தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, May 31, 2020

2.கதை மொழியின் வரகுக் கதிரடுக்கு - கோணங்கி

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி
 
2.கதை மொழியின் வரகுக் கதிரடுக்கு
'பெரிய தன் ஆவி பெரியது' என ஆருகதர் முதுமொழியில் ஓடும் குருதிமொழி உடல் முழுவதும் பரவிநிற்க மையத்தைவிட்டு இடமற்று ஓடும் ஆவி தொல்காப் பியன் உடல்மொழியில் ஆறுவகை உயிரின் வெட்பதட்ப வன்மென் உடம்பின் பல்லுயிர் புல்லும் மரனும் நத்தையும் முரளும் சிதலும் எறும்பும் நண்டும் தும்பியும் மாவும் புள்ளும் உடம்பில் வரைந்த தொல்காப்பியனாய் அறிய நேர்ந்த புராதனக் கதை சொல்லியே கல்லில் பதுங்கிய சமணபூதமாய் தன் உடல்பேழையில் தாவரங் களின் பாதரஸ மொழி மண்டலத்தை அடுக்கி பட்டினிக்குரத்தி கண்ட கிணறும் பெண்பள்ளியில் ஏடுகள் வாஸிக்க மதுரை நகரத்து எழுத்தாணிக்காரத் தெருவில் கீறிய வரிகளைத்தேடி நடந்தான் புராதனக் கதைசொல்லி. மையும் காகிதமும் அறுத்து அணிந்துகொண்ட முகமூடிகளுடன் கதைக்காரர்கள் அச்சு எந்திரங்களின் முன் வரிசையாய்ச் சென்று உடம்பில் வரைந்த ஆதி எழுத்துக்களை இழந்தார்கள். பனையோலைச் சந்துகளில் ஆந்தை இறகு பூனையிடம் கேட்டு எழுதிவந்த நிகண்டுகள் புரண்டு ஒடிந்த மொழிக்கு நரம்புகள் கோர்த்து ஆனை மலைப் பிலம் விலகி கவுந்தி எனும் தவக்குரத்தி அழைத்து வந்த கோவலன் ஆவி யோடு உரையாடலைத் தொடங்கியிருந்தான் கதை சொல்லி. கிளாஸ்காரத் தெருவில் சிம்ளிக்குள் இன்று பதுங்கிய சதுக்கபூதம் எளிய வீட்டு மண் சுவற்றில் சரித்தடமாய்ப் பதிந்து சிம்ளி விளக்கில் ஆடி குழந்தையுடன் பேசியது. தன் வயிற்றின் குடல்வழி மடிப்பில் ஓடத்துவங்கிய எந்திர ஆமைகளின் வாகன மிருகங்களின் டிராபிக் விதிகளை மீறிய கதைகளில் கதாவசீகரம் இழந்ததால் வேற்றுக் கிரகத் தாவரங்கள் வளையும் பாதையில் காலத்தைத் திருகி நட்சத்திரங் களின் மொழியில் கதைபோடும் குழந்தைகளிடம் தோற்றுப்போனது சதுக்க பூதம். ஏனோ சுண்ணாம்புக் காரைச் சுவரில் குழந்தைகள் நினைவுடன் கரித்தடத்தில் பதிந்து கூடவே வரும் சதுக்கபூதமே கதை சொல்லியாக இருக்கக்கூடும். சாதாரண கரித்தடத்தில் எத்தனையோ உலர்ந்த உருவங்களின் ரூபத்தை மௌனமாகச் சொல்லிக் கொண்டிருந்த "இருட்டு" கதையாக மாறியிருந்தது. வராலிக்கொடி முடிச்சுப்போல துருத்திய மூட்டும் எலும்புகளும் கல்லில் அண்ணாந்து கிடந்த நாகமலைச் சமணர் கையில் ஏந்திய வரகுக்கதிர் அடுக்கைக் கொண்டு இசை இலக்கணம் வகுக்க ஏழ்பெரும் பாலையினின்றும் நூற்றி மூன்று பண்கள் தோன்ற சிலம்பின் அரங்கேற்றுக் காதை உரைப்ப பட்டினித் தவத்தில் நீண்ட உடல்மீது தாவர அகராதி முளைத்து காற்றின் குரல் அடுக்கில் தமிழ் ஒலிப்ப நரம்புகள் ஓடி மூச்சினை ஆட்கொண்ட கல்மூங்கில் நாசியில் மிருக மூர்க்க மூச்சில் எரியும் இசைக்கு யாழ் அரக்கர் ராவணயாழின் பூதகண சுரவரிசை ஐந்திணைகளில்


14
மறைந்த மணிமேகலையின் அட்சயப்பேழையில் இசை எண்கள் புரண்டுவர
முற்பிறப்பு எலும்புகளின் செந்நிறத்தில் திணைப்பூவில் ஆயிரம் நரம்புத் தொகை கொண்ட பேரியாழ் அதிர்ந்து கௌதமரின் விரிகதிர்கள் நாண எரிதழல் கொள்மேனி புலப்பட தொல்படிவக் காளான் குடையின் கீழ் கற்பவளமாய் சமணர் கல்படுக்கையில் கீறும் ஆயிரம் உதிர்நரம்பு இசைபடிய உடல்மொழி
மலையின் சாயலில் சிறுத்தையின் உதயகால வெளிர்பிரதேசத்தில் நெருஞ்சியில் மலரும் அருகரின் மொழித்தேகம் பிஞ்சும் பூவுமாய் தும்பிகள் இறகு சிவக்க நில ஆவரைகளின் காரநெடியும் சூரியனின் குளிர்ந்த வட்டத்தில் அம்மண ரூபங்களில் பறவைகளும் பூச்சிகளும் வண்டுகளும் மென்துகள்களும் சுழன்று தொலைவில் வட்டமிட்டு வெளிர் மஞ்சள் சூரியனில் நகங்களைத் தீட்டும் மிருகங்களின் ஈர மூச்சு சமணர் அம்மண உடலில் பட்டு கல் படுக்கையில் தாவர மிருக மனித மொழி உருமாறும் தொல்காப்பியத் திணைப்பூவில் நத்தையின் உணர்கொம்புகள் தேடித் தேடி ஊர்ந்து செல்ல சீவிச்சீவிக் கிடந்த குகைப் படுக்கையில் சுருள் நத்தைகள் சமணர் உடல்மீது நகர்ந்து நுரை எச்சிலால் ஸ்பரிசித்த மெலிவுக்கும் மெலிவான உடல் உயிர் கொண்ட சமணரின் கட்புலனாகா லிபியும் கண்களுமே இலக்கியம்.
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் பா இன்றி எழுந்த கிளவியானும் பொருள் மரபு இல்லாப் பொய்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் உரைவகை நடையே நான்கு என மொழிப.
கேலிச்சித்திரம், கதாமந்திரம், புனைவு, மறைபொருள், உவமான, உவமேயமென வகுத்த ஈராயிரம் வருஷங்களுக்குமுன் உரைநடைக்கும் இலக்கணம் கண்ட தமிழ் வனாந்திர மலைப் பூச்சியாய் மறைந்திருக்கும் வேடர் மண்கூரை வீடுகளின் முற்றத்தில் அடுக்கிய பாறைகளில் அமர்ந்து கூத்துவாசல் ஏறி ஆடும் கோவலன் சுதையில் இளங்கோ அடிகள் எனும் சமணன் செதில் உடம்பில் கீறிய சிலப்பதிகார வரைதோலில் கடல் கொண்ட புகாரும் தன் விதிர்த்த முலைக்காம்பில் நெருப்பு உமிழ இவ்வூர் தீவூட்டிய ஒருமகள் சிலம்பில் வென்று எரியும் குலவை ஒலி சுழன்று முத்துப் பரல் களாய் சுழல சிலம்பில் பதுங்கிய மகளிர் குலவை ஒலி கதைமரபு கண்ட தமிழின் கதைப்பாடல் ஆதிகுடித் தனிமொழியில் ஆயிரம் வேடர் வில் அதிரப்பாயும் அம்புகளின் முன்னோடும் ஒரு ஆயிரம் விலங்கின யோனி பேதங்களில் சுழலும் குலவை ஓசை ஆழக்குமிழ் நெருப்பின் உயிர்ச்சர ஓசை வாய்வழிக் கதைமரபு.
மறைந்த மிருகத்தொலி உறிந்து அதிரும் ஊனின் வெறிமிக்க வாத்தியம் காட்டுப் பகடைகள் முழக்க சுடுவனப்புலால் கடிபடும் ஓசை சிக்கிமுக்கியில் உராய பரவும் தீயில் தவில் விரல்கள் எரிந்து பரபரக்க பேரிகை படகம் இடக்கை உடுக்கை கூத்து மத்தளம் விம்ம திமிலை குடமுழா கணப்பறை துடி பெரும்பறை தோலால் விரிய தொல்காப்பியனின் தோல் சூத்திரத்தில் மொந்தை முரசு கண்விடுதூம்புயென மிக்க நூலோர் விரித்துரைத்தனரே.
பறையன் மகனெனினும் காட்சியுடையான் இறைவன் என உணரற்பாற்று


15
என அருங்கலச் செப்பு நூல்வரை ஆலமரத்து முனியாய் சமணர் கல்எழுத் தாக்கிய தமிழை இருநூறு வருஷ உரைநடைக்காரர்கள் ஆழ்ந்து பற்றாததினால் இரண்டாயிரம் வருஷம் விளைந்த கற்பவளமொழி அகப்படாமல் எதார்த்தத்தை அழுத்தி அழுத்தி அச்சேற்றினார்கள்.
சிலம்பில் உடைந்த இசை அதிகாரத்தை தகர்த்தெழுந்து தமிழின் நவீன கதைக்கு ஒருமுகப்படுத்தாத மையத்தையே வெற்று அச்சாகச் சுற்றிப்படராத மொழி யடுக்கு இனித்தான் உருவாக வேண்டுமோ?
உடல்மேல் செல்லும் உடல்பாதையில் வெண்பாலை மயங்கும் நுண்ணிய இழை களால் நெய்த பிரிவின் மறைமுக நிலப்பரப்பில் ஆண்டாளின் பாசுரம் கீறிய விரலிலிருந்த கிளி பறந்து கூடல் நகர் தடாதகைப் பிராட்டியின் தோளில் அமர்ந்து யாழின் சுரவரிசை கதை சொல்லியாகிய கிளி அலகில் கவ்விய ஒற்றை வரகுக் சுதிரில் மறைந்திருக்க கிளிக்கூட்டு மண்டபத்தில் சங்கப் புலவரெல்லாம் கிளியாக உருமாறி வரகுக் கதிர்கொண்டு தீட்டிய காவியம் எழுந்த தமிழ் கொழு முனை எரிய கம்பனின் வலிய ஏர்மேழி யுகாந்தகாலநெருப்பாய்ப் பிளந்த நிலத் தடியில் கவிபாடும் தாவர ராசியின் நவதானியமெல்லாம் கம்பன் எழுத்தடியில் உருண்டு செல்ல சூரியனோடு எழும் சமண விருட்சங்களின் நிழல் தன் வேரைத்
தொட வெகுகாலம் ஆயிற்று இன்றுவரை. குடைசாய்ந்த தமிழ் உரைநடைக்கு 'வேதாளம் சொன்ன கதை'யிலிருந்து உருவெடுத்த பித்தன் டிராம் வண்டியில் பாரீஸ் கார்னரில் வந்திறங்கிய சிவனுடன் புராணத்தையும் எதார்த்தத்தையும் இரண்டு கப் காப்பியாக கலந்து அருந்திவிட்டு கூட்டிப்போன சிவனோடு வாதாடிய குழந்தையை கடவுள் ஜெயித்ததால் கந்த சாமிப்பிள்ளைவீட்டுக்கு அரிசிமூடை வந்திறங்கியது ரிக்ஷாவில், கூடுவிட்டுக் கூடுபாயும் குழந்தையின் அற்புதவுலகை விட்டு ஆலீஸை வெளியேற்றும் சமூகவியல் படைப்பாக்கி தோல்வி கண்ட பித்தனே அடிசறுக்கிய வழி பலரும் அச்சடித்த தாள் முகமூடியுடன் பின்பற்றலாயினர். ஆனால் 'சாமியாரும் குழந் தையும் சீடையும்' கதையில் பித்தனுக்கு நெல்மணி ஈக்கியாகக் கீறியது குழந்தையின் கண்கள். சீடை தின்றவாறு நதியோடு காலாட்டும் குழந்தையின் கால்காப்பில் சூரியன் ஒளிபடரச் சிரித்தாள். குழந்தையின் பாததூளியை முத்தமிட சூரியனும் தவங்கிடக்கத்தான் வேண்டுமென முடித்தான்
தென்பொதிகை அகத்தியன் தன் பாஷாண மை கொண்டு தீட்டிய செல்லம்மாளின் உருவில் அவள் இறந்து கொண்டிருக்கும் உடலோடு வேறு ஏதோ மயக்க உலகமும் சேர்ந்து கொண்டு சாவின் தடம் கண்ட நாயின் பிலாக்கணமும் நரியின் ஊளையும் குறுக்கிட சாவு அருகில் நகர்ந்த பித்தனின் உரைநடை செல்லம்மாளின் நாடியில் துடித்து குருதியில் படரும் சாவின் இருட்டில் நான் சிறுவயதில் கண்ட நோயாளிப் பெண் எறும்பைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். மயக்கமான கண்களிலிருந்து அந்த எறும்புகள் கல்லில் ஊர்ந்து தப்பிவிடும். கல்லை மயங்க வைக்கவும் அதன் உள்ளே மறையும் எறும்புகள் அவள் ஞாபகங்களை எடுத்துச் சென்று பூமியின் மர்மங்களில் புதைந்த அரளிப்பூவில் மறையும். அவள் மங்கலான பார்வையில் சாவின் பதற்றத்திலிருந்தன கல்தூண்கள். ஞாபகத்தின் சிவப்புப் படிவங்களில் கீறல் வழிய கல்தானே சாவியாகி நிலப்பரப்பில் கிடந்தது. கல் தூண்களின்


16
சங்கேத மொழி, மஞ்சள் அலகு அசைத்த பறவைகளால் பரிமாறப்பட்டு, செடிகள் முன்னுணர்ந்து சொல்ல சிதில ஓடுகள் இலைகளாகி கல்லில் ரத்தநார்கள் ஓடி, எப்போதுமாக உள்ளவற்றைப் பதிவு கொண்டு, காணாமல்போன பெண் களின் வரிகள் கொண்டு, நோயாளிப்பெண்ணின் பேசாத வார்த்தைகளாய்ப் பதிந்திருந்தன கல்லில். 'இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கல்ச்சாவியை' செல்லம்மாளின் சாவு மயக்கத்திலிருந்துதான் எழுத நேர்ந்திருக்கும். நினைவு தோன்றிய காலத்தில் நாங்கள் குடியிருந்த 'நடராஜபுரம் தெருவில்' நோயாளிச் சிறுமியைப் பார்த்தவாறு பள்ளி சென்றேன். கல்மேட்டில் கண் சொருகிய நிலை யில் ஊரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் உருகத் தொடங்கி யிருந்த ஊரின் தோற்றத்தை காரை வீட்டு தூண்களில் அவள் மறைவதை அவள் நிலவின் வெளிவட்டமாக மாறிப் பௌர்ணமியில் வனாந்திரத்தின் மரங்களையும் காற்றையும் சப்தங்களையும் உறைந்த ஊரையும் ஆட்கொள்வதைப் பார்த்திருக் கிறேன் நாகலாபுரம் என்ற என் அம்மா ஊரின் மறைமுகத்தில். செல்லம்மாளுக்கும் நோயாளிப் பெண்ணுக்குமான மயக்கப் பிரதேசத்தை என் அம்மாவின் கண்ணி லிருந்து இங்கே முன்வைக்க விரும்புகிறேன். நாகலாபுரத்தைச் சுற்றிலும் போன வண்டிச் சோட்டின் ஓரம் சரல்ரோட்டில் தான்தோன்றிப் பாதைகளில் நூறு நூறு கர்ப்ப ஸ்திரீகள் கல்லை உருகவைக்கும் வேதனையில் சுமைதாங்கித் தூண்களாக சாவின் பதற்றத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
பாங்கிணத்துப் பெரும்பசிக்குத் தன் பிள்ளைகள் வாரிக்கொடுத்த நல்லதங்காள் பாலேறும் சோளக்கதிர்களில் சிசுக்களை ஒளித்து வைத்து ஈர உடம்போடு வீற்றிருக்கிறாள் இருளைத் துணியாகச் சுற்றி மண்கூரை வீட்டில். கிராம வீதிகளில் மூலை தவறாமல் தானியம் உருண்டோட இறந்தவர்கள் எழுந்துவரும் காற்றில் சீங்குழல் ஊதிவரும் நிர்வாணக் குழந்தைகள் ஏழும் எண்வகைக் கூலம் நடுங்க புல் வரகு திணை சாமை இறுங்கு மூங்கில் நெல்லும் நல்லதங்காள் துயரம் கேட்டு பால்குடிக்கும் சிசுவும் ஓடிவர ஆறாத் துயரத்தில் ஒற்றை வரகுக் கதிருடன் வந்த அர்ச்சுனாபுரத்து வெள்ளையம்மாள் கிழவி வரப்பில் ஓடிவர வளைந்த கதிர்த் தானியங்கள் தரையில் முட்டியழ மஞ்ச நிற இமைதிறந்து கண்பொத்தி அழுதது
நெல்லும்.
பதினாறடிக்கூந்தல் பாங்கிணற்றைச் சூழ்ந்து சுற்றிப் பிள்ளைகளை மறைத் திருக்க அண்ணன் படுகொலைகாரத்தேவன் பாங்கிணற்றை முட்டி அழுத சோகம் - ராவணன் ரணகளத்துக்கு வந்ததைக் கண்ட மாத்திரத்தில் அங்கு பிணங்களை தின்னவந்த பேய்களும் பட்சி ஜாலங்களும் சினேகித்து அழுதன. சில ராவணன் பாதத்தில் வீழ்ந்து சோகத்தில் பீடித்து அழ சில பேய்கள் துன்புற்ற மார்பிலடித்தன. யானைப் பிணங்களுக்குள் பதுங்கியழுதன. வெற்றிவில்லைப் பிடித்தவாறே மகன் இந்திரஜித் கை அறுந்து கிடக்கிறதைக் கண்ணால் கண்டு தலைமேல்கைவைத்து ஊழிக்கால சண்ட மாருதமாகப் பெருமூச்சுவிட்டான். பாண வர்ஷங்களால் மூடப்பட்டிருக்கிற இந்திரஜித் மார்பை ராவணன் கண்ணீ ரால் நிறைத்ததை இந்த உலகில் வேறுயாரும் புத்திர சோகத்தில் இப்படி இருபது கைகளும் அலைப்பட அழுததில்லை. படுகொலைகாரத்தேவனும் காஞ்சிவனத்துப் பெண்களும் பிள்ளைகளும் ஊரே திரண்டு அழுத சோகம் ராவணன் புத்திர


17
சோகத்திற்கு இணையானதை இறந்த பின்னும் நல்லதங்காள் கூந்தல் பதினாறடிக்கு மேலும் வளர்ந்து கொண்டே இருந்ததை பாட்டியின் குரல்வளைக்குள் ஒளிந்து, சொல்லியவாறே வெள்ளையம்மாள் கிழவியாகி நல்லதங்காள் கோவிலைச் சுற்றி வேப்பமுத்து பொறுக்கிக் கொண்டிருந்தான் கதைசொல்லி.
II
முட்டை வடிவ பாங்கிணற்றை கிணற்றடி ஸ்திரீகள் கதையாக ஒரு புனா சிருஷ்டியில் கல்யானை மீது துணி உலர்த்திக் கொண்டிருந்த செண்பா உடம் பெல்லாம் ஊக்குமாட்டி துணி விலகாமல் கிணற்றில் தலைகீழாக விழுந்து மறைகிறாள். வௌவால்கள் பறந்து பறந்து போகாதே செம்பா போகாதே...' என இடைமறிக்க அவள் விழுந்த பின்னும் வாவாவென்று கூப்பிடுகின்றன. எல்லாக் காலத்திலும் வாழ்ந்த அஞ்சனாவதியைத் தேடுவோர் யாருமில்லை. கல்தச்சனின் ஒரே மகளான அஞ்சனாவதி பெரிய பெரிய பாதங்களுடன் பெரிய வீடுகளுக்கு நீர் எடுத்து கல்தொட்டிகளை நிரப்பினாள். அவள் சாயை படர்ந்த 5 அறையின் இருட்டு இன்னும் உயிருடன் இருந்தது. சுவர்க்கருப்பில் அவள் விரல் தடங்களில் அவள் நடுக்கம் இருந்தது. காளியங்கோயில் பொந்துகளில் மறையும் கல் ஆந்தையின் குரலில் அவள் பற்றிய சாவு பயம் தொற்றிக் கொள்ளும். பக்கவாதத்தில் விழுந்துவிட்ட தகப்பனுக்காக நித்தநித்தம் காளியங்கோயிலில் விளக்குச் சரம்போட்டு கிளியஞ்சிட்டி தீபம் ஏற்றி உருகி மருகினாள். பெரிய மொடாப் பானைகளின் சுமைதாங்கிக் குட்டையாக இருந்த அவள் உருவம் கிணற்றுடன் பதிர்ந்திருந்தது ஏனோ.
வாழை மடல் காதுகளைக் கொண்ட தமயந்தி குடத்தை வைத்து மர ராட்டை சுற்ற விட்டுக் கிணறை எட்டிக் கேட்கிறாள் "வாழைத் தோட்டங்கள் முறியாமல் பூக்கும் பருவத்திலிருந்த என்சகோதரி கௌரியைத் தேடிவந்தேன் சொல்” என்றாள். ஒரே சமயத்தில் ஆறேழு ஒளிமீன்கள் துள்ளி மேல் எழுந்து உயரத்தில் அசைந்த வாறு கிணத்தின் சருக்கத்தில் மறைந்து கொண்டிருந்த கௌரியைச் சொல்லி அவள் வாழைக்குருத்துள் சுருண்டிருக்கிறாள். ஒவ்வொரு அகன்ற இலையுமே அவள் உரு என்றபடி தலைகீழாய் மறைந்தன ஒளிமீன்கள். எந்தப்பக்கமிருந்து நீர் இரைத்தால் கிணறுதரும் உணர்வைத்தானே பெறமுடியும் என்பது ஸ்திரீ களுக்குத் தெரியும். அவரவர் அந்தரங்கத்தைக் கிணற்றுடன் பறிமாறிக் கொள்
வார்கள். ஆனைக்கிணத்தின் வேதனைதரும் நிறத்தில் அரளிப்பூ கூப்பிடும். உருவங்கள் சிதைந்த தெலாக்கல் யாரைக்கூப்பிடுமென்று தெரியாது. ஒவ்வொரு ஸ்திரீயுமே ஆனைக்கிணத்துடன் பந்தப்படுகிறாள். உறக்கத்திலும் அந்தக் கிணத்தில் பதிந்த கல்யானையின் காதுகள் அசையும். யாரும் பார்த்திராத யானைக்கு பெண்களைத் தெரியும். யாரும் பார்க்காமலே கல்யானையின் நினைவு வரும். ஒவ்வொருவரும் அதைக் கடந்தே போயினர். எத்தனையோ ஸ்திரீகளின் நினைவுகொண்டு சோகத்தில் ஆழ்ந்த யானையின் பெரிய உரு அசையாமல் நிற்கிறது எல்லையற்ற ராத்திரியில் இடம்பெயர்ந்தவர்களும் கல்யானையைக் கிணற்றுடன் கொண்டு போகக்கூடும். தெரியப்படுத்த முடியாத வெளிச்சங்களைத் தன்னுள் கொண்ட கல்யானையின் சின்னச் சின்னதான கண் களில்தான் ஸ்திரீகளின் உலகம் ஒளிந்திருக்கக்கூடும். அதைக் கண்டதுமே ஸ்திரீகள் அலாதி அடைகிறார்கள். கிணற்றடிஸ்திரீகளின் தோற்றத்தில் எல்லாக் கிராமங்களுமே மறைந்திருக்கின்றன இருளில்


NI
550
18 கரும்புதின்ற கல்யானையின் புராணத்தையும் காதசைக்கும் கல் யானையையும் ஆனைக்கிணத்தை நல்லதங்காளின் பாங்கிணற்றுடன் இணைக்க முயன்றேன். ஒவ்வொரு ஸ்திரீயாகத் தூரிலிருந்து பொங்கிக் கிணத்துக்குமேல் வந்து மறை கிறார்கள். கிணத்தின் சறுக்கத்தில் நல்லதங்காள் என்ற சோக விநோதக் கதைப் பாடலில் அவள் பதினாறடிக் கூந்தல் இறந்தபின்னும் கிணற்று நீர் சுழலில் சுழன்று நீள்வதைக் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் கடைசி நாவலான 'பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை'யில் காண நேர்ந்ததால் ஸ்பானியக் கதைப் பாடலுக்கும் நல்லதங்காளின் பதினாறடிக்கூந்தலுக்கும் பக்கம் பக்கமாக ஒரே சமயத்தில் கூந்தல் வளர்வதை தமிழின் வாய்வழிக் கதைமரபாகக் கொள்ள வெள்ளையம்மாள் கிழவியின் குடலுக்குள் இரைந்து கொண்டிருக்கும் கதைச் சுருளை என்னவென்று காண முடியாத உள்ளுரைகளை உணர்கிறேன். பாட்டியின் குடலைப் பேனாக்கத்தியால் அறுத்து எழுத்துவழிக் கதைமரபுடன் இணைப்பது அவ்வளவு எளிதல்ல. புராணத்திற்குள் கரும்பு தின்ற கல்யானையும் மௌனியின் கல்யாளி ஆங்காரத்தில் எழுந்து துடிப்பதையும் கல்யானை காதுகளை அசைத்து ஸ்திரீகளின் ஞாபகங்களில் நிற்பதையும் பதிமூன்று நட்சத்திரங்கள் கிணற்றில் வந்து மூழ்குவதைப் பார்த்த கதை சொல்லிக்கு அராபிய இரவுகள் நட்சத்திரங்களின் பயணத்தைத் தொடர்ந்து கடல்வழி தெரிவதும் என புராணம், வனமந்திர தேவதைச்சுருள், மீமனித மாயச் சுருள், குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் வேனல்சார் வாய்வழிக்கதை மரபு என யதார்த்தத்துடன் இணைக்க முயன்றிருக்கிறேன் இங்கே. “சலூன் நாற்காலியில் சுழன்றபடி" கதையில் கண்ணாடிகளால் ஆன சலூனைச் சுற்றி சர்ரியலிஸ பிம்பங்களையும் மாய எதார்த்த உருக்களையும் சுழலவிட்டு கண்ணாடியிலிருந்தே செல்லும் நகரின் இயக்கத்தை மறைந்து திரியும் கிரிமினல் குற்றவாளிகளைத் தலைவர்களின் எலும்புக்கூடுகளை உருமாற்றி ஏடன் தோட்டத் தில் ஆதாமும் ஏவாளும் வந்து கண்ணாடியைப் பார்த்து வெட்கித் தலைகுனி கிறார்கள். எல்லையற்ற காமம். கண்ணாடிகள் உடைந்து கடல் தொந்தளிப்பு. - புராதன நகரங்கள் மீது புறாக்களாக மாறிய ஆதாமும் ஏவாளும் பறந்து எங்கும் உலகங்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. பாழ்வெளி. கொந்தளிக்கும் அலை. தலை இழந்த என் சவம் செடிமுளைத்த மதிலாக மாறியது. காற்றின் ஊளை.
அதன்மீது கால்வைத்து அமரும் புறாக்கள். அவற்றின் ஊடல்,
லணை
I
a "நின் காதலாலே சுவாசிக்கிறேனடி சாம்பா” காலை
"பிராணநாதா. அதோ ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்வதேன்"
"அவள் பாவி. விகாரமானவள். அவள் கெரில்லா எலும்புகளை முத்த மட்டாள் என்பதற்காக
வேலை - "எது பாவம் - விகாரம்" பாதை
"இயற்கை எழில் சூழ்ந்த வனாந்திரத்தில் அந்தக் கேள்விகள் எதற்கு,
PRO கண்ணே "


பெண்புறா கோபம் கொண்டு போரிடும் கடலையே வெறித்தது. ஆணின் ஏமாற்றுகள் சமாதானங்கள் பெரும் பொய்.


19
"பெண்ணால்தான் இந்தப் பெரும் போர்"
"ஆம்! போர் நடந்து கொண்டே இருக்கிறது. யாழின் வெற்று இசை எல்லோரும் மடிந்து விட்டார்கள். யாழின் வெறுமையான இசை" ம்
அதை என்னால் தாங்க முடியவில்லை கண்ணோ ''
அதை என்
"சொர்க்கத்தில் இந்திரன் சபையில் அடிமையான பெண்விரல்கள் நிற்ப தில்லை. பூம்புகார் பட்டினத்து நடனமாது. கோவலனால் கைவிடப்பட்ட ருத்ர கணிகை, மாதவி என்று பேர். அவளிடம் யாழ் உள்ளவரை "
அந்த யாழ் என்
வெற்று இசை அதிகரிக்கிறது. யாயை "ஆ..ஆ தேவதாசிகளிடம் யாழ் உள்ளவரை.... யாழ் உள்ளவரை”
கடல் தீப்பற்றி எரிகிறது. தீயின் நிழல் மதில்களில் அசைவது திரும்பவும் போர் மண்டுவிப்பதாகத் தோன்றியது
போன்
IE
afé TUTI "சுவாமி, தங்களிடம் ஒரு வரம் கேட்பேன் தருவீர்களா”
de tonyi, iar “என்ன வேண்டும் சாம்பா” "அந்த யாம் எனக்கு வேண்டும். மாதவியின் யாம்."
வா பலி "நிறைவேறும் காரியத்தைச் சொல் சாம்பா, விளையாடாதே!"
- "தீயில் குதிக்க வேண்டும் நீங்கள்” பகல் பாவப்பட்டகம் me the ஆண்புறா தலைகீழாக தீயில் விழுந்தது. போரிடும் தீயின் நிழல்கள் மதில் மீது பட்டு அசைகின்றன. மதில் சுவர்மீது பெண்புறா மட்டும். அதன் காலடியில் யாழ் அதிர்கிறது. அதன் அதிர்வு அதிகரிக்க அதிகரிக்க தீயிலிருந்து 'மூலதனத்தின் பக்கங்கள் புரண்டு கெரில்லா எலும்புகள் எழுந்து வருகின்றன. கண்ணாடிக்குள் என் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாது. தலை திருப்பலில் எல்லாம் உடைந்து சிதறியது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி உடைந்து கழுத்துக்கு நேராகக் கீறல் என் உடம்புடன் தலையை ஒட்டவைத்துக் கொண்டிருந்தான் முடி ஒப்பனையாளன். அந்த மாயக்கிழவனின் கண்கட்டு வித்தையில் யார் தலையோ வந்து சேர்ந்தது. மம்ம
ம்ப டி
ம ம் " என் காலை எனக்க வேண்டும்''
FLIS0
போலியோ ''உடைந்து கிடக்கும் கண்ணாடியில் தேடு.''
06
“என் தலை எனக்கு வேண்டும்
நகரின் முச்சந்தியில் தேசத்தலைவர்களின் எலும்புக்கூடுகளைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவற்றைக் குளிப்பாட்டித் துவட்டிவிட்டு பீடங்களில் அமர்த்தியிருந்தது. தொண்டர்கள் பதினாறு பேர்களைத் தலைகீழாகக் கட்டிக் காயடித்துக் கொண்டிருந்த கருப்பு அங்கிகள் பீடத்திலிருக்கும் சுழல் நாற் காலியில் சாய்ந்திருக்கும் எலும்புக் கூடைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள். எலும்புக்கூடுகள் சொற்பொழிவாற்றும் குரல் ஊளை யிடுகிறது. எங்கும் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த பிரஜைகள் கால் விலங் குகளைத் தரையில் இழுத்துக் கொண்டு நகர்கிறார்கள், மலக்கிடங்குகளைச் சுற்றி கைகால் வீங்கிய குழந்தைகள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள்


நோயுற்றிருந்தார்கள். நோயுற்றவர்கள் இறந்து கொண்டிருந்தார்கள். டாபர்கள் அபினி விற்பவர்கள். காவலரின் கண்பார்வையில் போகும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. சலூன் கண்ணாடியில் காவலரின் கண்கள் ஒட்டப்பட்டிருந்தன. கதைகளில் சுழலும் என்உரு எப்போதும் எல்லாக் கண்ணாடி வழியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தலையை மாற்றி விடும் மறைமுக சித்திரவதை முகாம்களை எழுதநேர்ந்த மனப்பதிவே கயிற்றரவுக் கண்ணாடிப் படத்தில் கயிறு/அரவு இரண்டின் இணைவிடத்தில் தோன்றும் கண்ணாடியில் அண்ட கோள விலாஸம் பார்த்துத் தன் பல பிறவிகண்டு கண்ணாடிப் பாம்பின் படத்தில் சாவின் அருகில் முகம்பார்த்து உரையாடலைப் பித்தன் துவங்கி வைத்திருக்கிறான். கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிதான் பித்தனின் கயிற்றரவு. மொழிக்கும்/ சதாச்சுருளுக்குமான, எழுத்துக்கும் வாசகனுக்குமான, படைப்புக்கும் எழுத்தாளனுக்குமான, தாத்தாவுக்கும் பேரனுக்கும், அமீபாவுக்கும்/ மனிதனுக்குமான உரையாடல் பல நிலைகளில் தொடர்வதைப் பித்தன் என்ற மாயாஜாலப் பேர் வழியை நாவிதனாக்கிக் கண்ணாடி முன் நிறுத்தி சலூன் நாற்காலியைச் சுழல விட்டிருக்கிறேன் சுழன்று பாருங்கள்.
கயிற்றரவுக் கண்ணாடிப் படத்தில் பித்தன் கதைமொழி பனவிடலி இடுக்கில் நாகரத்தினம் கேட்டு அரவு கக்கிய ஒளிக்கல் பாதையில் கிழக்காந்தை வெருண்டு கதற ஒளி ஊர்ந்த நினைவுப் பாதையில் கபாடபுர நகர்ப்படலம் விரிய பல்வேறு புள்ளும் சிலம்பும் ஓசை இருள்வெளி படரமுன் நகர் புதை ஓடுகள் திறந்து கடல் புரண்டுவரப் புலித்தோலில் தீட்டியதமிழ்உருண்டு கடல்கொள்ள நாயின் பிலாக் கணம் செங்கோண்தரைச்செலவு கடல்கோள் நிகழ்ந்தபின் அங்கு போனவன் நீர் கன்னியின் மூக்குத்திக் கல்லின் ஒளி ஒற்றையடிப் பாதையில் நகர்ந்து முக்காலங் களில் ஒளிப்ப பித்தன் எதிரே பலிபீடத்தில் கன்னியின் சிரசு ரத்தவிளாறாய் வளர்ந்து கொண்டே இருக்கும் கூந்தல். அவள் நிழலாய் நகரும் நிலந்தரு திருவிற்பாண்டியன் பிலம் விலகி மறைந்தான். “ஞானக்குகை”யின் உயிர் குடிக்கும் கன்னியின் வசீகரப் புன்னகை உதடசையாமல் பிளக்கும் இடைவெளி தாண்டி நீளும் பித்தனின் கரங்களைப் பற்றி நடக்க முயல்வேன் இன்று இரவில் வலுசர்ப்பங்கள் மேடுகளில் படுத்துக் காற்றைக் குடித்தவாறு படமெடுக்கும் இடத்தில் நீலவிஷம் தீண்டிக் கண்டத்தில் விஷம் சுமந்து நிற்கிறான் பித்தன்.
மாயப்பித்தன் சிவனோடும் வாணியச்செட்டி ஆச்சியின் குழாய்ப்புட்டிலும் வறுமையான பாட்டியின் தனிமைச் சிரிப்பில் பத்தாயிரம் நரிகள் சிரித்த சிரிப்பே பரியை நரியாக்கிய கதாமந்திரம் கிழவியின் சிரிப்பில் கண்டு வாய்வழிக் கதை மரபுக்கும் புராணத்திற்கும் கட்புலனாகா இணைப்பைச் செய்ததும் கயிற்றரவு தீண்டி தமிழ் உரைநடை நெடுகிலும் நீண்டு கிடக்கிறான். அவனைத் தாண்டிப் போன எட்டிய வெளியில் அழியாச்சுடரான மெளனி சனாதனப் பேய்க்கூட்டத்தை உதறி எழுந்து ஆடும் தவிப்பில் சுடர் நடுங்க எவற்றின் நடமாடும் நிழல்களோ இவையென சுடர் பரவ வெகு ஆழத்தில் பார்த்த பெண் பதுமைகளின் துயரமுகம் காண நேர்ந்த எத்தனையோ ஸ்திரீகளின் இருளுருவங்கள் சாவிலும் பின் தொடர அவளுள் ஒடுங்கிய உன்னத கீதம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கர்ப்பக்


21
கிரக இருளில் மறைகிறான். அவளைப் பின்தொடரும் மௌனி இருள் வெளி படர்ந்து எட்டிய வெளியில் அழியாச் சுடரில் சாவில் பிறந்த சிருஷ்டியில் மயங்கிய பாதையில். “நினைவுப் பாதை”யில் நகுலன். விண்ணுக்கடியில் வாலாட்டும் அந்த மஞ்சள் நிறப் பூனையின் சிரிப்பு. பூனை மறைந்து விட்டபின்னும் அதன் சிரிப்பு மறையவில்லை. அருகே சுசீலாவின் வெண்கலச்சிலை மலைமீது விழுந்து நெடுங்காலமாய் உருள் கிறதே. பாசியடைந்து சர்ப்பங்கள் தீண்டிய சுசீலாவின் உடல் கொம்பேறிய விஷத்தில் பச்சையாய் அசைகிறதே. நினைவு ஊர்ந்து செல்கிறது. பார்க்கப் பயமாக இருக்கிறது. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. மஞ்சளான பித்தப்பூக்கள் நகுலன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கின்றன. நழுக்கென்ற சர்ப்பம் இலையடியில் மறைகிறது. சாதாரண பூச்சிகளும் பறவைகளும் அற்றுவிடுமானால் உலகம் வெறிச்சென்று விடும். கோட்ஸ்டாண்ட் கவிதைகள் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. யார் கைமூலம் என்பதை விட எழுதும் கைமூலம் எழுதப் பட்டுவிடும். படைப்பாளி இருக்கிறானா, இறந்துவிட்டானா என்ற உயரமான கேள்விகளுக்கு மேல் கோட்ஸ்டாண்ட் மீது நகுலன் உடல் உரித்துப் போடப் பட்டிருக்கிறது. எதிரே சூரல் நாற்காலியில் நகுலன். நவீனன் டைரியை எழுதிக் கொண்டிருக்கிறார். கோட்ஸ்டாண்டிலிருந்த நகுலன் உடல் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. “நகுலன் இறந்து விட்ட பின்னும் ஒலிநாடா" ஒலிப்பேழையில் இனியாகும் எழுத்தை மரணத்துக்குப் பின்னும் எழுதிக் கொண்டிருக்கிறார் நகுலன்.

No comments:

Post a Comment