தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 24, 2019

தைலமண் சீலைப் பதுமைகள் - கோணங்கி

நன்றி :: சிலேட் சிறற்றிதழ்
________________

கோணங்கி தைலமண் சீலைப் பதுமைகள்
[வெளிவரவிருக்கும் கோணங்கியின் மூன்றாவது நாவலான, 'தீ நீர்' இலிருந்து சில பக்கங்கள் )________________

பென்சில் கால்களால் காகிதத்தில் சுவர்களில் வட்டம் போடுவான். சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்டிருந்த அவனுக்காகச் சீக்கிரமாக அப்பாவின் ஸ்பின்னர் வேலையில் கிடைத்த காடாவைக் கிழிக்கத் தொடங்கினார்.

 வரையாததை வைப்பது நடந்திருக்கிறது, வரைவதில் இயற்கை இருக்கிறதா. குசவர் வீட்டு முற்றத்தில் குத்துக்கால் வைத்து திகிரி சுழல்வதை அமர்ந்துப் பார்ப்பான். நடு மையத்தில் பிசைந்த களிமண் பாண்டமாக மாறும் தருணத்தில் சீலைத்துணியால் வருடுவார். ஈரமும் சேர்க்களியும் ஊறியத் துணியைத் திருடி வந்து பதுமை ஒன்றைப் படைத்துவிட்டான். அதைக் காண வந்த தெருக்காரர்கள் அதிசயித்தார்கள். பள்ளி ஆசிரியர் இதைக் கண்டு உருப்படாத வேலை, ஒழுங்காகப் படி என்றார். 

வரைவதைத் தொடர்வதில் மாறிவரும் பதுமைகள் சாயலில் மாறவில்லை. வரைந்து கொண்டு இருப்பதில் இருந்து மெல்ல முடிவுக்கு வரும்பொழுது தோல்வியின் வழியாகக் கலை கூடிவராத அவஸ்தையில் தடுமாறி நிற்கும் காலத்தில் அப்பாவின் கை முறிந்ததை ஒட்ட வைத்துவிட்ட மருத்துவரின் சிகிச்சையில் இருந்து வரையப்பட்ட ஓவியத்தில் சமநிலையாகிவிடும் தன்மையிருப்பதில்லை 

முந்திய கேன்வாஸின் நிறங்கள் எல்லாம் தலை கீழாய்க் கவிழ்ந்துவிட்ட அப்பாவின் முகத்தில் உள்ள திகிலும் நம்பிக்கையின்மையும் மெல்ல தைல ஓவியத்தில் புகுந்துவிட்டதில் வரைந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். 

டை கட்டி சூட் அணிந்த தொழில்நுட்பத்திற்குக் காலம் தொலைவு செயல் குறித்த அட்டவணைகள் நரித்தடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பக்கமும் அவனுக்கு இந்த வயதும் பிளவுண்டிருந்தது. நிராயுதபாணியாய்க் காட்டில் அலைந்தபோது பாடும் காதல் அங்கு நிறங்களாக விரிந்து கிடந்தது. அதன் ரகஸிய இருளில் ஒளிந்தான். ஆதலால் ஆக்ரோஷமாக ஒரு பெரும் அதீதப்பசுமையால் விரட்டப்பட்டபோதும் அவனைச் சூழ்ந்துகொண்ட பட்சிகளின் ஒலிக்கலவையில் வறண்ட நிற மண் ஓடியது. 

எல்லாச் சர்ப்பங்களின் புன்னகையைக் கொண்டிருந்த சாரையின் முத்தத்தில் புதிர் அடைந்தான். சாரையின் மோனத்தை மண்சீலைப் பதுமையாக்கினான். தூக்கத்தை இழந்த இரவுகள் அவை. நறுக்கிய துணித் துண்டுகளால் தைக்கப்பட்ட உடல் சாரையின் மிதமிஞ்சிய இச்சைக்குள் காட்டு இலைகளை ஒட்டி வைத்தான். காஞ்சரங் கிளைகளை ஒடித்து உடலைக் கிழித்து உள் உறுப்புகளைப் பொருத்தினான். சில நேரம் மண்சீலையைச் சகதியில் நனைத்து கீறல் விடும் சிலையை ஒட்டினான். இரவில் அவள் வெப்ப ரத்தப் பிறவியாகி வெளியில் அலைகிறாள். பாம்புகளின் சுருள் மூச்சைத் தேடி நள்ளிரவு நேரத்தில் படுக்கையிலிருந்த சிலை விசும்பி எழுவதைக் கண்டான். சிலையின் முகம் மட்டிச் சாயத்தால் மெழுகப்பட்டிருந்தது. அவன் அறைக்குள் வந்தவர்கள் மேஜை மேல் நிற்கும் சாரையை உச்சபட்சக்கலை இதுவென நோக்கி ஏங்கினர். அவளைப் பற்றி நினைத்துக்கொண்டே சென்றவர்களைப் பீடிக்கிறாள் கனவாக கோடை காலத்தில் மண்உடல் கீறல் விடத் தொடங்கியது. வெப்பக் காடுகளை இருப்பிடமாகக் கொள்ளும் சாரையின் இயற்கையில் ஆழ்ந்திருந்தான். அவளைத் தொடும்போது சிலையில் ஏதோ சப்தம். அவனில்லாத அறைக்கு வரும் அப்பாவின் காதலியாக அவளிருப்பதை உணரவில்லை அவன். உள்மாடிக்கு ஏறிப் போகிற படிகளில் அமர்ந்து இருட்டில் சமைந்திருக்கிறாள். 

நிறங்கள் ஏதும் கைக்கு வரவில்லை. 'சீலே'யிடம் ஈர்க்கப்பட்ட அசைவுகள் அவனைக் கவிழ்த்தும் பொழுது கேன்வாஸிலிருந்து வெளியேறினான். உருவங்களை அகற்ற முடியவில்லை. உருவற்ற கேன்வாஸில் அமைந்திருக்கும் ஓவியத்தைத் தொடுவதற்கு முன் வரையத் தொடங்குகிறான். நிறங்களை உறுப்புகள் இயக்கமாக ஈர்த்துக்கொள்ளாத வரை நரம்புகள் உருவப்பட்ட நடுக்கத்தில் செயல் இழந்த கை விரல்கள் பச்சை நிறம் பூசுவதற்குள் வரையப்படாத ஓவியம் கேன்வாஸில் இருக்கிறது. பருத்தித் துணி மிகை உற்பத்தியான மில்லில் அப்பாவின் கை சுரணையற்று இயங்கிக்கொண்டிருந்தது. 

ஸ்மரணை இழந்தபோது அவனும் ஓவியத்தில் இருந்து வீழ்ந்திருந்தான். சேன்வாஸால் சுற்றப்பட்ட அப்பாவின் கை நசுங்கி ரத்த நாளங்களில் உறைந்த ரத்தம் திடீர் என்று ஓடத் தொடங்கிய கணம் வரையப்படாத ஓவியம் அவனைக் கடந்து செல்கிறது. அறையை விட்டு வெளியேற முடியவில்லை . 

பச்சை நரசிங்கத்தின் வெடிப்பில் இருந்து ஒரு கணம் தோன்ற அதனுள் அகப்படாத கரும்பச்சை அகம் நீர்ப்பாசி கடல் நிற உடலிகள் சுவர் ஓட்டிப் பாசைத் தாவரங்களில் இருந்து எழுந்த சிங்க உருவம் அது. எதிலிருந்தும் காணாத பாசை நிறம் வரையப்படாத ஓவியத்தில் கீழே பேலட்டில் நிறங்களின் நடனம் ஒன்றைக் கரைத்து இன்னொன்றாய் மாறும் வெண்ணிற ஆவி நிறங்களை விரட்டும் தூரத்தில் எதுவும் வரையப்படவில்லை. பச்சை ஆங்காரம் செதில் மணலாய் பேய்மை உருக்கொண்டு அண்ணாந்து பார்க்க வெளிர் பசும் அதிமிருகம் கூந்தலில் மறைந்திருக்கும் தேவதையை நிர்வாணி வரைந்து கொண்டிருந்தான். செந்நிற நிர்வாணம் செடிகள் அடர்ந்து பௌத்திரத்தின் முன் கீறலில் வெளிவந்த பச்சை அரவுகள் மேல் நழுவி ஏறி கருநிறத்தில் உச்சி வகிட்டைப் பிளந்து வேற்று கிரகத்துக்குச் செல்லும் வழி. 

பாசி ஒளிர் பூனை சிரிக்கவில்லை வரையப்படாததை கேன்வாஸில் இருக்கிறார்கள். விரல்களைப் பற்றி இருந்த தூரிகை நுனியில் அணில் ஒன்று சீலைப் பதுமை உடலில் கனியைக் கரும்பும் கணம் தவற விட்டவன் வரைந்துகொண்டு இருக்கிறான். ஒரு மரக்கிளை முறிந்த வேகத்தில் அப்பாவின் கை பச்சையாகி நிறங்களைக் கக்கும் போது உள்ளே தவழ்ந்து கொண்டிருந்தான். அவனது முடிவும் அங்கு இருந்தது. வரைவதை நிறுத்திக்கொண்ட பின் எல்லாம் இருண்டு வர ஒரு புள்ளி வெளிச்சத்தில் உருவங்கள் அற்ற கேன்வாஸில் அது நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்ப்பான். 

நிறம் அற்ற ஒன்று வெளிறிய முளைப்பாரிப் பசுமையில் ஒலியுடன் அந்த நிறம் அற்ற ஒன்று மணல் வடிவம் என்பதைக் கையை விட்டுக் கடந்து கொண்டு இருப்பதை உணர்கிறான். இயக்கம் இழந்த அவனது ஒரு கை முழுவதும் மணல் ஆக மெதுவாய் அலையும் சிறகுகளைக் கொண்டு இருப்பதை ஜன்னலில் பார்த்தான். ஒரு சிறகில் இருந்து மறு சிறகு தோன்றுவதற்குள் வரையப்படாத ஓவியம் இருக்கிறது. புரியாத வளைவுகள் துக்கத்தின் இமை மடிப்புகள் அரவுகளின் மூச்சில் அசையும் வளைவின் பார்வை கொண்ட விலங்கின் துக்கம் கருப்பு மை இருபாசியாய் வெண்கலச் சிலையின் விழிகளைத் திறக்க பேலட்டில் நிறம் பகிரும் விழிச்சுடரில் மணலாகவும் அலையலையாய் மடிந்து வருவது யார். 

காற்றுக்குள் பச்சை விநோத மிருகம் கேன்வாஸைப் பிளந்து இறங்கியது. வயலட் பூ ஒன்று அப்பாவின் கை பட்டு நடுங்குகிறது. அப்பாவின் விரல்களுக்கிடையில் நடுங்கும் சிகரெட் சுற்றிப் பரவிய புகை அரவினால் சுற்றப்பட்ட அப்பாவின் உடல். 

பஞ்சு மில்லில் திணிக்கப்பட்டு அப்பாவின் கை வெண்ணிற இழைகளாய் எங்கே செல்கிறது. அந்தி மயங்கிவரும் சாயந்திரத்தில் அவ்விழைகள் மறைகின்றன. அவர் விரல்களில் உள்ள வெளிச்சம் இழைகளைப் பார்த்துவிடும் நூல் அதிர்வில் ஒரு கேன்வாஸை நெய்துகொண்டு இருந்த கணம் அந்த மிருகம் தன்னை வரைந்து கொண்டதும் கேன்வாஸை அப்பாவின் உடம்பில் இருந்து உரித்துக்கொண்டிருந்தான். அவர் மீதே வரையுமாறு சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். அப்பாவின் உடம்பில் ஒரு பருத்தித் துணி எம்போரியமே கட்டப்பட்டிருந்தது. உரிக்கப்பட்ட தந்தையின் உடலைப் பவளப்பூச்சிகள் குடைந்து அவன் விரல்களைச் சுற்றிக்கெயாள சீல் மீன்களின் நச்சுப்பைகளில் பவளநிறத்தை வெட்டி முகம் பூசிய காதலி அவன் நிர்வாணத்தில் மறைகிறாள். அவள் கூந்தலுடன் தேரிமணலைப் பூசுகிறான். மணல் மகுடியில் மேடுகள் அவள் உடலாக இயக்கம் கொள்ள கருப்பும் செந்நிறத்தில் புகுந்து உரசும் மணல் நாடகம். 

கந்தலாக்கப்பட்ட வயலட் கோட் மறுபக்கம் இல்லாதது. இன்னொரு பக்கம் நிர்வாண ஒவியன் வரையப்படாததின் மீது வேப்பங்குச்சியால் தொடும்போது காணாமல் போன இலைகள் கேன்வாஸில் உதிர்ந்ததும் பழங்குடிப் பெண்ணின் கண்வடிவம் பெற்றன வேம்பின் இலைகள். 

பசுமைச்சாறு கசிய நாக்கால் வளைத்து உதடுகளை நெளித்து மெல்லும் ரஸத்தை வரையப்படாத சிலையில் சக்கிப் பூசுகிறாள். நாக்கில் காதர் காக்கும் பரப்பில் வரையப்படாத சித்திரத்தில் சடங்கியல் கோடுகளை சுவரில் விடுகிறாள் மழைத் திவலைகள் வடுக்களாய், அவள் கோடுகளில் இறங்கி பற்றிவிடும். மண் சீலையெங்கும் நாக்கால் நக்கிச் சுடரும் பதுமையில் மந்திரிக்கப்பட்ட நாயின் பிலாக்கணம். இரவு வருகிறது குலவை ஒலி. வட்டம் உருள்கிற தீ வளையம். காலால் மிதித்தழித்த கட்டங்களுக்குள் கரை உடைந்த கிளித்தட்டில் ஒடும் பாடல், சலங்கைகள் ஒலிக்க தூக்கிய கோணி சுற்றும் உருவங்களின் சாயல் வெளிச்சம் பட்டு எழுகின்றன. மெல்ல காற்று ஊத களிமண் பூசிய படுதாவில் சுண்ணாம்பால் வரைந்த ஆதிமுகங்கள். 

மறுபக்கம் இல்லாத அப்பாவின் கோட்டில் நிர்வாண ஓவியன் பயந்துகொண்டு இருந்ததை நிறுத்தினான். வயலட் பரப்பில் கரப்பான் பூச்சிகளின் சந்திப்பு தேனீர் பருகும் சடங்கு அறை மூலைகளில் அங்கும் இங்கும் பதுங்கியுள்ள குட்டிக் கதைகளாக இவை ஊர்ந்து வரும். கரப்பான் பூச்சியின் நிழல் உள்ள அறையில் செல்வம் கூடிவரும் என்பது முதிய வாக்கு அவை சேன்வாஸில் பரவிய மீசையை அசைத்து வெட்டும் உருவம் சித்திரமாகி வரும். அதற்கு அடிமைப்பட்ட வீடுகளில் இருட்டும் நிலா வெளிச்சமும் அபூர்வமானவை. ஓட்டடுக்கு வீடுகளாய் இருந்து விட்டால் குழந்தைகள் அஞ்சினாலும் மிக முதிய கனவை அடைவார்கள். 

கரப்பான் பூச்சி வருவது ஓவியத்தில் தோன்றிவிடும். அதன் ஈச்சம்பழ நிறமும் இருட்டும் அவ்வீட்டை தனிமையில் ஆழ்த்துகின்றன. அடுப்படியில் அவன் பதுக்கி வைத்த ஆரம்பகால ஆல்பத்தை அம்மா சொல்லியும் கேட்காமல் கரப்பான் பூச்சி இருப்புக்கும் சந்ததிகளுக்கும் விட்டுவைத்தான். 

மின்னல் பொழுதில் இப்பூச்சியைக் கண்ட ஓவியம் அங்கு படிகிறது ஒரு கணமாக வெகுநேரம் பதுங்கியுள்ள மின்னல் அடியில் வரையப்படாத ஓவியம்தான் தூரிகை. காலம் ஊடுருவி நிறங்களை மாற்றும் பாதையில் ஓவியனின் மண்சீலைப் பதுமைகளின் நகரம் சிதைந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு வீடாகக் கரப்பான் பூச்சியாகத் தப்பிச் செல்கிறான். தற்கொலை செய்துகொண்டவனின் அறையின் மூலைகளில் களிம்பு டப்பிகள், சைபால், தூக்க மாத்திரைகள், தைல வர்ண ட்யூப்கள் நெளிந்து பிதுங்கி சுவர்களில் கசிந்து கொண்டிருந்த பரப்பில் கரப்பானின் கால்கள் வரைந்த சித்திரத்தினை இவன் பூர்த்தி செய்கிறான். 

வெப்பத்தில் பதுங்கி வாடிக்கொண்டிருந்த கோடை காலத்தில் தவித்து நோயின் இருட்டுப் படிந்த ஓவியம் அவன் உடலிலிருந்து உரிக்கப்பட்டு இருந்தது. வட்டமும் நீளமும் வேறு உறுப்புகளுமாகத் திரிந்துகொண்டிருக்கும் வரையப்படாத கேன்வாஸில் அவன் அறையில் இருப்பதில் மறைவதற்கான கணம் அவன் விரல்கள் இயங்கிக்கொண்டிருப்பதில் சாவின் நிழல் படாத ஓவியம் அவன் என்பதில் சந்தேகம் இல்லை | 

ஆனால் அவன் மதுக்கோப்பை அடியில் விஷம் தங்கியிருந்தது. அதைப் பருகாமலே கேன்வாசில் நகர்ந்த நிறத்தில், விஷம் பருகியவனின் உருவத்தை வரைந்து விட்டான். உடல் நீலம் பாரித்து விழிகள் சொருகிவிட்டன. கழுத்தின் அடியில் கயிறு பட்ட இடம் மெல்லிய தொலி உரிந்து தானே நழுவி அலையாக சுற்றி துணிச் சிற்பம் எனவும் அவன் இல்லாதபொழுது அறைக்கு வருகிற இன்னொரு அவனாகத் துணிச்சிற்பம் திரித்துக்கொண்டு இருந்தது. 

துணிச்சிற்பம் கால ஓட்டத்தில் பெயர் அற்றவனாகிவிடுகிறது. உப்பு விடுதியில் இருந்த அம்மாவைப் பார்க்க பெயரற்றவன் வருகிறான். அவள் விரல்களால் தழுவும் போது வடிவம் அடைந்த ஒளி வருடங்கள் சரியும் சிலையாகிவிடுகிறான். 

அவனுக்கு அடியில் புதைந்து கொண்டிருக்கும் நகரத்தில் பாலிய பருவத்தை உரித்துக் கொண்ட ஸ்நேகிதி சாரை வயலட் சிறுத்தை மீது வருகிறாள். நிறங்களின் மூலமே காமத்தை நுகர்பவன். அவன் துணிச்சிற்பம் செல்லும் இடங்களுக்கு வந்து சேருகிறாள். 

மரச்சட்டகங்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தைல ஓவியங்களைச் சமையல் அறையில் வைத்து அவளையும் பூட்டியிருந்தான். அவளுக்குத் தெரியாமல் நகரத்தில் இருந்த மற்ற அறைகளில் அவளது சிநேகிதனை மறைத்து இருந்தான். கேன்வாஸில் வரையப்படாதது அவள் சினேகிதனிடம் அந்தரங்கம் கொள்வதில் இச்சை கொள்கிறான். மூவருக்குமான நகர்வில் மண் சீலையை உடம்பில் சுற்றி சேத்தாண்டி வேடமிட்டு களிமண் ஓவியமாகிறார்கள் ஒரு படைப்பில். அவள் அவன் இவன் விரல்கள் முக்கூட்டாய் தங்கள் மீதே கதையும் கண்ணுக்குள் வட்டமாகச் செல்லும் சினேகிதியும் வேறு காலத்தில் தோன்றி மறை கிறார்கள் இருப்பை விட்டு. வரையப்படாத சிநேகிதனின் வெளி நிறமற்றதாகிவிடும். வந்துவிடுகிறாள் அவன் சாயையில் நகரும் பூச்சியில் ஸ்பரிசப்படும் மண்சீலையில் பெண்மையின் தேகவெளி. 

வரையப்படாதவனின் வெற்றிடத்தில் இருவர் தோளிலும் சாய்ந்திருக்கும் வெளியைத் தொடும் போது குருதிக்குள் நகரும் வயலட் சிறுத்தையில் சுரோணிதக் கல் பொருந்திய பிறப்பிடத்தில் சூல் கொண்ட சிசு மறைந்திருக்கிறது. . 

ஸ்திரீபாவம் கண்ணாடியில் இருப்பதில் எதிர்நிற்கிறான். இவன் சருமத்துக்குள் வளைந்த ஆடிகள் குறுக்கிட்டுச் சேர அவள் அவன் உரு படிகிறது. இருவர் இல்லாமல் மூவராகும் உரையாடல் கோப்பைகளில் 2 தநீர் ஆவி பறக்க ஒரு கோப்பை மூவர் 2 உதடுகளில் சென்று வெவ்வேறு ஒலிகளில் ருசிக்கிறார்கள். இச்சையின் ஜன்னல் குடும்பத்தின் வடிவத்திலிருந்து வெளியில் உளவு பார்க்கும் கண்களை மறைத்தவாறு பெயர்ந்து உள்ளே வருகிறது. 

இச்சையின் சருகிலை உதிர்கிறது மெல்லப் பறந்து ஜன்னலில் நுழைந்ததும் கண்ணாடித் தளத்தில் மிதக்கிறது. வயலட் சிறுத்தையின் சுரோணிதக் கல்லை அவ்விலை மூடி ஒளிர்கிறது யுகங்களில் பட்டு. பலபக்க யோனியுடன் மரமாகிவிடும் அவனுக்குள் உரிக்கப்பட்டிருந்த தைல ஓவியம் பார்வையாளரின் விழிகளால் கடத்திச் செல்லப்பட்டிருக்கும் 

சயன அறையில் உள்ள இரவுகள் கலவி கொள்ளும் நாய்களின் அசைவில் அதிரும் கண் விதைகளின் பிரவாகம். நாய்களின் இச்சாவெளியைப் பழத்தோட்டமாக வரைந்தவாறு இருந்த மண்சீலையில் அவ்வூர் இருக்கிறது. நாய் மூக்கால் வீடுகளின் பின்னிரவுத் தெரு ஊளை படிகிறது. காற்றில் சுருங்கி மறைந்த ஆவிகளின் வெளுத்த விரல்கள்  நாயின் இச்சையில் நுழைகின்றது. கையும் பச்சையாகிவிடும் பாறைகள் சங்கிலித் தொடராய்க் கருத்து வளைத்துக்கொள்ள தப்பிக்க முடியாத கனவு. 

பாறைகளில் மோதி அண்ணாந்த ஊளைகளில் குகையை எட்டுகிறாள். வெற்றுவெளி ஊளைகளால் புதையுண்ட ஊர் இவ்விரவின் சாயைகளோடு கடந்து கொண்டிருக்கிறது. எல்லா நாளையும் நாட்களின் தெருவில் திரிந்துகொண்டிருக்கும் துணிச்சிற்பத்தில் வரையப்படாதவர்களும் வேசைகளும் குற்றவாளிகளும் பட்சிகளின் கிளை மயக்கம் கொண்டார்கள். அலகுகளை சிறகுள் புதைத்து எரிமலையின் உள்பிளந்த உருக்கள் பல்வேறு நான்களாய்ச் சிதறுகின்றன. 

யார் எவர் என அறிய முடியாத புதிரில் துணிச்சிற்பம் தெருவைக் கடக்கிறது. நாய்கள் அதில் சுருண்டுகொள்ள வட்டமான பச்சை வரையாமல் இருப்பது

வரைவது கோணமாணியால் புள்ளி வைத்த காகிதத்தில் நாய்கள் அறிந்த பச்சை வருவதில்லை அந்த நாடகத் துணிக்குள் மணலாக ஓடும் அலையில் வட்டமிடும் நாய் ஒன்று சாவைப் பின்தொடர்ந்து வருகிறது. 'டெகாசின் கை நகரும் பாதையில் கேன்வாஸில் நாய் ஓடி பச்சையாய் வட்டமிடும். நகர்வில் பச்சை உள் அடுக்கி அரும்பும் நிற மடிப்புகள். பச்சையத்தின் தாவர வட்டமாகக் கணிதம் பெற்ற நாய் மோப்பத்தில் அன்று அறையில் மறைந்தவனின் உடல் அருகில் ஒட்டிப் படர்ந்த நாயின் சாயல். அதன் கண்கள் அருந்திய பளுத்த சிகப்பு ஊளையில் சுற்றப்பட்ட வரையப்படாத அவன் உருவம் இல்லாமல் இருக்கிறது. அறையை விட்டுத்தானே திறந்து நகர் மேல் மிதக்கும் தலைகீழ் கண்ணாடிதான் துணிச்சிற்பம். வரையப்படாத சிறு தவறு தூரிகையில் துணிச்சிற்பம் ஆகிறது. ஒருத்தியின் சாயலை இவர்கள் இருவரும் அடைந்ததில் நிறங்களை மற்றவன், வேறு சிலர், இன்னொரு இருப்பு என அறிந்து கொள்கிறான். நனவிலியில் இறங்கிய கோடு சுவர்களைக் கடந்து வர்ணச் சாற்றில் புரண்டு பைத்திய வேடமிட்டு கேன்வாஸில் திரியும் விரல்களைக் கரைத்திருக்கும். 

அவன் முன் இவள் அவனைக் காண்பதில் நறுக்கப்பட்ட மூன்று தனிமையும் ஒரு துணிச்சிற்பம். அவன் மறைந்தபின் இவளும் இவனும் சந்திக்கவில்லை . பெயர் சுற்ற உருவில் நாடகப் படுதா வரைகிறார்கள். இவனும் இவளும் துணியில் இருந்து இச்சையின் கனியைப் பறிப்பதற்குள் அதே சீலையால் தலைகளை மூடி முத்தம் இடுகிறார்கள். இச்சை வெளியாக மறைந்தவன் செதுக்கப்படுகிறான். 

இறுதியில் நாய்ப் பல்லை அடைந்த விளம்பரகர்த்தா ரயில் வருவதற்கான பச்சைக் கொடியாக மாறினான். 

அவன் அறைகள், கடந்து செல்லும் ரயில் பெட்டியாக இருந்தது. இறந்தவனின் கற்பித நகருக்குச் செல்லும் கரி எஞ்சின் தனுஷ்கோடி ஓசையில் தூரத்தை அழைத்தது. பனைநார் கோரைகளால் நெய்யப்பட்ட கோணியுருவங்களைத் துணித் துண்டு கந்தல்களுமாய் வெட்டித் தைத்த புழுதிமண் சிலைகளை வடித்து வந்தான். சிருஷ்டி முடிந்ததும் அவற்றை உருச்சிதைப்பதில் ஈடுபட்ட கணத்தில் நிறங்களின் இழைகள் தைலமாய் ஊடுருவுகின்றன. கனவும் நனவிலியும் குழம்பிய விரல்கள். - 

சர்ப்பம் எழும்பி வெளியேறுவதைப் போல் சீலைப்பதுமை வெளிச்செல்கிறாள். அவளதின் வலிமையெல்லாம் சிருஷ்டியில் இருக்கிறது. அவன் மட்டுமே இளமை உப்பின் அதீத உணர்வெழுச்சிக்கு ஆளானவள். அதீத உணர்ச்சி கொள்வது உப்பின் தொன்மம் காமத்தின் தனி முழுமை இருளின் ஏடு அதில் இடது பக்கமாக உப்பைத் தடவினால் கீறப்பட்ட பாஷையில் சீதள ஓலைச் சுவடிகள் திறக்கின்றன. சாரையின் ஓட்டம் கொள்ளும் கயிற்றரவைப் புனைந்திருந்தாள் சுற்றிப் படர்ந்த உப்பின் சுவர்க்கத்தில் பனிஇரவாகக் கதைகள் விடுதி கொள்கின்றன. போய்ச்சேர உயிரை மறந்து காடுகளில் அலைந்தவர்கள் நெருங்குகிறார்கள். கானல் வெயிலெனினும் மயக்கமான சூரியனிடம் உப்புப்பாறை தன் உலர்தன்மையை இழந்து வருவதைப் போலத்தான் அதிலிருந்த விடுதி உதிர் கொள்ளும் காரைச் சுவர்களுடன் சதா நொறுங்கி வரும். சுவர்களின் நீரூற்றாகத் தாரைகள் உருவங்களை வரைந்திருந்தன. வெப்பத்தைக் கக்கும் செங்குழவிகள் ராகத்தில் மிதக்கின்றன மதியத்தில் பேய்களின் உப்பைத் திருடிவந்த ரஸ்கோல்நிகாவ் அறைக்குள் நேச மானவை எனினும் மேஜை மீதுள்ள கனிகள் சுவைக்க சாவும் சாம்பலுமாய் இருக்கின்றன. ரஸ்கோல்நிகாவின் வலது தோளில் உப்பைத் தடவியவன் கிழக் குமாஸ்தாவின் முதல் மனைவியின் மகள் ஸோனியாதான். எனவே அவள் உப்புநிற விடுதிக்குள் அழைத்ததும் எளிதில் பிடிப்பட்டுவிடுகிறான் மனசாட்சியிடம். சீலைப்பதுமை கீறல் விடும் போது ஸோனியா உப்பை அதன் மீதும் பூசினாள். பதுமையின் சிருஷ்டியில், மனசாட்சி எனும் கதாபாத்திரத் தொந்தரவுகள் இருப்பதில்லை. மனித நாகரீகங்களின் மனசாட்சியே சீலைப்பதுமை எனும் கவித்துவ சிருஷ்டி, சீரழிக்கப்பட்ட தேவதை விரல்களின் சிருஷ்டிகரம் 

செடிகளின் அடியில் பதுங்கிய கண்கள், கருங்கோடுகளில் செல்லும் தனுஷ்கோடி ரயில் தொடரில் நெளிந்து வரும் அறைகளுடன் இம்மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் எதிர் திசையில் கடந்தவாறு இவர்களைச் சுற்றி மற்ற காலியிடங்கள் மயக்கும் பிரிவாய் தனுஷ்கோடி ரயில் பாம்பன் பாலத்தைக் கடக்கிறது. 

இவர்கள் இல்லாமலும் ரயில் ஊர்ந்து எழும்பிய காலை மறையும் பனிமூட்டத்தில் கலைந்துள்ள அறைகள் ஒவ்வொரு கடலாய்க் கடந்து பாக் ஜலசந்தியில் நகரும். பிரிந்த பின் தீவுகளைக் கடக்கும் எதிரொலி. வறண்ட உப்புத் தரவையில் கரையும் வெயில், பால்ய பருவம் ஒன்றில் சிவந்திருந்த ரயில் சர்ப்பம் கிளம்பி நெளியும் புதிர்நிழல் கூட்டத்தில் அவர்களின்றிச் செல்கிறது. வெளிறிய ஜன்னல் மூடிகள் உயருகின்றன. உள்ளே பலரும், அதிசய இருப்பில் அவனைத் தெரியாத பலரும் தெரிந்த அசைவில் நோக்கிய அவனைத் தொடுவதற்காக ரயிலும் கிட்டத்தில் அதிர வரும். அதன் புகை வாடை சிமிழ்களில் மண்டும் புகை மேல் கண்ணாடி உருவங்கள். கரி அடைந்த சில்லின் நடுவில் ஹெட்லைட் மயங்கிய வெளிச்சம் எதிரில் வரும் இருட்டை ஊடறுத்த பலகை அடைத்த ரயில் பெட்டிகள். கரப்பான் பூச்சிகள் நடமாடும் குமட்டும் கக்கூஸ் ஈயநிற வாஷ்பேசினும் கண்ணாடியும் அந்தரத்தில் அசையப் பயணத்தை பார்க்கிறான். அந்த உப்பு அறைகள் எங்கோ தூரப் புள்ளிகளை கடக்கின்றன. காலத்தைக் கடப்பதில்லை ரயில் பெட்டிகள். சுருங்கிக்கொண்டே பின்னால் ஒரு மெல்லிய கருங்கோடு மட்டும் ரயில் ஆகிறது. காலம் என்பது இல்லையாகும். அதில் அவன் இவள் அவனும் இல்லாமல் போகிய அறைகள். சிறு ஸ்டேஷனில் மூச்சு விடுகிறது. அம்மரங்களைக் கடக்கும்போது கரி எஞ்சினில் ஒரு வித அமானுஷ்ய ஓசை. மை வரையை அழைக்கிறதா. திடும் திடும் மென அழைக்கும் பாறைகளில் அழுகிறான். வளர்ந்த ரயில் கற்றாலைகள், அவற்றின் பச்சையும் சாம்பல் முட்களும் குத்திக் கிழித்த பயணவெளி சூன்யத்தில் இருக்கிறது. அதன் தத்தளிப்பு, தனிமை. அவன் போன அதில் பிறகு போகாமலே அந்தச் சூன்யத்தில் இருக்கிறான். அந்த ரயில் அறையில் அம்மாவும் இவர்களும் பல அறைகள் கொண்ட ரயிலில் ஓடும் உப்புவிடுதியின் கதவுகள் எல்லாம் அடைபட்டபின் அவன் இராமேஸ்வரக் காகத்தின் குரலைக் கேட்டு அழத் தொடங்கினான். சற்றி வரும் மரங்களில் கிளைகள் இவர்களைத் தொடுவதில் பொழுதும் அசையும் ரயில் பெட்டியில் நிறங்களைப் பூசுகிறார்கள். ஓடும் ஜன்னல்கள் நிறங்களாகச் சிதறும் பாம்பன் தூக்கு பாலம் பயணித்த இருட்டு அமானுஷ்யம், மிதக்கும் சூன்யம், இருப்பு எனக் குயில்களின் இருட்டைத் துளைத்து கங்குகள் பறக்கும் கரி எஞ்சின். அவர்கள் இல்லாத உரையாடல். அசையும் ரயில் பெட்டியில் பெயர் அற்றவன் தனுஷ்கோடியில் இறங்குகிறான். கால் தடுக்கிய கூழாங்கல்லில் சுருளும் நிறக்கோளம். மணல் உதிர அவன் விரல்களைக் கோர்க்க மணலில் படைக்கும் வடிவம். 

பதினாறு தீவுகளைப் பெற்றவனின் தடம் பதிகிறது. சிதறிய கூழாங்கல் ஓடையில் நெறுநெறுந்த கால்கள். வர்ணக் கற்களின் சுழற்சி நடுவில் உடைகளைக் களைகிறான். கற்களின் ஊளை உருவற்ற நாய்களின் கபாலம் எரிந்துகொண்டிருந்த ஜுவாலையில் சிலைகள் பரவின. பெயரற்றவனின் ரயில் நழுவி வந்து தனுஷ்கோடியில் நிற்கிறது. அதன் மூச்சில் சுவாசிக்கிறான்.
'...
.

No comments:

Post a Comment