தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, July 12, 2016

ராஜகுமாரி - லா. ச. ராமாமிருதம்

10. ராஜகுமாரி - லா. . ராமாமிருதம்
( அரை மணி நேர ocr வேலை வீண் - azhiyasudrgal blogg-ல் உள்ளது)
நிழல்கள் நீளத்தொடங்கி விட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய், வானத்தில் வண்ணங்கள் குமை கின்றன. கோணக்கிழக்கில், அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பகதிகள் மூன்று. கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின் தனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி துலத்தின் குழல் வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன, எதிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா, பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரிய வில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில். முகில்களின் செழிப்புடன் பூமியின் பசுமையும் சேர்ந்து தீட்டியதாய், பிரம்மாண்ட மானதோர் ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் தென்றலின் அசைவில் திரைச்சீலை ஆடுகையிலேயே திட்டிய வர்ணங்கள் காயுமுன்னரே.
இயற்கையின் ஆக்கல் சீற்றத்தில் புதுப்புது நிறங்கள் தக்கிக் கொண்டிருக்கையிலேயே இதோ, அப்பவே-இல்லை-இப்பவேஇல்லை-சமயத்திற்கு அதன் அமைதலின்றி நேரம் கனக்கேது?
-அடுத்த மாத்திரையின் மந்திரக்கோல் வீச்சில் ஓவியம் தேய்ந்து கொண்டே வருகிறது. எந்தச் சூழ்ச்சியால் இந்த வீழ்ச்சி? மாலைக்கும் இரவுக்கும் ஏன் இந்த வீண் வியாஜ் ஜியம்? எனும் திகைப்பில் நெஞ்சில் சோகம் நூல் சிக்குகிறது.
________________
ராஜகுமாரி 6
ஏதோ பீதிகூட பக்கத்துசரில் குதிரை வாகனம் பார்க்க ஆசையா உடுத்திக்கொண்ட பட்டுப் புடவை. உற்சவத்தின் உச்சிக்கட்டத்தில் அத்தனை க்யாஸ் லைட் பட்பட் படபடா டப்டப் வாணவேடிக்கை கடைவீதித் திருவிழாக் கூட்டம் நடு அம்பலத்தில் நெகிழ்ந்து, அடியோடு அவிழ்ந்து விட்டமாதிரி, மானம் தோற்பதற்கென்றே அலங்காரமா? ரூபமாய்க் கேள்வி வடியவில்லை ஆனால் அதன் கொக்கி . ஞ் சி ல் மாட்டியிழுக்கின்றது. சதையடி u?ඨා முதுகெலும் பின் வெண்மையின் உள்மையத்தில் ஒரு "சில்" "சிறீல்". அடிவயிற்றில் ஏதோ உறுத்தல், தவிப்பு; கிணற்றைச் சுற்றிச் சுற்றி வளைய வருகிறாள். குழந்தைகள் இன்னும் விளையாட்டிலிருந்து திரும்பு வில்லை. கிழவர் உலாவப் போய்விட்டார், மத்தியானத் திலிருந்தே அவரைக் காணோம். வீட்டில் அவள் தனி.
கிணற்றுள் எட்டிப் பார்க்கிறாள். யார் இந்த இளவரசி: இவளுக்கு ஏன் இந்தப் பாதாளச்சிறை ஊமைக் கிலேசம் பல்பட்ாது மார்பைக் கவ்வுகிறது? இருகைகளாலும் மார்பை அழுத்திக் கொள்கிறாள்.
உள்ளே கிணற்றடியில் கண்ணாடி, எனக்கென்ன குறைச்சல் வெட்கம், இன்பம், பரபரப்பு அங்கங்களைப் பறிக்கின்றன. கண்ணாடியின் வட்ட விளிம்பிலிருந்து ஜலதாரைகள் சுரந்தவண்ணமா யிருக்கின்றன.
ராஜகுமாரி ஏன் லதாஸ்னானம்? வெட்கம், இன்பம், பரபரப்பு அங்கங்களைப் பறிக் கின்றன.
________________
லா. . ராமாமிருதம்
(தண்ணியா அது? அமிழ்தமல்ல!")
(காத்தான்.)
இங்கிருந்து பார்க்கையில் ஜலத்தில் இளநீர்போல இளவெண்மை,
(கத்திரி . ய் யி லி ல் கூ ஆழம் தென்னை மரத்துக்குக் குறைவில்லை. கவுறு விட்டுப்பார்த்துக் கண் கண்ட உண்மை”)
(காத்தான்.)
இதுக்கும் ஒரு கதை இருக்குதம்மா என்வூட்டிலே வழங்கற கதை, என் முப்பாட்டன் சொன்ன கதை, உனக்கு நான் சொல்லப்போற கதை.
இந்த ஊருக்கும் வந்ததாம் அந்த நாள் ஒரு பஞ்சம். வாய்க்கால், குளம்,கிணறு நாக்கிலே எச்சில் கூட வறண்டு போய் அப்படி ஒரு காய்ச்சல். பயிரும் ஊரும் மானம் பார்த்துப் பார்த்து, கொடும்பாவி கட்டியிழுத்தும் நட்சத்திரம் உதிருது. மானம் இறங்கி ஒரு கண்ணிர் கூட சொட்டல்லே. ஊரைவிட்டு ஓடலாமா, ஒருத்தரை யொருத்தர் அடிச்சுத்தின்னலாமான்னு மக்களுக்கு ஆத்திரம். யார்மேலே எப்படி ஆத்திக்கலாம்னு வயுறு வெந்துகிட்டிருந்த சமயம் ஒரு நாள் போது சாஞ்சு போச்சு. இந்தவூட்டு யசமானி வாசல்லே வந்து நிக்கறாங்க. யாரோ ஒரு பொம்புளையெ பத்து ஆம்புளேங்க துரத்தி | ங் . அவிழ்ந்துபோன சேலையைக் கையாலே வவுத்துலே அள்ளிப் புடிச்சுட்டு அலங்கோலமா ஓடிவரா. பின்னாலே சின்னதும் பெரிசுமா கல்மாரி வீசி வருது; "ஐயோ இடம் கொடுங்கோ! என்னைக் காப்பாத்துங்கோளேன்!” அந்தப் பொம் மனாட்டி அலறிட்டேவரா, அந்தந்த வீட்டுத் தாய்மார், தங்கைமார், மாமியாரா, மருமவளா எல்லோரும் பெண் பிள்ளைங்கே வேடிக்கை பாக்றாங்க; பெண் பாவம் பாக்கறவங்க யாருமில்லே.
________________
இராஜகுமாரி 17
இந்தப் பக்கமா அவள் வந்ததும், இந்த வீட்டு எசமானி இந்த வீட்டுக்கே ஒரு அம்சம் எசமானி எப்பவும் அமைப்பு விளக்கேத்தறவங்க வகையா லாய்ச்சுட்டா ஆட்டுக்கு இருளே இல்லை-வழி வழியா முருவன் அருள் அப்படியே இருக்கணும் ஓடி வந்தவளை ரெண்டு கையாலும் வாரியனைச்சு உள்ளே வலிச்சுகிட்டு கதவை யடைச்சு ரெண்டு தாளையும் இழுத்துப்போட்டுட்டாங்க, தடதன்னு வெளியே தட்ட றாங்க. ஆனால் அதன் கிட்ட யாரும் ஒண்னும் ஆட்டிக்க முடியாது. கதவான கதவு அந்த நாள் கதவு ; கோட்டைக் கதவு கோவில் கதவு: தேக்கு மரத்திலும் அடிமரம் தாள் போட்டால் சீல்போட்டதுதான்.
அப்புறம் நடந்தப் பேச்சை என் பாட்டன், அவர் பாட்டன் சொன்ன கதையை அப்பட்டமா சொல்லுவாறு அதிலேதாண்டா கதைப் பேச்சுக்குள்ளே புகுந்து பார்க்கணும் பார்த்தா புல்லரிச்சுப் போவுதே; அதிலே தான் கதை என் பாரு, - யாருடி அம்மா நீ ? என்ன டிம்மா பண்ணினே?” 'நான் அசலுரர். ராத்தங்க இடந்தேடி இந்த ஊர் நாலு கால் மண்டபத்தில் தங்கினேன்’’.
'புடவையைச் சரி பண்ணிக்கோ. இங்கே உனக்கு ஒண்ணும் நேர்ந்துடாது".
ஆனால் அந்தப் பெண் லேசா சிரிச்சிட்டு நிக்கிது. அம்மா சொன்னபடி மானத்தை மூட முயற்சி செய்யல்லே. மூக்கும் முழியுமா இருக்கு. ஆனால் புத்தி சத்தே பேதலிச்சிருக்கும் போலிருக்கே. பயமா, பாவமா தெரியல்லியேன்னு அம்மாவுக்கு எண்ணம். ஏன்னா அந்தப் பொண்ணுக்கு முழி சரியாவில்லே. இங்குமங்கும் என்னத்தையோ கண் தேடி அலையுது. -
"புதுசா வந்த இடத்திலே ஊர்க்கோவத்தை சம்பா திக்க என்ன பண்ணினே?"
________________
172 லா. . ராமாமிருதம்
வந்தவளுக்குக் கண் அலைச்சல் நிக்கல்லே. அம்மா சொன்னதைக் காதில் வாங்கிட்டு. ஆனால் ஏதோ தினைப்பா;
"எல்லோரும் செய்யறதைச் செஞ்சுண்டே இருக் கிறதைவிட புதுசாவோ ஈனமாவோ ஒண்னும் நான் பண்ணிடல்லே.” அம்மாவுக்குப் புரிஞ்சு போச்சு. கண்ணுலே தண்ணி தளும்பிட்டுது.
'அடப்பாவமே ஏண்டி குழந்தை வயத்துக்கில்லாத கொடுமையா?” - -
"ஏன் பாட்டி, நானே வழங்கறவளாயுமிருக்கக் கூடாதா?” - .
"நீ சொல்றது புரியல்லியே காரியம் ஒண்ணொண் ணுக்கும் வேளைப் பொழுதுன்னு ஒண்னு இருக்கே
நீங்கள் சொல்றது என்னிடம் வருவோருக்குத்தான் இருக்கனும் எனக்குக் கிடையாது. ஒடற தண்ணிர் ஓடிண்டே இருக்கு என்னிடம் இருப்பது என் ஆழம் ஒண்ணுதான். அதுவும் எவ்வளவுன்னு எனக்கே தெரியாது. அதுவும் எனக்கு ஒளிவு மறைவில்லை.”
' என்ன டிம்மா சொல்றே, புரியல்லியே!”
'இதோ பாருங்க பாட்டி. நானே வலியப்போய். யாரையும் கையைப் பிடிச்சு இழுக்கல்லே. ஆனால் தேடிண்டு வந்தவானை மாட்டேன்னு" மறுக்கல்லே. 'ஆபா'ன்னு தலையையும் ஆட்டல்லே. நீங்கள் எனக்கு இப்போ அடைக்கலம் தந்து அணைச்சுக்கலியா, அது மாதிரி ஆதரவா அணைச்சுண்டேனோ என்னவோ! ஏன் பாட்டி, நெஞ்சடியில் நாம் அத்தனை பேரும் தாய்மார் தானே! நம் உடலமைப்பும் அப்படித்தானே! மேடும் பள்ளமுமா ஒடி னாலும் மாரெல்லாம் பால்தானே.” பாட்டிக்குத்தலை கிர்ர்ர்-'
அடிச்சுட்டு வர வெள்ளத்திலே வீட்டுக்கூரை குமுங் கினாப்போலே தாண் மேலே சாஞ்சு, சரிஞ்சு அப்படியே
________________
ராஜகுமாரி í富器
குந்திட்டாங்க. தண்ணியிலே கரைஞ்சு போறாப் போல. கூடம், தூண், சுவர் எதிரே அந்தப் பொம்புள்ளே, தான் எல்லாமே வரப்புக் கலைஞ்சு மிதப்பலாடுது. எங்கிருந்தோ ஒரு குரல் காதண்டை ஒலிக்கிறது.
"எதையுமே அக்கலக்கா பிரிச்சுக் கேட்டால், சொல்ற துக்கு ஒண்ணுமே இல்லை. இல்லை எனக்குச் சொல்லத் தெரியல்லே. எதையுமே அக்கலக்கார்பிரிச்சுப் பார்த்தால் செய்யாத பாபமில்லை. நேராத புண்ணியமில்லை. ஆழத்துக்கு ஆழம் பார்த்து ஆகற காரியமில்லை, இடுப்பளவு ஆழக்காரனை குளிப்பாட்டறேன். கழுத் தளவு வந்தவன் என்னில் முழுகி எழுந்திருக்கிறான். ஆழந்தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளேயே வந்து விட்டவன் என் வயிற்றில் துரங்கறான். காலை நனைக்கவே பயப்பட றவன். . மு. க் கு அவனிடமே பத்ரமா இருக்கு சமுத்திரத்தையே முழங்காலுக்குக் கண்டவன். பாதம் கழுவுவது தவிர நான் ஒண்னும் செய்ய முடியாது. துணிஞ்சவாள்தான் துறந்தவாள். துறந்தவாளுக்குத்தான் தரிசனம். . கா ஞ் . . ம் தப்பியோ, வழு தடைபட்டோ வந்தாலோ குழந்தை களுக்குத் தாங்கல்லே நானும் ஒடோடித்தான் வரேன். ஆனால் என் குழந்தைகளே என்மேல் கல்லைவிட்டு எறியறதுகள. தாயை அடையாளம் தெரிஞ்சுக்கல்லே. இதைவிட துக்கம் எனக்கு வேணுமா ? ஆனால் இதைவிட வேடிக்கை உலகத்தில் உண்டா ? எதுவுமே என்னைப் புரிஞ்சுக்கல்லே. புரிஞ்சுக்கறதுன்னா என்ன ? வந்ததை வந்தபடி வாங்கிக்கறது தான் எனக்குத்தெரிஞ்சுண்ட வரை புரிஞ்சுண்டதற்கு அர்த்தம். ஆனால் இதைப் புரிஞ்சுக்க அனுபவத்துக்கு ஒண்னு உன்மாதிரி வயதாகி யிருக்கனும்; இல்லை என்மாதிரி வயதை மீறியிருக்கணும். ஆனால் ஒண்னு உலகத்திலே (குழந்தைகளில்லாமல்) எல்லோருமே கிழமாயிருந்துட்டா எல்லாத்தையும் புரிஞ் சுண்டுதான் என்ன பண்றது ? அனுபவிக்க முடியாத
________________
I of 4 லா, . ராமாமிருதம்
அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக் கேன் ? குடம் தளும்புற மாதிரி அதென்னகிளு கிளுப்பு ? சிரிப்பா அழுகையா ? சிரிப்பாயிருந்தாலும் அதைக் கேட்டதும் எனக்கேன் ப் டி தொண்டையை அடைக்கிறது ?
"என் குழந்தைகள் செழிக்கத்தானா வந்திருக்கேன் ! இல்லை எனக்காகவா வந்திருக்கேன் ? குழந்தைகள் வயிறு குளுமை கண்டு என் ஈரம் நெஞ்சுவரை பாஞ்சு எங்கும் rேமம் தழைக்கணும்னு எப்படி ஓடோடி வரேன் தெரியுமா ? எங்கிருந்தோ எங்கிருந்தோ வர்ரேன். எங்கிருந்து நான் எப்படி வந்தாலும் அடங்கற இடம்னு ஒண்ணு எனக்கும் உண்டே, அது இங்கே எங்கே ? இங்கே எங்கே ?”
அந்தப் பொம்புள்ளை திடீர்னு புடவையைக் கழஞ்சு கீழே போட்டுட்டு, முண்டக்கட்டியா ஒடிப்போய் கிணற்றுலே தொப்புனு குதிச்சிட்டா.
"ஐயோ"ன்னு அலறி க் கி ட் டே பாட்டியம்மா பின்னாலேயே லொங்கு லொங்குன்னு ஓடிப்போய்க் கிணற்றிலே எட்டிப் பார்த்தா. உள்ளேயிருந்து தண்ணி மேலே பொங்கிவருது. நிமிசத்துலே கிணறு வழியுது. பாட்டி தட்டித்தள்ளாடி வந்து, கதவைத் திறந்து விட்டுட்டாங்க. உள்ளே பாய்ஞ்சோடி வந்தவங்க வந்தால், தோட்டம், கூடம், வீடு எல்லாம் தண்ணி ஒடுது. பாட்டியம்மா கிணத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்றாங்க. ஆனால் அவங்களுக்கு வாயடைச்சுப் போச்சு. பாட்டியம்மாவுக்கு அப்புறமே பேச்சு ஒரு மாதிரி தட்டல்தான். அது பத்தி பேச்செடுத்தாலே அம்மாவுக்கு மருள் வந்த மாதிரி ஆயிடும். அப்புறமே அந்த அம்மா ரொம்ப நாள் இல்லே, வாய்க்காவிலே, குளிக்கப் போனவங்க உச்சி வேளைக்கும் திரும்பல்லே. கரையோரமா தேடிக்கிட்டே போனவங்க ஒரு கல்லுக்கப் பால் யாருமே நடமாடாத வளைவிலே கண்டெடுத்தாங்க.
________________
ராஜகுமாரி 互了劉
மாறாத தூக்கத்தில் பாட்டியம்மா காணாததைக் கனட மாதிரிச் சிரிச்ச முவத்தோடு பாட்டியம்மா தண்ணியிலே கிடந்தாங்க, இத்தனைக்கும் வாய்க்கால்வழி பூரா தண்ணி கனுக்காலுக்கு ஏறல்லே. அதுதான் ஆச்சர்யம். பாட்டி யம்மா இடுப்பிலே, வந்த பொம்புள்ளே அவிழ்த்துப் போட்ட புடவையை உடுத்திட்டுருந்தாங்க. ரெம்ப நாளைக்கு அந்தப்புடவையைப் பூவாடையைக்கும்.பீட்டி ருந்தாங்களாம். அப்புறம் ஒரு நாள் நனைச்சுக்கோடிக்குக் கோடி தோட்டத்திலே கிளைக்குக் கிளை கட்டியிருந்த சேலை எப்படியோ அவிழ்ந்து காற்றாடியாப்பறந்து. போயிட்டுதாம். நீலப்பட்டுப் புடவை இயக்கை யடிச்சு ஊர்மேலே பறந்து போறப்போ தெருவிலே ஓடிவந்து வேடிக்கை பார்த்தவர் எத்தனை பேர். நடுவாசலில் குத்து. விளக்கை ஏற்றி வெச்சு கற்பூரம் கொளுத்தி விழுந்து கும்பிட்டவங்க எத்தனை பேர். 'காவேரியாத்தா எங்கள் பாவம் பாராமல் எங்களை கண் திறந்து பார்த்தவளே! நீ வந்த காரியம் முடிஞ்சுது நீ திரும்பிப்போற விடமெல் லாம் உன் புண்ணியம் எங்களுக்கு இடிக்கட்டும்!!
அதனாலே காவேரியம்மன் வலிய வந்து தன்னைக் காட்டிக் கொடுத்துக்கிட்ட வீடு அப்பா இது"ன்னு முடிச்சுட்டு என் முப்பாட்டன் கூடவே என் பாட்டனிடம் சொல்லுமாம். இது என் பாட்டனிடம் நான் கேட்ட கதை. இதன் நிசமும் பொய்யும் நோண்ட உனக்கு நான் அதை சொல்லல்லே. நிசமும் பொய்யும் நமக்கேன்? நம்பினால் காவேரியாத்தா, நம்பாட்டி நல்ல கதை. இந்த வீட்டில் தண்ணி மொண்ட நம்வீடு நிறைஞ்ச வீடு இது நிசம். இதுக்குப் பஞ்சாயத்து வேனாமில்லையா?”
தலைமீது மிருதுவாய் ஏதோ தி ர் ந்   ைத. கையிலெடுத்துப் பார்த்தால் பூ. அவளுக்கு மயிர்கூடச் செறிகிறது. காற்றுவாக்கில் இயங்கும் எந்த ஆத்மாவின் ஆசிர்வாதமோ? ஒரு வேளை கரிவேரியம்மனேதான் பூவை அட்சதையாப் போட்டாளோ?
________________
6 லா. . ராமாமிருதம்
நிறையப் பெருகி நன்னாயிரு."
இந்த அர்த்தம் தந்த இன்பம் நெஞ்சிலே தேன் விடுகையிலேயே.
ஆவிர்ப்பவி'
-முன்பின் சுவடுகூட அவள் கண்டிரா ஒரு நாமம் அதன் மோன ஒசையிலேயே புரியாத அர்த்த தாரைகளைப் பெருக்கிக்கொண்டு மனத்தில் தோன்றியதும், அமுதம் அவளை ஆட்கொண்டது. -
* விஸ்
ஹவிர்ப்பாகம்
ஹவிர்ப் பாஹீ
ஆவிர்ப்பவி
ஒரு தினுசான மூர்ச்சையில் ஆழ்ந்தாள்.
இருள் பந்துகள் செடிகளில், கிளைகளில், இலைக் கொத்துகளில் தொங்குகின்றன. எத்தனை நேரமாவோ அறியேன். இங்கேயே இருக்கேன். இருட்டு எப்போ இறங்கித்து இன்னும் சுருள் சுருளாய் கடைசல்கள் மிதந்து வந்து கிணற்றின் மேல், ராட்டினக்கட்டைமேல், பிடிச்சுவரில் கொல்லைக் காம்பவுண்டின் பொக்கை, போறைகளில் கரை தோய்கின்றன. ஒளிப்பொறிகள் சுவரோரம் வாடாமல்லிப் புதரில் தோய்கிற கல்வின் பக்கமாய் சாய்ந்த வாழைக் குலையைச் சுற்றிச் சுடர் விடுகின்றன. தன் பக்கமாய் பறந்து வந்த மின்மினி ஒன்றைப் பிடித்தும், லேசாய் மூடிய கையுள் விரல் சிந்துகளின் வழி, உள்ளங்கைக்குழிவு தகதகக்கின்றது. கை விரித்ததும் கழன்றது என் ஜீவனின் பொறியா? என்னைச் சுற்றிச் சுழிக்கும் இருளில் பொரியும் இத்தனை பொறி களும் அத்தனை உயிர்களா ? இதுகளுக்கு ஏன் இவ்வளவு பெரிய தவிப்பு விடுபடுவானேன்? திரும்பவும் இருப்புத் தேடிதிக்குத் தவிப்பானேன்? இது ஒரு வேடிக்கையா என்ன ?
________________
ராஜகுமாரி ??
விவரம் தெரியா விசனம் அவள் மேல் படர்கிறது.
அதன் பாகு விழியோரங்களில், உதட்டின் வளைவில், மோவாய் குழிவில், முதுகுத் தண்டில், மார்பின் பூண்களில், தொப்புள் சுழியில், இடுப்பின் நெகிழ்வில், அடிவயிற்றின் மேடில், மேடின் இறக்கத்தில் சுற்றிக் கொள்கிறது. அதனால் உடலில் ஒரு மிதப்பு. பூமியைத் தன் மதுலை ஏந்தும் ஒரு மலர்க் கிண்ணமாக இரவு மாற்றிக்கொண்டிருக்கிறது. விசன நரம்புகள், ஒடிய இதழ்கள் பகல் விரிந்து, இரவு குவிந்த பூவுள் மாட்டிக் கொண்டு மதுவில் நீந்தித்தவிக்கும் உயிரெனும் பரம சோகத்தின் மின் மினிகள்,
இங்கிருந்து தெரியும் வீட்டின் உட்புறம், கூடத்தில் ஏற்றி வைத்த குத்துவிளக்கின் இளவெளிச்சத்தில் குளித்து, மணவறையில், கன்னத்தில் படரும் நாணத்திட்டுபோல் தோன்றுகிறது. ஆயுசில் பாதியாச்சு. அடராமா, அசட்டு பிசட்டுன்னு என்னென்னவோ மனசில் தோணிண்டிருக்கே.
'இதென்ன வீடா இல்லை...... என் வாயில் வரக் கூடாததெல்லாம் வறது; அதுவா இது ?"
நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கோணி ஊசியின் கூரில் குரல் இருளைத் துருவி வந்து அவளை எட்டிச் சுடுகிறது. மனமிலாது நினைவைக் கலைத்து உள்ளே செல்கிறாள். அவளைக் கண்டதும் வெடித்த விதைபேர்ல் கிழவர் குதிக்கிறார். அவர் கோபம் பார்க்க ஒருபக்கம் பயம். ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இந்த வீட்டுப் பெண் களுக்கு ஆணவம் முத்திப் போறதுக்கும் ஒரு எல்லை யில்லையா என்ன? நாள்தான் அஸ்தமனமாச்சு. வீடே அஸ்தமனமாயிடுத்தா?”
என்ன தாத்தா அம்மாவைக் கோவிச்சுக்கறே?” " அந்த அளவுக்குக் கட்டை உரம் ஏறிடுத்தா?” த்வனி-12
________________
178 லா. . ராமா மிருதம்
கிழவர் சரே லென்று திரும்பி பேத்தியைக் கன்னத்தில் ஒன்று விட்டார். குழந்தை ஒருகணம் திக்கு முக்காடிப் போய் அழ மறந்து அப்படியே நின்று விட்டாள். தாத்தா அடிப்பார் என்று அவள் நினைக்க வில்லை. கிழவருக்கே என்னவோ மாதிரி ஆகிவிட்டது. இதுமாதிரி இதுவரை நேர்ந்ததில்லை. அப்பவே, அவள் பின்னால் அவரையே பார்த்துக் கொண்டு நின்ற பேரனையும் கண்டதும் அவர் மனநிலை ஏதோ கையும் பிடியுமாக அகப்பட்டுக்கொண்ட திருடன் மாதிரி உள் சுருங்கிற்று. அவன் கண்களில்தான் எத்தனை அலட்சியம் சிந்துகிறது. கோபாவேசத்தில் கிழவர் உடல் காற்றில் சருகுபோல் ஆடிற்று.
என்னடா முறைக்கறே எள்ளுக் கண்  ைன வெச்சுண்டு? சுட்டு எரிச்சுடுவையோ?” பையன் பார்வை மாறவில்லை. அவர் போகும் வழியெல்லாம் அதுவும் தொடர்ந்தது. கிழவர் பின்னடைந்து திண்ணையில் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்து பொரிகிறார். என்ன அக்ரமம்; வரவர இந்த வீட்டில் ஒரு நல்லது பொல்லாதுக்கு வாய் திறக்க, புத்தி சொல்ல வழியில் லாமல் போச்சு பார்த்தையா! நேற்றுப் பிறந்ததெல்லாம் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கற காலம் வந்துடுத்து: என் நாளில் நான் இப்படித்தான் இருந்தேனோ? இருக்கத் தான் முடியுமா ? முழிச்ச கண்ணை நோண்டிக் கையில் கொடுத்துட மாட்டாளா ? அது என்னடான்னா வாண்டு வாரிசுக்கு வரது சிறிசுகளைச் சொல்லி என்ன பண்றது? மாவுலேயே கிள்ளி எறிய வேண்டியதை மூக்காகவே வெச்சாறதுவந்தவழி அப்படி! அப்போ குடிச்ச பால் இப்போத்தான் ரத்தத்தில் ஊற ஆரம்பிச்சுருக்கு. வாயில் ஊட்டற பாலை அப்பவே முக்கில் பீச்சியிருக்கணும்......”
இன்னும் என்னென்னவோ. ஆனால் இத்தனை கேட்டுக்கொண்டும் இன்னிக் கென்னவோ அவளுக்குக் கோபம் வர மறுக்கிறது. அவளுக்கே வியப்பாயிருக்கிறது. -
________________
ராஜகுமாரி 179
யார் அவள் காலைக்கட்டறது? கீழே நோக்குகிறாள். "தாத்தா என்னை அடிச் சுட்டட்-டாம்-மா!
ഉണ്ണം ഉജ-ജ്ജ'
நான் பெற்றதுதான் நீ. ஆனால் இன்னிக்கு எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. காரணம் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. யார் என்னை என்ன திட்டினாலும் இன்னிக்கு எனக்கு ஒட்டிக்கல்லே. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.
இன்னிக்கு உனக்கு எதில்தான் அக்கரை! இன்னிக்கு எதுதான் உன்மேல் ஒட்டிக்கொள்ளும்? -
அவளிடமிருந்தே எழுந்த கேள்விக்கு மோனப் பதிலில் கண்முன் செவேலென மார்பின் தோற்றம் எழுந்தது மார்க்குலையில் ஸ்ன்னமான ஸ்படிக ஜபமணி மாலையின் இறக்கம்.
தன் கணவன் முகத்தை உடனே, அந்த நிமிடமே பார்க்க வேணும், பார்த்தேயாகனும் எனும் அவா. விலங்குத் தன் இரையைக் கவ்வுவதுபோல் அவளைக் கவ்விற்று.
'இதென்னடியம்மா திடீர்னு உலாவப் போயிருப் பவர் திரும்பி வருவதற்குள் வருடக் கணக்கில் பிரிந்தாற். போல் ஏக்கம்?
அவள் ராஜகுமாரி. அவளுள் அவளே தோழி. ராஜ குமாரியை பரிஹாசம் செய்கிறார். ஆனால் கரை புரண்ட இந்தப் பிரிவாற்றாமைப் பெருக்கில் பரிஹாசம் ஏற்க வில்லை. இன்று மாலை மயக்கத்தில் நிமிடங்கள் வருடங்களாய் நீண்டு விட்ட அற்புதம். இது என்ன ?
அந்த அற்புதமும் ஏக்கமும் தலையாமலே, லாந்தர் களை ஏற்ற ஆரம்பித்தாள். ஆயிரம் லாந்தர்கள் ஏற்றி வைத்தாலும் இன்றைய இருள் என்னிருள் தனி இருளில் இவரே செந்தழல் கொஞ்ச காலம்ாகவே உடம்பு
________________
380 லா. . ராமாமிருதம்
வாங்கல். ஆனால் தேகத்தில் ஜவாலை முறுக்கு; இன்னென்று புரியா ஸ்புடத்தில்; மேனி மின்னிடம் பொன்னுக்கு; இத்தனை நாள் என் கண் எப்படி
அவிஞ்சு போச்சு ? விளக்கைச் சுற்றி வட்டமாய் பந்கி நடக்கிறது பாரேன் சாதத்தை குருவி மாதிரி கொறிக்கறதை !
சுப்பு ஒருபிடி கூட இழுக்கிறாள். சுப்பு, கிழவருக்கு இடதுபுறம் உட்கார்ந்திருக்கிறாள். பிடிக்குப் பிடி கிழவரின் முகக்கடுப்பு இளகுகிறது. பாவம் ! பசி பொல்லாதது. கீரை மசியல் சட்டியை சரண் டினால் அகப்பையில் வரவில்லை. அதிலிருந்தே தெரியறதே அவருக்குப் பிடித்தமாய் அமைஞ்சு போச்சு போல இருக்கு. எனக்கு இல்லாட்டா என்ன ? அதுவே என் சந்தோஷம்.
பச்சை வாழையிலையில் மோருஞ்சாதத்தின் தூய வெண்மையின் நடுவே கீரையும் குழம்பும் கல்ந்து சுத்தமாய்க் குளம் கட்டி இருப்பது எடுப்பாயிருக்கு.
"ஏலே சுப்பு ! உன் மூக்கில் ஒரு புறா உட்காந்தி ருக்குசுப்பு பயந்து மூக்கைத் தடவி பார்த்துக் கொள்கிறாள். வாய் நிறைய கவளம். கண்கள். கரு வண்டாய் பளபளக்கின்றன.
ஒண்ணுமில்லை-நீ என்னோடு பேசவேண்டாம் போ ! நீ தான் என்னை அடிச்சயே !” உதட்டைப் பிதுக்குகிறாள் "அதோ மூக்கிலிருந்து உச்சி மண்டைக்கு வந்துடுது : அவளை அறியாமலே சுப்புவின் கை மண்டைக்கு துரக்குகின்றது.
'எனக்கென்ன அதோ தோள்மேல் நிக்கறது : அதோ எனக்கென்ன தோள்மேல் நிக்கறது. ' தோளைத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள்.
"நான் எப்படிப் பொய் சொல்வேன். நானே விட்ட வெள்ளைப் புறான்னா !” சுப்புவுக்கு சிரிப்பு பீரிடுகிறது
________________
'நானே விட்ட வெள்ளைப் புறா !”
திரும்பத் திரும்ப கொக்கரிக்கிறாள், அவளுக்கு அது ஒரு பெரிய வேடிக்கையாயிருக்கிறது. அதோ பார் உன் முதுகில்!”
'நானே விட்ட வெள்ளைப் புறா.”
நானே விட்ட வெள்ளப் புறா !”
o தாத்தா இடது கையால் அவள் முதுகில் 'பளார்என்று அறைகிறார். சப்தம் பட்டாசு வெடிக்கிறது.
சுப்புவுக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. உடலே குமுங்கி மடிகிறது.
"ஏடி சுரனை கெட்ட வெள்ளாட்டி இப்போ வலிக்கல்லியோ? அப்போ வாயை கப்பறையாப்பிளந்து ஊரை கூட்டினையே t' போ தாத்தா ! இது ஆசையடி வலிக்குமோ?"
கிழவர் இடது கையால் பேத்தியை அனைத்துக் கொள்கிறார். கள்ளி கள்ளி இப்பவே பேச்சிலே மயக்கபார் " அவர் கண்கள் துளும்புகின்றன.
திடுக்கென விழிப்பு வந்தது. அவளை அப்படி எழுப்பியது எது? பொத்தென்று அவள்மேல் விழுந்தடித்து பல்லி ஒடித்தா ? சமயலறையில் சாமான் உருண்டதா? ஊஞ்சல் சங்கிலியின் கிறீச்சா o
அத்தைக்குப்பின் ஊஞ்சலுக்கு அவன்தான் வாரிசு, நாளெல்லாம் பாடில் சலித்த உடம்புக்கு அதன் லேசான அசைவின் இதவு இருக்கட்டும் ஒரு பக்கம். அதிலும் பெரிசு அத்தை படுத்த இடம் என்கிற மவுசு, அத்தை புரண்ட இடத்தில் தானும் பு ண் டு அத்தையின் கைரியத்தை, பலத்தை அத்தை புழங்கிய பொருளிலிருந்து அத்தையின் பிரசாதமாய்த் தானும் பெறுவதாய் ஒரு த்யானம் , த்யாணமேதான் தைரியம் , த்யாேைமதான்
பலம்.
________________
#82 லா. . ராமாமிருதம்
ஆனால் அவளை எழுப்பியது அவள் நினைத்ததல்ல. எங்கிருந்தோ அதென்ன சொட்டு' :சொட்டு”...? முக்காலி மேல் நிறுத்தி இருக்கும் தீர்த்த சால் ஒழுக்கலா ? அடியில் கவிழ்த்த பால் உருளிமேல் ஜலம் சொட்டு' :சொட்டு சொட்டு'
-இல்லை ஜலத்தைவிட இந்த ஓசை கல்கண்டு மாடியி லிருந்து துளிக்கின்றது. துளிக்குத் துளி தனித்தனி தெறித்து ஒன்றுடன் ஒன்று இழைந்த பாகு உள் ஊறி அவளையும் தன்னோடு கட்டியிழுக்கையில் அதுவே வேதனை விடு தாதாகி சொட்டு சொட்டுசொட்டு"
-திடீரெனப் புரியவில்லை உடல் பூரா ஒரே தவிப்பு, விழியோரங்களில், உதட்டு வளைவில்,மோவாய்க்குழிவில், முதுகுத் தண்டில், மார்பின் பூண்களில், தொப்புள் சுழியில், இடுப்பின் நெகிழ்வில், அடிவயிற்றின் மேடில், மேட்டின் இறக்கத்தில், அனல் சரடு சுற்றிக்கொண்டது. பிய்த்தெறிய முயன்றதும் சரடு சிக்காகி அங்கங்கள் திகு திகுவென பற்றிக் கொண்டன. மானம் போக காலை வாரிவிடும் மோசடி மூட்டம். ஈதென்ன ?
ஊஞ்சலிலிருந்து எழுந்து புவி புறப்பட்டது. தன் ஒசையே தனக்கு ஊமையாகி, தன் பசிக்கு இரைதேடும் சூதில் மெத்திட்டுவிட்ட பாதங்கள் அவளைக் கூடத்தி லிருந்து அடியடியாய் ஏந்திச் சென்றன.
மாடியடியில் ஒரு கணம் தயங்கி நின்றாள். இரவின் அமைதியில் புவனம் ஒரு பிரம்மாண்டமான குமிழியாய் அந்தரத்தில் தொங்கிற்று.
எப்பவோ சுப்பு தாத்தாவோடு திண்ணைக்குப் போயாயிற்று. பையன் குஞ்சுத் திண்ணையில் தூங்கு கிறான் இப்போதெல்லாம். அவனுக்கு தன்மேல் பிறர் உடம்போ கையோ தற்செயலாய் பட்டாலே பிடிக்க வில்லை. கொஞ்ச நாளாவே தனிக் கூடாகி விட்டான்.
தேனென ஒலித் துளிப்பு
________________
ராஜகுமாரி #33
பளிங்கெனத்துலங்கி
சிங்லிகினிங்
பளிங் கிளிங்
தரங் கினிங்
தரங்....
கறவைக்கு ஏமாற்றிக் கன்றுக்கு மீத்து மடியில் மறைத்த கள்ள மணி, கன்றுக்குக் காத்திருந்து கன்றைக் காணாது தன்னை மறந்த பரிவின் துரிய மணி மடிமீறி காம்பினின்று சொட்டுச் சொட்டுச் சொட்டென தேம்பும் பாலின் துயரமணி.
ஒசை மணிகள் கிண்கிணிக்கும் வழியே சென்றாள்.
மொட்டை மாடிமீது வான் குடலை கவிழ்ந்து உருண்டது. ஆனால் அதனின்று கொட்டியவை நட்சத் திரங்கள், பூக்களல்ல. அனைத்தும் முள் கொண்டைகள் வானத்தில்-அல்ல புடவையில்-அல்ல-உடலில் தை தை தைத்து அடிவரை பாய்ந்து ஆங்காங்கே திருகிப் பதிந்து சுடர் விடும் குருர எக்களிப்புக்கு அஞ்சி உடல் குலுங்கி ரோமம் சிலிர்த்தது.
ஆனால் அந்த வலி முழு உணர்வையடைந்து உள் அழுந்துமுன், மாடியறையின், ஒருக்களித்த கதவின் பின்னாலிருந்து திடீரென நாத ஜாதிகள் புறப்பட்டுவந்து அவளை மொய்த்துக் கொண்டன.
மூக்குக் குத்தியில், நெற்றிக் குங்குமத்தில், காதுக் கம்மல் கற்களில், நெற்றி நடு வகிடில், மேல் உதட்டில் துளித்த வேர்வை முத்தில், மோவாயடியில் ஒளிந்த பிறவி மறுவில், உள்ளங்கை ரேகைகளில், கண்ரப்பை மயிரில், பிடர் மயிர்ச் சுருளில், நகச் சதையிடுக்கில்,புருவக வானில், கூட்டங் கூட்டமாய் குழுவான்கள் சிட்டஞ் சிறகுகளில் பறந்து வந்து தொத்திக் கொண்டன. அலைகளின் எள்ளளவுக்கெதிர்மாவின் அரும்பும், புளியத் தளிரும்
________________
#84 லா, ராமாமிருதம்
rத்திரங்கள், நாததாதுக்கள், மின்மினிகள், அத்துகள், சிந்துகள், கோர்வைகள், கார்வைகள், பார்வைகள், பாதங்கள், பேதங்கள், தாபங்கள் , தவிப்புகள், தத்தளிப்புகள், தளிர்கள், மி னிர் ள், ஒளிர்கள், அங்கங்கள், அலரிகள், பங்கங்கள், சி ன் ன் ங் ள், n ன் ங் ள், பி ன் ல் ள், ன் ல் ள், சுளுக்குகள், கொடுக்குகள், தளுக்குகள், வெடுக்குகள், மிலுக்குகள், துடுக்குகள், மிலுக்குகள், துடிப்புகள், துரவல்கள் நொடிப்புகள், தாவல்கள், திகில்கள், பிடிப்புகள், ஆவல்கள், சரங்கள் அவசரங்கள், அவகாசங்கள், விள்ளல்களின் துள்ளல்கள், பதைப்புகள், பதை பதைப்புகள், ட் டு ள், பெட்டிகள், சிட்டிகள், அணுக்கள், ரகஸ்யங்கள், சி.சுசிசு, தஸ்தல, நிதபம பம கஸ் கரி நித நிரி நித தரி நிதாரிநி ரிநிதி நிதிநி-இங்கு-அங்கு வரை கரைந்து எங்கும் நிறைந்து எதுவும் தமக்குச் சொந்தம் என்ற கதியில் வந்த எதையும் அரித்து மென்று உமிழும். அவைகளில் ஊறல் வதைப்புத் தாங்க முடியவில்லை.
கதவை படீரெனத் திறந்துகொண்டு உள்ளே ஓடினாள். இருளன்றி வேறேதும் கண்ணுக்குப் புலனாக வில்லை. கருவின் இருளிலிருந்து ஒரு அள்ளு இங்கு வந்து இறங்கினாற் போன்ற கும்மினின்று ஒலிக் கதிர்கள் முளைத் தெழுந்து அவள்மேல் கூடாய்க் கவிழ்ந்தன. அவைகளை விலக்க வீசிய கைக்கும் தட்டைபோல் ஏதோ தட்டிற்று. அதையும் தள்ளி அதற்கு அப்பால் பிடிப்புக்குக் கிடைத்த மெத்தில் அழுந்தி
!
!

அத்துடன் காலமும் தன் இனம் குலைந்து சரண் புகுந்த பிலத்தின் அடிதட்டா ஆழத்தில் தனக்குத் தானும் இலாது மூழ்கிப் போனாள்.