தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, June 03, 2014

கடலும் மகளும் (மகள் தன்யாவுக்கு) - பிரம்மராஜன்

கடலும் மகளும் -


(மகள் தன்யாவுக்கு)

உன் நினைவகலப் பார்க்க
மீண்டும் முகத்துடன் பொருத்திக்கொள்கிறேன்.
உன் வயதுச் சிறுமி யாரோ வலியில் விளித்த குரல்
உனதாய்க் கேட்க
பதைக்கும் மனம்.
உன் முகம் நோக்க முயன்றும் முயன்றும்-
இப்பொழுது
என்ன விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பாய்?
உன் மனதில் கீர்த்தனைகள்
மிச்சப் பதியன்கள்
மழலைத்து முணுமுணுப்பாயோ?
புதிய உன் ஊஞ்சலில் பசியும் மறந்து பறப்பாயோ?
உன்மத்தமும் கள்வெறியும் என் நெஞ்சில்
நோகத் தொடங்கிவிட்டது பால் கட்டிய மார்பாக.
சொல் பொறுக்காத செல்வம் நீ.
உனக்கேயான ஷாந்திநிகேதனைச் சிருஷ்டித்து
திருத்திமாற்றிதிருப்திப்படுகிறேன்.
பீர்க்கங்கொடி என வளர்கிறாய்.
பொறுப்பற்ற தகப்பன்-
பட்டயம் மட்டும் எனக்கு நிலைக்கிறது.
எனக்குப் புரிந்துபட்ட கடலினை
உனக்கு அறிமுகப்படுத்தவில்லை.
பதைப்பும்
திசையற்ற கோபமும்
பயணத்தின் பாதுகாப்பின்மையும்
என்னைச் சீரழித்த காலத்தில்
நான் காட்டிய தங்க மணல் கடலும்
கடல் காக்கைகளும்
உன் பிராயத்தினால் மறந்துவிட்டிருக்கும்.
இரு கைகளிளும் உன்னை அள்ளி எடுத்த நாள் நகர்ந்து
இன்று என் மன இணையாக
காலோரம் அலைகள் விளையாட
முடிவே இல்லாத பீச்சில்
முடியும் வரை
உன் பிஞ்சுக் கை பற்றி
அவ்வளவு அழகாயில்லாத
இந்தக் கரையிலும்
கடல் கற்போம்.