தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, August 25, 2019

அளவற்ற காதலைப் பரவ விடுகிற பியானோக்காரன் நான் - Gabriel Garcia Marquez பேட்டி - க்ளாடியா ட்ரேஃபுஸ் தமிழில் - வளர்மதி ------மாஜிக் கம்பளங்களே எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆனது தமிழில் - பால் பிரகாஷ்

அளவற்ற காதலைப் பரவ விடுகிற பியானோக்காரன் நான் - Gabriel Garcia Marquez
பேட்டி - க்ளாடியா ட்ரேஃபுஸ் 
தமிழில் - வளர்மதி 
https://www.facebook.com/profile.php?id=1469632572&ref=br_rs

From Kalkuthirai little magazine

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலைப் பாராட்டுகிற சில விமர்சகர்கள் புண்டியா குடும்பத்தின் கதையைச் சொல்லும் வாக்கில் லத்தீன் அமெரிக்காவின் ஒட்டுமொத்த சரித்திரத்தையே சொல்லிப் போயிருக்கிறீர்கள் என்கிறார்கள். மிகையான கூற்று என்று சொல்லலாமா.

நாவல் லத்தீன் அமெரிக்காவின் சரித்திரம் அல்ல. கண்டத்தின் ஓர் உருவகம்தான். 



களங்கமற்ற எரிந்திராவும் அவள் காதகிப் பாட்டியும் கதையல் இளம் விபச்சாரி காதலனிடம் "அபத்தத்தையும் தீவிரமாகச் சொல்வது தான் உன்னில் எனக்குப் பிடித்தது" என்கிறாள். மார்க்வெஸின் சுய வாக்குமூலமாக இதைக் கொள்ளலாமா

நிஜம். அப்பட்டமான சுயசரிதைக் குறிப்புதான். குறிப்பு என் இலக்கியம் தொடர்பான விளக்கம் மட்டுமல்ல. குணாம்சம் பற்றியதும், துயரம் கொண்ட தோற்றத்தை வெறுக்கும் என்னால் கொடியதும் நம்ப இயலாததுமான செய்திகளைக் கூட சாதுவான முகத்துடன் சொல்ல முடியும். இத்தகைய திறமையை அம்மாவின் அம்மாவான டோனா ட்ரான்குலினாவிடமிருந்து சுவீகரித்துக் கொண்டேன். இயற்கையை விஞ்சுகிற பயங்கரக்கதைகளை அமைதி கொண்ட முகபாவத்துடன் தெரிவிக்கிற அற்புதக் கதை சொல்லி அவள், பெரியவனானதும் அவளுடைய கதைகள் நிஜம்தானா என்று ஆச்சரியம் கொண்டிருக்கிறேன். அன்று அவளுடைய வெளிக்காட்டிக் கொள்ளாத முக பாவத்தை வைத்து அவளை நம்புவதை வாடிக்கையாக்கிக் கொண்டேன். இப்போது எழுத்தாளன் என்ற முறையில் நானும் நம்ப முடியாத விஷயங்களை அமைதி கொண்ட தொனியில் சொல்கிறேன். ஆக எந்த விஷயத்தையும் எத்தனைக்காலம் நம்பத்தக்கதாக மாற்றிவிட்டிருக்க முடிகிறதோ அது வரையில் எதையும் சாதித்துக் கொள்ள முடிகிறது. பாட்டி இதைத்தான் கற்றுத்தந்தாள் 


0 தினசரி வாழ்க்கையுடன் நம்பமுடியாதவற்றையும் தொன்மங்களையும் கலந்த magical realist பாணியில் எழுதுகிறீர்கள். உதாரணமாக கதையில் வருகிற பாதிரியார் ஒருத்தர் சாக்லேட் பானம் அருந்தும்போது காற்றில் மிதக்கிறார். இத்தகைய புனைவுகள் எந்த அளவுக்கு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்ற கேள்வி வருகிறது. 


ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் உட்பட்ட என்னுடைய அத்தனைப் புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியும் வாழ்நிலை அடிப்படை கொண்டதுதான். வாழ்க்கையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் வாசகர்களுக்காக பூதக்கண்ணாடியை வைக்கிறேன். உதாரணமாக எரிந்திரா சிறுகதையில் யுலிஸஸ் என்பவன் கண்ணாடியைத் தொடும்போதெல்லாம் அதன் நிறம் மாறிவிடுகிறது. நிஜமாக இருக்க முடியாது என்றாலும். காதலைப்பற்றி எக்கச்சக்கமாக நிறைய ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதால் பையன் காதலிப்பதை புதிதாகச் சொல்ல இப்படியான வழியைக் கண்டுபிடிக்கிறேன். கண்ணாடியை நிறம் மாற வைக்கிறேன். "இதெல்லாம் காதலின் விளைவாகத்தான் நடக்க முடியும். யாரவள்" என்று அவன் அம்மாவைக் கேட்க வைக்கிறேன்.. காதலாக வெகுகாலம் சொல்லப்பட்டு வந்திருப்பதை முன்வைத்து காதல் வாழ்க்கையில் அத்தனையையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறேன் இங்கே. 


ப கடந்த இருபது வருஷங்களில் லத்தீன் அமெரிக்காவிலிருந்து magical realist நாவல்கள் திடீரென்று வெடித்துக் கிளம்புகிறதைப் பார்க்கிறோம். எதார்த்தத்தையும் கனவுத்தன்மை தாண்டவற்றையும் கலந்துவிடுகிற துணிச்சலான இத்தகைய படைப்புகள் வருமளவுக்கு எழுதுபவர்களை ஊக்குவிக்க லத்தீன் உலகத்தில் என்னதான் இருக்கிறது. 


சூழல் சந்தேகத்துக்கு இடமின்றி அற்புதமானது. குறிப்பாக கரீபியப்பிரதேசம். கொலம்பியாவின் மேட்டு நிலமான ஆண்டஸ் பகுதியிலிருந்து வேறுபட்டது. கர்பியப் பிரதேசத்திலிருந்து வந்தவன் நான். கொலம்பிய சரித்திரத்தின் காலனியக் காலத்தில் தம்மை மதிப்பு கொண்டவர்களாகக் கருதிக்கொண்டவர்கள் எல்லோருமே நாட்டின் உட்பகுதிகளுக்குப் போய்விட்டார்கள். சமுத்திரக்கரையில் அற்புதமான கொள்ளைக்காரர்களும் கூத்தாடிகளும் சாகசவீரர்களும் அவர்களுடைய வழிவந்தவர்களும் எஞ்சிவிட்டார்கள். மகிழ்ச்சி நிரம்பப்பெற்ற குதூகலமான இவர்களுடன் அடிமைகளும் கலந்து விட்டார்கள். 


இந்தச் சூழலில் வளரும்போது கவிதை வளமும் கதை வாய்ப்பும் தாமாக வருகின்றன, கரீபியப்பிரதேசத்தில் வாழ்கிற என் ஜனங்கள் எதையும் நம்பக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். 


முறைகளின் தாக்கம் சுய கலாச்சாரங்கள், கத்தோலிக்க மரபு போன்ற பலதரப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. மேலோட்டமான எதார்த்தத்தைத் தாண்டி ஊடுருவிப் பார்ப்பதற்கு திறந்த மனப்பான்மை இருக்கிறது. அரக்காடக்கா என்கிற கரீபியப்பிரதேச கிராமத்தில் சாதாரணமான பார்வையின் மூலம் நாற்காலிகளை நகர்த்திவிடக்கூடிய அற்புத மனிதர்களைப் பற்றியெல்லாம் குழந்தைப் பருவத்தில் கேட்டிருக்கிறேன். தொற்றுநோய் கொண்ட பசுமாடுகளைக் குணப்படுத்துவதற்காக அவற்றின் முன்னே போய் ஒருவர் நிற்பார். உடனே மாட்டின் தலையிலிருந்து புழுக்கள் தாமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்துவிடும். நானே நிஜத்தில் காட்சியைப் பார்த்திருக்கிறேன். 

0 இத்தகைய நிகழ்வை எப்படி விளக்க முடிகிறது. 


முடியுமென்றால் பற்றி இப்போது சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். அப்போதும் இப்போதும் அற்புதம்தான். 



0 ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கு நிஜவாழ்க்கையில் உள்ள முன் மாதிரிகளைப் பார்ப்போமா. நாவலின் குலத்தாயாக வருகிற உர்லாவுக்கு உங்கள் பாட்டிதான் முன்மாதிரியோ. 


நாவலில் பாட்டி இருக்கிறாள். இல்லாமலும் இருக்கிறாள். இரண்டு பேருமே ரொட்டித் தொழில் செய்தவர்கள். மூட நம்பிக்கைகள் நிறைய உள்ளவர்கள். ஆனால் நாவலின் எல்லாப் பாத்திரங்களும் அறிந்திருந்த நபர்களின் கலவைகள். ஒரு நபரின் ஆளுமையின் பகுதிகளை இதர் கர்களின் பகுதிகளுடன் ஒப்பிடுகிறேன். பாட்டியைப் பற்றிக் கேட்கிறீர்கள். பிறந்ததிலிருந்து எட்டுவயது வரை தாத்தா வீட்டில் இருந்தேன். ஆண்கள் நானும் தாத்தாவும்தான். பாட்டி, பாட்டியின் தங்கை. தாத்தா வீடு பெண்கள் நிரம்பியது. அத்தனை பெண்களுமே மூட் நம்பிக்கைகள், கற்பிதங்கள் கொண்டவர்கள். பாட்டி டோனா ட்ரான்குலினா அற்புதமான விஷயங்களையும் மூடுமந்திரமின்றிச் சொல்லுவாள். அவள் பூர்விகம் என்னவென்று தெரியவில்லை. அனேகமாக சலேஷியாவாகத்தான் இருக்க முடியும். ஸ்பெயின் நாட்டின் விசித்திரமான பகுதி. அதீத இறையுணர்வாலும் மந்திர தந்திரங்களாலும் கட்டுண்ட பிரதேசம். இதனால்தான் பாட்டிக்கு இயல்பான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இயற்கையை மீறிய அர்த்தங்களுடன் இருக்கின்றன. ஜன்னல் வழியாக வண்ணத்துப்பூச்சி பறந்தால் இன்று கடிதம் வரும் என்பாள். பால் பொங்கி வழிந்து விட்டால் உறவுக்காரர்களில் யாருக்கோ உடம்பு சரியில்லை என்பாள். சிறுவயதில் என்னை நடுராத்திரி எழுப்பி கதை சொல்லுவாள். விநோத காரணங்களால் தங்கள் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து , கொண்டவர்கள், ஆவி அலைகிற மரணத்தைத் தழுவியவர்கள் பற்றியெல்லாம் பயங்கரக் கதைகள் சொல்வாள். அரக்காடக்காவிலிருந்த எங்கள் வீடு பேய்வீடாகக் கூடத் தோன்றும். அந்தக்கால அனுபவங்கள் எழுத்துக்களில் இடம்பிடித்துக் கொண்டு விட்டன. 


ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் மிமிபுண்டியாவின் காதலனின் வருகைக்கு முன்னால் கொஞ்சம் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் வரும். இந்த நிகழ்வுக்கான நிஜ வாழ்க்கைப் பின்னணி உண்டு. வீட்டுக்கு மின்சார ரிப்பேர் செய்பவர் வந்து போன பிறகு சமையலறையில் வண்ணத்துப்பூச்சி ஒன்றைப் பார்த்த பாட்டி கரித்துண்டால் உடனே அடித்துவிட்டாள். "ஒவ்வொரு முறை வரும்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன" என்று அறிவித்தாள். இப்படி எதையாவது நிமித்திகமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அவள் நிறைய லாட்டரி ஆடுவாள். ஒருமுறை கூட ஜெயிக்கவில்லை என்ற போதும். 


தாத்தாவின் யுத்தகால அனுபவங்களை அவரிடமிருந்து கேட்டிருக்கிறீர்கள். பாட்டியின் விநோதக் கதையைப் போலவே தாத்தாவின் கதைகளாலும் அலைக்கழிக்கப்பட்டிருக்க வேண்டுமே நீங்கள். 

இல்லை என்றுதான் கூறவேண்டும். உள் நாட்டு யுத்தத்தைப் பேசியபோ து ஏதோ துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு செய்த வீரச்செயல்களால் ஆன இனிமையான அனுபவங்கள் என்று பேசினார். இப்போது நடக்கிற யுத்தங்களைப் போல அந்தக் கதைகள் இல்லை. ஆனால் பயங்கரமான களங்களைச் சந்தித்த உள்நாட்டு யுத்தங்களில் எக்கச்சக்கமான மரணங்களும் நிகழ்ந்தன. ஆனால் அதே கால கட்டத்தில் தாத்தா நிறையக் காதலித்து எக்கச்சக்கமான பிள்ளை பெற்றுத் தள்ளினார். 

, 0 நாவலில் அவ்ரலியானோ புண்டியா 32 உள்நாட்டு யுத்தங்கள் நடந்த காலத்தில் 17 கள்ளக்குழந்தைகளை 17 பெண்களுக்கு பெற்றுத் தருகிறான். நிக்கொலஸ் மார்க்வெஸ்ஸுக்ரும் 17 குழந்தைகள் உண்டா . 

யாருக்குத் தெரியும். 15 வருஷங்களுக்கு முன்னால்கூட முதல்முறையாக இத்தகைய நெருங்கிய உறவினர்களை சந்திக்க வாய்த்திருக்கிறது. அம்மாவின் கணக்குப்படி அவர்கள் 17 பேர், திருமணத்தின் மூலமாகப் பிறந்த இரண்டு குழந்தைகளில் அம்மா ஒருத்தி. 


0 ஆக உள்நாட்டு யுத்தங்கள் பற்றிய தாத்தாவின் வசீகரமான நினைவுகள் நிஜத்தில் இத்தகைய உறவுகள் பற்றியவை. 

யுத்தம் இருந்ததோ இல்லையோ கலவியையும் காதலையும் விரும்பினார் என்று நினைக்கிறேன். என்னுடைய நினைவில் பெரிய கலவிக்காரர் அவர். 

0 பாட்டிக்கு எரிச்சல் தந்திருக்க வேண்டுமே

ரொம்பப் பொறாமை கொண்டவள். ஆனால் கள்ளக்குழந்தை ஒன்று பிறந்தது கேள்விப்பட்டதும் நாவலின் உர்ஸுலாவாக மாறி விடுவாள். குழந்தையை வீடடுக்குத் தூக்கிக்கொண்டு வந்து விடுவாள். குடும்பரத்தம் அநாதையாகத் திரிந்து கொண்டு இருக்கக்கூடாது அவளுக்கு. எல்லாக் குழந்தைகளும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டில் ஒரு கட்டத்தில் எந்தக் குழந்தை திருமணம் மூலம் பிறந்தது, எது அப்படி இல்லை என்பதை சொல்ல முடியாமல் போயிற்று. பாட்டி ரொம்ப உறுதியானவள். யுத்தத்துக்கு தாத்தா போய் ஒரு வருஷத்திற்கு செய்தி எதுவுமில்லை. வீட்டைக் கவனித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாள். இப்படி வசித்தபோது ஓர் இரவு கதவில் தட்டும் சத்தம், அதிகாலை இருட்டில் எவரோ சொன்னார்கள். 'டரான் குலினா . நிக்கோலஸைப் பார்க்கவேண்டுமா, உடனே வெளியே வா." ஓடிப் போய் கதவைத் திறந்தாள், குதிரைகளில் போகிறவர்கள் தெரிந்தார்கள். அவரைப்பற்றி அடுத்த செய்தியைப் பெற ஒரு வருஷம் ஆனது. 

0 உங்களுக்குப் பிடித்த பாத்திரம் உர்ஸலா என்று தொனிக்கிறதே. . 

அவள் தான் உலகத்தை ஒருசேரப் பிடித்து வைத்திருக்கிறாள். குழந்தையாக இருந்தபோது நிஜவாழ்க்கையில் நான் அனுபவித்ததற்கு இது நேர் எதிரானது. தாத்தா வீட்டில் இருந்த பெண்கள் உலகத்தோடு ஒட்டாமல் போனவர்கள். என்றாலும் பெண்கள் நடைமுறை ரீதியானவர்கள் என்றும் நம்புகிறேன். ஆண்கள் ஊர்சுற்றிக்கொண்டு பைத்தியக்காரச் செயல்களில் ஈடுபடும் கற்பனாவாதிகள். வாழ்க்கையின் கஷ்டங்கள் பெண்களுக்குத் தெரியும். நடைமுறை ரீதியான, வாழ்க்கையை தாங்கிப் பிடிக்கிற பெண்களின் முன்மாதிரி வடிவம்தான் உர்ஸலா. 


தாத்தா மரணமடைந்தபோது ரொம்பக் கஷ்டமாக இருந்ததா. 

இல்லை. உண்மையில் மரணத்தை உணரவே இல்லை. எட்டு வயதில் மரணம் பற்றிய புரிதல் ஏதும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பள்ளிகளில் வளர்ந்ததால் அனேகமாக சொர்க்கத்துக்குப் போய்விட்டார் என்று நினைத்துக் கொண்டு திருப்தியாக இருந்தேன். 


தாத்தாவின் மரணம் பற்றி இவ்வளவு கேட்பதற்கு முக்கிய காரணம் எட்டு வயதுக்கு அப்புறம் குறிப்பிடத்தகுந்ததாக வாழ்க்கையில் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருப்பதுதான். 


எழுத்துக்கள் அத்தனையும் தாத்தா பாட்டியோடு இருந்த நாட்கள் பற்றியதாக உணர்கிறேன். அப்புறம் அப்பா அம்மாவுடன் வேறு இடத்திற்கு வசிக்கப் போய்விட்டேன் அல்லவா. 


0 குழந்தையாக இருப்பதை விட இன்றைய வாழ்க்கையின் சுவாரஸ்யம் குறுகிப் போயிருக்கிறதா. 


புதிர்கள் குறைந்தது இன்றைய வாழ்க்கை. அற்புதமான விஷயங்களை உருவாக்க பாட்டியும் இன்று இல்லை. 

0 உங்களுடைய எழுத்தை நுணுக்கமாக ஆராய்ந்த நியூயார்க் விமர்சகர் அலெஸ்டர் ரீட் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலைப் பற்றிய இதுவரை தொடப்படாத ஒன்றை வைக்கிறார். "யாராலும் இன்னொருத்தரைப் புரிந்து கொள்ள இயலாது. அவரவருக்கே உரித்தான நீர்க்குமிழிகளில் பூவுலகத் தனிமைவாசம் எஞ்சுகிறது என்பதுதான் நாவலின் அர்த்தம்" என்று எழுதியிருக்கிறார். 

நிஜம்தான். ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாததும் வெளிக்காட்டாததுமான ரகஸிய ஆளுமையின் வசீகரத் தொகுதி ஒவ்வொருவருக்கும் உண்டு, மனைவி மெர்ஸிடஸ்ஸும் நானும் கால்நூற்றாண்டுக்காலம் சேர்ந்து வாழ்ந்தாலும் நுழைய முடியாத இருட்டுத் தொகுதிகள் எங்களுக்கு உண்டு என்பதையும் உணர்கிறோம். இந்த நிதர்சனத்தை மதிப்பதைத் தவிர வேறெப்படியும் எதிர்கொள்ள முடியாது. உதாரணமாக மெர்ஸிடஸ்ஸின் வயது எனக்குத் தெரியாது. திருமணமான போதே தெரியாது. அப்போது மிகவும் இளமையாக இருப்பாள். பயணங்களின் போது பாஸ்போர்ட்டையே வேறு எதையோ பார்க்க மாட்டேன்.. விமானத்தில் படிவங்களை நிரப்பசி 


என்னால் அவள் பிறந்த நாளை நிரப்பாமல் விட்டுவிடுவேன். ஒருவருக்கொருவர் ஊடுருவமுடியாத பகுதிகள் உண்டு என்பதை சிறப்பாக உணர்த்தும் ஒருவித விளையாட்டு தான். ஆக எந்த நபரையும் முற்ற முழுதாகப் புரிந்து கொள்ள சாத்தியமே இல்லை என்பதை முழுதாக நம்புகிறேன். 

0 நாவலின் தனிமைவாசம் இதுதானே. 


இல்லை. அந்தத் தனிமைவாசம் எல்லோராலும் உணரப்படும் ஏதோ ஒன்று. ஒவ்வொருவரும் தனிமையில் வசிக்கிறோம். சமுதாய ரீதியிலான ஒப்பந்தங்களும் சமரசங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் உள்ளுமை என்பது தனிமைவாசம் கொண்டது. உதாரணத்துக்கு எழுத்தாளன் என்ற வகையில் சுலபமாக நிறையப் பேருடன் தொடர்பு கொள்கிறேன். ஆனால் எழுத்து என்பதில் உட்காரும் போது அவசியமான நொடிப்பொழுதான அதில் தனிமைவாசம் கொள்கிறேன். எனக்கு உதவ யாலாலும் முடியாது. அந்த நழுவும் நொடிப்பொழுதில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது - தெரியாது. உதவி கேட்கவும் முடியாது. முழுமையான தனிமைவாசம் இதுதான். 

ப பயமுறுத்துவதாக இருக்கிறதா

இனியும் இல்லை. டைப்ரைட்டர் எதிரில் தனியனாக தற்காப்பில் வசிக்க முடியும் என்பதை எனக்கு சோதித்துக் கொண்டேன். ஆனால் ஒவ்வொருவரும் தனிமைவாசம் என்பதில் பயம் கொள்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். அதிகாலையில் தூக்கம் விழிக்கும்போது சுற்றிலும் எதார்த்தம் முற்றுகை இடுகிறதை ஸ்பரிசிக்கும்போது வருகிற முதல் உணர்வு பயம்தான். 

மற்றவர்களுக்கு நிகழமுடியாத சம்பவங்கள் உங்களுக்கு சாத்தியம் ஆவதுண்டா , உங்கள் ஒரு நண்பன் கூநடநயவாஉை உணர்வை உங்களிடம் கண்டேன் என்கிறான். 


விசித்திர சம்பவங்கள் அடிக்கடி எனக்கு நிகழ்வதுண்டு. அவை போல மற்றவர்களுக்கும் நிகழும் என்று ஏற்கிறேன். ஆனால் இவற்றில் எதையும் முறைப்படுத்தி விட முடிவதில்லை. முன்னுணர்வு என்பதை நிகழ்வுக்கு அப்புறமின்றி உங்களால் அறிய முடியாது. ஆக எல்லா தீர்க்க தரிசனங்களும் எப்போதும் ரகசிய சமிக்ஞைகளாய் உருவாகின்றன. உதாரணமாக பார்ஸிலோனாவுக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மெக்ஸிகோ வீட்டில் வேலை செய்யம் வருத்திக்கு பேறுகாலம். ரயிலில் ஷவைக் கழற்றிய அப்போது எங்களுடன் தொடர்பு கொண்ட ஏதோ நடப்பதாக உணர்வு. 

"தெரஸாவுக்கு குழந்தை இப்போது பிறந்துவிட்டது" என்று மெர்ஸிடஸ்ஸிடம் கூறினேன். போய்ச் சேர்ந்த பிறகு பார்ஸிலோனாவிலிருந்து தொடர்பு கொண்டோம். குழந்தை பெற்ற நேரத்தைச் சொன்னார்கள். முன்னுணர்வில் நான் பேசிய நேரத்திற்கு ஏறக்குறைய அருகில் வந்தது. ஆக தீர்க்க தரிசனங்கள் துல்லியமாக இருப்பதில்லை என்றாலும் மந்திரத் திகதிகப்பாக இருக்கின்றன. நடைமுறையில் எல்லோருக்கும் நிகழ்கிறது என்றாலும் அவரவர் கலாச்சாரப் பின்னணியைப் பொறுத்து நம்பாமலிருப்பதும் அங்கீகரிக்காமல் போவதும் ஏற்படுகின்றன. உலகம் பற்றிய ஒருவித அறியாமையில் தான் இதை கவனிக்க முடியும். 

0 வதந்திகள் சொல்வதைப்போல ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் எப்போதாவது திரைப்படமாக எடுக்கப்படுமா. 

நிச்சயமாக இல்லை. உரிமையை வேண்டி ஏராளமாக பணம்தர வருகிறார்கள். மறுத்து வருகிறேன். கடைசியாக இரண்டு மில்லியன் டாலர்கள் வரை வந்தார்கள். நாவல் படமாக எடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் கதாபாத்திரங்களை 1 சகர்கள் புனைந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கிறே' சாத்தியமில்லை . திரையில் திணிக்கப்படும் நபர்கள் தவிர கதாபாத்தி, பனை செய்ய முடியாதபடி பிம்பங்கள் கறுமையடைந்திருக்கின்ற ... Rளிமா வடிவத்தில் 


மறைகளை வாசித்த போது எம் 


Tபாத்திரங்களை மனம் போன போக்கில் இது சாத்தியமில்லை 


பிக் கொண்டிருக்கிறேன். சினிமா வடிவத்தில் 


சிகள் தவிர கதாபாத்திரங்களை எண்ணப்படி. 


மெயடைந்திருக்கின்றன. திரைப்படம் எடுக்கப்படும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அ த எமக்காளன் கான் நிலத்தில் சுதந்திரமான ', 


உதுலகுக்கு இல்லாத வரம்புகள் சில சினிமா வடிவத்தில் வேலைதான் இருப்பதிலேயே சுதந்திரமா 


தாளன் தான் நிஜத்தில் சுதந்திரமானவன். அவன் 


சுதந்திரமானது. நாவல் எழுதும் போது தன் எஜமான் அவன். 






0 கடவுளைப் போல. 


கொஞ்சம் போலத்தான். கடவுளைப் போல துன்றி எளிதில் கதாபாத்திரங்க"""" சொல்லலாம். கதாபாத்திரம் ஒன்று நிஜத்தில் செத்து விடும் போது அதை சி'+ 
இல் செத்து விடும் போது அதை சாகடித்து விட வேண்டும். உர்ஸலாவுக்கு நிகழ்ந்தது இதுதான். கணக்குப்போட்டுப் பார்த்தால் அவளுக்கு வயது 4°° கி வேண்டும். 






ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலுக்கு  நாவலுக்குக் கொஞ்சம் திரும்புவோமா. அந்த நாவலிலும் இதர புத்தகங்களிலும் விபச்சாரிகளைப் பற்றி ரொம்பவும் உருகி எழுதியிருக்கிறீர்களே.


விபச்சாரிகளைப் பற்றி நேசமான நினைவுகள். உணர்ச்சிவசப்பட்ட சில காரணங்களுக்காக - எழுதுகிறேன். 

0 விபச்சார விடுதி தான் லத்தீன் அமெரிக்க இளைஞர்கள் உடலுறவை அறிந்து கொள்ளும் இடமா. 


இல்லை . அறிந்து கொள்ளுமிடம் நிஜத்தில் குடும்பம், வீடு, நிலப்பிரபுத்துவ சூழல் என்று. விபச்சார விடுதிகள் நிறைய பணம் பிடிப்பவை. வயதில் மூத்த ஆண்பிள்ளைகள் போகும் இடங்கள் அவை. இளைஞர்களுக்கு வீட்டு வேலை செய்பவர்களிடமிருந்து உறவு தொடங்குகிறது. அத்தை, மாமன் என்றும். இளைஞனாக இருந்தபோது விபச்சாரிகள் நண்பர்கள். நிஜமான நண்பர்கள். நான் வசித்த சூழல் அப்படியானது. விபச்சாரி அற்ற ஒருத்தியுடன் உறவு கொள்வது எளிதல்ல. விபச்சாரிகளைப் பார்க்கப் போனேன் என்றால் உடல் உறவுக்காக அல்ல. கூட இருந்து தனிமையைத் தகர்ப்பதற்கு. என் புத்தகங்களில் வரும் விபச்சாரிகள் மனிதத்தன்மை கொண்டவர்கள். பொழுதுபோக்கத் துணையாகவும் இருப்பார்கள். 


நிஜத்தில் தனிமைவாசத்தில் சிக்கிய அந்தப் பெண்கள் தொழிலை வெறுக்கிறார்கள். ஒரு முறை கூட கூடப்படுக்காத விபச்சாரிகளையும் சேர்த்து எல்லோருடனும் நட்பு கொண்டிருக்கிறேன். தனிமையில் தூங்குவது கொடுமை என்பதால் இவர்களுடன் தூங்கினேன். சில சமயங்களில் என்னால் முடியவில்லை. திருமணம் செய்து கொண்டது தனிமையில் சாப்பிடுவதற்காக அல்ல என்று. நான் அடிக்கடி ஜோக் அடிப்பதுண்டு. மெர்ஸிடஸ் கூட இதற்காக என்னைத் திட்டுவது உண்டு
0 கதைகளில் பெண்கள் வலிமையுடன் வாழ்க்கை பற்றி அக்கறை கொண்டு விடுகிறார்கள், 


வீட்டிலும் மெர்ஸிட்ஸ் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். என்னுடைய இலக்கியம் பிரதிநிதியும் பெண்தான், முழுக்க பெண்களை நம்பியே இருக்கிறேன். மூட நம்பிக்கையாக  விட்டது. பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். பெண்கள் தான் உலகத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறேன். 

0 முழு உலகத்தையுமா பாதியையா. 


பெண்கள் தினசரி நிகழ்வு பற்றி அதிக அக்கறையுடன் இருப்பவர்கள். ஆண்கள் சும்மா சுற்றி வந்து கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். சரித்திரப்பூர்வ உணர்வு அற்றவர்களாக இருப்பதால் பெரும் தகுதி படைத்தவர்களாகப் பெண்களைப் பார்க்கிறேன். இன்றைய நடப்பு, இன்றைக்கான உத்திரவாதம் பற்றி, ஆர்வம் கொள்பவர்கள் பெண்கள். 




ப கர்னல் அவரலியா 


ஓடாள். 


கரனல அவ்ரலியானோ புண்டியாவைப் போல எங்கோ போய் 32 உள்நாட்டு யுத்தங்களை பெண்கள் நடத்திக் கொண்டிருக்கவில்லை என்றுதானே சொல்கிறரர்கள். 






இல்லை. ஆண்கள் வெளியே போய் யுத்தங்கள் நடத்துவதற்காக அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். நடத்துகிறார்கள். இறைச்சி சமைக்கிறார்கள். பெண்களுக்கு இன்னொரு தகுதியும் உண்டு. ஆண்களைக் காட்டிலும் அதிக விசுவாசம் கொண்டவர்கள். பெண்கள் மன்னிக்காத ஒரே விஷயம் தாங்கள் ஏமாற்றப்படுவது தான். ஆட்டத்தின் விதிகள் என்னவாக இருந்தாலும் அவற்றை முதலிலேயே வரையறுத்து விடுவதை பெண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஆட்டத்தின் போது விதிகள் உடைக்கப்படுவதை அவர்கள் பொறுப்பதில்லை. உடைக்கப்படும் போது அவர்கள் மோசமான, இரக்கமற்ற பிறவிகளாக ஆகவும் முடியும். ஆண்களின் பிரமாதமான சிறப்புத்தகுதியோ மென்மையாக இருப்பது. 

மென்மைத்தன்மையா, ஆண்களுக்கா. 

ஆமாம். மென்மைத்தன்மை பெண்மைக்கல்ல, ஆண்களுக்கே உள்ளீடாக இருக்கிறது. வாழ்க்கை கடுமையாக இருப்பதை அறிந்தவர்கள். 


0 பெண்களுக்கு சரித்திரப்பூர்வ பார்வை இல்லை என்று சொல்கிறீர்களே. ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி என்ன விளக்கம் சொல்ல முடியும். 


பொதுப்படையாக பேசிக் கொண்டிருக்கிறேன். பிரமாதமான விதிவிலக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். 

0 இலக்கிய விருதுகள் சுமத்தப்பட்ட ஒருவர் தம் பங்குக்கு உரியதை விடவும் அதிகமாக ஆரவாரத் தீர்ப்புகளைச் சொல்ல வேண்டும். சொல்லியிருக்கிறீர்கள்: இந்த வரர்த்தைகளுக்கெல்லாம் பின்னால் இருக்கிற தனிமைவாசம் கொண்ட மனிதரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் ஏதாவது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா. 


ரொம்பவும் கொஞ்சம்தான் விடுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். யாராலும் தொட முடியாத இருளார்ந்த பகுதிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பேட்டிகளை வாசிப்பலர்கள் இத்தகைய பகுதிகளுக்குள் செல்ல விரும்ப மாட்டார்கள். எப்படி நினைத்திருக்கிறார்களோ அப்படியாக பேட்டி அளிப்பவர் இருப்பதைப் பார்க்க விரும்புகிறார்கள். 

0 அப்படியானால் யார் நீங்கள். 


உலகத்திலேயே அதிகக் கூச்சமானவன். அதிக இரக்கம் கொண்டவனும் கூட. இந்த விஷயத்தில் வாதங்களை நான் ஏற்பதில்லை. 

அப்படியே இருக்கட்டும். உங்களுடைய மிகப்பெரிய பலவீனம் இருக்க வேகம் 


இதற்கு முன்னால் இல்லாத கேள்வி உங்களிடமிருந்து வந்திருக்கிறது. மிகப்பெரிய என்றால் உணர்ச்சிவசப்பட்ட அர்க்கத்தில் என் இதயம் தான். பெண்ணாக இருந்தால் ஒரு மறையும் ஆமாம் என்று தான் சொல்வேன். இன்னும் ஏராளமாக நான் நேசிக்கப்பட 99" - என் மிகப்பெரிய பிரச்னை இன்னும் அதிகமாக நேசிக்கப்பட வேண்டும் என்பதுதான். இ பொருட்டே எழுதுகிறேன். 


எழுத்து நேசத்தை உங்களுக்குத் தந்திருப்பது அதிர்ஷ்டம்தான். உங்கள் அரசியல் பார்வையை வெறுப்பவர்கள் கூட நாவல்களை நேசிக்கிறார்களே. 

ஆமாம். கொஞ்ச நேரத்தில் திருப்தி அடையாதவன் நான். இன்னும் நிறைய தேவைப்படுகிறது. 


0 Nymphomaniac போல தொனிக்கச் செய்கிறீர்களே. 


நிஜம்தான். ஆனால் இதயத்தின் வகையான Nymphomaniac. அப்புறம் ஒரு விஷயம். என் தொடர்பான இந்தப்பதிவை வட அமெரிக்காவின் வாசகர்களுக்கு நேர்மையுடன் கொண்டு செல்ல வேண்டும் நீங்கள், என்னை நேசிக்காத ஒருவர் அங்கே இருக்கக்கூடும் என்பதை நினைத்து பயப்படுகிறேன். அந்த நபர் உங்கள் எழுத்தால் என்னை நேசிக்க வேண்டும். 

டைசியாக ஒரு பெரிய கேள்விக்கான நேரத்தை சற்று கொடுப்போம். இதுநாள் வரைக்குமான உங்கள் வாழ்க்கையின் புனைவு. 


எழுத்தாளன் அன்றி வேறு என்னவாக ஆக விரும்பியிருப்பேன் என்பதைச் சொல்வதன் மூலம் ஒருக்கால் கேள்விக்கு பதில் கிடைக்கும். 


விடுதியொன்றில் பியானோ வாசிப்பவனாக விரும்பியிருப்பேன். காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும். எழுத்தாளன் என்ற முறையில் அதே அளவு சாதிக்க முடிகிறது என்று வைத்துக் கொண்டால் என் வாழ்க்கையின் புனைவு, அளவற்ற காதலைப் பரவ விடுகிற பியானோக்காரன் நான். 


பேட்டி - க்ளாடியா ட்ரேஃபுஸ் 


தமிழில் - வளர்மதி 
*********************
மாஜிக் கம்பளங்களே எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆனது 

தமிழில் - பால் பிரகாஷ்




0 கதைகளில் பேச்சுமொழிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன். 


மொழிஉண்மையை ஸ்பானியப் பேச்சுமொழி அவ்வளவு பிரதிபலிக்காது. பேச்சு மொழிக்கும் எழுத்துவழி உரையாடலுக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. நிஜவாழ்க்கையில் அழகாக அமையும் ஸ்பானியப் பேச்சுமொழி கதைகளில் அவ்வழகை எப்போதும் தொனித்து ஒலிப்பதில்லை. ஆகவே குறைவாகவே பேச்சுமொழியை கதைகளில் உபயோகிக்கிறேன். 


0 பாத்திரங்களின் போக்கையும் முடிவையும் முன் தீர்மானிப்பீர்களா. 


பாத்திரங்களுக்கு ஏற்படும் சம்பவங்களை ஓரளவு மனதில் வைத்துக்கொள்வேன். கதைப் போக்கிலோ எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்லும். - ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் கர்னல் அவ்ரலியானோ புண்டியா வெகுகாலம் உள் நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு ஒரு வேளை மரத்தடியில் சிறுநீர் கழிக்கும்போது உயிர்பிரிவதாக முதலில் நினைத்திருந்தேன். "அவர் இறக்கும்போது வெகுவாகத் துன்பமடைவாய்" என்று என் மனைவி மெர்ஸிடஸ் கூறினாள். 


ஏதாவது ஒரு கணத்தில், புள்ளியில் அவரைக் கொன்றே தீரவேண்டும் என்று அறிவேன். உடனே அதைச் செய்யத் துணியவில்லை. இதற்கிடையில் கர்னல் வயதாகி சிறிய தங்க மீன்களைச் செய்துகொண்டிருக்கும் நிலைக்கு வந்து விட்டார். "இப்போது அவருக்கு எல்லாம் போதுமானது" என்று ஒரு மதியவேளை நினைவு தங்கியது. இப்போது அவரைக் கொன்றே தீரவேண்டும். அத்தியாயத்தை எழுதி முடிந்தவுடன் நடுங்கியவாறு இரண்டாம் மாடியில் இருந்த மெர்ஸிடஸ்ஸைப் பார்க்கச் சென்றேன். முகத்தைப் பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டாள். "கர்னல் இறந்து விட்டார்" என்று கூறினாள். படுக்கையில் வீழ்ந்து இரண்டு மணி நேரம் விடாமல் அழுது கொண்டிருந்தேன்.

0 எழுதுவதெல்லாம் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியது தானா. 


எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வரியைக் கூட என் கதைகளில் நீங்கள் பார்க்க முடியாது.


0 நிஜம்தானா. 


ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் வரக்கூடிய மந்திரவயப்பட்ட நிகழ்ச்சிகள், ரெமிடியோஸ் என்ற அழகி மோட்சத்துக்குப் பறந்து செல்வதும் மாரிஸியோ பாபிலோனியாவைச் சுற்றி எப்போதும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டே இருப்பதும் எல்லாமே நிஜமான நிகழ்ச்சிகளைச் சார்ந்தவையே.. 

0 ரெமிடியோஸ் அழகி மோட்சத்துக்கு செல்வதற்கான எண்ணம் எப்படித் தோன்றியது. 


ரெபெக்காவும் அமரந்தாவும் துணியில் பூவேலை பின்னிக்கொண்டிருந்த போது ரெமிடியோஸ் : அழகி மறைவதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். அப்படியொரு கற்பனைத் தோற்றம் சாத்தியமாகத் தோன்றவில்லை. ரெமிடியோஸ் அழகியை சற்று அதிகநேரம் வைத்திருக்க வேண்டியதாயிற்று. உடல், ஆன்மாவோடு மோட்சத்துக்கு அவள் பறந்து செல்லச் செய்தேன். அதற்குக் காரணமாயிருந்த முடிவு. அதிகாலையில் வீட்டை விட்டு ஓடிப்போன பெண்ணின் பாட்டி, ஓடிப்போனதை மறைப்பதற்காக சுற்று வட்டாரத்திலெல்லாம் பேத்தி மோட்சத்துக்குப் பறந்து போனதைக் கண்டதாகக் கூறியதே ஆகும். 

0 க... கொள்ளை ப கட்டுரையில் அவளைப் பறக்க வைப்பதற்கு கஷ்டப்பட்டதாய, '. ; எழுதினீர்களே. 


ஆம். தரையிலிருந்து கால்களை எடுக்க மறுத்துக் கொண்டிருந்தாள். அவளை மேலே எழுப்ப முடியாமல் வெறி பிடித்தவனாக அலைந்தேன். ஒருநாள் இதை சிந்தித்துக் கொண்டே என் தோட்டத்திற்குச் சென்றேன். காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. அழகான பெரிய உருவம் கொண்ட நீக்ரோப் பெண் ஒருத்தி துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவளால் முடியவில்லை. காற்று துணிகளை அடித்துப்பரத்திக் கொண்டிருந்தது. உடனே மனத்தில் மின்னலாய உதித்தது. முடிவு செய்தேன் ரெமிடி யோஸ் அழகியை வானத்துக்கு அழைத்துச் செல்ல மாஜிக் கம்பளங்கள் தேவை என்று. இவ்வகையில் மாஜிக் கம்பளங்கள் எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆயின. டைப்ரைட்டருக்குத் திரும்பியபோது ரெமிடியோஸ் அழகி தடைகள் இன்றி காற்றாக கைகளை விட்டு விலகி மேலே பறந்து சென்றாள். கடவுளே நினைத்திருந்தால் கூட அவளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. 
0 வீட்டுத்தோட்டத்தில் மஞ்சள் பூக்களை அதிகமாக வளர்க்கிறீர்களே, காரணமுண்டா. 


மஞ்சள் நிறப்பூக்கள் இருக்கும்போது எனக்குத் தீங்கு ஏதும் ஏற்படாது. பாதுகாப்புணர்வோடு இருப்பதற்கு மஞ்சள் நிறப் பூக்களும் பொதுவாக மஞ்சள் ரோஜாக்களும் சுற்றிப் பெண்களும் தேவைப்படுகிறார்கள். 

0 மேஜையில் எப்போதும் மஞ்சள் ரோஜாவை மெர்ஸிடஸ் வைப்பதுண்டல்லவா. 


எப்போதும். வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் எதுவுமே சரிவரச் செய்யாமல் பக்கங்களுக்கு மேல் பக்கங்களாக கசக்கி எறிவதுண்டு. எவ்வளவு முயற்சித்தாலும் நினைப்பதை அடைய முடியாது. அப்போது பூஜாடியைப் பார்த்தபோது அதில் மஞ்சள் ரோஜா இல்லை. அதுதான் காரணமென்று புரிந்து கொண்டேன். ரோஜா இல்லாத பூஜாடி. உடனே மலருக்காகக் கத்துவேன். மெர்ஸிடஸ் மஞ்சள் ரோஜாவுடன் வருவாள். கண்ணாடிக்குள் வைத்ததும் எழுத்தும் தானே இடைவிடாமல் ஓடத் தொடங்கி இருக்கும். 


0 மஞ்சள் உங்கள் அதிர்ஷ்ட நிறமா. 


பூவின் நிறம்தான் அது. தங்க ரோஜா அல்ல. தங்கத்தின் நிறமும் அல்ல. 

0 உங்களுக்குப் பிடிக்காதது நிறைய உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தருணத்தில் கூறினீர்கள். நிர்வாணத்தில் புகை பிடிப்பது துரதிர்ஷ்டம் விளைவிக்காது. ஆனால் நிர்வாணமாய் நடந்து கொண்டே புகை பிடித்தால் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்புவதாக கூறினீர்கள். 


மட்டுமல்ல. நிர்வாணமாய் வெறும் பூட்ஸ் அணிந்து ஊர் சுற்றுவதும். வெறும் காலுறைகளுடன் கலவியில் ஈடுபடுவதும் மிகவும் ஆபத்தானது. அது சரியாக இயலாது. 


0 வேறென்ன. ஊனமடைந்த மனிதர்கள் ஊனங்களை இசைக்கருவிகள் கொண்டு மாற்றும் போது இந்த எண்ணம் தோன்றும். 


கையில்லாத மனிதர்கள் கால்களை வைத்து தோல்கருவிகளை இசைப்பதும் காதுகள் மூலம் புல்லாங்குழல் வாசிப்பதும் கண்தெரியாத இசைஞர்கள் இசையால் துரதிர்ஷ்ட வசமான பாதையில் இழுத்துச் செல்வதும்... வார்த்தைகள் சில சமிக்ஞைகளைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். எழுத்தில் உபயோகிக்காத வார்த்தைகளைக் கேட்கிறேன். வரையறை, அளவீடு, ஒப்பான, சமதளத்தில், கண்ணோட்டத்தில், போன்ற வார்த்தைகள் சமூகார்த்தமான குணங்களின் பிதற்றல். 

0 அணுகுமுறை என்ற வார்த்தையும் உண்டல்லவா. ஆம். 


ப அந்த மாதிரி நபர்களும் உண்டா . அந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துவோரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. 

0 இடங்கள் இந்த மாதிரி நிகழ்வை உங்களிடம் ஏற்படுத்துமா. 


ஆம். இடங்களே துரதிர்ஷ்டங்களைத் தாங்கி நிற்பதாகக் கூறவில்லை. அவ்விடங்களில் சில நேரங்களில் ஏற்படும் முன்னுணர்வுகள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரியாது. இது எனக்கு கடாகஸ்ஸில் ஏற்பட்டது. அங்கே திரும்பிச் சென்றால் இறந்து விடுவேன் என்று தெரியும். 

0 கோடை தோறும் செல்வீர்களே, அங்கு என்னவாயிற்று. 


ஓட்டலில் தங்கியிருந்தபோது மேற்குக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. மயிர்க் கூச்செறியும் அளவு வலுத்து வீசியது. நானும் மெர்ஸிடஸ்ஸும் மூன்று நாட்கள் அறையை விட்டு வெளிவர முடியாமல் கிடந்தோம். அப்போது திடீரென்று உயிர்போகும் ஆபத்தில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றியது. அப்போதே தெரியும் நான் கடாகஸ்ஸை விட்டு ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் அங்கு செல்லவே மாட்டேன் என்று. காற்று நின்றபோது அங்குள்ள குறுகிய சாலை மூலம் ஜெரோனா வந்து சேர்ந்தேன். அப்பொழுது தான் நிம்மதி மூச்சு விட ஆரம்பித்தேன். அற்புதமான வழியில் தப்பி வந்தேன். 


0 முன்னுணர்வுகளை எப்படி விளக்குவீர்கள். 


உருவெளித் தோற்றங்களில் வரும் சிறு சிறு அதிர்வுகள் மூலம் தெரிந்து விடும் என்ன நடக்கப் போகிறதென்று.. 1958 என்று நினைவிருக்கிறது. கடாகஸில் என்னுடன் இருந்தபோது திடீரென உணர்ந்தீர்கள். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென்று. அசம்பாவிதமும் நடந்தது. மூக்குக்கு முன்னே ஜனாதிபதி மாளிகை மீது யாரும் எதிர்பாராதபடி விமானங்கள் குண்டு பொழிந்தன. இந்த நாள் வரை என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதற்கு எப்படி உங்களுக்கு இந்த முன்னுணர்வு ஏற்பட்டது. 

0 உங்களுடைய முன்னுணர்வுகள் எல்லாமே தெளிவாக இருக்குமா. 


சற்றுமங்கலாகவே இருக்கும். ஆனால் ஏதாவது தெளிவான விஷயத்தை உள்ளடக்கியிருக்கும் அன்று ஒரு நாள் பார்ஸிலோனாவில் புடஸ்களுக்கு லேஸ் மாட்டிக் கொண்டிருந்தபோது மெக்ஸிகோவில் என் வீட்டில் ஏதோ ஒன்று நடந்திருப்பதாக உணர்ந்தேன். துரதிர்ஷ்ட வசமானதாக இருக்கும் என்று அவசியமில்லை. ஆனால் ஏதோ நடந்திருப்பதாக முன்னுணர்வு. மனம் கேட்கவில்லை. ஏனெனில் மகன் ரொட்ரிகோ அன்று அகபுல்கோவுக்கு காரில் செல்வதாக இருந்தான். மெர்ஸிடஸ்ஸை உடனே போன் செய்யச் சொன்னேன். உண்மையிலேயே என் பூட்ஸ் லேஸைக் கட்டும் அதே தருணத்தில் வீட்டில் ஒரு சம்பவம். பணிப்பெண் அக்கணத்தில் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள். நிம்மதி கலந்த பெருமூச்சு விட்டேன். முன்னுணர்வு மகனைப் பற்றியதல்ல என்று புரிந்து கொண்டேன்.

0 உள்ளுணர்வும் முன்னுணர்வும் அதிகம் உதவியதாகக் கூறுகிறீர்கள். வாழ்வின் முக்கியமான தீர்மானங்களை அவை மூலமே தீர்மானிக்கிறீர்களா. 


முக்கியமானதை மட்டுமல்ல. எல்லாவற்றையுமே அவ்வாறே தீர்மானிக்கிறேன், 

0 உண்மையாகவா. 


எல்லாவற்றையும்தான். எல்லா நாளும் எல்லாப் பொழுதும் எதைச் செய்தாலும் உள்ளுணர்வின் உறுத்தலாலேயே செய்கிறேன். 

0 முதன் முதலில் ஏற்பட்ட பெண் ஸ்பரிசத்தை நினைவுணர முடியுமா. 

என்னைக் கவர்ந்த பெண்மணி ஐந்து வயதாக இருந்தபோது டீச்சர். அது வேறு வகையான ஈர்ப்பு. முதன்முதலில் உடம்பில் ஸ்பரிசத்தை ஏற்படுத்தியது வீட்டில் வேலை பார்த்த யுவதி. ஓரிரவு பக்கத்து வீட்டில்' இசை ஒலிக்க வெகுளியாக தோட்டத்துக்கு என்னை நடனமாட அழைத்துச் சென்றாள். தோள்கள் என்னுடன் உரச எனக்கு அப்போது ஆறு வயதிருக்கும். உணர்வுகளில் பற்றிக் கொண்ட வசீகரத்திலிருந்து இதுநாள்வரை மீள முடியவில்லை. அவ்வளவு கனத்தையும் அந்த உணர்வு வேகத்தின் ஆளுமையையும் மீண்டும் அடைந்ததே இல்லை. 

0 இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் கவர்ந்தவர் யார். 


மனைவி மெர்ஸிடஸ். 

0 எழுத்தை விளக்க ஒரே உங்கள் வரி. 


ஆதிக்கத் தனிமைவாசத்தின் கவிதை. 


தமிழில் - பால் பிரகாஷ் 





281


No comments:

Post a Comment