தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, September 06, 2019

கனவுகளை விற்பவள் நான் - மார்க்வெஸ் தமிழில் - நாகார்ஜுனன் .

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
கனவுகளை விற்பவள் நான் 
அந்த நாள் மணி ஒன்பது. ஹவானாவில் ரிவேரா ஹோட்டல் மொட்டை மாடி. சூரிய வெளிச்சத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது பிரம்மாண்டமான அலை. கரையோர நிழல்சாலையில் வந்த அத்தனை கார்களையும் பெயர்த்தெடுத்து ஹோட்டலின் பக்கச் சுவர் ஒன்றில் மோதி அறைந்தே விட்டது. 
வெடித்ததும் இருபது மாடிகளிலும் ஓங்கிய பீதியில் கட்டிட முகப்பு தூளாக வரவேற்பு வட்டத்திலிருந்த நாற்காலிச் சுற்றுலாக்காரர்கள் தூக்கி வீசப்பட, நொறுங்கிய கண்ணாடியின் சூறாவளி சிலரைக் கிழித்தே சென்றது. கரைச் சுவரையும் ஒட்டிய இருவழிப் பாதையையும் தாண்டி முகப்பை சிதறடித்துவிட்ட பயங்கரமான அலைதான். 
மலர்ச்சியான க்யூப் இளைஞர்களும் தீயணைக்கும் வீரர்களும் ஆறுமணி நேரத்தில் இடிபாடுகளை அகற்றி சமுத்திரம் பார்த்த முகப்பையும் மூடி இன்னொடு கதவைப் பொருத்தியவுடன் சகஜநிலை திரும்பியது. ஆனால் பக்கச்சுவருடன் அறையப்பட்டது நிழல்சாலையில் நிறுத்தியிருந்த கார்களில் ஒன்று என நினைத்தவர்களுக்கோக்ரேன் வண்டி பெயர்த்து எடுத்தவுடன் தான் ஒட்டிக் கொண்டிருந்த உடலைப் பார்க்க முடிந்தது. அலை அறைந்து எலும்புகள் நொறுங்கியதால் சிதைந்த முகமும் அறுந்த பூட்ஸ்களும் கிழிந்து தொங்கிய ஆடைகளுமே எஞ்சின. நீலக்கல் கண்கள் கொண்ட மோதிரப்பாம்பை அணிந்திருக்கிறாள். போர்த்துக்கீசிய புதிய தூதரின் வீடு பராமரிக்க வந்தவள். மனைவியுடன் தூதர் வந்து இரண்டு வாரம் ஆகியிருக்க அந்தக் காலை மார்க்கெட் செல்ல புதுக்கார் ஒட்டியிருக்கிறாள். செய்தியாக வாசித்த போது பெயர் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மோதிரப் பாம்பும் அதன் நீலக்கண்களும் என்னவோ செய்கின்றன. இருந்த விரல் எது தெரியவில்லை . 
கடைசியில் முக்கிய விவரம் ஆனதும் அது. மறக்க முடியாதவள். பெயரோ தெரியாத ஒன்று. ஆள்காட்டும் வலது விரலில் அணிந்திருப்பவளோ, அஞ்சுகிறேன். இன்றைக்கு விடவும் அபூர்வமாக, அந்தப் பழக்கம் முப்பத்து நான்கு வருஷங்களுக்கு முன்பு வியன்னா நகரத்தில். லத்தீன் அமெரிக்க மாணவர்கள் ஆக்கிரமிக்கிற உணவிடத்தில் கூஜாபீருடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஸாஸெஜ் துண்டுகளுடன் சந்தித்திருக்கிறேன். பாடுகையில் விம்முகிற மார்பகத்தையும் கோட் காலரில் தொங்கும் நரிவால்களையும் எகிப்திய மோதிரம் பாம்பையும் ரோம் நகரத்திலிருந்து வந்திருந்த காலை நேரத்தில் கண்டது இன்றும் ஞாபகமிருக்கிறது. ஸ்பானிய மொழியில் உலோகத் தொனியில் மூச்சிரைக்காமல் பேசிய போது மரமேஜையில் இருந்த ஒரே ஆஸ்திரியப் பெண்ணோ என யோசித்தேன். இல்லை. கொலம்பியாவில் பிறந்தவள். உலக யுத்தங்களுக்கு இடையில் குழந்தையாக இசை கற்க 

வந்தவள், முப்பது வயதில் இழந்த அழகை, வசீகர லயிப்பில் கிறங்கடிஒசி' ' 
கர லயிப்பில் கிறங்கடித்து, ஈடுசெய்த அவள் உண்டுபண்ணியது வருவித பயம் இரண்டாம் உலக யுத்தம் விட்டுச்சென்ற இனெ ' உலகங்கள் ரெண்டுக்கிடையில் மாட்டிக் கொண்ட வியன்னா ராஜாங்க நக? '2° கறுப்புச் சந்தைச் சொர்க்கமாகவும் சர்வதேச உளவிடமாகவும் மாறிக் கெ'' செ#9 தொலைந்துபோய் வந்திருந்த என் சிநேகிதியால் மேஜையில் இருந்த அத்தனை' 99 வாங்கித் தர முடியும் என்றாலும் தன் ஊர்மலத்துக்கு விசுவாசமாக இருக்கத்தானே' நினைத்து அங்கே வருகிறாள். வியன்னா நகரத்தில் லத்தீன் அமெரிக்க ' அவளுக்காக ஜெர்மன் மொழியில் கண்டுபிடித்திருந்த நாக்கைச் சுழற்றும் பெயர்"?" அவளைத் தெரிகிறது. ஃப்ரௌ ஃப்ரைடா. க்விண்டியோவின் காற்றுச் சிகரங்களிலிருந்து கிளம்பி மிகவும் வெளிறிப்போன இந்த உலகத்துக்கு வந்ததெப்படி எனது 
இந்த உலகத்துக்கு வந்ததெப்படி என்று விளையாட்டாக, அறிமுகம் ஆனதும், கேட்டபோது என்னை அழித்து விடுவதாக சொன்ன பதில் இது. 
"கனவுகளை விற்பவள் நான்." 
நிஜத்தில் அவள் தொழில் அது தான். பழைய கால்டாஸ் ஊரில் கடைக்காரர் ஒருவருக்கு சௌகரியமாகப் பதினொரு பேரில் மூன்றாவதாகப் பிறந்து காலை உணவுக்கு முன்பு தூய்மையாகவும் அசரீரியாகவும் இருக்கும் போதே கனவுகள் சொல்லும் பழக்கத்தை குடும்பத்திலிருந்து கற்றவள். 
ஏழுவயதில் தன் சகோதரனை வெள்ளம் கொண்டு போகும் என்றாள். 
மலைப்பள்ளத்தாக்கில் வழக்கமாக நீந்தப் போகும் அவனை கூடாது என்று மூட நம்பிக்கையில் அம்மா தடுத்தபோது தன் ஆரூடம் தனித்துவமானது என்றாள் ஃப்ரைடா. 
"மூழ்கிப் போவான் என்பதல்ல கனவின் அர்த்தம். இனிப்புகள் அவன் சாப்பிடக் கூடாது" என்றாள். 
ஞாயிற்றுக்கிழமை இனிப்புகள் இல்லாமல் வாழ முடியாத ஐந்து வயது சகோதரனுக்கு அவள் ஆரூடம் கசந்தது என்றாலும் அவள் அசரீரித் தன்மைகளை உணர்ந்த அம்மா ஜாக்கிரதையாக இருக்க விரும்பினாள். ரகஸியமான முதல் சாக்லெட்டை சாப்பிட்டவுடன் புரையேறிப் போனவனைக் காப்பாற்றத்தான் யாருமில்லை. 
வியன்னாவின் கொடூரமான பனிக்காலங்கள் தாக்கும் வரையில் அசரீரித் தன்மைகளை வைத்து வாழமுடியும் என்று அவள் நினைத்ததேயில்லை. வாழ விரும்பிய முதல் வீட்டுக்குச் சென்று வேலை கேட்ட போதும் உண்மையைத்தான் கூறினாள். 

"கனவுகள் சொல்பவள் நான்" என்றவளை மாதச் சம்பளத்துக்கு வேலையில் வைத்து வசிக்க அறையும் மூன்று வேளை உணவும் கொடுத்தார்கள். காலையில் மட்டும் குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து மேஜையில் வைத்துச் சொல்ல வேண்டும். அவர்களில் அப்பா வங்கிக்காரர். அம்மாவுக்கு கற்பனாவாத அறையிசையில் வேட்கை. குழந்தைகள் இரண்டு. வயது பதினொன்று, ஒன்பது. மத நம்பிக்கைகள் கொண்ட அவர்களுக்கு புதைந்துபோன ரகஸியங்களை ஆரூடங்களாக ஏற்றுத் தினசரி விதியை அவள் மூலமாகத் தெரிந்து கொள்வதில் ஆர்வம். 
நீண்ட காலமாக, அதுவும் குறிப்பாக, தீக்கனவுகளை விடவும் கொடூரமான எதார்த்த நிலையை யுத்த காலங்களில் கதைசொல்லி வருகிறாள். தினம்தினம் யார் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் பொறுப்பும் அதிகாரமும் வந்து சேர்ந்தது. குடும்பத்தின் மீதான அவள் பிடி இறுகியது. மெலிதான பெருமூச்சும் அவள் கட்டளையின் படிதான் யாரும் விடமுடியும். வியன்னாவில் நான் இருந்த காலத்தில் அவள் வீட்டுச் சொந்தக்காரர் மரணமடைந்தார். கனவுகள் முடிவுக்கு வரும் வரையிலும் தம் குடும்பத்துக்குக் கதைகள் சொல்லிவர அவளை நியமித்து சொத்தில் பகுதியை விட்டுச் சென்றிருந்தார். 
ஒருமாதம்வரை வியன்னாவில் இருந்தேன். எதிர்பார்த்த பணம் வராத நிலையில் ஏழ்மையைப் பகிர்ந்து கொண்ட ஏழ்மை ராஜாங்கத்தில் அவள் வருகை விழாவாக இருந்தது. பீரின் தூக்கலில் ஓரிரவு தயக்கத்திற்கு இடம் கொடாமல் காதருகே சொன்னாள். 
"கனவில் நேற்று நீ. ஐந்து வருஷங்கள் இனி இங்கே நீ வரக்கூடாது." 
அவள் தீர்மானம் தாக்கிய நிஜத்தில் அன்றிரவே ரோமுக்கு கடைசி ரயிலில் ஏறினேன். அனுபவித்திராத பேரழிவு ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்தவனாகக் கருதிக் கொள்ளும் அளவுக்கு அவள் ஆரூடம் என்னைத் தாக்கியிருந்தது, இன்றுவரை வியன்னாவுக்குப் போகவே இல்லை. 
ஹவானாவில் அலையறைந்த தினத்துக்கு முன்பு எதிர்பாராத மர்ம முடிச்சின் விளைவாக பார்ஸிலோனா நகரத்தில் அவளைக் கண்டேன். 
உள்நாட்டுப்போருக்குப் பின் முதல் முறையாக வால்பாரைஸோவுக்குப் கடல் பயணம் மேற்கொள்ளும் வழியில் பாப்லோ நெருடா ஸ்பெயினில் கால் வைத்தது அன்றுதான். பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிக் கொண்டே அன்று காலை எங்களுடன் இருந்தார். போர்ட்டர் கடையில் உலர்ந்து போன புத்தகத்தைக் கிழிந்த உறையுடன் ரங்கூன் தூதரகத்தில் வாங்கிய இரண்டு மாதச் சம்பளத்தைக் கொடுத்து கண்டெடுத்தார். 

உறுப்பிழந்த யானையாகக் கூட்டத்தில் புகுந்து, பாா?? ? 
-டத்தில் புகுந்து, பார்த்த ஒவ்வொன்றின் உள்இயக்கத்தையும் குழந்தையாக வியந்து கொண்டிருந்தார். தனக்காக்க கமெடு' "Y?" கொண்ட பிரம்மாண்டமான விளையாட்டுப் பொம்மையாக சாவிமுனையா" "*" கொண்டிருந்தது உலகம் அவருக்கு. மறுமலர்ச்சிக்காலப் போப்பாண்டவராக இப்படி யாரையுமே பார்த்ததில்லை. ராட்சஸப்பசி கொண்டும் நாகரீகமாகவும் நெருடாவால் நடந்து கொள்ள முடிந்தது. விருப்பமின்றியும் அவர்தான் மேஜையில் முதலிலிருப்பார். சலூன் துணிபோல் ஒன்றை மனைவி மாத்தில்டெ கழுத்தில் போட்டவுடன் தான் தக்காளி சாஸில் குளிக்காமல் அவரைத் தடுக்க முடியும். 
கார் வல்லரஸ்ஸில் அந்த நாளும் அப்படித்தான். மூன்று முழுநண்டுகளை திறமையுடன் அறுத்து சாப்பிட்டவாறே அடுத்தவர் தட்டையும் பார்த்த அவர் ருசி எங்களைத் தொற்றிக் கொண்டது. கலிஸியாவின் சிப்பி மீன்கள், காண்டப்ரியாவின் நத்தைகள், அலிஷான்டேவின் இறால்கள், காஸ்டாப்ரவாவின் கடல் வெள்ளரிகள் இப்படி ஃப்ரெஞ்சுக் காரர்களைப் போல வகை வகையாக பேசினார். சிலி நாட்டின் சரித்திரத்திற்கு முந்திய சிப்பிமீன்களை இதயத்தில் வைத்திருந்தார். திடீரென்று சாப்பிடுவதை நிறுத்தி நண்டின் தம் உணர்கொம்புகளை நீட்டி மெலிதாக என்னிடம் "பின்னாலிருந்து யாரோ பார்க்காமல் என்னை விடப் போவதில்லை" என்றார். நிஜம்தான் என அவர் தோளுக்குப் பின் பார்த்து உணர்ந்தேன். 
நுரைமெத்தைத் துணித் தொப்பியும் வெளிர் சிகப்பு ஸ்கார்ஃபும் அணிந்து அவசரமின்றி நோக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நடுங்கும் அந்த உருவத்தைப் பார்த்தேன். காட்டும் ஆள்விரலில் மோதிரப்பாம்பும் வயதாகிக் கொஞ்சம் பருத்திருந்தாலும் உட்ரெள ஃப்ரைடா தான். நெருடா அவர் மனைவியுடன் கப்பலில் நேப்பில்ஸ் நகரத்திலிருந்து வந்திருந்தாலும் சந்தித்துக் கொள்ளவில்லை. 
காப்பி அருந்தக் கூப்பிட்டு கவிஞரை ஆச்சரியப்பட வைக்க அவள் கனவுகளைப் பேசச் சொன்னேன். ஆரூடக்கனவுகளில் நம்பிக்கை தாம் கொள்ளாதவர் என்ற நெருடா கவனிக்கவே இல்லை "கவிதை மட்டுமே ஆரூடம்" என்றார். உணவுக்குப்பின் வருகிற நிச்சயமான நடையின் போது யாரும் கேட்காதபடி ஞாபகங்களைத் கொண்டுவா தங்கினேன். ஆஸ்திரியாவில் சொத்துக்களை விற்ற பின் போர்ச்சுகல் வந்து அமெரிக்கக் கண்டம் வரையிலும் சமுத்திரம் தாண்டிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்போர்ட்டாவில் மலைமீதான கோட்டைப்போலி ஒன்றில் தங்கிவிட்டதாகத் தெரிவித்தாள், 
கவியன்னாக் குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்து கனவு தோறும் என புகழ்மிக்க வியன்னாக் குடும்பத்தின் சொத் விட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். கனவுகள் வெறும் பிழைப்புக்காகத்தான் என்று நினைத்திருந்தால் ஆச்சரியம் அடையாமல் அதைக் கூறியும் விட்டே 

அடக்க மாட்டாமல் சிரித்தாள். "வெட்கம் அறியாமல் தான் இப்போதும் இருக்கிறாய்" என்றவள் சிலியின் பேச்சு மொழியில் அங்கிருந்த கிளிகளுடன் நெருடா கொஞ்சுவதற்காகப் பிறரைப் போலக் காத்திருந்தாள். மீண்டும் வந்தபோதும் பேச்சை மாற்றினாள். 
"இப்போது நீ வியன்னா திரும்பலாம்" 
முதல் சந்திப்பு பதிமூன்று வருஷங்கள் கழிந்து ஆகியிருப்பதை உணர்ந்தது அப்போது தான். 
"கனவுகள் பொய்த்து விடும் என்றாலும் போக அங்கு போவதில்லை ஒருவேளை." 
மூன்று மணிக்கு நெருடா புனிதமாகக் கருதிய தூக்கத்துக்காக அவளைத் தவிர்த்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். ஜப்பானிய தேனீர்ச்சடங்கை நினைவுறுத்தும் வகையில் காரியங்கள் நிகழ்த்தி தூங்கப் போனார். ஜன்னல்கள் சில திறந்தும் பிற மூடியும் சிலாக்கியமான வெம்மை கூடிவர குறிப்பிட்ட திசையிலிருந்து ஒளியும் நிச்சய மெளனமும் அவருக்குத் தேவை. எதிர்பாராதபோது எழுந்து விடுகிற குழந்தையாக பத்து நிமிடத்தில் கன்னத்தில் தலையணையின் அச்சுடன் புதிதாகத் தோன்றினார். 
"கனவுகள் சொல்லும் அவளைக் கனவில் கண்டேன்." 
கண்ட கனவைச் சொல்லுமாறு மனைவி வற்புறுத்த "என்னைக் கனவில் கண்டதாக அவளைக் கண்டேன்" என்றார். 
"போர்ஹே கதையிலிருந்து தான்" என்றேன். 
"எற்கனவே எழுதிவிட்டாரா" என்று எழுத்தாளனின் வருத்தத்துடன் கேட்டார். 
"இல்லாவிட்டால் என்றாவது புதிர்ப்பாதைகளில் ஒன்றாக வைத்து எழுதி விடுவார்" என்றேன். கப்பலில் ஒளியுடன் மாலை ஆறு மணிக்கு தனிமையான மேஜையில் அமர்ந்து பக்ககங்களை அவர் படிக்கும் போது மலர்களையும் மீன்களையும் பறவைகளையும் வரைவதற்கு பயன்படுத்தும் பச்சை இங்க்கால் பிரவாகக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அடுத்த கரை வந்தவுடன் பார்த்துக் கொள்ளாமலேயே பிரிவோமோ என்றிருந்தபோது தேடி அவளை சுற்றுலா மேஜையில் கண்டுபிடித்தோம். 
தூக்கம் அவளுக்கும் கலைந்திருந்தது. 

"கவிஞரைத்தான் கனவு கண்டேன்" என்றாள். 
ஆச்சரியம் தாக்கி "கனவில் என்ன" என்று கேட்டேன். 
என்னைக் கனவில் கண்டதாக அவரைக் கண்டேன் கனவில் எடுறை''''' 
என் ஆச்சரியம் அவளைப் பாதித்திருக்க வேண்டும். 

"ஏன் அப்படிப் பார்க்கிறாய். என் கனவுகளுக்கு நடுவில் எதார்த்த உலகுக்குத் தொடர்பில்லாமல் ஒன்று சில சமயம் நுழைந்து விடுவது இப்படித்தான்" என்றார். 

ஹவானா ஹோட்டலை அலைதாக்கி மோதிரப்பாம்பைக் கண்ட அன்றுவரையில் அவளைப் பார்க்கவோ நினைக்கவோ இல்லை. சில மாதங்கள் தாண்டி விருந்தில் போர்த்துக்கீசிய தூதரைச் சந்தித்தபோது கேட்காமலும் இருக்க முடியவில்லை. "என்ன ஆச்சரியமான பெண்" என்றவர் புகழ்ந்து உற்சாகத்துடன் பேசினார். 
"கதையாக அவளை எழுதியிருப்பீர்கள்" என்றவர் அதே தொனியில் சொல்லிய விபரங்களில் நான் முடிவெடுக்க வேண்டிய அந்த ஒரு விபரம் மட்டும் இருக்கவில்லை. 
"என்னதான் செய்வாள்" என்று கேட்டே விட்டேன். 
ஒருவித லயிப்பின்றிச் சொன்னார். "ஒன்றுமில்லை. கனவுகள் காண்பாள்." 
------ 
தமிழில் - நாகார்ஜுனன் . 
-

No comments:

Post a Comment