தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, December 11, 2018

கடலில் ஒரு கலைஞன் - சுந்தர ராமசாமி

கடலில் ஒரு கலைஞன்
சுந்தர ராமசாமி

கடலோரம்
அலை ஓயக்.
காத்திருந்தான்
ஒருவன்.
பின்னர்,
கடலலைகள்
ஓயா நிலை கண்டு,
தன்னுள்,
ஆழக் குழிக்குள்
நுரை கக்கும்
அலைகள்
பல அடக்க
கடலோரம்
காத்திருந்தான் .
நெடுங்காலம்.

நெடுங்காலம்
காத்திருந்தும்
கடலலை ஓயா
நிலை கண்டு,
ஆசை அலை ஓயத்
தவஞ் செய்தான்.

'ஆசை அலை ஓய
காம அலை ஓய
காம அலை ஓய
எண்ண அலை ஓயத்
தவஞ் செய்தான்.

எண்ண அலை ஓய,
தான் எனும்
அகந்தை அலை
அழிந் தொழிய,
அவனும்
செத் தொழிந்து
மறைந்தான்.

கடலலையோ
அன்று போல்
இன்றும்
நான் தான் என

அகங்கரித்து,
நான் நான் என
ஓயாது அரற்றி
நிமிர்ந்தெழுந்து
இருப்பிடம் காட்டி,
தன்னில், தான்
கரைய மறுத்து,
உருண்டு திரண்டு
கரையேற முன்னி,
கரங்கள் ஆயிரமாய் வீசி
படையணிகள் பல வகுத்து
பத்திகள் பலப் பலவாய் விரித்து,
சீறிச் சுருண்டு
கரை பிடிக்க உன்னி,
பள்ளம் பின்னிழுக்க
நேசப் படை நடு வழியில்
பின் திரும்பி மோத
வேகம் இழந்தும்
மனஞ்சோர மறுத்து
நம் பாதம் அணைய
விரைந்து தவழ்ந்தேறி
நீசக் கரை வாங்கும் வாங்கில்
கபோலம் விடலாய்ச் சிதற
சதகோடி முத்தாய்
சிந்திச் சிதறி
தன்னில் தான் கரையும் வேளை
பொசுக் கென வீசும் காற்றின்
முதுகு பிடித்தெப்படியோ ஏறி
குடைந் தெழுந்து
உருண்டு திரண்டு உருவங் கொண்டு
தன் முகங் காட்டத்
துடி துடித்து
வாழத் துடி துடிக்கும்
அலையே,
நீயும் நீரே?

எனினும்,
உன்னில் கரைந்த
உப்போ
வெறும் உப்பே! 

No comments:

Post a Comment