தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, October 03, 2018

மெளனியின் மௌனம் கலைகிறது - பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

 mvv

மௌனி அவர்களை பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

மறுபதிப்பு

கணையாழி

டிசம்பர்-1991


மெளனியின் மௌனம் கலைகிறது

சுறுசுறுப்பு நிறைந்த, 68 வயது இளைஞரான மெளனியைச் சமீபத்தில் சிதம்பரத்தில், அவர் இல்லத்தில் சந்தித்தேன். எழுத்துக்களைப் போலவே அவருடைய பேச்சும் ஒரு உன்னதமான அனுபவமாக மிளிர்கிறது. "உங்களுக்காக நான் பேசவில்லை. என்னையே நான் clarify பண்ணிக்கிறேன்" என்று கூறிக்கொண்டு அவர் பேசுகையில்... எனக்குப் பிரமிப்புத்தான்.

படைப்பவனுக்கும் (கலைஞன்) அவனது படைப்புக்கும் உள்ள சம்பந்தம் பற்றி மெளனி கூறினார் : ஒருவன் தன் பிள்ளை கலெக்டராகப் போக வேண்டும் என்று நினைத்து பிள்ளை பெற்றெடுக்கலாம். அவன் வளர்ந்த பின் ஜெயிலில் இருக்கலாம். தகப்பன் எவ்வளவு தூரம் தன் எண்ணம் ஈடேறாததைக் குறித்து நொந்து கொள்ள முடியும், எந்த விதத்தில் கொள்ள வேண்டும்: பிறந்த பிள்ளை தனி object. தனி உயிர் பெற்றது. அது நன்றாக இருக்குமானால் படைப்பாளி தன் மார்பை எப்படி பெருமிதத்துடன் உயர்த்திக் கொள்ள வேண்டும்! அல்லது ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் கொள்ள வேண்டும் psychological mistake என்று சொல்லக் கூடிய - தரமற்ற பத்திரிகைகள் அவை என்று தூற்றுவது rational ஆகுமா ? அவை அப்படி இருக்கலாம். ஆனால் இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும்... ஒரு reaction விளைவாகத்தான் தான் காண முடிகிறது.

நான் இப்பல்லாம் ஏன் எழுதறதில்லைன்னு எல்லோரும் கேட்கிறார்கள். எழுத நிறைய விஷயம் இருக்கு. I am a writer and artist always. எனக்கு சுய விமர்சனம் (self criticism) அதிகம். வரவர விமர்சனப் பார்வை அதிகமாவதால் முன்பு எழுதியவதைவிட இப்போது எழுதினால் இன்னும் புரியாமல் தான் போகும் என நினைக்கிறேன். கலை வெளியீட்டுக்கு (expression) தமிழ் மொழி இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதத் தொடங்கிய போது இருந்ததைப்போலவே, விருத்தியடையாமல் தமிழ் இருக்கிறது. எல்லாவற்றையும் ' in and through words சொல்லியாக வேண்டியிருக்கு. என் மூளை எழுதிப் பார்க்கிற சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. '

- கலை என்பது என்ன? - - - - - - -

-- -- -- - அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது: உணர்வால் பெறப்படுவது. Experience should be aesthetic. பிரம்மத்தின் manifestationதான் நாமெல்லோரும், அரூப பிரம்மத்தின் குணங்கள் சொல்லப்படும்போது பல்வகைப்படும். முக்கியமாக, சத் (exists) சித் (consciousness) ஆனந்தம் (enjoyment) மாயை என்பது சம்பந்தப்படும்போது நாமரூபங்கள் 5 வித குணமுடையதாக ஏற்படுகின்றன. நாமரூப் பேதமே உலகை விதம் விதமாகக் காட்டுகின்றது. அதனால் தான் அனுபவங்களும் விதம் விதமாக ஏற்பட இருக்கின்றன. பிரத்யட்ச அனுபவத்தில் நான்கு வகை யாகப் பிரித்து தனியெனக் காண வகையுண்டு. (1) Cognitive mode of experience, (2) Moral code, (3) Religious mode and (4) Aesthetic mode. இதன் அடிப்படையில் பிரத்யட்ச ஞானம் இல்லாத போதும் பழைய அனுபவ ஞாபகத்திலிருந்து images தோன்ற முடியும் - 'imagination sublimate ஆகி, symbolical ஆக எழுத்து மூலம் படைப்பாக வெளிவரலாம். இப்படியாக வெளி வியாபகத்திற்கு ஒரு passion மிகத் தேவை. Passion இல்லாத அனேக பெரிய artists அரிய aesthetic experience? அனுபவிக்க முடியும், எழுதாமலே. அநேகமாக இப்படித் தான் என் காலம் இப்போது போய்க்கொண்டிருக்கிறது . அச்சமயம் யாருடனாவது பேசினால் நான் எதை எதையோ, வார்த்தைக்கு அப்பாலிருந்து வார்த்தை மூலம் ஒரு அனுபவத்தைக் கொடுப்பதாகிறது. யார் எவரிடம் என்பதன்றி - அவர்கள் - மனோபாவத்தை, விசாலத்தைப் பொறுத்து - - எதையும் நினைக்க இருக்கலாம்.--

- Aesthetive mode of experience என்கிற போது subjective-objetive  mystic level self contained ஆக சஞ்சாரம் பண்ணின்டு, universal ஆகplace, time எல்லாம் மறைந்து போய்விடுகிற இடம் - அதுவே spontaneous overflow ஆக மாறிவிடுகிறது. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும் போதும் வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன நாயைக் கட்டியிழுப்பது போல் வார்த்தைக்களைக் கட்டி இழுப்பதெல்லாம் timeல் அடிபட்டு போய்விடக்கூடியவை - ஒரு எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட, எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்த - artistic restraintதான் அவனைக் கலைஞன் அளவுக்கு உயர்த்த முடியும் (consciousness proposes- Id disposes)

- என் சிறுகதைகளில் சில வரிகளைப் பாருங்கள் : - "விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவது தானா ஆடவர் வாழ்க்கை ? கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால்? இருட்சுடரைக் கொண்டு விளக்காக முடியுமா?'' (சாவில் பிறந்த சிருஷ்டி) (E)161

“நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்)

“ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை" (மனக்கோலம்)

நினைப்பதால் உருவாகிற கோட்டை, நினைப்பதால் இடிகிறது. இரண்டுக்கும் நினைவே காரணமாகிறது.

இந்த வரிகள் யாவுமே subjective-objective இரண்டும் ஒன்றாகிக் கலந்து symbolicalஆக மேல் நிலைக்குப் போகிற constructions. வலிந்து கட்டிக் கொண்டு, வார்த்தைகளைக் கோர்த்து இவற்றை உருவாக்கிவிட முடியாது. தானாக, அர்த்த அழுத்தத்துடன் தோன்றி உதிர்ந்தவை இவை.

வார்த்தைகளை வலிந்து அடுக்கி, சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் artist ஆகமாட்டான். அவன் ஒரு artisan அவ்வளவுதான். அதிலும் மொழியின் இலக்கியப் பிரயோகத்தைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முடியாமல், மேற்போக்கு நகாசுக்கான pliable medium தான் மொழி என நினைப்பவன், (பொற் கொல்லனுக்குத் தங்கம் மாதிரியாக) மொழி மூலமாக creative process எப்படி இயங்குகிறது (symbolical ஆக) என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவன் கலைஞனாவது

முடியாத காரியம்.

'நனவோடை எழுத்தாளர்' என்று சிலரைக் குறிப்பது பற்றி....?

Stream of consciousness TOUS unorganised primary data of experience or perception from an artist. பளீர் பளீரென்று artistஐக் வாட்டக்கூடியது. நமக்கு ஒரு aesthetic satisfactionஐ கொடுக்கக் கூடியது. புரியாததை தான் தெரிந்தவன் எனக் காட்டத் தெரிந்ததென இரண்டொரு வார்த்தை பிரயோகங்களை தனக்கு இஷ்ட தேவதையான சில கதாசிரியர்களுக்கு சேர்த்து அடிக்கடி உபயோகப்படுத்துவதால் நிகழும் அபத்தங்களில் ஒன்று இது.

எழுதுவதற்கு, experience பண்ண வேண்டும் என்பது அவசியத் தேவையா?

மனைவி செத்துப்போன ஒருவனின் மன நிலையை 'மாறுதல்' சிறுகதையில் எழுதியிருக்கிறேன். இதோ என் மனைவி உயிருடன் இருக்கிறாள். அனுபவத்தால் தான் எழுத வேண்டுமா என்பது இருக்கட்டும்;. experience பண்ணுகிறபோது எழுதமுடியுமா..?
* குடிகாரன் மாதிரி ஒருவன் நடிக்கிறான். குடித்து விட்டு ஒருவன் மண்ணில் விழுந்து கிடக்கிறான். முன்னது ' குடிகாரனது நிலை' வெளியீடு; பின்னது 'குடிகாரனின்' வெளியீடு. என் 'காதல் சாலை' சிறுகதையில் ஒரு குடிகாரன் வருகிறான். அது Drunken stateன் aesthetic experience ஆகும் - இது ஒரு paradox. - 'கண்ண தாசன்' (செப்டம்பர் -73) எம்.வி.வி. பேட்டியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. 'தேனீ'யில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன். - | 'மனக்கோலம்' (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு - Script ஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலிருந்து வாங்கிக் கொள்ள - மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாகவேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு, கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்துவிட்டு, வேறு எழுதக் கோரியபோது ''அவ்வளவுதான் - அதைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப்  போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றிவிடும்... நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்" என்று கிளம்பி விட்டேன்.

- எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப் போடு என்று சொல்லி விட்டுப் போனார், என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்.

- -  இரண்டாவது சிறுகதையை நான் 'தேனீ'க்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய 'சந்திரோதயம்' பத்திரிகையின் ஆண்டும் மலர் ஒன்று கொண்டு வரப் போவதால் என் கதை வேண்டுமெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை: நினைவுச்சுவடு (1948). சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஓவியராக சாரதியும் இருந்தார்கள். 'சந்திரோதயம்' மலர் வெளியிடும் முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம்.வி. வி. 'தேனீ' பத்திரிகைக்கு என் கதை அவசியம் தேவையென்று கேட்க நான் க.நா.சு.விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத்  தாள்களை கறையான் அரித்துவிட்டதாகக் கூறியதால், மறுபடியும் எம்.வி.வி. என்னை வந்து துளைத்தார். 'நினைவுச் சுவடு' கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற்செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே 'தேனீ' யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறுகதை. - 1

நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற - சிரமமான விஷயமாக இருக்க, 'கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்துவிட்டது' என்று நான் வருத்தப்பட்டதாக(!) எம்.வி. வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மையில்லாத விஷயம். 542 18 - 2


மேலும் அவர் கூறியிருந்தார் : "மெளனி ஒரு கதைக்கான plot இருப்பதாகவும், எழுதப்போவதாகவும் சொன்னார். plot ஐயும் சொல்லிக்கொண்டே வந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது . - 'சொல்லாதீர்கள். நானே எழுதிவிடுவேன் போலிருக்கிறது என்று தடுத்தேன். 'எழுதேன், அதனால் என்ன? நானும் எழுதுகிறேன்' என்றார். அவர் சொன்ன கதைக் கருவிலிருந்து தான் 'கருகாத மொட்டு' என்ற என் கதை தோன்றியது. அவர் அதே பிளாட்டைப் பயன்படுத்திக் கதை எழுதுகிறாரா IT என்று எனக்குத் தெரியாது”

- எம். வி. வி.க்கு நான் கூறிய பிளாட்டை வைத்துத் தான் 'பிரக்ஞை வெளியில்' (சரஸ்வதி -1960) என்ற என் சிறுகதை எழுதப்பட்டது. 2

கருகாத மொட்டு, பிரக்ஞை வெளியில் - இவ்விரு கதைகளுடன் ஜெயகாந்தனின் 'உடன்கட்டை' சிறுகதையையும் சேர்த்துப் படியுங்கள்! - அதே போல, என் 'எங்கிருந்தோ வந்தான்' கதையைப் படித்துவிட்டு, புதுமைப்பித்தனின் 'காலனும் கிழவியும்' கதையைப் படியுங்கள். 'எங்கிருந்தோ வந்தான்' சிறுகதையின் இரண்டு வரிகளைக் கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக அக்கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார் . உண்மையிலேயே அது நல்ல கதையாக அமைந்து விட்டது' உ 'ஹிந்து' உள்பட முக்கியமான தினசரிகளில் 'மெளனியைச் சந்தியுங்கள்' என்று எம்.வி.வி. விளம்பரம் கொடுத்தது, 'கண்ணதாசன்' இதழைப் பார்க்கிறவரை எனக்குத் தெரியாது .

விமர்சகன் யார் ? 

 : விமர்சகன் என்பவன், தன் மனச்சாயையினைத் தவிர்த்து objective ஆகப் பார்க்க க் கூடியவனே. object என்பது தனித்து எதிரில் உள்ளது. அதுபற்றி விமர்சகன் objective validity கொடுத்து value judgement பண்ண வேணுமே தவிர, முன்னதாகக் கொண்ட அபிப்ராயங்கள், தன் மனச்சாயை போன்றவைகளை அளவுகோல்களாகக் கொள்வது அறவே கூடாது. (factual judgementக்கு objective validity இருப்பது போன்று value judgementக்கு objective basis உண்டா என்பது ஒரு நிரடான பிரச்சினை.) அந்தக் காலத்தில் நாங்கள் இலக்கியம் பற்றிய விஷயங்களைக் காரசாரமாக விவாதிப்போம். ஒருவர் கதை சரியில்லை என்றால் முகத்துக்கெதிரே சொல்வதில் தயக்கமோ, கேட்பதில் அவருக்குக் கோபமோ வராது.

ஒரு தடவை ந. முத்துசாமி பத்திரிகை ஆரம்பிப்பது பற்றிப் பேசியபோது நான் சொன்னேன்: எந்த article யார் எழுதிய போதிலும், அதில் ஒரு வார்த்தைகூட அனாவசியம் - சரியல்ல எனில் அந்த articleஐ தூக்கி எறிந்துவிட்டு - தரமான விஷயம் கிடைக்கவில்லையானால் பக்கங்களை வெள்ளையாக விட்டுவிடும் தைரியம் இருந்தால் ஆரம்பிக்கலாம்."

நான் சிறுகதை எழுதுகிற process ரொம்ப சிரமம் தருவது, ஒரு தடவை எழுதி முடித்த முழு versionஐ மறுபடியும் மாற்றி எழுதுவேன். திரும்பத் திரும்பப் பலமுறை எழுதுகையில் ஒவ்வொரு தடவையும் கதையின் version புதிதாக மாறியிருக்கும். எப்படி எத்தனை தடவைகள் எழுதிய போதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. பத்திரிகையில் வந்த பிறகும், இதைவிட நன்றாக எழுதி யிருக்கலாம் என்ற தோற்றம் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு versionஐ கேட்டவருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். என் கதைகள் ஒன்றுக்குக் கூடத் தலைப்பு நான் வைத்ததில்லை. எழுதிய கைப் பிரதிகளையோ, அச்சில் வந்தவைகளையோ பாதுகாத்து வைக்கிற பழக்கம் எனக்கில்லை. )

***இப்போதெல்லாம் என்னைத் தெரிந்த நிறையப் | பத்திரிகைகள் அனுப்பப்படுகின்றன - என் பழைய | விலாசத்திற்கு. எப்படியோ அவை என் புது முகவரிக்கு | வந்து சேர்கின்றன. அநேகம் வராமலும் இருக்கலாம். | பத்திரிகைகளில் கவிதைகள் அதிகம் வெளிவருவதாகத் தெரிகிறது. என் கண்களில் cataractக்கும் Retina detachmentக்கும் ஆபரேஷன் செய்த பிறகு படிப்பது ரொம்ப ரொம்பச் சிரமமான விஷயம். எழுதுவது அதைவிட. சேர்ந்தாற்போல் 10 நிமிஷங்கள் படித்து முடித்து 10 நிமிஷம் கண்களுக்கு ஓய்வு கொடுத்துத் திரும்பவும்... இப்படித்தான் இப்போதும் நாளைக்கு இரண்டு மணிக்குக் குறையாமல் ஏதாவது செய்கிறேன். 

எது கவிதை? -

 - என் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் ஒரு கவிதையே. poem is a linguistic; artifact whose function is to organise the primary data of experience that can be exhibited in and through words.

சிறுகதை எழுதுவதன் குறிக்கோள் என்ன?

நான் இதற்கு என்ன பதில் கூறவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? காசுக்காக-புகழுக்காக-கலை, கலைக் காக-என்றெல்லாமா? இதே கேள்வியைச் சற்று மாற்றி ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் என்னைக் கேட்டார் , “why do you write?" என்று, அவருக்குக் கூறிய பதிலையே கூறுகிறேன் “என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லைஅதனால் எழுதுகிறேன்..."

நான் நிறைய எழுத வேண்டும். சிறுகதைகளாக என் இலக்கியக் கொள்கைகளைக் கட்டுரையாக என்றெல்லாம் வற்புறுத்துகிறார்கள். எழுத வேண்டும் என்ற வேகமும் எனக்கு இருக்கிறது . இப்போதுள்ள தமிழ், வெளியீட்டுக்கு சரியான அளவில் துணை புரிய முடிவதில்லை, சிரமப்பட வேண்டியிருக்கிறது - எப்படி யும் எழுதுவேன்.

* தீபம்' பட்டிமன்றத்தில் ' தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரிந்துவிடக் கூடாது என்று எழுதுபவர்' என்று என்னைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். 'ஞானரதம்' பத்திரிகையில் 'சுயதரிசனம்' என்று நான் பேசியதைத் தொகுத்து எழுதினார்கள். அக்கட்டுரையில் பல பிழைகள்... என் எழுத்தே எனக்குப் புரியாததை பிறருக்குப் புரியாத வகையில் இருப்பதாக இருக்கிறதே! நான் பேசுவது புரிந்தவர்கள் பிறருக்குப் புரிய எழுதுவது எப்படியிருக்க முடியும்? இப்போது நான் பேசியதைப் புரிந்து நீங்கள் எழுதி வெளியிடப் போவதாகச் சொல்கிறீர்கள்...?!

நான் பெயரளவில்தான் மெளனி எனவும், ஓயாமல் பேசுவேன் என்றும் எம். வி. வி. தன் 'கண்ணதாசன் '' பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். நான் நிறைய பேசுவேன். பேசுகிறேன். பேசுவது எதிரில் இருப் பவர்களுக்காக அல்ல. என்னால் சுவற்றுடன் பேச முடிய வில்லை . வார்த்தைகள் மூலமாக self clarification பெறும் நோக்கமே என் ஓயாத பேச்சுக்குக் காரணம். 'என் சிறுகதைகளை நான் பலமுறை ஏன் எழுதிப் பார்க்கிறேனோ, அதே காரணம்தான் என் பேச்சுக்கும். எதிரில் இருப்பவர்களுக்குப் புரியவைப்பது என் வேலையென்று நான் நினைக்கவில்லை . In and through wordsல் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பேச்சில், எழுத்தில் என் impressionகளை , experienceகளை சரியாக express செய்ய நான் பெரிதும் பாடுபடுகிறேன்.

அதனாலேயே நான் பெரிதும் நம்புகிறேன்: “My works will live, so long as Tamil lives".
Δ Δ Δ

No comments:

Post a Comment