தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, July 17, 2014

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள் & சுவர் - ழான் பவுல் சார்த்தர் & வெள்ளையானைகளைப் போன்ற மலைகள் எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்
http://www.maamallan.com/2011/08/blog-post_9309.html


அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

அந்தப் புகைநிற மனிதன் குனிந்து சேற்றை முத்தமிட்டான் என்பதும், தசையைக் கிழிக்கும் கூரிய இலைகளை (உணராததால் என) ஒதுக்காமலே கரையேறினான் என்பதும், அருவருப்புடனும் ரத்தக் கறையுடனும் தவழ்ந்தபடி எப்போதோ அக்னி நிறமாயிருந்து இப்போது சாம்பல் நிறமாகிவிட்ட ஒரு புலியினதோ குதிரையினதோ சிலை கிரீடமாக நிற்கும் ஒரு வட்ட அடைப்பை நோக்கி ஏறினான் என்பதும் தான் மிக நிச்சயமானது. புராதன அக்னி ஒன்றினால் விழுங்கப்பட்டு, விஷப்புகை போன்ற கானகத்தினால் புனிதத்துவத்தை இழந்து, அதன் கடவுளும் மனித வழிபாட்டை இழந்துவிட்ட ஒரு கோவில்தான் இந்த வட்டம்.

அவன் சிலையின் பீடத்தடியில் உடலை நீட்டிப் படுத்துக் கொண்டான். உச்சிச் சூரியன் அவனை விழிப்படையச் செய்தது. தனது காயங்கள் ஆறிவிட்டதில் அவன் வியப்புறவில்லை. சோகை படிந்த கண்களை மூடி அவன் துயின்றான். - உடலின் பலவீனத்தால் அல்ல, மனசின் தீர்மானத்தால். இந்தக் கோயில்தான் தனது மாற்ற முடியாத தீர்மானத்திற்குத் தகுந்த இடம் என்று அவனுக்குத் தெரியும். கீழ் நதிப்புறத்தில் இப்போது எரிந்து இறந்துவிட்ட கடவுள்களின் இன்னொரு ஆலயம் ஓயாது வளரும் மரங்களினால் மூழ்கடிக்கப்படாமல் தப்பித்து இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

காலையளவில் ஒரு பறவையின் ஆறுதல்படுத்த முடியாத அலறலில் அவன் கண் விழித்தான். பாதரட்சையற்ற காற் சுவடுகளும், உணவுக்கு சில ஃபிக் இலைகளும், ஒரு கூஜாவும், அவனிடமிருந்து பாதுகாப்பை வேண்டியோ, அவனது மந்திர சக்திக்கு அஞ்சியோ, அந்தப் பிரதேசத்து மனிதர்கள் அவனது நித்திரையை ஒற்றுப் பார்த்திருக்கிறார்களென எச்சரித்தன. பயத்தின் குளிரில் அவன் கல்லறை போன்ற ஒரு வெடிப்பை அங்கே சிதைந்த ஒரு சுவரில் தேடிப் பழக்கமில்லாத இலைகளினுள்ளே மறைந்து கொண்டான்.

அவனை வழி நடத்திய நோக்கம் இயற்கையை மீறிய ஒன்றாயினும் சாதிக்க முடியாததல்ல. ஒரு மனிதனைக் கனவு கொள்ள அவன் விரும்பினான். அம்மனிதனை அவனது சிறு சிறு நுட்பங்களில் பரிபூரணமாகக் கனவு கண்டு அவனை நிதர்சன உலகிலே எழச் செய்ய அவன் விரும்பினான். இந்த மாந்திரீக முயற்சி அவனது மனப்பரப்பு முழுவதையும் வரளச் செய்து விட்டது. யாராவது அவனது பெயரை அல்லது அவனது முன் வாழ்வில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டிருந்தால் அவனால் பதில் தந்திருக்க முடியாது.

இந்த சிதைந்த கானகக் கோயில் அவனது தேவைக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது குறைந்தபட்ச அளவு காட்சியுலகு அது. தொழிலாளர்கள் சமீபத்திருப்பதுகூட அவனுக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது எளிய தேவைகளை நிரப்ப அவர்கள் தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவனுக்குக் கொண்டு வந்த அரிசி உணவும் பழமும் நித்திரைக் கனவு என்ற ஒரே முயற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த அவனது சரீரத்துக்குப் போதுமானதாக இருந்தது.

ஆரம்பத்தில் அவனது கனவுகள் ஒரே குழப்பமயமாயிருந்தன. பிறகு ஒரு சிறு கால அளவில், அவை ஒன்றை ஒன்று மறுத்து பின் இவ்விரு எதிரிடைகளும் இணங்கி வருவதான நியதி கொண்டன. இந்த வேற்றூர் மனிதன், வட்டவடிவமாய், ஓரளவில் இந்த எரிந்த கோயிலேயான ஒரு போட்டி அரங்கத்தின் மையத்திலே தான் இருப்பதாகக் கனவு கண்டான்.

உறவு கொள்ள மறுக்கும் மாணவர்கள், தொங்கும் பலகை ஆசனங்களில் முகிற்கூட்டங்கள் போல் நிரம்பியிருந்தனர். அதி தூரத்து மாணவர்களின் முகங்கள், தாரகைகளின் உயரத்தில் பல நூற்றாண்டுகளின் தூரத்தில் தொங்கின ஆனால் அவர்களது முகங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. இந்த மனிதன் தனது மாணவர்களுக்கு உடற்கூறு, பிரபஞ்சவியல், மாந்திரீகம் என்ற துறைகளில் உரை நிகழ்த்தினான். தங்களது வெற்று மாயை நிலையிலிருந்து தங்களில் ஒருவனை ரட்சித்து நிதர்சன உலகினுள் மாறி நுழைய வைக்கக் கூடியது இப்பரீட்சை என இதன் முக்கியத்தை ஊகித்தறிந்தவை போல அம்முகங்கள் ஆவல் அவசத்தோடு இவன் உரைக்குக் காது கொடுத்துக் கேட்டு புரிந்து கொண்ட வகையாகப் பதிலிறுக்க முயன்றன. விழிப்பிலும் சரி தூக்கத்திலும் சரி இம் மனிதன் தனது ஆவிகளின் பதில்களை ஆராய்ந்தான். போலிகளினால் தான் ஏமாந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டான். அதோடு, சில சிக்கல்களின்போது வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு ஒன்றை அவன் உணர்ந்தான். இவ்வகையாக, பிரபஞ்சத்தில் பங்கு கொள்வதற்குத் தகுதியான உயிர் ஒன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான்.

***

தனது சிந்தாந்தத்தைப் பேச்சு மூச்சற்று ஏற்றுக் கொள்பவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதெனவும், ஆனால் அவ்வப்போது தன்னை எதிர்க்க முனைந்தவர்களிடமிருந்துதான் எதையும் எதிர்பார்க்கலாம் எனவும் ஒன்பது பத்து இரவுகளின் பின் அவன் ஒருவித கசப்போடு புரிந்துகொண்டான். இவர்களுள் முதல் ரகத்தினர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களானாலும், தனிமனிதர்களென உயர முடியவில்லை. இரண்டாவது ரகத்தினரோ முன்னவர்களைவிட ஒரு சிறிது உந்நதமானவர்களாக ஏற்கனவே வாழ்வு பெற்றிருந்தனர். ஒரு முன் மாலைப் போது (இப்போது முன் மாலைகளும் துயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இப்போது சூர்யோதயத்தில் ஒரு சில மணி நேரங்கள்தான் அவன் விழித்திருந்தான்) அவன் ஒரேயொரு மாணவனை வைத்துக்கொண்டு, மீதியிருந்த பிரமாண்டமான மாயாரூப சீடர் குழு முழுவதையும் அப்படியே நீக்கிவிட்டான். மீந்திருந்தவன் உறவு கொள்ளக் கடினமான, சில வேளை அடங்க மறுக்கிற ஒரு சிறுவன். அவன் முகவெட்டு அவனைக் கனவு கொண்டிருந்தவனுடைய முகவெட்டை ஒத்திருந்தது. தன்னுடைய சகமாணவர்களை அப்படி அநாயசமாகத் துடைத்து அழித்து விட்டது பற்றி அவன் வெகு நாள் நிச்சலனப்படவில்லை. ஒரு சில தனி வகுப்புகளோடு, அவனது முன்னேற்றம் ஆசிரியரைத் திகைக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. இருந்தும் ஒரு எதிர்பாராத விபத்து நேர்ந்துவிட்டது.

ஒரு நாள் அவன் ஒரு பிசுபிசுத்த பாலைவனத்திலிருந்து புறப்பட்டாற்போல் தனது நித்திரையிலிருந்து விழித்தவன், உபயோகமற்றுக் கிடந்த முன் மாலை ஒளியைக் கண்டு அதை விடிகாலை என்று குழம்பினான். அதோடு தான் அன்று கனவு காணவில்லை என்பதைத் திடீரென உணர்ந்தான். அன்றிரவு முழுவதும், பகல் முழுவதும் துயிலின்மையின் தாங்கொண்ணாத் தெளிவு அவனைப் பீடித்தது. தன் பலத்தை இழந்து களைப்புறுவதற்காகக் கானகத்துள் அலைந்து ஆராய முயன்றான். நச்சுத் தாவரங்களிடையே உபயோகமற்ற ஆரம்ப தர்சன வீச்சுக்களின் நாளங்கள் ஓடிய துயில் கணங்கள் சில அவனுக்குக் கை வந்தன. அந்த மாணவ சரீரத்தை அவன் சேர்த்தெடுக்க முயன்றும், ஒரு சில உற்சாக மந்திரங்களை அவன் உச்சரித்து முடிக்கு முன்பே அவ்வுடல் ஊனமாகி மறைந்தது. ஓரளவுக்கு ஓய்வற்றதென்ற இத்தபஸினால் அவனது கிழக் கண்களில் கோபக் கண்ணீர் எரிந்தது.

மகத்தானதும் கீழ்மையானதுமான ஒரு முறைமையின் எல்லாப் புதிர்களையும் அவன் ஊடுருவ வேண்டுமாயினும் ஒன்றுக்கொன்று வரிசைக் கிரமமற்று, அசைவு மயமாகவே இருக்கும் கனவுப் பதார்த்தங்களை கொண்டு உருச் சமைப்பதென்பதுதான் எவனும் செய்யக்கூடிய கடினமான காரியம் என அவன் உணர்ந்தான். இது மணலைக் கயிறாகத் திரிப்பதைவிட, முகமற்ற காற்றை நாணயங்களாகப் பதிப்பதைவிடக் கடினமானது. தன்னை வழி தடுமாற்றிய பிரம்மாண்ட மயக்கத்தை மறப்பதென சபதமெடுத்துக் கொண்டு அவன் வேறொரு வேலை முறையைத் தொடரந்தான். அம்முறையைத் தொழிற்படுத்து முன்னால் தனது மயக்கத்தின்மூலம் இழந்த பலத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஒரு மாதத்தைச் செலவிட்டான். கனவு காணவேண்டுமென்ற முன்னேற்பாட்டை முதலில் கைவிட்டான். உடனேயே என ஒவ்வொரு நாளும் ஒரு கணிசமான வேளை நித்திரை அவனுக்குக் கை வந்தது. இந்தக் காலகட்டத்தில், கனவு கண்ட ஒரு சில வேளைகளை அவன் அலட்சியப் படுத்திவிட்டான். தனது பெரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு, சந்திரவட்டம் பூரணமாகும்வரை காத்திருந்தான். பிறகு முன் மாலைப் போது நதி நீரில் தன்னைப் புனிதமாக்கிக் கொண்டபின், ஒரு மகத்தான நாமத்தின் தேர்ந்தெடுத்த அசைகளை உச்சரித்துவிட்டுத் துயிலில் ஆழ்ந்தான். உடனேயே ஹ்ருதயம் துடிதுடிக்கக் கனவு காணத் துவங்கி விட்டான்.

இன்னும் ஆணோ பெண்ணோவெனத் தெரியாத ஒரு மனித உடலின் அரையிருளினுள் அது கதகதப்பாக, மர்மமாக, ஒரு முஷ்டி அளவினதாய் கரு ரத்த நிறத்தில் அமைந்திருப்பதாக அவன் கனவு கண்டான். ஒரு தீட்சண்யமான அன்புடன் பதினான்கு தெளிந்த இரவுகளாக அவன் அதைப்பற்றிக் கனவு கண்டான். அதை அவன் தீண்டவில்லை. அதற்கு தன்னை சாட்சியாக நிற்க, அதை அவதானிக்க, அடிக்கடி அதைத் தனது பார்வையினாலேயே திருத்தியமைக்க மட்டுமே அவன் தன்னை அனுமதித்துக் கொண்டான். ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு தூரத்திலுமிருந்து அதை நோக்கினான். அதன் மயமாகவே தான் மாறி அதைக் கவனித்தான். பதினான்காவது இரவு அவன் சுவாச கோளத்துக்குச் செல்லும் அதன் ரத்த நாளத்தை தனது ஆள்காட்டி விரலினால் மென்மையாகத் தீண்டினான். அதன் பிறகு முழு ஹ்ருதயத்தையும், அதன் உள்ளையும் புறத்தையும். இச் சோதனை அவனுக்குத் திருப்தியளித்துவிட்டது. ஒரு இரவு வேண்டுமென்றே அவன் கனவு காணவில்லை. அதன்பிறகு ஹ்ருதயத்தை மீண்டும் கவனத்துக்கு எடுத்தான். ஒரு கிரகத்தின் நாமத்தை உச்சரித்து வேறொரு உறுப்பின் கனவுருவை மேற்கொண்டான்.

ஒரு வருஷத்திற்குள் அவன் எலும்புக்கூட்டுக்கும் கண்ணிமைக்கும் வந்துவிட்டான். அளவற்ற தலை மயிர்கள்தான் மிகக் கடுமையான வேலை தரும்போல தோன்றின. அவன் முழுமையில் ஒரு மனிதனைக் கனவு கண்டான். ஒரு இளம் மனிதன். ஆனால் எழுந்து உட்காராத, பேசாத, கண்ணிமைகளைத் திறக்க மாட்டாத மனிதன் இவன். இரவு மாறி இரவு தோறும் இம் மனிதன் துயிலில் கிடப்பதாகவே அவன் கனவு கண்டான்.

***

இறை அறிவின் பிரபஞ்சத்துவத்திலே அரை உத்வேகங்கள் எழுந்து நிற்க முடியாத ஒரு செந்நிற ஆதாமை சமைக்கின்றன. தூசியில் பிறந்த, அரை குறையான, தாறுமாறான தாது நிலையிலுள்ள அதே ஆதாமைப் போன்றவன் தான் இந்த மாந்திரீகனது இரவு ஜ்வாலைகளில் காய்ச்சிச் சமைக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும். ஒரு முன் மாலையில் இவன் தன் சிருஷ்டியை ஒரேயடியாக அழிக்க எண்ணிப் பின் மனதை மாற்றி கொண்டான். (அவன் அதை அழித்திருந்தானென்றால் நல்லது.) பூமியிலுள்ள தெய்வங்கள் யாவற்றுக்கும் செய்த வழிபாடுகள் முழுவதும் வரண்டு போனதில், அவன், புலியோ குதிரையோ ஆன அங்கிருந்த விக்கிரகத்தின் பாதங்களில் வீழ்ந்து அதன் அமானுஷ்யமான உதவியை வேண்டிக் கெஞ்சினான். அன்று மாலைக் கருக்கலில் அவன் அவ்விக்கிரகத்தைக் கனவில் கண்டான். அக் கனவில் அது உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்தது. அது ஒரு புலிக்கும் குதிரைக்கும் பிறந்த அநாமத்தாக இருக்கவில்லை. ஆனால் அது இவ்விரு ஆக்ரோஷமான பிராணிகளாகவும் -ஒரு காளையாகவும் - ஒரு ரோஜாவாகவும் - ஒரு புயலாகவும் நின்றது. தனது பூவுலக நாமம் அக்னி எனவும் இந்த வட்டக் கோயிலில், (இது போன்ற வேறு கோயில்களில் போல) மனிதர்கள் தனக்குப் பலிகளிட்டு முன்னொரு கால் வழிபட்டார்களெனவும், அக்னியையும் கனவு காண்பவனையும் தவிர மற்றெல்லாரும் கனவில் கிடக்கும் ஆவியுருவை ரத்தமும் தசையுமான மனிதனென்றே நம்பும்படி தான் உயிர்ப்பித்துத் தருவதாகவும் அவனை அது உணரவைத்தது. இம் மனிதனுக்கு எல்லா பூஜை முறைகளிலும் போதனை ஆனவுடன் கோபுரங்கள் இன்றும் நிற்கும் அந்த அடுத்த கோயிலுக்கு இவன் குரலேனும் அந்தப் பாழ்க்கட்டிடத்தில் தன்னை வாழ்த்திப் புகழ அனுப்பிவிடும் படியும் கட்டளையிட்டது. கனவு கொண்டவனின் கனவில் கனவு காணப்பட்டவன் உயிர்த்தெழுந்தான்.

தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மாந்திரீகன் நிறைவேற்றினான். அவன் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்தை (முடிவில் இக் கால அளவு இரண்டு வருஷங்களென ஆயிற்று) அவனுக்குப் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் அக்னிவழிபாட்டையும் கற்பிப்பதற்கு அர்ப்பணித்தான். மனதுக்குள் அவனிடமிருந்து தான் பிரிவடையவேண்டும் என்ற எண்ணத்தில் வேதனை கொண்டான். பாண்டியத்தியத் தேவை என்ற சாக்கில் ஒவ்வொரு நாளும் கனவு காணும் கால அளவை அதிகரித்துக் கொண்டான். கொஞ்சம் குறைபாடாயிருந்த வலது தோளையும் புதுப்பித்தான். சில வேளைகளில் இதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கின்றன என்ற தோற்றம் அவனை சங்கடப் படுத்தியது.... பொதுவாகப் பார்த்தால், அவனது நாட்கள் மகிழ்ச்சியிலேயே கழிந்தன. கண்களை மூடியதும் அவன் நினைவு: இப்போது நான் என் மகனுடன் இருக்கப் போகிறேன். அல்லது வெறுமே: எனது காரணத்தில் வந்த என் மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் அவனிடம் போகாவிட்டால் அவனுக்கு இருப்பு இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவன் நிதர்சனத்துக்கு பழக்கப்படுத்த ஆரம்பித்தான். ஒரு தடவை ஒரு தூரத்து நிலச்சிகரத்தில் ஒரு கொடியை நடும்படி அவனுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் அந்தக் கொடி அந்நிலச் சிகரத்தின் மேல் படபடத்துக் கொண்டிருந்தது. இதற்குச் சமமான வேறு பரிசோதனைகளையும் செய்து பார்த்தான் - ஒவ்வொரு தடவையு முந்தியதைவிடத் துணிகரமானதாக ஒருவிதக் கசப்போடு தன் மகன் பிறப்பதற்கு ஆத்திரப்படுமளவு தயாராகி விட்டான் என்பதை உணர்ந்தான். அன்றிரவு அவனை முதல் தடவையாக முத்தமிட்டு, ஒழுங்கற்று பலமைல்களுக்கு நீண்டு கிடக்கும் காட்டையும் சதுப்பு நிலங்களையும் தாண்டி, வெண்ணிறமாக மாறிக் கொண்டிருக்கும் சிதைவுகளுடன் கீழ் நதிப்புறத்தில் நிற்கும் அந்த மற்றக் கோயிலுக்கு அவனை அனுப்பினான். இதற்கு முன்பே (தனது மகன் தான் ஒரு ஆவியுரு என்பதை அறியாமல், தானும் பிறரைப் போன்ற ஒரு மனிதன் என்று நினைக்க வேண்டும் என) அவனது வாழ்வுத் தொழிலின் ஆரம்ப வருஷ ஞாபகங்கள் யாவற்றையும் அழித்து விட்டான்.

***

அவனது வெற்றியும் சாந்தியும் சலிப்பினால் மாசடைந்தன. காலை மாலை கருக்கல் வேளைகளில் இதே போன்ற பூஜாகிருத்தியங்களை தனது மாயாரூபக் குழந்தையும் கீழ் நதிப்புறத்தில் செய்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு போலும், அங்கிருந்த கற்சிலையின் முன்னால் இவன் சாஷ்டாங்கமாகக் கிடப்பான். இரவு வேளைகளில் அவன் பிறகு கனவு காணவில்லை. அல்லது மற்ற எந்த மனிதனையும் போலத்தான் கனவு கண்டான். பிரபஞ்ச சப்தங்களையும் உருக்களையும் பற்றி அவனது பார்வை ஓரளவு வெளிறிவிட்டது: தனது உயிரிலிருந்ஹ்டு பிரிந்த இவற்றினால், இங்கில்லாத அவனது மகன் போஷிக்கப்பட்டான். தனது வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவன் ஒருவகைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்.

சில வரலாற்றுக்காரர் வருஷங்களாகவும் சிலர் பத்து வருஷப்பிரிவுகளாகவும் கணித்த ஒரு குறிப்பிட்ட காலம் சென்று இரண்டு துடுப்புக்காரர்கள் அவனை ஒரு நள்ளிரவில் எழுப்பினர். அவர்கள் முகத்தை அவனால் சரிவரக் காண முடியவில்லை. ஆனால் வடக்கில் ஒரு கோயிலில் எரிபடாமலே தீயினூடே நடக்கும் சக்திவாய்ந்த மந்திர வசப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி அவர்கள் பேசினர். மாந்திரீகனுக்கு அந்தக் கடவுளின் வார்த்தைகள் திடீரென நினைவுக்கு வந்தன. உலகில் நிரம்பியுள்ள எல்லாவகை ஜீவர்களினுள்ளும், அக்னி மட்டுமே தனது மகனை ஒரு ஆவியுரு என அறிந்திருந்தது என்பது நினைவுக்கு வந்தது. இந்த ஞாபகம் முதலில் அவனை ஆசுவாசப்படுத்தினாலும் முடிவில் அவனை வதைக்கத் தொடங்கிவிட்டது. தனது மகன் தனக்குள்ள இந்த அசாதாரண சலுகையைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து ஏதேனும் ஒரு வகையில் தான் ஒரு வெறும் மனப்பிரதிமை என்பதைக் கண்டுபிடித்து விடக் கூடுமோ என அஞ்சினான். ஒரு மனிதனாக இல்லாதிருப்பது, இன்னொரு மனிதனது கனவின் வெளியுறுவாக வாழ்வது - என்ன ஒப்பற்ற அவமானம். பைத்தியக்காரத்தனம்! தனது வெறும் இன்பக் குழப்பத்தில் தான் ஜனிப்பித்த (அல்லது அனுமதித்த) தனது மக்களைப் பற்றி எந்தத் தந்தைக்கும் அக்கறை இருக்கத்தான் செய்யும். ஆயிரத்து ஒரு மர்ம இரவுகளில், அங்கம் அங்கமாகவும் ஒவ்வொரு உள்ளுறுபாகவும் நினைத்துச் சமைத்த தனது மகனைப் பற்றி அந்த மாந்திரீகன் அச்சம் கொண்டது இயல்புதான்.

அவனது மனக்குறைகள், சில குறிப்பிட்ட எச்சரிக்கைகளுடனேயே, திடீரென நின்றன. முதலாவதாக (ஒரு நீண்ட வரட்சியின் பிறகு) ஒரு தூரத்து முகில், ஒரு பறவை போல் கனமற்று ஒரு குன்றின் உச்சியில் தோன்றியது. பிறகு வடக்குப் புறமாக வானம் சிறுத்தையின் ஈறுகளைப் போன்ற ஒரு ரோஜா நிறமாயிற்று அதன் பிறகு இரவின் உலோகத் தகட்டை துருப்பிடித்தாற் போல, புகைமுகில் முகிலாக வந்தது. இவற்றையடுத்து வனமிருகங்கள் பீதி கொண்டு சிதறியோடின. எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னால் நடந்ததே மீண்டும் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. அக்னிக் கடவுளினது புனித க்ருகத்தின் சிதைவு அக்னியினாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பறவைகளற்ற ஒரு விடி காலையில் அக்னி வட்டம் சுவர்களை நக்கிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு கணம் நீரினுள் ஒதுங்கித் தப்பித்துக் கொள்ள எண்ணினான். ஆனால் உடனேயே தனது வயோதிகத்துக்கும் உழைப்புக்கும் மரணம் முடி சூட்டுவதற்காக வந்திருக்கிறது என உணர்ந்தான். அவை அவனது தசையைக் கிழிக்கவில்லை. அவனைத் தழுவி, சூடோ எரிவோ இன்றி அவன் மேல் பெருகின. ஆசுவாசத்தோடு, அவமானத்தோடு, பயங்கரத்தோடு, தானும் ஒரு மாயாரூபம் என, தன்னையும் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறான் என அவன் உணர்ந்தான்.

ஜூன் 1971 கசடதபற இதழ் 9 விலை 30 காசு

The Circular Ruins by Jorge Luis Borges (மூலம்” ஸ்பானிஷ். ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் தருபவர்: தர்முஅரூப்சிவராம்)

தட்டச்சு: சென்ஷி.
https://www.facebook.com/profile.php?id=100009836223650&fref=nf
வட்டச் சிதிலங்கள் கதை
எதுவுமோ அல்லது எவருமோ தனது காரணார்த்திலிருந்தே தோன்றுகிறதான--அதாவது அதன் காரணம் அதுவே--என்கிற அறிவுத்தோற்றவியல் விவாதம், ஸ்பினோசா மற்றும் தத்துவப் பள்ளி சிஷ்யர்கள் கூறுவது போல இருப்பது வார்த்தை விளையாட்டுக்கள் போலவோ அல்லது மொழிக்கு இழைக்கப்பட்ட வன்முறை போலவோ எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. என் கருத்தில், ஒரு பேச்சானது ஒரு பேசுபவனையும் ஒரு கனவானது ஒரு கனவு காண்பவனையும் உள்ளுணர்த்துகிறது.
இது, வாஸ்தவமாக, ஒரு முடிவற்ற எண்ணிக்கையற்ற பேசுவர்கள், கனவுகாண்பவர்கள் ஆகியோரின் தொடர்ச்சிகளின் கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது. இதன் முடிவு, ஒரு முடிவே இல்லாத பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு வேளை அதுதான் என் கதையின் வேராக அமைந்திருக்கிறதோ என்னவோ.
இயல்பாக நான் அதை எழுதியபோது கதையை இப்படிப்பட்ட அரூபமயமான விஷயங்களுடன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு, சதுரங்கம் பற்றி ஒரு ஜோடி சானெட்டுகளை(14 வரி கவிதைகள்)
எழுதியபோது நான் மீண்டும் அந்த கருத்தாக்கத்தினை எடுத்துக் கொண்டேன்.
தாங்கள் ஒரு விளையாடுபவனால் வழிகாட்டப்படுகிறோம் என்று சதுரங்கக் காய்களுக்குத் தெரியாது. விளையாடுபவனுக்குத் தெரியாது தான் ஒரு கடவுளால் வழி நடத்தப்படுகிறோம் என்பது. அந்தக் கடவுளுக்குத் தெரியாது வேறு எந்தக் கடவுளர்கள் அவரை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது.
பல ஆண்டுகள் கழித்து, லபோக்குக்கு வருகை தந்த போது, டெக்சாஸ் பேன் ஹாண்டிலில், வேறு ஒரு கவிதையை எழுதுவதன் மூலம் --கோலம்-- வட்டச் சிதிலங்கள் கதையை நான் பிரக்ஞாபூர்வமாக நான் திருப்பி எழுதுகிறேனா என்று என்னிடம் ஒரு பெண் கேட்டாள்.
இல்லை என்றுதான் பதில் கூறினேன், ஆனால் எனக்குள் இருந்த இந்த எதிர்பார்த்திராத ஒத்த தன்மையைச் சுட்டிக் காட்டியதற்காக நான் அவளுக்கு நன்றி தெரிவித்தேன். உள்ளபடியே, பாலைவனத்தின் விளிம்பு பிரதேசத்திற்கு.


http://www.sccs.swarthmore.edu/users/00/pwillen1/lit/cruins.htm

The Circular Ruins 
Jorge Luis Borges

No one saw him disembark in the unanimous night, no one saw the bamboo canoe sink into the sacred mud, but in a few days there was no one who did not know that the taciturn man came from the South and that his home had been one of those numberless villages upstream in the deeply cleft side of the mountain, where the Zend language has not been contaminated by Greek and where leprosy is infrequent. What is certain is that the grey man kissed the mud, climbed up the bank with pushing aside (probably, without feeling) the blades which were lacerating his flesh, and crawled, nauseated and bloodstained, up to the circular enclosure crowned with a stone tiger or horse, which sometimes was the color of flame and now was that of ashes. This circle was a temple which had been devoured by ancient fires, profaned by the miasmal jungle, and whose god no longer received the homage of men. The stranger stretched himself out beneath the pedestal. He was awakened by the sun high overhead. He was not astonished to find that his wounds had healed; he closed his pallid eyes and slept, not through weakness of flesh but through determination of will. He knew that this temple was the place required for his invincible intent; he knew that the incessant trees had not succeeded in strangling the ruins of another propitious temple downstream which had once belonged to gods now burned and dead; he knew that his immediate obligation was to dream. Toward midnight he was awakened by the inconsolable shriek of a bird. Tracks of bare feet, some figs and a jug warned him that the men of the region had been spying respectfully on his sleep, soliciting his protection or afraid of his magic. He felt a chill of fear, and sought out a sepulchral niche in the dilapidated wall where he concealed himself among unfamiliar leaves.

The purpose which guided him was not impossible, though supernatural. He wanted to dream a man; he wanted to dream him in minute entirety and impose him on reality. This magic project had exhausted the entire expanse of his mind; if someone had asked him his name or to relate some event of his former life, he would not have been able to give an answer. This uninhabited, ruined temple suited him, for it is contained a minimum of visible world; the proximity of the workmen also suited him, for they took it upon themselves to provide for his frugal needs. The rice and fruit they brought him were nourishment enough for his body, which was consecrated to the sole task of sleeping and dreaming.

At first, his dreams were chaotic; then in a short while they became dialectic in nature. The stranger dreamed that he was in the center of a circular amphitheater which was more or less the burnt temple; clouds of taciturn students filled the tiers of seats; the faces of the farthest ones hung at a distance of many centuries and as high as the stars, but their features were completely precise. The man lectured his pupils on anatomy, cosmography, and magic: the faces listened anxiously and tried to answer understandingly, as if they guessed the importance of that examination which would redeem one of them from his condition of empty illusion and interpolate him into the real world. Asleep or awake, the man thought over the answers of his phantoms, did not allow himself to be deceived by imposters, and in certain perplexities he sensed a growing intelligence. He was seeking a soul worthy of participating in the universe.

After nine or ten nights he understood with a certain bitterness that he could expect nothing from those pupils who accepted his doctrine passively, but that he could expect something from those who occasionally dared to oppose him. The former group, although worthy of love and affection, could not ascend to the level of individuals; the latter pre-existed to a slightly greater degree. One afternoon (now afternoons were also given over to sleep, now he was only awake for a couple hours at daybreak) he dismissed the vast illusory student body for good and kept only one pupil. He was a taciturn, sallow boy, at times intractable, and whose sharp features resembled of those of his dreamer. The brusque elimination of his fellow students did not disconcert him for long; after a few private lessons, his progress was enough to astound the teacher. Nevertheless, a catastrophe took place. One day, the man emerged from his sleep as if from a viscous desert, looked at the useless afternoon light which he immediately confused with the dawn, and understood that he had not dreamed. All that night and all day long, the intolerable lucidity of insomnia fell upon him. He tried exploring the forest, to lose his strength; among the hemlock he barely succeeded in experiencing several short snatchs of sleep, veined with fleeting, rudimentary visions that were useless. He tried to assemble the student body but scarcely had he articulated a few brief words of exhortation when it became deformed and was then erased. In his almost perpetual vigil, tears of anger burned his old eyes.

He understood that modeling the incoherent and vertiginous matter of which dreams are composed was the most difficult task that a man could undertake, even though he should penetrate all the enigmas of a superior and inferior order; much more difficult than weaving a rope out of sand or coining the faceless wind. He swore he would forget the enormous hallucination which had thrown him off at first, and he sought another method of work. Before putting it into execution, he spent a month recovering his strength, which had been squandered by his delirium. He abandoned all premeditation of dreaming and almost immediately succeeded in sleeping a reasonable part of each day. The few times that he had dreams during this period, he paid no attention to them. Before resuming his task, he waited until the moon's disk was perfect. Then, in the afternoon, he purified himself in the waters of the river, worshiped the planetary gods, pronounced the prescribed syllables of a mighty name, and went to sleep. He dreamed almost immediately, with his heart throbbing.

He dreamed that it was warm, secret, about the size of a clenched fist, and of a garnet color within the penumbra of a human body as yet without face or sex; during fourteen lucid nights he dreampt of it with meticulous love. Every night he perceived it more clearly. He did not touch it; he only permitted himself to witness it, to observe it, and occasionally to rectify it with a glance. He perceived it and lived it from all angles and distances. On the fourteenth night he lightly touched the pulmonary artery with his index finger, then the whole heart, outside and inside. He was satisfied with the examination. He deliberately did not dream for a night; he took up the heart again, invoked the name of a planet, and undertook the vision of another of the principle organs. Within a year he had come to the skeleton and the eyelids. The innumerable hair was perhaps the most difficult task. He dreamed an entire man--a young man, but who did not sit up or talk, who was unable to open his eyes. Night after night, the man dreamt him asleep.

In the Gnostic cosmosgonies, demiurges fashion a red Adam who cannot stand; as a clumsy, crude and elemental as this Adam of dust was the Adam of dreams forged by the wizard's nights. One afternoon, the man almost destroyed his entire work, but then changed his mind. (It would have been better had he destroyed it.) When he had exhausted all supplications to the deities of earth, he threw himself at the feet of the effigy which was perhaps a tiger or perhaps a colt and implored its unknown help. That evening, at twilight, he dreamt of the statue. He dreamt it was alive, tremulous: it was not an atrocious bastard of a tiger and a colt, but at the same time these two firey creatures and also a bull, a rose, and a storm. This multiple god revealed to him that his earthly name was Fire, and that in this circular temple (and in others like it) people had once made sacrifices to him and worshiped him, and that he would magically animate the dreamed phantom, in such a way that all creatures, except Fire itself and the dreamer, would believe to be a man of flesh and blood. He commanded that once this man had been instructed in all the rites, he should be sent to the other ruined temple whose pyramids were still standing downstream, so that some voice would glorify him in that deserted ediface. In the dream of the man that dreamed, the dreamed one awoke.

The wizard carried out the orders he had been given. He devoted a certain length of time (which finally proved to be two years) to instructing him in the mysteries of the universe and the cult of fire. Secretly, he was pained at the idea of being seperated from him. On the pretext of pedagogical necessity, each day he increased the number of hours dedicated to dreaming. He also remade the right shoulder, which was somewhat defective. At times, he was disturbed by the impression that all this had already happened . . . In general, his days were happy; when he closed his eyes, he thought: Now I will be with my son. Or, more rarely: The son I have engendered is waiting for me and will not exist if I do not go to him.

Gradually, he began accustoming him to reality. Once he ordered him to place a flag on a faraway peak. The next day the flag was fluttering on the peak. He tried other analogous experiments, each time more audacious. With a certain bitterness, he understood that his son was ready to be born--and perhaps impatient. That night he kissed him for the first time and sent him off to the other temple whose remains were turning white downstream, across many miles of inextricable jungle and marshes. Before doing this (and so that his son should never know that he was a phantom, so that he should think himself a man like any other) he destroyed in him all memory of his years of apprenticeship.

His victory and peace became blurred with boredom. In the twilight times of dusk and dawn, he would prostrate himself before the stone figure, perhaps imagining his unreal son carrying out identical rites in other circular ruins downstream; at night he no longer dreamed, or dreamed as any man does. His perceptions of the sounds and forms of the universe became somewhat pallid: his absent son was being nourished by these diminution of his soul. The purpose of his life had been fulfilled; the man remained in a kind of ecstasy. After a certain time, which some chronicles prefer to compute in years and others in decades, two oarsmen awoke him at midnight; he could not see their faces, but they spoke to him of a charmed man in a temple of the North, capable of walking on fire without burning himself. The wizard suddenly remembered the words of the god. He remembered that of all the creatures that people the earth, Fire was the only one who knew his son to be a phantom. This memory, which at first calmed him, ended by tormenting him. He feared lest his son should meditate on this abnormal privilege and by some means find out he was a mere simulacrum. Not to be a man, to be a projection of another man's dreams--what an incomparable humiliation, what madness! Any father is interested in the sons he has procreated (or permitted) out of the mere confusion of happiness; it was natural that the wizard should fear for the future of that son whom he had thought out entrail by entrail, feature by feature, in a thousand and one secret nights.

His misgivings ended abruptly, but not without certain forewarnings. First (after a long drought) a remote cloud, as light as a bird, appeared on a hill; then, toward the South, the sky took on the rose color of leopard's gums; then came clouds of smoke which rusted the metal of the nights; afterwards came the panic-stricken flight of wild animals. For what had happened many centuries before was repeating itself. The ruins of the sanctuary of the god of Fire was destroyed by fire. In a dawn without birds, the wizard saw the concentric fire licking the walls. For a moment, he thought of taking refuge in the water, but then he understood that death was coming to crown his old age and absolve him from his labors. He walked toward the sheets of flame. They did not bite his flesh, they caressed him and flooded him without heat or combustion. With relief, with humiliation, with terror, he understood that he also was an illusion, that someone else was dreaming him.

******************

http://www.maamallan.com/2011/03/blog-post_28.html

மைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே

தமிழில் - அச்சுதன் அடுக்கா

கொல்லிப்பாவை 17வது இதழ் ஜூலை 1986
நன்றி: கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு
புக்லேண்ட் / டிஸ்கவரி புக் பேலஸ் / கிழக்கு ஆன்லைன்

தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பர்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்-எர்-ரக்மான் அல்-மஸ்முதி (இப்பெயரை ’கருணை உள்ளவர்களின் வேலைக்காரன்’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்) அவனைக் குறுவாளால் அல்லது விஷத்தால் கொன்றான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவன் துஷ்டனான போதிலும், அவன் இயற்கையான மரணத்தில் இறந்து போயிருப்பதும் சாத்தியம் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். காப்டன் ரிச்சர்ட் எப்.பர்டன் அம்மாந்திரீகனை 1853ல் சந்தித்துப் பேசினார். நான் கீழே தந்திருப்பது அவன் நினைவு கூர்ந்த அச் சம்பவம்:


எனது சகோதரன் இப்ராஹிமினால் அவனை ஏமாற்றிய குர்டோஃபானின் ஏமாற்றுக்காரத் தலைவர்களின் வஞ்சகம் நிறைந்த உபயோகம்ற்ற துணையோடு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையின் விளைவாகத்தான், துஷ்டன் யாகப்பின் கோட்டையில் நான் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ரத்தம் படிந்த நீதியில் என் சகோதரன் வாளுக்கிரையானான். ஆனால் நான், நானொரு மாந்திரீகன் என்றும், எனக்கு வாழ்வு தருவானானால் மந்திர விளக்கைக் காட்டிலும் அற்புதமான வடிவங்களையும் தோற்றங்களையும் அவனுக்குக் காண்பிக்கிறேன் என்றும் சொல்லி அத் துஷ்டனின் வெறுக்கப்பட்ட கால்களில் விழுந்தேன். அந்தக் கொடுங்கோலன் உடனடியாக நிரூபணம் கேட்டான். ஒரு நாணல் பேனா, ஒரு கத்திரி, ஒரு பெரிய வெனிஸ் காகிதம், ஒரு மைச் செப்பு, கனல்கள் கொண்ட தட்டு, கொஞ்சம் தனியா விதைகள், ஒரு அவுன்ஸ் பென்சோயின் இவற்றைக் கேட்டேன். காகிதத்தை ஆறு துண்டாக்கினேன். முதல் ஐந்து துண்டுகளில் மந்திரங்களும், பிரார்த்தனையும் எழுதினேன். எஞ்சிய துண்டில் புனித குரானிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினேன்: ‘உனது முகத்திரையை உன்னிலிருந்து மாற்றி விட்டோம்: இன்று உனது பார்வை துளைத்துக் கொண்டிருக்கிறது.’ பின், யாகப்பின் வலக்கையில் ஓர் மாந்திரீக வட்டம் வரைந்தேன். கையைக் குழிக்கச் சொல்லி, அதன் நடுவில் மை விட்டேன். அவன் பிரதிபலிப்பதைப் பார்க்கும்படியாக இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறதென்றான். தலையைத் தூக்க வேண்டாம் என்று சொன்னேன். கனல் தட்டில் பென்சோயினையும், தனியா விதைகளையும் இட்டேன். கனலில் பிரார்த்தனைகளைச் சொன்னேன். அடுத்ததாக, அவன் பார்க்க விரும்பும் ரூபத்தின் பெயரைச் சொல்லச் சொன்னேன். அவன் ஒரு கணம் யோசித்து சொன்னான். ‘ஓர் காட்டுக்குதிரை, பாலைவன எல்லைகளில் மேய்பவற்றில் மிகச் சிறந்தது.’ முதலில், அவன் ஒரு அமைதியான பசும் மேய்ச்சல் நிலத்தைப் பார்த்தான். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சிறுத்தையின் அசைவுகளும், முகத்தில் ஒரு வெண் புள்ளியும் கொண்ட குதிரை நெருங்கி வருவதைப் பார்த்தான். அதைப்போன்ற வலிமையுள்ள குதிரைக் கூட்டம் ஒன்றைப் பார்க்கக் கேட்டான். தொடுவானில் தூசுப்படலத்தைப் பார்த்தான். பின் குதிரைக் கூட்டம். இப்பொழுதுதன் எனது வாழ்வு காப்பாற்றப்பட்டதென்றறிந்தேன்.


அன்றிலிருந்து, கீழ்வானில் முதல் ஒளிகிரகணம் தோன்றும் பொழுதில், இரண்டு படைவீரர்கள் என் சிறைக்கூடத்திற்கு வருவார்கள். சாம்பிராணி, கனல் தட்டு, மை இவைகள் ஏற்கனவே தயாராக இருக்கும். துஷ்டனின் படுக்கையறைக்கு என்னை அழைத்துச் செல்வார்கள். உலகில் புலனாகும் எல்லாப் பொருள்களையும் பார்க்கக்கேட்டான். நானும் காண்பித்தேன். நான் இன்னும் வெறுக்கும் அந்த மனிதன் தன் உள்ளங்கையில் இப்போது இறந்து போயிருக்கும் மனிதர்கள் பார்த்திருப்பவைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பார்த்திருப்பவைகளையும் கொண்டிருந்தான்; நகரங்கள், காலநிலைகள், பூமியைப் பிரித்திருக்கும் ராஜ்ஜியங்கள்; தத்தமது கடல்களில் ஓடும் கப்பல்கள்; போர், இசை மற்றும் அறுவைக் கருவிகள்; அழகான பெண்கள்; ஸ்திரமான நட்சத்திரங்களும் கோள்களும்; கடவுளற்ற மனிதர்கள் அருவருக்கத்தக்க அவர்களின் படங்களைத் தீட்ட உபயோகிக்கும் வண்ணங்கள்; சுரங்கங்கள், எந்திரத் தளவாடங்கள், தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும் ரகசியங்கள் சொத்துக்களோடு; தேவனின் புகழையும், தொழுதலையுமே உணவாகக் கொண்ட வெள்ளித் தேவதைகள்; பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் பரிசுகள்; பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருக்கும் பறவைகளினதும், அரசர்களினதுமான விக்ரகங்கள்; உலகைத் தாங்கிப் பிடித்திருக்கும் காளையாலும், அதன் அடியில் கிடக்கும் மீனாலும் ஏற்படுத்தப்பட்ட நிழல்; கருணைமிக்க அல்லாவின் சந்தனக் கழிவுகள், வாயு விளக்குத் தெருக்கள், மனிதன் சப்தம் கேட்ட மாத்திரத்தில் மரணமுறும் சுறா போன்ற சொல்ல இயலாதவற்றைக் கண்டான். ஒருமுறை, ஐரோப்பா என்றழைக்கப்படும் நகரத்தைக் காட்டச் சொன்னான். நான் அதன் முக்கிய ரஸ்தாவை அவன் பார்க்கச் செய்தேன். கறுப்பு மற்றும் பலவகைக் கண்ணாடிகள் அணிந்திருக்கும் மனிதர்களின் பிரம்மாண்டமான ஓட்டத்தில்தான் முகமூடி அணிந்த அந்த மனிதனைப் பார்த்தான் என்று நான் நினைக்கிறேன்.


அதுமுதல், சிலசமயம் சூடானிய அணிகளோடும் சிலசமயம் யூனிபார்மோடும் ஆனால் எப்போதும் முகத்தில் முகமூடியோடும் அந்த உருவம் நாங்கள் பார்த்தவற்றினிடையில் அடிக்கடி வந்தது. அவன் வரத் தவறியதேயில்லை. நாங்கள் அவன் யாரென அறியத் துணியவில்லை. முதலில் சீக்கிரம் மறைந்து விடுவதாகவும் அல்லது ஸ்திரமாகவும் தோன்றிய மைக்கண்ணாடி உருவங்கள் இப்போது மிகுந்த சிக்கலாகி விட்டன. அவைகள் எனது கட்டளைக்குத் தாமதமின்றிப் பணிந்தன. அந்தக் கொடுங்கோலன் மிகத் தெளிவாகப் பார்த்தான். அதிகரித்துக் கொண்டே போகும் காட்சிகளின் கொடூரம் எங்களிருவரையும் அசதி நிலைக்குள்ளாக்கியது. தண்டனைகள், மூச்சுத் திணறடித்துக் கொல்லுதல், முடமாக்குதல் போன்ற சிரச்சேதம் செய்பவனின், கருணையற்றவனின் சந்தோஷங்களைத் தவிர வேறெதற்கும் நாங்கள் சாட்சியாகவில்லை.


இவ்வாறாக 14வது பார்மகாட் சந்திர தினத்தின் இரவும் வந்தது. மைவட்டம் அக்கொடுங்கோலன் கையில் உண்டாக்கப்பட்டது. பென்சோயினும், தனியா விதைகளும் கனல்தட்டில் இடப்பட்டன. பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். அன்று, அவன் இதயம் ஓர் மரண தண்டனையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால், அந்த துஷ்டன் சட்டப்படியானது, கருணை நிராகரிக்கப்பட்டதுமான ஒரு தண்டனையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். டிரம்ஸீடன் வீரர்களை, விரிக்கப்பட்டிருந்த பசுந்தோலை, பார்வையாளர்களாக இருக்கக் கொடுத்து வைத்த மனிதர்களை, நீதியின் வாளை ஏந்தியிருந்த சிரச்சேதம் செய்பவனை அவன் பார்க்கச் செய்தேன். அவனைப் பார்த்து அதிசயித்து யாகப் என்னிடம் சொன்னான். ‘அது அபுகிர் உனது சகோதரனுக்கு நீதி வழங்கியவன். உனது உதவியில்லாமல் விஞ்ஞானத்தால் இந்த ரூபங்களை ஏற்படுத்தும் விதம் எனக்குத் தெரியப்படுத்தப்படும்போது உனது மரணத்தையும் நிச்சயிப்பவன்.’


அவன் கொல்லப்படப் போகும் மனிதனை முன்னால் கொண்டுவரச் சொன்னான். அது செய்யப்பட்டபோது, கொல்லப்படப்போகும் மனிதன் அந்த முகத்திரை அணிந்த விசேஷமான மனிதன் என்பதைக் கண்டு அக்கொடுங்கோலன் வெளிறினான். நீதி வழங்கப்படுவதற்குமுன், அத்திரையை அகற்றும்படி நான் பணிக்கப்பட்டேன். இதைக் கேட்டதும், நான் அவன் காலடியில் விழுந்து, ‘ஓ இக்காலத்தின் மன்னனே, இச் சகாப்தத்தின் மொத்தமும், சாரமுமானவனே, அவன் பெயரோ அவன் தந்தையின் பெயரோ, அவன் பிறந்த நகரத்தின் பெயரோ நமக்குத் தெரியாததால் இந்த உருவம் மற்றவற்றைப் போன்றதல்ல. நான் பதில் சொல்லியாக வேண்டிய ஓர் பாவத்திற்குள்ளாகும் பயத்தால், இந்த உருவ விஷயத்தில் நான் தலையிடத் துணியவில்லை’ என்று முறையிட்டேன்.


அந்த துஷ்டன் சிரித்தான். சிரித்து முடித்ததும், அப்படியொரு குற்றம் இருக்குமானால், இதைத் தனதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சத்யம் செய்தான். தனது வாளைக் கொண்டும், குரானைக் கொண்டும் சத்யம் செய்தான். இதன்பின், நான் அந்தக் கைதியின் அடையாளம் காட்டவும், பசுந்தோலில் சுற்றியிருக்கவும், அவன் முகத்திரையைக் கிழிக்கவும் கட்டளையிட்டேன். அப்படியே நடந்தன. கடைசியில் யாகப்பின் மிரண்ட கண்களால் அம்முகத்தைப் பார்க்க முடிந்தது - அது அவன் முகம். பயமும், பைத்தியமும் அவனைக் கவ்விக்கொண்டன. எனது திடமான கையின் மேல் அவனது நடுங்கும் கையை வைத்தேன். அவனது மரணச்சடங்கிற்குச் சாட்சியாகும்படி கட்டளையிட்டேன். அவன் தன் கண்களை அகற்றவோ, மையைக் கவிழ்த்தவோ முடியாத அளவுக்கு, அந்தக் கண்ணாடியோடு ஒன்றிப் போனான். குற்றவாளியின் கழுத்தில் வாள் விழும் காட்சியில் யாகப் எனது இரக்கத்தைத் தொடாத ஓர் சப்தத்தை முனங்கினான். தரையில் தடுமாறி விழுந்து இறந்தான்.


எல்லாம் அவன் மகிமை. அவன் எப்போதும் மன்னிப்பவன். அவன் கைகளில் இருக்கின்றன வரம்பற்ற குற்றங்களின், தீராத தண்டனைகளின் சாவிகள்.


- கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு


(தட்டச்சு செய்து உதவியவர் சென்ஷி)


இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு

THE MIRROR OF LINK
Translated by Andrew Hurley
from the book
Jorge Luis Borges - The Collected Fictions

History records that the cruelest of the governors of the Sudan was Yaqub the Afflicted, who abandoned his nation to the iniquities of Egyptian tax collectors and died in a chamber of the palace on the fourteenth day of the moon of Barmajat in the year 1842. There are those who insinuate that the sorcerer Abderramen al-Masmudi: (whose name might be translated "The Servant of Mercy") murdered him with a dagger or with poison, but a natural death is more likely-especially as he was known as "the Afflicted." Nonetheless, Capt. Richard Francis Burton spoke with this sorcerer in 1853, and he reported that the sorcerer told him this story that I shall reproduce here:

"It is true that I suffered captivity in the fortress ofYakub the Afflicted, due to the conspiracy forged by my brother Ibrahim, with the vain and perfidious aid of the black chieftains of Kordofan, who betrayed him. My brother perished by the sword upon the bloody pelt of justice, but I threw myself at the abominated feet of the Afflicted One and told him I was a sorcerer, and that if he granted me my life I would show him forms and appearances more marvellous than those of the fanusi jihal, the magic lantern. The tyrant demanded an immediate proof; I called for a reed pen, a pair of scissors, a large sheet of Venetian paper, an inkhorn, a chafing-dish with live charcoal in it, a few coriander seeds, and an ounce of benzoin. I cut the paper into six strips and wrote charms and invocations upon the first five; on the last I inscribed the following words from the glorious Qur'an: 'We have removed from thee thy veil, and thy sight is piercing.' Then I drew a magic square in Yakub's right palm and asked him to hold it out to me; into it, I poured a cirde of ink. I asked him whether he could see his face in the cirde, and he told me that he could see it dearly. I instructed him not to raise his eyes.I put the benzoin and the coriander seeds into the chafing-dish and therein also burned the invocations. I asked the Afflicted One to name the figure that he wished to see. He thought for a moment and told me that he wished to see a wild horse, the most beautiful creature that grazed upon Ihe meadows that lie along the desert. He looked, and he saw first green and II 'aceful fields and then a horse coming toward him, as graceful as a leopard .Ind with a white star upon its forehead. He then asked me for a herd of such horses, as perfect as the first, and he saw upon the horizon a long cloud of dust, and then the herd I sensed that my life was safe.

"Hardly had the sun appeared above the horizon when two soldiers entered my cell and conveyed me to the chamber of the Afflicted One, wherein I found awaiting me the incense, the chafing-dish, and the ink. Thus day by day did he make demands upon my skill, and thus day by day did I show to him the appearances of this world. That dead man whom I abominate held within his hand all that dead men have seen and all that living men see: the cities, climes, and kingdoms into which this world is divided, the hidden treasures of its center, the ships that sail its seas, its instruments of war and music and surgery, its graceful women, its fixed stars and the planets, the colors taken up by the infidel to paint his abominable images, its minerals and plants with the secrets and virtues which they hold, the angels of silver whose nutriment is our praise and justification of the Lord, the passing-out of prizes in its schools, the statues of birds and kings that lie with in the heart of its pyramids, the shadow thrown by the bull upon whose shoulders this world is upheld, and by the fish below the bull, the deserts of Allah the Merciful. He beheld things impossible to describe such as streets illuminated by gaslight and such as the whale that dies when it hears man's voice. Once he commanded me to show him the city men call Europe. I showed him the grandest of its streets and I believe that it was in that rushing flood
of men, all dressed in black and many wearing spectacles, that he saw for the first time the Masked One.

"From that time forth, that figure, sometimes in the dress of the Sudanese, some times in uniform, but ever with a veil upon its face, crept always into the visions. Though it was never absent, we could not surmise who it might be. And yet the appearances within the mirror of ink, at first momentary or unmoving, became now more complex; they would unhesitatingly obey my commands, and the tyrant could clearly follow them. In these occupations, both of us, it is true, sometimes became exhausted. The abominable nature of the scenes was another cause of weariness; there was nothing but tortures, garrotes, mutilations, the pleasures of the executioner and the cruel man.

"Thus did we corne to the morning of the fourteenth day of the mo on of Barmajat. The circle of ink had been poured into the palm, the benzoin sprinkled into the chafing-dish, the invocations burned. The two of us were alone. The Afflicted One commanded me to show him a just and irrevocable punishment, for that day his heart craved to see a death. I showed him soldiers with tambours, the stretched hide of a calf, the persons fortunate enough to look on, the executioner with the sword of justice. The Afflicted One marvelled to see this, and said to me: It is Abu Kir, the man that slew thy brother Ibrahim, the man that will close thy life when I am able to command the knowledge to convoke these figures without thy aid. He asked me to bring forth the condemned man, yet when he was brought forth the Afflicted One grew still, because it was the enigmatic man that kept the white cloth always before his visage. The Afflicted One commanded me that before the man was killed, his mask should be stripped from him. I threw myself at his feet and said: O king of time and substance and peerless essence of the century, this figure is not like the others, for we know not his name nor that of his fathers nor that of the city which is his homeland. Therefore, O king, I dare not touch him, for fear of committing a sin for which I shall be held accountable. The Afflicted One laughed and swore that he himself would bear the responsibility for the sin, if sin it was. He swore this by his sword and by the Qur'an. Then it was that I commanded that the condemned man be stripped naked and bound to the stretched hide of the calf and his mask removed from him. Those things were accomplished; the horrified eyes of Yakub at last saw the visage-which was his own face. In fear and madness, he hid his eyes. I held in my firm right hand his trembling hand and commanded him to look upon the ceremony of his death. He was possessed by the mirror; he did not even try to turn his eyes aside, or to spill out the ink.When in the vision the sword fell upon the guilty neck, he moaned and cried out in a voice that inspired no pity in me, and fell to the floor, dead.

"Glory to Him Who does not die, and Who holds with in His hand the two keys, of infinite Pardon and infinite Punishment."
(From Richard Francis Burton, The Lake Regions of Equatorial Africa)*

**********************
http://www.maamallan.com/2011/08/blog-post_22.html

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன்.

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

***

போர்ஹே மற்றும் நான் - இக்கதையைப் பற்றிய போர்ஹேவின் உரை.

இப்பிரபலமான கதை பழைய Jakyll and Hyde என்ற கதையின் உத்தியைக் கொண்டிருக்கிறது. அந்தக் கதையில் எதிர்ப்பு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ளது. என்னுடைய கதையில் காண்பவனும் காட்சியும் எதிராளிகள். அதிகமான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை எனக்கு நேரும் வேளையில், நான் எதை அனுபவிக்கிறேனோ அது வேறு யாருக்கோ நடந்துகொண்டிருப்பதாக நான் உணர்வேன். ஒரு இந்தியத் தத்துவத்தின்படி ‘நான்’ என்பது வெறுமனே ஒரு பார்வையாளன்; தான் தொடர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் தன்னை இனம் காண்பவன். நான் எழுதும்போது என்னுடைய சில விசேஷ சுபாவங்களை மட்டும் வலியுறுத்தி மற்றவற்றைப் புறக்கணிக்கிறேன். இந்த உண்மைதான் போர்ஹே ஒரு கற்பனை சிருஷ்டியென்று எனக்கு எண்ணத் தூண்டியது. பல கட்டுரைகளும் நூல்களும் அவனைப்பற்றி இருப்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.

மொழிபெயர்ப்பு: சத்யன்.

மீட்சி இதழ் 23 பக்கம் 25

Borges and I

The other one, the one called Borges, is the one things happen to. I walk through the streets of Buenos Aires and stop for a moment, perhaps mechanically now, to look at the arch of an entrance hall and the grill-work on the gate; I know of Borges from the mail and see his name on a list of professors or in a biographical dictionary. I like hourglasses, maps, eighteenth-century typography, the taste of coffee and the prose of Stevenson; he shares these preferences, but in a vain way that turns them into the attributes of an actor. It would be an exaggeration to say that ours is a hostile relationship; I live, let myself go on living, so that Borges may contrive his literature, and this literature justifies me. It is no effort for me to confess that he has achieved some valid pages, but those pages cannot save me, perhaps because what is good belongs to no one, not even to him, but rather to the language and to tradition. Besides, I am destined to perish, definitively, and only some instant of myself can survive in him. Little by little, I am giving over everything to him, though I am quite aware of his perverse custom of falsifying and magnifying things. Spinoza knew that all things long to persist in their being; the stone eternally wants to be a stone and the tiger a tiger. I shall remain in Borges, not in myself (if it is true that I am someone), but I recognize myself less in his books than in many others or in the laborious strumming of a guitar. Years ago I tried to free myself from him and went from the mythologies of the suburbs to the games with time and infinity, but those games belong to Borges now and I shall have to imagine other things. Thus my life is a flight and I lose everything and everything belongs to oblivion, or to him. I do not know which of us has written this page.
Translated by J. E. I.

******************
http://www.maamallan.com/2011/03/blog-post_29.html
நாடகக்காரி - ஆண்டன் ஷெக்காவ் - ருஷியா

தமிழில் - புதுமைப்பித்தன்

அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்து வந்தாள்.

அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் சகிக்க முடியவில்லை. கோல்ப்பக்கோவ், அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு மிகவும் மட்ட ரகமான போர்ட் ஒயின் பாட்டிலைக் காலி செய்ததினால், சிடுசிடு என்று பேசிக் கொண்டிருந்தான். இருவருக்குமே அன்று பேச்சில் லயிப்பில்லை. வெயில் தணிந்தால் வெளியே சென்று காற்று வாங்கிவிட்டாவது வரலாம் என்ற நினைப்புத்தான் இருவருக்கும்.

திடீரென்று வெளிக்கதவை யாரோ படபடவென்று தட்டி உடைத்தனர். கோல்ப்பக்கோவ், பக்கத்து நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டை எடுத்துக்கொண்டு, வேறு அறைக்குச் செல்லலாம் என்று எழுந்தான். அவன் முகக்குறி, "வெளியில் யார்?" என்று பாஷாவைக் கேட்பது போல் இருந்தது.

"தபால்காரன், அல்லது வேறே யாராவது நம்ம குட்டிகள்" என்றாள் பாஷா.

தபால்காரனாவது அல்லது பாஷாவின் ஸ்திரீ நண்பர்களாவது தன்னை அங்கு கண்டுகொள்வதை, கோல்ப்பக்கோவ் பொருட்படுத்தவில்லை. ஆனால், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருப்பதற்காகவே, துணிமணிகளைச் சேர்த்து வாரிக்கொண்டு, மற்றொரு அறைக்கு சென்றான்.

பாஷா முன் பக்கம் சென்று வெளிக் கதவைத் திறந்தாள்.

அவள் கதவைத் திறந்ததும், எதிரில் தான் முன்பின் அறியாத அந்நிய ஸ்திரீ நிற்பதைக் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்தாள். பாஷாவின் முன் நின்றவள் வாலிப நங்கை; அவளுடைய உடையிலும் நின்ற நிலையிலும் குடும்ப ஸ்திரீ என்று ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

வந்தவள், முகம் வெளிறிப் போயிருந்தது; 'மூசுமூசு' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அவள் நெடுந்தூரம் ஓடி வந்தவள் போல் தென்பட்டாள்.

"என்ன வேண்டும்?" என்றாள் பாஷா.

வந்தவள் உடனே பதில் சொல்லவில்லை. முன் ஒரு அடி எடுத்து வைத்து அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்பு சோர்ந்தவள் போல உள்ளே வந்து உட்கார்ந்தாள்; அவளது வெளிறிய உதடுகள் பேசுவதற்கு முயன்று அசைந்தன. ஆனால் அவளால் பேச முடியவில்லை.

நெடு நேரம் கழித்து வந்தவள் தனது சிவந்த கண்களால் பாஷாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். பின்பு, "என் புருஷன்; - அவர் இங்கு வந்தாரா?" என்றாள்.

"புருஷனா?..." என்று ஈனஸ்வரத்தில் எதிரொலித்தாள் பாஷா. அவளது கைகளும் கால்களும் குளிர்ந்து விறைத்தன.

"எந்த புருஷன்?" என்றாள் பாஷா மறுபடியும்.

"என் புருஷன் நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்" என்றாள் அந்த ஸ்திரீ.

"தெ...ரி...யா...து! அம்மா! நான் ஒருவருடைய புருஷனையும் பார்க்கவில்லை" என்றாள் பாஷா.

ஒரு வினாடி இருவரும் மௌனமாக இருந்தனர். அந்த அந்நிய ஸ்திரீ, தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து, விம்மிக்கொண்டுவரும் அழுகையைக் கைக்குட்டையால் அடக்க முயன்றாள். அவளது முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பாஷாவிற்கும் பயம் அதிகரித்தது. கல்லாய்ச் சமைந்தது போல் நின்றாள்.

"அவர் இங்கே இல்லையென்று சொல்லுகிறாயாக்கும்?" என்றாள் அவள் மறுபடியும். இப்பொழுது அவளது அழுகை அடங்கிவிட்டது; குரல் கணீரென்றது. உதட்டில் ஒருவிதமான புன்சிரிப்பு நிலவியது.

"நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்? ஒன்றும் தெரியவேயில்லையே!" என்றாள் பாஷா.

"சீ! நீ ஒரு மோசமான தரித்திரம் பிடித்த கழுதை!" என்றாள் வந்தவள்.

அவளது முகக் குறி பாஷாவை எப்படி வெறுக்கிறாள் என்பதைக் காண்பித்தது.

"நீ... நீ ஒரு மோசமான கழுதை! கடைசியாக உன் மூஞ்சிக்கி நேரே இதைச் சொல்லுவதற்குச் சமயம் கிடைத்ததே!"

பாஷாவிற்குப் புதிதாக வந்த ஸ்திரீ சொல்லுவது மனத்தில் தைத்தது. உண்மையிலேயே தான், மோசமாக, பார்ப்பதற்கு விகாரமாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. உப்பிய கன்னமும், அம்மை வடு நிறைந்த முகமும், என்ன சீவினாலும் பணியாது முகத்தில் வந்து விழும் தலை முடியும், பார்ப்பதற்கு விகாரமாகத்தான் இருக்கும் என்று அவள் மனத்தில் பட்டது. இதனால் வெட்கினாள். சிறிது ஒல்லியாக, நெற்றியில் வந்து விழாத கூந்தலுள்ளவளாக, முகத்தில் நிறைய பவுடர் அப்ப வேண்டாதவளாக இருந்தால், தானும் ஒரு குடும்ப ஸ்திரீ போல் பாவனை செய்ய முடியும் என்று நினைத்தாள். எதிரில் நிற்கும் அந்நிய ஸ்திரீயின் முன்பு நிற்கவும் வெட்கப்பட்டாள் பாஷா.

"என் புருஷன் எங்கே! அவர் இங்கு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையே கிடையாது. ஆனால் ஒன்று சொல்லுகிறேன், கேள். பணம் காணாமற் போய்விட்டது. அதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரைக் கைது செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இவ்வளவும் உன் வேலைதான், தெரிந்ததா?" என்றாள் கோல்ப்பக்கோவின் மனைவி.

அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து அங்குமிங்கும் உலாவினாள். அவளைப் பார்ப்பதற்கே பாஷாவிற்குப் பயமாக இருந்தது. அவளுக்கு இன்னதென்றே புரியவில்லை.

"இன்று அவரைக் கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்து விடுவார்கள்!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ். அதை நினைக்கும் பொழுதே அவளுக்குத் துக்கமும் கோபமும் நெஞ்சையடைத்தன. "அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கினது யார்? மோசமான மூதேவி! பண ஆசை பிடித்த ஜடமே!". அவள் மூக்கும் உதடும் தாங்க முடியாத துர்நாற்றத்தை ஏற்றதுபோல நெளிந்து மடிந்தன. "எனக்கு வேறே விதியில்லை! கேட்கிறாயா? எனக்கு வேறே வழியில்லை. இப்பொழுது உன் பக்கத்திலேதான் பலம் இருக்கிறது. ஆனால் உதவியில்லாத என் குழந்தை குட்டிகளைப் பதுகாக்கத் தெய்வம் இருக்கிறது! அவருக்குத் தெரியும். அவர் உனக்குத் தகுந்த கூலி கொடுப்பார்! அனாதை விட்ட கண்ணீர் நிலத்தில் மறையாது. காலம் வரும். அப்பொழுது நீ என்னை நினைப்பாய்!"

பிறகு அந்த அறையில் நிசப்தம் குடிகொண்டது. ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ் கையை நெறித்துக்கொண்டு அறையில் அங்கும் இங்கும் நடந்தாள். பாஷா, பயத்தால் அப்படியே விறைத்துப் போய், தலையில் அப்பொழுதே இடிவிழுமோ என்று நடுங்கி நின்றாள்.

"எனக்கு ஒன்றும் தெரியாது அம்மா!" என்றாள் பாஷா. இந்தக் கோடையிடி போன்ற சூடான வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து, குலுங்கிக் குலுங்கிக் கதறினாள்.

"புளுகாதே! எனக்கு எல்லாம் தெரியும்! ரொம்பக் காலமாகத் தெரியும்! போன மாசம் முழுவதும் இங்கேதான் வந்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும்" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்; அவளது கண்கள் தணல் வீசின.

"ஆமாம்! அதற்கென்ன? எத்தனையோ பேர் வருகிறார்கள்! நான் என்ன கையைப் பிடித்தா இழுக்கிறேன்! அது அவரவர்கள் இஷ்டம்!" என்றாள் பாஷா.

"நான் சொல்வதைக் கேள்! ஆபீசில் பணத்தைக் காணவில்லை. அவர் பணத்தைத் திருடிவிட்டார். தரித்திரம் பிடித்த உன் மூஞ்சிக்காக அவர் ஆபீசிலே குற்றத்தைச் செய்திருக்கிறாரே! உனக்கு நியாயம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஒன்றும் கிடையாது. உன் வாழ்க்கையே மற்றவர்களைக் கஷ்டப்படுத்டுவதுதான். ஆனால் கொஞ்சமாவது இரக்கம் இல்லாமல் உன் நெஞ்சு வெந்து உலர்ந்து போயிருக்காது! அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் உண்டு. அவரைத் தண்டித்து நாடு கடத்திவிட்டால் (ரஷ்யாவில் ஜாரரசன் ஆட்சியில் திருட்டுக் குற்றத்திற்காகவும் ஸைபீரியா என்ற குளிர்ப் பாலைவனத்திற்கு நாடு கடத்திவிடுவார்கள்) அவர் குழந்தைகளும் நானும் தெருவிலே கிடந்து பட்டினியால் மடிய வேண்டியதுதான். அதை உணர்ந்து கொள்! அவர்களை இந்தக் கதியிலிருந்து தப்புவிக்க ஒரே வழியிருக்கிறது. இன்றைக்கு நான் 900 ரூபிள் (ருஷிய நாணயம்) சம்பாதித்தால் அவரை விட்டுவிடுவார்கள். 900 ரூபிள்கள் தான்!"

"என்ன, 900 ரூபிள்களா?... எனக்குத் தெரியாது... எடுக்கவில்லை" என்றாள் பாஷா.

"நான் உன்னிடம் 900 ரூபிள்கள் கேட்க வரவில்லை, உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும்... மேலும் உன் காசு எனக்கு வேண்டாம்! நான் கேட்பது வேறு! உன்னைப் போன்ற பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் விலையுயர்ந்தவற்றைப் பரிசளிப்பார்கள். என் புருஷன் உனக்குக் கொடுத்தவைகளை மட்டிலும் திருப்பிக் கொடுத்துவிடு!"

"அம்மா! உன்னுடைய புருஷன் எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை" என்று பாஷா கதறினாள். அப்பொழுதுதான் அவளுக்குச் சிறிது புரிய ஆரம்பித்தது.

"கொடுத்த பணம் எல்லாம் எங்கே? அவர் பணத்தையும், என் பணத்தையும் எங்கு கொண்டு தொலைத்தார்? கேள்! உன் காலில் விழுந்து பிச்சையாகக் கேட்கிறேன். கோபத்திலே கண் தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்துக்கொள். நீ என்னை வெறுப்பாய்; அது எனக்கு தெரியும். ஆனால் என் நிலைமையை யோசித்து, கொஞ்சம் இரங்கு. காலில் விழுந்து கேட்கிறேன், அவர் கொடுத்த சாமான்களை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு."

"உம்" என்று தோளை குலுக்கினாள் பாஷா.

"உனக்குக் கொடுக்கறதில் சந்தோஷந்தான். கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன், உன் புருஷன் எனக்கு வெகுமதி கொடுத்தது கிடையாது. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுகிறேன். என்னை நம்பு; இருந்தாலும் நீ சொல்வதிலும் கொஞ்சம் உண்மையிருக்கிறது. அவர் ஒன்றிரண்டு சாமான்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவைகளை வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன்," என்றாள் பாஷா.

உடனே மேஜையைத் திறந்து, அதிலிருந்து ஒரு ஜதை தங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள்.

"இந்தா!" என்று வந்தவளிடம் அவற்றைக் கொடுத்தாள்.

கோல்ப்பக்கோவ் மனைவியின் முகம் சிவந்து, உதடுகள் துடித்தன. பாஷாவின் நடத்தையால் அவளுக்குக் கோபம் வந்தது.

"என்னிடம் எதைக் கொடுக்கிறாய்? நான் உன்னிடம் தானம் கேட்க வரவில்லை. நியாயமாக உனக்குப் பாத்தியதை இல்லாத, உன் சந்தர்ப்பத்தை வைத்து அவரிடம் கசக்கிப் பிடுங்கிய நகைகளைக் கேட்கிறேன். அன்றைக்கு வியாழக்கிழமை, என் புருஷனுடன் துறைமுகத்திற்கு வந்தாயே; அப்பொழுது நீ போட்டுக்கொண்டிருந்த விலையுயர்ந்த புரூச்சுகளும் கை வளைகளும் எங்கே? ஒன்று மறியாதவள் போல் என்னிடம் பாசாங்கு பண்ணாதே! கடைசியாகக் கேட்கிறேன். அந்த நகைகளைக் கொடுப்பாயா, மாட்டாயா?"

"நல்ல வேடிக்கைக்காரியாக இருக்கிறாய்!"

இப்பொழுது பாஷாவிற்கும் சிறிது கோபம் வந்தது.

"உனது நிக்கோலாய் பெட்ரோவிச்சிடமிருந்து ஒரு நகையாவது நான் பெற்றதில்லை. அவன் வரும்பொழுதெல்லாம் பட்சணந்தான் வாங்கி வருவான்."

"பட்சணமா?" என்று சிரித்தாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

"வீட்டிலே குழந்தைகளுக்கு வயிற்றிற்கு ஒன்றும் கிடையாது. பட்சணமா உனக்கு; நன்றாக இருக்கிறது? அவர் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க முடியுமா, முடியாதா?"

பதில் ஒன்றும் பெறாததினால், அவள் மௌனமாக உட்கார்ந்து யோசித்தாள். கண்கள் வெறிச்சென்று பார்த்தபடி இருந்தன.

"இனி என்ன செய்வது? நான் 900 ரூபிள் சம்பாதிக்காவிட்டால் அவர் கதி அதோகதிதான்... பின்... குழந்தைகள், நான்... எல்லோருக்கும் அந்தக் கதிதான்! அவளைக் கொல்லட்டுமா? காலில் விழட்டுமா?" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

அவளுக்கு அழுகை பொருமிக்கொண்டு வந்தது. கைக்குட்டையை எடுத்து வாயை அமுக்கிக் கொண்டாள்.

விம்மல்களுக்கிடையே, "நான் உன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதான் என் புருஷனை நாசப்படுத்தி விட்டாய். அவரைக் காப்பாற்று! அவர் மீது இரக்கமில்லையானால் இந்தக் குழந்தைகளுக்காவது கொஞ்சம் தயவு பண்ணு! குழந்தைகள் உனக்கு என்ன செய்தன?"

குழந்தைகள் ஆதரவற்றுப் பசியால் தெருவில் நின்று கதறுவதுபோல் பாஷாவின் மனக்கண் முன்பு தோன்றியது. குழந்தைகளை நினைத்ததும் பாஷாவிற்கும் துக்கம் வந்தது. அவளும் விம்மியழுதாள்.

"என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் மோசமானவள், நிக்கோலாய் பெட்ரோவிச்சை நாசப்படுத்தியதாகச் சொல்லுகிறாய்! சத்தியமாக, தெய்வத்தின் மீது ஆணையாக சொல்லுகிறேன் - அவரிடமிருந்து நான் ஒன்றும் பெற்றது கிடையாது. எங்கள் நாடகக் கம்பெனியில் ஒரு பெண்ணைத்தான் பணக்காரன் ஒருவன் வைத்திருக்கிறான்; மற்றவர்கள் எல்லாருக்கும் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டம்! நிக்கோலாய் பெட்ரோவிச் படித்தவர், மரியாதைக்காரர், பெரிய மனிதர். அதனால் அவரை வரவேற்றேன். பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் வரவேற்பளிப்பது எங்கள் கடமை."

"நான் அந்த நகைகளைக் கேட்கிறேன். அவற்றைக் கொடு. நான் உன் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறேனே. சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டுமானாலும் செய்கிறேன்!"

அவள் குனிவதைக் கண்டு பாஷா பயந்து வீரிட்டாள். இந்தத் தெய்வம் போன்ற ஸ்திரீ நாடகக்காரியின் காலில் விழுவதால் பன்மடங்கு உயர்ந்து விளங்குவதாக மனத்தில் நினைத்தாள்.

"சரி இந்தா நான் கொடுத்து விடுகிறேன்!" என்று பாஷா கண்ணைத் துடைத்துக் கொண்டு மேஜையண்டை ஓடினாள்.

"இந்தா! ஆனால், இவற்றை நிக்கோலாய் பெட்ரோவிச் கொடுக்கவில்லை! வேறொரு பெரிய மனிதர் தந்தார்!" என்று மேஜையுள்ளிருந்த வைர புரூச்சையும், பவள மாலையையும், மோதிரம், கை வளையல் முதலியவற்றையும் எடுத்துக்கொடுத்தாள்.

"இந்தா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்! ஆனால் இவைகளை உன் புருஷன் கொடுக்கவில்லை. இவைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பணக்காரராகுங்கள்!" பாஷாவிற்கு, அவள் 'காலில் விழுவேன்' என்றதில் பெருத்த கோபம். "நியாயமாக நீ அவர் மனைவியாக இருந்தால், இவைகளை நீயே கட்டாயம் எடுத்துக்கொண்டு போக வேண்டும்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! அப்படித்தான்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! நான் அவரைக் கூப்பிடவில்லை. அவராக வந்தார்!"

கண்களில் பார்வையை மறைக்கும் கண்ணீர் வழியாகக் கொடுக்கப்பட்ட நகைகளைக் கவனித்து, "இன்னும் பாக்கியிருக்கிறது. இங்கிருப்பவை 500 ரூபிள் கூடப் பெறாது!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.

உடனே பாஷா மேஜையிலிருந்த தங்கக் கைக் கடிகாரம், சிகரெட் பெட்டி, பொத்தான்கள் எல்லாவற்றையும் எடுத்து எறிந்து, "இவ்வளவுதான்! இனி வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. வேண்டுமானால் சோதனை போட்டுக் கொள்ளு!" என்றாள்.

ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ், ஒரு பெரிய பெருமூச்செறிந்து, நகைகளை எல்லாம் கைக்குட்டையில் சேர்த்து முடிந்து கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாது, வெளியே சென்று விட்டாள். உள் கதவு திறந்தது. கோல்ப்பக்கோவ் அங்கு வந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. கசப்பு மருந்தை விழுங்கியவன் போல் தலையை அசைத்துக் கொண்டு நின்றான். அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.

"நீ எனக்கு என்ன கொடுத்தாய்? எப்பொழுதுதான் வெகுமதி கேட்பதற்கு அனுமதித்தாய்" என்று பாஷா அவன் மீது சீறி விழுந்தாள்.

"வெகுமதி! அதைப் பற்றி இப்பொழுதென்ன? தெய்வமே! உன் காலிலா அவள் விழ வேண்டும்!"

"நீ எனக்கு என்ன வெகுமதி கொடுத்தாய் என்று கேட்கிறேன்" என்று பாஷா மறுபடியும் சீறினாள்.

"தெய்வமே! பெருமையையும் மதிப்பையும் விட்டுவிட்டு இவள் காலில் விழவா! நானல்லவோ அதற்குக் காரணம். இவ்வளவையும் நான் அனுமதித்தேனே!"

கோல்ப்பக்கோவ், தன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு, வேதனையால் முனகினான்.

"இதற்கு மன்னிப்பு உண்டா? என்னால் என்னை மன்னித்துக் கொள்ள முடியாது. கிட்ட வராதே! மூதேவி" என்று பாஷாவை உதறித் தள்ளிவிட்டு, "உன் காலிலா விழ வேண்டும்! உன் காலில்! ஐயோ தெய்வமே! உன் காலில்" என்று முனகிக்கொண்டே, அவசர அவசரமாக உடுத்திக் கொண்டு, கதவைத் திறந்து வெளியேறினான்.

பாஷா கீழே விழுந்து புரண்டு ஓலமிட ஆரம்பித்தாள். அவசரத்தில் முட்டாள்தனமாக நகைகளைக் கொடுத்தற்காக வருத்தப்பட்டுக் கொண்டாள். அவளை அவள் மனமே இடித்தது. மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது. அதை நினைத்துக் கொண்டும் இன்னும் அதிகமாக ஓலமிட்டு அழுதாள்.

*************
தட்டச்சு செய்த ஷென்ஷிக்கு நன்றி.



[From The Chorus Girl and Other Stories by Anton Chekhov, translated from the Russian by Constance Garnett. New York: The Macmillan Company, March, 1920.]

The Chorus Girl
By Anton Chekhov

ONE day when she was younger and better-looking, and when her voice was stronger, Nikolay Petrovitch Kolpakov, her adorer, was sitting in the outer room in her summer villa. It was intolerably hot and stifling. Kolpakov, who had just dined and drunk a whole bottle of inferior port, felt ill-humoured and out of sorts. Both were bored and waiting for the heat of the day to be over in order to go for a walk.

All at once there was a sudden ring at the door. Kolpakov, who was sitting with his coat off, in his slippers, jumped up and looked inquiringly at Pasha.

"It must be the postman or one of the girls," said the singer.

Kolpakov did not mind being found by the postman or Pasha's lady friends, but by way of precaution gathered up his clothes and went into the next room, while Pasha ran to open the door. To her great surprise in the doorway stood, not the postman and not a girl friend, but an unknown woman, young and beautiful, who was dressed like a lady, and from all outward signs was one.

The stranger was pale and was breathing heavily as though she had been running up a steep flight of

"What is it?" asked Pasha.

The lady did not at once answer. She took a step forward, slowly looked about the room, and sat down in a way that suggested that from fatigue, or perhaps illness, she could not stand; then for a long time her pale lips quivered as she tried in vain to speak.

"Is my husband here?" she asked at last, raising to Pasha her big eyes with their red tear-stained lids.

"Husband?" whispered Pasha, and was suddenly so frightened that her hands and feet turned cold. "What husband?" she repeated, beginning to tremble.

"My husband,, . . Nikolay Petrovitch Kolpakov."

"N . . . no, madam. . . . I . . .I don't know any husband."

A minute passed in silence. The stranger several times passed her handkerchief over her pale lips and held her breath to stop her inward trembling, while Pasha stood before her motionless, like a post, and looked at her with astonishment and terror.

"So you say he is not here?" the lady asked. this time speaking with a firm voice and smiling oddly.

"I . . . I don't know who it is you are asking about."

"You are horrid, mean, vile . . ." the stranger muttered, scanning Pasha with hatred and repulsion. "Yes, yes . . . you are horrid. I am very, very glad that at last I can tell you so!"

Pasha felt that on this lady in black with the angry eyes and white slender fingers she produced the impression of something horrid and unseemly, and she felt ashamed of her chubby red cheeks, the pock-mark on her nose, and the fringe on her forehead, which never could be combed back. And it seemed to her that if she had been thin, and had had no powder on her face and no fringe on her forehead, hen she could have disguised the fact that she was not "respectable," and she would not have felt so frightened and ashamed to stand facing this unknown, mysterious lady.

"Where is my husband?" the lady went on. "though I don't care whether he is here or not, but I ought to tell you that the MONEY has been missed, and they are looking for Nikolay Petrovitch, . . . They mean to arrest him. That's your doing!" The lady got up and walked about the room in great excitement. Pasha looked at her and was so frightened that she could not understand.

"He'll be found and arrested to-day," said the lady, and she gave a sob, and in that sound could be heard her resentment and vexation. "I know who has brought him to this awful position! Low, horrid creature! Loathsome, mercenary hussy!" The lady's lips worked and her nose wrinkled up with disgust. "I am helpless, do you hear, you low woman? . . . I am helpless; you are stronger than I am, but there is One to defend me and my children! God sees all! He is just! He will punish you for every tear I have shed, for all my sleepless nights! The time will come; you will think of me! . . ."

Silence followed again. The lady walked about the room and wrung her hands, while Pasha still gazed blankly at her in amazement, not understanding and expecting something terrible.

"I know nothing about it, madam," she said, and suddenly burst into tears.

"You are lying! " cried the lady, and her eyes flashed angrily at her. "I know all about it! I've known you a long time. I know that for the last month he has been spending every day with you!"

"Yes. What then? What of it? I have a great many visitors, but I don't force anyone to come. He is free to do as he likes."

"I tell you they have discovered that money is missing! He has embezzled money at the office! For the sake of such a . . . creature as you, for your sake he has actually committed a crime. Listen," said the lady in a resolute voice, stopping short, facing Pasha. "You can have no principles; you live simply to do harm--that's your object; but one can't imagine you have fallen so low that you have no trace of human feeling left! He has a wife, children. . . . If he is condemned and sent into exile we shall starve, the children and I. . . . Understand that! And yet there is a chance of saving him and us from destitution and disgrace. If I take them nine hundred roubles to-day they will let him alone. Only nine hundred roubles!"

"What nine hundred roubles?" Pasha asked softly. "I . . . I don't know. . . . I haven't taken it."

"I am not asking you for nine hundred roubles, . . . You have no MONEY, and I don't want your money. I ask you for something else. . . . Men usually give expensive things to women like you. Only give me back the things my husband has given you!"

"Madam, he has never made me a present of anything!" Pasha wailed, beginning to understand.

"Where is the money? He has squandered his own and mine and other people's. . . . What has become of it all? Listen, I beg you! I was carried away by indignation and have said a lot of nasty things to you, but I apologize. You must hate me, I know, but if you are capable of sympathy, put yourself in my position! I implore you to give me back the things!"

"H'm!" said Pasha, and she shrugged her shoulders. "I would with pleasure, but God is my witness, he never made me a present of anything. Believe me, on my conscience. However, you are right, though," said the singer in confusion, "he did bring me two little things. Certainly I will give them back, if you wish it."

Pasha pulled out one of the drawers in the toilet-table and took out of it a hollow GOLD bracelet and a thin ring with a ruby in it.

"Here, madam!" she said, handing the visitor these articles.

The lady flushed and her face quivered. She was offended.

"What are you giving me?" she said. "I am not asking for charity, but for what does not belong to you . . . what you have taken advantage of your position to squeeze out of my husband . . . that weak, unhappy man. . . . On Thursday, when I saw you with my husband at the harbour you were wearing expensive brooches and bracelets. So it's no use your playing the innocent lamb to me! I ask you for the last time: will you give me the things, or not?"

"You are a queer one, upon my word," said Pasha, beginning to feel offended. "I assure you that, except the bracelet and this little ring, I've never seen a thing from your Nikolay Petrovitch. He brings me nothing but sweet cakes."

"Sweet cakes!" laughed the stranger. "At home the children have nothing to eat, and here you have sweet cakes. You absolutely refuse to restore the presents?"

Receiving no answer, the lady sat, down and stared into space, pondering.

"What's to be done now?" she said. "If I don't get nine hundred roubles, he is ruined, and the children and I am ruined, too. Shall I kill this low woman or go down on my knees to her?"

The lady pressed her handkerchief to her face and broke into sobs.

"I beg you!" Pasha heard through the stranger's sobs. "You see you have plundered and ruined my husband. Save him. . . . You have no feeling for him, but the children . . . the children . . . What have the children done?"

Pasha imagined little children standing in the street, crying with hunger, and she, too, sobbed.

"What can I do, madam?" she said. "You say that I am a low woman and that I have ruined Nikolay Petrovitch, and I assure you . . . before God Almighty, I have had nothing from him whatever, . . . There is only one girl in our chorus who has a rich admirer; all the rest of us live from hand to mouth on bread and kvass. Nikolay Petrovitch is a highly educated, refined gentleman, so I've made him welcome. We are bound to make gentlemen welcome."

"I ask you for the things! Give me the things! I am crying. . . . I am humiliating myself. . . . If you like I will go down on my knees! If you wish it!"

Pasha shrieked with horror and waved her hands. She felt that this pale, beautiful lady who expressed herself so grandly, as though she were on the stage, really might go down on her knees to her, simply from pride, from grandeur, to exalt herself and humiliate the chorus girl.

"Very well, I will give you things! " said Pasha, wiping her eyes and bustling about. "By all means. Only they are not from Nikolay Petrovitch, . . . I got these from other gentlemen. As you please. . ."

Pasha pulled out the upper drawer of the chest, took out a diamond brooch, a coral necklace, some rings and bracelets, and gave them all to the lady.

"Take them if you like, only I've never had anything from your husband. Take them and grow rich," Pasha went on, offended at the threat to go down on her knees. "And if you are a lady . . . his lawful wife, you should keep him to yourself. I should think so! I did not ask him to come; he came of himself."

Through her tears the lady scrutinized the articles given her and said:

"This isn't everything, . . . There won't be five hundred roubles' worth here."

Pasha impulsively flung out of the chest a GOLD watch, a cigar-case and studs, and said, flinging up her hands:

"I've nothing else left. . . . You can search!"

The visitor gave a sigh, with trembling hands twisted the things up in her handkerchief, and went out without uttering a word, without even nodding her head.

The door from the next room opened and Kolpakov walked in. He was pale and kept shaking his head nervously, as though he had swallowed something very bitter; tears were glistening in his eyes.

"What presents did you make me?" Pasha asked, pouncing upon him. "When did you, allow me to ask you?"

"Presents . . . that's no matter!" said Kolpakov, and he tossed his head. "My God! She cried before you, she humbled herself. . ."

"I am asking you, what presents did you make me?" Pasha cried.

"My God! She, a lady, so proud, so pure. . . . She was ready to go down on her knees to . . . to this wench! And I've brought her to this! I've allowed it!"

He clutched his head in his hands and moaned.

"No, I shall never forgive myself for this! I shall never forgive myself! Get away from me . . . you low creature!" he cried with repulsion, backing away from Pasha, and thrusting her off with trembling hands. "She would have gone down on her knees, and . . . and to you! Oh, my God!"

He rapidly dressed, and pushing Pasha aside contemptuously, made for the door and went out.

Pasha lay down and began wailing aloud. She was already regretting her things which she had given away so impulsively, and her feelings were hurt. She remembered how three years ago a merchant had beaten her for no sort of reason, and she wailed more loudly than ever.

*****************
*http://www.maamallan.com/2011/10/blog-post_06.html

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக் கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

மதிற் சுவரைத் தொடர்ச்சியாகக் கட்டியிருந்தாலோ அல்லது இரண்டு பகுதிகளையுமாவது தொடர்ச்சியாகக் கட்டி முடித்திருந்தாலோ எல்லா வகையிலும் வசதியாக இருந்திருக்கும் என்று ஒருவன் முதலில் யோசிக்கலாம். உலகளாவிய ரீதியில் பாராட்டப்படுவது போலவும் அறியப்படுவதுபோலவும், வடக்கிலுள்ள மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் மதில் திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியான கட்டுமானம் இல்லாமல் மதிலால் எப்படிப் பாதுகாப்பைத் தரமுடியும்? அப்படிப் பட்ட மதிலால் பாதுகாப்புத் தர முடியாது என்பது மட்டுமல்ல அதில் நிரந்தரமான ஆபத்தும் இருக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்திலிருக்கும் இந்த மதில் சுவரை அந்த நாடோடிகளால் எளிதில் அடுக்கடுக்காகத் தகர்க்க முடியும். இந்த இனத்தவர்கள் கட்டுமான வேலைகளில் அதிகக் கவனமுள்ளவர்கள்,வெட்டுக் கிளிகளைப்போல நம்ப முடியாத வேகத்தில் தங்களுடைய தங்குமிடங்களை மாற்றிக் கொண்டி ருப்பவர்கள் என்பதால்,கட்டுமானக் காரர்களான எங்களை விட மதில் நிர்மாண முன்னேற்றத்தைப் பற்றி மிகவும் தெளிவான அறிவு ஒருவேளை அவர்களுக்கு இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மதிலின் கட்டுமான வேலைகளை வேறு எந்த வகையிலும் தொடர முடியாமலிருந்தது. இது புரிய வேண்டுமென்றால் கீழே சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். மதிற் சுவர் நூற்றாண்டுக் காலங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஆகவே, கட்டுமானத்தில் முழுக் கவனமும் அறியப்படும் எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் கூட்டத்துக்கும் உரிய கட்டடக் கலை அறிவின் பயன்பாடும் மதிலை எழுப்புகிறவர்களிடம் தன்னலமில்லாத பொறுப்புணர்வும் இருப்பது இந்த வேலைக்குத் தவிர்க்க இயலாதது. சிறு வேலைகளுக்காகச் சாதாரண ஆட்களிலிருந்து அப்பாவிகளையும் பெண்களையும் சிறுவர்களையும் அதிகமான தினக் கூலிக்கு அமர்த்தலாம் என்பது சரிதான். தினக் கூலிக்காரர்கள் நான்கு பேரை மேற்பார்வையிடுவதற்குக் , கட்டடக் கலையில் விற்பன்னரான ஒருவர் தேவைப்பட்டார். ஒப்புக் கொண்ட வேலையை முறையாகச் செய்பவரும் அதில் முழுமையாக ஈடுபாடு கொள்பவருமான ஒருவர் கட்டுமானப் பணிகளுக்குத் தேவை. ஆனால் அப்படியான ஆட்கள் அதிகமில்லை. இருந்தும் அதுபோன்றவர்களூக்கான தேவை அதிகமாக இருந்தது.

இந்தப் பணியை ஆலோசனையில்லாமல் ஒப்புக் கொள்ளவில்லை. முதல் கல் நாட்டப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, கட்டடக் கலை, குறிப்பாகக் கல் தச்சு, ஞானத்தின் மிகவும் முதன்மையான துறையாக, மதில் கட்டப்பட வேண்டிய சீனப் பகுதி முழுவதும் பாராட்டப்பட்டிருந்தது. இதனோடு கொண்ட தொடர்பிலிருந்துதான் மற்ற கலைகளூம் அங்கீகாரம் பெற்றன. சரியாகக் காலூன்றி நிற்கக் கூடத் தெரியாத சிறுவர்களான நாங்கள், உருண்டைக் கற்களால் ஆசிரியரின் பூந்தோட்டத்துக்கு மதிற்சுவர்போல ஒன்றை எழுப்ப வேண்டும் என்று அவர் போட்ட கட்டளைக்குப் கீழ்ப்படிந்து பூந்தோட்டத்தில் நிற்பதை என்னால் இப்போதும் துல்லியமாக நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆசிரியர் அவருடைய தளர்ந்த நீள் அங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு மதிற் சுவரை நோக்கி ஓடி வந்து அதை உதைத்துத் தள்ளினார். நேர்த்தியில்லாத எங்கள் வேலைக்காக எங்களைக் கடுமையாகத் திட்டினார். நாங்கள் அழுது கொண்டே பெற்றோரைத் தேடி நாலாப் பக்கமாக ஓடினோம். ஒரு சாதாரண சம்பவம்தான். ஆனால் அது அந்தக் காலஉற்சாகத்தின் குறிப்பிடத் தகுந்த செயலாக இருந்தது.

இருபதாம் வயதில், நான் கீழ்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்த சமயத்தில்தான் மதில் சுவரின் கட்டுமான வேலைகள் தொடங்கின என்பதால் நான் அதிருஷ்டசாலி. நான் அதிருஷ்டசாலி என்று சொல்லக் காரணம், கிடைக்கக் கூடியவற்றுள் மிகவும் உன்னதமான கலாச்சாரத்தில் பட்டம் பெற்ற ஏராளமானவர்கள் பல வருடங்களுக்குப் பிறகும் அவர்களுடைய அறிவால் செய்யக் கூடிய எதையும் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் பிரம்மாண்டமான கட்டடக் கலைத் திட்டங்களுடன் திரிந்தார்கள்; ஆயிரக் கணக்கானவர்கள் அவநம்பிக்கையில் மூழ்கினார்கள். ஆனால். கடைசியில் மேற்பார்வையாளர் பணிக்கு நியமிக்கப்பட்டு வேலை செய்ய வந்தவர்கள், ஒருவேளை தாழ்ந்த பதவியாக இருந்தும் கூட வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். மண்ணில் பாவிய முதல் கல்லுடன் தாங்களும் மதில் சுவரின் பகுதியே என்று நினைத்தவர்களாக இருந்தார்கள். மதிற் சுவர் நிர்மாணத்தைப் பற்றிச் சிந்திப்பதை முடிக்காமலிருந்ததும் அதைப் பற்றி மேலும் சிந்தித்ததும் அவர்களாகவே இருந்தார்கள். நிச்சயமாக இதுபோன்ற கல் தச்சர்களுக்குத் தங்களுடைய பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே இருக்கவில்லை. மதிலைக் குற்றம் குறையில்லாமல் அதன் முழு வடிவத்தில் பார்த்து விட வேண்டும் என்ற பொறுமையின்மையும் இருந்தது. தினக் கூலிக்காரர்களிடம் இந்தப் பொறுமையின்மை இல்லை. ஏனெனில்,அவர்களுடைய அக்கறை கூலியில் மட்டுமே இருந்தது. உயர் நிலையிலிருந்த மேலதிகாரிகளாலும் இடை நிலையிலிருந்த மேற்பார்வையாளர்களாலும் நிர்மாணத்தின் வேகமான முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. அதனால் அவர்களால் தங்களுடைய தன்னம்பிக்கையை உய்ர்த்திக் காட்ட முடிந்தது. ஆனால், அவர்கள் செய்யும் சாதாரணமான பணியைப் பொருத்து மிக உயர்ந்த அறிவுத் திறனுள்ள சிறிய மேற்பார்வையாளர்களை உற்சாகமூட்ட வேறு வழிகளைத் தேடவேண்டியிருந்தது. உதாரணமாக, வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான காதங்கள் தாண்டியிருக்கும் ஆள் வாசமில்லாத மலைப் பிரதேசங்களில் மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக, ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கிக்கொண்டு அவர்கள் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீண்ட வாழ்க்கைக்கு மத்தியில் முடிவை நெருங்கவே செய்யாத அதுபோன்ற கடின உழைப்பு அவர்களை ஏமாற்றத்தில் தள்ளி விடும். அதற்கெல்லாம் அப்பால் அவர்களுடைய செயலூக்கத்தைக் குறைத்து விடும். இந்தக் காரணங்களால்தான் பகுதி பகுதியான கட்டுமானம் போதும் என்று தீர்மானித்தார்கள். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குள் ஐநூறு காதம் கட்டி முடிக்கவேண்டிருந்தது. இந்தச் சமயத்துக்குள் மேற்பார்வையாளர்களுக்கு தங்கள் மேலும் மதில் மேலும் உலகத்தின் மேலுமுள்ள எல்லா நம்பிக்கைகளும் காணாமற் போயிருக்கும். இந்தக் காரணத்தால் மதிற் சுவரின் ஆயிரம் காத நீளம் கட்டி முடிக்கப்பட்டதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கும்போதே அவர்கள் தொலைவிடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். பயணத்துக்கு இடையிடையே அங்குமிங்குமாக மதிலின் பூர்த்தி செய்யப்பட்ட பாகங்களைப் பார்த்தார்கள்; மேலதிகாரிகளின் அதிகாரபூர்வமான இருப்பிடங்களைக் கடந்து போனார்கள்; வெகுமதிகள் வழங்கப்பட்டார்கள்; புதிய தொழிலாளர் குழுக்கள் உற்சாகத் துள்ளலுடன் வருவதைக் கேட்டார்கள்;
மதிலுக்குச் சாரம் கட்டுவதற்காக மரங்கள் வெட்டி அடுக்கப்படுவதைப் பார்த்தார்கள்; மதிற் சுவர் கட்டி முழுமையாக்கப்படப் பிரார்த்தனை செய்யும் விசுவாசிகளின் பிரார்த்தனை மந்திரங்கள் ஒலிப்பதைக் கேட்டார்கள். இவையெல்லாம் அவர்களுடைய பொறுமையின்மையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தின. அவரவர் வீடுகளின் அமைதியான குடும்ப வாழ்க்கையும் ஓய்வும் அவர்களை சாந்தப்படுத்தின. அவர்களுடைய தகவல்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தவர்களின் பணிவான நடத்தையும் அமைதியானவர்களும் சாதுக்களுமான மக்களின் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையும் அவர்களுடைய வேகத்தை மீண்டும் முடுக்கி விட்டன. பின்னர், நாட்டின் பெருஞ்சுவர் கட்டுமானப் பணியில் மீண்டும் ஈடுபடுவதற்கான விருப்பதை அடக்க முடியாத அவர்கள், எதையும் நம்பிவிடும் குழ்ந்தைகளைபோலத் தங்கள் குடும்பத்தினரிடம் விடை பெற்றனர். அவர்கள் தேவைப்படும் வேளைக்க்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். கிராம மக்களில் பாதிப் பேர் நீண்ட தூரம் அவர்களுடன் வந்து வழியனுப்பினார்கள். கொடிகளையும் தலைப்பாகைகளையும் வீசிக் கொண்டு எல்லாப் பாதைகளிலும் மக்கள் இருந்ததார்கள். இவ்வளவு மகத்தான. இவ்வளவு அழகான, இவ்வளவு நேசத்துக்குரிய நாடு தங்களுடையது என்பதை அவர்கள் முன்னர் ஒருபோதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாருக்காகப் பாதுகாப்பு அரணை ஒருவன் நிர்மாணம் செய்கிறானோ மற்ற பிரஜைகள் எல்லாம் அவனுடைய சகோதரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீண்டிருக்கும் நன்றியுணர்வு இருப்பதால் தங்களுக்கு உரிய எல்லாவற்ரையும் கொடுக்கவும் தங்களால் செய்ய முடிந்ததையெல்லாம் திரும்பத் தரவும் தயாராக இருந்தார்கள். ஒற்றுமை. ஒற்றுமை. தோளோடு தோள் சேர்ந்த ஒரு சகோதர வட்டம். அது உடலின் குறுகலான சிரைகளில் மட்டும் ஓடும் குருதியோட்டமல்ல; சீனாவின் முடிவற்ற தூரங்களினூடே அமைதியாக ஓடும் குருதியோட்டம்.

அப்படியாகப் பகுதி பகுதியான நிர்மாண முறை நமக்குப் புரிகிறது. ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நான் இந்தப் பிரச்சனையிலேயே நீண்ட நேரம் உழன்று திரிவதில் பொருத்தமின்மை எதுவுமில்லை. முதற்பார்வையில் முக்கியத்துவ மில்லாததாகத் தென்பட்டாலும் மொத்தமான மதில் நிர்மாணத்திலுள்ள முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்தின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரியவைக்க வேண்டுமானால் இந்தக் கேள்விக்குள் மேலதிக ஆழத்தில் செல்ல என்னால் ஆகாது.

தெய்வீகமான அங்கீகாரம் இருந்தாலும் கூட, மனிதனின் கணக்குகள் அந்தப் பணியுடன் வலுவாக எதிர்நிலை கொண்டிருந்தாலும் கூட பாபேல் கோபுர நிர்மாணத்தை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல அன்றைய கட்டுமானத் திறமை என்று முதலிலேயே சொல்லித் தீர வேண்டும். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், நிர்மாணத்தின் ஆரம்பக் காலங்களில் சான்றோர் ஒருவர் மிகத் தெளிவாக ஒப்பீடு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் என்பதுதான். பாபேல் கோபுரம் அதன் இலக்கை எட்டுவதில் தோல்வியடைந்தது, உலகம் முழுவதும் தெரிந்திருக்கும் காரணங்களால் அல்ல; அல்லது அதற்கு மிகவும் முக்கியமான காரணத்தைஏற்றுக் கொள்ளப் பட்ட காரணங்களில் கண்டடைய முடியாது என்பதை அவர் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார். எழுதி வைக்கப் பட்ட அதிகாரபூர்வமான ஆவணங்களிலிருந்தோ தகவல்களிலிருந்தோ எடுத்தவையல்ல அவருடைய சான்றுகள். அந்த இடத்துக்கே சென்று ஆராய்ச்சி செய்திருப்பதாகவும் அவர் உரிமை பாராட்டிக் கொள்கிறார். கோபுரம் இடிந்து விழுந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறார். அஸ்திவாரத்தின் பலவீனத்தால் எப்படியும் கோபுரம் இடிந்து விழுமென்றும் கண்டுபிடித்திருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்தப் பழைய காலகட்டத்திலிருந்து நம்முடைய காலகட்டம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. நம்முடைய காலகட்டத்தின் விற்பன்னர்கள் எல்லாருக்கும் கல் தச்சைத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அடிக்கட்டுமானத்தைப் பொருத்தவரை தவறு நேர்ந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நம்முடைய சான்றோர்கள் நிரூபிக்க எண்ணியது இதையல்ல; ஏனெனில், மனித சமுதாய வரலாற்றில் முதன் முதலாக இந்தப் பெருஞ்சுவர்தான் புதிய பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்குத் தேவையான அஸ்திவாரத்தைக் கொடுக்கும் என்று அவர் நம்பினார். முதலில் இந்தப் பெருஞ்சுவர். இரண்டாவது பாபேல் கோபுரம். அந்தக் காலத்தில் எல்லார் கைகளிலும் அவருடைய புத்தகம் இருந்தது. ஆனால் அவர் இந்த கோபுரத்தை எவ்வாறு யோசித்தார் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்று நான் இன்றும் ஒப்புக்கொள்கிறேன். கால் அல்லது அரை வட்டமல்லாமல் ஒரு முழு வட்டமாக உருவாக்கப்படாத இந்த மதிற் சுவரால் எப்படி ஒரு கோபுரத்தின் அடிக்கட்டுமானமாக முடியும்? இதற்கு அர்த்தம் ஏற்படுவது ஆன்மீகத்தில் மட்டும் தானே? அப்படியிருக்க, எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கும் பணியின் பலனாக நீண்டு நிற்கும் ஒரு மதில் எதற்காகக் கட்டப்பட வேண்டும்?

ஒருவேளை அந்தக் காலத்தில் மக்களின் தலைக்குள்ளே பண்படுத்தப்படாத ஏராளமான சிந்தனைகள் இருந்திருக்கலாம். இந்தச் சான்றோரின் புத்தகம் அதற்கான உதாரணங்களில் ஒன்று. அதனால்தான் ஒரே நோக்கத்துக்காக தங்களால் முடிந்தவரை அவர்களுடன் இணைந்து கொள்ள ஏராளமான மக்கள் முயற்சி செய்திருந்தார்கள். எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதுதான் மனித இயல்பு.அது புழுதியைபோல நிலையில்லாதது; எந்தக் கட்டுப்பாட்டையும் பொறுத்துக் கொள்ளாதது. அதை அதன் கட்டுக்குள் வைத்தால் எல்லாவற்றையும், துண்டுதுண்டாகும்வரை, சுவரையும் வரம்புகளையும் இடம் கால உணர்வற்றுத் தன்னைத் தானேயும் நொறுக்கத் தொடங்கும்.

பகுதி பகுதியாக மதிலைக் கட்டுவது என்ற முறையைத் தீர்மானித்தபோது மேலதிகாரிகள் இது போன்ற செயல்கள் பெருஞ்சுவர் நிர்மாணத்துக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை கவனத்திலிருந்து தள்ளிவிடவில்லை. நாங்கள் - இங்கே நான் பலர் சார்பாகத்தான் பேசுகிறேன் - மேலதிகாரிகளின் கட்டளைகளைக் கவனமாக ஆராயும்வரை இவை எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்து கொண்டிருந்த இந்த மகத்தான பணியில் சாதாரண வேலைகளுக்குக் கூட மேலதிகாரிகள் இல்லாமல், எங்களுடைய படிப்போ அறிவோ மட்டும் போதுமானதாக இருக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். மேலதிகாரிகளின் அலுவலகத்தில் - அது எங்கே இருந்தென்றோ அங்கே யாரெல்லாம் இருந்தார்களென்றோ நான் விசாரித்த யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை - இப்போதும் தெரியாது - எல்லா மானிட யோசனைகளும் ஆசைகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன என்பது நிச்சயம். எல்லா மானுட இலட்சியங்களும் நிறைவுகளும் அதற்கு எதிராகச் சுழன்று கொண்டிருந்தன. தெய்வீக உலகங்களின் மகத்துவப் பிரதிபலிப்புகள் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அவர்களுடைய கைகளில் வந்து விழுந்தன.

இந்தக் காரணத்தால் அதிகாரிகள் ஆத்மார்த்தமாக விரும்பியிருந்தால் தொடர்ச்சியான நிர்மாணப் பணியைத் தடை செய்த இடர்ப்பாடுகளைக் கடந்திருக்க முடியுமென்று உண்மையுணர்வுள்ள ஒரு பார்வையாளனுக்குத் தோன்றும். அப்போது அதிகாரிகள் திட்டமிட்டுத்தான் பகுதி பகுதியான கட்டுமான முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற முடிவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராது. பகுதி பகுதியான கட்டுமானம் தற்காலிகமானது. எனவே பொருத்தமற்றது. அதிகாரிகள் பொருத்தமற்ற ஒன்றையே வேண்டுமென்று விரும்பினார்கள் என்ற முடிவு மட்டும் மிஞ்சுகிறது. விசித்திரமான முடிவு. சரிதான். ஒருவகையில் பார்த்தால் இதைப் பற்றிச் ல்ல ஏராளமாக இருக்கின்றன. இன்று ஒருவர் இதைப் பற்றி ஒருவேளை அச்சமில்லாமல் விவாதிக்கலாம். அந்தக் காலத்தில்,அநேக ஆட்கள் மத்தியில் - அவர்களில் மேன் மக்களும் உட்படுவர் - ரகசியமான ஒரு அறிவுரை இருந்தது. அது இவ்வாறூ;உங்களுடைய சகல திறன்களையும் பயன்படுத்தி மேலதிகாரிகளின் கட்டளைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவும் ஓர் அளவுக்கு. பின்பு அதை பற்றி நுணுகி யோசிக்காமலிருங்கள். அது தொல்லை என்பதானால் அல்ல; தொல்லையாகத்தான் இருக்கும் என்பதும் நிச்சமல்ல. தொல்லைக்கும் தொல்லையின்மைக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதற்குப் பதிலாக வசந்த காலத்து நதியைப் பாருங்கள். வலுவடையும் வரை அது உயர்ந்து கொண்டிருக்கிறது. கடலை அடையும்வரை
அதன் நீண்ட வழியை தக்கவைத்துக் கொண்டே நீண்ட வழியின் கரை மண்ணை வளமாக்குகிறது. கடலில் அதற்கு மனமார்ந்த வரவேற்பு காத்திருக்கிறது. ஏனெனில் அது மிகச் சிறந்த உதவியாளன். இதுவரைக்கும் நீங்கள் அதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நதி கரை புரண்டு ஓடுகிறது. அதற்கு அதன் உருவமும் வரம்புகளூம் இல்லாமற் போகின்றன. நீரொழுக்கின் வேகம் குறைகிறது. மண்ணில் சிறிய சிறிய தீவுகளை உருவாக்கிக் கொண்டு வயல்களை நாசம் செய்து கொண்டு அதன் விதியைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இந்தப் புதிய விரிவாக்கத்தில் அது நீண்டகாலம் தொடர்ந்து செல்ல முடிவதில்லை; அதன் கரைகளுக்குள் மறுபடியும் திரும்பி வந்தே ஆகவேண்டும். அடுத்து வரும் கோடையில் வற்றி வறண்டு போகவும் வேண்டும். இங்கே நீங்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

இந்த நீதிக் கதைக்கு, பெருஞ்சுவர் நிர்மாண வேளையில் அசாதாரண முக்கியத்துவமும் வலிமையும் இருந்திருக்கலாமென்றாலும் என்னுடைய இந்தக் கட்டுரையில் மிகவும் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவமே உள்ளது. என்னுடைய விசாரணை முற்றிலும் வரலாற்று ரீதியிலானது; என்றோ மறைந்து போன மேகங்களிலிருந்து இப்போது மின்னல்கள் உருவாவதில்லை. அந்தக் காரணத்தால் பகுதி பகுதியான கட்டுமானத்தைப் பற்றிய அன்றைய மக்களை நிறைவடையச் செய்த ஒரு விளக்கத்தை விட ஆழமாகச் செல்லும் ஒன்றுக்காக நான் கடினமாக முயற்சி செய்யலாம். என்னுடைய சிந்தனைத் திறன் என் மேல் திணிக்கும் வரையறைகள் மிகக் குறுகலானவை; என்றாலும் , இங்கே கடந்து செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.

யாருக்கு எதிராக இந்தப் பெருஞ்சுவர் அரணாக இருக்க வேண்டியிருந்தது? வடக்கில் உள்ள மக்களுக்கு எதிராக. நான் சீனாவின் தென்கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். வடக்கிலுள்ள மக்கள் எங்களை அங்கே தொந்தரவு செய்ய முடியாது. புராதன நூல்களில் நாங்கள் அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவர்களுடைய இயற்கையான குணத்தையொட்டி அவர்கள் செய்யும் கொடூரங்களை நினைத்து அமைதியான மரங்களுக்கடியில் நின்று நாங்கள் பெருமூச்சு விட்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன இனத்தவர்களின் முகங்களையும் திறந்த வாய்களையும் கூர்மையான பற்களுள்ள தாடையையும் பற்களால் கடித்துக் கீறி விழுங்கு வதற்காக இரையைத் தேடுவதுபோலத் தெரியும் பாதி மூடிய கண்களையும் ஓவியனின் உண்மையாக சித்தரிப்பு காண்பிக்கிறது. எங்கள் குழந்தைகள் அடம் பிடிக்கும்போது நாங்கள் இந்தப் படங்களைக் காட்டுவோம். உடனே அழுது அலறிக் கொண்டு அவர்கள் எங்கள் கைகளைத் தேடி ஓடி வருவார்கள். எனினும் இந்த வடவர்களைப் பற்றி இதை விட அதிகமாக எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர்களை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் எங்களுடைய கிராமத்திலேயே வசித்திருந்தாலும் ஒருபோதும் அவர்களைப் பார்த்ததில்லை. அவர்களுடைய முரட்டுக் குதிரைகளில் ஏறி, அவர்களால் முடிந்த எவ்வளவு வேகத்தில் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தாலும் கூட நாங்கள் ஒருபோதும் அவர்களைப் பார்த்திருக்க முடியாது. அவர்களால் எங்களை நெருங்க முடியாத அளவுக்குப் பெரியது எங்கள் நாடு; அவர்கள் அத்துவான இடத்தில் தங்களுடைய பயணத்தை முடித்துக் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் எங்களுடைய வீடுகளையும் பாலங்களையும் அருவிகளையும் பெற்றோரையும் விசும்பும் மனைவிகளையும் எங்களுடைய பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் விட்டு விட்டு தூரத்திலிருக்கும் நகரத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏன் போனோம்? அங்கிருந்து பின்னும் தொலைவில் வடக்கேயுள்ள மதில் சுவரை நோக்கிப் பயணம் செய்யும்போது எங்களுடைய சிந்தனைகள் இவையாக இருந்தன. ஏன்? மேலதிகாரிகளிடம் ஒரு கேள்வி. எங்களுடைய தலைவர்களுக்கு எங்கலைத் தெரியும். பிரம்மாண்டமான பதற்றத்தில் மூழ்கியிருக்கும் அவர்களுக்கு எங்களைப் பற்றியும் எங்களுடைய வேலையைப் பற்றியும் தெரியும். நாங்கள் எளிய குடிசைகளில் ஒன்றாக வசிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் நடுவில் அமர்ந்து குடும்பத் தலைவன் சொல்லும் பிரார்த்தனைகளை அவர்கள் விரும்பலாம்; விரும்பாமலுமிருக்கலாம். மேலதிகாரிகளைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை விளக்க என்னை அனுமதித்தால் என்னுடைய அபிப்பிராயம் , அது புராதன காலத்திலிருந்தே நிலைபெற்று வருவது என்பதாக இருக்கும். ஆனால் யாரோ ஒருவருடைய அழகான கனவைப் பற்றி விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டு அவசரமாகக் கலைக்கப்படும் சீன அதிகாரிகளின் குழுக் கூட்டத்தைப் போலக் கூட்டப்பட்ட கூட்டமல்ல இது. மேலதிகாரிகளின் சபை கூடியதனால் அன்று மாலையே, ஏற்கனவே என்ன முடிவு செய்திருந்தார்களோ அதை அமல்படுத்துவதற்காக,அதிகாரிகளுக்கு முன் தினம் மகத்தான ஒரு வரத்தைக் கொடுத்த ஒரு கடவுளுக்குச் செய்யும் சடங்குத்தனமான விளக்கு அலங்காரம் போன்ற ஒன்றாக, எங்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அதை அமல்படுத்துவதற்காக நாளை தீபாலங்காரங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு குறுந்தடிகளால் தாக்கி ஏதோ ஓர் இருண்ட மூலையில் தள்ளுவதற்காகக் மட்டுமே ஆட்களை முரசு அறைந்து படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டு போனார்கள். அநாதி காலம் முதல் சர்வ அதிகார சபை நிலைத்திருந்தது என்று நான் நம்புகிறேன்; பெருஞ்சுவரைக் கட்டும் தீர்மானமும் அதுபோன்றதுதான். தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று நம்பிக் கொண்டிருந்த வடக்கேயுள்ள முட்டாள் கூட்டம். அதற்குக் கட்டளையிட்டது தானே என்று நம்பிய முட்டாள் பேரரசர். ஆனால், இந்த மதிலைக் கட்டுகிற நாங்கள் அதுஅப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம்; அதனால் வாயை மூடிக் கொள்ளுகிறோம்.

***

பெருஞ்சுவர் கட்டுமான வேளையிலும் அதற்குப் பிறகு இன்று வரையும் மனித இனத்தின் ஒப்பீட்டு வரலாற்றில் - இந்த முறையில் மட்டும் சாராம்சத்தைக் கண்டடைய முடிகிற சில பிரச்சனைகள் இருக்கின்றன - ஆழ்ந்திருந்தேன். சீனர்களான எங்களுக்கு துல்லியமான தனித்தன்மையுள்ள குறிப்பிடத் தகுந்த சமூக அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.மற்றவை தெளிவின்மையில் தனித்தன்மை கொண்டவை. இந்த நிகழ்வுகளின், குறிப்பாக கடைசி அம்சத்தின் காரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லா சமயத்திலும் என்னுடைய ஆர்வத்தைக் கிளறி விட்டதுண்டு. இப்போதும் கிளறி விடுகிறது. இந்த மதிற் சுவரின் கட்டுமானம் சாராம்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

எங்களுடைய நிறுவனங்களில் மிகவும் பூடகமான அமைப்பு எங்கள் பேரரசுதான். பீக்கிங்கில், பேரரசரின் அவையில் , கற்பனைதான் எனினும் , இந்த விஷ்யத்தைப் பற்றி தெளிவான கருத்து இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளில் அரசியல் கோட்பாடும் வரலாறும் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விஷயங்களில் அதிக ஞானமுள்ளவர்கள் என்றும் அவர்களின் அறிவை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தகுதியானவர்கள் என்றும் பாராட்டப்படுகிறது. கீழ்நிலை வகுப்புகளுக்குச் செல்லும்போது ஆசிரியர்கள், மாணவர்களின் அறிவைப் பற்றிய சந்தேகங்கள் நீங்குவதாகவும் நூற்றாண்டுகளாக மக்களின் மனதுக்குள் அடித்து இறக்கப்பட் சில கருத்துகளைச் சுற்றி மேம்போக்கான ஒரு கலாச்சாரம் ஆகாயம் முட்ட உயர்ந்திருப்பதாகவும் நாம் காணலாம். மரபான அவற்றின் உண்மைகள் எதுவும் காணாமற் போகவில்லை. எனினும் இந்தப் பதற்றத்தின் மூடு பனிக்குள் அந்த உண்மைகள் பார்க்கப்படாமல் போகின்றன.

ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் பேரரசைப் பற்றிய இந்தக் கேள்விக்குத்தான் சாதாரண மக்களைப் பதில் சொல்லும்படிச் செய்ய வேண்டும். என்னவானாலும் பேரரசின் கடைசிப் புகலிடம் அவர்கள்தானே? என்னுடைய சொந்த நாட்டுக்காக இனி ஒருமுறை மட்டுமே என்னால் பேச முடியும் என்று இங்கே வெளிப்படையாகச் சொல்லுகிறேன். என்றென்றும் இவ்வளவு அழகும் வளமுமான மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கைக் கடவுள்களையும் அவர்களின் சடங்குகளையும் தவிர்த்தால் நாங்கள் பேரரசரைப்பற்றியே யோசிக்கிறோம். ஆனால் இப்போதைய பேரரசரைப் பற்றியல்ல. அவர் யாரென்றோ அவரைப் பற்றிய தெளிவான தகவல்களோ தெரிந்திருந்தால் ஒருவேளை அவரைப் பற்றி யோசிக்கலாம். சரிதான் - எங்களுடைய ஒரே ஒரு ஆர்வம் இது மட்டுமே இந்த விஷயத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நாங்கள் எப்போதும் முயன்று கொண்டிருக்கிறோம். இது விசித்திரமானதாகத் தோன்றலாம். எனினும் எங்கள் நாடு முழுக்கவும் அருகிலும் தொலைவிலுமிருக்கும் கிராமங்களிலும் சுற்றித் திரிந்த பயணிகளிடமிருந்தோ எங்கள் நாட்டு நீரோடைகளில் மட்டுமல்லாமல் புனித நதிகளிலும் நீர்வழிப் பயணம் செய்த மாலுமிகளிடமிருந்தோ எதையாவது கண்டுபிடிப்பது அசாத்தியமற்றதாக இருந்தது. ஒருவர் ஏராளமான செய்திகளைக் கேள்விப்படுகிறார் என்பது சரிதான். ஆனால் திட்டவட்டமாக எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எந்த நீதிக் கதையாலும் நியாயப்படுத்தப்பட முடியாத அளவு, சொர்க்கத்தாலும் பாதுகாக்க முடியாத அளவு விரிந்து கிடப்பது எங்கள் நாடு. பீக்கிங் இதில் ஒரு புள்ளி மட்டுமே. அரண்மனை புள்ளியை விடவும் குறைந்தது. இருந்தாலும் உலகிலுள்ள எல்லா அரச வம்சத்தையும் போல எங்களுடைய பேரரசரும் கீர்த்தி பெற்றவர். ஒப்புக் கொள்கிறேன். இப்போது இருக்கும் சக்ரவர்த்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர், ஒருவேளை, பெரும் அளவுகள் கொண்ட மஞ்சத்தில் - சிறியதும் குறுகலானதுமான கட்டிலாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம் - படுத்துக் கிடக்கிறார். நம்மைப்போலவே அவரும் சில சமயம் உடம்பை நிமிர்த்தி முறித்துக்கொள்ளவும் மிகவும் களைப்படையும்போது அழகான வாயால் கொட்டாவி விடவும் செய்கிறார். அவற்றைப் பற்றி ,திபெத்தியப் பீடபூமியின் எல்லைக்கு அருகில் - ஆயிரக்கணக்கான காதங்கள் தொலைவிலுள்ள தென் பகுதியில் - எங்களுக்கு என்ன தெரியும்? அதுமட்டுமல்ல, ஏதாவது தகவல்கள் இங்கே வந்து சேருமானால் கூட - மிகவும் தாமதமாகவே இங்கே வந்து சேரும் - எங்களை வந்தடையும் முன்பே பழையதாகிவிடும். எப்போதும் - விவேக ஞானமுள்ளவர்களெனினும் அரசதிகாரத்துக்கு எதிராகச் செயல் படுபவர்கள், விஷம் தோய்ந்த அம்புகளுடன் ஆட்சியாளரை அவருடைய பதவியிலிருந்து நீக்க என்றென்றும் முயன்றுகொண்டிருப்பவர்கள் என்று அறியப்படாத கனவான்களின் கூட்டம். அரசவை உறுப்பினர்கள் - இவர்களால் சூழப்பட்டிருப்பார் பேரரரசர். பணியாட்கள், நண்பர்கள் வேடம் புனைந்த சதிகாரர்களும் பகைவர்களும் இருப்பார்கள். சாம்ராஜ்ஜியம் நிரந்தரமானது. ஆனால் சக்ரவர்த்தி அரியாசனத்தில் ஆட்டம் கண்டு கொண்டும் இடறிவிழுந்து கொண்டுமிருக்கிறார். கடைசியில் அரச வம்சம் முழுவதுமாக மூழ்கி, மரணப் பதற்றத்தில் இறுதி மூச்சு விடுகிறது. இந்தப் போராட்டங்களைப் பற்றியோ துயரங்களைப் பற்றியோ மக்கள் ஒருபோதும் அறிவதில்லை. தாமதமாக வந்து சேர்ந்தவர்களைப் போலவும் நகரத்துக்கு வந்த அந்நியர்களைப் போலவும் கூடவே கொண்டு வந்திருக்கும் உணவை அருந்திக் கொண்டு ஆட்கள் கூடையிருக்கும் தெருவோரத்தில் அமைதியாக நிற்கும்போது, முன்னால். வெகு தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியிலிருக்கும் சந்தைத் திடலில் அவர்களுடைய ஆட்சியாளரின் படுகொலை நடந்து கொண்டிருக்கும்.

இந்தச் சூழ்நிலையைச் சிறப்பாக விளக்கும் நீதிக் கதையொன்று உண்டு: அது இப்படிப் போகிறது. சாம்ராஜ்ஜிய சூரியனுக்கு முன்னாலிருந்து மிக மிகத் தொலைவுக்கு ஓடி ஒளியும் முக்கியத்துவமில்லாத நிழலான உனக்கு, வெறும் குடிமகனான உனக்கு சக்ரவர்த்தி ஒரு செய்தியனுப்புகிறார். மரணப் படுக்கையிலிருந்து உனக்காக மட்டும் ஒரு செய்தியனுப்புகிறார். அவர் தூதனிடம் படுக்கை அருகில் முழந்தாளிட்டு உட்காரும்படிக் கட்டளையிட்டு விட்டு செய்தியை ரகசியமாக அவனிடம் சொல்லுகிறார். அவர் அந்தச் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கற்பித்திருக்கிறார். எனவே, அதை திரும்பத் தன்னுடைய செவியில் ரகசியமாகச் சொல்லும்படி உத்தரவிடுகிறார். பின்பு அது சரிதான் என்று தலையசைத்து ஏற்றுக் கொள்கிறார். ஆம். அவருடைய மரணத்துக்குச் சாட்சி வகிப்பதற்காகக் கூடி நின்றவர்களுக்கு முன்னால் தடையாக இருந்த எல்லாச் சுவர்களும் இடித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. பெரிய, உயரமான படிகளில் பேரரசின் மகத்தான இளவரசர்கள் ஒண்டி ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலும் சக்ரவர்த்தி செய்தியைச் சொல்கிறார். தூதன் உடனே புறப்படுகிறான். திடகாத்திரனான, களைப்பே தீண்டாத அந்த மனிதன் வலது கையாலும் இடதுகையாலும் தள்ளிக்கொண்டு கூட்டத்துக்கு மத்தியில் வழியை உண்டாக்குகிறான்; எதிர்ப்புத் தென்படுகிறபோது சூரிய முத்திரை பதித்த மார்பைச் சுட்டிக் காட்டுகிறான். பிற எந்த மனிதனும் உண்டு பண்ணுவதை விடவும் வேகமாக வழியமைத்துக் கொள்கிறான். முடிவில்லாத அளவுக்குப் பெரிய ஆட்கூட்டம். வெட்டவெளியில் வந்திருந்தால் அவன் எவ்வளவு வேகமாகப் போயிருப்பான்? உடனடியாகவே அவனுடைய முட்டியால் தட்டப்படும் வரவேற்கத் தந்த ஓசையை உன்னுடைய கதவில் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய வலிமையை எவ்வளவு பயன் தராத விதத்தில் பிரயோகிக்கிறான். இருந்தும் அவன் இப்போதும் அரண்மனையின் மிகமிக உள்ளே இருக்கும் அறைகளைத்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறான். ஒருபோதும் அவன் மறு முனையை அடையப் போவதில்லை. அதில் வெற்றியே பெற்றாலும் அவன் எதையும் அடையப் போவதில்லை. இன்னும் மண்டபங்களைக் கடக்க வேண்டும். மண்டபங்களுக்குப் பிறகு அரண்மனை. மீண்டும் இன்னொரு முறை படிக்கட்டுகள்; மண்டபங்கள். இன்னொருமுறை இன்னொரு அரண்மனை. இதுபோல ஆயிரக் கணக்கான ஆண்டுகள். அப்படியாக, கடைசியில் மிகவும் வெளியிலிருக்கும் கோட்டை வாயிலைத் தாண்டினால் - ஆனால் ஒருபோதும், ஒருபோதும் அது நடக்காது - சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை முன்னால் காணலாம். தன்னுடைய குப்பை கூளங்களால் நிறைந்திருக்கும் உலகத்தின் மையம். இறந்த ஒரு மனிதரின் செய்தியுடன் கூட யாரும் அந்த வழியாகச் செல்ல முடியாது. ஆனால் அந்தி மயங்கும்போது நீ உன் ஜன்னலருகில் அமர்ந்து கனவு காண்கிறாய்.

இதுபோல ஆசையுடனும் ஏமாற்றத்துடனும்தான் எங்களுடைய மக்கள் பேரரசரைக் காண்கிறார்கள்.எந்தச் சக்ரவர்த்தி ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. அரச பரம்பரையின் பெயரைப் பற்றிக் கூட சந்தேகங்கள் நிலவுகின்றன. பள்ளிக் கூடங்களில் வரிசைக் கிரமமாக, தேதி வாரியாக அரச பரம்பரையைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்திலுள்ள உலகந்தழுவிய சந்தேகங்கள் பிரம்மாண்டமானவை என்பதால் மிகப் பெரிய அறிஞர்கள் கூட சந்தேகத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். எங்களுடைய கிராமங்களில் முன்பு எப்போதோ மறைந்து போன சக்ரவர்த்திகள் அரியாசங்களில் அமரவைக்கப்படுகிறார்கள். பாட்டில் மட்டுமே வாழ்ந்திருந்த பேரரசரின் அறிவிப்பு ஒன்று, அண்மைக் காலத்தில் ஒரு பூசகர் மூலம் பலிபீடத்தின் முன்னால் வாசிக்கச் செய்யப்பட்டது. பழைய வரலாறாகிவிட்ட யுத்தங்கள் எங்களுக்குப் புதியவை. பக்கத்து வீட்டுக்காரன் இந்த செய்தியைத் தெரிவிக்க உற்சாகத்துடன் ஓடி வருகிறான். நேசிப்பால் கெடுக்கப்பட்டவர்களும், தந்திரக்காரர்களான அரசவை உறுப்பினர்களால் முறையற்ற வழிகளில் இட்டுச் செல்லப்பட்டவர்களும், ஆசையை அடக்க முடியாதவர்களும் பேராசைக்காரர்களும் அடங்காத காமம் கொண்டவர்களுமான பேரரசிகள் என்றென்றும் வெறுக்கப்படும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு அவர்கள் புதைக்கப்பட்டார்களோ அந்த அளவு பளபளப்பானவையாக இருந்தன அவர்களைப் பற்றிய வண்ணமயமான கதைகளும். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய ஒரு வறட்சிக் காலத்தில் ஒரு சக்ரவர்த்தினி தன்னுடைய கணவனின் ரத்தத்தை எப்படிக் குடித்தாள் என்பதை கடும் மனவேதனையில் எழுந்த அழுகையுடன் நாங்கள் கேட்கிறோம்.

அப்படியாக எங்களுடைய மக்கள் இறந்துபோன பேரரசர்களுடன் தொடர்பு கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும் ஆட்சியாளரை இறந்துபோனவராகத் தவறுதலாக நினைக்கிறார்கள். ஒருமுறை, ஒருவனுடைய வாழ்க்கையில் ஒருமுறை மட்டும், ஓர் அரண்மனை அதிகாரி மாநிலச் சுற்றுப் பயணத்திற்கிடையில் எதிர்பாராமல் எங்களுடைய கிராமத்துக்கு வருவார் என்றால், அரசாங்கத்தின் பெயரால் அறிவிப்புகள் செய்வாரென்றால், வரி விவரப் பட்டியலைப் பரிசோதனை செய்வாரென்றால், பள்ளிச் சிறுவர்களைப் பற்றி ஆய்வு நடத்துவாரென்றால், எங்களுடைய செயல்களையும் பிரச்சனைகளையும் பற்றி பூசகரிடம் விசாரிப்பாரென்றால் பிறகு பல்லக்கில் ஏறுவதற்கு முன்பாக கூடி நிற்கும் ஆட்களிடம் தன்னுடைய அபிப்பிராயத்தை தெளிவில்லாத மொழியில் சொல்லுவாரென்றால் எல்லா முகங்களிலும் ஒரு சிரிப்பு மின்னி மறையும். ஒவ்வொருவரும் பக்கத்திலிருப்பவரைக் கள்ளப் பார்வை பார்த்து அதிகாரி அதைப் பார்த்து விடாமலிருக்கத் தங்களுடைய குழந்தைகளை நோக்கிக் குனிந்து கொள்வார்கள். அவர்கள் இப்படி யோசிக்கிறார்கள்: இறந்துபோன ஒருவரைப் பற்றி உயிரோடு இருப்பதுபோல எதற்காக அவர் விசாரிக்கிறார்? அவருடைய பேரரசர் நெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து விட்டார். அரச பரம்பரையும் துடைத்து அழிக்கப்பட்டாயிற்று. அதிகாரி எங்களிடம் வேடிக்கை பேசுகிறார். எனினும் அவரைக் கோபப்படுத்தி விடாமலிருக்க நாங்கள் அதைக் கவனிப்பதுபோல காட்டிக் கொள்வோம். ஆனால் நாங்கள் எங்களுடைய இன்றைய அதிகாரிகளைத் தவிர யாருக்கும் கீழ்ப்படிய மாட்டோம். ஏனெனில் அப்படிச் செய்வது குற்றம். விடை பெறும் வாகனத்துக்குப் பின்னால் ஏற்கனவே சிதிலமாகிபோன முதுமக்கள் தாழியிலிருந்து ஏதேனும் ஒருவன் கிராமத்தின் ஆட்சியாளனாக எதேச்சையாக உயர்ந்தெழுகிறான்.

இதைப் போலவே எங்களுடைய மக்கள் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகளாலும் சமகாலப் போர்களாலும் சிறிது கூட பாதிப்படைவதில்லை. என்னுடைய இளம் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நிலைவு கூர்கிறேன். அண்டையில் இருக்கும், ஆனால் வெகு தூரத்திலிருக்கும் நாட்டில் ஒரு கலகம் வெடித்தது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் நினைவு கூர முடியவில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே எந்த வேளையிலும் புரட்சி வெடிக்கலாம்; அங்கே இருந்த மக்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள். அந்தப் பிரதேசத்தைக் கடந்து வந்த ஒரு பிச்சைக்காரன் புரட்சிக்காரர்களால் வெளியிடப்பட்ட ஒரு துண்டறிக்கையை என்னுடைய தந்தையின் வீட்டுக்குக் கொண்டு வந்தான். அது ஓர் உற்சவ தினம். எங்களுடைய அறைகள் விருந்தினர்களால் நிரம்பி இருந்தன. மையமான இடத்தில் உட்கார்ந்திருந்த பூசகர் அந்தத் துண்டறிக்கையை வாசித்தார். திடீரென்று எல்லாரும் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். இந்த சந்தடியில் துண்டறிக்கை கிழிந்து போனது. முன்னரே தாராளமாகப் பிச்சை பெற்றிருந்த பிச்சைக்காரனை உதைத்து வெளியேற்றி விட்டு அழகான அந்த நாளைக் கொண்டாடுவதற்காக விருந்தாளிகள் கலைந்தார்கள்.எதனால்? இந்த அண்டை நாட்டு எழுத்து வடிவம் சில முக்கிய அம்சங்களில் எங்களுடைய மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது. எங்களுடையது மிகப் புராதனமானது. இந்த வித்தியாசம் துண்டறிக்கையின் சில வாசகங்களிலும் இருந்தன. பூசகர் சிரமப்பட்டு இரண்டு வரி வாசிப்பதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தோம். முன்பு எப்போதோ சொல்லப்பட்ட பழைய வரலாறு. நீண்ட காலத்துக்கு முன்பே அமுங்கிப் போயிருந்த பழைய துக்கங்கள். அங்கே அப்போது நிலவிய பயங்கரத்தை அந்தப் பிச்சைக்காரனால் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைக்க முடிந்ததெனினும் - இப்படித்தான் என் ஞாபகம் - மறுக்கும் விதமாகத் தலையை உலுக்கிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அதை அதிகம் கவனிக்க மறுத்தோம். நிகழ்காலத்தைப் பாழடித்துக் கொள்ள எங்கள் மக்கள்தான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்?

இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து உண்மையில் எங்களூக்கு ஒரு பேரரசரே இல்லை என்ற முடிவுக்கு யாராவது வந்து சேர்வார்கள் என்றால் அவர்கள் உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டேயிருக்கும். எங்களைக் காட்டிலும் சக்ரவர்த்தியிடம் விசுவாசம் வைத்திருப்பவர்கள் யாரும் இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய விசுவாசத்திலிருந்து பேரரசர் அவசியமான விதத்தில் எதையும் தேடி அடைவதில்லை. எங்கள் கிராமத்தின் எல்லையில் சிறிய ஒரு கம்பத்தின் மேல்
புனித டிராகனின் உருவம் இப்போதும் இருக்கிறது. மனித இனத்தின் ஞாபகத்தின் தொடக்கத்திலிருந்தே பீக்கிங்கைப் பார்த்து நினைவாஞ்சலியாக தீயாகக் கனலும் சுவாசத்தை விட்டுக்கொண்டிருந்தது என்பதும் சரிதான். ஆனால் எங்கள் கிராமத்து மக்களுக்கு பீக்கிங்கே கூட பரலோகத்தை விட அந்நியமானது. அடுத்தடுத்து வீடுகள் கொண்ட எங்கள் குன்றுகளிலிருந்து பார்த்தால் தெரியும் வயல்வெளிகளை விடப் பெரிய கிராமம் உண்மையில் இருக்கிறதா? இரவு பகலாக இந்த வீடுகளுக்குள்ளே பரபரக்கும் மக்கள் கூட்டம் உண்மையில் அங்கே இருக்கிறதா? பீக்கிங்கை அப்படிப்பட்ட நகரம் என்று யோசிக்கவும் அதுவும் அதன் சக்ரவர்த்தியும் ஒன்று என்று நினைக்கவும் உள்ளதை விட அதிகம் சிரமம் தோன்றுகிறது. யுகம் யுகமாக சூரியனுக்குக் கீழே அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் மேகம். இதுபோன்ற அபிப்பிராயங்களை வலியுறுத்துவதன் விளைவுதான் சுதந்திரமும் கட்டுப்பாடற்றதுமான வாழ்க்கை. அது எந்த வகையிலும் நன்னெறிக்குப் புறம்பானதல்ல. என்னுடைய சொந்த கிராமத்திலுள்ளவர்களைப் போன்று இந்த நல்ல குணம்கொண்டவர்களை என்னுடைய பயணங்களில் எந்த இடத்திலும் பார்த்ததேயில்லை. ஆனால் சமகாலத்தன்மை கொண்ட எந்த சட்டத்துக்கும் உட்படாத, புராதன காலங்களிலிருந்து எங்களை வந்தடைந்த உபதேசங்களையும் எச்சரிக்கைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை.

பொதுப்படையாகச் சொல்லுவதைத் தவிர்க்கிறேன். என்னுடைய மாநிலத்திலிருக்கும் எண்ணற்ற கிராமங்கள் எல்லாமும் இப்படியானவைதான் என்றும் நான் எண்ணவில்லை. பிறகு சீனாவிலேயே இருக்கும் ஐநூறு மாநிலங்களின் காரியத்தைச் சொல்ல வேண்டியதுமில்லையே? இருந்தும் இந்த விஷயத்தில் நான் வாசித்த ஏராளமான புத்தகங்கள், எனது தனிப்பட்ட பார்வைக் போக்கு ஆகியவர்றின் அடிப்படையில் இப்படி அபிப்பிராயம் கொள்ள நான் துணிகிறேன். குறிப்பாக, ஏராளமான மனிதர்களுடன் தொடர்புள்ள இந்த மதிலின் நிர்மாணம், நுட்பமான அறிவுள்ள ஒருவனுக்கு, பெரும்பாலும் எல்லா மாநிலங்களும் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்த ஒருவனுக்கு , இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இப்போதைய பேரரசருடன் எங்கள் கிராமம் காட்டும் நடத்தை, அடிப்படை ஒர்றுமையுள்ள ஒன்ரை நினைவுபடுத்துகிறது என்று சொல்ல நான் ஆயத்தமாகிறேன். இந்த நடத்தையை மகத்தானதென்று சித்தரிக்க எனக்கு விருப்பமில்லை. மாறாக நேர் எதிராகவே விரும்புகிறேன். உண்மையில் இதன் முதன்மைப் பொறுப்பு அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. உலகில் மிகப் புராதனமான சாம்ராஜ்ஜியமான. விரிவடைவதில் வெற்றி காணாத அல்லது விரிவடைவதில் அக்கறை காட்டாத நாட்டின் மிகத் தொலைவிலிருக்கும் எல்லைவரைக்கும் முடிவில்லாத இந்தச் செயல்பாடுகளைக் கொண்டு சேர்க்கிற அரசுதான் களங்கமில்லாத இந்த அரசு என்பது சரியே. மக்களின் நம்பிக்கையிலும் எண்ணத்திலும் ஒரு சோர்வு இருக்கிறது. பேரரசை பீக்கிங்கின் மந்தத்தன்மையிலிருந்து எழுப்பி உயர்த்துவதிலும் நடைமுறையிலிருக்கும் தெளிவான எதார்த்தை மார்போடு சேர்த்துக் கொள்வதிலும் அது - அந்த சோர்வு - தடையாக இருக்கிறது.

நிச்சயமாக இந்த மனோநிலை நல்ல இயல்பல்ல. இந்தக் குறைதான் எங்கள் மக்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமைக்கான முக்கியத் தூண்டுதல்களில் ஒன்று என்பதே உண்மை. இது நாங்கள் வாழும் பூமிதான். இங்கே அடிப்படையான கோளாறு இருக்கிறது என்று நிறுவ முயற்சி செய்வது எங்களுடைய மனசாட்சியை மட்டுமல்ல; அதற்கும் மேலாக எங்கள் கால்களையும் தகர்த்துக்கொள்ளுவதற்குச் சமமானது. இந்தக் காரணங்களால் இந்தக் கேள்விகளுக்குள்ளே என்னுடைய விசாரணையுடன் மேலும் தொடர்ந்து செல்ல மாட்டேன்.

***

ஆங்கிலத்தில்: வில்லா, எட்வின் ம்யூர்
The Penguin Complete Short Stories Of Franz Kafka (1983)

தமிழில் : சுகுமாரன்


The Great Wall of China
Franz Kafka
Translated by Willa and Edwin Muir

THE GREAT WALL OF CHINA was finished off at its northernmost corner. From the southeast and the southwest it came up in two sections that finally converged there. This principle of piecemeal construction was also applied on a smaller scale by both of the two great armies of labor, the eastern and the western. It was done in this way: gangs of some twenty workers were formed who had to accomplish a length, say, of five hundred yards of wall, while a similar gang built another stretch of the same length to meet the first. But after the junction had been made the construction of the wall was not carried on from the point, let us say, where this thousand yards ended; instead the two groups of workers were transferred to begin building again in quite
different neighborhoods. Naturally in this way many great gaps were left, which were only filled in gradually and bit by bit, some, indeed, not till after the official announcement that the wall was finished. In fact it is said that there are gaps which have never been filled in at all, an assertion, however, that is probably merely one of
the many legends to which the building of the wall gave rise, and which cannot be verified, at least by any single man with his own eyes and judgment, on account of the extent of the structure.

Now on first thoughts one might conceive that it would have been more advantageous in every way to build the wall continuously, or at least continuously within the two main divisions. After all, the wall was intended, as was universally proclaimed and known, to be a protection against the peoples of the north. But how can a wall protect if it is not a continuous structure? Not only can such a wall not protect, but what there is of it is in perpetual danger. These blocks of wall left standing in deserted regions could be easily pulled down again and again by the nomads, especially as these tribes, rendered apprehensive by the building operations, kept changing their encampments with incredible rapidity, like locusts, and so perhaps had a better general view of the progress of the wall than we, the builders. Nevertheless the task of construction probably could not have been carried out in any other way. To understand this we must take into account the following: the wall was to be a protection for centuries; accordingly, the most scrupulous care in the building, the application of the architectural wisdom of all known ages and peoples, an unremitting sense of personal responsibility in the builders were indispensable prerequisites for the work. True, for the more purely manual tasks ignorant day laborers from the populace, men, women, and children who offered their services for good MONEY, could be employed; but for the supervision even of every four day laborers an expert versed in the art of building was required, a man who was capable of entering into and feeling with all his heart what was involved. And the higher the task, the greater the responsibility. And such men were actually to be had, if not indeed so abundantly as the work of construction could have absorbed, yet in great numbers.

For the work had not been undertaken without thought. Fifty years before the first stone was laid, the art of architecture, and especially that of masonry, had been proclaimed as the most important branch of knowledge throughout the whole area of a China that was to be walled around, and all other arts gained recognition only insofar as they had reference to it. I can still remember quite well us standing as small children, scarcely sure on our feet, in our teacher's garden, and being ordered to build a sort of wall out of pebbles; and then the teacher, girding up his robe, ran full tilt against the wall, of course knocking it down, and scolded us so terribly for the shoddiness of our work that we ran weeping in all directions to our parents. A trivial incident, but significant of the spirit of the time.

I was lucky inasmuch as the building of the wall was just beginning when, at twenty, I had passed the last examination of the lowest school. I say lucky, for many who before my time had achieved the highest degree of culture available to them could find nothing year after year to do with their knowledge, and drifted uselessly about with the most splendid architectural plans in their heads, and sank by thousands into hopelessness. But those who finally came to be employed in the work as supervisors, even though it might be of the lowest rank, were truly worthy of their task. They were masons who had reflected much, and did not cease to reflect, on the building of the wall, men who with the first stone they sank in the ground felt themselves a part of the wall. Masons of that kind, of course, had not only a desire to perform their work in the most thorough manner, but were also impatient to see the wall finished in its complete perfection. Day laborers have not this impatience, for they look only to their wages, and the higher supervisors, indeed even the supervisors of middle rank, could see enough of the manifold growth of the construction to keep their spirits confident and high. But to encourage the subordinate supervisors, intellectually so vastly superior to their apparently petty tasks, other measures must be taken. One could not, for instance, expect them to lay one stone on another for months or even years on end, in an uninhabited mountainous region, hundreds of miles from their homes; the hopelessness of such hard toil, which yet could not reach completion even in the longest lifetime, would have cast them into despair and above all made them less capable for the work. It was for this reason that the system of piecemeal building was decided on. Five hundred yards could be accomplished in about five years; by that time, however, the supervisors were as a rule quite exhausted and had lost all faith in themselves, in the wall, in the world. Accordingly, while they were still exalted by the jubilant celebrations marking the completion of the thousand yards of wall, they were sent far, far away, saw on their journey finished sections of the wall rising here and there, came past the quarters of the high command and were presented with badges of honor, heard the rejoicings of new armies of labor streaming past from the depths of the land, saw forests being cut down to become supports for the wall, saw mountains being hewn into stones for the wall, heard at the holy shrines hymns rising in which the pious prayed for the completion of the wall. All this assuaged their impatience. The quiet life of their homes, where they rested some time, strengthened them; the humble credulity with which their reports were listened to, the confidence with which the simple and peaceful burgher believed in the eventual completion of the wall, all this filled their hearts with a new buoyancy. Like eternally hopeful children they then said farewell to their homes; the desire once more to labor on the wall of the nation became irresistible. They set off earlier than they needed; half the village accompanied them for long distances. Groups of people with banners and streamers waving were on all the roads; never before had they seen how great and rich and beautiful and worthy of love their country was. Every fellow countryman was a brother for whom one was building a wall of protection, and who would return lifelong thanks for it with all he had and did. Unity! Unity! Shoulder to shoulder, a ring of brothers, a current of blood no longer confined within the narrow circulation of one body, but sweetly rolling and yet ever returning throughout the endless leagues of China.

Thus, then, the system of piecemeal construction becomes comprehensible; but there were still other reasons for it as well. Nor is there anything odd in my pausing over this question for so long; it is one of the crucial problems in the whole building of the wall, unimportant as it may appear at first glance. If I am to convey and make understandable the ideas and feelings of that time I cannot go deeply enough into this very question. First, then, it must be said that in those days things were achieved scarcely inferior to the construction of the Tower of Babel, although as regards divine approval, at least according to human reckoning, strongly at variance with that work. I say this because during the early days of building a scholar wrote a BOOK IN which he drew the comparison in the most exhaustive way. In it he tried to prove that the Tower of Babel failed to reach its goal, not because of the reasons universally advanced, or at least that among those recognized reasons the most important of all was not to be found. His proofs were drawn not merely from written documents and reports; he also claimed to have made inquiries on the spot, and to have discovered that the tower failed and was bound to fail because of the weakness of the foundation. In this respect at any rate our age was vastly superior to that ancient one. Almost every educated man of our time was a mason by profession and infallible in the matter of laying foundations. That, however, was not what our scholar was concerned to prove; for he maintained that the Great Wall alone would provide for the first time in the history of mankind a secure foundation for a new Tower of Babel. First the wall, therefore, and then the tower. His book was in everybody's hands at that time, but I admit that even today I cannot quite make out how he conceived this tower. How could the wall, which did not form even a circle, but only a sort of quarter- or half-circle, provide the foundation for a tower? That could obviously be meant only in a spiritual sense. But in that case why build the actual wall, which after all was something concrete, the result of the lifelong labor of multitudes of people? And why were there in the book plans, somewhat nebulous plans, it must be admitted, of the tower, and proposals worked out in detail for mobilizing the people's energies for the stupendous new work? There were many wild ideas in people's heads at that time -- this scholar's book is only one example - perhaps simply because so many were trying to join forces as far as they could for the achievement of a single aim. Human nature, essentially changeable, unstable as the dust, can endure no restraint; if it binds itself it soon
begins to tear madly at its bonds, until it rends everything asunder, the wall, the bonds, and its very self.

It is possible that these very considerations, which militated against the building of the wall at all, were not left out of account by the high command when the system of piecemeal construction was decided on. We - and here I speak in the name of many people - did not really know ourselves until we had carefully scrutinized the decrees of the high command, when we discovered that without the high command neither our book learning nor our human understanding would have sufficed for the humble tasks which we performed in the great whole. In the office of the command - where it was and who sat there no one whom I have asked knew then or knows now - in that office one may be certain that all human thoughts and desires revolved in a circle, and all human aims and fulfillments in a countercircle. And through the window the reflected splendors of divine worlds fell on the hands of the leaders as they traced their plans.

And for that reason the incorruptible observer must hold that the command, if it had seriously desired it, could also have overcome those difficulties that prevented a system of continuous construction. There remains, therefore, nothing but the conclusion that the command deliberately chose the system of piecemeal construction. But the piecemeal construction was only a makeshift and therefore inexpedient. Remains the conclusion that the command willed something inexpedient. Strange conclusion! True, and yet in one respect it has much to be said for it. One can perhaps safely discuss it now. In those days many people, and among them the best, had a secret maxim which ran: Try with all your might to comprehend the decrees of the high command, but only up to a certain point; then avoid further meditation. A very wise maxim, which moreover was elaborated in a parable that was later often quoted: Avoid further meditation, but not because it might be harmful; it is not at all certain that it would be harmful. What is harmful or not harmful has nothing to do with the question. Consider rather the river in spring. It rises until it grows mightier and nourishes more richly the soil on the long stretch of its banks, still maintaining its own course until it reaches the sea, where it is all the more welcome because it is a worthier ally. Thus far may you urge your meditations on the decrees of the high
command. But after that the river overflows its banks, loses outline and shape, slows down the speed of its current, tries to ignore its destiny by forming little seas in the interior of the land, damages the fields, and yet cannot maintain itself for long in its new expanse, but must run back between its banks again, must even dry up wretchedly in the hot season that presently follows. Thus far may you not urge your meditations on the decrees of the high command.  Now though this parable may have had extraordinary point and force during the building of the wall, it has at most only a restricted relevance for my present essay. My inquiry is purely historical; no lightning flashes any longer from the long since vanished thunderclouds, and so I may venture to seek for an explanation of the system of piecemeal construction which goes farther than the one that contented people then. The limits that my capacity for thought imposes upon me are narrow enough, but the province to be traversed here is infinite.

Against whom was the Great Wall to serve as a protection? Against the people of the north. Now, I come from the southeast of China. No northern people can menace us there. We read of them in the books of the ancients; the cruelties they commit in accordance with their nature make us sigh in our peaceful arbors. The faithful representations of the artist show us these faces of the damned, their gaping mouths, their jaws furnished with great pointed teeth, their half-shut eyes that already seem to be seeking out the victim which their jaws will rend and devour. When our children are unruly we show them these pictures, and at once they fly weeping into our arms. But nothing more than that do we know about these northerners. We have not seen them, and if we remain in our villages we shall never see them, even if on their wild horses they should ride as hard as they can straight toward us - the land is too vast and would not let them reach us, they would end their course in the empty air.

Why, then, since that is so, did we leave our homes, the stream with its bridges, our mothers and fathers, our weeping wives, our children who needed our care, and depart for the distant city to be trained there, while our thoughts journeyed still farther away to the wall in the north? Why? A question for the high command. Our
leaders know us. They, absorbed in gigantic anxieties, know of us, know our petty pursuits, see us sitting together in our humble huts, and approve or disapprove the evening prayer which the father of the house recites in the midst of his family. And if I may be allowed to express such ideas about the high command, then I must say that in my opinion the high command has existed from old time, and was not assembled, say, like a gathering of mandarins summoned hastily to discuss somebody's fine dream in a conference as hastily terminated, so that that very evening the people are drummed out of their beds to carry out what has been decided, even if it should be nothing but an illumination in honor of a god who may have shown great favor to their masters the day before, only to drive them into some dark corner with cudgel blows tomorrow, almost before the illuminations have died down. Far rather do I believe that the high command has existed from all eternity, and the decision to build the wall likewise. Unwitting peoples of the north, who imagined they were the cause of it! Honest, unwitting Emperor, who imagined he decreed it! We builders of the wall know that it
was not so and hold our tongues.

During the building of the wall and ever since to this very day I have occupied myself almost exclusively with the comparative history of races - there are certain questions that one can probe to the marrow, as it were, only by this method - and I have discovered that we Chinese possess certain folk and political institutions that are unique in their clarity, others again unique in their obscurity. The desire to trace the cause of these phenomena, especially the latter, has always intrigued me and intrigues me still, and the building of the wall is itself essentially involved with these problems.

Now one of the most obscure of our institutions is that of the empire itself. In Peking, naturally, at the imperial court, there is some clarity to be found on this subject, though even that is more illusive than real. Also the teachers of political law and history in the schools of higher learning claim to be exactly informed on these matters, and to be capable of passing on their knowledge to their students. The farther one descends among the lower schools the more, naturally enough, does one find teachers' and pupils' doubts of their own knowledge vanishing, and superficial culture mounting sky-high around a few precepts that have been drilled into people's minds for centuries, precepts which, though they have lost nothing of their eternal truth, remain eternally invisible in this fog of confusion.

But it is precisely this question of the empire which in my opinion the common people should be asked to answer, since after all they are the empire's final support. Here, I must confess, I can only speak once more for my native place. Except for the nature gods, and their ritual which fills the whole year in such beautiful and rich alternation, we think only about the Emperor. But not about the present one; or rather we would think about the present one if we knew who he was or knew anything definite about him. True - and it is the sole curiosity that fills us - we are always trying to get information on this subject, but, strange as it may sound, it is almost impossible to discover anything, either from pilgrims, though they have wandered through much of our land, or from near or distant villages, or from sailors, though they have navigated not only our little stream, but also the sacred rivers. One hears a great many things, true, but can gather nothing definite.

So vast is our land that no fable could do justice to its vastness, the heavens can scarcely span it - and Peking is only a dot in it, and the imperial palace less than a dot. The Emperor as such, on the other hand, is mighty throughout all the hierarchies of the world: admitted. But the existent Emperor, a man like us, lies much like us on a couch which is of generous proportions, perhaps, and yet very possibly may be quite narrow and short. Like us he sometimes stretches himself and when he is very tired yawns with his delicately cut mouth. But how should we know anything about that - thousands of miles away in the south - almost on the borders of the Tibetan Highlands? And besides, any tidings, even if they did reach us, would arrive far too late, would have become obsolete long before they reached us. The Emperor is always surrounded by a brilliant and yet ambiguous throng of nobles and courtiers - malice and enmity in the guise of servants and friends - who form a counterweight to the imperial power and perpetually labor to unseat the ruler from his place with poisoned arrows. The Empire is immortal, but the Emperor himself totters and falls from his throne, yes, whole dynasties sink in the end and breathe their last in one death rattle. Of these struggles and sufferings the people will never know; like tardy arrivals, like strangers in a city, they stand at the end of some densely thronged side street peacefully munching the food they have brought with them, while far away in front, in the MARKET Square at the heart of the city, the execution of their ruler is proceeding.

There is a parable that describes this situation very well: The Emperor, so it runs, has sent a message to you, the humble subject, the insignificant shadow cowering in the remotest distance before the imperial sun; the Emperor from his deathbed has sent a message to you alone. He has commanded the messenger to kneel down by the bed, and has whispered the message to him; so much store did he lay on it that he ordered the messenger to whisper it back into his ear again. Then by a nod of the head he has confirmed that it is right. Yes, before the assembled spectators of his death - all the obstructing walls have been broken down, and on the spacious and loftily mounting open staircases stand in a ring the great princes of the Empire - before all these he has delivered his message. The messenger immediately sets out on his journey; a powerful, an indefatigable man; now pushing with his right arm, now with his left, he cleaves a way for himself through the throng; if he encounters resistance he points to his breast, where the symbol of the sun glitters; the way is made easier for him than it would be for any other man. But the multitudes are so vast; their numbers have no end. If he could reach the open fields how fast he would fly, and soon doubtless you would hear the welcome hammering of his fists on your door. But instead how vainly does he wear out his strength; still he is only making his way through the chambers of the innermost palace; never will he get to the end of them; and if he succeeded in that nothing would be gained; he must next fight his way down the stair; and if he succeeded in that nothing would be gained; the courts would still have to be crossed; and after the courts the second outer palace; and once more stairs and courts; and once more another palace; and so on for thousands of years; and if at last he should burst through the outermost gate - but never, never can that happen - the imperial capital would lie before him, the center of the world, crammed to bursting with its own sediment. Nobody could fight his way through here even with a message from a dead man. But you sit at your window when evening falls and dream it to yourself.

Just so, as hopelessly and as hopefully, do our people regard the Emperor. They do not know what Emperor is reigning, and there exist doubts regarding even the name of the dynasty. In school a great deal is taught about the dynasties with the dates of succession, but the universal uncertainty in this matter is so great that even the best scholars are drawn into it. Long-dead emperors are set on the throne in our villages, and one that only lives on in song recently had a proclamation of his read out by the priest before the altar. Battles that are old history are new to us, and one's neighbor rushes in with a jubilant face to tell the news. The wives of the emperors, pampered and overweening, seduced from noble custom by wily courtiers, swelling with ambition, vehement in their greed, uncontrollable in their lust, practice their abominations ever anew. The more deeply they are buried in time the more glaring are the colors in which their deeds are painted, and with a loud cry of woe our village eventually hears how an Empress drank her husband's blood in long draughts thousands of years ago.  Thus, then, do our people deal with departed emperors, but the living ruler they confuse among the dead. If once, only once in a man's lifetime, an imperial official on his tour of the provinces should arrive by chance at our village, make certain announcements in the name of the government, scrutinize the tax lists, examine the school children, inquire of the priest regarding our doings and affairs, and then, before he steps into his sedan chair, should sum up his impressions in verbose admonitions to the assembled commune - then a smile flits over every face, people throw surreptitious glances at each other, and bend over their children so as not to be observed by the official. Why, they think to themselves, he's speaking of a dead man as if he were alive, this Emperor of his died long ago, the dynasty is blotted out, the good official is having his joke with us, but we will behave as if we did not notice it, so as not to offend him. But we shall obey in earnest no one but our present ruler, for not to do so would be a crime. And behind the departing sedan chair of the official there rises in might as ruler of the village some figure fortuitously exalted from an urn already crumbled to dust.

Similarly our people are but little affected by revolutions in the state or contemporary wars. I recall an incident in my youth. A revolt had broken out in a neighboring, but yet quite distant, province. What caused it I can no longer remember, nor is it of any importance now; occasions for revolt can be found there any day, the people are an excitable people. Well, one day a leaflet published by the rebels was brought to my father's house by a beggar who had crossed that province. It happened to be a feast day, our rooms were filled with guests, the priest sat in the center and studied the sheet. Suddenly everybody started to laugh, in the confusion the sheet was torn, the beggar, who however had already received abundant alms, was driven out of the room with blows, the guests dispersed to enjoy the beautiful day. Why? The dialect of this neighboring province differs in some essential respects from ours, and this difference occurs also in certain turns of the written word, which for us have an archaic character. Hardly had the priest read two pages before we had come to our decision. Ancient history told long ago, old sorrows long since healed. And though - so it seems to me in recollection -- the gruesomeness of the living present was irrefutably conveyed by the beggar's words, we laughed and shook our heads and refused to listen any longer. So eager are our people to obliterate the present.

If from such appearances anyone should draw the conclusion that in reality we have no Emperor, he would not be far from the truth. Over and over again it must be repeated: There is perhaps no people more faithful to the Emperor than ours in the south, but the Emperor derives no advantage from our fidelity. True, the sacred dragon stands on the little column at the end of our village, and ever since the beginning of human memory it has breathed out its fiery breath in the direction of Peking in token of homage - but Peking itself is far stranger to the people in our village than the next world. Can there really be a village where the houses stand side by side, covering all the fields for a greater distance than one can see from our hills, and can there be dense crowds of people packed between these houses day and night? We find it more difficult to picture such a city than to believe that Peking and its Emperor are one, a cloud, say, peacefully voyaging beneath the sun in the course of the ages.

Now the result of holding such opinions is a life on the whole free and unconstrained. By no means immoral, however; hardly ever have I found in my travels such pure morals as in my native village. But yet a life that is subject to no contemporary law, and attends only to the exhortations and warnings that come to us from olden times.

I guard against generalizations, and do not assert that in all the ten thousand villages in my province it is so, far less in all the five hundred provinces of China. Yet perhaps I may venture to assert on the basis of the many writings on this subject which I have read, as well as from my own observation - the building of the wall in particular, with its abundance of human material, provided a man of sensibility with the opportunity of traversing the souls of almost all the provinces - on the basis of all this, then, perhaps I may venture to assert that the prevailing attitude to the Emperor shows persistently and universally something fundamentally in common with that of our village. Now I have no wish whatever to represent this attitude as a virtue; on the contrary. True, the essential responsibility for it lies with the government, which in the most ancient empire in the world has not yet succeeded in developing, or has neglected to develop, the institution of the empire to such precision that its workings extend directly and unceasingly to the farthest frontiers of the land. On the other hand, however, there is also involved a certain feebleness of faith and imaginative power on the part of the people, that prevents them from raising the empire out of its stagnation in Peking and clasping it in all its palpable living reality to their own breasts, which yet desire nothing better than but once to feel that touch and then to die.

This attitude then is certainly no virtue. All the more remarkable is it that this very weakness should seem to be one of the greatest unifying influences among our people; indeed, if one may dare to use the expression, the very ground on which we live. To set about establishing a fundamental defect here would mean undermining not only our consciences, but, what is far worse, our feet. And for that reason I shall not proceed any further at this stage with my inquiry into these questions.

Translated by Willa and Edwin Muir
**********************************************************************
தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன்
Pu Pithan ***@gmail.com 2:13 PM (4 hours ago) to me 

மாமல்லன்,

ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்! 
***************

[Wednesday, August 31, 2011 சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ] 

இந்தப் பதிவில் பின் குறிப்பாய் இப்படி எழுதி இருந்தேன்.

பி.கு: இயன்றவர்கள் இதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே. என் போன்ற பெரும்பாலோருக்கு உதவியாய் இருக்கும். ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் படிப்பது தமிழில் படிப்பதுதான். 

**************
பர்மா. மழையில் தொப்பலான ஒரு காலை நேரம். சீக்காளித்தனமான மஞ்சள் வெளிச்சம், உயரமான மதிலைத் தாண்டி சிறைச்சாலைக்குள் சரிந்து கொண்டிருந்தது. சிறை அறைகளுக்கு வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். இரட்டைக் கம்பிக் கதவுகள் கொண்ட பத்துக்குப் பத்து அடி அறைகள், மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகள் போல ஒரு வரிசையில் இருந்தன. படுப்பதற்கான பலகையையும், தண்ணிக்குடத்தையும் தவிர்த்து விட்டால், கிட்டத்தட்ட காலி அறைகள். சிலவற்றில், உள்கதவுக்குப் பின்னால், போர்வையை இழுத்துப் போர்த்திய மாநிற மனிதர்கள் அமைதியாய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.அவர்கள் எல்லாரும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இந்த வாரமோ, அடுத்த வாரமோ தூக்கிலிடப்படுவதற்கு காத்திருப்பவர்கள். 

ஒரு கைதியை வெளியில் கொண்டு வந்தார்கள். இந்துக்காரன். பூஞ்சைக் கண்கள். மொட்டைத் தலை. ஒடிசல் தேகம். ஆளுக்கு சம்பந்தமில்லாத, தடித்து முளைத்த மீசை. நாகேஷூக்கு கிடா மீசை வைத்த மாதிரி. அவனுக்கு காவலாய், நெட்டையான ஆறு காவலன்கள். அவனைத் தூக்கு மேடைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர், முனையில் கத்தி பொருத்திய குழல் துப்பாக்கிகளோடு அவனருகில் நிற்க, மற்றவர்கள் அவன் கைகளில் விலங்கிட்டு, விலங்கில் ஒரு சங்கிலியைக் கட்டி, சங்கிலியின் மறுமுனையைத் தங்கள் இடுப்பு பட்டையோடு கட்டிக் கொண்டார்கள். அவன் கைகளிரண்டையும் உடம்போடு இறுக்கிப் பிணைத்தார்கள். ‘இன்னமும் அங்கே தான் இருக்கிறானா?’ என்று தடவிப் பார்ப்பது போல எந்நேரமும் அவனை மெலிதாகப் பிடித்த படி நெருக்கி நின்று கொண்டிருந்தார்கள். துடித்துக் கொண்டிருக்கும் உயிருள்ள விறால் மீனைக் கையாள்வதைப் போல. ஆனால் அவனோ, ‘இதெல்லாம் யாருக்கோ நடப்பது’ போல எந்த எதிர்ப்பும் இன்றி நின்று கொண்டிருந்தான். நீட்டிய கயிற்றில் கைகளைத் தொய்வாய் நீட்டினான். 

மணி எட்டு அடித்தது. அதைத் தொடர்ந்து, தூரத்து ராணுவ விடுதியின் சங்கொலி, ஈரக்காற்றின் வழியே ஈனஸ்வரமாய் கசிந்து வந்தது. எங்களிடமிருந்து சற்று தள்ளி நின்று, சரளைக் கற்களை குச்சியால் நோண்டிக் கொண்டிருந்த அதிகாரி, இந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தான். அவன் ராணுவத்தில் வைத்தியனாய் இருந்த ஆள். நரைத்த ஈர்க்குச்சி மீசை. கட்டைக் குரல். “சீக்கிரம் ஆகட்டும், ஃப்ரான்ஸிஸ்!” எரிச்சல் தொனிக்க, “இந்நேரத்துக்கு அவன் பொணமாயிருக்கனும். இன்னும் என்னய்யா பண்ணிட்டிருக்க?” 

ஃப்ரான்ஸிஸ், தலைமை சிறைக் காவலன். குண்டன். திராவிடன். வெள்ளை நிற உடற்பயிற்சி ஆடையும், தங்க சட்டமிட்ட கண்ணாடியும் போட்டிருந்தான். கறுத்த கையை ஆட்டிக்கொண்டே, “ஆச்சு சார்! ஆச்சு சார்!” வார்த்தைகளைக் கொப்பளிக்கிற மாதிரி பேசினான். ”எல்லாம் தயார் சார்! தூக்கில போடறவனும் வந்து காத்திட்டிருக்கான். நாம கெளம்ப வேண்டியது தான்” 

“அப்ப, சீக்கிரம் நடங்கய்யா! இந்த வேல முடிஞ்சப்பறம் தான் மத்த கைதிகளுக்கு நாஷ்டா கொடுக்கணும்” 

நாங்கள், தூக்கு மேடை நோக்கி நகர ஆரம்பித்தோம். கைதியின் ஆளுக்கொரு பக்கமாய் இரண்டு துப்பாக்கி சகித காவலர்களும், அவன் தோள்பட்டையை அழுந்தப் பிடித்த படி பின்னால் இருவருமாய்ப் போக நடந்தோம். ஒரே நேரத்தில் தள்ளிவிடுவதைப் போலவும், தாங்கிக் கொள்வதைப் போலவும் அவனை நடாத்திக் கொண்டு போனார்கள். பத்தடி கூட போயிருக்க மாட்டோம், ‘திடுதிப்’பென்று இந்த ஊர்வலம் நின்று போனது. பாதையில் ஒரு நாய்! அடர்ந்த ரோமத்தோடு பெரிய நாய்! எப்போது வந்தது என்று தெரியாத படிக்கு, ‘திடும்’ என நாலு கால் பாய்ச்சலில், குரைத்த படி எங்களுக்கிடையில் தாவியது. ‘எத்தனை பேர் மொத்தமாய்!’ அதிஉற்சாகத்தோடு, முழு உடம்பையும் உதறிய படி எங்களைச் சுற்றிக் குதியாளம் போட்டது. நாங்கள் உஷாராகி அதை பிடிக்கும் முன், ஒரே பாய்ச்சலில் கைதியிடம் போய்விட்டது. எவ்விக் குதித்து அவன் மூஞ்சியை நக்கப் பார்த்தது. அதைப் பிடிக்கக் கூடத் தோன்றாமல், வாய் பிளந்த படி…நாங்கள். 

“யார்யா இந்த காட்டுமாக்கான உள்ள விட்டது?” அதிகாரிக்கு கோபம் “யாராச்சும் அதப் பிடிச்சுத் தொலைங்கய்யா!” 

ஒரு காவலன், நாயைப் பிடிக்க குத்துமதிப்பாய் எத்தனித்தான். ஆனால் நாயோ, ‘இது ஏதோ விளையாட்டு போல’, அவனிடம் பிடி படாமல், குதித்து, கும்மாளமிட்டது. ஐரோப்பிய-ஆசியா கலந்தடித்த சின்ன வயசுக் காவலன் ஒருத்தன், சரளைக்கல்லை அள்ளி வீசி அதை விரட்டப் பார்த்தான். சுளுவாய்த் தப்பி, எங்களைப் பார்த்து வந்தது. அதன் தொடர் குரைப்பு சத்தம் சிறைச்சுவர்களில் மோதித் திரும்பியது. இன்னமும் இரண்டு காவலர்களின் பிடியில் இருந்த கைதி, இதுவும் தூக்குவதற்கு முன்னான ஒரு சம்பிரதாயம் போல வெறித்துக் கொண்டிருந்தான். நாயை ஒருவழியாய்ப் பிடித்து விட்டார்கள். அதன் கழுத்து வாரில், என் கைத்துண்டைப் போட்டு இழுத்துச் சென்றார்கள். நாய் அவ்வளவு சாமானியமாய்ப் போய்விடவில்லை. முரண்டிக் கொண்டும், முனகிக் கொண்டும் போனது. 

இன்னும் நாப்பதடி தூரத்தில் தூக்கு மேடை. எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த கைதியின் மாநிற வெற்று முதுகைப் பார்த்த படி நான் அவன் பின்னால். கைகள் இறுக கட்டியதில் ‘தத்தளாங்கு’ தடுமாற்ற நடை. முழங்காலை விரைக்காமல், தவ்வி தவ்விப் போகும் இந்திய நடை. ஈரத்தரையில் கால் பதித்து அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் அவனது உச்சிக்குடுமி ‘அப்படியும், இப்படியும்’ ஆடியது. வழியில் இருந்த சகதிச்சேற்றை, காவலர்களின் பிடி தந்த அழுத்தத்தையும் மீறி, கால் படாமல் தாண்டிப் போனான். 

அந்த நொடி வரைக்கும், ஒரு சீக்குபோக்கு இல்லாத, பிரக்ஞையுள்ள சக மனுஷனைக் கொல்வதின் விபரீதம் எனக்கு உறைக்கவே இல்லை. ஆனால், சேறு காலில் படாமலிருக்க அவன் தாண்டிய நொடியில், முழு துடிப்புடன் இருக்கும் ஒரு உயிரை அநியாயமாய் சாகடிப்பதன் அபத்தம் எனக்கு விளங்கியது. அவன் ஒன்றும் சாகக் கிடக்கவில்லை. எங்களை மாதிரி திட காத்திரமாய்த் தான் இருந்தான். உடம்பில் எதும் கோளாறு கிடையாது. தின்பதை செரிக்கும் வயிறு, செத்தழிந்துப் புத்துயிர்த்துக் கொண்டேயிருக்கும் தோல், வளர்ந்து கொண்டிருக்கும் நகங்களென…என்ன பயன்? இன்னும் கொஞ்ச நிமிடங்களில், அந்தரத்தில் காலை விலுக்கப் போகும் அந்த ஒரு கணத்துக்கும் குறைவான நேரத்தில் கூட இவன் நகங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். கண்கள் சரளைச் செம்மண்ணையும், நிறமழிந்து போன சுவர்களையும் பார்த்துக் கொண்டு, மூளை ஞாபகங்களை தேக்கிக் கொண்டு, நடக்கப் போவதை அனுமானித்து, பகுத்தறிந்து…இந்த சமயத்திலும் தேங்கின தண்ணீர் காலில் படாமல் தாண்டும் அளவுக்கு. இவனும், நாங்களும் ஒரே உலகத்தைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து ஒன்றாய் நடந்து போய்க் கொண்டு…இன்னும் இரண்டு நிமிடம் தான், ‘சட்’டென ஒருத்தன் விட்டுப் போய்விடுவான். ஒரு ஆன்மா காலி, ஒரு உலகமும். 

தூக்கு மேடை, சிறைச்சாலை இருந்த இடத்திலிருந்து தனியே தள்ளி இருந்த கோரை மண்டிய சின்ன வெளியில் இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரு கல் வரிசை வைத்துக் கட்டின செங்கல் சாவடி. மேலாக மரப்பலகை தளம். தளத்துக்கு மேலே இரண்டு தூண்கள். அவற்றை இணைத்து ஒரு விட்டம். விட்டத்துக்கு நடுவே தொங்கும் கயிறு. தூக்கப் போகிறவன், வெள்ளை நிற, சிறைச் சீருடையில், அவன் இயக்கப் போகும் கருவிக்கருகே காத்துக் கொண்டிருந்தான். அவனும் ஒரு கைதி. நரைத்த தலை. உள்ளே நுழைந்த எங்களைப் பார்த்து ஒரு கூழைக் கும்பிடு போட்டான். ஃப்ரான்ஸிஸ் கண் காட்டியதும், இன்னும் இறுகப் பிடித்த படி, கைதியை தூக்கு மேடை நோக்கி நகர்த்தி, தக்கி, முக்கி ஏணியில் ஏற்றிவிட்டார்கள். பின்னாடியே, தூக்கில் போடுபவனும் ஏறிப் போனான். கயிற்றைக் கைதியின் கழுத்தில் போட்டான். 

ஐந்தடி தூரத்தில் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். காவலர்கள் தூக்கு மேடையைச் சுற்றி ஒரு சுமார் வட்டமாய் நின்றார்கள். சுருக்கு முடிச்சு போடும் போது, கைதி அவனுடைய சாமி பேரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தான். உச்சஸ்தாயியில் “ராம்! ராம்! ராம்!”, மீண்டும், மீண்டும், “ராம்! ராம்! ராம்!” பயந்தாங்கொள்ளியின் அபயக்குரல் மாதிரி அலறாமல், அவசரமில்லாத தொனியில் மணி அடிக்கிறாற் போல, லயந் தவறாத உச்சாடனம். எசப்பாட்டாய் நாய் ஊளையிட்டது. தூக்கப் போகிறவன், இன்னுமும் மேடையில் தான் இருந்தான். ஒரு துணிப்பை போட்டு, கைதியின் முகத்தை மூடினான். துணியால் சன்னப் பட்டுப் போனாலும், அந்த சத்தம் ஒலித்துக் கொண்டு தானிருந்தது. “ராம்! ராம்! ராம்! ராம்!ராம்! ராம்!” திரும்பத் திரும்ப. 

மேடையில் இருந்து இறங்கிவந்து, தூக்கில்நெம்புவதற்கானதடியைப்பிடித்தபடி, தூக்கில்போடுபவன் தயார். கைதியின்குரல்சன்னமாய், ஒருகணம்கூடநிதானம்இழக்காமல் “ராம்! ராம்! ராம்!”, தொடர்ந்துஒலித்துக்கொண்டிருந்தது. கீழேபார்த்தபடி, அதிகாரி, குச்சியால்தரையை மெல்லக் குத்திக்கொண்டிருந்தான். கைதியின்கூப்பாட்டைஎண்ணிக்கொண்டிருப்பதுபோலநின்றுகொண்டிருந்தான்; அம்பதுஅல்லதுநாறுவரைக்கும்போகட்டும்எனகணக்குவைத்திருந்ததுபோல. எல்லோரும் ‘ஒருமாதிரி’ ஆகிவிட்டோம். இந்தியாக்காரன்களுக்கு, பால் திரிந்தமாதிரிமுகம் மாறிப்போனது. கைகள் பிணைக்கப்பட்டு, முகத்தை மூடி மேடையில் நிறுத்தப் பட்டிருந்தவனின் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.ஒவ்வொரு கூப்பாடும், மிச்சமிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடி. அப்போது எங்கள் எல்லோருக்கும் ஒரேயொரு நினைப்பு தான். ‘அவனை சீக்கிரம் கொன்னு போட்டு விடுங்கள். சகிக்க முடியாத இந்த சத்தத்தை நிறுத்துங்கள்’ 

திடீரென முடிவெடுத்தவனாய், அதிகாரி தலை நிமிர்த்திய படி, கையிலிருந்த குச்சியை ‘விஷ்க்’ என்று வீசி ‘ச்சலோ!’ என்று கூவினான். 

‘சடக்!’ என்று ஒரு சத்தம். தொடர்ந்து மயான அமைதி. கைதியைக் காணவில்லை. கயிறு மட்டும் பின்னிக் கொண்டிருந்தது. நாயை பிடியிலிருந்து விட்டு விட்டோம். அது தூக்கு மேடைக்கு பின்னால் ஓடிப் போனது. போன வேகத்தில் நின்று, குரைத்தது. பிறகு, ஒரு மூலையில் ஒடுங்கி, எங்களை அச்சத்துடன் பார்த்தது. நாங்களும் மேடைக்குப் பின்னால் போனோம். கால் விரல்கள் தரையைப் பார்த்து விறைத்த வாக்கில், மெதுவாய் சுற்றிய படி ஜடமாய்த் தொங்கிக் கொண்டிருந்தான். 

அதிகாரி, குச்சியால் அந்த வெற்றுடம்பைக் குத்திப் பார்த்தான். அது லேசாக சாய்ந்தாடியது. ‘கத முடிஞ்சிரிச்சி!’ அதிகாரி, தூக்கு மேடையின் கீழே இருந்து பெருமூச்சு விட்டபடி நகர்ந்தான். அவன் முகத்திலிருந்த கடுப்பு போய் விட்டது. கைக்கடிகாரத்தை ஏறிட்ட படி, ‘மணி எட்டடிச்சு எட்டாயிரிச்சி. நல்ல வேளை, இன்னிக்கி இவ்வளவு தான்’ என்றான். 

துப்பாக்கிமுனை கத்திகளை உருவி எடுத்திக் கொண்டு காவலர்கள் கிளம்பி விட்டார்கள். நாய், சேட்டை பண்ணியதை உணர்ந்த மாதிரி, வாலையிடுக்கிக் கொண்டுஅவர்கள் பின்னாலே நழுவியது. நாங்களும், தூக்கு மேடை இடத்திலிருந்து கிளம்பி, சாகக் காத்திருக்கும் கைதிகளின் அறைகளையும் கடந்து, சிறைச்சாலையின் நடுவில் இருந்த பெரிய வெளி வழி நடந்தோம். காவலர்களின் லத்திக் கண்காணிப்பில், கைதிகள் நாஷ்டா பெற்றுக் கொண்டிருந்தார்கள். தகரக் கும்பாக்களை ஏந்திய படி, நீண்ட வரிசைகளில் குத்துக்காலிட்டு அவர்கள் உட்கார்ந்திருக்க, இரண்டு காவலர்கள், வாளியிலிருந்து சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தூக்கில் போடுவது முடிந்த பிறகு, இந்த சாதாரண தினப்படி நிகழ்ச்சி, ஒரு ஆறுதலான காட்சி. ‘ஒரு வழியாய் முடிந்து போனது’ என்பதில் எல்லோருக்குமே ஒரு நிம்மதி. பாடலாம், ஓடலாம் இல்லை சத்தமாய் சிரிக்கலாம் என்று ஒரு உத்வேகம். கொஞ்ச நேரத்தில், எல்லோரும் கலகலப்பாகி விட்டோம். 

ஒரு ஐரோப்பிய-ஆசிய பொடியன், என் பக்கத்தில் வந்து, தூக்கு மேடை இருந்த திசையில் கண் காட்டி அர்த்தமாய் சிரித்தான். ‘உங்களுக்கு கத தெரியுமா, சார்? நம்மாளு இல்ல, (செத்தவனை சொல்கிறான்) அவரு முறையீட்ட தட்டிக் கழிச்சிட்டாங்கன்னதும், அப்டியே பயத்தில ஒன்னுக்குப் போயிட்டாப்ல! …ஒரே ஓரு சிகரெட் வாங்கிக்க சார்! இந்த வெள்ளி டப்பா பிடிச்சிருக்கா சார்? ரண்டு ரூவா எட்டணா தான் சார்! டப்பாக்காரன்ட்ட வாங்கினது. அசல் ஐரொப்பா பாணி சார்!’ 

ஏனென்று தெரியாமலே நிறைய பேர் சிரித்தார்கள். 

அதிகாரியோடு நடந்து வந்த ஃப்ரான்ஸிஸ் உளறிக் கொட்டிக் கொண்டு வந்தான். “எல்லாம் நல்ல படியா நடந்திரிச்சி சார்! ‘இப்டி!’ங்கிறதுகுள்ளாற முடிஞ்சி போச்சி! ஆனா, எல்லா தடவயும் இப்படி இல்ல சார். சில சமயம் டாக்டர் எல்லாம் வந்து, ‘செத்துட்டானா?’ன்ட்டு காலப் பிடிச்சி இழுத்துப் பாத்து…ச்சே! துப்பரவா பிடிக்காத விசயம்” 

“என்ன, அளம்பறியா? ம்? ” என்றான் அதிகாரி. 

“அப்படி இல்ல சார்! செல சமயம் இவனுகள சமாளிக்க முடியாது. ஒரு தடவ, ஒர்த்தன இட்டார போனப்போ, கூண்டில இருந்த கம்பிகள இறுக்கிப் பிடிச்சிக்கிட்டான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க சார்! நாங்க ஆறு பேரு, காலுக்கு மூணு பேரா பிடிச்சி இழுக்க வேண்டி ஆயிப் போச்சு! நா அவன்ட்ட இதமா, பதமா சொல்லிப் பாத்தேன். ‘இந்தா பாருப்பா! ஒன்னால எங்களுக்கு எவ்வளவு சிரமன்னு யோசிச்சிப் பாரு!’ ம்ஹூம்! அவன் அசரல. ரொம்பவே படுத்திட்டான்!” 

என்னையறியாமல் பலமாக சிரித்து விட்டேன். எல்லோரும் சிரித்தார்கள். அதிகாரியும் மெதுவே புன்னகைத்து விட்டு, ‘என்ட்ட, கார்ல ஒரு பாட்டில் விஸ்கி இருக்கு. வாங்க, ஆளுக்கொரு ரவுண்ட் வரும் னு நெனைக்கேன்’ கொஞ்சம் சுமூகமாகவே கூப்பிட்டான். 

சிறைச்சாலையின் பெரிய இரட்டைக் கதவுகளைத் தாண்டி, வீதிக்கு வந்தோம். ஒரு பர்மிய நியாயஸ்தன், ‘Pulling at his legs!’ திடீரென குலுங்கி சிரித்தான். எங்களுக்கும் சிரிப்பு வந்து விட்டது. ஃப்ரான்ஸிஸ் சொன்ன கதை, அந்த சமயத்தில் அபூர்வ ஹாஸ்யமாய்ப் பட்டது. ஐரோப்பாக்காரன், உள்ளூர்க்காரன் எல்லாரும், ஒன்றாக சகஜமாய்த் ’தண்ணி’யடித்தோம். நூறடி தள்ளி, செத்தவன் கிடந்தான்.
Original: A Hanging - By George Orwell
http://www.maamallan.com/2011/11/blog-post_177.htmlA Hanging

by George Orwell

It was in Burma, a sodden morning of the rains. A sickly light, like yellow tinfoil, was slanting over the high walls into the jail yard. We were waiting outside the condemned cells, a row of sheds fronted with double bars, like small animal cages. Each cell measured about ten feet by ten and was quite bare within except for a plank bed and a pot of drinking water. In some of them brown silent men were squatting at the inner bars, with their blankets draped round them. These were the condemned men, due to be hanged within the next week or two.
One prisoner had been brought out of his cell. He was a Hindu, a puny wisp of a man, with a shaven head and vague liquid eyes. He had a thick, sprouting moustache, absurdly too big for his body, rather like the moustache of a comic man on the films. Six tall Indian warders were guarding him and getting him ready for the gallows. Two of them stood by with rifles and fixed bayonets, while the others handcuffed him, passed a chain through his handcuffs and fixed it to their belts, and lashed his arms tight to his sides. They crowded very close about him, with their hands always on him in a careful, caressing grip, as though all the while feeling him to make sure he was there. It was like men handling a fish which is still alive and may jump back into the water. But he stood quite unresisting, yielding his arms limply to the ropes, as though he hardly noticed what was happening.
Eight o'clock struck and a bugle call, desolately thin in the wet air, floated from the distant barracks. The superintendent of the jail, who was standing apart from the rest of us, moodily prodding the gravel with his stick, raised his head at the sound. He was an army doctor, with a grey toothbrush moustache and a gruff voice. ‘For God's sake hurry up, Francis,' he said irritably. ‘ The man ought to have been dead by this time. Aren't you ready yet?'
Francis, the head jailer, a fat Dravidian in a white drill suit and GOLD spectacles, waved his black hand. ‘Yes sir, yes sir,' he bubbled. ‘All iss satisfactorily prepared. The hangman iss waiting. We shall proceed.'
‘Well, quick march, then. The prisoners can't get their breakfast till this job's over.'
We set out for the gallows. Two warders marched on either side of the prisoner, with their rifles at the slope; two others marched close against him, gripping him by arm and shoulder, as though at once pushing and supporting him. The rest of us, magistrates and the like, followed behind. Suddenly, when we had gone ten yards, the procession stopped short without any order or warning. A dreadful thing had happened — a dog, come goodness knows whence, had appeared in the yard. It came bounding among us with a loud volley of barks, and leapt round us wagging its whole body, wild with glee at finding so many human beings together. It was a large woolly dog, half Airedale … For a moment it pranced round us, and then, before anyone could stop it, it had made a dash for the prisoner, and jumping up tried to lick his face. Everyone stood aghast, too taken aback even to grab at the dog.
‘Who let that bloody brute in here?' said the superintendent angrily. ‘Catch it, someone!'
A warder, detached from the escort, charged clumsily after the dog, but it danced and gambolled just out of his reach, taking everything as part of the game. A young Eurasian jailer picked up a handful of gravel and tried to stone the dog away, but it dodged the stones and came after us again. Its yaps echoed from the jail wails. The prisoner, in the grasp of the two warders, looked on incuriously, as though this was another formality of the hanging. It was several minutes before someone managed to catch the dog. Then we put my handkerchief through its collar and moved off once more, with the dog still straining and whimpering.
It was about forty yards to the gallows. I watched the bare brown back of the prisoner marching in front of me. He walked clumsily with his bound arms, but quite steadily, with that bobbing gait of the Indian who never straightens his knees. At each step his muscles slid neatly into place, the lock of hair on his scalp danced up and down, his feet printed themselves on the wet gravel. And once, in spite of the men who gripped him by each shoulder, he stepped slightly aside to avoid a puddle on the path.
It is curious, but till that moment I had never realized what it means to destroy a healthy, conscious man. When I saw the prisoner step aside to avoid the puddle, I saw the mystery, the unspeakable wrongness, of cutting a life short when it is in full tide. This man was not dying, he was alive just as we were alive. All the organs of his body were working — bowels digesting food, skin renewing itself, nails growing, tissues forming — all toiling away in solemn foolery. His nails would still be growing when he stood on the drop, when he was falling through the air with a tenth of a second to live. His eyes saw the yellow gravel and the grey walls, and his brain still remembered, foresaw, reasoned — reasoned even about puddles. He and we were a party of men walking together, seeing, hearing, feeling, understanding the same world; and in two minutes, with a sudden snap, one of us would be gone — one mind less, one world less.
The gallows stood in a small yard, separate from the main grounds of the prison, and overgrown with tall prickly weeds. It was a brick erection like three sides of a shed, with planking on top, and above that two beams and a crossbar with the rope dangling. The hangman, a grey-haired convict in the white uniform of the prison, was waiting beside his machine. He greeted us with a servile crouch as we entered. At a word from Francis the two warders, gripping the prisoner more closely than ever, half led, half pushed him to the gallows and helped him clumsily up the ladder. Then the hangman climbed up and fixed the rope round the prisoner's neck.
We stood waiting, five yards away. The warders had formed in a rough circle round the gallows. And then, when the noose was fixed, the prisoner began crying out on his god. It was a high, reiterated cry of ‘Ram! Ram! Ram! Ram!', not urgent and fearful like a prayer or a cry for help, but steady, rhythmical, almost like the tolling of a bell. The dog answered the sound with a whine. The hangman, still standing on the gallows, produced a small cotton bag like a flour bag and drew it down over the prisoner's face. But the sound, muffled by the cloth, still persisted, over and over again: ‘Ram! Ram! Ram! Ram! Ram!'
The hangman climbed down and stood ready, holding the lever. Minutes seemed to pass. The steady, muffled crying from the prisoner went on and on, ‘Ram! Ram! Ram!' never faltering for an instant. The superintendent, his head on his chest, was slowly poking the ground with his stick; perhaps he was counting the cries, allowing the prisoner a fixed number — fifty, perhaps, or a hundred. Everyone had changed colour. The Indians had gone grey like bad coffee, and one or two of the bayonets were wavering. We looked at the lashed, hooded man on the drop, and listened to his cries — each cry another second of life; the same thought was in all our minds: oh, kill him quickly, get it over, stop that abominable noise!
Suddenly the superintendent made up his mind. Throwing up his head he made a swift motion with his stick. ‘Chalo!' he shouted almost fiercely.
There was a clanking noise, and then dead silence. The prisoner had vanished, and the rope was twisting on itself. I let go of the dog, and it galloped immediately to the back of the gallows; but when it got there it stopped short, barked, and then retreated into a corner of the yard, where it stood among the weeds, looking timorously out at us. We went round the gallows to inspect the prisoner's body. He was dangling with his toes pointed straight downwards, very slowly revolving, as dead as a stone.
The superintendent reached out with his stick and poked the bare body; it oscillated, slightly. ‘He's all right,' said the superintendent. He backed out from under the gallows, and blew out a deep breath. The moody look had gone out of his face quite suddenly. He glanced at his wrist-watch. ‘Eight minutes past eight. Well, that's all for this morning, thank God.'
The warders unfixed bayonets and marched away. The dog, sobered and conscious of having misbehaved itself, slipped after them. We walked out of the gallows yard, past the condemned cells with their waiting prisoners, into the big central yard of the prison. The convicts, under the command of warders armed with lathis, were already receiving their breakfast. They squatted in long rows, each man holding a tin pannikin, while two warders with buckets marched round ladling out rice; it seemed quite a homely, jolly scene, after the hanging. An enormous relief had come upon us now that the job was done. One felt an impulse to sing, to break into a run, to snigger. All at once everyone began chattering gaily.
The Eurasian boy walking beside me nodded towards the way we had come, with a knowing smile: ‘Do you know, sir, our friend (he meant the dead man), when he heard his appeal had been dismissed, he pissed on the floor of his cell. From fright. — Kindly take one of my cigarettes, sir. Do you not admire my new silver case, sir? From the boxwallah, two rupees eight annas. Classy European style.'
Several people laughed — at what, nobody seemed certain.
Francis was walking by the superintendent, talking garrulously. ‘Well, sir, all hass passed off with the utmost satisfactoriness. It wass all finished — flick! like that. It iss not always so — oah, no! I have known cases where the doctor wass obliged to go beneath the gallows and pull the prisoner's legs to ensure decease. Most disagreeable!'
‘Wriggling about, eh? That's bad,' said the superintendent.
‘Ach, sir, it iss worse when they become refractory! One man, I recall, clung to the bars of hiss cage when we went to take him out. You will scarcely credit, sir, that it took six warders to dislodge him, three pulling at each leg. We reasoned with him. “My dear fellow,” we said, “think of all the pain and trouble you are causing to us!” But no, he would not listen! Ach, he wass very troublesome!'
I found that I was laughing quite loudly. Everyone was laughing. Even the superintendent grinned in a tolerant way. ‘You'd better all come out and have a drink,' he said quite genially. ‘I've got a bottle of whisky in the car. We could do with it.'
We went through the big double gates of the prison, into the road. ‘ Pulling at his legs!' exclaimed a Burmese magistrate suddenly, and burst into a loud chuckling. We all began laughing again. At that moment Francis's anecdote seemed extraordinarily funny. We all had a drink together, native and European alike, quite amicably. The dead man was a hundred yards away.

"A Hanging" by George Orwell was first published in Adelphi, August 1931. 

சுஜாதா குறிப்பிட்ட காட்சி:

கைகால்களில் விலங்கிடப்பட்ட ஒரு மனிதன் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். வழியில் மழைபெய்து கொஞ்சம் நீர் தேங்கி நிற்கிறது. அதை மிதித்துவிடாமல் அவன் கொஞ்சம் சுற்றிக்கொண்டு செல்கிறான்.

பி.கு: இயன்றவர்கள் இதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே. என் போன்ற பெரும்பாலோருக்கு உதவியாய் இருக்கும். ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் படிப்பது தமிழில் படிப்பதுதான்.

சுவர் - சிறுகதை
'படிகள்' இதழில் வெளியான சிறுகதை
பொய்மான்
செல்வகுமார் கணேசன் http://poimaan.blogspot.in/p/blog-page.html


சுவர்

ழான் பவுல் சார்த்தர்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : ஜனனி (சாரு நிவேதிதா)

அவர்கள் எங்களை ஒரு பெரிய வெள்ளை அறையில் தள்ளினார்கள். அந்த வெளிச்சத்தில் என் கண்கள் கூசின. பின், ஒரு மேஜையையும் அதன் பின்னால் நான்கு சிவிலியன்கள் காகிதங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். அவர்கள் இன்னொரு கைதிக்கூட்டத்தையும் பின்புறத்தி அடைத்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கு அந்த முழு அறையையும் நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருந்த்து. அதில் எனக்கு தெரிந்த பலர் இருந்தார்கள்; மற்ற சிலர் வெளிநாட்டவராக இருக்கவேண்டும். எனக்கு முன்னால் இருந்த இருவரும் பொன்னிறமாக இருந்தார்கள்; உருண்டையானமண்டை; இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். ஃப்ரெஞ்சுக்காரர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் சிறியவன் தன் பேண்ட்டை இழுத்து இழுத்து சரி செய்துகொண்டே இருந்தான் : பீதி.

இப்படியே மூன்றுமணி நேரம் கழிந்தது. நான் மயங்கிய நிலையில் இருந்தேன். என் தலை வெறுமையாகிவிட்ட மாதிரி இருந்தது; ஆனால் அறை நன்றாக உஷ்ணப்படுத்தப்பட்டிருந்ததால் அது எனக்கு உகந்த்தாக இருந்தது; கடந்த இருபத்து நான்கு மணி நேரமாக நாங்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தோம். காவல்காரர்கள் கைதிகளை ஒருவர் பின் ஒருவராக மேஜைக்கருகில் கொண்டு வந்தார்கள். அந்த நால்வரும் கைதிகளை அவர்கள் பெயரையும், தொழிலையும் கேட்டார்கள். அநேகமாக அவர்கள் அதற்கு மேல் கேட்கவில்லை-அல்லது ஏதாவது ஒன்றிரண்டு கேள்விகள்: “ வெடி மருந்துக் கிடங்கு நாச வேலையில் உனக்கு ஏதாவது சம்பந்தமுண்டா?” “ஒன்பதாம் தேதி காலையில் நீ எங்கே இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?” பதிலில் அவர்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை. கொஞ்ச நேரம் கைதிகளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுத ஆரம்பித்தார்கள்.

டாமிடம்(TOM) அவன் ‘இண்டர்நேஷனல் ப்ரி கேடி’ ல் இருந்தது உண்மையா என்று கேட்டார்கள்; அவர்கள் அவனுடைய கோட்டிலிருந்தே அந்தக் காகிதங்களை கைப்பற்றி இUuIIருந்ததால் அவனால் அதற்கு வேறுவிதமாக பதில் சொல்ல முடியவில்லை. ழுவாலை(Luan) nhNNஅவா்கள் எதுவும் கேட்கவில்லை்; ஆனால் அவன் தன் பெயரைச் சொன்னதும் நீண்ட நேரம் எழுதினார்கள்.

ழுவா(ன்) சொன்னான்: “என் சகோதரன் ஜோஸ்தான் கிளா்ச்சிக்காரன். அவன் இங்கே இல்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது”.

அவர்கள் பதில் சொல்லவில்லை. ழுவானே மேலும் சொன்னான்;” நான் ஒன்றும் செய்துவிடவில்லை.இன்னொருத்தருக்காக நான் சாக விரும்பவில்லை.

உதடுகள் துடிக்க அவன் பேசுவதை நிறுத்தி, ஒரு காவல்காரன் அவனைக்கொண்டு சென்று விட்டான்.இப்போது என் முறை .

”உன் பெயர் தானே பாப்லோ இபிதா ?: “ஆமாம்”

ரமோ (ன்) க்ரி (ஸ்) எங்கே இருக்கிறான்?

“தெரியாது.

”அவனை நீ ஆறாம் தேதியிலிருந்து பத்தொன்பதாம் தேதி வரை மறைத்து வைத்திருந்தாய்”. “இல்லை”

ஒரு நிமிடம் அவர்கள் ஏதோ ஏழுதினார்கள்.பின் காவல்காரன் என்னையும் கொண்டு சென்று விட்டான். குறுகலான தாழ்வாரத்தில் டாமும் , ழுவானும் இரண்டு காவல்காரர்களோடு காத்துக் கொண்டிருந்தார்கள்.பின் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். காவல்காரர்களில் ஒருவனை டாம் கேட்டான். “இதன் பிறகு?” “பிறகு என்ன?” என்று திருப்பிக் கேட்டான் காவல்காரன்.

“நடந்தது விசாரணையா? தீர்ப்பா?”. “தீர்ப்பு” என்றான் காவல்காரன். “அவர்கள் எங்களை என்ன செய்யப் போகிறார்கள்?” காவல்காரன் வறட்சியாகக் கூறினான், “தண்டனையை உங்களுடைய அறையில் படிப்பார்கள்” சொல்லப் போனால் எங்கள் அறை என்பது ஆஸ்பத்திரியின் நிலவறைகளில் ஒன்று. காற்றின் சுழற்சியால் அங்கே பயங்கரமான குளிராயிருந்தது. இரவு பூராவும் நாங்கள் நடுங்கிக் கொண்டே இருந்தோம், பகலிலும் கூட நிலைமை தேவலாம், என்றுசொல்ல முடியாது. மேலும் கடந்த ஐந்து நாட்களையும் நான் ஒரு துறவி மடத்தின் அறையில்தான் கழித்திருந்தேன். அதன்சுவரின் சிதிலத்தைப் பார்த்த்போது அது கடைக்காலத்தைசோந்த்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. கைதிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அந்த அளவுக்கு இடம் கிடைக்காமல் அவாகள் எங்களை எந்த வகையான இடமாயிருந்தாலும் அதில் அடைத்திருந்தாகள். நான் என் அறையை விட்டுவிடவில்லை. குளிரால் நான் ரொம்பவும் பாதிக்கப்படாவிட்டாலும், நான் தனியாக இருந்தேன். அது கொஞ்ச நேரத்திலேயே எரிச்சலைக் கொடுத்தது. நிலவறையில் என்றால் என்னுடன் சக கைதிகளும் இருந்தார்கள். ழுவா(ன்) எப்போதாவதுதான் பேசினான். காரணம், அவன் பயந்து போய் இருந்தான். மேலும் எதுவும் சொல்லுகிற அளவுக்கு அவனுக்குப் பிராயமும் இல்லை. ஆனால் டாம் அதிகமாகப் பேசுவான். அவனுக்கு ஸ்பானிஷ் ரொம்ப நன்றாகத் தெரிந்திருந்தது. நிலவறையில் ஒரு பெஞ்சும் நான்கு பாய்களும் கிடந்தன. அவர்கள் எங்களை திரும்ப அழைத்துச் சென்றதும் நாங்கள் உட்கார்ந்து கொண்டு மிக அமைதியாகக் காத்திருந்தோம். ரொம்ப நேர அமைதிக்குப் பிறகு டாம் சொன்னான், “நம்மை நன்றாகப் போட்டு ‘ஏறி’ விட்டான்கள்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் இந்தப் பொடியனை எதுவும் செய்து விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றேன் நான்.

“அவனுக்கு எதிராக அவர்களிடம் ஒன்று கூட கிடையாது. அவன் ஒரு குடிப்படைக்கானின் தம்பி, அவ்வளவுதான்” என்றான் டாம்.

நான் ழுவானைப் பார்த்தேன். அவன் கேட்டுக் கொண்டிருப்பது போல் தெரியவில்லை. டாம் மேலும் சொன்னான், “ஸரகோஸாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா உனக்கு? ரோட்டி மனிதர்களைப்படுக்க வைத்து அவர்கள் மேல் ட்ரதக்குகளை ஒட விடுகிறார்கள். தப்பி ஒடிவந்த மொராக்க நாட்டுக்காரன் ஒருவன் சொன்னான். இது குண்டுகளை மிச்சம்படுத்துவதற்காகவாம், அவர்கள் சொல்லுகிறார்கள்”.

”பெட்ரோலை அது மிச்சப்படுத்தாது” என்றேன் நான்.

டாமின் மேல் எரிச்சலடைந்தேன்: அவன் அதைச் சொல்லியிருக்கக் கூடாது.

”பிறகு, இதையெல்லாம் ரோட்டில் மேற்பார்வை செய்து கொண்டு நடந்து செல்லும் அதிகாரிகள், பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு போகிறார்கள். அந்த ஆட்களையெல்லாம் சுத்தமாக முடித்துவிடுவார்கள் என்றா நினைக்கிறாய்? அதுதான் இல்லை. அப்படியே அலறிக்கொண்டே இருக்க வைத்து விடுவார்கள். சமயங்களில் ஒரு மணி நேரம், மொராக்கன் சொன்னான். முதல் தடவையாக வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டானாம்.

“அதையே அவர்கள் இங்கேயும் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை, உண்மையிலேயே குண்டுகள் போதவில்லை என்றால் தவிர” என்றேன் நான்.

நான்கு காற்றுத் துவாரங்கள் வழியாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. மேல் கூரையில் இடப்பக்கத்தில் அவர்கள் வட்டமான ஒரு திறப்பைச் செய்திருந்தார்கள். அதிலிருந்து வானத்தைப்பார்க்கலாம். வழக்கமாக ஒரு அடைப்பால் மூடியிருக்கும் இந்த துவாரத்திலிருந்துதான் அவர்கள் இந்த நிலவறைக் கிடங்கில் நிலக்கரியைக் கொட்டுவார்கள். அந்த துவாரத்துக்குக் கொஞ்சம் கீழே ஒரே நிலக்கரித் தூளாயிருந்தது; ஆஸ்பத்திரியை உஷ்ணப்படுத்துவதற்கு வேண்டிய நிலக்கரி. ஆனால் போரின் ஆரம்பத்தில் நோயாளிகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு விட்ட்தால் நிலக்கரி உபயோகப்படுத்தப் படாமலேயே இங்கு தங்கிவிட்ட்து. சமயங்களில் அவர்கள் மறந்துபோய் மேல் திறப்பை மூடாமல் விட்டு இதன்மேல் மழையும் பெய்திருக்கிறது.

டாம் குளிரால் நடுங்க ஆரம்பித்துவிட்டான். “குட் ஜுஸஸ்! பயங்கரமாக குளிருகிறது..., இதோ மறுபடியும்”.

எழுந்து நின்ற அவன் உடல் பயிற்சி செய்ய ஆரம்பித்தான். ஒவ்வொரு அசைவிலும் மார்பில் அவனுடைய சட்டை திறந்தது. ரோமத்துடன், வெள்ளை மார்பு. மல்லாந்து படுத்து, கால்களை உயர்த்தி சைக்கிள் விடுவது போல் கால்களை சுழற்றினான். அவனுடைய பிட்டப் பகுதி துடிப்பதைப் பார்த்தேன். டாம் திடமானவன் என்றாலும் ரொம்ப சதையாகவும் இருந்தான். துப்பாக்கி ரவை அல்லது அதன் கூர்மையான கத்தி முனை இந்த மென்மையான சதைக் குவியலில் எப்படி வெண்ணெயில் செருகுவது மாதிரி சட்டென்று புகுந்து மறையும் என்பதை நினைத்தேன். அவன் மெலிந்தவனாக இருந்திருந்தால் அது இப்படி என்னை நினைக்க வைத்திருக்காது.

நான் உறைந்து போகவில்லை, ஆனால் என் தோள்களையும் மேற்கைகளையும் என்னால் உணரவே முடியவில்லை. சமயங்களில் எதையோ மறந்து போய் விட்டுவிட்ட மாதிரி எனக்குத்தோன்றி, என் கோட் எங்கேயென்று சுற்றிலும் தேடி, பின்புதான் எனக்கு அவர்கள் கோட்டே தரவில்லை என்பது ஞாபத்துக்கு வரும். அது அசெளகர்யமாகவே இருந்தது. எங்களின் சட்டையை மட்டும் விட்டு விட்டு மற்ற துணிமணிகளையெல்லாம் எடுத்து அவர்களின் படைவீரர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். எங்களுக்குக் கிடைத்த்து, நோயாளிகள் வெய்யில் காலத்தில் போட்டுக் கொள்ளும் கித்தான் பேண்ட்தான். கொஞ்ச நேரம் கழித்து டாம் எழுந்து வேகமாக மூச்சுவிட்டுக் கொண்டே எனக்கு அடுத்து உட்கார்ந்தான்.

“கதகதப்பாயிருக்கிறதா?”

“இல்லவே இல்லை. ஆனால் காற்றிலிருந்து தப்பினேன்”

இரவு எட்டு மணி அளவில் ஒரு மேஜர் இரண்டு ஸ்பானிஷ்பாசிஸ்டுகளுடன் வந்தான். அவன் கையில் காகிதமும் இருந்தது. காவல்காரனிடம் அவன் கேட்டான்.

“அந்த மூன்று பேரின் பெயர் என்ன?

“ஸ்டீன்பாக், இபீதா, மீர்பால்” என்றான் காவல்காரன்.

மேஜர் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு லிஸ்டை கூர்ந்து படித்தான்: “ன்டீன்பாக்...ன்டீன்பாக்....ம்.ஆமாம்.

உனக்கு மரண தண்டனை. நாளை காலை உன்னைச் சுடுவார்கள்” மற்ற இருவரின் பெயரையும் தேடிக் கொண்டே போனான். “ம்...அந்த இரண்டு பேரும் கூட இப்படித்தான்.

“அது நடக்காது”, என்றான் ழுவா(ன்), “நான் அதில் கிடையாது” மேஜர் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கேட்டான்; “உன் பெயர் என்ன?”

“ழுவான் மிபால்”

“சரி, உன் பெயர் இங்கே இருக்கிறது. உனக்கு பரண தண்டனைதான்” என்றான். மேஜர்.

பின், தோள்களைக் குலுக்கிக் கொண்டு மேஜர் டாமையும், என்னையும் பார்த்து திரும்பினான்.

“நீங்கள் பாஸ்க் இனத்தவரா?

“யாரும் பாஸ்க் இல்லை”

எரிச்சலுற்றவன் போல் அவன் பார்த்தான்.

“இங்கு மூன்றுபேர் பாஸ்க் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களைத் தேடிக்கொண்டு என் நேரத்தை நான் வீணடிக்கப் போவதில்லை. ஆக உங்களுக்கு குருமார் தேவையில்லை?

நாங்கள் பதில் சொல்லவில்லை.

“இந்த இரவை உங்களுடன் கழிக்க ஒரு பெல்ஜிய டாக்டர் இப்போது வருவார்” என்று சொன்ன அவன் ஒரு மிலிட்டரி சல்யூட் அடித்து விட்டுப் போய் விட்டான்.

“நான் உன்னிடம் என்ன சொன்னேன், பார்... அதுதான் நடக்கிறது” என்றான் டாம்.

“ஆமாம், இந்தப் பொடியனுக்கு இது ஒரு மோசமான தண்டனைதான்” நாகரிகத்துக்காக அதைச் சொன்னாலும் அந்தப் பொடியனை நான் விரும்பவில்லை., அவன் முகம் ரொம்பவும் மெலிந்தும் பயத்துடனும் இருந்தது. வேதனையால் மிகவும் மாறிப்போய், அவனுடைய எல்லா தன்மைகளும் திரிந்து போய் இருந்தன. மூன்று நாட்களுக்கு முன்னால் அவன் ஒரு மிடுக்கான பையனாக இருந்திருப்பான்; ஆனால் இப்போது ஒரு மருட்சி கொண்ட மாய தெய்வத்தைப் போல இருந்தான். இவனை அவர்கள் வெளியே விட்டு விட்டால் கூட இனி இவன்முன்னைப் போல் இருக்கமாட்டான் என்று நினைத்தேன். இவன் மேல் இரக்கம் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் இரக்கம் கொள்வது எனக்கு அருவருப்பூட்டுகிறது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் அது என்னை பயமுறுத்துகிறது. அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் முகமும் கைகளும் வெளுத்துப் போயிருந்தன. அவன் மறுபடியும் உட்கார்ந்து தன் உருண்டைக் கண்களால் தரையைப் பார்த்தான். டாம் நல்ல மனதுடையவன். அவன் சிறுவனின் கைகளை ஆறுதலாகப் பற்ற முயன்றான். ஆனால் சிறுவனோ ஆகரோஷமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு, முறைத்தான். “அவனை விட்டு விடு” என்று தணிந்த குரலில் சொன்னேன், “பார்... அவன் இப்போது கதறி அழப் போகிறான்”

டாம் வருத்தத்துடன் நான் சொன்னவுடன் கீழ்ப்படிந்தான். சிறுவனை அமைதிப்படுத்த அவன் விரும்பியிருக்கலாம். அதனால் நேரமும் கழிந்திருக்கும். இவனும் த்ன்னைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இது எனக்கு எரிச்சல் ஊட்டியது: சாலைப்பற்றி நான் எப்போதுமே நினைத்ததில்லை. எனக்கு அதற்கான காரணமே இருந்ததில்லை; ஆனால் இப்போது இங்கே இருக்கிறது, இருந்தாலும் அதைப் பற்றி நினைப்பதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை.

டாம் பேச ஆரம்பித்தான்: “சொல், நீ எப்போதாவது யாரையும் அடித்து வீழ்த்தியிருக்கிறயா? என்று என்னைக் கேட்டான். நான் பதில் சொல்லவில்லை, அகஸ்டின் ஆரம்பத்திலிருந்து அவன் ஆறு பேரை அடித்து வீழ்த்தியதை விவரிக்க ஆரம்பித்தான்; சூழ்நிலையை அவன் உணரவில்லை. உணர்வதற்கு அவன் விரும்பவுமில்லை என்று நான் சொல்ல முடியும், நானே கூட அதைச் சரியாக உணரவில்லை. அது என்ன ரொம்பவும் துன்புறுத்துமா? துப்பாக்கி ரவைகளைப் பற்றி நினைத்தேன். என் உடம்பில் அது எரிந்து கொண்டு துளைப்பதை கற்பனை செய்தேன். எல்லாமே எதார்த்த்த்திற்கு அப்பால் தான் இருந்தன. ஆனால் நான் அசைவற்று அமைதியாக இருந்தேன்; இரவு பூராவும் இருக்கிறது, அதைப்புரிந்து கொள்ள. சற்று நேரத்தில் டாம் பேசுவதை நிறுத்தினான். நான் ஓரப்பார்வையில் அவனைக் கவனித்தேன்., அவனும் கூட சாம்பல் நிறத்தில் அருவருப்பாகத் தெரிந்ததைப் பார்த்தேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் “இப்போது தான் ஆரம்பிக்கிறது”. கிட்டத்தட்ட இரவாகிவிட்ட்து. மங்கிய ஒளி காற்றுத் துவாரங்களின் வழியே கரித்தூளினூடே ஊடுவி வானம் தெரிந்த இடத்திற்குக் கீழே ஒரு பெரிய கறையாய் பதிந்திருந்த்து. மேற்கூரைத் துவாரத்தின் மூலம் நான் ஏற்கனவே ஒரு நட்சத்திரத்தை பார்த்து விட்டேன். இரவு நிர்மலமாகவும் ரொம்பக் குளிராகவும் இருக்கும். மஞ்சள் பழுப்பு நிற யூனிஃபார்ம் அணிந்த பொன்னிறமான ஒருவன் தொடர இரண்டு காவல்கார்ர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள் அவன் எங்களுக்கு சல்யூட் அடித்தான்.

“நான் டாக்டர், இனி இருக்கப்போகும் நேரத்தில் உங்களுக்கு உதவ எனக்கு அதிகாரம் இருக்கிறது” என்றான். அவனுக்கு சுபாவமான ஒரு தனிப்பட்ட குரல் இருந்த்து.

“உனக்கு இங்கே என்ன வேண்டும்?” என்றேன் நான்.

“உங்களுக்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய இந்த கடைசி நேரத்தை கஷ்டம் இல்லாததாக ஆக்க என்னால் முடிந்த எல்லாம் செய்வேன்”

“அதற்கு இங்கே ஏன் வந்திருக்கிறாய்? இந்த ஆஸ்பத்திரியிலேயே தான் வேறு நிறைய பேர் இருக்கிறார்களே?”

“நான் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பற்ற பார்வையுடன் பதில் சொன்னான் அவன்”... உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டுமா? என்று அவசரமாகக் கேட்ட அவன்” என்னிடம் சிகரெட் இருக்கிறது... சுருட்டு கூட இருக்கிறது” என்றான்.

எங்களுக்கு இங்கிலீஷ் சிகரெட்டு கொடுத்தான். ஆனால் நாங்கள் அதை வாங்கிக் கொள்ளவில்லை, நான் அவன் கண்களையே பார்த்தேன். அவன் எரிச்சலடைந்தவன் போல் தெரிந்தான். அவனிடம் நான் சொன்னென்: “ நீ இங்கு அருள் பாலிக்க வந்திருக்கும் தூதன் இல்லை. அதோடு, எனக்கு உன்னைத் தெரியும். நான் கைதான அன்று உன்னை ஃபாஸிஸ்டுகளுடன் ராணுவமுகாம் முற்றத்தில் பார்த்தேன்”

தொடர்ந்து பேசியிருப்பேன், ஆனால் ஆச்சர்யகரமாக எனக்கு ஏதோ நேர்ந்த்து; இந்த டாக்டரின் வருகையில் எனக்கு அதற்கு மேல் ஈடுபாடு இருக்கவில்லை. பொதுவாக நான் இப்படிச் செய்வதில்லை. ஆனால் பேசுகிற விருப்பம் முழுசாக என்னை விட்டுப் போய்விட்ட்து, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கண்களை அவனிடமிடருந்து அகற்றினேன். கொஞ்ச நேரம் சென்று தலையை உயர்த்தினேன்; அவன் என்னை ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான் காவல்காரர்கள் ஒரு பாயில் உட்கார்ந்திருந்தார்கள். உயரமாய் மெலிந்திருந்த பெத்ரோ விரல்களை நெட்டி முறித்துக் கொண்டிருந்தான்; அடுத்தவன், தூங்கி விழுந்து விடாமல் இருக்க தலையை அடிக்கடி நிமிர்த்திக் கொண்டிருந்தான்.

“விளக்கு வேண்டுமா?”- திடீரென்று டாக்டரிடம் பெத்ரோ கேட்டான், அவனும் ஆமாம் என்று தலையாட்டினான். அவன் மரக்கட்டையைப் போல் இருப்பதாக எனக்குத் தோன்றியது, ஆனால் நிச்சயமாக அவ்வளவு கெட்டவன் இல்லை.

அவனுடைய உணர்ச்சியற்ற நீல நிறக் கண்களைப் பார்த்தபோது இவனுடைய ஒரே குற்றம், கற்பனை இவனிடம் குறைந்திருந்த்துதான் என்று தோன்றியது. பெத்ரோ போய் ஒரு எண்ணெய் விளக்கைக் கொண்டு வந்து பெஞ்சின் ஓரத்தில் வைத்தான், மந்தமான வெளிச்சம் தான் என்றாலும் ஒன்றுமில்லாததற்கு இது தேவலாம். அவர்கள் எங்களை சென்ற இரவு வெறும் இருட்டிலேயே விட்டிருந்தார்கள். மேற்கூரையில்விளக்கு எற்படுத்திய வட்டமான வெளிச்சத்தையே நீண்ட நேரம் கவனித்துக்கொண்டிருந்தேன். என்னை அது மிகவும் ஈர்த்த்து. பிறகு திடீரென்று எழுந்தேன். வெளிச்ச வட்டம் மறைந்து விட்டது. மிகப்பெரிய சுமையின் கீழ் நசுக்கப்படுவதைப் போல் உணர்ந்தேன்.

சாலைப் பற்றிய நினைவோ அல்லது பயமோ இல்லை; அது பெயரற்ற ஒன்று. என் கன்னம் எரிந்த்து. தலை வலித்தது

என்னையே சிலுப்பிக் கொண்டு என் இரண்டு நண்பர்களையும் பார்த்தேன். டாம் தன் முகத்தை கைகலில் புதைத்துக் கொண்டிருந்தான். என்னால் அவனுடைய வெண்மையான பிடரியை மட்டும் தான் பார்க்க முடிந்தது. பொடியன் ழுவானின் நிலைதான் மோசம். அவன் வாய் திறந்திருந்தது. மூக்கின் ஓரம் துடித்தது. டாக்டர் அவனருகில் சென்று அவனைத் தேற்றுவது போல் தோள்களில் கையை வைத்தான்: ஆனால் அவன் கண்கள் உணர்ச்சியற்று இருந்தது பின் அந்த பெல்ஜியனின் கை ழுவானின் தோளிலிருந்து கை வரைக்கும் வஞ்சகமாக இறங்கி வந்ததைப் பார்த்தேன். ஆனால் ழுவான் இதில் கவனம் செலுத்தவில்லை. பெல்ஜியனும் விடாமல் கொஞ்சம் முன்னால் போய் எனக்குத் தன் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு ழுவானின் கையைத்தன் மூன்று விரல்களுக்கிடையில் எடுத்தான். ஆனாலும் நான் பின்னால் கொஞ்சம் சாய்ந்து கொண்டு பார்த்தேன்; அவன் பாக்கெட்டிலிருந்து வாட்சை எடுத்து ஒரு கணம் பார்த்தேன். ஒரு நிமிடம் பொறுத்து கையை அசைவற்று கீழே விட்டுவிட்டு தான். பின் சட்டென்று ஏதோ அந்த இடத்திலேயே குறித்தாக வேண்டிய முக்கியமான ஒன்று ஞாபகம் வந்த்து போல் பாக்கெட்டிலிருந்து குறிப்பேட்டை எடுத்து எழுதினான். ‘பாஸ்டர்ட்...என்னிடம் வந்து அவன் என் நாடியைப் பார்க்கட்டும். வந்து அவன் அழுகல் மூஞ்சியில் ஒரு குத்து விடுகிறேன்.’

அவன் வரவில்லை. ஆனால் என்னை அவன் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் தலையை உயர்த்தி, பார்த்தேன்.

“உனக்கு இங்கு குளிராகத் தெரியவில்லை” என்று பொதுவாக என்னிடம் கேட்டான். அவன் குளிரால் மிகவும் பாதிக்கப்பட்டு, அவன் நிறமே கன்றிப் போயிருந்தது.

“எனக்கு குளிரவில்லை” என்றேன்.

அவன் என்னை விட்டுத் தன் கண்களை எடுக்கவேயில்லை. திடீரென நான் உணர்வு வந்து புரிந்து கொண்டேன். என் கைகள் என் முகத்தைத் தொட்டன. நான் வியர்வையில் குளித்திருந்தேன். இந்த நிலவறையில், இந்த குளிர் காலத்தில் இந்த ஈரக்கசிவுக்கு மத்தியில் நான் வியர்த்திருந்தேன். கைகளால் தலைமயிரைக் கோதினேன். அது வியர்வையில் கோந்து போல் ஒட்டிக் கொண்டிருந்த்து. என் சட்டையும் ஈரத்தால் என் உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த்தைப் பார்த்தேன். சொட்டச் சொட்ட ஒரு மணி நேரமாக வியர்த்திருந்தும் நான் அதை உணர்ந்திருக்கவில்லை. அந்த பெல்ஜியம் பன்றிப் பயல் இதைக் கவனிக்கத் தவறவில்லை. வேர்வைத் துளிகள் என் கன்னத்தின் மீது வழிவதைப் பார்த்து அவன் நினைத்திருக்க வேண்டும். ‘ பயப்பிராந்தியின் உச்சக்கட்டமாக உடம்பில் ஏற்படும் வெளிப்பாடு தான் இது’ என்று தான் சாதரணமாக இருந்த்து அவனுக்குப் பெருமையாக இருந்த்திருக்கும் நான் எழுந்து நின்று அவன் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நான் ஒரு சிறிய அசைவை ஏற்படுத்துவதற்குள் என்னுடைய கோபமும் அவமானமும் மறைந்தன; அந்த பெஞ்சு மீதே சோர்வுடன் விழுந்தேன்.

என் கர்சீஃசிபால் கழுத்தைத் துடைத்துக் கொள்வதில் திருப்திபட்டுக் கொண்டேன்; ஏனென்றால் இப்போது வியர்வை தலைமுடியிலிருந்து என் க்ழுத்தில் விடுவதை உணர்ந்தேன். விரைவில் துடைப்பதால் பயனில்லை. எப்போதோ கர்சீஃப் வியவையில் நனைந்து ஈரமாகி விட்ட்து. ஆனால் இன்னும் வேர்த்துக் கொட்டிக் கொண்டுதான் இருந்த்து. என் புட்ட்த்தில் கூ வேர்த்து என் ஈரம்மன கால் சராய் பெஞ்சுடன் ஒட்டிக் கொண்ட்து. திடீரென்று ழுவான் பேசினான்: “நீ டாக்டரா?”

“ஆமாம்” என்றான் பெல்ஜியன்.

“அது வலிக்குமா...ரொம்ப நேரம்?”

“எப்போது...ம் இல்லை” என்ற பெல்ஜியன் மேலும் சொன்னான், “இல்லவே இல்லை...ரொம்ப சீக்கிரம் அது முடிந்து போய்விடும்” ஒரு பணவாழ்க்கையாளனை அமைதிப்படுத்துவது போல் பதில் சொன்னான் அவன். “ஆனால் நான்... என்னிடம் சொன்னார்கள். சில சமயங்களில் அவர்கள் ரெண்டு முறை சுட வேண்டுமென்று!”

”சில சமயங்களில்...” தலையாட்டிக் கொண்டே பெல்ஜியன் சொன்னான், “முதல் குண்டு முக்கிய உறுப்புகளுக்குப் போகாமல் இருந்து விடலாம்”

“பிற்கு அவர்க்ள் மறுபடியும் துப்பாக்கியை நிரப்பி குறி பார்த்து எல்லாவற்றையும் திரும்பிச் செய்ய வேண்டுமா?”

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு கம்பலான குரலில் தொடர்ந்தான் “அது ரொம்ப நேரம் எடுக்குமே!”

வேதனையில் பயம் பயங்கரமாக இருந்தது. அவனுக்கு, அவன் நினைத்தெல்லாம் அதைப்பற்றி நினைக்கவேயில்லை, என்னை வியர்க்க வைத்தும் வேதனையின் பயமல்ல்.

நான் எழுந்து கரித்தூசு குவியலை நோக்கி நடந்தேன். குதித்தெழுந்த டாம் என்னை நோக்கி வெறுப்பு மிகுந்த பார்வையை வீசினான். என் ‘ஷீ’ கிரீச்சிட்ட்தால் நான் அவனை எரிச்சலூட்டியிருந்தென். என் முகமும் அவனுடையதைப் போல மண்ணைப்போன்று இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டென். அவ்னும் வியர்த்துக் கொட்டியிருந்த்தைப் பார்த்தேன். வானம் பிரமாதமாக இருந்த்து அந்த இருட்டு மூலைக்குள் ஒளி ஊடுருவவில்லை அறை துவாரத்தைப் பார்க்க த்லையை மட்டும் தூக்க வேண்டியிருந்த்து. ஆனால் அது முன்பிருந்த்தைப் போல் இல்லை. சென்ற இரவு ஒரு பெரிய வான் பிரதேசத்தைப் பார்க்க மூடிந்தது, என்னுடைய ம்டாலய அறையிலிருந்து பகலின் ஒவ்வொரும்ணினேரமும் ஒரு வித்தியாசமான நினைவை என்னுள் கொண்டு வந்தது. காலையில் வானம் கடினமாகி வெளிர்னீலமாயிருந்த போது ‘அட்லாண்டிக்’கின் கடற்கரைகளை நினைத்தேன், நடுப்பகலில் சூரியனைப் பார்த்தேன். ஸ்வெலெ ஹோட்டலில் மதிவைக் குடித்து ஆலிவ்வும், அங்கோவி மீன்களும் சாப்பிட்ட மதுபானக் கடையை நினைத்துக் கொண்டேன்; உச்சி வேளைகளில் நிழலில் இருந்தேன். அங்கு ஒரு பாதி கதிரொளியில் பாதியின் மீது படர்ந்திருக்கும் அடர்ந்த நிழ்லை நினைத்தென்; இப்படி முழு பளபளக்க மறு முழு உலகையும் வனத்தில் பிரதிபலிக்க்க் கான்பது கடினமாயிருந்த்து. ஆனால் இப்போது மனம் போல் என்னால் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். எதையும் அது என்னுள் தூண்டிவிடவில்லை. அதுவே ந்ல்லதாகப்பட்டது எனக்கு நான் திரும்பி வந்து டாமின் அருகில் உட்கார்ந்தேன். ஒரு நீண்ட கணத்திற்குப்பிறகு-

டாம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். அவன் பேச வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் தன் மனதிலேயே தன்னை அவனால் அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது. என்னிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான், என்று நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்துப் பேசவில்லை அவன். வெலிறிப் போ, வியர்த்து நான் இருந்த நிலையில் என்னைப் பார்க்க நிச்சயமாக அவனுக்குப் பயம் தான். நாங்கள் இருவரும் ஒத்திருந்தோம். ஒருவரை மற்றவர் பிரதிபலிக்க, கண்ணாடியை விட மோசமாக இருந்தோம். அவன் பெல்ஜியனைப் பார்த்தான்; பெல்ஜியன்; உயிருள்ளவன்.

“உனக்குப் புரிகிறதா? எனக்குப் புரியவில்லை” என்றான், டாம்.

நானும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தே பெல்ஜியனைப் பார்த்தேன். “ஏன், என்ன விஷயம்?”

“என்க்குப் புரியாத ஏதோ ஒன்று நமக்கு நடக்கப் போகிறது”

டாமைச் சுற்றி வித்தியாசமான நாற்றம் அடித்த்து. நாற்றத்தை மற்றவர்களைவிட நான் எளிதில் உணரக் கூடியவன் என்று எனக்குப் பட்ட்து. நான் நகைத்தேன். “இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து கொள்வாய்”

’அது தெளிவாக இல்லை’, என்று பிடி வாதமாகச் சொன்ன அவன், “னான் தைரியமாக இருக்க நினைக்கிறேன். ஆனால் குறைந்த படசம் எனக்கு ஒன்று தெரிய வேண்டும்... கேட்டுக் கொள். அவர்கள் நம்மை வெளிக்கட்டு முற்றத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள். சரி, நமக்கு எதிரில் நிற்கப் போகிறார்கள். எவ்வளவு பே?”

“எனக்குத் தெரியாது, ஐந்துபே அல்லது எட்ட்டுபேர். அதைவிட அதிகம் இல்லை” “சரி...எட்டு பேர் இருப்பார்கள். யாராவது ஒருவன் கத்துவான்: “குறிபார்” என்று உடனேஎட்டு துப்பாக்கிகள் என்னைப் பார்த்துக் குறி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பேன். எப்படி சுவருக்குள் புகுந்து வெலியே போய்விட முடியும் என்ரு யோசிப்பேன். முதுகை சுவரில் அழுத்தி என் சக்தி முழுவதையும் வைத்து தள்ளுவேன். ஆனால், ஒரு தீக்கனவில் வருவது மாதிரி சுவர் அப்படியே இருக்கும் என்னால் அது எல்லாவற்றையும் கற்பனை செய்ய முடிகிறது. எவ்வளவு சரியாக என்னால் இதை கற்பனை செய்ய முடிகிறது என்பது உனக்கு மட்டும் தெரிந்தால்...”

”சரி...சரி... என்னாலும் கற்பனை செய்ய முடிகிறது” என்றேன் நான்.

“பயங்கரமான வேதனை அது. உன்னை சின்னா பின்னாப்படுத்த அவர்கள் உன்கண்களையும் வயையும் குறிபார்க்கிறார்கள் தெரியும உனக்கு?”- வெறுப்போடு அவன் தொடர்ந்தான்: “ஏற்கனவே என்னால் காயத்தை உணர முடிகிறது. தலையிலும் கழுத்திலும் கடந்த ஒரு மணி நேரமாக வலி இருந்து கொண்டு இருக்கிறது. சாதரண வலி அல்ல, மோசமானதை நாளை காலை நான் உணரப் போவது இது தான். பிறகு என்ன?”

அவன் என்ன சொன்னான் என்று எனக்கு நன்றாகப் புரிந்த்து.போல் நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுள்ளும் வலிகள் இருந்தன, ஏராளமான சின்னச்சின்ன காயங்கள் போல் உரலில் வலி அதற்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியவிலை. ஆனால் நான் அவனைப் போல இருந்தேன், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அவன் தனக்குத் தானே பேச ஆரம்பித்தான். பெல்ஜியனை கவனித்துக் கொண்டிருப்பதை அவன் விடவில்லை. பெல்ஜியன் கேட்டுக் கொண்ட்ருந்த்தாக தோன்றவில்லை. அவன் என்ன செய்ய வ்ந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதில் அவனுக்கு ஈடுப்படு இல்லை; எங்களுடைய உடல்களைத்தான் பார்க்க வந்திருக்கிறான், உயிறோடு இருந்தும் வேதனையால் மரித்துக் கொண்டிருக்கும் உடல்க்ளை.

“இது ஒரு தீக்கறை மாதிரி இருக்கிரது.” டாம் சொல்லிக் கொண்டிருந்தான்.” நீ எதையோ யோசிக்க விரும்புகிறாய். எல்லாமே ஸ்ரீயாக இருப்பது மாதிரி உனக்குப் புரிபடுவதாக உணர்வு ஏற்படுகிறது பிறகு அது நழுவி உன்னிடம் இருந்து த்ப்பித்து மங்கலாகி விடுகிறது. பிரகு ஒன்றுமே இருக்கப் பொவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொல்கிற்ன். ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று என்க்குத் தெரியாது. சி ல ச்மயங்களில் அனேகமாக அது எனக்குத் தெரிகிறது...பிறகு அது மங்கிப் பொகிரது. மருபடியும் வலியைப் பற்ரி, துப்பாக்கி ரவை பற்றி, வெடிச்சத்த்த்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிரேன். நிச்சயமாக உனக்குச் சொல்கிறேன், நான் ஒரு மெடீரியலிஸ்ட்; நான் பைத்தியமாகவில்லை. ஆனால் ஏதோ இருக்கிறது என் பிணத்டை நானே பார்க்கிறேன். அது கஷ்டமல்ல, ஆனால் பார்ப்ப்பது நானே தான்; என் க்ண்ணாலேயே எதையும் இனிமேல் நான் பார்க்கப்போவதில்லை, இந்த உலகம் மற்றவர்களுக்காக இருக்கப் பொகிறது என்பதை நான் நினைக்க் வேண்டிருக்கிறது. இப்படி நினைப்படிற்காக உருவானவர்கள் அல்ல நாம்,பாப்லோ, என்னை நம்பு, ஏற்கனவே ஒரு முழு இரவும் எதற்காகவோ காத்திருந்து கழித்து விட்டேன். ஆனால் இதுவும் அதுவும். ஒன்ற்ல்ல. இது நம்மைப் பின்பற்றி ஊர்ந்து வரும், பாப்லோ. அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள முடியாதவர்களாய் நாம் இருப்போம்”

“வாயை மூடு..என்னை ஒரு சாமியாரை கூப்பிடச் சொல்கிறாயா? என்றேன் நான்.

அதற்கு அவன் பதில் சொல்லவில்லை, நான் ஏற்கனவே கவனித்திருந்தேன், என்னை பாப்லோ என்று குரலற்ற தொனியில் அழைத்து ஒரு தீர்க்கதரிசியைப்பொல் நடந்து கொள்ளும் போக்கு அவனிடம் இருந்த்து. எனக்கு அது பிடிக்கவில்லை, ஆனால் எல்லா ஐரிஷ்கார்ர்களும் இப்படித்தான் என்று படுகறது, அவன் மேல் மூத்திர வாடை அடிப்பதைப் போல் ஒரு நிச்சயமற்ற உணர்வு ஏற்பட்ட்து. அடிப்படையில் நான் டாமிடம் இரக்கம் கொள்ளவில்லை. இதற்கு மேல் ஒன்றாகப் போகிறோம் என்ற பாவனையில் எதற்காக இரக்கம் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரிபடவில்லை, மற்றவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இது வேறுவிதமாக இருந்திருக்கலாம். உதாரணமாக ரமோ(ன்) க்ரி(ஸ்) ஆனால் டாமுக்கும் ழுவானுக்கும் இடையில் நான் என்னைத் தனியனாக உணர்ந்தேன். இருந்தாலும் அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்த்து, ரமோனோடு இன்னும் கொஞ்சம் நான் நெருக்கமாகப் பழகி இருக்கலாம். ஆனால் நான் அப்போது பயங்கரமாக இருறுதிப் போய் இருந்தேன். அப்படியே தான் இருக்கவும் விரும்பினேன்.

ஏதோ ஒரு வித சித்த பேதத்தோடு அவன் வார்த்தைகளை மென்று கொண்டிருந்தான். நிச்சயமாக அவன் தன்னை யோசிப்பதிலிருந்தும் விடுவித்துக் கொள்வத்ற்காகவே பேசினான். அவனிடமிருந்து மூத்திரவாடை அடித்துக் கொண்டிருந்த்து, வாஸ்தவத்தில் நான் அவனோடு ஒத்துப்போனேன், அவன் சொன்ன ஒவ்வொன்றையும் நான் சொல்லியிருக்க்க்கூடும், மரித்துப் போவது இயற்கையானதல்ல, நான் சாகப் போவதால் எதுவுமே எனக்கு இயற்கையனதாகத் தோன்றவில்லை. கரித்தூசுகளின் இந்தக் குவியல், இந்த பெஞ்ச், பெத்ரோவின் அசிங்கமான முகம் எதுவுமே, டாமைப் போல் அதையே நினைத்துக் கொண்டிருப்பது மட்டும் எனக்குத் திருப்தியானதாயில்லை, மேலும் இரவு பூராவும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் நாங்கள் ஒரே விஷயங்களை ஒரே நேரத்தில் நினைத்துக் கொண்டேயிருப்போம் என்ரு என்க்குத் தெரியும், அவனைப் பக்கவாட்டில் நான் பார்த்தேன். முதல் முறையாக அவன் எனக்கு வித்தியாசமாகத் தோன்றினான். மரணத்தை முகத்தில் பூசிக் கொண்டு இருந்தான். என் கர்வம் காயமுற்றது. கடந்த இருப்த்து நான்கு மணி நேரமும் டாமுக்க்ருகில் நான் வாழ்ந்திருந்தேன், அவனுக்கு செவி சாய்த்திருந்தேன். அவனிடம் பேசி இருந்தேன். மேலும் எங்களுக்குள் பொதுவான அம்சம் என எதுவும் இல்லையென்று எனக்குத் தெரியும், ஒன்றாக சாகப்போகிறோம் என்ற காரணத்தால் மட்டுமே இப்போது நாங்கள் இருவரும் இரட்டைச் சகோத்ர்ர்கள் போல் ஒத்திருந்தோம், டாம் என்னைப்பார்க்காமலேயே என் கையை எடுத்துக் கொண்டான்.

“பாப்லோ, நான் ஆச்சரியப் படுகிறேன்... ஒவ்வொன்றும் முடியப் போகிறது என்பது நிஜந்தானா என்று பிரமிப்பாய் இருக்கிறது”

என் கைகளை விடுவித்துக் கொண்டு நான் சொன்னேன்: “டேய் பன்றி, உன் கால்களுக்கிடையில் பார்”

அவன் பாதங்களுக்கிடையில் ஒரு குட்டை தேங்கியிருந்த்து. அவன் கால் சராயிலிருந்து துளிகல் கொட்டின.

“ என்ன அது?” மிரண்டு போய் கேட்டான் அவன்.

“உன் கால் சட்டையில் நீ மூத்திரம் போகிறாய்”. என்றேன் அவனிடம்.

“இல்லையே இல்லை. நான் மூத்திரம் போகவில்லை. நான் அப்படி உணரவும் இல்லை” என்று வெறியோடு சொன்னான்.

பெல்ஜியன் எங்கலை நெருங்கினான், “உடல்நிலை சரியில்லையா?” என்று பொய்யான கவலையோடு கேட்டான்.

டாம் பதில் சொல்லவில்லை. பெல்ஜியன் அந்தக் ‘குட்டை’யை பார்த்தான். ஒன்றும் சொல்லவில்லை.

“இது என்னவென்று எனக்குத் த்ரியாது,” கடுங்கோபத்தொடு சொன்னான் டாம், ஆனால் நான் பயப்படவில்லை”

பெல்ஜியன் பதில் சொல்லவில்லை” டாம் எழுந்து சிறுநீர் கழிப்பதற்காக மூலைக்குச் சென்றான். பட்டனைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்து ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்தான். பெல்ஜியன் ‘னொட்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்தான்.

நாங்கள் மூவரும் அவ்னை கவனித்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் அவன் உயிரோடு இருந்தான். உயிருள்ள மனித ஜீவனின் அசைவுகல், கவலைகள் அவனிடம் இருந்தன. உயிருள்ள ஒன்று நடுங்க வேண்டிய முறையில் முறையில் அவனும் அந்த அறையில் நடுங்கினான். அவனுக்குக் கட்டுப்பட்ட நன்றாக ஊட்டம் பெற்ற உடல் அவனுக்கு. மீதி இருந்த நாங்கள் எங்களுடைய உடல்களை உணரவேயில்லை- உணர்ந்தாலும் நிச்சயமாக அதே வித்த்தில் அல்ல. கால்களுக்கிடையில் என் கால்சராயை நான் உணர விரும்பினேன். ஆனால் துணியவில்லை. கால்களின் மீது த்ன்னை நிலை நிறுத்துக் கொண்டிருந்த பெல்ஜியனைப் பார்த்தேன். தன் தசைகளின் எஜமான்ன். நாளையைப் பற்றி நினைக்க முடிகிற ஒருவன் அங்கே தான் நாங்கல் இருந்தோம். மூன்று ரத்தமற்ற நிழல்கள். அவனைப் பார்த்து அவனுடைய வாழ்க்கையை ரத்த காட்டேரியைப் பொல் உறிஞ்சிக் கொண்டோம்.

கடைசியில் அவன் சிறுவன் ழுவானிடம் சென்றான். அவனுடைய கழுத்தை தொழில் ரீதியில் தொட விரும்பினானா அல்லது கருணையின் தூண்டுதலுக்கு உட்பட்டானா? கருணையால் அவன் நடந்து கொண்டிருந்தால் அந்த ‘முறை’ தான் இரவு பூராவிலும் அப்படி அவன் நடந்து கொண்ட்து.

முவானின் த்லையையும் கழுத்தையும் அவன் அணைத்துக் கொண்டான். அந்தச் சிறுவனும் எதிர்ப்பைக் காட்டவில்லை; அவனுடைய கண்கள் பெல்ஜியனை விட்டு அகலவே இல்லை. திடீரென்று இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு விநோதமாக அதைப் பார்த்தான். பெல்ஜியனுடைய கைகளை தன் இரண்டு கைகளுக்கிடையே வைத்துக் கொண்டான். அவைகளைப் பற்றி சந்துஷ்டியைத் தரல் கூடியது எதுவும் இல்லை. எரண்டு வெளிறிய எடுக்கி அந்தக் கொழுத்துச் சிவந்த கையைப் பற்றிக் கொண்டிருந்தன. என்ன நடக்கப் போகிறது என்று நான் சந்தேகித்தேன். டாமும் அப்படியே சந்தேகித்திருக்க்க்கூடும். ஆனால் பெல்ஜியன் எதையும் பார்க்கவில்லை ஒரு தந்தையைப் போல் அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அந்தக் கொழுந்துச் சிவந்தகையை சிறுவன் தன் வாய்க்கிக் கொண்டு வந்து கடிக்க முயன்றான். பெல்ஜியன் அவசரமாக கையை இழுத்துக்கொண்டு இடறி சுவரில் இடித்துக் கொண்டான். சில நொடிகள் எங்களைப் பீதியொடு பார்த்தான். திடீரென்று அவனுக்கு உறைந்திருக்கும், நாங்கள் அவனைப் போல் மனிதர்கள் அல்ல என்று’ நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஒரு காவலாளி உல்லே குதித்தான். இன்னொருவன், விழித்த க்ண்கள் வெற்றாய்ப்பார்க்க தூக்கத்தில் இருந்தான்.

நான் தளர்வாக உணர்ந்தேன். அதேசமயம் அதிக உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். விடிகாலையில் என்ன நடக்கும் என்பது பற்றியோ அல்லது சாவைப் பற்றியோ இனிமேல் நான் யோசிக்க விரும்பவில்லை. அதற்கு அர்த்தம் இருக்கவில்லை. சூன்யத்தையோ அல்லது வார்த்தையாயோ தான் நான் கண்டேன். ஆனால் வேறு எதையேனும் நினைக்க முற்சி செய்த மாத்திரத்தில் என்னை நோக்கித் திரும்பியிருக்கும் துப்பாக்கி முனைகல் கண்ணுக்குத் தெரிந்தன. என் மரண தண்டனையை அநேகமாக இருபது முறை நான் அனுபவித்தேன். அதுவும் நல்லதுக்குத்தான் என்று கூ ஒரு சமயம் நினைத்தேன். ஒரு நிமிடம் நான் தூங்கியிருக்க வேண்டும். அவர்கல் என்னை சுவருக்கு இழுத்துச் சென்றார்கள்; நான் போராடிக் கொண்டிருந்தேன்; கருணைக்காக கெஞ்சினேன் வாரிச்சுருட்டி எழுந்து பெல்ஜியனைப் பார்த்தேன் நான் தூக்கத்தில் கத்தியிருப்பேனோ என்று பயந்தேன். ஆனால் அவன் தன் மீசையைத் தடவிக் கொண்டிருந்தான். அவன் எதையும் கவனித்திருக்கவில்லை. விரும்பிருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்கியிருக்கலாம் என்று நினைத்தேன். நாற்பதேட்டு மணி நேரமாக நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் – நான் என்னுடைய வரம்பின் இறுதியில் இருந்தேன்.

ஆனால் இரண்டு மணி நேர வாழ்க்கையை நான் இழக்க விரும்பவில்லை. விடிகாலையில் என்னை எழுப்ப வருவார்கள். தூக்க்க் கலக்கத்தோடு நான் அவர்கள் பின்னே செல்வேன். “ ஊப் eneEஎன்பதைத் தவிர வேறு எப்படியும் அரற்றியிருக்கமாட்டேன், நான் அதை விரும்பவில்லை, ஒரு மிருகத்தைப் போல் சாக விரும்பவில்லை நான், அதைப் புரிந்து கொள்ள விரும்பினேன், மேலும் தீக்கரை காண்பது பற்றியும் பயமாக இருந்தது. எழுந்து, என் நினைவுகளை மாற்றிக் கொள்ள முன்னும் பின்னும் நடந்தேன், என் கடந்து போன வாழ்க்கையைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன், ஒரு நினைவுக்கூட்டமே திரும்ப என்னுள் ஓடி வந்தது, அவற்றில் நல்லவை கெட்டவை இரண்டுமே இருந்தன-குறைந்த பட்சம் முன்னால் அவைகளை அப்படி அழைத்தேன். முகங்களும் நிகழ்ச்சிகளும்... ஃபெரியாவின் போது வாலன்ஸியாவில் குத்திக் கிழிக்கப்பட்ட சிறிய நொவில்லரோவின் முகத்தை, என்னுடைய ஒரு மாமாவின் முகத்தை, ரமோ(ன்) க்ரி(ஸ்)யின் முகத்தை நான் பார்த்தேன். என் முழு வாழ்க்கையையும் நான் நினைவில் கொண்டிருந்தேன்; 1926 இல் எப்படி மூன்று மாதங்கள் வேலையை விட்டு இழந்தேன், எப்படி சாகும் நிலைக்குப் பட்டினி கிடந்தேன் என்பதை நினைத்தேன், க்ரனாடாவில் பெஞ்சில் கழித்த இரவை நினைத்துக் கொண்டேன்: அப்போது நான் மூன்று நாட்களாக சாப்பிட்டிருக்கவில்லை, கோபம் கொண்டிருந்தேன். செத்துப் போக விரும்பவில்லை நான். அந்த நினைவு என்னைச் சிரிக்க வைத்தது. எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக சந்தோஷத்தின் பின்னால் ஓடியிருக்கிறேன்! ஏன்? ஸ்பெய்னை விடுவிக்க விரும்பினேன், மார்சலைக் போற்றினேன், புரட்சி இயக்கத்தில் சேர்ந்தேன், பொதுக்கூட்டங்களில் பேசினேன். அழிவற்றன் போல் எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டேன்.

அந்தக் கணத்தில் என் முழு வாழ்க்கையையும் என் முன்னால் நிற்பதாக உணர்ந்தேன். பின் ‘அது மோசமான பொய்’ என்று நினைத்தேன். அது எதற்கும் லாயக்கற்றதாயிருந்தது. ஏனென்றால் அது முடிந்து போயிருந்தது, பெண்களோடு சேர்ந்து சிரிக்க முடிந்ததை, நினைத்து பிரமித்தேன். இப்படி இறப்பேன் என்று மட்டும் கற்பனை செய்திருந்தால் சுண்டு விரலைப் போல் இப்படி ஆடியிருக்க மாட்டேன். என் வாழ்க்கை முடிந்து போய் மூடப்பட்ட பையைப் போல் என் முன்னே கிடந்தது, இன்னும் அதன் உள்ளிருந்த ஒவ்வொன்றும் அரைகுறையாயிருந்தது, ஒரு நொடி அதைக் கணிக்க முயன்றேன். இது ரம்மியமான வாழ்க்கை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள விரும்பினேன். ஆனால் என்னால் அந்தக் கணிப்பையும் கொள்ள முடியவில்லை; அது ஒரு வெள்ளோட்ட வரைகோடாகத்தான் இருந்தது, என் நாட்களை, நித்தியத்தை எண்ணியே பாசாங்கு செய்து கழித்து விட்டேன். ஆனால் நான் புரிந்து கொண்டது என்றுமேயில்லை, எதையும் நான் தவறவிடவில்லை: நான் தவற விட்டிருக்கக் கூடிய விஷயங்கள் நிறையவே இருந்தன. ம்துவின் சுவை அல்லது ஸாடக்கின், அருகில் அந்தச் சின்ன கடற்கூம்பில், கோடையில், குளித்த அனுபவங்கள் இப்படி, ஆனால் மரணம் ஒவ்வொன்றையும் கவர்ச்சியிழக்கச் செய்துவிட்டது.

பெல்ஜியனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றி எங்களிடம் சொன்னான்: “நண்பர்களே, ராணுவ நிர்வாகம் அனுமதித்தால் உங்களுக்கு நேசமானவர்களுக்கு ஏதாவது செய்தியோ அல்லது ஞாபகச் சின்னமோ அனுப்ப ஏற்பாடு செய்வேன்”

டாம் முணுமுணுத்தான்: “எனக்கு யாரும் இல்லை”

நான் ஒன்றும் சொல்லவில்லை, சற்றுநேரம் காத்திருந்து விட்டு டாம் ஆர்வத்தோடு என்னைப் பார்த்தான், நீ கோஞ்சாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா?” “இல்லை”

இம்மாதிரி மென்மையான விஷயங்களை நான் வெறுத்தேன். கடந்த இரவில் கோஞ்சாவைப் பற்றிப் பேசியது என் தவறு தான். என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவளோடு நான் ஒரு வருடம் இருந்தேன். கடந்த இரவு அவளை மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் பார்ப்பதற்காக ஒரு சமிக்ஞை செய்திருக்கலாம்; அதனால் தான் நான் அவளைப் பற்றிப் பேசினேன். அது அவ்வளவு வலுவாய் இருந்திருக்கிறது, இனிமேல் அவளைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை, அவளிடம் சொல்வதற்கு இதற்கு மேல் என்னிடம் ஒன்றுமில்லை: அவளை என் தோளில் சாய்த்துக் கொள்ளக் கூட விரும்ப மாட்டேன். என் உடல் என்னுள் திகிலை இறைத்திருந்தது. ஏனென்றால் அது வெளிறிப்போய் வியர்த்துக் கொண்டிருந்தது, மேலும் அவளுடைய உஅடல் என்னுள் திகிலை நிறைக்கவில்லை என்று எனக்கு நிச்சயமில்லை, நான் இறந்துவிட்டேன் என்று அறிந்து அவள் அழுவாள் அதற்குப் பிறகு பல மாதங்களுக்கு அவளுக்கு வாழ்க்கையில் சுவையிருக்காது, ஆனால் இருந்தாலு சாகப் போகிறவன் நானாகத் தான் இருந்தேன். அவளுடைய மிருதுவான அழகிய கண்களை நினைத்தேன். அவள் என்னைப் பார்த்த போது அவளிடமிருந்து ஏதோ ஒன்று என்னுள் கடந்தது. ஆனால் அது முடிந்து போய்விட்டது என்று நான் அறிவேன்: இப்போது அவள் என்னைப் பார்த்தால், பார்வை அவளுடைய கண்களிலேயே நிற்கும்; என்னுள் செல்லாது. நான் தனித்துப் போனேன்.

டாமும் தனியாகத் தான் இருந்தான்; ஆனால் இந்த ரீதியில் அல்ல. குறுக்காக கால்களைப் போட்டுக் கொண்டு ஒருவிதப்புன்னைகையோடு அங்கிருந்த பெஞ்சை வெறித்துப்பார்க்க ஆரம்பித்திருந்தான் அவன், பிரமித்தவனாய் தென்பட்டான். கைகளை நீட்டி எதையாவது உடைத்து விடுவோமோ என்ற பயத்தில் தானே என்னவோ, ஜாக்கிரதையாக பெஞ்சைத் தொட்டு விடு உடனே வேகமாக கையை இழுத்துக் கொண்டு நடுங்கினான். நான் டாமாக இருந்திருந்தால் பெஞ்சைத் தொட்டு நான் குதூகலித்திருக்க மாட்டேன். இது மேலும் ஒரு ஐரிஷ் மடத்தனம். ஆனால் பொருட்கள் விநோத உருக்கொண்டு இருப்பதை நானும் பார்க்கத்தான் செய்தேன். அவைகள் சரியாகப் புரியாமல், தெளிவற்று, சாதாரணத்தைவிட குறைந்த அடர்த்தியோடு இருந்தன. நான் சாகப்போகிறேன் என்று உணர்வதற்கு இந்த பெஞ்ச், விளக்கு, கரித்தூசுக் குவியல் இவற்றைப் பார்ப்பதே போதுமானதாயிருந்தது. வாஸ்தவத்தில் என்னால் மரணத்தைப் பற்றி தெளிவாக சிந்திக்க முடியவில்லை. ஆனால் அதை ஒவ்வொரிடத்திலும்-பொருள்களின் மீது, அவைகள் விழுந்து தூரத்தில் கிடந்த முறையில்-இப்படி எல்லாவற்றிலும் நான் அதைப் பார்த்தேன். சாகப் போகிற ஒருவனின் படுக்கைக்கருகில் நின்றுகொண்டு மெதுவாகப் பேசுகிறவர்களைப் போல் அதைப் பார்த்தேன். டாம் இப்போது பெஞ்சில் தொட்டது கூட அவனுடைய மரணத்தைத் தான்.

நான் இருந்த நிலையில் யாராவது வந்து என்னுடைய மீதி வாழ்க்கை பூராவையும் என்னிடம் கொடுத்து அமைதியாக வீட்டுக்குப் போகச் சொன்னால் அது என்னை உறைய வைத்திருக்கும். அழிவற்றிருக்கும் மாயையை விட்ட பிறகு பல மணி நேரங்களோ அல்லது பல வருடங்களோ காத்திருப்பது எல்லாம் ஒன்றுதான், நான் சூனியத்தை ஒட்டிக் கொண்டேன். ஒரு விதத்தில் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இது ஒரு பயங்கரமான அமைதி, என் உடலால் ஏற்பட்ட அமைதி, என் உடலை அதன் கண்களால் நான் பார்த்தேன் அதன் காதினால் நான் கேட்டேன். ஆனால் இதற்கு மேல் அது நானாக இல்லை. அது தானே வியர்த்து நடுங்கியது. இதற்கு மேல் நான் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. என்ன நேர்ந்தது என்பதை அறிய அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. அதை இன்னொருவனின் உடலைப் போல் சில சமயங்களால் இன்னமும் என்னால் உணர முடிந்தது. விமானத்திலிருந்து கொண்டு செங்குத்தாக இறங்குவது போல் மூழ்கலையும் விழுதல்களையும் நான் உணர்ந்தேன்-என் இதயம் அடித்துக் கொள்வதை உணர்ந்தேன், ஆனால் அது என்னை மறுபடியும் நிச்சயப்படுத்தவில்லை. நிறைய சமயங்களில் இந்த உடல் அமைதியாக இருந்தது. ஒருவித பளுவைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை. என் சம்பந்தப்பட்ட ஒரு அசிங்கமான இருப்பு; ஒரு பெரிய ஜந்துவோடு கட்டப்பட்டிருப்பது போன்ற ஒர் உணர்வு ஒரு முறை என் கால்சராயை உணர்ந்தேன். அவைகள் நனைந்திருந்தன. அது மூத்திரமா வியர்வையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக கரிக்குவியலுக்குச் சென்றேன், சிறுநீர் கழிக்க.

பெல்ஜியன் தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டுச் சொன்னான்: “இப்போது மணி மூன்றரை ஆகிறது”

“பாஸ்டர்ட்! வேண்டுமென்றே அவன் அதைச் செய்திருக்கவேண்டும். டாம் குதித்தான். நேரம் ஓடிக் கொண்டிருப்பதை நாங்கள் கவனிக்கவில்லை. விசனமான உருவமற்ற கட்டியைப் போல் இரவு எங்களைச் சூழ்ந்தது. அது ஆரம்பித்திருந்தது என்பதை என்னால் நினைக்கக் கூட முடியவில்லை.

சிறுவன் ழுவா(ன்) அழ ஆரம்பித்தான். “நான் சாக விரும்பவில்லை. என்று கை கூப்பி கெஞ்சினான். அந்த அறையின் குறுக்கே கையை வீசிக் கொண்டு ஒடிய அவன் அழுது கொண்டே ஒரு பாயில் விழுந்தான். டாம் அவனை தேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சங் கூட இல்லாம்ல், கண்களில் நீர் தளும்ப அவனைப் பார்த்தான். ஏனென்றால் தேற்றுவது அந்த வேதனைக்கு முன்னால் தகுதியற்றதாய் இருந்தது. அச் சிறுவன் எங்களை விட அதிகம் சத்தம் போட்டான். ஆனால் நாங்கள் குறைந்த அலவி பாதிக்கப்பட்டோம். தஜுரத்தின் வேதனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோயாளியைப் போல் அவன் இருந்தான்; ஜுரம் இல்லாதபோது இது ரொம்பவும் சீரியஸான ஒரு விஷயம்.

அவன் அழுதான், தன்னையே அவன் நொந்து கொண்டிருந்தான் என்று என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் மரணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு நொடி-ஒரே ஒரு நொடி நான் அழ விரும்பினேன். என்னையே நொந்து கொண்டு அழ விரும்பினேன். ஆனால் அதற்கு எதிரானது தான் நடந்தது. நான் அவனைப் பார்வையிட்டேன். அவனுடைய எலும்பான விசும்பும் தோள்களைப் பார்த்தேன். குரூரமாக, மனிதத் தன்மையற்று உணர்ந்தேன். என்னையே அல்லது மற்றவர்களையோ கண்டு என்னால் அனுதாபப்பட முடியவில்லை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” நான் சுத்தமாக சாக விரும்புகிறேன்”

டாம் எழுந்தான் வட்டமான திறப்புக்குக் கீழே தன்னை நிறுத்தி காலை வெளிச்சத்திற்காகப் பார்க்க ஆரம்பித்தான். நான் சுத்தமாகச் சாகத்தீர்மானித்தேன். அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் டாக்டர் எங்களிடம் நேரம் சொல்லியதிலிருந்து நேரம் பறந்து கொண்டிருப்பதாக, ஒவ்வொரு துளியாக பறந்து செல்வதாக உணர்ந்தேன்.

டாமின் குரலை நான் கேட்டபோதும் இருட்டாகவே இருந்தது. “அவர்கள் வருவது கேட்கிறதா?”

“ம்...”

முற்றத்தில் ஆட்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்? இருட்டில் அவர்களால் சுட முடியாது”

சற்று நேரம் கழித்து எந்த சப்தமும் கேட்கவில்லை. நான் டாமிடம் சொன்னேன்:

“விடிந்து விட்டது”

பெத்ரோ கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்தான், விளக்கை அணைக்கச் சென்றான். தன் சகாவிடம் சொன்னான்.” பயங்கரமாக குளிருகிறது.

அந்த அறை முழுவதும் வெளிறியிருந்தது, தூரத்தில் துப்பாக்கியின் வெடிச் சப்தத்தைக் கேட்டோம்.

“ஆரம்பித்து விட்டது... அவர்கள் இதை கோர்ட்டின் பின்புறம் தான் செய்வார்கள்” என்று டாமிடம் சொன்னேன்.

டாம் டாக்டரிடம் சிகரெட் கேட்டான்,. நான் அதை விரும்பவில்லை. எனக்கு சிகரெட்டோ மதுவோ தேவையிருக்கவில்லை. அந்தக் கணத்திலிருந்து அவர்கள் சுடுவதை நிறுத்தவேயில்லை.

“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிகிறதா? என்று கேட்டான் டாம்.

அவன் இன்னும் ஏதோ சொல்ல விரும்பினான் ஆனால் அமைதியாக் கதவைப் பார்த்துக் கொண்டிருந்தான். கதவு திறந்து ஒரு லெஃப்டினன்ட் நான்கு வீரர்களோடு உள்ளே வந்தான் டாம் சிகரெட்டை கீழே போட்டு விட்டான்.

“ஸ்டீன் பாக்?”

டாம் பதில் சொல்லவில்லை பெத்ரோ அவனைச் சுட்டிக் காட்டினான்.

“ழுவா(ன்) மிர்பல்?”

“அதோ அந்தப் பாயில்”

“எழுந்திரு” என்றான் லெஃப்டினன்ட்.

ழுவா(ன்) நகரவில்லை. இரண்டு வீரர்கள் அவனைத் தோளைப்பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் விட்டமாத்திரத்தில் அவன் விழுந்தான்.

வீரர்கள் தயங்கினார்கள்.

“அவன் தான் ஒன்றும் முதல் நோயாளியல்ல” என்றான் லெஃப்டினன்ட், “நீங்கள் இரண்டுபேரும் இவனைத் தூக்கிச் செல்லுங்கள் அவர்கள் அங்கே நெருக்கி வைப்பார்கள்” அவன் டாமைப் பார்த்துச் சொன்னான். “நலம் போகலாம்”. இரண்டு வீரர்களுக்கிடையில் டாம் வெளியே போனான். மற்ற இருவர் சிறுவனை கக்கத்தையும், கால்களையும் பிடித்துத் தூக்கிக் கொண்டு பின்னால் போனார்கள். அவன் மயங்கி இருக்கவில்லை. அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன. கண்ணீர் கண்களில் வழிந்தோடியது. நான் வெளியே போக விரும்பிய போது லெஃப்டினன்ட் என்னை நிறுத்தினான்.

“நீ தான் இபீதா வா?”

“ஆமாம்”

“நீ இங்கேயே இரு. உனக்காக அவர்கள் பிறகு வருவார்கள்”. கூட அவர்க்ள் அகன்றார்கள். பெல்ஜியனும் இரண்டு ஜெயிலர்களும் கூடப் போய்விட்டார்கள். நான் தனியாக இருந்தேன். எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. அவர்கள் உடனே அதைச் செய்து முடித்திருந்தால் நன்றாக ஏற்றுக் கொண்டிருப்பேன். அநேகமாக சீரான இடைவெளி விட்டு துப்பாக்கிச் சூடு கேட்டது. ஒவ்வொன்றின் போதும் நான் நடுங்கினேன். தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு அலற நினைத்தேன். ஆனால் பற்களைக் கிட்டிக் கொண்டு பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டேன். ஏனென்றால் நான் அமைதியாக இருக்க விரும்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து என்னை எடுத்துக் கொண்டு செல்ல அவர்கள் வந்தார்கள். முதல் கட்டுக்கு இட்டுச் சென்றார்கள். சூடாகி, சுருட்டு நாற்றம் அடித்துக் கொண்டிருந்த சிறிய அறைக்குள் இட்டுச் சென்றார்கள். அங்கே இரண்டு அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முழங்காலின் மீது காகிதங்கள் இருந்தன.

”நீ தான் இபீதாவா?”

“ஆமாம்”

“ரமோ(ன்)” க்ரி(ஸ்) எங்கே?”

“எனக்குத் தெரியாது”

என்னைக் கேள்வி கேட்டவன் குட்டையாக தடிமனாக இருந்தான், கண்ணாடிக்குள் அவன் கண்கள் கடினமாகத் தெரிந்தன.

”இங்கே வா என்று என்னிடம் சொன்னான். அவனிடம் சென்றேன், அவன் எழுந்து என் தோள்களைப் பற்றினான் இந்தப் பூமிக்குள்லேயே என்னைத் தள்ளி விடக் கூடிய பார்வையோடு என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் தன் முழுச் சக்தியோடு என் கைச் சதைகளைக் குத்தினான். எனக்கு அது வலிக்கவில்லை. பெரும் விளையாட்டாக இருந்தது, என்னை அவன் ஆக்ரமிக்க விரும்பினான், நாற்றம் அடிக்கும் அவன் மூச்சை நேராக என் முகத்தின் மீது ஊத வேண்டும் என்றும் நினைத்தான். சில கணங்கள் அப்படியே இருந்தோம். எனக்கு சிரிக்கத் தோன்றியது. சாகப் போகிற ஒருவனை பயமுறுத்திக் கட்டாயப் படுத்த ரொம்பவும் பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது. அது பலிக்கவில்லை. முரட்டுத்தனமாக என்னை பின்னே தள்ளி விட்டு மறுபடியும் உட்கார்ந்து கொண்டான் பின் என்னிடம் சொன்னான்:’’ அவனுடைய உயிருக்குப் பதிலாக உன்னுடைய உயிர் இருக்கிறது, அவன் எங்கேயிருக்கிறான் என்று நீ சொல்லி விட்டால் உன் உயிரை நீ காப்பற்றிக் கொள்ளலாம்.

சாட்டைக் கோல், பூட்ஸ் சகிதமாக இருக்கும் இந்தப் பொம்மைகளும் கூட சாகத்தான் போகின்றன: எனக்குப் பின் கொஞ்சம் பொறுத்து-ஆனால் ரொம்பக்காலம் பொறுத்து அல்ல. கசங்கியிருந்த காகிதங்களில் பெயர்களைத் தேடுவதில் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள். மற்றவர்கள் பின்னால் ஒடினார்கள். அவர்களை சிறையில் அடைத்துப் போட. ஸ்பெய்னின் எதிர்காலம் பற்றியும் மற்ற விஷயங்கள் குறித்தும் அவர்களுக்கு கருத்துக்கள் இருந்தன. அவர்களின் செயல்கள் எல்லாம் எனக்கு அதிர்ச்சி தரக் கூடியதாகவோ சிரிப்பு மூட்டுவதாகவோ இருந்தன, என்னை அவர்கள் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள், பைத்தியங்கள் என்று நான் நினைத்தேன்.

அந்தச் சிறிய மனிதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கையிலிருந்த சாட்டைக் கோலால் பூட்ஸைத் தட்டிக் கொண்டிருந்தான் உயிருள்ள ஒரு வெறிபிடித்த மிருகத்தின் உருவத்தைக் கொடுக்கும் வகையில் அவனுடைய அசைவுகள் கணக்கிடப்பட்டிருந்தன.

”ஆக, உனக்குப் புரிகிறதா?”

“ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவன் மாட்ரிட்டில் இருந்தான் என்று நினைத்திருந்தேன், என்று பதில் சொன்னேன்.

இன்னொரு அதிகாரி வெளிறிய தன் கையை சோம்பலோடு நீட்டினான். அந்தச் சோம்பல் கூட கணக்கிடப்பட்டிருந்த்து. இப்படியெல்லாம் கூடச் செய்து தங்களை கிளர்ச்சியூட்டி கொள்கிற இவர்களின் இந்தச் சீண்டல்களைப் பார்க்க முடியமால் நான் மயங்கி இருந்தேன். “நினைத்து பார்ப்பதற்கு இன்னும் உனக்கு கால் மணி நேரம் இருக்கிறது”, என்று அவன் மெதுவாகச் சொன்னான். ”இவனை லாண்டிரிக்கு எடுத்துச் சொல்லுங்கள். கால் மணி நேரத்தில் திருப்பி எடுத்து வாருங்கள். பிறகும் இவன் மறுத்தால் அந்த இடத்திலேயே அவனுடைய மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

தாம் செய்வது இன்னதென்று அவர்களுக்குத் தெரிந்தேயிருந்தது இரவையெல்லாம் துளி துளியாகக் கழித்திருக்கிறேன்; பிறகு டாமையும் ழுவானையும் சுட்டுத் தள்ளி, அறையில் ஒரு மணி நேரம் என்னைக் காக்க வைத்தார்கள். இப்போது சலவை அறையில் என்னைப் பூட்டி வைக்கிறார்கள்; தங்கள் விளையாட்டை இவர்கள் முந்திய இரவே தயார் செய்திருக்க வேண்டும். நரம்புகள் நைந்து போவதாக அவர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்கள். அந்த முறையிலேயே நானும் ஆவதை நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மிக மோசமாக தவறு செய்து விட்டார்கள். சலவை அறையில் ஒரு ஸ்டூல் மீது நான் உட்கார்ந்தேன். ரொம்பவும் பலகீனமாக உணர்ந்தேன். பின் யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்களைப் பற்றியல்ல ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருந்தான் என்று எனக்குத் தெரியும்; அவன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களோடு நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஒளிந்து இருந்தான் அவர்கள் என்னைச் சித்திரவைச் செய்தாலொழிய அவன் மறைந்திருந்த இடத்தை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனக்குத் தெரியும் (ஆனால் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை) எல்லாமே கச்சிதமாக, பூரணமாக சீராக்கப்பட்டிருந்தது. எவ்விதத்திலும் என்னை ஈர்க்கவில்லை என் நடத்தைக்குக் காரணத்தை மட்டும் புரிந்து கொள்ள நான் விரும்பியிருப்பேன். ரமோனை கைவிட்டு விடுவதை விட நானே செத்துப் போவேன், ஏன்? ரமோ(ன்) க்ரி(ஸ்)யை அதற்கு மேல் நான் விரும்பவில்லை. கோஞ்சாவிடம் கொண்டிருந்த என் காதலும், ரமோ(ன்) க்ரி(ஸ்) நட்பும், அதே சமயம் , வாழ வேண்டும் என்ற ஆசையும் கூட விடிகாலைக்குச் சற்று முன்பே செத்துப் போய் விட்டன. சந்தோசமில்லாமல் நான் அவனைப் பெரிதாகவே நினைத்தான். அவன் கடினமானவனாக இருந்தான். ஆனால் அந்தக் காரணத்துக்காக நான் இந்த இடத்தில் செத்துப் போவதில் திருப்தி கொள்ளவில்லை, அவனுடைய வாழ்க்கை என்னுடையதைவிட அதிக மதிப்புடையதல்ல; மேலும் எந்த வாழ்க்கையுமே மதிப்புடையது அல்ல. அவர்கள் சுவரோடு ஒருவனை நிறுத்தி அவன் சாகும் வரை சுட்டுக் கொல்கிறார்; அது நானாகவோ ரமோ(ன்) க்ரி(ஸ்)யாகவோ அல்லது வேறு யாராகவுமே இருந்தாலும் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஸ்பெய்னுக்கு என்னைவிட அவன் ரொம்பவும் பயனுள்ளவன் என்று நான் அறிவேன். ஆனால் ஸ்பெய்னும் அதன் புரட்சியும் எக்கேடும் கெட்டுத் தொலையட்டும் என்று எண்ணினேன், ஆம் எதுவுமே முக்கியமில்லை இருந்தாலும் நான் அங்கேயே இருந்தேன். என் உடம்பை நான் காப்பாற்றிக் கொண்டு ரமோ(ன்) க்ரி(ஸ்)யை நான் கைவிட்டிருக்க முடியும். அதைச் செய்ய நான் மறுத்த விட்டேன். அது எனக்கு எப்படியோ கோமாளித்தமாய் தெரிந்த்து. அது பிடிவாதம் தான் என்று நான் நினைத்தேன். ஆம், முரட்டுப் பிடிவாதமாகத்தான் இருக்கவேண்டும்” ஒருவித களிப்பு என்னுள் படர்ந்த்து. எனக்காக வந்த அவர்கள் இரண்டு ஆதிகாரிகளீடம் என்னைக் கொண்டு சென்றார்கள். என் பாத்த்திற்கு அடியிலிருந்து ஒரு எலி ஓடி என்னை மிகவும் ஆச்சர்யப்பசுத்தியது. ஒரு ஸ்பெயின் பாஸிஸ்டை திரும்பிப் பார்த்து நீ எலியைப் பார்த்தாயா? என்று கேட்டேன்.

அவன் பதில் சொல்லவில்லை. அவன் மயக்கமற்று தெளிவாக இருந்தான். தன்னை ரொம்பவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருருந்தான். நான் சிரிக்க விரும்பினோன். என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் ஆரம பித்துவிட்டால் பின் நிறுத்தவேk முடியாமல் போய்விடுமோ என்று பயமாக இருந்தது. அந்த பாஸிஸ்ட் மீசை வைத்திருந்தான். மடைய, உன், மீசையை நீ எடுத்தாகவேண் ஜீவனின் ரோmmமம் தன் முகத்தை ஆக்ரமிக்க விட்டுவிடுவான் என்று நினைத்த போது சிரிப்பாய்வந்தது. அவன் என்னைத்திடவுறுதியின்றி உதைத்தான். நான் அமைதியாக இருந்தேன். “சரி, நீ அதைப் பற்றி யோசித்துவிட்டாயா? என்று அந்தத் தடிமனான அதிகாரி கேட்டான்.

அபூர்வமான ஜந்துக்களைப் பார்ப்பது போல் மிகவும் ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தேன் “ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். இடுகாட்டில் அவன் ஒளிந்திருக்கிறான். அடி நிலக் கல்லறை, இல்லாவிட்டால் வெட்டியான குடில்” என்று அவர்களிடம் சொன்னேன்.

அது ஒரு கேலிக் கூத்து தான். அவர்கள் எழுந்து நின்று பெல்ட்டை இறுக்கிக் கொண்டு சுறுசுறுப்பாகக் கட்டளைகள் இடுவதைப் பார்க்க விரும்பினேன்.

அவர்கள் குதித்து நின்றார்கள். “ நாம் போகலாம். லெஃப்டினன்ட் லோப்பெயிடமிருந்து பதினைந்து பேரை அழைத்து வா” என்று அந்த சிறிய தடித்த மனிதன் சொன்னான். ‘நீ சொல்வது உண்மையானால் உன்னைப் போக விட்டுவிடுவோம். ஆனால் எங்களை குரங்காக்க நினைத்தாயானால் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்று என்னிடம் சொன்னான். ஒரே பேச்சுச் சத்தத்திற்கிடையில் விட்டுச் சென்றார்கள். நான் ரொம்ப அமைதியாக பாஸிஸ்டுகளின் காவலில் காத்திருந்தேன். அவர்கள் தேடப் போகும் வேடிக்கையை எண்ணி இடைக்கிடையே சிரித்துக் கொண்டேன். சமாதிக் கற்களைகற்றி ஒவ்வொரு கல்லறைக் கதவையும் திறந்து அவர்கள் தேடு வதை கற்பனை செய்து பார்த்தேன். என்னை வேறு யாராகவோ கற்பித்துக் கொண்டு இந்த சூழ்நிலையை எனக்கே பொருத்திப் பார்த்துக் கொண்டேன். இந்தக் கைதி பிடிவாதமாக கதாநாயகனாய் நடந்து கொள்ள, இந்த மீசை வைத்த பாஸிஸ்டுகளும் அவர்களின் ஆட்களும் சீருடையில் சமாதிகளுக்கிடையில் ஓடும் காட்சி!-தாங்கமுடியாத சிரிப்பாயிருந்தது. ஒரு அரை மணி நேரங் கழித்து அந்த தடித்த குட்டை மனிதன் தனியாகத் திரும்பி வந்தான். என்னைக் கொல்வதற்கான உத்திரவுடன் வந்திருக்கிறான் என்று எண்ணினேன். மற்றவர்கள் இடுகாட்டில் தங்கி இருக்கவேண்டும்.

அதிகாரி என்னைப் பார்த்தான். அவன் பார்வை செம்மறியாட்டுத் தனமாக இல்லை. “இவனை முற்றத்திற்குள் மற்றவர்களோடு எடுத்துச் செல்லுங்கள்” என்றான். “ராணுவ வேலைகளுக்குப் பிறகு இவனை என்னசெய்வது என்று ஒரு கோர்ட் முடிவு செய்யும்” என்று மேலும் சொன்னான். எனக்கு இது புரிந்ததாக தோன்றவில்லை. “பிறகு அவர்கள் என்னை... என்னை சுடப் போவதில்லையா?” என்று கேட்டேன். “இப்போது இல்லை, எப்படியும் அப்புறம் என்ன நடக்கிறது என்பது எங்கள் வேலையில்லை”

இன்னும் எனக்குப் புரியவில்லை. “ஆனால்... ஏன்? என்று கேட்டேன்.

பதில் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு வீரர்கள் என்னை எடுத்துச் சென்றார்கள். அந்தப் பெரிய முற்றத்தில் கிட்ட்த்தட்ட நூறு கைதிகள் இருந்தார்கள். பெண்கள், குழந்தைகள், சில வயதானவர்கள். மத்தியிலிருந்த புல் தரையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன். நான் மயங்கியிருந்தேன். மதியம் ‘மெஸ் ஹாலில் எங்களை சாப்பிடவிட்டார்கள் இரண்டு மூன்று ஆட்கள் என்னை ஏதோ கேட்டார்கள். எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் பதில் சொல்லவில்லை. நான் எங்கிருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது.

மாலையில் பத்து கைதிகளை கோர்ட்டுக்குள் தள்ளினார்கள். கார்ஸீயாவை அடையாளம் கண்டு கொண்டேன். ரொட்டி தயாரிப்பவன் என்ன ஒரு அதிர்ஷ்ட்சாலி நீ! உன்னை உயிரோடு பார்ப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை” என்றான் என்னிடம்.

“அவர்கள் மரண தண்டனை தான் முதலில் கொடுத்திருந்தார்கள். பிறகு மாற்றிக் கொண்டார்கள். ஏனென்று இன்னும் தெரியவில்லை” என்று சொன்னேன் “என்னை இரண்டு மணிக்கு கைது செய்தார்கள்” என்றான் கார்ஸியா.

”ஏன்”- அரசியலோடு கார்ஸியாடுக்கு எந்த வித சம்பந்தமும் கிடையாதென்று எனக்கு தெரியும்.

“தெரியாது... அவர்களைப் போல் சிந்திக்காத ஒவ்வொருவரையும் கைது செய்கிறார்கள்.” என்ற அவன் மெல்லிய குரலில் சொன்னேன்: “அவர்கள் ரமோ(ன்) க்ரி(ஸ்) யைப் படித்துவிட்டார்கள்”

“எப்போது?”- நான் நடுங்க ஆரம்பித்தேன்

“இன்று காலை தன் கஸினேடு ஏதோ விவதம் என்று அவ்னை விட்டு செவ்வாய்க் கிழமையே வந்து விட்டான். அவனை மறைத்து வைக்க ரொம்ப்ப்போர் இருந்தார்கள். ஆனுல் அவன் யாருக்கும் எப்படியும்கடன்பட நினைக்கவில்லை. இபீதாவின் இடத்தில் போய் ஒளிந்து கொளபவ எ இடுகாட்டில் போய் ஒளிந்து koகொள்கிறேன்’ என்று சொல்லி விட்டுப்போனேன்”

“இடுகாட்டிலா?”

“ஆமாம்” எவ்வளவு பெரிய மடையன். இன்று காலை மூன்று மணிக்கு அவர்கள் அங்கேப் போனார்கள். இது நடக்கு மென்று நிச்சயமாய் இருந்திருக்கிறது. அவர்கள் அவனை வெட்டியான் குழலில் கண்டு பிடித்தார்கள்”

“இடு காட்டில்!”

எல்லாமே சுழல ஆரம்பித்தன. நான் தரையில் உட்கார்ந்திருக்கக் கண்டேன். நான் பெரிதாகச் சிரித்தேன்.


நன்றி - விமலாதித்த மாமல்லன்
http://www.maamallan.com/2011/11/blog-post_10.html

எனக்குப் பிடித்த கதைகள் – 9

http://www.sramakrishnan.com/?p=4692

26/04/2015 



வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி


எப்ரோ சமவெளியில் மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கத்தில் நிழலோ மரங்களோ ஏதுமில்லை; ரயில்நிலையம் சூரிய வெளிச்சத்திலிருந்த இரண்டு ரயில்களுக்கு நடுவே இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகே பக்கத்தில் கட்டிடத்தின் இளம் சூட்டுடன் கூடிய நிழலில் கதவைத் திறந்தால் ஒரு மதுபானக் கடையும் அதன் கதவில் பூச்சிகளை உள்ளே விடாதிருக்க மூங்கில் மணிகளால் ஆன திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் இளம் பெண்ணும் கட்டிடத்திற்கு வெளியில் படிந்த நிழலில் இருந்த மேஜையில் அமர்ந்திருந்தனர். மிகவும் வெப்பமாக இருந்த அந்த இடத்திற்கு பார்சலோனா விரைவு வண்டி நாற்பது நிமிடங்களுக்கு ஒரு முறை வரும்; அந்த சந்திப்பில் இரண்டு நிமிடங்கள் நின்றுவிட்டு மாட்ரிட் நகருக்கு செல்லும்.

“நாம் என்ன குடிக்கலாம்?” அந்த இளம் பெண் கேட்டாள். அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்திருந்தாள்.

“மிகவும் வெப்பமாக இருக்கிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

“பியர் குடிக்கலாம்”

“டோஸ் செர்வெசாஸ்” என்று அந்த மனிதன் திரையை நோக்கி சொன்னான்.

“பெரிய கோப்பைகளா” ஒரு பெண்மணி வாயிலில் இருந்து கேட்டாள்.

“ஆமா, இரண்டு பெரிய கோப்பைகள்”

அந்தப் பெண்மணி இரண்டு கண்ணாடிக்கோப்பை பியர்களும் அவற்றிற்கு அடியில் வைக்கக்கூடிய உறிஞ்சு பட்டைகளையும் கொண்டுவந்து வைத்துவிட்டு அந்த மனிதனையும் இளம் பெண்ணையும் பார்த்தாள். அந்த இளம்பெண் மலைகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சூரிய வெளிச்சத்தில் அவை வெள்ளையாக இருந்தன. அந்த நாட்டுப்புறம் பழுப்பாகவும் வறண்டும் இருந்தது.

“அவை வெள்ளை யானைகளைப் போல இருக்கின்றன” என்றாள் அவள்.

“நான் அப்படியொன்றைப் பார்த்ததேயில்லை” அந்த மனிதன் பியரைக் குடித்தான்

“இல்லை, நீ பார்த்திருக்க மாட்டாய்”

“நான் பார்த்திருக்கக்கூடும்” என்றான் அவன். “ நான் பார்த்திருக்க மாட்டேன் என்று நீ சொல்வதால் மட்டும் எதுவும் நிரூபணம் ஆவதில்லை”

இளம்பெண் மணிகளால் ஆன திரையைப் பார்த்தாள். “ அவர்கள் எதையோ அதில் வண்ணம் தீட்டி எழுதியிருக்கிறார்கள். என்ன சொல்கிறது அது?”

“அனிஸ் டெல் டொரொ. அது ஒரு மதுபானம்”

“அதைக் குடிக்கலாமா?”

அந்த மனிதன் “இங்கே கவனியுங்கள்” என்று திரையின் வழி கத்தினான். அந்தப் பெண்மணி பாரிலிருந்து வெளியே வந்தாள்.

“ நான்கு கோப்பைகள். எங்களுக்கு அனிஸ் டெல் டொரோ வேண்டும்”

“தண்ணீருடனா?’

“உனக்கு தண்ணீருடன் வேண்டுமா?”

“எனக்குத் தெரியலியே” என்றாள் இளம்பெண் “ தண்ணீருடன் நன்றாக இருக்குமா?”

“அது சரி”

“தண்ணீருடன் உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள் பெண்மணி.

“ ஆமா தன்ணீருடன் தாங்க”

“இது அதிமதுரம் போல ருசிக்கிறது” என்ற இளம் பெண் தன் கண்ணாடிக் கோப்பையை கீழே வைத்தாள்.

“எல்லாவற்றின் வழியும் அப்படித்தான்”

“ஆமாம். எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. அதிலும் எதற்கெல்லாம் நீ ரொம்ப நாள் காத்திருந்தாயோ அதுவெல்லாமே அப்படித்தான் ருசிக்கிறது”

“ஓ நிறுத்து அதை”

“நீதான் ஆரம்பித்தாய்” என்றாள் இளம்பெண். “நான் சந்தோஷமா, சந்தோஷப்படுத்தப்பட்டுதான் இருக்கேன். என் நேரமும் நன்றாகத்தான் கழிந்தது”

“ நாம மகிழ்ச்சியா நேரத்த கழிக்கலாமே”

“ சரி. நான் முயற்சி செய்யத்தான் செய்தேன். அந்த மலைகள் வெள்ளையானைகளைப் போல இருக்குன்னு சொன்னேன். அது கெட்டிகாரத்தனமா இல்லையா?”

“ அது கெட்டிகாரத்தனம்தான்”

“இந்து புது வகை மதுவை குடித்துப் பார்க்க விரும்பினேன். அவ்வளவுதானே நாம செய்வது- பொருட்களைப் பார்ப்பதும் புதிய பானங்களை குடித்துப் பார்ப்பதும்?”

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்”

அந்த இளம்பெண் தூரத்திலிருந்த மலைகளைப் பார்த்தாள்.

“ அவை ரொம்ப அழகான மலைகள்” என்றாள் இளம்பெண் “ அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை. நான் மரங்களின் வழி தெரியும் அவற்றின் மேற்புறத்தினை மட்டுமே நான் சொன்னேன்”

“இன்னும் கொஞ்சம் நாம் குடிக்க வேண்டுமா?”

“சரி”

இளம் சூடான காற்று மணிகளாலான திரையை மேஜையை நோக்கித் தள்ளியது.

“பியர் குளிர்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கிறது” என்றான் அந்த மனிதன்

“நன்றாக இருக்கிறது” என்றாள் இளம்பெண்

“ அது உண்மையில் ரொம்ப எளிமையான அறுவை சிகிக்சை, ஜிக்.” என்றான் அவன். “உண்மையில் அது அறுவை சிகிக்சை கூட இல்லை”

மேஜையின் கால்கள் அழுத்தியிருந்த தரையை அந்த இளம் பெண் பார்த்தாள்.

“நீ ஒன்றும் சொல்ல மாட்டாய் என்று எனக்குத் தெரியும் ஜிக். உண்மையில் அது எதுவுமேயில்லை. காற்றை லேசாய் உள்ளே விடுவதுதான்

இளம்பெண் எதுவும் சொல்லவில்லை.

“நான் உன் கூட வருவேன். உன் கூடவே எல்லா நேரமும் இருப்பேன். அவர்கள் கொஞ்சம் காற்றை உள்ளே விடுவார்கள் அவ்வளவுதான். அதன் பிறகு எல்லாமே சுத்தமாய் இயற்கையாக மாறிவிடும்”

“ அதற்கப்புறம் நாம என்ன செய்வோம்?”

“அதற்கப்புறம் நாம ரொம்ப நல்லா இருப்போம். முன்பு நாம எப்படி இருந்தோமோ அது போலவே இருப்போம்”

“எதுனால அப்படி சொல்ற?”

“அது ஒன்னுதான் நம்மை படுத்துகிறது. அது மட்டும்தான் நம் சந்தோஷத்தைக் கெடுத்தது”

இளம்பெண் மணியாலான திரையைப் பார்த்தாள் கையை நீட்டி திரையிலிருந்த இரண்டு மணிகளை எடுத்தாள்.

“அதுக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும் நாம இரண்டு பேரும் சந்தஷோமா இருப்போம் அப்டிங்கிறியா?”

‘நாம சந்தோஷமா இருப்போம்னு எனக்குத் தெரியும். நீ பயப்படாதே. அதை செய்து முடித்த நிறைய பேரை எனக்குத் தெரியும்”

“எனக்கும்தான் நிறையபேரைத் தெரியும்.” என்றாள் இளம்பெண் “அதற்கப்புறம் அவர்கள் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க”

“சரி. உனக்கு பிடிக்கலைன்னா நீ செய்ய வேண்டாம். உனக்கு இஷ்டமில்லாம நான் அத உன்னை செய்ய வைக்கமாட்டேன். ஆனா அது ரொம்ப எளிமையானதுன்னு எனக்கு நல்லா தெரியும்”

“நீ உண்மையிலேயே நா அதச் செய்யனும்னு விரும்புறியா?”

“செய்யக்கூடிய சிறந்த காரியம் அதுதான்னு நான் நினைக்கேன். ஆனா உனக்கு அதுல இஷ்டம் இல்லைனா நீ செய்ய வேண்டாம்”

“நா அதச் செஞ்சேன்னா நீ சந்தோஷமா இருப்பியா, எல்லாமே முன்னே மாதிரி ஆயிருமா நீ என்னை காதலிப்பியா?”

“இப்பவுமே நான் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியும்”

“ எனக்குத் தெரியும். ஆனா நான் அதச் செஞ்சுட்டேன்னா, எல்லாமே பழையபடி நல்லா ஆயிருமா நா அந்தப் பொருளெல்லாம் வெள்ளை யானைங்க போல இருக்குன்னு சொன்னா உனக்குப் பிடிக்குமா?”

“எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவுமே எனக்கு அது ரொம்ப பிடிக்குது. ஆனா என்னால் அதப் பத்தி நினைக்க முடியல. எனக்கு கவலை வந்துட்டுன்னா நான் எப்டி ஆயிர்றேன்னு உனக்குத் தெரியும்தானே”

“ நா செஞ்சுட்டேன்னா நீ அப்புறம் கவலையே படமாட்டியா?”

“நா அதப் பத்தி கவலப் படமாட்டேன். ஏன்னா அது ரொம்ப எளிமையானது”

“அப்டின்னா நா அத செஞ்சுக்கிறேன். ஏன்னா நான் என்னைப் பத்தி கவலைப்படல”

“என்ன சொல்ற நீ?”

“ நான் என்னப் பத்தி கவலப்படல”

“நான் உன்னைப் பத்தி கவலைப் படறேன். அக்கறையோட இருக்கேன்”

“ஓ ஆமா. ஆனா நான் என்னப் பத்திக் கவலப்படல. நா அதச் செஞ்சுடறேன். எல்லாமே அப்புறம் நல்லா ஆயிடும்”

“ நீ அப்டி நினைச்சேன்னா நீ அதச் செய்ய வேண்டாம்”

இளம்பெண் எழுந்து ரயில் நிலையத்தின் கடைசி முனை வரை நடந்து சென்றாள். மறுபக்கத்தில் தானிய வயல்களும் எப்ரோ நதிக்கரையில் மரங்களும் இருந்தன. தூரத்தில் நதிக்கரையைத் தாண்டி மலைகள் இருந்தன. மேகத்தின் நிழல் ஒன்று தானிய வயலின் வெளியில் நகர்ந்து சென்றது. அவள் நதியினை மரங்களூடே பார்த்தாள்.

“இது எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம். எல்லாத்தையும் நாம வச்சுக்கலாம். ஒவ்வொரு நாளையும் நாம இன்னும் இன்னும் முடியாததா நாம பண்ணிரலாம்”

“என்ன சொன்ன?”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்னு நான் சொன்னேன்”

“எல்லாத்தையும் நாம் வச்சுக்கலாம்”

“இல்ல முடியாது”

“மொத்த உலகத்தையும் நாம வச்சுக்கலாம்”

“இல்ல நம்மளால முடியாது”

“நாம எங்க வேணாலும் போலாம்”

“இல்ல முடியாது. அதுக்கப்புறம் அது நம்மளோடது இல்ல”

“நம்மளோடதுதான்”

“இல்ல. அது நம்மளோடது இல்ல. ஒரு தடவ நம்மகிட்டேர்ந்து அவங்க எடுத்துட்டாங்கன்னா அத திரும்பப் பெறவே முடியாது”

“ ஆனா அவங்க அத இன்னும் எடுக்கவேயில்லையே”

“பாக்கலாம். பொறுத்திருந்து பாக்கலாம்”

“நா எந்த மாதிரியும் நினைக்கல. எனக்கு நல்லா தெரியும்”

“உனக்கு இஷ்டமில்லாத எதையும் நா செய்யச் சொல்ல மாட்டேன்”

“அது என்னோட நல்லதுக்கும் இல்லதான். நாம இன்னொரு பியர் குடிக்கலாமா?”

“சரி. ஆனா நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா..”

“எனக்குப் புரியுது. நாம ஒரு வேள கொஞ்ச நேரம் பேசாம இருப்போமா?”

அவர்கள் மேஜையில் வந்து அமர்ந்தார்கள். அந்த இளம்பெண் மலைகளையும் வறண்ட சமவெளியையும் பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளையும் மேஜையையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ நீ எதப் புரிஞ்சிக்கிடனும்னா” அவன் சொன்னான் “ உனக்கு இஷ்டமில்லைன்னா நீ அத செய்யவேண்டாம்னுதான் நா சொல்லுவேன். உனக்கு அது ஏதேனும் அர்த்தமுள்ளதுன்னா நா அதன் போக்கிலேயே போகத் தயாரா இருக்கேன்”

“அது உனக்கு அர்த்தமுள்ளதா? நாம ஒத்துப் போகலாம்”

“ ஓ நிச்சயமா. ஆனா எனக்கு உன்னத் தவிர வேறு யாரும் வேண்டாம். வேறு யாருமே எனக்கு வேண்டாம். எனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்”

“ஆமா உனக்கு அது ரொம்ப எளிமையானதுன்னு தெரியும்.”

“நீ அதச் சொல்றது சரிதான். ஆனா எனக்கு நிச்சயமா தெரியும்”

“எனக்காக நீ ஒரு காரியம் செய்வியா?

“உனக்காக நா என்ன வேணும்னாலும் செய்வேன்”

“நீ தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, பேச்சை நிறுத்திறியா?”

அவன் எதுவும் சொல்லாமல் ரயில் நிலையத்தின் சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய பைகளைப் பார்த்தான். அவர்கள் இரவுகளைக் கழித்த விடுதிகளின் வில்லைகள் அவற்றில் ஓட்டப்பட்டிருந்தன.

“ஆனா உனக்கு அதச் செய்ய இஷ்டமில்ல. நா எதப்பத்தியும் கவலப்படல”

“நா கத்தப் போறேன்”

அந்தப் பெண்மணி திரையை விலக்கிவிட்டு வந்து இரண்டு கன்ணாடிக்கோப்பைகளில் பியரையும் அவற்றுக்கான உறிஞ்சு பட்டைகளையும் வைத்துவிட்டுப் போனாள். “இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்” என்றாள் அவள்.

“அவள் என்ன சொன்னாள்” என்று கேட்டாள் இளம்பெண்

“இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும்னு சொன்னாள்”

அந்த இளம்பெண் அந்தப் பெண்மணியைப் பார்த்து நன்றி தெரிவிக்கும் முகமாக புன்னகை புரிந்தாள்.

“ நான் நம்ம பைகளையெல்லாம் இப்பவே எதிர்த்த பகுதில வச்சுட்டு வந்துர்றேன்” என்றான் அவன். அவள் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.

“சரி. வச்சுட்டு வா. நாம பியர குடிச்சு முடிச்சிரலாம்”

அவன் அந்த இரண்டு கனத்த பைகளையும் தூக்கிக்கொண்டு நிலையத்தின் அடுத்த பக்கத்தில் இருந்த பகுதிக்குச் சென்றான். தண்டவாளத்தில் அவன் பார்த்தபோது அங்கே ரயில் வந்திருக்கவில்லை. திரும்பி வந்தவன் பார் அறைக்குச் சென்றான். அங்கே ரயில்லுக்காகக் காத்துக்கொண்டிருந்த பலரும் குடித்துக்கொண்டிருந்தனர். பாரில் அவர் ஒரு அனிஸ் குடித்தான்; சுற்றியிருந்தவர்களையெல்லாம் பார்த்தான். அவர்களெல்லோரும் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அவன் மணியாலான திரையைக் கடந்து வந்தான். அவள் மேஜையில் உட்கார்ந்திருந்தாள். அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.

“நீ இப்போது நன்றாக உணர்கிறாயா?”

“நான் நன்றாக இருக்கிறேன்” என்றாள் அவள் “ என்னிடத்தில் எந்தக் கோளாறும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்”

***Thanks : mdmuthukumaraswamy.blogspot.com