தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, August 25, 2019

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் கோணங்கி ----கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் 

கோணங்கி 

****

கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்

1


ரயில் அவர்களை மதியவேளை அமைதியில் இறக்கிவிட்டுச் சென்றது. சிக்காடா இசைப்பறவையின் இதயத்தை ஊடுருவும் சோகத்திற்கு மத்தியில் ரயில் ஆவிநகரத்தைத் தாண்டிச் சென்றபோது ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றாய் கடந்தன. காப்ரியேலின் தாய் லூயிஸாவின் கண்களில் வடிந்த வெப்பமான கண்ணீரின் இளஞ்சூட்டில் ஸ்பரிசத்தை அடைந்த அரக்காடக்கா ரயில் நிலையத்தின் வெறுமையான தோற்றத்தில் கறுமையடைந்த பல ஞாபகங்கள் காண தூணில் சாய்ந்தாள். தாத்தாவுக்கு சொந்தமான பூர்வீக வீடு எட்டிய தூரத்தில், அவர்களைக் கண்டதும் விசாரத்தில் ஆழ்ந்து நடுநடுங்கியது. பழமையான தெருக்களோடு அசையும் அல்மாண்ட் மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த காப்ரியேலின் பொம்மைகள் அரூபமாய் எழுந்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி வாழைத்தோட்ட வெளிகளுக்கு ஓடுகின்றன. பாழ்பட்டு அகண்ட தெருக்கள் குறுகி வழிமறித்தன இருவரையும். தூசிபடர்ந்த மரங்களில் உதிரத்தொடங்கிய ஞாபகங்கள், அடையாளம் காண இருந்த செடிகளின் துயரம் கண்டு லூயிஸா முணுமுணுத்தாள். தாய் வீடு ரகஸியமாய் பெண்களிடம் பேசியவையெல்லாம் இருந்து கொண்டிருந்த சமையலறையில் பல பொந்துகளில் உதிரத்தொடங்கிய குரல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லூயிஸா. தாத்தா வீட்டை விற்பதற்காக வந்திறங்கியவர்களை வீடே பார்வைகொண்டு காற்றினால் அடித்துக் கொண்டது ஜன்னல் கதவுகளை. 

உயரமான சமையல் கட்டுகளில் இருந்த இருட்டு கீறல் விழுந்து வெளியேறிக் கொண்டிருந்த ரகஸியங்களை அரக்காடக்காவில் குடியிருந்த பழைய மனிதர் சிலர் பார்த்தார்கள். வெப்பமும் உதாசீனமும் நகரைக் கவ்வியிருந்தன. 

தெருக்களைப் பார்த்து வர நெடுக நடந்து சென்றபோது காப்ரியேலும் அம்மாவும் அரக்காடக்காவின் பாழ்தோற்றத்திலிருந்து தப்பிச் செல்ல பழைய இனிய தோற்றங்களில் அனர்த்து சென்றனர். வீடுகள் பேசிய துயரத்தின் சாயல் யார் யார் வீட்டையோ அடையாளம் சொன்னது. தெருத்திருப்பங்களில் வயதான சிலர் மங்கலான பார்வைக்குள் லூயிஸாவைப் பார்த்து அந்நியராய் விலகி நகர்ந்தார்கள். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த தெரு வந்த போது தலையசைப்பில் புலப்பட்டது அடையாளம் ஏதோ. அழகான பெண்களும் மீசை முறுக்கிய ஜெனரல்களும் குடும்பங்களுடன் அலாதியாக வாழ்ந்த தனி வகையில் குடும்பக் கதைகள் பேசி ஊர்ந்து சென்ற காலம் நகரை விட்டு நீங்கியிருந்தது. 

அம்மா எதிர்கொண்ட முதல் தோழி எளிமையான வீட்டில் இருண்ட அறையில் தையல்மிஷின் முன்னால் உட்கார்ந்திருந்தாள். முதலில் அம்மாவுக்கு அடையாளம் தெரிய வில்லை. இதே தெருவில் பிறந்த இரு ஸ்திரீகளும் தங்கள் சலிப்புற்ற வாழ்க்கைக்கு மத்தியிலும் இற்று நறுங்கிப்போன உடம்புகளுக்கு மத்தியிலும் ஒரு காலத்தில் அழகுடன் சிரித்து விளையாடிய பருவத்தை கணம் தங்கள் மனதில் நினைவு கூர முயற்சித்து 

290 

ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தார்கள். தோழியின் சத்தம் சற்று கவலைக்குரியதாகவும் யெப்புக்குரியதாகவும் அமைந்திருந்தது. 

"பிரியமானவளே" என்று சொல்லிக் கொண்டு பரவசத்தில் கூவியவாறு எழுந்தாள். 

"லூயிஸா." 

"எப்படி இருக்கிறாய்." 

"எனக்கு ஒன்றுமில்லை ." 

"பார்த்தாயா என் கார்ஸியாவை." 

அவன் தலையைச் சுற்றி முத்தமிடுகிறாள். குதூகலத்தால் அவளை முத்தமிடக்கூட தயாராக இருந்தான் கார்ஸியா. 

"என் அருமை கார்ஸியாவா இது." 

"பார் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துக்கம், சாதாரண வாழ்க்கை தான் எவ்வளவு.' 

"இப்போது நீயே பார்க்க வந்துவிட்டாய்." 

லூயிஸா நொடிப் பொழுது மெளனமானாள். அந்தப்பக்கம் திரும்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். 

"லூயிஸா, உன்னுடைய நட்பால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறாய் தெரியுமா, நீயின்றி இந்த பூமியில் வாழ்ந்திருக்கவே மாட்டேன் தெரியுமா." 

"வேண்டாம் வேண்டாம் ஒன்றும் சொல்லாதே." லூயிஸா முடிக்கவில்லை. இரு பெண்களும் கட்டி அணைத்து மனம் ஒடிந்து அழுதார்கள். 

இரு ஸ்திரீகளின் கைகளின் நடுக்கங்களுக்கிடையே உயிர்பெறும் துடிப்பு மஞ்சள் பட்டாம்பூச்சிகளாய் படபடத்ததை, தொலைந்து போன காலங்களை, அவன் அத்தைகள் தங்களுக்கான சவத்துணிகளை தாங்களே நெய்துகொண்டதை, அவன் பாட்டி இறந்தவர்களுடன் உறவாடுவதை, இறந்தவர்கள் காலியான படுக்கையறையில் பெருமூச்சு விடுவதை, மஞ்சள் நிற ரயில்கள் சுமந்து சென்ற வாழைத்தார்களும் நிழல் படர்ந்த வாழைத் தோட்டங்களுக்குள் தாத்தாவுடன் போய்ப் பார்த்த குளிர்ந்த நீரோடைகளை, தொங்கும் மீன்களை, இசைப்பறவைகளை, இவையெல்லாம் மெல்ல மறைந்தபின் அம்மாவும் தோழியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட கணங்களில் அம்மாவின் உதட்டில் துடித்த பிரகாசத்தை நினைவுகூர்ந்தான் கார்ஸியா. அந்த இருண்ட வீட்டு மர ஜன்னலில் இருந்த பல்லி சுவரில் குதித்து கீழே விழுந்து ஓடியது. தோழி கை தட்டி விரட்டினாள். 
291 

அம்மாவும் தோழியும் வெளியே நடந்து போனார்கள். அதுவரை காணாத பூச்சிகள் வீட்டுக்குள் இரைந்து கத்தின. தெருவில் அப்போது தோன்றிய கண்ணுக்குப் புலப்படாத ரகஸிய இழையானது எல்லோரது வாழ்வாகவும் அவர்களது கண்ணீர் எப்போதும் இசைக்கப்படவும் அவன் வாழ்க்கையாக இருக்கவும் விரும்புவான். அரிதாகவே மாறுபட்ட இரு ஸ்திரீகளின் பேச்சுகள் ஒவ்வொரு தெருவாக நீண்டன. மறைவாக இருந்த பல ஸ்திரீகள் அவர்களைப் பார்த்து கூவியவாறு ஓடிவந்தார்கள். எல்லோரும் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு அழுதது கண்ணீரால் எழுதப்பட்ட கான்ஸர்ட்டோ . அந்த நாளில் ஸான் ஜெரோனிமோவிலிருந்து வந்த இரட்டையர்களோ மதியத்தூக்கத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையும் முற்றத்தில் தோன்றி நித்திய சுகமளிக்கும் தளிரை வேண்டும் பிச்சைக்காரிகளையோ நினைவுகூர்ந்தான். வரப்போகும் மழைக்கு மேலாக குருட்டு இரட்டையர்களின் பாடலைக் கேட்டான். மழை வெறித்த வெளியில் சென்று பாட வீட்டுக்கு வெளியில் கூட்டமாய் வருகிறார்கள். சுட்டெரிக்கும் புழுதியைக் கொண்ட ஏழு மாதக் கோடைக்குப் பிறகு பூந்தொட்டிகளில் தாகத்தால் வறண்ட ரோஸ் மேரியையும் ஸ்பைக்நார்ட்டையும் மழை உயிர்ப்பிக்கும் என இரு தோழிகளும் பேசினார்கள். 

ஒரு காலத்தில் அழகான பெண்களாலும் வண்ணக் குடைகளாலும் அசைவாடிக் கொண்டிருந்த பழைமையான தெரு வழியே ஸ்திரீகளின் குரலைக் கேட்டான் கார்ஸியா. துணிக்கடையிலிருந்தும் மார்க்கெட்டிலிருந்தும் ரொட்டிக்கடையிலிருந்தும் வெகுதூரம் பேசிய பேச்சுகளின் தொடர்ச்சிகளுடன் அம்மாவும் தோழியும் தையல் வேலையில் இறங்கினார்கள். அவனுக்கான மெல்லிய ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் மஞ்சள் பூவை எம்ப்ராய்ட் செய்வதென்பதில் சர்ச்சித்து ஓய்ந்தார்கள் இருவரும். சக்கரம் சுற்றி தையல் எந்திர ஓசைக்குள் இருவரின் ரகஸிய உரையாடல் விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. சக்கரத்தின் நிழல் சுற்றிச் சுழல தரையில் சிதறிய பித்தான்களை இருட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். 

"இரு ஸ்திரீகளின் சந்திப்பில் தான் என்னுடைய முதல் நாவல் பிறந்தது" என்கிறார் மார்க்வெஸ். முதல் நாவல் மட்டுமல்லாது படைத்த அத்தனை நாவல்களும் அதிலிருந்து ஆரம்பமானவை தான் எனவே. 

2

ஆயிரத்தி நூற்றிப்பதினைந்தாம் அராபியக் கதையில் "இவ்விடமிருந்து நீங்கியபின் நிலம் உன் கண்களுக்குப் புலப்படாது. இந்நிலம் அலையாக மாறிவிடும்" என சொல்லப் பட்ட அபு-அபன் கதையில் பாம்பரசன் தன் பச்சைக்கல்லைக் கக்கி அதன் ஒளிப்பாதையால் வழிதவறிய மாலுமிக்கு தூரதேசங்களைக் காட்டியவுடன் தீவு அலையாகிவிடும். அதற்குள் ஜனங்களெல்லாம் அவன் கரிய இரைப்பைக்குள் ஒளிந்து கொண்டனர். பாம்பரசனே 

292 

'”ெ $2)$யில் பாம்புநெ 87வு (யோசுரமாகி பெண் விரலில் சுற்றி பச்சைக்கல் பாம்பு ! T$ 67ன் பர்) 2 wயால, 4) பாம்பரரியான குள்ளப்பாட்டி டோனர் 

உன் குழம்(சிய நீலக்கண் 8 எள் ஆழத்தில்தான் ஜாஸ்மின் மரங்களை மூழKடி ககும் வாசனை, இறந்து போன காதையின் ஆவிகளைத் தூண்டும் மாயாவாத எழுததாகத் தோன்ற குக்கிர) சர். மந்திரவாக கள் வாழ்ந்த எரிகிற கொசிரா கதை தீபகற்பத்தில் இருந்து வந்தாள் மந்திரக் கிழவியைப் போல. ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் வரும் கதைகள், இறந்த போர்வீரனின் உடல் கவசத்திற்குள் தூர்ந்த எலும்புகளிடையே கண்டெடுத்த பெண்ணின் முடிச்சுருளில் இந்தியக் கதை மரபைக் கொண்டு 

பைபிள் போன்றது இக்கதை, அபு-அபன் கதைக்குள் மூழ்கத் தொடங்கிற்று கண்டம். தொலைந்து போன வெமரின் அதி அற்புதக் கற்பனை கொண்ட எழுத்து முறையை ராட்சஸ எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் எழுதிக் கொண்டிருக்கின்றன, மூழ்கிவிட்ட கண்டத்தைத் தாக்கிய கறுப்பு மின்னலில் இறந்தவர்களின் உடல் ரேகையில் கருகிய தோலில் குத்தப்பட்டிருந்த பச்சைக் கோலங்களில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர மீன்களை நீர் கரையான்கள் கொஞ்சமாய் அரித்து அக் கறையான்களே ராட்சஸப் பூச்சியாகி தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களாகின்றன. விண்மீனிலிருந்து இன்னொரு விணமினுக்குத் தாவும் கதையானது மெண்டார் எனும் மூழ்கிய பழங்கப்பலில் இருந்த பார்தெனான் எனும் மிக மெல்லிய துணிகளில் வரைந்த புதிராகிக் கருநிற எழுத்துமுறைகள் நிரம்பிய பெட்டியிலிருந்த மெல்லிய துணிச்சுருள்கள் சுற்றிச்சுற்றி அலையலையாய் வெளிப்படுகிறது சமுத்திரங்களில். எழுத்துக்களைக் கரும்பிச் சென்ற கடல்ராசிகள் கடல் மடுவில் துயிலும் தேவதைகளின் காதுகளில் ரகஸியமாய் சொல்ல, கடல் தேவதைகள் விலைமதிக்க முடியாத அபூர்வத் துணிகளை பெட்டிகளிலிருந்து அலையலையாக வெளியேற்றின. இந்த பூமி தன்னுடைய சொந்த அச்சில் சுழன்றுகொண்டே முடிவில்லாத அந்தத் துணியில் விரல்களாலே பரந்ததொரு ஓவியத்தை முடிவில்லாமல் வரைந்து கொண்டே ஊழிக்காலத்தில் மேல் எழும்பிய பனிக்கட்டிகளை கண்களால் பார்த்துக் கொண்டே அதே கண்களால் "மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தன் மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நின்றிருக்கும் துப்பாக்கிக் காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில் தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதல் முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன அந்த தாரத்து மத்தியானப் பொழுதானது நினைவுக்கு வரத் தொடங்கியது" என நூற்றாண்டுக்காலத் தனிமைவாசத்தில் முதல்வர் பனியைப் பார்க்க பல வருஷங்கள் மார்க்வெஸ் காத்திருக்க வேண்டியதாயிற்று. பனி உருகி நிலம் உண்டான நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேலே வானம் பெயர் சொல்லப்படவில்லை. கீழே கெட்டியான பூமி பெயர் சொல்லப்படவில்லை. பெயர்கள் தனி எல்லை குறிக்கப்படவில்லை. முளை வெளிப்பட்டாகவில்லை. எந்தத் தெய்வமும் வெளிப்பட்டிருக்கவில்லை. ஊழ்விதிகள் எவையும் நிர்ணயிக்கப்படவுமில்லை. எந்தப் பொருளுக்கும் எதிர்காலம் இன்னதென்று நிர்ணயம் ஆகாத போது கடலோடிகளும் பாலைவன மாய இனங்களும் மீமனிதப் புராணங்களும் முன் அறியாத துயர இருள் வீசும் மனிதப் பாதைகளும் ஆயிரம் பாதைகள் சொன்ன கதைகளும் பின்னால் வந்த மத போதகர்களும் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களும் ஆக்கிய அற்புத புராணக்கவிதைகளும் நாடோடிக் கதைகளும் கற்பனைக் கதைகளும் கலந்து வடிவம் பெற்ற பைபிளை தலைகீழாக்கம் பெறவைத்த தனிமொழியின் சிருஷ்டிகரப் பாய்ச்சலாக கொலம்பியாவில் 

293 

தணிந்த எரிமலையின் வயிற்றில் பிறந்த காப்ரியேல் என்ற கதைக்காரன் தொல் பழங்கால ஜனங்களது கலாச்சாரங்களின் நீரடிப் பாதைகளை தாவரவகை எழுத்தாக்கியது நவீனம். 

அரக்கரடக்கா வீட்டைச் சுற்றி நடமாடிய ஆவிகள் எலும்புகளின் இசையில் ஆடிக்கொண்டிருந்தன. அந்த வேளை பாட்டி டோனா ட்ராங்குலினாவின் மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட கொடூரமான உருவங்கள் பாட்டிக்குள்ளிருந்து வெளியேறிப் போய் அல்மாண்ட் மரத்தில் மறைந்தன. தாவர ராஸிகளின் காரவாசனையை நுகர்ந்து பெருமூச்சுவிட்டாள் பாட்டி, மயக்கத்தில் பூக்களுடன் உறவாடிப் பல வார்த்தைகளை செடிகளிடம் சொன்னாள். அவள் பெரிய முக்தில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப் பிரிந்து தொலைவான நிலப்பரப்பில் வீசிக் கொண்டிருந்த துயரக் காற்றாய் மாறியது. அவள் மூதாதையர் வாழ்ந்த தரிசுப் பிரதேசத்தில் விநோத இந்தியர்கள் வாழ்ந்தார்கள். ஆளவரமற்ற மலைப்பறம்புகளில் அசையும் நிழல்களுடன் பதுங்கியிருந்த கிராமங்களில் வெளியாளுக்குத் தெரியாத பாடல் உதிர்ந்து கொண்டிருக்கும், பாடல் கறைபடாத மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட எலும்புகளுடன் உதிர்ந்தபடி, வணங்கப்பட்ட எலும்புகளுக்கு விரோதமாக வாட்களை நீட்டுவதில்லை. பிறந்த மாந்திரீகக் கதைகளும் புராண வீரர்களின் சரித்திரமும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு கானகங்களினூடு மறைந்திருந்தது அரக்காடக்கா. பிறகு வாழைத் தோட்டங்களுக்காகப் பொசுக்கப்பட்ட கானகங்களின் புகையும் புழுதியும் சாலைகளாக வளைந்து செல்லத் தொடங்கின. இருண்ட தார்ச்சாலைகள் பொருள் போக்குவரத்தால் நெரிசலடைந்து ட்ரங்க் ரோடுகளாயின. அரூபமான தான்தோன்றிப் பாதைகளில்தான் ஆவிகள் உலவும். கதைகள் புதையுண்ட பாதைகளில் ஒவ்வொரு சுவட்டிலும் ஞாபகங்களின் துகள்கள் மறைந்திருக்கும். பாட்டியின், அத்தைகளின் ஞாபகங்களில் மறையாத காட்டுப் பாதைகளை மார்க்வெஸ் எந்த இரவிலும் அந்நிய நகரத்தின் வாடகை விடுதியில் இருந்தவாறே நினைவுகூர்வார். மிருகங்களின் காலடிகளும் பறவையின் தடங்களும் காற்றின் மிக மெல்ல துயரமும் படிந்த மணல் பாதைகளில் ஒவ்வொரு மணலையும் மூன்றாம் உலகக் குரலாக மாற்றினார். களங்கமற்ற எரிந்திராவின் பாலைவனத் துயரக்காற்று பெருங்கண்டங்களின் ஒடுக்கப்பட்ட மனிதரின் மூச்சாய் சுழல்கிறது. 

துருப்பிடித்த அச்சில் திரும்புகிற பல நூற்றாண்டுகள் முதிர்ந்த கரகரப்பைத் தவிர வேறு எதையும் இந்த பூமியால் கேட்கமுடியாதபோது ஆலீஸின் அதிசய உலகத்தையோ அராபியக் கதைகளையோ கேட்டுக் கொண்டிருக்கும். தன்னை விட முதிய பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையாக பூமி இருந்து கொண்டிருக்கும் வரை வெளியில் காத்திருக்கும் சாவை தள்ளிப் போட்டவாறு உயிர் வாழக்கூடும். இந்த நூற்றாண்டு முடிய இன்னும் நான்கு தப்படிகளே எஞ்சியுள்ள தருணத்தில் மார்க்வெஸ்ஸின் சிறப்பிதழ் லேஸரில் ஓடத் தொடங்கி இன்று தமிழ் வாசகரின் நாடித்துடிப்பிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது, இதுவரை படைக்கப்பட்ட தமிழ் எழுத்தில் மிகுதியாக எதிர்காலத்தின் பெயரிலேயே துரோகங்கள் அனைத்துமே செய்யப்படுகின்றன. வரும் நூற்றாண்டின் துவக்கத்தை இப்போதே உன்னிப்பாகப் பார்த்தால் கதைமரபுகள் காலியாகிக் கொண்டிருப்பதையோ சிறு கூட்டத்தால் மறைக்கப்படுவதையோ காணலாம். 

294 

பிராந்திய மொழி மரபுகளிலிருந்தே சுயம்புவான கலாச்சாரத்தின் ஆதித் தன்மைகளைக் காக்க முடியும். மாபெரும் கண்டத்தின் சிறிய நிலத்துண்டிலிருந்து பாட்டியின் நீலநிறக் கண் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் மார்க்வெஸ் மாந்த" " எதார்த்தவாதத்தை நிலப்பரப்பாக்கியது உலக மொழிகளுக்கு மாறி மாற 200" மேலுறை விம்மி எழுகிறது. பூமியின் மேலோட்டில் வயோதிக மனிதன் மா இறகினால் எழுதிக் கொண்டிருக்கும் சாகாத வஸ்துவான கதையில் மறைகிறான. 

அலாதியான கலாச்சாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அந்நிய 2"?" மூலதன வெறி கொண்ட சிக்னல் விளக்குகளுக்குக் காத்திருக்கிறது தமிழ். வெற்ற கொள்ளும் பொருள் மேலாதிக்கக் கலாச்சாரத்தில் வேகமாகத் திணிக்கப்படும் ?? உற்பத்திப் பண்டங்களுக்குள் பலன்கள் நசுக்கப்பட்டுவிட்டன. உலகே நொறுங்க - 2 அளவுக்கு விநாசங்கள் வந்தபோதிலும் கரைக்கு அப்பால் எறியப்பட்ட போதும் சொந்த திணைப்பூவின் ஸ்பரிசமானது நிலத் தோற்றங்களாய் தானியங்களின் கண்ணீராய் இசைக்கப்படும். அகதிகள் போனபின் முகாம்கள் கோழிப்பண்ணைகளாக உருமாறின. மரபுரிமைமீது கைவைக்கும் ராட்சஸ விரல் நகங்களுக்குள் பதுங்கி பாலீஷ் அடிப்பவர்கள் கூட்டமாகிவிட்டார்கள். கலாச்சாரம் அரூபமான மொழி சமிக்ஞை கொண்டது இனி. புறத்தைச் சுற்றி வரும் எதார்த்தவாத விரல்களைக் கம்பன் நிலத்தடி புடை மண்ணில் ஒவ்வொரு துகளிலும் தொட வைக்கும் முயற்சிதான் இதழ். 

இப்போதும் சப்த சமுத்திரங்கள் மணல்காணும் ஆழத்தில் கொலம்பஸ்ஸின் கற்சவப்பெட்டியை நான்கு மாலுமிகள் கொண்டு செல்லும் பைசாசக் கப்பலின் கடற்கோடுகள் சலனமடைந்தவாறு இருக்கிற எழுத்தாக மார்க்வெஸ். அஸ்டெக் கடவுளான சக்-மூல் கப்பலில் செல்லும் கற்சவப்பெட்டியை திறந்து கல்நாகங்களை வளையவிட்டார் ஃபுயன்டஸ் எழுத்தில். வடிவத்தை உடைத்து சே குவேராவின் உருவிழந்த கைகளை சக்-மூல் சிலையில் ஒட்டவைத்த கொலம்பியப் புதிரான ரஸவாதி. இவ்விரு மாய அஸ்டெக் எழுத்தில் ரகஸிய இனங்களது துயர்மிக்க நினைவுகள் கதை விளிம்புகளில் உடைந்த ஈட்டிகளாய் சிதறிக் கிடக்கின்றன. ஞாபகத்தின் சுவர்கள் குருதிதோய்ந்த சிவப்பாய் இருக்கின்றன. அதனைப் பருகிய போது கரித்தது எழுத்து. பாரம்பரியப் பெருமை சிதைந்தபோது வாழைத்தோட்ட நீண்ட ரயில் தொடரின் மரணாலி கேட்டு மலைகளுக்குள் சினத்தால் ரத்தமேறிய முட்டிகளால் மண் சுவர்களைக் குத்தினார்கள் கொலம்பியர்கள். பாதுகாப்புக் கவசமணிந்த மெக்ஸிகர்கள் யுத்தத்தில் வீழ்ந்த பழமையான வர்ணனைகளை ஃபுயன்டஸ்ஸின் எரிந்த தண்ணீரில் காண மரப்பாலமாய் குறுக்கே செல்லும் மார்க்வெஸ் எழுத்தில் கடற்கொள்ளையரின் மாலுமிகளின் ரஸவாதிகளின் நாடோடிகளின் காலடி மர ஓசைகளில் பாலைவன முதுகெலும்புகள் கூட்டமாய் நகர்ந்தன. நினைவுக்கெட்டா கால முதற்கொண்டு கற்பனைப்புராண இதிகாசக் குறிப்புகளை லத்தீன் அமெரிக்கரின் சமுதாய நினைவுகள் தனிமொழியில் சுருளவைத்து அராபியக் கம்பளங்களாய் விரித்தார் மார்க்வெஸ். 

அஸ்டெக் இனம் வைத்திருந்த அமாக்கல்லிப் பதிவறைகளில் முப்பதடி நீள அகலமான வரைபடங்களில் காட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கிளைகளில் சிக்கிக் 
295 

கொண்ட பகைவர்களை கொலம்பஸறிக்கு முந்திய உலகை விவரித்த தோல் வரை படத்தில் பதிந்த தாவரங்களின் மறைவிபோர்ஹெ இருந்திருக்க வேண்டும். காகத்தான் மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளாத காலத்துக்கு மறைந்து முன்பே தோன்றியவர்தான் போர்ஹெ. அது வரை ஐரோப்பியர் பார்த்திராத எழுத்தை ஸ்பெயினில் விளைந்து இந்தியர்களின் மெல்லிய விரல்களால் பருத்தி நரற்று மென் துணியில் தீட்டப்பட்டிருந்த போர்ஹெயின் விநோத உருவத்தில் தாவர மிருக மீன்வகை தசைநார்களால் தீட்டிய இன்னொரு போர்ஹெ ஐரோப்பியக் கடலோடி களிடம் சிக்காது அர்ஜென்டினய கடற்குகையில் மீன் கன்னிகளோடு ஒரே இளவரசனாகத் துயில்கிறார். இருளில் மறையும் கதைகளை மிருகசீரிஷம், மூலம், அனுஷம், சதயம், தனு, சத்துரு, அரசை, அருள் நட்சத்திரங்களிடம் கேட்டு அடிமை அமெரிந்தியர்கள் நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கிய தோல்கோடுகளை கல்வரிகளை விண்ணிலிருக்கும் அண்ட கோச அடுக்கில் கணிதார்த்தமாக எண்களை மாற்றி விஞ்ஞான அதீதக் கதைகளை, கடந்த உலகத்திற்கும் தாவரங்களுக்குமிடையில் சொல்லி வைக்கிறார். 

மிகப்பழங்காலத்தில் தனிமொழி கொண்டு இந்திய மரபினங்களின் உடல்தோலில் வரையப்பட்ட பச்சை மையில் தீட்டிக்கொண்டிருக்கிறார் இனியாகும் எழுத்தை, பூமியைத் சுமந்து கொண்டிருக்கிற கார்க்கோடக ஸர்ப்பமானது சந்திரனை மெல்ல மென்று கொண்டிருக்க பூமியில் விழுந்த நட்சத்திரங்களோடு சூரியனுக்கு எதிரான கடும் ஆயுதங்களைப் பறக்க விடுகிறார் போர்ஹெ. எரிகற்களால் ஆன கபாலங்களை அதன்மீது வீசுகிறார். ஸெண்டமாக் எரிகற்கள். போர்ஹெவை இருள்கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரத் தடியுடன் போர்ஹெ. 

ஐந்து திறங்கொண்ட திணைகளில் அமர்ந்திருக்கும் நட்சத்திரங்களுடன் சூதாடிக் கொண்டிருக்கிறார் மார்க்வெஸ். நட்சத்திரக் கோடுகளுக்கு ஏற்ப சந்திரப்பெண் வருகிறான். கபடறியா எரிந்திராவை வானவில்லின் ஏழு ஆன்மாவினால் உருவாக்கினார் மார்க்வெஸ். சூரியனின் வெப்ப சக்தியில் கனன்று கொண்டிருந்த புரட்சிகரக் கனவைப் படைப்பாக்கியது நவீனம். தீவிரக் கலை இலக்கிய இயக்கமாகி சாலைகளிலும் வீதிகளிலும் பஸ்களிலும் காலியிடங்களிலும் மார்க்வெஸ்ஸின் இனந்தெரியாத சக்தி முழுவீச்சுடன் உலக வாசகர்களை ஈர்த்தது. 

செருப்புத்தொழிலாளர்கள், நாவிதர், வாடகைக்கு ஓட்டுபவர், தச்சர், மீன்பிடிப்பவர், தையல்காரிகள், கடல்கொள்ளையர்கள், மாலுமிகள், ரஸவாதிகள், வேசைகள். பணிப் பெண்கள் அவர் கதைவழியே நடமாடத் தொடங்கினர். இந்த வெப்ப மண்டல நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு அதன் நோய் பீடித்த கலாச்சாரத்திற்கு எதிராய் மேலோங்கி வரும் லத்தீன் அமெரிக்கக் குரல். 

மறைபொருளாகவுள்ள மொழியும் சரித்திரமும் சித்திர எழுத்து வகை பிரமிடுகள், பலிபீடங்கள், நடுகற்கள் என மூன்று பிளவுகளாக எழுத்தைப் பிரிக்கும். கல்படைப்புகளில் பாதி பூனை வடிவக் கல் உருவத்தின் கண்கள் மட்டும் பச்சைக் கற்களாக ஒளி கக்கும். பூனை வடிவக் குழந்தையை வைத்திருக்கும் மனிதக்கல் கொலம்பியப் புதிராய் மார்க்வெஸ்ஸின் படைப்புகள். 

296 

யுத்தகளத்தில் மாலை நேரம் பாட்டி.யால் ஏவப்பட்ட மஞ்சள் வண்ணத்துப்பூச்சி மாண்டு கிடக்கும் கர்னல்கள், வீரர்கள், வெற்றிக்களிப்பில் துயிலும் கர்னல் அவ்ரலியானோ புண்டியா மீதும் ஒரே மாதிரி வந்து வந்து உட்காருகின்றன. காலம் கடந்து செல்வதை ஆழமாக


னோ நுட்பமாக உருவகப்படுத்த யாரால் முடியும். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஒருங்கே

வாழ்ந்தாலும் அழகு காட்டிச் செத்துப்போகும். ஆயினும் எட்டு கோடி வருஷங்கள் பூமியைச் சுற்றி வருகின்றன, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் அழியா ஆயுள் பெற்றிருப்பதாக , நினைக்கின்றன, வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டே பல தலைமுறையாக மாறி மாறி எல்லா நிறங்களாகவும் உருவெடுத்து கர்னலின் மீது அமர்ந்திருக்கிறது வந்து, ஒரே நாள் மட்டும் வந்து அடுத்த தலைமுறையாக மாறி மாறித் தோற்றம் கொள்வதான மாய்த்தன்மைதான் மாந்திரீக எதார்த்தம். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஏவியவாறிருக்கிறார் " மார்க்வெஸ்ஸன் பாட்டி எனவே........
3
சிறுகதையின் திருமூலரை மனக்கோட்டையில் அடைத்த பயத்தில் நடுங்கும் புறம் கோட்டை மதில்கள் எட்டிய வெளியில் நகரும். பிரபஞ்சத்திலேயே விடுவிக்க முடியாத சிக்கலான வஸ்து கதையாகவே இருக்க முடியும். "ஓடி னால் (odin) ஓடினுக்குக் கொடுக்கப்பட்டு சாம்பல் மரத்தில் ஒன்பது பகல்களும் ஒன்பது இரவுகளும் தொங்க விடப்பட்டு பிறகு ஓடினால் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஸ்காண்டினேவிய ஆதி எழுத்துக்களை மூதாதையர்கள் செதுக்கியது போல தங்கள் எழுத்துக்களை செதுக்கிக் கொண்டார்கள். ஆனால் நான் கண்டது இந்தச் சச்சதுக்கத்தின் நடுவே மஞ்கள் மரக்கம்பம். அதனுடைய உச்சியில் மீனின் கறுப்பு உருவம். எங்களுடன் வந்த ஓர்ம் அந்த மீன்தான் அந்த வார்த்தை என்றான். ஆனால் உன்னுடைய சாவைச் சந்திக்க நீண்ட நாட்கள் இல்லை. ஏனெனில் நீ அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டாய். * போர்ஹெவின் வார்த்தையில் திறந்து கொண்ட கபாடபுரம் ஞாபகம்காண மறதியைத் தேடுவதில் ஐடமென இருநூறு வருஷங்கள் நாற்காலிகளில் வீற்றிருந்தார்கள் எழுத்தாளர்கள். எதார்த்தவாதக் கதைஉலகை இருள்கொண்டுவிட்டது. கபாடபுரத்திலிருந்து பித்தன் திரும்பிப் பார்க்கிறான். சரிந்துவிழும் கதைகளாலே சுவர் எழுப்பிய கபாடபுரம் கண்முன் செவிப்புலனாம் ஓசை கேட்டுக் கட்புலனாம் பொருளுணரும் தொல்லோர் திணைப்புக்களின் வாசனைக்குள் நிலங்களாய் விரிந்த பித்தனின் வார்த்தையில் கபாடபுரத்தின் மறையாத யார் யாருடைய காலடிகளின் வளைந்த ரேகை அலையலையாய். முன்னோர் கலாச்சாரம் மூழ்கிய கடலினுள்ளே தொல்காப்பியத் திணைப்பூவில் விரியும் கடல் கொண்ட கபாடபுரம். வெறுமையாகி நின்ற தெருக்களில் உலவும் முன்னறியாத கதைகள் முகங்களை விழுங்கி கிழக்கோட்டான்களாய் தனிமொழியில் சொல்லத் தொடங்கிய ஞாபகங்கள் தெருக்களில் மோதி எதிரொலிக்கின்றன. கபாடபுரத் தெருவில் பித்தனிடம் பேசுகிறது நகரம். கடல் கொண்டழிந்த தெருக்களில் வசித்தது தனிமை. மெளனியின் எட்டிய வெளிக்கும் அப்பால்,
297
கபாடபுரம் விரிவதைப் பார்வைகொள்ளச் சிறிது நேரம் ஆகியது போலும். முன் பின்னும் இடிந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டக் கலாச்சாரத்தின் பாழ் தோற்றம். . . பாதையில் புதைந்த சுடுமண் தாழிகளின் புராதன மூச்சிலிருந்து குருதியின் பழங்கால் ரகஸியமே கதைமரபாகும். உறைநிலையில் இருந்த பூதக ஏடுகள் நுரைபொங்கி பித்தனை இழுத்த ஸர்ப்ப அலைகளால் விழுங்கப்பட்டு மீண்டும் ஸர்ப்ப வாய் திறந்து வெளிப்பட்டான். ஞாபகங்களில் ஊர்ந்துவரும் ஏடுகளில் நிழல் கோடுகள் எதிரே ஒளி படர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து ஆடும் நிழல்கள். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். ஊழிப்பெருவெளியில் வெட்டி வெட்டிப் போன எழுத்துகள் நிழல்களாகி விரட்ட கூட்டமாய் கடலுக்குள்ளிருந்து நுழைய கபாடபுர நிழலின் அசுர ஓட்டத்திலிருந்து தப்பி ஓடுகிற நிழல்கள். தவளைகள் குரல் சுழற்சியில் உருவெடுத்த காடபுரம் நீருக்குள் சுழிசுழியாய் சுழல்கிறது. நகரும் பவளப்பாறைகளில் இடம் மாறி நகரும் நாவலந்தீவு. எட்டுத் துதிக்கைகள் கொண்ட கடல்ராசியாக மாறிய நாவலந்தீவு தோன்றி மறைய பித்தன் தலையில் விழுந்த துதிக்கையின் ஸ்பரிசம் பட்டு கற்பனைத் தீவுகளில் விசித்திர நீர் செடிகள் ஒளிர்வடைந்து புதைபாதையில் சுழற்றி இழுத்தது பித்தனை. செல்லும் வழி இருட்டு. செல்லும் மனம் இருட்டு. சிந்தை அறிவினிலும் தனி இருட்டு. பித்தன் தானே விசித்திர பிராணியைத் தேடிப் போகிறான்.
பனையோலைச் சுவடிகள் நீந்திவர ஓங்காரமிட்டு அலறித்துடிக்கிறது கடல். இருள்படிகளில் புதுமைப்பித்தன். உள்ளே மெளனி வடித்த பெண் சப்தம். சிலம்பின் கொஞ்சல்கள். கேட்டுக் கேட்டு மறையும் பிரபஞ்ச கானம். வான வெளிச்சம் ஜலப்பரப்பின்மேல் படர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. மெல்லெனக் காற்று வீசியது. அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின. பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது. அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ள வெளியுலகம் கொஞ்சமாய் மாறுதல் அடைந்தது. தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகிவிட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த, அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவை விட உன்னதமாயும் மரணத்தைவிட மனதைப் பிளப்பதாயும் அலைகள் வந்து வந்து மோதிச் செல்கின்றன. கபாடபுர இசைப் பறவைகளின் எச்சம். வழிவழியாய்க் குரல் கொடுக்கும் கோயில் பிரகாரங்களில் நடந்து போகிறான் மெளனி, சிலைகள் உருவெடுத்து மறையும். கோபுரமெல்லாம் மூளிக்கலசங்கள். மோதும் சிறகுகளோடும் காதல் வடித்த கண்களோடும் கபாடபுர இசைப்பறவை. பறந்து பறந்து துடிக்கும் குரல். அங்கே அவள், பித்தனை எந்த யுகத்திலோ பின் தொடர்பவள், பேசாமடந்தையாகி கடல் கொண்டும் கல்லாய். கன்னியே கல்லாகிக் கண்மூடி பொய்ப்புன்னகை புரிந்து நிற்கிறாள். எதையோ கல்பதுமையிடம் இழந்த பித்தன் கதறுகிறான். கர்ப்பக்கிரஹ இருட்டு துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது. இருளை மீறி முனகல் கேட்கிறது. மனம் கீறும் கண்களா, இரு தீப்பொறிகள் உள்ளே தெறிக்கின்றன.
நிருதியின் திசையிலிருந்த பலிபீடத்தின் மீது தலை அமர்ந்திருந்தது. கன்னியின் தலை. பீடத்தில் பலியிடப்பட்டு கடலில் எறியப்பட்ட சப்த கன்னிகளின் எலும்புகளின் குமுறல் அறைகளுக்குள் அடைபட்ட கடலாய் சீறுகின்றது, கன்னியின் சிரசு கல்லாகவும்
298
ஆ மையோட்டு
லலாமுகத் தோற்றங்களையும்
முடியும். பித்தன,
ஐயாட்டு நிறத்தில். அவள் முகத்தோற்றம் எல்லாமுகத் காட்டுவதாக, பித்தன் பார்த்தவாறு தி.
தை நினைத்துப்பார்த்து அதில் பிரதிபலிக்கக் கண்டான். பிற
'தேதி வெறித்தான். அவனது தந்தையின் தந்தை மகத்தோற்றத்தை நினைக்க அதுவ
ககக் கண்டான். பிறகு பாட்டியின் மகங்களையெல்லாம் காண வ
குந்தது. தாயின் முகம், அத்தையின் முகம், புராதன அது பித்தனின் கற்பனையில் வாழ்ந்தவர்கள், கடந்த காலத 2
' அனுபவத்துக்கு அப்பாற்பட்டதையும் அதில் காண கதைகளின் வீரர்களாக
* கடந்த காலத்தைச் சேர்ந்த கட்டுக் ) அடர்களது சாயல் தோன்ற எல்வா மாகாண
"ஒறங்கள், கேள்விப்பட்ட கதைகளிலுள்ள அதி உதிரத் தொடங்கிய குரல்களில் வித
பிலா முகங்களின் ஒரே முகமாக கன்னியின் சிரசில் உரிய கடலான இருளில் உறைந்து போன கல்,
'ந்துவந்த நிலத் தோற்றங்களைப் பார்வைகொண்டு
றைந்து போன கற்கள் கண்ம் விலகி நகர்கின்றன். கண அலையாகத் தங்குகிற கரிய நிற இருளடைந்த கடல் துளி விரிந்து வர்றது வரியும் கபாடபுரம் பயங்கரம் நிரம்பி மங்கலாய்த் தெரிகிறது. நகரம் ' பித்தனின் வார்த்தையில் உயிர்க்கும் கபாடபுரம்.
(கலாய்த் தெரிகிறது. நகரம் நீரில் அசைகிறது,
இருக்கும் கன்னியின் சிரசு அதன் அலகபாரம் ரத்து வினாறான பலிபீடத்தில் விரிந்து கிடக்கிறது. அவள் கூந்தல் வளர்ந்தபடியே இருந்து கட்டுக்கட்டாய் அலைய00, வெளியேறிப் போனது அவள் அரூபத்துடன். கானகங்களில் மிருகங்களின் புராதன மூச்சின
ய இருந்து கட்டுக்கட்டாய் அலையலையாய் மேல் துயில்கிறாள் கன்னி. திரும்பவும் கடலில் புகுந்து பலிபீடத்தில் தலையாகி விடுகிறார்: மனிதவம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வருகிறான். பல
(பகச சரடாக இருந்து வருகிறாள். பலிபீடத்தில் தலை பேசுகிறது. சண்பகப்பூவின் வாசம் கலந்த றெல்,
பொசம் கலந்த மெல்லிய காற்று பலிபீடத்தில் ஊன சலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது, கற்குகைக்குள்ளே தோன்றி அதனுள்ளே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்றடித்தால் சூரியோதமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும் போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது கன்னியின் தலை.
"நீ யார்."
"மூன்று கர்ப்பகாலம் கடந்து விட்டது. எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும்.'
சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு ஏற்பட்டதைக் கேட்காதே. ரகஸியம் உனக்குக் கிடைக்காது. பரம ரகஸியமாய் ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. இது திசைகள் அற்றுப் போன இடம். எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதான்."
பிலத்திலிருந்து எழுவதும் மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கு அடியிலிருக்கும் எரிமலைதான் இப்படி. அக்னி கக்கும் மலையருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்தன. பூமியின் அடியில் கபாடபுரத்தின் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. பிலத்துக்குள் சென்றான் பித்தன்.
299
ஒரே இருட்டு.
கடல் குகைகளுக்குள் மறதியில் மூழ்கிய கபாடபுர வாசிகள் தங்கள் தனிமொழியால் இசைக்கும் மகரயாழில் மறைந்த "வார்த்தை "யின் சங்கேதப் பாடலை இசைக்கிறார்கள், அவர்கள் கையிலிருந்தது மறைந்து போன சில தானியங்கள் மட்டும்தான். ஒவ்வொரு பூவைச் சேர்ந்த தானியத்திலும் ஒரு கன்னியின் தனிப்பாடலை இசைத்தார்கள், அந்த வடிவங்களைக் கேட்கக் கேட்க பல குளிர்காலங்களுக்கு கூதிர்காலத்துக்கு கோடைகளுக்கு பாலைகளின் பாதைகளுக்கு முல்லை நிலங்களுக்கு மருதநில மரங்களின் நிறங்களுக்கு சண்பகப்பாலை மரங்களின் மந்திர வயப்பட்ட குறிஞ்சிக்கு நெய்தலின் தீராத அலைகளுக்கு அவர்களது தனிப்பாடல் இழுத்துச் சென்றது. கடல் குகையின் கதக ப்பான சுவர்களில் இருந்த பெருமூச்சில் விரிந்த யாழின் நரம்புகள் தீரவே தீராமல் அ, து கொண்டே இருக்கவும் இதயத்தை அறுக்கும் சோகத்தை இசைக்கவும் மகர யாழ் கல்லில் மோதி விழுந்தது. கை தவறிவிட்ட மகர யாழ் கடலில் மூழ்கியபடியே அலைகளால் அதிர்கிறது, தானே வாசித்துக் கொண்டிருக்கும் யாழ் மூழ்கிய இனக்குழுவின் பாடலின் அடியில் மெளனித்து.
உள்போய் உள்போய் குமுறிக் குமுறிக் கதறுகிற யாழ். யாழ் அலைகள் பாறையில் மோதி அழி அழி எனக் கதறும். வானளாவிய கோபுர நிழல்களை கடல் அரிக்கிறது. கடல் மோதி மோதி கோபுரத்தைக் கொல்கிறது. கோபுரம் உருவெடுத்துப் பெருகி வளர் கிறது. கபாடபுர வீடுகளில் கறுமையான கடல், பாறைகளில் பாதம் படர்ந்து கடல்நீலமாகிவிட்ட பித்தன் எப்போதுமே கடலின்மேல் நடமாடுகிறான். கபாடபுரம் ஒளியில் லேசாய் மினுக்கும் சில ஜன நடமாட்டம் தெரிகிறது. தெருக்களில் மீண்டும் நடமாடும் அரூபமானவர்கள் கபாடபுரத்தில் இன்னமும் எஞ்சிப் போயிருக்கிறார்கள். எங்கோ மறைந்து போய் ஆள் அரவம் கேட்டு கடல்கோட்டையில் மறைகிறார்கள். என்றைக்குமான மனிதர்களுடன் பேசிப் பேசி வார்த்தை இழந்து மெளனமாய் நிற்கின்றன கபாடபுரத் தெருக்கள். சுருக்கங்களே முகமாகிப்போன மனித அரூபங்கள் படபடத்து தெருக்களை ஊடுருவி நகரும். கரும்பூமி கபாடபுரத்திலும் உண்டுதானே. அங்கே மண் கறுத்துப் பிறந்த கதைகள் கொடி சுற்றிக் கொள்ளும். சில இடிந்த கோயில்களில் சிலை செதுக்கும் சப்தம். கல்லின் வறண்ட ஊற்றை நோக்கி உளிகள் நகரும். உளிகளில் அலைகள் கோடுகோடாய் சுழலும்.
கடல்பறவை கூட்டம் கூட்டமாய் அமரும் கபாடபுர மதில்கள் கரைந்து பரந்த மணல்வெளியில் கால்வைத்து மணல் கொறிக்கும். பாழ்வெளியே சிறகு முளைத்து மணல் சிறகில் பறந்து செல்லும். அலகில் கபாடபுரத்தின் நூற்றாண்டுகளான தனிமைவாசத்திலிருந்த ஒரு மஞ்சள் தானியம்.
இரவின் இருள்வழியே உருவற்று ஊளையிட்டோடியது எட்டிப்போகும் நாரி', தொன்மக் கதைகளுக்கு ஊசியாகும் முள்ளெலிகளோடு கூட்டமாய் வருகிறான் வால்பகடை. கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள். நரியின் ஊளையில் புரளும் நாக சாரைகளின் காட்டுக் கலவி புறங்களில் விம்ம ஒலிபுரளும் உறுமிக்குள்
300
****
ஆயிரம் கபால வழி திறக்க குறுக்கோடும்
சாரைகளின் சீற்றம். இருளின் கால்கள்
ன கால்கள் திரியும் வேட்கையில் ஊனளயிடும் அரூப வனம். விட்டுக் கேட்கும் உருவற்ற ஊளை. மரண நடனமிடும் முள்ளெலிகளுடன் நரிகள் தெரி
தாடர வடுகாட்டில் மூதாதையின் எலும்புகள் உறுமும். ஆயிரம் கபால வழி திறக்க 94 வெருகுப்பூனை கபால வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்து... கலை கல்தோலையுடைய கட்டுக் கட்டான விருசம்பாம்புகள் விஷப்புகை கக்கி தம் சாவதானமாய் நெளியும், பலபல வகைகள்
" பலபல வகையில் ஒளிவிட்டுத் தவிக்கும் கல்நாகங்கள் பாய எழுத்தில் டமாரமிடும் அனல்வாக்கு சடை நாக்கில் வா வால்பகடை வருகிறது " தொலைதூர் நரியின் குரல் தேய உடனே உறுமியில் பற்றும் ஒலி தோலில் நகர்ந்து அதிர் பிரபஞ்ச கானமது நரியின் ஊளை, எழுத்தாவிகளின் இருள் கூட்டம் முன்பு எலும்புகளில் சுற்றிச் சுழல் கண்களைப் பறிக்கும் எலும்புத் துகள்கள் மணலில் சுற்றி உலகத்து ஜீவராசிகளின் எலும்புக்கூடுகள் பாதிபுதையுண்ட மொழி மணிபல்லவத்தில் மாந்திரீகப் பாத்திரத்துடன் ககனங்கள் துகளாகும் வெறியுடன் பிளந்த கோலத்தும் வெ வாலைக் கனிவு குன்றாத கன்னியுருவம். அசைவற்று நிற்கும் உருவத்தின் முகம் புன்னகை. உயிர்குடிக்கும் கொடூர உணர்ச்சிக்கும் அப்பால் வேட்கை பெருக்கெடுக்கும் இதழ் நடுக்கம். சப்த உலகங்களும் மோதுவனவாகும் பேரிடி. நீல நாயின் கண்கள். கானத்தில் நாயின் ஊளை திருகத் திருக வால்பகடை உறுமியில் திறக்கும் நீல நாயின் கண்கள். பாறை ஊசிகள் இருகூறாகப் பிளக்க முள்ளெலி முதுகுகள் குத்திட்டு அசைய மாட்டுத் தோலில் வரையப்பட்ட பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்ச கானம் என்ப்.
வாலைக்கனிவு குன்றாக் கன்னியிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்பே என விழுந்த மெளனி காதில் உரசும் மாட்டுத்தோல் உறுமி படபடக்க ஒரே இடத்தில் பதிந்து பரவும் மிகக்கோரமான பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம் வசீகரமென தோலின்மீது எழுதப்பட்ட மாந்திரீக மொழி கொலம்பியப் புதிராய் தொடர் கட்புலனுக்கு அடைபடாத பறைச்சேரி நாயின் முதுகெலும்பு வளர்ந்து வாலாக ரூபமடையும் தொன்மம். வர்ணபேதங்கள். சிற்ப செளந்தர்யங்கள். சக்திப்பிரளயம். காவல் தெய்வம். ஒரே இருட்டு. பின்தொடரும் ஞானக்குகை. சப்த நுணுக்கங்களில் சஞ்சரிக்கும் கிரியாசக்தி. மோப்பம் தொண்ணூற்று ஆறு வகை ஞானம். மனிதனைக் கடைசிவரை தொடரும் அனுபூதி என நவீனன் எழுதிக் கொண்டிருந்தான். இந்த ஊரில் மேட்டுத்தெரு என வீதி. வண்ணான்குடி கசாப்புக்கடை மனித சமூகத்தின் எச்சங்கள் தெருநாய்கள். காகாவென கத்தும் விகாரமான காகங்கள் கோடியில் நின்று பார்த்தால் மறுகோடியில் பார்ப்பனர்கள் மயானம். எட்டிய வெளி சாம்பவாய். ஒனம் தள்ளும் கோலுடன் சுடுகாட்டுத் சாம்பலில் புரண்டு நிணம் எரிய கோடி கோடி யோனி பேதங்களில் துவாரங்கள் சுருண்டு ஊளையிட அனந்த கோடி ஜீவராசிகள் பட்சி ஜாலங்களின் இரைச்சலும் ஊளையும் தொடர் வால்பகடை வருகிறான். மயானபூமி இடிபட அவாந்திர வெளியில் நெருப்பாறு பாய நட்சத்திர மண்டலங்கள் திறக்க அப்போது துக்க ஓலத்தில் வாடைக்காற்றுடன் ஊர்க்கோடியில் நாயின் ஊளை. முன்வரிகளின் சாம்பலிலிருந்து முகில்கூட்டம் புகைந்து மேலோங்க ஊளையிடுகிறான் வால்பகடை தொலைவில் வெளிச்சப் புள்ளிகளாய் நீல நாயின் கண்கள். உருவற்ற ஊளையாய் பதில்குரல் கொடுக்கின்றன நீலநாயின் கண்கள்.
-
--
301
யார் பாறையால் கீழே இழுக்கப்பட்டவனோ
யார் காலரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டவனோ
யார் லாயத்தில் இடம் பெற்றவனோ
என முடியும் ரோஜர் வாட்டர்ஸின் நாய்களுக்குப்பின் நீண்ட பாடல். நாயின் ஊளைச்சத்தம் உடலுறவு கொள்ள இரண்டுக்குமிடையே நடக்கும் சண்டையின் சத்தம், அடிபட்டுக் கதறும் சத்தம், இடையிடையே நாய்க்குரைப்பின் ஓசைக்கட்டை விரிய, நாயின் பன்முகக் குறியீடாய் தெருக்கோடியில் நாய்களின் ஊளைகளோடு முடிகிற பாடல், நாயின் பல்வேறு பாஷைகள் ஊடே முடிய மெல்ல பின்னே நாயொன்று கூடவே பாட மனிதக்குரல் மங்கி தனியான குரலில் நாய் ஆலாபிக்க பின்னணியிசை நாயின் ராகத்தில் பல்வேறு ஐந்துக்களும் கோபம் கொண்ட மிருகங்களும் பிரபஞ்ச இடுக்கில் ஒரே குகையுள்ள படரும் நாளை வேண்டி பிரலாபிப்பென அவளுள் ஒடுங்கிய உன்னத கீதம் இருள்வெளியில் படரும் தெரு எனவே.

4
எஸ்தஃபான் மீன்களின் பெயர்களை வெறுமனே கூப்பிட்டுக் கடலிலிருந்து மீன்களை வெளியே இழுக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவன். இந்திரஜித் வில்லில் பூட்டிய நாணைத் தோள்புரள வாங்கி பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும் வலிமை கொண்டவன். சூலாயுதங்களையும் அக்கினியையும் விஷத்தையும் ஸர்ப்பங்களையும் நீரடி நெருப்படி மருப் சொரூபங்களை கரும்பூதங்களை பெரும் பேய்க்கூட்டங்களை உலகெலாம் நிரப்பிக் கொண்டு ஒருபுறமும் வடவாமுகாக்கினியை சூரைக்காற்றையும் சப்தசமுத்திரங்களையும் பேரிருள் மூடிவரும் வேகத்துடன் பறந்துவரும் பாசுபதாஸ்திரத்துக்கொப்பான பலம் உள்ளவன். எஸ்தஃபான் பாறை உச்சிகளில் பூஞ்செடிகளை வளர்ப்பதற்காக பாறைகளிலிருந்து நீரூற்றுகளை பீறிட்டுக் கிளம்பும்படியாக கரங்களை நிலத்தில் செலுத்தியிருக்கக் கூடியவன்.
இந்திரஜித் ஆகாயத்தில் மறைந்ததை வானர சேனை கண்டு இவன் சண்டை செய்து கொண்டே ஆகாயத்தில் மறைந்துவிட்டானே என ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
1

நீரில் மூழ்கிப் போன சில மனிதர்களுக்க மட்டுமே மரணத்திற்குப் பின்னும் வளர்ந்து கொண்டிருப்பது இயல்பாக இருக்கலாம். எஸ்தஃபோன் நீரில் வளர்ந்து கொண்டே இருப்பவன்.
302
ஆகாயத்திற்கும் பூமிக்குமாக உயர்ந்து உதயதிரியின் சிகரத்தில் உதித்தான இற?”
இந்திரஜித்.
எஸ்தஃபானிடம் கடலின் வாடை வீசியது. இந்திரஜித் புரிந்த யுத்தத்தில் "ப" "* பூமியும் உதிரத்தால் நனைந்து போகவும் உதிரமயமான சமுத்திரமாகவும் ஓங்கி வயற்ற """" எத்தப்பிரவாகத்தில் மாமிச பக்ஷணிகளாகிய பட்சிஜாலங்கள் மூழ்கி எழுந்து விடும் - மீது உட்கார்ந்து தம் சிறகுகளை உதறுவதினால் ரத்தத் துளிகள் பறந்து மலர்ந்த தா தேனுண்ண வந்த கறுத்த வண்டுகளும் செவ்வண்டுகளாய் காடுகளும் உத்தியாவா?" செந்தளிர்களைக் கொண்ட இந்திரஜித்தின் திரேகமாய் விரிந்தன செடிகள்.
மீதிருந்த செடிகொடிகள் தூரத்துக் கடல்களிலிருந்தும் மிகவும் ஆழத்திலிருந்தும் வந்தவை என்றும் அறியப்பட்டான் எஸ்தஃபான். அவன் மயிரில் சிக்கிய கடலடிக்கற்களை அகற்றினார்கள். களைக்கொத்திகளாலும் மீனைச் சுரண்டும் உபகரணங்களாலும் கடல் ஆழப் பாசிகளையும் மண்டியும் மகிளியுமாய் பாளம் பாளமான கடல் பவளங்களையும் அகற்ற முற்பட்டார்கள்.
.
கந்தர்வ ஸ்திரீகளென்ன, யக்ஷ ஸ்திரீகளென்ன, சித்த ஸ்திரீகளென்ன, ராட்சஸிகளென்ன, கிளிகள் நாகணவாய்ப் புட்களையொத்த அவன் சொந்த தேவிமார்களென்ன கறுத்த அற்றிற்பெட்டைகளான அரக்கிகளும் கும்புகும்புகளாகக் கூடி தலைமயிரை அவிழ்த்துக் கட்டி அழுதார்கள் இந்திரஜித்தின் மாபெரும் உடலைக்கண்டு.
எஸ்தஃபானுக்கு அப்பாவாக, அம்மாவாக, மாமனாக, மருமகனாக, அத்தையாக இருக்க ஓங்குதாங்கான சிறந்தமக்களைத் தேர்ந்தெடுத்தனர். தூரத்திலிருந்து பெண்களின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட மாலுமிகள் வழி மாறிச் சென்றனர். கடல் தேவதைகள் பற்றிய பழங்கதைகள் நினைவுக்கு வந்ததால் தன்னைப் பாய்மரத்தில் கட்டிப் போட்டுக் கொண்டே வீர புருஷன் இவனே என நினைவு வந்தது.
படரும் திசையெல்லாம் இந்திரஜித்தின் ரத்தம். அம்புகள் பதிந்த தேகத்தில் பட்சி ஹாலங்களும் தைத்திருக்க பலாயனப்பட்டு ஆகாயத்தில் பாய்ந்து உலகங்கள் கிழிபட்டுப் போகும்படி பறந்து கூக்குரலிட்டன. கறுத்த கழுகுகளின் சிறகுக் கூட்டத்துக்கு மத்தியில் ரத்தமேகம் இருப்பதாக இந்திரஜித் உருவம் கண்ட பகைவரும் நடுங்கினார்கள். இவன் கையில் பிடித்த வில் முறிய மாட்டாமல் போனாலும் இந்திரஜித் கையை அறுத்துத்தள்ள நினைத்தான் வஞ்சக லட்சுமணன். விரல்களழுந்தப் பிடித்த வில்லுடனே கூட வீர புருஷனாகிய இந்திரஜித்தின் இடது கையானது கீழே விழுந்து மரங்களும் மலைகளும் பொடியாகவும் வானர சேனை நசுங்கிப்போகவும் துடித்தது. அந்தர மார்க்கத்தில் நின்று படர்ந்து கொண்டிருந்த இவன் கையானது வீழா வில்லுடன் சூரியன் நடுங்கும்படியாகவும் சந்திரன் ஒளியும்படியாகவும் பேரும் தலை சுற்றி விழும்படியாகவும் அறுந்து விழுந்து விட்டதே.
எங்க போன் மரணத்தைப் பெருமையுடன் சந்தித்திருக்கிறான் என உணர்ந்தார்கள். கடல்பவளங்களில் மிதந்துவந்த மாபெரும் உடலானது வாடாமல் இருந்தது. பிற மம்கி இறந்தோரின் முகத்திலுள்ள துயர முகபாவமோ நதியில் மூழ்கி இறந்தவர்களிடமிருக்கும்
303
களைத்துப்போன தவிக்கும் முகமோ அவனிடமில்லை. அவர்கள் முகத்தில் கண்டதெல்லாம் மாபெரும் வீரனுடைய அழகைத்தான். இதுவரை பார்த்திராத மிக உயரமான. சக்திவாய்ந்த, வீர்யமான, வாளிப்பான உடல்கொண்ட மனிதன் மட்டுமின்றி கற்பனைக் கெட்டாதவனாகவும் இருந்தான்.
மவையைப் பேர்த்தெடுத்து வானரங்கள் மீது வீசி எமனுக்கும் எமனான இந்திரஜித் அந்தந்த அம்புகளை அந்தந்த அம்புகளாலே துண்டாக்கி விட்டு ஆகாய முழுவதையும் அட்டத்திக்குகளையும் சப்த சமுத்திரங்களையும் மூடிக் கொள்ளும்படியான யுகாந்த காலத்தில் பெய்கிற மேக வர்ஷங்களாகப் பிரவேசித்தான்.
எலும்புகளுக்குள் நடுங்கினவர் கத்தியால் மட்டுமே வெட்டக்கூடிய கல் நகங்களுடன் வெண் திமிங்கலமாய் தரை மேல் கிடந்தான் எஸ்தஃபான்.
ராவணகுமாரனுடைய வஜ்ஜிரத்தையொத்த கையானது அறுந்ததைப் பார்த்த அரக்கர்கள் எல்லாம் தங்கள் தலைகள் அறுந்ததை உணர்ந்தார்கள். வில்லுக்குள் உறங்கும் கும்பகர்ண மூச்சு இந்திரஜித் கைவிரல் பிடியில் இருந்தது உயிருடன். இந்திரஜித் உயிர் போன காலத்தில் உள்ளே இருந்த உணர்வும் இந்திரியங்களும் கொதித்துப் புரண்டு சுழலும் சீற்றத்தில் இருந்தன.
தைத்த எந்த ஆடையும் எஸ்தஃபானுக்கு சின்னதாகவே இருந்தது. அவன் இதயத்தில் மறைந்திருக்கும் சக்தி அவர்கள் அணிவித்த சட்டையின் பொத்தான்களைத் தெறித்து விழச் செய்தது.
சண்டமாருதத்தால் அடியுண்ட மேகமானது மின்னலுடன் இடியுடன் நிலத்தில் வீழ, சூரியனாகும் கண்கள், மண்டலங்கள் இடிபட பூமியில் இந்திரஜித்தின் தலை விழுந்தது வந்து. கேதஞ் சொல்லி வந்த தூதுவர்களை ஒரே வீச்சால் வாளால் வெட்டி இருபது கைகளும் அலையலையாகச் சோர்ந்து விழும்படியாய் சமுத்திரம் விழுந்ததேயாக கீழே விழுந்தான் லங்கேஸ்வரன்.
எஸ்தஃபானின் மாபெரும் தேகத்திலும் அழகிலும் மெய்மறந்துபோன பெண்கள் அவன் சாவிலும் கெளரவமாக இருப்பதற்காக தொடர்ந்து அவனுக்கு பெரியதொரு கப்பலின் பாய்த்துணியிலிருந்து கால்சட்டைகளையும் மணப்பெண்ணின் பிராபாண்ட் லினனிலிருந்து கொஞ்சம் எடுத்து சட்டையும் தயாரிக்க முடிவு செய்தார்கள். வட்டமாக உட்கார்ந்து தைத்துக்கொண்டும் தையலுக்கிடையில் பிணத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு காற்று இவ்வளவு தொடர்ந்து இதற்கு முன் எப்போதுமே அடித்ததில்லை என்றும் அந்த இரவைப் போல் கடல் அமைதியற்று இருந்தததில்லை என்றும் தோன்றியது.
கஸ்தூரிகளால் சித்திரமெழுதி உருக்கு ஸ்தம்பத்தைப் போலிருந்த இந்திரஜித் கை என்னைக் கட்டித்தழுவாமல் போனதே என்பான். மற்றொரு வாயால் ஆண்புலி போலிருந்த இந்திரஜித்தே உன்னைப் பயந்த மான்குட்டிக்கு ஒப்பானவன் வாங்குவதோ.
304
ராவணன் ரணகளத்திற்கு வந்ததைக் கண்ட மாத்திரத்தில் அங்கு பிணங்க 602 தின்பதற்கு வந்த பேய்களும் பட்சிஜாலங்களும் சினேகிதர்களாகி அழுதன. சில ராவணன் பாதத்தில் வீழ்ந்து சோகத்தில் பிடித்து அழ சில பேய்கள் துன்புற்ற மார்பிலடித்தன. சில பேய்கள் பயத்தால் யானைப்பிணங்களுக்குள்ளே புகுந்து ஒளிந்து கொண்டன. வந்த ராவணன் குதிரைப் பிணங்களையும் முகபடாமணிந்த யானைப் பிணக் கூட்டத்தையும் முறிந்து கிடக்கிற தேர்களையும் புரட்டிப் புரட்டி அக்கினியாக கொதிக்கிற மனதுடனே அதிக பலமுள்ள வெற்றி வில்லைப் பிடித்தபடியே இந்திரஜித்தின் வல்லமையான கை அறுந்து கிடக்கிறதை கண்ணால் கண்டு அக்கினிக் கண்களால் தீ கக்கும் கார்க்கோடக சர்ப்பமாய் கிடக்கிற கையை தன் சிவந்த கையால் தூக்கி தலைமேல் வைத்து ஊழிக்கால் சண்டமாருதமாகப் பெருமூச்சு விட்டான். பாண வர்ஷங்களால் மூடப்பட்டிருக்கிற இந்திரஜித் மார்பை ராவணன் கண்ணீரால் நிறைத்ததை இந்த உலகத்தில் வேறு யாரும் புத்திர சோகத்தில் இப்படி இருபது கைகளும் அலைபட அழுததில்லை என்ப.
அடிவானத்தில் தெரியும் ரோஜாக்களின் வரிசையை கப்பல் தலைவனின் தொலை நோக்கியும் திசைகாட்டியும் சுட்டிக்காண்பித்துப் பதினாலு பாஷைகளில் சொல்லக்கூடும். எங்கே இப்போது காற்று அமைதியாக உள்ளதோ, படுக்கைகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கிறதோ. சூரியனின் பிரகாசத்தில் சூரியகாந்தி மலர்கள் திரும்பும் திசை தெரியாமல் இருக்கின்றனவோ அங்கே எஸ்தபானின் கிராமம் இருக்கிறது.
-
1
-
வட்டமாக விசாலித்துக் கிடக்கிற யானைப்பிணங்களே பெருங் கரையாகவும் ஒன்றின் மேலொன்றாக அடுக்கி வீழ்ந்த புஜங்களே கற்களாகக்கட்டிய மதில்களாகவும் உயிர்மாய்த்து உள்ளே கிடக்கிறான் இந்திரஜித். ராட்சஸ ஸ்திரீகளின் ரத்தம் படிந்த முகங்களே யானைத் துதிக்கைகளுக்கிடையில். இவனுடைய கையும் கிடக்க அறுந்த கை ஏவிய பாணத்தினாலே நிலப்புழுதியே தரைக்குப் பாயாகிப் புரண்டு கிடந்தன வானர சேனைப் பிணங்கள்.
ரன்களைக் குருடாக்கும் ஆழத்தில் கடலில் மூழ்குபவர்கள் ஏக்கத்தால் இறக்கும் கல் சரக்குக் கப்பலின் நங்கூரத்தை அவனுடன் சேர்த்துக் கட்ட அவர்கள் உந்தனரர்கள். இந்த மாபெரும் ஆள் இவ்வூரில் வசித்திருந்தால் அவன் வீடுதான் மிக அமரன கதவுகளையும் மிக உயரமான கூரையையும் கனமான தரையையும்
கம். எஸ்தஃபான் கட்டில் சட்டங்கள் யுத்தக் கப்பலின் சட்டங்களிலிருந்து கொண்டி செய்யப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
புறப்பட்ட வ
தேனை குடல் சரியவும் அஷ்ட குலாசங்கள் நிலைதடுமாற, பூமிகிழிந்து ., 9லம் இருள் பரவி நிற்க, ஆதிசேஷன் படம் நசுங்கிப்போக, எதிரிலுள்ள -- படபடத்து வெளிச்சம் வர, இந்திரஜித்தின் தேர் ஆகாயத்துடன் பூமியில்
- அரக்கர்கள் ஆரவாரித்தார்கள். வானர சேனை தேர்களின் திமுதிமுவென்ற வலி கேட்டு திக்குமுக்குகளில் சிதறியோட்டம் பிடித்தது.
போன் மார்பில் தொங்கிய கடல் பாசிமணிகளைத் தொட்டும் பக்கத்தில் நல்ல களத் தரும் அதிஷ்ட எலும்பை வைத்தும் மறு பக்கத்தில் ஒரு மணிக்கட்டில்
305
திசைகாட்டியை வைப்பதுமாக அதிர்ச்சியடைந்த கோழிகளாக குறுக்கும் நெடுக்கும் நடமாடினர் பெண்கள்.
கோடி கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி யரக்கர் தமாக்கையும் ஓடை யானையுந் தேரு முருட்டினான்
நாடினான்றன் மகனு டனாளெலாம்.
மெய்கிடந்த விழிவழி நீர்விழ
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் மொய்கிடந்த சிலையொரு மூரிமாக்
கைகிடந் தது கண்டனன் கண்களால்.
பொங்குதோள்வளையும் பொழிபுட்டிலோ
டங்கதங்களு மம்பு மலங்கிட வெங்கணாகமெனப் பொலிமெய்யதை
சங்கையாலெடுத் தான் சிரஞ் சேர்த்தினான்
என கை கண்டான் ராவணன் கருங்கடல் கண்டான் மெய்கண்டான தன் மகன் இந்திரஜித்தின் அம்புமாரியமுந்திய மார்பைத் தன் கண்ணீரால் மூட. கம்பன் நிலத்தடி மேழியில் நிணச்சேற்றில் உதிரநீர் நிறைந்துவிட யுத்தகளத்தில் கிடந்த இந்திரஜித் எனும் மாபெரும் அழகனின் பிணத்தின் அருகில் பேய்களும் பயந்து யானைப்பிணங்களுக்குள் ஒளிகின்றன அழுதவாறு.
நீரில் மூழ்கிய நிகரற்ற அழகனை நங்கூரத்தில் கட்டி மலையிலிருந்து மீண்டும் கடலில் வீசியபோதும் சூரியகாந்திப் பூக்கள் திரும்பும் திசைதெரியாமல் இருக்கிற எஸ்தபானின் கிராமத்தார் இதயங்களில் கண்ணீரின் முதல் சுவடுகள் தோன்றவாரம்பித்தன. அந்த நினைவு கொண்ட மற்றவர்களும் பெருமூச்சுகளிலிருந்து புலம்பலுக்கு மாறி விசும்பல் கூடக்கூட அழவே செய்திருந்தார்கள் பெண்கள். அவ்வளவு அழுதார்கள்.
மகா அழகனான இந்திரஜித் எனும் கார்மேகம் மரணத்திலும் வீரனாக சிவ தனுசை விடாமல் விரல்கள் அழுந்த பிடித்தவாறே கிடக்கிறான் இன்னும்.
ராவணன் புத்திரசோகத்துக்குப் பக்கமாய் எஸ்தபான் கிராமத்துப் பெண் களும் கும்புகும்புகளாகக் கூடி அமுத குரல்கேட்டு மாலுமிகளும் திசைமாறிச் சென்றார்கள் எனவே,
306

No comments:

Post a Comment