தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, August 31, 2019

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் ----2 மார்க்வெஸ் :தமிழில் நாகார்ஜுனன்

தானியத்தில் மறைந்த ஜிப்ஸிப்பெண்ணின் காதல் ஆரூடம் தமிழில் நாகார்ஜுனன் 
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்

பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் ரியோஹச்சா நகரத்தைக் கொடூரமாகத் தாக்கிய போது பீரங்கிகளின் முழக்கத்தையும் அபாய எச்சரிக்கை மணிகளின் ஒசையையும் கேட்டுக் கதிகலங்கி உர்ஸலாவின் எள்ளுப்பாட்டியானவள் சித்தம் தவறிப்போய் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் மீது அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஏற்பட்ட தீக்காயங்களால் எஞ்சிய வாழ்நாள் முழுதும் வீணாகிப்போனாள் அந்தப் பெண்மணி. பக்கமாக ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டும் தலையணைகளின் மீது கையூன்றிக் கொண்டும்தான் உட்கார முடிந்தது. மேலும் யாரும் பார்க்கிறாற்போல அவள் அப்புறம் நடக்கவே இல்லை என்பதற்கு நடையில் ஏற்பட்டுவிட்ட விநோதக்கோளாறே காரணமாக இருக்க முடியும். தன் உடலிலிருந்து எப்போதும் ஏதோ கருகிய வாசனை வந்துகொண்டிருப்பதாக உணர்ந்தவள் சமுதாயத்திலிருந்தே விலகிவாழ்ந்து கொண்டிருந்தாள். ஆங்கிலேயர்களும் அவர்களுடைய வேட்டைநாய்களும் திறந்த ஜன்னல்வழி படுக்கையறைக்குள் வந்து செஞ்சிவப்புக் கோல்களால் தனக்குச் சூடுபோட்டு நடத்த இருந்த வெட்கங்கெட்ட சித்திரவதைகளுக்குக் கனவிலும் பலியாகிவிடக்கூடாது என்பதற்காக இரவு பூராவும் தூங்காதிருக்கும் அவள் முற்றத்துக்கு வரும் போது அதிகாலை அவள் முகத்தில் விழிக்கும். அரகோன் வியாபாரியான அவளுடைய புருஷன் பயங்களைத் தணிக்கும் பொருட்டு ஏகப்பட்ட மருந்துகளையும் விளையாட்டுப் பொழுதுபோக்குப் பொருட்களையும் தருவிப்பதில் தம் பாதிநேரத்தைச் செலவழித்தார். கடைசியில் வியாபாரத்தையும் தொலைத்துவிட்டு சமுத்திரத்துக்கு வெகுதூரத்தில் மலையடிவாரத்தில் வாழ்கிற செவ்விந்தியக் குடிகளுக்கு அருகில் குடும்பத்தை அமைத்துக்கொண்டு கடற்கொள்ளைக்காரர்கள் யாரும் மனைவியின் கனவுக்குள் புகமுடியாதபடி ஜன்னல்களற்ற படுக்கை அறையையும் கட்டினார். 
மலைகளுக்குள் மறைந்திருந்த அதே கிராமத்தில் புகையிலை பயிரிட்டுக்கொண்டு சில காலமாக வசித்துவந்தார் டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இவருக்கும் உர்ஸலாவின் எள்ளுத்தாத்தாவுக்கும் ஏற்பட்ட வியாபார உறவின் மூலமாக சில வருடங்களிலேயே இருவரும் எக்கச்சக்கமாக சம்பாதித்துவிட்டனர். சில நூற்றாண்டுகள் கழித்து புகையிலை விவசாயியான டான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியாவின் எள்ளுப்பேரனுக்குப் அரகோன் வியாபாரியின் எள்ளுப்பேத்திக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. கணவனின் பைத்தியக்கார எண்ணங்களையும் அலைச்சல்களையும் பற்றிக் கவலைப்பட நேருகிற ஒவ்வொருமுறையும் முன்னூறு வருஷங்கள் வரையில் தொடர்ந்து வந்திருக்கிற தலைவிதியை நொந்து கொண்டு ரியோஹச்சா நகரத்தை கடற்கொள்ளைக்காரனான ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் கொடூரமாகத் தாக்கிய சனியன் பிடித்த அந்நாளைத் திட்டத் துவங்குவாள் உர்ஸலா. மனதுக்கு ஆறுதல் தேடவே அப்படித் திட்டுகிறாள். உண்மையில் காதலை விடவும் உறுதியான ஒன்றால் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் உர்ஸலாவும் மரணம் வரையிலுமாகப் பிணைக்கப்பட்டிருந்தார்கள். உறவுமுறை கொண்டவர்கள் என்பதால் 
314 

திருமணமானவுடன் இருவருக்கும் பொதுவானதாக மனச்சாட்சியின் குத்தலானது இருந்து வந்தது. மாநிலத்திலேயே பெயர்பெற்ற ஊராக முன்னோர்கள் கடுமையான உழைப்பினால் மாற்றித்தந்திருந்த அதே கிராமத்தில்தான் சேர்ந்து வளர்ந்தார்கள். இப்பூவுலகத்தில் நுழைந்த உடனேயே அவ்விருவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றாலும் தம்பதிகள் ஆகிவிட இருவரும் விருப்பம் தெரிவித்த கணத்திலிருந்தே உறவுக்காரர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் பிரயத்தனப்பட்டார்கள். எக்கச் சக்கமான திருமண உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரு குடும்பங்களின் ஆரோக்கியமான வழித்தோன்றல்களான ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் உர்லா இகுவாரென்னும் உறவு கொண்டால் உடும்புகளைப் பெற்றெடுக்கும் துர்ப்பாக்கியத்துக்குத் தள்ளப்படக்கூடும் என்ற பயந்தார்கள் உறவுக்காரர்கள். குடும்பத்தில் ஏற்கனவே இதுபோல நடந்திருந்ததும் காரணம். உர்ஸலாவின் அத்தை ஒருத்திக்கும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் மாமாவுக்கும் பிறந்த மகன் ஒருவன் வாழ்க்கை பூராவும் லூசான காற்சராய்களையே அணிந்துகொண்டு நாற்பத்திரண்டு வயதுவரை கன்னிகழியாமலேயே இறந்துபோனது அவர்களை என்னவோ செய்தது. அவன் முதுகுத்தண்டின் கீழ்எலும்பு வாலைப்போல நீண்டு போத்தல் கார்க்குகளைத் திறக்கப் பயன்படும் ஸ்க்ரூட்ரைவரைப் போலச் சுழன்று வளர்ந்ததும் அதன் முனையில் மயிர்க்கொத்து ஒன்று இருந்ததும் உண்மைதான். இதுவரை எந்தப்பெண்ணும் பார்த்திராத அந்தப் பன்றிவால்தான் அவன் உயிரையும் குடித்துவிட்டது. கசாப்புக்கடையில் வேலை செய்த நண்பன் தன் வெட்டுக்கத்தியை மீது போட்டவுடன் அவன் செய்த உதவியால் ஏற்பட்ட ரத்தப்பெருக்கு நிற்காமல் துடிதுடித்துச் செத்தான் பன்றிவால் இளைஞன். தன் பத்தொன்பது வயது அளித்த தைரியத்தில் இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டும் வகையில் சொன்னான் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியா. 
"எனக்குப் பன்றிக்குட்டிகள் பிறந்தால் என்ன பேசினால் போதும்." 
'மூன்று நாட்களாக வாண வேடிக்கைகளுடனும் செப்புவாத்தியங்களின் முழக்கங்களுடனும் நடந்தேறிய திருவிழாவாக அவர்கள் திருமணம் இருந்தது. பிறக்கப்போகும் குழந்தை பற்றிய பயங்கர ஆரூடங்களை உர்ஸலாவின் அம்மா அவளுக்குச் சொல்லி உடலுறவையும் தவிர்த்துவிடக் கூறி அவளை எச்சரித்திருந்தபடியால் அவர்களுடைய மண வாழ்க்கையின் சந்தோஷம் தள்ளிப்போடப்பட்டது சில காலம் வரையில். 
பலசாலியும் வேட்கை மிக்கவனுமாகிய கணவன் தன்னைத் தூங்கும்போது பலாத்காரம் செய்துவிடுவானோ என்ற பயத்தில் பாய்மரத்துணியில் தைக்கப்பட்டு தோல்பட்டைகள் குறுக்காகவும் முன்பக்கம் இரும்புப்பித்தானால் மூடப்பட்டும் அமைந்த அம்மா அணிந்திருந்த கற்புப்பூட்டை தினசரி இரவு அணிந்துகொண்ட பிறகே தூங்கப்போனாள் உர்ஸலா. தன் சண்டைச்சேவல்களை ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பராமரித்துக் கொண்டிருக்கும் பகல்வேளை களிலோ உர்ஸலா தன் 
315 

அம்மாவுடன் உட்கார்ந்துகொண்டு ஆடைகளிலும் துணிகளிலும் பூவேலைப்பாடு செய்து மகிழ்ந்தார்கள். இப்படியாகத்தானே மாதங்கள் கழிந்தன. இரவுப்பொழுதுகளில் உடலுறவுக்குப் பதிலாக இருவரும் இனம் தெரியாததும் பதற்றமானதுமான மல்யுத்த வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். கடைசியில் ஏதோ சரியில்லை என்றும் மோப்பம் பிடித்துவிட்ட உறவுக்காரர்கள் திருமணமாகி ஒரு வருஷத்துக்குப் பிறகும் உர்ஸலா கன்னிகழியாமலேயே இருப்பதாகவும் கணவன் ஆண்மை இழந்தவனாக இருப்பதே காரணம் என்றும் பேசிக்கொண்டார்கள். வதந்தியைச் செவிமடுத்தவர்களின் வரிசையில் கடைசியானவன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, 
"எல்லோரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா உர்ஸலா" என்றான் 'அமைதியாக. 
"பேசட்டும். உண்மையல்ல என்று நமக்குத் தெரியும்" என்றாள். 
அடுத்த ஆறு மாதங்களுக்கு இப்படியே போய்க்கொண்டிருக்க, கடைசியில் ப்ரூடென்ஷியோ அக்விலர் என்பவனுக்கு எதிரான சேவல்சண்டையில் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா வெற்றியடைந்த சோகமான ஞாயிற்றுக்கிழமை வந்தேவிட்டது. தன் சேவலின் சிந்திய ரத்தத்தால் வெறியடைந்துவிட்ட ப்ரூடென்ஷியோ அக்விலர் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியாவிடமிருந்து பின்வாங்கியவுடன் அடுத்து என்ன தான் சொல்லப்போகிறான் என்பதைச் சுற்றிருந்தவர்கள் யூகித்துவிட்டனர். 
"வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற சேவலாவது உன் மனைவியை சந்தோஷப்படுத்தட்டும்." 
அமைதியாக சேவலைக் கையிலெடுத்துக்கொண்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா உடனே திரும்பிவருவதாகக் கூட்டத்தினரிடம் சொல்லிவிட்டுத் தனியாக ப்ரூடென்ஷியோ 'அக்விலரிடம் பேசினான். 
"வீட்டுக்குப் போய் ஆயுதத்தை. எடுத்துவா. கொல்லப்போகிறேன்." 
உன்னை இப்போது 
பத்தே நிமிடங்கள் கழித்து தாத்தாவின் இருமுறை ஈட்டியுடன் சண்டைக்களத்துக்கு வந்து சேர்ந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஊரின் பாதிப்பேர் அங்கே குழுமியிருக்க அவனுக்காகக் காத்திருந்த ப்ரூடென்ஷியோ அக்விலருக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துளியும் நேரமில்லை. எருதின் பலத்தோடும் பிராந்தியத்தின் சிறுத்தைப்புலிகளைக் கொல்வதற்கு முதலாம் அவ்ரலியானோ புண்டியா தப்பாது வைத்ததே குறியோடும் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா எறிந்த இருமுனை ஈட்டியானது ப்ரூடென்ஷியோ அக்விலரின் தொண்டைக்குழியைப் பதம்பார்த்துக் கிழித்துச்சென்றது. நல்லடக்கத்துக்கு முந்தைய அவ்விரவில் சண்டைக்களத்திலேயே சவப்பெட்டியை வைத்து 
316 

இரவு முழுவதும் ஊரார் ஜெபித்துக்கொண்டிருக்க, கற்புப்பூட்டை அணிந்து கொள்ள உர்ஸலா முயல்கையில் படுக்கை அறைக்குள் நுழைந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஈட்டியை அவள்மீது நீட்டிக்கொண்டே கூறினான். 
"அதைக் கழற்றி விடு." 
"நடக்கப்போகும் அத்தனைக்கும் நீதான் பொறுப்பு" என்று அவள் முணுமுணுக்க ஈட்டியை அழுக்குத் தரையில் வீசியெறிந்தான் ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா. 
"உடும்புகளை நீ பெற்றெடுத்தால் அவற்றையே வளர்ப்போம். உன்னால் இனி ஊரில் கொலைகள் ஏதும் நடக்க வேண்டாம்" என்றான். 
அது குளிர் நிலவு காய்ந்த ஜூன் மாத இரவு. ப்ரூ டென்ஷியோ அக்விலரின் உறவுக்காரர்களின் அழுகையைச் சுமந்து கொண்டு அறைக்குள் வந்து சென்ற காற்றைப் பற்றிக் கவலைப்படாமல் அதிகாலை வரையில் படுக்கையில் குதூகலித்தார்கள் இருவரும். 
ப்ரூடென்ஷியோ அக்விலர் கொல்லப்பட்டது. சவாலின் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டாயிற்று என்றாலும் கணவன் மனைவி இருவருக்கும் தங்கள் மனச்சாட்சியின் நரம்புஸ்ருதியின் இழை பிசகிப் போயிருந்தது புரிந்துவிட்டது. ஓரிரவு தூக்கம் வராத உர்ஸலா தாகத்தால் வெளியே வர அங்கே தண்ணீர்ப்பாத்திரம் அருகே நின்றுகொண்டிருந்த ப்ரூடென்ஷியோ அக்விலரைக் கண்டாள். கோபமாயிருந்தவன் தன் தொண்டையின் ஓட்டையை காகிதம் தயாரிக்கப் பயன்படும் புல்லால் அடைக்க முயன்றுகொண்டிருந்தான். பார்த்த உர்ஸலாவுக்குப் பயமின்றிப் பரிதாபமே ஏற்பட்டது. அறைக்குத் திரும்பி, பார்த்ததைக் கணவனிடம் கூறியபோது அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சொன்னான். 
"மனச்சாட்சியின் பாரத்தை நம்மால் தாங்க முடியவில்லை என்பதுதான் அர்த்தம்." 
இன்னும் இரண்டு இரவுகள் கழித்து குளியலறையில் அதே புல்லால் ரத்தம் கட்டிப் போயிருந்த தன் தொண்டையைக் கழுவிக்கொண்டிருந்த ப்ரூடென்ஷயோ அக்விலரைக் கண்டாள் உர்ஸலா. இன்னோர் இரவில் மழையில் நடைபயின்று கொண்டிருந்தவனைக் கண்டாள். மனைவியின் மாயாவிநோத தரிசனங்களைக் கேட்டு எரிச்சலடைந்த ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியா மீண்டும் ஈட்டியை எடுத்துக்கொண்டு முற்றத்துக்குப் போன போது ஏற்கனவே செத்துப்போய்விட்ட அந்த மனிதன் முகத்தில் சோக பாவத்துடன் உட்கார்ந்திருந்தான். 
"நரகத்துக்கு இன்னும் போகவில்லையா நீ. எத்தனை முறையும் வந்தாலும் கொல்லாமல் விடமாட்டேன்" என்று உறுமினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
317 

ப்ரூடென்ஷியோ அக்விலர் போகவுமில்லை. ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவால் ஈட்டியைத் தூரத்தூக்கி எறியவும் முடியவில்லை. அவனால் நிம்மதியாகத் தூங்கக்கூட அப்புறம் முடியவில்லை. மழையினூடே செத்துப்போன அந்த வெளிறிய மனிதன் தன்னை வெறித்து நோக்கிய பார்வையும் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் நிலைமை குறித்து அவன் கொண்டிருக்கும் ஆழமான ஏக்கமும் அவர்களிடையே வாழ வேண்டும் என்கிற அவனுடைய வேட்கையும் தான் கொண்டு வந்த புல்லுக்கட்டை நனைக்க வீடுபூராவும் தண்ணீரைத் தேடியலைந்த அவனுடைய பதற்றமும் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவை வாட்டி வதைக்கத் துவங்கின. 
"ரொம்பத்தான் வருத்தப்பட்டுப் போய்விட்டான் தனிமையில் வாடும் அந்த மனிதன் என்று உர்ஸலாவிடம் சொல்லிவிட்டுப் போனான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அடுப்பின் மீதிருந்த பாத்திரங்களை விலக்கித் தேடிக்கொண்டிருந்த செத்துப்போன மனிதனை அடுத்த முறை பார்த்ததில் ஏற்பட்ட பச்சாத்தாபத்தில் தண்ணீர்க்குடங்களை வீட்டில் கண்ட இடங்களிலெல்லாம் வைக்கும் அளவுக்கு உருகிவிட்டிருந்தாள் உர்ஸலா. ஒருநாள் கழுத்துக்காயத்தைக் கழுவுவதற்காக தன்னுடைய அறைக்கே வந்துவிட்டிருந்த ப்ரூடென்ஷியோ அக்விலரைப் பார்த்தவுடன் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா முடிவுக்கு வந்தவனாகப் பேசலானான். 
"இதோ பார், ப்ரூடென்ஷியோ. நானும் மனைவியும் இந்த ஊரைவிட்டே போகப் போகிறோம். மலைத்தொடரைத் தாண்டி எவ்வளவுதூரம் முடியுமோ போவோம். திரும்ப மாட்டோம். இனியாவது நீ மனச்சாந்தி அடையலாம்." 
இப்படியாகத்தான் மலைத்தொடரைக் கடந்தார்கள். இந்த சாகசத்தில் ஈடுபட விரும்பி ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவின் நண்பர்களான இளைஞர்கள் சிலர் தங்கள் வீடுகளைக் கழற்றி மடக்கிக்கொண்டும் குழந்தை குட்டிகளைக் கூட்டிக்கொண்டும் சேர்ந்துவிட்டார்கள். தங்களுக்கென்று யாரும் சத்தியம் செய்து தந்திராத, இடம்தெரியாத நிலத்தை நோக்கி பிரயாணப்பட்டார்கள். கிளம்புவதற்கு முன்பு வீடு முற்றத்தில் ஈட்டியைப் புதைத்துவிட்டு சண்டைச் சேவல்களை ஒவ்வொன்றாக கழுத்தைத் திருகிப்போட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. இதனாலாவது ப்ரூடென்ஷியோ அக்விலருக்கு மனச்சாந்தி கிட்டினால் சரி என்று நினைத்தான். திருமண தினத்தன்று தான் அணிந்திருந்த உடைகளையும் பாத்திரங்கள் சிலதையும் அப்பா சேமித்துத் தந்திருந்த தங்க நாணயங்கள் அடங்கிய பேழையையும் மட்டும் ட்ரங்குப்பெட்டியில் போட்டு எடுத்துவந்தாள் உர்ஸலா. குறிப்பிட்ட இலக்கு ஏதுமின்றிப் பயணம் செய்தார்கள். பரிச்சயமான யாரையும் பார்த்து விடக்கூடாது என்றும் அடுத்து வருபவர்களுக்கு எந்தவிதமான அடையாளத்தையோ சுவடையோ விட்டுச் செல்லக்கூடாது என்றும் தீர்மானித்துக்கொண்டு ரியோஹச்சா நகரத்துக்கு எதிரான திசையில் நடந்து சென்றார்கள். அபத்தமானதொரு பிரயாணமாக ஆகிப்போனது. கிளம்பிய பதினான்கு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் குரங்கு மாமிசத்தாலும் பாம்புக்கஞ்சியாலும் தாக்குண்டு பீடிக்கப்பட்ட உர்ஸலாவின் 
318 

வயிற்றிலிருந்து அழகான மனிதக்குழந்தை பிறந்தது. அதற்குள் உர்ஸலாவின் இருகால்களும் விலகிப்போய் அவற்றின் ரத்தக்குழாய்கள் குமிழிகளைப்போல வெடிக்கச் சித்தமாக இருந்ததால் பாதிதூரத்துக்கு ஏணையில்தான் போட்டுத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். குழிவிழுந்த கண்களுடனும் காய்ந்துபோன வயிறுகளுடனும் கூட வந்து கொண்டிருந்த குழந்தைகள் பார்க்கப் பரிதாபமாக இருந்தபோதிலும் அம்மா அப்பாக்களை விடவும் பிரயாணத்தின் கொடூரத்தை சந்தோஷமாகத் தாங்கிக் கொண்டிருந்தார்கள். கிளம்பி இரண்டு வருஷங்களுக்கும் மேலாகிவிட்ட ஒருநாள் காலையில் மலைத்தொடரின் மேற்குப்புறச்சரிவுகளை முதன்முதலாகக் காணும் பேறு பெற்ற மனிதர்களும் அவர்கள் தான். பூவுலகத்தின் மறுபக்கம் வரையிலும் பரவிப் பாய்ந்திருந்த பிரம்மாண்டமான ஏரிப்பிராந்தியத்தையும் மேகம்சூழ்ந்த சிகரத்திலிருந்து கண்டார்கள். ஆனால் சமுத்திரத்தைத்தான் பார்க்க முடியவில்லை. கடைசியாகப் பார்த்த செவ்விந்தியர்களிடமிருந்து வெகுதூரம் தாண்டிப்போய் அந்தப் பிராந்தியத்தின் சதுப்புநிலங்களில் பல மாதங்கள் சுற்றி அலைந்து ஒருநாள் உறைந்துவிட்ட கண்ணாடியின் பிரவாகமாய்த் தெரிந்த கல்நதியின் கரையில் இளைப்பாறினார்கள் பிரயாணிகள். மிகப்பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது உள் நாட்டு யுத்தத்தின்போது திடீர்த்தாக்குதல் நடத்தி அதிரடியாக ரியோஹச்சா நகரத்தைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் அதே வழியில் பயணப்பட்ட கர்னல் அவ்ரலியானோ புண்டியா ஆறே நாட்களுக்குப் பிறகு தமது செயலின் பைத்தியக்காரத்தனத்தைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்டார். ஆனாலும் நதிக்கரையில் பிரயாணிகள் தங்கிய முதல் இரவில் கர்னல் அவ்ரவியானோ புண்டியாவின் அப்பாவின் மக்கள் எல்லோருமே தங்கள் கப்பல் நொறுங்கிப்போனதால் தப்பிக்க முடியாமல் தத்தளிப்பவர்களாகவே தெரிந்தார்கள். பிரயாணத்தின்போது அவர்கள் எண்ணிக்கை ஏறிவிட்டிருந்ததும் எல்லோரும் வயதாகித் தான் சாகவேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்ததும் அதே விருப்பத்தின்படிதான் அவர்களுடைய வாழ்க்கையும் பிறகு அமைந்ததும் முக்கியம். அதே இடத்தில் கண்ணாடிச்சுவர்களுடன் கூடிய இரைச்சலான நகரம் ஒன்று எழும்புவதாக அந்த இரவே கனவுகண்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அந்த நகரம் எது என்று உர்ஸலா கேட்டவுடன் அர்த்தமற்று இருந்தாலும் அவன் கனவில் பட்டு இயற்கையையும் மீறியதாய் எதிரொலித்தது கண்ணாடிச்சுவர்கள் அவனுக்குச் சொன்ன அதுவரையிலும் கேட்டிராத பெயர். மக்காந்தோ. இனியும் தம்மால் சமுத்திரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்க முடியாது என்று தோழர்களிடம் சொன்னான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அடுத்த நாள் காலையில், மேலும் நதிக்கரையின் மிகக் குளிர்ந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மரங்களை வெட்டிச் சீராக்கித் தருமாறும் கூறிவிட்டான். மக்காந்தோ கிராமத்தை அவர்கள் நிறுவியது இப்படியாகத்தான். 
ஐஸை அவர்கள் கண்ட அந்நாள் வரையிலும் கண்ணாடிச்சுவர்களாலான வீடுகள் பற்றித் தான் கண்ட கனவு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்குப் புரியவே இல்லை. புரிந்தவுடன் அதன் ஆழமான அர்த்தத்தைக் கிரகித்துக்கொண்டுவிட்டதாக எண்ணினான். தண்ணீரைப் போன்று சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஏதோ 
319 

பொருளிலிருந்து பெருமளவில் ஐஸ்கட்டிகளை கூடிய சீக்கிரத்தில் தயாரிக்க முடியும் என்றும் ஐஸ்கட்டிகளைக் கொண்டே கிராமத்தின் புத்தம்வீடுகளை எழுப்ப முடியும் என்றும் எண்ணினான். கிராமத்தை வாட்டிய வெப்பத்தால் கதவுத் தாழ்ப்பாள் களும் பிணைப்புகளும் வளைந்துபோய் முறுக்கிக்கொள்கிற இடமாக மக்காந்தோ இனியும் இருக்காது என்றும் பனிபெய்கிற நகரமாக மாறப்போகிறது என்றும் எண்ணிக்கொண்டான் ஜோஸ் அக்காடியோ புண்டியா. அப்போதே ஐஸ்கட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அவன் நிறுவிவிட நினைத்தாலும் மகன்களின் கல்வியின் மீது கொண்டிருந்த அக்கறையால் தள்ளிப்போட்டான். ரசவாதத்தில் விநோத ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்த அவ்ரலியானோவின் குறிப்பாக கல்வியில் அதிக நாட்டம் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. பழைய பரிசோதனைச் சாலையைத் தூசிதட்டி, புனிதத்துவம் நிறைந்த மெல்க்யுடஸின் குறிப்புக்களை மரியாதை கலந்து படித்து விட்டு, அன்றொரு நாள் சட்டியின் அடிப்பாகத்துடன் ஒட்டிக் கொண்டேவிட்ட கசடிலிருந்து உர்ஸலாவின் தங்கத்தைப் பிரித்தெடுக்க முயன்றார்கள் அப்பாவும் பிள்ளையுமாய். ஜோஸ் அர்க்காடியோவுக்கோ இதிலும் நாட்டமிருக்கவில்லை. தண்ணீர்த் தொட்டியில் தன் ஆன்மாவையும் உடலையும் முழுமையாக ஜோஸ் அர்க்காடியோ புண்டியா ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது விடலைப்பையனாகத் திமிறிக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவன் குரல் உடைந்து மேலுதட்டில் எப்போதுமான ரீங்காரம் தோன்றியது. ஓரிரவு படுக்கப்போகுமுன் உடைகளை அவன் களைந்து கொண்டிருந்த போது அங்கே நுழைந்த உர்ஸலாவை பச்சாத்தாபமும் வெட்கமும் பிடுங்கித்தின்றன. கணவனுக்குப் பிறகு நிர்வாணமாகப் பார்த்துவிட்ட முதல் ஆண்பிள்ளையான ஜோஸ் அர்க்காடியோ வாழ்க்கைக்கு சீக்கிரமாகவே தயாராகிவிட்ட அதீத லட்சிய மனிதனாக அவளுக்குத் தென்பட்டான். மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்திருந்த உர்ஸலா புதுமணப்பெண்ணுக்கே உரித்தான பயங்கரத்தை மீண்டும் அனுபவித்தாள். 
வீட்டுவேலைகளுக்கு உதவுதாய் அப்போது வந்துசேர்ந்த ஒருத்தி எப்போதும் கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் எல்லோரையும் பாதித்துக் கொண்டிருந்தாள். எதிர்காலத்தை சீட்டுக்கட்டுகளில் பார்த்து ஜோஸியம் சொன்னாள். அவளிடம் மகன் ஜோஸ் அர்க்காடியோ பற்றி உர்ஸலா பிரஸ்தாபித்தாள். குடும்பத்தில் பிறந்த பன்றிவால் இளைஞனைப் போலவே ஜோஸ் அர்க்காடியோவும் ஏதோ விதத்தில் இயற்கைமீறியவனாய் அவளுக்குத் தெரிந்தான். அதைக் கேட்டுவிட்டு வீடு பூராவும் உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் தெறிப்பாக எதிரொலித்த சிரிப்பை உதிர்த்த ஜோஸியக்காரப் பெண் சொன்னாள். "நினைப்பது போலன்றி மகன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாய் இருப்பான்." ஜோஸியத்தை நிரூபிக்க சில நாட்கள் கழித்து சீட்டுக்கட்டையும் வீட்டுக்கு எடுத்துவந்தாள். சமையலறைக்கு அருகிலிருந்த தானியக் கிடங்கில் ஜோஸ் அர்க்காடியோவுடன் புகுந்துகொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டாள். பழைய தச்சு மேஜையொன்றின் மீது சீட்டுக்கட்டுகளை விரித்து வைத்து அவனைக் காத்திருக்க வேண்டினாள். தனக்கு எதுவும் தோன்றலாம் என்றும் அவகாசம் தரப்பட 
320 

வேண்டும் என்றும் ஜோஸ் அர்க்காடியோவிடம் கூறினாள். அருகே திகைப்புடன் நின்றுகொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. திடீரென்று கையை நீட்டி அவனைத் தொட்டு "என் ராஜாவே" என்று சொன்னாள். மட்டுமே சொல்ல முடிந்தது அவளால். தன் எலும்புகளில் நுரையும் மரத்துப்போய்விட்ட பயமும் பொங்குவதை உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவுக்கு அழ வேண்டும் போலத் தோன்றியது. வேறெதுவும் செய்யாமல் அங்கிருந்து அகன்ற அவளை இரவு முழுவதும் தேடிக் கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவளுடைய அக்குள்களின் புகைவாசனை அவனுடைய தோலுக்கு ஏறிவிட்டிருந்ததுதான் அதற்குக் காரணம். எப்போதுமே தன்னுடன் அவள் இருக்க வேண்டும் என்றும் அவள் தன் அம்மாவாக இருக்க வேண்டும் என்றும் இருவரும் அதே தானியங்கிடங்கை விட்டு விலகாமல் வாழ வேண்டும் என்றும் அவள் தன்னைப்பார்த்து "என் ராஜாவே" என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். இந்த ஆசையைத் தாங்க முடியாமல் ஒருநாள் அவள் வீடு தேடிப் போயேவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. வீட்டின் முன் அறையில் மரியாதை நிமித்தம் வந்தவனைப்போல யாருக்கும் புரிபடாத வகையில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அந்தத் தருணத்தில் அவள்மீது விருப்பம் ஏதுமின்றி இருந்தான். அவளுடைய புகைவாசனைக்கு அந்நியமான பெண்ணையே அங்கே சந்தித்தான். காப்பி குடித்துவிட்டு மனத்தாங்கலுடன் அங்கிருந்து கிளம்பிப் போனான். அன்றிரவு தூங்காமல் படுத்துக்கொண்டிருக்கும் பயங்கரத் தருணத்தில் அதிதீவிர வேட்கையுடனும் குரூரமான பதற்றத்துடனும் செயல்பட விரும்பினான். தானியக்கிடங்கில் இருந்தவளை அன்றி அன்று மதிய வேளையில் தான் சென்று கண்டவளையே அப்போது விரும்பினான். 
'சில நாட்கள் கழித்து வீட்டுக்குக் கூப்பிட்டாள் அவனை. தனியாகத் தன் அம்மாவுடன் இருந்தாள். சீட்டுக்கட்டு ஒன்றைக் காண்பிப்பதாகக் கூறிப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள் அவனை. அங்கே அவள் சுதந்திரமாகத் தொட்டதில் முதல் நடுக்கத்துக்குப் பிறகு அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது. சுகத்தை விட பயத்தையே அதிகமாக அனுபவித்தான் ஜோஸ் அர்க்காடியோ. அன்றிரவு அங்கே வருமாறு அவனிடம் கூறினாள். தன்னால் போக முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட ஜோஸ் அர்க்காடியோ விட்டால் போதும் என வருவதாகக் கூறிவிட்டான். ஆனால் எரியும் படுக்கையின் வெப்பத்தால் தாக்குண்ட பிறகு முடியாதென்றாலும் அவளைச் சந்தித்தே ஆகவேண்டும் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. ஸ்பரிசத்தால் மட்டுமே உடை அணிந்து கொண்டு கிளம்பினான். அருகில் படுத்திருந்த சகோதரன் அவ்வரலியானோவின் சீரான மூச்சையும் அடுத்த அறையிலிருந்த அப்பாவின் உலர்ந்த இருமலையும் முற்றத்தில் துள்ளும் கோழிகளின் ஆஸ்துமாவையும் கொசுக்களின் ரீங்காரத்தையும் தன் சொந்த இதயத்தின் துடிப்பையும் இதுவரை கவனித்திராத உலகமொன்றின் பரபரப்பையும் கேட்டுக்கொண்டே தாண்டிச்சென்று தூங்குமூஞ்சித் தெருவை அடைந்தான் ஜோஸ் அர்க்காடியோ. சொன்னதைப் போலன்றி கதவு தாழிடப் பட்டிருக்கும் என்று நம்பினான். அதுவோ திறந்திருந்தது. விரல் நுனிகளால் தள்ளியவுடன் கதவு கிளப்பிய சோகமான முனகல் அவனுள் உறைந்துவிட்ட எதிரொலியை விட்டுச்சென்றது. பக்கவாட்டில் சப்தமின்றி நுழைந்தவுடனேயே அந்த வாசனையை 
321 

உணர்ந்து கொண்டு விட்டான். அந்தப் பெண்ணின் மூன்று சகோதரர்களும் தனித்தனி கயிற்றுக் கட்டில்களில் படுத்துக்கொண்டிருந்ததை பார்க்கவும் அவதானிக்கவும் முடியாததால் சுவரோரமாக ஒட்டிக்கொண்டே வந்து படுக்கை அறைக் கதவைக் கண்டுபிடித்தான் ஜோஸ் அர்க்காடியோ. வழிநடையில் கயிற்றுக்கட்டிலை இடித்து விட்டவுடன் அதுவரை குறட்டை விட்டுக்கொண்டிருந்த மனிதன் யாரோ அன்று புதன் கிழமை" என்று தூக்கத்தில் திரும்பியவாறே சொல்லிக்கொண்டான். தான் நினைத்ததை விடவும் குறைவான கயிற்றுக்கட்டில்களே அங்கிருப்பதாக உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவுக்கு திடீரென்று இருட்டில் விஷயம் புலனாகியது. நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஏக்க உணர்வு அவனைத் தாக்கியது. படுக்கை அறையைத் திறக்கும்போது தரையைக் கதவு கிறீச்சிட்டதைத் தவிர்க்க முடியாமல் போனது. தான் முற்றிலும் அந்நியப் படுத்தப்பட்டு விட்டதாகப் புரிந்துகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
'குறுகலான அறையில் அவளுடைய அம்மா, அம்மாவின் இன்னொரு மகள் மற்றும் அவளுடைய இரு குழந்தைகள் ஆகியோர் படுத்திருந்தனர். இல்லாமலே போயிருக்கக் கூடிய அவளும்தான். வீட்டின் எல்லா இடங்களிலும் அவளுடைய வாசனை இல்லாமல் போயிருந்தாலும் வாசனையை வைத்தே அவளை வந்தடைந்திருக்க முடியும். அந்த அளவுக்கு பிரத்தியேகமானதும் மயக்கம் தருவதாகவும் வாசனை இயங்கியது: அவனுடைய தோலிலும் ஏறிக்கொண்டிருந்தது, எல்லையற்ற ஆழக்குழி ஒன்றில் கைவிடப்பட்டதாகக உணர்ந்த அவன் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தானோ தெரியாது. திடீரென்று விரல்கள் விரித்த கை ஒன்று இருட்டில் துழாவி அவன் முகத்தை ஸ்பரிசித்தது. தெரியாமலேயே அந்தக் கையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு அது அதிர்ச்சியை அளிக்கவில்லை. தன்னை அந்தக்கையிடம் ஒப்படைத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ. பயங்கரமான அயர்ச்சியுடன் இருந்தவனாய் தன்னை வடிவமற்ற ஓரிடத்துக்கு அமைத்துச் செல்வதை அனுமதித்தான். அங்கே அவன் உடைகள் களையப்பட்டன: உருளைக்கிழங்கு மூட்டையைப் போல இருபக்கமும் அவன் பந்தாடப்பட்ட அந்த அடிப்புறமற்ற இருட்டில் தூக்கியெறியப்பட்ட போது கைகள் பயனற்றுப்போய் பெண்வாசனை மறைந்து அம்மோனியா நாசியைத் தாக்கியது. அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுகொள்ள முயன்றபோது உர்ஸலாவின் முகத்தை முன்னே கண்டான். வெகுகாலமாக செய்யவிரும்பிய ஆனால் செய்யவே முடியாது என்று எண்ணிய செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. என்ன தான் செய் து கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் போனதற்குக் காரணம் அவனுக்குத் தலைகால் தெரியாமல் போனது மட்டுமல்ல. யார் தலை, யார் கால் என்பதும் புரியாமல் போனதும் தான். சிறுநீரகங்களிலிருந்து கிளம்பிய பனிப்புகையையும் குடல்களின் காற்றையும் பயத்தையும் அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற நினைப்பையும் அதேசமயம் அயர்ச்சியான மெளனத்திலும் பயங்கரத்தனிமையிலும் எப்போதும் இருந்துவிடவேண்டும் என்ற விருப்பத்தையும் தவிர்க்க முடியாமலிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ, 
பெயர் பிலர் டெர்னரா. மக்காந்தோ கிராமத்தை நிறுவுவதற்காகக் கிளம்பிய கூட்டத்தாருடன் இழுத்தடிக்கப்பட்டு வந்தவள் தான். பதினான்கு வயதில் அவளை 
322 

பலாத்காரமாக அடைந்துவிட்டு பிறகு இருபத்திரண்டு வயதுவரை காதலித்தும் காதலை வெளியில் சொல்ல முடியாமல் பிளவுண்டு கிடந்த ஒருவனிடமிருந்து அவளைப் பிரித்து இழுத்துக்கொண்டு வந்தனர் குடும்பத்தார். பூவுலகத்தின் எல்லைக்கே அவளைப் பின்தொடர்ந்து வரத் தயாராக இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தான். ஆனால் பின்பு அவன் வாழ்க்கை சீராகத் துவங்கியது தெரிந்ததும் அவனுக்காகக் காத்திருந்த அவள் பொறுமையிழந்து போனாள். மூன்று நாட்களிலோ மூன்று மாதங்களிலோ மூன்று வருஷங்களிலோ கடலிலிருந்தோ பூமியிலிருந்தோ வரப்போவதாக தன் சீட்டுக்கட்டுகள் சொல்லிச் சென்ற பொன்னிற அல்லது கறுப்புநிறத் தலையர்களை அவனாக அடையாளம் காணத்துவங்கினாள் பிலர் டெர்னரா. காத்திருந்தே தொடைகளின் பலத்தையும் மார்புகளின் இறுக்கத்தையும் மென்மையான வழக்கத்தையும் இழந்தாலும் இதயத்தின் பைத்தியக்காரத்தனத்தைத் தக்கவைத்துக்கொண்டாள். அதீத விளையாட்டுப் பொருளாய் விளங்கிய அவளைப் புதிர்ப்பாதைகள் நிறைந்த அறைக்குள் ஒவ்வொரு இரவும் தேடிப் பின்தொடர்ந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அறைக்கதவு தாழிடப்பட்டிருந்த ஒருநாள் அதைத் தட்டவும் செய்தான். முதல்முறை தட்டுவற்கான தைரியம் வந்துவிட்டால் கதவு திறக்கும்வரை தட்டியாக வேண்டும் என்பதைப் புரிந்திருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. நீண்டநேரம் அவன் காத்திருந்த பிறகே கதவு திறந்தது. பகற்பொழுதுகளில் படுத்துக்கொண்டு கனவு கண்டான். முந்திய இரவுகளின் நினைவுகளைச் சுவைத்துக் கொண்டிருப்பான் ஜே 
பபான் ஹோஸ் துர்க்காடியோ. அப்போது சில வேளைகளில் பிலர் டெர்னரா அங்கே வருவாள். சிரித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் அவனுக்கு ஏற்பட்ட பதற்றத்தை மறைப்பதற்கு பிரத்தியேகமான முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டிய தேவை அவனுக்கிருக்க வேண்டியதில்லை. அங்கே வந்து சென்ற அந்த சாமானியப் பெண்ணின் சிரிப்பு புறாக்களை பயமுறுத்திவிட்டாலும் அவளுக்கும் உள்மூச்சு விடுவதற்கும் இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கும் அவனைப் பயிற்றுவித்ததும் ஆண்கள் மரணத்தைக் கண்டு இப்படி பயப்படுவதற்கான காரணத்தை அவனுக்குக் கற்றுக்கொடுத்ததுமான அந்தக் கண்காணாத சக்திக்கும் எந்தத் தொடர்புமிருக்கவில்லை. அந்த அளவுக்கு தன்னில் லயித்துப் போயிருந்தான் ஜோஸ் அர்க்காடியோ. அவனுடைய தந்தையும் சகோதரனும் பழைய சட்டியிலிருந்த கசடிலிருந்து உர்ஸலாவின் காணாமல் போன தங்கத்தைப் பிரித்தெடுத்ததாக அறிவித்து வீட்டிலிருந்த இதர மனிதர்களிடம் பரபரப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியபோது கூட அதை ஜோஸ் அர்க்காடியோ சட்டை செய்யவில்லை. 
பலநாட்கள் கடுமையாக உழைத்து இக்காரியத்தைதச் சாதித்திருந்தார்கள் ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவ்ரலியானோவும். ரசவாத விஞ்ஞானத்தைப் பூவுலகத்துக்கு அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள் சந்தோஷமான உர்ஸலா. பரிசோதனைச்சாலையைச் சூழ்ந்து கொண்ட மக்காந்தோ கிராமவாசிகளுக்கு ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் அவ்ரலியானோவும் பட்டாஸ்களின் மீது கொய்யாப்பழ ஜெல்லியை வைத்து விநியோகித்து மகிழ்ந்தார்கள். திரும்பக்கிடைத்த தங்கத்தை, தான் அப்போதுதான் கண்டெத்த பொருளைப் போல், அவர்களுக்குக் காட்டினான் ஜோஸ் 
323 

அாககாடியோ புண்டயா. தங்கம் வைக்கப்பட்டிருந்த பீங்கான் கிண்ணத்தை ஏந்திக் கொண்டு சுற்றிய அவன் முன்னால் வந்தான் ஜோஸ் துர்க்காடி யோ. பரிசோதனைச் சாலைக்கு அது நாள் வரை வந்திராத ஜோஸ் ஆர்க்காடியோவிடம் அந்த மஞ்சள் சமாச்சாரத்தைக் காண்பித்துக் கேட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. மிகவும் பணிவுடன் கேட்டான் அவன். 
"எப்படியிருக்கிறது உனக்கு இது." 
"நாய்ப்பீயைப் போல" என்றான் பெரிய மகன். 
ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவுக்கு வந்த கோபத்தில் புறங்கையால் மகனை ஓங்கி அடித்தான். ஜோஸ் அர்க்காடியோவுக்கு கண்ணீரும் ரத்தமும் கலந்து வெளிவந்தன. அன்றிரவு அவனுடைய வீக்கங்களுக்கு மூலிகை ஒத்தடம் கொடுத்தாள் பிலர் டெர்னரா. டிங்ச்சர் பாட்டிலையும் பஞ்சையும் இருட்டில் தடவி எடுத்துத் தந்தாள். இன்னும் வலி அதிகமாகாத படிக்கு அவனுடன் உடலுறவு கொண்டு விளையாடினாள். அதன் முடிவில் தங்களை அறியாமலேயே இருவரும் நெருக்கத்தில் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். 
"உன்னுடன் தனியாக இருக்க விரும்புகிறேன். இப்படி ஒளிந்தே காதலித்தது போதும். ஒருநாள் எல்லோரிடமும் சொல்லிவிடப் போகிறேன்" என்றான் ஜோஸ் அர்க்காடியோ. 
அவனைச் சமாதானப்படுத்தாமலேயே சொன்னாள் பிலர் டெர்னரா. "தனியாக இருக்கும்போது விளக்கை அணைக்காமல் வைத்திருப்போம். அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும்; யாரும் குறுக்கிட முடியாதபடிக்கு கத்திக்கொண்டிருக்க என்னால் முடியும்; என் காதில் எதையும் முணுமுணுக்க உனக்கும் சாத்தியமாகும்." 
பிலர் டெர்னராவுடன் நடந்த இந்த சம்பாஷணையாலும் ஜோஸ் அர்க்காடியோ பண்டியா மீதிருந்த வெறுப்பினாலும் கட்டுக்கடங்காத உடலுறவுக்கான நிச்சயச் சாத்தியப் பாட்டினாலும் தைரியம் பெற்று அமைதிகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. உடனே போய் அப்படியே சகோதரனான அவ்ரலியானோவிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
சகோதரனின் சாகசங்களால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி மட்டுமே அவ்ரலியானோ முதலில் யோசித்தான். ஜோஸ் அர்க்காடியாவை அந்த அளவு கவர்ந்திழுத்த பெண்ணின் வசீகரம் முதலில் அவனுக்குப் புரியவே இல்லை. கொஞ்சமாக வரம்பித்து அவனிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஜோஸ் அர்க்காடியோவின் சாகங்களைப் பற்றி ஆச்சர்யமுற்ற அவனுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பினான் அவ்ரலியானோ. மூத்த சகோதரனிடம் தன்னையே அடையாளம் கண்டு பயத்தையும் சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் எய்தினான் அவ்ரலியானோ. அதிகாலைவரை சகோதரனுக்காக எரியும் கரித்துண்டுகளாலானதைப் போன்ற 
324 

படுக்கையில் விழித்திருப்பான் அவ்ரலியாளோ. ஜோஸ் அர்க்காடியோ திரும்பியவுடன் விழித்தெழும் நேரம்வரை இருவரும் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரேவிதமான மயக்கத்தில் இருப்பார்கள். அப்பாவின் விஷய ஞானத்திலும் ரசவாதத்திலும் ஆர்வம் காட்டாமல் தனிமைவாசத்தில் தஞ்சம் புகுந்தனர். 
"பையன்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ" என்று நினைத்த உர்ஸலா கடைசியில் அவர்கள் வயிற்றில் ஏதோ நாக்குப்பூச்சிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். வெறுக்கக்கூடிய கஷாயத்தை புழுக்களின் முட்டையை அரைத்துத் தயாரித்தாள். ஒரேமாதிரியான வேண்டா வெறுப்பான உணர்வுடன் இருவரும் குடித்துத் தொலைத்து விட்டு ஒருநாளைக்குப் பதினொரு முறை மலங்கழிக்க உட்கார்ந்த போது ரோஜா நிற ஒட்டுண்ணிகள் வெளியே வந்து விழுந்தன. அவற்றை அத்தனை பேருக்கும் காட்டிப் பரவசப்பட்டாள் உர்ஸலா. இரு புதல்வர்களின் மயக்கத்துக்கான ஆதாரக் காரணம் இப்பூச்சிகள்தான் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அதே சமயத்தில் அவ்ரலியானாவுக்குக் கொஞ்சமாக விபரம் புரியத்தொடங்கிவிட்ட சகோதரனின் அனுபவங்களை சொந்த அனுபவங்களாக எண்ணத்துவங்கினான். உடலுறவின் அதீத இயக்கங்களை தன்னிடம் ஜோஸ் அர்க்காடியோ விளக்கிக்கொண்டிருந்தபோது இடைவெட்டிக் கேட்டேவிட்டான் 'அவ்ரலியானோ. "அது எப்படித்தான் இருக்கும்." 
"பூகம்பத்தைப் போல." 
ஜனவரி மாத வியாழக்கிழமை காலை இரண்டு மணிக்கு அமரந்தா பிறந்தாள். அறைக்குப் பிறர் வருவதற்கு முன்பே உர்ஸலா குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். லேசாகவும் தண்ணீரைப் போல மிதப்பாகவும் இருந்த அமரந்தாவின் அங்க அவயவங்கள் மனித உறுப்புக்களாகவே இருந்தன. வீட்டுக்கு ஏகப்பட்ட பேர் வந்துவிட்டதும்தான் அமரந்தாவை உணர ஆரம்பித்தான் அவ்ரலியானோ. வீட்டிலிருந்த சந்தடியால் பாதுகாப்பு உணர்வு பெற்ற அவரலியானோ மூத்த சகோதரனை அன்றிரவு தேடிப் போனான். பதினொரு மணிக்கே பிலர் டெர்னராவின் படுக்கை அறைக்கு வந்துசேர்ந்திருந்த ஜோஸ் அர்க்காடியோவை எப்படி வெளியே கொண்டுவருவது என்று பலவாறு யோசித்த அவ்ரலியானோ அந்த வீட்டை பலமணிநேரம் சுற்றிவந்து விசிலடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் வேறுவழியின்றி தன் வீட்டுக்கு வந்தபோது, அங்கே அப்போதுதான் பிறந்திருந்த தங்கைப்பாப்பாவுடன் அப்பாவியாக மூஞ்சியை வைத்துக்கொண்டு விளையாடுகிற ஜோஸ் அர்க்காடியாவைக் கண்டான் அவ்ரலியானோ. 
பெண்பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு தேவைப்படுகிற நாற்பது நாள் ஓய்வு முடிவதற்கு முன்னே நாடோடிகள் மீண்டும் வந்துவிட்டார்கள். கழைக்கூத்தாடிகளும் பந்தாடுகிற வித்தைக்காரர்களும் நிறைந்த அக்கூட்டத்தினர் ஐஸ்கட்டியை மக்காந்தோ கிராமத்துக்குக் கொண்டுவந்த அதே நாடோடிகள் தான். மெல்க்யுடஸின் நாடோடிக்கூட்டத்தினரைப் போல விஞ்ஞானரீதியான முன்னேற்றத்தைத் தங்கள் 
325 

இலக்காக இவர்கள் கொண்டிருக்கவில்லை. தாம் கொண்டுவந்த கருவிகளைக்  கேளிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தினர். ஐஸ்கட்டியைக் கொண்டு வந்தக்காலத்தில்கூட வாழ்க்கைக்கான ஐஸின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தாமல் சாக்கஸ் கூடாரத்துக்கு வருபவர்கள் ஆவலாகப் பார்க்கும் பொருளாகவே கருதினார்கள். 
இந்த முறையோ இதர கைவினைப்பொருட்களுடன் மாய ஜமுக்காளம் ஒன்றையும் எடுத்து வந்தனர். நாடோடிகள். பறக்கும் சக்தி கொண்ட அதைப் போக்குவரத்து வளர்ச்சிக்கான அடிப்படைக்கருவியாகக் கருதாமல் கேளிக்கைப் பொருளாக மட்டுமே பாவித்தார்கள். அதில் ஏறி கிராமத்தின் வீடுகளைப் பார்த்தவாறே அவசரமாக ஒருமுறை பறந்து செல்வதற்காக மக்காந்தோ வாசிகள் தங்கள் கடைசி தங்க நாணயங்களைத் தோண்டி எடுத்து நாடோடிகளிடம் கொடுத்தார்கள். இத்தகைய கூட்டுக் குழப்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் மறைந்துகொண்டு ஜோஸ் அர்க்காடியோவும் பிலர் டெர்னராவும் பலமணி நேரம் காதலித்து இளைப்பாறினர். கூட்டத்துக்குள் மறைந்து திரிகிற காதலர்களான இருவரும் ரகசிய இரவுகளின்போது அனுபவித்திருந்த சந்தோஷமான கணங்களைவிடவும் காதல் என்ற உணர்வு இன்னும் ஆழமானதாகவும் ஒய்வானதாகவும் இருப்பதாக சந்தேகம் கொண்டனர். 
பிலர் டெர்னராதான் இருவரும் ஆழ்ந்துபோயிருந்த மாயச்சுழலை உடைத்தாள். தன் அருகாமையில் இருப்பதால் ஜோஸ் அர்க்காடியோவுக்கு ஏற்படுகிற உற்சாகத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கிடையேயான உறவின் மொத்த வடிவத்தையும் அந்தக் கணத்தையும் குழப்பிக்கொண்டவள் திடீரென்று உலகத்தையே அவன்மீது கொட்டிக் கவிழ்த்து விட்டாள். 
"இப்போதுதான் நிஜமாகவே நீ ஆண்பிள்ளை." 
அவள் சொன்னது அவனுக்குப் புரியாததால் இன்னும் விளக்கினாள். "அப்பாவாகப் போகிறாய் நீ." 
இதைக்கேட்ட ஜோஸ் அர்க்காடியோ பல நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேயில்லை. சமையலறையில் பிலர் டெர்னராவின் குலுங்கும் சிரிப்பைக் கேட்டு பயந்துபோய் பரிசோதனைச்சாலையில் தஞ்சமடைந்தான். உர்ஸலாவின் கோபமான சாபத்துடன் மீண்டும் அந்த பரிசோதனைச்சாலை இயங்கத் தொடங்கியிருந்தது. தவறான பாதையில் போய் மீண்டுவந்த மகனை அங்கே மகிழ்ச்சியுடன் வரவேற்றான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. அப்போதுதான் தத்துவவாதியின் கல்லைத் தேடி அலையும் பரிசோதனையில் முழுமையாக ஈடுபட்டு அதை சவாலாகவே எடுத்துக்கொண்டிருக்க ஜோஸ் அர்க்காடியோ புண்டியா மகனையும் அதே பரிசோதனையில் ஈடுபடுத்தி ஒருநாள் மதியம் பரிசோதனைச்சாலையின் ஜன்னலருகே அந்த மாய ஜமுக்காளம் பறந்து சென்றபோது மகன்கள் இருவரும் ஆர்வத்தோடு போய்ப்பார்த்தார்கள். நாடோடி 
326 

ஒருத்தன் ஜாலியாக உட்கார்ந்து ஓட்டிக்கொண்டிருக்க கிராமத்தின் ஏகப்பட்ட குழந்தைகள் கைவீசிக்கொண்டே துரத்திவந்தார்கள். அதைக்கூட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா சட்டை செய்யவில்லை. "கிடக்கட்டும் அந்த முட்டாள்கள். அவர்களின் கதை அவ்வளவுதான். அதைவிட பிரமாதமாக நிச்சயம் பறக்கப்போகிறோம். அழுக்கு ஜமுக்காளத்தை விடவும் நம்மிடம் அதிகமான விஞ்ஞானக் கருவிகள் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. 
| தத்துவவாதியின் முட்டையைத் தேடி அலைவதில் ஏதோ ஆர்வமிருப்பதாகக் காட்டிக்கொண்ட போதும் உண்மையில் ஜோஸ் அர்க்காடியோவுக்கு அதன் சக்தி பற்றி ஏதும் தெரியவில்லை. அதைப் பார்த்தபோதுகூட அரைகுறையாக ஊதிப்போய்விட்டிருந்த போத்தல் என்றே நினைத்தான். கொஞ்சமாகத் தன் கவலைகளிலிருந்து மீள முடியாமல் பசியும் தூக்கமும் இழந்து துன்புற்றான் ஜோஸ் அர்க்காடியோ. தன் பரிசோதனை முயற்சிகளில் தோல்வி அடைந்துகொண்டிருந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கோபமடைவது போலவே ஜோஸ் அர்க்காடியோ கடுப்பாகிப்போனான். ரசவாதத்தை அளவுக்கு அதிகமாக நேசித்துவிட்டதால்தான் மகனுக்கு இந்த நிலைமை என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்ட ஜோஸ் அர்க்காடியோ புண்டியா பரிசோதனைச் சாலையின் பொறுப்புகளிலிருந்து அவனை விடுவித்தான். ஆனால் அவ்ரலியானோவுக்கு மட்டும் சகோதரனின் தற்போதைய வியாதிக்கான காரணம் தத்துவவாதியின் கல்லைத் தேடி அலைந்ததில் இல்லை என்பது விளங்கிவிட்டது. இதற்குள் ஜோஸ் அர்க்காடியோவுக்கு எதிலும் ஈடுபாடு இல்லாமல் போயிற்று. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதிலும் ஈடுபட்டுவந்த அவன் விட்டேற்றியாகவும் கோபம் கொள்பவனாகவும் ஆகிப்போனான். உலகத்தின் மீதே வஞ்சம் கொண்டுவிட்ட ஜோஸ் 'அர்க்காடியோ ஓரிரவு தனிமைவாசத்தை நாடும் பதற்றத்துடன் படுக்கை விட்டகன்றான். வழக்கமாக அடைகிற பிலர் டெர்னராவின் வீடன்றி, விழாக்கோலம் பூண்டிருந்த நாடோடிகளின் கூடாரங்களை நோக்கிப்போனான் ஜோஸ் அர்க்காடியோ. அங்கிருந்த ஏகப்பட்ட அதிசயங்களைச் சுற்றிவந்தும் எதிலும் ஆர்வம் கொள்ளாமல் அவை அத்தனையிலும் பங்கெடுக்காத இன்னொன்றால் ஈர்க்கப்பட்டான். அது ஒரு பெண். சிறிய நாடோடிப் பெண். உண்மையில் குழந்தை போலிருந்தாள். போட்டிருந்த மணிமாலைகளில் அழுந்திப்போய்விட்டிருந்தவளைத்தான் வாழ்க்கையில் கண்ட மிக அழகான பெண்ணாகத் தீர்மானித்தான் ஜோஸ் அர்க்காடியோ. பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் பாம்பாகப் போகுமாறு சபிக்கப்பட்டவனின் சோகக்காட்சியைக் காணக் கூடிய கூட்டத்தின் நடுவில் அவளை நோட்டம் விட்டான் ஜோஸ் அர்க்காடியோ. 
பாம்புமனிதனின் வாழ்க்கை குறித்த கேள்விபதில் நிகழ்ச்சி சோகமாக நடந்தேறிக் கொண்டிருக்க, முதல்வரிசை வரையில் முண்டியடித்து வந்து நாடோடிப்பெண்ணின் பின்னால் நின்றுகொண்டான் ஜோஸ் அர்க்காடியோ. அவள் பின்புறமாகத் தன் உடலை வைத்து அழுத்தினான். தன்னை விடுவித்துக்கொள்ள அப்பெண் முயன்றபோது இன்னும் வைத்து அழுத்தினான் ஜோஸ் அர்க்காடியோ. அதிர்ச்சியுடனும் பயத்துடனும் 
327 

வேட்கையின்  இந்த நிச்சய சாட்சியத்தை நம்ப மறுத்து நின்றவள் கடைசியில் அவனைப் பார்த்து நடுங்கிய புன்னகையை உதிர்த்தாள். அதே சமயத்தில் பாம்புமனிதனை இரண்டு நாடோடிகள் கூண்டுக்குள் போட்டுக் கூடாரத்துக்குத் தூக்கிப் போனார்கள். காட்சியை அதுவரை நடத்திக்கொண்டிருந்த நாடோடி கூறினான். 
கூடியிருக்கும் பெருமக்களே, பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்துவிட்டதால் நூற்றைம்பது வருஷங்கள் வரை தினசரி இரவுசமயத்தில் தலை வெட்டுப்படுமாறு சபிக்கப்பட்ட பெண்ணைத்தான் பார்க்கப் போகிறீர்கள். இப்போதும் தலை வெட்டுண்டு தொங்கப்போகிறாள்." 
சிரச்சேதக் காட்சியைக் காண விரும்பாத ஜோஸ் அர்க்காடியோவும் நாடோடிப்பெண்ணும் அவளுடைய கூடாரத்துக்குச் சென்று அங்கே முத்தமிட்டுக் கொண்டே பதற்றத்துடன் உடைகளைக் கழற்றினார்கள். கஞ்சியால் மொடமொட வென்றிருந்த மார்புக்கச்சையைக் கழற்றியவுடன் ஒன்றுமில்லாததாகவே ஆகிவிட்டாள். தளர்ந்துபோன சிறிய தவளையாகத் தெரிந்த அவளுடைய இன்னும் வளராத மார்பகங்களும் கால்களும் ஜோஸ் அர்க்காடியோவின் முழங்கை அளவுக்குக்கூட வரவில்லை என்றாலும் அந்த மென்மையை ஈடுசெய்வதான உறுதியுடனும் வெம்மையுடனும் விளங்கினாள் நாடோடிப்பெண். 
எப்படியிருந்த போதிலும் ஜோஸ் அர்க்காடியோவால் கூடாரத்தில் வைத்து ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் ஏகப்பட்ட நாடோடிகள் உபகரணங்களை விற்பதற்காக அங்கே வந்துவிட்டுக் கடைசியில் படுக்கையில் சாய்ந்து பகடைகளை வீசி விளையாடிக் கொண்டிருந்ததுதான். கூடாரத்தின் நடுப்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளக்கு பாப்பிய வெளிச்சத்தில் தழுவுதலுக்கிடையே என்ன செய்வதென்றே தெரியாமல் ஜோஸ் அர்க்காடியோ மல்லாந்து படுக்க, நாடோடிப்பெண் அவனைக் கிளர்ந்தெழச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தாள். நாடோடிக்கூட்டத்தில் சேராதவனாகவும் கிராமவாசியம் இல்லாத ஒருத்தனுடன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள் இன்னொரு நாடோடிப்பெண். அவர்கள் இருவரும் உடைகளை அவிழ்க்க ஆரம்பித்தவுடன் வந்திருந்த பெண் ஜோஸ் அர்க்காடியோவின் பிரம்மாண்டமான மிருகத்தைப் பரிதாபகராமாகப் பார்த்து உணர்ச்சியுடன் சொன்னாள். 
"மகனே, கடவுள் உன்னை இப்படியே வைத்துக் காப்பாற்றட்டும்." 
ஜோஸ் அர்க்காடியோவுடன் வந்திருந்த பெண் இருவரையும் போகச்சொல்லிய போதும் தரையில் படுக்கைக்கு அருகே இருவரும் படுத்துக்கொண்டு போக முடியாது என்று கறிவிட்டார்கள். அவர்களுடைய உணர்வெழுச்சியானது ஜோஸ் அர்க்கோடியோவைக் கட்டிவிட்டது. அவன் தொட்டவுடன் அவளுடைய எலும்புகள் அலங்கோலமாக நொறுங்கி விளையாட்டுப்பொம்மைகளைப் போலத் தவிடுபொடியாகிவிட, அவள் தோலானது. 
328 

வெளிறி வியர்வை வழிந்தோட, கண்களில் நீர் சுரக்க, அவள் உடலிலிருந்து சோகமான கேவலும் களிமண்ணின் வாசனையும் வெளிவந்தன. ஆனாலும் தாக்குதலைத் தீரத்துடன் தாங்கிக்கொண்டாள் அந்தச் சிறுபெண், தேவதைகளால் காற்றில் செலுத்தப்பட்டவனாக உணர்ந்த ஜோஸ் அர்க்காடியோவின் இதயம் மென்மையான ஏசல்களாக வெடித்து அவள் காதினில் பாய்ந்து அவளுடைய மொழியில் வாய்வழியாக வெளிவந்தது. இது நடந்தது வியாழக்கிழமை என்ப சனி இரவில் சிவப்பு முண்டாசைச் சுற்றிக்கொண்டு ஜோஸ் அர்க்காடியோ நாடோடிகளுடன் பயணப்பட்டுவிட்டான். 
அவனைக் காணோம் என்ற தெரிந்தவுடன் கிராமம் பூராவும் தேடினாள் உர்ஸலா. நாடோடிகளின் கூடாரங்களோ குப்பைக்கூளங்களாக எரிந்து கொண்டிருந்தன. அந்தச் சாம்பலுக்கிடையில் முத்துமணிகளைத் தேடிக்கொண்டிருந்த யாரோ உர்ஸலாவிடம் அவள் மகனை முந்திய இரவு பார்த்தாகவும் பாம்புமனிதன் கூண்டை வண்டியில் வைத்து நாடோடிகளுடன் சேர்ந்து அவன் தள்ளிக்கொண்டு போனதாகவும் சொல்லிவிட, அவன் நாடோடியாகிவிட்டான்' என்று கணவனிடம் போய்க் கூச்சலிட்டாள் உர்ஸலா. ஆனால் மகன் காணாமல் போனது பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாதிருந்தான் ஜோஸ் 'அர்க்காடியோ புண்டியா. 
'போனது நிஜமாயிருக்கட்டும். அப்படியாகத்தான் மனிதனாக மாறுவான் என்று சொன்னான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. ஏற்கனவே ஆயிரம் முறை அரைக்கப் 'பட்டுவிட்ட ரசாயனப் பொருட்களை ஆயிரத்து ஓராவது முறையாக 'அரைத்துக்கொண்டே 
நாடோடிகள் எங்கே போயிருக்கக்கூடும் என்று உர்ஸலா விசாரித்துப்பார்த்தாள்: அப்படிக்காட்டப்பட்ட வழியில் விசாரித்துக்கொண்டே போனாள். அவர்களைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது. ஆனால் திரும்பிய வரவேண்டும் என்ற எண்ணமே வரமுடியாத அளவுக்கு கிராமத்திலிருந்து மிக அதிக தூரம் போய்விட்டிருந்தாள். அன்றிரவு எட்டு மணிக்குத்தான் அவள் திரும்பவில்லை என்பதைக் கவனித்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியா, தான் அரைத்துக்கொண்டிருந்த ரசாயனக் கலவையை சாணத்தில் ஊறவைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த அமரந்தாவை நோக்கிச்சென்றான்; சில மணி நேரத்தில் கிராமவாசிகளிடம் சொல்லி அமரந்தாவை ஒரு பெண்ணிடம் விட்டுவிட்டு காணாமல் போன உர்ஸலாவைத் தேடிப் புலனாகாத பாதைகளிலே அலைந்தான். சில கிராமவாசிகளுடன் அவ்ரலியானோவும் அவனுடன் வந்தான். யாரும் அந்தப் பக்கம் வரவில்லை என்று புரியாத பாஷை பேசிய அமெரிந்திய மீனவர்கள் சைகை மூலம் சொல்லியும் கேட்காமல் மூன்று நாட்கள் அலைந்துவிட்டு மக்காந்தோவுக்கு எல்லோரும் திரும்பிவிட்டார்கள். 
சோகத்தால் பல வாரங்கள் செயலற்றுப்போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா கடைசியில் அமரந்தாவைக் கவனிப்பதில் ஈடுபடத் துவங்கினான். தாயைப் போல 
329 

அவளைக் குளிப்பாட்டி உடை அணிவித்தான். உர்ஸலாவுக்குத் தெரியாத சில பாடல்களையும் இரவில் பாடிக்கொண்டிருந்தான். ஒரு நாள் பிலர் டொன வேலைகளைக் கவனிக்க வந்தபோது மூத்த சகோதரனும் அம்மாவும் தொலைந்துபோனது அவளால்தான் என்று அவ்ரலியானோவுக்குப் பொறிதட்டியது. சோகமானது அந்த அளவுக்கு அவன் மூளையைக் கூர்மையாக்கி விட்டிருந்தது. அதையடுத்து அவன் அவளைத் துன்புறுத்திய மெளனமான சூழ்நிலையின் தானாகவே வெளியேறிய அந்தப் பெண் மீண்டும் அந்த வீட்டுக்கே வரவில்லை. 
காலம் சூழலைத் தணித்தது. எப்போது என்று தெரியாமலேயே ஜோஸ் அர்க்கார்டியோ புண்டியாவும் அவ்ரலியானோவும் பரிசோதனைச்சாலைக்குத் திரும்பிவிட்டிருந்தனர். தூசிதட்டி, தண்ணீர்க்குமாயை ஒளியேற்றிவிட்டு சாணத்தில் ஊறிக்கொண்டிருந்த ரசாயனச் சமாச்சாரத்தை எப்படியாகிலும் மாற்றிவிடவேண்டும் என்ற முனைப்பில் உழைத்துக்கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகனும், பாதரசப்புகையால் அழுத்தம் பெற்ற அந்தச் சிறிய அறையில் பிரம்புக்கூடையில் உட்கார்ந்து கொண்டே அமரந்தாவும் இருவரின் செயல்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்துவந்தாள். உர்ஸலா காணாமல் போன சில மாதங்களில் விநோதமான விஷயங்கள் நடக்கத்தொடங்கின. 'அலமாரியில் மறதியாக வைக்கப்பட்டிருந்த காலி ஃப்ளாஸ்க் கனத்துப்போய் நகர்த்தவே முடியாமல் ஆகிவிட்டது. மேஜையிலிருந்த பாத்திரத்துத் தண்ணீர் அடுப்பில்லாமல் அரை மணி நேரத்தில் ஆவியாகிப்போனது. பரபரப்புடன் இவற்றைக் கண்காணித்து வந்த ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவும் மகன் அவ்ரலியானோவும் தாங்கள் தயாரித்துக் கொண்டிருந்த சமாச்சாரத்தால்தான் இதெல்லாம் நடக்கமுடியும் என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருநாள் அமரந்தாவின் பிரம்புக்கூடை அறையைச் சுற்றி வந்து நின்றது. பீதியில் அதை நிறுத்த ஒடிய அவ்ரலியாயோவைத் தடுத்துவிட்டான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. கலவரம் அடையாமல் கூடையை அதன் இடத்தில் வைத்துவிட்டு மேஜையின் காலுடன் சேர்த்துக் கட்டினான் ஜோஸ் அர்க்காடியோ புண்டியா. "வெகுகாலமாக எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோமோ அது நடந்தே தீரும்" என்ற தீர்மானத்துடன் அவன் பின்வருமாறு சொல்லக்கேட்டான் அவ்ரலியானோ. 
"கடவள்பற்றி பயம் உனக்கில்லை என்றால் உலோகங்கள் மூலமாக அவரிடம் பயங்கொள்." 
காணால் போய் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் திரும்பினாள் உர்ஸலா. புத்துணர்ச்சியுடனும் இதுவரையில் கிராமவாசிகள் அறிந்திராத மோஸ்தரில் ஆடைகள் அணிந்துகொண்டும் வந்து சேர்ந்தாள். ஜோஸ் அர்க்காடியோ புண்டியாவால் அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. 
"ஏதோ நடக்கப் போகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தேனே." என்று மகிழ்ச்சியுடன் கூவினான். பரிசோதனைச்சாலையில் பல நாட்களாக அடைபட்டு அந்த 
330 

ரசாயனச்சமாச்சாரத்தை மாற்றிவிட முயன்றபோதெல்லாம் காணவிரும்பிய மாயா விநோதம் என்னவாக இருக்கவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த தத்துவவாதியின் கல்லாகவோ உலோகங்களுக்கு உயிரூட்டக்கக்கூடிய ஓங்காரச் சுவாசத்தின் விடுதலையாகவோ வீட்டின் தாழ்ப்பாள்களையும் பூட்டுக்களையும் தங்கமாக மாற்றிவிடக்கூடிய சக்தியையோ அல்லாது உர்ஸலாவின் வருகையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக ஜோஸ் அர்க்காடியோ புண்டியா எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் அடைந்த பரபரப்பு அவளிடம் காணப்படவில்லை. ஏதோ ஒருமணிநேரம் மட்டுமே விலகிப்போயிருந்தவளைப் போல சாதாரணமாக அவனை முத்தமிட்டுவிட்டுச் சொன்னாள். 
'யார் வந்திருக்கிறார்கள் பார்." 
கதவைத்தாண்டி தெருவுக்குப் போன ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அதிர்ச்சியால் உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு பெரிய கூட்டம், நாடோடிகளாக இல்லாமல் மக்காந்தோ கிராமவாசிகளைப் போலவே இருந்த கூட்டத்தினர். சீரான முடியும் கறுத்த தோலும் கொண்ட அவர்கள் மக்காந்தோ கிராமவாசிகள் பேசிய அதே பாஷையைப் பேசி அதே நோவுகளைப் பற்றி அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர். கொண்டுவந்த கோவேறு கழுதைகள் மீது பாத்திரங்கள், நாற்காலிகள் மற்றும் தட்டுமுட்டுச்சாமான்கள் இருந்தன. சாதாரண தினசரி எதார்த்தத்தை விற்க வந்தவர்களாக அவர்கள் நின்று கொண்டிருந்தனர். சதுப்புநிலத்தைத் தாண்டி இரண்டே நாட்கள் நடைதூரத்தில் இருந்த அவர்களுடைய கிராமத்தை அடுத்து ஏகப்பட்ட ஊர்களில் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு மாதம் ஒருமுறை தபால் வந்து கொண்டிருந்தது. 
ஆக விநோத சமாச்சாரங்களைக் குறிவைத்து ஜோஸ் அர்க்காடியோ புண்டியா அலைந்த போது தட்டுப்படாத வழியானதை, தேடிப்போன நாடோடிக்கூட்டத்தினரைப் பிடிக்கமுடியாத உர்ஸலாதான் கண்டறிந்துவிட்டிருந்தாள். 
தமிழில் நாகார்ஜுனன் 

No comments:

Post a Comment