தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, November 07, 2018

நரகம் சி. மணி

நரகம்
சி. மணி 
http_tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000838_ezhuttu_1962_04-43
தனிமை, விழியில்
விழுந்து விழுந்த இனிமை,
இடைவேளை யின்றி யின்றி
ஆசையதை நீட்ட நீட்ட,
கூடற் கனவைக் கூட்ட கூட்ட,
சகதி கிடைத்த கொசுவாய்
வஞ்சிக் குலையைப் பெருக்க பெருக்க,
பித்த மேறிய உடலாய்
உடலும் உள்ளமும் அரிக்க அரிக்க,
பசி தீண்டிய நாயாய்                                     10
தெருத் தெருவாய்
அலைக்க அலைக்க...

நான்கு விரல்குதி யிட்டயிவ்
வாண்டு செருப்ப ணிந்து,
சேலைத் தலைப்பை பட்டம் விட்டு,
இடவலமாய் மருங்கசைத்து,
சோரில் சோர்வெழுப்பும்
கோதை நீளம் அரையாக்கி
தொங்க விட்டக் குதிரைவால்
முன்னும் பின்னும் நடையோடு                        20
இசைந்தே அசைந்து வாவெனக் கை
அசைத்தே யழைக்க வலம் செல்லும்
பைங்கொடி நிறையருந் தெருக்கள் ....

மரீனா மணற் பரப்பில்
வாரத்தில் ஏழுமுறை
மாலைக் கிளரும்
மாலை வேலையில்
அமைதி தேடிச் சென்றால்
எதிரொலிக்கும் கடலோரம்
கருமீர மணல் வெளியில்
ஆழியீந்த அணங்கை யெண்ணி                      30
கண்மூடி கால் கட்டி
மனதைத் தட்டிக் கொடுத்திருக்க
அவர்கை வினையெல்லாம்
ஓடையின் ஓலிசெய்ய,
துள்ளும் நகையெல்லாம்
இசைக் குழுவை நினைவூட்ட
செவிவழியே புகுந்த பெண்கள்
விழித்திரையை விலக்கிட ;
வாரிய குழலெல்லாம்
தென்றலில் மீனாகும்,                                       40
கண்களின் ஒளியெல்லாம்
வானின் வில்லாகும்,
விரிந்த இதழெல்லாம்
பிளந்த நெஞ்சாகும்.

கால் பட்ட மணலிலும்
கண் பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது .
குதித்தோடும் ஒரு கும்பல் ;
அதைத் தொடரும் மற்றொன்று :                    50
இன்னல் தனித்த வராதா?

காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்,
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,             60
காக்கும் செருப்பை உதறிவிட்டு,
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து ,
அலையை அணைக்க விட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட .

பாழும் காற்றில்லை
தாவும் அலையில்லை
தெறிக்கும் துளியில்லை                       70
பரவையல்குல் ஒளி
புறத்தளிப்ப வில்லை.

துருப்பிடித்த இதயத்தை
துடைக்க வந்த நேரத்தில்
துருவேற்றுவோர் எத்தனை?
வளைந்திட்ட வாலை
நிமிர்த்த வந்த இடத்தில்
வளைத்து விடுவோர் எத்தனை?

மரீனா கடற்கரை
'லாங் பீச் ஆகாதோ ?'                                80
கூவமூறும் நகர்
சேய்னோடும் நகராகாதா?'
நானுழலும் இப்பகுதி
மேற்புறத்தில் இருக்காதோ ;
தென்கடல் தீவாக
இந்தியா இருக்காதோ ;

தமிழகம் கீழுமல்ல
முழுதும் மேலுமல்ல :
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல் ;                                 90
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன் ;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்.
காழிட்ட மரபு
தாழிட்ட துணிவு
சிக்கலை வெட்ட
கைக் கொடுக்க மறுக்க -
செய்வ தென்ன ?......... 100

காமம் :
பல நோய் ஒரு மொழி
புற்று சோகை ஈளை
இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ அத்தனை அத்தனையும்
காமத்துள் அடக்கம்..

வாங்கிய பாவம் போக்க
ஆடது வெட்டுதல் போல
தேங்கிய காமம் இறைக்க
திரைப்படம் தேடிச் சென்று                             110
அரங்கில் அடி வைத்தால்
தோகையர் குழாமும்
மைந்தர் சும்மையும்
துவன்றி யெங்கும்
காமனுக்கு ஓய்வில்லை
(வேண்டும் அவனுக்கு).
என தல்ல கலை வளையும்
என தல்ல காளையர்
குழாம் நீங்காப் பொழுது
எனக்கொண்டு மணியை                             120
முன் சேலைச் சரிவை யெண்ணி
அளந்திடும் குமரிக் கூட்டம் :
அதைச் சூழ்ந்து வளைத்து
புகைத்து இமைத்து சிரித்து
மறக்க முயலும் என் கூட்டம்.
ஒலியெழுப்பி, மறதி தேடி
வந்தோரை உலுப்பி, பணம்
கொடுக்கச் சொன்ன மணி
சிதறி தொடர்பை
நெறுக்கி சென்றது. 130

போன யுகத்தில்
படித்த தோழி
எவளா வதுஒருத் -
தீ
வரமாட்டாளா?

எட்டினால் தொட முடியும்
இதழ் தரும் சிரிப்பொலி
தெறித்து வளைந்து சுருண்டு
சுழன்று சுழியிட்டு வந்து
உந்திச் சுழிக்குத் தீயிட்டு                      140
முதுகுத் தண்டை எரியவிட்டு
மூளை நெளிவை நேராக்கும்
சூளையாய்த் தகிக்கும் சூட்டால்.

அரங்கத்தின் இருட்டில்
படம் பார்க்க யார்விட்டார்?
திரைப்படத்தைத் தோற்கடிக்கும்
மெய்ப்படம் சுற்றுமுற்றும்
காளானாய் பூத்திருக்கும்
பார்வைக்குத் தப்பிவிட்ட
பெருங் களிப்பில்                                             150
பள்ளியறை ஆக்கிவிட்டார்.
ஒரு நாள் :
பலவண்ண ஒலிகள்
பழங்கதை அசைவுகள்
இருளின்ப வகைக்கூவ
சகியாமல்,

வயதோ இருபத்தேழு
மணமோ ஆகவில்லை
இன்னும் எனக்கு
எனச் சொன்ன போதும்                           160
என்ன பயன்?

வயிற்றில் வளரும் கருவாய்
உதைக்கும் நெளியும் கிளர்ச்சி
ஊட்டும் காமமே நிறைக்கும்
எங்கும் .........

வேதனை குமிழியிட
இடுக்கண் களையும் வழிதேடி
எண்ணச் சிக்கல் பல போட்டு
வீட்டுச் சுவர்க்குள் முடிக்க வெண்ணி
தவமிருந்த காரணத்தால்                                170
தானியங்கி வரவும்,
சூடகத் தளிர்க்கைம் மாதரொரு
சிகரெட் பிடிகை மைந்தரும்
ஊடுற நெறுக்கி யேற்
சேவலே முன்னென் போரும், இல்லை
பெட்டையே முன்னென் போரும், இல்லை
வரிசையே நன்றென் போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால் யாவரே தெரியக் கண்டார்?

குழுமினர், துவன்றி முயல,
கால் மிதிப்பன, கைபிடிப்பன,                                 180
தோள் இடிப்பன, மயிர் இழுப்பன்,
பொய்யோ வெனும் இடையோடு
ஐயோவெனும் அரும்பினர்
கிடைத்தாரென நெறிப்பன்,
பாடியல் யானைப் பந்தியங் கடையின்
கூரியல் சாதனை நெறுக்கி ஆய்வன
எல்லாம் வண்டியில் அடுத்த கணம்
கலைந்த மழையுள; மறைந்த பூவுள் ;
தாங்கிய செங்கைத் தலைக்கண் மேலுள்ள ;
ஒலித்த வளையுள் ; ஓய்ந்த விரலுள;                     190
சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள.

பாலூட்ட கிடைத்தனவோ? பால்
உணர்ச்சியூட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்குறைந்து
சேரப் பிடித்த சோளி,
நின்று கவனித்து சோர்வு
நடை பின்னச் செய்யும்........

வீட்டிற்கு வந்த உடன்
இலக்கியத்தில் தஞ்சம் புக
அருப்பேந்திய கலசத்துணையமுதேந்திய மதமா
மருப்பேந்திய எனலா
முலை வஞ்சி........ காவின்கீழ்
போத ரகடாரப் புல்லி முயங்குவேந்
முகடு காப்பியாத்து விட்டாங்கு ..........
சேர்ந்த மார்பில் கன தனம் யிரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற் றென்றெ அங்கையால் தடவிப் பார்த்தாள் ;
செவ்வரியால் சுடும் விழியால் அறையை வலம் வந்தேன்,
என் காண்பேன் என்னல்லால் யான்?
தாள் புரட்டுந் தொறும் பெரும்                              210
கிளர்ச்சி பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே
என் செய்ய?

கடலாடை நிலத்துக் கவிஞர்
காலமெலாம் கனவில் நனவில்
கற்பனையில் காணும் களிக்குளத்தை
வெட்டுண்ட புண்ணென விம்மிய
பருக்களென பட்டென்றுடனே
கதவாய் மூட வியலாதே.

உந்தாது நெய்வார்த் துதவாது தானெரியும்
நந்தா விளக்கின் நெடுஞ்சூடு
குளிப்பினும் சுடுமே குளிர்சாந்தம்
தெளிப்பினும் சுடுமே.........

மூட்டை யொழிக்க கொல்லி தெளிப்ப
முடுக்க வானொலிப் பெட்டியினை :
வாடிக்கை மறந்ததும் ஏனோ?
பார்த்தால் பசி தீரும்.

திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு 230
வளர்த்த வொருமங்கையென
விரைந்தே யணைத்து விட்டு
பேயறைந்த நிலையில் வெறிக்க ,
ஈயிரண்டு ஒன்றும் நிலை கண்டு
துள்ளிப் பதறி தவிப்படங்க
இறையறைக்குள் நுழைந்தவுடன்
கடவுளைக் கண்டு கரம் குவிக்
காமலே திணறித் திடுக்கிட்டு -
முக்தி :
சிவனின் மிக வெளிய உருவச் 240
சிலையது உணர்த்துதல் தானோ?
காயெல்லாம் சிவலிங்கம்
கனியெல்லாம் சிவலிங்கம்
விழியினிலே படுமெல்லாம்
எழிற்கோலம் இணை கூடல்
அதை நினைவூட்ட வூட்ட,
பஞ்சணை போலரு ளாளன்
யாரினி யுண்டெனத் தேர்ந்தே
தஞ்சம்
அடைய எண்ணிச் செல் லுழி 250
தற்செயலாய் விழி
அத்தளை யில்லா வெளியொளி
பலகணி யூ டேக்
எதிர்வீட்டுக் குலவிளக்கு
தீராத் தீராப் புதிர்,
கோடை மஞ்சற் புல்வெளியில்
ஊரும் அரவின் மென் னொலியாய்
சேலை நடையால் சரசரக்க,
அடங்காக் குழற்சுருள் ஒன்றிரண்டு
மிடுக்காய்த் தழுவிக் கொஞ்சும் 260
மாசில் திங்கள் நெற்றியிலே
நால்வர் நோக்கைக் குவித்தீர்க்க
வாலம் திலகம் ஒன்றிட்டு,
ஏற்றத் தாழ்விக் குறையுலகில்
தேவை தேவை யெழிற்படுத்த
எனவே கூறும் நிறைவடிவு
கண்டோர் நெஞ்சாய் ஆட ஆட,
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும்
இரை நோக்கிய புலிவிழியாய்
கட்டிற் கூத்தை 270
முன்கண் டொளிர,
வாலைமலர்க் கொத்து கூந்தற்
கற்றையுடன் கவிதை பாட
கள்ள விழி அறியாப் பேதை
சந்தநடை யிட்டிரைந் தேக,
நெஞ்சு நினைவா யூறும்

நண்டு நுரைவா யோரம்
நீள்கடற் கரை மணல் விரிப்பில்
சேவடி புதைத்து புதைத்து
சிறுமணல் சிதற வெடுக்கும் 280
சந்தனக் குமரியின்
தேன் கூடு மறைக்கும்
சேலைத் தலைப்பாய்
காற்றடைத்த பை நடுங்க,
கேளா விழிதனைச் சினந்து
சுடுவிரலால் மிகவழுத்தி,
பொதிவண்டி இழுத்திடவே
பெருமுயற்சி செய்மாடென
தள்ளாடித் தள்ளாடி

படுக்கையில் விழுந்திட்டால் 290
துயிலழகி ஊடி நின்றாள்.
எரிக்கும் வெயிலதனில்
துடிக்கும் என்பிலதாய்
இப்படியும் அப்படியும்
தவி தவித்து மயங்கியபோது
உலகத்துப் பெண்ணெல்லாம்
அணங்காகி வெறியூட்ட
விழித்துயிர்த்து மயங்கியோர் கணம்
கழித்து விழித்து உயிர்த்து
நரகம் 300
பெரு நகரம்.

அருமைச் சேவல் தண்ணொலி எழுப்ப
விண்ணென் றெழுந்ததும் என்ன தெரிவது
பலகணி வழியே?
கொடுத்து வைத்தவன் தன்னொரு பாதி
வாயில் முன்னால் ஆடை நெகிழ
கூடல் மயக்கைக் கூட்டி யோட்ட
பொல்லாப் பெருமுயற்சி எடுத்தனள்.
பகல் பன்னிரண்டு மணி : பின்
இரவு பன்னிரண்டு : 310
நரகப் பகல், பெரு நரக
இரவு எத்தனை எத்தனை?
ஐயோ ..........
திரைப்பட வரங்கு நுழைவதற்கே
சீட்டு வழங்கும் அறைக்கதவு
திறப்பது எப்போ தெப்போதென
உளம்வெறி யேறப் பார்ப்பதுபோல்
தந்தைவாய் திறப்பதென்றோ
எனவயர்ந்து நோக்கி நோக்கி,

விளக்கணைப்பை வரவேற்பை 320
செய்திச் சுருளை திரைப்படத்தை
மனக்கண்ணில் ஓட்டும் நிலை ;
தானியங்கி ஏற நின்று நிற்காமல்
போவதை ஏங்கி நோக்கும் மலடி நிலை.

புணர்ச்சி மறத்தல் இன்றி
புறவொழுக்கம் உயிரினும் ஓம்பி
பேய்க்காற்று சீறும்போது
மொய்குழல் தொங்கு மலராய்
வீழ்ந்தொழிந் தாகவேண்டும் ; 330
தேய்புரிப் பழங்கயிறு
தாங்கவே தாங்காது
காலம் வரும் அதுவரை
காற்றிருந்தால். 334

No comments:

Post a Comment