தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, September 27, 2019

குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம் -ஜோர்ஜ் லூயி போர்ஹே :: கல்குதிரை தமிழில் : நாகார்ஜுனன்

0 அர்ஜென்டினா 0 
குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம்  -ஜோர்ஜ் லூயி போர்ஹே :: கல்குதிரை 
தமிழில் : நாகார்ஜுனன்

'' தத்துவ அறிவு தூங்கும்போது பூதங்களை இடறிவிடுகிறது'' என்றார் ஹெகல். போர்ஹெவின் ரகசிய அற்புதக் கதைகளில் இந்த பூதங்கள் பேசுகின்றன. பின்வரும் கதையில் ட்ஸ்யுய்பென்னின் ''களைப்படையாத நாவலைப் பற்றிப் பேசும் போது, தன்னுடைய கதையைத்தான் போர்ஹெ 'சொல்ல வருகிறார். கதைகளின் உருவங்கள் அடைந்து தீரும் அலைச்சல்களைக் குழப்பியடிக்க போர்ஹெ அந்த உருவங்களை முரண் -எழுத்துருக் களாக மாற்றித் திரியவிடுகிறார். சாதாரணத் துப்பறியும் உளவாளியின் அலைச்சல், இலக்கியக் கோட்பாடு பற்றிய தத்துவார்த்த விவாதமாக வரலாறு என்ற அடையாளம் குறித்த போதையாக உருமாறும் விந்தை போர்ஹெ-வின் இக்கதையில் நடக்கிறது. உலகின் இதுவரை சொல்லப்பட்ட, சொல்லப்படாத கதைகள் அத்தனையும் போர்ஹெவின் உறைவாள் என்ற பேனாவின் வழி இறங்கக் கூடிய சாத்தியப்பாடு உள்ளது. 
தன்னுடைய வாசகனை எந்த நேரத்திலும் ஏமாற்றி இழக்கத் தயாராக உள்ள போர் ஹெ, 1921-இல் எழுத ஆரம்பித்தார். மூன்று கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு எழுதிய சிறுகதைகள் Inqusitons, A Universal History of Infamy, Labyrinths, The Aleph என்று பல தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 1950-களில் நூலகத்தில் தனது வேலையையும் கண் பார்வையையும் இழந்த பின்பு அவருடைய கதைகள் உலக மொழிகளில் வெளியிடப்பட்டு, பரபரப்பாகப் பேசப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன போது, போர்ஹெவை விவாதிக்காத விமர்சகரே இல்லாத நிலை இருந்தது. 
The Garden of Forking Paths என்ற பின் வரும் கதை 1941-இல் எழுதப்பட்டது. சக எழுத்தாளரான விக்டோரியா ஓகாம்போவுக்கு போர் ஹெ கதையை அர்ப்பணிக்கிறார். 
குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம் -ஜோர்ஜ் லூயி போர்ஹே 
தமிழில் : நாகார்ஜுனன் 
303 | கல்குதிரை 

லிட்டெல் ஹார்ட் எழுதியுள்ள முதல் உலகப் போரின் வரலாறு புத்தகத்தின் 22-ஆம் பக்கத்தில், 1916 ஜூலை 24-ஆம் தேதி நடப்பதாகத் திட்டமிடப்பட்டு அப்புறம் 29-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டு குறிப் பிட்ட ஒரு தாக்குதலைப் பற்றி நீங்கள் படிக்கலாம். 13 பிரிட்டிஷ் பட்டாளங் களும் 1,400 காலாட் படையினரும் ஸெர்ரே-மாண்டபான் அணிமீது தொடுத்த பெரும் தாக்குதல் அது. தாக்குதல் தள்ளிப் போடப்பட்டதற்கு அப்போது பெய்து விட்ட பேய்மழைதான் காரணம் என்று ஹார்ட் குறிப் பிடுகிறார் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. 
ட்ஸிங் - டாவ் நகரத்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக கொஞ்சக் காலம் பணியாற்றிய டாக்டர் யு சுன் சொல்லி எழுதப்பட்டு அவராலேயே சரிபார்க்கப் பட்டு கையெழுத்து இடப்பட்ட அறிக்கையானது, இதே தாக்குதல் ஒத்திப் போடப் பட்டதற்கான வேறொரு விளக்கத்தை முன்வைத்துப் புதிய ஒளியை அளிப்பதாக இருக்கிறது. முதல் இரண்டு பக்கங்கள் காணாமல் போய் விட்ட அந்த அறிக்கை பின்வருமாறு: 
தொலைபேசியை அப்படியே வைத்துவிட்டேன். அதில் ஜெர்மானிய மொழியில் என்னிடம் பதில் பேசிய குரல் கேப்டன் ரிச்சர்ட் மாடெனுடையது என்று உடனே எனக்குத் தெரிந்துவிட்டது. விக்டர் ருன பெர்க்சின் அறைக்கு கேப்டன் ரிச்சர்ட் மாடென் வந்துவிட்டான் என்றால் அந்நிகழ்வு எங்களுடைய தற்போதைய பதற்றங்களுக்கும் ஏன், எங்கள் உயிர்களுக்குமேயான-ஒரு முடிவாக அமையப் போகிறது என்று எனக்குப் புரிந்து விட்டது. எங்கள் உயிர்கள் போகப்போகும் காலம் வந்துவிட்டதை மிக இரண்டாம் பட்சமான ஒரு விஷயமாகவே நான் கருதினேன். அல்லது கருதிக்கொண்டிருக்க வேண்டும், என்பதுதான் இங்கே முக்கியம். 
ஆக, ருனபெர்க் கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம். சூர்யாஸ்தமனத்துக்குள் என் கதியும் அப்படித்தான் ஆகப் போகிறது  ஏனென்றால், கேப்டன் ரிச்சர்ட் மாடென் தன் இலக்கை அடையாமல் திருப்தி அடையப் போவதில்லை. அப்படிப்பட்ட கடமை வெறியானது அவனுள்ளே இயங்கிக் கொண்டிருந்தது. ஐரிஷ்காரனாகப் பிறந்து பிரிட்டில் உணவுத்துறையில் பணியாற்றி வந்த அவன் மீது திறமையின்மை மற்றும் 
-1. விக்டர்ருனபெர்க் என்கிற ஹான்ஸ் ராலெனர் ஒரு ஜெர்மானிய உளவாளி. தன்னைக் கைது செய்ய வாரண்ட் கொண்டுவந்தவனை ருனபெர்க் துப்பாக்கியுடன் எதிர்கொண்டான். வாரண்ட் கொண்டு வந்த கேப்டன் ரிச்சர்ட் மாடென் சுயபாதுகாப்பு கருதி சுட அதில் ருனபெர்க் குண்டடி பட்டு இறந்தான். (ஆ-ர்) 

தேசத்துரோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசப்பட்டு வந்ததால், தன்னை நிரூபித்துக் கொள்ள உதவிடும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் நழுவவிடப் போவதில்லை! அதுவும் ஜெர்மானிய பேரரசின் இரண்டு உளவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து, மரணத்துக்கு அனுப்பும் அருமையான வாய்ப்பை அவன் நிச்சயமாக நழுவவிட மாட்டான். 
படியேறி என் அறைக்குச் சென்றேன். அபத்தமாகக் கதவைத் தாழிட்டு விட்டு அந்தக் குறுகலான இரும்புக் கட்டிலில் மல்லாந்து விழுந்தேன். ஜன்னலின் ஊடே பழக்கப்பட்டுப்போன கூரைகளையும் கலங்கலான மாலை ஆறுமணிச் சூரியனையும் பார்த்தேன், 
- எந்தவித சகுனங்களும் குறியீடுகளும் அற்று நிர்மலமாக இருந்த அந்த நாள் தவிர்க்க முடியாத என் மரணத்துக்கான நாளாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. தந்தையின் மரணத்தைச் சந்தித்திருந்த போதிலும் ஹைஃபெங் என்ற அமைப்பொப்புமை கொண்ட தோட்டத்தில் சிறுவனாக அலைந்திருந்த போதிலும் இப்போது நான் மரணத்தை தழுவத்தான் போகிறேனா? இப்படி மரணத்தின் வாசலில் நிற்கும் ஒருவனுக்கு அந்தக் குறிப்பிட்ட கணத்தில் என்னவெல்லாம் சாத்தியமாகும் சித்திக்கும் என்று யோசித்தேன். இப்படியெல்லாம் நடந்து நூறு நூறாண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வு புதியதான ஒன்றாகவே நடந்தேறுகிறது. விண்ணிலும் மண்ணிலும் கடலிலுமாக ஏகப் பட்ட மனிதர்களுக்கு இதுவரை நடந்துவிட்ட இதே நிகழ்வு புதியதாகவே எனக்கு நடக்கிறது.... 
'தேப்டன் ரிச்சர்ட் மாடெனின் குதிரை மூஞ்சி நினைவுக்கு வந்து இந்த எண்ணங்களைத் தடை செய்து வெளியேற்றுகிறது. வெறுப்பும் பயமும் என்னைச் சூழ்ந்து கொண்டன, கேப்டன் ரிச்சர்ட் மாடெனை நான் ஏமாற்றி விட்ட படியால், என் தொண்டை இப்போது தூக்குக் கயிறுக்காக ஏங்குகிறபடியால், இந்த பயத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமிருப்பதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் வெறுப்புக்கும் பயத்துக்கும் இடையில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. எனக்கு அந்த முக்கிய ரகசியம் தெரிந்து போய் விட்டதை கேப்டன் ரிச்சர்ட் மாடென் என்ற உற்சாகமான அந்த வீரன் அறிந்து கொள்ள சாத்தியமில்லை. ஆங்க்ர நதியோரத்தில் பிரிட்டிஷாரின் புதிய ராணுவதளம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் பெயர் தான் அந்த ரகசியம். 
சாம்பல்நிற வானத்தின் குறுக்கே பாய்ந்த பறவையைக் குருட்டாம் போக்கில் விமானமாக்கி, அந்த ஒரு விமானத்தைப் பலவிமானங்களாக ஆக்கினேன். பிரெஞ்சு வானத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த அவலமான செங்குத்தான குண்டுகளைப் பொழிந்து அந்த பிரிட்டிஷ் ராணுவதளத்தை அழித்தொழித்தன. இதற்கிடையில் குண்டொன்று என் வாயைத் துளைத்துக் கிழிப்பதற்குள், எப்படியாவது அந்த ரகசியப் பெயரை, ஜெர்மனி வரை கேட்குமளவுக்கு, இரைந்து கத்திவிட முடியாதா என்று பார்த்தேன். மனித ரீதியான என் குரல் அப்போது மிகவும் பலவீனமடைந்திருந்தது. இந்த நிலையில் எங்கள் மேலதிகாரிக்குக் கேட்கிறாற்போல் கத்த எப்படி என்னால் முடியும்? சோகை பிடித்த அந்த வெறுக்கத்தக்க மனிதருக்கு, ருனபெர்க்கும் நானும் ஸ்டாஃபோர்ட்ஷயரில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் தெரியும். எங்கள் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டு, செய்தித் தாள்களைப் புரட்டிக் கொண்டு, பெர்லினில் வறண்டு போன அந்த அலுவலகக் கட்டிடத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பவர் 
தப்பித்தாக வேண்டும்'' என்று உரக்க சொல்லிக் கொண்டேன். சப்தமின்றி, அர்த்தமற்ற அந்த மெளனத்தின் துல்லியத்தில், எழுந்து கொண்டடேன். கேப்டன் ரிச்சர்ட் மாடென் எனக்காகக் காத்திருப்பதை உணர்ந்தவனைப் போல் உட்கார்ந்து கொண்டேன். என்னிடமிருந்த உபகரணங்கள் எதுவும் பயனளிக்கப் போவதில்லை என்பதை நிரூபித்துக் கொள்வதற்காகவோ என்னவோ என் சட்டைப்பைகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டேன். எதிர்பார்த்ததைப் போலவே சில சமாச்சாரங்கள் இருந்தன - அமெரிக்க கைக்கடிகாரம் ஒன்று, நிக்கல் செயின் ஒன்று, சதுர நாணயம் ஒன்று, ருனபெர்க்கின் அறைக்கான இப்போது என்னை மாட்டிவிடக் கூடிய, பயனற்ற - சாவிகள் அடங்கிய கொத்து, அந்த போலி பாஸ்போர்ட், ஒரு கிரவுன் இரண்டு ஷில்லிங்குகள் ஒரு சில பென்ஸ் நாணயங்கள், ஒரே ஒரு குண்டு அடங்கிய அந்தக் கைத்துப்பாக்கி... என் தைரியத்தை மிகைப் படுத்திக் கொள்வதற்காக அபத்தமாக அதைக் கையிலெடுத்து எடைபார்த்துக் கொண்டேன். துப்பாக்கிச் சப்தம் நீண்ட தூரம் வரை கேட்கும் என்று குழப்பமாக யோசித்தேன். பத்தே நிமிடங்களில் என் திட்டம் தயாராகி விட்டது. என்னிடமிருந்த ரகசியத்தை சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி கொண்ட ஒரே ஒரு மனிதனின் பெயர் அந்த தொலைபேசி அட்டவணையில் காணப்பட்டது. அரைமணி நேரம் ரயிலில் சென்றால் அடையக்கூடிய ஃபென்டன் என்ற புறநகர்ப்பகுதியில் அவன் வீடு இருந்தது. 
நான் ஒரு கோழைதான். என் திட்டம் அபாயகரமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற போதிலும் அது நிறைவேற்றப்படப் போகிற இக்கட்டத்தில் தான் ஒரு கோழைதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஜெர்மனிக்காக இத்தகைய செயலில் நான் ஈடுபடுவதாக நினைக்கக் தேவையில்லை. என்னை உளவாளி என்கிற அடிமைத்தனத்துக்குள் சிக்க வைத்துவிட்ட காட்டுமிராண்டி நாடாகிய ஜெர்மனியைப் பற்றி யாதொரு கவலையும் எனக்கில்லை. அதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவருடன் ஒருமணிநேரம் மட்டுமே பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை அந்த பிரிட்டிஷ் நாட்டவர் , ஜெர்மானியக் கவிஞன் கதேயைப் போலத்தான் நடந்து கொண்டனர். அந்த ஒரு மணி நேரத்தில் அவர் ஒரு கதேதான். 
என் இனத்தவர்களை - என்னுள் கலந்து போய் விட்டிருந்த மூதாதையர்களை என் மேலதிகாரியானவர் மோசமாக நினைத்ததுதான் இத்தகைய திட்ட நிறைவேற்றலில் நான் ஈடுபட்டதற்கான காரணம். 'மஞ்சள் இனத்தவன் ஒருத்தனால் அவருடைய ராணுவங்களைக் காப்பாற்ற முடியும்' என்று நிரூபித்துக்காட்ட நான் விரும்புகிறேன். இப்போது கேப்டன் ரிச்சர்ட் மாடெனிடமிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும். திடீரென்று இப்போது அவன் வந்து என் கதவில் தட்டி என்னைக் கலவரப்படுத்திவிட முடியும்..... மெதுவாக உடைகளை அணிந்து கொண்டேன். கண்ணாடிமுன் நின்று எனக்கு விடை கொடுத்துவிட்டுக் கீழே சென்று அமைதியான அந்தத் தெருவைக் கண்காணித்தேன் 
ஸ்டேஷன் வீட்டிலிருந்து அதிக தூரம் இல்லை. நடக்க முடியும் என்றாலும் டாக்ஸியைப் பிடிப்பதே உசிதம் என்று கருதினேன். ஆளரவமற்ற தெருவில் என்னை அடையாளம் கண்டுபிடிப்பது சுலபம்; அப்போது, அந்த அளவற்ற நிலையில், அடையாளம் காணப்பட்டு மாட்டிக் கொண்டும் விடுவேன் என்பதால் டாக்ஸியிலேயே சென்றேன். இருந்தாலும் ஸ்டேஷனின் பிரதான வாசலுக்குக் கொஞ்சம் முன்னரே டாக்ஸியை நிறுத்தச் சொன்னேன். வேண்டுமென்றே வலியான நிதானத்துடன் இறங்கினேன். ஆஷ்குரோவ் கிராமத்துக்கே நான் சொல்ல வேண்டும் என்றாலும் அதைத் தாண்டிய வேறொரு ஸ்டேஷனுக்கு பயணச்சீட்டு வாங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் அதாவது சரியாக எட்டுமணி ஐம்பது நிமிடத்துக்கு - வண்டி புறப்பட இருந்தது. அடுத்த வண்டி ஒன்பதரைக்குத்தான் என்பதால் ஓடினேன். பிளாட்ஃபாமில் ஓர் ஆத்மாவும் இல்லை. பெட்டிகளுடே ஓடும்போது சில விவசாயிகள், யாருடைய மரணத்துக்காகவோ துக்கம் அனுஷ்டிக்கும் ஒரு பெண், டாஸிடஸின் Annals படித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் மற்றும் காயமடைந்துவிட்ட, சந்தோஷமான சிப்பாய் ஒருவன் ஆகியோரை எதிர் கொண்டேன்... வண்டி ஒருவழியாகக் கிளம்பியவுடன், எனக்கு அடையாளம் தெரிந்த ஒருவன் வேகமாக பிளாட்ஃபார்மின் எல்லையில் ஓடிவந்து கொண்டிருந்தான். அவன்தான் கேப்டன் ரிச்சர்ட் மாடென் என்று தெரிந்தவுடன், பயத்தைத் தருவித்துவிட்ட அந்த ஜன்னலிலிருந்து விலகி இருக்கையின் மூலை யில்போய் அப்படியே சுருங்கிக் கொண்டு விட்டேன் நான். 

அழித்தொழிக்கப்பட்ட நிலையிலிருந்து சந்தோஷமிக்க நிலைக்குத் தாவினேன். எங்கள் இருவரிடையேயான யுத்தம் தொடங்கிவிட்டதையும் 
பெ ன தாக்குதலை விதிவசத்தால் நாற்பது நிமிடம் வரையிலாவது தள்ளிப் போட்டுவிட்டதையும் எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது சிறிய வெற்றிதான் என்றாலும் நான் அடையப்போகும் இறுதிக்கட்ட வெற்றிக்கான குறியீடு என்று கூறிக்கொண்டேன். வண்டி புறப்படும் நேரத்தைக் காட்டிய அந்த அட்டவணை என்னைத் தப்புவித்தது என்றும் அந்தத் துல்லியமான அவகாசம் கிடைத்திராவிட்டால் நான் கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் எனக்குள் கூறிக்கொண்டேன். என் கோழைத்தனமான சந்தோஷம் எங்களை இன்னும் அதிக சாகசங்களுக்கு உந்தித்தள்ளுவதாக இருந்தது. வீர தீர சாகசங்களை வெற்றிகரமாக நிகழ்த்திவிடுபவனாக என்னைக் கருதிக்கொள்ள அது இடமளித்தது. எனது இந்த பலவீனத்திலிருந்து நான் உருவாக்கிக்கொண்ட பலம் என்னைவிட்டு அகலாத ஒன்றாயிற்று. ஒவ்வொரு நாளும் மனிதனானவன் இன்னும் மோசமான திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவனாக ஆவது இப்படித்தான். இதேகதியில் மனித இனம் போனால் போராளிகளையும் கொள்ளைக்காரர்களையும் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிய என் கணிப்பு பின்வருமாறு: மோசமான திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வரும் அத்திட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றி சாதனை புரிந்துவிட்டவராக தம்மை எண்ணிக்கொள்ளவேண்டும். இறந்தகாலத்தைப் போலவே, மாற்றிக் கொள்ள முடியாத, எதிர்காலம் ஒன்றைத் தம்மீது திணித்துக்கொண்டிருக்க வேண்டும். 
- என் கடைசி நாளான அந்த நாள் மங்கி மறைந்து கொண்டிருப்பதையும் இரவானது பரவிக்கொண்டிருப்பதையும் ஏற்கனவே மரணித்து விட்டிருந்த என் கண்கள் பதிவு செய்து கொண்டிருக்க, நான் பயணித்தேன். சாம்பல் மரங்களிடையே வண்டி ஓடிக்கொண்டிருந்தது. வயல்களின் நடுவே ஓரிடத்தில் நின்றது, ஸ்டேஷனின் பெயரை யாரும் சொல்லவில்லை. (ஆஷ்குரோவ் தானே?'' என்று பிளாட்ஃபாரத்தில் இருந்த சிறுவர்களைக் கேட்டேன். "ஆஷ்குரோவ் தான்.'' என்றனர். இறங்கினேன். 
- அப்போதுதான் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் ஒளி பிளாட்ஃபாரத்தை மூழ்கடித்தது. ஆனால் சிறுவர்களின் முகங்கள் நிழல்களில் தங்கிவிட்டன. அவர்களில் ஒருவன் ''டாக்டர் ஸ்டீபன் ஆல்பர்ட்டின் வீட்டுக்குத்தானே போகிறீர்கள்' என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திராமல் இன்னொருவன் சொன்னான்: ''அவர் வீடு இங்கிருந்து தூரம்தான். ஆனால் இடதுபுறமாகவே சென்று, வருகிற ஒவ்வொரு சந்திப்பிலும் இடதுபுறமாகத் கரும்பினால், காணாமல் போகாமல் அந்த வீட்டைச் சென்று அடைவீர்கள். 1

என்னிடமிருந்து கடைசி நாணயத்தை அவர்களிடம் வீசி எறிந்துவிட்டு படியிறங்கி, ஆளற்ற அந்தத் தெருவில் நடக்கலானேன். மெதுவாக இறங்கிச் சென்றது தெரு. குப்பையாக இருந்தது. மேலே இலைகள் பின்னிப்பிணைந்து கொண்டன. நிலவு வட்டமாகத் தொங்கி என்னுடன் வருவதாகத் தெரிந்தது. 
- எப்படியோ கேப்டன் ரிச்சர்ட்_மாடென் என் திட்டத்தைத் தெரிந்து கொண்டு விட்டான் என்று ஒருகணம் நினைத்தேன், அது சாத்தியமில்லை என்று உடனே எனக்குத் தெரிந்துவிட்டது. எப்போதுமே இடதுபுறமாகச் செல்லவேண்டும், என்று அந்தச் சிறுவன் என்னிடம் கூறியது, புதிர்வழிகள் (labyrinths) சிலதின் மையத்தை அடைவதற்கான பொதுஉபாயம் ஒன்றையே எனக்கு நினைவுபடுத்தியது, புதிர் வழிகள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். யுனான் மாகாண ஆளுனராக இருந்த ட்ஸ்யுய் பென் என்பவரின் பேரன் நான். பதவியைத் துறந்துவிட்ட அவர், ஹங் ஓ மெங் நாவலில் காணப் படுவதைவிடவும் அதிகப்பாத்திரங்கள் கொண்ட ஒரு நாவலை எழுத முற்பட்டார், அந்த நாவலிலுள்ள ஒரு புதிர் வழியில் அத்தனை பாத்திரங்களும் காணாமல் போய்விடுவார்கள். பதின் மூன்று வருடங்கள் இத்தகைய செயல் பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் யாரோ ஓர் அந்நியன் அவரைக் கொன்றுவிட்டான். நாவல் அரைகுறையாக நிற்கிறது. அதன் புதிர்வழி இன்னும் விடுவிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் மரங்களின் அடியில் தொலைந்துபோன அந்தப் புதிர் வழியைக் கொஞ்சம் தியானித்தேன் நான். மலையொன்றின் ரகசிய நகரத்தில் அந்தப் புதிர் துல்லியமாக உறைந்திருப்பதாகவும் - நெல்வயல்களால் அழிக்கப்பட்டு தண்ணீரில் அந்தப்புதிர் மூழ்கிவிட்டதாகவும் - எண்கோணச் செவ்வகங்களாலும் நின்றுபோய்விடும் பாதைகளாலும் அமைந்திருந்த அந்தப் புதிர் அவற்றைத்தாண்டி நதிகளாலும் பிரதேசங்களாலும் பேரரசுகளாலும் உருவாவதாகவும் இன்னும் எப்படி யெல்லாமோ தான் கற்பனை செய்து கொண்டேன்... புதிர் வழிகளாலான புதிய புதிர் வழி ஒன்றைக் கற்பனை செய்து கொண்டேன். இறந்தகாலத்தையும் எதிர் காலத்தையும் உள்ளடக்கி நட்சத்திரங்களையும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுத்தும் அந்தப் புதிர் வழியைக் கற்பனை செய்து கொண்டேன். இந்த மாயபிம்பங்களில் உழன்று கொண்டிருந்த எனக்கு, யாராலோ பின்தொடர் வதற்காகச் சபிக்கப்பட்டவன் நான் என்ற உண்மை மறந்தே போய்விட்டது. உலகை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஓர் அரூபப் பார்வையாளனாக நிர்ணயமற்ற காலகட்டம் வரையிலும், என்னை நான் உணர்ந்துகொண்டி ருந்தேன். குழப்பமான, வாழ்ந்து கொண்டிருந்த, அந்த கிராமப்புறமும் நிலவும் அந்த நாளின் எஞ்சியிருந்த நேரமும் என்னைப் பாதித்துக்கொண்டிருந்தன தெருவின் இறக்கம் நான் களைப்படைவதற்கான சாத்தியப்பாட்டை மறுதலித்தது. அந்த மாலைப்பொழுது சுகந்தமாகவும் அளவிடற்கரியதாகவும்  ஆகிக்கொண்டிருந்தது. தெருவானது இறங்கி வெளிறித்தெரிந்த பசும்புல்டையே குறுக்குவெட்டாகப் போனது. உச்சஸ்தாயியில் எதுகை மோனையுடன் காற்றுடன் கலந்து வந்துகொண்டிருந்த சங்கீதம் இலைகளா 
பட துாரத்தாலும் உருமாறிக்கொண்டிருந்தது. ஒரு மனிதன் இதர மனிதர் "ககு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம்; இதர மனிதர்களின் ஒரு சில கணங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம்; ஆனால்ஒரு தேசத்துக்கோ மின்மினிப்பூச்சிகளுக்கோ வார்த்தைகளுக்கோ தோட்டங்களுக்கோ நதிச்சுழல் களுக்கோ சூர்யாஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக, துருப்பிடித்த உயரமான ஒரு கேட்டின் முன்பு வந்து நின்றேன். அந்த கேட்டின் இரும்புக்கிராதிகளுக்கு இடையே உயரமான மரங்களடங்கிய ஒரு சோலையையும் அதன் நடுவில் ஒரு மரவீட்டையும் கண்டேன். சட்டென்று இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன. முதலாவது ஒரு சாதாரணமான விஷயம்; இரண்டாவது விஷயத்தை என்னால் நம்பவே முடியவில்லை! நான் கேட்ட சங்கீதம் அந்த மரவீட்டியிருந்துதான் வந்து கொண்டிருந்தது; ஆனால் அது சீனதேசத்து சங்கீதம் என்பது தான் ஆச்சர்யம்! சீனதேசத்து சங்கீதமாக அது இருந்ததால்தான் கேள்வி கேட்காமல் நான் அதை ஏற்றுகொண்டிருக்க வேண்டும். அங்கே இருந்த மணியையோ பித்தானையோ அழுத்தி நான் கூப்பிட்டேனா, அல்லது கைகளைத் தட்டி ஒலி எழுப்பி யாரையாவது அழைத்தேனா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் துல்லியமான அந்த சங்கீதம் மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது. 
- பிரதான வீட்டின் பின்புறத்திலிருந்து கைவிளக்கு ஒன்று என்னை நெருங்கியது. தாளவாத்தியக்கருவியின் வடிவத்திலும் நிலவின் வண்ணத்திலுமாக அமைத்த அந்த விளக்கை சில சமயங்களில் மரங்கள் மறைத்து ஒளியிழக்கச் செய்தன. உயரமான ஒரு மனிதன் அதைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். ஒளிவெள்ளத்தில் அவன் முகம் எனக்குத் தெரிய வில்லை. கேட்டைத் திறந்துவிட்டு என் தாய்மொழியிலேயே அவன் மெதுவாகக் கூறினான்: 
ஹ்ஸி மெங் என் தனிமையைச் சீராக்க இன்னும் முயன்று கொண்டிருக்கிறார் போலும்! தோட்டத்தைப் பார்க்க உங்களுக்கு இஷ்டம் தானே?'' 
- எங்கள் தாதரக அதிகாரிகளின் பெயரொன்றை அடையாளம் கண்டு கொண்ட நான் பதிலளித்தேன், கொஞ்சம் கலங்கிப்போய்;  தோட்டமா? 
''குறுக்கு வெட்டுப்பாதைகளாலான தோட்டம், ஆம்!'' 
  என் நினைவை ஏதோ கலக்கிவிட்டபடியால் புரிந்துகொள்ள முடியாத நிச்சயதன்மையுடன் கேட்டேன் : ''என் மூதாதையர் ட்ஸ்யுய் பென்னின் தோட்டமா?'' 

''ட்ஸ்யுய் பென் உங்கள் வணக்கத்துக்குரிய மூதாதையரா! உள்ளே வாருங்கள்.'' 
- அந்த ஈரப்பாதை என் சிறு பிராயத்தில் கண்டவற்றைப்போல் குறுக்கும் நெடுக்கும் சென்றது. கீழைத்தேச, மேலைத் தேச புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகத்தை இருவரும் வந்தடைந்தோம். மஞ்சள்பட்டில் வைத்துத் தைக்கப் பட்டிருந்த அந்தப் புத்தகங்களை உடனே அடையாளம் கண்டுகொண்டேன், ஒளிமிக்க அரச வம்சத்தில் வந்த மூன்றாவது பேரரசரால் தொகுக்கப்பட்ட அந்தத் தொலைந்துபோன கலைக் களஞ்சியம் அதுவரை அச்சேறாமலேயே இருந்தது. வெண்கல ஃபீனிக்ஸ் பறவையை அடுத்து ஒரு கிராமஃபோன் தட்டு சுழன்றுகொண்டிருந்தது. ரோஜாப்பூக் கொத்து அடங்கிய ஜாடி ஒன்றையும் அதை அடுத்து எங்கள் கைவினைஞர்கள் பாரசீகத்திலிருந்து பிரதி செய்து வைத்திருந்த குறிப்பிட்ட நீல நிறத்தாலாகிய இன்னொரு ஜாடியையும் கூட நான் அடையாளம் கண்டேன். 
புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்ற அந்த மனிதன் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தான். நான் ஏற்கனவே கூறியபடி உயரமாயிருந்த அவன், செதுக்கினாற்போன்ற முக அம்சங்களைக் கொண்டு, சாம்பல் கண்களையும் சாம்பல் நிற தாடியையும் உடையவனாயிருந்தான். ஒரே சமயத்தில் மதபோதகரைப் போலவும் மாலுமியைப் போன்றும் தோற்றமளிப்பவனாக இருந்தான். சீனதேசக் கலாச்சாரத்தைப் படித்து அறிஞனாவதற்கு முன்பு டியன்ஸ்டின் நகரத்தில் மதபோதகராக இருந்ததாக அப்புறம் என்னிடம் 
அவன் கூறினான். 
_ தரையை ஒட்டிய நீளமான இருக்கையில் இருவரும் அமர்ந்தோம். ஜன்னலுக்கும் சுவரிலிருந்த உயரமான வட்டக் கடிகாரத்துக்கும் முதுகைக் காட்டிக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். என்னைத் துரத்துகிற கேப்டன் ரிச்சர்ட் மாடென் அங்கு வந்துசேர இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்றும் என் திட்டம் செயலாக்கப்படுவதை அதுவரை ஒத்திப்போடுவதில் தவறில்லை என்றும் கணித்துக்கொண்டேன். 
- ('ட்ஸ்யுய் பென்னின் தலைவிதி ஆச்சர்யகரமாக அமைந்து போய் விட்டது,'' ஸ்டீபன் ஆல்பர்ட் , என்னிடம் கூறினான்: ''தன் சொந்த மாநிலத்துக்கு ஆளுநரான அவர், வான சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் வல்லுனராக இருந்தவர். மரபு நூல்களுக்கு ஒயாமல் உரை எழுதுவ தில் தலைசிறந்தவர். அதுங்க ஆட்டத்தில் புலி. கையெழுத்துக் கலையில் (Calligraphy) கரை கண்டவர். இந்தத் துறைகளையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு புத்தகத்தையும் ஒரு புதிர்வழியையும் தயாரிப்பதில் தமது எஞ்சிய வாழ்நாளையெல்லாம் அவர் செலவிட்டார். ஆளுனராக இருந்தவர், அந்தப் பதவியைத் துறந்ததன் மூலம் ஒடுக்குமுறையையும் அதை எதிர்த்த நீதிச்செயல் பாட்டையும் ஒருசேரக் கைவிட்டார். அடிக்கடி தாம் இளைப்பாறிய படுக்கையையும் அனுபவித்துச் சாப்பிட்ட விருந்துகளையும் தமது உலக ஞானத்தையும் ஒருசேரத் துறந்துவிட்டார். பதின்மூன்று வருடங்களாக ஊடுருவிப் பார்க்கப்படக் கூடிய தனிமையான கொட்டகையில் தன்னைத் தாழிட்டுக்கொண்டு அந்தப் புத்தகத்தையும் புதிர் வழியையும் தயாரிக்க முற்பட்டார். அவர் இறந்தபோது விட்டுச் சென்ற குழப்பமான கையெழுத்துப் படிகளைக் கண்டு அவருடைய வாரிசுகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவற்றை எரித்துவிடவே அவருடைய குடும்பத்தார் விரும்பினர் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய உயிலைச் செயலாக்கும் உரிமை பெற்ற ஒருவர் மட்டும் - அவர் ஒரு தாவோயிசத் துறவியோ, பௌத்த பிட்சுவோ நினைக்கிறேன் - அவற்றைப் பதிப்பித்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்." 
 அந்தத் துறவியை இன்றுவரை ட்ஸ்யுய் பென்னின் வாரிசுகளான நாங்கள் திட்டிக்கொண்டிருக்கிறோம். அவற்றைப் பதிப்பித்தது அர்த்தமற்ற செயல். முரண்பட்ட பிரதிகளின் நிச்சயமற்ற ஒரு குவியல்தான் அந்தப் புத்தகம்! ஒருமுறை மட்டுமே அதைப் படித்துப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, மூன்றாம் அத்தியாயத்தில் இறந்துபோகும் நாயகன், நான்காம் அத்தியாயத்தில் உயிருடன் இருப்பான்... இப்படிப்பட்ட புத்தகத்தைத்தான் ட்ஸ்யுய் பென் எழுதினார்! அவர் அமைக்க முற்பட்ட அந்த புதிர்வழியும்கூட, '' 
அரக்குக் கோலமிட்ட உயரமான ஒரு மேஜையைக் காட்டி ஸ்டீபன் ஆல்பர்ட் சொன்னார் : ''இதோ அந்தப் புதிர்வழி!'' 
அட, தந்தத்தில் செய்யப்பட்ட புதிர் வழியா? இதைவிடச் சிறிதாக ஒரு புதிர் வழியை அமைக்க முடியுமா என்ன?'' 
குறியீடுகளான ஒரு புதிர் வழி!'' ஆல்பர்ட் என்னைத் திருத்தினான் : காலத்தினால் அமைந்த கண்ணுக்குத் தெரியாத புதிர் வழி அது. காட்டு மிராண்டித்தனமான பிரிட்டிஷ்காரனாகிய எனக்கு, இந்த ஊடுருவிப் பார்க்கத் தக்க மர்மத்தை விடுவிக்குமாறு விதிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி! இந்தப் புதிர் அமைக்கப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டன. இதன் விவரங்கள் இப்போது யாரிடமும் சிக்கவில்லை. இருந்தாலும் 
ஸ்யய் பென் இந்தப் புதிர் வழியை எப்படி அமைத்திருப்பார் என்பது பற்றி சில உண்மைகளை இன்றும் சொல்லிவிட முடியும். அவற்றை உங்களுக்கு விளக்குகிறேன்.'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்தான் : 'ட்ஸ்யுய் பென் தமக்குள் என்ன சொல்லிக்கொண்டிருப்பார் தெரியுமா - 'இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக  வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறேன்' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்பார். இன்னொரு சமயத்தில், இந்தப் புதிர் வழியை அமைப்பதற்காக வாழ்க்கையிலிருந்து விலகப்போகிறேன்' என்று கூறிக்கொண்டு சென்றிருப்பார். ஆக, புத்தகமும் புதிரும் இருவேறு விஷயங்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். யாருக்குமே புத்தகமும் புதிரும் ஒன்றேதான் என்ற உண்மை புலப்பட்டிருக்காது! 
'ட்ஸ்யுய் பென் தஞ்சம் புகுந்த ஊடுருவிப் பார்க்கத்தக்க தனிமையான வீடானது ஒரு தோட்டத்தின் நடுவில் அமைந்திருப்பது தற்செயலான ஒரு விஷயம் என்று நான் நினைக்கவில்லை. பௌதிக ரீதியான ஒரு புதிர்வழியை அந்தச் சூழல் குறிப்பிடுகின்றது. ட்ஸ்யுய் பென் இறந்தபின்பு அந்தப் புதிர் வழி இருந்த இடத்துக்கு யாருமே வரவில்லை! நாவலின் புதிரான அமைப்பைக் கண்டறிந்த எனக்கு, நாவல்தான் ட்ஸ்யுய் பென்னின் புதிர்வழி என்பது சட்டென்று புலப்பட்டுவிட்டது'' என்ற ஸ்டீபன் ஆல்பர்ட் மேலும் என்னிடம் கூறினான் : 'இத்தகைய முடிவை அடைய இரண்டே இரண்டு சான்றுகள் எனக்குப் போதுமானதாக இருந்தன. ட்ஸ்யுய் பென் அளவிட முடியாத புதிர் வழியொன்றை அமைக்க முற்பட்டார் என்று ஒரு பழங்கதை சொல்வது ஒரு சான்று. அப்புறமாக நான் கண்டுபிடித்த கடிதத்தின் துண்டுப்பகுதி இன்னொரு சான்று.'' 
ஆல்பெர்ட் எழுந்தான். எழுந்து முதுகை எனக்குக் காட்டியவாறு நின்று கொண்டு கறுப்பும் தங்க நிறமும் கலந்த மேஜையின் இழுப்பறைகளைத் திறந்தான். அரக்கு நிறத்தில் ஒரு காலத்தில் இருந்திருந்த காகிதத்தை என் முன் நீட்டினான். இப்போது அக்காகிதம் பிங்க் நிறத்தில் குறுக்குவெட்டாய் பல மடிப்புகளுடன் இருந்தது. ட்ஸ்யுய்பென்னின் பிரபலமான கையெழுத்தை அங்கே கண்டேன். அது பிரபலமானதற்கான காரணமும் எனக்குப் புரிந்தது, புரியாதபோதும் ஆவலுடன் என் ரத்தத்தைக் கொண்ட அந்த மனிதனின் எழுத்தை நிதானமாகப் படித்தேன் : குறுக்கு வெட்டுப் பாதைகளாலான என் தோட்டத்தை பல்வேறு எதிர்காலங்களுக்கு - எல்லா எதிர் காலங்களுக்கும் அல்ல விட்டுச் செல்கிறேன் என்று எழுதியிருந்தது. பேசாமல் காகிதத்தைத் திருப்பிக் கொடுத்தேன். 
-ஆல்பெர்ட் தொடர்ந்து பேசினான்: "இந்தக் கடிதத்தைக் கண்டெடுக்கு முன் எனக்கு ஓர் அடிப்படைக் கேள்வி இருந்தது. ஒரு புத்தகம் அளவிடற்கரியதாய் இருக்குமானால் அதற்கான வழிமுறைகள் எத்தகையவை என்பது தான் அக்கேள்வி. அப்போது அந்தப் புத்தகம் வட்ட வடிவமாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். அதாவது, அதன் கடைசிப் பக்கமும் முதல் பக்கமும் ஒன்றேயானதாக இருக்க வேண்டும். அப்போது தான் நிற்காமல் அப்புத்தகமானது சுற்றிச்சுற்றி வரமுடியும்; தொடர்ந்து கொண்டே செல்ல முடியும்!'' 
- ''இப்படி யோசித்துக் கொண்டிருந்த அந்த இரவில் திடீரென்று ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதை நினைவுக்கு வந்தது. கதையின் நடுவில் வீரஸாத் ராணி ஒரு தவறைச் செய்துவிடுகிறாள். அவள் கதை சொல்லுவதை எழுதிக் கொள்ளும் அடிமையின் மாயக் குழப்பத்தால் இத்தவறு நடந்து விடுகிறது. அதாவது, ராணி ஷீரஸாத் தன்னுடைய கதையையே சொல்ல ஆரம்பித்துவிடுகிறாள். அவளுடைய கதைதான் ஆயிரத்தோரு அரேபிய இரவுகளின் மூலக்கதை. இப்படிச் சொல்வதால் கதை சொல்லும் செயலானது முடிவற்று நீண்டுகொண்டே போகும் அபாயம் ஏற்பட்டுவிடு வதையும் அவள் உணர்கிறாள்.'' 
''இன்னுமொரு கதை சொல்லும் உத்தியையும் நான் யோசித்தேன் : குறிப்பிட்ட ஒரு கதையை ஒவ்வொரு புதிய தலைமுறையினரும் தங்களாலான அளவு திருத்திச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது தங்கள் மூதாதையர்களின் பக்கங்களுடன் ஒரு புதிய அத்தியாயத்தை ஒவ்வொரு புதிய தலைமுறையினரும் சேர்த்து விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இதில் புதிய விஷயம் ஏதோ இருக்கிறது என்றாலும் ட்ஸ்யுய் பென்னின் முரண்பட்ட அத்தியாயங்களுக்கு நிகராக இவ்வுத்தியில் ஏதும் இல்லை என்றே கூறுவேன்!'' 
ஆல்பெர்ட் தொடர்ந்து கூறினான். ''இக்குழப்பங்களுக்கு இடையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீங்கள் இப்போது படித்த கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. நீங்கள் வாசித்த அதே வாக்கியத்தை நான் அலசிப் பார்த்தேன். உடனே எனக்கு ஓர் உண்மை புரிந்து விட்டது: குறுக்கு வெட்டுப் பாதைகளாலான தோட்டம் என்பதுதான் குழப்பமான அந்த நாவல்: பல் வேறு எதிர்காலங்கள் - எல்லா எதிர்காலங்களும் அல்ல 
வாசகம். காலத்தில் வெளியில் (Space) அல்ல -ஏற்பட்டுள் ள குறுக்கு வெட்டுத் தன்மையைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்டு விட்டேன்!! 
- 1 ட்ஸ்யுய் பென்னின் எழுத்துகளைத் திரும்ப வாசித்தவுடன் பின்வரும் கோட்பாடு எனக்கு நிரூபணமாகி விட்டது. ஒவ்வொரு கதையிலும் மனிதனானவன் பல்வேறு சாத்தியப்பாடுகளை எதிர் கொள்கிறான்; அவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் தேர்ந்து கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறான் 
புரிந்துகொள்ள முடியாத, ஆழங்காணவியலாத ட்ஸ்யுய் பென்னின் நாவலில் அதே மனிதன் அத்தனை சாத்தியப்பாடுகளையும் ஒருசேரத் தேர்வு செய்து கொண்டு விடுகிறான். ஆக, பல்வேறு வகைப்பட்ட எதிர்காலங்களை அம்மனிதன் உருவாக்குகிறான் இவ்வெதிர்காலங்கள் ஒன்றையொன்று குறுக்காக வெட்டிக் கொண்டு பல்கிப் பெருகுகின்றன.'' 
* ஆக, ட்ஸ்யுய் பென்னின் நாவலில் காணப்படும் முரண்பாடுகள் இப்போது சட்டென்று நமக்கு விளங்கிவிடுகின்றன. ஃபாங் என்பவனிடம் ஒரு ரகசியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். யாரோ ஒர் அந்நியன் அறைக்கதவைத் தட்டுகிறான்; ஃபாங் அவனைக் கொல்வது என்று முடி வெடுக்கிறான்! இந்தக் கதைக்கு பல்வேறு முடிவுகள் சாத்தியமாகின்றன. ஒருவேளை, ஃபாங் அறைக்குள் நுழைபவனைக் கொல்லலாம்; அல்லது அறைக்குள் வருபவன் ஃபாங்கைக் கொல்லலாம்; இல்லையென்றால் இரு வருமே தப்பித்துக் கொண்டுவிடலாம்; இருவருமே செத்தும் போய்விடலாம். இத்யாதியாக வேறு முடிவுகளும் ஏற்பட்டுவிடலாம். 
ட்ஸ்யுய் பென்னின் நாவலில் எல்லா சாத்தியப்பாடுகளும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. இவற்றில் ஒவ்வொரு சாத்தியப்பாடும் இதர சாத்தியப் பாடுகளுடன் குறுக்கு வெட்டாகச் செல்கின்றன! சில சமயங்களில் இந்து நாவல் புதிரின் பாதைகள் சங்கமிக்கின்றன என்பதையும் பார்க்கலாம்: உதாரணமாக, நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா? நமக பொதுவான ஒர் இறந்தகாலத்தில் நீங்கள் என் எதிரி. இன்னொரு இறந்தகால சாத்தியப்பாட்டில் நீங்கள் என் நண்பன். இப்படி நான் தவிர்க்க இயலாதபடி சொல்வதை நீங்கள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வீர்கள் என் நாவலின் இன்னும் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்தான். விளக்கொளியின் துல் வட்டத்தில் அவன் முகம் வயதாகிப் போய் இருந்தது தெரிந்தது. அதே சமயம் அந்த முகம் கலங்காமலும் அமரத் தன்மையுடனும் இருந்ததையும் கவனித்துக் கொண்டேன். நாவலின் குறிப்பிட்ட ஓர் அத்தியாயத்தின் இருவேறு சாத்தியப்பாடுகளை அவன் நிதானமாக வாசித்துக்காட்டினான். முதல் சாத்தியப் பாட்டில், பாலைவனமாகக் கிடக்கும் மலைப்பகுதி ஒன்றினூடே ராணுவம் முன்னேறிச் செல்கிறது; பாறைகளும் அவற்றின் நிழல்களும் மனித யத்தனங்களையும் தம் உயிர்கள் மீது அவர்கள் வைத்திருந்த ஆசையையும் என்று  தில்லாக தாக்கி அவர்களை வெற்றியடையச் செய்கிறது. இரண்டாவது சாத் தியப்பாட்டில், அதே ராணுவமான து கேளிக்கை விருந்து நடந்து கொண்டிருக்கும் அரண்மனையின் தளிடே அணிவகு), தும் செல்கிறது. விருதுநகர் தொடர்ச்சியாகவே நடக்கும் அந்த யுத்தத் தலம் அந்த ராணுவம் என்று பெறுகிறது. இந்த இரண்டு பழங்காலக் கதைகளையும் மிக்சி, மதுப்புடன் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அக்கதைகளை எழுதியவர்கள் அது ரத்தத்தைப் பகிர்ந்து கொண்ட என் மூதாதையர்கள், என் றாலும் இவற்றை மீட்டு எனக்கு வாசித்துக் காட்டுபவன் வேறொரு போர்சைச் சேர்ந்த ஒரு) மனிதன் என்ற உண்மை , இக்கதைகளின் மீதான சுவாரசியத்தை அதிகப் படுத்தியது. அதுவும் மேற்கத்திய உலகின் ஏதோ ஒரு தீவில் எங்கோ ஓரிடத்தில் பயங்கரமான சாகசம் ஒன்றை நிறைவேற்றும் கட்டத்தில் இக்கதைகளை நான் கேட்க நேர்ந்தது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைத்தேன் , கதைகளின் இறுதி வார்த்தைகள் ஒவ்வொரு சாத்தியப்பாட்டிலும் ரகசியம் கட்டளையாக ஒலித்ததை நினைவு கூர்கிறேன் : நாயகர்களைப்போல் அவர்கள் சண்டையிட்டபோது, அவர்களின் போற்றத் தக்க இதயங்கள் அமைதியாகவும் வாள்கள் வன்முறை - கொண்டும் இயங்கின. சாகவும் கொல்லவும் அவர்கள் எப்போதோ தயாராகி விட்டிருந்தார்கள். 
இதைக்கேட்ட கணத்திலிருந்து என்னைச் சுற்றியும் என் கறுத்த உட லுள்ளும் புலப்படாத, அளக்கவியலாத குமைச்சல் ஏற்பட்டது. அந்தக் குமைச்சல், விலகிச்சென்று இறுதியில் ஒன்றாகக் கலக்கும் இரு ராணுவ அணிகளின் குமைச்சல் அல்ல; மாறாக, ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஆனால் பிடிபடாத, கலக்கம் ஒன்றின் அறிகுறிதான் அந்தக் குமைச்சல், 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்து கூறினான்: ''உங்கள் மூதாதையரான ட்ஸ்யுய் பென் ஏதோ சோம்பேறித்தனமாக இந்த சாத்தியப்பாடுகளை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. உரைவீச்சின் பரிசோதனைக்காக பதின் மூன்று வருடங்களாக சும்மா செலவழித்தார் என்று நம்ப நான் தயாராயில்லை. ட்ஸ்யுய் பென் எழுதிக் கொண் டிருந்த அன்று உங்கள் நாட்டில் நாவல் என்பது கீழ்த்தரமான எனர் க்ய வடிவமாக, ஏன் வெறுக்கத்தக்க ஓர் இலக்கிய வடிவமாகவே கருதப்பட்டது. ஆனால் ட்ஸ்யுய் பென்னோ பிரமாதமான நாவல் - ஆசிரியர்; அதே சமயத்வல் மெத்தவும் எழுதப்படிக்க தெரிந்த அவர் நாவல் - ஆசிரியன் என்ப 3)த விடவம். மேலான வர் அந்தஸ்தை தமக்கு விரைந்தார். அவருடைய சகாக்கள் சொன்ன விவரங்களிலிருந்தும் அவருடைய வாழ்க்கையின் சில அம்சங்களிலிருந்தும், அவருக்கிருந்த மாயாவாத, மாயாஜால விழைவுகள் நிரூபணமாகியுள்ளன. 

தத்துவார்த்தப் பிரச்சினைகள் அவருடைய நாவலைப் பெருமளவு ஆக்கிர மித்திருந்தன. அப்பிரச்சினைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவே இன்று புரிகிறது. அதுவும் காலம் என்கிற நீசத்தனமான தத்துவார்த்தைப் பிரச்சினையே அவரை வாட்டி வதைத்த பிரச்னைகளில் தலையாயதாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால், குறுக்கு வெட்டுப் பாதைகளிலான தோட்டம் நாவலின் பக்கங்களில் ஒருமுறை கூட பேசப்படாத பிரச்னை இதுதான் எனலாம்! காலம் என்பதைக் குறிப்பிடும் எந்தவொரு வார்த்தையையும் ட்ஸ்யுப் பென் இந்த நாவலில் பயன்படுத்தவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வேண்டுமென்றே காலத்தை ட்ஸ்யுய் பென் விட்டு விடுவதற்கான விளக்கம் ஏதேனும் உள்ளதா என்று யோசித்துப் பார்த்தேன். உங்களால் விளக்க முடியுமா?'' 
ஏகப்பட்ட பதில்களைச் சொல்லிப் பார்த்தேன். அத்தனையுமே போதுமான பதில்களாக இல்லை. கடைசியில் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னிடம் கேட்டான் : சதுரங்கம் என்ற பதிலைக் கொண்டுள்ள புதிரின் ஒரே விலக்கப்பட்டுள்ள வார்த்தை என்ன என்று உன்னால் கூற முடியுமா?'' 
ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவனிடம் சொன்னேன் : "சதுரங்கம் என்பதுதான் அந்த ஒரே விலக்கப்பட்ட வார்த்தை!" 
சரியான பதில்!'' என்று என்னைப் பாராட்டிய ஸ்டீபன் ஆல்பர்ட் -- -- து க நி ன ான் : "குறுக்கு வெட்டுப் பாதைகளாலான கோட்டம் என்பது ஒரு பெரும்புதிர், அல்லது புதிர்த் கதை. அதன் சூட்சுமப் பொருளானது காலம். காலம் என்பது சூட்சுமப் பொருளாக இருப்பதால் தான் அந்த வார்த்தை கதையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இது உனக்குப் புரியம் என்று நினைக்கிறேன்! உதாரணமாக, எப்போதும் என் வார்த்தையை விலக்கி வைத்துவிட்டு அர்த்தமற்ற உருவகங்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறோம் என்றால், எப்போதும் என் நாம் அழுத்திச் சொல்கிறோம் என்று அர்த்தம், களைப்படையாக தமது நாவலின் அலைச்சல்கள் ஒவ்வொன்றிலும் ட்ஸ்யுய்பென் - வளைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறை இது தான். புரிகிறதா? 
ஸ்பன் ஆல்பர்ட் தொடர்ந்தான் : '' நூற்றுக்கணக்கான கைப்பிரதி களை நான் ஒப்புநோக்கிப் பார்த்திருக்கிேறன். பிரதி செய்தவர்களின் தப்பு 
தவறுதளையும் திருத்தியிருக்கிறேன். எனவே, நாவல் என்ற இக்குழப்பத்தின் அடிப்படைத் திட்டத்தைப் புரிந்துகொண்டு விட்டத்தாகவெ நினைக்கிறேன். இந்த நாவலின் அதி ஒழுங்கைக் கண்டறிந்துவிட்டதாகவே நம்புகிறேன். அதை மீண்டும் நிறுவிவிட்டதாகவே எண்ணுகிறேன். இந்த முழு நாவலையும் மொழிபெயர்த்துவிட்ட எனக்கு, இதில் ஒருமுறைகூட கா லம் என்ற வார்த்தை இல்லை என்பதும் புரிந்துவிட்டது. இந்த வார்த்தை இல்லாததற்கான விளக்கத்தை நான் சொல்லவா?'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் இன்னும் சொன்னான் : இந்த விளக்கம் ரொம்ப சுலபமானது தான். குறுக்கு வெட்டுப் பாதைகளாலான தோட்டம் என்பது, பிரபஞ்சம் பற்றிய முடிவற்ற -அதே சமயம் பொய்யற்ற பிம்பம். அத்தகையதொரு பிம்பத்தைத்தான் ட்ஸ்யுய்பென் கற்பனை செய்து வைத்திருந்தார். பிரிட்டிஷ் இயற்பியல்வாதி ஐஸக் நியூட்டனும் ஜெர்மானியத் தத்துவவாதி ஆர்தர் ஷோப்பன் ஹீரும் நினைத்தது போல உங்கள் மூதாதையர் காலம் என்பது ஒழுங்கானது, நிச்சயமானது என்று நம்பவில்லை! காலங்களின் எண்ணற்ற அணி வரிசைகளை, குறுக்கேயும் இணையாகவும் வெட்டியும் பிரிந்தும் செல்லும் காலங்களின் பாதைகளை அவர் கற்பனை செய்து வைத்து இருந்தார். அவர் கண்டுகொண்ட காலச்சிடுக்குகளில் காலங்கள் ஒன்றை யொன்று வெட்டும்; பிரியும்; நூற்றாண்டுகளாக ஒன்றிருப்பது தெரியாமல் மற்றது கழியும்? எல்லாவித சாத்தியப்பாடுகளையும் காலம் தழுவும். இத்தகைய காலங்களில் பெரும்பாலானவற்றில் நாம் இருப்பதில்லை. சில நீங்கள் இருக்கிறீர்கள்; நானிருப்பதில்லை. சிலதில் நான் இருக்கிறேன்; நீங்கள் இருப்பதில்லை . சில தில் இருவரும் இருக்கிறோம். சிலதில் இருவரும் இல்லை . புரிகிறதா?'' 
பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம் ஸ்டீ5பன் ஆல்பர்ட் இன்னும் கூறினான் : ' 'விதி எனக்கு நல்கியிருக்கும் நமது இப்போதைய கதையில், நீங்கள் இதோ என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். சரிதானே: இதே கதையின் இன்னொரு சாத்தியப்பாட்டில், தோட்டத்தைக் கடக்கும்போது செத்துவிழுந்துள்ள என்னைக் கவனிக்கிறீர்சுள், வேறொரு சாத்தியப்பாட்டில் இதே வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தாலும் என் இருப்பே ஒரு தவறாகிவிடுகிறது; அதாவ து, அங்கே நான் ஒரு பேய்...'' 
கதையின் ஒவ்வொரு சாத்தியப்பாட்டுக்கும் நான் உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்'' என்று நடுங்கும் குரலில் அவனிடம் நான் கூறினேன்: மேலும் ட்ஸ்யுய்பென்னின் தோட்டத்தை மீட்டுக் கொடுத்ததற்காக நான் உங்களை மிகவும் மதிக்கிறேன்,'' 

புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னிடம் சொன்னான்: " " நன்றி செலுத்துதல் என்பது கதையின் ஏதோ ஒரு சாத்தியப்பாட்டில் சாத்தியப் படாது. ஏனென்றால், காலம் என்பது எண்ணிலடங்காத எதிர்காலங்களை நோக்கி குறுக்குவெட்டாகச் செல்கிறது என்றாலும், அந்த எதிர் காலங்களின் ஒன்றில் நான் உனது எதிரி, தெரியுமா?'' 
மீண்டும் ஏற்கனவே சொல்லப்பட்ட குமைச்சல் என்னைத் தாக்கியது - வீட்டைச் சுற்றியிருந்த ஈரத் தோட்டம் கண்ணுக்குப் புலப்படாத ஏகப்பட்ட பேரால் அளவற்று நிறைந்திருந்ததாக உணர்ந்தேன். அவர்கள் வேறு. யாருமல்ல, ஸ்டீபன் ஆல்பர்ட்டும் நானும்தான் காலத்தின் பல்வேறு பரிமாணங்களில் ரகசியமாக, சுறுசுறுப்புடன் உலவிக்கொண்டிருந்தோம். கண்களை உயர்த்திப் பார்த்தவுடன் அந்த இறுகலான தீக்கனவு கரைந்து போனது. அந்தக் கறுப்பு மஞ்சள் தோட்டத்தில் ஒரே ஒருவன் தான் நின்றிருந்தான். ஆனால் அவன் சிலைபோல வலிவுடன் இருந்தான். இருந்த பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவன் தான் கேப்டன் ரிச்சர்ட் மாடென். 
''எதிர்காலம் என்பது ஏற்கனவே இருக்கும் ஒன்றுதான்'' என்று அப்போது ஸ்டீபன் ஆல்பர்ட்டுக்கு நான் பதில் சொன்னேன் : 'நான் உன் நண்பன்தான்; எதிரியில்லை. அந்தக் கடிதத்தை இன்னொரு முறை நான் பார்க்க முடியுமா?'' 
ஆல்பர்ட் எழுந்தான். உயரமான அவன் மேஜையின் இழுப்பறையைத் திறந்தான். அப்போது அவன் முதுகு என்னைச் சந்தித்தது. கைத் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்த நான் கவனமாகச் சுட்டேன். சத்தம் போடாமல் ஆல்பர்ட் உடனே விழுந்தான். அவன் சாவு மின்னலென அந்த ஒரு கணத்தில் நிகழ்ந்தது. அதற்கப்புறம் நடந்தவற்றுக்கு அர்த்தமோ முக்கியத்துவமோ, கிடையாது. கேப்டன் ரிச்சர்ட் மாடென் கதவை உடைத்துக் கொண்டுவந்து என்னைக் கைது செய்தான். தூக்கிலிடுவதற்காக என்னைச் சபித்திருக்கிறார்கள் ஆனால் மிக நீசத்தனமாக நான் வெற்றியடைந்துவிட்டிருந்தேன் : எந்த நகரம் தாக்கப்படவேண்டுமோ அந்த நகரத்தின் ரகசியப் பெயரை பெர்லினுக்குத் தெரியுமாறு செய்துவிட்டேன் நான். அந்த நகரம் நேற்றுத்தான் குண்டு வீசி அழிக்கப்பட்டதை செய்திக் தாளில் படித்துத் தெரிந்து கொண்டேன். அதேபோல் இன்னொரு செய்திக்தாளில் சீன தேசத்தை ஆய்வு செய்த அறிஞர் ஸ்டீபன் ஆல்பர்ட்டை யு சுன் என்ற யாரோ ஓர் அந்நியன் சுட்டுக் கொன்ற மர்மத்தைப் படித்துக் கொண்டேன். என்  மேலதிகாரி இந்த மர்மத்தைப் புரிந்துகொண்டு விட்டிருந்தார். 
ஆல்பர்ட் என்ற நகரத்தின் பெயரை-யுத்தத்தின் இரைச்சலையும் மீறி எப்படியாவது தெரிவித்துவிடவேண்டும் என்ற என் பிரச்சனையை அவர் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டிருந்தார். அதனால்தான் அதே பெயர் கொண்ட ஒரு மனிதனைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. ஆனால் என்னுடைய அளவற்ற களைப்பையும் பிராயச்சித்த உணர்வையும் பற்றி அவருக்கெங்கே தெரியப்போகிறது. 0

No comments:

Post a Comment