தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, November 27, 2019

நுண்வெளிக் கிரகணங்கள் 1 --------. சு. வேணுகோபால்


- அறுதாள் அறுத்து பட்டேறிபோட்டும், போடாத காய்ந்த மஞ்சள்நிற நெல்வயல்களில் விழுந்தடித்து ஓடுகிறார்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முந்தி ஓடுகிறார்கள். அறிந்த முகங்கள் அறியாத முகங்கள், லவுக்கை போடாத பாட்டிமார்கள், கனத்த மார்பகங்கள் குலுங்க இடுப்பில் ஒட்டியிருக்கும் கைக்குழந்தைக்காரர்கள், வாலிபர்கள், நடுக்கட்டு வயதுக்காரர்கள். குடுமிவைத்த தாத்தாக்கள், கடுக்கன் போட்டவர்கள், சட்டையில்லாது வேட்டியைச் சுருட்டி தார்பாய்ச்சி கட்டிய விவசாயிகள், தாவணி போடாத வயதுடைய பருவம் நெருங்கும் பெண்கள், சட்டையை அணியாமல் பாவாடையை மட்டும் ஓட்டத்தில் தடுக்காமல் இருக்க இடுப்பில் சொருகப் பட்டிருப்பவர்கள், அவிழும் சேலையை அந்த வேகத்திலேயே இரண்டு கைகளாலும் முடிச்சுப் போட்டுக் கொள்பவர்கள், எல்லாரும் நீ முந்து நான் முந்து என்று ஓடுகிறார்கள். ஓட்டம் பின்னிழுத்து குதிரைகளின் குளம்பொலிகள் முன்னைவிட நெருங்கிக் கொண்டுதான் வருகின்றன. ஆயிரக்கணக்காக ஓடுபவர்களில் தனகோபாலின் அப்பா ஓடுகிறார். அவனின் அம்மா, அத்தை, அக்கா, அண்ணன், பெரியப்பா, சித்தப்பா, ஜெயகரன், பத்மா, குஞ்சம்மா, பவானி, சரவணமாமா...... கூட்டத்தில் அங்கொருவர் இங்கொருவராக கண்ணிற்கு மறைந்து மறைந்து : ஓட்டத்தில் தெரிகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பழக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள், நாய்கள், பசுமாட்டு மந்தைகள் கெதிகலங்கி மிரண்டு. வருகின்றன. பின்னும் குளம்கொலிகள் மிக சமீபத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஓடுபவர்களிலே தகுனி தகுனியாக பிரிந்து வேறு திசைகளிலும் ஓடுகிறார்கள். அக்காவைக் காணோம். ஏதோ ஒரு தகுனியில் சேர்ந்து ஓடுவாள். புவனா எந்தத் தகுனியில் உள்ளிழுக்கப்பட்டாள் என்பது தனகோபாலுக்குத் தெரியவில்லை. பாட்டி டேய் கண்ணா இந்த நெலமையா' பதட்டமாக உளறிக்கொண்டு தவங்கித் தவங்கி மிதித்து வருகிறாள். ஒழவுக்காட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள். உழுதுகொண்டிருக்கும் ரம்பாடி மாடுகள் குதிங்காலில் கொழு குத்துவதும் பொருட்படுத்தாமல் புரண்டுவிழும் கலப்பையை இழுத்துக்கொண்டு கூட்டத்தோடு சேர்ந்து ஓடுகின்றன. மாட்டின் தலைகள் அவர்கள் பின்னால் சூறாவளியில் சுழலும் கிடுருகள் போல் சுழன்று பின்னால் வருகின்றன. பஞ்சாரங்கள் உருண்டு வருகின்றன. குழந்தை தூங்கும் தொட்டில்கள் ஆகாயத்தில் கயிறுகட்டி ஆட்டி விட்டதுகணக்கா வந்து கொண்டே இருக்கின்றன.

புழுதி கிளப்பும் குதிரைகளில் கன்னம் மழித்து கிருதா ஓரமாக ஒள்ளித்தாடி வைத்திருப்பவர்கள் கையில் கத்திகளோடு பின் தொடர்கிறார்கள். புழுதிப் படலங்களில் மங்கலாகக் கருப்பு பர்தா போட்ட பெண்கள் துரத்தி வருகிறார்கள். இனி ஒன்றும் ஆவதற்கில்லை. படுதாவைக் கழட்டி ---

திடுதிடு ஓசை உள்ளமுங்கி வரும் ஆற்றின் கீதம் கேட்கிறது. ஓடியவர்கள் அப்படியே ஆற்றில் குதிக்கிறார்கள். கோரைபுற்கள் நாணலோடு கரைகளில் வளர்ந்து உய்ய்யென்று காற்றோடு பேசுகின்றன. தனகோபாலின் அம்மாவை குதிரையில் இருந்த வண்ணம் அவிழ்ந்து தொங்கும் கூந்தலை ராவிப்பிடித்து நிறுத்துகிறான் சிவந்த உருவம் கொண்ட கோல்மூஞ்சிக்காரன். குதிரையிலிருந்து குதித்து நாணல் புதருக்குள் இழுத்துச்செல்கிறான். அவ்வா' என்று கத்திச் சென்ற தனகோபாலைப் பூனைக்கண் வாய்த்த மூவர் வாயைப் பொத்தி நாணலுக்குள் தள்ளுகின்றனர். பதறிச் சிதறுதேங்காயாக தெரித்து ஓடினாலும் பலர்மாட்டிக்கொண்டு நாணல் புதர்களுக்குள் அழுகிறார்கள். புரட்டி எறியும் ஆற்றுநீரில் உருவங்கள் மிதக்கின்றன ஆலமரத்தின் கிளை ஓடிந்து நீரில் மிதந்து செல்கிறது. அதனைப்பற்றிக் கொண்டு ஆற்றோடு போகிறார்கள். தனகோபாலின் மலப்புழை உறுப்பம் எடுக்கிறது. ரத்தத்தோடு பிசுபிசுவென்று ஊளையாக வழிகிறது. தனகோபாலின் அம்மாவின் வாயில் துணிப்பொட்டலம் திணித்து வைத்து கோல்மூஞ்சிக்காரன் வேர்க்க விருவிருக்க இயங்குகிறான். 'அவ்வா என்று கத்துகிறான். யாருக்கும் கேட்கவில்லை. அப்பா எதில் மறைந்தார் என்று தெரியவில்லை.

தனகோபாலுக்கு வேர்த்துக் கொட்டியது. பக்கத்தில் பாட்டி மாராப்பு விலக இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். வேட்டியில் வடிந்த கஞ்சிப்படலம் கொலகொலவென்று 'மேப்பு' மாதிரி படர்ந்திருந்தது. இதற்குமுன் இப்படி ஆனதில்லை. தொடைகளில் ஒட்டியிருந்தது அவனுக்கு அசிங்கமாக இருந்தது. வேட்டியின் படாத பகுதியை நகட்டி துடைகளில் அழுந்த துடைத்தான். எழுந்து அழுக்குப்பொட்டியில் இருந்த ஒரு அழுக்குக் கைலிவேட்டியை எடுத்துக்கோர்த்து ஈரமான வேட்டியை எடுத்துக் கையை உள்வாக்கில் விட்டு விடுவித்தான்.

வெளியில் வந்தபோது அம்மா வாச தெளிக்க ஈயப்பாத்திரத்தில் சாணியைக் கரைத்துக்கொண்டு படியில் நின்றிருந்தாள். தொட்டியில் முகம் கழுவிக் கொண்டு மீண்டும் ஒரு முறை வேட்டியைச் சரிசெய்தான். அம்மாவைக் கண்கொட்டாமல் பார்த்தான். "என்னடா கோவாலு' “ஒண்ணுமில்லம்மா" "தோட்டத்துச்செவ போனயன்னா மொளகா நாத்த எட்டி பாத்திட்டுவா, எவனாச்சும் கை வச்சிருக்கானான்னு பாரு" பேசாமல் கேட்டைத்திறந்து ராஜபாட்டையில் காலை வைத்தான்.

எரும்புப்பொடி தூவியும் சுரட்டை விலகவில்லை . நுனிக்கருகல் அதிகம். மழைவிழுந்தால் ஒத்தத்தட்டு போட்டு வாய்க்கா நடவேண்டும் கிரைண்டர் வச்சு வெட்டினார் அப்பா. கரும்பாறை விழுந்துவிட்டது. வெட்டுச் செலவுக்குக் கூட வெள்ளாமை நிக்கவில்லை. கிணறுவெட்டு லோன்கடன் பெரியதொகை அப்படியே நின்றிருக்கிறது. கிணற்றை எட்டிப்பார்த்தபோது சுவர் ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீர் சொட்டியது. தனகோபால் அஞ்சாங்கிளாஸ் படிக்கும்போது மூலவாங்கு படியிலிருந்து குதித்திருக்கிறான். இதே கிணற்றில்தான் சரவணமாமா சொரக்குடுக்கையை முதுகில்கட்டிவிட்டு நீச்ச பழக்கினார். சரவணமாமா செட்டுக்கள் தொட்டு விளையாடும்போது அலையடிக்கும். அவர் கல்யாணம் பண்ணிய சமயம் பழக்கிக்கொடுத்தது.

தண்ணிய குடிச்சுத் தத்தக்காபுத்தக்காவென்று நீச்ச பழகியது இந்தக். கிணற்றில்தான். பெரிய செட்டுக்கள் மேலிருந்து குதிக்கும்போது குழாயை இறுக பிடித்தால்தான் மனசுக்கு சரியாக இருக்கும். சிலசமயம் முங்கிவைக்க வருவார்கள். கைகாலை அசைத்து மேல்வரும்போதே லபலபவென்று அலறியது உண்டு. ஒருசமயம் சொரகுடுக்கை ஓட்டைவிழுந்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டது. "என்ன இங்க ஒரு விருட்டான் தவக்காய்கணக்கா நீஞ்சிக்கிட்டிருந்தான் ஆள்க்காணம்” என்று தெரிந்தே கிண்டலடிச்சிருக்கிறார் ராஜாங்கம் பாவா. அவர் முங்கி நெட்டுக்குத்தலாக நீரைக்கிழித்து போனபோது, வயிறுமுட்ட நீரைக் குடித்து ராஜாங்கத்தை ராவி பிடிக்க முற்பட, நாசூக்காக விலகி பிடறி மயிரை பிடித்து மேலே இழுத்து வந்தார்.* மயக்கம் தெளியவில்லை. மேலே கொண்டுவந்து கழுத்தில் ஆட்டுக்குட்டியை மடக்கி போடுவதுபோல் போட்டு கரகரவென்று சுற்ற நீர்வாந்தி வந்தது. தெளிச்சு வந்து அழுக 'உள்நீச்சியில் சூப்பரா போற" என்று டாவடித்தார்.

போக போக சம்பா சொரகுடுக்கையைக் கண்டாலே அலர்ஜி. இடுப்பில் கயிற்றைக்கட்டி சரவணமாமா பழக்கினார். ஐந்தாள் மட்ட நீரில் போட்டிபோட்டு கல் எடுப்பது; யார் அதிக நேரம் நீருக்குள் தம் பிடிப்பது என்று படியில் உக்கார்ந்து எண்ணியது இந்த கிணறுதான். பல்ட்டி, சொர்க்கம், கழல்பல்ட்டி, செங்குத்து சருக்கு, ஏசல் சொர்கம் வித்தைகள் பழகியதில் நீரலைகள் படியில் தப்-தப் அடித்திருக்கின்றன.

செங்குத்து சருக்கு அடிக்கிறேன் என்று பத்தடி ஏறி சதீஷ்குமார் பாவா தொப்பென்று விழுந்து.... நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இப்போது தூர்மண் விழுந்து மேவியிருக்கும் படியில் உக்கார்ந்திருந்தார். படிப்பில் கெட்டி அண்ணணோடுதான் சுற்றும் அமைதியாக இருப்பார். வீட்டில் அப்பாவிற்கு சதீஷைக் கண்டால் இளக்காரம். அவர்கள் தனி கரைபிரிவு என்பதாலாக இருக்கலாம். இப்போது திருச்சியில் வேலையில் இருப்பதாகச் செய்தி. நீர் ததும்பிய படிகளில் தூர்மண் மூனொதடு ரங்கு (மேல் உதட்டில் பிறவியிலேயே பிளந்து ஓரங்கள் குமிழ்ந்து மேல்நோக்கி திரும்பி இருக்கும். அதன் வழியே பற்கள் தெரியும். ஒரிஜினல் பெயர் ராஜாங்கம்) கமலைக் காலிலிருந்து குதிக்கும்போது காலை லேசாக மடக்கி கூட்டுக்கால் வைக்காமல் அகலவைத்து 'தொபக்கட்டீரென்று விழுந்தார். நான்கடி உயரம் நீர் எழும்பி விழுந்தது. குதிக்கும் போது இசைவோடு கையை மேலே பறக்க முயற்சிப்பதுபோல அசைத்தால் செங்குத்தாக நீரில் புதைந்து போகும் லாவகம் வரும். கையை அசைக்காமல் தொடையோடு ஒட்டிக்கொண்டு செங்குத்தாக குதித்தால் காற்று இழுத்துவிட்டு பக்கவாட்டில் போய் விழவைத்துவிடும். ரங்கு கையை சரியாக அசைத்தும் மடக்குக் கூட்டுக்கால் வைக்கவில்லை. நீர்க்குமிழிகள் பொறிந்து வெடித்தன. படியில் ஏறி பழையபெட்டில் நின்றார். விதைக்கொட்டை ஓதைப்புடுக்குகாரன் போல் சிவந்து வீங்கிவிட்டது. அன்றிலிருந்து கிணற்றுக்கு வந்தால் படியில் உட்கார்ந்து முதுகில் நீரள்ளிப்போட்டு தேய்த்துவிட்டு போய்விடுவார்.

நீண்டநாள் மோட்டார் அமர்ந்த பெட்டு அப்பளம் கணக்கா சீப்சிமெண்ட்படிமத்தை நான்கைந்து எரும்புகள் நகட்டுகின்றன. மோட்டார் கீழே போய்விட்டது. பாதம் முங்கும் நீருக்காக ஒரு மோட்டார்? கிரைண்டர் வைத்து தகர்த்தும் பாறை அசையவில்லை. அப்பா அசந்துபோய்விட்டார். பத்தடியில் முறிவுகிடைக்கும் என்றார்கள். பாதாளத்தில் முளைத்திருக்கும் பாறைக்கு எங்கே தேடுவது முறிவு! அந்தளவு விட்டுவிட்டார். தேவையில்லாமல் அறுபதினாயிரம் கிணற்றில் போட்ட கல். இருந்திருந்தால் அக்காவின் கல்யாணத்திற்கு உயிர் கொடுக்கும். பத்துகுழிநெலத்தை எப்படி சும்மா போடுவது என்று நீர்வரத்து குறைந்து கீழ்நோக்கிப்போகும் நீரை தேடிப்போய் அப்பா தோற்றுப்போய்விட்டார்.

 தலைகளை உதிர்த்து முண்டமாக நிற்கும் தென்னந்தோப்புக்குள் நுழைந்தான். சில தென்னை மரங்களுக்கு உயிர் குருத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.. ஜட்டியை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டு வாய்க்கால் பள்ளத்தில் வேட்டியைத் தூக்கிவிட்டு உக்கார்ந்தான். காற்று கொண்டயம்பட்டியிலிருந்து துந்துபியின் நாதத்தை அள்ளிக் கொண்டு வந்தது. ஏதோ ஒரு மணமகனை உறுமி மணவறைக்கு அழைத்துக்கொண்டு போகிறது. - 
டட்டவிடட்டி டட்டவிடட்டி
டட்டவி டட்டி டட்டவிடட்டி ..

இப்படியொரு கனவு முன்பு வந்திருக்கிறதா? என்று நினைத்தபோது ஞாபகம் வரவில்லை. கல்லால் துடைத்துக்கொண்டு எழுந்தான். நீர் இல்லாத தொட்டிகளில் குழாய்கள் உண்டு. சில கிணறுகளுக்கு மின்சார சர்வீஸ் கட்டாகிவிட்டது. கவர்ண்மண்ட் பெட்டியை வயர்மேன் எடுத்துக்கொண்டு போய்விட்டான். அந்த கிணறுகளுக்கு இனி புதிய சர்வீஸ் தேவையில்லை. தொட்டியின் கீறல்கள் வழி அருகம்புல் நுழைந்து தலையாட்டுகிறது. கனவுபற்றி தாத்தியிடம் தான் கேட்கவேண்டும். வேப்பங்குச்சியை வாயில் மென்று தேய்க்க முற்பட்டபோது கசந்தது.

ரெங்கசாமிக்கு மன உளைச்சல் இல்லையென்றாலும் செத்தைசெதவலில் விழுந்திருக்கும் சுண்ணாம்பு ஒட்டிய சதுரக்கல்லை இருந்த இடத்தில் அப்பிப்பார்த்தும் நிற்காதது கஷ்டமாக இருந்தது. சித்தையன்கோட்டை காரவீட்டுக்காரரின் கைப்பிடிச்சுவர் கல் ஒன்று இன்றும் விழுந்தது. ஆதிகால சுண்ணாம்புக்கலவை. மண்பொறிந்துப் போனது. புயல்தாக்கி விழவில்லை. இந்த வேணாதிவெயிலில் புயல் எப்படி வந்திருக்க முடியும்? மாயாண்டித்தேவரின் வெள்ளாட்டுக்குட்டி பண்ணிய வேலை. கீழத்தெருவில் இருந்து கருவேல நெத்து திங்க வந்தது. ஆள் நெஞ்சுமட்டம் விடுவல் கொண்டு நிற்கும் இந்த சுவரில் ஏறி நடந்து தாண்டி பழக்கப்பட்டிருந்தது. அந்தப்புறம் எருமைகட்ட தாத்து கொளடர் அரக்கிவிட்ட ரெண்டு கருவேல மரங்கள் நிற்கின்றன.-- இதற்காக குட்டியின் காலை ஒடித்துவிட மனம் வரவில்லை. இரண்டு மூன்றுமுறை மாயாண்டியிடம் சொல்லிப்பார்த்தார். 'சரி' என்பார். குட்டியைக் கட்டுவதில்லை. பத்து நாளைக்கு முன் முதல்கல் விழந்தபோது வாலிபனுக்கு முதல்நரை கண்ணில் பட்டதும் ஏற்படும் . மனச்சங்கடம் ரெங்கசாமிக்கு. இதுமூன்றாவது கல். சங்கடம் சகஜமாகி வருகிறது., கல்லைத் தூக்கி வந்து கொட்டத்தின் மையத்தில் போட்டார். -
 தெருவில் நின்று சீரங்கு திம்மைய கௌடரை “ஏய் கெழவா வெளியவாடா, எங்க தாத்தா சொத்த கருட்டிக்கிடலாம்முன்னு பாக்கிறயா? எந்தக் கொம்பனாலும் முடியாதுப்பே. நோத்தாலோக்க ஒனக்குச் சாவு என்கையில தாண்டி" அப்பாவையும் தம்பி ரெங்கசாமியையும் திட்ட ஆரம்பித்தார். “கோழி கூப்புடுறதுக்குள்ள , தண்ணியப் போட்டுட்டு வந்திட்டான். வேலையெத்த நாயி. பொம்மக்கா மகனைத் திட்டினாள். ரெங்கசாமி "காலங்காத்தால வம்ப வெலைக்கி வாங்கலாமுன்னு இருக்கியா போ உள்ள" ரெங்கசாமி பதில் கொடுக்காமல் இருப்பதைப்பார்த்த தங்கம் "கையாலாகாத மனுசா" கையை நீட்டி சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

- 'இதுக்காக அவனோடு மல்லுக்கு நிக்கவா முடியும்? மொல்லமாறிபய ஊதி வாயில போட்டுட்டு வந்துட்டான் பேச்செழாமல் திட்டிக் கொண்டார். அவன் பாட்டுக்கு ஊழையிட்டுப் போறான். சடக்கென்று அந்தராத்மாவை குஞ்சம்மாள் நொரண்டியது கணக்கா இருந்தது. சீரங்கை தலைதூக்கிப் பார்க்காமல் உள்ளே போனார்.

என்னைக்குமில்லாத திருநாளா தலைவாசலில் பிளாஸ்டிக் டப்பாவில் தொங்கும் கெஞ்சலத்தை தொட்டுக்கொண்டிருக்கும் தட்டைக்குச்சியால் எடுத்து தலையைச் சுற்றிக் கொண்டான் தனகோபால். காயத்திரி பாவாடையை முழங்கால் தெரிய சுருட்டி இடுப்பில் சொருகி ஜலதாரியைச் சுத்தம் செய்தாள். மூத்தரவாடை கிளம்பும் நீர்த் தேக்கத்தை வௌக்குமாரை திருப்பிவைத்துக் கோதி, நீரை வெளியேற்றுவதில் இருந்தாள்.
தனகோபாலைவிட மூன்றுவயது மூத்தவள். +2 வகுப்பில் இங்கிலீஸ் போச்சு. அப்பா டுடோரியலுக்குப் போகச்சொன்னார். ஒரு பாடத்தை எழுதியிருந்தால் இந்த வருசம் காலேஜூக்குப் போயிருப்பாள். “ஆயிரம் மார்க் எடுத்திருவேன்பா. எப்படியும் மெடிக்கல் போகணும்பா” என்று கங்கணம்கட்டியது கலைந்து கொண்டது. கணக்கில் மட்டும் சொன்னபடி 198 மார்க். மற்றதில் குறைந்துவிட்டது. இயல்புகள் முன்தீர்மானங்களால் சிதைந்து போனது காயத்திரிக்கு அவமான மாகிவிட்டது. தன்னைவிடச் சுமாராக படித்தவர்கள் பாஸ் செய்து காலேஜூக்குப் போனபின் டுடோரியலுக்குப் போவது அசிங்கமாக இருந்தது

 சட்டென்று கமலா டீச்சர் ஞாபகம் வந்தது. ஒருவேளை சங்கீத கிளாசுக்கும் பரதகிளாசுக்கும் போகாது இருந்தால் பாஸ்செய்து இருக்கலாமோ? கூட்டுக்காரி ஸ்வாதிதான் வம்பா சேர்த்துவிட்டாள். கடைசியாக சேரும்போது ஏழாவது நபர். பள்ளிக் கூடத்திலேயே கர்நாடிக் சொல்லிக்கொடுக்க ஹெட்மிஸ் தனியாக ஹால் ஒதுக்கி இருந்தார். கமலா டீச்சர் ஸ்வரம் குறையா இருக்கப்படாதின்னு தெய்வம் அனுகிரகம் பண்ணியிருக்கார். ஸ்வரம் ஏழு கிடச்சிட்டது"ன்னு ஏழுபேரையும் ஏழு சுரங்களாக சட்டென்று எப்படி ஒப்பிட முடிஞ்சதன்னு காயத்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது. டீச்சருன்னா சும்மாவா. படிப்பைவிட சங்கீதத்தில் நாட்டம். அதுவும் அரைகுறையிலேயே நின்று விட்டது. சங்கீதத்துக்கின்னு அப்பா தனியா அனுப்பமாட்டார். பெயிலான எரிச்சலில் எந்தமண்ணும் வேணா மென்று விட்டுவிட்டாள். வீட்டில் போரடிக்க ஆரம்பிச்ச பின்னாடிதான் சங்கீதத்துக்காக விட்ட பாடத்தை எழுதிக் காலேஜ் 
* கோமியம் 
------------------- 
போயிருக்கலாமோ என்றுபட்டது. அப்பா சரியென்பார். டுட்டோரியலில் தன்னைப் பெயிலான பெண் என்று மற்றவர்கள் பார்க்கும் பார்வையை நினைத்தபோது அவமானமாக இருந்தது. அவள் காதுபட அது 'ஹெட்வெய்ட் கேஸ்' என்று திட்டுகிற கோஷ்டியும் ஸ்கூலில் இருந்தது. டீச்சர்களிடம் நல்லபேர். கமலா டீச்சரை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டி வந்திருந்தாள். வீட்டைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டார்.

"ஜமீந்தார் வீட்டு பிள்ளன்னு தெரியாதே" டைனிங் டேபிளைத் தொட்டுக்கொண்டு கேட்டாள். தங்கத்துக்கு சிரிப்பு. “பானை நல்ல பானைதான் வெறும் அகப்பையல்ல தூக்குனா வருது. இந்த வீட்டில இருக்கிறதே கஷ்டம்மா. எம் மக சொல்லுவா கலைக்க முடியாத ஒப்பனைகள்னு. அப்படித்தான் உலாவுறோம்". கமலா டீச்சருக்கு நெருடிவிட்டிருக்க வேண்டும். "ஸ்கூல்லையும் காயத்திரி காம் டைப்த்தான். ஆனா அசாத்தியமான வார்த்தைகள் அவளுக்கு எப்படியம்மா முளைக்குது மகளைப் பற்றிய உயர்வாகச் சொன்னபோது தங்கத்துக்குப் பெருமிதமாக இருந்தது. இதுக்கு என்ன சொல்வது? பாடப்புத்தகத்தைத் தொடாம வேற புத்தகங்களப் படிக்கிறதாலன்னு சொல்லலாமோ? "உங்களோடு சேர்ந்து காயத்திரி சைவமானதுதான் எங்களுக்கு வருத்தம்". தங்கம் வாய்விட்டுச் சிரித்தாள். “தேகத்துக்கு நல்லதின்னு அவ அப்பா சொல்றார் சாப்பிட மாட்டெங்கிறா'.

ஜன்னலைத் தங்கம் திறந்து விட்டாள். காம்பௌண்டு சுவருக்குள் களம். களத்தின் மத்தியில் கட்டிடக்கலையின் கம்பீரம். ஈசான மூலை எப்போதோ கிராதி கொணை உடைந்து பூசாமல் செங்கல் தெரிகிறது. எந்த அறையில் நின்று பார்த்தாலும் பூக்கள் குலுங்கும் ரம்மியம். பதக்க செயின் கழுத்தில் அமர்ந்தது மாதிரி. சவுக்குமரங்கள் களத்தைச் சூழும் மல்லிகை மணங்கள்.

“வீட்டுக்கு வேலக்காரங்க இருக்காங்களா' --- 

 “வீட்டுக்கா' 

தங்கம் எதோ சொல்ல வாய்திறக்க முன்னாடி கமலா டீச்சர்,  “காயத்திரிய பாக்க எனக்குச் சந்தோஷமா இருக்கு. இதுல பொறந்திட்டு எதையும் காட்டிக்காம இருக்க முடியுதேன்னு" - -

"உண்மையில சொல்லப்போனா ஆஸ்தியில்லாத வீட்டில நாங்க வெறும் கூலியாட்களா நடமாடுறோம். வாடகை வீடுமாதிரி. வாடகை வீடுன்னு சொல்லக்கூடாது. இந்த வீட்ட முடிஞ்சவரைக்கும் பராமருச்சுக்கோன்னு யாரோ வாடக இல்லாம எனாமா விட்டிட்டிருக்கிறது மாதிரி இருக்கு".
- அம்மா இப்படிப் பேசுவது காயத்திரிக்கி என்னமோபோல் இருந்தது. அந்தஸ்தை தேவையில்லாமல் கூறுபோட்டு சதையில்லாத வரட்டித் தோலை பிளந்து காட்டுவது கணக்கா இருந்தது. காட்டிக்காமல் அம்மா கொஞ்சம் டாம்பீகமாகவே நடந்திருக்கலாம். |

 'எவ்வளவு படிச்சிருக்கீங்க" -

'டீச்சர், அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. என்று கண்சிமிட்டினாள் காயத்திரி

'எல்லோரும் அவங்கவங்க வீட்ட காலி செஞ்சிட்டு போகத்தானே போறோம்"

 "சரிதான். ஆனா கஷ்ட்டம்மன்னா கூரைக்கி கீழ மட்டும் இல்ல. பொய்யான எங்க வாழ்க்கைக்குள்ளயும் இருக்கலாமில்லையா? பொய்யா வாழ்ந்திட்டு நாங்க ஒவ்வொருத்தரா எடத்த காலிபண்ணிக்கிறதில்ல என்ன அர்த்தமிருக்கு? நிஜமா வாழ இந்த வீடு பெரிய தடையின்னுதான் சொல்லுவேன். அதுக்காக இதத் தூக்கி எறிஞ்சிட்டும் எங்க போயிட முடியும்? ஏதோ கொஞ்சம் தோட்டந்தொரவு இருக்கு. இதுல இருந்து கிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கு'

. " அம்மா தொனியே தனி. சின்னபிள்ளகிட்ட சின்னப்பிள்ளையா பேசும். செல்லத்தாயிகிட்ட விவசாய நுணுக்கத்த சொல்லி சண்ட போடும். அப்பாவ பாத்தா அதிகம் பேசாது. ஒரு புன்முறுவல். அது அப்பாவுக்காக அம்மா வைத்திருக்கும் சிரிப்பு. என்கிட்ட, அண்ணா , தம்பி, பத்மாகிட்ட மண்டையில எதும்மில்லாது மாதிரி சின்னபிள்ளையாட்டமா பேசும். சிரிக்கும். அதுதான் எல்லா தாய்க்குமா? முக்கியமான ஆளுகிட்ட ஒக்காந்து பேசும்போது தினுசே மாறிடுது. இதையெல்லாம் அம்மா எப்படி கத்துக்கிட்டது?

கமலா டீச்சர் வீட்டையெல்லாம் சுத்திப்பார்த்தார். சின்ன வயசில் தங்கம் 'குப் கைவைத்த சட்டையில் பிடித்த போட்டோ டீச்சருக்கு பிடித்துவிட்டது. அந்தகாலத்துப் பேசன். இப்ப இருக்க காயத்திரி மாதிரியென்னு சொல்லலாம். ஒற்றை நாமம் போட்டதைப் போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். இப்போது எல்லாம் வட்டக் குங்குமம்

அதுக்கப்பறம் கமலா டீச்சர் இரண்டுமுறை மெனக்கெட்டு அவர்கள் ஊரிலிருந்து வந்துபோனார். சங்கீதகிளாசில் ஆரம்ப நாளில் காயத்திரியிடம் பேசியது தலைகீழானது. தோழிபோல நெருக்கமா பழகினதால் படிக்காமல் சங்கீதம் அது இதுன்னு பரிட்சையில் கோட்டையா? கமலா டீச்சர் தன் வீட்டுக்கு அழைத்துப் போனதிலி ருந்தா? அந்த புத்தகத் தட்டுக்கள்! இப்படியாக்கி விட்டதா? டீச்சரின் ஒல்லியான அப்பா கமலா மேடத்துக்கு கிரியா ஊக்கி. இவளுக்கு டீச்சரா? அப்படியென்றால் பெயிலாகி இருக்கக்கூடாதே! 

எப்படியிருந்தாலும் பெயில் பெயில்தான். டோட்டல் மார்க் 886, எடுத்த விரல்கள் ஜலதாரியைச் சுத்தம் செய்கின்றன. காயத்திரி சின்னவளாக இருந்தபோது வீட்டு வேலைகள் செய்ய ஒரு உருவம் வரும் மங்கலான நினைவு.
* * *

பெரியவன் அசோக்குமார் எம்ளாய்மெண்டில் பதிந்துவிட்டு ஒரு வருசமாக ஊரைச் சுற்றி கொண்டு இருக்கிறான். தனகோபால் சுதார்ப்புத்தான் என்றாலும் பத்தாம் வகுப்பு பாஸ் செய்யணுமே பிட்டை நம்பலாமா? தரிசாகிடுமா? என்பதில் தயக்கம். இன்னும் சரியான பயிற்சி வரவில்லை. மரியாதையா கடம் போட்டுர்ரருது நல்லது என்று தோன்றும். சைக்கிளை இறக்கி ஸ்டாண்ட்போட்டான். சீரங்கு பெரியப்பா தெருவில் இல்லை. வீட்டுக்குப் பின் உள்ள கொட்டா சுற்று கைப்பிடிச்சுவருக்குள் நுழைந்தான். தீவனம் போட வந்ததாக நினைத்து மாடுகள் எழுந்துநின்று சாணி போட்டன. வாயைக் கொப்புளிக்க தொட்டியில் நீர் அள்ளி 'கொலகொல கொலகொல' ஆகாயத்தைப் பார்த்து வாயில் ஒலியெழுப்பி துப்பினான். தாத்தி சேலையை அலாக்காத் தூக்கி நின்றவண்ணம் முன்சாய்ந்து ஒண்ணுக்கு அடித்தாள். காலை எவ்வளவு அகட்டி வைத்திருந்தாலும் காலில் மூத்தரம் சரிந்துபோனது. பொம்மக்கா பேரனைப் பார்க்கவில்லை. பெல் அடித்துப்பார்த்ததும் தனகோபால்சைக்கிள் ஸ்கூலுக்கு ஆயத்தமானது. டொக் டொக் டொக் மூன்று முறை பெடலை அடித்து பூமியை உந்தி வலதுகாலைத் தூக்கிப் போட்டான்.
****


. சௌடம்மா மரக்காலில் தவிட்டை பசுவுக்கு அள்ளிக் கொண்டிருந்தாள். திம்மைய கௌடர் நினைவு வந்ததும் மரக்காலை வைத்துவிட்டு சாப்பாட்டுத் தட்டை (வெங்கல தாம்பாளத்தில்தான் சாப்பிடுவது) எடுத்துக்கொண்டு வெளிவராந்தா நாகக்கல்தூணில் சாய்ந்திருப்பவருக்கு கொண்டுபோய் வைத்தாள். ரெங்கசாமியைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவளாய், "அண்ணா யாரோ விக்னேஷ்னு மதுரையிலிருந்து லெட்டர் வந்ததே பதில் போட்டீங்களா போடணும்' என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பிட்டார். பொம்மக்கா பாட்டி படியில் அமர்ந்து கையுரலில் வெத்தலை இடித்தாள்.

- உள்ளே அசோக்குமார் ஐந்து ரூபாய் கேட்டுக்கொண்டு இருந்தான். தங்கம் "நீ இருந்தா கொடுடா" என்றாள். ரெங்கசாமி உள் வராந்தாவைத்தாண்டி நுழைந்ததும், அசோக் காம்ராரூம்புக்கு அடுத்த ரூம்புக்கு வந்தான். ரஜினி பிறந்தநாள் விழாவுக்கு பெனேசன் எழுதியது உறுத்தியது. காசில்லையென்றால் கோஷ்டிக விடமாட்டேனென்று "மொதல்ல எழுது. அப்புறமா கொடு" என்று. மடக்கிவிட்டார்கள். . எழுதும்போதே "காரவீட்டுக்காரன் அதெல்லாம் இருபதுரூபா எழுதுவாண்டா" சூழ்ந்துகொண்டு சொல்லியபோது பத்துரூபாய் எழுதலாம் என்றுதான் தோன்றியது. எழுதிவிட்டு பிறந்தநாள் முடியுந்தண்டியும் ஒழிந்து ஓடனும். கை ஐந்தையே எழுதிவிட்டது. சௌடம்மா அத்தை நெரக்கையைக் குஞ்சமாக்கி நோண்டியவண்ணம் நின்றான். அப்பா இருப்பதை ஜாடைகாட்டி “அப்பறமா வாடா” என்றாள். ஒரு தொல்லைவிட்டது கணக்காதான். அத்தை சொன்னால் பேச்சுமாறாது.

-- தெருவில் இறங்கியதும் எதுத்தவீட்டு கூரையில் காகத்தின் கால்களுக்கிடையில் குச்குச் சென்று கோழிகுஞ்சு போராடியது. எதிர்த்துத்தாக்க முடியாது பரிதாபகரமான மரணத்தில் ஜீவிக்க கெஞ்சும் இரங்கல். கோழி பத்தடிபறந்து அந்தளவு திரும்பி மீதி குஞ்சுகளை அணைக்க ஓடியிருக்கும். இந்த நினைப்பே இல்லாமல் எங்கோ குப்பைமேட்டில் கிளறிகொண்டிருக்கும். அசோக் 'ஹோய்' என்று கல் எறிவதுபோல் வெறுங்கையால் அமட்டினான். 'இந்த ஏச்சுக் கெல்லாம் வேற ஆளப்பாரு' என்பதுபோல் கொத்தி ரணப்படுத்தியது. கல்லைத்தேடி ரெண்டு எட்டுவைத்து எடுத்து எறியப்போனான். குஞ்சுதலை கூரையிலிருந்து உருண்டுவந்து விழுந்தது. முண்டத்தை கவ்விக்கொண்டு பறந்தது. தப்பித்திருந்தால் கோழியாகவோ சேவலாகவோ நடமாடும். செத்தையைக் காற்று உருட்டிக்கொண்டு நகர்த்தியது.

ஊர் எல்லையைத்தாண்டி அலங்கோலமாக வேட்டி ஒதுங்கி சாக்கடை பக்கத்தில் சீரங்கு மல்லாக்கப்படுத்திருந்தார். வாந்தி எடுத்ததில் கணங்கை, சட்டையெல்லாம் ஆயிவிட்டிருந்தது. ஜீரணிக்காத சோற்றுப் பருக்கைகளில் ஈக்கள் மொய்த்தன. சாக்கடைவாடையும், சாராயவாடையும் சீரங்குக்கு சொகமாக இருக்கும் போல். குரட்டை ஒலி கிளம்பியது, ராஜாங்கம் வீட்டுச் செவலைநாய் பொத்தினாப்பில் தொங்கோட்டமாய் வந்தது. பின்னங்கால்கள் மணலைபறித்து எறிந்து காலைத்தூக்கியது. செல்லத்தாயி குடத்தை வைத்துவிட்டு சே! சே! அமட்டியபோதே சொருக் சொருக் பீச்சிவிட்டது. "அந்தஸ்த்தான குடும்பத்தில் பொறந்து இப்படியா? இன்னாச்சிரம் புத்தி வருமா' நாயை விரட்டினாள். கொர்' என்று சொல்லிவிட்டுப்போனது. சீரங்கு அலங்க மலங்க கண்ணைத் திறந்து “இந்த மழைக்கெல்லாம் ஏமாறமாட்டேன்" மேல பார்த்து சொல்லிவிட்டு கண்ணை மூடி 'உப்புமழை தூ துப்பினார்.

5 செல்லத்தாயிடம் கேள்விப்பட்டு அசோக் போய்ப்பார்த்தான். தூக்கி நிறுத்த முடியவில்லை. ஜவுக்குலாக தொங்கினார் சீரங்கு. எத்தனை பேர்? எத்தனை நாள்? தொடரும் பழக்கம் முடியாமல் போகிறது.ஆரம்பத்தில் தோட்டத்துச்செவ குடித்துவிட்டு படுத்திருப்பவரை அனுதாபப்பட்டு வீட்டுக்குக் கொண்டுவந்தனர். எரிச்சல் மேலிட அங்கன அங்கன - பார்த்தாலும் விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். மிகப் பெரிய 
* பின்கோசம்
-------------------

ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதுகளும் ஒவ்வொரு விதம். தரையைத் தொடாமல் சில அந்தரத்திலே சுருண்டு கொண்டவை. அடிமரத்தின் தொடர்பறுந்து விழுதில் நிற்கும் கிளைமரம். இப்படியாகிப்போயின.

வீருமாரம்மாள் கோயில் வீதிவழியே தாங்கிக்கொண்டுபோவதில் சங்கடம். நித்தியா பார்க்காமல் இருக்கவேண்டும். அதே தெருவில் அசோக்கின் சிநேகிதன் முரளி வருகிறான். நித்தியா வீட்டைக் கடந்ததும் சலனம் விட்டது. அவள் இந்த நேரத்தில் பார்க்காதது கௌரவ குறைச்சல் தவிர்க்கப்பட்டதாக மேலெழும்பியது. முச்சைத் திரும்பியதும் வடக்குப்பார்த்த மொதவீடு சீரங்குபெரியப்பா வீடு. பொதுசுவருக்கு அடுத்து மூத்தபெரியப்பா போரைய கௌடர். அவரை மட்டுமே ஜாதி பெயரை ஊரார் சேர்த்துச் சொல்கின்றனர். அசோக் அப்பாவையும், சீரங்குபெரியப்பாவையும் பெயர் சொல்லி அழைத்தாலும் காரவீட்டு வளசல் என்ற பெயர் இன்னமும் மக்களிடம் நிலைக்கிறது. கால மாற்றத்தில் பெயரில் வாலாகத்தொங்கும் ஜாதி, குரங்கின் உருமாற்றத்தில் உதிர்ந்து மனிதக்குரங்காக இருக்கிறது, காரவீட்டு வாசலில் கிழடுகளின் காலம் வரைக்கும் உச்சரிக்கப்படும். வாலிப் பட்டாளங்களுக்கு அசோக் வீடு என்றால்தான் புரியும்.

+ முக்கைத் திரும்பியதும் முரளி நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கைகோர்த்துக்கொண்டனர். சீரங்கு என்றால் புதுவை வைத்திலிங்கம் சாயல். வைத்தியலிங்கத்தைவிட சற்று உயரம். குடித்து குடித்து வயிறு வக்கி மிக லேசாக கூன் விழுந்ததுபோல் தோற்றம். சித்திரை வந்தால் ஐம்பத்துநாலு நிறைவு. கடவாய்ப்பற்கள் இரண்டு பக்கமும் விழுந்துவிட்டன. பொம்மக்கா தாத்தி "எங்கள சீரழிக்கவே சித்திரையில பொறந்திருக்கான்" என்று பிறப்பின் அனுகூலங்கள் மேல் பாரத்தைப்போடுவாள். வயதில் திம்மைய கௌடருக்கு சீரங்குதான் காரியக்காரன் என்று அனுமானம் இருந்தது. மூத்தவன் போரையா மதிலைத்தாண்டுவதில் பொறுப்பில்லாமல் அலைந்தவன். இவர்கள் விசயத்தில் திம்மைய கௌடரின் அனுமானம் தலைகீழாக தொங்குகிறது. சீரங்கு ஒருவர்தான் அந்தக்காலத்தில் பியூசி. வரை போனவர். ஊருக்குள் முதல் ஆளாக காலேஜ்படியை மிதித்தவன். வெளியில் கடுப்பேற்றினாலும் உள்ளுக்குள் சீரங்கு பற்றிய இளமையின் பசுமை அவருக்குள் அசைந்துகொண்டிருக்கும் தென்றல். காய்ந்து சருகாகிப் போனது. அவருக்கு மட்டும் கனவு போலத்தான் இன்னமும் தோற்றம் தருகிறது.

No comments:

Post a Comment