தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, November 22, 2019

9. மௌனி என்று ஒரு சாதனை, 10. ஆர். கே. நாராயண் - க.நா.சு ::::: இலக்கிய சாதனையாளர்கள்

9. மௌனி என்று ஒரு சாதனை - க.நா.சு ::::: இலக்கிய சாதனையாளர்கள்
- 9. மௌனி என்று ஒரு சாதனை ,
o
இன்று மௌனி என்கிற சிறு கதாசிரியரின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது. அண்மையில் அவர் இறந்ததை யொட்டிப் பலபேர் பேசுகிற அளவுக்கு அவர் சாதனை பிராபல்யம் அடைந்துள்ளது. இது சாத்தியமானதை தமிழில் புது இலக்கிய விமரிசனத்தின் வெற்றிகளில் ஒன்றாகச் சொல்லவேண்டும். '1958-ல் அவருடைய அழியாச்சுடர் தொகுப்பு வெளி வரும் வரையில் மௌனியின் கதைகள் முப்பதுகளில் வெளி வந்த சிறு பத்திரிகைகளிலேயே புதைந்து கிடந்தன. 1950-க்குப் பிறகு அவர் பெயரை ஒரு இலக்கிய சிகரமாகச் சொல்லிச் சொல்லி நூல் வெளிவந்த பிறகு அவருடைய எழுத்துக்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரைப் பாதித்தன.
1958-க்கு முன் இருந்த மௌனி வேறு. 1958-க்குப் பிறகு இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றுவிட்ட பிறகு இருந்த மௌனி வேறு. இரு மௌனிகளையும் நான் நன்றாக அறிந்தவன். ஓரளவுக்கு அவர் பெயரும், சாதனையும் பிரசித்தமாவதற்கும் உதவியவன் நான் என்று பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம்.
முதல் முதலாக அவர் சாதனையைப் பற்றி நான் புதுமைப்பித்தன் மூலம் தான் அறிந்து கொண்டேன். புதுமைப்பித்தனுக்கு (மௌனிக்குப் போலவே) யாருடைய எழுத்தும் அவ்வளவாகத் திருப்தியளிக்காது. சுலபமாக எந்த சக தமிழ் இலக்கியாசிரியனையும் புகழ்ந்துவிட மாட்டார். அவர் மௌனியைப் புகழந்து சொன்னது போலவே சில இடங்களில் எழுதியும் வைத்திருக்கிறார்.
* 'மிகவும் சுவாரசியமான மனிதர். கும்பகோணத்தில் வசித்து வருகிறார். அவர் சென்னையில் வசிக்கவில்லையே அவருடன் அடிக்கடிப் பேசி சம்பாஷிக்க இயலவில்லையே என்று எனக்கும் வருத்தம்தான்'' என்றார் புதுமைப் பித்தன். மௌனியின் அப்போது வெளிவந்த கதைகளை நானும் படித்திருந்தேன். எனினும் எனக்கு அவைபற்றி அப்போது பிரமாதமான அபிப்பிராயம் ஏதுமில்லை. ஆனால் புதுமைப்பித்தனே, சொல்லுகிறபோது...என்று 1938-ல் முதல் தடவையாக மௌனியை அவர் அப்போது - தங்கியிருந்த கும்பகோணம் காமாக்ஷி ஜோசியர் தெருவில் (இப்போது அத்தெருவுக்கு என்ன பெயரோ?) போய் சந்தித்தேன்.
முதல் சந்திப்பிலிருந்து முக்கியமாக மூன்று விஷயங்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. மௌனி என்று தான் புனைபெயரே தவிர, அவருக்கு பேச அதிகமாக, மிக அதிகமாகவே பிடிக்கும்'' என்பது ஒன்று. இந்தப் புனை பெயர் - வேறு ஒருவர் - சற்றுக் கேலியாகவே அவருக்கு அளித்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன். இரண்டாவது விஷயம், சிறுகதைகள் எழுதுவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த இரு கும்பகோணம் எழுத்தாளர்களை (கு.ப. ரா.- பிச்சமூர்த்தி) விட நன்றாகத் தன்னால் எழுத முடியும் என்று தனக்கும் உலகுக்கும் நிரூபிக்க ஒரு மாதத்தில் சேர்ந்தாப்போல எழுதப்பட்டவை தான் அவர் கதைகள் எல்லாமும். மூன்றாவது விஷயம் அவருடைய படிப்பு, கவனம் எல்லாம் இலக்கியம் என்று சாதாரணமாக நாம் ஏற்றுக்கொள்கிற கவிதை, நாவல், கதை என்பதில் இல்லை. பெளத்த தத்துவ விவாதங்கள், தரும் விசாரணை, லௌகீகப் போக்குகளில் ஈடுபாட்டுடன் படிப் பவர் என்பது. என் படிப்பும் இந்தத் துறைகளில் சற்று விரிவானது தான் என்பதனால் எங்கள் பேச்சு- இரவு மூன்றுமணி வரை- தொடர்ந்தது. மறுநாளும் தொடர்ந்தது.
49
|
-
48
எனக்கு அவரைப் பிடித்திருந்தது போலவே அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது என்கிற நினைப்புடன் நான் சிதம்பரம் திரும்பினேன்.
சிதம்பரத்துக்கு அவர் வந்து குடியேறிய பிறகு எங்கள் சந்திப்புகள் பத்து ஆண்டுகளுக்கு அநேகமாகத் தினசரிக் காரியம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமயம் என் மூன்று வயதுப் பெண் ஏதோ என்னிடம் சொல்ல வந்த போது மௌனி என்னிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு ''மாமா, வீட்டுக்குப் போங்களேன். எனக்கு என் அப்பாவோடு பேசவேண்டும்!'' என்று அவரை விரட்டியது நினைவில் இருக்கிறது. எங்கள் பேச்சு அறிவு பூர்வமான உலகில் பல இடங்களில் சுற்றி வரும். ஆனால் இருவருமே எங்கள் எழுத்துக்களைப்பற்றி - அதிகம் பேச மாட்டோம். , ''அவை நடந்து விட்ட விஷயங்கள். அவற்றைப்பற்றி எதுவும் பேசுவதானால் பிறர்தான் பேச வேண்டும்'' என்கிற நினைப்பு அப்போது மௌனிக்கு உண்டு. பின்னர் அவர் மாறிவிட்டார். 1960-க்குப்பின்
அவரைச் சந்தித்தவர்கள் என்னிடம் தன் எழுத்துக் களைப் பற்றித் தவிர வேறு எதுவும் பற்றிப் பேசமாட்டேன் என்கிறாரே!'' என்று கூறியதுண்டு.
என்று பலவிதமான பிரிவுகளுடன் இந்தக் காதல் 'வேகம் அவர் கதைகள் பலவற்றிலும் காணக் கிடக்கின்றன. பல ரொமாண்டிக் ஆசிரியர்களின் எழுத்துக்களில் அவர் களும் அறியாமலே கிண்டலும் கேலியுமாகிவிடுகிற இந்தக் காதல் மௌனியின் கதைகளில் ஒரு சிறப்பான அடிநாத மாக அமைகிறது. மூன்றாவது விசேஷம் அவருடைய தனி மனித மனோ தத்துவத் தேடல். சில கதைகளில் இந்தத் தேடல் அதிகமாகிவிடுகிறது என்பது என் நினைப்பு; ஆனால் அதனாலேயே பலருக்கு அந்தக் கதைகள் சிறப்பாகத் தோன்றுவதும் எனக்குத் தெரியும். இன்னும் பல சரடுகள் அவர் எழுத்தில் பிரித்துக் காண இயலும். அதனால் தான் அவரை இலக்கியாசிரியர்களுக்கு உதவக் கூடிய இலக்கியாசிரியன் என்று சொல்லவேண்டியதாக இருக்கிறது.
ஒருவரிடம் இருந்து மற்றவர் எதுவும் எதிர்பார்க் காமலே எங்கள் நட்பு ஒரு ஐம்பது ஆண்டுக் காலம் நீடித்தது. நான் அவரிடம் பிற்காலத்தில் பேசும்போது சக தமிழ் எழுத்தாளர்களையோ, மற்ற இலக்கிய விஷயங் களையோ பேசமாட்டேன். பொதுவாக மனித வாழ்வின் நோக்கம், போக்கு, இவற்றில் மத சிந்தனைகளின் ஆதிக்கம் இவற்றைப் பற்றிப் பேசுவேன்.
மௌனியின் - எழுத்துக்களில் - அவை இருநூற்றுச் சொச்சம் பக்கங்களில் அடங்கிவிடும் - அநேகமாகச் சிறு கதைகள் தான் - நாலைந்து விஷயங்கள் பின்னிக் கிடந்தன. ஒரு அதீதமான உருவ அமைதி; புதுமைப்பித்தனில் கூடக் காண முடியாத உருவ அமைதி; இது ஆங்கிலத்தில் கிடைத்த காதரின் மான்ஸ்ஃபீல்டு போன்ற சிறு கதாசிரியர் களைப் படித்து ஏற்பட்ட உருவப்பிரக்ஞை. இரண்டாவது அம்சம் ஒரு ரொமாண்டிக் தத்துவம். இது ஆங்கிலக் கவிகளைப் படித்து ஏற்பட்டதல்ல. காதல் - நிறை வேறியது, நிறைவேறாதது, மானஸீகமானது, உடல் சம்பந்தப்பட்டது, நினைவில் நிற்பது, இன்று நடப்பது
இலக்கியப் புகழ் வந்த பிறகு அவர் சற்று குழந்தை மனப்பான்மை பெற்றவர் போல ஆகிவிட்டார். அந்தப் புகழை தான் இழந்து விடக்கூடாது என்றும், அருமையாகக் கிடைத்த விஷயம் என்றும் நினைத்துச் சில சமயம் பேசுவார் என்பதும் தெரிந்தாலும், அவர் எழுத்து என்கிற சாதனை மிகமிக அருமையானது, பெருமை தரக்கூடியது என்று இன்று அவர் கதைகளை மறுபடியும் எடுத்துப் படிக்கும்போதும் எனக்குத் தோன்றுகிறது. அவர் புதுமைப் பித்தன் சொன்னது போல சுவாரசியமான மனிதர். அவர் கதைகள் அமர இலக்கியத் தன்மை பெற்றவை.
50

1959-60 வாக்கில் இப்படி ஒரு மனிதர் , மௌனி என்பவர் நிஜமாகவே உயிருடன் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தை நிவர்த்தித்துக்கொள்வதற்காக ஈழத்தி லிருந்து ஒரு இலக்கியத் தூதுகோஷ்டி சிதம்பரம் வந்து திரும்பியது. அவரே அவருடைய எழுத்துக்களில் ஒன்று தானோ என்கிற சந்தேகம் நியாயமானதுதான்! -
அவர் இறப்பதற்கு ஒரு மாத முன், அவரைப் படுத்த படுக்கையாகக் கண் திறந்து பேசவும் முடியாமல், என்னை யார் என்று கஷ்டப்பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையிலும் பார்த்தபோது, எனக்கு ஒரு சகாப்தம், ஒரு யுகம் முடிந்துவிட்டது என்றுதான் தோன்றிற்று. பேசாத ஒரு மௌனியுடன் இருக்க எனக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் இனிமேல் அவர் பேசமாட்டார், அவர் கதைகள் மட்டுமே பேசும் என்பது ஆறுதல் அளிக்கிற விஷயம்தான்!

10. ஆர். கே. நாராயண்

ஆர். கே. நாராயண் என்பவர் இன்று உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலாசிரியர். அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் பெங்குவின் ஸ்தாபனம் கொண்டு வந்திருக்கிறது. இப்படிப் பிரசுரிக்கப்பட்டிருக்கிற ஒரே இந்திய நாவலாசிரியர் ஆர். கே. நாராயண்.

புகழோ, பாராட்டோ நாராயணின் தலைக்கனத்தை அதிகரிக்கச் செய்யவில்லை என்பது அவரைப் பற்றி எல்லோருக்கும் முதலில் தெரிய வருகிற விஷயம். பழகு வதற்கு மிகவும் சாதாரணமாக, எளியவராக, அதிக
ஆடம்பரமில்லாமல் இருக்கிறார்.

கருத்தரங்குகள், விமரிசனப் பார்வைகள் என்றால் அவருக்கு மிக மிக அதிக அல்லெர்ஜி.'' ''என்னைப் பற்றி எழுதப்படுகிற விமரிசனங்களையோ மதிப்புரைகளையோ கூட நான் படிப்பதில்லை'' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது பூரணமாக உண்மையாக இருக்க மூடியாது. இலக்கியமாக இல்லாவிட்டாலும் எழுத்தாக வெற்றி கண்டுவிட்ட நாவலாசிரியர் தன்னைப் பற்றி எழுதப்படுகிற புகழுரைகளைப் படிக்காமல் இருப்பாரா? படிப்பார். ஆனால் அவரை அவை ஓரளவுக்கு மேல் பாதிக்க விடுவதில்லை என்று சொல்ல வேண்டும்.

என்னவெல்லாமோ சொல்கிறார்களே, சுப்ரமண்யம், இதெல்லாம் உனக்குப் புரிகிறதா? புரிந்தால் சரி. எனக்குத் தலை வலிக்கிறது. நான் வீட்டுக்குப் போகிறேன்'' என்று கருத்தரங்குகளில் பாதியில் அவர் வெளியேறி விடுவதை. நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சில சமயங்களில் கருத்தரங்குகளில் பேசப்படுகிற விஷயங்களில் சில அவ்வளவாகப் புரிவதில்லை தான். ஆனால் விமரிசகனாகச் செயல்பட விரும்புகிற நான் அதை வெளியே சொல்ல முடியாது. நாராயண் சொல்லிவிடுகிறார். அவருக்கு.இலக்கிய விமரிசனம் என்று சொல்லப்படுவதிலும் செய்யப் படுவதிலும் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது.
விமரிசனத்தைப் பற்றி அவர் ஒரு தடவை என்னிடம் சொன்னார்: ''பட்டணத்தில் மழை பெய்தபின் சாக்கடை நீரை சல்லடை போட்டு சலித்து ஏதாவது பொன் கிடைக் கிறதா என்று பார்த்துக்கொண்டு சிலர் இருப்பதைப் பார்த்திருக்கிறாயா? அந்த மாதிரிதான் விமரிசனம் என்பதும். சாக்கடையில் சல்லடை போட்டு, பொன்னைத் தேடுகிற விஷயம்தான். சில சமயம் ஒரு காணாமற்போன தங்கத் திருகாணி கிடைக்கும். சில சமயம் ஏதாவது ஒரு சகுந்தலையின் காணாமற்போன மோதிரம் கூடக் கிடைக்கலாம். ஆனால் அநேகமாக ஒன்றும் கிடைக்காது. மிகவும் வியர்த்தமான காரியம் இது!'' ஓரளவுக்கு உண்மை தான். என்றாலும் விமரிசனம் தேவைப்படுகிறதே!

ஆர். கே. நாராயணே ஓரளவுக்கு விமரிசனத்தினால் உண்டாக்கப்பட்டவர்தான். அதாவது காமன்வெல்த் இலக்கியப் பேராசிரியர்கள் அவருடைய இலக்கியத் தரத்தையும் ஸ்தானத்தையும் உண்டாக்கியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் ஆர். கே. நாராயணைப் பற்றி எழுதியிருப்பதைப் படிக்கும்போது “உண்மையிலேயே ஆர். கே. நாராயணில் இத்தனை விஷயம் இருக்கிறதா!'' என்று நமக்குப் பிரமிப்பு ஏற்படுகிறது. நாம் படிக்கும் போது நம்மில் பலருக்கு மிகவும் சாதாரணமான இலக்கிய நாவலாசிரியராகத் தோன்றுகிறார் அவர்; ஒரு சிலருக்கு இது இலக்கியத்தரமேயில்லாத, தங்கள் மொழியில் வருகிற இரண்டாந்தர மூன்றாந்தர எழுத்துக்களைப் போலத் 'தோன்றுவதாக எழுதியிருக்கிறார்கள். மேலை நாட்டவர்கள் நாராயணில் செக்காவின் irony, கேலி பாவத்தைக் கண்டு வியக்கிறார்கள்.

. நான் முதன் முதலில் நாராயணை மைசூரில் நடந்த ஒரு PEN மகாநாட்டில் சந்தித்தேன். பெரிய மனிதர்கள், -பிரசித்தமானவர்கள் என்று யாராவது தென்பட்டால் அவர்களை மேடையேற்றி அவர்கள் பேசுகிற அர்த்தமற்ற பல விஷயங்களை ரசித்து ஆர்ப்பரிப்பது நம்முடைய ஸ்தாபன ரீதியாகும். அதுபோல ஆர். கே. நாராயணையும் மேடையேற்றி விட்டார்கள் PEN காரர்கள். மேடையில் ஏறு முன்னரே எனக்குச் சொல்ல விஷயம் ஒன்றுமில்லை'' என்று மறுத்துப் பார்த்தார் அவர். மேடை ஏறி இரண்டு முழு நிமிஷங்கள், நெற்றி ஓரத்தில் கைவிரல் வைத்துக் கொண்டு நின்றார். பிறகு நிமிர்ந்து எனக்குச் சொல்ல ஒரு விஷயமும் இல்லை!'' என்று சொல்லிவிட்டு இறங்கி விட்டார். இப்படி மேடையேறி, ஒன்றும் சொல்லாமலே இறங்கிவிட்டவர் ஆர். கே. நாராயணைத் தவிர வேறு. யாருமாக இந்தியாவில் இருக்க முடியாது.

இப்படி அவர் செய்ததை அவருக்கு நான் நினைவூட்டிய போது “ அப்படியா செய்தேன்? எனக்குக் கூடியிருந்த எழுத்தாளர்களை அவமதிக்கிற எண்ணமில்லை. உண்மை யிலேயே பேச எனக்கு ஒரு விஷயமும் இருந்திராது. மனம் என்ன குழாயா, திறந்தவுடன் வார்த்தைத் தண்ணியாகக் கொட்ட'' என்று கேட்டார்.

- ஆர். கே. நாராயண் தமிழர். தமிழ் இலக்கியத்துக்கும் மிகவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர், கம்ப நிலையத்தில் உதித்தவர். கம்பராமாயணத்தை , அவர் அறிந்துகொண்ட வரையில், ஆங்கில வசனத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார்.

எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. அவரும் காபிப் பிரியர். முன்னெல்லாம் இந்தியாவில் பல இடங் களில் காபி கிடைப்பது அரிதாக இருந்தபோது, அவர் காபிக்காகக் கையாண்ட ஒரு உத்தியை எனக்குச் சொல்லித் தந்தார். அப்போதெல்லாம் இப்போதுள்ளது போல பல இன்ஸ்டண்ட் காபி பவுடர்கள் கிடையாது. Stanes. கம்பெனி மட்டும் instant காபி என்று ஒரு பவுடர் தயாரித்துத் தரும். காபி கிடைக்காத இடங்களில் டீ ஒரு. கிளாஸ் தருவித்து அதில் இரண்டு ஸ்பூன் ஸ்டேன்ஸ் பவுடரைப் போட்டு ஸ்பெஷல் காபியாகச் சாப்பிட்டு விடுவது அவர் பழக்கம். அதை நானும் செய்து பார்த் திருக்கிறேன். -

"ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் மொழியில் பற்றுதல் மிகவும் உண்டு. தங்கள் மொழியை நன்றாக உபயோகப் படுத்துகிற அந்நியர்களிடம் அலாதியான ஈடுபாடு. ஓரளவுக்கு அதனால் தான் நன்றாக ஆங்கிலம் பேசு கிறவர்கள், எழுதுகிறவர்கள் உள்ள இந்தியாவை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லாமல் இருந்தது'' என்று அவர் ஆங்கில சாம்ராஜ்ய ஆசைக்கு ஒரு புது வியாக்கியானம் தந்தது நினைவிருக்கிறது. மற்றப்படி அவர் அரசியல் பேசி நான் பார்த்ததில்லை. இதுவும் நாலைந்து பேர்வழிகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது சொன்ன லேசான விஷயம்தான்.

"உங்களுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு கிடைத்து •விடும் என்று சொல்லுகிறார்களே!'' என்று ஒரு சமயம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்: எழுதுகிறவன் எவனும் தனக்கு நோபல் பரிசு வருவதாகக் கனவு காண்பதில் தவறில்லை . அந்தப் பரிசுக்கு ஒரு உலக வியாபகம் இருக்கிறது. ஆனால் கனவு நிஜமாகிற வரையில் அதைப் பற்றிப் பேசாதிருப்பது நல்லது!''

தமிழில் வருகிற ஒரு பத்திரிகையைக் குறிப்பிட்டு “ அதில் வருகிற எழுத்துக்கள் நல்ல எழுத்து என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இந்த அபிப்பிராயம் தி. ஜானகி ராமனைச் சந்தித்த பிறகுதான் மாறிற்று'' என்றார். ஜானகிராமனைப் பற்றியும் அவருடைய மரப்பசுவைப் படித்தபிறகு தன் அபிப்பிராயம் மாறிவிட்டதாக ஒரு தரம் என்னிடம் சொன்னார்.

காசு பணம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறுகதைத் தொகுப்புக்காக அவர் கதை ஒன்றை உபயோகித்துக் கொள்ள அனுமதி கேட்டபோது தனக்கு இத்தனை பணமாவது குறைந்தபட்சம் கொடுத்தால் தான் - கதையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று எழுதி விட்டார். பிரசுராலயத்தார் ஒத்துக்கொள்ளாததால் அவர் கதையில்லாமலே தான் என் தொகுப்பு வெளிவந்தது.

டெல்லியில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஒரு பெண்மணியை அறிமுகம் செய்து வைத்தார். நான் அந்தப் பெண்மணியின் முக்கியத்தைப் பற்றித் தவறாக நினைத்து விடப் போகிறேனே என்று அவர் போனபின் .
அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்து கிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!'' என்றார்.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்கிற நாவலில் ஐம்பது பக்கங்களுக்கு மேல் தன்னால் படிக்க முடியவில்லை என்று ஒரு தரம் ஏதோ ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் அதற்குச் சில வாரங்களுக்குப் பின்னர் மைசூர் போய் அவர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். மேஜை மேல் போரும் அமைதியும் நூல் இருந்தது. புஸ்தகம் மிகவும் மோசமாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த நூலில் தான் முதல் 50 பக்கங்களுக்கு மேல் உங்களால் படிக்க முடிய வில்லையா?'' என்று கேட்டேன். சிரித்துக் கொண்டே புஸ்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து விட்டார்.

ஆங்கிலத்தில் பேசுவதைவிடத் தமிழில் தமிழ் 'தெரிந்தவர்களுடன் பேசுகிற இந்த ஆங்கில நாவலாசிரியரின் நூல்கள் பல தமிழிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சினிமாவாகியிருக்கின்றன. அதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். நான் ஏமாந்துவிட்ட ஒரே இடம் சினிமா உலகம் தான்'' என்று ஒரு தடவை சொன்னார். தன் நாவல்களைத் தானே பிரசுரித்து நூல் வெளியீட்டாளர் களுக்கு விற்கக் கொடுக்கிறார். அதில் மிகவும் கண்டிப்பானவர் என்றும் தெரிகிறது. ,
நாவலாசிரியராகபலருக்கு மிகவும் சாது. நாம் படிக்க 

No comments:

Post a Comment