தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, March 16, 2017

* ஞான பீடம் ” (குறுங்காவியம்) - கலாப்ரியா

நன்றி : கொல்லிப்பாவை இதழ் 2
https://www.facebook.com/velmuruganperiavan?hc_ref=NEWSFEED
Automated GOOGLE-OCR AND SOME HEAVY WORK 
நீ கண்ணாமூச்சி 
சொல்லித் தராததால்
நான்
தூங்கத்தெரியாமலே
போனேன்.

-கலாப்ரியா
________________
* ஞான பீடம் ” (குறுங்காவியம்)
" சிவசங்கரிக்கும்
ஹரிக்கும்."

ஏகலைவம்
விதுரக்கண்களும்
அறியாமல்
குருக்ஷேத்ரம்
ஏகலைவ வதத்தில்
ஆரம்பமாச்சு.

பார்த்திப வெற்றிக்காய்,

துரோணன்
கட்டை விரல்
காணிக்கை வாங்கினான்.

துரியோதன ஜெயம்
ஏகலைவத் திறமையில் எனும்
துரோண நிச்சயம்

இன்றுமென்ன
செத்தா போச்சு.

2
பள்ளியில் சேர்ந்த
அடிநாட்களில்
பரிமாணப் ப்ரக்ஞையின்றி
பூத்தனமான

மழலை முதிர்ச்சியுடன்
டைம்டேபிளை

"
ஒட்டி:

புத்தகங்களுக்கு
நினைவாய் அட்டைபோட்டு
அடை காக்கத் தொடங்குவாய்
கனவுகளை;

உன் பட்டங்களே,
ஜாதி நீரில்
சொந்தக் காரத் தாழ்வாரத்தில்

உட்கார்ந்தபடி

கப்பல் செய்து விடப்

போகும்

கனவான்களை நினையாமல்.

சிறுத்தொண்டம்

விடுமுறைக்கு
அக்கா தன்குழந்தைகளுடன்
வருவாள்.

வெறுங்குழி துடைத்து
அடுத்த குழி: எதிர்த்த குழி
யின்
முத்தள்ளுகிற
பல்லாங்குழி லாகவத்தோடு
சிதறிக் கிடக்கிற
வீடு நேர்ப்படும்.

"முத்தாயம், முப்பண்ணென்டு
மூணு –“
விருத்தம் போடுகிற
அக்காவின் கைக்கெதிராய்
அம்மாவின் காய்கள்
சவங்களாகும்.

மத்யான
அனாதியில்
வில்வ மரத்து
அணில் ராகங்களுக்கிணையாய்
புழக்கம் பேசி
அம்மாவுக்குப் பேன் பார்ப்பாள்

"எம்புட்டு முடியிருந்துது
உன்னைப் பெத்தவீட்டில் தான்
என் தலை கழிஞ்சு போச்சு”.

அக்காவின் சாமர்த்தியங்களைப்
பொறாமல்
மெய்யாய்ப் பொய் சொல்லி
தன் ஈகோ " –
சமனப் படுத்துவாள்
அம்மை,

நினைவாய்
நாலு மணிக்கு
யேனம் ஒழிச்சுப்போட
எந்திரிப்பாள்.
".கிடக்கட்டுண்டீ
வந்த இடத்திலயும் வாரிப்
பெறுக்கித்
தாளிக்கணுமாக்கும்".
அம்மா உண்மையாய்
ஆத்ங்கப் படுவாள்.

அக்காவின் ஆர்வம்
அவளின் ஆர்மோனியத்தையும்
விற்றுத் தின்றதிற்கான
நளினச் சீறலில்
சுருதியற்றுப் போகும்

உன் வேலையற்ற
பொழுதுகளின்
வழக்கமான சீறல் கூட
அவளிடம் பணிந்து
சிரிக்கும்.

ஆனாலும்
தனக்கு பொங்கல்ப்படி
தர முடியாததை
மாமியார் சொன்னதாய்ச்
சொல்லி
உன் மூளையில் முளைத்த
மீசையை
இரக்கமின்றிச்
சுட்டெரிப்பாள்.

என் தோழனே.
"அக்காக்களால்"
பிரியங் கொட்ட
முடிகிறதே தவிர
பால் தர முடிகிறதில்லை."

துஷ்டி வீடு நெருங்க நெருங்க
கூந்தல் அவிழ்த்துக்
கோடாலிக் கொண்டைபோட்டு
சோகம் வரவழைத்துக்
கொள்கிற
பொம்பளைகளின்
சம்பிரதாயச் சாதுர்யம்
நினைவை ரெண்டாம் பக்கங்களி
லிருந்து
வருகிற விலக்கப் பார்க்கும்.

3



கூட்டுக் குடும்பத்தின்
மூத்த பிள்ளை
உன் காலேஜ் நோட்டிஸ்களை
திருடி விற்றதுக்காக
வயசு மறந்து
அடிததுத்தைத்து சத்தம்
போட்டது
நினைவாய் இன்டர்வ்யூவுக்கு
முன்தினம்.
உடம்பெங்கும்
ரீங்காரிக்கும்.

இவளுக்கான சில
காதல்வரிகளை
பிள்ளைகள் கிழித்துக்
கப்பல் செய்யும் போது
உன் வாசலுக்கு வரவேசெய்யாத
தபால்காரனையும் மறந்து
புதிதாய் அழும்.
மூளை
காலுக்கடியில்.

உன் வீட்டுக்கு வருகிற எப்போதாவது
அழகான அதிதி மனைவிக்குப்  
போட
வீட்டில் தடுக்கு இருக்காது.
நினைப்பைக் கழற்றி
அவளிடமுன்
செளந்தர்யச் சாமர்த்தியம்
உணர்த்தும் முன்

துணை வந்த
வேலைக்காரப் பெண்
உன்னை நந்தனாக்குவாள்

நந்தனுக்கு
மன மைதுனமும்
இழந்த கோ
தனித்துப் போய்

நாயாய்ச் சுருண்டு
கொள்ளும்
வேலைக்காரியின்
சேத்துப் புண் படர்ந்த
காலுக்கடியில்.


4 ,
 உன் மூளைச்சதையை
குடும்பத்தின்
பகலுணவுக்குப்
பங்கிட்டுக் கொடு

உன் கையில்
ஒட்டின திருவோடு
நிறையவும்   வேண்டாம்
கழறவும் வேண்டாம்

சாபவிமோசனம்
உனக்கெதுக்கு
தின்னப் பதமாய்ச் 
சதை வளர் (?)த்துப் 
போ

அந்நியம்

உன் பதவியும்
சம்பளமும்
முக்கியப்பட்டுப் போகும்

பந்திச் ஜமக்காளப்
புழுதியில்
மணவறைப பூ
பிய்த் தெறிந்து
விளையாடிப் புரள்கிற
குழந்தைகள்,

பந்திக்கு அவசரப் படுத்துகிற
பொறுப்பான நண்பர்கள்
எல்லாக் கும்மாளிக்கும்
மெளன சாட்சியாகிற
கல்யாணியண்ணன்கள்:

ரசித்து மகிழ்கிற
உன் மனச் செளந்தர்யங்களே,
சம்பளம் கேட்டு
நீ உதைத்து எறியப்பட்ட
10. A 1 வேலை குறித்து
வக்ரமாய் வருத்தப்பட்டு
சொந்தக்காரக் கும்பல்
கற்பழித்துப் போகும்.

'மீன் கொத்திகளின்
அழகும் வண்ணமும்
இன்னும் சிலாகிக்கப்படவில்லை
என் தோழனே'.

2
அம்மாவின்
"சகுனம் பார்த்துப் போ"
வாசல்ப்படியில் விட்டுவிட்டு
தெருவுக்கு வந்தபோது
நீ தங்கத்தாள் தந்து
வாத்சல்யங் கொட்டின

பால்ய கால ஸ்னேகிதி
பெயரிடப்படாத தன்
சிசுவுடன் எதிர்ப் படுவாள்
கண் முழுக்க
கானல்ப் பிரியம் குளமிடும்.

தெரு முனையில்
எதிர்ப்படுகிற
டாக்ஸி டிரைவர்,

பணத்தை வைத்துவிட்டு
வெறும் டின்னுடன்
பெட்ரோல் வாங்கப்
போனதை

தன் அந்நியத்தனம்
நினையாமல்
சம்பந்தமற்ற உன்னிடம்
உரிமையாய்ச் சொல்லி
போவான் 
அவனின் அசாதாரண 
"இனஞ்சேரல்
உனக்கு வர்க்கவிதியை 
பாசத்துடன்
தெரிவிக்கும்.

பஸ்ஸில்
சமாதானப்படாத 
மற்றவர்கள் எரிச்சலிக்கிற 
குழந்தையின் அழுகீதங்களை 
மீறி
தாயின் தவிப்பு 
உன் இண்டர்வ்யூ 
நினைப்பைக் கரைக்கும்
"என் தோழனே 
இனி இண்டர்வ்யூக்களுக்குத் 
திருவோ டேந்திப்போ"-

________________
3
உனக்குப் பிரியம் செய்திருக்கிற
பழைய சேக்காளியின் 
மறந்து போன பெயர் 
பொருட்காட்சியில் 
ராட்டினத்தருகே ஆளைப்பார்த்ததும்
இனிஷியலுடன் நினைவுவரும்.

நிகொடின் புணர்ந்த
உன்
நுரையீரலுக்குள் 
'சிலேட்டுப் பிரியம்ஒன்று 
பரவும்.

தாச்சி தொடவிடாமல் 
உன்னையே கண்வைத்து 
விரட்டின பள்ளிச்சினேகிதன் 
உன் உள் வாங்கின
கண்ணின் சோகம் விசாரித்துக்
கல்யாணக் காய்தம் தருவான்
அது மாடியானால் 
விழுந்து நொறுங்கிச் சாகு 
சுகமாயிருக்கும். - 

"ஆனாலென்
தோழனே",
அவர்களின் 
"என்ன செய்யறே இப்போ" வில்
நீ சம்ஹாரிக்கப்
படுதல் தவிர்க்க முடியாதது.

4
உன் பார்வைக்கு மட்டுமே 
பரிமாணம் நிறைய 
உண்டு--

பஸ் நடுவழியில் 
நின்ற போது 
பக்கத்து மண்டபத்தில் 
ஆடு மேய்க்கிற 
கிழவன் உனக்கு மட்டுமே 
தர்சனப்படுவான்
செருப்பு முள்ளைக் 
கடித்திழுத்தபடி 
தன் கனவை --

தான் கானல் மேய்ந்து 
வளர்க்கிற
ஆடுகளின் குட்டிகளொன்றை 
தன் முதலாளி 
சம்பளமாய்த் தந்து 
அந்த மேய்ப்பனின் 
மந்தை பெருகப் போகும் 
ர்ப்பந்தரிக்காத 
எதிர் காலத்தைச் 
சொல்வான்
அந்த எழுபது வயதுக் 
கிறிஸ்தவனின்
முடியாத உயிர்த்தெழுதல் 
குறித்து
மந்தமாய்ச் சிரி

அவனிடம் பீடி வாங்கி 
வலிப்பதோ 
ஸ்தூபியின் நாலாவது 
சிங்கத்தைப் பார்க்கிறதோ 
ஒரு தளப்பட்ட 
பார்வைக்கார 
உன் மூத்த புத்திசாலிகளுக்கு 
முடியாத 
விஷயமென் தோழனே.
________________
5
நடுத்தெருவில் 
முத்துச் செதுக்கி 
விளையாடுகிற பையன்கள் 
கண்டு
கரண்டைக்காய்
பயப் படும். ::-:: 

இரட்படையடிக்குப் பத்தாயிரம்
பதினஞ்சு கவுண்டி
பேசி விளையாடும் 
டிராயர் மனுஷர்களின் 
குச்சிக்கம்பு கண்டு 
மூளையிருக்கிற தலை பயப்படும்

வாசலில்
போஸ்ட் மேன் பார்த்து 
தவமிருக்கும்
மனசிலோ--

குளியலறைக்குள்
தானும் வரணு"மெனத்தாயிடம்
கூப்பாடு போடும்
ஆண் குழந்தை 
வெளியிலிருந்து.


பயம் – 
அணில்ப் பல்லாய் 
கொறிக்கக் 
கொறிக்க
வளரும். வாய் மூடிக்காத்திரு 
வளர்நது தாடையைக்
குத்திக்கிழிக்கும்--

7
வயக குறித்த 
பயம் வளர்கிறபோது
தனித்த கிராமத்திற்குப் போ

பூச்சுப் பெறாத 
ப்ரைமரி ஆஸ்பத்திரி 
சீமைக் கருவேல் 
நடுவில் முளைத்த 
தெரு வென்றில்லாத 
மண் விரிப்புகள்,

கோரிக்குப் பக்கத்தில் 
உடைக்கும் சத்தம் 
கேட்டுப் பழகி 
பயம் மறந்த--

தேரை தேடும் 
பாம்புக் குஞ்சுகள் 
பொறுக்க வருகிற 
மயில்க் கூட்டம்

கொடை தராததால் 
கோப முற்று 
மழை வராமற் 
சபித்து 
கெட்ட வார்த்தை 
எழுதின
சுவருடன் 
பிரகாரமற்ற 
வண்டி மறிச்சாங்கோயில் 
கடுங்காப்பி,
பீடி
காகிதம் கற்பழிக்காத 
கிராமப் பொருளாதாரம் 
எல்லாமும் 
உன்னை இன்னும் 
அன்னியப் படுத்தி 
பயம் விலக்கும்.
________________
உபாசனை

1
கேமரா தின்ன முயன்று 
தோற்றுப் போன 
ஜூலியின் அழகுடன் 
இரவு தொடங்கும்
விளைக்கணைத்துப் படுக்கையில் 
சாய்கிறபோது 
தேள் கொட்டும் சுருக்காய் 
சசிக் கூந்தல் 
மூளை பெருக்கிப்போகும்
ராத்திரிகள்
பழையதில்லை, பழையதேயில்லை.
......

நீ முட்டுக்கட்டி

காரணமற்றுக்
கலந்திருக்கிற 
நிசியில்

ரயில்ச் ஜன்னலில் 
கூப்பிடாத முகங்கள் பார்த்து 
ஏமாந்து, விலைபோகாத 
"சுக்காஃபியுடன் திரும்பி 
ஊருக்குள் கூவி 
பசியைக் கடைசியாய் 
மறந்து விட வரும் 
ஒரு தர்மபுத்ரனுடன்
ரயில்வே ஸ்டேஷன் நாயொன்று
கூடவே வரும்.

அவனுே நீயோ 
கனவு காணுகிற 
சொர்க்கம் எங்கேயும் 
நிதர்சனப்படும்
முன் 
சோர்வாய்த் தூக்கம் 
வரும்.

ஊர் முழுக்கப் 
போஸ்டர் ஒட்டி 
ராவு கழித்து 
கடைசிப் போஸ்டரை 
படித்துறை மண்டபத்தில் 
ஒட்டித்தீர்த்து 
அண்டிறாயர்பையிலிருக்கும்
பீடியெடுத்துத் தர 
சுற்றும் முற்றும் 
ஆள் பார்ப்பான்,

சவரம் 
வெறுத்த முகத்துடன் 
சசிகலாக்கள் 
வந்து போன 
ராத்திரிக் கனவின் 
மிச்சத்தை 
பாதி வழிவரை அசைபோட்டு 
மீதிக்கு--

முதலில் அம்மணம் 
மறைத்த நாற்றங்கால்ப்
பூமியின் ரம்மியம்
சவைத்து..
.
சலித்து வரும் 
உன்னைக் கூப்பிடுவான்;
"அண்ணேன்.

உபாசனை வழியாய் 
உன் கண்ணுக்குள் 
மூளை வந்ததை யாரறிந் 
தாரிங்கே
3

வெறும் பவள மல்லிக் 
கனவுகளுக்கு மட்டுமில்லை
சிபாரிசுக்குக் கூட 
ஒரு முகம் வேண்டும்.

தாவரங்களற்ற 
புதுமழை புணர்ந்த 
குளத்தில் 
சாப்பாட்டுச்சட்டியில் 
மீன் பிடித்து விளையாடும் 
சாயந்தரப் பிள்ளைகளைத் 
தரிசிக்கிற முகம் 
ஒரு வேலை வாங்கித்தர 
வக்கற்றுப் போகும்.
________________
குழூஉ

1
"சம்போ மகாதேவ 
சாம்ப சிவா”.போடு 
சம்போ மகாதேவ 
சாம்ப சிவா....
 சாமி சாமி சாமியென்று
  நாமஞ்சொல்லிப் பாக்கனும் 
நாவினில் வராதுபோனால்
  நால்வரோடு சேரனும்....

வாழ்க வாழ்க அண்ணா வாழ்க....
 வாழ்க வாழ்க எம்ஜியார் வாழ்க
லைஞர் படை போதுமா.
இன்னுங் கொஞ்சம் வேணுமா
மார்க்ஸிஸ் பார்ட்டி ஜிந்தாபாத்

முழுதுமாய் 
குழுவுக்குள் அடைந்து 
நட்புக்குள் சிறைப்பட்டுப்போ 
பந்தயங்களின்
நீள அகலம் 
வாழப் போதுமானது,

ஆனாலும் 
செண்பகப் பூவின்
மணங்களில் 
சோகபாவம் 
தர்சிக்கிற 
"ரசிகமணி' மூஃளயை
எங்கே அடகுவக்ய...
2

முழுதுமாய்
நடப்புக்குள்
சிறைப்பட்டு 
மூலை தேடுகிற தவம் 
வேறும் காத்திருத்தலாகி.
குழந்தைகளை
முந்தானையால் 
க்கடைசியாய் முகந்துடைத்து 
குழந்தைகளை 
நர்சரிக்கு அனுப்பி 
முந்தானை நேர்ப்படுதித் 
திரும்புவாள்
நீ தரிசிக்கிற முடியாமையைச் 
சொல்கிற
மாதிரி
உதடுமடித்துச் 
சிரித்துப் போவாள்
கீழ்வீட்டுப் பத்மாக்காவின் 
மேலுதட்டு மருகூடச் 
சந்தனம்...

யாரோ
வாலில் நூல்கட்டி
வெளி"யில் வெயில் மேய முடியாமற்போன 
தட்டான்
நூல் கழண்டபோது 
அந்தியில்
பஜாரில்
தாமதமாய்த்

தரையில் பறக்கும்.
________________
ஞானபீடம்

குறியில் 
காயங்களுடன் 
இன்னும் சுவாரஸ்யமாய்ப் 
புணர்ந்து
ஈந்த 
உன் சிந்தனைகளில்
நீ 
மூலைகளற்றுப் போனாய்
 "ஞானவான்களின் 
சாமர்த்தியத்தை 
மேடையேற்றுகிற 
சொறியல்ச்சுகம் 
உன் மூளையிலும் படர்ந்தாச்சு
உன் மூலைகளற்ற 
பரந்தவட்டத்தின் 
எந்த ஆரங்களிலும் 
உன்னை 
இளைப்பாறவிடாதுன் 
சாமர்த்தியம்.
நீ
தலைசாய்க்கச் 
சஹிருதயத் 
தோளின்றிப்போனாய்
சாபத்திற்குப்பயந்து 
மரணதேவதையான
ம்ருத்யு கூட 
உன்னைக் காதலிக்க மாட்டாள்.
"காயே தவஜெய ஹாதா”.