தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, September 02, 2019

மாய மந்திரங்கள் அன்றாட வாழ்வின் அங்கம் Gabriel Marquez மார்க்வெஸ் பேட்டி - மானுவல் ஒஸாரியோ தமிழில் - நடராஜன்காஃப்கா வாக்கியம் கதைப்பரப்புக்குள் வீசியது பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் தமிழில் - சி மோகன்

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
மாய மந்திரங்கள் அன்றாட வாழ்வின் அங்கம் பேட்டி - மானுவல் ஒஸாரியோ 
தமிழில் - நடராஜன்


லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்து புதிய வளமையான கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கலப்பை லத்தீன் அமெரிக்கா உணர்ந்திருக்கிறதா. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்ற முறையில் பல்வேறு சமுதாயங்களுடனும் அரசியல் அமைப்புமுறைகளுடனும் அடிக்கடி நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன். இதனால் லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்தின் பிற அம்சங்களை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் இந்தக் கலப்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் உணர்ந்து கொள்ளலானேன். 

ஆப்பிரிக்காவில் பயணம் செய்தபோது அங்குள்ள பாமரக்கலையின் சில வடிவங்களுக்கும் பல்வேறு கரீபியப்பிரதேசங்களிலுள்ள கலைவடிங்களுக்கும் இடையே ஒற்றுமைகளைக் கண்டேன். என் சொந்தக் கலாச்சாரச் சூழலையும் பொதுவாகப் பல்வேறு கலாச்சார அம்சங்களுக்கு இடையிலான தொடர்பையும் அறிந்துகொள்ள வாய்ப்பானது. 

இத்தகைய நுட்பமான நோக்கைக் கொண்டு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் தனித் தன்மையையும் காணப்படுகிற உலகளாவிய அம்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஜனத் தொகுதிகளிடையே எத்தனையோ தொடர்புகள் இப்படி. அவர்களே அறிந்து கொள்ளாத நிலை. 



0 அதுதான் உங்கள் நாவல்களின் தொடக்க முனையாக அமைந்துள்ளது அல்லவா. கருக்களே இத்தகையவை அல்லவா. 

எழுதும்போதெல்லாம் பன்முகக் கலாச்சாரச் செல்வாக்கு பற்றி யெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தாமாகவே வெளி வந்தவை. எழுதிய பிறகுதான் நாவல்களில் கலாச்சார அம்சங்கள் இடம் பெற்றிருப்பதை உணர்ந்தேன். அம்சங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது நாவல்களில் படிப்படியாகப் புகுந்திருக்க வேண்டும். 

லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு செல்வாக்குகள் கலந்து கண்டம் முழுவதும் பரவின. மேற்கத்திய, ஆப்பிரிக்க, கிழக்காசியக் கலாச்சாரங்கள் அத்தனையும் கொலம்பஸுக்கு முந்திய காலத்துக் கலாச்சாரத்துடன் கலந்து போயின. இதனால்தான் மெக்ஸிகோவின் கொலம்பியக் கலாச்சாரம் என்றெல்லாம் யாரும் தனித்துப்பேச இன்று முடியவில்லை. என்னைக் கொலம்பியன் என்று இதுநாள்வரை கருதியதில்லை. லத்தீன் அமெரிக்கன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன், 

0 ஆக லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் என ஒன்று இருக்கிறதை ஒப்புக்கொள்கிறீர்களா. 

ஒருசீரான லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் ஏதும் இருப்பதாக உறுதியாகக் கருதவில்லை . மத்திய அமெரிக்காவிலும் கரீபிய நாடுகளிலும் ஆப்பிரிக்கச் செல்வாக்கைக் காண்கிறேன்.மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளில் அமெரிந்தியக் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டதொன்றைக் கொண்டவர்கள் கணிசமான அளவில். வேறு பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதே நிலைதான். 

தென்னமெரிக்காவில் வெனிஸ்லாவிலும் கொலம்பியாவிலும் அமெரிந்தியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தபோதும் அந்த நாடுகளில் ஆண்டியன் அமெரிந்தியர்களைவிட கரீபிய மக்களுடன் அதிக ஒற்றுமை உடையவர்களாக இருக்கிறார்கள். பெருவிலும் ஈக்வடாரிலும் கடலோர மண்டலத்துக்கும் மலைப்பிரதேசத்துக்கும் பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது. தென்னமெரிக்கக் கண்டம் முழுவதிலும் இதே நிலைமை. இந்த வகையான செல்வாக்குகள் ஒருங்கிணைந்து லத்தீன் அமெரிக்க நாகரீகத்துக்கு தனிச்சிறப்பியல்பைக் கொடுத்து உலகின் மற்ற கலாச்சாரங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றன. 

0 சூழலில் ஸ்பானியச் செல்வாக்கின் பங்களிப்பு. 

லத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியச் செல்வாக்கின் திண்மையும் பிரேஸிலில் போர்த்துக்கீசிய செல்வாக்கின் வன்மையையும் மறுப்பதற்கில்லை. அவை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும். காஸ்டிய ஸ்பானிய மொழியைப் பேசுகிறோம். சர்ச்சைக்குரியதாயினும் செழுமையுடையது அந்தச் செல்வாக்கு என்பதில் ஐயமில்லை. கலாச்சாரத்தின் பகுதியாக அமைந்துள்ள போதும் லத்தீன் அமெரிக்காவின் ஸ்பானிய அம்சங்கள் அத்தனையையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் போக்கு காணப்படுகிறது. இப்போக்கு தேவையற்றது, ஆபத்தானது என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை அந்தக் கலாச்சாரத்தை மரபாகப் பெற்றதில் வெட்கமடையாமல் பெருமையே கொள்கிறேன். ஸ்பானியக் குடியேற்ற ஆதிக்கம் இன்று பிரச்னையாக இல்லை. ஐரோப்பியர்கள் வருகையால் உருவான உண்மை நமதானாலும் ஐரோப்பாவின் வார்ப்பாக இருக்கவில்லை. லத்தீன் அமெரிக்கா இன்று ஐரோப்பாவிலிருந்து மாறுபட்டதாகத்தான் இருக்கிறது. 

0 எழுதுவதற்கான அகத்தூண்டுதல் எங்கிருந்து. 

எல்லாமே அசைபோடும் நினைவுகளிலிருந்துதான் தோன்றுகின்றன. 

0 தாத்தாவானவர் உங்கள் குடும்பத்தின் புராண ஏடாக இருந்திருப்பாரோ. அவர் உங்களுடைய குழந்தைப்பருவத்தில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறாரோ. 

மிக அதிசயமான முதியவர். காலத்திலும் நினைவாற்றலிலுமாக ஊசலாடிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. அவரை வெகுவாக நேசித்தேன். எட்டாவது வயதில் இறந்தபோது கலங்கிப் போனேன். வாழ்க்கை பற்றியும் கிராமத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிக் பற்றியும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆதிகாலந்தொட்டு நடந்த வரலாறுகளையும் கதைப்ட் கூறுவார். பங்கு கொண்ட யுத்தங்களை வர்ணிப்பார். நான் பிறந்த வருஷத்தில் வாழைத்தோட்டங்களில் நடந்த பயங்கரமான படுகொலைகளையும் கொலம்பியாவின் வரலாற்றில் அழியாச்சுவடுகளாக அமைந்த அத்தகைய நிகழ்ச்சிகளையும் விளக்கிக் கூறுவார். 

ப எழுத்தாளன் என்ற முறையில் அம்மாவின் செல்வாக்கு பாதித்திருக்கிறதா. 


அம்மா மனங்கவரும் பெண்மணி. யாரோ ஒரு முறை "மகன் இவ்வளவு திறமைசாலியாக இருப்பதற்கு என்ன காரணம்" என்று கேட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் மேல் தான் காரணம்" என்று பதிலளித்திருக்கிறாள். குடும்பம் முழுவதும் எனக்கு முக்கியமானது. குடும்ப உறுப்பினர் அனைவரும் நாவல்களில் ஏதாவதொரு வடிவில் தோன்றிவிடுகிறார்கள். அரக்காடக்கா தபால்காரர் மகன் என்பதை ஒருபோதும் மறப்பதில்லை. 

ப நீங்கள் முதலில் கரீபியப்பிரதேசத்தில் இருந்தவர். எழுத்துக்களில் அந்த மண்டலத்தின் அடிநாதமான வாழ்வு பிரதிபலிக்கிறது. நாவல்கள் உலகெங்கும் செல்வாக்கு பெறுவதற்குக் காரணமான மயக்கும் கதையாடல்களை அங்குதான் காண்கிறீர்களா. 

முழுமையான ஒருங்கிணைப்பைக் காணமுடியும். அன்றாட வாழ்க்கை, இயற்கை உலகம் இவற்றிடையே வேறெங்கும் விட மிகுந்த இணக்கம். கொலம்பியாவின் வடக்குக் கடற்கரையோரம் சதுப்பு நிலத்தில் மனிதன் காலடிபடாத காடுகளின் மத்தியில் மறைந்துள்ள கிராமத்தில் வளர்ந்தேன். அங்குள்ள தாவரங்களின் மணமே வயிற்றைக் கலக்கிவிடும். மூலை முடுக்கிலும் கடல் ஊடுருவிச் செல்லும். சூறாவளியில் கூரைகள் அடிக்கடி பறந்துவிடும். காற்று நுரையீரலை எரியச் செய்யும். கரீபியப்பிரதேச மக்களுக்கு இயற்கை உற்பாதங்களும் மனிதரின் கொடுந்துயரங்களும் அன்றாட வாழ்வின் அங்கங்கள். அமெரிந்தியர்களின் புராணக்கதைகளும் ஆந்துலூசியக் கற்பனைக் கதைகளும் ஏராளமாக வழங்கி வந்தன. அவற்றுடன் அடிமைகள் கொணர்ந்த புராணக்கதைகளும் இரண்டறக் கலந்தன. விளைவாக எதையும் தனிக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்போக்கும் வாழ்வின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் ஒருவகை அதிசயத்தைக் காணும் மனப்பான்மையும் உருவாகின. இவற்றை என்னுடைய நாவல்களில் மட்டுமின்றி குவாடமாலாவின் மிகைல் ஏஞ்சல் அஸ்தூரியாஸ், க்யூபாவின் அலேயோ கார்பென்டியர் போன்றோரின் படைப்புகளிலும் காணலாம். 

ப படைப்புகள் நெடுகிலும் காணப்படும் அதிசயத்தைக் கவனத்தில் கொண்டு magical realist என்று விமர்சகர்கள் கூறுவது நியாயமா. 

கரீபியப்பிரதேசத்தில், பொதுவாக லத்தீன் அமெரிக்காவில், வேறெந்த இயல்பான அம்சத்தையும் போலவே மாய மந்திரங்களையும் அன்றாட வாழ்வின் அங்கமாகக் கருதுகிறோம். நிமித்திகம் தொலையுணர்வு, முன்னுணர்வுகள், மூடநம்பிக்கைகள், இயற்கை பற்றிய கற்பனைப்புனைவுகள் இவற்றை நம்புவது இயல்பாகப் போய்விட்டது. இத்தகைய நிகழ்வுகளை படைப்புகளில் நியாயப்படுத்தவோ விளக்கவோ முயன்றதில்லை. இப்படியான எழுத்தில்தான் நகர்ந்து நாம் கொண்டிருக்கிறோம். 

&& ஐரோப்பாவுக்கும் லத்தீன் அமெரிக்கா வுக்குமிடையிலான தொடர்பு தவறாள் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்து வந்துள்ளது. இந்தத் தவறான கருத்துகளை நீக்கு சீரான சமநிலையை உருவாக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறீர்களா. 

கண்டத்தை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் எண்ணற்றவை. சூழலில் நினைப்பது சரியாக இருந்தாலும் நிலைமையை தெளிவாகக் கொள்வதற்கு சிக்கல்கள் தடையாக இருக்கின்றன. தன் கலாச்சாரத்தையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பா நம்மைப் புரிந்து கொள்ளாமலிருப்பதில் வியப்பில்லை. ஐரோப்பியர்கள் பெரும் பகுத்தறியும் பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெற்றவர்கள். மற்ற பகுதிகளில் நிலவும் வேற்றுமைகளின் சொந்தக் கண்ளோட்டத்திலேயே எப்போதும் நம்மை மதிப்பிடுவது இயற்கையே. ஒருகாலத்தில் ஐரோப்பாவில் வளமைப் பெருக்கம் தேவைப்பட்டது. அதே வளமைப் பெருக்கம் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். உலகின் ஒருபகுதிமக்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு பகுதி மக்களின் நிலையை மதிப்பிட முயல்வது பயங்கரமான தப்பெண்ணங்களுக்கு வழிவகுக்கும். மக்களிடையே பிரிவினையை மேலும் வளர்த்து அவர்களைத் தனிமைப்படுத்தவே செய்யும். ஐரோப்பிய உலகம் கடந்த தன் காலத்தைப் பார்க்க வேண்டும்; அதே கண்ணோட்டத்தில் நம்மை நோக்க முயல வேண்டும். தன் வரலாற்றில் ஏற்பட்ட சூழ்நிலை மாறுபாடுகளை அது மறந்துவிடலாகாது. லண்டனைச்சுற்றி சுவர் எழுப்பி300 வருஷங்கள் தான் ஆயின என்பதை நினைவில் வைத்திருக்கிறார்களா. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை, பல நூற்றாண்டுகள் பிடித்தன என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா. ரோமுக்கு சரித்திரத்தில் இடம் தேடியவன் எட்ரூஸ்க அரசன் என்பதை அறிவார்களா. படையெடுப்பாளர்கள் இங்கு வந்தபோது அஸ்டெக் தலைநகரம் டெனோக்டிக்லான், பாரிஸை விடப் பெரிய நகரமாக இருந்தது தெரியுமா. ஐரோப்பியக் கண்டத்தில் நீதியும் மனித நேயமும் நிலவும் சமுதாயத்தை நிறுவுவதில் ஆர்வங்கொண்ட பரந்த கண்ணோட்டமுடைய நம்மை நோக்கும் முறையை மாற்றிக் கொண்டால் உண்மையில் உதவலாம். மானுடச் சகோதரத்துவம் உண்மையிலேயே நிலவும் உலகில் சொந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே கண்டத்து மக்களின் வேட்கை. கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காட்டப்படும் பரிவு வேட்கை ஈடேற உதவும் வடிவத்தில் வர வேண்டும். 

0 சிக்கல்கள் லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்குள்ளே யே தோன்றுகின்றனவா, வெளியிலிருந்து வருகின்றனவா. 



உலக வல்லரசுகளின் கருணையில் வாழ்கிறோம் எனக் கற்பனை செய்து கொண்டு லத்தல் அமெரிக்காவைப்பாதிக்கும் வன்முறை அவலம் பிரிவினை அனைத்தும் பல்லாயிரம் கிலோமீட்டரு” அப்பால் செய்யப்படும் சதிகளின் விளைவு எனக் கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏற்றத்தி" அடக்குமுறை சுரண்டல் புறக்கணிப்பை எதிர்நோக்கும் நமக்கு வாழ்க்கைதான் மறுமொழி வேண்டும். பல நூற்றாண்டுகளாக நடைபெறும் யுத்தங்கள், கொடூரங்கள் குறையவில்லை. "மன்? அற்றுப் போகும் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க மாட்டேன்" என்று நாற்பது வருஷங்கள்" 

• ஏற்றத்தாழ்வு மறுமொழியளிக்க 

ல். "மனிதகுலம் "ங்களுக்கு முன் 

46வில்லியம் ஃபாக்னர் கூறினார். அவர் அஞ்சியது இன்றைய அறிவியல் உலகில் நிகழக்கூடிய ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். நாடுகளிடையிலான தொடர்புகள் முன் எப்போதையும் விட இப்போது வலுவாக இருக்கின்றன என்பதையும் புதிய சகாப்தம் பிறந்து வருகிறது என்பதையும் பார்க்கும் அது எந்த தனிநபரும் மற்றவர்களுக்கென்று முடிவுகள் எடுக்காது இணைந்து வாழ அனுமதிக்கும் கற்பனையுலகை உருவாக்கக் காலம் கடந்துவிடவில்லை என்று நம்புகிறேன். 

ப லத்தீன் அமெரிக்காவுடனும் அதன் பிரத்தியேக குணத்துடனும் உங்களுக்குள்ள பிணைப்பை, வேட்கையைப் படைப்புகள் பிரதிபலிக்கின்றன. 

உண்மைதான். பழைய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் எனக் கருதவில்லை. கண்டத்துடனும் அதன் மூலம் உலகம் முழுவதுடனும் ஆழ்ந்த பிணைப்பு இல்லாமல் நாட்டை 

அல்லது கண்டத்தை விவரிக்க நெடுங்காலம் முயலவும் கூடாது. 

பேட்டி - மானுவல் ஒஸாரியோ 

தமிழில் - நடராஜன்
****************************
காஃப்கா வாக்கியம் கதைப்பரப்புக்குள் வீசியது பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் 

தமிழில் - சி மோகன் 

0 டேப் ரிக்கார்டர் பயன்படுத்துவது பற்றி என்ன மாதிரி உணர்கிறீர்கள். 

பதிவு செய்யப்படுகிற பேட்டி என்று உணர்ந்த மாத்திரத்திலேயே மனோபாவத்தில் மாற்றம் வருகிறது. உடனடியாக தற்காப்பு நிலையில் என்னை உணர்கிறேன். பேட்டிக்காக டேப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது நமக்கு இன்னமும் தெரியவில்லை; பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படித்தான் உணர்கிறேன். குறிப்புகள் எடுக்காமல் நீண்ட நேரம் உரையாடுவதுதான் சிறந்த வழி. பிறகு உரையாடலை நினைவுகொண்டு மனப்பதிவாக, அதே வார்த்தைகளின்றி, எழுதலாம். குறிப்புகளை, பேட்டி காணப்பட்டவர் சொன்னதற்கு நேர்மையுடன், விளக்கிப் பார்ப்பது இன்னொரு பயனுள்ள முறை. அத்தனையையும் பதிவு செய்கிறது என்பதாலேயே பேட்டி காணப்படுபவருக்கு டேப்பானது நேர்மையாக இருக்காது. காரணம், உங்களை நீங்களே மடையனாக்கிக் கொள்வதைப் பதிவு செய்கிற டேப் அதை நினைவுபடுத்தவும் செய்கிறது. இதனால்தான் டேப் ரிக்கார்டர் என்னைப் பேட்டியின்போது உறுத்துகிறது. இல்லாத போது தன்முனைப்பில்லாமல் இயல்பாகப் பேசுகிறேன். 

0 டேப் ரிக்கார்டர் உபயோகிப்பதில் குற்ற உணர்வு கொள்ள வைத்துவிட்டீர்கள். பேட்டிக்குத் தேவைப்படும் ஒன்று என்றுதான். 

எப்படியிருந்தாலும் உங்களைத் தற்காப்பு நிலையில் வைக்கத்தான் கூறி 

0 பேட்டி எடுக்கும் போது டேப் ரிக்கார்டர் பயன்படுத்தியதே இல்லையா. 

பத்திரிகைக்காரனாக உபயோகப்படுத்தியதில்லை. நல்ல ரிக்கார்டர் இருக்கிறது. பாட்டுப்போட்டுக் கேட்கப் பயன்படுத்துகிறேன். மேலும் பேட்டியே எடுத்தது கிடையாது. கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கேள்வி-பதில் பேட்டி ஊஹும். 

o விபத்து கண்ட கப்பலின் மாலுமியை பேட்டி கண்டு பிரசித்தி பெற்றிருக்கிறதே. 

கேள்வி-பதில் பேட்டி அல்ல. மாலுமி சாகசங்களைக் கூறினார். பெரும்பாலும் அதே வார்த்தைகளில் திரும்ப எழுதிப்பார்த்தேன் அவரே எழுதுவது போல. தினசரித் தொடராக இரண்டு வாரங்கள் பத்திரிகையில் அவருடைய ஒப்பத்துடன் வெளியானது. பிரசுரமாகி இருபது வருஷங்களுக்கு அப்புறம்தான் நான் எழுதியதாக அடையாளம் கண்டார்கள். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல் வெளியாகிற வரை அந்த எழுத்தை யாரும் மதிக்கவில்லை . 

0 பல காலமாக நாவல்கள் எழுதிவிட்டு மீண்டும் பத்திரிக்கைக்காரனாக இருப்பது எப்படியிருக்கிறது. 

43பத்திரிக்கைத்தொழிலை நிஜமான என் தொழிலாக நம்புகிறேன். தொழிலின் சூழல் பிடித்ததாக முன்பு இல்லை. பத்திரிகைகளின் ஈடுபாடுகளுக்கு ஏற்ப எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நாவலாசிரியனாக மாறி பொருளாதார மாற்றத்தையும் கண்டபடியால் ஈடுபாடுள்ள விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும் என் கருத்துகளுடன் அவற்றைத் தொடர்புபடுத்தவும் இப்போது முடிகிறது. என்ன இருந்தாலும் பத்திரிகை மூலமாக மகத்தான படைப்பை உருவாக்க முடிகிற வாய்ப்பு சந்தோஷத்தையே தருகிறது. 

0 அப்படியான மகத்தான படைப்பு. 

ஜான் ஹெர்ஸேவின் Hiroshima தனித்துவம் கொண்ட படைப்பு. 

0 குறிப்பாக நீங்கள் சொல்ல வேண்டிய கதை என்று மிஞ்சியிருப்பது. 

நிறைய. சிலதை எழுதியிருக்கிறேன். போர்த்துக்கீசியம், க்யூபா, அங்கோலா, வியட்நாம் பற்றி. போலந்து பற்றி எழுத விரும்புகிறேன். அங்கே நடப்பதை விவரிக்க முடிந்தால் சரியான கதையாக அமையும். ஆனால் போலந்தில் மிகக்குளிராக இருக்கும்; சிரமம்தான். ஆக வசதிகளை விரும்புகிற பத்திரிகைக்காரன் நான். 


0 பத்திரிகைத்துறையால் இயலாத விஷயங்களை நாவல்கள் தர முடியும் என்று நினைக்கிறீர்களா. 

வித்தியாசம் இருப்பதாக நினைக்கவில்லை . டானியல் டிஃபேவின் Journal of the Plague Year சிறந்த நாவல். Hiroshima பத்திரிகைக்கு ஏற்ற படைப்பு. ஆக, இரண்டின் மூலங்களும் விஷயங்களும் ஒன்றுதான். 

0 நிஜத்துக்கும் கற்பனைக்கும் சமநிலையை உருவாக்குவதில் பத்திரிகைக் காரனுக்கும் நாவலாசிரியனுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் இருக்கின்றன என்று சொல்லலாமா. 

பத்திரிகைத்துறையில் ஒரு செய்திப்பொய் கூட எழுத்தை வளைத்துவிடும். புனைகதையில் வரும் நிஜம் ஒன்றும் முழுப்படைப்புக்கும் நியாயம் சேர்த்துவிடும். இதுதான் ஒரே வித்தியாசம். எழுத்தாளனின் பொறுப்புணர்வைச் சார்ந்திருக்கிறது. மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கும் வரையில் நாவலாசிரியன் விரும்பும் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ள முடிகிறது. 

0 சில வருஷங்களுக்கு முன் பேட்டிகளில், பத்திரிகைக்காரனாக இருந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்து, எவ்வளவு வேகமாகச் செயல்பட முடிந்தது என்று வியந்திருக்கிறீர்கள். 

பத்திரிகைக்கு எழுதுவதும் சரி. நாவல் எழுதுவதும் சரி. இப்போது சிரமம். பத்திரிக்கைக்கு எழுதும் போது ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் குவிக்க வேண்டி இருக்கவில்லை. இப்போதோ அப்படி இல்லை. EI Espectador பத்திரிக்கைக்காக போகோட்டாவில் இருந்த 

49போது வாரத்திற்கு மூன்று படைப்புகள் செய்துவிடுவது வழக்கம். தினமும் இரண்டு மூன்று ஆசிரியர் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள் எழுதுவேன். இரவில், வீடு திரும்புவோரை அனுமதித்துவிட்டு, தங்கித்தான் நாவல்களை எழுதுவேன். லினோடைப் எந்திர மழை இரைச்சல் மிகவும் பிடிக்கும். நின்று போனால் தனிமைப்பட்டு விடுவேன். எழுத முடியாது. அந்த நாட்களோடு ஒப்பிடும்போது நான் எழுதிக் கொண்டிருப்பது குறைவு. சாதாரணமாக காலை மணி ஒன்பதிலிருந்து மதியம் இரண்டு மூன்று வரை எழுதுவதெல்லாம் நான்கைந்து வரிகள் மட்டுமே. அந்தப் பத்தியையும் மறுநாள் கிழித்துப் போட்டு விடுவேன். 

&& மாற்றம் ஏற்பட்டது புகழினாலா, ஒருவித அரசியல் ஈடுபாட்டாலா. 

இரண்டினாலும்தான். யாருக்காக எழுதுகிறேன் என்று நினைத்திருந்தேனோ, அதை விட கணக்கற்ற பேர் எழுத்தைப் படிக்கிறார்கள் என்ற நிதர்சன விநோதம் என்மீது எதிர்பாராத இலக்கியம் மற்றும் அரசியல் தொடர்பான பொறுப்பை சுமத்துகிறது. இதுநாள்வரையிலான படைப்புகளின் தரத்திலிருந்து தலைகுப்புற விழக்கூடாது என்ற பெருமிதமும் எனக்கு உண்டு. 

0 எழுத ஆரம்பித்தது எப்படி. 

கார்ட்டூன்கள் வரைவதிலிருந்து. படிக்கவும் எழுதவும் ஆரம்பிப்பதற்கு முன்பே வீட்டிலும் பள்ளியிலும் காமிக்ஸ் வரைந்து கொண்டிருப்பேன். உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் போது எதுவுமே எழுதியிருக்காவிட்டாலும் அந்தஸ்து கிடைத்திருந்தது வேடிக்கை தான். கடிதமோ துண்டறிக்கையோ எழுதியது நான்தான். எழுத்தாளன் ஆயிற்றே. கல்லூரிக்குப் போனபோது சராசரி நண்பர்களை விடவும் குறிப்பிடத்தக்க இலக்கியப் பின்னணி இருந்தது. போகோட்டாவில் தற்கால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிற புதிய நண்பர்களை பரிச்சயப்படுத்திக் கொண்டேன். குறிப்பிட்ட இரவில் ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறுகதைத் தொகுதியை ஒருவர் தந்து சென்றார். அறைக்குத் திரும்பி The Metamorphosis கதையைத் தொடங்கினேன். முதல் வரி படுக்கையிலிருந்து தூக்கி எறிந்தது. "தொல்லை மிகுந்த கனவுகளிலிருந்து க்ரகோர் ஸாம்ஸா காலை விழித்த போது படுக்கையில் ராட்சஸப் பூச்சியாக தான் மாறியிருப்பதைக் கண்டு" என்ற வரியை வாசித்தவுடன் வியப்படைந்து, போல எழுத யாருக்கும் அனுமதியுண்டு என அறிந்து, ஒருவித லயிப்பில் ஆழ்ந்து போனேன். அறிந்திருந்தால் எப்போதோ எழுதத் தொடங்கியிருப்பேன். ஆக சிறுகதைகள் எழுதத் தொடங்கியது இப்படித்தான். முற்றிலும் அறிவார்ந்த சிறுகதைகள். இலக்கிய அனுபவங்களின் அடிப்படையிலேயே அவற்றை எழுதினேன். அப்போது இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயான உறவை அறிந்திருக்கவில்லை. . போகோட்டாவிலிருந்து வெளியான பத்திரிகையின் இலக்கிய இணைப்பில் பிரசுரமாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. கொலம்பியாவில் அறிவார்ந்த சிறுகதைகள் எழுதியிருக்க யாருமில்லையோ. நாட்டுப்புற வாழ்க்கை, சமூக வாழ்நிலை பற்றியே எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆரம்பச் சிறுகதைகளை படித்தவர்கள் ஜேம்ஸ் ஜாய்ஸின் பாதிப்புகள் இருந்ததாக என்னிடம் சென்னார்கள். 

0 ஜாய்ஸை அப்போது படித்திருந்தீர்களா.அதுவரை படித்திருக்கவில்லை. ஆகவே Ulysses நாவலைப் படிக்கத் தொடங்கினேன். இருந்த ஒரே ஸ்பானியப் பதிப்பை வாசித்தேன். அப்புறம் ஆங்கிலத்திலும் சிறந்த ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் படித்தேன். ஸ்பானிய மொழிபெயர்ப்பு மிக மோசமானது என்று புரிந்தேன். ஆனால் எதிர்கால எழுத்துக்கு பயன்படக்கூடிய தனிமொழி உத்தியை அறிந்து கொ எடேன், வெர்ஜீனியா வுல்ஃப் எழுத்துக்களில் அதைக் கண்டேன். என்றாலும் Lazarillo ! de Termes எழுதிய பெயர் தெரியாதவர் தான் தனிமொழி உத்தியைக் கண்டுபிடித்தவர் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன். 

0 எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் பாதித்தவர்கள் யார். 

அமெரிக்காவில் தொலைந்து போன தலைமுறை எழுத்தாளர்கள் தான் சிறுகதை மீதான அறிவுபூர்வமான மனோபாவத்திலிருந்து விடுபட எனக்கு உதவியவர்கள். இலக்கியம் அவர்களுடைய வாழ்க்கையுடன் உறவு கொண்டிருப்பதையும் என் சிறுகதைகளில் அது இல்லாதிருப்பதையும் உணர்ந்தேன். இந்த மனோபாவம் தொடர்பான முக்கிய சம்பவமொன்று நடந்தது. 1948 ஏப்ரல் ஒன்பதாம் தேதி அரசியல் தலைவர் கெய்தான் சுடப்பட்டார். ஜனங்கள் பைத்தியம் பிடித்தாற் போல் கூச்சலிட்டபடி வீதிகளில் சென்றனர். விடுதிகளில் மதியவுணவு சாப்பிட உட்கார்ந்த போது செய்தியைக் கேள்விப்பட்டேன். நடந்த இடத்துக்கு ஓடினேன். டாக்ஸியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விடுதிக்குத் திரும்பும் வழியில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்து கடைகளைச் சூறையாடி கட்டிடங்களை 

எரித்தனர். அவர்களுடன் இணைந்தேன். என்ன மாதிரி நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். சிறுகதைகள் துளியும் தொடர்பு இல்லாமல் அதனுடன் இருப்பதையும் அன்று மதியத்தில், மாலையில் உணர்ந்தேன், 

குழந்தைப்பருவத்தில் வாழ்ந்திருந்த கரீபியப்பிரதேச பாரன்க்வுல்லாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டபோது அத்தகையதோர் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருந்தான் என்பதையும் எழுத விரும்பினேன் என்பதையும் உணர்ந்தேன். 

1950-51 வாக்கில் எழுத்துக்கு அடுத்த பாதிப்பு. அரக்காடக்காவில் பிறந்த வீட்டை விற்பதற்காக அம்மா கூட்டிச் சென்றாள். இடத்தை அடைந்தபோது அதிர்ச்சியடைந்தேன். இருபத்திரண்டு வயதாகியிருந்த நான் எட்டு வயதுக்குப் பிறகு போகவே இல்லை. அங்கு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலன்றி வாசிப்பதாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். சும்மா உட்கார்ந்தபடி ஏற்கனவே இருப்பதை நான் வாசித்துக் கொண்டிருப்பதை எழுதினால் போதும் என்று உணர்ந்தேன், எல்லாமே இலக்கியமாக உருப்பெற்றிருந்தன. வீடுகளும் ஜனங்களும் நினைவுகளும். ஏற்கனவே வில்லியம் ஃபாக்னரைப் படித்துவிட்டிருந்தேனா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவருடைய எழுத்துமுறை மட்டுமே பார்த்ததை எழுத்தாக்க உதவியிருக்கும் என்று இப்போது பரிகிறது. கிராமத்தின் சூழலும் வெக்கையும் வீழ்ச்சியும் கிட்டத்தட்ட ஃபாக்னரிடம் உணர்ந்ததைப் போல. வாழைத்தோட்டப் பிரதேசமான அங்கே பழக்கம்பெனிகளால் குடியேற்றப்பட்ட ஏகப்பட்ட அமெரிக்கர்கள் வாழ்ந்தது தொலைதூரத் தெற்கத்தி 

51அழுத்தாளர்களின் சூழலை ஒத்திருந்தது. என் எழுத்தில் ஃபாக்னர் செலுத்தும் பாதிப்பு பற்றி எழுத்தாளர்களின் . விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை எதேச்சையானதாகக் கருதுகிறேன். ஃபாக்னர் கையாள்கிற அதே மாதிரியான விஷயத்தைக் கையாள்கிறேன். 

இலைப்புயல் என்ற முதல் நாவலைத் திரும்பியதும் எழுத ஆரம்பித்தேன். குழந்தைப்பருவத்தில் நடந்த அத்தனையும் இலக்கியத்துவம் கொண்டவை என்பதை உணர்ந்துகொண்டு போற்றவும் தொடங்கினேன். நாவல் எழுதிய சமயத்தில் எழுத்தாளனாக விரும்பியதையும் உணர்ந்தேன். யாரும் தடுத்துவிடப் போவதில்லை. செய்ய வேண்டியது எல்லாம் உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளன் ஆக முயல்வதுதான் என்று உணர்ந்தேன். 1903 ஆம் வருஷம் இதெல்லாம் நடந்துவிட்டாலும் என் எட்டுப்புத்தகங்களில் ஐந்தை எழுதிமுடித்த பிறகு 1967-ஆம் வருஷத்தில்தான் முதல் ராயல்டித் தொகையைப் பெற முடிந்தது. 

&& குழந்தைப்பருவ அனுபவங்களின் மதிப்பை உதாசீனப்படுத்துவதும் அறிவு பூர்வமாக செயல்படுவதும் உங்களிடம் இருந்தைப் போல எழுத்தாள இளைஞர்களிடம் அதிகமாக இருக்கின்றன என்று சொல்ல முடியுமா. 

இல்லை. எழுத்தாளனின் வளர்ச்சிக்கிரமம் நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஆனால் எழுத்தாள இளைஞர்கள் தங்களுக்கு நடப்பவை பற்றி எழுதுமாறுதான் வேண்டுமென்றால் ஆலோசனை சொல்வேன். தனக்கு நேர்வதைப் பதிகிறானா, படிப்பதையோ கேள்விப்படுவதையோ மாற்றி முன்வைக்கிறானா என்பதை சுலபமாகச் சொல்லிவிடலாம். "நான் பாடும்போது ஏதும் கற்பனை செய்துவிடாதபடி கடவுளே காப்பாற்றுங்கள்" என்று பாப்லோ நெருடாவின் கவிதை வரி செல்கிறது. கற்பனைப் புனைவுக்காக பாராட்டுப்பெறுகிற என் எழுத்து நிஜத்தில் நிற்பதுதான் உண்மை . பாராட்டுகள் எனக்கு வேடிக்கையாகப் படுகின்றன. கரீபியப் பிரதேசத்தின் எதார்த்தம் மிக மூர்க்கமான கற்பனையை ஒத்திருப்பதுதான் பிரச்னை. 

0 அந்தக்கால கட்டத்தில் உங்கள் வாசகர்கள் யார்யார். 

புத்தகங்களை இரவல் தந்து என் எழுத்து வேகம் மீது உற்சாகம் காட்டிய நண்பர்களுக்காக இலைப்புயல் நாவல் எழுதினேன். குறிப்பிட்ட யாருக்காகவோ எழுதுவதாகத்தான் பொதுவில் நினைக்கிறேன். எழுதும்போது எந்தெந்த நண்பர்கள் எந்தெந்த வரிகளை விரும்பக்கூடும் என்ற லயிப்புடன் செயல்படுகிறேன். எழுதும் புத்தகங்களெல்லாம் கடைசியில் நண்பர்களுக் காகத்தான். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல் எழுதிய பிறகு லட்சக்கணக்கில் உள்ள வாசகர்களில் யாருக்கு எழுதுகிறேன் என்ற பிரச்னை வருவது சங்கடப்படுத்துகிறது. லட்சக்கணக்கில் கண்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க அவற்றின் சொந்தக்காரர்கள் மனதில் இருப்பது தெரியாத நிலை. 

0 பத்திரிகை எழுத்து கதைகளைப் பாதித்திருக்கிறது பற்றி. 

பாதிப்பு என்பது பரஸ்பரம். கதைகள் பத்திரிகையில் வருகிற என் எருக்கம் 

வருகிற என் எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தருகின்றன. பத்திரிகை எழுத்து எதார்த்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ள கதைகளுக்கு உதவுகிறது. 

52ப இலைப்புயல் எழுதிய பின்பும்  ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் எழுதும் பின்பும் எழுத்து நடையைக் கண்டடைவதற்காகக் கடந்த நிலைகளை விளக்கலாமே. 

இலைப்புயல் நாவல் எழுதிய பிறகு கிராமம் பற்றியும் குழந்தைப்பருவம் பற்றியும் எழுதுவதென்பது அரசியல் எதார்த்தத்தை எதிர் கொள்வதிலிருந்து தப்பிச்செல்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன். அரசியல் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக நினைவுலகில் பதுங்கிக் கொள்வதாகத் தப்பெண்ணம் கொண்டேன். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவு குறித்து விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலம். இரண்டுக்குமான இடைவெளியை இட்டு நிரப்புவதாக எழுத்தை முயன்று பார்த்தேன். முதலில் 60பாகனான பாதிப்பு, அடுத்து ஹெமிங்வே. யாரும் கர்னலுக்கு எழுதுவதில்லை, தீவினைக்காலம், பெரியம்மாவின் மரணச்சடங்கு போன்றவற்றைக் கிட்டத்தட்ட அந்தக்காலத்தில் எழுதிப்பார்த்தேன். இவற்றில் பொதுவான தன்மைகள் உண்டு. இலைப்புயல் மற்றும் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல்களின் கிராமத்திலிருந்து வேறுபட்ட கிராமத்தில் இக்கதைகள் நடக்கின்றன. மந்திர தந்திரங்கள் அற்ற கிராமம் இது. பத்திரிகை எழுத்தைச் சார்ந்ததொரு வகை இலக்கியம். 

ஆனால் தீவினைக்காலம் நாவலை முடிக்கும்போது என் அத்தனைக் கருத்துகளும் மீண்டும் தப்பிதங்களாகி விட்டதை உணர்ந்தேன். குழந்தைப்பருவம் தொடர்பான எழுத்துகள் கூடுதலான அரசியல் தன்மை கொண்டிருந்ததையும் நினைத்திருந்ததை விடவும் நாட்டின் எதார்த்தம் அவற்றில் அதிகமாக இருப்பதையும் புரிந்துகொண்டேன். தீவினைக்காலம் முடிந்து ஐந்தாண்டுகள் எதுவும் எழுதவில்லை. எழுதவேண்டியது குறித்து இதுதான் என்ற கவனம் இருந்தாலும் ஏதோ நழுவிப்போய்க் கொண்டிருந்தது. பிடிபடாத இந்தத் தொனியை அடைந்து ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் பரவ விட்டேன். பாட்டி கதைசொல்கிற வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அற்புதமானதும் அமானுஷ்யமானதுமான விஷயங்களை இயல்பாகச் சொல்லுவாள். தொனியை எய்தியதும் பதினெட்டு மாதங்கள் வரை தினமும் எழுதுவேன். 

0 அற்புதமானதை பாட்டி இயல்பாக வெளிப்படுத்தியது எப்படி, 

முகபாவம்தான் முக்கியமானது. மாற்றவே மாட்டாள். கேட்பவர்களோ வியப்பில் அமிழ்ந்து போவார்கள். பாடடி போல கல்முகத்துடன் ஒரே பாவத்தில் எழுதிச் செல்வதை தொனியாக கண்டுபிடித்துத்தான் எழுதப்பட்டது. தொனியில் பத்திரிகைத்தன்மை உண்டு. அற்புதத்தைத் துல்லியமாக விவரிக்கும்போது அதற்கென்றே வரும் எதார்த்தம் உண்டு. இலக்கியத்தில் பிரயோகிக்கக்கூடிய பத்திரிகைக்கார வித்தை. ஆகாசத்தில் பறக்கும் யானைகள் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. வானத்தில் 425 யானைகள் இருந்தன என்றால் நம்பிக்கை வரலாம். நாவல் முழுவதும் இப்படித்தான் 

0 நாவலில் வரும் தூக்கமற்றுப்போகும் தொற்றுநோயை எங்கே பிடித்தீர்கள். 

ஈடிபஸ்ஸில் ஆரம்பித்து வருகிற நோய்கள் பற்றி பயங்கர ஆவல். மத்தியக்காலத்து ப்ளேக் வகைகள் பற்றியும் நிறைய வாசித்ததுண்டு. டிஃபே சொல்ல வருவதை விந்தை யாக்கி விடுபவர். லண்டன் நகர நோயைக் கவனித்து எழுதினார் என பல வருஷங்கள் நினைத்து, நாவலின் ப்ளேக் நடந்தபோது ஏழு வயது கூட நிரம்பாத குழந்தை டிஃபே என பிறகு அறிந்தேன். வெவ்வேறு வடிவங்களில் தாக்குகிற ப்ளேக் நோய்கள் திரும்ப எழுத்தில் பரவுகின்றன. தீவினைக்காலம் நாவலில் துண்டறிக்கைகளாக, கொலம்பியாவில் அரசியல் வன்முறை என்ற அரூபமாக, சனிக்கிழமைக்கு அடுத்தநாள் சிறுகதையில் எல்லாப் பறவைகளும் தாக்குண்டு சாகிற நோயாக, அப்புறம் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் இலக்கிய வித்தையாக. தூக்கமற்றுப் போகும் தொற்றுநோய்க்கு எதிரான ஒருவித தச்சுத்தொழில்தான் இலக்கிய வித்தை. 

0 விளக்க முடியுமா. 

எழுதுவதும் மேஜை செய்வதும் அளவில் சம கடினம். எதார்த்த மரத்தின் ஊடே வேலை. உத்திகளும் வித்தைகளும் நிறைய. மாயாஜாலம் கொஞ்சம், கடின உழைப்பு ஏராளம் - ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னது போல - அவர்தானோ. பத்து சதவீதம் உத்வேகம், மிச்சம் உழைப்பு கொண்டு உருவாகின்றன. ஒருபோதும் செய்திருக்கவில்லை என்றாலும் மதிப்பது தச்சுத்தொழில். காரணம், செய்ய எப்போதுமே யாராவது கிடைக்கப்போவதில்லை. 

0 நாவலில் வரும் வாழைக்காய்ச்சலின் அடிப்படை ஐக்கியப் பழக் கும்பனியார்கள் செய்ததில் இருக்கிறதோ. 

காய்ச்சல் எதார்த்தத்தின் நெருக்கடி மிக்க மாதிரி. சரித்திர நிரூபணம் அற்ற விஷயங்கள் சிலதும் இலக்கிய வித்தைகள் ஆகின. சதுக்கத்துப் படுகொலை நிஜம். ஆதாரங்களை வைத்து எழுதியபோது எண்ணிக்கையோ தெரியாது. 3000 என எழுதியது மிகை, குழந்தைப் பருவத்தில் நீள ரயில் தோட்டத்திலிருந்து உத்தேசமாக வாழைப்பழங்களை மட்டுமே கொண்டு செல்வதை வைத்து, 3000 பேர் இறந்து முடிவாக சமுத்திரத்தில் போய்க்கொண்டு தள்ளியிருக்கவும் முடியும் என எழுதினேன். இறந்தது மூவாயிர மனிதர்கள் என சட்டசபையிலும் பிறிது களங்களிலும் இயல்பாக நினைவு கொள்கிறார்கள். சரித்திரத்தின் பாதியும் இப்படித்தானோ. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் சர்வாதிகாரி சொல்கிறான். "விஷயம் ஒன்று. நிஜமாக இன்றில்லை என்றென்ன, என்றாவது நிஜம் ஆகிவிடும். எழுத்தாளர்களை இன்றில்லை என்ன, நாளை அரசாங்கத்தை விட நம்புவார்கள்." 

0 எழுத்தாளனின் பலம் இது. 

குணாவம் செய்கிறேன். உயர்ந்த பொறுப்புணர்வை அது தரும். முற்றிலும் நிஜமானதும் 

சாரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் போல அற்புதமான எதார்த்தமானதும் ஒரு நூற்றாண்டுக்காலத் கனி ஆகப்போகும் படைப்பை எழுத விரும்புகிறேன். 

0 குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலில் அயல்கடனுக்காக சமுத்திரத்தை விட்டுக் கொடுப்பதான நாடு பற்றி. 

54நடந்த ஒன்று. பலமுறை நடக்கப்போவது. ஆக நாவல் சரித்திர ரீதியில் எதார்த்த நிஜங்களை கண்டறியவும் செய்கிறது. தீர்க்க தரிசனமாகவும் சுழல்கிறது. அற்புதக்கதையாளி எனப் பெரும்பாலோர் நினைக்கும் நான் இப்படியான எதார்த்தம் என்று நம்புவதை எழுதுகிறேன் பாருங்கள். 

0 எதார்த்த ம் கனவுலகமா. 

கனவுலக வார்த்தை குறிப்பது எதார்த்தமா, லட்சியமா நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கனவுலகம் எதார்த்தம் தான் நினைக்கிறேன். 

ப நாவலின் பாத்திரங்கள் அதுவும் சர்வாதிகாரிகள் நிஜ மனிதர்களின் மாதிரிகளா. ஃப்ராங்கோ, பெரோன் மற்றும் ட்ரூஜில்லோ ஆகியோருடன் ஒப்பிட முடிகிறதே. 

நாவல் எதிலும் பாத்திரம் கூட்டுக்கலவையே. அறிந்த கேள்விப்பட்ட படித்த பாத்திரங்களின் கலவை, கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த சர்வாதிகாரிகள் பற்றி வாசித்தேன். சர்வாதிகாரம் கண்ட பலருடன் பேசினேன். பத்து வருஷம் செய்து பாத்திரத்தெளிவு எய்தியவுடன் வாசித்ததும் கேட்டதுமான அத்தனையும் மறக்க முயன்றேன். நிஜவாழ்வுடன் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் அப்போதுதான் நானாகக் கண்டடைய முடியும். சர்வாதிகாரத்தை நேரடியாக அனுபவிக்கிறேன் இந்த நான். ஸ்பெயினில் வைத்து நாவலை எழுதினால் கெட்டிதட்டிப் போன சர்வாதிகாரத்தை அறிய முடியும் என யோசித்தேன். ஃப்ராங்கோவின் ஆட்சியை விடவும் கரீபியப்பிரதேச சர்வாதிகாரம் வித்தியாசமானது. ஏதோ ஒன்று அகப்படாமல் எழுத்து ஒரு வருஷம் நின்றுவிட்டது. என்னதென்று தெரியாமல் போனாலும் திடீரென கரீபியப்பிரதேசத்துக்குத் திரும்புவது என முடிவெடுத்து கொலம்பியாவில் உள்ள பாரன்க்வுல்லாவுக்குத் திரும்பினோம். திரும்பி ஒரு விஷயத்தைத் தெரிந்தவுடன் பத்திரிகைக்காரர்கள் கேலி செய்வதாக நினைத்தார்கள். மறந்து போன கொய்யாப் பழத்தின் வாசனையை மீட்கத்தான் திரும்பியதாகக் கூறினேன். எழுத அதிகத் தேவையாக இருந்தது வாசனையின் நினைவுதான். நாவல் இழக்கவிருந்த கூறுகளைக் கரீபியப்பிரதேசத்தின் தீவுகளில் தாவிப் பயணித்த போது மீட்டுக் கொண்டேன், 

0 அதிகாரத் தனிமைவாசம் நாவலில் அடிக்கடி வரும் ஒன்று. 

அதிகாரம் அதிகப்படும் அளவுக்கு சொல்பவர்களில் பொய்யர்களையும் பிறரையும் பிரித்தறிவது சிரமமாகி விடுகிறது. பரிபூரண அதிகாரம் எதார்த்தத்துடனான தொடர்பை அறுத்துவிடுகிறது. அதைவிட மோசமான தனிமைவாசம் இல்லை. அதிகாரமிக்க சர்வாதிகாரியை சுயநலக்காரர்கள் சூழ்ந்து இசைவுடன் தனிமைப்படுத்த முயன்று பார்க்கிறார்கள். 

0 தனிமைவாசம் எழுத்தாளனுக்கு வேறொன்றா. 

அதிகாரத் தனிமைவாசத்துடன் ஒத்துக் கூடிப் போவது தான். எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் முயற்சி எதார்த்தத்தின் சிதறுண்ட உலகத்துக்கு இழுத்துச் சென்று விடுகிறது. 

55எதார்த்தத்தை மொழிக்கு மாற்ற முயற்சிக்கும் போது அத்துடன் உள்ள தொடர்பை இழக்கும் கட்டம் உருவாகி சமகால விவகாரங்களிலிருந்து ஒதுங்க நேர்வதை எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இதற்கான தற்காப்பு பத்திரிகைத்துறை என்பதால் அந்த உலகில், குறிப்பாக அரசியல் எழுத்துடன், தொடர்ந்து உறவு கொண்டு வருகிறேன். ஒரு நாவலுக்குப் பிறகு எழுத்தாளனுடைய தனிமை அன்றி புகழின் தனிமை அச்சுறுத்தியதை உணர்ந்தேன். அதிகாரத் தனிமைவாசத்துடன் ஒத்துக் கூடிப் போன இதையடுத்து பிற நண்பர்கள் துணை புரிந்தார்கள், இன்றும் உடன் இருக்கிறார்கள். 

0 எப்படி. 

வாழ்நாள் பூராவும் அவர்களையே தொடர முடிந்திருக்கிறது. எப்போதும் தரையில் கால்பாவிக் கொண்டிருப்பவர்கள். பரபரப்பற்ற இவர்கள் பூமிக்குத் திரும்பவும் என்னை அழைத்தார்கள். 

0 குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் அரண்மனையில் திரும்ப பசுக்கள் வருகிற படிமங்கள் நிஜமானவையா. 

பழைய காமிராப் படப்புத்தகம் ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன், பாருங்கள். நாவல்களின் முதல் வரியில் ஒரு படிமம் வருவது நிஜம்தான். இந்த நாவல் எழுதியபோது கிழவன் வசிக்கும் ஆடம்பரமான அரண்மனைக்குள் புகுந்த பசுக்கள் திரைச்சீலைகளைத் தின்று கொண்டிருப்பது முதலில் கிடைத்த படிமம், காமிராப்படத்தைப் பார்க்கும் வரை ஸ்தூலமற்று இருந்த படிமம். ரோம் நகரத்தில் பழைய கடை ஒன்றில் படத்தைக் கண்டவுடன் படிமம் முற்றுப் பெற்றது. அறிவுஜீவிகளில் நான் இல்லை என்பதால் படைப்புகளிலிருந்து அல்லாமல் தினசரி சமாச்சாரங்களிலிருந்து படிமங்களைப் பெறுகிறேன். 

0 நாவல்களின் திருப்பங்கள் எதிர்பாராது போனதுண்டா . 

ஆரம்பத்தில் உண்டு. அப்போது எழுத்தின் மனோலயம் பற்றி பொதுவான அபிப்பிராயம் மட்டுமே கொண்டிருப்பேன். எழுத்தின் போதான அதன் வாய்ப்புகளுக்கு இடம் கொடுப்பேன். உத்வேகம் பெருகும் இளம் வயதில் தவறல்ல, நிறைய உத்திகளைக் கற்றுக் கொள்ளாவிட்டால் உத்வேகம் போய்விடும், பிற்காலத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும், அப்போது உத்திகளே உத்வேகத்தை ஈடுகட்டும் என்றெல்லாம் ஆலோசனை வழங்கப்பட்டது. சரியான சமயத்தில் அதை ஏற்றுக்கொண்டு இருக்காவிட்டால் எழுத்தின் வெளிக் கட்டமைப்பை முன்னதாகவே உருவாக்கிக் கொள்ள வாய்த்திருக்காது. கட்டமைப்பு என்பது முற்ற முழுதான தொழில் நுட்பப் பிரச்னை. ஆரம்பத்தில் கற்காவிட்டால் முடியாது. 

0 எழுதும்போது கட்டுப்பாடு முக்கியமாகி விடுகிறது. 

சாதாரணக் கட்டுப்பாடு இல்லாமல் நாவல் எழுத முடியுமென்று நினைக்கவில்லை. 

0 செயற்கையான தூண்டுதல்கள் பற்றி. 

எழுத்து தமக்குக் குத்துச்சண்டை போன்றது என ஹெமிங்வே எழுதியது மிகவும் பிடித்திருக்கிறது. உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை கொண்டவர். குடிகாரர் என பெயர் பெற்ற போதிலும் குடித்திருக்கும்போது வரி கூட எழுத முடிந்ததில்லை என ஃபாக்னர் கூறியுள்ள ஒவ்வொரு பேட்டியும் நினைவுக்கு வருகிறது. எழுதும்போது சில சமயம் போதை மருந்து உள்போனதா என விவாதிக்கும் மோசமான வாசகர்களுக்கு இலக்கியம், போதைப் பொருள் பற்றி எதுவும் தெரியாது எனவும் ஹெமிங்வே கூறியிருக்கிறார். எழுதும்போது தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும், அப்போது நன்றாக எழுத முடியும் என் நினைக்கிறேன். எழுத்து தியாகம் என்றும் பொருளாதார மற்றும் உணர்வு நிலைகள் மோசமாகப் போகும் அளவுக்கு சிறப்பது எழுத்து எனவும் முன்கூறும் மிகையான கோட்பாடுகளை எதிர்க்க வேண்டும். படைப்பாக்கம் வேண்டி நிற்கும் ஆரோக்கியத்தை வாழ்க்கையை நேசித்த சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்தவர்கள். 

0 எழுத்து ஒரு சலுகை, படுகிற இன்னல்களை மிகைப்படுத்தும் மனிதர் கள் எழுத்தாளர்கள் என ப்ளெய்ஸ் ஸென்ட்ரார்ஸ் கூறுகிறார். 

கவனமாகச் செய்யப்படும் கடினமான பணி எழுத்து. சுய திருப்தி மட்டும்தான் சலுகை. எழுத்தில் மிதமிஞ்சி எதிர்பார்ப்பவன் நான். தவறுகளைப் பொறுக்க முடியாததால் பரிபூரண தரம் எய்துவதும் சலுகையாகி விடுகிறது. பிரபஞ்சத்தின் மையம், சமூகத்தின் மனசாட்சி என எழுத்தாளர்கள் வளைய வருகிறார்கள் ஆனால் செவ்வனே செய்யப்பட்ட எதையும் மதிப்பேன். உதாரணமாக விமானத்தில் போகும்போது எழுத்தாளனை விடவும் பைலட்களே முன்னோடிகள். 

0 எழுத்துக்கான உங்கள் நேரம் எது. இன்னதென்று வைத்திருக்கிறீர்களா. 

தொழிலாக எழுதும்போது நேரம் பிரச்னைதான். பத்திரிக்கைக்காரனுக்கு இரவில் தான் வேலை. முழு நேரம் எழுத ஆரம்பிக்கும்போது நாற்பது வயது. காலை ஒன்பது மணிக்குத் துவங்கி பையன்கள் வீட்டுக்கு வருகிற இரண்டு மணி வரை எழுதுவேன். கடின வேலைக்குப் பழகியிருந்ததால் காலையில் மட்டும் உழைப்பது குற்ற உணர்வைத் தந்தது. மதியங்களிலும் அதனால் எழுத முயன்றேன். எழுதியதைக் காலையில் மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. ஆக ஒன்பது மணி வரை வேலை மட்டுமே செய்வதென்றும் அப்புறம் சந்திப்புகளை மேற்கொள்வது என்றும் தீர்மானித்தேன். 

பரிச்சயம் அடைந்த இடங்களில் எழுத முடிகிறது. ஓட்டல் அறைகளிலும் இரவல் டைப்ரைட்டர்களிலும் இயங்க முடிவதில்லை. பயணங்களின் போதுகூட, வேலையை குறைவாக்க நிறைய சாக்குப்போக்குகள் உள்ளன. எனவே சுய நிபந்தனைகள் அதிகமாக தேவைப்படுகின்றன. எந்த இடத்திலும் உத்வேகம் வரக்கூடும் என்று இருக்கிறேன். இந்த நிலையை மிகைப்படுத்தி விடுகிறார்கள், மார்க்சீய தோழர்களுக்கும் இதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எப்படி, இருந்தாலும் பிரத்தியேகமான மனநிலையில்தான் சரளமாக முடிகிறது என்று நம்புகிறேன். வீட்டில் மட்டும் முடியும் என்பதான சாக்குப்போக்குகள் மறைந்து விடுகின்றன. சரியான கருவையும் முறைகளையும் எழுதும்போது தருணமும் மனநிலையும் வாய்த்து விடும். 



எழுதச் சிரமம் அளிப்பது முதல் வாக்கியம்தான். பல மாதங்கள் போராடுவேன். கிடைத்தவுடன் அடுத்தவை சுலபம். புத்தகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு முதல் வாக்கியத்தில். கருப்பொருள், நடை, தொனி அத்தனையும் வரையறை பெற்றுவிடுகின்றன. அடுத்தவை அமைவதற்கான மாதிரி முதல் வாக்கியம். நாவலைவிட எழுதுவதற்கு சிறுகதை தொகுப்பு சிரமம் அளிப்பது இதனால், சிறு ஒரு கதைக்கும் கூட தொடக்கம் முதலில் இருந்து. 

0 தூண்டுதலுக்கு கனவுகளினதா உதவி. 

ஆரம்பத்தில் கனவுகளை ரொம்ப கவனித்தேன். தன் அளவில் வாழ்க்கை தூண்டுவதை பிறகு உணர்ந்தேன். வாழ்க்கை ஓட்டத்தில் சிறு பகுதி கனவு. அவை பற்றிய கோட்பாடு விளக்கங்களில் ஈடுபாடு கொண்டவன் என்பது எழுத்தைப் பொருத்த என் உண்மை . எதார்த்தம் பிரதானமானது என்பதற்கு என் கனவுகள் அவ்வளவு விசேஷம் இல்லாமல் போவது காரணமாக அமையலாம். 

0 உத்வேகமும் உள்ளுணர்வும் மாறுபடுவன. 

தேர்ந்த கருப்பொருளை அடையும்போது உத்வேகம் எழுத்தை சரளமாக்கும். விஞ்ஞான அறிவோ வாசிப்போ இன்றி உண்மையைக் கசக்கும் ரகசிய விசேஷம் கொண்டது உள்ளுணர்வு. புவியீர்ப்பு விசை விதிகள் எதையும் விட உள்ளுணர்வு வழி எளிதில் விளங்கலாம். ஊடாகப் போராடாமலேயே அனுபவத்தை அடைவது இது. கதையாளிக்கு உள்ளுணர்வு அத்தியாவசியம். உலகில் அதிகமாக எரிச்சல் தரும் அறிவுவாதத்துக்கு மாறானது எனக்குப் பிடித்த உள்ளுணர்வு. அதுவா இதுவா என்பதில் உள்ளுணர்வு உதவும். சதுரக் குழியில் வட்ட முளையைத் திணிக்கத் தேவையில்லை அப்போது. 

0 கோட்பாட்டாளர்களை வெறுக்கிறீர்களா. 

பரிந்துகொள்ள முடியாததால் அப்படி ஆகிவிடுகிறது. சின்னஞ்சிறிய கதைகள் வழியாக விளக்கிக் கொண்டு போவதற்குக் காரணம் சாரப்படுத்தும் திறமை எனக்கில்லாததுதான். நாகரீகமற்ற நபர் என்று மேற்கோள்கள் அதிகம் காட்டாததால் பெயர் வாங்கியிருக்கிறேன். 

0 இன்னவகை இனம் என்று பிரித்துக் காட்டுகிறார்களா. 

எப்படியான எழுத்தாளன் என்ற கோட்பாட்டில் பொருத்தி, பொருந்தாவிட்டால், இன்னும் திணிப்பார்கள். அறிவுவாதம் இப்படி இவர்களாக உதாரணிக்கிறது. என்பற்றிய அவர்கள் தீர்ப்பில் ஆர்வமில்லையென்று இங்கே மட்டும் ரகசியமாய் சொல்வேன். அவர்களைப் படித்து வருஷங்களாகி விட்டது. படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதை பொறுப்பாக அவர்கள் எடுத்துக் கொண்டாலும் துல்லியமாக எழுதி நேரடியாக வாசகனை அடையவே செய்வேன். 

0 மொழிபெயர்ப்பாளர்களை எப்படிப் பார்க்கிறீர்கள். 

53அடிக்குறிப்புகள் தருபவர்கள் தவிர இவர்கள் மீது மரியாதைதான். படைப்பாளி நினைத்திராதவற்றை வாசகர்களுக்கு விளக்க முற்படுகிறார்கள் என்பதால் மரியாதை. தந்து விடுவதனாலேயே வாசகன் இவற்றை ஏற்க வேண்டி வருகிறது. சன்மானமற்ற கடினமான வேலை மொழிபெயர்ப்பு. நல்ல பெயர்ப்பு அடுத்த மொழியில் மறு படைப்பு. இருபத்தோரு மொழிகளில் பெயர்க்கப்பட்டவை என் புத்தகங்கள். இருந்தாலும் க்ரகரி ரபஸ்ஸா மீது என் மதிப்புக்குக் காரணம் அடிக்குறிப்பு தர வசதியாக அவர் விளக்கம் கேட்டதில்லை. ஆங்கிலத்தில் அடுத்த படைப்பாக அவை ஆகிவிட்டன. சில புத்தகங்களில் பகுதியில் புதிய சிரமம் தரும். வாசித்து விட்டு நினைவுகளிலிருந்து பெயர்த்திருப்பாரோ. தர்க்கபூர்வமாக அன்றி உள்ளுணர்வில் சிக்கியவர்கள் மொழி பெயர்ப்பாளர்கள். பதிப்பாளர்கள் தரும் சம்பளம் பரிதாபம்தான். பெயர்ப்பதைப் படைப்பு என்று செய்பவர்கள் கருதாதது அதைவிட பரிதாபம். ஸ்பானிய மொழியில் பெயர்த்து எழுத விருப்பமுண்டு. சுயமாக எழுதும் அளவு உழைக்க வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் கிடைக்காமல் போகும். 

0 பெயர்த்து எதை எழுத விருப்பம். 

ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஆத்ரே மால்ரோ. ஜோஸப் கான்ராட். ழான் எக்ஸ்பரி. வாசிக்கும்போதே பெயர்க்கும் விருப்பத்தை உணர்வேன். மகத்தான படைப்புக்களைத் தவிர பிறதை சாதாரண பெயர்ப்பில் கூட பரவாயில்லை என்று வாசிப்பேன். ஸ்பானிய மொழி தவிர இன்னொன்றில் வாசிப்பது செளகரியம் அளிப்பதில்லை. ஸ்பானிய மொழி என்னைப் பாதுகாக்கிறது. இத்தாலிய, ஃப்ரெஞ்ச் மொழிகளிலும் பேசுகிறேன். டைம் வாரப்பத்திரிகை இருபது வருஷங்கள் வாசித்துப் பாழாகிப் போனதால் ஆங்கிலமும் வருகிறது. 

0 மெக்ஸிகோவை இல்லமாக உணர்கிறீர்களா. எழுத்தாள இனத்தை சேர்ந்தவராகக் கருதிக் கொள்கிறீர்களா. 

நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் உண்டு. அவர்களில் எழுதுபவர்களும் கலைஞர்களும் உண்டு. எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்பதற்காக மட்டும் நட்புக் கொள்வதில்லை. 

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எந்த நாட்டிலும் குடிமகனாக உணர்கிறேன். வேறு இடங்களில் அப்படி இல்லை. லத்தீன் அமெரிக்கர்கள் ஸ்பெயின் நாட்டில் மட்டும் கவனம் பெறுவதாக உணர்கிறார்கள். சரித்திரப்பாதை அதுதான் எனினும் நான் அப்படி உணரவில்லை. லத்தீன் அமெரிக்காவில் எல்லைகள் எனக்கு கிடையாது. நாடுகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் அறிந்தவன் என்றாலும் நாடுகள் இதயத்தில் சேர்ந்து அமைந்துள்ளன. கரீபியப்பிரதேசத்தை அடையும்போது வீடு வந்து சேர்ந்ததாகத் தோன்றுகிறது. 

உட்ரெஞ்ச், டச்சு, ஆங்கிலக் கரீபியப்பிரதேசம் எதுவாக இருந்தாலும் சரி. பாரன்க்வுல்லாவில் விமானம் ஏறும் போது நீல உடையணிந்த கறுப்புப் பெண்மணி பாஸ்போர்ட்டில் முத்திரை இடும்போதாகட்டும், ஜமைக்காவில் இறங்கும் போது நீல உடையில் கறுப்புப் பெண்மணி ஆங்கிலத்தில் முத்திரை இடும்போதாகட்டும் - மகிழ்ச்சி கொள்கிறேன். 

மொழி, கலாச்சார வித்தியாசங்களை இங்கு வைத்திருப்பதாக நம்ப முடியவில்லை. ஆனால் உலகின் இதர பகுதிகளுக்குப் போகும் போது அயலானாக உணர்வதால் பாதுகாப்பு போய்விடுகிறது. பயணத்தின் போது தனிப்பட்ட உணர்வு எனினும் சிறுபான்மைக்காரன் என்பதாகத் தோன்றிவிடுகிறது. 

&& கொஞ்சக் காலம் ஐரோப்பாவில் வசிப்பது லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்குத் தேவையா. 

புறத்திலிருந்து நிஜத்தைச் சந்திக்க வாய்ப்பாக அமையலாம். இவர்கள் ஐரோப்பா போய் வசிப்பது பற்றி சிறுகதைத் தொகுதி கொண்டுவர இருபது வருஷங்களாக எண்ணி வருகிறேன். முடிவு என்று இவற்றிலிருந்து வந்தால் லத்தீன் அமெரிக்கர்களால் குறிப்பாக மெக்ஸிகோ நாட்டவர்களால் ஐரோப்பாவில் வசிக்க முடிவதில்லை எனலாம். நான் ஐரோப்பாவில் சந்தித்த 
அத்தனை மெக்ஸிகோக்காரர்களும் அடுத்த புதன்கிழமை கிளம்ப இருப்பவர்கள். ஊருக்கு. 

0 லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் க்யூபப் புரட்சி ஏற்படுத்திய விளைவுகள். 

இதுவரை எதிரிடைதான். அரசியல் முனைப்பு கொண்டதாக நினைத்துக் கொண்டவர்கள் விருப்பத்தைத் துறந்து கடமையை எழுதினார்கள். திட்டமிடப்பட்ட இலக்கியம். உள்ளுணர்வு, அனுபவம் என மேலே பேசியவற்றுடன் உறவு எதுமில்லை . புதுவகை இலக்கியம், கலை இவற்றின் படைப்பெல்லையை நோக்கி இது வளர்ச்சி பெறவில்லை. அவகாசம் தேவைப்படலாம். 

லத்தீன் அமெரிக்காவில் நிலவிவந்த ஒருவகை இலக்கியத்தை வெளியில் பரவச்செய்ய க்யூபா அருமையான பாலமானது. இந்த வகை இலக்கியம் குறித்து எழுச்சி ஏற்பட க்யூபப் புரட்சி காரணமானது. இத்தகைய எழுத்தாளர்கள் இருபது வருஷங்களுக்கு மேலாக எழுதியுள்ள போதிலும் ஐரோப்பிய அமெரிக்கப் பதிப்பகங்கள் அதுவரை அக்கறை கொள்ளவில்லை. புரட்சி தொடங்கியதும் வந்த அக்கறைதான். புரட்சி செய்தித் தீனியாகிறது. லத்தீன் அமெரிக்கா மோஸ்தர் ஆகியது. உலக இலக்கியத்துடன் ஒப்பிடத் தக்கவையாகவும் மொழிகளில் பெயர்க்கப்படும் அளவு செறிவாகவும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி ஆட்கள் சொல்லும் வரை நாவல்கள் சிறந்தவை என்று உணராத அளவில் கலாச்சார ஏகாதிபத்தியம் இருப்பது நிஜமான சோகம். 

0 புறத்தில் தெரியவராத சிலாகிக்கப்படுகிற எழுத்தாளர்கள் இங்கு. 

இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. லத்தீன் அமெரிக்க எழுத்தின் மீதான திளர்ச்சியின் விளைவாகப் புதிய கொர்த்தஸர்கள் வருகையை தவறவிடக்கூடாது என்று கவனத்துடன் இருக்கிறார்கள். எழுத்தை விடவும் புகழின் மீது இளம்வயதில் எழுதுபவர்கள் அக்கறை கொள்வது வருத்தம்தான். லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி ஒலோஸ் பல்கலைக்கழக ஃப்ரெஞ்சுப் பேராசிரியர் புத்தகம் எழுதப்போக, என்னைப்பற்றி எழுத இனி அவசியமில்லை, தங்களுக்கு அது தேவை என்று கடிதம் போட்ட இளைஞர்கள் உண்டு. அவர்கள்' வயதுக்காரனென இருந்த போதில் என்னை அன்றி மிகைல் எஞ்சல் அஸ் தூரியாஸ் பற்றித்தான்பேசப்பட்டது. எழுத்தில் நோக்கத்தை அன்றி விமர்சகர்களுக்கென எழுதி செலவிடும் போக்கு வருத்தம் தருகிறது. எழுதுவது எழுதப்படுவதைவிட முக்கியம். நாற்பது வயதில் ஐந்து புத்தகங்கள் எழுதியிருந்த போதும் உரிமைத்தொகை ஏதுமின்றி வாழ்ந்ததை மறக்கமாட்டேன் 

0 எழுதுபவன் வாழ்க்கையில் ஆரம்பத்திய கிட்டும் புகழ் மோசமானதா. 

ஆரம்பத்திலென்ன, எப்போதும் மோசம்தான். மரணத்திற்குப் பிறகு எழுத்து அங்கீகாரம் பெறுவதைத்தான் விரும்புகிறேன். அதுவும் எழுத்து பண்டமாக மாறிவிடும் சமுதாயங்களில்.... 

0 பிடித்தது, தவறி வாசிப்பது எதை எதை, 

அமானுஷ்யமான எதையும் வாசிப்பேன். முகமது அலியின் நினைவுக் குறிப்புகள். ப்ராம் ஸ்டோக்கரின் Dracula கதை வாசிப்பதை வீண் என நினைத்த வருஷங்கள் உண்டு. நம்பிக்கை கொள்ளும் யாராவது சொல்லாதவரை புத்தகம் ஒன்றில் நிஜ ஈடுபாடு கொள்ள முடிவதில்லை. புனைகதைகளை வாசிப்பதே இல்லை. நினைவுக்குறிப்புகளையும் ஆவணங்களையும் வாசிப்பேன். 

இலக்கியத்தை மட்டும் வாசிப்பது என்ற பரிசுத்த எண்ணத்தை மீறுவேன். உலகத்தின் மூலைகளில் இருந்து வருகிற பலவகை பத்திரிகைகளை டெலிடைப் எந்திர வாசிப்புக் காலத்திலிருந்து தேடிப்படிக்கிறேன். அப்போதும் மெர்ஸிடஸ் கேள்விப்பட்ட செய்திகளை வந்து சொல்லுவாள். ஒப்பனைக் கடையில் கிடைத்த பத்திரிகை ஆக மோஸ்தர் பத்திரிகைகள், வம்புப்பத்திரிகைகள் என்று எதையும் வாசிப்பேன். பிடித்த புத்தகங்களை எங்கே வேண்டுமானாலும் தொடங்கி திரும்பவும் வாசிப்பேன். 

0 புகழ் எழுத்தாளனை அழிக்கும் என்று நினைப்பது ஏன். 

நிஜ உலகிலிருந்து தனிமைப்படுத்தி தலையிடுவது புகழ். தொடர்ந்து எழுத விரும்புபவர் யாரும் புகழ்ச்சிக்கு எதிரான தற்காப்பில் நிற்க வேண்டும். விருப்பமில்லாமல் சொல்கிறேன் கேளுங்கள், மரணத்துக்குப் பிறகு புத்தகங்கள் வெளியிடப்படுவதையே விரும்புவேன். புகழை அப்படித் தவிர்க்க முடியலாம். புகழால் எனக்கு சாத்தியமான விஷயம் அரசியல் பயன்பாடுதான். மற்றபடி அசௌகரியம்தான். நாள் முழுவதும் பிரபலமாக இருந்து நாளையிலிருந்து கிடையாது என்று பொத்தானை அழுத்திச் சொல்லிவிட முடியாதே. 

பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் 

தமிழில் - சி மோகன் 

No comments:

Post a Comment