தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, February 13, 2019

மௌனி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ் :: ஜூலை 1985:: மறு வெளியீடு

இசைவால் இயலும் உலகு!
Photo shared on
‎February ‎14, ‎2018


மௌனி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ் :: ஜூலை 1985
மௌனி

சுந்தர ராமசாமி

" திரை அருகில் இருந்தாலும், அப்புறம் என்ன என்று அறியக் கூடவில்லை; நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை.”

மெளனியின், 'எங்கிருந்தோ வந்தான்' சிறு கதையில் பத்மாவின் கூற்று.

மெளனி மறைந்து விட்டார், மரணம் அவர் மீதும் கவிந்து விட்டது.

மரணம் அதன் பாரபட்சமற்ற தன்மையும் நிச்சயத் தாக்குதலையும் ஒவ்வொருமுறை நிரூபிக்கும்போதும் நாம் மீண்டும் அதிர்ச்சி கொள்கிறோம். மரணத்தை சகஜமாகக் கண்டு, அதன் வருகை வரையிலும், முன் கூட்டிக் கணிக்க இயலாத வாழ்வின் இதழ் விரிப்புக்களைப் புதுமையாகக் காணவேண்டிய நாம், அனைத்தையும் பழமையாகக் கண்டு, ஆகப் பழமையான மரணத்தை மட்டுமே புது மையாகக் காண்கிறோம்,

இவ்வாறெல்லாம் யோசித்த பின்னரும் மனதை வெறுமை கவ்வுகிறது. மாற்றாக மெளனியின் படைப்புலகத்தை மீண்டும் இப்போது நினைவு கூர்ந்து பார்க்கலாம். அவர் படைப்புக்கும் நமக்குமான உறவை துல்லியப்படுத்திக்கொள்ள மீண்டும் ஒரு பிரயாசை நாம் எடுத்துக்கொள்வோம் என்றால் அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

மெளனி மறைந்து விட்டார். ஆனால் அவருடைய படைப்புலகமோ இதோ இப்போதும் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் நாம் அதன் உள்ளே நுழைய முடியும், முன் எண்ணங்களை உதறி விட்டு, மன வாசல்களையும் சற்றே திறந்து வைத்துக்கொண்டோம் என்றால், மெளனியின் எழுத்துருவம் ஒரு புதிய பரிமாணத்தை இப்போதும் நமக்குத் தரக்கூடும்.

வாழ்வை உள்ளடக்கிக் கொண்டு, ஆனால் முற்றாக அதை விளங்கிக் கொள்ள முடியாத பிரமிப்பை எப்போதும் நமக்குத் தந்தபடி சுழன்று கொண்டிருக்கும் இந்த ஆகர்ஷண மண்டலத்துக்கு மேலே, மற்றொரு சிறு ஆகர்ஷண கோளமாக அந்தரத்தில் தொங்குகிறது மெளனியின் படைப்புலகம். தெளிவும் தெளிவின்மையும், சிறிது வெளிப் படையும் அதிக ரகசியங்களும், காரிருளும் மின்னற் கீற்றுகளும் கொண்டகோளம் இது. ஆனால் விடாது நம்மை ஆகர்ஷித்து, களைப்பின்றிப் பின் தொடர்ந்து விரைய, சுகமான வற்புறுத்தலை தந்து கொண்டும் இருக்கிறது. இந்த மண்ணின் வெளிப்பாடுகளுக்கும் அந்தரத்தில் தொங்கும் இந்த ஆகர்ஷண கோளத்திற்குமான வேற்றுமைகள் வெளிப்படையானவை, மண்ணின் கோலங்களையோ, ஸ்தூலப் பிரதிபலிப்புக்களையோ, இயந்திர வியாபகங்களையோ லெளகீக நியதிகளையோ பிரதிபலிக்க மறுத்த கோளம் இது. வீச்சின்றிச் சுருங்கி தன் மண்ணையும் உதறி விட்ட இந்தச் சிறிய கோளம் நம்மை ஏன் ஆகர்ஷிக்க வேண்டும்? நம் தளத்தை அது நிராகரித்தது போல் அதையும் நமக்கு ஏன் நிராகரிக்க முடியாமற் போயிற்று?



படைப்பாளியின் மறைவு, அவன் படைப்பின் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றால், படைப்பை விடப் படைப்பாளி முக்கியம் என்றாகி விடும், காலத்தை முறியடிக்க முன்னும் கலையை ஒருவன் உருவாக்கிய பின்னரும், காலத்தால் வீழ்ந்து விடும் உடலை, பற்றிக் கொண்டிருக்க முடியுமா? தன் அழிவுக்கு எதிராக காலத்தின் மீது நகர்த்த, தனக்கென்று எதுவும் இல்லாத உடலாகக் கலைஞனை எப்படிக் காண முடியும்? மெளனி என்ற ஜீவிதத்தின் அர்த்தம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கே உரித்தான வியாகூலங்கள், சஞ்சலங்கள், அழகின் மின்னல்கள், திக்பிரமைகள், பரிதவிப்புக்கள் எல்லாம், தனி மனிதனின் வாழ்வுபோல் அலங்கோலமாக இல்லாமல், கட்டுமானத்துடன், பொருள்சார்ந்த வடிவத்தில் நம்முன் இருக்கிறது அது.

புற வீச்சின் வியாபகத்தை, படைப்புத் தேவை சுருக்கிக்கொண்டு விட்டமெளனியின் எழுத்துக்களில் எப்போதும் ஒரு வாலிபன் வருகிறான், அவன் காதல் ஏக்கம் கொண்டிருக்கிறான். காதலில் தன்னைக் கரைத்துக் கொள்வதில் உவகை பொங்க நிற்கிறாள்

அவன் காதலிக்கும் யுவதியும். இந்த இரு ஜீவன்களில் இடையே நிகழும் ஆகர்ஷணம் மனத்தளத்தில் விரிந்து, புறத்தளத்தில் சிறிது நிகழ்கிறது. ஆகர்ஷணம் அல்ல; ஆகர்ஷணத்தின் விளைவான வியாகூலம்தான் தொடர்ந்து இங்கு மீட்டப்படுகிறது. இந்தச் சோக மீட்டலுக்கு அழுத்தம் தரும் ஸ்வர ஸ்தானங்களும், நாதங்களும், பின்னணிகளுமே இந்த மண்ணிலிருந்து இவர் படைப்பில் இட்ம் பெறுகின்றன. சோகம் கவிந்து நிற்கும் மனதிற்குச் சுருதிகூட்டவே புறஉலக வர்ணனைகளும் பயன்படுகின்றன. பரஸ்பர ஆகர்ஷணத்திலும் பிரிவிலும் வியாகூலமுறும் இந்த ஜீவன்களின் ஜோடிகள் ஒருவரையொருவர் அதிகம் அறிந்தவர்களும் அல்லர். ஒரு ஜீவன் மற்ருெரு ஜீவனை செய்தி வசமாகவே அறிந்திருக்கிறது. அல்லது தூரப்பார்வையில் சிறிது தெரிந்து கொண்டிருக்கிறது. அல்லது கிட்டப் பார்வையில் சற்றே அதிகமாக உணர்ந்துகொண்டிருக்கிறது. அறியநேர்ந்த இந்தக் கீற்று அனுபவங்களைச்சார்ந்து அல்ல; இக் கீற்றுக்கள் உருவாக்கும் கற்பனையைச் சார்ந்தே காதலின் ஆகர்ஷணம் உள் பெருக்காக மனங்களில் மண்டுகிறது. ஒரு போதும் இந்த ஜீவன்கள் இணைவதும் இல்லை. இணைவதற்கான பிரயாசைகள் மேற்கொள்வதும் இல்லை. வாழ்வின் தளத்தில் கூடி முயங்கும் உன்னிப்பும் இவர்களுக்கு இல்லை. கூடிமுயங்குவதில் பெறும் இன்பத்திற்காக அல்ல; பிரிவின் துக்க லகரியை உண்டு, கவித்துவப் புலம்பலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளவே ஆகர்ஷணம் கொள்ள முன்னுவது போல் நம்மை எண்ண வைத்து விடுகின்றன இந்த ஜீவன்கள். இவ்வாறு இணைய முடியாமற் போனதற்கு, இளமையில்பாய்ந்து குறுக்கிட்டு ஒருவரை விழுங்கி விடும் மரணம், எப் போதும் ஒரு காரணமாக இருக்கிறது. மரணத்தின் சொரூப உக்கிரம் கூட அற்ற அற்ப அபத்தங்களுங்கூட காரணங்களாகி விடுகின்றன. எப்படியும் அடைய முடியாமற் போகிறது. இதுதான் முக்கியம். அடைவதற்காக ஜீவனைப் பிடுங்கும் வேட்கையும், அடைய முடியாமற் போகும் அவலமும். இதுதான் மெளனியின் மையமான தந்தி இதையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு கோலங்களில் அவர்மீட்டுகிறார், மௌனியின் கலையில் காதலைச் சார்ந்து நிகழ்த்தப்படும் இந்த அவலங்கள் நம் அனுபவத்தில் முழு வாழ்வையும் தொட்டு விரிவு கொள்கின்றன.

மெளனியின் கலைக்கும் நம் வாழ்வுக்குமான தொடர்பு மந்திரவாதிக்கும் கண் கட்டு வித்தைக்குமான தொடர்பைப் போன்றது. வாழ்வின் தளம் போல்மந்திரவாதியும் நிஜம். பொருள் வேண்டி நிற்கும் வாழ்வின் நிலையை மெளனியின் கலை ஏற்றுக்கொண்டிருப்பதால் தான் அவலப் பூச்சான அவரது கலைக் கண்கட்டு வித்தைகள் நம் மீது ஆழ்ந்த அர்த்தத்தைப் பாய்ச்சுகின்றன. வாழ்வின் நிலையில், கனவு, ஸ்திதியின் குரூரம், அவலம் மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாமற் பின்னிக் கிடக்கின்றன. இவ்வனுபவங்களின் மையம் மெளனியின் கலை உலகத்தின் மையத்தால் அதிர்வு கொள்கிறது. அங்கு காதலுக்கு எதிராக முறிவுகள், கனவைப் பறிக்கும் மரணங்கள், இசைக்கு எதிராக அபஸ்வரங்கள், தோற்றத்துக்கும் நிஜத்திற்குமான முரண் நிலைகள், என்ன ஏது என்று தெரியாத புதிர் திக்பிரமை.

நமது போதாமையை எப்போதும் நாம் உள்ளூர உணரும் வகையில் வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதாமை நம்மை வருத்தம் கொள்ளச் செய்கிறது. அள்ளி அள்ளிப் பிடிக்கும்போதும் பிடிப்பை வழுக்கிக் கொண்டு தூர தூரப் போகிறது வாழ்க்கை. நாம் நம்மை காட்டிக்கொள்ள விரும்பும் முக மூடிகளுக்கு அப்பால், நமது சித்தாந்தங்களுக்கும் தத்துவங்கழுக்கும் அப்பால் நமது மரபு சார்ந்த வலுக்களுக்கு அப்பால் உள்ளூர போதாமையின் துக்கம் நம்மை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறது. எதையும் முற்றாக அறியவோ, அணைக்கவோ, சொந்தமாக்கிக் கொள்ளவோ, நம் விருப்பம் போல் இயக்கவோ முடியாமற்போகும் போதாமை இது. இந்த அபூர்ணத்தின் துக்க நிலையை மொனியின் கலை ஸ்பரிசித்து மீட்டுகிறது. காதல் எனும் முகாந்திரத்தை முன் நிறுத்தி எழுப்பப்படும் மீட்டல்களின் அதிர்வுகள் முழு வாழ்வுக்குமாக விரிகின்றன. அந்தரத்தில் தொங்குவது போன்ற இவரது ஆகர்ஷண கோளம் வாழ்வின அபூர்ணத்தின் குறியீடே. இவரது மொத்தப் படைப்பும் ஒரு குறியீடாகத் தோற்றம் தரும் வலுமையும் இறுக்கமும் கொண்டது.
ப பிரதிபலிப் கோலங் வெளிப்படைத

No comments:

Post a Comment