தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . . 384-433

நீலகண்டப் பறவையைத் தேடி. . . . 384-433

அமலாவின் உடலிலும் ஓர் இனிய, கவர்ச்சிகரமான ரகசியம் இருக்கிறது, இத்தனை சிறியப் பையன் சோனா! ஆனால் இந்த வயதிலும் அமலாவின் கவர்ச்சி அவனை ஓடிவரச் செய்தது. பைத் தியக்காரப் பெரியப்பா தன்னைப் பிடித்துக்கொண்டு விடுவாரோ என்ற பயத்தில் சோனா வலது பக்க வராந்தாவுக்கே வரவில்லை. பக்கத்திலிருந்த பெரிய பெரிய தூண்களுக்குப் பின்னால் மறைந்த வாறே நடந்து போய் மாடிப்படிகளின் மேல் வேகமாக ஏறினான் அவன்.

அவன் மாடிப்படி ஏறும் சமயம் மணியோசை கேட்டது. குளத் தின் மறுகரையில் மடம். யாரோ சங்கிலியை இழுத்து அங்கிருக்கும் மணியை அடித்தார்கள். மாலையில் நிலவு கிளம்பியதும் அவனும் பெரியப்பாவுமாக அந்த மடத்துக்குப் போவது என்று காலையில் தீர்மானித்திருந்தான் சோனா. அவன் படியில் பெரியப்பாவை உட்கார வைப்பான், கல்லாலான மாட்டுச் சிலைக்கு வலது பக்கமாக அவன் நிற்பான், வெள்ளைக் கல் பதித்த தளம், அதன்மேல் நின்றால் அவனுக்கு மணியின் சங்கிலி எட்டும். அவன் ஒவ்வொன்றாக மணியடிப்பான். பெரியப்பா அவற்றை எண்ணுவார். கீழே வந்து, "மணி எவ்வளவு தடவை அடிச்சேன் ?" என்று அவரைக் கேட் பான். "பத்துத் தடவை!'' என்று அவர் பதில் சொல்லுவார். பெரியப்பாவுக்கு என்ன என்ன பிடிக்குமோ அந்தக் காரியங்களைச் செய்து அவற்றின் மூலமாகவே அவரைக் கொஞ்சங் கொஞ்சமாக

முற்றும் குணமாக்கிவிடப் போகிறான் சோனா!

ஆனால் இப்போது மணியோசை கேட்டு அவன் ஏனோ திடுக் கிட்டான். பெரியப்பாவின் குரல் போல் ஒலித்தது, அந்த மணி யோசை. "சோனா, நீ போகவேண்டாம்; மடத்தில் மணியடிக்க வேண்டாம்! நான் ஒண்ணு, ரெண்டுன்னு வரிசையா நூறு வரையிலே எண்ணிக்கிண் டே போறேன். இப்படியே பண்ணிப் பண்ணி நான் ஒரு நாள் சொஸ்தமாயிடறேன், பாரு!"

மாடிப்படிகளில் பாதி ஏறி வந்தவன் சற்று அப்படியே நின்றான். மேலே ஏறிப் போவதா, அல்லது இறங்கிச் சென்று பெரியப்பா விடம் உட்காருவதா என்று தீர்மானிக்க முடியாமல் அவன் தயங்கினான். அந்த மண்டபத்துக்கே போய்விடலாமென்று அவ னுக்குத் தோன்றியது.

இவ்வளவு உயரமான மண்டபத்தை அவன் எங்குமே பார்த்த தில்லை. அதில் நீலநிறச் சிட்டுக் குருவிகள் ஆயிரம் இருக்கும். அவை மண்டபத்தின் இடுக்குகளில் கூடு கட்டிக்கொண்டு வசித்தன. இரவில் நிலா இருந்தால் அப்பறவைகள் மண்டபத்துக்கு மேலே

384iii!

சுற்றிச் சுற்றிப் பறக்கும். மண்டபத்தின் நினைவு வந்தால் சோனா வுக்கு இந்தப் பறவைகளின் நினைவும் வரும்.

திருவிழாவிலிருந்து வந்தபோது ரஞ்சித் மாமா அவனுக்கு ஒரு கவண் குச்சி வாங்கிக் கொடுத்திருந்தார். அவன் அதை வைத்துக் கொண்டு காக்கை, குருவி, மைனா, அணில் இவற்றை அடிக்க முயற்சி செய்வான், ஆனால் ஒன்றையும் அடிக்க முடியாது அவனால்.

ஜாம்ரூல் மரத்துக்கடியில் ஒரு பொந்து இருந்தது. அதில் வசித்து வந்த அணில் பொழுது விடிந்ததும் வெளியே வந்து குதித்தோடும். சோனா படிப்பை விட்டுவிட்டு அதன் பின்னே ஓடுவான். அது மரத்துக்கு மரம் தாவும். பொன்னிற வெயிலில் அது 'கட், கட்' என்று கத்தும். சோனா கவணால் அடித்தால் அது முன்னங்கால் களைக் குவித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும், 'என்னை அடிக் காதே!' என்று கெஞ்சுவது போல.

அவன் இணங்காவிட்டால் அதன் விளையாட்டு ஆரம்பமாகி விடும். சோனாவுக்குத் தோன்றும், 'இத்தனூண்டு பிராணிக்கு எவ்வளவு திமிரு ? கொஞ்சங் கூடப் பயமில்லை அதுக்கு ! மரத்துக்கு மரம்,

இலைக்கு இலை தாவறதே!' என்று.

இந்தச் சிறிய ஜந்து மட்டும் இல்லை, உயிர்த் துடிப்பும் அழகும் வாய்ந்த ஒவ்வொன்றையும் - இந்த வெயில், இந்த மண், சரத் காலத்து மழை இவற்றையெல்லாம் துரத்திப் பிடிக்க ஆசையாக இருந்தது சோனாவுக்கு. தூரத்திலிருந்து ஏதோ ஒரு கவர்ச்சியான ரகசியத்தைக் கொண்டு வந்தாள் அமலா. அவன் எங்கே போவது? அமலா கமலாவிடமா, அல்லது பைத்தியக்காரப் பெரியப்பா, மண்ட பம், நிலவு காயும் திறந்த வெளிகள் - இவற்றிடமா? அவன் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருட்டில் மாடிப்படியிலேயே நின்றான்.

யாரோ ஒரு காவல்காரன் அவனைத் தாண்டிக் கொண்டு போனான். அவன் சோனாவைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், "யாரு ? யாரது?" என்று கேட்டுக்கொண்டு அவனை விரட்ட வந்திருப்பான். வெளிச்சத்துக்கு வந்ததும் அவனைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன், "சோனா பாபு! நீங்களா? நீங்க இங்கே என்ன பண்றீங்க?" என்பான்.

இந்தப் பக்கத்து மனிதர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது சோனாவுக்கு. எவ்வளவு உயரமாக இருக்கிறார்கள் இவர்கள் ! எப்போதும் பணிவுடன், கைகளைக் கூப்பிக்கொண்டே இருக்கிறார் கள். அவனுக்கு முன்னால் கூடக் கைகளைக் கூப்புகிறார்கள். காவல்காரனைச் சற்றுப் பயமுறுத்த எண்ணித் தலையை நீட்டிய சோனா, அமலாவும் கமலாவும் இன்னும் சில சிறுவ சிறுமியருடன் கூச்சல் போட்டுக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வருவதைப்

385

25பார்த்தான். அப்போதும் அசையவில்லை அவன் ; இருட்டில் மறை வாக நின்றுகொண்டேயிருந்தான்.

தூண் மறைவில் யாரோ இருப்பது கமலாவுக்குத் தெரிந்தது, "யாரது?" என்று அவள் கேட்டாள்.

சோனா வெளிச்சத்துக்கு வந்து, "நான்தான்" என்றான், "நாங்க உன்னைத் தேடிக் கிண்டுதான் கிளம்பினோம். எவ்வளவு நேரம் காத்துக் கிண் டிருந்தோம் உனக்காக?"

அவர்கள் மறுபடி மேலே ஏறுவார்கள் போலத் தோன்றியது. ஆனால் அவர்கள் மொட்டை மாடிக்குப் போகவில்லை. முதல் மாடியிலே நின்றுவிட்டார்கள். முதல் மாடியில் நடமாட்டமில்லாத ஓர் இடத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து சமையலறை ஒலிகளை நன்றாகக் கேட்கலாம், மீன் வறுக்கும் மணம் மிதந்து வந்தது அங்கே. அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சமையலறைக்கு நான்கு பக்கங்களிலும் போய் ஒளிந்துகொண்டு

விளையாடினார்கள்.

அவர்கள் இருட்டில் சிதறிப் போனார்கள், வெவ்வேறு இடங்களில் ஒளிந்துகொண்டார்கள். அமலா சோனாவைத் தன் குழுவில் வைத்துக்கொண்டாள். அவனுடன் எங்காவது ஒளிந்துகொள்ள நினைத்திருந்தாள் அவள். ஆனால் திடீரென்று சோனாவைக் காண வில்லை. அவன் மாடிப்படிக்கு மேல் இருந்த அங்கணத்துக்குள் போய்விட்டான். இங்கே அவனை யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள்.

இதற்குள் சோனாவுக்கு இந்த வீடு நன்றாகப் பழகிப் போய் விட்டது, உக்கிராண அறை எந்தப் பக்கம், மாடியறை எங்கே, எது பூஜையறை, எசமானியம்மாக்களின் அறைகள் எங்கே - என்பனவெல்லாம் அத்துபடியாகிவிட்டன அவனுக்கு.

விளையாட்டின் எல்லை சமையலறையின் நான்கு பக்கமுந்தான். அதைத் தாண்டிவிட்டால் 'அவுட்'

கொஞ்சதூரம் வந்ததுமே பயந்து போய்விட்டான் சோனா. இந்தப் பக்கம் ஜன நடமாட்டமே இல்லாமல் வெறிச்சென்று இருந்தது. கீழ்ப்பக்கம் இடிந்த சுவர். சுவரின் மறுபுறம் காடு. சோனா வெகுதூரம் போகக்கூடாது. இரண்டு 'டோம்' விளக்கு களின் வெளிச்சம் அந்த இடம் வரை பரவியதாலும் வேலைக்காரி களின் பேச்சுக் குரல் அங்கே கேட்டதாலும் பயம் அவ்வளவு அதிகமாக இல்லை சோனாவுக்கு. அவன் தன்னை யாரும் கண்டு பிடிக்காதபடி ஓர் இடத்தில் ஒளிந்துகொள்ள விரும்பினான். அப்படி ஓர் இடமும் கிடைக்காமல் அவன் தவித்துக்கொண்

1:11

386டிருந்தபோது தனக்குப் பின்னால் அமலா வந்து உட்கார்ந்திருப் பதைக் கண்டான்.

'எனக்குப் பின்னாலே வா, சோனா" என்றாள் அமலா. அவன் அவளுக்குப் பின்னாலே முதுகைக் குனிந்துகொண்டே நடந்தான், நிமிர்ந்து நடந்தால் கவரின் மறுபக்கத்திலிருந்து

அவர்களை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள்.

இவ்வாறே நடந்துபோய் அமலாவும் சோனாவும் வடக்குப் பக்கத்திலிருந்த வீடுவரை வந்துவிட்டார்கள். இதற்குள் மற்றவர் கள் வெவ்வேறு இடங்களில் ஒளிந்துகொண்டு விட்டார்கள். அமலா சோனாவிடம், "இங்கே வா! இங்கே வா!' என்று கிசுகிசுத்தாள்.

அவர்கள் இருட்டான ஒரு நீண்ட வராந்தாவுக்கு வந்து சேர்ந் தார்கள். அங்கிருந்து விருந்தினர் விடுதிக்குப் போகப் படிகள் இருந்தன. வளைந்து வளைந்து இறங்கும் மரப்படிகள். அமலாவும் சோனாவும் அப்படிகளின் வழியே கீழே இறங்கி மங்கலான நீல நிறவெளிச்சம் பரவிய ஒரு பகுதிக்கு வந்தனர். ஈரச் சுவரின் மணம். எதிரில் ஒரு காலி அறை. அதன் சுவர் ஒருபுறம் இடிந்திருந்தது, அதனுள்ளே எலிகள் நடமாடும் அரவம். அதற்குமேல் ஒரு மரம் வளர்ந்திருந்தது. மங்கிய வெளிச்சத்தில் அது என்ன மரம் என்று தெரியவில்லை. வெளவால் போன்ற சில ஜந்துக்கள் அவர்கள் வரும் ஒலி கேட்டுச் சிறகடித்துக்கொண்டு பறந்தன. அவர்கள் கதவைத் தாண்டிக்கொண்டு சென்றதும் சுவருக்கருகில் இடிந்த செங்கல்லும் மண்ணும் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள். ஒரு காலத்தில் இங்கு ஒரு கிணறு இருந்திருக்கும். இப்போது அதை மூடிவிட்டார்கள். "இங்கேயே நீ சத்தம் போடாம இரு. இங்கே ஒருத்தரும் தைரியமா நம்மைத் தேடிக்கிண்டு வரமாட்டாங்க. நாம இப்போ சமையலறைக்குப் பின் பக்கத்துக்கு வந்துவிட்டோம்" என்று அமலா சொன்னாள்.

சோனா பயத்தால் வாயடைத்து நின்றான். "ஏன் பயப்படறே? மெள்ளப் பேசு." ''எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.'' "என்னடா பயம்? நான் இங்கே தினம் பிருந்தாவனியோட வரேனே !"

அப்போது யாரோ மரப்படிகள் வழியே இறங்கிவருவது போல் இருந்ததால் அமலா மௌனமானாள், அவளும் சோனாவும் இப்போது ஒருவரையொருவர் உராய்ந்து கொண்டு நின்றார்கள். இப்போது சோனா பலி ஆடு மாதிரிதான். அமலா என்ன சொன்னாலும் அவன் கேட்பான். அவள் அவனுக்குச் சாப்பிட இரண்டு சந்தேஷ் கொடுத்தாள். இப்போது மாடிப்படிப் பக்கம் அரவம் எதுவும் கேட்க

387வில்லை. படி வழியே இறங்கி வந்தவர் சமையலறைப் பக்கம் போயிருக்கலாம். அமலா மெல்லிய குரலில், "நீ கமலாவோட சிநேகமாயிருக்கக் கூடாது. தெரிஞ்சுதா?" என்றாள்.

மறுபடியும் மாடிப்படிகளில் அரவம். கமலா தன் கோஷ்டியுடன் அவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கலாம். அந்தக் கோஷ்டியில் மலினா, ஆலோ, மது இன்னும் யார் யாரோ இருந்தார்கள், யாராயிருந்தாலும் அவர்களுக்கு இந்தப் பக்கம் வரத் தைரியம் வராது. தலைக்கு மேலே ஒரு கிளை. சுவரின் மறுபக்கத்திலிருந்து கிளை இந்தப் பக்கம் வந்து தொங்கியது. கிளைக்குக் கீழேதான் அந்தப் பாழடைந்த அறை. அறையின் இருளில் அமலா சோனாவை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். "பயப்படாதே, பயப்படாதே, சோனா!" என்று சொல்லிக்கொண்டே அவள் சோனாவின் கையைப் பிடித்து ஏதோ விளையாட்டுச் சேஷ்டைகள் செய்யத் தொடங்கினாள்,

சோனா, "வேண்டாம், அமலா! எனக்கு இது பிடிக்கல்லே" என்று மறுத்தான். அமலா மாதிரி பேச அவனுக்கு ஆசையாக இருந்தது. அப்படிப் பேச முயற்சி செய்தான் அவன்.

அப்போது கமலாவின் கோஷ்டி மரப்படிகளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தது. "கமலா எனக்குப் பயாஸ்கோப் பெட்டி தரேன்னிருக்கா” என்று சோனா சொன்னான்.

அமலா சொன்னாள் : "நான் உனக்குச் செம்பரத்தம்பூ கொண்டு வந்து தருவேன், பிருந்தாவனி தினம் அப்பாவுக்காக ரோஜாப்பூச் செண்டு கட்டுவா. நான் உனக்கு அந்தச் செண்டு தரேன்.''

அவள் அவனை மேலும் பேசவிடவில்லை. தன் கையால் சோனாவின் தலைமயிரைச் செல்லமாக அளைந்தாள்; தன் தலையைக் கொண்டு வந்து அவனுடைய மூக்குக்கு அருகில் வைத்தாள். பட்டு மாதிரி மிருதுவான கூந்தல். சோனா பயந்து போய்விட்டான், கல்கத்தாப் பெண்ணான அமலாவுக்கு என்னவெல்லாம் தெரிகிறது! அந்த வயதில் சோனாவுக்கு வேறு என்ன சொல்லத் தெரியும் ? அமலா அவனை வைத்துக்கொண்டு என்ன செய்யப் பார்க்கிறாள் ?

'' நீ எவ்வளவு அழகு, சோனா! உன் கண்ணு எவ்வளவு பெரிசா இருக்கு! நான் உன்னைக் கல்கத்தாவுக்குக் கூட்டிக்கிண்டு போறேன். அது எவ்வளவு பெரிய ஊவர் தெரியுமா ? அங்கே மியூசியம் இருக்கு, மிருகக்காட்சி சாலை இருக்கு."

''அங்கே மியூசியத்திலே ஒரு திமிங்கலத்தோட எலும்புக் கூடு இருக்காமே ? புத்தகத்திலே போட்டிருக்கு."

"ஆமா. நீ வந்தாப் பார்க்கலாம். எவ்வளவு பெரிய எலும்புக்கூடு !" ''உம், எனக்குப் பயமா இருக்கு." "இன்னும் கொஞ்சம் கீழே. நீ ஏன் இப்படிப் பயப்படறே?"

388ஈசம் ஒரு பெரிய மீன் பிடித்தான்.

அமலாவால் பொறுக்க முடியவில்லை. அவள் சோனாவை என்னவோ செய்யச் சொல்கிறாள். அவனுடைய கையை எங்கேயோ கீழே கொண்டு போனாள். சோனாவுக்கு ஒன்றும் புரியவில்லை, அமலா தொடர்ந்து பேசிக்கொண்டே, ''எவ்வளவு பெரிய மீன் சோனா ?" என்று கேட்டாள்.

"ரொம்பப் பெரிசு.'' ''சரி, கையைக் கொடு." '' ஊஹும், மாட்டேன்." "உனக்கு முத்தம் கொடுக்கறேன், வா.'' “வேண்டாம்." "ஏன், வந்தா என்ன ?" "கன்னத்துலே எச்சில் படும்." "தொடச்சிக்கிண்டாப் போச்சு. நீ இவ்வளவு பெரிய முட்டாளா இருக்கியே?'

சோனாவுக்குப் பயம். 'இது என்ன? இது என்ன மருந்தால் செஞ்சது? இதை ஒரு தடவை சாப்பிட்டா அப்புறம் சாப்பிடக் கூடாது. ஆம்பிட்டுக்கிடா அடிவிழும். தவிர, ரொம்பக் கெட்டக் காரியம் இது!' சோனா தனக்குத் தானே கூறிக்கொண்டான். ஆனா லும் உள்ளுற அவனுக்கு ஆசை. கல்கத்தாப் பெண்ணிடம் ஏதோ ஒரு ரகசியம், கவர்ச்சி இருக்கிறது, தொலைவின் கவர்ச்சி! அந்த ரகசியத்தை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. நீரின் மேல் மலர்ந்திருக்கும் அல்லிப் பூவின் சுபாவம் அவனுக்கு. வெட்கமும் சங்கோசமும் அவனைத் தண்ணீரின் மேல் மிதக்கச் செய்தன. அவன் கையைக் கீழே கொண்டு போனால் தண்ணீருக்குள் அமிழ்ந்து போய்விடுவான் ; பாவத்துக்குள் முழுகிப் போய் விடுவான்.

''அமலா, மாட்டேன், மாட்டேன்" என்று அவன் சொன்னான். "நீ சமத்து இல்லையா ? கொடு, கையைக் கொடு! நீ ஏன் பட்டிக் காட்டான் மாதிரி பேசறே?"

சுருங்கிப் போய்விட்டான் சோனா. உலகத்தில் பரிசுத்தமாக இருந்த அவனை எங்கேயோ அழைத்துச் செல்கிறாளே அமலா! அவனுக்கு அவளிடமிருந்து தப்பியோட வேண்டும் போலத் தோன் றியது. ஆனால் அதே சமயத்தில் அமலாவின் பிரியம் நிறைந்த நீலக் கண்கள், தங்க நிறக் கூந்தல், பளபளக்கும் தேகம். தேகத்துக் குள்ளே ஏதோ ஒரு விளக்கு எரிவது போல் கவர்ச்சி. இவற்றை விட்டு விடவும் மனம் வரவில்லை அவனுக்கு. எப்போதும் அமலா வுடன் இருக்கவும் பழகவும் விருப்பந்தான். ஆனால் அவள் அவனை

389இப்போது செய்யச் சொல்லும் காரியம் பாவம் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது.

அமலா, தன் விருப்பத்தை மறுக்க சோனாவுக்கு இடங்கொடுக்க வில்லை. அவள் அவனுடைய முகத்தைத் தன் பக்கம் இழுத்து அவனுக்கு முத்தமிட்டுவிட்டு, “உனக்குப் பிடிக்கல்லே ?" என்று அவனைக் கேட்டாள்.

சோனாவுக்கு ஏதாவது புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. உடைந்த கதவு காற்றில் நகர்ந்திருந்தது. மங்கிய நீல வெளிச் சத்தில் அவனுடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை. அமலா

அவனுடைய முகத்தைப் பார்த்துக் கேட்டாள், "ஏன் பேசாம. இருக்கே? உனக்குப் பிடிக்கலியா?' என்று.

பிடிக்கவில்லை என்று சொன்னால் அமலாவுக்கு அவன் மேல் கோபம் வரும். அப்புறம் அவனிடம் பிரியமாக இருக்கமாட்டாள். அவனுக்குச் சந்தேஷ் கொடுக்கமாட்டாள். பூவும் பழமும் கொடுக்க மாட்டாள். அவன் ஒன்றும் பேசாமல் சமர்த்துப் பையன் போல் "இம்" என்பது போல் தலையை ஆட்டினான்.

அமலாவுக்கு அநுமதி கிடைத்துவிட்டது. அவள், அவனைத் தன்னிஷ்டப்படி தன் உடலில் விளையாடச் சொன்னாள். சோனாவுக் கும் பிடித்துப் போய்விட்டது அது. கையால் விளையாட்டு. புதுமாதிரி விளையாட்டு. வாழ்க்கையில் ஒரு புதிய, ரகசியமான விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது.

அவனுடைய பாண்டின் நாடாவைக் கட்டிவிடும்போது, ''உனக் குப் பிடிக்கல்லே?" என்று அமலா கேட்டாள்.

சோனா சிரித்தான். “ஏன் சிரிக்கிறே?" ஒன்றும் பேசாமல் வெளியே வந்து நின்றான் சோனா : ஒன்றும் புரியாமலேயே அசடுபோல் சிரித்தான்.

"என்ன சோனா, உனக்கு என்ன வந்தது ? ஏன் இப்படிச் சிரிக்கிறே ?"

சோனா பலமாகச் சிரித்துக் கொண்டே இருந்தான். 'என்ன நடந்தது இப்போ ? அமலா அத்தை அவனுக்கு என்ன சொல்லிக் கொடுத் திருக்கா? இப்போ ஒரு நல்ல விளையாட்டு - புதுமாதிரியான விளையாட்டு. தெரிஞ்சு போச்சு அவனுக்கு ! இப்போது அவனுக்கு அமலாவைக் கூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கோ பசும்புல் வெளிக்கோ ஓடத் தோன்றியது. அங்கேயே நிற்கப் பிடிக்கவில்லை. அமலா அழகாக இருக்கிறாள், அவனுக்குத் தினம் புதுப் புது அநுபவங் களைக் கற்றுக் கொடுத்தாள். ஆனால் தாயின் நினைவு வந்ததும் சோனா வுக்கு வருத்தம் ஏற்பட்டது. பாவத்தைச் செய்துவிட்ட உணர்வு

390ஏற்பட்டது. அவனுக்கு இப்போது ஒன்றுமே பிடிக்கவில்லை. இந்த இடிந்த சுவருக்கு அருகில் அவன் தன்னைத் தனியனாக உணர்ந்தான். பக்கத்திலிருந்த அமலா இப்போது அவனுக்கு அந்நியமாக, பரிசயம் இல்லாதவளாகத் தெரிந்தாள். அவன் அவளை விட்டு ஓடத் தொடங்கினான்.

“'சோனா, ஓடாதே! கீழே விழுந்துடுவே!'' என்று அமலா சொன்னாள்.

அமலாவும் இரண்டிரண்டாகப் படிகளைத் தாண்டி மேலே ஏறினாள். சோனா ஓடும் வேகத்தில் தவறி விழுந்தால் மண்டை உடைந்து செத்துப் போய் விடுவான். அவள் சோனாவைவிட வேகமாகப் படிகள் மேலேறி அவனை இறுகப் பிடித்துக்கொண்டாள். "சோனா என்ன பண்றே நீ? ஏன் இவ்வளவு வேகமாக ஓடறே? இருட்டிலே கீழே விழுந்தாச் செத்துப் போயிடுவே!"

சோனா அமலாவை இருகைகளாலும் உதறித் தள்ளினான். வேறு சமயமாயிருந்தால் அமலா அழுதிருப்பாள். ஆனால் இப்போது சோனா வின் முகத்தைப் பார்த்துப் பயந்துபோய்ப் பேசாதிருந்தாள். அவள் அவன் அருகில் வந்து, "நான் உனக்கு ஒரு நல்ல கதைப் புத்தகம் தரேன். என்னோட வா" என்றாள்,

சோனா பதில் பேசாமல் அங்கிருந்து நடந்து போனான். அமலா அவனை மீண்டும் மீண்டும் கூப்பிட்டும் அவன் பதில் சொல்லவில்லை. பூஜை மண்டபத்தில் மத்தளம் ஒலித்தது. அவன் பெரிய ஹாலைக் கடந்து சென்றான், ஹாலின் சுவரில் பலவிதமான சித்திரங்கள், பலவிதப் புலிகளின் தோல், மான்களின் தோல். பட்டாக் கத்திகளும் கேடயங்களும் அலங்காரமாக வைத்திருந்தன.

ஹாலுக்கு வந்ததும் சோனா தன்னை ஓர் அரசகுமாரனாக நினைத்துக்கொண்டான். அவனுடைய தலையில் கிரீடம், கால்களில் காப்பு, இடையில் வெள்ளி நிற அரைக்கச்சை, ஒரு நீளப் பட்டாக் கத்தி. அவனிடம் ஒரு கறுப்புக் குதிரை இருக்கிறது. ராட்சசனால் சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசகுமாரியை மீட்கும் தீவிர ஆசை சோனாவுக்குத் தோன்றிவிடும், அவன் இந்த ஹாலுக்குள் நுழைந்தால்,

ஆனால் இன்று அந்த ஆசை ஏற்படவில்லை அவனுக்கு. அதுவரை அவனுக்குப் பின்னாலேயே வந்துகொண் டிருந்தாள் அமலா. அதற்குப் பின்னும் அவனைத் தொடர்ந்து வரத் துணிவின்றி அவள் ஹாலின் வாசலில் நின்றுகொண்டே அவன் ஹாலைத் தாண்டிப் போவதைப் பார்த்துக்கொண் டிருந்தாள்.

ஹாலின் மறுபக்கத்துக் கதவைத் தாண்டியதும் சோனா திரும்பிப் பார்த்தான். அமலா இன்னும் அவன் பக்கம் பார்த்துக்கொண் டிருந்தாள். ராட்சசனால் சிறை வைக்கப்பட்ட அரசகுமாரியின்

391முகம் போலத் தோன்றியது, அவளுடைய முகம். ஆனால் அவன் என்ன செய்வது ? எங்கே போவது? அவன் செய்த பாவம் எல்லா ருக்கும் தெரிந்துவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. அவன் பைத்தியக்காரப் பெரியப்பாவின் அருகில் போய் உட்கார்ந் தால் அவர் அவனுடைய உடலை முகர்ந்து பார்த்தே சொல்லி விடுவார். "சோனா, நீ பெரிய தர்மூஜ் வயலைப் பார்த்துவிட்டாய், உன்னுடைய ரகசியம் முடிவற்றது. நீ என்கிட்டே உட்காராதே!''

சோனாவுக்கு அழுகை அழுகையாக வந்தது இப்போது. அவன் தூணின் மறைவில் நின்றுகொண்டு பார்த்தான். பெரியப்பா சாய்வு நாற்காலியில் படுத்திருக்கவில்லை. அவனுக்குப் பரிசய மானவர்களும் பரிசயமாகாதவர்களுமான மக்கள் பலர் பூஜை மண்டபத்தில் இருந்தார்கள். அவனுக்கு அங்கே போகப் பிடிக்க வில்லை. அவனுக்குத் திரும்பத் திரும்பத் தன் தாயின் முகமே நினை வுக்கு வந்தது. பைத்தியக்காரப் பெரியப்பாவைப் போல் அவனுடைய அம்மாவும் அவனுடைய தலைமயிரை முகர்ந்தே அவன் பாவம் செய்ததைக் கண்டுபிடித்து விடுவாள். இந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள அவன் என்ன செய்ய வேண்டும் ? ஆற்றங்கரையில் நின்றுகொண்டு, செய்த பாவத்தை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டால் பாவம் போய்விடும் என்று அம்மா சொல்லியிருந்தாள். அப்படித்தான் செய்யவேண்டும் அவன்.

அவன் ஆற்றங்கரைக்குப் போய் ஆற்றில் உள்ள தேவதையை எண்ணிச் சொல்வான், "ஆற்றுத் தேவதையே ...!''

தான் இதற்குள் ஆபீஸ் கட்டிடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதைச் சோனா கவனித்தான். ராம்சுந்தர் ஒரு வட்டமான மேஜைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தான். மேஜையைச் சுற்றி நாற்காலிகள் : அவற்றில் பாபுக்களின் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ராம் சுந்தருக்கு நல்ல நல்ல கதைகள் சொல்லத் தெரியும். சற்றுத் தூரத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா உட்கார்ந்திருந்தார். தலைக்கு மேலே ஆகாயம், மங்கலான நிலவு.

மறுநாள் காலையில் பைத்தியக்காரப் பெரியப்பாவைக் கூட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போவதென்று தீர்மானித்தான் சோனா. அம்மா ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டால் விடியற்காலையில் எழுந்து ஸோனாலிபாலி ஆற்றங்கரைக்குப் போய்த் தண்ணீருக்கு முன்னால் தான் கண்ட கனவைச் சொல்லிவிடுவாள். அந்தக் கனவால் ஏற்படும் தோஷம் போய்விடும். அதுபோல் அவனும் செய்து தன் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினான்.

இவ்வளவு பெரிய பாவம் செய்த பிறகு சோனாவுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை, ராம்சுந்தர் சொல்லிக்கொண்டிருந்த கதையில் கூட

392அவன் கவனம் செலுத்தவில்லை. அவன் கட்டிடத்துக்குள் நுழைந்து இரண்டாவது பெரியப்பாவின் படுக்கையில் படுத்தான். அன்று முழுதும் அலைந்ததால் ஏற்பட்ட களைப்பில் உடனேயே அவனுக்குத் தூக்கம் வந்துவிட்டது.

கனவில் அவன் ஒரு குடிசையைப் பார்த்தான். அதற்கு முன்னால் விசாலமான நிலம். நிலத்தில் பயிர் ஒன்றும் இல்லை. கூழாங்கல் பரப்பிய பாதை. அதற்கருகில் ஓர் அகழி. அதில் தண்ணீர் இறங்கிக்கொண் டிருந்தது. வெள்ளை, நீல, மஞ்சள் நிறக் கற்கள்.

தெளிவான ஜலத்தின் வழியே அதனடியிலுள்ள கற்களின் நிறங்கள் நன்றாகத் தெரிந்தன. அந்த குடிசைக்குப் பின்னால் ஒரு மலை. அந்த மலையின் நிழலில் குடிசையில் அமைதி நிலவியது. சோனா காலை வெயிலில் குடிசையிலிருந்து வெளியே வந்தான். யாருடைய கையையோ பிடித்துக்கொண்டு ஓடினான். அந்த ஆளின் முகம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னால் இரண்டு பின்னல்கள் தொங்குவது மட்டும் தெரிந்தது. தலையில் சிவப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு, வெள்ளை ஃபிராக் போட்டுக்கொண் டிருந்த ஒரு பெண்

அவனை அகழிப் பக்கம் இழுத்துக்கொண்டு ஓடினாள்.

அகழியின் ஓரத்துக்கு வந்ததும் சோனாவுக்குப் பயம் வந்து விட்டது. இவ்வளவு ஆழமான தண்ணீரைக் கடந்து அகழியின் மறு கரைக்குப் போக முடியாதென்று தோன்றியது அவனுக்கு. "ஏன் பயப்படறே? வாயேன் ! நான் உன்னை அக்கரைக்குக் கொண்டு போய் விடறேன், வா!" என்று அந்தப் பெண் சொன்னாள்.

பெண் கையை நீட்டினாள், அவன் கையைப் பிடிக்க. அவர்கள் தண்ணீரில் நடந்தபோது சின்னஞ்சிறு மீன் கள் அவர்களைச் சுற்றி நீந்தி விளையாடின. நல்ல குளிர்ந்த நீர். அது அந்தக் காலை நேரத் தையே இன்பமயமாக, பெருமை நிகழ்ந்ததாக ஆக்கியது. அந்தத் தண்ணீரை விட்டு மறுகரையில் ஏறவே மனம் இல்லை சோனாவுக்கு.

"என்னடா ரொம்பப் பிடிச்சுப் போச்சா? கரையேரலே மனசு வரவில்லையாக்கும்!"

சோனாவுக்கு அவளுடைய முகம் தெரியவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசினாள் அவள். "ஆமா, ரொம்ப நன்னாயிருக்கு!" என்று சோனா சொன்னான்.

சோனாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது, அந்தத் தண்ணீர். தானும் மீனாக மாறி அந்தத் தண்ணீரிலேயே இருக்கத் தோன்றியது அவனுக்கு. என்ன ஆச்சரியம், இந்த ஆசை தோன்றியதுமே அவன் மீனாக மாறிவிட்டான்! அந்தப் பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள், "என்னடா, நீ மீனாயிட்டியா ?" என்று சொல்லிக்கொண்டே அவளும் முழுகினாள். என்ன

393ஆச்சரியம்! அவளும் மீனாகி விட்டாள்! அவர்கள் இருவரும் நீலமும் மஞ்சளுமான சாந்தா மீனாக மாறி அகழித் தண்ணீரில் நீந்தினார்கள், பிறகு அவர்கள் ஒரு பயங்கரப் பிரவாகத்தில் அகப்பட்டுக்கொண் டார்கள். அந்தப் பிரவாகத்திலிருந்து தப்பிக்கொள்ள முயற்சி செய்த நீல நிற மீன் எப்படியோ சிரமப்பட்டுக் கரைக்கு வந்து விட்டது. இப்போது அதற்கு மூச்சுவிடக் கஷ்டமாயிருந்தது. சோனாவுக்கு மூச்சுத் திணறியது. அவன் அகழிக் கரையில் குதித்தான். மூச்சுத் திணறல் பிராண சங்கடமாக இருந்தது.

கனவில் ஏற்பட்ட மூச்சுத் திணறலின் விளைவாகச் சோனாவுக்கு விழிப்பு வந்துவிட்டது. அவனுக்கு வியர்த்துப் போயிருந்தது. யாரோ அவனை அலாக்காகத் தூக்கிக் கொண்டு சமையலறைப் பக்கம் போனார்கள். அவன் கண்ணைத் திறந்து பார்த்தான். பைத்தியக்காரப் பெரியப்பா! தான் சாப்பிடாமலேயே தூங்கிப் போய்விட்டது இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

"சொப்பனத்திலே மீனைப் பார்த்தா என்ன ஆகும், பெரியப்பா ?'' என்று அவன் கேட்டான்.

''கேத்சோரத்சாலா!" ஆனால் அவருடைய முகத்தைப் பார்த்தே அவர் சொல்ல விரும்பியது என்ன என்று புரிந்துவிட்டது சோனாவுக்கு, 'சொப்பனத் திலே மீனைப் பார்க்கறவன் ராஜா ஆவான்!' என்று.

மறுநாள் காலை எழுந்ததுமே சோனா பெரியப்பாவைக் கூட்டிக் கொண்டு சீதலக்ஷாவின் கரைக்குப் போனான், எதிரில் சிறிய மணல் வெளி. பக்கத்தில் நாணல் காடு. இடப் பக்கம் மண்டபத்துக்குக் கீழே ஸ்டீமர்த் துறை. நாராயண் கஞ்சிலிருந்து அங்கே பத்து மணிக்கு ஸ்டீமர் வரும்,

ஆஸ்வின் மாதமாகவும் காலை வேளையாகவும் இருந்ததால் புல்லின்மேல் பனிவிழத் தொடங்கியது. பெரியப்பா, சோனா, அவர் களுடைய நாய் ஆக மூவரும் கரையின் மேல் நடந்தார்கள். அவர்கள் படுகையில் இறங்கும்போது யானையைப் பார்த்தார்கள். அதை எங்கோ கூட்டிக்கொண்டு போகிறான் ஜசீம். சோனா அவனைக் கூப்பிட நினைத்தான்: 'ஜசீம்! என்னையும் பெரியப்பாவையும் கூட்டிக் கிண்டு போ! நான் என் அம்மாகிட்டேப் போறேன். எனக்கு

இங்கே ஒண்ணும் பிடிக்கல்லே.'

ஆனால் வாய் திறந்து ஒன்றும் சொல்ல முடியவில்லை அவனால். மறுபடியும் பெரியப்பா யானையில் ஏறிக்கொண்டு எங்காவது ஓடிப் போய் விடுவாரோ என்ற பயம் அவனுக்கு.

394ஆனால், கடந்த இரவு நிகழ்ச்சி ஞாபகம் வந்ததும் அவனுக்குத் தன் தாயிடம் சொல்லவும் துணிவு உண்டாகவில்லை. காலேக் மியானைப் போலத் தானும் வழி தவறி விட்டதாக அவனுக்குத் தோன்றியது. இந்த மூடுபனியைக் கடந்துவிட்டால் அழகான, இனிமையான உலகம் இருக்கிறது. அங்கே அவனை அழைத்துப் போகத் தன் அழகிய கண்களுடன் காத்திருக்கிறாள் அமலா.

சோனா பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு தண்ணீர் ஓரத்தில் நின்றான், ஆனால் தான் செய்த பாவத்தை வெளிப்படை யாகச் சொல்ல முடியவில்லை அவனால். என்ன செய்வான் அவன்?

எதிரில் நீரில் சில நாணற்பூக்கள் மிதந்து சென்றன. அந்தப் பூக்களைப் பார்த்துக்கொண்டே அவன் தான் செய்த பாவத்தை மறந்துவிட்டான்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு, தொலைவிலுள்ள ரகசியம் அவனுக்குக் கொஞ்சங் கொஞ்சம் புரிந்துவிட்டது போல் இருந்தது, இப்போது அவனுக்கு நாற்புறமும் பூக்கள், பழங்கள், பறவைகள், நதியில் தண்ணீர்ப் பெருக்கு, அதன் இருபுறமும் மணல். ஆற்றின் கரையோரமாகப் போய்க்கொண் டிருந்தது, யானை, பெரியப்பா சூரிய உதயத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார். நாய் காலை வெயிலில் சுற்றித் திரிந்தது. ஸ்டீ மர்த் துறையில் சில பிரயாணிகள் உட்கார்ந் திருந்தனர். ஆற்றின் நடுவில் புல்லும் வைக்கோலும் ஏற்றிச் செல்லும் படகுகள் .... எல்லாரும் பாட்டுப் பாடுகிறாற் போல் இருந் தது – 'எங்கே படகை ஓட்டிக்கொண்டு போவேன் ; இருபுறமும் கரை தெரியவில்லையே!' தான் படகோட்டியாகி விட்டதாகத் தோன்றியது சோனாவுக்கு. அமலா, கமலா அல்லது பாதிமாவை வைத்துக்கொண்டு நட்டாற்றில் படகோட்டினான் அவன்.

தன் பாவத்தை ஆற்றிடம் சொல்ல முடியவில்லை அவனால். அவன் பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கரையிலேறி வந்தான். காலை வெயிலில் அவன் முகம் நெருப்புப் போல் சிவப்பாக ஜொலித்தது.

அவனுடைய முகத்தைப் பார்த்தே ஏதோ புரிந்துகொண்டார் பெரியப்பா. அவர் ஆசீர்வாதம் செய்வது போல் அவனுடைய தலை மேல் கையை வைத்தார். 'உன்னுள் விதை முளைக்கிறது, சோனா! இன்னுங் கொஞ்சங் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக்க முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்.''

11. 10

395ஜமின்தார் வீட்டு அந்தப்புரத்துக்குள் போக அன்று முழுதும் விருப்பம் உண்டாகவில்லை சோனாவுக்கு. செடியின் இலையைப் போன்ற ஒரு மெளனம் பொருந்திய வெட்கமும் சங்கோசமும் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தன, அவன் நாள் முழுவதும், ஆபிஸ் கட்டிடத்து வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தான், அல்லது அதை ஒட்டியுள்ள திறந்த வெளியில் உலவினான். அதற்கு முந்தைய நாளும் அவன் அமலா, கமலாவைச் சந்திக்கவில்லை. இன்று நவமியாதலால் எருமைப் பலி நடக்கும். காலையிலிருந்தே அந்த வீட்டின் தோற்றமே மாறிவிட்டது. லால்ட்டுவும் பல்ட்டுவும் அங்கே இல்லை, அவர்கள் ஒவ்வொரு வீடாகப் போய்க் கொண் டிருந்தார்கள், துர்க்கைச் சிலைகளைப் பார்ப்பதற்காக.

ஆற்றங்கரையை ஒட்டிய பாதை. கரையிலேயே பழைய மண்ட பம். மண்டபத்தை யொட்டி ஒரு வழி பழைய வீட்டுக்குச் சென்றது. முந்தைய நாள் அவன் பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த வழியில் பழைய வீட்டுக்குப் போனான். ராம்சுந்தரும் கூட இருந்தான்.

அமைதியான, ஜன நடமாட்டமற்ற வழி. அதன் இருபுறமும் செங்கற்களால் கட்டிய வராந்தாக்கள். குளத்தில் கறுப்பு நிறத் தண்ணீர் -ஆனாலும் கூடப் பெரியப்பாவும் ராம்சுந்தரும் இருந்ததால்

அவனுக்குப் பயமாக இல்லை.

குளத்தங்கரையில் ஒரு பெரிய அரசமரம். அதற்குக் கீழே ஓர் ஆசிரமம். அந்த ஆசிரமத்தை ஒட்டிச் சென்ற வழி எவ்வளவு தூரம் போகிறதோ, சோனாவுக்குத் தெரியாது. ஆனால் அவனுக்குத் தோன்றியது, அந்த வழியோடு சென்றால் புல்தா ஏரி வரும் என்று.

இருகரைகளும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு அவ்வளவு பெரிய ஏரி அது. பெரிய பெரிய மீன்கள். அவற்றின் தலையில் சிந்தூரம் போன்ற சிவப்புப் பொட்டு. நதியும் ஏரியும் இணைந்திருந் தன. கறுப்புநிறத் தண்ணீர் ; அதில் எண்ணற்ற வெள்ளி மீன்கள். ஏரியின் நடுவில் ஒரு மைய மண்டபம். நீரின் ஆழத்தில் ஒரு பெரிய தீவு. ஏதாவதொரு பெரிய ஏரியைப் பார்த்தாலே புல்தா ஏரி நினைவுக்கு வரும் சோனாவுக்கு.

அவனுக்கு அமலாவின் முகமும் நினைவுக்கு வந்தது. திடீரென்று என்ன வந்துவிட்டது? அவனுக்குப் பைத்தியக்காரப் பெரியப்பா வுடன் பேசச் சங்கோசமாக இருந்தது. ஏரிகரையில் அரசமரத்தடியில் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்க விரும்பினான் அவன். அமலா அவனுக்குத் தண்ணீருக்கடியில் நடக்கும் வெள்ளி மீன்களின் விளையாட்டைக் காட்டி, அந்த விளையாட்டில் அவனை ஒரு ராஜ

39611111 1111111111

குமாரனாக்கிவிட்டு இப்போது ஆற்றங்கரையில் விட்டு விட்டதாக அவனுக்குத் தோன்றியது.

அந்தப் பழைய வீடு-வீடு என்று சொல்ல லாயக்கில்லை. செங் கல்லும் மரமுமாக நின்றுகொண் டிருக்கும் இடிந்த கட்டிடம் ; இடிந்துபோன அங்கணங்கள் ; காரை உதிர்ந்த நடன மண்டபம்.

கோயிலுக்கென்று விட்டிருந்த சொத்துக்களின் வருமானத்தி லிருந்து அங்கே பூஜை நடந்தது. இந்த ஜமின்தாரின் முன்னோர்கள் இந்த வீட்டில் வசித்து வந்தபோதுதான் அவர்களுக்கு ஜமீன் தாரி கிடைத்தது. அவர்களுடைய பெயர் என்னவோ, சோனாவுக்கு மறந்து போய்விட்டது.

ஒரு நாள் ராம்சுந்தர் ஒரு யானையின் கதையைச் சொல்லியிருந்தான். அந்த யானை நதியைக் கடந்தபோது அதன் சங்கிலியில் ஸ்பரிசமணி தட்டுப்பட்டதாம், இரும்பு முதலிய உலோகங்களில் அந்த மணி பட்டால் அவை தங்கமாகிவிடும். அந்த யானை தான் அந்தக் குடும்பத்துக்கு அதிருஷ்டத்தைக் கொண்டு வந்ததாம்.

மர நிழலில் உட்கார்ந்துகொண்டு இந்த மாதிரியான கதைகள் சொல்ல ரொம்பப் பிடிக்கும் ராம்சுந்தருக்கு. நவமியில் பலியிடப்படப் போகும் எருமை மாடு வெளியே புல் மேய்வதை ஆபீஸ் கட்டி டத்தில் ஒரு நாற்காலியின் மேல் தனிமையில் உட்கார்ந்தவாறே பார்த்தான் சோனா. இன்னும் சற்று நேரத்தில் ராம்சுந்தர் அதைக் குளிப்பாட்ட இழுத்துக்கொண்டு போவான்.

சோனா ஒரு தடலை காட்டுப் பாதையில் ஓர் எருமையின் தலையை யும் முண்டத்தையும் தூக்கிச் சென்றதைப் பார்த்துவிட்டுப் பயந்து போய்க் காட்டுக்குள் வழி தவறிவிட்டான். அவன் அதுவரை உயிருள்ள எருமையையே பார்த்ததில்லை. அந்த எருமைக்கு அருகில் போகவே கஷ்டமாக இருந்தது அவனுக்கு. எருமைக்கு அருகில் போய் நின்று அது புல் மேய்வதைப் பார்க்க நினைத்தான் அவன். ஆனால் அது பலியிடப்படப் போகிறது என்பதை நினைக்க நினைக்க உள்ளூற வேதனையாக இருந்தது அவனுக்கு. அதன் அருகில் போக அவனுக்குப் பிடிக்கவில்லை, எருமையின் முதுகில் ஒரு மைனா உட்கார்ந்திருந்தது. அந்த மைனாவைப் பார்த்தபோது அவனுக்கு எருமையிடம் பரிவு ஏற்பட்டது. அதற்குப் புல்லைத் தன் கையால் பறித்துக் கொடுக்கவேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. பாவம், இன்னும் சற்று நேரத்தில் தான் செத்துப் போகப் போகிறோம் என்று அதற்குத் தெரியாது!

சோனாவைப் பற்றி விசாரித்துக்கொண்டு வர அமலா இரண்டு தடவை பிருந்தாவனியை அனுப்பினாள். இரண்டு தடவையும்

397அவன் அவளுடைய கண்களில் படாமல் ஆபீஸ் கட்டிடத்துக்குள் எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டான். பிருந்தாவனி அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். அவன் பதில் சொல்லவில்லை, அவள் திரும்பிப் போய்விட்டாள், இந்தப் பிருந்தாவனிதான் அமலாலையும் கமலாவையும் வளர்த்தவள் என்று சோனா கேள்விப் பட்டிருந்தான். அமலா. கமலாவின் தாய் நல்ல அழகி, அவள் கல்கத்தாவில் தன் அறையில் ஜன்னலருகே தனியாக உட்கார்ந் திருப்பாள். ஜன்னல் வழியே கோட்டைச் சுவர் தெரியும். பெண்கள் பிறந்த பிறகு அவள் அந்த அறையைவிட்டு அதிகம் வெளியே வருவதில்லை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாதா கோவிலுக்குப் போவாள். அமலா, கமலாவின் தந்தையைப் பார்த்தால் சோனா வுக்குப் பரிதாபமாக இருந்தது. அவருடைய முகத்தில் எப்போதும் ஒரு வருத்தம் தெரிந்தது. அதனால்தான் அவன் எவ்வளவுதான் அமலா, கமலாவிடமிருந்து விலகிவிட விரும்பினாலும் அவர்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியவில்லை அவனால். அவர்கள் விஷயத்தில் அவனிடம் உள்ளுற ஒரு பலவீனம் இருந்தது. ஆயினும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்போது அவனுக்குப் பயம் ஏற்பட்டது.

அமலா தானே ஒரு தடலை ஆபீஸ் கட்டிடத்துக்குக் கமலா வுடன் வந்தாள், சோனாவைப் பார்க்க.

"ஏய், நீங்க சோனாவைப் பார்த்தீங்களா ? சோனா எங்கே? சோனாவைக் காணோமே!"

ராம்சுந்தரைக் கேட்டதற்கு, "எருமை மாட்டுக்கிட்டே நின்னுக் கிட்டிருக்காரு அவர்" என்றான் அவன்.

அவர்கள் வயல்வெளிக்குப் போனார்கள். எருமை மாடு புல் மேயும் இடத்தில் நிறையச் சிறுவர்களும் சிறுமியரும் கூட்டமாக நின்றார்கள். ஆனால் சோனா அங்கே இல்லை.

அவர்களால் சோனாவைக் கண்டு பிடிக்க முடியாது. ஏனென்றால் அவன் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அமலாவைக் கவனித் தான். ஆனால் தான் அங்கு இருப்பதைக் காட்டிக்கொள்ள வில்லை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவன் அமலா, கமலா விடமிருந்து விலகியிருக்க விரும்பினான். எங்கேயாவது ஒளிந்து மறைந்திருந்து இன்னும் இரண்டு நாட்களைக் கழித்துவிட்டால் பிறகு படகிலேறி ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் அவனுக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை. தாயின் நினைவு அவனை வருத் தியது. எப்போது மறுபடியும் தன் ஊருக்குப் போகப் போகிறோம், தன் ஊரின் சிறிய ஆற்றங்கரையில் இறங்கி அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்று ஏங்கினான் அவன்.

3981318!

இரண்டாவது பெரியப்பாவைப் பார்க்கவே முடிவதில்லை. அவர் எங்கேதான் போகிறாரென்று அவனுக்குத் தெரியவில்லை. இடை யிடையே அவர் சோனா குளிப்பதற்குமுன், அல்லது சாப்பிடுவதற்கு முன். பெட்டியைத் திறந்து அவனுக்கு வேண்டிய உடைகளை எடுத்துக் கொடுப்பார். சோனா, லால்ட்டு, பல்ட்டுவுடன் சீக்கிர மாகக் குளியலையும் சாப்பாட்டையும் முடித்துக்கொள்ள வேண்டும். திருவிழா நாளில் யார் யாரைக் கவனிக்க முடியும்? அவரவர்களே இலையைப் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார வேண்டியதுதான்.

சாதாரணமாகச் சோனா காலை வேளையில் பெண்கள் இருக்கும் பகுதியில் மற்றச் சிறுவர் சிறுமியருடன் உட்கார்ந்துகொண்டு நெய் சேர்த்துப் பிசைந்த பச்சரிசிச் சாதம், பருப்பு, வேகவைத்த சேப்பங் கிழங்கு, பரங்கிக்காய் கறி இவையெல்லாம் சாப்பிட்டுவிடுவான்.

முந்தின நாள் காலை நேரத்தில் அவன் பழைய வீட்டைப் பார்க்கப் போய்விட்டான். இல்லாவிட்டால் சாப்பாட்டு நேரத்தில் அமலா வைச் சந்திக்க நேர்ந்திருக்கும், இன்று ஓர் இடத்துக்கும் போக முடியாததால் அங்கேயே ஒளிந்து மறைந்துகொண்டு திரிந்தான். அவனைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். பிருந்தாவனி வந்துட்டுப் போய்விட்டாள். அமலா கமலாவும் வந்து தேடிவிட்டுப் போய் விட்டார்கள். சின்ன எசமானியம்மாள் அவனுக்காகச் சாப்பாட்டை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். சோனா இந்த வீட்டுக்கு வந்த பிறகு சின்ன எசமானிக்கு அவனை ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. இரண்டு நாட்களாக அவன் மற்றச் சிறுவர்களுடன் சாப்பாட்டுக்கு வராததைக் கண்டு கவலைப்பட்ட சின்ன எசமானி திரும்பத் திரும்ப ஆள் அனுப்பினாள் அவனைத் தேட.

பூபேந்திரநாத் பூஜை மண்டபத்திலிருந்து திரும்பி வந்தபோது ஒரு தொன்னை நிறைய சந்தேஷ் கொண்டு வந்திருந்தார். சோனா அதைச் சாப்பிட்டுவிட்டு நவமி பூஜை பார்ப்பதற்காக அதிகாலையில் லேயே பைத்தியக்காரப் பெரியப்பாவுடன் ஆற்றுக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிட்டான். பூஜைக்காக வாங்கின பாண்டையும் சட்டையையும் போட்டுக்கொண்டான்.

இன்று எருமைப் பலி நடக்கும். எருமையின் கொம்புகள் சிறிதாக இருந்ததால் அதன் வயது கொஞ்சந்தான் என்று தோன்றியது. அது இன்னும் புல் மேய்ந்துகொண் டிருந்தது. அது புல்லைக் கடிப்பதால் ஒலி உண்டாகிறது. அதைக் கேட்டுக்கொண்டே நாற்புறமும் திரும்பிப் பார்த்தான் சோனா, எவ்வளவு ஏற்பாடுகள்! எருமைக்குப் புல், பூ, பழம் எல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள். அதன் கழுத்தில் ஒரு செம்பரத்தம் பூமாலையைப் போட்டார்கள். மாலையுடன் ராஜா

399 399வைப் போல் நின்றது எருமை. அதைச் சுற்றிக் கூடியிருந்த சிறுவர் கள் அதன் நீலநிறக் கண்களைப் பார்த்தார்கள்,

பலி கொடுக்கும் சமயத்தில் அந்தக் கண்கள் சிவப்பாக ஆகிவிடும். சோனா அங்கிருந்து நடந்து வந்து ஆபீஸ் கட்டிடத்தின் படிகளின் மேல் நின்றான். பிறகு பூஜை மண்டபத்துக்குள் நுழைந்தான். அங்கே ராம்சுந்தர் இரண்டு பளபளப்பான, நீளக் கத்திகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இன்று ஆட்டுக் குட்டிகளின் பலியும் உண்டு. உட்கார்ந்துகொண்டே இருந்தான் ராம்சுந்தர். எருமையும் ஆட்டுக்குட்டிகளும் பலியிடப்படும்போது வீட்டுப் பெண்களும் அவர்களுடைய தோழிகளும் முதல் மாடியில் தொங்கும் தட்டிக்குப் பின்னாலிருந்துகொண்டு, "ஹே அம்மா ! தேவி கல்யாண சுந்தரி ! மகாகாலனோட ஆத்யாசக்தி !" என்றெல்லாம் அம்மனை ஸ்தோத் திரம் செய்து கை கூப்புவார்கள், கீழே விழுந்து வணங்குவார்கள்,

ஆட்டு மாமிசந்தான் நவமி பூஜையில் பிரசாதம். பூஜை முடிந் ததும் பலியிடப்பட்ட ஆட்டுமுண்டங்களைச் சமையலறைக்கு எடுத் துப் போவார்கள். கழுவிய பெரிய பெரிய அண்டாக்கள் உள்ளன. அங்கே நகுல் ஆட்டுத் தோலை உறிப்பதற்காகச் சமையலறை வராந்தாவில் கயிறு கட்டி வைத்தான். பலி முடிந்ததும் வேலைகள் ஜரூராகத் தொடங்கிவிடும். பெரிய பெரிய அண்டாக்களில் ஆட்டு மாமிசம் சமைக்கப்படும். சீதலக்ஷாவுக்கு மறுகரையிலிருந்து வந் திருக்கும் ஆட்கள் எருமையின் உடலை மூங்கிலில் கட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ரக்ஷித் பெரியப்பா அவர்களுடன் ஏதோ பேசிக் கணக்குத் தீர்த்துக்கொண் டிருந்தார்.

சோனா ராம்சுந்தருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். ராம்சுந்தர் இரண்டு கத்திகளையும் திருப்பித் திருப்பித் தீட்டினான். அடிக்கடி அவன் அக்கறையுடன் கத்திகளைத் தடவித் தடவிப் பார்த்தான், அவை கூர்மையாக உள்ளனவா என்று.

முன்பொரு தடவை சோனா ஸோனாலி பாலி ஆற்றின் படுகையில் தர்மூஜ் வயலில் குழி தோண்டி அதில் ஒரு மாலினி மீனைக் கொண்டு வந்து போட்டான். தர்மூஜ் இலையில் தண்ணீர் கொண்டு வந்து குழியில் ஊற்றினான், மீன் சாகாமல் இருப்பதற்காக. இனிமேல் பயம் இல்லை, மீன் பிழைத்துவிடும் என்று நினைத்துக்கொண்டு குழிக்கு முன்னால் உட்கார்ந்து அக்கறையுடன் மீனைக் கவனித்தானே, அது போல் அக்கறையுடன் ராம்சுந்தர் கத்திகளைத் தீட்டினான். அவன் தன் விரலில் எச்சிலைத் துப்பிக்கொண்டு அதனால் கத்தியைத் தடவிப் பார்த்து அது கூராகிவிட்டதா என்று சோதித்தான். ஒரு பெரிய பிராணியின் கழுத்தை ஒரே வெட்டில் துண்டித்துவிடுவது

400ஏரியின் ஆழத்துக்குள் முழுகுவதைப் போல் மிகக் கஷ்டமான காரியந்தான். முமுகினவன் மேலே கிளம்பி வருவானா, மாட்டானா என்பதே சந்தேகம்.

சரியாகப் பத்து மணிக்குப் பலி நடக்கும். நாற்புறமும் ஒரே கோலா கலம், பரபரப்பு. யாருமே அமைதியாக உட்கார்ந்திருக்கவில்லை.

இரண்டாவது பெரியப்பா இரண்டு தடவை அவனைக் கடந்து வராந்தாவுக்குப் போனார். கத்தி தீட்டும் ராம்சுந்தர், தான் கத்தி தீட்டு வதை வியப்புடன் சோனா பார்த்துக்கொண் டிருப்பதைக் கவனித் தான். பெரியண்ணா, இரண்டாவது அண்ணா, மற்றச் சிறுவர்கள் எல்லாரும் பரபரப்புடன் இங்குமங்கும் போய்க்கொண் டிருந்தார்கள்.

அவர்கள் சோனாவைப் பலமுறை பார்த்தும் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. நவமி பூஜை முடிந்த பிறகு தான் எல்லாரும் மற்றவர் களைக் கவனிப்பார்கள், அவர்களுடன் பேசுவார்கள். ஆகையால் சோனாவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ரொம்பப் பசியெடுத்தது. இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை அவனால். அவன் காலையில் சாப்பிடவில்லை. அவனுக்குத் தினம் காலையில் பழையது சாப்பிட்டுப் பழக்கம்,

அன்று ஒரு நாள் அவன் பாதிமாலைத் தொட்டுவிட்டதற்காக அவனைச் சாப்பிட விடவில்லையே, அன்று அவனுக்குப் பசித்தமாதிரி இன்றும் பசித்தது, சோனா பேசாமல் கத்திகளைப் பார்த்துக்கொண் டிருந்தான். அவை பளபளவென்று ஜொலித்தன. அவற்றைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது சோனாவுக்கு. ராம்சுந்தர் அவற்றை அருகருகே வைத்திருந்தான். ஒன்று எருமை பலிக்காக, இன்னொன்று ஆட்டுப் பலிக்காக. சோனா கண்ணிமைக்காமல் அவற்றையே பார்த்துக்கொண் டிருந்தான். ராம்சுந்தரின் முகம் இன்று ஏதோ மாறியிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு ; சற்றுப் பயமா கக் கூட இருந்தது.

சரியாகப் பத்து மணிக்குப் பலி. எல்லோரும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண் டிருந்தார்கள். மண்டபத்தில் உரத்த குரலில் மந்திரோச்சாடனம் நடந்தது. புரோகிதர்கள் வேகமாக மந்திரம் சொன்னார்கள்.

பத்து மணிக்குப் பத்து மேளங்கள், பத்து பாக்பைப்புகள், பத்து மிருதங்கங்கள் ஒலிக்கும். ஒவ்வொன்றும் பத்துப் பத்து. பலியிடப் படப்போகும் ஆடுகளின் எண்ணிக்கையும் பதது. எருமை மட்டுந் தான் ஒன்று. பயமாக இருந்தது சோனாவுக்கு, எருமைப் பலியை நினைத்தாலே.

அன்று இரவில் கண்ணாமூச்சி விளையாடும் சமயத்தில் பாசி பிடித்த அந்த இடிந்த அறைக்குள்ளே காகம், கா கா என்று கரைந்தது.

401

26இரவில் காகம் கரைவது கெட்ட சகுணம். அதனால் கேடு வரும். அமலா அவனை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தாள். ராம்சுந்தர் இப்போது கத்திகளைக் கூர்மையாகத் தீட்டிவிட்டுக் கவலையில்லாமல் மீசையை முறுக்கிக்கொண் டிருந்தான். அவன் தான் எருமையைப் பலி கொடுக்கப் போகிறான். இன்று காலை முதல் அவன் மாறிப் போயிருந்தான். விடியற்காலையில் ஆற்றுக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்தான். அறைக்குள் உட்கார்ந்துகொண்டு கஞ்சா குடித்தான். குடுமியில் செம்பரத்தம் பூவைச் சுற்றிக்கொண்டான். இப்போது கத்திகளை முன்னால் வைத்துக்கொண்டு பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந் திருந்தான். அழைப்பு வந்ததும் அவன் இரண்டு கத்திகளையும் தோளின் மேல் சாத்திக்கொண்டு ஓடிவருவான். கண்போலக் கத்தியில் சிந்தூரப் பொட்டு இடுவான். அப்புறம் அவனுக்கு முன்னே போய் நிற்க யாரால் முடியும் ?

சோனா தன் பக்கத்தில் பேசாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, "சோனா எசமான், இப்பப் போங்க! நான் அம்மனுக்கு ஆராதனை பண்ணணும்" என்று கூறிவிட்டு மறுபடி மெளனமாகிவிட்டான் ராம்சுந்தர்.

எவ்வளவு பெரிய பிராணியை ஒரே வீச்சில் வெட்டித் தள்ளப் போகிறான் ராம்சுந்தர்! எவ்வளவு தடிமனான கழுத்து எருமைக்கு ! எருமை கறுப்பாக, பளபளப்பாக இருந்தது. பத்து, இருபது ஆட்களால் கூடச் சமாளிக்க முடியாத முரட்டு எருமையை ஒரே வெட்டில் வெட்டப் போகிறான் அவன்.

பலியிடப்படும் எருமையைப் பிடித்துக்கொள்ளப் போகும் ஆட்களும் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்தார்கள். வட்ட மாக உட்கார்ந்துகொண்டு கஞ்சா சாப்பிட்டார்கள். இரண்டு கைகளை யும் தூக்கிக்கொண்டு ஏதோ உரக்கக் கூவினார்கள்.

சோனா இன்னும் அங்கேயே அசையாமல் உட்கார்ந்திருந்தான். இந்த ஆட்களைப் பார்த்துவிட்டு அவன் சுவர்ப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுவரில் விதவிதமான ஈட்டிகள், கத்திகள், கேடயங்கள் அலங்காரமாகத் தொங்க விடப்பட்டிருந்தன. ராம் சுந்தர் நாள் முழுவதும் இந்த அறையிலேயே படுத்துக் கிடப்பான் போலும். அவனுடைய உடலில் புலி, கரடி ஆகிய மிருகங்களின் உருவங்களைப் பச்சை குத்திக்கொண் டிருந்தான். அவன் பாபுக் களோடு சாலமரக் காட்டுக்கு வேட்டையாடப் போய்விட்டு வந்தால் நாராயண்கஞ்சுக்குப் போய்த் தன் கையிலோ, நெஞ்சிலோ, முதுகிலோ, மணிக்கட்டிலோ வேட்டைச் சித்திரங்களைப் பச்சை குத்திக்கொண்டு வந்துவிடுவான். அவன் எவ்வளவு புலி, மான்,

402கொக்கு வேட்டையாடியிருக்கிறான் என்பது அவன் தேகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ராம்சுந்தர் தனியாக இருக்கும்போது சோனா அவனுடைய உடம்பில் பச்சை குத்திருக்கும் புலிகளை எண்ணி, " நீங்க மூணு புலி கொன்னிருக்கீங்க" என்பான். ராம்சுந்தர் சிரித்துவிட்டுக் கையைத் தூக்கிக் காண்பிப்பான், "இங்கே ஒரு புலி இருக்கே, பார்த்திங்களா? புலியைக் கட்கத்திலே ஒளிச்சு வச்சுக் கிட்டிருக்கேனாக்கும்!''

"ஏன் ஒளிச்சு வச்சிருக்கீங்க ?'' "எனக்கு அது மேலே ரொம்ப ஆசை." "ஆசைன்னா என்ன ?" "உங்களுக்குக் கல்யாணம் -ஆகும்போது ஆசைன்னா என்னன்னு தெரியும் "

சோனா வெட்கமடைந்து, "போங்க !'' என்று ராம்சுந்தரைத் தள்ளிவிடுவான். "எனக்கு ஒரு மான்குட்டி கொண்டு வந்து தருவீங்களா?'' என்று கேட்பான்.

பாபுக்கள் வைத்திருக்கும் மிருகக்காட்சிச் சாலையில் உள்ள மிருகங்கள் எல்லாம் ராம்சுந்தர் பிடித்து வந்தவைதாம்.

" காட்டுக்குப் போனா எனக்கு மான்குட்டி கொண்டுவந்து தரீங்களா?''

"எங்கே வச்சுக்குவீங்க ?"

• ஊருக்குக் கொண்டு போவேன்." "என்ன போடுவீங்க அதுக்கு ?" "புல்லுப் போடுவேன்.'' ""காட்டிலேருந்து கொண்டுவந்தா அது கோவிச்சுக்கிட்டு இருக்கும். புல்லுத் திங்காது.''

''ஏன் கோவிச்சுக்கும் ?" "காட்டு மிருகம் காட்டிலே இருக்கத்தான் ஆசைப்படும்." ''கமலா கிட்டே ஒரு மான் இருக்கே! அது ஏன் கோவிச்சுக் கல்லே ?"

"அந்தப் பொண்ணுங்க எவ்வளவு அழகா இருக்காங்க! என்ன அழகான முகம், என்ன அழகான கண்ணு! என்னமாப் பளபளன்னு இருக்காங்க ? அவங்க பேசினா உங்களுக்குக் கோபம் வருமா, சொல்லுங்க. அவங்களோடே விளையாட, பேச ஆசையா இருக்கு, இல்லே ?"

“போங்க, போங்க! நீங்க கெட்ட பேச்செல்லாம் சொல்றீங்க," அப்படி யெல்லாம் வேடிக்கையாகப் பேசும் ராம்சுந்தர் இப்போது “உம்' மென்று உட்கார்ந்திருந்தான். அவனுடைய நெற்றியில் ஒரு பெரிய சிவப்புச் சந்தனப் பொட்டு யாரையும் லட்சியம் செய்ய

403வில்லை அவன். எல்லாரும் அவன் அருகில் வரக்கூடப் பயப்பட் டார்கள். அமலாவின் அப்பா ஒரு தடவை அந்தப் பக்கம் வந்தார். ராம்சுந்தர் தன் இஷ்டப்படி காலைப் பரப்பிக்கொண்டு உட்கார்ந் திருப்பதைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார். அவனுடைய கண்கள் செம்பரத்தம் பூப்போல் சிவந் திருந்தன. அவன் அடிக்கடி பக்கத்து அறைக்குள் நுழைந்து எதையோ சாப்பிட்டுவிட்டு வந்தான். அவனுடைய வாயிலிருந்து ஏதோ காரமான நெடி வந்தது.

சோனா பூஜை மண்டபத்தில் போய் நின்றான். ஒரு கொண்டைப் புறா லஸ்தர் விளக்கின் மேல் உட்கார்ந்துகொண்டு வெகு நேரமாகக் கூவியது. சோனா லஸ்தர் விளக்கில் தன் முகம் பிரதிபலிப்பதைப் பார்க்க முயற்சி செய்தான். லஸ்தர் விளக்கின் கண்ணாடித் துண்டுகள் காற்றில் மெல்ல அசைந்தன. அவை வண்ணத்துப் பூச்சியைப் போல் செதுக்கப்பட்டிருந்தன. அவை அசைந்து ஒன்றோடொன்று உராயும்போது கலகலவென்று சப்தம் உண்டாகியது. அந்தச் சப்தத்தைக் கேட்டு நிமிர்ந்த சோனா துர்க்கையம்மன் தன் பெரிய விழிகளால் அவன் பக்கம் பார்ப்பதைக் கண்டான். அவன் கொஞ்சம் நகர்ந்து நின்றான். தேவியின் பார்வையும் அவன் பக்கம் நகர்ந்ததுபோல் இருந்தது. அவன் பயந்துபோய்ச் சுவரோடு சுவராக நின்றான். பயந்துபோனால் அவன் புஸ்தகத்திலிருப்பது போல், அமலா, கமலாவைப் போல் பேச ஆரம்பித்துவிடுவான். தன் பாட்டி அடிக்கடி சொல்வதுபோல் ''அம்மா துர்க்கே! என்னோட பெரியப்பாவைச் சொஸ்தமாக்கிடு"

என்று வேண்டிக்கொண்டான்,

ஜிகினா அலங்காரத்தில் அம்மனின் முகம் பளபளவென்று ஜொலித தது. சாம்பிராணிப் புகையில் தேவியின் முகம் அசைவது போல் தோன்றியது. மூக்கில் தொங்கும் வளையமும் அசைவது போல் இருந்தது.

இரண்டாவது பெரியப்பா ஒரு பட்டாடை அணிந்துகொண்டு வெகு நேரமாகச் சண்டி ஸ்தோத்திரம் சொல்லிக்கொண் டிருந்தார். புரோகிதர் எல்லா இடங்களிலும் பூக்களையும் வில்வ இலைகளையும் தூவினார். நைவேத்தியப் பொருட்கள் குவிந்து கிடந்தன. பலவிதப் பழங்களின் வாசனை.

பலி நேரம் நெருங்கிவிட்டது. பத்து மேளங்கள் முழங்கின. யாரோ போனார்கள், எருமையை இழுத்துக்கொண்டு வர. அம்மனின் கண கொஞ்சங் கொஞ்சமாகச் சிவந்து கொண்டு வந்தது. எல்லோரும் எருமைப் பலி பார்ப்பதற்காக நல்ல இடம் பிடித்துக்

4041

:

கொண்டு நின்றார்கள். சோனா சுவரின் மேல் சாய்ந்தவாறு நின்றான்.

அசைய முடியவில்லை அவனால்.

ராம்சுந்தர் இரண்டே வெட்டில் இரண்டு ஆடுகளைப் பலி கொடுத்துவிட்டான். சோனா கண்களை மூடிக்கொண்டு விட்டான். அவன் கண் திறந்தபோது ஆட்டுக்குட்டிகளின் வெட்டுண்ட முண்டங்கள் துடித்துக்கொண் டிருந்தன. அவன் தேவியிடம் வேண்டிக்கொண்டான், "நான் இனிமேல் அப்படிப் பண்ண மாட் டேன் அம்மா!'' என்று.

அவன் ஒரு தூண்மேல் சாய்ந்துகொண் டிருந்தான். மாடியில் மூங்கில் தட்டி தொங்கியது. அதன் மறைவில் வீட்டுப் பெண்களும் வேலைக்காரிகளும் நின்றுகொண்டு பலியைத் தரிசனம் செய்தார் கள். பயத்தால் கல்லாய்ச் சமைந்து போய் நின்றான் சோனா. தேவி அவனை யே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண் டிருப்பது போல் இருந்தது. இரத்தச் சிவப்பான கண்களை உருட்டிக்கொண்டு தேவி கேட்டாள் : "நீ என்ன பண்ணினே, சோனா?'

அவன் சொன்னான் ; "நான் ஒண்ணும் பண்ணல்லே, அம்மா!" காற்று வீசியது. லஸ்தர் விளக்கின் கண்ணாடி மணிகள் கலகல வென்ற ஒலியுடன் அசைந்தன. கொண்டைப்புறா ஊமத்தம் பூக் கண்ணாடியின் மேல் உட்கார்ந்துகொண்டு பலியைப் பார்த் தது. கீழே இடம் இல்லை. மண்டபத்தில் நாற்புறமும் வராந்தாவில் எங்கும் ஒரே கூட்டம். புறாவுக்கு மட்டும் நல்ல இடம் கிடைத்து விட்டது. அமலாவும், கமலாவும் மூங்கில் தட்டிக்குப் பின்னாலிருந்து கொண்டு பலியைப் பார்த்தார்களோ, அல்லது கூட்டத்தில்

அவனைத் தேடினார்களோ!

இப்போது சோனாவை யாரும் பார்க்க முடியாது. அவனுக்கு முன்னால் நின்றவர்கள் அவனை நன்றாக மறைத்துவிட்டார்கள். இப்போது துர்க்கையம்மன் அவனைப் பார்க்கவில்லை. அவன் சப்தம் செய்யாமல் தலையைக் குனிந்துகொண்டு ஓடிப் போய்விடும் எண்ணத்துடன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வாயிற்படியருகில் வந்ததும், யாரோ ஒருவர் அவனுடைய கையைப் பிடித்து அவனைத் தன் தோளின மேல் ஏற்றிக்கொண்டு விட்டார்.

சிலர் எருமையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். சாம்பிராணி, ஊதுபத்திகளின் மணம் போதை ஊட்டியது. அவற் றின் புகை காரணமாகத் துர்க்கையின் முகம் தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் எருமை மாட்டுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. துர்க்கையின் மூக்கில் ஒரு பெரிய வளையம் தொங்கியது. தேவியின் கண்களில் தான் என்ன காம்பீர்யம்!

11

405 405துர்க்கையை ஆராதிக்கும் பாவனையில் எருமை நிமிர்ந்து பார்த்தது. அந்தச் சமயத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் அதைப் பலியிடும் கட்டை மேல் தள்ளிவிட்டார்கள். அதன் கால்களைக் கயிற்றால் கட்டி யிருந்தார்கள். கயிற்றைச் சிலர் இழுத்ததும் எருமை இடறிக் கீழே விழுந்தது. அதன நாக்கு கீழே தொங்கியது. அதிலிருந்து எச்சில் வழிந்தது. கோங், கோங் என்ற ஒலி வந்தது அதனிடமிருந்து. யாரோ அதன் கழுத்தை அமுக்கியதும் அந்த ஒலி நின்றுவிட்டது. அதன் ஓலம் யார் காதிலும் விழவில்லை. பல மத்தளங்களின் சப்தத்திலும் அதன் எதிரொலியிலும் அந்த மாளிகையும், எருமையும், சோனாலும் அதிர்ந்து ஆடினார்கள், காற்றில் அசையும் லஸ்தர் விளக்கு மணிகள் ஜலதரங்கம் போல் ஒலியெழுப்பின. துர்க்கை யின் முகம் ஜொலித்தது,

பலி நடந்தது. சோனாவின் இரண்டாவது பெரியப்பா வெட்டுண்ட முண்டங்களை அடுக்கிவைத்தார். வெட்டிய தலைகளில் மண்ணால் சின்னஞ் சிறு நெய் விளக்குகளை ஏற்றினார்கள். எருமைப் பலிதான் கடைசி, வாத்தியம் வாசிப்பவர்கள் ஆடிக் கொண்டே வாசித்தார்கள். எல்லாரும் 'துர்க்கைக்கு ஜே. சண்டியன்னைக்கு ஜே, அன்னபூர்ணா வுக்கு ஜே!' என்று கோஷம் போட்டார்கள்.

'ஆதிசக்தி (மகாமாயாவுக்கு ஜே! அசுரவினாசினிக்கு ஜே! மதுகைடப சம்ஹாரிணிக்கு ஜே!'

ராம்சுந்தர் கத்தியை எடுத்துக்கொண்டு முன்னே வந்தான். பிரதிமையின் முகம் அசைந்தது. மகிஷமர்த்தினி மகிஷத்தின் ரத்தத்தைக் குடித்துவிட்டுத் தானே நர்த்தனமாடத் தொடங்கி

விடுவாள் போலும்.

எருமையைப் பலிக்கட்டையின் மேல் தள்ளியவர்கள் எல்லாரும் அதன் முதுகை அமுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு கூடாரத்தை நான்கு பக்கங்களிலும் கயிறுகளால் பிடித்திழுத்து நிறுத்துவதைப் போல் நான்கு பேர் எருமையைக் கட்டிய கயிறுகளை நாற்புறமும் பிடித்துக்கொண் டிருந்தார்கள். ஆட்கள் அழுத்தும் அழுத்தத்தில் எருமையின் கழுத்து நீண்டது. அதன் கறுப்புத் தோல் நீலமாகத் தெரிந்தது. அதன் கழுத்தில் நெய் தடவித் தேய்த் தார்கள். சோனா எட்டி எட்டிப் பார்த்தான். தன்னை யார் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க அவனுக்கு நேரமில்லை.

இங்கிருந்து மூங்கில் தட்டி கண்ணுக்குத் தெரியவில்லை.

சோனா வைத்த கண் வாங்காமல் தேவியையே பார்த்துக்கொண் டிருந்தான். ராம்சுந்தர் கையில் கத்தியுடன் மெதுவாக முன்னே வந்தான். தேவியின் முன்னால் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ''அம்மா! தாயே! அன்னபூர்ணா!'' என்று கதறினான். இதையெல்லாம்

406154?

பார்த்துச் சோனா திகைத்தான். கயிறும் வைக்கோலும் மண்ணும் சேர்த்துச் செய்த இந்தப் பிரதிமைக்கு இந்த நிமிஷத்தில் என்ன மகிமை! என்ன பெருமை!

பாபுக்கள் கை கூப்பிக்கொண்டு நின்றார்கள். புரோகிதர் மணியடித்துக்கொண்டு பூக்களையும் வில்வத்தையும் மாட்டின் மேல் போட்டதும் ராம்சுந்தர் அதன் முன்னால் வந்து நின்றான். ஓர் ஆள் மாட்டின் வாலைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டான். அது வாலைச் சிலிர்த்துக்கொண்டது.

"அம்மா, தாயே! எல்லாம் உன் லீலை!'' என்று முழங்கினான் ராம்சுந்தர். அவன் கையை ஒரு முழ உயரத்துக்கு உயர்த்திக் கத்தியை மாட்டின் கழுத்தில் பாய்ச்சினான். சோனாவின் கண்ணுக்கு முன்னால் பளபளத்த அந்தக் கத்தி திடீரென்று மறைந்துவிட்டது. தலையும் முண்டமும் வெவ்வேறாக விழுந்தன.

குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் வெட்டப்பட்ட கழுத்திலிருந்து ரத்தம் குபுகுபுவென்று கொட்டியது. வெட்டப்பட்ட எருமைத் தலையைத் தம் தலைமேல் வைத்துக்கொண்டு நடந்தார் சோனாவின் பெரியப்பா.

உண்மையில் ராம்சுந்தர் கத்தியைத் தூக்கியதுமே கண்களை மூடிக் கொண்டு விட்டான் சோனா. அவன் கண்களைத் திறந்தபோது பெரி யப்பா எருமைத் தலையைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த் தான். அவர் எவ்வளவு பலசாலி, அவருக்குத் தேவியிடம் எவ்வளவு பக்தி என்று சோனாவுக்கு இப்போதுதான் புரிந்தன. அவர் தாம் சோனாவை இவ்வளவு நேரம் தோள்மேல் தூக்கிக்கொண் டிருந்திருக் கிறார். அவர் பலிக்கட்டையிலிருந்து ரத்தததை ஒரு மண்சட்டியில் எடுத்து எல்லாருக்கும் அதைக் கொண்டு திலகமிட்டார்.

''ஹே ஈசுவரி ! கருணைக் கடலே! உன்னை நகத்தால் கிள்ளினால் மண்ணும் சாயமும் விரலோடு வந்துவிடும். இருந்தாலும் உன் மகிமையே மகிமை!''

எல்லாரும் இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டிருப்பதைப் பார்த்துப் பைத்தியக்காரப் பெரியப்பா தரையில் விழுந்து புரண்டு சிரித்தார். கூட்டத்துக்குள் இரண்டாவது பெரியப்பாவைக் காண முடியவில்லை சோனாவால். மண்சட்டி எடுத்துவர மறந்துபோன வர்கள் சேம்பு இலைப்பிலோ வாழையிலையிலோ ரத்தத்தை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் வெறி பிடித்தவர்கள் போல் கையிலும்

காலிலும் ரத்தத்தை அப்பிக்கொண்டு நடனமாடினார்கள். சோனா அவர்களிடமிருந்து விலகி, உட்புறத் தூண ஒன்றின் மறைவில் நின்றான். பயத்தில் அவனுக்குப் பசி மறந்து போய்விட்டது. தன்னைத் தனியனாக, துணையில்லாதவனாக உணர்ந்தான் அவன்.

407அவனுக்குத் தன் தாயின் நினைவு வந்தது. அவன் தன் தாயின் பக்கத்தில் படுத்துக்கொண்டு எவ்வளவு நாளாகிவிட்டது! தாயின் பக்கத்தில் படுத்துக்கொள்ளாவிட்டால் அவனுக்குத் தூக்கம் வருவ தில்லை. அம்மாவின் மேல் காலைப் போட்டுக்கொண்டு அவளைத் திண்டாகப் பயன்படுத்தினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும்.

இப்போது அவன் உள்ளுறத் தன் தாயை நினைத்து ஏங்கினான்.

அம்மா நினைவோ, பசியோ, என்ன காரணமோ தெரியவில்லை; அவன் தூண் மேல் சாய்ந்துகொண்டு கேவிக் கேவியழத் தொடங் கினான். காலையிலிருந்து அவன் அநேகமாக ஒன்றுமே சாப்பிட வில்லை. அவனுடைய முகம் வற்றிப் போயிருந்தது. இவ்வளவு பேர் அவனைச் சுற்றிலும் இருந்தும் அவனால் யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டாவது பெரியப்பாவிடம் பேசப் பயம் அவனுக்கு. அவனுடைய அண்ணாக்களோ அவனை லட்சியம் செய் வதே இல்லை. எருமைப் பலி ஆனதுமே அவர்கள் மற்றப் பையன் களுடன் எங்கோ போய்விட்டார்கள்.

இப்போது சமையலறையில் பலியாடுகளின் மாமிசத்தைச் சமைத்துக் கொண்டிருப்பார்கள். அது தயாரானதும் பெரிய முற்றத் தில் இலை போடுவார்கள். எல்லாரும் சாப்பிட உட்காரும் போது சோனாவும் உட்காரலாம். சமையலறையிலிருந்து சாப்பாட்டுக்கு எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கொண்டு நின்றான் சோனா, அம்மாவை நினைத்து நினைத்து அழுகை வந்தது அவனுக்கு,

மாடிப்படிகளில் யாரோ இறங்கி வந்தார்கள்; அமலா, கமலா. "சோனா, நீ திலகம் இட்டுக்கல்லியா?" என்று அவர்கள் கேட்டார் கள்.

"இல்லே ." ''வா, திலகம் இட்டுக்கோ" என்று சொல்லி எங்கிருந்தோ ஒரு மண்சட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள் அமலா. அதில் ரத்தம் உறைந்து கிடந்தது. அமலா அதை எடுத்துச் சோனாவுக்குப் பொட்டு வைத்தாள். "நீ பொட்டு வச்சுக்கல்லேன்னா எப்படிப் பெரியவனாவே? எப்படி உனக்குப் புண்ணியம் வரும்?'' என்று கேட்டாள்.

சோனா பதில் எதுவும் சொல்லாமல், சற்று இருட்டாக இருந்த அந்த இடத்திலேயே நின்றுகொண் டிருந்தான், அவர்களைப் பார்த்த வாறு. ஜரிகை வேலை செய்த ஃபிராக், கையில் விலையுயர்ந்த கடிகாரம், வளையல், சுண்டு விரலில் வைர மோதிரம், 'பாப்' செய்த தலைமயிரை வெள்ளை ரிப்பனால் கட்டிக்கொண் டிருந்தார்கள் அவர்கள். அவர்களுடைய உடம்பிலிருந்து நல்ல மணம் வந்தது, தாமரைப் பூவின் வாசனை போல.

408அந்த இடம் இருட்டாயிருந்தாலும் சோனா அழுது கொண்டிருப் பதைக் கவனித்துவிட்டாள் அமலா. ''நீ எங்கே போயிருந்தே, சோனா? நாங்க உன்னைக் காலம்பறத்திலேருந்து தேடறோம்" என்றாள் அமலா.

சோனா பதில் சொல்லவில்லை. " சின்னச் சித்தி உன்னைக் கூப்பிடறா, போ !" என்று கமலா சொன்னாள்.

"நான் எருமைப் பலி ஒரு தடவை கூடப் பார்த்ததில்லே" என்று சோனா சொன்னான்.

" நீ ஏன் அழுதுகிண்டிருந்தே?" என்று அமலா கேட்டாள். “நான் எங்கே அழுதேன்?" " நீ அழுதியே! நான் பார்த்தேனே !” தான் அகப்பட்டுக்கொண்டு விட்டதை அறிந்த சோனா, "பொட்டு இட்டுக்கிடா பாவமெல்லாம் போயிடுமா?" என்று கேட்டான்.

அமலா, “போயிடும்!'' என்று சொல்லி அவனுடைய தோளின் மேல் கையை வைத்து அவனைச் சற்று உட்புறம் அழைத்துப் போய், "சோனா, ஒருத்தர்கிட்டேயும் சொல்லல்லியே?" என்று கேட்டாள்.

"இல்லே ." " நீ ஏன் என்னை அத்தைன்னு கூப்பிட மாட்டேங்கறே? நான் உன்னைவிட எவ்வளவு பெரியவ!" "எனக்கு வெட்கமா இருக்கு.” " நீ என்னை அததைன்னு கூப்பிடணும். நான் சொல்றபடி கேட் கறும் புரிஞ்சுதா?''

சோனா பதில் சொல்லவில்லை. "இன்னிக்கு ராத்திரி மொட்டை மாடிக்கு வரியா ?" "சீ !' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிப் போனான் சோனா. பூஜை மண்டபத்தில் பலியிட்ட மிருகங்களின் தலைகள் கிடந்தன. பத்து ஆட்டுத் தலைகள். அவற்றுக்கு நடுவில் எருமைத் தலை. ஒவ்வொரு தலையிலும் ஒரு விளக்கு. சில விளக்குகள் அணைந்து போய்விட்டன. எல்லாத் தலைகளிலும் இருந்த கண்கள் தேவியைப் பார்த்துக்கொண் டிருந்தன. இப்போது அங்கே கூட்டம் இல்லை. பலிக்கட்டையால் கொஞ்சங்கூட ரத்தம் இல்லை. எல்லாரும் அதை

வழித்துத் துடைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

சோனா ஏரிகரைக்குப் போனான். நல்ல வெயில் வந்திருந்தது. காலையில் சரத்கால மழை ஒரு பாட்டம் பெய்துவிட்டிருந்தது. புல், பூ, பறவை எல்லாம் சுத்தமாக, புதுமையாக இருந்தன. அப்படி யும் சோனாவுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. அப்போது அவன்

409பைத்தியக்காரப் பெரியப்பா மயில் கூண்டுக்கருகில் உட்கார்ந்திருப் பதைக் கண்டான், வடப்புறத்து வானத்தில் ஒரு கறுப்பு மேகம். அதைப் பார்த்துவிட்டு மயில் தோகை விரித்து ஆடியது. அதைப் பார்த்துக்கொண்டு தம்மை மறந்து உட்கார்ந்திருந்தார் பெரியப்பா.

சோனா கூப்பிட்டான், "பெரியப்பா !" கையுங்களவுமாகப் பிடிபட்டவர்போல் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார் மணீந்திர நாத். அவருடைய இந்தப் பாவத்தைக் கவனிக் காமலேயே சோனா அவரிடம் ரகசியமாகச் சொன்னான் : ""வாங்க, பெரியப்பா! நாம் ஊருக்குப் போயிடுவோம்."

சோனா சாப்பிடவில்லை என்று மணீந்திர நாததுக்குத் தெரிந்து விட்டது போலும். அவனுடைய கண்கள் இடுங்கிப் போயிருந்தன. அவர் அவசர அவசரமாக எழுந்து சோனாவை நேராகச் சமைய லறைக்கு இழுத்துக்கொண்டு போனார். தாமே இரண்டு வாழை இலைகளை எடுத்துக்கொண்டு வந்தார். ஒரு மண் கோப்பையில் தண்ணீர் எடுத்து வைத்தார். பிறகு வராந்தாவைக் கடந்து வந்து சமையற்காரப் பிராமணனுக்குச் சை.3)க காட்டினார்.

அவர் பையனுக்குச் சாப்பாடு போடச் சொல்கிறார் என்று நகுலுக் குப் புரிந்தது. இன்னும் மகாப் பிரசாதம் தயாராகவில்லை. பெரிய முற்றத்தில் இலை போட்டுக்கொண் டிருந்தார்கள், பையனை அங்கே போய் உட்காரும்படி சொல்லியிருக்கலாம் நகுல். ஆனால் பெரியவரே வந்து சொல்லும்போது எப்படி. மறுப்பது? நகுல் தானே சாப்பாடு பரிமாறினான். பைத்தியக்கார மனிதர் அக்கறையுடன் சாதத்தைப் பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டிச் சோனாவுக்குக் கொடுத்தார். குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். சோனாவுக்கு எப்படிச் சாப்பிடப் பிடிக்குமோ அப்படிச் சாதத்தில் உப்புக் கலந்து பிசைந்து கொடுத்தார்.

அப்படியும் சோனாவால் சாப்பிட முடியவில்லை. காரணம், அவன் பூஜை மண்டபத்தில் வெட்டுண்ட எருமை கிடப்பதைப் பார்த்து விட்டான். என்ன அருவருப்பான காட்சி! அவனுக்கு வாந்தி எடுக்கும் போல் இருந்தது.

சாப்பிட்டுவிட்டு வந்ததும் இரண்டாவது பெரியப்பா படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்துவிட்டார். சோனா வுக்குத் தூக்கம் வர வில்லை. பைத்தியக்காரப் பெரியப்பா வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நாய்க்காகத் தனியாக ஒரு தொன்னையில் சாப்பாடு கொண்டு வந்திருந்தார் அவர். அதை வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு அவருடைய காலடியில் தூங்கியது அது. இந்தச் சமயத்தில் அவரோடு வெளியில் கிளம்பத் தோன்றியது சோனாவுக்கு. யானை லாயத்துக்குப் போய் அங்கே

410யானைக்கருகில் சற்று நேரம் உட்காரலாம். எருமைப் பலியால் ஏற்பட்ட பயம் சோனாவை யானையிடம் போகத் தூண்டியது. பெரியப்பாவுக்கு யானையைக் காட்டலாம். இப்படி யானை, புல், பூ. பறவைகள் இவற்றைக் காட்டிக் காட்டி அவரைச் சொஸ்தமாக்கி விடுவான் சோனா.

அவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தார்கள். எதிரில் சீதலக்ஷா நதி. அவர்கள் நதிக்கரையோடு நடந்தார்கள். மேலே நிர்மலமான ஆகாயம், இருபுறமும் பனை மரங்கள், கரையில் நிறைய மனிதர்கள். அவர்கள் வேகமாகப் போனார்கள், யானையைப் பார்க்க, சோனா பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு போனான். அவர்கள் ஆபீஸ் கட்டிடத்தைத் தாண்டி வந்தபோது ஜாத்ராக் குழுவின் தலைவன் அவர்களைப் பார் ததுவிட்டான்.

ராமாயணம் படித்துக்கொண் டிருந்த அவன் மூக்குக் கண்ணாடி யைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது பைத்தியக்கார மனிதர் பையன் கையைப் பிடித்துக்கொண்டு நடப்பது தெரிந்தது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு ராஜா அரிச்சந்திரனின் நினைவு வந்தது. மரங்களுக்கு நடுலே போய்க்கொண் டிருந்த அவருடைய முகமும் கை கால்களும் நாயின் நிழலும் தெளிவில்லாமல் அவன் கண்ணில் பட்டன.!

அக்கம்பக்கம் பார்க்காமல் நேரே நிமிர்ந்து பார்த்துக்கொண்டு நடக்கும் இவரைப் போன்ற ஒரு பற்றற்ற மனிதரைத் தன் ஜாத் ராவிட சித்திரிக்க எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

அவரைப் பார்த்ததும் அவன் பெருமூச்சு விட்டான்.

பெரியப்பாவுடன் நடக்கத் தொடங்கியதுமே சோனாவின் பயமும் வருத்தமும் பறந்தோடிவிட்டன. அவன் முன்போல் உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். அவன் அடிக்கடி பெரியப்பாவை எச்சரித் தான், யானையிடம் விஷமம் செய்யாமல் இருக்கும்படி. விஷ மம் செய்தால் தன் தந்தையிடமோ இரண்டாவது பெரியப்பாவிடமோ சொல்லிவிடப் போவதாக அவரைப் பயமுறுத்தினான்.

அவர்கள் காளிகோவில் போகும் வழியை அடைந்தனர். கடைத்தெரு வழியாகவும் காளி கோவிலுக்குப் போக முடியும். ஆனால் யானை லாயத்துக்குப் போக அந்த வழியில் போகவேண்டிய தில்லை. வலப் பக்கம் உமேஷ் பாபுவின் மண்டபம். மண்டபத். துக்கு வடக்கே பாக்குத் தோப்பு. தோப்பைக் கடந்தால் மாந் தோட்டம். அங்கேதான் யானையைக் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது சோனாவால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை .

411பாதையில் வந்துகொண் டிருந்தபோதே யானையின் மணியோசை அவனுக்குக் கேட்டது. ஆகவே தோப்பில் நுழைந்ததும் யானை யைப் பார்த்துவிடலாம் என்று நினைத்திருந்தான் அவன், யானையைக் காணோம்! அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, காலை வேளையில் யானை லாயத்தில் இருக்கும் என்று.

நண்பகலில் ஜசீம் அதைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு அழைத்துப் போவான். பிறகு தோப்பில் சற்று நேரம் கட்டி வைத்திருப்பான். அங்கே அதற்குத் தீனி போடுவான் - வாழைமரம், இலவமரக் கிளைகள்.

தசமியன்று யானை அங்கே இருக்காது. அன்று காலையில் ஜசீம் யானையை வீடுவீடாக அழைத்துக்கொண்டு போவான். யானைக் காக அரிசி, அவல், பொரி, சந்தேஷ் எல்லாம் கேட்டு வாங்குவான். விடியற்காலையில் அவன் யானையின் நெற்றியில் சந்தனப் பொட்டு இடுவான். பலநிற நெட்டித் தட்டைகளால் அதற்கு அலங்காரம் செய்வான். ஜரிகை வேலைப்பாடு செய்த பட்டயத்தை அதன் தலையில் கட்டுவான்.

அவர்கள் மறுநாள் யானை மேலேறி உட்கார்ந்துகொண்டு தசராப் பார்க்கப் போகலாமென்று கமலா சொல்லியிருந்தாள். ''நீயும் எங்களுடன் வரவேண்டும், சோனா!" என்று சொல்லி யிருந்தாள் அமலா. அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

இப்போது யானை எங்கே இருக்கிறது, எந்தப் பக்கம் போக வேண்டும்? தோப்புக்குள்ளே போவதா, அல்லது மண்டபத்துப் பக்கமாகப் போவதா என்று தெரியவில்லை அவனுக்கு. நாய் தோப்புக்குள் நுழைந்து உறுமியது. அது யானையைப் பார்த்து விட்டது என்று சோனாவுக்குப் புரிந்தது.

அவன் நாயைப் பின்பற்றித் தோப்புக்குள் நுழைந்தான். யானையைக் கண்டான். அதன் கால்கள் சங்கிலியால் கட்டப்பட் டிருந்தன. அது முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தது. ஆனால் யானையால் நகர முடியவில்லை. காடும், மரங்களும், பறவை களும் புடைசூழச் சௌக்கியமாக இருந்தது யானை. சோனாவும் பெரியப்பாவும் சிறுகுழந்தைகளைப் போல் தங்களை மறந்து யானையைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். யானை முழங்கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தது. சோனாவையும், பைத்தியக்காரப் பெரியப்பாவையும் அடையாளங் கண்டுகொண்டு அவர்களுக்குச் சலாம் செய்தது.

நாயும் அவர்களுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு உறுமியது. "என்னை உனக்குத் தெரியல்லியா? நான்தான் இவங்களோட நாய்''

412என்று சொல்வது போல ; 'உன்னோடே ஒரு தடவை நதியைக் கடந்து வந்தேனே, ஞாபகமில்லையா?' என்று கேட்பது போல.

சோனா யானையைப் பார்க்காமல் பெரியப்பாவின் பக்கம் திரும்பிப் பார்த்தான. குழந்தை மாதிரி யானையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார் அவர். அந்தக் கள்ளங்கபடமற்ற, நிர்மலமான சிரிப்பைப் பார்த்த சோனாவுக்கு அவர் குணமடைந்து கொண்டு வருவதாகத் தோன்றியது. அவன் தன் தாயை மறந்து, அமலாவை யும் கமலாவையும் மறந்து, பாதிமாவை மறந்து பெரியப்பாவின் முதுகுப்புறம் அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு சந்தோஷத் தோடு தொங்கினான். "பெரியப்பா! சொல்லுங்க, ஒண்ணு!''

"ஒண்ணு !'' "ரெண்டு !'' "ரெண்டு !" யானைத் தும்பிக்கையை ஆட்டியது. அதன் கழுத்திலிருந்த மணி ஒலித்தது. சோனா சொல்லச் சொல்லப் பெரியப்பாவும் எண் களை வரிசையாகச் சொன்னார். அந்தத் தோப்பில் உட்கார்ந்து கொண்டு (சோனா அவருக்கு வாய்பாடு சொல்லிக் கொடுத்தான், ராகம் போட்டு, அவன் சொல்வதைச் சரியாகத் திருப்பிச் சொன்னார் பெரியப்பா.

''ஒண் ணு, சந்திரன் ஒண்ணு !'' "ரெண்டு, பட்டங்கள் ரெண்டு!'' *'மூன்று. கண்கள் மூணு!'' சோனா திடீரென்று எழுந்து நின்று இரு கைகளையும் தூக்கி உரக்கக் கூவினான் : " அப்பா, அம்மா, பாட்டி, சின்னப் பெரியப்பா, பெரியணணா, சின்னண்ணா, பெரியப்பா சொஸ்தமாயிட்டார்!" என்று கூவிக் கொண்டே மகிழ்ச்சியுடன் இங்குமங்கும் ஓடினான் சோனா. நாயும் அவனுடன் சேர்ந்து ஓடியது.

யானையின் கழுத்து மணி ஒலித்தது. பெரியப்பா எண்ணிக் கொண்டே போனார் - ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு....

படுத்த மாலதி எழுந்திருக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அவளுக்கு நினைவு திரும்பியது. அவள் கண் களைத் திறந்து பார்த்தாள். ஏதோ சொல்ல நினைத்து அவளுடைய உதடு அசைந்தது.

413191111111

ஆனால் வார்த்தை வெளியே வரவில்லை. அவள் தன் முந்தானையால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஜோட்டன் முந்தானையை விலக்கி விட்டு அவளுடன் பேச முயற்சி செய்தாள். மாலதி திரும்பத் திரும்ப முந்தானையால் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

நினைவு திரும்பிய மாலதிக்கு ஜோட்டனைப் பார்க்க மிகவும் ஆறுதலாக இருந்தது. இளமை கழிந்துவிட்ட ஜோட்டன் பீரின் தர்காவில் குடித்தனம் செய்தாள். வெற்றிலை பாக்குக்காக அல்லது அரிசிக் குறுணைக்காக வீட்டுக்கு வீடு போய் நெல் பொரித்து, அவல் இடித்துக் கொடுத்த ஜோட்டன். ஆனால் அந்த ஆறுதல் நீடிக்கவில்லை. தன் எதிர்காலத்தைப் பற்றிய நினைவு வந்ததும் அவளைச் சோகம் சூழ்ந்துகொண்டது. அப்போது மாலதிக்கு ஜோட்டனே பரமசத்துருவாகத் தோன்றினாள். எங்கேயோ காட்டில் விழுந்து கிடந்த மாலதி இங்கே எப்படி வந்தாள் ?

கோரைக் காட்டுக்குள் ஒளிந்திருந்த அவளை மூன்று பிராணிகள் - அவர்களை மனிதர்களாகவே கருத முடியாது - அவளை அணுகியதும் அவள் நினைவிழந்துவிட்டாள். இப்போது இங்கே, ஜோட்டனின் வீட்டில் இருக்கிறாள். இது ஜோட்டனின் வேலை. அந்த மனிதப் பிசாசுகள் அவளைக் காட்டிலேயே போட்டுவிட்டுப் போய்விட்டார் கள். அவளை எப்படியோ கண்டுபிடித்துத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறாளே ஜோட்டன்!

ஜோட்டனுக்கு மாலதிமேல் அப்படி என்ன விரோதம்? காட்டி லே விழுந்துகிடந்து செத்துப் போயிருந்தால் இந்த அதிருஷ்டங் கெட்ட முகத்தை யாருக்கும் காட்டவேண்டி யிருக்காது. ஜோட்டன் மேல் ஏற்பட்ட எரிச்சலால் அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை மாலதி.

பக்கிரிசாயபு பாலை எடுத்துக்கொண்டு வந்து மரத்தடியில் உட் கார்ந்திருந்தார். மாலதி குளித்த பிறகு பாலைக் காய்ச்சிக் கொடுக்க வேண்டும். மாலதி ஓர் இந்து விதவை. அவள் குளித்துவிட்டு ஈரத் துணியுடன் தான் பாலைக் காய்ச்சிக் குடிப்பாள். இந்த இடமே அவளுக்கு ஆசாரக் குறைவானதுதான். ஜோட்டன் மாலதியை எழுப்பினாள் "மாலதி! எழுந்திரு!''

பால், விறகு, ஒரு புதிய மண்சட்டி எல்லாம் தயாராக இருந்தன, மாலதிக்காக, தானே பாலைக் காய்ச்சி மாலதிக்குக் கொடுக்க ஜோட்டனுக்குத் துணிவு வரவில்லை. இந்து விதவைகளுக்கு எவ்வளவோ ஆசார நியமங்கள், கட்டுப்பாடுகள் உண்டு. மாலதிக்கு ஆறுதல் சொல்லத் துடித்தாள் ஜோட்டன். "ஏ பெண்ணே ! நீ இவ்வளவு நாள் உன் இளமையை ஜாக்கிரதையாகக் காப்பாத்தி வந்தே. சொப்பனங் கண்டுக்கிட்டு இருந்தே - புருஷனோடே 414

1111111வேடிக்கையும் விளையாட்டுமா இருந்த சொப்பனம். இப்போ நடந்தது நடந்திடுச்சு. இதோ பாரு, மண்பாத்திரம், புதுசு. சுத்தத் திலே இதுவும் தங்கமும் ஒண்ணு. இதை யார் தொட்டாலும் ஆசாரங் கெடாது, ஜாதி கெடாது. எழுந்திரு, மாலதி ! பாலைக் காய்ச்சிக் குடி!'' என்று ஜோட்டன் கூறினாள்.

மாலதி எழுந்திருக்கவில்லை ; அசையாமல் படுத்துக் கிடந்தாள், ஜோட்டன் பக்கிரிசாயபுவைக் கேட்டாள்; "என்ன செய்யறது ?" "என்ன செய்யச் சொல்றே ?'' ''நரேன்தாஸுக்குச் சொல்லியனுப்பணும்.'' '' அனுப்பேன்.'' "நான் எப்படி, அனுப்புவேன்? என்னாலே தனியாப் போக முடியுமா ?

“இப்பத்தானே சொன்னே நீயே படகோட்டிக்கிட்டுப் போகப் போவதாக ? துர்க்கா பூஜை பார்க்க."

"வேடிக்கை இருக்கட்டும். என்ன பண்றது, சொல்லுங்க ?'' "நான் என்ன சொல்றது?'' "சரி, உங்க இஷ்டப்படி செய்யுங்க" என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு ஜோட்டன் குடிசைக்குள் நுழைந்து, "மாலதி, என் கண் னோல்லியோ! எழுந்திரு! பாலைக் காய்ச்சிக் குடி. அப்புறம் உன்னைக் கொண்டுபோய் விடறேன்" என்று கூறினாள்.

மாலதி வியப்புடன் ஜோட்டனைப் பார்த்தாள். ''உன்னை உங்க வீட்டிலே கொண்டுபோய் விடறேன்." மாலதி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். "நானும் பக்கிரிசாயபுவும் உன்னோட வரோம்.'' மாலதி கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். இந்த அதிருஷ்டங்கெட்ட முகத்துடன் அவள் வீட்டுக்கு எப்படிப் போவாள்? அவள் எங்கே போவாள் ? யாரிடம் போவாள்? அவள் எங்காவது கண்காணாத இடத்துக்குப் போக வேண்டியதுதான், அல்லது தண்ணீரில் முழுகிச் சாக வேண்டியதுதான். அரற்றினாள் மாலதி.

"உனக்கு என்ன வந்தது இப்போ? ஒண்ணும் ஆயிடல்லே உனக்கு! சும்மாயிரு.''

"நான் எங்கே போவேன் ?" பக்கிரி சாயபு இதற்குள் மரத்தடியிலிருந்து வந்துவிட்டார். “ நீங்க போகல்லேன்னா என்னத்தைச் சாப்பிட்டுக்கிட்டு இங்கே இருப்பீங்க ? நான் ஒரு பக்கிரி. வேரையும் இலையையும் சாப்பிட்டுக் கிட்டு உசிரோடே இருக்கேன். உங்களுக்குப் பாலும் தயிரும் நெய்யும் எங்கே இருந்து கொண்டுவந்து கொடுப்பேன் ?''

415பக்கிரி சாயபுவைப் பார்த்துப் பயத்தால் வெளிறிப் போய்விட் டாள் மாலதி. அவருடைய நீண்ட நரைத்த தாடியிலிருந்து தண் ணீர் சொட்டியது. ஒரு ஈரத்துண்டைக் கட்டிக்கொண் டிருந்தார் அவர். அவருடைய கைகளிலும் கழுத்திலும் பெரிய பெரிய கண்ணாடிக் கல் மாலைகள், பூண்டுத் தைலத்தால் தயாரித்த

மையைக் கண்ணில் தீட்டிக்கொண டிருந்தார்.

மாலதியை விரட்ட வருபவர்போல் அவர் குடிசைக்குள் ஓடி வந்தார். "எழுந்திருங்க, எழுந்திருங்க, சொல்றேன் ! குளிச்சுட்டுப் பாலைக் காய்ச்சிக் குடிங்க. நான் கிழவன், தண்ணியிலே நீஞ்சிப் போய்ப் பால் கறந்துக்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடமாட்டீங்க அதை ?"

மாலதி அசையவில்லை. மாலதியின் பயத்தைப் பார்த்து ஜோட்டன் சிரித்துக்கொண்டாள்.

பககிரி சாயபு கண்களை உருட்டி மாலதியைப் பயமுறுத்தினார். “'சாப்பிட மாட்டீங்களா? அப்பனானை, சாப்பிட்டுத்தான் ஆகணும்'' என்று சொல்லிக்கொண்டே அவர் ஒரு பெரிய விறகுக் கட்டையை எடுத்துவந்தார். “எழுந்திருங்க, நான் ஒரு பைத்தியக்காரன். நீங்க உடனே எழுந்திருந்து குளிச்சுட்டுப் பால் குடிக்கல்லேன்னா இந்த இடத்துக்கு நெருப்பு வச்சுடுவேன், ஆடா!''

ஜோட்டன் பக்கிரி சாயபுவுக்கு ஒத்துப் பாடினாள். "எழுந்திரு. எழுந்திரு. பைத்தியத்தைக் கிளப்பிவிட்டுடாதே! சாப்பிட ாமே இருந்தா, போனதெல்லாம் திரும்பி வந்துடுமா ? அப்படி வந்துடும்னா நான் உன்னைச் சாப்பிடச் சொல்லல்லே! எழுந்திரு,''

பக்கிரி சாயபு சொன்னார்: "உங்க உடம்பு தங்கம் மாதிரி. தங் கத்திலே அழக்குப் பட்டா அது ஒட்டிக்கிட்டா இருக்கும்? உடம்பைக் கழுவிக்கிட்டாச் சுத்தாமாயிடும். இதோ பாருங்க, கங்கை தண்ணி யிலே எவ்வளவோ அழுக்கும் அசுத்தமும் வந்து கலக்குது. அம்மா கங்கை அதனாலே அசுத்தமாயிடறாளா, கெட்டுப் போயிடறாளா? ஆத்துக்கு எச்சில் கிடையாது, பனி கட்டிக்கு எச்சில் கிடையாது. தண்ணி தண்ணியாலேயே சுத்தமாயிடும்.''

மாலதி அப்படியும் அசையாமல் குடிசை மூலையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

ஜோட்டன் பக்கிரி சாயபுவிடம் சொன்னாள், "'இப்ப என்ன செய்யறது? கண் ணு இடுங்கிக் கிடக்கு, சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சோ? ஒண் ணும் பேசவே மாட்டாங்கறாளே!'

"நான் போயிப் பெரிய மியான் கிட்டேயிருந்து கோஷாப் படகு எடுத்துக்கிட்டு வரேன். அப்பறம் அல்லா பேரைச் சொல்லிக்கிட்டுப் படகிலே புறப்படலாம்.''

41611:31

தண்ணீரில் நீந்தியும் கரையில் நடந்தும் சுமார் ஒரு கோச தூரம் சென்றால் குடியிருப்பை அடையலாம். அங்கே போகும் வழியில் ஒரு தடவை வாந்தியெடுத்தார் பக்கிரிசாயபு. மழைக்காலம் வந்துவிட்டால் பக்கிரி சாய்புவின் பாடு திண்டாட்டந்தான், அவரிடம் இருந்த இரண்டு ஆடுகளின் பாலும் காட்டுக்கீரையும் அல்லி கிழங்குந்தான் கதி. முஸ்கிலாசானை எடுத்துக்கொண்டு தண்ணி ரைக் கடந்து போக முடியாது. யாராவது இறந்துபோய், தர்க்காவில் பிணத்தைப் புதைக்க வருபவர்கள் ஏதாவது கொடுத்தால் அதை வைத்துக்கொண்டுதான் காலம் தள்ளவேண்டும். கண்ட இலைகளை யும் கிழங்குகளையும் தின்று வயிறு கெட்டுவிட்டது பக்கிரி சாயபுவுக்கு.

கோஷாப் படகு கொண்டு வருவதற்குள் பொழுது ஏறிவிட்டது. பக்கிரிசாயபு ஒன்றும் சாப்பிடவில்லை. ஜோட்டன் ஒரு தவலைத் தண்ணீரை எடுத்துக் கடகடவென்று குடித்தாள். கொஞ்சம் விறகு, ஒரு புதுச் சட்டி, அடுப்பு, பால் எல்லாவற்றையும் எடுத்துப் படகில் வைத்துக்கொண்டாள். பக்கிரி சாயபு ஆடுகள் இரண்டையும் வீட்டுக்குள் கொண்டுவந்து கட்டிவிட்டு மாலதியைக் கூப்பிட்டார், "அம்மா, எழுந்திருந்து வாங்க!''

மாலதியை அழைக்க வந்த ஜோட்டன் மாலதியால் எழுந்திருக்க முடியவில்லை என்று கண்டாள். அவள், மாலதியிடம் வீட்டில் தேய்த்துக் கொள்ளச் சொல்லிப் பூண்டுத் தைலத்தை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தாள். பிறகு அவளைக் கெட்டியாகப் பிடித்துத் தூக்கினாள். மாலதிக்குத் தலை கிறுகிறுத்து அவள் கீழே விழுந்தாலும் விழுந்துவிடலாம். எப்படி ஆகிவிட்டது அவளுடைய முகம்? கண்களும் முகமும் எப்படிக் கறுத்துப்போய் விட்டன! அவளு டைய தங்கமான உடம்பில் யாரோ நெருப்பு வைத்துவிட்டார்களே ! மாலதியை நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது ஜோட்டனுக்கு. அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள தயாராயிருக்கிறாள்! சந்தர்ப்பம் கிடைத்தால் செய்துகொண்டு விடுவாள்.

நோயின் வேதனையால் உள்ளுறத் துடித்தார் பக்கிரி சாயபு. பக்கிரிக்கு வியாதி வரலாமா ? அவருடன் தங்கியிருந்த இவ்வளவு காலத்தில் அவர் ஒரு நாள் கூட நோய்வாய்பட்டு ஜோட்டன் பார்த்ததில்லை. காலை முதற்கொண்டே அவருடைய வயிற்றில் ஒரே களேபரம். யாரிடம் சொல்வது இதை? வயிற்றுக்குள் ஒரே எரிச்சல், ஒரே வேதனை. உடம்பில் ஏதாவது கோளாறு ஏற்பட் டால் ஏதாவது மூலிகையை எடுத்துக் கசக்கி அதன் ரசத்தைக் குடிப்பது அவர் வழக்கம். அப்படியே இன்றும் காட்டுக்குள் போய் ஏதோ மூலிகையின் சாறைக் குடித்தார் அவர்.

417

27அவர் ஜோட்டனிடம், ''நீ ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுக்கோ! எனக்குப் பசி இல்லை” என்றார்.

"நான் எப்படிச் சாப்பிடுவேன் ? மாலதி ஒண்ணுமே சாப்பிடல் லேயே !"

பக்கிரி சாயபு இப்போது திறந்தவெளியில் மாலதியை நன்றாகப் பார்த்தார். உண்மையாகவே மாலதியின் நிலை நன்றாக இல்லைதான். அவர் ஜோட்டனின் காதுக்கருகில் கிசுகிசுத்தார். ''அவளை நன்றாகப் பிடிச்சுக்கோ. இருக்கிற நிலையைப் பார்த்தா உடம்புக்கு நல்லா யில்லை போலிருக்கு, இந்தப் பொண்ணோட புத்தி சரியாயில்லே. பைத்தியத்தின் லட்சணம் தெரியுது. உடன்கட்டையேறிச் சதியாகப் போற பொண்ணு மாதிரி இருக்கா இவ."

பக்கிரி சாயபு சிறியவனாயிருந்தபோது ஆற்றங்கரையில் ஒரு பெண் சதியாகி உடன் கட்டையேறிய கதையைக் கேட்டிருந்தார். மாலதி யின் நிலை அந்தக் கதையை நினைவூட்டியது அவருக்கு. இந்தப் பெண் உட்கார்ந்தவாறே தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடு கிறாள் போலும்.

ஜோட்டன் மாலதியைப் படகின் நடுவில் உட்கார வைத்தாள். பக்கிரி சாயபு முஸ் கிலாஸான் விளக்கையும் எடுத்துக்கொண்டார். எப்போது வெளியே கிளம்பிவிட்டாரோ, திரும்பிவர இரண்டு மூன்று நாட்களும் ஆகலாம், இரண்டு மூன்று வாரங்களும் ஆகலாம். விளக் குடன் கிராமம் கிராமமாகச் சுற்றலாம். அவர் பெரிய மியானிடம் படகு கேட்கப் போனபோது சொல்லியிருந்தார். "பீபியைக் கூட்டிக் கிட்டுப் போறேன், விளக்கும் கொண்டு போறேன். கொஞ்ச நாள் ஆத்திலேயும் வாய்க்கால்லேயும் போய்க்கிட்டிருப்பேன். பொறந்த ஊருக்குப் போகணுமின்னு ஏக்கம் வந்திடுச்சு பீபிக்கும். துர்க்கா பூஜை பார்க்கணுமாம், ஒரு தடவை கூட்டிக்கிட்டுப் போயிட்டு வரேன்." அவர் வேண்டுமென்றே யாரிடமும் மாலதியைப் பற்றிச் சொல்லவில்லை. சொல்லிவிட்டால் மக்கள் தர்காவுக்கு ஓடிவரு வார்கள். போலீசும் வந்துவிடும்.

இவை எல்லாம் நேராமலும் இருக்கலாம். காரணம், இது ஜாதி, குல கெளரவத்தைப் பற்றிய விஷயம். மாலதியை இப்பொது களங்கம் சூழ்ந்திருக்கிறது. ரஞ்சித், சின்ன டாகுர், நரேன் தாஸ், மற்றக் கிராமத்தாரும் மாலதியைச் சூழ்ந்து நிற்பதாகக் கற்பனை செய்து கொண்டார் பக்கிரி சாயபு. அவளால் ஜாதிக்கே, குலத்துக்கே எகங்கம் ஏற்பட்டுவிட்டது. அவளைக் காட்டுக்கு விரட்டிவிடுவார்கள்,

இத்தகைய எண்ணங்கள் மாலதிக்கும் ஏற்பட்டிருக்கலாம். மாலதி பொறுமிப் பொறுமி அழுவதைக் கவனித்தார் பக்கிரி சாயபு. இதுவும் நல்லதுதான். பாவம், அழுது அழுது அவளுடைய வேதனை

418கொஞ்சம் குறையட்டும். வேதனை குறைந்தால் வாழ்க்கை பாரமாகத்

தோன்றாது, உலகம் அவ்வளவு கொடூரமாகத் தோன்றாது,

ரஞ்சித்தை நினைத்துக்கொண்டு கேவிக் கேலியழுதாள் மாலதி. 'டாகுர், அவங்க என்னோட எல்லாத்தையும் பிடுங்கிக்கிண்டுட்டாங் களே! நான் உனக்கு என்ன தருவேன் ?'

பிணந்தின்னிக் கழுகுகள் போல் யார் யாரோ இரவு முழுவதும் அவளுடைய உடலைக் குதறிப் பிடுங்கிவிட்டார்கள். இரத்தக் களறியாகிவிட்ட அவள் தேகத்தின் மேல் ஏதேதோ பிசாசுகள் நர்த்தனம் செய்தன. மூன்று மிருகங்கள் நரகத்தில் குதிக்கும் வெறியுடன் அவளைத் தாக்கின. அந்த மலைப் பாம்புகள் அவள் மேல் இரவு பூராவும் நெளிந்து திரிந்தன. அவர்கள் அவளை என்ன செய்தார்கள், எங்கிருந்து எங்கே இழுத்துக் கொண்டு போனார்கள்ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை அவளுக்கு, அந்த இடுகாட்டின் இருட்டில் தசை வெறியில்- பிண நாற்றத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு புதைகுழியில் நுழையும் ஓநாய் போல - அவர்கள் மாலதியின் தேகத்துக்குள் புக முயற்சி செய்தார்கள். அவளுக்கு உடம்பெல்லாம் நோவு எடுத்தது. உடம்பு வீங்கிப் போய்விட்டது. அவளால் எழுந்து உட்கார முடியவில்லை. தன் நினைவிழந்த உடலில் அவர்கள் இழைத்த கொடுமையைக் கற்பனை செய்து பார்த்தபோது, அவளுக்கு அருவருப்பால் குமட்டிக்கொண்டு வந்தது. மாலதி ஓங்களிப்பதைப் பக்கிரி சாயபு கவனித்தார், "சாப்பிடல்லேன்னா வாந்தி வராதா? நீங்களே சொல்லுங்க என்றாள் ஜோட்டன்.

மாலதி ஓங்களித்துக் கொண்டே இருந்தாள். இப்போது அவ ளுடைய அழுகை ஓய்ந்துவிட்டது. பக்கிரிசாயபு ஆற்றின் ஓரமாகப் படகைச் செலுத்திக்கொண்டு போனார். சூரியன் வானத்தில் மேலே ஏறிக்கொண் டிருந்தான். பக்கிரி சாயபு ஜிப்பாவைக் கழற்றினார். ஒரு லங்கோடு மட்டுமே அணிந்திருந்தார் அவர். கழுத்திலும் கையிலும் அவர் அணிந்திருந்த கண்ணாடிக்கல் மாலைகளும் தாயத்துகளும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஒலி யெழுப்பின. அவரைப் பார்த்தால் ஒரு பண்டைக் காலத்து மகரிஷிபோல் இருந்தது- கண்வ மகரிஷி சகுந்தலையை அரசனிடம் அழைத்துப் போய்க்கொண் டிருக்கிறார். அவளை எப்படியாவது அவளுடைய ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும். அவர் தாம் உள்ளுறப் படும் உபாதையைக் காட்டிக்கொள்ளாமல், விடாமல் துடுப்பு வலித்தார்.

ஜோட்டன் சொன்னாள்: "மாலதி, கொஞ்சம் பால் குடி. குடிக் கல்லேன்னா செத்துப் போயிடுவே!''

419மாலதி ஒன்றும் பேசாமல் ஓங்களித்துக்கொண்டே படகின் மேல் தட்டில் படுத்தாள்.

இந்த வயதில் இவ்வளவு தூரம் படகு வலித்துக்கொண்டு போவது தம்மால் முடியாத காரியம் என்று பக்கிரிசாயபுவுக்குப் புரிந்தது. நேர்வழியில் சென்றாலும் ஊர் போய்ச் சேர இரவு வெகு நேரமாகிவிடும். தண்ணீர் வடிந்து கொண் டிருந்ததால் நேர்வழியில் செல்ல முடியாது. பாத்ர மாதக் கடைசியிலிருந்தே தண்ணீர் வடியத் தொடங்கிவிடும், நடு நடுவே மணல் மேடுகள் தெரிந்தன. அவற்றைச் சுற்றிப் படகுவிட வேண்டும். மேக்னாவில் போனால் இன்னும் சுற்றுவழியாகிவிடும். சன்கந்தா வழியே போய், கடுபர்தி மைதானத்துக்கருகில் ஆற்றில் போய் இறங்கினால் அவ்வளவு கஷ்ட மில்லை. தண்ணீரின் போக்கோடு படகைச் சுலபமாகச் செலுத்தலாம். ஆனால் வயிற்றுக்குள் என்ன எரிச்சல்! மூலிகைச் சாற்றால் வேதனை குறையவில்லை. தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து போய்விட்டன. பக்கிரிசாயபு சிரமப்படுவது ஜோட்டனுக்குப் புரிந்தது, அவள் ஹக்கா தயார் செய்தாள். ஹூக்கா பிடித்தால் மனிதருக்குக் கொஞ்சம் தெம்பு வரும். அவள் அவருக்கு ஹக்காவைக் கொடுத்துவிட்டுத் தானே துடுப்பு வலிக்கத் தொடங்கினாள். பக்கிரிசாய புவிடம் சொன்னாள். "மாலதிதான் பால் சாப்பிடல்லே. நீங்களாவது சாப்பிடுங்க. சாப்பிட்டால் கொஞ்சம் தெம்பாயிருக்கும். சாப்பிடாமே இவ்வளவு தூரம் எப்படிப் போக முடியும் ?"

"ஊஹும், வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுப் பக்கிரிசாயபு கீழேயிருந்து தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தார்.

பக்கிரிசாயபுவும் ஜோட்டனும் மாலதிக்காகத் தங்கள் பசியையும் கஷ்டத்தையும் பொருட்படுத்தவில்லை, தர்காவில் தன்னைப் போட்டுவிட்டுச் சென்ற மனிதப் பிசாசு யாரென்று மாலதி யாரிடமும் சொல்லவில்லை. கேட்டால் விம்மி விம்மியழுதாள். தன் உடலில் இழைக்கப்பட்ட கொடுமையின் அடையாளத்தைப் பார்க்கும்போது அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அவருடைய தர்காவில் இத்தகைய கொடுமை நிகழ்ந்துவிட்டதற்காகத் தம்மையே குற்றவாளியாக நினைத்துக்கொண்டார் பக்கிரிசாயபு. அவர் முஸ்கிலாசான் விளக்கை ஏற்றிக்கொண்டு இரவில் இடு காட்டில் சுற்றுவார், நீண்ட அங்கியணிந்த அவருடைய உருவம் விளக்குடன் சுற்றுவதைத் தூரத்திலிருந்து பார்க்கும் மனிதர்கள் பயந்துபோய் ஓடுவார்கள். அப்படிப்பட்ட இடத்தில் சில பாவி கள் வந்து தங்கள் நீசச் செய்கையால் தர்காவின் புனிதத்தையே கெடுத்துவிட்டார்கள். இந்த அநியாயத்துக்குப் பொறுப்பு பக்கிரி சாயபுவும் ஜோட்டனுந்தான். மனிதன் சாகாவிட்டால் பக்கிரிசாயபு

420:

வுக்கு மதிப்பு இல்லை. நாளுக்கு நாள் அவருடைய சாப்பாட்டுக் கஷ்டம் அதிகரித்துக்கொண்டு வந்தது.

ஜோட்டன் பாலைப் படகின் மேல்தட்டில் வைத்திருந்தாள். ஜோட்டன் எவ்வளவு வற்புறுத்தியும் மாலதி பாலைக் குடிக்கவில்லை. படகின் ஆட்டத்தில் பால் தளும்பி வழிந்ததால் கோபம் வந்தது பக்கிரிசாயபுவுக்கு.

முதலில் பக்கிரிசாயபுவுக்குப் படகுத் துறை இருக்குமிடம் தெரிய வில்லை. அவர் இந்தப் பக்கம் வந்து வெகு காலமாகிவிட்டது.

நவமிச் சந்திரன் மறைந்துவிட்டான். எங்கும் ஒரே அமைதி. இருட்டில் வயல் வெளியிலிருந்து ஒரு கிரெளஞ்ச பட்சியின் குரல் கேட்டது. தூரத்தில் பிரதாப் சந்தாவின் வீட்டுத் துர்க்கா பூஜை விளக்குகள் கண்ணுக்குத் தெரிந்தன. அவற்றைக் குறிவைத்துக் கொண்டு படகை ஓட்டினார் பக்கிரிசாயபு. அவருடைய கண்கள் இருண்டுகொண்டு வந்தன, கைகளும் கால்களும் வலுவிழந்தன. அவருக்கு வாந்தி வந்தது. பிறருக்குத் தெரியாமல் இருட்டில் வாந்தி எடுத்தார் அவர். வாய் கொப்புளிப்பது போல் பாவனை செய்தார். பூச்சிகள் மரங்களிலும் வயல்களிலும் பறந்துகொண் டிருந்தன, பக்கிரிசாயபு பிரதாப் சந்தாவின் படகுத் துறையைத் தாண்டி நரேன் தாஸின் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தார். எல்லாரையும் இறங்கச் சொன்னார்.

படகில் படுத்திருந்த மாலதி எழுந்திருக்கவில்லை. படகு எங்கே போகிறது, பக்கிரிசாயபுவும் ஜோட்டனும் ஏன படகை ஓட்டிக் கொண்டு போகிறார்கள் என்பனவெல்லாம் மாலதிக்குப் புரிந்த தாகவே தெரியவில்லை. படகுத் துறையில் வந்து நின்றதும் அவளுக்கு நினைவு மீண்டது.

அடே! இது அவர்கள் வீட்டுப் படகுத் துறையல்லவா ? காலை வேளைகளில் வாத்துக்களை வெளியே விட்டுவிட்டு இங்கேதான் உட்கார்ந்திருப்பாள் மாலதி. தலைக்கு மேல் ஒரு கடம்பமரம். மழைக் காலத்தில் அந்த மரத்தில் தான் எவ்வளவு பூக்கள் பூத்துக் குலுங்கும்! ஆனால் இந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த இடம் அவளுக்குப் பழக்கமில்லாததாகத் தோன்றியது. ஏதோ ஒரு புது இடத்துக்கு வந்திருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

இந்த இருளில் திடீரென்று செய்தி கொண்டு போவதிலும் ஓர் ஆபத்து இருந்தது. மாலதி காணாமல் போய் எவ்வளவு நாளாகி விட்டனவோ! திடீரென்று நரேன் தாஸைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னால் அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கதறத் தொடங்கி விடலாம். மாலதியைப் பார்த்து ஊர்மக்கள் கூடிப் பக்கிரி சாயபுவையே கட்டிப் போட்டுவிடலாம்.

421அவரையே கேட்கலாம் : "மாலதி உங்களுக்கு எங்கே கிடைச்சா ? மனசுக்குள்ளேயே இப்படி ஒரு கெட்ட எண்ணம் இருந்ததா உங்களுக்கு ?"' உபகாரம் செய்யப் போய்த் தாமே வம்பில் மாட்டிக் கொண்டு விடுவார். அவர் இந்தக் காரியத்தைத் தடங்கலின்றி செய்து முடிக்கச் சில ஏற்பாடுகள் செய்தார்.

முஸ்கிலாசான் விளக்கிலிருந்து மையை எடுத்துத் தன் கண்களிலும் முகத்திலும் தீட்டிக்கொண்டார். நீண்ட அங்கியை அணிந்து கொண்டு கண்களையும் சிவப்பாக்கிக் கொண்டார். இந்த வேஷத் தில் அவர் இந்த உலகத்தைச் சேர்ந்த மனிதர் அல்ல. தாயத்துமாலை களும், நீண்ட அங்கியும், கையில் முஸ்கிலாஸானுமாக ஒரு தனிப் பிரகிருதியாய்க் காட்சியளித்தார் அவர். நினைத்தால் மரங்களையும் பறவைகளையும் சாம்பலாக்கிவிடும் சக்தி படைத்த அபூர்வ மனித ராகத் தோன்றினார் அவர். கையில் விளக்குடன் ஏதோ ஒரு தூரத்து லட்சியத்தை நோக்கிப் பிரயாணம் செய்யும் உருவம். அவர் வானத் துக்கு ஒளி தருபவர். விரும்பினால் ஒரே தாண்டில் கடலை கடந்து விடக் கூடியவர்.

இவ்வாறு ஒரு விசித்திரத் தோற்றம் பூண்டு அவர் தள்ளாடித் தள்ளாடிக்கொண்டே நரேன்தாஸின் வீட்டை நோக்கி நடந் தார். இப்போது அவர் - சாந் சதாகரின் நாட்டுப் பெண் போல, ஈசாகானின் ஸோனாயிபீபியைப் போல- ஒரு கட்டுக்கதைப் பாத்திர மாகக் காட்சியளித்தார்.

நள்ளிரவில் இப்படிப்பட்டவரின் குரலைக் கேட்டு நடுங்காத சம்சாரி யார் இருக்க முடியும்? அந்த நேரத்தில் அவர் ஒரு சாதாரண மனிதராகவே இருக்கமாட்டார். ஆகாயத்தையும் பூமியையும் திறந்த வெளியின் இருளையும் பிளந்துகொண்டு தோன்றும் தேவதூதராகக் காட்சியளிப்பார் அவர்.

ஆனால் இப்போது பக்கிரிசாயபு உள்ளுறப் பலமிழந்து போயிருந் தார். அவருக்குக் கண் இருண்டு கொண்டு வந்தது. அப்படியும் அவர் தம் சோர்வையும் வயிற்று நோயையும் பொருட்படுத்தாமல் உரக்கக் கத்தினார். "முஸ்கிலாசான் ! முஸ்கிலா... ஆ... சா....ஆன்!''

ஆயினும் அவருடைய குரலில் வழக்கமாக இருக்கும் கம்பீரம் இப்போது இல்லை. இந்தப் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் எல்லாரும் கேட்டு நடுங்கும்படியாகக் குரல் எழுப்பவேண்டும் அவர். 'நான் ஆஸ்தானா சாயபுவின் தர்காவில் வசிக்கும் பக்கிரி! மனிதர்கள் இறக்கும் காலத்தில் அவர்களுடைய சவக்குழிகளில் மெழுகுவர்த்தி ஏற்றுவது என் வேலை. மரங்களின் உச்சாணிக் கிளைகளில் விளக் கேற்றித் திரியும் அபூர்வப் பிறவி நான் .'

422''அபூர்வப்பிறவி நான். தாய்மார்களே! பிறப்பைப்போல், சாவைப் போல், இந்த உலகத்தில் பிழைத்திருப்பதும் ஓர் ஆச்சரியமான நிகழ்ச்சி தான். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையில் கடவுளின் கருணை கஷ்டத்தை எளிதாக்கிவிடும். முஸ்கிலாசான் !" என்று அவர் கம்பீரமாகத் தமக்குச் சக்தியிருந்தபோது கூவுவது வழக்கம். இப்போதும் அப்படிக் குரல் கொடுக்க விரும்பினார் அவர். ஆனால் முடியவில்லை. கொஞ்ச தூரம் நடந்ததும் அவர் களைத்துப் போய்க் கீழே உட்கார்ந்துவிட்டார். முஸ்கிலாசான் விளக்கின் தண்டின் பலத்தில் எழுந்து நின்றார் அவர். அவருக்கு வாந்தி வந்தது. தாம் வாந்தியெடுப்பதை ஜோட்டன் பார்க்காதிருப்பதற்காக அவர் விளக்கை உயரத் தூக்கி அதன் கீழ் இருட்டில் வாந்தியெடுத்துவிட்டு மேலும் நடக்கத் தொடங்கினார். அவர் குடித்த நீரும் சாப்பிட்ட அல்லிக்கிழங்கும் வாந்தியாக வெளிவந்தன. ஆஸ்வின் மாதத்தில் வடியும் தண்ணீரின் நாற்றம் அவருடைய வாந்தியிலும் வெளிப் பட்டது.

தன் வீட்டுக் கதவைத் திறந்த நரேன் தாஸ் வாசலில் பக்கிரிசாய்பு நிற்பதைக் கண்டான். நல்ல உயரம், கையில் முஸ்கிலாசான், தலையில் தலைப்பாகை, வெள்ளைக் கேசம், வெள்ளைத் தாடி, கறுத்த முகம், சிவந்த கண்கள், முகத்துக்கு வெகு அருகில் விளக்கு எரிந்தது. கண்ணின் கருவிழிகள் மேல்பக்கமாகக் குத்திட்டு நின்றன. அவரது வாய் குடும்பஸ்தர்களின் மங்களத்தை உத்தேசித்து ஏதோ மந்திரங்களை முணு முணுத்துக்கொண் டிருந்தது ; கழுத்தில் நீல, சிவப்பு, மஞ்சள் நிறக்கற்கள் பளபளத்தன. அவரைப் பார்த்து விட்டு ஆபுவும் சோபாவும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரப் பயந்தார்கள். அத்தை காணாமற் போனதிலிருந்து ஒரு சிறு அரவம் கேட்டாலும் அவர்களுக்கு விழிப்பு வந்துவிடும். நரேன் தாஸுக்கு இரவில் தூக்கமே வருவதில்லை. யாரோ தன் வீட்டின் நாற்புறமும் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டு அலைவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

நரேன் தாஸ் பக்கிரிசாயபுவின் அருகில் வந்ததும் அவர் கொஞ்சம் மையை எடுத்து அவனுடைய நெற்றியில் திலகமிட்டார். முஸ்கிலா சான் விளக்கில் மூன்று குழிகள் இருந்தன. ஒன்றில் விளக்கு, இன்னொன்றில் மை, மூன்றாவது குழி காசு போடுவதற்காக. நரேன் தாஸ் அந்தக் குழியில் காலணா போட்டுவிட்டு ஆபாராணியையும், சோபா, ஆபுவையும் பொட்டு இட்டுக்கொள்வதற்காகக் கூப்பிட் டான். அவர்கள் பொட்டு இட்டுக்கொண்டு வீட்டுக்குள் போனபிறகு பக்கிரிசாயபு இருட்டில் நரேன்தாஸின் கையைப் பிடித்துக்கொண்டு, "தாஸ், உங்க தங்கையைப் பத்தி செய்தி வந்திருக்கு" என்றார்.

423''என் தங்கையைப் பத்தியா?" "ஆமா, அந்த லஷ்மியை நான் தர்க்காவிலே கண்டெடுத்தேன்.'' "என்ன சொல்றீங்க?" நம்ப முடியாதவனாகக் கூவிவிட்டான் நரேன்தாஸ்.

"ஆமா, கண்டெடுத்தேன். உன் தங்கை வனதேவதை மாதிரி ஓடி வந்தா, 'என்னைக் காப்பாத்துங்க, காப்பாத்துங்க'ன்னு கத்திக்கிட்டு!"

"நீங்க காப்பாத்தினீங்களா?'' "ஆமா காப்பாத்தினேன்." கம்பீரமாகப் பதில் சொன்னார் அவர். "நான் ஒரு பக்கிரி. எனக்கு மந்திர சக்தி உண்டு. நான் உன் தங்கை யைக் காப்பாத்திட்டேன். அவளை யாராலும் கெடுக்க முடியல்லே."

மாலதிக்காகப் பொய் சொன்னார் அவர். அவருக்கு வாந்தி வந்தது, அவர் விளக்கை உயரத் துாக்கிக்கொண்டு கீழே இருட்டில் தம் அங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டு வாந்தியெடுத்தார். பொறுக்க முடியாத நாற்றம் வந்தது வாந்தியிலிருந்து.

ஏதோ ஒரு பைத்தியத்தைப் பார்ப்பது போல் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றான் நரேன்தாஸ். அவருடைய பேச்சைக் கேட்க ஆச்சரியமாகவும் இருந்தது, திகைப்பாகவும் இருந்தது அவனுக்கு. பக்கத்தில் மாலதியைக் காணோம். இவரோ மாலதியைக் காப்பாற்றி விட்டதாகச் சொல்கிறார். பக்கிரிசாயபுவின் தைரியத்தைப் பற்றிப் பல கதைகள் கேட்டிருக்கிறான் அவன். இவர் சொல்வதை நம்புவதா, இல்லையா?

அவன் உணர்ச்சிவசப்பட்டவனாகத் தன் மனைவியைக் கூப்பிட் டான். "ஆபுவோட அம்மா, கேட்டியா பக்கிரிசாயபு சொல்றதை? இவர் மாலதியைக் கண்டுபிடிச்சுட்டாராம்,"

தாம் போட்ட வேஷம் பலன் அளித்துவிட்டது என்பதை நரேன் தாஸின் நடத்தையிலிருந்து புரிந்துகொண்டு விட்டார் பக்கிரி சாயபு. நரேன்தாஸம் அவனுடைய குடும்பத்தினரும் ஆகாயத்தி லிருந்து குதித்து வந்திருக்கும் ஓர் அபூர்வப் பிறவியைப் பார்ப்பது போல் வியப்புடனும் பயத்துடனும் அவரைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள், அவர் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டார். குடிசை யிலேயே நெருப்புப் பற்றிக்கொண்டு விடுமளவுக்கு அவ்வளவு பெரிதாக எரிந்தது விளக்கு. எங்கும் ஒரே வெளிச்சம். கீழ்ப் பக்கத் தில் இலந்தை மரத்தடியில் மட்டுந்தான் இருட்டாயிருந்தது. அங்கே தான் மாலதியை வைத்துக்கொண்டு நின்றாள் ஜோட்டன்.

நரேன்தாஸ் தம் பேச்சை நம்ப வேண்டுமென்பதற்காகப் பக்கிரி சாயபு. 'லா இலாஹா இல்லல்லா, பிஸ்மில்லா ரகிமானே ரகீம்' என்றெல்லாம் மந்திரம் உச்சரிப்பது போல் கம்பீரமாகச் சொன்னார். "தாஸ்! மாலதியம்மா வனதேவதை மாதிரி காட்டிலே ஓடினா.

424அப்போ ஆத்திலே தண்ணி இல்லே, பறவைகள் கூவல்லே, மைனா மதிச் சந்தையிலே கடைகளிலே விளக்கு எரியல்லே. அம்மா ஓடிவரபோது காடும் மரமும் அழுத்தாக்கும். நான் அவளைக் கண்டுபிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்திட்டேன், தாஸ்."

இலந்தை மரத்தடியில் நின்றுகொண்டு அவர் சொல்வதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் மாலதி. ஜோட்டனின் பக்கிரி சாயபு, திருவிழாக்களில் காஜிப் பாட்டுப் பாடும் வாத்தியக்காரர் களைப் போல் சுற்றித் திரியும் பக்கிரி சாயபு இப்போது மாலதிக்காகப் பொய் சொன்னார்.

ஆபாராணி வீட்டுக்குள்ளிருந்து கூவினாள், "அவள் எங்கே, பக்கிரி சாயபு? கண்ணுக்கு ஒருத்தரும் தெரியல்லியே!"

"இருக்கா. உங்களுக்கு ஆட்சேபமில்லேன்னா காண்பிக்கிறேன்." "பொய் சொல்லாதீங்க, பக்கிரிசாயபு. எனக்கு நம்பிக்கை ஏற்படல்லே" என்றான் நரேன் தாஸ்.

"இப்போ ஏற்படும் பாருங்க" என்று சொல்லிவிட்டுப் பக்கிரி சாயபு கூவினார். "அம்மா தாயே! இப்போ வில்வ மரத்தடியிலே அல்லது பூச்செடிக்குப் பக்கத்திலே எழுந்தருள்வாய், அம்மா !"

கூவிக்கொண்டே அவர் தம் விளக்கைத் தூண்டிவிட்டார். அவ ருடைய அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது அப்போது. வலியின் கடுமை காரணமாகச் சுருண்டு போய்விட்டார் அவர். நிமிர்ந்து நிற்க முடியவில்லை அவரால். இந்த நோவையும் எப்ப டியோ பொறுத்துக்கொண்டு அவர் நிமிர்ந்து பார்த்தார். சிரிக்க முயன்றுகொண்டு கையையும் காலையும் ஆட்டியவாறு கோஷித்தார். "அம்மா, வா! ஆகாசத்திலேருந்து காத்திலேருந்து இங்கு வந்து குதி!'' மந்திர ஜாலம் செய்யும் பாணியில் இருந்தது அவரது செய்கை, பக்கத்து வீட்டுக்காரர்களான தீனபந்துவும் அவருடைய இரு மனைவிகளும் பக்கிரி சாயபு முஸ்கிலாசான் எடுத்துக் கொண்டு வந்திருப்பதை அறிந்தார்கள். இதற்குள் மாலதி நரேன்தாஸின் விட்டு வாசலுக்கு வந்துவிட்டாள். பக்கிரி சாயபு விளக்கைத் திருப்பிக் காட்டியதும் ஆபாராணியும் நரேன் தாஸ் ம் அங்கு மாலதி சோர்ந்து, களைத்துப் போய், தரையில் விழுந்துவிடப் போகிறாற்போல் நின்று கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் ஓடிச் சென்று மாலதி யைத் தாங்கிக்கொண்டதும் பக்கிரி சாயபு விளக்கை அணைத்து விட்டு விடுவிடென்று படகுத் துறைக்குத் திரும்பினார். ஹோட்டனும் அவரைப் பின்பற்றினாள். பக்கிரிசாய புவிடம் கிசுகிசுத்தாள், "சீக்கிரம் படகை எடுங்க. தாமதம் செய்யாதீங்க."

இருளில் பக்கிரி சாயபுவின் உடை மலம் மூத்திரத்தால் நாச

425மாகிவிட்டது. அவருக்குப் பேதி ஏற்பட்டுவிட்டது. அப்படி யும் அவர் ஜோட்டனிடம் எதுவும் சொல்லவில்லை. ஜோட்டனால் மலம் மூத்திரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் அவற்றின் துர் நாற்றத்தை உணர முடிந்தது. ஆற்றின் வாயை அடைந்ததும் பக்கிரிசாயபு, படகை ஆற்றின் போக்கில் விட்டுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. வாந்தி பேதியால் உயிர் போய்க்கொண் டிருந்தது. இப்படியே போய்க்கொண் டிருந்தால் பொழுது விடியுமுன் அலிபுரா கிராமம் வந்து சேர்ந்துவிடும். அதற்கப்புறம் உள்ள ஒரு கோச தூரத்துக்குப் படகை ஓட்டிக்கொண்டு போய்த் தர்காவை அடைந்து விட ஜோட்டனால் முடியும். அவர் ஜோட்டனிடம் சொன்னார். "பீபி, எனக்கு உயிர் போய்க்கிட்டிருக்கு, பொழுது விடியறதுக்குள்ளே என்னைத் தர்காவிலே கொண்டுபோய்ச் சேர்த்திடு. நான் போன பிறகு அழுது ஒப்பாரி வைக்கவேண்டும். அலிபுராவிலே ஜனங் களுக்கு நான் செத்துப்போன செய்தியைச் சொல்லிடு."

பக்கிரி சாயபு ஏன் இப்படிப் பேசுகிறார் என்றுப் புரியவில்லை ஜோட்டனுக்கு. அவர் படகுத் தட்டில் படுத்துக் கிடந்தார். ஜோட்டன் அருகில் போய் அவரைத் தொட்டுப் பார்த்தாள். அவ ருடைய உடை நனைந்திருந்தது, ஜோட்டனுக்குத் திக் என்றிருந்தது. அவள் கேட்டாள். "ராத்திரி எவ்வளவு மணிக்குன்னு சொல்லணும்?''

"ராத்திரி இரண்டாம் சாமத்திலேன்னு.'' "அப்போ நீங்க நரேன் தாஸ் வீட்டு வாசல்லேன்னா நின்னுக்கிட் டிருந்தீங்க?"

''அதைப் பத்தி உனக்கென்ன கவலை?" என்று சொல்லிவிட்டு மெளனமானார் பக்கிரிசாயுபு.

ஜோட்டன் அழ ஆரம்பித்தாள். பக்கிரிசாயபு அவளை ஜாடையால் தம் அருகே ஆழைத்தார். அவள் அவருடைய தலையைத் தூக்கித் தன் மடியின் மேல் வைத்துக் கொண்டாள், ஆற்று நீரின் வேகத்தில் படகும் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஜோட்டன் ஒரு கையால் சுக்கானை மாத்திரம் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் மெதுவாக அவருடைய உடைகளைக் கழற்றினாள். அவருடைய உடம்பைத் துடைத்துவிட்டாள். படுத்தவாறே இருளை வெறித்துப் பார்த்துக்கொண்டு, கைகளை நெஞ்சின் மேல் சேர்த்து வைத்துக் கொண்டு கிடந்தார் பக்கிரி சாயபு. அவர் சொன்னார். "அழாதே! உனக்குப் பிடிக்கல்லேன்னா, தர்காவுக்குப் போக வேண்டாம்."- மேலும் பேச முடியாமல் அவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.

இருட்டில் ஆற்று நீர் மங்கலாகத் தெரிந்தது. வயல்களில் மின் மினிகள் கண் சிமிட்டின. எண்ணற்ற நட்சத்திரங்கள் வானத்தி

426லிருந்து பக்கிரி சாயபுவின் இறுதிக் காலத்தைப் பார்த்துக் கொண் டிருந்தன. எவ்வளவு காலமாக இந்த மனிதர் இரவென்றும் பகலென்றும் பாராமல் வயல்களிலும் காடுகளிலும் பட்டினியாய்ச் சுற்றியிருக்கிறார்!

ஒரு காலத்தில் அவர் ஒரு கொலைக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காகத் தம் வீட்டை விட்டு ஓடி வந்தவர். பரிசாலைச் சேர்ந்த போலா பகுதியிலிருந்து அவர் தம் வீடுவாசல், மனைவி மக்கள், நெற்களஞ்சியம், ஊர்க் குளத்தங்கரை, மருதமரங்கள் எல்லாவற்றையும் விட்டுக் கால் நடையாகக் கிளம்பினார். பல நாட்கள் தலை மறைவாக இங்குமங்கும் அலைந்து திரிந்துவிட்டு ஒருநாள் ஆஸ்தானா சாயபுவின் தர்காவில் இரவைக் கழித்தார்.

தர்காவுக்குப் பக்கத்தில் பிணத்தைப் புதைக்க வந்தவர்கள் மெழுகு வர்த்திகள் ஏற்றி வைத்துவிட்டுச் சென்றார்கள். அந்த மெழுகுவர்த்தி களை எடுத்துக்கொண்டு காட்டில் சுற்றித் திரிந்தபோது அவருக்கு அங்கேயே தனிக் காட்டு ராஜாவாகத் தங்கிவிடும் ஆசை ஏற்பட்டது. நாளாக ஆக அங்கிருந்த பறவைகள், மரங்கள், செடிகள் எல்லாமே அவருக்கு நண்பர்களாக ஆகிவிட்டன. அவர் தமக்கு ஒரு சிறு குடிசை கட்டிக்கொண்டார். ஒரு முஸ்கிலாஸான் விளக்கு சம்பாதித் துக் கொண்டார். தம் சொந்த வீடு பரிசாலில் எங்கிருக்கிறது என்பது கூட மறந்து போய்விட்டது அவருக்கு. சில மந்திரங்களும் மத சம்பந்தமான விஷயங்களும் எப்படியோ தெரிந்து வைத்துக்கொண் டார். அவ்வளவுதான், பிறகு கொலைக் குற்றஞ் சாட்டப்பட்ட குற்ற வாளியாக அல்ல ; பக்கிரிசாயபு ஆகிவிட்டார் அவர்.

அவர் இப்போது செத்துக்கொண் டிருந்தார். ஜோட்டன் சொன் னாள் : “'உங்களுக்குப் பயமில்லே, பக்கிரிசாயபு. நீங்க சாதாரண மனிதரில்லே, பீராக்கும் !'' இதைச் சொல்லும்போது அவளுக்கு எப்ப டியோ தைரியம் வந்துவிட்டது, இரவோடிரவாக இந்த மனிதரைத் தர்காவுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று உறுதி கொண்டாள் அவள். மேட்டு நிலத்தில் பெரிய வேப்பமரத்தடியில் அவரைப் படுக்க வைக்கவேண்டும். அவுஸ் பருவ பயிரை அறு வடை செய்யப் படகில் வருபவர்கள் ஜோட்டன் ஒரு பிணத்தரு கில் உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பார்கள். பக்கிரிசாயபு இரவில் செத்துப் போன செய்தியைத் தெரிந்துகொள்வார்கள், பக்கிரிசாய்பு வுக்கு இந்த வயது வரை வியாதியோ, துக்கமோ, கிழட்டுத்தனமோ இருந்ததில்லை. கடைசிக் காலத்திலும் தெம்புடன் இருக்க வேண்டும். கிழட்டுத்தனத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஒன்றுமே நடக்காதது போல் ஜோட்டன் அவருடைய உடம்பைக் கழுவித் துடைத்து அவரை ஒரு புதிய மனிதராக்கிவிட்டாள். அவருடைய உடம்பில்

427இப்போது துர் நாற்றம் இல்லை, அவரைப் பார்ப்பவர்கள் அவர் வாந்தி பேதியால் செத்துப்போனாரென்று உணர முடியாது. அப்போதுதான் "நீங்கள் பிர் ஆயிட்டீங்க, பக்கிரிசாயபு !" என்றாள் ஜோட்டன்.

இப்போது ஜன்னலில் மாலை வெயில். பிருந்தாவனி எல்லாக் கதவு களையும் திறந்து வைத்தாள். இந்த அறையில் அமலாவும் கமலாவும் உடையணிந்துகொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். வராந்தாவில் அமலாவும் கமலாவும் நின்றிருந்தார்கள். தூரத்தில் சீதலக்ஷா ஆறு. அதன் கரை வழியே சிலர் பலியிடப்பட்ட எருமையைத் தூக்கிச் செல்வதை அமலாவும் கமலாவும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பிருந்தாவனி அவர்களைக் கூப்பிட்டாள். "குட்டி ராணிகளே! வாங்க!''

பிருந்தாவனி அலமாரியைத் திறந்து அவர்களுடைய ஃபிராக்குகளை எடுத்தாள். முதலில் அவர்களுக்குத் தலை பின்னிவிட்டு உடையணி வித்து விடுவாள். பொழுது சாய்ந்துகொண் டிருந்தது.

வராந்தாவையொட்டிக் கோச்சு வண்டி நின்றது. குழந்தைகள் மற்ற வீடுகளில் துர்க்கை பூஜை பார்க்கப் போவார்கள். கூட ராம்சுந்தரும் போவான். பிருந்தாவனி அவர்களைக் கூப்பிட்டதும் அவர்களுடைய விளையாட்டு ஆரம்பமாகிவிடும். வழுவழுப்பான தரையாதலால் அவர்களால் வேகமாக ஓட முடியாது. இருந்தாலும் பிருந்தாவனி யிடம் பிடிபடாமல் இருக்க இங்குமங்கும் வேகமாக ஓடினார்கள், அவர்கள். அவர்கள் பிருந்தாவனியிடமிருந்து தப்ப விரும்புவதன் காரணம் பிருந்தாவனி அவர்களுடைய தலைமயிரை இறுக்கிப் பின்னி விடுவாள்; தலையை வலிக்கும் அவர்களுக்கு.

பிருந்தாவனி அவர்களை இரண்டாம் முறை கூப்பிடவில்லை. சப்தம் போடாமல் அவர்கள் அருகே வந்து அவர்களைப் பிடித்துக்கொள்ள நினைத்தாள் அவள், ஆனால் அவள் அருகில் வருவதற்குள் அவளு டைய நோக்கம் குழந்தைகளுக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் வராந்தாவில் தங்கள் அழகிய கால்களை வைத்து, கீழே விழுந்து விடாமலிருக்கத் தங்கள் கைகளை இரு பக்கமும் நீட்டிக்கொண்டு தேவதைகள் போல, பாலே நடனக்காரிகள் போல - வளைய வந்தார்கள். அவர்கள் ஓடி விளையாடுவது நதிக்கரையில் அல்லது

428வழுவழுப்பான பனிக்கட்டி மீது சறுக்கு விளையாட்டு விளையாடுவது போலிருந்தது. இதைக் கண்டு பிருந்தாவனிக்குக் கோபம் வந்தது. அவளால் அவர்களைப் பிடிக்க முடியுமா? அவள் கோபித்துக் கொண்டு அவர்களுடன் பேசாமல், ஒரே இடத்தில் நின்றுவிட்டாள். அப்போது அவளுடைய முகத்தைப் பார்த்தாலே அவளுக்குக் கோபம் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். உடனே அவர்கள் தாங்களாகவே வந்து அவளிடம் பிடிபட்டுக்கொள்வார்கள். குழந்தைப் பிராயம் முதல் தங்களை வளர்த்த பிருந்தாவனிடம் அவர்களுக்கு ரொம்பப் பிரியம்.

“நான் இன்னிக்குப் பின்னிக் கல்லே, அத்தை " என்றாள் அமலா. பிருந்தாவனி பதில் சொல்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தாள். தன் கேசத்தை அப்படியே புஸ் புஸ் என்று வைத்துக்கொள்ள அமலாவுக்கு ஆசை. கழுத்து வரை வரும்படி வெட்டப்பட்டகேசம். பிருந்தாவனி சொன்னாள். "உங்களுக்கு வயசாயிக்கிட்டு வருது. மயிரைக் கழுத்து வரை வந்ததுமே வெட்டறது சரியில்லே. இனிமேல் இன்னும் நிறைய மயிரை வளர்த்துக்குங்க. நான் இறுகப் பின்னி விடறேன். இறுகப் பின்னினால் மயிரோட வேருக்குப் பலம். மயிர் நல்லா வளரும். நீங்க பெரியவங்களானப்பறம் மயிர் பொல பொலன்னு உதிராது."

இருந்தாலும் "பாப்' செய்யப்பட்ட தலைமயிருடன் அவர்களுடைய முகங்கள் அழகாகவே இருந்தன - புத்தம் புதிய டாஃ போடில் மலர்களைப் போல அவர்களுக்கு ஒரு தடவை மொட்டை யடித்துவிட்டால் தலைமயிர் நன்றாக வளரும். ஆனால் இந்தப் பேசசை எடுத்தாலே அவர்கள் அழத் தொடங்கி விடுவார்கள். அதைப் பார்க்கப் பிருந்தாவனிக்குக் கஷ்டமாக இருக்கும். அவன் அவர்களுடைய தந்தையிடம் தன் யோசனையை வற்புறுத்த மாட்டாள்.

அவர்களுடைய தந்தையையும் சிறு வயது முதல் வளர்த்து ஆளாக்கியது பிருந்தாவனி தான். அதே கவனத்துடனும் அக்கறை யுடனும் அவர்களையும் வளர்த்து வந்தாள் அவள். இப்போது அவர்கள் மறுபடியும் அவளிடமிருந்து நழுவ முயற்சி செய்தபோது அவள் கோபித்துக்கொன்டு அவர்களை அதட்டினாள், அலமாரிக் கதவைப் பட்டென்று மூடினாள். சிறுமிகள் இருவரும் அவளை லட்சியம் செய்யாமல் மறுபடி இங்குமங்கும் ஓட ஆரம்பித்தார்கள்.

கல்கத்தாவாயிருந்தால் பிருந்தாவனி அவர்களை அதட்டி அடக்கி யிருப்பாள். ஆனால் இங்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. கல்கத்தா வீட்டில் அவள் தான் சர்வாதிகாரி. இல்லாவிட்டால் அந்தப் பெண்களும் தங்கள் தாயின் மதத்தையும் பழக்க வழக்கங்களையும்

429பின்பற்றியிருப்பார்கள். பிருந்தாவனியின் முயற்சியால் அவர்கள் அழகாக வங்காளியில் பேசினார்கள். பூஜை முதலிய அனுஷ்டானங் களில் அபார ஈடுபாடு இருந்தது அவர்களுக்கு.

துர்க்கா பூஜை நெருங்க நெருங்க அவர்கள் தந்தையிடம் அடம் பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள் ஊருக்குப்போக, சந்தியா பூஜையின் போது மற்றப் பெண்களைப் போல் அவர்களும் மூங்கில் தட்டிக்குப் பின்னால் கைகளைக் குவித்துக்கொண்டு நிற்பார்கள். எருமைப் பலிக்குப் பின் அதன் ரத்தத்தை நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்வார்கள். இட்டுக்கொண்டால் அவர்களுடைய பாவ மெல்லாம் போய்விடும், சரீரம் புனிதமாகிவிடும் என்ற நம்பிக்கை அவர்களுடைய முகங்களில் ஒளிர்வதைக் கவனிப்பாள் பிருந்தாவனி.

அமலா, கமலாவின் தாய்க்கு இதெல்லாம் பிடிக்குமா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை, பிருந்தாவனிக்கு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை- குழந்தைகள் பூஜை பார்க்க ஊருக்குப் போவது குறித்து ஒவ்வொரு வருடமும் தம்பதிகளிடையே தகராறு ஏற்பட்டு, அதன் காரணமாக மனவேற்றுமை அதிகரித்து வந்தது. இதைப் பிருந்தாவனியால் உணர முடிந்தது.

அமலா கமலாவைக் கூட்டிக்கொண்டு அவர்களுடைய தந்தை படகுத் துறைக்கு வந்தால் கள்ளங்கபடமற்ற. மகிழ்ச்சி நிறைந்த சின்னஞ்சிறு குழந்தையாக மாறிவிடுவார். அவரிடம் உற்சாகம் பொங்கும், ஆற்றங்கரையில் படகிலிருந்து இறங்கியதும் அவர் தம் பிறந்த மண்ணுக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார். "இது தானம்மா வங்காளத் தேசம், நம் முன்னோர்களின் சொந்த ஊர்'' என்று குதூகலமாகத் தம் பெண்களிடம் சொல்வார். பிறகு சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே பேசாமல் நடப்பார். வண்டியில் ஏறி வீட்டுக்குப் போவதில்லை அவர். ஆற்றுநீர், வயல்களில் பசுமையான பயிர், வரிசை வரிசையாக நிற்கும் பனை மரங்களின் நிழல் - இவை அவரை, அவருடைய இளமைக் காலத்துக்கு அழைத்துச் சென்று அவரை உணர்ச்சிவசப்படச் செய்யும். வாலிபனாக இருந்த காலத் தில் அவர் எவ்வளவு தடவைகள் இந்த ஆற்றங்கரையில் குதிரை

மேல் சவாரி செய்திருக்கிறார்!

இந்த விஷயத்தைப் பற்றி அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வெளிப்படையாகச் சண்டை உண்டாவதில்லை. ஆனால், பூஜை நெருங்கும்போது அமலா - கமலாவின் தந்தை காலை வேளை களில் மகாபாரதம் படிக்கத் தொடங்கி விடுவார். மாலை வேளைகளில் கிளப்புக்குப் போவதை நிறுத்திவிடுவார். அவரது மனைவி அப்போது மாதாகோவிலுக்குப் போவாள், அல்லது பாதிரியே வீட்டுக்கு வந்து விடுவார். முதல் மாடியின் தென்பக்கத்து அறையில் சித்திர வேலைப்

430பாடுகள் செய்த சலவைக்கல் தரையில் பாதிரியின் காலடியில், உட்கார்ந்திருப்பாள் அவள்.

இந்தத் தடவை பூஜைக்குச் சில நாட்கள் முன்பிருந்தே அப்பா அம்மாவின் அறைக்குப் போவதை நிறுத்திவிட்டதை அமலா கவனித்தாள். அம்மாவின் முகம் சோர்ந்து வருத்தமாக இருந்தது. அப்பா கீழ் அறையிலேயே படுத்துக்கொண்டு விட்டார். நள்ளிரவில் சில சமயம் திடீரென்று குழலூதுவார் அவர். தங்கள் தாய் தந்தையரிடையே இருந்த மனவேற்றுமையின் காரணம் தெரிய வில்லை குழந்தைகளுக்கு. அவர்கள் காலையில் மெளனமாகப் பள்ளிக்குப் போய்விடுவார்கள். மாலையில் திரும்பிவந்த பிறகு அவர்களுக்கு முன்போல் வீட்டில் விளையாடித் திரியத் தோன்றுவ தில்லை. வருத்தந் தோய்ந்த சிலையாக - கல்லாக ஆகிக்கொண்டிருந் தாள் அம்மா. அவள் எதையோ தேடிக்கொண்டு அவர்களுடைய தந்தையுடன் கடல் கடந்து வந்திருந்தாள். இப்போது அவளது முகத்தைப் பார்த்தால் அவள் தேடிவந்தது கிடைக்கவில்லை என்று தோன்றியது. சில சமயம் தோன்றியது - அவள் எதையோ தன் நாட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டாள்; இப்போது இங்கே வந்த பிறகு அது அவள் நினைவுக்கு வந்துவிட்டதென்று. அவள் எப்போதும் மைதானத்தை நோக்கிய பெரிய ஜன்னலுக்கு முன்னால் நின்றுகொண்டு வெளியே பார்த்துக்கொண் டிருப்பாள். மைதானத் தின் மறுபக்கம் கோட்டை, கோட்டைச் சுவர்மேல் ஆயிரக்கணக் கான கொண்டைப் புறாக்கள் பறந்தன. இவற்றைப் பார்த்துக் கொண்டே அவளது நினைவு எங்கோ சென்றுவிடும். அவள் எதையோ தேடுவது போலத் தோன்றும்.

இந்தக் காலத்தில் பிருந்தாவனி இரு சிறுமிகளுக்கும் வங்காள தேசத்து மண்ணின் கதையைச் சொல்வாள். சரத்காலத்தில் பவழ மல்லிகை பூத்துச் சொரியும். செம்பரத்தைச் செடி பனியால் நனையும். வானம் நிர்மலமாக இருக்கும். வெயில் பொன்னிறமாக இருக்கும். இவை எல்லாம் சேர்த்து ஒரு தேசம், பெயர் வங்காளம். இந்தத் தேசம் உங்கள் தேசம் ! இந்த நாட்டில் காலை வேளையில் வெயிலில் பொன்னிறம் தோன்றும்போது, கிரெளஞ்ச பட்சி வானத்தில் பறக்கும்போது, வயல்களில் கதிர் முற்றும்போது, ஆறு களில் தண்ணீர் இறங்கும்போது, அதன் இரு புறங்களிலும் தண்ணீர் குறைந்து மேட்டு நிலம் கண்ணுக்குத் தோன்றும்போது, கருவேல மரங்களில் பட்டங்கள் சிக்கிக்கொண்டு கிழியும்போது, ஆறுகளில் பனை நுங்குகளும் அண்ணாசிகளும் ஏற்றிக்கொண்டு படகு கள் செல்லும்போது - சரத்காலம் வந்துவிட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்! அமலா! கமலா! இப்படிப்பட்ட தேசத்தில் நீங்கள்

431110118 !!

நீலக் கண்களுடன், பொன்னிறக் கேசத்துடன், பிறந்துவிட்டீர்கள். பின்பனிக் காலத்தில் திறந்த வெளியில் நீங்கள் ஓடும்போது உங்களைப் பார்க்க சாட்சாத் லட்சுமிதேவி மாதிரி இருக்கும்! இப்படிப்பட்ட பெண்கள் விஷமம் செய்யலாமா?

பிருந்தாவனி மிகவும் அழகாக அவர்களுக்குத் தலை பின்னிவிட் டாள். அவர்கள் படிகளில் இறங்கிக் கீழே செல்லும் வரையில் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவர்கள் பாட்டி, சித்தி இவர்களுடைய அறைகளுக்குப் போய்விட்டு வந்தார்கள். அவர்களுடைய தந்தை ஒரு மிலேச்சப் பெண்ணை மணம் செய்து கொண்டு வந்த காரணத்தால் ஊர்மக்களின் இகழ்ச்சிக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிவிட்டார். அவர்களுடைய பெண்களான அவர்கள் ஜமீன் சொத்தின் ஒரு பகுதிக்கு வாரிசு. ஆனாலும் அவர் களுக்கு ஜமீன் சொத்து கிடைக்குமா என்பது சந்தேகந்தான்.

இந்தக் காரணத்தால் அவ்வீட்டிலுள்ளவர்கள் எல்லாருக்குமே அவர்களிடம் அநுதாபமும் பரிவும் இருந்தன. கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதையும், சிரிக்கும் அழகையும் பார்த்தால் அவர்கள் சாவி கொடுக்கப்பட்ட ஜப்பான் பொம்மைகளோ என்று தோன்றும். அவர்கள் வெளியே சென்று விட்டால் வீடே வெறிச்சென்று ஆகிவிடும்.

அவர்கள் கீழே இறங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தார்கள் , சோனாவுக்காக. அவனைக் காணவில்லை. நடுப்பகலில் ஒருதடவை அவனைப் பார்த்தார்கள். ஆனால் எருமை ரத்தத்தால் திலகமிட்டுக் கொண்ட பிறகு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் அவன். எங்கே தான் போய்விட்டான்?

அவர்கள் கீழே வந்து பார்த்தபோது கோச்சுவண்டியில் காலைக் மியானைக் காணவில்லை. அவனுக்குப் பதிலாக யானை மாவுத்தன் ஜசீம் வண்டியோட்டியாக உட்கார்ந்திருந்தான். பின்னால் ராம்சுந்தர் டவாலி போட்டுக்கொண்டு நின்றுகொண் டிருந்தான்.

அமலாவுக்குக் காலேக்கைக் காணாதது ஆச்சரியமாக இருந்தது. "ஜசீம், நீயா வந்திருக்கே ?" என்று கேட்டாள்.

"ஆமாம்மா, நான் தான்." "காலேக் எங்கே ?" ''அவனுக்கு உடம்பு சரியில்லேம்மா." “என்ன ஆச்சு ?" "இருமல், ஜூரம்." காலையில் ராம்சுந்தரைப் பார்த்தவர்கள் இந்த ராம்சுந்தரை அடை யாளம் காண முடியாது. சாதாரணமாகப் பூஜை நாட்களில் அவன் துர்க்கையைத் தவிர வேறு யாருக்கும் சேவகன் அல்ல.

432ஆனால் இன்று சின்ன எஜமானிகள் இருவரும் குலீன்பாடாவுக் கும் இன்னும் மற்றப் பாபுக்களின் வீடுகளுக்கும் துர்க்கையம்மனைப் பார்க்கப் போகிறார்கள் என்று கேட்டதுமே தன் சீருடையையும் டவாலியையும் அணிந்துகொண்டு ஓடிவந்துவிட்டான். அவன் தேவிக்கு மட்டும் அல்ல, குட்டி எஜமானிகளுக்கும் அடிமைதான்.

அவன் வெள்ளைச் சீருடை அணிந்திருந்தான; கால்களில் நாக்ராச் செருப்பு : இடுப்பில் பித்தளைக் கச்சை. கச்சையில் அந்தக் குடும்பத் தின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் தலை யில் சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட நீல நிறத தலைப்பாகை-புல் புல் பறவையின் கூட்டைப் போலத் தோன்றியது. அதன் நடுப்பகுதி கூம்பிக்கொண்டு மேலே நீட்டிக்கொண் டிருந்தது. இப்போது ராம் சுந்தரின் வேஷத்தைப் பார்த்தால், 'நீ எந்தத் தேசத்து ராஜா?' என்று கேட்கத் தோன்றும்.

அமலாவும் கமலாவும் முகத்தைக் கம்பீரமாக வைத்துக்கொண்டு கோச்சில் போய் உட்கார்ந்தார்கள். வீட்டு வேலைக்காரர்களுக்கு முன்னால் தங்கள் பரபரப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் இங்குமங்கும் திரும்பிப் பார்த்தார்கள். "சோனா எங்கே? இதற்குள் தூங்கிப்போய்விட்டானா?'' வண்டியை ஆபீஸ் கட்டிடத்துப் பக கமாக ஓட்டிக் கொ ண்டு போகும்படி வண்டியோட்டியிடம் சொல்லவும் துணிவு ஏற்படவில்லை, அமலாவுக்கு, இந்த ஊருக்கு வந்தால் சில சட்டதிட்டங் களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அவர்கள் தனியே எங்காவது சென்றால் பாட்டி திட்டுவாள். அவர்களுக்கு நிறையச் செல்லம் கொடுக்கும் அப்பா கூட அவர்கள் அந்தப்புரத்துக்கு வெளியே நடமாடினால், ''இங்கே ஏன் வந்தீங்க? உள்ளே போங்க!'' என்பார்.

கல்கத்தா வீட்டில் அவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. அங்கே தோட்டக்காரர்களின பிள்ளைகள் அவர் களுடன் நெருங்கிப் பழகுவார்கள்; அவர்களுக்குப் பொம்மை தயாரித்துக் கொடுப்பார்கள். இன்னும் வேண்டிய உதவிகள் செய்வார்கள். கல்கத்தா வீடும் பெரிய வீடுதான். அங்கே அமலாவும், கமலாவும் தங்கள் இஷ்டப்படி சுற்றித் திரிவார் கள்.

அப்படிப்பட்டவர்கள் இந்த ஊருக்கு வந்ததும் சிறை பட்ட ராஜகுமாரி போல் நடத்தப்படுவார்கள். சோனாவைக் கூட்டிக் கொண்டு பூஜை பார்க்கப் போக வேண்டுமென்று அமலாவுக்கு ரொம்ப ஆசை, சோனாவை அவர்கள் இருவருக்கும் நடுவில் உட்கார வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவன் உடலில் எப்போதும் சந்தன மணம் வீசுகிறதே, அது எப்படி?

433