தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, July 17, 2017

அலைகள் - சுந்தர ராமசாமி

auschwitz/


“A country is considered the more civilized the more the wisdom and efficiency of its laws hinder a weak man from becoming too weak or a powerful one too powerful.”


அலைகள் - 

சுந்தர ராமசாமி

அன்று இரவு என்னைக் கைதுசெய்துவிடுவார்கள் என்று என் பரிசயக்காரன் எதிர்பார்த்தான். என்னிடம் அவன்கொண்ட கவர்ச்சி - என் அனுமானம் தான் இது - மிகையான கற்பனையை விரிக்கிறதோ என்று நான் யோசித்தேன். இம்சையற்றுக் கடற் கரையில் திரியும் ஒரு பூச்சி கைதுசெய்யப்பட என்ன இருக்கிறது? "அப்படியல்ல" என்றான் அவன் மீண்டும். இது நடந்து மூன்று நாட்கள் (பின்னிரவும் சேர்த்தால் நான்கு) ஆகிவிட்டிருந் தன.

சரி. மறுபக்கம், எதுவும் நிகழக்கூடிய இருள் கவியும் நாட்கள் உருவாகி வருவதாயும் எனக்குப் பட்டுக்கொண்டிருந் தது. அதன் முதல் தாக்குதல்போல் மிகுந்த சங்கடத்தைத் தரும் அலைக்கழிப்பு நாட்களாகக் கழிந்துகொண்டிருந்தன. மனக் கஷ்டம் ஒருபுறமிருக்க சரீர உபாதைகள் - நாய் அலைச்சலும். பட்டினியும், உடம்பொடுக்கி உறக்கமும் - தாங்க முடியவில்லை. பாதங்களில் வீக்கம் கண்டிருந்தது. காலையில் வற்றி, மாலையில் மீண்டும் பொதியாய் வீங்கும். என் உடன்பாடோ, முன்னுணர்வோ இல்லாமல் திடும் திடுமென விரியும் மனக் காட்சி வேறு என்னைத் தொய்ய வைத்துக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று காட்சிகள் மாறி, மாறி, ஒரே விதமாய். சில சமயம், கோலத்தின் வரைகள் மிதிபட்டு அழிந்துபோய்ப் புள்ளிகளும் அரைகுறையாய் மிஞ்சிப்போன முளித்தனம் மனதில் விரியும். இதைத் தொடர்ந்து விவசாயிகள் ராப்பகல் பாடுபட்டு நிமிர்த்த பயிரை நடுநிசியில் பள்ளத்தாக்கிலிருந்து துஷ்டஐந்துக்கள் கூட்டம் கூட்டமாய் இறங்கி, மிதித்து துவம்சம் செய்துவிட்டு விடியக்கருக்கில் அமைதியாய்த் திரும்பும் காட்சிகளும் மனதில் விட்டுவிட்டுத் தோன்றும். இன்னபடி இது என்றில்லாமலும் இதற்காக இது என்றில்லாமலும் எதுவும் நிகழலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் உருக்கொள்ளும் அலங்கோலம் என்மீதும் கவியும் எனும் எளிமையான உண்மை அப் போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அலைகள் 471

அன்று நடுநிசி தாண்டியதும் நடக்கத் தொடங்கி வெயில் ஏறும்முன் அடுத்த ஊர் சேர்ந்துவிடவேண்டியது என்று எண்ணி யிருந்தேன். அதுதான் தப்பு என்று அடித்துச் சொன்னான் பரிசயக்காரன். 'பயணம் கிளம்புவது பற்றி முன்கூட்டி யாரிடமும் சொன்னதற்கு ருஜா இல்லையே' என்றான் அவன். 'கைதாவதிலிருந்து தப்பிக்க நழுவியதாகும்' என்றான். அவன் வாதம் எனக்கு உள்ளூர உறைக்கவில்லை என்றாலும் உதாசீனப்படுத்த முடியாத சுட்டல் இருப்பதாகப் பட்டது. அதிசய ருஜக்களும் தடயங்களும், சாட்சிகளும் நிரம்பிய உலகம் அதிகாரிகளுடையது. மன தின கோணங்கியைத் தருக்கத்தில் அளந்து காட்ட வேண் டிய நிர்ப்பந்தத்தில் தோல்வியே நிம்மதியாகிவிடும். தண்டனையும் ஆசுவாசமாகத் தெரியும். பயணம் புறப்படுவதைக் கைவிட் டேன். கைதாகக்கூடும் என்ற செய்தியே நடமாட்டத்தைக் கட் டுப்படுத்திவிட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறு ஒரு சூழ்நிலை உருவாகும் என இரண்டு தினங்களுக்கு முன் யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன். எல்லாவற்றையும் முழுகிவிட்டு அங்கு வந்திருந்தேன். தெரியாத ஊர்களில் மனம் போனபடி திரிந்து, சாவிடம் என்னை ஏற்றுக் கொள்ளும்படி அரற்றியபடி அலைந்துகொண்டிருந்தேன். நினை வுகளை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. என் மீது அவை கவிந்து பிடுங்காமல் தடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை. தூக்கம் தான் ஒரு இடைவெளியை - ஓய்வை - விடுதலையைத் தந்து கொண்டிருந்தது. என்றாலும் தூக்கத்தில் நினைவுகளின் பிடுங்கல் அற்ற விச்ராந்தி எனக்குத் தெரியாமல் கழிந்துபோய் மீண்டும் பிடுங்கல் ஆரம்பிக்கும்போது தான் கழிந்துபோனதே தெரிகிறது. உண்மையில் விச்ராந்தியை எனக்குச் சில கணங்களேனும் பிரக்ஞையுடன் சுவாசிக்க ஆசையாக இருந்தது. என்னதான் வேண்டித் தவம் கிடந்தாலும் அது எனக்கு லபிதமாகாது என்றும் பட்டது. மலபார் கோயில் பிரகாரத்தில் தற்செயலாய்ச் சந்தித்த ஆத்மஞானி சொன்னார். 'வேஷ்டியைக் காவியில் முக்கி எடுத்து விடலாம் கூடிணப்பொழுதில், கூடினப்பொழுதில், மனதை முக்க? பரமேச்வரா' என்று தன் இரு கரங்களையும் வானத்தை நோக்கி விரித்தார். மனதை வெகு நன்றாகக் காவியில் முக்கப் போகிறேன் என்று நம்பிக்கொண்டிருந்தபோது பதுங்கியிருந்து தாக்குவது மாதிரி இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வழக்கம்போல் அன்று சாயங்காலமும் மணல் மேட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அது கடற்கரையின் ஊர் தாண்டிய பகுதி, கும்பலின் சலசலப்பு இராது. முன்னெல்லாம். சமீபமாக அந்த இடத்துக்கு சூரியனைப் பார்க்கத் தோது என்ற திடீர்________________




472 சுந்தர ராமசாமி

மவுஸ்" ஏற்பட்டுக் கூட்டத்தை ஆகர்ஷிக்க ஆரம்பித்திருந்தது. இப்போது அங்கும் கசகசவென்று கூட்டம். அன்று மேகம் குறைந்த வானம், வழக்கத்தைவிடவும் இருந்தாலும் நம்ப முடியாது. கடைசி நிமிஷத்தில் ஒரு துண்டு மேகம் புறப்பட்டு வந்து மறைத்துக்கொண்டு நிற்கும் சதிக்கு ஏவிவிட்டது போலிருக் கும். சில சமயம் குழந்தைகள் கைப்பொருளை மறைத்துக் கொள்வதுபோல் மேகத்தின் மறைவும் வெகுளித்தனமாகவும் அழகாகவும் இருக்கும். மறைக்கப்பட்டுத் தெரிவதும் சூரியனுக்கு அழகாகத்தான் இருந்தது. ஒரே விதமாய் இருதடவை இதுநாள் வரை சூரியன் அஸ்தமிக்கவில்லை என்பதை ஒரு வாக்கியமாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டேன். 

சூரியன் மறைந்தது. மறுகணம் கூட்டம் பிசுபிசுத்துக் கலைய ஆரம்பித்தது. சூரியன் அற்ற வானத்தைப் பார்ப்பது பாவம் என்பது போலவும், அடுத்து முக்கியமான வேலையைச் செய்து முடிக்கக் கணமும் பொறுக்க முடியாது என்பது போலவும் கூட்டம் பிசுபிசுக்க ஆரம்பித்தது. மணல் மேட்டின் கடல் நோக்கிய சரிவில் நான் இறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து பார்ப் பதற்குக் கும்பலின் அசைவு வேடிக்கையாக இருந்தது. ஒரு பெரிய மேடையில் அனைவரையும் திணித்து நிற்கவைத்துக் கயிற்றால் அதைக் கட்டியிழுப்பது போலிருந்தது. 

சூரியன் மறைந்த பின்பு கடற்கரையில் மிஞ்சியிருக்கும் வெளிச்சத்துக்கு ஆயுள் சொற்பம். கணத்துக்கு கணம் இருள் ஊடுரு விக் கறுத்துக்கொண்டிருக்கும்; வெளியிடமுடியாத பெரும் துக்கத் துக்கு ஆட்பட்டுக் கலங்கும். மானசீகமாக அந்த துக்கத்தில் பங் கெடுத்துக்கொண்டு நிற்பது எனக்குப் படிந்துப் போயிருந்தது. 

கடலின் ஆழத்திலிருந்து ராக்ஷஸத் தடி உருண்டைகளை மேல் உதைத்துத் தள்ளுவதுபோல் நீரோட்டம் திமிறியெழும். மேற்பரப்பு குலுங்கி அதிரும். காற்று பிடித்து உன்னியெழும் அலைகள் கரை நோக்கி வரும். சர்ப்ப வீரர்களின் குதிரைப்படை குதித்துக் குதித்து நம்மை நோக்கி நெருங்கும். பக்கவாட்டுகளி லிருந்து நாம் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நிமிஷத்தில் வேறு படைக்கலங்களின் நீள் வரிசை இணைந்து மேலும் கம்பீரம் பெற்றுக் குதித்து முன் நகர்ந்தோடிவரும். இவ்வாறான ஒரு ஆக் கிரமிப்புக்கு இந்த அசட்டு ஈரமணல்கரை எப்படிப் பதில் சொல் லப்போகிறது என்று நாம் யோசிக்கும் போது, கரையோரம் படைகள் சின்னாபின்னப்பட்டுச் சிதறிப் பின் திரும்பி ஓடும். இதை விட அழகானது எதுவுமில்லை; இந்த அலைகளை விட இவைக ளின் எழுச்சியும், ஆர்ப்பாட்டமான சொற்ப நேர வாழ்வும்,

அலைகள் 478

மண்டை மோதிச் சின்னாபின்னப்பட்டு உருத்தெரியாமல் வீழ்ச்சி அடைவதையும் விட, இன்ன உயரத்தில் எழுந்து ஆர்ப்பாட்டத் துடன் வரும் அலை, கரையில் இவ்வளவு தூரம் ஏறி ஈரம் பண் ணும் என்று கணக்குப் போட்டு எப்போதும் அதில் தோற்றுக் கொண்டிருப்பேன். இவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்பது மிகுந்த சந்தோஷத்தைத் தரும். 

அப்போது மணல்மேட்டிலிருந்து அதட்டல் கேட்டது. அடி வயிற்றை எக்கிக்கொண்டு கத்தினால் தான் இந்தக் காற்றில், இந்த அலை இரைச்சலில் இவ்வளவு சத்தத்தை வெளியே தள்ள முடியும். என் காதில் வார்த்தைகள் எதுவும் தெளிவாய் விழ வில்லை. என்னைப்போலவே ஈரமணலில் நின்றபடி பாதங்களைக் கடல் அலைகளில் நனைத்துக்கொண்டிருந்த புதுத் தம்பதிகள் அவசரமாய்த் திரும்பி மேலேறிச் சென்றனர். மீண்டும் சத்தம் கேட்டது. அப்பெண் தன் கையைக் கணவன் கையிலிருந்து விடுவித்து முன்னால் அசைத்து, 'உங்களைத்தான்' என்று காட்டினாள். திரும்பிப் பார்த்தேன். மணல் மேட்டில் காக்கி உடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் நாலைந்து பேர், 'கரை ஏறு, கரை ஏறு' என்று கத்தியபடி கைகளை மிதமிஞ்சிய வேகத்துடன் வீசிச் சைகை செய்தார்கள். அவர்களைப் பார்த்த போது எனக்கு உள்ளுறச் சிரிப்பு வந்தது. ஒரு நாட்டிய மேடை பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் கோமாளிகள் போலவும், பள்ளிச் சிறுவர்களின் நாடகத்துக்கு, சிறுவர்களே சிப்பாய்கள் வேஷம் போட்டுக்கொண்டு நிற்பதுபோலவும், போலிஸ்கார மண் பொம்மை களுக்கு ஒருமணி நேரம் ஆயுள் கொடுத்ததில், நழுவி வந்து இங்கு நிற்பதுபோலவும் பலவாறாகத் தோன்ற ஆரம்பித்தது. 'ஏன் சிரிக்கிறே, கரையேறு' என்று ஒருவன் கத்தினான், கரையில் நிற்கும் நான், கரையேறுவது எப்படி என்று வேண்டு மென்றே மிகையாக விழித்துக்கொண்டு நின்றேன். அப்படி நின்று கொண்டிருந்தபோதே திடீரென்று என் மனதில் விசனம் கவிந்தது. முப்பது, முப்பந்தைந்து வருஷங்களுக்கு முன்னால் என் தாயார் என்னை முதன் முதலாவதாக இங்கு அழைத்து வந்ததும், கடல் ஏற்படுத்திய பயமும் திக்பிரமையும் அழுகையும் நினைவுக்கு வந்தன. பின்னர் இந்நாள் வரையிலும் எத்தனை யோ தடவை கடலோரம் நின்றதும் எதிர்பாராத வேளைகளில் அவை கீழே தள்ளியதும் நனைந்ததும் ஈரத்தில் ஒட்டிக்கொண்ட மணலைக் கையிலும் தொடையிலும் தட்டிக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அன்றிலிருந்து இன்று வரையிலும் மானசீக உறவுகொண்டு என்னுடன் பிணைந்துபோய்விட்ட இந்தக் கடலுக்கு என் பாதத்தைத் தந்து நிற்கும் எளிமையான________________

47. சுந்தர ராமசாமி

சந்தோஷம்கூட. சட்டை போட்டிராத என் முதுகில் ஒரு குத்தலை உணரவே திரும்பிப் பார்த்தேன். காக்கி உடை அணிந்த சேவகன் ஒருவன் கைத்தடியுடன் நின்றுகொண்டிருந்தான். "ஏன் குத்தினாய்?" என்று எனக்குக் கேட்கத் தெரிவதற்குள் 'காது மந்தமா?' என்று அவன் கேட்டான்.

'இல்லை' என்றேன். இந்த நேர் பதில் அவன் மண்டையில் ரத்தத்தை ஏற்றியது, அவன் முகத்தில் தெரிந்தது. மற்ற சேவகர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் பயப்பட மறுத்துக்கொண்டு நின் றதில் மிகுந்த கஷ்டம் அடைந்த அத்தனைபேரும் இமைக்காமல் என்னையே விழித்துக் கோபத்தை வெளியே தள்ளிக்கொண்டிருந் தனர். இன்னும் ஐந்தாறு நிமிஷங்களுக்குள் பொழுது தீர்ந்து அவர்கள் மீண்டும் மண் பொம்மைகள் ஆகிவிடுவார்கள் என்ற கற்பனை மனதில் விரியவே என் முகத்தில் சிரிப்பின் குறிகள் படர்ந்தன. 

என் எதிரே நின்ற சேவகன் தலையை உயர்த்தி இரு கை விரல்களையும் வாயோரம் குவித்துக்கொண்டு, மணல் (மேட்டைப் பார்த்து, “கரையேற மறுக்கிறான்' என்று கத்தினான். 

அதிகாரிகள் மணலில் இறங்கிவர ஆரம்பித்தார்கள். அழகான பூட்ஸ் தடங்களைப் பின்னால் தள்ளிக்கொண்டு, அவசரத் தின் தள்ளாட்டத்துடன் மணல் சரிவில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எத்தனைபேர் என்பது இப்போது நினைவில்லை. நாலு பேருக்கு மேல் என்று ஒரு சித்திர உணர்வு இருக்கிறது. அவர்களில் தலைமை அதிகாரி சற்று ஸ்தூலமாகத் தள்ளாடும் உடலு டன் இருந்தார். அவருடைய தொப்பி வித்தியாசமாக இருந்தது. கைகளையும் கைத்தடியையும் அதிகமாக அசைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் உடலைத் தூக்கி நாட்டி வந்துகொண்டிருந் தார். அவர் அதிகமும் நாற்காலியில் புதைந்து, மின் விசிறி நின்றால் தவித்து, சிவப்பு மையால் தாளில் வெட்டியும், சுழித்தும், போனில் கத்தியும் தன்பதவிக்கு ஈடுகொடுத்துக் கொண் டிருப்பவர் என்பதும், மிகவும் விசேஷமான காரணத்தை முன் னிட்டே இன்று கிளம்பியிருக்கிறார் என்றும் தோன்றிற்று. 

சற்று தூரத்தில் நின்றவாறே என்னைப் பார்த்து இவர் 'என்ன? .என்ன?.என்ன..?' என்று கத்தினார். ஒவ்வொரு "என்ன'வுக்கும் முன்னதைவிடக் குரலை உயர்த்திச் சிப்பாய்கள் விறைப்புற்று என் முகத்தைப் பார்த்தபடி நின்றனர். என் பதிலுக்குப் பின் அதிகாரி பிறப்பிக்கக்கூடிய ஆணையை நொடிப் பொழுதில் நிறைவேற்றத் துடிப்பது அவர்களுடைய விறைப்பில் வெளிப்பட்டது,

 'ஒன்றுமில்லை' என்றேன்.

 'பின ஏன் கரையேற மறுப்பது?" 

"கொஞ்சம் நிற்க ஆசை."

 'பிடித்துத் தள்ளு அவனை' என்று அதிகாரி கத்தினார். சேவகர்கள் என்னை விரைந்து சூழ்ந்து குண்டுக்கட்டாகத் தூக்கி பத்துப் பதினைந்து அடிகள் மணல் மீது ஏறி மண்ணில் தொப்பென்று போட்டார்கள். 

நான் எழுந்திருந்து கைகளிலும் வலது கன்னத்திலும் காதி லும் படிந்திருந்த மணலைத் தட்டியவாறு மணல்மேட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன். சொரணை கெட்டத்தனம் என் உடம்பிலிருந்து வழியும்படி மிகவும் சாவதானமாக அசைந்தேன். பின், வானத்தைப் பார்த்து, வியப்பதுபோல் பாவித்து, சிப்பாயகள் பக்கம் திரும்பி, "என்ன அற்புதமான நிலா'' என்றேன். ஒரு அதிகாரி ஓடி வந்து என் முதுகில் ஓங்கி குத்தினார். 'கொல்லு அவனை' என்று ஆங்கிலத்தில் மற்றொரு அதிகாரி கத்தினார். 

மணல்மேடு தாண்டி, கடற்கரை தார் பேட்டை அடைந்த போது அந்த இடம் சற்று முன் காட்சியளித்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாததுபோல் இருந்தது. நாடகத்தின் புதிய காட்சி யில், பின்திரை ஜோடனை, பாத்திரங்கள் எல்லாம் மாறியது போலவும், களேபரமாகவும் இருந்தது. ஆங்காங்கு பல சேவகர்கள் காக்கி உடையணிந்து குண்டாந்தடியுடன் நின்று கொண்டிருந்த னர். கார்களும், ஜிப்புகளும், கண்ணாடி ஜன்னல்களுக்குப் பட்டுத் திரை போட்டிருந்த உயர் அதிகாரிகளின் வாகனங்களும் நின்று கொண்டிருந்தன. இரண்டு நிமிஷங்களுக்கு ஒன்று என்று நினைக் கும்படி ஜீப்புகள் அதிவேகமாய்ப் பாய்ந்து வந்து, சர்ரென்று தூசி கிளப்பி ஒரம் கட்டி நிற்கவும், நின்று முடிப்பதற்கு முன்னரே பின்பக்கம் வழியாக அதிகாரிகள் மாறி மாறிக் குதித்து, குதித்த இடத்தில் விரைப்புற்று சல்யூட் செய்தார்கள். எல்லாம் வேறு யாராலோ இயக்கப்படும் எந்திர பொம்மைகளின் இயக்கம் போலவே பட்டது. சுமார் நாற்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு அதி காரி மிக உயரமாக நின்று - மிகப் பெரிய புராதன முன் முகப்புக் கொண்ட ஓட்டலின் முன் பக்கப் பாதை தார்ரோட்டில் இணையும் இடம் அது - சிப்பாய்களின் வனக்கங்களை மிகுந்த நோரணை யோடு பெற்றுக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வேறு அதிகாரி களும் நின்று கொண்டிருந்தனர். ஏதோ விதமான ஒழுங்கு முறை யில் சிப்பாய்கள் இடம்மாறித் தங்களுக்குரிய ஸ்தானங்களைப் பிடித் துக்கொண்டிருந்தனர். அவர்களுடை மனக் கணக்கின் கூறுஎன்ன என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. இருந் தாலும் ஒவ்வொருவருடைய மனசிலும் இருந்த வரைபடததுக்கு அனுசரணையாக இயங்கியதால்தான் இத்தனை - விரைவாகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் ஒழுங்காவது சாத்தியமாயிற்று என்பது தெரிந்தது. ஒரு உயர்மட்ட அதிகாரியின் வருகைக்கு எல்லோரும் ஆயத்தம் கொள்ளுவதாய் பட்டது. ஏனெனில் 6T6) லோருடைய பார்வையும் மணல்மேட்டில் எதிர்பார்க்கும் தனமை யுடன் குத்திட்டு நின்றது. விறைப்பும், நிசப்தமும் கூடி நிலைத் ததில் சிறு சத்தமும்கூட பெரிய அபஸ்வரமாய் முனைக்க ஆரம்பித்தது. பூட்ஸின் அடியில் மணல் நெரியும் ஓசைகூட நின்று விட்டது. இனிமேல் யாராலும் தங்களுடைய தொண்டையை கனைத்துக்கொள்ளவோ, வசக்கேடாய் ஊன்றப்பட்டுவிட்ட பாதத் தைச் சரிசெய்துகொள்ளவோ முடியாது. அப்படிச் செய்யத் தேவை புள்ளவர்கள் இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்னாலேயே அதைச் செய்து முடித்திருக்க வேண்டும். இல்லாத வரையிலும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 

இப்போது மணல்மேட்டிலிருந்து ஒரு சிறு கூட்டம் முன்னால் நகர்ந்து வருவது தெரிந்தது. முதலில் தலைகள் மேலெ ழுந்து பின்னால் முழு ஆகிருதிகளும் தெரிய ஆரம்பித்தன. ஏழெட்டு பேர் வடிவமற்ற ஒரு ஒத்திசைவோடு அழகாக, வேக மாக, தங்கள் உடல் பாரங்களைக் காற்றின் மீது நகர்த்திவிட்டது போல் ஆயாசமற்று வந்துகொண்டிருந்தார்கள். நடுநாயகமாக வந்துகொண்டிருந்தவர்தான் உயர்மட்ட அதிகாரி என்பது வெகு சுலபமாகத் தெரிந்தது. ஒரு பெரிய நடிகன்போல் மிகவும் வசீ கரமாக இருந்தார் அவர். படிப்பாளியின் களையை வெளியே தள்ளும் மூக்குக்கண்ணாடி. அடர்த்தியான கேசம். வெள்ளை வெளிரென்று மிக மெல்லிய ஆடைகள். சிறு வயதிலேயே உயர் மட்டப் பதவியில் நேராக ஏறி விட்டதாலோ என்னவோ முகத் தில் பெருமிதம் வழிந்துகொண்டிருந்தது. இச்சிறு கூட்டம் நெருங்க நெருங்க காத்துக்கொண்டிருந்த சிப்பாய்கள் மேலும் விறைப்புற்று, முறுக்கேற்றும் நரம்புகள் அறுபட்டுத் தெறித்து விடும் என நம் மனம் பயந்து துடிக்கும் நிமிஷத்தில் பட்டென பூட்ஸ் காலால் தட்டி சல்யூட் அடித்தனர். ஆக்ஞைகோஷம் அடங்கிப்போன பின்பும் வெகுநேரம் ரீங்கரித்துக் கொண்டிருந் தது. இந்த ஒசையின் முரட்டு ஒலியிலும் பூட்ஸ" ஒசையிலும் மரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் மேலெழுந்து பறந்ததுபோல் கற்பனைக் காட்சி என் மனதில் எழுந்தது. உண்மையில் அங்கு மரங்களும் இல்லை; பட்சிகளும் இல்லை. 

அப்போது கடலோரத்திலிருந்து என்னை விரட்டிய அதி

477

அலைகள்

காரி, பாதையோரம் நின்றுகொண்டிருந்த பெரிய அதிகாரியிடம் சென்று என்னைக் காட்டி ஏதோ சொன்னார். பெரிய அதிகாரி
என்னை கை காட்டி அழைக்கவும், அருகே சென்றேன். 

'இப்போது போனவர்தான் எங்கள் துறையிலேயே உயர்ந்த பதவியில் இருப்பவர். பெரிய மேதை' என்றார். 

'சந்தோஷம்' என்றேன். ஒரு அசட்டு வார்த்தை உச் சரிக்கப்பட்டதில் நாணம் ஏற்பட்டது. 

தன் கீழ் அதிகாரிகள் அவர்களுடைய விவேகக்குறைவால் எனக்கும் அவர்களுக்குமான உறவை சிடுக்காக்கி வைத்திருப்பவர் கள் என்ற முன்தீர்மானமும், பக்குவமாக அணுகினால் அநேக முடிச்சுக்களை அவிழ்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அவருடைய பீடிகையில் வெளிப்பட்டன. 

'ஒரு வாரம் முன்னால் ஒரு பெண்ணை கடல் கொண்டு போய் விட்டது. மேலதிகாரி வந்திருக்கும் வேளையில் அனர்த்தம் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காகத்தான்.”

 நான் எதுவும் பேசவில்லை.

 “உங்கள் நடவடிக்கைக்கு வருந்துகிறீர்கள் அல்லவா? அதுதான் விஷயம். எனக்குப் பெரிசுபடுத்துவது பிடிக்காது.' 

நான் பதில் சொல்லவில்லை. 

“எங்களிடம் மன்னிப்புக் கேட்பது அவமானமல்ல. சட்டத்துக்குத் தலைவணங்கும் பெருமிதமான விஷயம் அது.' 

நான் கல்தூண் மாதிரி நின்று கொண்டிருந்தேன், 'நான் கணித்ததுபோல் நீர் எளிமையான மனிதர் அல்ல." அவருடைய குரலும் முகபாவமும் மாறிற்று. 

ஒரு சிப்பாய் இரண்டு அடி முன் நகர்ந்து விறைப்புற்று, சல்யூட் அடித்து, பூட்ஸாகால் தட்டி ஓசையெழுப்பி மேலும் விறைப் புற்றான். முகத்தைப் பார்த்தபோது அவன் உறைந்துபோய்விட் டான் என்றும், மீண்டும் உயிர்க் களை ஏற்படுத்துவது சாத்திய மில்லை என்றும் தோன்றிற்று. 

முகத்தை மேலே அசைத்துக் கேள்விகுறி எழுப்பினார் அதிகாரி.

 'நேற்று இவர் என்னை எதிர்த்துப் பேசினார். நீச்சலடித்து மரணப்பாறைக்குச் சென்றதைக் கண்டித்ததற்கு கேலி செய்தார்.'

 “ “உண்மையாகas?”

 ” 'உண்மைதான். சிரித்துவிடக்கூடிய வார்த்தைகள் தான், நகைச்சுவை உணர்ச்சி இருந்தால்.'

 'எங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி இல்லை என்கிறீர் J56ፐበr?” ”

________________




SS

சுந்தர ராமசாமி 478

Ü6)6). h 9, sulii ܼ ܥ . 'பொதுப்படையாக ೧॰: : நீங்கள் - அதாவது உங்கள் து?" ந்திரம் இலை கள் மெய்யாகவே உங்களுக்கு அதற்கான சுதநத s யா? சிரிப்பும் கட்டுப்பாடும் எககாலத்தில் ஜீவிக்க இயலாது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? 

மரணப் பாறைக்கு ஏன் சென்றீர்க '

சங்கிலித்துறையில் குளித்துக்கொண்டிருந்தேன். மரணப் பாறையின் மறுபக்கம் பள்ளத்தாக்கு போலிருக்கும். நணபன சொல்லியிருந்தான். அங்கு அலைக9' சுழிப்புகளும் பாறை மேலிருந்து வழியும் நீரின் அழகு, பாறையின் இடுக்குகளில் அவை நிகழ்த்தும் ஜாலங்கள் - சொல்லமுடியாது. அறபுதம. இனம் கூற முடியாத துக்கம் மனதில் வியாபித்து, TLD பொருட்படுத்துவ தெல்லாம் அற்பம் என்ற எண்ணம் ஏற்பட்டு, மாசு மறுவறற ஆகா சம் மனவெளியில் விரிந்துவிடும். ரொம்பவும் லேசாக இருக்கும். பாறை இடுக்கில் முளைத்திருக்கும் சிறு தாவரங்களைக் குனிந்து முத்தமிடத் தோன்றும்.' 

"அது தடை செய்யப்பட்ட இடம் என்பது தெரியுமா?’’ 

"தெரியாது.'

 'தடுத்தபின்?" 

'வெறும் கெடுபிடி என்று எடுத்துக்கொண்டேன். கடலில் நீச்சலடிப்பதைச் சட்டம் தடுக்குமா?"

 அதிகாரி என் முகத்தையே வெறிக்க, அந்த நிமிஷங்கள் எல்லோருடைய நெஞ்சிலும் கனத்துக்கொண்டிருந்தது. 

'போங்கள், இந்த இடத்தைவிட்டு' என்று அதிகாரி ஆங்கிலத்தில் கத்தினார். 

நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 

பரிசயக்காரனின் சந்தேகம் என நினைக்கும்படியான காரியங்கள் அன்று அதிகாலையிலிருந்தே தொடங்கியிருந்தன. அவ் வப்போது யாராவது வந்து என்ன ஏது என்று என்னிடம் விசா ரித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் எதற்கு என்று கேட்டார்கள். அவர்களுக்கு அர்த்தமாகிற மாதிரி என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாம் யாரோ ஏவிவிட்ட மாதிரிப்பட்டது. வெறும் பிரமைகள் தானோ என்றும் சந்தேகப்பட்டுக் கொண்டேன். 

மத்தியானச் சூடு தணிந்து கொண்டிருந்தது. சங்கிலித் துறை மண்டபத்தில் படுத்தபடி கடலைக் கவனித்துக்கொண்டிருந் தேன். கடல் தூங்குவது மாதிரியும், விழிப்புற்றுச் சோம்பல்பட்டு காலை அசைத்தபடி படுத்துக் கிடப்பது மாதிரியும் தோன்றிக் கொண்டிருந்தது. படியோரம் பதுங்கியிருந்தவன் நிமிர்ந்த மாதிரி

அலைகள் 479. 

ஒரு சேவகன் தோன்றிக் கைத்தடியினால் கல்படியில் தட்டினான், அந்த உயர் அதிகாரி என்னைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவன் மணல்மேட்டில் தீர்க்கதரிசிபோல், காற்றில் மிதந்தபடி, ஆடைகள் பறக்க, முகத்தில் பிரகாசத்துடன் நகர்ந்து வந்த உருவம் என் மனதில் விரிந்தது. அவரை மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்பதில் சந்தோஷம் ஏற்புட்டது. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக்கொண்டேன். மன அமைதியைக் கெடுப்பதற்கான சமாசாரம் தயாரிக்கப்பட்டு வருவதாகத தோன்றிற்று. 

என்னைக் கண்டதும் உறைந்து போயிருந்த பெரிய அதிகாரியின் முகம் விளக்கை தூண்டியது போல் பிரகாசப்பட்டது. அவரு டைய பற்களிலிருந்த ஒரு வெளிர்த்தன்மை முகம் எங்கும் பரவுவ தாகத் தோன்றிற்று. அறையின் பின் வாசலில் நின்று கொண்டிருந்த பட்லரை அவர் பார்த்ததும் அவன் மறைந்து, தேநீர் கோப் பையுடன் தோன்றி என் முன் வைத்தான்.

 'சாப்பிடுங்கள்' என்றார் அதிகாரி என்னைப்பார்த்து. 'நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ரொம்பவும் ரசமாய் இருக்கி றது' என்று எதிரே அமர்ந்திருந்த சந்நியாசியிடம் சொன்னார். 

அதிகாரியால் மனம் நிறைந்து பாராட்டப்பட்டதில் எங்கு நிறுத்தினோம் என்பதை மறந்து தத்தளித்துக் கொண்டிருந்தார் சந்நியாசி. தலை ஒட்டச் சிரைக்கப்பட்டிருந்தது. அநேகமாக முந்தினநாள். சிறுபிராயம்தான். சிவப்பாகவும், அழகாகவும், பொம்மைத்தனத்துடனும்-அந்த தளதளப்பான உப்பிய கன்னங் கள்-இருந்தார். இடது கண்மணி சொல்லுக்கு நகர்ந்திருந்தது அசட்டுத்தனத்தை-முக்கியமாக, தன்முன் சொல்லப்படுவதைக் கிரகித்துக் கொள்ளமுடியாத மந்தத்தை-அவருக்கு அளித்துக் கொண்டிருந்தது. 

"ஸ்வாமிஜி இங்கு வந்து சேர்ந்ததைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.' என்று அடியெடுத்துக் கொடுத்தார் அதிகாரி. 

"ஆமாம் ஆமாம்' என்று தலையை அதிகமாக அசைத்த படி உற்சாகமாய் ஆரம்பித்தார் சந்நியாசி. "எனக்கு வருஷம் ஞாபகமில்லை, அப்போது அவருக்கு என்ன வயசு இருக்கும். 25? 26? சின்ன வயசு, கால் நடையாகவே. இந்தியா பூராவும். கிடைத்த இடத்தில் படுக்கை, கிடைத்த ஆகாரம் . பிச்சை எடுத்து அலைச்சல், ஊர் ஊராய் அலைச்சல். ஒரே அலைச்ல்,...?' ‘

'எத்தனை உருக்கமான விஷயம்" என்றார் அதிகாரி,

 "எத்தனை நாட்கள் இங்கு தங்கினார். எங்கு யாருடன்,________________




{ՏՍ சுந்தர ராமசாமி

எப்படி. ஒன்றும் தெரியவில்லை. பாறையில் தியானம் மூணு நாள் இல்லை. இரண்டு நாள். இரவு பகல் அன்ன ஆகாரமில் se tursů, stůuhů surs tř syšss? தோணியிலே - ஒரு கட்சி. இல்லை: நீச்சலடித்துத்தான் - இன்னொரு கட்சி.' 

'இல்லை இல்லை. நீச்சலடித்துத்தான் போனார். நீச்ச லடித்துத்தான் போனார்." என்று உற்சாகமாக பெரிய குரலில் முஷ்டியை மேஜை மீது குத்திக்கொண்டே சொன்னார் அதிகாரி. "நான் படித்திருக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது' என்று கத்தினார். 

அதிகாரி படித்திருக்கும் செய்தியில் மிகுந்த ஆச்சரியம் அடைந்த சந்நியாசி, 'அப்படியா படித்திருக்கிறீர்கள்? அப்படியா? அப்படியென்றால் சரி, நீச்சலடித்துத்தான் போயிருக்கிறார்" என்றார். 'என்ன தைரியம், என்ன சாகசம்.'

 நிசப்தமாகியதில் அறையின் சூழ்நிலை கனத்துக் கொண் டிருந்தது. அதிகாரி தொண்டையைக் கனைத்துக்கொண்டே என் பக்கம் திரும்பினார். 

"தங்களைப் பார்த்தால் படித்தவர் மாதிரி தெரிகிறது. எதற்கு அதிகாரிகளுடன் அவசியமில்லாத மோதல்..?" 

"மோதவில்லை' என்றேன். 

அதிகாரி சாமியாரைப் பார்த்து, விரலை என் எதிராக சுட்டிக் கொண்டே, "மரணப் பாறைக்கு நீச்சலடித்துப் போயிருக்கிறார். நம் ஆட்கள் தடுத்ததற்கு எதிர்த்துப் பேசியிருக்கிறார்' என்றார்.

 "மரணப் பாறைக்கு நீச்சலடித்துச் சென்றார்" என்று பிர கடனம்போல் சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தார் சந்நியாசி. அதிகாரியும் சிரித்துக்கொண்டார். திடீரென்று, நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிமிஷத்தில் சந்நியாசியின் முகம் அதிகாரியின் முகம்போல் மாறி கடுகடுப்படைந்து சிவந்தது. 

"அது சரியில்லை. சரியே இல்லை" என்று சந்நியாசி ஆங்கிலத்தில் சொன்னார். அவர் தன் குரலில் அவசியமற்ற வலு ஏற்றுவதுபோல் இருந்தது. பின் குரலைத் தணித்துக்கொண்டு கண்டிப்புக்காட்டும் தன்மையுடன், "சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைத்திருக்கவேண்டும். அது தான் உங்களிடம் எதிர்பார்த்திருக்கக்கூடியது.'

 'எனக்கு நம்பிக்கை இல்லை." '

எதில்?'

 'உங்கள் சட்டத்தில் . உங்கள் ஒழுங்குகளில்."

"சரி, உங்கள் நம்பிக்கைதான் என்ன? அவரவர் விருப்பம்

அலைகள் 1s1

போல் அவரவர் நடந்துகொள்ளும்.'

 'தயவு செய்து என்னை எதுவும் கேட்காதீர். நான் ஒரு குழப்பம். எனக்கு எதுவும் தெளிவில்லை. உங்கள் இருவருக் கும் வெவ்வேறு மட்டத்தில் அது சரி இது தப்பு, இது சரி அது தப்பு என்பது தெரிந்திருக்கிறது. ரொம்பவும் தெளிவாக இருக்கிறீர்கள் உங்கள் தெளிவு ரொம்பவும் ஆபாசமாக இருக்கிறது. எப்படிச் சந்தேகமில்லாமல், தெளிவாய் கூச்சமில்லாமல் பேச முடிகிறது.' 

'நீங்கள் மிதமிஞ்சிப் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது" என்றார் அதிகாரி. "தனக்குத்தான் எதுவும் தெரியும் என்ற அகந்தையுடன் பேசுவதாகப் படுகிறது.'

 'இல்லை எனக்கு அகந்தையில்லை.நான் வெறும் ஒட்டை, சூன்யம். தக்கவைத்துக்கொள்ள என்னிடம் எதுவும் இல்லை. என் வழியாக எல்லாம் வெளியே ஒழுகிக்கொண்டிருக்கிறது. என்னை அலைய விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள், தயவு செய்து. தயவு செய்து.' நான் மிகப்பெரிய குரலில் கத்த ஆரம்பித்தேன்.

 "இவர் மனநிலை சரியில்லை' என்றார் சந்நியாசி,

 'இவரை வைத்திய சோதனைக்கு அனுப்பவேண்டும்.' 

‘'வேண்டாம் வேண்டாம்' என்று கத்தினேன் நான். "அலைவது ஒன்றுதான் எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. அதையும் இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள்.' 

'உங்களை நான் கைது செய்திருக்கிறேன்" என்றார் அதிகாரி. மேஜை மணியின் பித்தானை அவர் கட்டைவிரல் அழுத்திற்று. 

Ο கொல்லிப்பாவை 1976