தார். ராஜமும் பாபுவும் தம்மை ஏதோ மறபடது போலவும் அடியிலிருந்து எல்லாவற்றையும் சொன்னாலொழிய ஆவாகள கம்பமாட்டார்கள் என்று அவர் நினைப்பது போலவும் இருந்தது. அவருடைய பேச்சில் இருந்த உஷ்ணமும் வேகமும்.

"மகான் ஒருவர்கட இருந்தாலே ஒரு மனிதன் திருந்தி விடுவானா நல்ல வாழ்வு வாழ முடியுமா? நல்ல எண்ணங்களையே Jorg கொண்டிருப்பானா: திச்செயலில் இறங்காமலிருப்பானா" எனறான List L1.

ஆமாம்" என்றார் தியாகராமன்.

"ஓம் பிரகாசர் பெரிய மகான்தானே?"

"ஆமாம்."

"அப்படியானால், அவரிடம் பூஜைக்கு திட்சை பெற்றவர்கள்

முதல் இன்னும் சிலர் உள்பட ராத்திரியில் அகெளரவமான இடங்களில் எல்லாம் காணப்படுகிறார்களே."

"ஆமாண்டா பாபு. ஆமாம். என்ன செய்கிறது?" என்று தியாகராமனின் குரல் தணிந்தது. "என்ன செய்கிறது: மகானதள இருந்தாலே போதுமென்றால் என்ன அர்த்தம் முழுவதும புரண்டு விடாமல் பார்த்துக்கொள்வார்கள். அவ்வளவுதான, ஒழுங்காக இருந்தால் மகான்கள் எதற்காக இருக்க வேண்டும் மகான்களைப் பார்த்து சாதாரண மனிதர்கள் தாங்களும உயர முயல்கிறார்கள் முயலுவார்கள். மகா பெரிய மகானாக இருந்தாலும் அவரைக் கண்டு எல்லா லாபத்தையும் அடைந்து உயர்கிறவன்

மோக முள் 婆331婆



"நிலம் கொடுக்க மாட்டானாம் அவன். அதுதான் நெல்லுவண்டி கூட கடைசி வண்டின்னு சொல்லிவிட்டான்னேனே."

"அப்படீன்னா சாப்பாட்டுக்கு இன்னொரு நகையை விற்கிறதா?”

"நான் பார்த்துக்கறேன்னு சொன்னியே இப்ப." "நான்தான் பார்த்துக்கணும்." "உங்க நிலத்திலிருந்து கொடுக்கப் போறியா?"

"என் நிலம் ஏது? எங்கப்பாவுதுன்னா அது? எனக்கு ஏது உரிமை ?"

"பின்னே என்ன பண்ணுவே!" "சம்பாதிச்சுப் போடுகிறேன்."

"சம்பாதிச்சுப்போட்டு, கலியாணமும் பண்ணி வைக்கிறவரையில் உன்னால் முடியுமா? பெரிய பொறுப்பில்லையா இது? அதுவும் நீ பாஸ் பண்ண இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு அதுவரையில் அவர்கள் சில நகைகளை விற்றுத்தானே ஆகணும்."

"போனால் போகிறது."

"நீ எதைத்தான் கவனிக்கப்போறே சங்கீதம் சொல்லிக்கப் போறியா, வேலைக்குப் போகப்போறியா? இவர்களைக் காப்பாத்தி இவளுக்குக் கலியாணம் பண்ணிவைக்கப் போறியா?"

"நான்தான் பண்ணிக்கப் போகிறேன் அவளை."

"என்னது!"

"ஆமாம்."

"இன்னொரு தடவை சொல்லு."

"நான்தான் பண்ணிக்கப் போகிறேன்."

ராஜம் அவனைக் கண்கொட்டாமல் இரண்டு நிமிஷம் பார்த்தான். அந்தப் பார்வையில் வியப்பும் குழப்பமும் கலந்து வந்தன. அதிர்ச்சியுற்ற பார்வையா? பளார் என்று கன்னத்தில் அறைவதற்கு முன்னால் பார்க்கிற பார்வையா? அட முட்டாள் என்று சொல்கிற பார்வையா? இவ்வளவு தைரியசாலியா நீ என்று சொல்கிற பார்வையா அட பைத்தியமே என்று இரக்கப்படுகிற பார்வையா? எல்லாமே அந்தக் கண்ணில் இருந்தன. எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக வந்தது போலிருந்தது. தன் உடல் சற்றுக்

குன்றுவதை உணர்ந்த பாபு அதை எதிர்த்துச் சமாளித்துக்கொள்ள முயன்றான்.

婆334婆 தி. ஜானகிராமன்

_றம்" என்று பெருமூச்சுவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி _ளித்துக்கொண்டான் ராஜம.

பாபு ஒன்றும் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டு உடகாரு ான். அவன் மனதிலிருந்த சுமையை இறக்க வேண்டும் _ருந்தது. ராஜம் எங்கேயோ திரும்பிவிட்டானே, யமுனா _னை உடனே ஏற்றுக்கொண்டிருந்தால் இதை இவனிடம் _பதாபித்துக்கூட இருக்கமாட்டேன் இந்த சமயத்தில்.

இரண்டு, மூன்று நிமிஷம் அவன் ஏதாவது சொல்ல மாட்டானா

_று காத்திருந்த பாபுவுககு ஏமாற்றம்தான் கிட்டிற்று.

என்ன ராஜம் திரும்பிவிட்டே" என்று கடைசியில் _ான். ராஜம் நிதானமாக "திரும்பிக்காமல் 667 செய்யது இதை நேராகப் பார்க்க முடியவில்லை என்னால்” எனறான

அவ்வளவு கண்ணைக் கூசுகிற விஷயமா இது' "எனக்கு என்னமோ அப்படித்தான் படுகிறது." "எனக்கு இந்த மாதிரி உணர்ச்சியே தோன்றவில்லையே."

"அவ்வளவு கண்ணைக் கூசுகிற விஷயமா @5ಣ! LL4 கேட்டே இப்ப? அப்படின்னா உனக்கும் கூசித்தானே இருக்கு.

"எந்த அனுபவமும் முதன்முதலில் கூசத்தான் செய்யும்."

"அப்படி பதில் சொல்லி இதையும் எல்லா அனுபவத்தோடும் சேர்த்துவிடலாம்னு பார்க்கறயா p"

"நீ சொல்கிறது புரிகிறது. இருந்தாலும் நான் வெகு தூரம் முன்னேறி விட்டேன்."

கமனசிலே தானே?"

"ஆமாம்."

"ரண்டு மாசம் முன்னாலேயே எனக்குச் சந்தேகமாயிருந்தது" என்றான் ராஜம்

"ரண்டு மாசம் முன்னாடியேவா"

"ஆமாம், நாமதான் அதைப்பற்றிப் பேசினோமே."

"இவளைப் பற்றியா நீ சொன்னாய்?"

"ஆமாம்."

"அடுத்த வீட்டுப் பெண்ணைப்பற்றி இல்லையா?"

"இரண்டாவது மனைவியா?"

"அவள்தான்."

மோக முள் 婆335婆



"அவளைப் பற்றி நான் பேசவில்லை."

"நிஜமாகவா!"

"நிஜமாகத்தான்."

"ஏன் ?" "நீ அப்படியெல்லாம் போகமாட்டாய் என்று தெரியும்." "நிச்சயமாகத் தெரியுமா உனக்கு ?" "ரொம்ப நிச்சயமாகத் தெரியும்." "ராஜம், இன்னொரு தடவை அப்படிச் சொல்லேன்." "ஏன்?"

"சொல்லேன்."

"ஏன் ?"

"சொல்லமாட்டியா?"

"ஏன்னு சொல்லு." "நான் நிரபராதி என்று எனக்கு நீயாவது சொல்ல வேண்டாமா?" "நீ சின்னக் குழந்தை, பாபு."

"என்னைப் பார்த்தால், அகெளரவமான நீசத்தனமான ஒரு காரியம் செய்ததாகப் படவில்லையா?”

"இல்லை."

"உண்மையாகச் சொல்லு, என் உடம்பைப் பார் என் முகத்தைப் பார்த்துச் சொல்லு. நான் சுத்தமானவன்தானா?”

"சந்தேகமில்லாமல்."

பாபு அவன் கையை எடுத்து நன்றியுடன் பிசைந்தான்.

"என்ன பாபு ?"

"ராஜம், நீ ஒரு மகரிஷி மாதிரி இருக்கிறாய். இப்படி முட்டாளாக வும் இருக்கிறாயே."

"என்னது!"

"ஆமாம், என்மேல் அந்தப் பெண்ணின் தலைப்பூவின் மணம் விசவில்லை; அந்தப் பெண்ணின் உஷ்ண சுவாசம் இந்த உதட்டில்

தெரியவில்லை; அந்தப் பெண்ணின் இதழிரம் இந்த உதட்டில் தெரியவில்லை?"

"என்ன பாபு இது" என்று குழம்பிப் போய் எழுந்து உட்கார்ந்து விட்டான் ராஜம் பாபுவின் முகம் பிரமை பிடித்தாற்போலிருந்தது.

婆336婆 தி. ஜானகிராமன்

_ன்ன பாபு இது?" "நான் கேட்டதற்குப் பதில் சொல்லு." _னக்கு ஒன்றும் தெரியவில்லை." _அதுதான் நீ முட்டாள் என்று சொன்னேன்." "என்ன நடந்தது?"

"எல்லாம் நடந்துவிட்டது."

_உண்மையாகவா."

"ஆமாம். அவளே வந்தாள். என்னை - இரண்டு கையையும் _லையும் கட்டினாள். தரதரவென்று இழுத்துப் போனாள். பொததென்று சேற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.

"பாபு, நீ அமைதியாகச் சொல்லு."

"ஆமாம். நீ தனியாக இருக்கிறாய். படுக்கப்போகும் சமயத்திற்கு ாடிக்கட்டையைத் தாண்டிவந்து நின்று, உன் கழுத்தில் கையை போட்டுக் கட்டிக்கொண்டால் நீ என்ன செய்ய முடியும் கத்த முடியுமா? நீ என்ன மனிதனா மிருகமா?

"இவ்வளவு துணிச்சலா" "நீ ஒரு முட்டாள்டா ராஜம்." "ஆமாம் முட்டாள்தான்." "இல்லாவிட்டால் என்னைச் சின்னக் குழந்தையென்று சொல்லுவியா?"

"நீ இன்னும் சின்னக் குழந்தைதான்."

"ஏன் ?”

"நீ சொல்வது அவ்வளவும் உண்மையாக இருந்தால் நீ சின்னக் குழந்தைதான்."

"நான் பொய் சொல்லுவதாகப்படுகிறதா?”

"பொய் சொல்றதாயிருந்தா இதைச் சொல்லியே இருக்க மாட்டியே."

"ஆனால் நான் அப்போதே சொல்லியிருந்தால் நீ என்னைத் தடுத்திருப்பாய்."

"எப்போதே? எதை ?"

பாபு மறுபடியும் யமுனாவுக்குச் சொன்னதுபோல், ராஜத்திட மும் தேள் கொட்டி கடிதங்கள் எழுதின கதையைச் சொன்னான்.

மோக முள் 婆337婆



"நான் இதை அப்போதே சொல்லியிருக்க வேண்டும், உன்னிடம்" "சொன்னால் இதை எப்படி நான் தடுத்திருக்க முடியும்?"

o ஏதாவது யோசனை சொல்லியிருப்பாய் உனக்கு ஏதாவது ஆபத்து வருகிற மாதிரி அந்திமங்கல் கண்ணில் பட்டிருக்கும். நீ

_அப்பா, யமுனா, ரங்கண்ணா எல்லார் ஞாபகமும் வந்து _ இழுத்துப் போட்டது சுயபுத்தியிலே யமுனாவுக்கு இது _துரோகம் எனக்குக் காப்பு வேண்டியிருந்தது. அவளிடம் _ாயங்காலம் என் மனதை வெளியிட்டுவிட்டேன்."

எச்சரித்திருப்பாய்."

"என்னமோ." "நான் சொல்லியிருக்கலாமில்லையா?" "நீ ஏன் சொல்லவில்லை?" "அவள் வேண்டாமென்று கேட்டுக்கொண்டாள்." "இப்போது மட்டும்?" "இதுவும் அதுவும் ஒன்றா ராஜம்?"

- அதிருக்கட்டும். ஏன் இப்படி அலட்டிக்கிறே? இந்ததுரதிர்ஷ்டம் அல்லது அதிர்ஷ்டம் சிலருக்கு வாய்த்துவிடுகிறது என்ன செய்கிறது:”

"இனிமே நீ என்னைக் குழந்தை, நிரபராதி என்றெல்லாம் சொல்ல மாட்டாயே!”

"சொல்லுவேன்."

"ஏன்." "நீதானே பொம்மனாட்டி மாதிரியிருந்திருக்கே இப்ப" பாபுவுக்குச் சிரிப்பு வந்தது. "இது என்னிக்கி நடந்தது பாபு:"

"நேற்று ராத்திரி."

"நேற்று ராத்திரியா?"

"ஆமாம். இன்னிக்கிக் காலமே உங்கவீட்டு வாசலோடுதான் போனேன்."

"எப்ப ?"

"ஐந்து மணிக்கு மகாமகக்குளம் என்னைக் காப்பாற்றாது என்று தெரிந்ததும்."

"ஆமாம்."

"அட அடிமுட்டாள்!"

婆338婆 தி. ஜானகிராமன்

_முக்குத்தியை யார் கொடுத்தா?”

_வ அம்மா."

_ாப்ப கொடுத்தா ?” "நான் கிளம்பி வர்றபோது."

ராஜம் பேசாமலிருந்துவிட்டான். யமுனா என்ன சொன்னாள் _று அவன் கேட்கவில்லை.

"நான் செய்தது சரியென்று இப்போதும் நீ நினைக்கவில்லையா?" _று கேட்டான் பாபு.

"என்னமோ சரி தப்பு எல்லாம் அவரவர்கள் லட்சியத்தைப் பொறுத்தது. ஆனால் இது என்னமோ எனக்கு வேடிக்கையாக பருக்கிறது. இயற்கைக்கு முரணாகத் தோன்றுகிறது."

"இயற்கைக்கு முரண் என்ன வயசா?" "ஆமாம்." "முரண் என்ன?”

"இப்போது உள்ள இயற்கைக்கு, அதாவது பத்து லட்சம் வருஷம் பின்னோக்கி போய் விட்டாற்போலிருக்கிறது."

"என்ன ?"

"ஆமாம், பிள்ளை, தகப்பனார், சகோான், சகோதரி, தாயார் என்ற வித்யாசம் இல்லாத ஆதிகாலம் மாதிரியிருக்கிறது."

"ராஜம், உன் வாதம் வேண்டும் என்றே விஷமமாகப் பண்ணு கிறாப் போலிருக்கிறதே."

"இருக்கலாம்."

"பின்னே என்ன? பத்து லட்சம் அஞ்சு லட்சம் என்று காட்டு மிராண்டியாக்கி விட்டாயே என்னை."

"கோபித்துக்கொள்ளாதே பாபு, நீ செய்கிற மாதிரி உலகத்தில் நடக்கலாம். ஆனால், நாகரிக உலகம் இதைச் செய்வதில்லை. நாகரிகச் சட்டங்கள் இதைக் கண்டு ஆமோதிப்பதில்லை."

"அப்படியானால் அதுகளைச் சுட்டுக்கொளுத்து," என்றான் பாபு.

மோக முள் 婆339 婆



"பாபு, நாம் இதோட இந்த விஷயத்தை நிறுத்திப்போம். இன்னொரு நாளைக்குப் பேசலாம். எனக்குப் பட்டதை நான் சொன்னேன். நானும் யோசிக்க வாண்டாமா? நீ நாலஞ்சு மாசமாகப் பாடுபட்டுக் கண்டுபிடித்ததை என்னை உடனே சரியென்று சொல்லச் சொல்கிறாயா? நம்பச் சொல்கிறாயா?"

"நீ பேசுகிறது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. பெரியவர்கள் உன்னைக் கோழைகளாக்கிவிட்டார்கள்" என்று சொன்ன பாபு உடனே சட்டென்று திருத்திக்கொண்டு மீண்டும் சொன்னான்: "இல்லை. நீ கோழையில்லை. நீ இரண்டு தடவை தப்பியிருக்கிறாய். சபதம் செய்துகொண்டாய். காப்பாற்றி வருகிறாய். நீ கோழை யில்லை. ஆனால் யமுனா விஷயமாக நீ சொல்வது புரியவில்லை எனக்கு."

"நான் அதைப்பற்றி இன்று பேசுவதை நிறுத்திவிட்டேன்" என்றான் ராஜம்

"நான் வேறு என்ன பேசுவது?"

"இன்னக்கிக் கோதண்டராமய்யங்கார் ஷேக்ஸ்பியரின் எந்த அங்கங்களை அறுத்துப்போட்டார், சொல்லு."

"அவன் செத்துப்போய்த்தான் ரொம்ப வருஷமாச்சே அவர் கையிலே."

இரு நண்பர்களும் கல்லூரிப் பாடங்களைப் பற்றிக் கால்மணி

நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"மணி என்னடா ராஜம்' என்று உள்ளேயிருந்து குரல் வந்தது. "எட்டு இருபது."

"எட்டு இருபதாயிடுத்தா?" என்றான் பாபு. "அப்ப நான் வரட்டுமா?"

"ஒண்ணே ஒண்ணு கேட்கலாமா?" என்றான் ராஜம் "கேளேன்."

"சின்னதா ஒரு பாட்டுப் பாடிவிட்டுப் போயேன், சின்னதாப் போறும்."

பாபு கள்ளக் குரலில் ஐந்து நிமிஷம் ஒரு ராகத்தையும் கீர்த்தனத்தையும் பாடி முடித்தான்.

O

நீலுப்பாட்டி வீட்டில் அவள் பிள்ளை பாபுவைப் பேசப் பிடித்துக்கொண்டான். பாபு அறைக்கு வரும்போது பத்து மணியாகி விட்டது.

婆340婆 தி. ஜானகிராமன்

_றையில் நுழைந்ததுமே மொட்டைமாடிக் கதவு தாழிட்டிருக்

_ன்று நன்றாகப் பார்த்துக்கொண்டான். விளக்கை ஏற்றிச் _ நாம் படித்தான். ஒரு மணி நேரம் பாட்டைச் சாதகம _ன்.

படுக்கும்போது மணி பதினொன்றரை விளக்கைச் சிறிது _ளிவிட்டுப் படுத்தான் அவன்.

ாஜம் ஏன் தன்னை ஆமோதிக்கவில்லை என்று அவனுக்குப் புரியவில்லை. ராஜம் ஆமோதிப்பதாகவே இருந்தாலும் யமுனா _ இப்படி வேதனைப்பட வேண்டும்: எனககு ஏன இது சரியான _னமாகத் தோன்றுகிறது: ராஜம் எதறகாக நாகரித உலகம, _ம் என்றெல்லாம் பிதற்றினான்: என்மேல் அனுதாபம் ക്ലബ് _றுக்கு யார் எதிர்த்தால் என்ன? எனக்குத் தவறாகத் தோன்ற விலை நான் இப்படியே வாழ முடியாது. நான ನ್ತಿ। _ நடப்பேன்! எதற்காகப் பயந்து பயந்து சாக வேண்டும்: மனிதனுக்கு இந்த அடிமைத்தனம், பிறர் கருத்துக்குப பணியும் பழைத்தனம் என்றுதான் தொலையப் போகிறது? நான் என மசை அடையத்தான் வேண்டும்.

அவள் வேண்டாம் வேண்டாம் என்று புலம்புகிறாளே. அவள் _i என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை: நட்டாற்றில் விட்டுவிடுவேன் என்று நினைத்தாளா? நான் அவளைக் காபபாறற முடியாதா? ...

இது என்ன அற்பத்தனம்! இந்தக் காரணங்களுக்காகவா யமுனா வேண்டாம் என்று சொல்லுவாள்! யமுனா அவவளவு ாதாரண மனுவியாக எப்படி இருப்பாள் வேறு ஏதாவது காரணம இருக்க வேண்டும் :

அவளில்லாமல் இருக்க முடியுமா?

"டொக்டொக்" என்று மொட்டை மாடிக் கதவைத் தட்டும் ஒசை கேட்டது.

பாபு உற்றுக் கேட்டான்.

"டொக் டொக்."

நாக்கு உலர்ந்தது அவனுக்கு துள்ளி எழுந்தது போலிருந்தது. மனது. மறுகணம் அது யார் பிடியிலோ நசுங்கி நின்றது.

"டொக் டொக்" பாபு எழுந்திருக்கவில்லை. ஜன்னலண்டை "ஸ் ஸ்" என்று நாக்கு ஒசையிடுவது கேட்டது.

அவள்தான்.

மோக முள் 婆341 婆



'துரங்கறியா?" "பாபு, பாபு, பாபு. த்ஸ். ஹம் ... பாபு ..." "ஸ் ஸ்" பாபு குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். ஒரு சிறு கல் வந்து அவன்மீது விழுந்தது. "பாபு, பாபு."

"தூங்கிப் போயிட்டேளா?" "கண்ணா. இதைப் பாரு"

"கண்னா!" கட்டிலில் மல்லாந்து கிடந்தான். ஓசை நின்றது.

அப்பாவையும் ராஜுவையும் யமுனாவையும் நினைக்கச் கொண்டான் பாபு. யும் நினைத்துக்

ஒசை நின்றே விட்டது.

o ஆான என் ஆதாரம் என்று, அப்பா காட்டிய தெய்வத்தை வணங்கிக்கொண்டே இருந்தான் அவன்.

அவன் மனம் லயித்து தூக்கத்தில் சரிந்தது. அதிகாலையில் எழும்போது மனம் லேசாக இருந் - - - ருந்தது. இர நலல மழையில் நனைந்து காலையில் கிளம்பிய வெயிலில்

புதுமைத் தோற்றத்துடன் நிற்கும் சோலைக் காட்சியைப் பால அவன் மனம் அமைதியில் குளித்து நின்றது. ச - - - - - - - ரு க Ld. குபபைகளும் நீங்கி உள்ளம் துப்புரவாக இருந்ததுபோல் குளித்துவிட்டு, சப்பணம் கூட்டியமர்ந்து வெகுநேரம் தியானம் செய்து உள்ளத்தைத் திடப்படுத்திக்கொண்டான்.

'நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன். என்னைச் சோதனைசெய்ததில் உனக்கென்ன பெருமை: சிங்கம் பூனையோடு பலப்பாட்சை செய்வது போல்தான் இது ஆனால். அதாவது. எனன, இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்கமாட்டேன். வேறு இரவைப்போல் வெளிக் கதவைத் தாழிட்டுவிடுவேன். மதில் காவலா, மனம காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால், உள் கதவும் இறக்கது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு முடியிருப்பதும் வெளிக் கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அன்று இந்த மாதிரி திடீர் என்று ஒரு தாககுதலுக்கு ஆளாகாமலிருந்தால், நான் பிழைத்துத்தானிருப்பேன். சை. என்ன மோசமான கதை! எதற்காகத் தத்துபித்தென்று அநதக் கதையைச் சொன்னாள் அவள்: ஆனால், இனிமேல் அந்தக் கதை எல்லாம் இந்தக் காதில் ஏறுமா? என்னைத் திருடத்தானே கூட்டாளியாக அழைத்துப் போனாள் அவள் நல்ல வேளையாக

婆342姿

தி. ஜானகிராமன்

_தும் நல்லதாகப் போயிற்று. யமுனா எப்படியிருக்கிறாள் தெரிந்துகொள்ள முடிந்தது. யமுனாவைத் தவிர நான் வேறு _ாயும் நினைக்க முடியாது என்று உன் சோதனை எனக்குத் 1.வித்துவிட்டது. இனிமேல் இந்த இவளை அனுப்பி யாரும் _ணப் பணியவைக்க முடியாது. கதவை ஓங்கிச் சாத்தி அவள் _ல் அடிப்பேன். அவளுடைய அழகை, கூந்தலை, காதுமுன் _அழகூட்டும் கேசத்தை, சரியும் தோளை, அழுத்தமும் _மையும் கொண்ட உடலை நான் வெறுக்கிறேன். அவளுடைய _ார், அவளுடைய நிலை எல்லாம் என்னுள் வெறுப்பைத்தான் _டுகின்றன. வெறுப்பது நியாயம்தானா? வெறுத்து வெறுத்தா அருளை அடைய முடியும்? அவளை வணங்கி வணங்கி வெறுப்பை ாக்கமாக மாற்றிவிட்டால் என்ன?... இவளை எப்படி வணங்கு இவள் மனத்தின் முன் வரும்போது நினைக்கவும் தகாதபடி பல்லவா வந்து நிற்கிறாள். அந்த வெறுமையை, அந்த அங்கங்களை ான் வெறுக்கிறேன். இவளை மறக்கத்தான் வேண்டும். என் _ள்ளத்தில் அடியெடுத்து வைக்கும்போதே அவளை வெளியே _ாத்த வேண்டும். துரத்தத்தான் துரத்துவேன்.

பாபு உறுதிமேல் உறுதியாகச் செய்துகொண்டான். மனத்துள் மதில்மேல் மதிலாக எழுப்பினான். எந்தச் சோதனையையும் மாளித்து நிற்க வேண்டும் என்று மனதைத் தட்டித் தட்டிப் பார்த்துக்கொண்டான். எந்த சந்தர்ப்பமும் தன்னை அசைக்க முடியாது என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டான். புருவத்திடையே தான் வணங்கும் சக்தியை நிறுத்தி வைத்துக்கொண்டு, என்னை யாரும் அசைக்க முடியாது என்று அந்த சக்தியிடமே சவால் விடுவதுபோலத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டான். இந்தப் போராட்டத்தில் ஒரு முரட்டு வெறி கலந்திருந்தது. நான் துணிவுள்ளவன், வலிகொண்டவன் என்று மீண்டும் மீண்டும் சொல்லுவது வெறியை வளர்த்துக்கொண்டே வந்தது. அவனை எழுந்திருக்கக்கூட மனமில்லாமல் செய்தது.

ஆனைச்சாத்தான் ஒன்று கொல்லையில் இன்னும் கத்திக் கொண்டிருந்தது. 'டுவீக் டுவிக் டுவீக் என்று மிளகாய்க் குருவி ஓயாமல் அவசர அவசரமாக அரற்றிற்று. வாசலில் அங்காடிக் கூச்சல் காய்கறிகளைக் கூவிக்கொண்டு போயிற்று. மணி ஏழு இருபது ஆகியிருந்தது. ரங்கண்ணா வீட்டுக்குப் போகும் நேரம். பாபு மொட்டைமாடிக் கதவைத் திறந்து பணியனையும் வேஷ்டியையும் பிழிந்து கீழே பரப்பினான். சட்டையைச் சுருக்க மில்லாமல் பிரித்துவிட்டான். தலையை உராசிக் கொண்டு அந்த சட்டைமேல் தென்னைமரத்தில் பாளைப் பூ உதிர்வதுபோல் ஏதோ வந்து விழுந்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தான். முகத்தில் புன்னகையுடன், பார்த்தும் பார்க்காததுமாக உள்ளே ஓடினாள் அவள். அந்தக் கடுதாசிக் கட்டுகளை எடுத்துக்கொண்டு மொட்டை

மோக முள் 婆343 婆



மாடிக் கதவைச் சாத்தினான். சாத்தும்போது ஜன்னலில் அந்தப் புன்னகையும் மலரும் மலர்ந்து நின்றன.

"நேத்திக்கி ராத்திரி நான் வந்து நின்று ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன். நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கலை. எப்படித்தான் இவருக்குத் துக்கம் வருகிறதோ என்று நினைச்சிண்டே நின்னேன். எனக்குத் துக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டுவிட்டு எத்தனை நாழி ஒண்டியாக வந்து நின்னு கத்துகிறது. நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது. உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை யோன்னுதான் பயமாயிருக்கு இல்லாவிட்டால் நீங்க ஏன் கதவை அப்படி மூடிண்டு துங்கணும் வெறுமே சாத்தியிருக்கோன்னுதான் முதலில் நினைச்சேன். அப்பம் விரலால் தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை. கையால் அழுத்திப் பார்த்தேன். அப்பறம்தான் ஜன்னலில் வந்து மானத்தை விட்டு உங்களைக் கூப்பிட்டேன். உங்களுக்குத்தான் கல் நெஞ்சாச்சே எப்படிக் காதில் விழப்போறது. எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. என்னை ஏன் இப்படி அவமானப்படுத்தணும். வேண்டாம் வராதே என்று ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். நான் என் விதி இதுதான்னு மனசைக் கெட்டிப் படுத்திக்கிறேன். மறுபடியும், மறுபடியும் நீங்க என்னை இவ்வளவு துணிச்சல்காரியான்னு நெனைக்கலாம். நான் துணிச்சல்காரிதான். இப்பகூட நீங்கள் எங்கே வரச்சொன்னாலும் என்ன செய்யச் சொன்னாலும் நான் அதுப்படி செய்யத் தயாராகத்தானிருக்கிறேன். நான் அப்பறம் என்னத்தைச் சொல்றது. நேரே சொன்னால் 'நிறையச் சொல்லுவேன். இன்னிக்கி அது ஊரிலிருந்து வந்தாலும் வந்துடும். வராவிட்டால் நான் நேராக ஏதாவது சொல்றதுக்கு இடம் கொடுப்பீர்கள்னு நான் நிச்சயமாய் நம்புகிறேன். நான் மானம் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன். எனக்கே தெரிகிறது. யாருக்காகன்னு நீங்களாவது கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் தெரியும் ... இப்படிக்கு உங்கள் தங்கம்மாள்."

தங்கம்மாவா உன் பெயர்? பெயரும் உடம்பு மாதிரிதான் இருக்கிறது. கடிதத்தை இரண்டு மூன்று தடவை வாசித்தான் பாபு மடித்தான், மீண்டும் பிரித்து நாலைந்து முறை ஏதோ நெட்டுருப் போடுவதுபோல் வாசித்தான். பெட்டியைத் திறந்து சலவை செய்த சட்டை வேஷடிகளுக்கடியில் போட்டுப் பெட்டியை மூடினான். ஜன்னலண்டை வந்து நின்று காவேரியைப் பார்த்தான், மீண்டும் பெட்டியைத் திறந்தான். மூடிவிட்டு மறுபடியும் ஜன்னலண்டை வந்து ஓடும் நீரை உற்றுப் பார்த்தான்.

'என்ன செய்யச் சொன்னாலும் தயாராயிருக்கிறாயா? எங்க வரச்சொன்னாலும் தயாராயிருக்கிறாயா? நான் எதற்காக உன்னை வரச்சொல்ல வேண்டும்? உன்னை எங்கு வரச் சொல்லத்தான்

婆344婆

தி. ஜானகிராமன்

_ா நீ யார்?. எனக்காகவா மானம் வெட்கம் எல்லாம் ப யார் விடச் சொன்னார்கள்?. எனனைக മ്യു _ா இப்படி என்னை வதை செய்யவா: யா _முடியாத அமாவாசை நிலாவாக எனனைச செய்யவா _கட என்னைத் தேடி வந்தாலும் நான ೨೨ಿ

_ளப் பதுக்கி வைக்கவா? ... நீ யார் இதெல்லாம் செய்ய _யா பிறந்து நான் இங்கு வந்திருக்கிறேன். என் go பாத்திருக்கிறாயா? என் அக்காவை நீ பார்த்திருக்கிறாயா _ருக்கு யார் தெய்வம் தெரியுமா என் ராஜததை _ா என் ரங்கண்ணாவை? யமுனாவை: நான _ஆளா? உனக்குச் செளகரியாம்போல் இந்தப் ч டை _றை கூலிக்காரனா?. நீ யார் சொல்லு? எனக்கும் உனககும _ _

ஒடும் நீர் சுழிந்து வளைந்தது. விகாரமாக ஒரு குப்பல் நுரையை _க்கொண்டு போயிற்று. வளைந்து விழுந்திருந்த நாணல் தடடை _ விக்கி அந்த துரைக்குப்பல் சிதறிற்று.

"நா நானா? நான் முடியாது." பெட்டியைத் திறந்து சலவைத் _ளிகளுக்கடியிலிருந்த அந்தக் காகிதத்தை எடுத்து. இரண்டாக ாலாக எட்டாக, சுக்கு சுக்காகக் கிழித்து. தங்கமமா எனற அநதப பெயரையும் உருத் தெரியாமல் கிழித்து, ஜன்னல் வழியாத GDTణாடியில் எறிந்தான் பாபு மெல்லியதாக வீசிய காற்றில் தெறிப் பறந்தன. தலையிலிருந்து விழுந்த மயிர்போல @TGT山 கம்போல, குப்பையாகக் கீழே பறந்து அடங்கின.

அன்று காலை பாபு கல்லூரிக்கு வழக்கத்தைவிட ಲ್ಲ விக்கிரமாகவே கிளம்பிச் சென்றான். வகுப்பிற்குப் போகும் கடை மணி அடிக்க இன்னும் இருபது நிமிஷம் இருந்தது. புதிய சஞ்சிதை எதாவது பார்க்கலாம் என்று நூல் நிலையத்தள அவன. நூற்றுக்கணக்கான பத்திரிகைகளுக்கு முன மாணவரதளவ - சயாகத இரண்டு பெரிய மேஜைகளுக்குமுன் உட்கார்ந்திருந்தார்கள்

ராஜத்தை அங்கு பார்த்ததும் அவனுக்கும் வியப்பாக இருந்தது. என்ன ராஜம், உடம்பு தேவலையா" என்று அருகே சென்றான். "ஜுரமில்லை. விட்டில் கொட்டுக் கொட்டென்று எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கிறது?"

"நடந்தா வந்தே" - "இல்லை. வண்டி வச்சிண்டு வந்தேன்" என்று QతాTుత கொண்டு ராஜம் எழுந்து நடந்தான். வாயேன், கிளாஸில் போய் உட்கார்ந்துக்குவம்."

வகுப்பில் யாருமில்லை. மாணவர்கள் காவிரியோரமாகப்

போட்டிருந்த பெஞ்சுகளிலும் பலாமரங்களின் நிழலிலும், விளையாட்டு

姿345婆

மோக முள்



வெளியின் மரங்களின் நிழலிலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தாாகள.

೧.?"” பையிலிருந்து ஒரு கவரை எடுத்துக்

"என்ன ராஜம்?"

"பணம் மூக்குத்தி விற்றாக்க "அதுக்குள்ளியுமா?"

"அம்மா பார்த்தா விடமாட்டேன்னுட்டா. அப்பா பணத்தை எடுத்துக் கொடுத்துட்டார். நாலு நோட்டு இருக்கா பாரு."

"உங்கிட்டவே வியாபாரம் ஆயிடுத்தா கடைசியிலே?"

எங்கப்பா இன்னும் ரண்டு பேரிடம் காண்பித்தாராம் நானுற்று இருபத்தஞ்சு வரையில்கூட போகுனாளாம் அவர் யாரோ

முந்நூற்றைம்பதுன்னானாம். மையமாகக் கொடுத்துட்டார் அப்பா சரிதானே?"

இவ்வளவு சுருக்க நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இப்ப பண மழையாப் பெய்தாற்போல இருக்கு."

- கம்மாப் பெய்யலியே ஒரு தலைமுறையாகக் காப்பாத்திண்டு வநத சாமான்னா போறது" என்றான் ராஜம்

"என்ன செய்கிறது? வேறு வழியில்லை." இருவரும் சற்று மெளனமாக இருந்தார்கள்.

"நீ ஏன் இந்த உடம்போடு காலேஜுக்கு வரே " என்றான் பாபு ராஜத்தின் உடம்பு சோர்ந்திருந்தது.

"இப்ப சாதாரணமாகத்தானே இருக்கேன்." "சாதாரணமாக இல்லை. வதங்கிக் கிடக்கு." "ராத்திரி வெகுநேரம் வரையில் து.ாக்கம் வரவில்லை."

"ஏன் ?"

- "ஆமாம். என் சிநேகிதன் நடந்துக்கறதை நினைச்சா தூக்கம் எப்படி வரும்?"

"என்ன ராஜம் இது?"

"ஆமாம் பாபு, ராத்திரி யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். எனககு சமாதானப்படவில்லை."

"ஏன் ?"

婆346婆

தி. ஜானகிராமன்

_க்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை. என்னமோ _ண்டாமென்று படுகிறது. அவ்வளவுதான்."

_ான காரணங்களை எல்லாம் யோசிச்சே நீ?"

_ாரணங்கள் என்ன எது என்று தெளிவாக ஒன்றும் தோன்ற _ எனக்கு. ஆனால், நீ சொன்ன நிமிஷத்திலிருந்து, நான் _ஆரம்பித்த நிமிஷத்திலிருந்து, இது உனக்கு ஒத்துவராது _ான் தோன்றுகிறது. மனிதனுக்கு முக்யமானது என்ன?"

_வண்டியதை அடைகிறது." _வேண்டியதை அடைகிறதினால் என்ன லாபம்?" லாபம் என்ன? ஒரு திருப்தி, ஒரு அமைதி." _அதுதான் கேட்டேன். திருப்தி இருக்கட்டும் அமைதி என்று _ான்னாயே, அதுதான் சரி ... அது கிடைக்காது உனக்கு."

"ராஜம், நீ அவளைப் பார்த்தால் இப்படியெல்லாம் பேச மாட்டே."

"என்னமோ."

"நீயே வாயேன் சாயங்காலம். நீங்கதான் மூக்குத்தியை வாங்கிக் கொண்டீர்கள் என்ற சாக்கிலாவது வந்து பாரேன்."

"பார்க்கிறேன்."

"பார்த்தால் நீ இந்த மாதிரி நிச்சயம் பேசமாட்டாய்." "பார்த்த பிறகல்லவா அது." "சாயங்காலம் காலேஜ் விட்டதும் நேராகப் போவோமா?"

"போவோம்."

"உனக்கு நடக்க முடியுமா?" "நடக்க முடியாவிட்டால் வண்டி இருக்கு சாயங்காலத்துக்குள் எனக்கு உடம்பு கொஞ்சம் சரியாயும் ஆகிவிடும்."

பாபு நிமிர்ந்து வெளியே பார்த்தான். காவேரி ஒரமாகக் கும்பல் கும்பலாக மாணவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தார்கள். இரண்டு மூன்று மாணவர்கள் புத்தகத்தைப் பிரித்து வைத்துப் படித்துக்கொண்டிருந்தார்கள். பாபுவும் வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். லஜ்ஜையாகத்தான் இருந்தது அவனுக்கு படிப்பைத் தவிர வேறு எதைப்பற்றியும் யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. எனக்கு மட்டும் இந்த அசந்தர்ப்பமான மனப்போக்கு எதற்கு எந்தப் பெண்ணைப் பற்றியாவது இவர்கள் சிந்திக்கிறார்களா? யாரையாவது பார்த்தால்

婆347婆

மோக முள்



ஏதாவது தத்துப்பித்து என்று பிதற்றுவார்கள் பிறகு அதை மறந்து விடுவார்கள், இரவில் படித்துக்கொண்டிருப்பார்கள். படித்ததைப்பற்றி சிந்தனை செய்வார்கள்.

"ராஜம், நான் மட்டும் ஏன் இப்படித் துன்பப்படுகிறேன் ?"

ராஜம் பதில் சொல்வதற்குள் இரண்டு, மூன்று மாணவர்கள் அறையில் நுழைந்தார்கள். பிறகு இரண்டு பேர் புகையிலைச் சாற்றைத் தாழ்வாரத்திலிருந்து துப்பிவிட்டு மிச்சத் துகள்களை "ப்... ப் என்று எதிரிலேயே துப்பாமல் துப்பிக்கொண்டு உள்ளே வந்தனர். அவர்கள் பேச்சுக் கொடுத்தது பாபுவுக்கு இதமாகத்தான் இருந்தது.

மாலையில் கல்லூரி விட்டதும் இருவரும் பாபுவின் அறைக்குச் சென்றார்கள். ராஜம் முதல் நாள் பாபு சொன்னதைப் பற்றி நினைவே வராததுபோல, பாபு சட்டையை மாற்றிக்கொள்கிற வரையில் உட்கார்ந்திருந்தான். பாபுவும் அவசர அவசரமாகச் சட்டையை மாட்டி சீப்பால் தலையை வாரிக்கொண்டு, பானையி லிருந்த நீரால் முகத்தைக் கழுவித்துடைத்துக்கொண்டு கிளம்பினான். வெளியே வரும்போது அவனுக்குக் கேட்காமலிருக்க முடியவில்லை.

"என் அறையில் உட்கார முடிந்ததா ராஜம்?"

"ஏன் 2”

"இல்லை, கேட்கிறேன்."

"உன் அறை என்ன தீமிதிக்குப் போட்ட நெருப்பா?"

"எனக்கு அப்படித்தானிருக்கிறது."

"செத்துப் போனதைத் தின்னு தின்னு வாழ்கிறவர்கள் எப்படி அமைதி அடைவார்கள் மாடுகூட காலையில் தின்னதைத்தான் அசைபோடும். முந்தாநாள் தின்றதைப் போடாது."

"நடந்தது, இறந்த காலம், இதெல்லாம் உண்டா?"

"அவ்வளவு தூரம் பொதுப்படையாகப் பேசினால் என்ன பிரயோஜனம்? நமக்கு நடக்கிறது, நடக்கப்போகிறது தான் முக்யம். பழசை நினைத்து நினைத்து என்ன? இன்பமாயிருந்தாலும், துன்பமா யிருந்தாலும் பழசை நினைப்பது துன்பம்தான். சவத்தை தின்கிற மாதிரி அது."

"பழசை நினைக்காமல் எப்படித் திருந்துகிறது?"

"பாபு, இந்த டிசம்பர் லீவில் எங்காவது போய்விட்டு வா. அப்பா, அம்மா, நான் எல்லாரையும் பார்க்காமல் கொஞ்சநாள்

இரு."

"ராஜம், இனிமேல் எனக்குப் பயமில்லை."

签348签 தி. ஜானகிராமன்

_ பழசு செத்துப்போயிட்டுதா p" பழ. செத்துப்போகாது. அதுதான் எனக்குப் பலம்" புரியும்படியாகச் சொல்லு" _றத்திக்கி நான் கதவைத் திறக்கவில்லை. கதவை இடிச்சா. ாட்டா. நான் கும்பகர்ணன் மாதிரி கிடந்தேன்."

_றத்திக்கா?"

_ஆமாம்."

இன்னிக்கி" _என்ன ராஜம் இது?" இன்னிக்கும் அப்படியே தான் நடக்குமான்னு கேட்கப்படாதா" இன்னிக்கி ஊர்லேருந்து வந்துவிடுவார்?" "நல்லாதாயிற்று இனிமேல் இப்படி நினைச்சு நினைச்சு _கொலை பண்ணிக்காதே. அதை மறந்துவிடு."

"நான் மறந்தே விட்டேன்." "எல்லாத்தையும் மறந்துவிடு." "எல்லாத்தையும் எப்படி மறக்க முடியும்?"

பாபு, நீ சுவரில் போய் முட்டிக்கொள்வதை நான் தடுக்க முடியாது. முட்டிக்கொள்ளாதேன்னு சொல்லலாம். நீ திமிறிக் கொண்டு போனால் நான் என்ன செய்ய ?"

பாபு பதில் பேசாமல் நடந்து வந்தான்.

மடத்துத் தெருவுக்குப் போகும் முன்பே உடுக்குச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. பிள்ளையார் கோவில் தெருவைக் கடருதும அந்த மாரியம்மன் கோவிலைக் கடந்துதான் போகவேண்டும்.

பிராகாரத்தில் பலகைகளும் ஆயுதங்களும் தித்திப்பல்லும் பெருவிழியுமாக காளியின் உருவம் கொலைக் கோலம் கொண்டு நின்றிருந்தது.

நீ தான் எனக்கு வேண்டும். என் பகைகளைக் கொன்று விழ்த்த நீதான் வேண்டும். ஆனால் நீயே என்னைச் சோதித்தால், தங்கம்மாவின் உருவில் வந்தால், உன்னைவிட எனககுக : முளைக்கும். உன்னையும் நான் அடிபணியச் செய்ய முடியும! என்று மார்பை மனத்திற்குள்ளேயே தட்டிக்கொண்டான் பாபு.

யமுனாவின் வீட்டை அடைந்ததும், யமுனா புதிதாக யாரோ வந்திருப்பதைப் பார்த்து சற்றுத் தள்ளினாற் போல் அடுக்களை

மோக முள் 婆349 婆



நிலைப்பக்கம் சென்று நின்றாள். ஊஞ்சலை விட்டு எழுந்த பார்வதி, "வா பாபு என்று வரவேற்றுக் கொண்டே ராஜத்தைப் பார்த்தாள்.

"வா பாபு, உட்காரு உட்காருங்க"

"என்னோடு படிக்கிறவர். ராஜம்னு பேரு”

"உன் கிளாஸ்தானா?”

"ஆமாம்."

"எங்கே இருக்காங்க?"

"கடலங்குடித் தெரு."

"உட்காருங்க."

"இவர் இல்லாவிட்டா இவ்வளவு சீக்கிரம் இது கிடைச்சிருக்காது. என்று சொல்லிக்கொண்டே பாபு பையிலிருந்த நானூறு ரூபாயையும் எடுத்து பார்வதியிடம் நீட்டினான்.

"அட பணமாகவே கொண்ணாந்துட்டியா:

"நான் கொண்டு வரலை, இவர். இவர் அம்மா பாத்தாங்களாம். பிடிச்சுப் போச்சாம். அவங்களே எடுத்துக்கிட்டாங்க

யமுனா. இவர்தான் ராஜம்."

யமுனா தயங்கிக்கொண்டே சிறிது சிறிதாக ஒரு தூண் தள்ளி வந்து நின்றாள்.

"உட்காருங்க"

"உட்காருங்க, தம்பி."

"உட்காரு ராஜம். யமுனா, என்றான் பாபு.

இவரும் நானும் ஒன்றுதான்"

"அப்படீன்னா" என்று கேட்டாள் யமுனா.

"அப்டீன்னா அப்படித்தான்!"

"ரண்டு பேரும் ஒன்றாகவே இருப்பீங்களா எப்பவும் " "பிரிச்சுப் பார்க்கறது கஷ்டம் யமுனா."

"தேவலையே."

பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புன்னகை புரிந்தான்.

பார்வதி ராஜத்தைக் குலம் கோத்ரம் எல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். எல்லாக் கேள்விகளுக்கும் சின்னச் சின்னதாக விடை பகன்று கொண்டிருந்தான் பாபு.

婆350婆

தி ஜானகிராமன்

_ாடு நிமிஷம் கழித்து ராஜத்தின் பக்கம் ஒரு டம்ளர்

_.

_ம் பேசாமல் எடுத்து ஆற்றினான். டம்ளரை வைத்துவிட்டு _ானோரமாக நின்றுகொண்டிருந்தாள்.

-பாபுவுக்கும் கொண்ணாந்து கொடேன் யமுனா." _வரும் அவரும்தான் ஒண்ணாச்சே!"

_லே தாயும் பிள்ளையுமாயிருந்தாலும் வாயும் வயிறும்

_ாயிடுமா ?”

-பாபு சொல்றதைப் பார்த்தா அப்படி இல்லையே” என்றாள்

---

_ன்ன யமுனா ?" என்றான் பாபு.

சொல்றதைப் பார்த்தா, மார்க்கு வாங்கறது. ಸ್ತ್ರೀ.: _றது. சாப்பிடறது எல்லாம் ஒன்று மாதிரில்ல இருக்கு:

"எல்லாம் அப்படியிருக்குமா?"

'கலியாணம் ஆயிடுத்தா உங்களுக்கு" என்று யமுனா கேட்டதும் _ம், பாபு, பார்வதி எல்லோருக்குமே தூக்கிவாரிப் போட்டது.

"இன்னும் ஆகலை" என்று சாவதானமாகச் சொன்னான் ராஜம் "எப்ப ஆகும்?" "படிப்பு அஞ்சாறு வருஷம் இருக்கே" "ஏது அஞ்சாறு வருஷம் ? பாபு கிளாஸ்தானே நீங்க?" "ஆமாம். இந்த ஒண்ணரை வருஷம் அப்புறம் ரண்டு வருஷம மேலே படிக்கணும். பிறகு ஆராய்ச்சி நாலஞ்சு வருஷம்.

"பிறகுதான் கலியாணமா?" "பிறகு பண்ணிண்டாலும் உண்டு. இல்லேன்னாலும் இல்லை." "அவர் கலியானத்தைப் பற்றி ரொம்ப விவரமா விசாரிக்கிறியே, என்ன யமுனா?” என்றாள் பார்வதி.

"இல்லேம்மா, தஞ்சாவூர்லே அடுத்த " மாதிரி இருந்திச்சு இவங்களைப் பார்த்தா, அதான் கேட்டே

"பார்த்தசாரதிக்குப் பதினாறு வயதிலே கலியாணம் 677 எல்லோருக்கும் ஆகணுமா? உனக்குத் தெரியுமா பாபு

"தெரியுமே, அவன் ஆறாவது பாரம் படிக்கிறபோது அவனுக்கு சீமந்தம் நடந்ததே. மாப்பிள்ளே, மாப்பிள்ளேன்னுதான் அவனைக கூப்பிடுவார்கள் வாத்தியார், பையன்கள் எல்லாரும்.

婆351 婆

மோக முள்



"கொஞ்சம் அசைப்பிலே பார்த்தா அவன் மாதிரியில்லே இவங்க?" என்று ராஜத்தைப் பார்த்தாள் யமுனா.

"அவன் வேறே, இவங்க வேறே, தலைமயிரு மாத்திரம் இப்படித் தான் அவனுக்கும் அலை அலையா இருக்கும். இந்த மாதிரி நீள மூஞ்சிதான் நீள மூக்குதான் அவனுக்கும்."

"பின்னே எல்லாம் சொல்லிவிட்டு வேறேங்கிறியே!”

"பாச்சாவுக்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது என்னவோ அவங்க அப்பாரு வாய்ச் சவடாலடிச்சிக்கிட்டு பையனை கிளாசு கிளாசாத் தூக்கிப்போட்டுக்கிட்டே வந்தாரு இந்தப் பையனுக்கும் அதுக்கும் போய் ஈடு கட்றியே. இது ஒடற பாம்புக்குக் கால் எண்ணும் போலிருக்கு."

"தேவலையே நீங்க" என்றான் ராஜம்.

"தேவலை என்ன? முகத்தைப் பார்த்தாத் தெரியாதா? பாபு

சிநேகம் பிடிக்கிற ஆளு சாமான்யப்பட்டதா இருக்குமா?"

பாபு பெருமையோடு ராஜத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"போகலாமா பாபு ?"

ம் அப்ப நாங்க வரட்டுமா?"

"இரு பாபு, கோச்சுக்கிட்டுப் போயிடாதே" என்று யமுனா உள்ளே ஒடிப்போய் காப்பியைக் கொண்டு வந்தாள்.

"வாயும் வயிறும் வேறுதான் பாத்தியா?" என்றாள் பார்வதி.

"எல்லாம் வேறாகத்தானிருக்கும். ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் இருக்க முடியுமா?...பாபு இவங்க மார்க் எப்படி வாங்குவாங்க? உன்னைவிட ஜாஸ்தியாயிருக்குமா, குறைச்சலா யிருக்குமா?" என்று சிரித்தாள் யமுனா.

"எல்லாத்திலேயும் என்னைவிட ஒருபடி மேல்தான் ராஜம்."

"அப்படிச் சொல்லு."

"நான் வரட்டுமா?" என்றான் ராஜம்

"சரி பாபுவை நீங்களும் கட்டியிழுத்துக்கிட்டுப் போங்க உங்களைவிட மார்க்கெல்லாம் குறைச்சு வாங்குதாமே அது!"

ராஜமும் பாபுவும் சிரித்துக்கொண்டே விடைபெற்றார்கள்.

婆352婆

தி. ஜானகிராமன்

24

பாபு நான் இதுவரையில் இவ்வளவு அழகான பெண்ணைப் _ல்லை" என்றான் ராஜம், ஆனையடியைக் கடந்து வந்ததும்

விருவையாற்றிலிருந்து வருகிற பஸ் ஒன்று படபடவென்று _துடன் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்களைக் கடந்து _று இருவரும் துண்டால் மூக்கையும் வாயையும் பொத்திக் _ண்டார்கள். புழுதி அடங்கியதும், "நீ இதுமாதிரி சொல்லுவாய்

_ எனக்குத் தெரியும்" என்றான் பாபு.

"நான் என்ன? எல்லாருமே சொல்வார்கள். அவளுடைய _ண், உடல் எல்லாம் சாதாரணப் பெண்களிடம் பார்க்க _ாது."

_அவள் சாதாரண ஸ்திரீயே அல்ல."

_அதுதான் உனக்கும் அமைதி கிடைக்காது என்று சொல்கிறேன்."

"இன்னும் அப்படியேதான் சொல்கிறாயா?" "எப்பொழுதும் சொல்வேன்." _அவள் என்னை ஏற்றுக்கொண்டால் "

_அதை அப்போது பார்த்துக்கொள்கிறது! அது சரி. ஏற்றுக் _ண்டுவிட்டால் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடுமா?"

"ராஜம், நீ ஏன் இப்படி சொல்கிறாய்?" "நீ சந்தோஷமாக இருக்கத்தான்." "நான் சந்தோஷமாக இருக்க முடியாது என்று ஏன் சொல்கிறாய்."

"பாபு, ஏதோ எக்கச்சக்கமாகக் கேள்விகள் கேட்கிறேன்னு |னைச்சுக்க மாட்டியே?"

கேளேன்."

"காதல் என்று சொல்கிறோமே. அதுதான் இது என்ற நிச்சயமாக நம்புகிறாயா நீ?"

"ஆமாம்."

"காதல் என்றால் என்ன தெரியுமா?"

"நீதான் சொல்லேன்."

"இரண்டுபேரும் ஒரே மாதிரியா நினைக்கணும். ஒருவர் மட்டும் நினைத்தால் காதல் இல்லை அது. அது அழுகை இல்லா விட்டால் யாரும் கீழ்ப்படியாத சர்க்கார் உத்தரவு. தரிசு நிலத்துக்கு,

姿353婆

மோக முள்



சாகுபடிக்கே லாயக்கில்லாத, சாகுபடியே இல்லாத பூமிக்கு, வேலி கட்டுகிறது. எது வேணும்னாலும் வச்சுக்கலாம்."

"சரி."

"அப்படீன்னா, இதை நம்புகிறாயா நீ?" "நம்புகிறேன்."

"நான் நம்பவில்லை."

"ஏன் ?"

"நீ அவளிடம் ஏதோ தெரிவிச்சேன்னியே." "ஆமாம்." "அவள் எதாவது சொன்னாளா?" "வேண்டாம் என்று சொன்னாள்."

"எப்படிச் சொன்னாள்?" "கெஞ்சுகிறாற்போல் சொன்னாள்."

"அப்படியா சொன்னாள் ” என்று ராஜம் சற்று சந்தேகமும் வியப்பும் கலந்ததுபோலக் கேட்டான்.

"ஆமாம்."

"கெஞ்சினாற்போலவா?"

"ராஜம், நீ ஏன் இப்படிக் குழப்புகிறாய் என்னை ?"

"உன் மனசு தெளிய வேண்டும் என்றுதான். கெஞ்சுகிறாற்போல சொன்னால் இன்னும் கஷ்டம்."

"ஏன் ?"

"நீ எதோ நம்பிக்கொண்டேயிருப்பாய்."

"சரி, அப்படியே இருக்கட்டும். அவள் சித்தம் மாறக்கூடாதா?"

"பேஷாக மாறட்டும். மாறவேண்டும் என்றுதான் என் ஆசை."

"ராஜம், இந்த ட்ராமாவெல்லாம் வேண்டாம். முழுக்கச் சொல்லித்தொலை நீ சொல்கிறதை."

ராஜம் சிரித்தான்.

"பாபு, நீ எப்பொழுது இவளைக் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாய்?"

"அவள் வைக்கிற தேதியில்தான்." "யார் நிச்சயம் பண்ணுவார்கள்?"

"நான்தான்."

婆354婆

தி. ஜானகிராமன்

_ப்பா, உங்கம்மா ?”

_ருக்கு இஷ்டமில்லையென்றால் நான் என்ன செய்கிறது:”

_அப்பாவுக்கு ஒரு கடமை இல்லையா? நீ செய்கிற un" _தையெல்லாம் சொல்லி என்னைக் கலைக்க முடியுமா

o

_ப்ப நீ அதைப்பற்றி யோசிக்கவில்லையா?" _அவர் சரின்னு சொல்ல வேண்டும் என்று என்ன முடை?” _துதான் கேட்டேன்." _அப்பாக்களின் அதிகாரத்துக்கு வரம்பு, குறிப்பிட்ட இடம் _ாம் கிடையாதா ராஜம்?"

'இல்லை பாபு உங்கப்பாவுக்கு நீ ஒரே பிள்ளை, என் மாதிரி. _அவரிடம் அசாத்யமா பக்தி அன்பு எல்லாம் வச்சருக்கே _ாலே சொன்னேன்."

_அதற்காக நான் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு _றுமா"

"ஏன் ஒடனும் தைரியசாலிகள் எதையும் பகிரங்கமாகச் செய்வார்கள். தலையிலே துணி எதற்கு ?"

"என்ன சார்?" என்று அப்போது குரல் கேட்டது. பாபு வரும்பினான். மேலக் காவேரி சாஸ்திரிகள் சைக்கிளைத் _ளிக்கொண்டு பின்னால் வந்துகொண்டிருந்தார்.

"நமஸ்காரம் சார்." "நமஸ்காரம் என்ன சேதி: உங்க ரூமுக்கு வரணும் வரணும்னு பாக்கறேன். ஒழியவே இல்லை. என்ன சார், செளக்கியமா?" _ன்று ராஜத்தைப் பார்த்தார்.

ராஜம் செளக்கியம்" என்று தெரியாத மனிதர் போடுகிற கேள்வியைக் கேட்டுக் குழம்பிக்கொண்டே சொன்னான்.

"உங்கப்பாரிடயரானதுக்கப்புறம் வேறு வேலைக்கே போகலியா"

"இல்லை." "ஒரு சின்ன ட்யூடோரியல் காலேஜ் வச்சா பணமா அரிச்சுக் கொட்டலாம் சார் எல்லாம் அவா அவா ஆசையைப் பொறுத்தது. தியாகராமய்யர் அப்படியெல்லாம் பறக்கிறவரா என்ன? ஏன் சார், துக்காம்பாளையத் தெருவிலே இருக்காளே உங்களுக்குத் தெரிஞ்சவளா?"

婆355 婆

மோக முள்



"ஆமாம்." "அதுதானே பார்த்தேன். உங்களைப் பார்த்தேன் அன்னிக்கி." "ஆமாம். எங்கப்பா அவர்கள் நிலத்தைப் பார்த்திண்டிருக்கார். அவர்கள் நிலம் பாபநாசத்திலே இருக்கு நாற்பது வருஷமாப் பழக்கம். மராத்தியர்கள்..." என்று பாபு சடசடவென்று ஒப்பித்தான். அவனுக்குச் சற்று எரிச்சலாக வந்தது. "நீங்க என்ன கடைத்தெரு பக்கம் போறேளா?" என்று கூடவே கேட்டான்.

"ஆமாம் ... ஒரு நாளைக்கு வரேன் ரூமுக்கு." "கட்டாயம் வாங்க சார்."

"நான் வரட்டுமா?" என்று இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மிதியை மிதித்தார் சாஸ்திரிகள்.

சாஸ்திரிகளைப் பார்த்துக்கொண்டே சற்று நின்றான் ராஜம் "இவர் யாரு?" "யாரு இவர்?" "உனக்கும் தெரியாதா?” "ரண்டு மாசத்துக்கு முன்னால் ஆறுமுகம் கடைக்கு முன்னாலே பார்த்தேன். அவராக எல்லாம் விசாரித்தார் என்னை குலம், கோத்ரம், படிப்பு எல்லாம் விசாரித்தார்." "என்னை எப்படித் தெரியுமாம்?" "அவருக்குத் தெரியாத விஷயம், தெரியாத மனிதர்கள் ஒன்றும் இராது என்றுதான் தோன்றுகிறது."

"அப்பாவைப் பற்றிக் கேட்டார். அப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்." "தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நமக்கு எந்த சமாசாரம் வேணும்னாலும் இவரைக் கேட்டுத் தெரிஞ்சக்கலாம். அவர் எங்கப்பாவைப்பற்றிச் சொல்கிறார். நான் சாப்பிடுகிற நீலுப்பாட்டி வீடு, அவள் பிள்ளையைப்பற்றிச் சொல்கிறார், என் வீட்டுக்காரரைப் பற்றிச் சொல்கிறார் நம்ம காலேஜ் வாத்யாரை எல்லாம் பற்றிச் சொலகிறார், இப்போது யமுனாவைப் பற்றி நமக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்துகொண்டு விடுவார் போலிருக்கிறது" என்றான் பாபு.

"அப்ப நீதான் ஜாக்ரதையாக இருக்கணும்."

"எனக்கு என்ன ஒளிவுமறைவா ஒன்றும் செய்யவில்லையே

நான்

"உனக்கு ஒளிவுமறைவு வேண்டியதில்லை. வேண்டும் என்று நினைக்கிறவர்கள்?"

婆356 淺 தி. ஜானகிராமன்

_அப்படி நினைப்பாள் என்கிறாயா?" _னைத்தால்?"

_ற்காக நினைக்க வேண்டும்?" _ம்மா அபவாதத்துக்கு ஆளாவானேன் என்றுதான்." _பவாதம் எப்படி வரும்?"

_ஆமாம், அவள் உன்னை ஏற்றுக்கொண்டால் அபவாதம் றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. இல்லையென்றால்?"

பாபுவுக்கு ராஜத்தின்மீது புகைச்சலாக வந்தது இவனிடம் _தையெல்லாம் சொன்னோம் என்று ஒரு கணம் நெஞ்சு _றிறு இவன் வாயை அடக்கவாவது அவளை உடனே வசமாக்கி, _ சொல்லச் செய்துவிட வேண்டும் என்று துடித்தது.

'இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?" _அவள் தான் சொல்லிவிட்டாளே." பாபுவுக்கு வயிற்றுக்குள் கல் விழுந்தாற்போலிருந்தது. _ன்ன சொன்னாள்?"

'இல்லை என்றுதான்."

"எப்பொழுது சொன்னாள்?"

"இப்போதுதான்." "அப்படிச் சொல்லக் காணோமே." "உன்னிடம் சொல்லவில்லை." "உன்னிடம் சொன்னாளா?"

"நீ இவ்வளவு தூரம் அவளோடு பழகியிருக்கிறேன் என்கிறாய் _ாக்கு ஏன் புரியவில்லை? என் கலியாணத்தைப் பற்றிக் கேட்ட தெல்லாம், நீயும் இப்போது அதைப்பற்றி நினைக்க வேண்டாம் ாறுதான். உன்னையும் கட்டி இழுத்துக்கொண்டு போ என்று _ன்னிடம் சொன்னதும் அதற்குத்தான்!"

"நான் எத்தனை வருஷமானாலும் காத்துக்கொண்டிருப்பேன்." "அதைப்பற்றி அவள் கவலைப்பட வேண்டுமே?”

பாபுவுக்கு மீண்டும் கோபம் புகைந்தது. இவன் என்னமோ எல்லாம் தெரிந்தாற்போல் பேசுகிறான்!

அவன் பதில் சொல்ல விரும்பவில்லை.

"பாபு, நான் சொல்கிறதெல்லாம் சொல்லியாகிவிட்டது. உனக்குப் பிடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். நாம் எதற்காக இதைப்

மோக முள் 婆357婆



பற்றிப் பேசிப்பேசி, கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. இதைப்பற்றியே பேச வேண்டாம்."

பாபு பேசாமல் நடந்துகொண்டிருந்தான். ராஜம் மேலும் சொன்னான்.

"இதைப்பற்றிப் பேசுவதில்லை என்று வைத்துக்கொள்வோம். நான் சொல்வது எல்லாமே தவறாக இருக்கலாம். நீ அதையெல்லாம் நினைத்து வேதனைப்பட வேண்டிய அவசியமில்லை. உன் யமுனா மாறினாலும் மாறலாம். யார் எதைச் சொல்ல முடியும்? மாற வேண்டும் என்றுதான் வேண்டுகிறேன் ... அதாவது முற்றிலும்."

"முற்றிலும் என்றால்?" "முற்றிலும்தான். உனக்கு அமைதியைக் கொடுக்கக்கூடிய

அளவுக்கு மாறட்டும் என்றுதான் நான் வேண்டிக்கொள்கிறேன். எல்லாமே மாற வேண்டும் என்று விரும்புகிறேன்."

“өт6ipsuгтцогт Р”

"ஆமாம். உன் அப்பா அம்மா எல்லாரும் இதை ஒப்புக் கொள்ளட்டும். அந்த அளவுக்கு மனப்போக்குகள் மாறட்டும்."

"நீ என்ன நினைக்கிறாய்?" "என்னைப்பற்றி என்ன ? நானும்தான் மாற வேண்டும்." "உனக்குத்தான் இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டாயே."

"அதனால்தான் நானும் மாற வேண்டும் என்று சொல்கிறேன்." "இப்போது நீ ஆமோதிக்கவில்லையா?" "இல்லை. ஆனால் நீ எதற்காக என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்."

அதற்குப் பிறகு பாபுவும் ராஜமும் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. ராஜத்துடனேயே சென்று தியாகராமனிடம் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பினான் பாபு.

O

எல்லாம் மாறட்டும். மாறவேண்டும் என்று ராஜம் வேண்டிக் கொண்டதும், வாழ்த்தியதும் பாபுவை மேலும் குழப்பிக்கொண் டிருந்தன. அனாவசியமாக, பிடிக்காத கருத்துக்களைச் சொல்லிப் புண்படுத்த வேண்டாம் என்று அவன் முடிவு செய்துவிட்டான் போலிருக்கிறது. எப்படியோ! மாறட்டும் என்று சொன்ன குரல் மட்டும் மனது ஒட்டாமல் சுரையில் ஏறாத் தந்திபோல் பொருளிழந்து ஒலித்தது.

婆358婆

தி. ஜானகிராமன்

_வறட்சி, ராஜம் முதலில் சொன்னவற்றை உறுதிப்படுத்து பாலிருந்தது. சந்தேகங்களை எழுப்பி மனதை அலைக்கழித்தது. _ யமுனாவே இல்லாமலிருந்தால் தேவலை போலிருந்தது. அப்போதும் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை. நடந்ததை

ாம் மறந்து, விழித்துக்கொண்டால்: முக்கால்வாசிக் கனவுகள் மறந்துதான் போகின்றன. ஆனால்

_ மறந்துபோகிற கனவாகத் தோன்றவில்லை; விழிப்பிலும் _ரும் கனவு.

ஆனையடியைக் கண்டதும், பழகின மாட்டைப்போல மேற்குப் _ஏதோ அவனை இழுத்துக்கொண்டு போயிற்று.

உள்ளே போனபோது யமுனா அவனை வா என்று கூடச் சொல்லாமல் சூன்யமாகப் பார்த்தாள். "என்ன பாபு என்று அவள் _அரை நிமிஷமாயிற்று. அதுவும் அவன் உட்கார்ந்த பிறகு,

மறுபடியும் அவள் கண், பதிலை எதிர்பார்க்காதது போல ாத்துக்கொண்டிருந்த புத்தகத்தின் மீது போயிற்று.

_அம்மா இல்லையா?" "பணம் வந்தாச்சு. கடைக்குப் போயிருக்காள்." வந்த மூச்சிலேயே செலவழிக்கணுமா?" "கடைக்காரன் மறுபடியும் கடன் கொடுக்கனுமே!"

"எப்ப போனா?"

"இப்பதான். அஞ்சு நிமிஷமாச்சு." யமுனா புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே புரட்டிக்கொண் டிருந்தாள். பாபு பேசாமல் உட்கார்ந்திருந்தான். வார்த்தைகள் மட்டும் நாக்கு நுனியில் வந்து துடித்துக்கொண்டிருந்தன.

"எங்கேருந்து வரே?"

"ராஜத்தின் வீட்டிலேர்ந்து." "இந்த ராஜம் உனக்கு ரொம்ப சிநேகமா?" "ரொம்ப சிநேகம்."

"ரொம்ப கெட்டிக்காரனா?”

"கெட்டிக்காரன், நல்லவன்." "பார்த்தாலே தெரிகிறது. ரொம்ப அமரிக்கையா, அடக்கமா இருப்பான் போலிருக்கு."

婆359 婆

மோக முள்



"அடக்கம். நிறைஞ்ச குடம்."

"அழுத்தமாகக்கூட இருப்பான் போலிருக்கு ஆர அமரத்தான்

எதையும் செய்வானா?"

"ஆமாம்." "உன் அவசரத்துக்கும் அவன் அழுத்தத்துக்கும் ரொம்ப தூரம் இருக்கும்போலிருக்கேன்னு கேட்டேன்."

"வாஸ்தவம்தான்."

"அப்படியானா, நீ அவன் யோசனையைக்கூடக் கேட்பியா" 'எதுக்கும் கேட்பேன்."

"எதுக்கும்?"

"எதுக்கும்தான்!" "அவனும் உன்னைக் கேட்பானாக்கும்?" "அவன் ஏன் கேட்கணும்? கேட்கும்படியா ஒண்னுமில்லை அவனுக்கு இருந்தாலும், தானே முடிவு பண்ணிப்பான்."

"இதுக்கு என்ன சொன்னான்?" 'எதுக்கு ?"

"உன் கவலைக்குத்தான்." பாபு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். "நான் அவனிடம் இதைக் கேட்கவில்லை. இது சொந்த விஷயம்" "அப்படின்னா எதுக்கு அழச்சிக்கிட்டு வந்தே?"

"உடனே நகையை வாங்கிண்டாங்களே. அது யார்ன்னு தெரிஞ்சுக்க நீங்க ஆசைப்படமாட்டேளா?"

"அது சரி. தெரிஞ்சிண்டதும் நல்லதுதான்."

இதைக் கேட்டு பாபுவுக்கு விவரம் தெரியாத அச்சம் ஒன்று ஏற்பட்டது.

"யமுனா!"

--- **

LD.

"ஏன் இப்படிப் பிடிவாதம் பண்றே?" "அது நான் செய்ய வேண்டியது." "பறக்க விட்டுவிடுவேன்னு நெனச்சியா?"

"அதுவும் நினைக்கலை."

婆360婆 தி. ஜானகிராமன்

_ என்ன ?"

எனக்கு இஷ்டமிருந்தால்தானே?"

_ யாருக்கும் பயப்படவில்லை. அப்பா அம்மா, உலகம் _ பிரித்தாலும் நான் லட்சியம் பண்ணப் போவதில்லை."

_காக உலகம் சிரிக்கனும்?"

_றுதாபமில்லாதவர்கள் சிரிப்பார்கள். யோசிக்காதவர்கள் ாகள். அனாவசிய முட்டாள்தனத்தை வளர்க்கிறவர்கள் _ள்."

முட்டாள்தனம் என்ன இதில் சிரிக்க என்ன இருக்கு" _ஆமாம். பத்து வயசுக்கு மேல் அண்ணாந்து பார்க்கிறேன் _ நாலு முட்டாள் நினைக்கலாம்."

_அதையும்கூட நினைச்சுப் பார்த்துட்டியா நீ?" -யமுனா!" -பாபு, நீ போய்விடு. நேரமாயிடுத்து." "இப்படியே தான் சொல்லப்போறியா?" "இப்படியேதான்." யோசிக்கக்கூட மாட்டியா இதை " யோசிக்க ஒண்ணுமே இல்லை." "இப்படியே தனியாகவே இருக்கப்போறியா?" "தனி என்ன? நீதான் சத்யம் பண்ணியிருக்கியே." "பண்ணினேன். ஆனால், நான்தான் அது. இந்த மோதிரத்தைக் _உனக்கு நல்ல கலியாணமாக ஆனால் கொடுத்து விடுகிறேன் _ன்று பாமரனைப்போல ஒரு சமயம் வேண்டிக்கொண்டேன்" என்று மோதிரத்தைக் கழற்றி அவள் மடியில் எறிந்தான் பாபு.

"எல்லாம் ஆனப்பறம்னா இது: அதையும் எங்கிட்ட தள்ளி _ன்ன செய்கிறது?"

சேர வேண்டிய இடம்தான் இது." "ஸ்வாமிக்கு இல்லையா இது?" "எல்லாம் நீதான் எனக்கு." "அதாவது விச்சோடிச் செருப்பாத்தான் இருக்கா இன்னமும்"

பாபு தலையைக் குனிந்துகொண்டான். சம்மட்டி மாதிரி விழுந்த அந்தச் சொற்களைக் கேட்க முடியவில்லை.

மோக முள் 婆361 婆



"இந்த மோதிரத்தை நானே வச்சுக்கலாமா?"

"உனக்குத்தான் அது."

"ஞாபகமா வச்சுக்கறேன்."

"ஞாபகத்துக்குத்தான் இது."

"வேறு ஞாபகம் இல்லை. இதுமாதிரி கூட உலகம் நடக்கும் என்று ஞாபகப்படுத்திக்கத்தான் பாபு என் மனசும் நிம்மதியாக இல்லை. வயசு காலத்தில் ரண்டு பேர் தவிக்கிறதை என்னால் நினைச்சுப்பார்க்கவே முடியவில்லை. இதுவாவது என்னை ஜாக்ரதை யாக இருக்கும்படியா பண்ணும். வயசு வயசு வயசு என்று உலகம் சிரிக்கும். என் பந்துக்கள் சிரிப்பார்கள். உன் பந்துக்கள் சிரிப்பார்கள். உன் சிநேகிதர்கள் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புக்கெல்லாம் நீயும் ஆளாகாமல் இருக்கணும்னுதான் இது இங்கே இருக்கட்டுமென்று நினைக்கிறேன். இந்தச் சிரிப்பு எல்லாம் சேர்ந்து யாரையும் அழவச்சிடும்."

"நான் அழமாட்டேன். நீயும் மனசிருந்தால் அழாமலிருக்க முடியும்."

"எனக்கு மனசில்லை."

"அப்படியானா, இதை வச்சிண்டு உன் மனசைக் கல்லாக்கிண்டு எனக்கென்ன லாபம் "

"கல்லை யாரும் கடைசியில் தூக்கி எறிந்துவிடுவார்கள்." "யாரும்தான். நான் ஏன் அதில் சேரனும்?" "பாபு, நேரமாச்சு, புறப்படு." "கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிவிடுவே போலிருக்கே" "நீ போ இப்ப ..."

"இனிமேல் வரக்கூடாதா?"

"நான் அப்படி சொல்லலியே. உன் இஷ்டம்போல் வரலாம் போகலாம். இது உங்க வீடு ... இப்ப போயிடு."

"எங்க வீட்டிலேர்ந்தா?" "இது மாதிரி நினைக்கிறபோதெல்லாம் இது உன் வீடில்லை." "அப்படீன்னா நான் எப்பவும் வரமுடியாது." "நான் என்ன செய்கிறது?"

பாபு பேசாமல் எழுந்தான். நடையில் இருந்த செருப்பை மாட்டிக்கொண்டான்.

"நான் சொல்றதையும் யோசிச்சா நல்லது. என் பாபுவுக்குக் கெடுதலா நான் ஸ்வப்னத்திலும் சொல்லுவேன்னு நெனக்கலை."

婆362 婆

தி. ஜானகிராமன்

- வின் குரல் கரகரத்தது. _த்திற்கு விரோதமாக யமுனா - - ங்கிற்ாறு. ". வதோ தகாததைச் செய்ததுபோல உள்ளம நடுங்கிற்று

_முனா. இதை மறந்துவிடு" என்று சிறு பறவைக் குஞ்சு _ மு. அவன் குரல் கம்மிப் படப-அசிசி

-ான மறந்துவிட்டேன்."

_னையும் மன்னித்துவிடு"

தான் செய்யனும் அது."

இதோடு இந்த விஷயம் புதைந்துவிட்டது."

_ஆமாம்."

மோதிரத்தை எடுத்துப் போகட்டுமா?" வேண்டாம். எங்கிட்டவே இருக்கட்டும்."

எங்கிட்டவே இருக்கட்டும்."

கால் இற்றுவிடும் போலிருந்தது. நடப்பதுகூட _துத் தெரு ஹோட்டல் ஒன்றில் ಶ್ದಿ அது _ார்ந்துகொண்டு ஸர்வரிடம் காப்பிக்குச் - சால - _ஆற அரை மணி நேரம் உட்காாந்திருந்தான் பாபு.

25

நீலுப்பாட்டியின் பிள்ளைக்கு மைத்துனன் ಎಕ್ಷ್ அறைக்கு மலர் மலராகப் பொரித்திருந்த கருவடாம ഖജ്ഞ யும் சமைத்த சாதத்தையும் சாப்பிட்டு அறைக்கு வந்தான் '

நடந்ததையெல்லாம் நினைத்து நினைத்துப் பார்த்தான் அவன. ானம் தெரியாமல் அழுகை வந்தது. '' நிமிஷம் தடையின்றி வந்தது. கன்னத்தில் வழிந்து தானாகக ந -

எப்படித் துணிச்சலாகக் கேட்டேன்: அவ்வளுவு கீழே புத்தி இறங்கிவிட்டதா? இந்த எண்ணம் ஏன் வந்தது: இந்த -ുടെ திேர்க்க முடியாத அவ்வளவு சிறுமை வந்துவிட்டதா

யமுனாவின் கம்பீர உருவம் கண்முன் நின்றது. அந்தப் பாவை இதயத்தின் மெல்லிய பகுதியைத் துடிககத துடிக்க அடிததது.

- - - * ––. ரக் கெஞ்சி

"யமுனா, என்னை மன்னித்து விடு" என்று மனதா - னான். '# தன் உள்ளத்தின் கொடுத்தியை அவித்துவிட்டது போலிருந்தது அவனுக்கு வாயைத் திறந்துகொண் பெருமூச்சு வந்தது.

淺363婆

மோக முள்



படுத்தபடியே தந்ை - - - -

தந்தை காட்டிய தெய்வத்தை இழுத்து இழுத்து _ சொன்னது சரியாகப் படலியா?"

மனத்தின் முன் நிறுத்தினான். பிய்ச் என்னைக் காப்பாற்று. தகாத எண்ணங்களிலிருந்து என்னைப் . துணியைப் போட்டு விர்ரென்று இழுத்தால்

ான யும். இந்த மனம் கிழிந்து ரத்தம் - - - - த்தம் பெருகட்டும். M) L15/ மனிதனாக ஆகிவிடுவேன்' என்று ...'.

ரந்த இதயத்தை முரட்டுப் பிடியால் பிடித்து இழுத்தான். கண் து

மூடி மூடி வணங்கினான். - ፴)õI கதான்."

_வில்லை."

ானாலும் செய்யறேன். எங்கேயும்

_ததை விட்டு "என்னவ

பொம்மனாட்டி"

_று சொல்லுவாளா ஒரு

_னை யார் சொல்லச் சொன்னா 2”

அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார் _படியே திறந்துண்டு வந்து உன் கழுத்தை முறிச்சுப் :;;;;; நினைப்பாள் யமுனா யமுனா என்று _டுவேன்."

அக்கா அவனைப்பற்றி என்ன நினைப்பாள்! இவ்வளவு

(3 - 5 "Tha

கவலமான ஒரு தம்பியா? இவ்வளவு கேவலமான ஒரு பிள்ளையா!

ாட்டுட்டா ஒரு பாடாக் தீர்ந்துது எனக்கும் விடிஞ்சு

"டொக் டொக்" _டும்."

"டொக் டொக்." தங்கம்மா நீ போயிடு, வாண்டாம்"

_ங்களுக்குத் தைரியம் இல்லை."

_அப்படியே வச்சுக்கோயேன்."

நான் தைரியமா இருக்கேன். அதிலே பாதி உங்களுக்குக்

_ாடுத்தாப் போதுமா"

எனக்கு வேண்டாம்"

நேற்று வந்த ஓசைதான்.

"ஸ் ஸ் ஸ்."

- நாலைந்து சீத்காரம். பிறகு கை நகம் ஜன்னல் கம்பியைச்

சுணடிறறு. மல்லிகையின் மணம் ஜன்னலிலிருந்து வந்தது. நல்ல பாம்பு வந்தால்கூட இந்த வாசனைதான் கமழுமாம். ந

•.ருந்து எழுந்து ஜன்னலண்டை போய் நின்றான் நான் என்ன செய்வேன்'

ாள் போட் 1.கா " -ான் - - - -

எழுந்தது. டிருக்கா" என்று தொண்டைக்குள் கேள்வி

- - ** ஆமாம.

என்ன வேண்டுமானாலும் செய்." என்னால் இருக்க முடியாது போலிருக்கே" "எத்தனை நாழி நிற்கிறது?" நான் என்ன செய்யறது 2” "ஏன், தாத்தா இன்னும் வரலியா?"

என் உயிர்கூடத் தக்காது." என்ன செய்யனும்ங்கறே 2”

"கதவைத் திறந்துவிட்டா கொஞ்சநாழி உங்க விட்டாவது போறேன்."

வரலை. பேரனைப் பார்க்க வந்தேன். திறக்க முடியாதா?” "எதை" ளைப் பார்த்து "எதையா? இதைத்தான்!” என்று மார்பில் ஒரு பூ விழுந்தது

"எதையும் திறக்க மாட்டேன்."

மாட்டேன்."

"நிச்சயமா?" "இப்படியே பாரு." "இருட்டா இருக்கு" "இருந்தா என்ன ?"

"அவ்வளவுதானா 2”

"பிடிக்கவில்லையா?" "ஆமாம்."

"லெட்டரை வாசிச் - - - - கிழிச்சேளா p" ச்சு விட்டுக் கிழிச்சேளா வாசிக்காமலே

"பத்துதரம் வாசிச்சுத்தான் கிழிச்சேன்."

婆365婆

婆364婆

தி. ஜானகிராமன் மோக முள்



"இப்ப பார்க்க முடியலியே." "அவசியமில்லை."

--

கையையாவது கொடுங்களேன்."

ஜன்னல் கம்பி வ - - பாபு. சியாகப் பற்றிய கையை உதறி எறிந்தான்

"அப்பா அவ்வளவு கோபமா "ஆமாம்."

"நான் என்ன செய்தேன்?" "செய்தது போதும்." ஒரு நிமிஷம் பேச்சில்லை. "நான் போகட்டுமா

"போயேன்."

ரொம்ப நியாயம் தெரிஞ்சவா இவா எல்லாரும்." போகட்டுமான்னு ஏன் நிக்கறே?" "போகத்தான் போறேன்."

"போ"

எப்பவாவது உங்கிட்ட வரத்தான் போறேன். "எப்ப ?"

"எப்பவாவது"

"இப்ப போயிடு:

"வெறுமே போ ே

பான் - - - போயிட்டேன். "என்னு தள்ளவாண்டாம். இதோ

இந்தாங்கோ "என்ன ?" "நீங்க எழுதின லெட்டா "நீயே கிழிச்சுப் போட்டுவிடு. "என்னாலே முடியாது."

வெல்வெட் பியூட்டியிலிருந்த கடுதான்

- - த் துண்ை - - க-வித் தடவி எடுத்து பட்ட்ெதுெ', துண்டை இருட்டில்

-- - டுத்தது. இதையும் அாங்கிப்பேன்னு நினைக்கலை நான்."

"இதோ கிழிச்சுப் போடப் போறேன்."

婆366簽

தி. ஜானகிராமன்

_அதைக் கிழித்து, தூள் தூளாகக் கிழித்து வீசி எறிந்தான்." _ண்டாம், வேண்டாம்" என்று அவன் கையைப் பிடித்து _கட்டது. நனைந்த கையை இழுத்து பனியன் மீது _கொண்டான் அவன்.

_ப்படி இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை." துணுக் பட்டில் அவளுடைய குனிந்த தலையைப் பார்த்துக்கொண்டு ா பாபு.

_ன் வரட்டுமா?"

_பாயிட்டு வா தங்கம், இதைப் பாரு உன் நன்மைக்குத்தான் _றன்."

_தெரியறது."

ாடிக்கட்டையைத் தாண்டி அந்த உருவம் திரும்பிப் பார்க்கா நிற்காமல் உள்ளே போயிற்று.

26

அந்த மார்கழியில் கடைசி மழையும் இரண்டு மூன்று நாளைக்குத் _றலாகத் தூறிவிட்டு ஜோவென்று பெரிதாக இரண்டுநாள் _ாட்டிற்று. கல்லூரியிலிருந்து மாலையில் திரும்பியதும் வெளியே _லை வைக்க முடியவில்லை. கல்லூரிக்குப் போவதும் வருவதுமே * மூன்று மாதமும் பாடாகத்தான் இருந்தது. நசநசவென்று நெருமண் குழம்பிக் கிடந்தது. ஈசல் கூட்டம் முதுகிலும் வயிற்றிலும் _ாந்தது. படுக்கையை மொய்த்தது.

பாபு அதிகமாக வெளிக்கிளம்பவில்லை. பார்க்கிற்குப் போவது 1ன்னும் இரண்டு மாதத்திற்கு முடியாது. மழை நின்றதும் குளிர் _ஆரம்பித்துவிடும்.

மழை நின்று இரண்டு, மூன்று நாள் குளிர் அதிகமாகத் தெரியவில்லை. நாலாவது நாள் மாலையிலேயே மேலே ஒரு வெட்டர் போட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

ராஜத்தைக் கல்லூரியில் சந்திப்பதற்குமேல் முடியவில்லை. பாபு உள்ளேயே அடைபட்டுக் கிடந்தான் மொட்டை மாடிக் கதவையும், அங்குள்ள ஜன்னல் கதவுகளையும் சாத்தி, ஆறுமணிக்கே அரிக்கேன் விளக்கை ஏற்றி விட்டு முழுக்கை ஸ்வெட்டரை அணிந்து புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான்.

படபடவென்று ஜன்னல் சார்ப்புகளின் மீது மழைத்துளி அடிக்கும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே கட்டிலில் மல்லாந்து படுத்து, தலைமாட்டு ஸ்டுல்மீது வைத்த அரிக்கேன் விளக்கின் ஒளியில் ஆங்கில நாவல்களைப் படிப்பது, ஒரு புது அனுபவமாகத்

婆367 婆

மோக முள்



அந்தப் படிப் - தோன்றிற்று. ந்தப் படிப்பு குளிருக்கே இதமாயிருப்பதுபோல்

மழை நின்றுவிட்டது. டிசம்பர் பரீட் -

- - ட்சைக்கு இன்னும்

இல்லை. ஈர நைப்பில் களிகொண்டு சிறு 蠶

ಫj ஆகாசத்தையே நிரப்பி 1)

- - கூட சுவர்க் கோழிகளும் பத்துப் -

கச் சேர்ர் - - ளும பதது.ப பதனை

額 Tau இந்த ஒலிகளெல்லாம் சேர்ந்து : :- - - படலமாக முன் பணி விழுந் -

புதர்களிலும் நிலத்தின் மீதும் புகைந்து நின்றது. ழுந்து, நாணல

அந்தி வேளைகளில் கட் - - - - பனிமூட்டம் இறங்குவை கட்டிலில் படுத்து ஜன்னல் வழியாகப் மாக அமைதி கு தய பாாதத பாபுவுககு உலகமே இன்பமய கேட்ே LtŸll 11 df Te+, இருந்தது. சுவர்க்கோழியின் இசை தெளிவாகக் கேட்பது மாதிரிதான் இருக்கிறது. அமைதி ബ - - - இசை டிவத்தை அடைந்ததுபோல நீண்டு ஒலித்தது அந்த

எஃ பணியிலும், மழை நின்ற ஒய்விலும் தான் இல்லாவி குலலாம நிறைந்து கிடக்கிறதுபோல் தோன்றுகிறது.

ವಾಣಿ •••

கு சீக்கிரம் அந்தி வந்து அமைகிறது. -

எங்கு பார்த்தாலும் நீலநீலமாகப் பனிக் குப்பல்

- - கப் பனிக் கப்பல் கொல் -

இலைகள் மாலையில் பனிப்போர்வை .) * காற்று ஊதிற்று. றங்கன. வாடைக

ெ - - -

...." ஈர நசநசப்பு மெள்ள மெள்ள உலர்ந்தது. தெரு

| J | JøNo. * --- . . ." -

கொண்டிருந்தன. புகைவட்டத்தில் கொசுக்கள் மொய்த்துக்

மழை ஒய்ந்த ஒய்ச்சலோடு அவன் கவலைகளும் தனைகளு

- = - - - Lr) வே -

வெளியில் நிலத்தின் மேல் ." ய பனியைப்போல அவன் மனமும் லேசாக மிதந்தது

பரீட்சை வந்தது. நாவல்களை - - பாடங்களைப் படிக்கத் `ಫಿ வைத்துவிட்டு கல்லூரிப்

Gali: நன்றாகவே படிக்க முடிந்தது. மனதில் இப்போது போவதாகக் ಶ இடம் நிறைய இருந்தது. தானே இறந்து தான் பத்தி L- கனவின் அதிர்ச்சியிலிருந்து விழித்தவன்போல விழுந்த .'ಸಿ: உணர்ந்தான் பாபு. ட்ெ. அந்தப் பயங்கர கன விடுபட்டது அல்லது விடுவிக்கப்பட்டது, ஒளியில் விழித்து எழுந் ன்றும் உலகத்தின் காலையில், பாதுகாப்பின் யும்போல து முந்ததுபோல் தானிருந்தது அவனுக்கு எல்லோரை

எல்லா மாணவர்களையும்போல ஆகி விட்டதில் எல்லை

婆368婆

தி. ஜானகிராமன்

மதியும் திருப்தியும் கிடைத்தன. இந்தப் புதிய மாறுதலின் _அவன் மற்ற மாணவர்களோடு பழகுவதுகூட மாறிக் _து. முன்பெல்லாம் ராஜத்தைத் தவிர மற்ற மாணவர் _ாடு ஒதுங்கிப்போனவன் இப்பொழுது அவர்களுடன் _ததொடங்கினான். பாடங்களைப்பற்றிப் பேசினான். _பேசினான். ஆசிரியர்கள் மாதிரிப் பேசிக்காட்டித் தன் _ங்களைப் பல மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டான். _சை வந்தது: முடிந்தது. அன்றே ரங்கண்ணாவிடம் _கொண்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டான் பாபு. பாபநாசத்தி _வனுக்கு வெளியே போகக்கூட மனமில்லை. காமிரா உள்ளில் பனை, உப்புச்சட்டி வற்றல், கருவடாம் வைக்கும் பானைகள், _டி பாத்திரங்கள் வைக்கும் - _ாக இரட்டைத் தாழ்ப் _வாழைக்காய்களைப் _ணக்கும் நடுவில் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு _ககொண்டிருந்தான் படிக்காத வேளைகளில் நாற்காலியில் _படியே வைத்தி சொன்ன வழிபாட்டை நினைத்து மனதை || || |டுத்திக்கொண்டிருப்பான் அந்த உள்ளில் கால் நீட்டக்கூட _லை. வலதுகாலை நீட்டினால் விபூதிச்சட்டி காலில் தட்டும். _து காலை நீட்டினால் வாழைக்காய் அண்டா. பின்பக்கம் _யை உயர்த்தி நீட்டினால், ட்ரங்குப்பெட்டியின் கூர் அடி _த்திலிருந்து கையில் இடிக்கும். பாபுவுக்கு இந்த அடைசல் _டியிருந்தது. பயமில்லாத பத்திரமான காப்பில் இருப்பது ாலிருந்தது. இங்கு இந்த ட்ெடுக்கு வந்தது முதலே அந்த _தலையை உணரமுடிந்தது. ஆனால் இந்த அறை இன்னும் _ஷமான பாதுகாப்பை அளித்தது.

வைத்தி அவனை இழுத்து இழுத்து வைத்துப் பேசியது சு:

அவனுக்கு வேண்டியிருந்தது. சாய்ங்காலமெல்லாம் அவருடனேயே

பாபநாசத்தின் கடைத்தெருவிலும் சாலிய மங்கலம் ரஸ்தாவிலும்,

குடமுருட்டியைக் கடந்து உள்ளிக் கடை வரையிலும் தினமும்

_லாவிக் கொண்டிருந்தான் அவன். இருவரும் ஓயாமல் பேசிக்

கொண்டிருந்தார்கள் வகிடு எடுத்தாற்போலிருந்த சாலியமங்கலம்

ரஸ்தாவின் இரு மருங்கிலும், நரைக்கப்போகும் கூந்தலைப்போல நெற்கதிர்கள் கண்ணுக்கெட்டியவரை, முதிர்ந்து பழுத்துச் சாய்ந்துக் கிடந்தன. அந்த வெளி முழுவதும் யாரோ வயதான தலையைப்போல _மர்ந்து உறங்கிற்று வயது முதிர்ந்த மன அமைதியும், வாழ்வின் பின்னிலையின் ஒய்வும் சுற்றிலும் இறைந்துகிடப்பது போன்ற ஒரு உணர்ச்சி அவனைப் பற்றிக்கொண்டது.

ஒரு மாதம் கழித்து அங்கு அவனும் அவரும் வந்து நின்றபோது சாய்ந்த கதிர்களைக்கூடக் தானவில்லை. அறுவ-ை முடிந்து சாண் உயரத்திற்கு வைக்கோல் மலர்ந்து கிடந்தது. அறுவடையைக் கவனிக்கத்

姿369 婆

மோக முள்



|

அதைப் பார்த்துக்கொண்டிருப்பார். |

துணைக்காக அவனைத் தருவித்திருந்தார் அவர் களத்து மேட்டில் பழங்கயிற்றுக் கட்டிலைப் போட்டு அவர் உட்கார்ந்திருப்பார். பக்கத்தில் ஒரு குப்பல் வைக்கோலின்மீது அவன் உட்கார்ந்திருப்பான். நெல்லின் நறுமணமும் சொணையும் நெடியுமாக தாளடி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. கும்பகோணத்தைவிட இந்த இடம் மனதுக்குப் பிடித்தமாக இருந்தது அவனுக்கே ஆச்சரியமாகத்தானிருந்தது. காலையில் தொடங்கிய தாளடியைக் கவனிக்க அவன் போவதும், அவர் உணர்க்கையாகக் காய்ந்த உச்சி வெய்யிலில் நடந்துபோய் அவனைச் சாப்பாட்டுக்கு அனுப்புவதும், ஒரு சின்ன துக்கமாகப் போட்டுவிட்டு, ஒரு தர்மாஸ் பிளாஸ்கில் காப்பியுடன் அவன் மறுபடியும் வரப்புகளைக் கடந்து சென்று அவரோடு சேர்ந்து கொள்வதும்-இந்த வருஷப் புது அனுபவமாக இருந்தது பாபுவுக்கு. அந்தப் புதுமையில் கிளர்ச்சியும், நிம்மதியும் நிறைந்து கிடந்தன. இந்தத் தடவை அவரை விட்டுப் பிரிவதுகூட எப்பொழுதையும்விட ஏக்கத்தைப் பெருக்கிவிட்டது.

_ாக்கிறதுபோல - - வழக்கம். ". _ா பட்டைகளைச் சோறு *ಕ್ಲ

_ இந்த வேலையையும் ஏற்றுக்கொ

பாட்டு மேல் பட்டை'ை

- - iாடுே - _று ஒரு மரத்தைத் துண்டு போது, ரங்கண்ணா கண

- ரிக்கும் - --

டுத்த பட்டையை - - - L]

o: பார்த்துக்கொண்டிருந்து ... : _ய எடுத்து சோறு அமைந்திருந்த வ சை - 蠶 _ாரங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தாா

- - - ச்ை சிரித்தார். _ நிமிஷம் திருப்பித் ഒബ്രി பார்த்துவிட்டுச் தத _ _ாந்து அவரைப் பார்த்தான

- - எனமோ - - - ?...இதைப் பாரேன். எண்னகமா _ாபு, இதைப பார்த்தியாடா - - - 6штIT -- :::::..] இந்தச் 蠶 蠶o - Loo லகக்கணக்கிலே இருக்குதி 臀 ரு ந்தியத்தைச்

_ானல் மாணல் இருக்கா பாத்தியா பத்து வாத

_ சேர்த்துண்டு. ஒருத்தனே ஏகக்காலத்திலே வாசிக்கிறப்பல

T"

இத்தனை அழகாக இரு பாட்டுப் பாட 蠶 o, ", இந்த மாதிரி ஒரு 'TS _லாகத்திலே இருக்குமோன்னு தோண்றது. ` _வாத்யத்தை ஒரு நல்ல மேதாவி க்கு எத்தனை _வோ ஹம் ஒரு இது" _முப்பு எத்தனை பளபளபH நல

- - - - கண்டுவிட்டதுபோலக் கண்ணகல, தத்தின் அதிசயத்தைக கண்டு - = = = = – - ٹے ---- ٹ - :::::::..:: பேசிக்கொண்டிருந்தார் ரங்கண்ணா

- - பற்றிக் அவரோடு பழகியதிலிருந்து இந்தக் *. 蠶 _ண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ப்பாகத்தானிருக் _ நிகழ்ச்சிகள் எதைப் பார்த்தாலும அவருககு மீது டப்டப்பென்று மழைக் காலத்தில் கொல்லை ಎT6ಿ 蠶 iண்டு நிற்பார். ". சொட்டும் ஒலியை மெய்மறந்து Ti போன்ற ുണ് நுனியிலிருந்து நின்று நின்று நழுவி 鷺 கக்கொண்டே ாத்துளியை இலையிலிருந்து தரை வரை பா TEL நறபார் வாழை மரத்தின் அடியில் ஊரத த யில் நீரில் ாவட்டைகளைப் பர்த்துக்கொண்டே நிற்பார். j அதன் செல்லும் படகைப்போல . :* ந்து பார்த்துக் ::::::* என்று மிளகாய்க் குருவி :... ് அவசர அவசரமாகக் கத்தும்போது தொல்லை* ... நின்று பார்த்துக்கொண்டே நிற்பார். பாபு o போனால் 'ஸ் என்று தூங்குகிற ಅಶ್ಗ "... ് விடுவது போல, போகாதே என்று ஆ%- 4Fгт

- - டடியிருந்தால், நிறுத்துவார். கறையான் புற்று துணில் சாரி கட்டியிருந்தி

ரங்கண்ணா இல்லாவிடில் இந்தப் பிரிவு மனதை அனாவசிய மாக வருத்தியிருந்திருக்கும். என்ன காரணத்தினாலோ, ரங்கண்ணா வுக்கு அவருடைய இடத்தைப் பிடித்துக்கொள்ள முடிந்தது. நாள் தவறாமல் அவரிடம் போய்க்கொண்டிருந்தான் பாபு முன்போலவே வாரத்துக்கொருநாள் பேசாமல் இருப்பதுகூட இப்போது முடிய வில்லை.

"பாபு, பாபு" என்று அவர் பெயரைத் திருப்பித் திருப்பிச் சொல்லி அழைக்கத் தொடங்கிவிட்டார். எதிரே உட்கார்ந்திருப்பவ னோடு பேசுகிற ஒவ்வொரு பேச்சுக்கும் நடுவில் பாபு பாபு என்று அவருடைய வாய் நிறைந்து அழைத்தது. அவருடைய அன்பும் அருளும் நேராகத் தன்னிடம் பாய்வதைக் கண்ணாலேயே காண்பது போலிருந்தது அவனுக்கு பார்வை, அழைப்பு எல்லாவற்றிலும் தன் பலஹீனத்தைக் காட்டிக்கெர்னடிருந்தார் கிழவர்.

சாம்பனின் தாயார் மாசி மாத வாக்கில் இறந்துவிட்டாள். ஒரு மாதம்போல் சாம்பன் சரியாக வரமுடியவில்லை. ரங்கண்ணா வின் வேஷ்டிகளையும் கிழவியின் புடவைகளையும் பாபுவே தோய்த்துப்போட ஆரம்பித்தான். காய்கறி வாங்குவதும் கடைக்குப் போவதும் அவன் பொறுப்பாகிவிட்டன. கொல்லைச் செடிகளுக்குத் தண்ணிர் விடவேண்டும். ரங்கண்ணாவுக்கு வாழைப்பட்டையில் சாப்பிடுவதில் தனி ஆசை. கிராமத்தில் வாழை இல்லாதவர்கள் தார் அறுத்த மரத்தை இலவசமாக வாங்கிவந்து திண்ணையில் உட்கார்த்து துண்டு போட்டு, சூர்க்கத்தியால் சோறு வழித்து, பட்டைகளைத் தேய்த்துப் படுகிற அவதி இந்த கும்பகோணத்தில் இவர் ஏன் படவேண்டும் என்று புரியத்தான் இல்லை. ஆனால் வாழைப்பட்டையைப் பார்த்தாலே உண்டாகிற கவர்ச்சியும் கிளுகிளுப்பும் அவனுக்குப் புரியாமல் இல்லை. ரங்கண்ணா தங்கத்

簽371婆 姿370签 தி. ஜானகிராமன்

மோக முள்



நன்றாக அதைப் பார்த்துவிட்டு விரலால் மெதுவாக உதிர்த்து விடுவார். அவர் எதையோ தேடுகிறாற்போலிருந்தது. மர வட்டையி லும் நீர்த்துளியிலும் எதைத் தேடுகிறாரோ தெரியவில்லை. அவனுக் கும் எதையோ தேடவேண்டும்போல்தான் தோன்றிற்று. "எதை, எதை?" என்று கேட்டுக்கொண்டு இப்போது அவனும் எதைப் பார்த்தாலும் நிற்கத் தொடங்கிவிட்டான்.

27

கோடை விடுமுறைகூட அவனைக் கும்பகோணத்திலேயே நிறுத்திவிட்டது. முதல் ஒரு வாரம் பாபநாசத்தில் தங்கி, வருஷப் பரீட்சையின் உளைச்சல்களை, உறங்கி உலுப்பிவிட்டுக் கும்பகோணத் தில் வந்து மீண்டும் ஒரு மாதம் தங்கினான். இப்போது இன்னும் இரண்டு மாதங்களாகும் கல்லூரி திறக்க வந்து வந்து போகலாம் என்று தினமும் காலையில் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸில் கும்பகோணம் வந்து சாயங்கலாம் திரும்பிவிடுவான். இரண்டு நாளுக்கொரு முறை ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று தன் அறைக்குச் சென்று பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தான். அப்படி இரண்டு மூன்று நாள் போகாத போதுதான் அதிரவைக்கும் அந்தச் செய்தியும் அவன் காதில் விழுந்தது.

O

"என்னடா பாபு, உங்க தெருவிலே என்னடா விசேஷம் ?" என்று ரங்கண்ணா மத்யானம் பாடம் முடிந்ததும் கேட்டார்.

"எங்கே: நான் இருக்கிற தெருவிலேயோ?” "நீ காவேரிக்கரை ஓரமாகத்தானே இருக்கே கோர்ட்டுக்கு போற வழியிலே காலேஜுக்குக் கிட்ட இருக்கே அந்தத் தெருதானேடா"

"ஆமாம்." "பின்னே என்ன விசேஷங்கிறியே?" "எனக்கு ஒண்ணும் தெரியாதே." "என்னடாது? திருமஞ்சன வீதியிலே இந்த சேதி வந்து ரண்டு நாளாச்சு. நீ அங்கேயே இருக்கிறவன்."

"நான் போய் மூன்று நாளாச்சே ரூமுக்கு." "முனு நாளாச்சா? அப்ப தெரிஞ்சிருக்காதுதான். யார் அங்கே? உன்னைத்தானே ... ஏய்" என்று உள்ளைப் பார்த்துக் கூப்பிட்டார் ரங்கண்ணா.

"என்னவாம்?" என்று சமயலுள்ளில் விசிறிக்கொண்டே படுத்திருந்த அவர் சம்சாரம், ஒருக்களித்த ஒரு கதவைப் படுத்தபடியே திறந்தாள்.

婆372 婆

தி. ஜானகிராமன்

_ா ஸ்லேண்டி"

_தை' வகை தெரியவே தெரியாதாமே." - தெரியாதாம்?" _ான். முந்தாநாள் நடந்துதுன்னியே." ங்காள்

* ----. - гг

::::::::::: ::::::::: _து.

வன்தான் மூணு நாளா வ - so

ரவில்லையேடி" என்றார்

- கிழவராமே. அம்பத் பாபு உங்க தெருவிலே யாரோ ழவ - - "... ரண்டாம் கலியாணம் பண்ணிண்டு வந்தாராம.

_ அஞ்சாறு மாசம் ஆச்சாம.

_பரு'

_ஆமாம். பேரும் ஊரும் நான் கண்டேன்!" - - _டுத்த விட்டிலே ஒருத்தர் இருந்தார். அவர்தான் ரண்டாம ாம் பண்ணிண்டிருந்தா

- * * -- ாதிரி இருக்கார் - கார் என்னடா இருந்தார்; அவா கலலு மாதா - - ...”. பொண்ணுதான் போயிட்டுது... அவ" ரொம்பப்

_தினாரோ?"

தெரியாதே."

- - - - போய் விழுந்தா பிராணனை _படுத்தாட்டா மாமாங்குளத்திலே போ 蠶 கம் பாத்துட்டு

- ம்ப அ காயிருக்குமாமே. ஷண்மு - * - o ம்ே திேகிமோ ವ್ಹೀಲ್ಡ್ರ - - - பாஞ்சு போயிட்டான். முந்தா நாள காலமே ಕ್ಲಿಕ್ಕಿ; பதந்திண்டிருந்ததாம் போலீஸ் வந்து @@ಶ லமேதான்

o பிராமணன் கூட ஊரிலே @త్ప్ర த து

` குளத்தங்கரையிலே வந்து அலறிப் புடைச "?ந்

ท அவர் பிள்ளை, மாட்டுப்பெண்கள் எல்லாருமகூட தாளாம்." -

பாபுவுக்கு வயிற்றைக் கலக்கிக்கொண்டு வநதது. அப்படியே ஸ்வர்ன விக்ரஹமாட்டமா இருப்பாளாமே?

"ஆமாமா" என்றான் பாபு.

篷373婆

மோக முள்



"நகை ரொம்ப இல்லையாம். ஆனா தகதகன்னு இருக்குமாம் பொண்ணு. ஷண்முகம் சொன்னான் சொன்னான் அப்படிச் சொன்னான். கரையிலே நிக்க முடியலியாம். அப்படிக் கூட்டமாம்."

பாபுவுக்கு முகத்தில் கரியைப் பூசினதுமாதிரி இருந்தது. அதிர்ந்து போய், வந்த தாக்குதலைச் சமாளிக்கவே, சற்று நேரமாயிற்று அவனுக்கு.

அவளாகத்தானிருக்குமோ?. வேறு யாராக இருக்க முடியும்: அந்தத் தெருவில் வேறு யார் அவ்வளவு வயதானவன் மனைவி. அவ்வளவு அழகான பெண்.

அறைக்குப் போவதா வேண்டாமா என்று அவனுக்கு ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. திகிலும் சந்தேகமும் மரத்தின்மீது எறிந்த கத்தியைப்போல அடிவயிற்றில் குத்திக்கொண்டு நின்றன. கிழவி மேலும் சொன்னாள்: "உடம்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சாளாம். கிழவரைக் கூப்பிட்டு என்னமோ விசாரிச்சாளாம் யார் யாரோ. அப்புறம் தவறி விழுந்து விட்டான்னு சொல்லி உடம்பைக் கொடுத்தாளாம். நேத்திக்கித்தான் கொண்டு கொளுத்தி விட்டு வந்துதாம் அது."

பாபுவின் கண்முன் அந்தப் பொன்னுடல் எரிந்தது. மல்லிகை யின் மணமும் மயிரின் துர்க்கந்தமும் கலந்து எரிந்தது. தீப்பிடித்த வீட்டில், எரிந்து உடைந்துபோன தம்புராவைப்போல அந்த உடல் எரிவதை மனதில் கண்டு உடல் சிலிர்த்தது.

கிழவி என்னென்னமோ பேசிக்கொண்டிருந்தாள். மனதைவிட்டு விண்ட அவன் புலன்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை. தெரியவில்லை.

போவதா வேண்டாமா என்று சஞ்சலப்பட்டு அஞ்சிக் கொண்டிருந்தவன், ரங்கண்ணாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் போது ஒரு நிச்சயத்திற்கு வந்துவிட்டான். கால்கள் அறையை நோக்கி நடந்தன.

அடுத்த வீட்டு வாசலில் கோலம் போட்ட அடையாளம் கூட இல்லை. உள்ளே நுழைந்ததும் நடையிலிருந்த ஒட்டுத் திண்ணை யில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த கைலாசம், "பாபுவா, இப்பத்தான் வறியா?" என்று கேட்டார்.

"ஆமாம்". "ரங்கண்ணா வீட்டுக்குப் போயிட்டு வறியா?" "ஆமாம்."

"உட்காரேன்."

பாபு இல்லை, போகணும்" என்றான்.

婆374婆 தி. ஜானகிராமன்

- - - - ייק _அப்பா, அம்மா எல்லாருசி செளக்கியம்தானே!

_கியந்தான்."

_மாடி ரூமில் இருக்கார் சார் காலேஜிலே வாசிக்கிறார்." _ா என்றார் கூட இருந்தவர். வயது இருபத்தெட்டி _தந்து வயது வரையில் இருக்கும் போலிருந்தது. தீர்மானமா _ முடியவில்லை.

ப்ப லிவு தானே?" என்றார். அவர். - - _தான். இவர் நன்னாப் பாடுவார். பாட்டுச் சொல்லிக்கிறார். _ா உங்க தெருக்கிட்டத்தான்."

_கே?" _ருமஞ்சன விதியிலே" ாங்கண்ணாகிட்டவா 2” _ஆமாம். சார் யாரு தெரியலியே" என்று கேட்டான் பாபு. - M نے ایم சொல்லிக்கொண்டார். "சார் வந்து --- :് ువrger" என்று அருவருப்பும் _றுப்பும் கலந்த ஒரிப்பில் அவர் பதில் வந்தது.

_அட போம்யா விடும் அதை. என்னமோ இனிமேலாவது _மையாயிருந்தா சரி என்றார் கைலாசம. -

யாரு இவரோடவா! நல்ல பாம்போட வாழலாம ವಿ. ாழலாம். இதோடவா" தனக்கும் தெரியாது பிறத்தியா ச _ம் கேட்காது. மத்த முப்பது குணங்களும உண்டு. - --

என்ன பாபு, உனக்கு ஒண்னும் தெரியாது போலிருக்கே? "என்ன?” "ஒரு பெரிய அசந்தர்ப்பமா நடந்துபோச்சு. வந்தே இங்கே?"

"நாலஞ்சு நாளாச்சு" - - - க்கப் ச்சேதியாயிருக்கு இவர் அப்பாதான ക്蠶. .. அவர் ನಿಲ್ಲ! பிள்ளையும் பேரனுமா ஒழுங்கா இருந்திருக்கலாம் அசட்டு ஒரு கலியானத்தைப் பண்ணிண்டு வநதாா அபர Gl/ILI T ம் _போ சிக்குப் போட்டுப் புர-2து. நிமிஷம் தவறின. இருமல் தவறமாட்டேங்கறது. இந்த ೨;ಆಶಾಖೆ ஒரு :* பன்னிண்டு வந்தது. ஆனா " . எனறு வநதவ வீணாச் திரும்பி கைலாசம் மேலும் சொன்னார். அநதப பெண்ணை 6

- - o லப்பட்டாது. வெளியிலே யாராவது பார்த்திருப்பாளோ

虚 என்னிக்கி

姿375婆

மோக முள்



என்னமோ அதை அவ்வளவு அடக்கம்! அவ்வளவு பதவிசு! அப்படித் தான் இருந்தது. இங்கேகூட வந்து என் சம்சாரத்தோட பேசிண்டிருக் குமே, இந்த மாதிரி இக்கட்டா வந்து தலையிலே எழுதிப்பிடுத்தேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்குமோ? கிடையாது. அதுபாட்டுக்கு எல்லாப் பொம்மனாட்டிகளையும்போல சாதாரணமாகத்தான் இருக்குமாம். நீ பார்த்திருக்கியோ பாபு அவளை."

"பார்த்திருக்கேன்." "இந்த மனுஷன் கொடுத்து வைக்கலை. என்ன பண்றது?"

"என்ன ?"

"ரெண்டு நாள் முன்னாடி கிழவர் காம்ப்பிலே போயிருந்தார். காசி விச்வநாதர் கோயிலுக்குப் போய், நவகன்னிகைக்கு விளக்குப் போட்டுவிட்டு வரேன்னு, என் சம்சாரத்துக்கிட்ட சொல்லிவிட்டு வாசல் சாவியைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கா. மத்யானம் ஆச்சு. ராத்திரியாச்சு வரலை. அவளுக்குக் கவலை வந்துடுத்து. யாராவது சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருக்காளோ என்ன மோன்னு இருந்தது. அப்பறம் அஸ்தமிச்சுது. இருட்டித்து வரலை. காலமே கிழவர் வந்தார். எட்டு மணியிருக்கும், நான் அவரைப் பார்த்து சாவியைக் கொண்டுவந்து கொடுத்தேன். இந்த ஊர்லே யாரும் அவளுக்குச் சொந்தக்காராயில்லியே, என் பிள்ளை இருக்கான். அங்கே போக மாட்டாளேன்னார். எனக்குத் திகீர்னுது அப்புறம் யாரோ சொன்னா மாமாங்குளத்திலே என்னமோ மிதக்கிறது. சின்னப் பெண்ணுதான், லக்ஷணமாயிருந்திருக்கும் போலிருக்குன்னு. பத்து மணி இருக்கும். ஒடினோம். சரியாய்ப் போயிடுத்து. முதல் நாள் காலமே விழுந்து, மறுநாள் விடியற்காலமே மிதந்திருக்கு. போலீஸ்காரன் கரையிலே இழுத்துப் போட்டிருந்தான். நவகன்னிகை என்ன வேண்டி கிடக்கு இப்ப? இங்கிருந்து அங்கேயா போகணும்: போகத்தான் போனா, அந்தச் சனியன் பிடித்த குளத்திலேயா போய் இறங்கணும்? அது ஜங்காலனையெல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கு. சரி எத்தனையோ பேர் போய் ஜாக்கிரதையாய்க் குளிக்கலியா? இவ போறாத காலம்" என்று பெருமூச்சுவிட்டார் கைலாசம்.

"அவளுக்கு நல்ல காலம்னு சொல்லுங்கோ" என்றான் கிழவரின் பிள்ளை.

தந்தை இரண்டாம் கலியாணம் செய்துகொண்டு புது மனைவி யுடன் வீடு நுழையும்போது இவன்தான் சாணத்தையே ஆரத்தியாகக் கரைத்துக் கொட்டினானாம். பாபுவுக்கு இதைப்பற்றிச் சீதாராமன் சொன்னது நினைவுக்கு வந்தது.

"என்னவோ எப்படி இருந்தா என்ன? அவ காலம் வந்துடுத்து. வரட்டும், வேண்டாங்கலை சிறுசுகளுக்கு சாவு வரது புதிசில்லை.

婆376婆

தி. ஜானகிராமன்

இப்படியா வரணும் ஹ. நினைச்சாலே வயித்தைக் பா அப்படியே நாள் முழுக்க ஜலத்திலே ஊறி _ங்கை வேகவச்சு உரிச்சாப்போல . அப்பா, ஐயோ.

இதையும் பார்க்கும்படி ஆயிடுத்து பாரு எனக்கு இந்த - _ங்கேயோ பொறந்து, எங்கேயோ வநது எங்கேயோ மது_யாரு என்னத்தைச் சொல்றது: ...நல்லவேளையாப் _ பத்தைக் கொண்டாநூறைக்கொண்டான்னு பிடுங்காம _அதைச் சொல்லுங்கோ..." என்ற கைலாசம், உற்சாகம் பலாய்ப்புடன் செய்தியைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் _ருந்தார்.

மாஸ்ட் மார்ட்டம் பண்ணாம தடுத்திருக்கலாம். போலிஸ் _ான பண்ணுவன்? அவனுக்கும் சட்டம் நியாயம் எல்லாம்

_

_ாக்கு என்னவோ தோண்றது சார் எங்கப்பா அவ உரோட _ டாக்டரைவிட நன்னாவே கிழிச்சிருப்பார்னு தோண்றது.

ப. கிழிஞ்ச கிழிசலுக்கு இது உறை போடக் கனடிருககாது _ா பிள்ளை அவன் முகம் அதே வெறுப்பு தோய்ந்து கிடந்தது. பாஸ்ட் மார்ட்டம்" என்றதும் பாபுவுக்கு வயிற்றைப் புரட்டிற்று. o அன்று அவன் கண்டு தொட்ட அந்த உடலா... எனற _ பாதியில் நின்று உடலை உலுக்கிற்று.

_ன்ன பாபு இது?" _ண்ணுமில்லே சார்."

என்னத்தைக் கண்டே' கேட்கிறபோதே உனக்கு நடுங்கறது. _ராம ராம! இப்படி ஒரு ஆயுசு இப்படி ஒரு ஜனமா. _ணமோ இனிமேலாவது அப்பாவும் பிள்ளையுமா ஒததுமையா மருந்தா சரி. அப்படி இருந்தாத்தான் லோகத்துக்கும் அழகாயிருக்கும் _று முடித்தார். கைலாசம்.

"நான் தயார் சார் அவர் இன்னொரு கலியாணம் lങ്ങിജ@ வாம இருக்கனுமே. காவேரியிலே ஜலம் வரதுக்குள்ளியும் இன்னொருத்தி வந்துவிட்டாள்னா என்ன செய்யறது?"

_அட போய்யா போம்." பாபு ஒன்றும் பேசாமல் எழுந்து மாடிக்குப் படி ஏறினான்.

கதவுகள் எல்லாம் மூடி இருளில் அடைந்து கிடந்த அறையில் புழுதி நெடி விசிற்று உள்ளே கால் வைத்ததும் தூசி நரநரவென்று ாலைக் கூசச் செய்தது. வாசலை நோக்கும் ஜன்னல் கதவு ஒனறைத திறந்து விளக்குமாற்றை எடுத்துப் பெருக்கினான். மொட்டைமாடி ஜன்னலுக்கடியில் கிடந்த காகிதத்தை எடுத்தான். என்ன இது! கடிதமா? கடிதமா? ஆமாம் அதே எழுத்துதான்.

婆377 婆

மோக முள்



'நாலுமாசம் முன்னாடி ஒருநாள் ராத்திரியே உங்களிடம் உத்தரவு வாங்கிக்கொண்டுவிட்டேன். இப்ப எழுதினாலும் உங்களுக்குப் பிடிக்காது. உங்களுக்கு எப்பவுமே என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், உங்களுக்கு என்னைப் பிடிக்கணும்னு கோடி வருஷம் ஆனாலும் நான் தவங்கிடப்பேன். நீங்கள் போ போ போன்னு விரட்டினதுகூட இன்னும் காதில் விழுகிறது. அப்படி அடிச்சுத் துரத்தறவாளிடம் என்னன்னு ஒரு சமயம் தோணுகிறது. ஆனால் பாவி மனசு கேக்கவில்லை. நீங்க திரும்பி என்னிக்காவது ஒருநாள் பார்ப்பேள்னு தெய்வத்துக்கெல்லாம் வேண்டிக்கிண்டேன். இந்தப் பக்கத்து ஜன்னல், நிலை ஒண்ணும் திறக்கிற வழியாயில்லை. நீங்க சொன்னாப்போல உங்களைத் துரத்திலேயிருந்து பார்க்க முடியாது, பார்த்துண்டே தானிருக்கேன். ஆனா இப்படி எல்லாம் என்னை ஏமாத்திக்க முடியல்லெ, பச்சைக் குழந்தையா? நான் உடம்பை இப்படியே வச்சிண்டிருக்கவும் முடியலெ. உடம்பு, உசிரு எல்லாம் பெரிய பாரமாயிருக்கு நான் போய்ட்டு வரேன். ஆனா இனிமே நான் எங்கேயாவது பெண்ணாகப் பிறந்தால் அப்ப நான் உங்களோடு தானிருப்பேன். லோக சம்மதமா நான் உங்ககிட்ட வந்தா, நீங்க போ போன்னு அதட்டமாட்டீர்களில்லையா?

"உங்களை இன்னும் ஒருதடவை பார்க்கணும்போலிருக்கு. என்ன செய்வேன்?"

பாபு திருப்பித் திருப்பி வாசித்தான். கடைசி வார்த்தைகளைப் படிக்கும்போது கண்ணை மறைத்தது. கலங்கிற்று. நெஞ்சை அடைத்தது. வாயில் மேல்துண்டைத் திணித்து நன்றாகக் கடித்துக் கொண்டான். இல்லாவிட்டால் விக்கல் கீழே நடையில் கேட்கும்போலிருந்தது.

"உங்களை இன்னும் ஒரு தடவை பார்க்கணும் போலிருக்கு. என்ன செய்வேன்?"

திருப்பித் திருப்பிப் படித்தான் அவன்.

மொட்டை மாடி ஜன்னலின் கொய்யாக்கட்டையை மேலே உயர்த்தி, சற்றே திறந்து பார்த்தான். அடுத்தவீட்டு ஜன்னல்கள் சாத்தியிருந்தன. மாடி வெறிச்சோடிக் கிடந்தது. நிசப்தம் ஆழ்ந்து நிலவிற்று.

சித்திரை வெயிலின் கொடுமை தணியவில்லை. தென்னண்டை ஜன்னல் கதவுகளையும் மொட்ட மாடிக் கதவையும் திறந்துவிட்டான் அவன். ஓரிரண்டு கழுகுகள் நீலவானில் உயரத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. சற்றைக்கொருதரம் கழுகின் வளைந்த கூவல் கேட்டது.

அரை மணி படுத்திருந்தான் அவன் என்ன செய்வேன், என்ன

செய்வேன் என்று எழுந்துகொண்டிருந்த அத்தச் சோகக் குரலுக்கு விடை சொல்ல முடியவில்லை.

婆378婆 தி. ஜானகிராமன்

_டிக்கொ

-n. _ார். _ார்."

_ாம்."

_வயதுக் குழந்தை _ள் வாய்க்கரிசி

ண்டு கிளம்பினான்.

_ாம்பியாச்சா" என்று நடைத்திண்ணையில் படுத்திருந்த

_வையெல்லாம் விசாரிச்சேன்னு சொல்லு."

_ பஸ்ஸுக்குத்தானோ'

_ப் பஸ்ஸுக்குப் போகவில்லை பாபு, மேற்கே நடந்து |ய பழைய பாலத்தைக் கடந்து இறக்கத்தில் நடந்து _மற்கே திரும்பினான். குடிசைகளைத தாண்டி நடந்து

_ள் திரும்பினான்.

_லந்து பேர்கொண்ட ஒரு சிறு கும்பல் ஒரு குழியைச் _றுகொண்டிருந்தது. சற்று அருகே போனான் பாபு ஒரு

குழியில் மல்லாந்து கிடந்தது. கும்பலில் போட்டார்கள். வெட்டியான் இரக்க

. மண்ணைத் தள்ளியதும் பெரிய விக்கலும் விசும்பலுமாக _ழுந்தது ஒதுங்கி நின்றான் பாபு வெட்டியான் பெண்டாட்டி

-1ൾ இடத்தில் குழந்தையின் உடம்பிலிருந்து கழற்றிய _ இல்லாமலிருக்கிறதா என்று o _போர்த்திய போர்வையும் முன் கையில் தொங்கிக்கொண்

-o-o:

கும்பல் சுடலையை

பின்னே ?"

_ாள்.

_ஆமாம் ..."

பட்டுப் போனாங்களே

பாபு அந்த மேடை _லைந்திருந்தது.

மாக முள்

விட்டு வெளியேறிற்று.

_ஞ்சாமி நீங்க மட்டும் நிக்கிறீங்க?"

- - "நான் அவங்களோட வல் லையே.

நேத்து யாரோ அம்மா போயிட்டாங்களாமே."

குளத்திலே விளுந்தவங்களா என்று வெட்டியான் மனைவி

_அதோ... எல்லாம் ஆயிடுச்சு. காலமே வந்து பால் ஊத்திப்

அந்த ஐயா" யின் அருகில் நின்றான். சாம்பல் சற்றுக்

姿379 婆



"உங்க தங்கச்சீங்களா ?” "இல்லை. உறவுக்காரங்க"

"படுபாவிக் குளஞ்சாமி அது. இப்படியா இறங்குவாங்க ஒரு பொம்பிளை! டாக்குடரு கிளிச்சுக் கிளிச்சுப் போடறாருன்னா என்னங்க செய்யுறது ?"

பாபு பார்த்துக்கொண்டே நின்றான். முதுகில் நடுக்கம் உதறிற்று.

தெற்கே நடந்து வறண்ட சுட்ட காவிரி மணலைக் கடந்து கரையேறினான்.

பாபநாசத்திற்குப் போய்ச் சேர்ந்தான். வேர்வை தாங்கவில்லை. கிணற்றிலிருந்து வாளி வாளியாக நீரை மொண்டு மொண்டு தலையில் கொட்டிக்கொண்டான். என்ன செய்வேன் - என்ற கேள்விக்கு அவனுக்கு இந்தப் பதில்தான் கொடுக்க முடிந்தது!

கைகள் வாளி வாளியாக நீரை இழுத்து இழுத்து மொண்டு மொண்டு தலையில் கவிழ்த்துக்கொண்டிருந்தன. ஒரு வாளியை இழுத்து கிணற்றுக் கட்டையில் வைத்து விட்டு, உடம்பைச் சொரிந்து தேய்க்கத் தொடங்கினவன், சூன்யத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். திடீர் திடீர் என்று விழித்துக்கொண்டு உடம்பைப் போட்டுத் தேய்ப்பான். மீண்டும் கை ஓய்ந்துவிடும். கையை ஒய வைத்த மனம் எங்கேயோ போய் நின்றது.

தங்கம்மாள் எரிந்த சிதைக்குமேல் சின்ன தகரக் கொட்டகை போட்டிருந்தது. கொட்டகையைத் தாங்கி நின்றன நாலு செங்கல் தூண்கள். மேலே சிமெண்ட் போட்டு வெள்ளையடித்த தூண்கள், தூண்கள்மீது ஊசி குத்த இடமில்லாமல் பென்சிலாலும் கரியாலும் கூட்டலும் கழித்தலுமாக ஒரே எண்கள். வெட்டிகள் கணக்குப் போட்டிருந்தார்கள். எல்லாத் தூண்களிலும் எண்கள், எண்கள், எண்கள்! கணக்கு கணக்கு எதற்காக இந்தக் கணக்குகள் என்றுதான் தெரியவில்லை. எரிந்த வரட்டிகளின் தொகையா? சவங்களின் உடலிலிருந்து பிடுங்கியதுணிமணிகளின் முழக்கணக்கா! சவங்களைத் தாங்கிய விறகுகளின் எடையா, தொகையா?

ஒய்ந்திருந்த கை மறுபடியும் முதுகைச் சொரிந்தது. கீழே உட்கார்ந்து கால்நகங்களை விரலால் தேய்க்க ஆரம்பித்தான் பாபு.

சுடலை காக்கிற சாம்பசிவன் போட்ட கணக்கா?

கழுத்தைச் சுற்றிய பாம்பு படமெடுத்து நிற்கிறது. புஜத்தில் வளையமாகச் சுற்றிய பாம்புக்குட்டி படமெடுத்து இடம் புஜத்தில் வளைந்து படமெடுக்கும் பாம்புக்குட்டியைப் பார்த்துச் சீறுகிறது. மேலே கால், கை, முகம், மார்பு எங்கும் சாம்பல். சூலத்தைக் கொட்டகையின் சுவரில் சாய்த்துவிட்டு, மேடையின் ஒரமாக

签380签

தி. ஜானகிராமன்

- - - - பார்க்கிறான் சிவன். _த்தில் எரியும் சிதையை பாா - -

_ள் மேல் படக்கூடப் படுகிறது. ஏய், உனக்குச சுட _ளில் என்ன எழுதுகிறாய்? - _ காணவில்லை. உயிர் மறுபடியும் புகுந்துவிடப் _ன்ற பயத்தில் உடம்பு சாம்பலாக, gg* சமயலாத _யில் கூட இருந்து காவல் காத்து விட்டுப் போய்விட்டான்.

_வு சாம்பல்! இவ்வளவு சாம்பலா உன் _ இவ்வளவு இராது. இது agL-de சாமப - டம்

_ாம்பல் எங்கே: இந்த வர-4' ஆரம்பலுககுள Ll

வடக்கிறதா? தங்க பஸ்பம் மாதிரி ! _ம்மா! இவ்வளவு சாம்பலுக்கு அடியில் நீ எப்படிப் - _கிறாய்."

_தில் குரல் கேட்டது. பாபு விழித்துக்கொண்டு கால் நகத்தை நினைவுடன் தேய்த்தான். _ண்டி, குழந்தை வந்துவிட்டானோ?" - அப்பாவின் குரல்.

தெரியவில்லை. ஏதோ கேட்டது.

லோசை கேட்டது.

_ல் என்ன வந்ததென்று - _வின் குரல். அக்காவின் குரல். கா

பாபு, பாபு!"

_ "

_ப்ப வந்தே"

"இப்பதான்."

_மதானமா பண்றே?"

----

|

_துக்கு" வெறுமனே தான்." வெறுமேயா?" ஒரே சாம்பலா இருக்கு." _சாம்பலா?"

"th."

_சாம்பலா?"

இல்லெப்பா ஒரே புழுதி ஒரே வேர்வையாக்கிடக்கு."

лт o

"வெதவெதன்னு சுடவச்சாவது குளிக்கப்படாதே

மோக முள்

婆381婆



"என்னத்துக்குப்பா?"

"உடம்புக்கு ஒத்துக்கனுமேடா" "ஒத்துக்கும்." "சரி, சுருக்கத் தலையைத் தோட்டிண்டுவா."

--- * *

LD.

கொல்லையிலிருந்த உழவு மாடுகள் = - - - - டுகள் வைக்கோலைப் பிடுங் - கழுத்து மணிகளும் மெல்லியதாக ஒலிக்கின்றன. குவதும வப்பாளை மாடு இரண்டும்! தோல் வெள்ளை வெளேரென்று வழவழவென்று -ராஜா உடம்பு மாதிரி-பொம்மனாட்டி உடம்பு மாதிரி, வெயில்கூட பொறுக்காது. சாட்டையால் அடித்தால் ஆநத இடம் கன்றிவிடும். அவ்வளவு மிருது, வெள்ளை சேப்பங் கிழங்கை வேக வைத்து உரித்த மாதிரி!

உன் உடல் ஏன் உரித்த சேப்பங்கிழங்கு மாதிரி கிடக்கிறது: - - - - 四 - குளக்கரையில் கிடக்கிறதே யார் இழுத்துப் போட்டார்கள்!

೧. செங்கல்லால் தளமிட்ட இடம். இந்தச் சித்திரை வைகாசி ".. பதது பொரிந்துகொண்டிருக்கும்! எப்படி ல் அசையாமல் கிடக்கிறாய்! - - - - போடுவார்கள்! ற இப்படியா முழங்கால் தெரியப்

முதுகு உதறுகிறது. "உங்களைப் பார்க்கணும்போலிருக்கு என்ன செய்வேன்?"

ಘೀ; பார்த்தேன். சாம்பல் வழியாக என்னைப் பார்த்திருப்பாய் நீ நீ அப்படியே எழுந்து வரக்கூடாதா? - படுத்துக்கிடந்தால்: தா? நீ அப்படியே

"பாபு."

“Lh."

"என்ன பண்ணிண்டிருக்கே?" "தேச்சுண்டிருக்கேன். காலெல்லாம் ஒரே புழுதி." "நல்ல புழுதி போ. எழுந்துண்டு சீக்கிரம் வாடாங்கறேன்." மறுபடியும் அவர் போய்விட்டார்.

பாபு தலையில் நீரை மொண்டு கொட்டிக்கொண் - - - - - - டிக்கொண்டு கிணற் தானின் மொட்டைக் கூம்பில் தொத்திக் கொண்டிருந்த “” எடுத்துத் தலையைத் துவட்டிக்கொண்டான்.

"நீதானே கிடத்தினே இப்படி என்னை " "நானா? நானா கிடத்தினேன்?"

3. 姿382签 தி. ஜானகிராமன்

வாரு அவருக்கு ஒண்ணும் தெரியாது. சாது குளத்தங் _ாயிலேயும் வயித்திலேயும் அடிச்சிண்டார். அந்தக் _ பார்த்து எழுந்து விடலாம்போலக்கூட இருந்தது. - _ாப் பார்க்கனும் . . .”

_ ஹார்ன் கடைத்தெருவில் ஊதுவது கேட்கிறது.

_லை நிலையைத் தாண்டுவதற்குமுன் நின்றான் பாபு. _பல்பொடி டப்பாவை எடுத்தான். திறக்க முடியவில்லை.

_ழுத்தித் திறந்தான். பொக்கென்று திறந்து கரிப்பொடி

_டிற்று பொடி முக்கால்வாசிக்குமேல் கொட்டிவிட்டது:

_ இரண்டு கையாலும் அழுத்தினான். வாய்வட்டம்

_ கொண்டது. பிறையில் மீண்டும் அதை வைத்துவிட்டு

_ந்தான்.

ா ஸ்வாமி அலமாரி அங்கணத்தில் தூணில் சாய்ந்ததும் _ாக உட்கார்ந்திருந்தார். அக்கா படிக மாலையை உள்ளங் _ாத்திக்கொண்டே கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந் _ள்

_டையை மாட்டிக்கொண்டான். _ங்கேயாவது போப்போறியா என்ன?” _ம்மா காத்தாடப் போயிட்டு வரேன்." மறுபடியும் வெளியிலேயா?"

_ருக்க வந்துடறேம்பா"

ாரெங்கிலும் இருட்டு மின்சார விளக்குகளைச் சுற்றிக் கறுப்பு போட்டிருந்தது. யுத்த காலத்து இருள் எங்கு பார்த்தாலும் போர்வை பாத்திக் கழுத்தை நெறிப்பது போல விளக்குகளைக் கறுப்பு _முக்கிக்கொண்டிருந்தது.

லெவல் கிராஸிங்கைக் கடந்து சாலியமங்கலம் சாலையில் தான் பாபு நட்சத்திரங்கள் வானில் இறைந்து கிடந்தன. வயல்வெளியின் காற்று குளிர்ந்து தவழ்ந்தது. அங்குமிங்கும் சாலை ாேரத்திலும் வயல் நடுவிலும் நாட்டு சுருட்டு நெருப்புகள் புகையிலை நெடியைப் பரப்பி எரிந்தன. திருக்கருகாவூர் போகிற அரை வண்டிகள் இரண்டு சலங்கை ஒலிக்க மேற்கத்தி மாட்டின் பெருநடையுடன் ககர ஒசை கேட்காமல் ஓடின.

சிறிது தூரம் நடந்தவனுக்கு இருளும் தனிமையும் கசந்தன. வந்த வழியே திரும்பினான். ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்கத் திரும்பினான். ஸ்டேஷனில் ஈ. காக்கை இல்லை. இருக்கிற ஒரு ாயங்கால வண்டியும் போய் விட்டது. வெளிக்கொட்டகையில் இருந்த பெஞ்சுகளில் உட்கார இடமில்லாமல் என்னமோ வாடகைக்கு

婆383婆

மோக முள்



எடுத்தது போல அழுக்கும் கிழிசலுமாக நாலைந்து பரட்டைகள் நீட்டிப்படுத்திருந்தன. பாபுவைக் கண்டதும் "சாமி, உட்கார்றிங்களா"

என்று காலை மடக்கி உயர்த்திக்கொண்டான் ஒரு கிழவன்.

பாபு அவன் காலடியில் உட்கார்ந்தான்.

அங்கும் அதிகமாக உட்கார முடியவில்லை. சற்றைக்கொருதரம் துக்கத்தில் காலை நீட்டி நீட்டிச் சிறு உதையாக விட்டுவிட்டு மடக்கிக்கொண்டிருந்தான் அவன். கடைசியில் உதைத்த கால் மடங்காமல் போகவே, அங்கு எழுந்து கிளம்பினான்.

ஸ்டேஷனுக்குப் பக்கத்திலுள்ள பெரிய மரங்களில் மின்மினிக் கூட்டம் சிமிட்டிக்கொண்டிருந்தது. பாபு சற்று நின்றுவிட்டு மீண்டும் நடந்தான்.

ஜவுளி விருத்தகிரி செட்டியார்தான் கடைத்தெருவில் நல்ல பழக்கமுள்ளவர். கடைத்தெருவில் எங்காவது உட்கார்வதென்றால், அங்குதான் உட்கார்கிற வழக்கம். கடைக்குள் வெளிச்சம் சிறைப்பட்டு விழுந்திருந்தது. முன்மாதிரியெல்லாம் இல்லை இப்போது கடைகள். சாக்குகள் அலமாரிகள் வெலத்தியாகக் கிடந்தன. யுத்தம் மூலைமுடுக் கெல்லாம் புகுந்துகொண்டிருந்ததற்கு அத்தாட்சி போலிருந்தது. விருத்தகிரியின் கடையில் மூன்று பேர் உட்கார்ந்து கெட்டியாக ஜரிகை போட்ட வெண்பட்டு நாலைந்தைப் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.

"வாங்க தம்பி உட்காருங்க" என்று பாபுவை வரவேற்று வியாபாரத்தைக் கவனித்தார் விருத்தகிரி. உள்ளிக்கடையிலிருந்து வந்திருந்தவர்கள் அவர்கள். "வாங்கண்ணே" என்று புகையிலையைத் துப்பிக்கொண்டே கடையண்டை வந்து நின்று யாரையோ வரவேற் றார்கள்.

"என்ன! வெண்பட்டா வாங்குறீங்க? ... மச்சினருக்கா?" "ஆமாம். பின்னே யாருக்கு ?" "சரிதான்னேன்."

"என்ன, போன காரியம் பளம்தானே?"

"பளமாவது காயாவது ஒண்ணுமில்லே."

"அப்படின்னா?"

"ஜமாபந்தி முடிஞ்சப்பறம் ஊருக்கு வாங்கன்னாரா இந்த ஐயரு. கலெக்டருட்ட சொல்லி இந்த உத்தரவை ரத்துப்பண்ணிப் பிடறேன் பாருன்னாருல்ல?"

-. of

LD.

签384姿

தி. ஜானகிராமன்

_ போனேன். இந்தாடாய்யா அவர் ஊட்டுக்குப்

_ான் டவாலிக்காரன். அவரு சம்சாரம் குளத்திலே

_ செத்துப் போயிடிச்சாம்."

_விளுந்தா"

_ இஞ்சேருந்து போனவரு குளத்தாங்கரைக்குப் போக

_டி அசாம்."

_கும்மாணத்திலியா?" என்றார் விருத்தகிரி,

_

_ மத்யானம்கூட யாரோ பேசிட்டிருந்தாங்க சின்ன

_"

_ாங்க ாண்டாம் தாரமாம்."

_யைா விளுந்திச்சாம்?"

_. விளுந்தாங்களோ வேணும்னுட்டு விளுந்தாங்களோ?

_ நம்ம வேலை ந: க்கலெ."

_ாடு அந்தப் பேச்சு போய்விட்டது. அவர் யாரோ கிராமத் _ளக்கு சரியாயில்லை என்று தற்காலிகமாக (J೧ಾಗಿ

_ளி வைத்துவிட்டாராம் சப் கலெக்டர். தாசில்தார் செய்த _ாகத் தானிருக்குமாம். இந்தப் பேச்சுதான் பிறகு கால் _ நரம் முழங்கிற்று.

_லையையே திருப்பி வாங்கிக்கொடுக்கப் Gಲ್ಲ _ போனது என்னமோ அகஸ்மாத்தாக நடந்த அசந்தாபபமாம

தங்கம்மாவைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. கடைகள் _ன்றன. பஸ் ஓடுகிறது. gu ஒடுகிறது. ஹோட்டல் எலலாம

துை மூன்று நாள் ஆகியும் விட்து. ఆబ్జా _கு வந்த சிலரைத் தவிர யாரும் சட்டை செய்ததாகத எத _லை.

என்ன அநியாயம்!

'நீ மட்டும் வந்து பார்த்தாயா!'

"நான் இருந்தால் வரமாட்டேனா. அப்புறம் வந்து பார்த்தேனே"

சாம்பலும் கரிக்கோட்டுக் கணக்குகளும் கடையின் பழம் பாயில் நின்றன.

"என்ன தம்பி கிளம்பிட்டீங்க?" என்றார் விருத்தகிரி, "நாழியாச்சு" என்று செருப்பை மாட்டிக்கொண்டான் பாபு. எப்ப காலேஜ் திறக்கறாங்க?"

婆385婆

மோக முள்



"அது இருக்கு ஒரு மாசம் வரட்டுமா?"

"செய்யுங்க தம்பி."

இரண்டு கடை தாண்டியதுமே, "என்ன குளந்தே? இஞ்சியா இருக்கிறீங்க? ஐயா சாப்பிடக் காத்திட்டிருக்காங்களே” என்று ராமு எதிர்ப்பட்டான்.

சாப்பிடும்போது அம்மாவும் சும்மா இருக்கவில்லை. "என்னடா பாபு, கிளப்பிலே ஏதாவது தின்னியா என்ன சாயங்காலம்"

"இல்லியே."

"பின்னே ஏன் சாப்பிடவே மாட்டேங்கறே?"

"அதான் சாப்பிடறேனே."

"என்ன சாப்பிடறே?"

"உடம்பு ஏதாவது ஜாட்யமாயிருக்கா?"

'எதுக்குடா இத்தனை நாழி தொளையறே ஜலத்திலே பாபு:" என்று கேட்டாள் அக்கா.

அப்பா வழக்கம்போல சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், பாபுவின் முகத்தில் உற்சாகப் பேச்சுகளுக்கு ஆதரவு இல்லை. அவரும் அத்துடன் ஒய்ந்துவிட்டார்.

கவனமில்லாமல் சாப்பிட்டான் பாபு கையலம்பினான். யாரிடமும் பேசவில்லை. கேட்டதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு உள்ளே போய்ப் படிக்க உட்காருவான். இல்லா விட்டால் திண்ணையில் போய் சாய்ந்துகொள்வான். அதற்கும் மனமில்லாதபோது வெளியே போய்விடுவான்.

மிச்சமிருந்த கோடைகால விடுமுறை அவ்வளவாக நிம்மதியைக் கொடுக்கவில்லை. கடைத்தெருவின் இரண்டு மூன்று கடைகளில் மருந்துக்கு விற்கிறாற்போல விற்ற மல்லிகையும் மருவும் துக்க நினைவு களை எழுப்பின. மயிர் எரியும் நாற்றம்தான் அந்த மனத்தை மேற்கரித்து வீசிற்று.

பகலெல்லாம் வந்தது. இரவெல்லாம் போயிற்று. அந்தியும் சந்தியும் ஒளியையும் இருளையும் மாறி மாறிக் கொணர்ந்தது.

காலையிலும் மாலையிலும் குளித்துவிட்டு பாபு காமிரா உள்ளுக்குள் தாழிட்டு தியானத்தில் உட்கார்ந்திருந்தான். மூடிய கண்ணின் முன் தெரியும் சிவப்பையும் பூக்களின் ஒட்டத்தையும் நிறங்களின் புரளலையும் மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பான். இவ்வளவையும் நிறுத்தி, ஒரு எண்ணத்தை நினைப்பது பெரும்பாடா யிருந்தது.

; 386 ஆ தி. ஜானகிராமன்

_று இருட்டிய பிறகு கூடத்தில் உட்கார்ந்து மூன்று பேரும் _ண்டிருந்தார்கள். வெளியே போன பாபு நடை உள்ளின் _மெத்தைகளுக்குமேல் சாய்ந்திருந்தான். பகல் வேளைகளில் _ இருப்பது வழக்கமில்லை. பொதுவாக அது படுக்கைகள் _அறை. ஒரு ஒரத்தில் தாத்தாவும் முப்பாட்டனார்களும் _ால்மீகி கம்பராமாயணச் சுவடிகள், வைத்திய சாஸ்திர _ள எல்லாம் மூட்டையாகக் கட்டி ஒரு ஸ்டுல் பலகை _கணக்காக எடுப்பாரில்லாமல் உட்கார்ந்து கிடக்கும். _கு ஒரு முறை அதைக் கீழே எடுத்துவைத்து, தூசி தட்டி _வழக்கம். தவிர, கொடியில் நாலு கொசுவலைகள் தொங்கும். _அங்கு படுக்குமுன் படுக்கைகளை எடுக்க, இரவு _ளில் போவதைத் தவிர அதிகமாக யாரும் போவதில்லை. o _ங்கிருந்த கட்டில் மீது மெத்தைகளைத் தலைமாட்டிலும் _டிலும் போட்டு அந்திக்கு முன்னாலேயே படுத்தான். _ட்டில் இருப்பதை யாராவது கவனித்தார்களோ என்னவோ, _தாகத் தெரியவில்லை.

ைசாத்தியிருந்தது. உள் இருண்டு கிடந்தது.

இந்த விடுமுறையில் பாதிக்குமேல் நிம்மதியில்லாமல் போய் _து. சென்ற வருஷ லீவில் எங்கெங்கோ போய் வந்தோம். _ லாண்டு மாதங்களை நல்ல இலக்கியங்கள் உற்சாகமாகப் _னெ.

இப்போது புஸ்தகம் படிக்காமல் இல்லை. ஆனால் வெகு வாசிக்க முடியவில்லை. சாம்பலும் தகரக் கொட்டகையும் _ன முன்னே வந்து நிற்கின்றன. இது என்ன மறையாத நினைவா?

கடத்தில் அப்பா முணுமுணுவென்று அலமாரி முன் உட்கார்ந்து _திரங்களைச் சொல்வது கேட்டது. அம்மாவும் அக்காவும் _ா சமையல் உள்ளில் பேசிக்கொண்டிருந்தார்கள். மூடிய _வுகளுடே தொலைவிலிருந்து வருவது போல எல்லாம் கேட்டது.

அப்படியே இருள் சாச்வதமாகி விடுமா? சாச்வதமாகி விட்டால் _மதிக் கடலில் திளைப்பது போலிருக்கும்.

பாபு தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துகொண்டே படுத்திருந் _இருளில் சிவப்பும் மஞ்சளுமாக தெய்வங்கள் நடையிட்டுக் _ாண்டிருந்தன. நடனம்தான். சரஸ்வதி வீணையும் கையுமாக _டுகிறாள். நடராஜன் மழுவேந்தி ஆடுகிறான்.

"வாசல் கதவைச் சாத்திருக்கியோ?" என்ற குரல் கேட்டது.

"பார்த்துட்டு வரேன்" என்று அக்கா எழுந்து நடைப் பக்கம் வரும் ஒசை கேட்டது. வாசல் கதவைத் தாழிட்டுச் சென்றாள். உள்ளைத் திறந்து பார்க்கவில்லை. பார்த்தாலும் தெரிந்திராது.

|

மோக முள் 签387签



"குழந்தை எப்பப் போனான் வெளியிலே?" "ஆறு மணி வரைக்கும் இருந்தான்."

"என்னமோபோல இருக்கானே ஒரு மாசமா? உனக்குத் தெரியாதோ?" என்றது அவர் குரல்.

"ஆமாம்பா, சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டிருப்பன். இப்ப என்னமோ போலிருக்கானே!"

"இந்த வயசிலே அப்படித்தானிருக்கும். அதுக்கென்ன இப்ப"அம்மாவின் குரல்.

"ம்" என்று இழுத்தாற்போல நிறுத்தினார் அப்பா.

கேள்விதான். விடை தெரியாத யோசனை தொடரும் கேள்வி தான் அந்த 'உம்' காரம்.

"இருபது வயசாச்சு ஜாதகம் வரதுக்கெல்லாம் இந்த வருஷம் பண்ணலே இந்த வருஷம் பண்ணலேன்னு கழிச்சுக்கிண்டே இருந்தா என்ன பண்றது? அவன் மனசு என்னன்னு தெரிஞ்சுக்காமியே நாம பாட்டுக்குப் பதில் சொல்லிண்டிருந்தா?"

பரீட்சை எல்லாம் ஆகட்டுமேன்னு பார்த்தேன்." 'பரீட்சைக்கும் இதற்கும் என்ன?"

"என்னன்னா? இப்ப வர பெண்கள்ளாம் சிறிசுகளா? எல்லாம் குதிரை மாதிரி வரது வந்து சரியா பத்துமாசத்துக்கெல்லாம் இடுப்பிலே தூக்கி வச்சுக்கறது."

"கலியாணம் பண்ணினவுடனே அழைக்கணுமா? பாஸ் பண்ணினப்பறம் அழச்சுக்கறது."

"ஆமாம். அழச்சுக்கலாம். பண்ணினா நீதான் முதல்லே போய் அழச்சிண்டு வருவே."

"ஆமாமாம்." "உனக்கென்ன தோண்றது விஜயம்?" என்று பெண்ணைப் பார்த்துக் கேட்டார் அப்பா.

'செஞ்சுடறது" என்று பட்டுக்கொள்ளாததுபோல் பதில் வந்தது. “Lh ?”

"கலியாணத்துக்கு இப்ப என்ன அவசரம்னுதான் எனக்குத்

தோண்றது. ஆனால் உங்களுக்கு செஞ்சுப் பிடணும்னு தோணித் துன்னா செஞ்சுப்பிடறது" என்று அக்கா மேலும் சொன்னாள்.

"ரங்கம் பெண்ணு ஜாதகம் சரியாயிருக்குன்னு சொன்னாப் போலிருக்கே" என்றாள் அம்மா.

签388签 தி. ஜானகிராமன்

_ம் நன்னாத்தானிருக்கு பெண்ணும் அடக்கமாயிருக்கும். _டிக்காரி நன்னாத் தயார் பண்ணியிருக்கா அடங்கின _ இவன் கேட்கனுமே. பசங்கள்ளாம் இப்ப ரவிவர்மா _ாப்பலன்னா இருக்கணுங்கறான்."

_லாருக்கும் அப்படிக் கிடைச்சுடுமா?" _ாகவும் இருக்கத்தானேப்பா வேணும்" என்றாள் அக்கா. பத்தின் பெண்ணு என்ன லட்சணக் குறைச்சலா?" _ணக் குறைச்சல் இல்லே. சித்தே கருப்பா இருக்கேன்னு _றை என்ன ?"

_ப்படி கறுப்பாவா இருக்கு அது." மாநிறத்துக்கும் குறைச்சல்தானேம்மா" என்றாள் அக்கா.

_ாத்தா குறுகுறுன்னு லட்சணமாயிருக்கு சமர்த்து. ஒரு _பம் முழுக்க லக்ஷயமில்லாம நிர்வாகம் பண்ணும்."

_ன்னமோ அவனுக்குப் பிடிச்சா சரி." _ன், உனக்கு என்ன தோண்றது?" _னக்கு ஒண்ணுமில்லை. நன்னா படிச்சு பாடக்கீடத் தெரிஞ்ச பண்ணா இருந்தா தேவலையேன்னு பார்த்தேன்."

அம்மா மேலும் மேலும் பேசி அப்பாவைக் கரைத்துக் _ண்டிருந்தாள்.

பாபுவுக்கு சிரிப்பாக வந்தது. ஆறு மாதமாகிறது. யமுனாவை அன்று பார்த்த பிறகு இரண்டே _ண்டு தடவைதான் போய்ப் பார்த்தோம். பார்வதிக்குக்கூட

புதிராகத்தான் இருந்தது. முதல் தடவை பார்த்தது நாலுமாதம் முத்து இரண்டாம் தடவை பார்த்தது போன மாசம் ஒரு நாள் _ம்பகோணம் போயிருந்தபோது.

"என்ன பாபு என்ன ஆளே மாறிப் போயிட்டாப் போலிருக்கே" _ன்றாள் பார்வதி.

"என்ன ?"

"வாரத்துக்கொரு தடவையாவது வந்திட்டிருந்தே எட்டோட்டு நாள் பெரிசாப் போச்சேன்னு, தீவளிக்குத் தீவளி வர ஆரமிச்சிட்டாப் போலிருக்கு."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. படிப்பு ஜாஸ்தியாயிருக்கு."

"பாட்டு வேறே. இந்தப் பாட்டையும் கவனிக்க முடியாதுதான். இஞ்ச வந்தாத்தான் மூக்குக்தியை வித்துக்கொடு; காதோலையை

மோக முள் 签389婆



வித்துக்குடுன்னு பிடுங்கறாங்க நமக்கு ஏண்டா இந்தத் தொல்லைன்னு இருந்திடலாமில்ல?"

"அதெல்லாம் யாரும் ஒன்றும் நெனச்சுக்கலெ."

பார்வதி சொன்னது முதல் பகுதி வாஸ்தவம்தான். முடை அவர்களை அரித்தது. இரண்டாவது தடவையாகப் பார்க்கப் போகிறபோது ஒரு சங்கிலியை விற்றுப் பணத்தை ராஜத்தின் மூலமே கொடுத்தனுப்பினான் பாபு. அன்று அவனுக்கு மழையின் நசநசப்பில் லேசாக ஜூரமாயிருந்தது. ராஜமே பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

"ஏன், பாபுவுக்கு வரமுடியலியா" என்று கேட்டாளாம் யமுனா.

"உடம்பு சரியாயில்லை" என்று ராஜம் பதில் சொன்னதில் அவள் திருப்தி அடையவில்லை.

யாருடைய திருப்தி எனக்கு வேண்டும்?

நான் எதற்காக உன்னிடம் வரவேண்டும்? பழைய குற்றவாளி நான் என்று ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டுமா? உனக்கும் ஞாபகப்படுத்த வேண்டுமா?

இரண்டு தடவை போனபோதும் பார்வதியோடுதான் அதிக மாகப் பேசினான் பாபு. ஐந்து நிமிஷத்திற்கு மேல் அங்கு தங்கவும் இல்லை.

யமுனாவும் இங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சு எப்படித் திரும்பி யிருக்கும்? தங்கம்மா உட்கார்ந்திருந்தால்:

"என்ன இன்னும் வரலெ அவன்?" என்றார் அப்பா, எழுந்து வந்து வாசல் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது. அக்காவும்

அம்மாவும் கூடவே சென்றது போலிருந்தது. ஐந்து நிமிஷம் நின்று விட்டு உள்ளே போனார்கள்.

- ராமு’ என்று மாட்டுக்குத் தீனி வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஆளிடம் சொன்னார், "குழந்தை இன்னும் வரலைடா ராமு."

"எங்கே போயிருக்கும்? ஜவுளிக் கடையிலே உட்காந்திட்டிருப் பாங்க."

போனா சுருக்க வரச் சொல்லிட்டுப்போ சாப்பிடக் காத்திட்டிருக் காங்கன்னு சொல்லு."

"அனுப்பிச்சிட்டுப் போறேன்."

அவனும் போய் பத்து நிமிஷம் கழித்து பாபு துங்கி எழுவது போல் 'ம்' என்று முனகினான். இரண்டு மூன்று தடவை முனகிய பிறகு, "யாரங்கே, பாபு, பாபு" என்று அக்காவின் குரல் கேட்டது.

婆390婆 தி. ஜானகிராமன்

---

_ா இருக்கே 2”

---

_ள்ளிலா இருக்கே"

_கைத் தூக்கி வந்தாள் அக்கா _ இருக்கானே பாபு" என்று என்னமோ காணாததைக் _வியப்புடன் சிரித்தாள் அக்கா _சதான் இருக்கியா?"

_ாம்."

_ரியிலே போகலியோ?”

இல்லியே."

_ங்கிண்டிருந்தியா?"

_ஆமாம்."

_ம்பு ஏதாவது பண்றதா என்ன?”

_ண்ணும் இல்லியே அசதியாயிருந்தது. துங்கிப் போயிட்டேன்."

ரொம்ப நாழியாத் தூங்கிறியா?"

_ாயங்காலமே பிடிச்சுத் தூங்கறேன்."

O

அப்பா என்ன செய்தாரோ, நாலைந்து நாட்களுக்கெல்லாம் _தின் புருஷன் என்கிற ரங்கு வந்துவிட்டார்.

அவர் இருப்பது வெகு தூரமில்லை. மாயவரத்திற்குப் பக்கத்தில் _ராமம். பாபு மாப்பிள்ளையாகவே ஆகிவிட்டதுபோல சற்று _துடனேயே பழக ஆரம்பித்துவிட்டார் அவர் அவசர அவசர _பேச்சு.

அவர் அன்று மாலை வெளியே போயிருந்தபோது அப்பா அனைத் தனியாக ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்.

"ரங்கு வந்து தொந்தரவு பண்றாண்டா பாபு என்று ஆரம்பித் ா அவர் குடமுருட்டியின் கட்டுக்கரையில் இருவரும் நடந்து _ாண்டிருந்தார்கள்.

"என்ன ?"

_மாக முள் 婆391婆



"ரொம்ப நாளா சொல்லிண்டிருக்கான்." "எதை?"

"இஞ்ச சம்பந்தம் பண்ணிக்கணும்னு பத்து வருஷமாகச் சொல்லிண்டிருக்கான்."

"நான் அஞ்சாவது படிக்கிறதிலேருந்தா?" வைத்தி சிரித்தார். "ரங்குவுக்கு நீங்க ஒண்னும் வாக்குக் கொடுத்துடலியே." "அது ஒண்ணும் இல்லெ, பெண் லட்சணக் குறைச்சலாயிராது. நல்ல சமர்த்து."

"எந்த சமத்தும் வேண்டாம் இப்ப, எனக்கு இப்ப எனக்கு வேண்டியது கலியாணம் பண்ணிக்காம சமாளிச்சுக்கிற சமர்த்துதான்" என்று துண்டித்தாற்போல பதில் சொன்னான்.

அப்பா ஒன்றும் பதில் சொல்லவில்லை. முன்னால் சிவந்த வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்.

தன் துணிச்சலைக்கண்டு அவனுக்கே சற்றுப் பயமாயிருந்தது. வியப்பாக இருந்தது. அப்பாவிடம் உரிமையுடன் எதையும் பேசுகிறவன் தான். ஆனால் இந்த விஷயம் கட்சிக்காக, என்று வைத்துக்கொள் வோம் என்று பூர்வ பட்சம் போட்டுக்கொள்கிற விஷயமில்லை. அப்பா நடக்க வேண்டிய, செய்யவேண்டும் என்ற ஒரு காரியத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு இந்த மாதிரி வெடுக்கென்று பதில் சொன்னது அகம்பாவத்தினால்தான் என்று அவன் மனம் வருந்திற்று. அப்பா எதிரே வான்முகட்டில் தகதகத்த தங்க ஓடைகளையும் ரோஜா நிறப் பஞ்சுகளையும் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந் தார்.

"இப்ப எனக்கு என்ன கலியாணம்' பாபு அவரைச் சமாதானப் படுத்துவதுபோல மெதுவாகப் பேசினான்.

அவர் பேசவில்லை.

"இன்னும் படிப்பு இருக்கே எனக்கு ?" "என்னமோ, அம்மா பண்ணிவிட்டா என்னன்னு நினைக்கிறா" "நீங்க என்ன நினைக்கிறேள்?" "எனக்கு என்ன இப்ப? எல்லாம் உன் இஷ்டம்." "நீங்க என் மேலே சந்தேகப்படலியே?"

"எனக்கு என்ன சந்தேகம்?"

婆392婆

தி. ஜானகிராமன்

_ம் துரையப்பா வந்து சொன்னபோது அவர் _அனுப்பிச்சேளாம். அம்மா சொன்னா. இப்ப _ நெஜமாயிருக்கும்னு சந்தேகம் வந்துடுத்தோன்னு - -

_ பிரஸ்தாபித்திருக்கவே வேண்டியதில்லை. ஆனால், _வந்து முட்டிய எண்ணம் வெளியே வந்துவிட்டது _பான வருஷம் நடந்த சங்கதி அது யாரோ தூரத்து _ருவாரூருக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிராமம் அவருக்கு _ஒரு பெரிய சிவன் கோயில் வருஷா வருஷம் _ற நவராத்திரி உற்வசம் ஒன்பது நாளும், ஆயிரம் _ளுக்கு சஹஸ்ர போஜனம் செய்கிறாராம் ஆயிரம் _கோ தெரியவில்லை. சற்று ஸ்தூல சரீரம். பாபு தனியாக _ம்_அறையின் காற்றோட்டத்தையும், அந்த வீட்டிலிருந்து வசதிகளையும் கண்டு நாலுநாள் அவனோடு தங்கினார் _ாதிரிக்கு இரண்டு மாசம் இருந்தது அப்போது இன்னும் --- தங்கியிருப்பார் அவர். ஆனால் நாலாம்நாள் ராத்திரி _சுதான். அவர் மறுநாள் காலையிலேயே புறப்படக் _ இருந்திருக்க வேண்டும்.

_னடா பாபு, நீ என்ன போடப் போறே?" _ என்னத்தைப் போடறது? நான் சம்பாதிக்கிறேனோ!" _ம்பாதிச்சாத்தான் போடணுமா?"

- _ங்கப்பா வருஷா வருஷம் கொடுக்கிறார்போலிருக்கே"

_ங்கப்பா கொடுத்தா அந்தப் புண்யம் அவருக்கு புண்ய பளெல்லாம் அவாவாளைச் சேர்ந்ததில்லியோ பிதிரார்ஜிதமா _மா"

_வராது." _பின்னே நீயும் போட்டாத்தானே?"

இந்தப் பாவம் அப்பாவோட இருக்கட்டும்னு நெனச்சேன்." பாவமா என்ன சொல்றே நீ?"

_ஆயிரம்பேருக்கு விருதாவாச் சாப்பாடு போடற பாவத்திலே _க ருபாய் பங்கு அவர் வாங்கிக்கறது போதாதோ?"

விருதாச் சாப்பாடா?" என்று மண்டையில் அடி வாங்கி _துபோல் கேட்டார் அவர் இது விருதாச் சாப்பாடா? சாப்பாடு

பாடறதும் பாவம்கறே!"

போடறது. சாப்பிடறது எல்லாம் பாவம்தான்."

婆393 婆

மோக முள்



"அப்படியா" என்று வாயை மூடிக் கொண்டுவிட்டார் அவர். பிறகு பேசவே இல்லை. ஈச்வரி... பரதேவதே என்று ஐந்து நிமிஷம் கழித்து, கால் இரண்டையும் தட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டே படுத்தார். பாபுவுக்கு முணுக் முணுக்கென்றது உள்ளுக்குள் மறுநாள் காலையில் எழுந்திருந்தவுடன் "போய்ட்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டார்.

"என்ன மாமா, இன்னும் ரண்டு மூணுநாள் இருக்கப் போறேன் னேளே!"

"இல்லேப்பா. ஐயன் தெருவிலே என் மாமா பேரன் இருக்கான். இஞ்ச வரவேல்லியே வரவேல்லியேன்னு புலம்பிட்டான் இன்னி சாயங்காலம். என்னத்துக்கு உறவுகாராகிட்ட வம்பு, சொல்லு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

இரண்டு மாதம் கழித்து ஊருக்குப் போயிருந்தபோது எல்லாப் பேச்சுக்கும் நடுவில் அம்மா சாதாரணமாகக் கேட்டாள்:

"ஏண்டா பாபு, கும்பகோணத்திலேயும் நீ ரூமுக்கு வர ராத்திரி மணி ரண்டு மணி நேரம் ஆறதாமே."

ஒரு

"ஏதாவது ஒரு நாள் ரண்டு நாள் நாழியாகும்."

"தினமும் அப்படித்தான் வர்றியாம்."

"யார் சொன்னா ?”

"எல்லாரும்தான்."

"எல்லாருமா? கும்மாணத்திலேருக்கிற எல்லாருமா? நான் ரண்டு மணிக்கு வரபோது அவா தூங்கிண்டுன்னா இருப்பா!"

"என்னமோ படிக்கிற காலத்திலே இப்படியெல்லாம் இருந்தா நாலு பேர் சிரிப்பா. எதையாவது சொல்லுவா. நமக்கேதான் அது நன்னாருக்கோ'

"என்ன நன்னாயில்லை?"

"ஆமாம். ராத்திரி ஒரு மணியோரண்டு மணியோ நீ ஜன்னல்லெ வெளிச்சம் தெரிய வாசிச்சா ஒண்ணும் இல்லே. நீ பாட்டுக்கு வெளியிலே சுத்திவிட்டு ராத்திரி வந்து கதவு இடிச்சா?"

"இடிச்சா என்ன? வீட்டுக்காரர் திறக்கிறார். அவர் நடையிலே தான் படுத்திருக்கார் பூனைத்துக்கம் துங்கறவர். கதவிலே நகத்தாலே கீறினாலே முழிப்புக் கொடுத்துடும் அவருக்கு."

"போடாபோ துரையப்பா இஞ்ச வந்தபோது மெனக்கட்டு அப்பாகிட்ட வந்து சொல்லிட்டுப் போனார்."

"துரையப்பாவா! என்ன சொன்னார்?"

婆394婆

தி. ஜானகிராமன்

_ச் சொல்லி, உன் பிள்ளையைக் கவனிச்சுக்கோடா, _ாடிச்சானும் வையி, தினமும் ராத்திரி ரண்டு மணி _ந்திப்பிட்டு வந்து படுக்கறதுக்கு ஒரு ஜாகையாவது _லே போட்டுப் படிக்கவைக்கப்படாதோ, இந்த மாதிரி _அப்புறம் ஏதாவது நேர்ந்ததுன்னா வருத்தப்பட்டு _மில்லே பாருன்னு, சொன்னதும் சொல்லாததுமா _மா சொன்னார்."

- _யப்பாவா!'

_ாம். ஒரு நாழி அப்பா பேசாம கேட்டுண்டேயிருந்தா. _ பேசிண்டிருந்தார் அவர் அப்பாவுக்குக் கடைசியிலே

_டுத்து துரையப்பா, வந்த காரியத்தைப் பாத்துண்டு _கு இந்த வம்பெல்லாம் உனக்குன்னு சொன்னா ம், _நான் வம்பா பேசறேன்? உனக்கு இருக்கறது ஒரு பிள்ளை.

ாழுக்க இப்படி ஊரைச்சுத்திண்டு சீரழியறதேன்னு அங்கலாப் _ான்னா, நீ என்னமோ வம்பு வம்புங்கறயே, ஏதோ _ாள்ளாம் நல்லதைச் சொல்லுவா, நன்னாயிருக்கணும்னு _ன்னார். என்ன சீரழியறான் எம்பிள்ளேன்னு கேட்டா _ன்னமோப்பா வயசான பிள்ளையாச்சேன்னு சொன்னேன். _ம்பாடு உம்பத்துன்னார்.துரையப்பா அப்பாவும் விடலே. _பண்ணினான் என் பிள்ளை ஏதாவது தப்பா நடந்ததை _யான்னு கேட்டா என்னமோ எனக்கு மனசிலே பட்டுதுப்பா, _வரை நேரப் பாக்கறதுன்னா முடியுமா? கதவைத் திறந்து _வா இதெல்லாம் பண்ணுவான்னு கோணாமா னான்னு _ஆரம்பிச்சுது அது சரி நிறுத்து இந்தப் பேச்சைன் னுட்டா _

_துரையப்பா இவ்வளவு தூரம் பத்தவச்சுட்டுதா' என்று பாபு _ப்புடன் கேட்டான். அதற்குப் பிறகுதான் துரையப்பாவோடு _று நடந்த பேச்சையும் அம்மாவிடம் சொன்னான்.

அப்பா அந்த மாதிரி அவருக்குப் பதில் சொன்னது அவனுக்குப் _பருமையாக இருந்தது. அவருடைய நம்பிக்கையையும் விட்டுக் _ாடுக்காத அன்பையும் கண்டு அவன் மனதில் அவருடைய _ானம் இன்னும் சற்று உயர்ந்துவிட்டது.

இதைத்தான் பாபு இப்போது அப்பாவிடம் ஞாபகப் படுத்தினான்.

ஏதோ அப்போது பேசிவிட்டார் பிள்ளைக்குப் பரிந்துகொண்டு. ஆனால் துரையப்பா சொல்லிவிட்டுப் போனது மனதில் வேலை செய்துகொண்டுதானே இருக்கும்? துணியில் கறை விழுந்தால் நணைக்க நனைக்க அதன் கப்பு குறையலாமே தவிர கறையே போய்விடாதே. அப்பாவும் இதை நினைத்துக்கொண்டாரோ _ன்னவோ.

婆395婆

மோக முள்



துரையப்பா என்னமோ பேத்தினான். போடான்னுட்டேன்" என்றார் அப்பா.

"அப்படின்னா திடீர்னு என் கலியாணத்தைப் பத்தி இப்ப என்ன வந்துது உங்களுக்கெல்லாம்?"

அப்பாவுக்கு சூதுவாது தெரியாது. வார்த்தைகளில் நுழைந்து கொள்ளமாட்டார். பாபு நேராக இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் பதில் சொல்ல முடியாமல் விழுங்கினார். ஐந்தாறு விநாடி கழித்து "அதான் சொன்னேனேடா பாபு, அம்மா ஆசைப்படறா" என்றார்.

"இப்ப வாண்டாம் ஒண்ணும்." "அம்மா கிட்ட சொல்லு." அம்மாவிடம் சொல்லும்போது வேடிக்கையாயிருந்தது. அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "அது சரிடா பாபு. அப்பாவுக்குக் கலியாணம் ஆறபோது என்ன வயசு தெரியுமோ?" என்றாள்.

"என்ன ?"

"பதினாலு." பாபு சிரித்தான். "அம்மா, நான் கலியாணமே பண்ணிக்கப் போறதில்லேம்மா" என்றான்.

"என்னது?" "ஆமாம்." "போதும். அச்சுப்பிச்சுன்னு பேசவேண்டாம்." "அச்சுப்பிச்சு என்ன ?”

"பின்னே என்ன? கலியாணம் பண்ணிக்காம சன்னாசியா அலையப் போறியோ?”

"கல்யாணம் பண்ணிக்காட்டா சன்னாசியாத்தான் அலையனுமா என்ன? அலையாமலே இருக்கிறது."

"ம். ம். இருக்கறதுக்கு விடுவா எல்லாரும். பேசாம இரு பெரியவா ஆகாததைச் சொல்லமாட்டா, செய்யமாட்டா. நீ சொன்னதைக் கேட்டுண்டு இரு. ரங்கு பெண்ணுக்கு என்னடா நல்ல வடிகட்டின சமத்து."

"சமத்து கிமத்தெல்லாம் வடிகட்டினதாகவே இருக்கட்டும். எங்கிட்ட இதையெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷத்துக்குக் காதிலே போடாதேம்மா."

"அஞ்சாறு வருஷத்துக்கா "

"அப்படித்தான்."

婆396婆

தி. ஜானகிராமன்

_டுபடவில்லை.

_சக்கரப் படித்துறையும் தகரக் கொட்டகையும் _றைந்து கிடந்தன.

_றதுடன் ஊர் திரும்பினார். காலேஜும் திறந்து

28

_டில் எல்லாம் வரவரத் தாழ்ந்துகொண்டே வநதது. _ மல் காற்றும் வந்துபோயிற்று. மேல்தாற்று _று கைகளை அடித்துக்கொண்டு போயிற்று நவரத்தி _ற வருஷம் போலவே அவர்கள் விட்டுக்கூடம் கொலு _ண்யமாயிருந்தது. சுப்ரமண்யம் இறந்ததை ஒவ்வொரு | கொண்டாடிக் கொண்டிருந்தது. கூடது நிலைகளில் _ண்டிருந்த தொங்கு சீலைகள் கிழிந்துவிட்டன. மயமான சாமான்கள் கூடத்தில் இல்லை. பாவதியின் _ யமுனாவின் பேச்சிலும் எப்போதும் இருக்கிற தெம்பு _லை. ஏதோ ஒரு பயம் அவர்கள் குரலில் தொனித்துக் _டிருந்தது. பயம்கூட இல்லை. வீடு முழுவதும _அதிகாரம் செலுத்துவது போன்று காணபபடட தோல் - _ தெளிவாகத் தொனித்தது. அந்தத் தோல்விதான் அவரகள - அழுத்திப்பிடித்து ஓங்க விடாமல் அடிப்பது போலிருந்தது.

_ாத்திரி போன கையோடு ஒரு மழை வந்தது. பார்வதியின் வாரு நகையைக் கரைத்துக்கொண்டு போயிற்று.

- - - - னால், போன பாபு அடிககடிய போகவில்லை அங்கு ஆ ". . . . . _ாழுதெல்லாம் அந்த வீடு, பத்திலும் தோல்வியிலும் ನಿಹ

_டிருப்பது நன்றாகத் தெரிந்தது. எதைக் கண்டு பயம் !

யமுனாவுக்கு வயது முப்பத்திரண்டு. பார்வதியின் நகைகள் ஒவ்வொன்றாக விடைபெற்றுக் _ாண்டிருந்தன.

யமுனாவின் கண்ணில்கூட முன்போலத் துணிச்சலையும் _1. லையும் அவ்வளவாகக் காணவில்லை. அவளும எதையோ _ண்டு பயப்படுவது போலிருந்தது.

பாபு அன்று ராஜத்தின் வீட்டுக்கும் கடைத்தெருவுக்கும் பாய்விட்டு இரவு எட்டு மணிக்கு அறைக்கு வந்தபோது கைலாசம சொன்னார்: "துக்காம்பாளையத் தெருவிலேருந்து ஒரு பையன வந்தான் பாபு."

"யாரு?"

婆397 婆

மோக முள்



"உன்னை வரச் சொன்னாளாம், உங்க சிநேகிதா வீட்டிலே.

கையோட அழச்சிண்டு போகலாம்னு வந்தானாம், நீ இல்லைன்னதும். வந்தவுடனேயும் வரச் சொல்லுங்கன்னு சொல்லிவிட்டுப் போனான்."

இந்த வருஷம் கல்லூரி திறந்து கோடை கழிந்து, நவராத்திரி வந்து மழை தொடங்கி, இந்த நாலு மாசத்திற்காக பாபு அங்கு போனது நாலு தடவைதான். அதுவும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் கூப்பிட்டனுப்பித்தான். குரூரமாக அற்பத்தனமாக ஏதோ செய்வது போலிருந்தது பாபுவுக்கு தான் மிருகத்தனத்துடன் யமுனா மீது பழி வாங்கிக்கொள்வதுபோல் ஒரு அச்சம் தோன்றிற்று அவனுக்கு

நீ ஏன் முன் மாதிரி போகிறதில்லை! முன்னெல்லாம் அவர்கள் வீட்டை வளைய வளைய வந்துகொண்டிருந்தாயே! அவள் ஏன் என்னை மறுத்தாள்? ஏன் மறுத்தாளா? உனக்கு உண்மையாகவே அவளிடம் ஏதாவது மனதில் இருந்தால் நீ இந்த மறுப்பைப் பொருட்படுத்தியே இருக்கவேண்டாமே. நீ பாட்டுக்கு ஒன்றும் நடக்காததுபோலப் போய் வந்து கொண்டிருக்கலாமே. ஏன், இப்போதும் அவளை நினைத்துக் கொண்டுதாணிருக்கிறேன். நேரே போகாவிட்டால் என்ன? நேரே போனால் அந்த உடல் கண்ணில் படுகிறதே. அந்த மாதிரி கரவும் சரிவும் வழியும் உடல் கண்ணில் படுகிறது. நான் எவ்வளவு மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும் அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. அப்படி ஒன்றும் முன் மாதிரி எனக்கும் தோன்றவில்லை. இந்த உடம்புகூட அவ்வளவாகப் படுத்தவில்லை. ஆனால், நான் பழைய குற்றவாளிதானே? நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று அவள் நம்புவாளா? அவள் மறந்துவிட்டாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாள். முழுவதும் மறந்துவிட முடியுமோ ஒருவரால் முடியாவிட்டாலும் அந்த நினைவைப் பெரிய பாறாங்கல்லை வைத்தும் தலைதுாக்க முடியாமல் அமுக்க முடியும் அவளால்.

"கூப்பிட்டனுப்பிச்சேளா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான் அவன்.

கூடத்தில் யமுனா மட்டும் இருந்தாள்.

"யாரங்கே?" என்று உள்ளேயிருந்து குரல் வந்தது.

"நகை வியாபாரி வந்திருக்காரும்மா" என்று யமுனா உள்ளைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

"உன் நகையை விற்காது இருந்தா சரி" என்று சொல்லிக் கொண்டே நின்றான் பாபு.

"நகை போறதேன்னு அழ முடியுமா? உட்காரு." "வா ... பாபு. நான் யாரோன்னுல்ல பார்த்தேன்." என்று பார்வதி அடுக்களையிலிருந்து வந்தாள். "அது சொல்றதும் சரிதான்.

签398签

தி. ஜானகிராமன்

_ான் நீ வர்றே. அதுவும் கூப்பிட்டனுப்பிக்க

-

_ள்ளே போனாள். _ம்' என்றான் பாபு. _ இன்னிக்கிக் காலமே சாமிராவ் வந்தான்

_ _

_ரு மாதத்திலேயே நல்ல வரனா முடிச்சுக் கொடுக்க _வருவுமே சொன்னானே."

_அப்புறம்தான் மறு காரியம் பார்க்கிறேன்னார் அவர்." பதான் இவ அப்பாவுக்கு உடம்பு வந்தது. ஒரு தினுசா _

_ான்னவாம்" _ நல்ல வரனா வந்திருக்காம்." _ _ாஆர்லியேதான்." -o-o: _ாதரம் பிள்ளை, உனக்குத் தெரியாது?" _ாதரம் பிள்ளையா? நெல்லு வியாபாரியா?" _ஆமாம்." _அஞ்சாறு பெரிய ரைஸ் மில்கூட வச்சிருக்காரே." _ஆமாம். சிய்யாழி, தெம்பரம் - இன்னும் ரண்டு முனு. I_லே ரைஸ்மில் வச்சிருக்காரு."

தெரியும்." பண்டைக்காலமா? ஏகத்தாறாப் பணம் வந்துகிட்டிருக்காம்"

-off."

_அவருதான்." _அவரா? அவர் மகன் என்னோட வாசிச்சானே!" _அப்படியா? உன்னோட வாசிச்சானா?" "ஆமாம்." "ஒரு வீடு எளுதி வக்யறேங்கறாராம் இரண்டு வேலி நிலம் பளுதி வக்யறேங்கறாராம்."

婆399 婆

மோக முள்