தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, December 15, 2016

நேசத்திற்குத் தன் மனதை முழுதாக ... பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' ~

Karthigai Pandian M reacted to this.

Add Friend


த.ராஜன் shared Elangovan Muthiah's photo.
Yesterday at 09:04 ·



~ நேசத்திற்குத் தன் மனதை முழுதாக ஒப்புக் கொடுத்துவிட்டு பின் மீண்டெழும் வழியையும் தொலைத்துவிட்ட ஒருவனைப் பற்றிய கதைதான் பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' ~


Elangovan Muthiah with த.ராஜன்.
Yesterday at 08:16 ·



மழை கொட்டித் தீர்த்த ஒரு விடுமுறை நாளின் மதியத்தில் அறை வாசலின் படிக்களில் அமர்ந்திருந்தேன். அலை பேசி வழி முடிவின்றி நீண்டு கொண்டிருந்தது ஒரு உரையாடல். அரை மணிக்கொரு முறை அறைக்குள்ளிருந்து வெளிவந்து என் முகம் பார்த்துக் கண்களால் கேள்வி கேட்ட நண்பனுக்கு உதடுகளைப் பிதுக்கி, இன்னும் இல்லை எனப் பதிலளித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவு செல்லும் பாதையைத் தீர்மானித்துக் கொண்டிருந்தது அந்த அழைப்பு.


பேசி முடித்து அலைபேசியை அணைத்து வைத்த போது, என் முகம் பார்த்து, தோல்வியா? என்பது போல ஆறுதலாய் அணைத்துக் கொள்ள வந்தவனிடம், ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின், அந்த உறவு நான் எதிர்பார்த்த திசையிலேயே நகர்வதைக் கூறினேன். பிறகு ஏன்? என்பதுபோல ஆச்சரியமாய்ப் பார்த்தவனிடம், உறவுகளின் ஆரம்பத்தில் இருக்கும் உச்ச கட்ட மகிழ்ச்சி, அடுத்தடுத்து கொண்டு சென்று நிறுத்தும் முட்டுச் சந்துகளையும், அதனால் விளையும் மன, உறவுச் சிக்கல்களையும் விவரித்த போது, ”அப்ப, நீ வேணாம்னு சொல்லிட்டியா?” என்றான் வேகமாக.

“வேணாம்னு சொல்ல எனக்கு என்ன லூஸாடா பிடிச்சிருக்கு?” என்றபோது, வித்தியாசமாய்ப் பார்த்துக்கொண்டே தலையிலடித்துக் கொண்டான். நான் எப்பொழுதுமே அப்படித்தான்....

உறவுகளின் ஆரம்பக் கட்ட கிளர்ச்சிகள் மனதின் அடியாழத்திற்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்கெடுக்க வைத்தாலும், எப்பொழுதும் அடுத்த கட்டத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கும் மனவார்ப்பை வளர்த்துக் கொண்டிருந்ததால், எதையும், யாரையும் எப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியதில்லை. ஒரு வகையில் உறவுகள் பிரிந்து செல்லும் போதும் இதே மன வார்ப்புதான் நான் முற்றிலும் உடைந்து போகாமல், என் மனதையும், என்னைப் பிரிந்து செல்ல விழையும் மனதையும் புண்படுத்திப் பார்க்காமல், அதே நேரம் சுயத்தையும் இழக்காமல் நிகழ்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் கொடுத்திருக்கிறது. இம்மனநிலையே என் வரமும் சாபமுமாய் இன்றுவரை கூடவே இருக்கிறது.

விதிகள் எழுதப்படும்போதே விலக்குகளும் எழுதப்பட்டுவிடுவதுதான் வாழ்வெனும் விளையாட்டின் சுவாரசியம் இல்லையா? வாழ்வின் எதேச்சையான ஒரு திருப்பத்தில் சட்டென்று தோன்றி, எதிர்பாரா உயரங்களுக்கு கைப் பிடித்துக் கூட்டிச் சென்று, உறவுகளின் உச்ச உயரத்தின் மகிழ்வில் மனம் மூழ்கித் திளைத்திருந்த போது, திடீரெனத் தரையில் இறக்கிவிட்டுப் பிரிந்து சென்றது.... நான் வாசிக்கக் கிடைத்த தேவதைக் கதையில் நடந்ததாக இருந்திருக்கலாம்.

ஆனால் ரத்தமும் சதையுமாக, கண்முன்னால் வழியனுப்பவது ஒன்றைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றிருந்த ஒரு அதிகாலைப் பொழுது, மொத்தமாய் அதுவரை சேர்த்து வைத்திருந்த அகங்காரம் மொத்தத்தையும் அழித்து விட்டே விடிந்தது.

மீண்டெழுவது என்றெல்லாம் ஒன்றுமில்லை. நேசிக்கும் மனதிற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தபின், வீழ்வதும், வீழ்த்தப்படுவதும் தோல்வியா என்ன?

அப்படி, நேசத்திற்குத் தன் மனதை முழுதாக ஒப்புக் கொடுத்தவிட்டுப் பின் மீண்டெழும் வழியையும் தொலைத்துவிட்ட ஒருவனைப் பற்றிய கதைதான் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி.

அதிர்ஷ்டவசமாய், பிரான்சிஸ் சந்தன பாண்டியிடமிருந்து ஒரு சிறு புள்ளியில் மட்டுமே வேறு பட்டுத் தப்பிப் பிழைத்ததால் இதை இங்கு எழுதிக் கொண்டிருக்கும் நபர் நானாகவும் வாசிப்பது நீங்களாகவும் இருக்கிறோம். இல்லையேல் இங்கு எல்லாருமே சந்தன பாண்டிகள் தான்.

மனம் மயங்கி, பின் மதி மயங்கிய சந்தனப் பாண்டி சுற்றிச் சுழற்றிவிட்டிருக்கும் சுழலுக்குள்ளிருந்து வெளிவரவே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் போல. செய்யவும் வேண்டுமா? எனக் கேட்க வைப்பதுதான் கன்னியின் சாதனை.

என்னைப் பொருத்த வரை, தமிழின் முக்கியமான, கொண்டாடப்பட வேண்டிய, ஆனால் அதிகம் கவனிக்கப் படாத ஒரு நாவலெனக் கன்னியைச் சொல்லுவேன். ஆழ்ந்த வாசிப்பும், மீள் வாசிப்பும் தேவைப்படும் அளவிற்குச் செறிவான எழுத்தில் அசரடிக்கிறது கன்னி.

A mesmerizing story. Don't miss it.