தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, October 19, 2018

காஃப்காவின் பட்டினி - கலைஞன் - பேராசிரியர்கள் ரே. பி. வெஸ்ட், ராபர்ட் பூஸ்டர் ஸ்டால்மன்

எழுத்து 32 - 1961

ஆய்வு

காஃப்காவின் இலக்கணை உணர்த்தல்

சென்ற ஏட்டில் வெளியான காஃப்காவின் பட்டினி - கலைஞன் கதையைப் பற்றிய இந்த ஆய்வையும் எழுதியவர்கள் பேராசிரியர்கள் ரே. பி. வெஸ்ட், ராபர்ட் பூஸ்டர் ஸ்டால்மன் இருவரும். அதே நூலிலிருந்து எடுத்தது.

சரியாகச் சொல்வதானால், ஒரு கதையின் இயக்கத்தின் எல்லா விவரக் குறிப்புகளும் அந்த கதை குறிப்பிடும் சரித்திர அல்லது புராண சம்பவங்கள் அல்லது கருத்துக்களின் விவரக்குறிப்புகளுடன் நேரடியாக சம்பந்தப்படுகிறபோதுதான் அது ஓரு 'அலிகரி' இலக்கணக் கதை ஆகும். அலிகரிக்கும் அதாவது இலக்கணைக்கும் ஸிம்பாலிஸத்துக்கும் அதாவது குறியீட்டுப் பிரயோகத்துக்கும், கட்டுக்கதைப் பிரிவில் பின்வருமாறு வேற்றுமை வகுத்துக்கொள்ளலாம். குறியீடுகள், அந்த கதையின் எல்லா முக்கியமான விவரணங்கள் மூலமும் இன்னொரு நிலை நிகழ்ச்சித் தொடர்களை குறிப்புணர்த்த, பொருத்தமாக, ஏற்ப உபயோகப்படுத்தப் படுகிறபோதுதான் ஒரு கதை இலக்கணையானதாக ஆகிறது.

இந்த திட்டமான அர்த்தத்தில் ஒரு பட்டினி - கலைஞன்' ஒரு இலக்கணைக் கதை. காஃப்காவின் வழி , இருந்தாலும், ஜான்பன்யன் முறையிலிருந்து முழுக்க வேறுபட்டது. 'பில்:கிரிம்ஸ் பிராக்ரஸ்' ஸில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் பெயர்களைக் (கிரிஸ்தியன், என்வி இந்த மாதிரியானவை ) கொண்டே தங்கள் குணங்களை வெளித்தெரிவிக்கும். மறைபொருளாக நீதிபோதிக்கும் தன் கதையில், கதையின் ஒவ்வொரு அவயவமும் நேரடியாக பொருள் அதில் தொனிக்க, அந்த கதைக்குள்ளே இந்த கதாபாத்திரங்களை நடமாட வைக்கிறார். மேலும் இந்த பொருள்கள் கதை நெடுக இடைவிடாமல் காணப்படுகின்றன. ஃபெய்த்ஃபுல் எப்பவும் விசுவாசம் உள்ளவனாகவும் என்வி அசூயைக்காரனாகவும்... இப்படியே இருப்பார்கள்.

காஃப்காவின் வழி ரொம்ப மாறுபட்டது. இலக்கணையான படிமங்களை விட அவர் குறியீடுகளைத்தான் கையாளுகிறார். தனது யதார்த்த அல்லது கற்பிதமான விவரணங்களுக்கு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை குறித்துக் காட்டுகிறார். அவைகளின் அர்த்தம் ஒரே நிலையாக இருப்பதில்லை. இல்லை, ஒவ்வொரு கருத்துக்கும் ஈடான வைகளைப் போட்டு அவைகளை வேறு வார்த்தை களில் திரும்பச் சொல்லிவிட முடியாது. டி.எச்.லாரன்ஸ் சொல்கிறார்: 'ஒரு இலக்கணையான படிமத்துக்கு ஒரு பொருள் உண்டு. மிஸ்டர். ஃபேஸிங்-: போத் -வேஸ்ஸுக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் ஜேனஸ் (இத்தாலிய இருமுகக் கடவுள்) ஒரு குறியீடு. அதன் முழு அர்த்தத்தின் மீது விரல்வைத்து நீங்கள் சிதைப்பதை எதிர்க்கிறேன். காஃப்கா தொடர்ந்து குறியீட்டுப் பிரயோகத்தை கையாளுபவர். அதனால் அவரது படிமங்கள் வெவ்வேறு சமயங்களில் மட்டுமின்றி ஒரே சமயத்திலேயே வெவ்வேறு விஷயங்களை பொருள் உணர்த்துவதை பார்க்கிறோம். குறியீட்டான அர்த்தங்கள் விடாது பின்னிக் கிடக்கின்றன. இலக்கணை வழி அர்த்த தினிசுகள் (வகைகள்) ஒன்றின் மீது மற்றொன்று சாயல் படிந்து இருக்கின்றன. 'பட்டினி - கலைஞன்'னில் உள்ள இலக்கணை உணர்த்தல்களை குறைந்தது மூன்று வெவ்வேறு நிலைகளில் கண்டறிய சாத்யமாகிறது என்பதை நாம் பின்னால் பார்க்கப்போகிறோம். அதன் அம்சங்களில் ஏதாவது ஒன்று திட்டமாகவும் குறிப்பாகவும் இதைத்தான் குறிக்கிறது என்று நாம் சொல்லக் கூடிய சமயம் ஒருபோதும் இருக்காது.

கதை சொல்வதைவிட குறியீடுகள் விஷயத்தில் தான் காஃப்கா ஒரு நேர்மையை கடைபிடிப்பவர். நடைமுறை தர்க்க அறிவுக்குள் அடங்கி இருப்பதை புறக்கணித்துக்கொண்டே நடைமுறை யதார்த்த உணர்வை உண்டாக்குவதில் அவரிடம் ஒரு விநோதமான மேதைத்தன்மை உண்டு. அவருடைய குறியீட்டுப் பொருள்கள் நடைமுறை உலகத்துப் பொருள்களின் இயல்புக்கு இசைந்து இராது. இயற்கையின் நிலையான நியதிகளுக்கு அவை உட்பட்டிராது. அவைகளுக்கு ஒரு விசேஷ காரியம் இருக்கும். ஒரு தனிமையான உலகத்தின் நியதிகளுக்கு உட்பட்டிருப்பவை. பிரமாண்டமானதும் கலப்பானதும் பயனுள்ளதுமான சாதனம் என்று சொல்லத்தக்க ஒரு பெரிய சர்க்கஸ்க்கு தன்னை அமர்த்திக்கொள்கிறான் அந்த பட்டினி கலைஞன். ஆனால் அதுவோ அவன் இருப்பதையே முழுக்க மறக்க வகை செய்துவிடுகிறது. முடிவில் காலியாகத் தோன்றின அவனுடைய கூண்டின் நாற்றம் அடிக்கும் வைக்கோலுக்குள் துளாவி அவன் கண்டெடுக்கப்படுகிறான். இது ஒரு பிரமைத் தோற்ற சர்க்கஸ் என்றே படுகிறது. காஃப்காவின் மற்ற 'மெய்மைகள் போலவே இதுவும் ஒரு கனவு உலகத்துக்குச் சொந்தமான கற்பனைத் தோற்றம். 'பட்டினி - கலைஞன்'னில் பெளதிக , ஜீவவர்க்க சாஸ்திரங்களின் நியதிகள் தகர்க்கப்படுகின்றன. மானிட வாழ்வு நடப்பு விஷயங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன. நிகழ்ச்சி விவரங்கள் எல்லாம் எளிதானதாகவும் சர்வசாதாரணமானதாகவும் இருப்பது போல தெரிந்தாலும் நுணுகிய ஆராய்ச்சியில் பிடிகொடாதும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் பொதிந்தும் ஆகி இருக்கின்றன. காஃப்காவில் நடப்பு விஷயங்களை வெறும் நடப்புகள் என்று மட்டும் கருதுவதோ, அல்லது அவைகளது உருவகத் தன்மைகளை அமுக்கிவிடுவதோ அல்லது குறைத்து கணிப்பதோ முடியாத காரியம். 'பட்டினி - கலைஞன்னை ஆய்வு செய்யும் ஆரம்ப நிலையாக கதைக்கு பாடாந்தரம் சொல்வதை தவிர்த்து, தூலப் போக்காக வெறும் கதையை அப்பட்டமாக சொல்லிப் பார்ப்போம்..

தமாஷ் அனுபவிக்கும் பொது ஜனங்களுக்கு வேடிக்கை காட்டலாக நடத்தப்பட்டு, ஒரு காலத் தில் மிகப் பிடித்திருந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கதை, வைக்கோல் போட்டிருந்த ஒரு கூண்டுக்குள் இருந்து 'உபவாசம்' என்கிற வித்தையை தொழிலாகக் கொண்டு செய்து காட்டி வந்த ஒரு பட்டினி . கலைஞனின் கண்காட்சி அது. அவன் கூண்டில் உள்ள ஓரே அலங்காரம் ஒரு கடிகாரம் தான். பார்ப்பவர்கள் அவனை ஒரு ஏமாற்றி, சகஜமான சர்க்கஸ் தந்திரம் என்று கருதி, திருட்டுத்தனமாக அவன் பட்டினியை முறித்து ஏமாற்றுவான் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் பட்டினி நோன்புதான் அவன் வாழ்வதுக்கே காரணம். அவன் வாழ்க்கை நோக்கமும் அதுதான். என்ன வலுக்கட்டாயத்திலும்கூட அவன் சாப்பிடவே மாட்டான். அவனுக்கோ அவன் செய்யக்கூடிய எளிய காரியம் உபவாசம்தான். அதைத்தான் அவன் சொல்கிறான், ஆனால் யாரும் அவனை நம்பவில்லை. பொதுஜனங்கள் அவனை நம்பாததால், அவன் காவலுக்கு உள்ளாகிறான். வழக்கமாக மூன்று கசாப்புக்காரர்கள். ஒரு நாற்பது நாள் கெடுவுக்கு மேல் அவன் பட்டினி கிடக்க விடமாட்டார்கள். இரக்க சித்தத்தால் இல்லை. அந்த காலவரைக்குப்பின் ஆதரிக்கமாட்டார்கள் அவன் உபவாசத்தை. அவன் காவலாளிகள் உணவு ஆசை காட்டுவார்கள் அவனுக்கு. சில சமயம் சரியாக நடத்தமாட்டார்கள்; ஆனால் அவனைச் சாக்கிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை ஜமாய்ப்பார்கள் ! அவன் சாதனையை ஒரு மகத்தான பொதுஜன விழாவாக கொண்டாடுவார்கள். இப்படி அவன் உலகத்தால் கவுரவிக்கப் படுவான். ஆனால் கூண்டிலிருந்து வெளியேற்றப் பட்டதும் - பட்டினியால் இல்லை - இன்னும் கணக்கில்லாத நாட்கள் பட்டினியாக இருந்து எக்காலத்துக்கும் தலைசிறந்த பட்டினி - கலைஞன்' என்று ஆகமுடியாமல் அந்த உபவாச கவுரவம் தனக்கு கிடைக்க விடாமல் ஏமாற்றி விட்டார்களே என்ற கோபத்தால் சோர்ந்து விழுந்துவிடுவான். சாகும் அளவுக்கு அவன் இளைத்துப் போயிருந்தாலும் கூட அவன் சீக்கிரமே நலம் அடைந்து உடலைத் தேற்றிக் கொள்ளும் ஒரு சிறு அவகாசத்துக்குப் பிறகு திரும்பத்திரும்ப இதைச் செய்வான்.

இப்போதெல்லாம் அவனை கைவிட்டுவிட்டு வேறு வேடிக்கைகளை பார்க்கிறார்கள். சர்க்கஸ் கூடாரத்தில் உள்ள அவன் கூண்டை ஜனங்கள் பார்த்தாலும் மிருகங்கள் உள்ள லாயங்களுக்கு பக்கத்தில் அது இருந்த காரணத்தால் தான் . பார்க்க வந்தவர்கள் மிருகங்களைப் பார்த்து களிக்கிறார்கள். எல்லாம் மாறிவிட்டது. அங்கே கடிகாரம் கிடையாது. அவன் வித்தையின் நோக்கத்தை ஒரு காலத்தில் குறித்து தெரிவித்த சின்னங்கள் தகவல் சிதைந்து போய்விட்டன. எத்தனை பட்டினி நாள் சாதனை என்ற கணக்கு இப்பொதெல்லாம் வைக்கப்படுகிறதில்லை. காவலாளிகளும் கிடையாது. ஆகவே பட்டினி - கலைஞன் ஒரு காலத்தில் தான் செய்ய ஆசைப்பட்டபடி எவ்வித குறிக்கீடும் இல்லாமல் பட்டினி இருந்து வந்தான் .. அவன் ஒரு சமயம் முன்னறிவித்திருந்தபடி , சிரமம் இல்லாமல் செய்ய முடிந்தது அவனுக்கு. ஆனால் யாரும் நாட்களை கணக்கிடவே இல்லை. யாருக்கும் அந்த பட்டினி - கலைஞனுக்கும் கூட அந்த சாதனை எவ்வளவு மகத்தானது என்பதே தெரியவில்லை. அவன் நெஞ்சு குமைந்தது. இவ்விதமாக உலகம் அவன் பரிசை தட்டிப் பறித்து விட்டது. சிலாகிப்புக்கு பதில் அசிரத்தை ஏற்பட்டுவிட்டது. இதனால் அவன் இறந்து விடுகிறான். அந்த கூண்டு வைக்கோலோடேயே அவன் புதைக்கப்படுகிறான். அவன் இடத்தில் ஒரு சிறுத்தை அடைக்கப்படுகிறது. அது சுபாவமாக ஆசைப்படும் உணவை ஆத்திரத்தோடு தின்கிறது. ஜனங்கள் கூண்டைச் சுற்றி நெருக்கியடிக்கிறார்கள்.

இந்த அப்பட்டமான கதை நடைப்பு விவரத் தகவல்கள் மட்டும் பூரணமானதாகவோ போதுமானதாகவோ இல்லை என்பதும் இவைகளை இந்த அப்பட்டமான அல்லது சொற்பொருள் தரத்திலேயே நாம் ஏற்றுக்கொள்வதுடன் இருந்து விடுவது முடியாத காரியம். அவை ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு தம் சொற்பொருள் கருத்துக்களையும் தாண்டி அவை குறிக்கும் இலக்கணை விசேஷ நிலைக்குள் நம்மை திணித்து விடுகின்றன. அந்த கடிகாரம் ஒரு சாதாரண கடிகாரம் தான்; அது வேறு எதோவொன்றுக்கு பதிலாகவும் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் அந்த விசித்திர கடிகாரத்துக்கு அந்த சொல்லுக்கு உரிய அர்த்தத்தில் எந்த குணமும் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு நிஜ கடிகாரம் மாதிரி மணி நேரத்தை அடித்துக் காட்டுகிறதே தவிர அது 'டிக்' அடிப்பதாக தெரியவில்லை. பட்டினி - கலைஞனின் ஆயுள் கடிகாரத்தால் அளவிடப்படாதது. அவன் காலத்துக்கு வெளியே ஜீவிப்பவன். எந்த சாதாரண மனிதனும் தாங்க முடியாத பட்டினி முற்றுகைகளையும் அவன் அவ்வப்போது வென்று பிறகு ஜீவித்து வருகிறான். (வாஸ்தவமாக அந்த கலைஞனது உபவாச நாட்களை கணக்கிட ஒரு காலண்டர்தான் முறையான சாதனமாக இருக்கக்கூடியது) மற்ற நடப்புத் தகவல்களை பார்க்கப் போனாலோ அவையும் இதேபோல குறியீட்டான விசேஷப் பொருள்களை எண்ணம் எழுப்புகின்றன. காஃப்காவின் நடப்புத்தகவல்களை ஒரு தனிப்பட்ட தனக்குள்ளேயே ஒன்றோடொன்று பொருந்துவதுடன் நின்று விடும் ஒரு முறைவழி அர்த்தத்துக்குள் குறைத்து விடுவது முடியாத காரியம். அவரது அர்த்தங்கள் ஓரே சமயத்தில் பல தர நிலைகளில் வெளிவருகின்றன. அதுதான் சங்கடம். இந்த தர நிலைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. முழுக்க விரித்துரை கூறுவதும் சாத்யமே இல்லை.

காஃப்கா குறிக்கும் அர்த்தங்களை ஒரேயொரு சிந்தனை வட்டத்துக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்க முடியாது. கூண்டுக்குள் உள்ள பட்டினி - கலைஞனது சங்கட நிலமை இன்றைய உலகத்தில் ஒரு கலைஞனது சங்கட நிலையை சுட்டுவதாக இருக்கிறது. அவன் இருந்து வாழும் ஒரு சமூகத்திலிருந்து அவன் சம்பந்தம் நீங்கி இருப்பது. இந்த பார்வையில் கதையை பார்த்தால் பட்டினி - கலைஞன் ஒரு சமூகவியல் பார்வை விழுந்த இலக்கணக் கதை. ஆனால் இந்த பட்டினி --கலைஞன் ஒரு யோகி , மதவாதி அல்லது மதகுருவை சுட்டிக் காட்டுபவனாகவும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்த வித நோக்குப்படி கதை சரித்திரப் பார்வை வழியே மதத்தின் அவகேடான நிலையை இலக்கணை குறித்துக் காட்டுகிறது எனலாம். படக்கூடிய மூன்றாவது பாடாந்தரம் நமக்கு ஒரு வேதாந்த இலக்கணைப் பொருளை பிதுக்கிக் காட்டுகிறது. அந்த பட்டினி - கலைஞன் ஆத்மாவுக்கு, ஆன்மிக ஜீவனாக இருக்கும் ஒரு மனிதனுக்கு - குறியீடாக இருக்கிறான். அதுக்கு எதிரிடையாக அந்த சிறுத்தை தூலப் பொருளுக்கு, மனிதன் மிருக இயல்புக்கு குறியீடாக இருக்கிறது. எனவே இந்த கதையை வேதாந்த நோக்கில் பார்த்தால் ஆன்மீகத்துக்கும் ஐடத்துவத்துக்கும் உள்ள பாகுபாடு. மதக்கண்ணோட்டத்தில் தெய்வீகத்துக்கும் மனிதத்துவத்துக்கும், அதாவது ஆத்மாவுக்கும் உடலுக்கும். சமூகவியல் பார்வையின் படி கலைஞனுக்கும் அவன் சமுகத்துக்கும் உள்ள பிரிவினை காஃப்காவின் பூர்வாங்க கட்டிட பிளான் - இந்த மறைபொருள் நீதிக்கதை அமைப்பை எதன் மீது கட்டி இருக்கிறாரோ அந்த கருத்துக்களின் நிலைக்கள் 'பிளான் - இந்த மூன்று வெவ்வேறு தத்துவ சிந்தனை முறைகளைக் கொண்டு அடையாளமிடப்பட்டிருக்கிறது.

முதலில் கதையை ஒரு கலைஞனது இக்கட்டான நிலை என்ற இலக்கணை ரீதியாக பார்ப்போம். ஜனத்திரளுக்கு எதிரிடையாக பேதம் காட்டின் ஒரு நிலையில் வைக்கப்பட்டிருக்கிறான் அவன். அவனது உபவாசக் கண்காட்சியை வந்து பார்ப்பவர்களால் அவனது கலையை அறிந்துகொள்ள இயலவில்லை. 'யாருக்காவது உண்ணாவிரதக் கலை பற்றி விளக்க முயற்சிப்பார்கள்! எவனுக்கு அதில் ஈடுபாடு இல்லையோ அவன் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. தன் தர்சனப் பார்வை நிமித்தமாக கலைஞன் தன்னை பட்டினியால் வருத்திக் கொள்கிறான். தன் தூரப்பார்வையிலே அவனுக்கு நம்பிக்கை; தன் மீதும் அழகுணச்சி யின் நேர்மையிலும் நம்பிக்கை. விவேகிகள் மட்டும் புரிந்து கொண்ட மாதிரி, 'பட்டினி - கலைஞன் என்ன நேர்ந்தாலும், வலுக்கட்டாயப்படுத்தினாலும் கூட, பட்டினி நோம்பு நாட்களில் எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ள மாட்டான். கலைஞன் என்ற அவனுக்கு உள்ள அந்தஸ்து, அத்தகைய காரியத்தை அவன் செய்ய விடாது. அவனுடைய தூரதிருஷ்டி, அது ஒன்றே தான் அவனை போஷிக்கிறது. வேறு யாரும் இருக்க முடியாத ஒரு பட்டினி நோன்பு அந்த கலைஞன் இருக்கலாம் தான். எல்லோரும் கலைஞர்களாக இருக்கிறதில்லையே. 'வயது அதிகரிப்பினால் வித்தைத் தரம் குறையாத இந்த கலையின் தனித் தன்மை ' யைக் கொண்டு, கலைப்படைப்புகளை படைப்பதுக்கான எல்லையற்ற தன் திறமை பற்றி அவன் சொல்லிக் கொள்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கலைஞனைப் பற்றியும் அவனுடைய கலையைப் பற்றியும் மனம் இசைந்து அறிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்களாக அவனுடைய பொது ஜனங்கள் இருந்துவிட்டால், அவனிடம் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லாது போய்விட்டால் எப்படி அவன் இந்த நம்பிக்கையை தனக்குள்ளே பிடித்து வைத்துக் கொண்டிருக்க முடியும்? அவர்கள் நம்பிக்கையில்லாதவர்களாக இருந்ததால் தான் கலைஞன் ஒரு கூண்டுக்குள் இருக்கிறான். (கூண்டு அவனுடைய பிரிந்து வேறான வாழ்க்கையை குறியீட்டால் தெரிய விக்கிறது.) சமூகமும் கலைஞனும் - ஒன்றை மற்றொன்று நம்புகிறதில்லை. ஆகவே கலைஞன் முடிவில் தனக்குள்ளேயே நம்பிக்கை இல்லாதவனாக ஆகிவிடுகிறான். அவன் பிரிந்து வேறாகி வாழ்ந்து இருக்க இயலவில்லை.

பட்டினி - கலைஞன் ஏன் இளைத்துப் போனான் என்றால் அவனுக்குள்ளேயே ஏற்பட்ட பொருந்தாமைதான். அது ஆத்மாவுக்கும் சரீரத்தும் உள்ள சேர்க்கைத் தவிர்ப்பின் விளைவுதான்; அவனுக்கும் சமூகத்தும் இடையே ஏற்பட்ட இசைவுக்கேடின் பலன் தான். யதார்த்த உலகப் போக்கை அவன் மறுத்தது தான் அவனை அரிக்கும் சந்தேகத்துக்கும் சதா மனம் ஒடிந்த நிலைக்கும் மூலகாரணம். அவன் வாழ்க்கையை நிராகரிக்கிறான். ஜனசமூகம் அவனை நிராகரிக்கிறது. கலைஞனது மெலிந்த உடலைப் பார்க்கப் பிடிக்காமல் சிறுத்தையின் ஆரோக்ய உடலைக் கண்டு ரசிக்கிறது. வாழ்க்கையை ஏற்று அங்கீகரிக்க மறுத்து விடுகிறார்கள். கூண்டுக்குள் உள்ள இந்த இரண்டும், சுத்த ஆன்மீகமானதும் தூயமிருக இயல்பானதும், மனிதனது இரட்டை இயல்பையே தான் குறித்துக் காட்டுகின்றன. கூண்டுக்கு வெளியே உள்ளவர்கள் - அவர்களோடு வித்தியாசப்படுத்தித் தானே அவன் காட்டப்படுகிறான் - அந்த சிறுத்தை விரும்புகிற அதே உணவைத்தான் இச்சிக்கிறார்கள். அந்த மிருகத்தைப் போலவே அவர்களுக்கும் தங்கள் தொண்டை, வயிற்றுக்கான பிரச்னைகளிலே மகிழ்ச்சி. இந்த மனிதர்களும் மிருகங்களும் இந்திரிய சம்பந்தமான ஆதிக்கத்தின் குறியீடுகளாக இருக்கிறவை. ஒரே மாமிச உருவம்; பட்டினி - கலைஞனோ சதையே இல்லாதவன். ஒன்றில் சுத்த ஜடப் பொருளும் (மாட்டர்) மற்றதில் சுத்த ஆத்மாவும் இருக்கின்றன. ஆனால் பட்டினி - கலைஞன் ஆத்மாவின் தெய்வீகத் தூய்மையின் காரணகர்த்தாவாக இருப்பதில் வெற்றி பெறவில்லை. நமது தூல உடலின் வேட்கைகள் திரும்பத்திரும்ப நமக்குள் கிளர்த்தும் அரிக்கிற அதிருப்திகளிலிருந்து விடுபட்டவனாக வெளிக்குத் தோன்றினாலும், அவன் உடலின் , ஜடப் பொருளின் (மாட்டர் தான் வாழும் உலகத்தின் தேவைப்பாடுகளிலிருந்து முழுக்க விடுபட்டவனாக இல்லை. சுதாவான தீய சமூக உலகத்தை மறுக்கும் அதே சமயத்தில் அவன் அந்த பொது ஜனங்களிடமிருந்தே தன் உபவாசத்துக்கு பாராட்டை எதிர்பார்க்கிறான். கூட்டம் தன் கூண்டைச் சுற்றி கூட வேண்டும் என்று விரும்புகிறான். தான் உயிர் வாழ்வதுக்கே காரணமாக இருப்பது இவர்கள் தன்னை வந்து பார்ப்பதுதான் என்று (ஆவலுடன் லாயங்களுக்கு அவர்கள் போகும் வழியில்) எதிர்பார்த்தாலும், அதே சமயம் ஒருவித ஐயம் ஏற்படுவதை தவிர்க்க அவனால் இயலவில்லை. எவன் அவசரப்படுகிறானோ அவன், அதே சமயம் தன் உபவாசத்தை நிதானித்து திருப்தியடையும் ஒரு பார்வையாளனாக இருக்க முடியாது என்கிற உண்மையை அவன் உணர்கிறான் - தூய ஆன்மிக வாழ்வு மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்பதை அறிகிறான். ஒரு கலைஞனாகவோ, ஞானியாகவோ அவனுக்கு உளையும் திருப்திப்படுத்தாத, ஒரு வேட்கை அடித்தளத்தில் தனது  தவறாக பொருந்தின, அதனாலேயே முழுமை அடையாத ஆத்மாவின் சைகை என்பதை பார்க்கிறான்.

யதார்த்தத்திலிருந்து முழுக்க வேறுபட்டு நிற்பது ஆன்மிக மரணம்தான். மனிதனது இயல்பு பற்றிய ஒரு இலக்கணைப் பொருள் கொண்ட கதை என்ற அளவில் இந்த கருத்தைதான் 'பட்டினி - கலைஞன் திரட்டிச் சொல்கிறது. மனிதன் 'ஜடப் பொருள் ஆத்மா என்பதெல்லாம் என்ன? இந்த வேதாந்த பிரச்னையின் ஒருவித விமர்சன பரிசீலனையாக இந்த கதையை கொள்ளலாம் - ஆத்மாவும் ஜடப் பொருளும் ஒன்றை நிறைவிக்க மற்றது தேவை. மரண சமயத்தில் பட்டினி - கலைஞன் ஒரு கலைஞனாகவோ படைப்பாளியாகவோ தோற்று விட்டதை புரிந்து கொள்கிறான். இந்த தளர்ந்து போன கலைஞனுக்கு மீட்சிக்கு வழியே கிடையாது. ஏனென்றால் நமது இன்றைய உலகில், ஆத்மா இல்லை , ஜடப்பொருள்தான் ஏற்கப்பட்டிருக்கிறது. இன்று ஆத்மாவை வென்று விட்டது ஜடப்பொருள் என்ற மெய்ம்மை சாகும் பட்டினி கலஞனால் அவன் தன் ரகசியத்தை வெளியிடுகிறபோது தெரிய வருகிறது. தனக்குப் பிடித்த உணவை காண முடியாததால் தான் உபவாசம் இருக்க வேண்டி இருந்தது என்பதை ஒத்துக் கொள்கிறான் அவன். 'பாருங்கள், உபவாசம் இருப்பது என் விதி. ''அதை-- எனக்குப் பிடித்த உணவை நான் கண்டிருந்தால் - என்னை நம்புங்கள் - நான் பரபரப்பு உண்டாக்கி இருக்கமாட்டேன். உங்களையும் மற்றவர்களையும் போல் சாப்பிட்டிருப்பேன்' இவைதான் அவனது கடைசி வார்த்தைகள். ஆனால் அவனது பளீரிடும் கண்களில் பெருமை என்று இனி சொல்ல முடியாது போனாலும், தான் இன்னமும் உபவாசம் இருப்பதான உறுதியான தன்னம்பிக்கை இருந்தது. அவனுடைய புதிர்நிலைமைக்கு தெளிவிப்பு இதோ . ஜனக்கும்பலின் தொடர்பு அறுந்து தன் படைப்புக் காரியத்தில் (உபவாசத்தில்) ஈடுபடும் கலைஞன் தினம் செத்து தினம் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருக்கிறது. இது பிராணத் தியாகம்தான்; ஆனால் எதுக்காக? ஒரு அழகு அல்லது ஆன்மீக நோக்கில் ஈடுபாடு, அதுவே ஓரு முடிவாக இருந்துவிட முடியாது. எப்படி முழுமுற்றான ஆன்மிகம் சாத்தியம் இல்லையோ கலப்பற்ற படைப்புத் தன்மையும் சாத்தியம் இல்லை. படைப்புக் கற்பனை நடப்பை உணவாகக் கொண்டாக வேண்டும். ஏனென்றால் கலையோ ஒரு யதார்த்த அடிப்படைப் பார்வை. ஒரு வேதாந்த உபவாசக்காரனைப் போலவே கலைஞனும் இந்த லெளகீக உலகத்தில் வாழ்ந்தே ஆகவேண்டும். வாழ்க்கையின் லெளகீக நிலைமைகள் கலைக்குத் தேவை. இந்த நிலைமைகள் தான் அதை போஷிக்கின்றன. கலைக்கும் அதன் ஊற்றுக்கும் மூல விஷயம் வாழ்க்கைதான்.

பட்டினி - கலைஞனின் கூண்டில் உள்ள கடிகாரம்தான் கலைஞனை வென்று விடுகிறது. நமது தற்போதைய நடப்பான காலத்தின் தொடர்ந்த போக்கை மறுப்பவனையே வெற்றி கொள்வது காலம் தான். தன் படைப்புச் செயலின் அல்லது பார்வையின் அழிவின்மையில் கலைஞனுக்கு உள்ள திடநம்பிக்கையை பரிகசிப்பது கூண்டில் உள்ள கடிகாரம் ; தன் கலை சிரஞ்சீவித் தன்மைக்கான ஒரு யுக்திக் காரியம் என்ற அவன் நம்பிக்கையை பரிகசிப்பது. காஃப்காவின் பட்டினி - கலைஞனின் சோக முடிவு அவன் இறந்து விடுகிறான் என்பதில் இல்லை. வாழ்க்கைக்குள் சாக அவன் தவறிவிட்டவன் என்பது தான். அவன் சாகும் போது தன் வாழ்க்கை முழுவதும் யாரை நிராகரித்தானோ அவர்களிடமிருந்தே அவன் அங்கீகாரம் எதிர்பார்க்கிறான். 'நீங்கள் என் உபவாசத்தை மெச்ச வேண்டும் என்றே எப்போதும் நான் விரும்பினேன்' என்றான் பட்டினி - கலைஞன். ஆன்மீகம் ஜடப் பொருளையும், ஆத்மா உடலையும், கலைஞன் வாழ்க்கையையும் முழுக்க முழுக்க தன் ஆதிபத்தியத்துக்குள் கொணர முடியாது என்பது அவன் ஒப்புக்கொண்டது. கதை நெடுக ஆசிரியர் இன்றைய நமது நாகரிகத்திடையே நமது பட்டினி - கலைஞர்களது மறைவு, சீரழிவு பற்றி துக்கப்படுகிறார் என்றாலும் கதை முழுக்க சுய நிறைவு பெற்ற பட்டினி - கலைஞனின் முயற்சிக்கு எதிராகவே நியாயம் நிறை உயர்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அவனுடைய கடைசி வார்த்தைகளில் கலைஞன் வாழ்க்கையோடும் தான் உட்பட்டு வாழும் ஒரு நாகரிகத்துடனும், நடப்பு உலகத்துடனும் ஒரு ராஜிக்கு வரவேண்டும் என்ற ஒப்புக்கொள்ளுதல் இருக்கிறது. எல்லோரும் என்னை மன்னியுங்கள்' என்று ஏதோ ஒரு புரோகிதர் முன் பாவமன்னிப்பு கேட்பது போல் சர்க்கஸ் மானேஜரிடம் காதோடு சொல்கிறான். அவர்களும் மன்னித்து விடுகிறார்கள். இயற்கைக்கு எதிராக அவனுடைய அபசாரத்தை அவர்கள் மன்னிக்கிறார்கள்.

வேதாந்த, அழகு அநுபவ நோக்கு அர்த்த நிலைகளில் இலக்கணை ரீதியாக காஃப்காவின் கதைத் தகவல்களுக்கு பொருள் எடுத்துக்காட்ட முடிவது போலவே மதம் சம்பந்தமான இலக்கணை உணர்த்தலாகவும் நடப்பு சம்பவங்களின் பல்வேறு பொருள்கள் சாயல் ஏறி இருக்கின்றன. நமது 'ரினே ஸான்ஸ்'க்குப் பிந்தின கால உலகம் தத்துவ விசாரகன் , கலைஞன், யோகி இவர்களை நிராகரித்து விட்டது. ஒரு யோகி - உபவாசக்காரனாக பட்டினி - கலைஞன் இறந்து விட்டான். அவனை மதகுரு அல்லது கலைஞன் என்று எப்படி குறிப்பிட்டாலும் சரி, 'வேடிக்கை விரும்பும் ஜனக்கும்பலால் அவன் நிராகரிக்கப்பட்டு பதிலாக வேறு வேடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. உதாரணத்துக்கு உயிருள்ள ஒரு சிறுத்தைக் காட்சி. முன்காலத்தில் அது வேறுவிதமாக இருந்தது. மத்திய காலத்திலும், ரினேஸான்ஸ் நாட்களிலும் உலகத்தால் கவுரவிக்கப்பட்டு அவன் புகழுடன் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு போஷகர்கள் இருந்தார்கள். (கலை ஞனது போஷகர் காட்சி நிர்வாகி) அவனுக்கு விமர்சகர்கள் உண்டு. அவனது படைப்புச் செயலை நம் பாத பொதுஜனங்களிடமிருந்து பாதுகாத்து அவனுக்கு காவல் இருந்த மூன்று கசாப்புக்காரர்கள் உண்டு. அவனுக்கு சரித்திராசிரியர்கள் உண்டு. அவனுடைய படைப்புச் செய்கையை பதிவு செய்த அல்லது அசாத்ய வித்தை விவரங்களை கணக்கிட்ட பரிவாரங்கள் உண்டு. அந்த காலத்தில் வாழ்க்கையை அவன் போலி செய்து காட்டின சாதனைக்காக அவனை மெச்சவாவது செய்தார்கள். கூண்டுக்குள் அவன் சிறுத்தை மாதிரி நடந்து கொண்டான். மரண வெறிப்புடன் கருப்பு டிராயர் அணிந்து விலா எலும்புகள் தூக்கித் துருத்தித் தெரிய சில சமயம் விநயமாக தலை அசைத்தும் வலிந்த புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் அவர்கள் தன் உடல் மெலிவை உணரும்படி செய்ய கைகளை கிராதிகளுக்கு வெளியே நீட்டிக்கொண்டும் ... யாரையும் பார்க்காமல் கிட்டத்தட்ட கண்ணை மூடிக் கொண்டு தன் முன் நேரெதிரே பார்த்துக் கொண்டும்......... ஆனால் நிஜவாழ்க்கையை எவ்வளவு மோசமாக போலி செய்து காட்டினான் அவன்! அந்த நாட் களில் அவன் கொண்டாடப்பட்டான். (பாசாங்கு இல்லாமலில்லை என்பது இருக்கட்டும்) நிர்ணயிக்கப் பட்ட பட்டினி நாட்களில் மனச்சாட்சிக்கு ஒத்த முறையில் நடத்தப்பட்ட சடங்குகளுடன் கவுரவிக்கப்பட்டான். ஒவ்வொருவரும் அவன் ஆராதனைக்கு தினமும் விஜயம் செய்தார்கள். வழக்கமான சந்தாதாரர்கள் தேவாலய ஆசனங்களில் போல 'நாள் முழுக்க அந்த சின்ன கிராதியிட்ட கூண்டின் முன்பாக' உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அவனுடைய பரிசுத்த உபவாசத்தை வியப்பது போல் பாவனை செய்தார்கள். உண்மையில் தொழ வந்த ஒருவனுக்கும் நம்பிக்கை கிடையாது, இருந்தாலும் அவனிடம் காட்டிய இந்த நம்பிக்கை ஏய்ப்புக்கும் மீறி அவன் இந்த பாவனை நம்பிக்கைக்காரர்களிடம் திரும்பத்திரும்ப சிலுவையில் அறைபட அவன் தன்னை உட்படுத்திக் கொண்டான். தன் தெய்வீக லட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்து கொண்டவன் அவன். ஜனக் கும்பல் அப்படி செய்வதுதான் நாகரீகம் என்பதால் அவனுடைய சின்ன கிராதியிட்ட கூண்டைப் பார்க்க விஜயம் செய்தார்கள். ஒரு பாவமன்னிப்பு கோரி குரு பீடத்துக்கு முன் போவது போல வந்தார்கள். ஆனால் ஜனக்கும்பலுக்கு நம்பிக்கை என்றால் என்ன என்றே தெரிய வராத காரணத்தால், ஒப்புக்கொள்ளுவதுக்கு ஒரு பாபமும் இல்லை. பட்டினி - மதகுரு எந்த பாப ஒப்புக்கொள்ளுதலையும் கேட்கிறதில்லை. (எதிர் விபரீதமாக, சாகப்போகும் அவன் தான் பாவ ஒப்புக்கொள்ளுதல் செய்கிறான். சுருக்கமாக - அவனது வழிபாட்டுக்கார ஒரு சில கோவில் பணியாட்களைத் தவிர மனிதவர்க்கம் முழுவதுமே, மனிதனுக்காக பல தடவை உயிர்நீத்த இந்த யேசுகிருஸ்துவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. அவன் இறக்கவும் இந்த அவநம்பிக்கைக்காரர்கள் அவன் மரண நிகழ்ச்சியை எப்படி தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாருங்கள். கன்னிமேரி தன் மகனுக்காக துக்கிக்கும் சோக நிகழ்ச்சி மாதிரி ஒரு பகடி நிகழ்ச்சி வர்ணனை இதோ :

ஆனால் இந்த சமயத்தில் எப்பவும் நடப்பது நடந்தது. காட்சி நிர்வாகி வருவார். மவுனமாக; ஏனென்றால் வாத்ய இசை பேசவிடாமல் செய்துவிடும். அந்த பட்டினி - கலைனுக்கு மேலாக கையை உயர்த்தி, வைக்கோல்மீது இருந்த அந்த பரிதாபகர பிராணத் தியாகியை பார்க்கும்படி தேவலோகத்தையே அழைப்பது போல ஏதோ பாவனை செய்வார். அந்த பட்டினி - கலைஞன் உயிர்த் தியாகிதான், நிச்சயமாய். ஆனால் வேறு ஒரு அர்த்தத்தில் . பிறகு அவர் பட்டினி - கலைஞனின் ஒல்லியான இடுப்பை, எவ்வளவு எளிதில் முறியத்தக்க பொருளை தான் கையாள வேண்டி இருக்கிறது என்பதை அதீதமான எச்சரிக்கை எடுத்துக் கொள்வதன் மூலம் வெளித்தெரிய முயற்சிப்பவராக, பிடிப்பார் . பிறகு அவனை மறைவாக கொஞ்சம் ஆட்டிக் கொடுத்து அவன் கால்கள் லேசாக தள்ளாட அவன் உடல் வசமில்லாமல் தடுமாறச் செய்து அவனை அந்த பெண்களிடம் ஒப்பிப்பார். இதுக்குள் அவர்கள் முகம் வெளிறிப் போய் இருப்பார்கள்.''

அவன் உயிர்த் தியாகத்தைக் கண்டு இவ்வளவு அளவுக்கு மீறி மனம் உருகும் இந்த பெண்கள் அறிவு இல்லாமல் கொண்ட ஒரு அனுதாபத்துக்கு குறிப்புணர்த்தலாக இருப்பவர்கள். அறிவு கலந்து வராத ஒரு அனுதாபம், வெறும், தனக்காக மனம் உருகிக் கொள்ளும் காரியம் ஆகும். பெண்களில் ஒருத்தி விம்முகிறாள். அவனுக்காக இல்லை. அவனைத் தொட ஏற்பட்டுவிட்டதே என்ற அவமானத்தால் கண்ணீ ர் விடுகிறாள்.

''அவன் உடலின் பளு முழுவதும், அவன் லேசாக இருந்தாலும், பெண்களின் ஒருத்தி மீதே விழுந்தது. அவள் மூச்சுத்தடுமாறி, உதவியை எதிர்பார்த்து மன்றாடுபவளாக - சுற்று - முற்றும் பார்த்து (தனக்கு கிடைத்த இந்த கவுரவ பதவியை அவள் இப்படி சித்தரித்துப் பார்க்கவில்லை.) முதலில் அந்த பட்டினி கலைஞனுடன் ஒட்டாமல் இருக்க தன் கழுத்தை முடிந்த மட்டுக்கு தள்ளிவைத்துக் கொண்டாள். பிறகு இதனால் எதுவும் பயன் இல்லாது போகவே அவளது அதிர்ஷ்டக்கார கூட்டாளி எந்தவித உதவியும் தராது போகவே, தன் நடுங்கும் கையில் வெறும் எலும்புக் கட்டாக் இருந்த அந்த பட்டின - கலைஞன் கையை சுமந்து கொண்டு போவதோடு நின்று விட்டாள். சபையோரது மகிழ்ச்சி ஆரவாரம் தொடர அவள் கண்ணீர் விட்டாள்.

இந்த இரண்டு மேரிகளும் நடிப்பது ஒரு பரிகாச துக்க வெளியீடு.


எழுத்து

No comments:

Post a Comment