தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, July 18, 2016

பூகோஸ் - தஞ்சை ப்ரகாஷ்



196 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

16 பூகோஸ்

https://archive.org/download/orr-11459_Pookose/orr-11459_Pookose.pdf


அசையாமல் உட்கார்ந்திருந்த மீராவைக் கிட்டே வந்து அவள் அடிவயிற்றைத் தொட்டு, இடையில் கை கொடுத்து மறுகையால் தோளைப் பிடித்து வளைத்து 'இப்படி என்று இருக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு மகேச்வரின் தவக்கோல சிலையின் அருகே போய் நின்று, மீராவையே பார்த்தார் வித்யாசாகர் கிறங் கிப்போன மீரா ஒரு முரட்டுத்தனம் காட்டினாள். உடலை வளைக்கச் சொல்லித் தரலாம் இந்த முரட்டு விரைப்பின் பாவனையை எப்படிக் குறைப்பது? கொஞ்ச நாளாகவே மீரா இப்படி விரைத்து முறுக்கிக் கொள்வதும் சகஜபாவம் வர ரொம் பவே சிரமப்படுவதும் வழக்கமாகி விட்டது. மீரா என்ன செய்வாள் மராட்டிப் பெண். அவள் எட்டு வயசிலிருந்தே கல்யாணத்துக்குத் தயாரானவள். பத்து வயசு முடிந்து பதினொன்றில் கால் வைத்த போதோ பெரிசாகி விட்டவள். அவள் அம்மா ஜம்னாபாய்க்குப் பத்து வயசில் கல்யாணம் பதின்மூன்று பதி னாலு வயசான போது மீராவைப் பெற்றெடுத்தவள். பத்து பெண்கள். ஒவ் வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெண் வீதம் பெற்றெடுத்தா மகராசி மீராவை ஏகாப்ஜனா என்கிற கோலாப்பூர்காரனுக்கு கட்டி வைத்தபின் நாலு வருடங்க ளிலும் மீராவின் அம்மா ஜம்னா பாய் நாலு பெண்களைப் பெற்றுக் கொண் டேதான் இருந்தாள்.

அதனால்தான் ஏகாப்ஜனா தனிக்குடித்தனம் என்று கூப்பிட்டதும் ஒடிப் போய் ஐயங்கடைத் தெருவில் புகுந்து கொண்டாள் மீரா ஆடி ஓடி விளையா டிய அவளை மூலையில் போட்டு மராட்டிய கும்டா போட்டு மூடினான் ஏகாப் ஜனா. எங்கிருந்தோ வந்தார் வித்யாசாகர் ஒரே பார்வையில் புரிந்து கொண்ட முதல் மனிதன் வித்யாசாகரன் தோள்களில் புரளும் தலைமுடி ஆனாலும் உச் சியும் முன் தலையும் பின்னும் வழுக்கைத் தலை சிவந்த நிறம் நெற்றியில் நெற்றிப் பிறை, நடுவில் நெற்றிக் கண்ணாய் குங்குமம் சுடர்ந்தது. அலையலை யாய் மார்பில் நீண்டு படரும் வெண்மையும் கருப்புமான சுருள் முடிகளோடு தாடி ஆ. அடித்து உதைத்து பிழிந்து இரவில் நக்கி நக்கி முத்துகிற, கணவனை அவர் முதலில் இணங்கி சம்மதிக்க வைத்ததே ஆச்சர்யம் தடுத்து அவளை அடிக்காமல் காப்பாற்றி மறுத்தார் என்பதற்காகவே அவரைத் துக்கி எறிந்தா ஏகாப்ஜனா மெதுவாய் புழுதியை தட்டிவிட்டு எழுந்து வந்து பொம்பளையெ அடிக்கிற பேடிப்பயலா நீ? மலக்கம்பம் பைல்வான் பரம்பரை இல்லியா நீ? என்று கேட்டபோது வியந்து போனான் ஏகாப்ஜனா. அவன் தோளில் கை போட்டபடியே "நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் இந்த சாமி, பூதம் செலையெல்லாம் செய்கிற ஆசாரி. இப்ப எனக்கு ஒன் பொண்டாட்டியோட மாதிரி வேணும். அதாம்ப்பா மாடல். நான் செல செய்யிறதுக்கு நின்னு ஒரு நாலுமணி நேரம்





________________

பூகோஸ் 197

காட்டுனா போதும். தினம் நாலுமணி நேரம்தான் வாரத்துக்கு ஐநூறு அறுநூறு ரூபாய் தருவேன் நீயும் வந்து கூடவே இருக்கலாம். பயமில்லெ நானு ஓங்க மராட்டி அரமணைலதான் ராஜாவூட்டுக்கு பக்கத்ல தான் தங்கியிருக்கேன் இந்தா' என்று (ஆயிரம் ரூபாய்) நோட்டுச் சுருள்கள் நூறு ரூபாய் தாள்கள்) ஏகாப்ஜனா கையில் கொடுத்ததிலிருந்து ஏகாப்ஜனா மடங்கிப் போனான். அடங்கியும் போனான்.

மீராவுக்கு வியர்த்து வடிந்தது. பழசெல்லாம் மறந்தது. வித்யாசாகர் அறு பது வயதுக்காரர் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. என்ன பார்வை அப்பப்பா அவர் கண்களைப் பார்க்கவே மாட்டாள். ரெண்டு வாரமாய் அவள் பாடுபட்டு வெட்கத்தில் சிவந்து வெறுத்துப் போவாள். ஒடுங்கிய மருந்துக் கடைச் சந்துக்கு வெகுநேரம் கழித்து பின்னிரவில் திரும்பும்போது மராட்டிய மொழியில் ஏகாப்ஜனாவிடம் தன்னால் இனிமேல் ஓவிய சிற்பத்துக்கு மாட லாய் உட்கார முடியாது என்பாள், ஏகாப்ஜனா நன்றாய் சாராய வெடுப்பில் இருப்பான். ஏன் வித்யாசாகரிடம் போக மாட்டாள் என்று கேட்பான் ஏகாப் ஜனா: "ஆமா அவருகிட்ட ஒக்கார முடியாது" என்பாள் மீரா "ஏன் என்ன செய்கிறான் அந்தக் கிழவன்?" என்பான் ஏகாப்ஜனா, "ஒன்னும் செய்யல்லெ ஆனா என்னமோ அந்தாளுக்கு முன்னாலெ ஒக்கார முடியலெ - மானம்போ வது" என்பாள் கண்ணிருடன் ஏகாப்ஜனா ஆத்திரம் பொங்க "ஏதாவது செஞ் சான்னு சொல்லு? நீய்யி குளிச்சியா' என்று கத்துவான். "ஐயோ பாவம்' அவரு மேலே தப்பே இல்லெ' என்பாள் பரிதாபமாய் மருந்துக் கடை குறுக் கத்தில் பைப்படியைத் தாண்டும்போது ஓங்கி மீராவின் முதுகில் ஓர் அறை வைத்து கதவுப் பூட்டைத் திறந்து அவளை உதைத்து உள்ளே தள்ளி கதவைச் சாத்துவான். 'ச்சீ நீ ஒரு மனுஷனாட்டம் என்று சீறியபடியே உள்ளே போய் விழுவாள் மீரா மீராவின் இந்த வலம் எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு அவளை அந்த சோக மூர்ச்சனைகளை எல்லாம் ஓவியங்களாய் வரைந்து வரும் வித்யாசாகரை அவளால் ஒதுக்க முடியவில்லை. விரலால் கூட தொடாத அவளது உள் உறுப்பு அங்கங்கள் யாவும் உறிஞ்சி வரைந்தெடுத்து விடுகிறார் வித்தியாசாகர்.

ஆரம்ப நாட்களில் ஏறத்தாழ அவர் முன்னால் நிர்வாணப்படுவதுபோல் சொல்லொண்ணா கஷ்ட்டம் தோன்றியது. தினமும் அவள் இல்லாத வேளைக ளில் இரவு முழுவதும்கூட விழித்திருந்து புதிய கோணத்தில் அவளை தினமும் ஒரு ஓவியம் தீட்டி எடுத்திருப்பார் வித்தியாசாகர் தினமும் காலை ஏழுரை மணிக்கெல்லாம் மீரா அங்கே போயாக வேண்டும் என ஆயிற்று. கணவனுடன் வந்தாலும் அவன் அருகில் இருக்கமாட்டான், வெளி வராந்தாவிலோ சாராயக் கடைக்கோ போய் உழண்டு கழண்டு வருவான். வித்தியாசாகர் அரமனை ஆத ரவில் இருந்ததால் அந்தப் பழைய கட்டிடத்தை அவருக்கு விட்டிருந்தார்கள். அதிகம் பேசமாட்டான் பாவி கண்கள் அவளை அப்படியே அள்ளி விழுங்கும் உணர்ச்சி மயமான கண்கள். காலைப் பனிமூட்டம் விலகும் முன்பே ஏகாப்ஜ னாவும் மீராவும் புறப்படுவார்கள். முதலில் பயமாய்த்தான் இருந்தது. படிப்ப டியாய் பயம் போய் இனம் புரியாத கலவரம் மீண்டும் நெஞ்சில் உருண்டது.





________________

198 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

உள்ளே கொண்டு வந்துவிடும் ஏகாப்ஜனா உடனேயே புறப்பட்டுப் போகத் தொடங்கும்போதெல்லாம் "இஞ்சயே இருங்க பாவா போக வேண் டாம் போகாதிங்க' என்று மராத்தியில் கெஞ்சுவாள். மராத்தியிலேயே அசிங் கமான கெட்ட வார்த்தைகளைக் கொட்டி திட்டுவான் ஏகாப்ஜனா. வாரத்துக்கு எழுநூறு ரூபாயில்ல குடுக்றான் கெழவன். சும்மா இருடி ஒண்ணும் துக்கி முழுங்கிட மாட்டான். ஒண்ணும் முடியாது அவனால' என்று கூச்சல் போட்ட படியே படியிறங்கிப் போய்விடுவான் ஏகாப்ஜனா படப்படப்போடு கண்ணி ரோடு வழியில்லாது அப்படியே நிற்கும் அவள் காதருகே குனிந்து வித்தியா சாகர் அவளை நெருங்கி

"ஏன் மீரா என்னெப் பார்த்தா பயம்மா இருக்கா? ம்? தோ இந்த வானத்தை பாரு இன்னைக்கு மழ ஜோவுன்னு கொட்டப் போவுது பறவை யெல்லாம் திசைமாறி கொக்கு எல்லாம் வேகவேகமாக காலையிலியே திரும்பி பறந்துகிட்டு இருக்குல்ல பாத்தியா?" என்று கூறிய படியே அவளது முக்காட் டுக் கும்டாவை உருவி எடுக்கும் அவரது தைர்யத்தை அவரது துணிச்சலை மறுக்காது பயத்திலிருந்து எழும்பியதல்ல அது என்பது புரியுமுன் அவளது மேலாடையையும் அவரே லேசாக விலக்கி நிஜமாக்கும் வித்தை ஆச்சர்யமாய் இருக்கும். போதும் போதும் என்று அவள் அரற்றுவதைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பாதம் வரை தொட்டு அவர் விரும்புகிற நிலையில் உட்கார வைத்து லேசான அலங்காரமும் கவலைப்படாமல் செய்யும்போது கண்களில் நீர் முட்டும்.

கைக்குட்டையால் கண்களை அவரே துடைத்து ஒற்றியபடி "ச்சீ அழக்கூ டாது நீ பரமேச்வரி அம்மன் அழுவுமா? நான் என்ன செஞ்சுடுவேனாம்? உன் னோட பரிசுத்தம் தான் என்னோட சிலையும் கலையுமாக போவது உன்னெ என்னமோ பண்ணிப்புடுவேன்னு பயப்படாதே பயம் ஒண்ணுமேயில்லெ. உன்னோட ஒடம்புதான் பெரிய்ய கலை அழகு ஆச்சர்யம். இந்த அழகெ யாருமே பார்க்க மாட்டாங்க ஆனா நான்தான் இதை கண்டு பிடிச்சேன். உன் னோட இந்த சுகமான துய்மைதான் இந்த அழகு, கலை, ஆச்சரியம். இதையும் யாருக்கும் புடிக்காது. இதுல இருந்து என்ன புழிஞ்சு எடுக்க முடியும்? இதெ வித்தா என்ன வெலைக்கி வாங்கலாம்னு என்னையும் ஒன்னையும் கசக்கி எடுக் கத்துக்குத்தான் எல்லோரும் அலைவாங்க. இதெல்லாம் உன்னைத் தாண்டாது நீ அப்படியே இரு உன்னை உனக்கே தருவேன்? புரியாது புரிய வெய்கவும் முடியாது உன்னெ வெறும் பொண்ணா ஏகாப்ஜனா கட்டிகிட்டான். எல்லோ ரும் உன்னெ கும்புட்டு வழப் போறாங்க பாரேன்'

இன்னது என்று சொல்லத் தெரியாத பரவசம் மீராவின் உடம்பில் பரவியது. அவள் கண்களில் தெரிந்தபோது அவளது உள் ஆடை இறுக்கத்தை ரவிக்கை முடிச்சுகளை அவரே அவிழ்த்து தளர்த்தியபோது வெட்கத்தால் வெகுண்டு போனாளேயொழிய விலக்கவோ விலகவோ தெரியாது அவரையே பார்த் தாள். தழுதழுத்த குரலில் முதன் முறையாக வித்யாசாகரின் முன் துணிந்து

அவர் கால்களைக் கட்டிக் கொண்டு 'வேண்டாங்க வாண்டாங்க வாண்





________________

பூகோஸ் 199

டாங்க" என்றாள். அவள் துடைகளைப் பிடித்து நகர்த்தி கால்களை அழகாக துக்கி ஒரு மனைமேல் வைத்தபடி "என்னமா மீரா? எது வாண்டாம்? இப்போ நான் ஒன்னை என்ன செஞ்சேனாம்? எதுக்கு இப்படி நடுங்கி நீய்யி? உன் னோட ஒடம்பு ஒன்னோடது தான். இல்லென்னா ஏகாப்ஜனாவோடதுதான். நான் அது தெரிஞ்சுதான் இப்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன். இது நீ சொல்றது தான் விரசம் நம்ப பொண்ணுகளே இப்டி முட்டாள்தனமாத்தான் ஏமாந்து போகுது ஒன்னெ ஒன்னோட விருப்பம் இல்லாமெ எவனும் என்னவும் பண் ணிடமுடியாது ஒன்னோட புருஷன் ஏகாப்ஜனா கூட ஆம்மா அப்டி நீ சுதந் திரமா இருக்கணும். இது என்ன வெறும் சதை பிடிச்சு தொங்கலாம். உனக்கு சந்தோஷம் வருமா? நீ யாரு கூடயும் அசிங்கம் பண்ணிக்குவியா? மாட்டெ அப்ப ஏன் பயம்? நான் ஒரு சிற்பாசாரி ஒன்னோட அற்புதமான ஆச்சர்யமான அழகெ அநுபவிச்சு ரசிச்சவன் ஆமா ஒன்னோட ஒடம்பெ படைச்சவனைப் போல.. ஒங்க அம்மா பெத்தப்ப பட்ட வலியெல்லாம் நானும் பட்டு உன்னெ ரஸிச்சு அநுபவிச்சு படைச்சுகிட்டு இருக்கவம்மா பயப்புடாதெ கேவலம் ஒடம்பு ஒடம்போட ஒராசி ஒராசி சந்தோஷப்பட்ற லெக்ஸ்க்கே மனசு கார ணமா இருக்குன்னா மனஸ்லம் மனஸ்லம் ஒட்டித்தட்டி உடைச்சு கலக்காமெ உன்னெ நான் எடுத்துக்க முடியுமா? புரியுதா ஒனக்கு உன்னெ கசக்கி ஏறி மிரு கம் பண்ணமாட்டே பா...' 'பாவி அப்ப ஏன் துணியெல்லாம் எடுத்துட்டு இப்டி அரை முண்டமா ஆக்கிப் பாக்கிறீங்க?" - "உன்னோட ஆச்சர்யமான மனசு உனக்கும் தெரியல்லெ உன் புருஷன்காரனுக்குமே தெரியலை

அந்நியன் தொட்டாலே சம்மதிக்காத ஒன்னோட அற்புதமான மனசு அவ னுக்கு கொடுத்தும் கூட அவனுக்கு தெரியல்லெ. நான் தொட்டாலே அவதிப் படுற ஒன்னோட மனசு பயப்படுது ஏகாப்ஜனா உன்னெ தெரிஞ்சுக்காத மாதிரி நீயும் உன்னெ தெரிஞ்சுக்கல்லெ' என்று சிரித்தார் வித்யாசாகர். பேச்சிடையில் தன்னை மறந்து அவர் போட்ட பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மீரா அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முதல் வகுப்பு கூடப் போகாத மாணவி பட்டப்படிப்புப் பாடங்களும் புரிந்து போவதான அதிசயம் போல அவருடன் இணங்கி மனசு மகிழ்ச்சியில் ஆழ்ந்து தவித்தது. நாணம் படரப்படர அவள் அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள். 'எனக்கு உங்க முன்னால இப்படி இருக்க முடியாது. என்னெ படமெல்லாம் வரையாதிங்க வேணும்ன்னா வேற என்னமும் பண்ணுங்க. என்ன படம் வரயாத்ங்க' என்று கண்ணிர் உகுத்தாள். அப்படியே அவளை விட்டு விட்டு "இப்படியே இரு மீரா ரெண்டு ஸ்கெச் எடுத்துடுவேன்' என்றபடி கரித்துண்டு கூர் முனையால கெட்டிக் காகிதத்தில் நீளநீளமான கோடுகளால் அவளை கீறக்கீற அவர் உடல் சிலிர்த்தது அவளுக்கு ஆச்சர்யமாய்ப் புரிந்தது. சிவப்பு சிமிட்டிப் பால் ஊற்றி சலவைக்கல் போல் பளபளப்பாகத் தேய்த்தக் கண்ணாடி போல் வழவழத்த அந்தத் தரையில் சுருண்டு அமர்ந்திருந்த அந்தப் பேரழகு அப்படியே பலப்பல ஸ்கெட்சுகளாய் வித்யாசாகர் கீறிக்கிறித் தள்ளினார். அவர் விரல்கள் ஸ்கெட்ச்சை வரையும் போதெல்லாம் சுரதம் கனிந்தது அவளுக்கு மீரா தன்னை இழக்க ஆரம்பித்தாள்.





________________

200 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"...ஆமா ஏகாப்ஜனா ஒன்னை டாக்டர் கிட்ட எப்பவாவுது கூட்டிகிட்டுப் போயிருக்கானா?" என்று கேட்டபோது, மீண்டும் வெட்க முற்றாள் மீரா, தினமும் அந்த மருந்துக் கடைச் சந்தின் மூலையில் ஈரநைப்பான அந்த இருண்ட மராட்டியப் பழம் வீட்டின் உள்ளறைக்குள் அவளைத் தினமும் ஏகாப் ஜனா மல்க்கம்பத்தில் ஏற்றும் கோரம் நினைவு வந்து இம்சித்தது. முகம் வாடி யது அவளுக்கு

"ஏம்மா? என்ன ஆச்சு? முகம், வாடுதே இப்டி? ம்? ஏகாப்ஜனா சந்தோ ஷமா வெச்சுக்கிறானா?"

"-" - முகத்தைக் கவிழ்த்துக் கொண்ட அவளது அந்த நிலையும் விடாமல் ஸ்கெட்ச் செய்து கொண்டார் வித்யாசாகர் அவள் பயமும் வெட்கமும் கூட பதி வாகிறது. "ஏகாப்ஜனா உன்னை வுடமாட்டான் நீ கவலைப்பட வேண்டியதே யில்லை. அத்தனை ஆசை அவனுக்கு' என்றார் வித்யாசாகர் தங்கச்சிலை போல் அவளும் பரமேச்வரியான மீராவும் ஒன்றிய காட்சி அவளுக்கு மட்டும் புரிந்தது. மறுபடியும் வந்து அவளைத் திசைமாற்றி நிறுத்தியபோது அவள் திரை அறுந்துபோனது அவளுக்கே தெரிந்தது.

“மீரா மல்கம்பம் பாத்திருக்கியா? விளக்கெண்ணையும் கெட்டியாள வழு வழுப்பான கிரீஸும் பூசி வெச்ச தூண் வானம் முட்ட ஒயரமான வழுப்பான சலவைக் கல் மாதிரி நிக்குமே?!"

மீரா நிமிந்து அவரைப் பார்க்கவில்லை. குனிந்தபடியே மெல்லிய குரலில் சொன்னாள் "இனிமே என்னால இங்கே வரமுடியாது வரமாட்டேன்'

"மல்க்கம்பத்தெப் பத்தில பேசினீங்க போல இருக்கு எங்க மல்கம்பம் எப்ப மல்க்கம்பம்?"

யாருடைய பதில் பற்றியும் கவலைப்படாமல் உள்ளே வந்தான் ஏகாப் ஜனா? அவன் பேசியது இருவருக்குமே புரிய ஞாயமில்லை. ஏகாப்ஜனா அவ ளையே பார்த்துக் கொண்டு நின்றான். நன்றாக குடித்துவிட்டு வந்திருந்தான். அவள் அருகே போய் 'போலாமாடி!' என்று கேட்ட போதுதான் மீரா மண்ணு லகம் வந்தாள். ஒரு கணம் அவன் வராமல் ஒரு கணம் கடந்திருந்தால் வித்யா சாகருடைய மார்பில் இறுகத் தழுவிக் கொண்டு கதறியிருப்பாள். இப்போது உள்ளே அடக்கவும் மூடவும் மறைக்கவுமாய் பாடுபட்டாள்.

வித்யாசாகர் ஏகாப்ஜனாவைப் பார்த்து 'மீரா அற்புதமான பொண்ணு - பொண்ணே இல்லெ! அத்தனை அம்சமும் உள்ள தெய்வம் இந்த மண்ணுல கிடைக்காத அம்மன் பராசத்தி' என்றார் பரவசத்தோடு.

ஹெஹ், ஹெஹ் ஹெஹ் ஹேய்ன்னானாம் மட்டக்குதிரை மாதிரி கனைத் தான் ஏகாப். கவலைப் படவேயில்லை. வித்யாசாகர் "சிரிக்காதே, உனக்கு அவ பொண்டாட்டி அவளெ உனக்கு தெரியாது அவ்வளவுதான். வேற யாருக்கும் கூட புரியாது. தெய்வம்ன்னா என்னாங்கற? மனுவிதான் தெய்வம் மனுவி யிலயே ஒஸ்தியான் மனுவியதான் தெய்வம் தெய்வம்ன்னாதான் என்ன? ஒஸ்த்தியான தெய்வம்தான் மனுஷனா மனுவியா வர முடியும் உங்களுக்கு





________________

பூகோஸ் 201

புரியாது.டா, ஆனா மீராவ பத்திரமா வெச்சுக்கோ வுட்டுடாதே பசிக்கும் பட்டினிக்குமா பறக்கவுடாதே தெருவுல கட்டி இழுக்காதெ ஜாக்கரதை' உன்னெ கம்மா வுடமாட்டேன்!"

"ஏஞ்சார் பணந்தாரேன், படம் வரயனும் உம் பொண்டாட்டிய மாதிரியா வெச்சுதாம் படம் எழுத முடியும்ன்னிங்க. இப்ப என்னாமோ சொல்றீங்க? இவளெ நான் வெச்சு வடிக்கிறதுக்கே இவப் பூ போட்டுக் கும்புடனு ஐநூறு ரூபா வாங்கிட்டு தான் கட்டிக்கிட்டேன். இவள அடிப்பேன் மிதிப்பேன் உதைப்பேன். எவனாவது தடுத்தா அவனையும் மிதிப்பேன்! ஹெ! நீங்க பாவம் ஒண்ணும் தெரியாது. பொம்பளெ நம்பளுக்கு சொந்தன்னு பூப்போட் டுக்கும்படமுடியுமாங்க இவளெ இன்னும் ஒரு வாரம் படத்தெ வரஞ்சு முடிச் சு நீங்க சொன்னமாதிரி செலயும் செதுக்கி எடுத்திட்டிங்கன்னா எனக்கு ஒரு நாலாயிரம் ரூபா கிடைக்கும். இவளுக்கு இத்தனை ரூபா கிடைக்கும்?! இவளை எனக்கு வுட முடியாது! கோலாப்பூர்ல போய் ஒரு மிட்டாய் கடைபோட்டா யாபாரம் நல்ல நடக்கும். கும்புட்டு வுளுந்தா காரியம் ஆவுமா? வேண்ணா இவளெ வச்சுக்குங்க பணந்தானே? இவளுக்கு வேற எவன் பணம் தருவான்? இவுங்க அப்பனே தள்ளிவுட்றதுக்குத்தான் வரதட்சணைன்னு ஐநூறு ரூபாய் கொடுத்தான் வேற என்ன? கும்புடவெல்லாம் முடியாது" என்று கேலியாய்ச் சிரித்தான்.

மீரா மெல்ல எழுந்து மூடிக் கொண்டு முட்டாக்கு துணியால் மூடியபோது சிரித்தான் ஏகாப்ஜனா மணி நிறையத்தான் ஆகியிருந்தது. இனி இவனுடன் முக்க முக்க முழுக வேண்டும். வித்யாசாகரை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் இனியும் வித்தியாசாகரைக் காத்து எதிர்பார்த்தாள் என்பது அவருக்குத் தெரிந் தது. ஏகாப்ஜனாவுக்குத் தெரியவில்லை அது என்றாலும் "வர்றேங்க நாளை காலையில ஏழு மணிக்கே கொண்ணாந்து வுட்டுருவேன்' என்றபடியே மீரா வின் முன் கையில் பற்றி இழுத்துக் கொண்டு போனான். வாயில் வரைக்கும் இழுபட போகும் அவளைப் பச்சாதாபத்துடன் பார்த்த வித்யாசாகருக்கும் அவளை விடுதலை செய்ய வேண்டுமென்று தோன்றத்தான் இல்லை. யாருக்கு யார் யார் விடுதலை தரக்கூடும்? சுதந்திரம் விடுதலை போன்ற வார்த்தைகளை நம்புகிறவர் வித்தியாசாகர் அல்ல. மீரா மட்டுமா அடிமைச்சுகத்தில் இருக்கி றாள்? அவளை மீட்டெடுக்க முடியுமா? தன்னை மீட்டெடுக்கவே தவித்துக் கொண்டிருப்பவர் வித்யாசாகர் அவளை விடமாட்டான் ஏகாப்ஜனா? அவன் உறிஞ்சி எறியத்தான் அவள். அவன் தானும் மீதியாகி என்னவாகி எஞ்சப் போகிறான்?

அதன் பின்பு வினோதம் ஏழு மணி விடியலில் ஏகாப்ஜனா அவளைக் கொண்டு வந்து சேர்த்தான். அறுந்து விழுந்த திரைகளின் பின்னிருந்து பாய்ந்து வந்த மான்போல் தாவினாள் மீரா கண்கள் அவருக்காகவே விரிந்தன. ஒவி யங்களைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனாள் மீரா ஏகாப்ஜனா அவளை விட்டு விலகியதும் தாவிப் பாயும் மானை தாங்கத்தான் விலகி விலகி வடித் தார் வித்தியாசாகர் சிற்பத்துக்கான தயார் எடுப்பில் அவளைக் காத்து காத்து





________________

202 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

நின்று முன்பு ஒத்துழைக்காது கண்ணிரும் கம்பலையுமாய் நின்றவளா இந்த மீரா? திரைகள் அறுந்து விழவிழ நெய் போல வந்து வித்யாசாகரின் மார்பில் படிந்த இந்த பெண் மீரா அல்ல-புயல்

தனிமை கொண்டதும் வித்யாசாகர் அவளை எழுப்பினார். "வாண்டாம்மா பொண்ணே நான் கிழவன் இதெல்லாம் உதவாது. நான் செய்யிற வேலை கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவும். ஏகாப்ஜனா செத்துப் போவான். அவன் திரும்பி கோலாப்பூர் போகும்போது உன்னெ கொண்டு போகாம வுடுவானா? வாண்டாம். ரெண்டு நாள்ள அலுத்துப் போவும். ஸெக்ஸ்ங்கிறது இனிமேயா? பொண்ணுங்கிறது எனக்கு ராசியே இல்லெ வாண்டாம்.'

"நாம் போக மாட்டேங்க ஆமா" "ஏன்னது போக மாட்டியா? என்ன எழவு இது? ஏகாப் வுடுவானா? கொன்னுடுவான்." -

"கொல்லட்டும், அந்த மிருகத்தோட புரள இனிமே முடியாது மாட்டேன்." "மாட்டியா? அப்ப என்ன ஆவும் பாரு மீரா, உன்னெ வெச்சுகிட்டு நானு என்ன பண்ண? பாவம் ஏகாப் அவ்வளவுதானா?"

லேசாக சிரித்தபடி அவரையே பார்த்த பார்வை அவரை நுழைத்து அறுத் தது பார்ப்பவள் மீரா அல்ல லோகத்தின் ஈச்வரி சாயாத பொற்குடங்களும், மேடான தொப்புள் வட்டமும் நித சுடரச் சிற்றிடையும் சீரான துடைகளும் இருண்ட முக்கோணமுமாகிச் சிரிக்கும் தலைவி? லோகேச்வரி குருடாக்கும் ஒளியைப் பார்ப்பது போல மூர்த்தி சிறிதாகிப் போனார் வித்யாசாகர்.

இருண்ட வானத்தில் இருவரும் ஆகிபறந்து விடிந்தனர். மூலை முக்கோ ணத்தில் ஈஸ்வரியின் ஆழத்தை சுட்டும் சுடர் அவருக்குள் எழுந்தது. அதற்கு முன்பாகவே அவரைக் கட்டிக் கொண்டு இறுகினாள் மீரா முரட்டுத்தனமான நட்சத்திரங்கள் அவர் கண்களுக்குள் வெடித்தன. வித்யாசாகரின் ஒளி அகண்டு அவளை அள்ளிக் கொண்டது. ஒளி வெள்ளத்தில் சிதைந்து அவருடன் பிணைந்த அந்தப் பெண் ஈச்வரி அல்லாமல் வேறு யார் நரைத்த மார்பின் முடி களுக்குள் முலைகள் இரண்டு புதைந்து இறுகிச் சிதைந்து போனது. வித்யாசா கரின் கரங்களில் தேவி ஈச்வரியின் முழுச்சிற்பமும் மீண்டும் மீண்டும் செதுக் குண்டு ஆழ்ந்து அனல் சூளையில் வெந்து மலர்ந்தது. வித்யாசாகரின் வேதனை அவளெ எட்டவேயில்லை.

பெரியதொரு பூ அவரை அவளது அல்குல்லுக்குள் புகவிடாது மோதி எதிர்த்தது. இரண்டாம் முறையும் பூ எதிர்த்து மறைத்தது. ரத்த நாளங்கள் விம்மி விம்மி புடைத்தன. உடலை வாட்டி இறுக்கி நியமங்களை அலட்சியப் படுத்தி இஷ்டம் போல் அநுபவித்த உடல் அல்லவா வித்யாசாகரின் உட்ல் ஆயினும் சதை சதையாய்ப் பிளந்து மீராவின் உள்ளே குறியாகிப் புகுந்து மோதினார். அவள் அண்ட சராசரங்களும் உதிரக் கசங்கி வியர்த்து அழலானாள் மீரா. காட்டு மான்போல் அவர் மீதேறி பாய்ந்த அவள் சுகத்தை வாரி வாரி வழங்கி





________________

பூகோஸ் 203

யும் அவளது ஆழ்ந்த மலருக்குள் அவரால் கலந்து நுழைய முடியவில்லை என் பது கோரமாய் எதிர் கொண்டது. வித்யாசாகருக்கு ஒன்று புரிந்தது. இது இவ் வளவுதான் என்பதுதான். அது தொடர்ந்து விடாமல் முனைந்து முனைந்து பார்த்தார். அவருக்கு தடை முதுமையில்லை. ஆயினும் ஏதோ குறுக்கில் வளர்ந் திருக்கிறது என்பது நிச்சயமாய் தெரிந்தது. அதுவும் கதையாய் எதிர்த்தது மோத லுக்கு விரிவதாய் தெரியவில்லை. மீராவின் துணிச்சலும் அவள் உடம்பின் முழு வலுவும் வெளிப்பட்ட நேரம் இது ஆனாலும் கூட அவரது மனம் எங்கோ வாலடித்துப் பறந்தது.

மீராவிடவேயில்லை. அவரைத் தழுவி இயக்கினாள். அவருக்கு தெரியாத வித்தைகளையெல்லாம் வித்யாசாகருக்குச் சொல்லிக் கொடுத்து வழங்கிய விசித்திரம் அவருக்கே நம்ப முடியவில்லை. அவளது உயர் நிலைக்குறிக்குள் பூத்த அந்த பூவை வித்தியாசகரின் ராட்சதக் கலவியில்தான் உணர்ந்தாள். அவர் வழுவிப் பிரிய முயன்றபோது மீரா வித்யாசாகரை முறுக்கித் தழுவி தழுவி பாய்ந்து. வியர்வை ரத்தமாய் வடிய வடியப் பாய்ந்து மோதி மோதி.

வித்யாசாகர் வெகு நேரம் அவளை மிருகம்போல் இணக்கி மடக்கி முழு வதுமாய் வீழ்த்த வெகு பாடுபட்டார். இப்போது கோஸ் பூமிருதுவாகி உணர்ச் சியில் ஆழ்ந்து மிருதுவாகியது என்பது அவருக்குப் புரிந்தது. மறுபடியும் முனைந்தபோது கண்ணிர் மீரா ஈச்வரியாய் உலகின் கொடுமுடிகளில் மேலே பறந்தாள். திகிலான சந்தோஷமும் அதிர்ச்சியான பயமும் கொடுரமான திருப் தியும் ஏற்பட்டது. ரத்தம் கசிவதும் புரிந்தது அவளுக்கு மறுபடியும் மறுபடியும் அவர் மேல் புரண்டு கசங்கித்தான் எட்டினாள் மீரா வித்யாசாகரின் மூச்சு முட் டியது. வியர்வை ஆறாக புரண்டது. ரத்தமாக

அதே இரவில் - அன்று அவனுக்கு மறுத்து மறுத்து வித்யாசாகருக்குத் தந்த இது கோஸ் பூவாய் முன் தள்ளி வருவதன் விபரீதம் அவளுக்குத் தெரியாம லேதான் பிளந்தது. கால்களின் நடுவில் அல்குலின் ஆழத்தில் ஏதோ நெருடு வது புரிந்தது. ஏகாப்ஜனா நன்றாக குடித்து வெறித்திருந்தான். மீராவுக்குப் பய மும் கலவரமும் இன்னதென்றறியாத அசிங்கமான கோரமான கடந்த காலம் எல்லாம் எட்டாத ஒரு இருண்ட துக்கத்துக்குத் தயாராக நின்றாள். அவளது மென்மையும் தெய்வீக நுணுக்கமான பேரழகும் அர்த்தமற்றுப் போய்விட்டது. ஏகாப்ஜனா அவளை நிர்வாணமாக ஆக்கியபோது அவள் சங்கிலியில் கட் டுண்டு பொருந்தினான். அவளது மார்பகங்களின் வளைந்த எட்டாத பேரழகு ஏகாப்ஜானாவின் முரட்டு புனையலில் விரசமாகி விழுந்தது மாட்டேன் என்று மறுத்து உதறியும் ஏகாப்ஜனா விடவில்லை கோஸ்பூ எதிர்த்தது. ஏகாப்ஜனா விபரீதமான ஏமாற்றத்துடன் முறுக்கி வெறியுடன் மீராவின் அல்குலின் ஆழத் தில் புதைக்க பதிந்து பொருகினாள்.

வெகுநேரம் மிருகங்கள் முரண்டு பொருகின. இவனது அருவெறுப்பும் அவளின் அருவெறுப்பும் கோரமாய் மோதின. அவனைவிட பலம் மிக்க இளமை அவளுடையது. முண்டி முண்டிப் பார்த்தும் கோஸ் பூ வழி மறித்தது. கையாலாகாத வெறுமையில் எழுந்து அவளைப் போய் அறைய ஆரம்பித்





________________

204 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

தான். ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமல் அவளை அடித்து நொறுக்கினான். வித்யாசாகரின் நினைவோடு மிதிகளையும் அடிகளையும் கடுமையாக வாங் கிக் கொண்டு கிடந்தாள் மீரா அவள் பழகியது அப்படித்தான். கோஸ் பூவின் ஸ்பர்ஸ்த்தை விரல்களால் தடவியபடியே விரல்களை மீண்டும் மீண்டும் உட் செலுத்திப் பார்த்தாள். நாலே நாட்களில் கோஸ்பூ முட்டிக் கொண்டு வந்து அடைத்துவிட்டது என்பதே அவளுக்கே விபரீத கோரமாய் புரிந்தது. ஏகாப் ஜனா அவள் சொன்னதையும் கேட்காமல் காலை விரித்துப் பார்த்தபோது அவ னுக்கும் புரியத்தானில்லை. உள்ளே ஆழத்தில் கை விரல்களோடு விரிந்து வரும் பூ கோஸ் போன்ற ஏதோ ஒரு சதை வெண்படலம் அங்கு முழுமையு டன் வியாபிக்கிற வெறியோடு முளைத்திருந்தது. மறுபடி மறுபடி விலக்கிப் பார்த்துவிட்டு அவளை நோக்கி, "என்னடியிது? ஹ? நேத்து முந்தாநாள் எல் லாம் ஒண்ணுமில்லெ இப்பமட்டும் எப்படியிது? ஹ?" என்று மராத்தியில் கத் தியபடியே காலைத் தூக்கி கோஸ் பூவை மிதித்தான்.

ஆ வென்று அலறினாள் மீரா. மீண்டும் மீண்டுமாய் மயிரைப் பிடித்து நாலைந்து அறைகளை அறைந்து வாயில் ரத்தம் வடிய விட்டு உருட்டிவிட்டு ஏகாப்ஜனா கதவைத் திறந்து கொண்டு சாராயக் கடைக்கு நடந்தான்.

அடுத்த மூன்று நாட்களும் உடம்பின் எல்லா உபாதைகளையும் அநுபவிக்க வேண்டி வந்தது மீராவுக்கு இருண்ட பாதையில் ஒடிக் கொண்டே இருக்க முடி யுமா?

விடியற்காலை எழுந்து தனியாகவே வித்யாசாகரைப் பார்க்கப் போனாள் மீரா காலையில் நீண்ட ஜிப்பாவுடன் கையில் நியூஸ் பேப்பருடன் அரண்மனை சிவகங்கை தோட்டத்தின் வெளியே நின்ற அவரைப் பார்த்ததும் தாங்க முடிய வில்லை. சுற்றிலும் மறந்து மறைத்தது. யாரைப் பற்றியும் கவலைப்படாது கண் ணிர் சிதற ஓடிப்போய் வெட்கம் இழந்து அங்கேயே வித்யாசாகரை கட்டித் தழுவி கொண்டு தொங்கினாள். அவரது கரங்களும் மூன்று நாட்களும் இதற் காகவே காத்திருந்த பசித் தீயுடன் அணைத்து இறுகத் தழுவிக் கொண்டன. சுற் றும் முற்றும் இருவரும் பார்த்து பார்த்தபடியே முத்தம் உறிஞ்சினார்கள். அவளது தாபம் தணியவேயில்லை. வித்யாசாகருடன் வெறியுடன் கழுத்தை சுற்றி இறுகிக் கொண்டாள். முலைகள் இரண்டும்கூட இடைஞ்சலாய் எதிர்த்தன. அவைகளின் தீ அவரது கைகளுள் பொதிந்து கொண்டது. உடம்பு வழியே அவர் மனசுக்குள் சித்தம் ஏறுகின்ற விந்தை அவளுக்கும் நேர்ந்தது. பிதுங்கிய அவளைப் பரிவுடனும் உடம்பு கொள்ளா அன்புடனும் முத்தமிட்டு, "என்ன ஆச்சு? என்ன ஆச்சுடி மீரா?" என்று அவளது காதுக்குள் முணகியபடி நின்றார். மனசின் முண்டல்களும் மோதல்களும் இன்னொரு மனசின் இணக்கத்தில் தாங்கி தாங்கி கலப்பது புரிந்தது. பெருமூச்சுகளுடன் ரெண்டு பேரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள் ஆளர்வற்ற மெளனம் இன்னும் அவளை அவரை விட்டு பிரிக்கவில்லை. பிடுங்கித்தான் பிரிக்க வேண்டி வந்தது வித்யாசாகருக்கு அப் படியே அழலானாள் மீரா.





________________

பூகோஸ் 205

பெரிய ஆலமரங்கள் கிளிகளின் கீச்சொலிகளின் துரத்தல்கள் விரசமான இந்த அணைப்பும் முனகலும் அவர்கள் இருவருக்குமே போதுவதாய் இல்லை. ஆனால் வித்யாசாகர் கேட்டார் பறவைகளின் கூச்சலும் உறைத்தன. "ஆமா என்ன ஆச்சு? டாக்டர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனானா ஏகாப் ஜனா'

"நான் அந்தாளோட எஞ்சயும் போகமாட்டேன்' "உங்கம்மா அப்பாகிட்டயாவது போயேன். இவன் கொல்றதுக்கு மிந்தி!" 'கொல்லட்டுங்க கொல்லட்டும் உங்க காலடில்ல சாவேன்ல? ஆமா!' "ச்சீ நான் இனிமே இங்க இருக்கப் போறிதில்லை! சிலை கண் திறந்து வுட் டுட்டா வேலை தீர்ந்தது எங்கிட்ட இருக்க பணமெல்லாம் ஒங்க ரெண்டு பேருக்குத்தான். பம்பாய்க்கு போய் பொழைச்சுக்குங்க. முரடன்தான் ஆனா ஏகாப்ஜனா நல்ல ஆம்பளை உனக்கு புடிக்காத வாழ்க்கைதான். என் வாழ்க்கை எனக்கும் தான் பிடிக்கவில்லை. யாருடைய வாழ்க்கைதான் திருப்தியா எல்லோ ருக்குமே புடிச்சவாழ்க்கையா இருக்கு? நானும் என்னோட வீடு வாசல் குடும் பம் மனைவி பொண்டாட்டி எல்லாத்தியும் வாரித் துத்திபுட்டு மண்ணுல எறங்கி நடந்தவன்தான். டாக்டர்கிட்ட போயி புள்ளெ இல்லியே இது ஏன் இப் படி இருக்கு? அப்படின்னு ஒடம்பெக் காட்டி சரி பண்ணிகிட்டின்னா போதும். நானு இப்புடி தெருவோரமாதிரிஞ்சிகிட்டே போயிடுவேன். இன்னும் ரொம்ப நாளு இல்லடி மீரா ஒன்னெ மறக்க மாட்டேன் போய் சேந்துடுவேன் கெழவன வுட்டுட்டு போயிதொலை இதெல்லாம் அசிங்கம்!"

"அசிங்கமா?' என்று கண்ண அகட்டி அவரையே உற்றுப் பார்த்தாள். "நீங்கோ என்னா சாமியாரா இல்லெ பகவானா? நீங்கோ சொல்றதல்லாம் கேக் கறதுக்கு இனிமே ஒங்களெவுட்டு நானு போறதா இல்லெ அசிங்கமா இருந்தா இருக்கட்டும். மூணு நாளா அவன் என்னெப் போட்டுப் போட்டு துவச்சி எடுக் கிறான். இன்னக்கி டாக்டர் அம்மா கிட்ட போயி காட்டுனோங்கோ'

"அப்புறம்?" "எனக்கு புத்துநோயாம் ஆப்ரேஷன் ஒண்ணும் பண்ண முடியாதாம்ல்லெ உதடு கிழிஞ்சாப்ல ரெண்டு பக்கமும் பெரிசா பூகோஸ் மாதிரி வளர்ந்திருக்கு. வலி உயிர் போவது புருஷங்காரரு இன்னும் போட்டு மிதிக்கிறான். அதுலியே மிதிக்கிறான்'

-

"என்ன பேசச் சொல்றே மீரா? பேசறதுக்கு என்ன இருக்குங்கறே? ஒன் னால, எனக்கோ அல்லது என்னால ஒனக்கோ எந்தவிதமான நன்மையும் கிடை யாது. எதுக்கு துடிச்சமோ அதுவும் ஆய்ட்டுது. இந்த உடம்ப பத்திரமா நானு யாருக்கும் குடுக்க வேண்டியதில்லெ ஏகாப்ஜனா தராத, எதையும் நான் ஒனக்கு புதுசா தந்திறல. ஏதோ நான் பெரிய இவன்’னு நெனச்சிகிடற. ஒனக்கு





________________

206 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

கேன்சர் ஆதரவில்லாமெ ஒன்னை என்னோட அழச்சுகிட்டு ஒன்னையும் சீர ழிக்க நான் தயாரா இல்லெ. எந்த ஆம்பளையும் தரக்கூடியதுதான் இது வாங் கிக்கிறதுக்குத்தான் நமக்கு தைர்யமில்லை ஏகாப்ஜனா என்னைவிட ரொம்ப நாள் உனக்கு உபயோகம் ஆவான். இந்த ஒலகம் நம்ப ரெண்டு பேரையும் சம் மதிக்காது. சம்மதிக்காட்டி கூட பரவாயில்லெ. வாழவுடாது. நம்மளை பழி வாங்கிவிடும்."

"நல்லா பழி வாங்கட்டும். நா விட்றதால்லெ, அவனோட கோலாப்பூர் போவமாட்டேன். ஓங்களோட வாழ்ந்துதான் சாவேன் டாக்டர் அம்மா சொல் லிடுச்சு இன்னும் ஒரு வருஷமோ ஒன்னர வருஷமோ உயிரோட இருக்கப் போற, ஒரு வேளை மூணே நாள்ள கூட கோஸ் பூ குலை தள்ளிடுச்சுன்னா அநேகமா அப்பவே சாவும் இருக்கும். நீங்க எனக்கு காட்டின ஆசையும் ஒடம் பையும் விட நீங்க காட்ன இந்த ஆகாயம், இந்த சூரியன், யாராலியும் அடக்க முடியாத அடங்க அவசியமில்லாத காத்து, தண்ணி, இன்னும் ராத்திரி முழு இருட்டான வெட்ட வெளியான ராத்திரி. யாருடைய இம்சையும் இல்லாமெ தன்னந்தனியா உயிரோட நானே - எனக்கே எனக்க வாழக் கத்து தந்த நீங்க இதெல்லாம் எவ்வளவு பெரிசுன்னு உங்களுக்கு தெரியாதுங்க படுத்து-ஒருத் தர் மேலே ஒருத்தர் ஏறி, கடிச்சு, நக்கி, ஒருத்தர ஒருத்தர் மிதிக்கிறதா சந்தோ ஷம்? வாழ்க்கை கடவுள்? நீங்க என்ன காப்பாத்திட்டீங்க ஆனா, நீங்க சொல்ற மனுஷன், கடவுள் என்னை வாழவுட மாட்டாங்க" என்று மிருதுவான குரலில் சொல்லிக் கொண்டே போனாள். மேலே அவள் பேசியது எதுவும் காதில் விழவில்லை. அவர் எதை வேண்டாமென்று சொல்லிக் கொடுத்தாரோ அதையே தெரிந்து கொண்டு அவளை அகன்ற கண்களோடு பார்த்துக் கொண் டிருந்தார். அவர் கண்களில் இருந்தும் கண்ணிர் வடிந்தது.

தெரு முனையில் சிவகங்கை பூங்காவின் வாசலில் ஆளரவமற்ற விடியற் காலை ஏழுமணி பனியில் விதியை நாலு சுக்காக கிழித்து அந்த கோஸ் பூவை வெட்கம் ஏதுமின்றி இறுகக் கட்டி அணைத்து அந்த பூவின் உள்ளே நுகர்ந்தார். அவருக்கு மட்டும்தான் அந்த கோஸ் பூ தேன் வடிக்கும். அந்தப் பூ மட்டும் தான் வித்யாசாகருக்கு ரத்தப் பூவாய் வழி திறந்து கொடுத்தது. அந்த பூ அவரை மட்டுமே ஏற்றுக் கொண்டது. அது அந்த பூவுக்கும் அவருக்குமே அதிர்ச்சி. காதல் நோயாகலாம், நோய் காதலாகக் கூடாதா? துரத்தில் லோகேஸ்வரி மீரா வின் அழைப்பு பூவாய் மலர்ந்து கொண்டிருந்தது. வானளாவ விரியும் அந்தப் புற்றுநோய் மலர் கடைசி வரை அவருக்கு மட்டுமே மணக்கும், ருசிக்கும், ரத் தம் சிந்தும்.

(குயுக்தம், 1994)