தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, October 30, 2018

கற்பனை அரண் - ந. முத்துசாமி :: எழுத்து 1967_09-98

கற்பனை அரண் - ந. முத்துசாமி :: எழுத்து ezhuttu_1967_09-98
from
 http___tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000847_ezhuttu_1967_09-98.pdf

காலையில் வீட்டில் காப்பி குடித்து விட்டால் கூட கிடாரங்கொண்டானில், காவிரிப்பூம்பட்டிகனம் சாலையில் காவிரியைப் பார்த்துக் கொண்டி ருக்கும் நாயர் கடையில் டீ குடித்துவிட்டுக் கொஞ்ச நேரமாவது அரட்டை அடித்து விட்டு வர வேண்டும் எனக்கு. அன்று நான் நாயர் கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது வழியில் கொல்லன் பட்டறையில் ராமையா படையாச்சியின் பக்கத்து வீட்டுக்காரன் உட்கார்ந்திருந்தான்.

நான் டீக்கடைக்குப் போய்ச் சேர்ந்த பிறகு ராமையா படையாச்சி அங்கு வந்து சேர்ந்தார். ''ஒய் நாயரே சாயமா அஞ்சு டீ போடு" என்று துண்டை உதறி பெஞ்சில் போட்டுவிட்டு அதில் உட்கார்ந்தார் அவர்.

"அஞ்சு டீயா நீ ஒருத்தன் தானே இருக்கே" என்றார் நாயர் டீயைப் பாகம் போட்டுக் கொண்டே ...

"கிடாரங்கொண்ட சோழனின் படைத் தலைவன் கேட்கிறேன். அஞ்சு டீ போடு... ஒன்று எனக்கு மிச்சமெல்லாம் என் மெய்க்காப்பாளர்களுக்கு" என்று பத்து விரல்களை விரித்து ஒரு விரலை மடக்கி நாயரிடம் காட்டினார் படையாச்சி.

என்னோடு டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், தஞ்சாவூர்க்காரர்களுக்கு அன்று திண்ணை இன்று டீக்கடை என்று சுவாரஸ்யமாய் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். படையாச்சியின் விரல் களை உரக்க எண்ணிவிட்டு அவரைப் பார்த்து நாயர் விழிப்பதைக் கண்டு படையாச்சி பேச ஆரம்பித்தார்.

''என்னங்காணும் ஓய் நாயரே முழிக்கறே. போடு அஞ்சு டீ.. அப்பறமா ஐயனார் கோயில் முன்னடியான் போல முழிக்கலாம். அது முழிச்சா விழி கண்ணுக்குள்ளே இருக்கும். நீ முழிச்சே விழி கோலிக்குண்டு மாதிரி வெளியில் வந்து விழுந்துடும். கோலி ஆட்டம் எனக்கு மறந்து போச்சு. அப்பறம் அந்தப் பய வந்துடுவான் விளையாட. கட்டை விரலைக் கீழே ஊன்றி ஆள் காட்டி விரலை ஆகாசத்தைப் பார்த்து நிறுத்தி நிக்கும் விரலைச் சிட்டி கையாய்ப் புடிச்சு அடிச்சான்னா குண்டு மேலே குண்டு நங்குன்னு பாயும். நின்ற குண்டு சோழனைத் தேடிக் கொண்டு ஓடும். அப்பறம் அவனுக்கு நான் பதில் சொல்லணும்."

''அந்தப் பய இருக்கானே.''

''அவன் காயடிக்காத மாடு. திமில் தோள் பட்டையிலே முதுகுப்புறமா திரளுது சோழன் முன்னாடி நின்று திமிலை ஆட்டறான். சோழன் முகத்துக்கு நேரே ஆடுது திமில். அவன் மூஞ்சி எனக்குத் தெரியாமே மறைக்குது இந்த மாடு. நான் பதில் சொல்லும் போதெல்லாம் மன்னன் ஏன் முகத்தைப் பார்க்க திமில் மறைவிலிருந்து அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்க்கிறான். திமில் பாம்பின் படமாய் ஆடி அவன் முகத்தை மறைக்குது. மனிசனுக்கு மனிசன் ஓடிப் புடிச்சு விளையாடலாம் நாயரே. பாம்பு கிட்டே பாச்சா காட்டலாமா? பாச்சா காட்டினே அது உன் மூக்கிலே முத்தம் கொடுத்துடும்'' என்று தன் மூக்கை சுண்டு விரல் நீக்கிய மற்றை விரல்களால் தொட்டு, பிறகு அவ்விரல்களை முத்தமிட்டார். முத்தமிட்ட உதடுகள் குவிந்தே இருந்தன. விரல்கள் குவிந்தபடியே படம் ஒடுங்கிய பாம்பின் தலை போல் அவர் பார்வையில் இருந்தது.

''அந்தப் பய இருக்கானே.'' ''அவன் முதுகெலும்புப் பதிவிலே பாம்பெ எடுத்துப் படுக்க வைச்சா அதுலே அது மறைஞ்சு போயிடும் கவசம் போட்டாப்பிலே ரெண்டு பக்கமும் மார்பு. மார்பு கூடர இடத்திலே சங்கிலி கோத்தாப்பிலே இருக்கு

''ஒய் நாயரே போடுய்யா டீ, ரத்தம் கணக்கா இருக்கணும் சொல்லிட்டேன். சீக்கிரமா போடு. நேரம் ஆயிக்கிட்டே போகுது. ரத்தம்

- இன்னா ஒனக்கு எங்கே தெரியப் போகுது. வாயிலே வெத்திலே போட்டுக்கிட்டு இருக்கேல்லே அது மாதிரி இருக்கணும், போடு... போடு... சீக்கிரமா போடு.

'ஓய் நாயரே ஆரம்பத்திலே உன் மேலே எனக்குச் சந்தேகம்தான். நீ சேர நாட்டு ஒற்றன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம் நீ குளிர் ரத்தப் பிராணின்னு தெரிஞ்சதும் சந்தேகம் தெளிஞ்சு போச்சு. ஒன் ஒடம்பிலே தண்ணீ தான் ஓடுது. ரத்தம் ஓடலே. அதனாலேதான் நெஞ்சு ஈரத்தை எல்லாம் பிழிஞ்சு டீயிலே கலந்துடரே.

''இருந்தாலும் ஒங்கடை டீ தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கள் கண்ணகி கோவலனே உங்கள் மலைமேலே சந்திக்கிறபோது ஓங்க அப்பன் பக்கத்திலே நின்று வேடிக்கை பார்த்துக் கிட்டிருந்தான், அதனாலே தான் ஒன் கடையிலே டீ குடிக்கிறேன். வேடிக்கை பார்த்துட்டுப் போய் அவன் சேரன் செங்குட்டுவன் கிட்டே சொல்லிட்டான். உடனே அவன் ''டேய் என்னடா பேசிக்கிட்டாங்க" இன்னான். ஒங்க அப்பனுக்கு ஒரே வெட்கம். 'என்னமோ பேசிக் கிட்டாங்க. காதல் பேசிக் கிட்டாங்க' இன்னு சிரிச்சுக்கிட்டே கையைக் கொழச்சு கவிட்டியிலே வைச்சுக்கிட்டு நாயைப் போல நின்னான்.

''சபாஷ் மகனே சபா ஷ்" இன்னான் மன்னன்.

"அப்போ அந்தக் காதல் தெய்வத்துக்கு ஒரு சிலை சமைச்சிடுவோம். அடுப்பிலே நெருப்பிருக்கு பூனையைப் போல முழிச்சுப் பார்க்கு துன்னுட்டு படையை எடுத்துக்கிட்டு நேரே இமயமலையைப் பார்க்கப் போனான். மலையிலே போய் ஒரு கல்லை வெட்டி தலையிலே தூக்கிக் கிட்டான். ஒரே குளிரு. பல்லு கொட்டுது உதடு வெடிச்சுப் போச்சு. பேச முடியலே. இருந்தாலும் சிலை சமைக்கணும்கிற பசியிலே கல்லைச் சுமந்துக்கிட்டு நடந்தான். தலைக் கல்லு உருகி உடம்பிலே வழியுது. குளிரு அதிகமாச்சு. உடம்பு மரத்துப் போச்சு. நாக்கை அசைக்க முடியலே. ஊருக்கு வந்ததும் உளர்றாள். பேச்சு மறந்து போச்சு... உதடு வெடிச்சு வெள்ளிரிப் பழமாத் தொங்குது. மூக்காலே பேசினான். அந்த ஊரிலே பொறந்த பயதானே நீ, அதனாலே ஒனக்குத் தமிழ் மறந்து போச்சு.

பிறகு அவர் மெளனமானார். விழிகள் கால ஓடையில் போட்ட தூண்டிலின் மிதப்புகள் போலிருந்தன. பக்கத்துப் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் பெஞ்சில் சொட்டி இருந்த டீயை விரலால் இழுத்துக் கேள்விக்குறி போட்டுக் கொண்டிருந்தார். இரண்டையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர், ''உலகில் உயர்ந்தது எது?'' என்று கேட்டு வைத்தார். நாயர் ''உலகில் உயர்ந்தது இமயமலை'' என்றார். 'இல்லை, இளய முலை' என்றார் படையாச்சி. 'எப்படி?'' என்றார் இன்னொருவர்

இப்படிச் சொல்லு. மண்ணில் உயர்ந்தது மலை பெண்ணில் உயர்ந்தது முலை, மண், பெண், பொன் எல்லாம் ஒன்னு தான். பெண் அதனாலே தான் பொண்ணாச்சு. மலையும் முலையும் ஒன்று தான். மேகத்தை முட்டுவது மோகத்தை முட்டுவது, மேகந்தான் மோகம். வந்து கவிழ்கிறது. விலகத் தெரிகிறது."

"ஓய் நாயரே படையாச்சிக்கு முதல்லே டீ போட்டுக் கொடய்யா."

''ஆமாம்... எனக்குச் சாயமாய் உன் எச்சில் போன்ற ரத்தம் போல் டீ போட்டுக் கொடு. அந்தப் பயலின் கையை வாங்கப் போகிறேன். 'டேய்.... சொத்தை ஆளப் பிறந்த கைடா இது.' அந்தப் பயல் கையை ஆகாயத்தில் நீட்டினான். அது ஆகாயத்தை எட்டுவதற்கு முன்னால் வெட்டி விட வேண்டும்.''

''நாயரே" சொத்துன்னா என்ன தெரியுமா?''

''மண் பெண். பொன். வைக்கோல் போர் இருக்கே.. வைக்கோலின் நிறமென்ன? பொன் நிறமய்யா, பொண் நிறம், மண்நிறம், ஓய்.. வைரக் கண்ணு படையாச்சி கத்தியேத் தீட்டு.''

"அந்தப் பய இருக்கானே...''

''அவனுக்கு சிலம்பம் தெரியும்: மதுரையிலேருந்து ஒருவன் வந்தான். எனக்கு சிலம் பம் தெரியும்: கத்திச் சண்டை தெரியும்னான். அவனுக்குத் தெரிஞ்சு எனக்கு என்ன ஆச்சு. பக்கத்து வூட்டுப் பய இருக்கானே. நாடாரே, எனக்குப் பழகித் தரயான்னான்: ராத்திரி நிலவு வெளி சத்திலே ஆரம்பிச்சானுவ. ராத்திரி முழுசும் கழிக்குக் கழி மோதிக்குது. டொக்கு டொக்குன்னு என் வீட்டுக் கதவை வந்து தட்டுது.

''டேய் யார்டாது ?" 'நாந்தான்.'' ''நாந்தான்னா?'' ''நாந்தான்.''

''ஓகோ பாண்டிய நாட்டுக்காரன் கிட்டே சிலம்பம் பழகிக்கிற பயலா ... கிடாரங்கொண்ட சோழன் படைத் தலைவனா ஆகற உத்தேசமோ? எனக்குப் போட்டியா வரயாடா பயலே .. ஒங்க அப்பன் வந்தாலும் நடக்காது. நான் சோழ நாட்டின் நிரந்தர படைத் தலைவன்.

''எந்த மடப் பயலாவது அவனைத் தூக்கி படைத்தலைவனா போடுவானா?

"அவன் நாட்டைக் காட்டிக் கொடுத்திடுவான். நாடு பாண்டிய நாட்டுக்கு அடிமையா யிடும். அப்புறம் நாமெல்லாம் அடிமை. என்ன ? தும் கியா போல் தே ஹோ நாயர் ?'' தும்தோ சேர் தேங்கி சோர் ஹோ!

''அப்புறம்?''

''போய் வாசல் கதவைத் திறந்தேன். ஒரு பயலையும் காணும். பய ஒடிப் பூட்டான். எம் பொண்டாட்டியே நோட்டம் பாக்க வந்தாப்போலேருக்கு. அப்போ அவ புடவை விலகி வயித்துலே கிடந்தது. அது தெரிஞ்சு பய வந்திருக்காம் போலருக்கு.''

''ஓய் கோவிந்தசாமி படையாச்சி ... அந்தப் பயலே போய் நோட்டம் பார்த்துட்டு வா. அந் தப் பய கொல்லன் வீட்டுக்குப் போயிருக்கான்.''

"நாய்ரே ஏன் நேரம் வளத்தரே: படையாச்சிக்கி முதல்லே டீ போட்டுக் கொடு."

"சோழ நாட்டின் தலைநகரான இந்தக் கிடாரங்கொண்டான்லே பொழைக்க வந்த பய நீ. எம்மாம் நேரமா நான் கேட்டுக் கிட்டே இருக்கேன், கரிகாலன் போய் . கிடாரங்கொண்டான் வந்து விட்டான்.''

''டீத் தூளு இல்லே .'' - ''கடைக்கு ஓடு , நாடார் கடைக்கு இல்லே. காவிரிப்பூம் பட்டிணத்துக்கு ஓடு. நாளங்காடிக்கு ஓடு... காலு காலா இருக்கக் கூடாது. ஆரக் காலாய் மாறிடணும். ஓடு.

"ஒய், ராமசாமிப் படையாச்சி. நீ கிடாரங் கொண்டான் பாப்பாரப் படித்துரைப் பக்கமா ஓடு. ஓடி காவிரிலே இறங்கி, மணல்லே மேலண்டைக் கையிலே காலைப் பரப்பிக்கிட்டு நில்லு. பய வந்தான்னா மேற்கே ஓடாமேப் பார்த்துக்கணும். கவுட்டிக்கி அடியிலே பூந்து ஓடிடப் போறான். பார்த்துக்க, ஓடு.'

''அந்தப் பய இருக்கானே ..'' ''அவன் கையை வாங்கப் போறேன்.'' ''வியாபாரமா?'' ''வியாபாரத்துக்கு கை என்ன மீனா? காலா இருந்தாலும் சூப்புக்கு வாங்குவானுவோ...''

''வியாபாரத்திலே உயர்ந்த வியாபாரம்.''

"சாமி வியாபாரம். இல்லேன்னா இவனுக்கு ஏதுய்யா மாடி வீடு. சாமி வித்துச் சம்பாதிச்ச காசு. இடிஞ்ச கோயிலைப் பழுது பார்க்கணும்னு கிடாரங்கொண்ட சோழன் கிட்டே போய் நின்னான். நான் அப்பவே சொன்னேன். மன்னன் கேட்டானா?' மூட்டையாத் தூக்கிக் கொடுத்தான் கோயில் சுவர் இடிஞ்சு கல்லு காவிரியிலே மிதந்து போச்சு. குருக்கள் எண்ணெயே வீட்டுக்கு எடுத்துக் கிட்டுப் போய்க் கரி வதக்கறாரு. சொறிநாய் காலை கிளப்பிக்கிட்டு சிலை மேலே மூத்திரத்தை அடிச்சுட்டு மோந்து பாக்குது. மூத்திரம்னு பார்க்காமே சாமியே கிளப்பிட்டு இந்தப் பயல் அடியிலே இருந்த பொன்னை அடிச்சுக் கிட்டுப் பூட்டான். வெங்கலச் சிலையே காணலை, மூல விக்ரகத்தின் வேர் அறுந்த பிறகு உற்சவ விக்ரகம் வாடிப் போச்சுன்னு அதை இந்தத் தர்மகர்த்தா காவிரிப்பூம்பட்டணத்து வியாபாரி கிட்டே வித்துப்புட்டான். அவன் அதைக் கப் பல் ஏத்தி அனுப்பிச் சுட்டான். வியாபாரத்திலே உயர்ந்த வியாபாரம் தழை வியாபாரம் தான்.

''ஒய் கிருஷ்ணசாமி படையாச்சி. நீ சரிஞ்ச கோயில் சுவர்லே போய்க் குந்திக்க மூத்திரத்தை தாய் மாதிரி, சாய்ஞ்சு கிடக்கிற சாமி மேலே அடிச்சுடாதே, அந்தப் பய ஓடி வந்தார். கோயில் குள்ளே போய்ப் பூந்துக்கப்போறான்." : 

"என்னங்காணும் நாயரே இன்னும் டீ போடலையா ?'' . .

''டீத்தூளுக்கு இனிமே காவிரிப்பூம்பட்டின மில்லே போயாகணும்."

இன்னும் காவிரிப்பூம்பட்டணம் கிளம்பலையா?'

"கிளம்பத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.''

"கடையே என்கிட்டே ஒப்படைச்சுட்டுப் போ நீ திரும்பி வரத்துக்குள்ளாரே ஒன்னே பத்தாக்கி வைப்பேன் கூரைக் குடிசையெ கல்லு வீடா மாத்திக்கலாம். அந்தப் பய வீட்டைப் போல மாடி வீடாவும் கட்டிக்கலாம். நான் காவிரிப்பட்டணம் போயிட்டு வரப்போல்லாம், வீட்டுக் கொல்லையிலே வைக்கப்போரே காண மாட்டேங்குது. எல்லாம் அந்தப் பய வேலை தான். கொல்லையிலே காட்டாமணக்குக் காலை உன்றி வேலி போட்டேன். காலுன்னதும் அதுக்கு நடக்கணும்னு தோணிப் போச்சு. ஊன் ன காலைப் பெயர்த்து வைச்சு நடக்க ஆரம்பிச்சுட்டுது நம்ம வைக்கப் போரு பக்கமா நடந்து வந்துக்கிட்டே இருந்துது. பய இருக்கானே அவன் தலையை விட்டு வேலியிலே ஓட்டை செஞ்சான். விரல் நுழைய இடம் கெடச்சதினாலே உடலை நுழைக்கணும்னு அவன் வூட்டு மாடு அதுலே நுழைஞ்சு உள்ளே வந்துட்டுது. முன் காலு ரெண்டும் என் வூட்டுக் கொல்லையிலே. தலையும் வாயும் வைக்கோல் போருலே. பின் ரெண்டு காலும் வாலும் ஆசனவாயும் அவன் வூட்டுக் கொல்லையிலே என் வீட்டு வைக்கோலைத் தின்னுது. மாட்டுக்கு வயிறு அப்படியே இருக்குது. ஆனா வைக்கோல் போருலே பாதி கொறைஞ்சு போச்சு குறைஞ்ச வைக்கோல் மாடாய்க் கூட்டி இருக்கனுமில்லே. இல்லையே அதனாலே அந்தப் பயலும் தின்னு இருப்பான் போலேருக்கு. மாடு வைக்கோலைத் தின்னுட்டு சாணி போட்டுது. அவன் வூட்டு எருக்குழி நிறம்பிப் போச்சு. " ,

''டேய் வைக்கோல் தான் போச்சு..பரவா யில்லை. சாணியாத்தான் மாறியிருக்கு ... அதையாலும் கொடு''

''முடியாது." 'டேய். இது அடுக்குமாடா?'' ''பய முட்டியே மடிச்சு கையே மேலே தூக்கறான். வைக்கப்போரு மாதிரி முண்டா கிளம்புது.. விழிரெண்டும் வண்டாப் பறந்து வந்து எம்மேலே மோதுது.'

''வண்டு கொட்டினாத் தாங்க முடியுமா?''

''அதைக் கேக்க காவிரிபட்டணம் போனேன். கிணற்றடியி லே எம் பொண்டாட்டியிருந்து வேடிக்கை பார்த்த விஷயம் மறந்து போச்சு அது அவளைக் கொட்டிடுச்சுன்னு வைச்சுக்க : இன்னு திரும்பி வந்தா."திரும்பி வந்தால் ''திரும்பி வந்தா. தை மாசம் ஒன்னாம் தேதி. பொங்கல் விழாவுக்கு ஊரெல்லாம் ஏற்பாடு கடையெல்லாம் வாழைத்தாரு தொங்குது. கரும்பு கட்டுக் கட்டா சாத்தி வைச்சிருக்கு. கோடை வெயில் இல்லையா? தோகை காய்ஞ்சு பழம் புடவையாய்ப் போயிட்டுது. அந்த நாடார் கடையிலே இந்தப் பயல் உட்கார்ந்திருக்கான். அவன்தான்யா இவனுக்கு சிலம்ப வாத்தியாரு புடிச்சுக் கொடுத்தவன். துரோகிப் பய. இங்கே மளிகைக் கடை வைச்சுக்கிட்டு அவன் பாண்டிய நாட்டுக்கு உளவு பார்த்துக் கிட்டிருக்கான். சோழன் பணத்தைச் சுரண்டி பாண்டியனுக்கு அனுப்பறான். இந்தப் பய கரும்பு வெட்டிக் கிட்டிருக்கான். கரும்பு தோளிலே சாத்தி இருக்குது. பின்னாடி எம் பொண்டாட்டி பொடவையைப் போலத் தோகை தொங்குது. கையிலே பளபளன்னு அரிவாள். நாடாரோட அரிவாள். பனங்காள் சீவர அரிவாள் .

"அந்த நாடார் கிட்டே உண்மையான சோழ நாட்டான் எவனாவது பனைமரம் குத்தகைக்கு விடுவானா?''

''துரோகிப் பசங்க விட்டுட்டானுவளே. அவன் ஏதுக்கய்யா மரத்தைக் குத்தகைக்கு எடுக்கிறான். மரத்திலே ஏறி நோட்டம் பார்க்கிறான். மரத்திலே கலயம் கட்டறாப்பலே சோழநாட்டு அரணை உளவு பார்க்கிறான்.

''நாடாரே, பாத்துக்க ஒரே வெட்டு ... எந்தப் பய வந்தாலும் ஓரே வெட்டு.''

''பய கரும்பை ரெண்டு துண்டா வெட்டிப் போட்டுட்டான். அப்புறம் நான் கிடாரங் கொண்டான் சிவன் கோயில் பக்கமா போயி காவிரிக்கரையிலே பாப்பாரப் படித்துறைப் பக்கமா நின்னுக்கிட்டேன். காவிரியிலே தண்ணி ரெண்டு கரையும் ஒத்து ஓடுது. ஆடிப் பெருக்கு அன்னிக்கி , பசங்க சப்பரத் தட்டியோட கரையிலே நிக்கறானுவோ. சின்ன வயசிலே கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா இந்தப் பசங்க மாதிரி பசங்க இருப்பானுவோ.'' உள்ளங்கையைக் குழித்து தரைக்கு மேல் மார்பளவுக்கு குடைபிடித்துக் காட்டினார்.

''அப்புறம்.''

"கிடாரங்கொண்ட சோழன் காவிரிப்பூம் பட்டிணத்திலேருந்து வந்திருக்கான். மன்னனுக்குப் பக்கத்திலே ஆதிமந்தி நின்னுக்கிட்டிருக்கா. ஆட்டன் அத்தி அரச மரத்திலே ஏறி காவிரித் தண்ணியிலே குதிக்கறான். தண்ணீர் செரடேர்னு

அரசங்கிளை வரைக்கும் எழும்புது.

''சபாஷ் ஆட்டன் அத்தி, சபாஷ்'' என்றான் மன்னன். குதிச்சவன் மேலே கிளம்பவேயில்லை. பனங்காய் மிதந்தாப்பலே தலை மட்டும் மிதந்து போச்சு.''

சும்மா வேடிக்கை பார்த்துக் கிட்டா நின் னீங்க .''

''குதித்துத் தூக்கினேன். அது அழுகின தேங்காமட்டை. ஊறி நார் கிளம்பிப் போயிருக்கு. தூக்கிக் காவிரியிலே எறிஞ்சேன். ஆட்டன் அத்தி தலைமுடிமாதிரி காவிரியிலே அது மிதந்துக் கிட்டே போயிடிச்சு. .

''ஆதிமந்தி தலையிலும் வாயிலும் அடிச்சுக்கிட்டு அழுறா. பெரிசா ராகம் போட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா. மன்னன் ரொம்ப தேத்திப் பார்த்தான். நடக்கல்லே. அவனும் அழ ஆரம்பிச்சுட்டான், மகளைக் கட்டி அணைச்சுக் கிட்டு அழுதான், நானும் அழுதேன்.''

'' நீங்க அப்படி அழலாமா படையாச்சி ?''

"சோழ மன்னா நீ இப்படி அழலாமா? நீ அழுதால் நான் அழுவேன், மக்கள் அழுவர், நாடு ' அழும், அழாதே நான் இருக்கிறேன். வலைபோட்டுத் தேடுவோம். மருமகன் கிடைத்து விடுவான் வேந்தே அழாதே என்றேன்.'' மன்னன் அழு கையை நிறுத்தி விட்டான்.

''டேய் வலை கொண்டு வாங்கடா.'

காவிரியில் வலை போடப்பட்டது. 'இழுத்துக் கிட்டே வாங்கடா. நான் காவிரியில் இறங்கி விட்டேன். கழுத்து மட்டம் தண்ணீர். நான் முன்னாலே நடக்கறேன், என் பின்னாடி பசங்க வலையியே இழுத்துக்கிட்டே வரர்னுவோ.''

''ஆதிமந்தி காவிரிக்கரையோடு நடந்து. வரா. அவ கையைப் புடிச்சு மன்னன் அழைச்சுக்கிட்டு வரான்.''

'காவிரிப்பட்டணம் முகத்துவாரத்திலே போய் வலையே மேலே தூக்கினோம். அழகான மீன். ஆள் உயரம் வாட்ட சாட்டமாய் இருக்கு. கரையிலே கூடைக்காரப் பசங்க நிக்கறானுவோ கழுகு மாதிரி மீனையே பார்த்துக்கிட்டு நிக்கிறானுவோ .

''என்ன படையாச்சி மீன் விக்கறதா ?''

''பல விஷயத்திலே ஏமாந்துட்டோம். இந்த மீனு விஷயத்திலே ஏமாற வேண்டாம். இந்தக் கூடைக்காரன் கிட்டே விக்கறத்தே நாமே தூக்கிக்கிட்டு சித்தக்காட்டு சந்தையைப் பார்க்க - ஓடினா நாலு காசு லாபம் கிடைக்கும்னு தோணிச்சு. அந்தப் பயலுக்கு நேரா ராவணன் முன்னாடி அனுமார் குந்திக்கிட்ட மாதிரி வளர்ந்து மார்பு அகலத்தை சாண்போட்டு அளந்துக்கன்னு காட்டனும்னு தோணிச்சு. ஆனா கவுச்சே நாத்தத்தே சகிச்சுக்கிட்டு தலையிலே கூடை சுமர, கல்லு ரல்லே குழவி ஆடராப்பலே இடுப்புக்குக் கீழே காலாட ஓடணும். 'படையாச்சி மீன் விக்கராரு டோய் இம்பானுவோ... அதனாலே என்ன... விடியரத்துக்கு முன்னாடி ஓடினாப் போச்சு. பசங்க என்ன ஆந்தையா ராவியிலே கண் தெரிய ..ஆனா .... இந்தக் காவிரிக்கரை மரத்துக்குக் கூட கண்ணு இருக்குமய்யா, விடிஞ்சா ஊர்கிட்டே சொல்லிடும். ஆனா ஒண்ணு செய்யலாம். சித்தக்காட் டுக்குப் போக வேறு வழியே இல்லையா? கீழை யூறுமேலே பூந்து போனா போச்சு... 'டேய் மீனு விக்கரதில்லே' இன்னு சொல்லிட்டேன். இந்தப் பசங்க ஓட ஆரம்பிச்சுட்டானுவோ.

''ஏனய்யா ஓடரே தெடைக்கப்போற லாபத்தைக் கண்டு பயந்து பூட்டியா?''

''இல்லே.... அதோ ... ஆட்டன் அத்தி 'ன்னு கத்திக்கிட்டே ஓடிப் . பூட்டானுவோ.''

''என்னாம்மே... ஆட்டன் அத்தியா ஆட்டுக் குட்டியா என்ன சொல்றானுவோ.'

ஆமாயா - ஆட்டன் அத்தி ... ஆட்டன் அத்திக்கி மூர்ச்சை தெளிஞ்சு மூச்சு வந்திடிச்சி.''

''யாரவன் புடிச்சான்... தூண்டில் போட்டுப் புடிச்சானா ?"

"நம்ப பாட்டிக்கிக் பாட்டிக்கிக் கொள்ளுப் பாட்டிக்குப் பாட்டி புருஷன் குதிச்சு தூக்கினான்' இன்னான் அவன் சபாஷ் அப்போ இந்த மீனு ஒனக்குத் தான்னு மீனேத் தூக்கி செம்படவச்சி தலையிலே வைச்சேன். அவ தூக்கிக்கிட்டு காவிரிக் கரையோட சித்தக்காட்டேப் பாக்க ஒடினா.

'நான் திரும்பி வந்து காவிரிக் கரை ஓரமா சவுக்கைத் தோப்பிலே சுருட்டுக் குடிச்சிக்கிட்டே குந்திக் கிட்டிருக்கேன்.

'ஓய் படையாச்சி ... அந்தப் பய உலைக் கூடத்திலேருந்து பொறப்பட்டானான்னு பாருய்யா ..... போ.. போ அப்பறமா....டீக்கி நாக்கே நீட்டலாம் ஓடு.''

"இவன் ஒரு சவுக்கை மரத்திலே சாஞ்சிக் கிட்டு கரும்பு வெட்டிக் கிட்டே நிக்கறான் யாரா வது மீன்காரி வருவாளான்னு பார்த்துக்கிட்டே நிக்கறான். நான் இருக்கறதை அந்தப் பய பார்க்கலை. அவ தலையிலே மீனேத் தூக்கிக்கிட்டு சித்தக்காட்டு சந்தைக்கு வியாபாரத்துக்குப் போனா. அவ ஒடம்பு வியர்த்து வழியுது . ரவிக்கை போட்டுக் கிட்டில்லே. முந்தானையே சும்மாடாய் சுருட்டி தலைக்கு வச்சுக் கிட்டிருக்கா ஒரு கை தலைக் கூடையைப் புடிச்சுக் கிட்டு இருக்கு. மார்பு பக்கத்திலே தெரியுது. ஓடிவர வேகத்திலே ஆடுது. பய பார்த்தான். கரும்பை வெட்டிக்கிட்டிருந்தவன் அதை அப் படியே போட்டுட்டு காவிரிக் கரைக்கு வந்தான். அவ பக்கத்திலே வந்ததும் பின்னாடி பாஞ்சு வாயைப் பொத்தினான். ஒரு கையை இடையிலே வளைச்சான். அவளே அப்படியே அலாக்கா தூக் கிக்கிட்டு சவுக்கைத் தோப்புக்குள்ளே போய் அவளே படுக்கப் போட்டான். முந்தானையே கிழிச்சு வாயிலே அடைச்சான். வாயிலே துணியே அடைச்சதும் என்னாலே சத்தம் போட முடியலே. இடுப்புத் துணியே அவுத்துப் பக்கத்திலே எறிஞ்சுட்டான். உடனே அந்த இருள் பரவ ஊரு இருட்டிப் போச்சு.''

(வழியே தடவிக்கிட்டு நான் வீட்டுக்கு வந்தேன் . கால் கழுவ கிணற்றடிக்குப் போனேன். பய வைக்கப் போருலே சாஞ்சுக் கிட்டு கரும்பை வெட்டிக் கிட்டு நிக்கறான். பெண்டாட்டியே கூப்பிட்டுக் கிட்டு கூடத்துக்கு வந்தா பய. அங்கே எம் பொண்டாட்டியோட பேசிக்கிட்டு நிக்கறான். அவ சிரிச்சுக்கிட்டு நிக்கிறா.''

''என்னடி கிரிக்கிறே ?'' ''இன்னும் ரெண்டு பல்லு விழட்டும்.'' ''என்னடி சிரிக்கிறே?'' ''அவ சிரிச்சா ."

''விரிச்ச பொகையிலே மாதிரி ஏன் சிரிக்கிறே?'

'''அவ சிரிச்சா .''

''ஒய் படையாச்சி ஓடய்யா. அந்தப் பய உலைக்கூடத்திலேருந்து புறப்பட்டிருப்பான். பய காவிரியிலே இறங்கினதும் எனக்குக் குரல் கொடு. அரிவாளும் கையுமாய் நான் வருவேன். ஒரே வெட்டு. வலது கைதுண்டு, ஓடு.''

அப்பொழுது கொல்லன் வீட்டிலிருந்து தெருவோடு வந்து கொண்டிருந்த அவருடைய பக்கத்து வீட்டுக்காரன் டீக்கடையைக் கடந்து காவிரிப் படித்துரைப் பக்கம் போனான். அதைப் படையாச்சியும் கவனித்துக் கொண்டிருந்தார்.

'ஒய் படையாச்சி அந்தப் பய காவிரியிலே எறங்கிட்டான். படித்துறையிலே குளிச்சுக் கிட்டிருந்த ஆட்டன் அத்தியே தண்ணீரிலே தள்ளி வைச்சு அமுக்கறான்.'' என்று நாயர் காவிரிக்கரைப் பக்கமாகக் கையை நீட்டினார்.

தூணில் சாய்ந்து கொண்டிருந்த ஒருவர், நிமிர்ந்து ' நாயரே படையாச்சிக்கி உடைவாளை எடுத்துக் கொடய்யா'' என்றார்.

உடனே படையாச்சி "ஆதிமூலமே .... ஆதி மூலமே" என்று கத்திக் கொண்டே பக்கத்தில் ஒருவர் வைத்துக் கொண்டிருந்த அரிவாளை எடுத் துக் கொண்டு காவிரிக்கரையை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டார்.

முட்டாள்தனமான காரியம் செஞ்சுட்டீங்க'' என்று படையாச்சியைத் தொடர்ந்து ஓடினேன். நான் ஓடுவதைப் பார்த்து டீக்கடையில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து ஓடி வந்தார்கள். நாங்கள் ஓடுவதற்குள் அவர் படித்துறையை அடைந்து காவிரிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் படித்துறையின் பக்கச் சுவரின் மேல் ஏறி விட்டார். படையாச்சி. படையாச்சி" என்று நாங்கள் கத்திக்கொண்டே ஓடினோம். அதற்குள் அவர் காவிரியில் குதித்து விட்டார். அவரைத் தொடர்ந்து நாங்கள் குதித்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரன் காவிரியை நீந்திக் கட்ந்து அக்கரையில் ஏறிக் கொண்டிருந்தான்.

1 comment: