தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, December 18, 2016

நாகம்மாள் - ஆர். சண்முகசுந்தரம் (கருத்துரை) தி க. சிவசங்கரன்

https://ta.wikisource.org/wiki/Page:தமிழ்_நாவல்கள்-நாவல்_விழாக்_கருத்துரைகள்.pdf/72


o
ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -        தி க. சிவசங்கரன் 

ஆர். ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் பிரபல மான சமூக நாவல் அல்ல! ஆனால், மிகுந்த இலக்கிய நய முள்ள நாவல்; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மணிக் கொடி எழுத்தாளரின் படைப்பு.

 27 அத்தியாயங்களும், 124 பக்கங்களுமுள்ள நாகம் மாள்' ஒரு தத்ரூபமான கிராமிய இலக்கியம். அதனல் தான் தமிழ்ப் பெருமக்களின் இதயத்திலே இடம் பிடிக்க, அதற்கு இத்தனை காலம் போலும்! 1941-இல் வெளிவந்த இந்நாவலை, நான் ஒரு சிறிய இதிகாசமாகவே (Minor clasic) கருதுகிறேன். 

கடந்த கால் நூற்ருண்டுக் காலத்திய தமிழ் நாவல்களில், ஒரு தலைசிறந்த படைப்பாக மதிக்கிறேன். - - 

நான் இந்த முடிவுக்கு எப்படி வந்தேன் என்பதை விளக்க வேண்டுமல்லவா? என் உரையை, கதை-கட்டுக்கோப்பு-நடை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். -
 கதை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார ஒளி பரவாத கோவை மாவட்டச் சிற்றுார் ஒன்றிலே, கதை நிகழ் கிறது.


கொங்குச் சீமையிலே சிவியார் பாளையம் என்ற சிற்றுார். அங்கு சின்னப்பன் குடும்பமும் மிகச் சிறியது தான்.

சின்னப்பன், அவன் மனைவி ராமாயி, அண்ணி நாகம் மாள், அவளது குழந்தை முத்தாயா ஆகிய நால்வரே அந்த விவசாயக் குடும்ப உறுப்பினர்கள்.

நாகம்மாளின் கணவன், சில ஆண்டுகளுக்கு முன்பு, உடம்பிலே வாணம்பட்டு இறந்து விடுகிருன். அன்று முதல், தானே குடும்பத் தலைவியாக இருந்து, எல்லாக் காரி யங்களையும் கவனித்து வருகிருள் நாகம்மாள், ! -


எனினும், கடந்த ஒராண்டாகவே அவள் நெஞ்சில் பிரி வினை எண்ணம் முளைவிடத் தொடங்கிவிட்டது. இதற்குக் காரணம், சின்னப்பனின் மாமியார் காளியம்மாளும், அவ் வூரிலுள்ள எதிர்க்கட்சியும்தான்.

அக்கிராமத்தில் இரு கட்சிகள். சின்னப்பனும் அவனது. உறவுக்காரரும் ஒரு கட்சி, மணியக்கார ராமசாமிக் கவுண் டரும், அவரது மந்திரிப் பிரதானிகளும், அடியாட்களும் மற் ருெரு கட்சி.

இந்தக் கட்சி விவகாரம், முந்திய தலைமுறையில்." துவங்கியது. அன்று சின்னப்பனின் தத்தை ராமசாமி கவுண்டர்தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சா யத்துச் செய்வார். இன்றைய மணியக்காரரின் தந்தையான அன்றைய மணியக்காரருக்கு அது பிடிக்கவில்லை. எனவே பொய்க் கேஸ்கள், அபராதங்கள். குட்டிக் கலவரங்கள் இப் படியாகப் பகைவளர்ந்தது.

73 நாளாவட்டத்தில் சின்னப்பனின் கை இளைக்க, மணியக் காரரின் கை வலுக்கிறது.

இந்நிலையைக் கண்டு அஞ்சி, தன் மகள் ராமாயியையும், மருமகன் சின்னப்பனேயும் தன் வீட்டோடு குடியேற்ற விரும் புகிருள், காளியம்மாள். அவள் மருமகனின் நிலத்தை விற்க முனைகிருள்; ஆனல், குடும்பத் தலைவியான நாகம்மா ளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டவில்லை.

 ஒரு நாள் காளியம்மாள் தனது அந்தரங்கத்தைப் பொது மனிதன்போல் சின்னப்பன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கெட்டியப்பனிடம் கூறுகிருள். அவன் அதை மணியக்கார ரிடம் கூற, மணியக்காரரும், அவரது மந்திரி நாராயண முதலியும் கெட்டியப்பனைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்தி, சின்னப்பன் குடும்பத்தைச் சீரழிக்கத் திட்டமிடு கின்றனர்.

கெட்டியப்பன், அந்தக் கிராமத்துப் போக்கிரி. குடி யிலும் தீனியிலும் சொத்து அனைத்தையும் தீர்த்துவிட்டு, மதயானைபோல் வாழ்பவன்.

இந்த முரடன்மீது இப்போது நாகம்மாளுக்கு ஒரு அலாதி அபிமானம். அவனது இருப்பிடம் சென்று, பண்டம் பலகாரங்களைக் கொடுத்து, குடும்பப் பிரச்னைகளை அலசு கிருள்.

கெட்டியப்பன், பாகப்பிரிவினைக்காகச் சண்டை போடும் படி, நாகம்மாளிடம் உருவேற்றுகிருன். மணியக்காரரும், அவரது மந்திரியும் தமது மகத்தான ஆதரவைத் தெரிவிக் கின்றனர்; நேரடி நடவடிக்கைக்குத் தூண்டுகின்றனர்.

அவர்களது திட்டம், மிகப் பயங்கரமானது. முதலில் சின்னப்பன் குடும்பத்தைப் பிளந்து, பரம்பரைப் பகையைத் தீர்த்துக் கொள்வது; பின்னர், நாகம்மாளின் நிலத்தை மெல்ல அபகரித்துக் கொள்வது. அதாவது, பறவையைக் நா-5

74 கூண்டிலிருந்து விடுவிக்கும் பாவனையில், அதன் இறக்கைகளை நறுக்கிக் கொல்வது!...

ஆணவம், ஆத்திரம், அவநம்பிக்கை, துர்ப்போதனை ஆகியவற்றுக்கு இரையான நாகம்மாள், ஒரு நாள் சின்னப் பனிடம் பங்கைக் கேட்கிருள்.

 ஒஹோ, பங்கு வேணுமா? செரி. எந்தக் காமாட்டிப் பயெ கேக்கச் சொன்னனே அவனெ வரச்சொல்’’ என்று ஒரே போடாகப் போட்டு விடுகிருன், அவன்.

நாகம்மாள் கப்சிப்பென அடங்கிவிட்டாள். ఆఅత சல்லியர்களும், சகுனிகளும் அவளை விடவில்லை. பிரிவினை வெறியை மூட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

ஒரு நாள் மைத்துனனின் மரணச் சேதி வருகிறது. சின்னபயன் தன் மனைவியுடன் மாமியார் வீடு செல்கிருன், இந்த நல்வாய்ப்பை "மும்மூர்த்தி'களும் பயன்படுத்திக் கொண்டு, சின்னப்பன் வீட்டிலே விருந்துண்டு, நாகம்மா ளின் கலக்கத்தைத் தெளிவிக்கின்றனர். அவள் இதயத் திலே பிரிவினைப்பேய் ஓயாது கூத்தாடுகிறது! -

சின்னப்பன் ஊர் திரும்பியதும். நாகம்மாள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிருள். அதாவது, அந்தக் குடும் பத்தையும் தனது குழந்தையையும் விட்டுப் பிரிந்து, மணியக் காரர் வீட்டில் குடியேறி விடுகிருள்! .

மணியக்காரர் அவளை வீடு திரும்பச் சொல்கிரு.ர்.

நா அந்தப் பக்கம் தலெ வெச்சுப் படுக்க மாட்டே அவர்கள் கொளமரத்தைத் தெரிந்த பிற்பாடு, அங்கு இருக்க லாமா? உங்களெநா நம்பினே. நீங்க எப்பிடி உட்டாலும் சரி. என்று பிடிவாதமாகப் பேசுகிருள், நாகம்மாள்.
மணியக்காரர் குழுவுக்குக் கொண்டாட்டமாகி விடு கிறது ! -

፳5 நாளேக் காலையில் ஏற்றம் இறைக்கச் சின்னப்பன் வருவான். அப்போது நீ அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும். விவகாரம் வரும்போது, அக்கம்பக்கத்தாருடன் சென்று நாம் பஞ்சாயத்துச் செய்யவேண்டும்’ ’ என்று மந்திரி முதலி யார் யோசனை சொல்ல, அனைவருக்கும் திருப்தி ஏற்படு கிறது.

- மறுநாள் காலையில், சின்னப்பன் தோட்டத்துக்கு ஏற்றம் இறைக்க வரும்போது, நாகம்மாள் அப்படியே செய்து விடுகிருள் !

'உங் கையெக் காலெ முறுச்சிருப்பே; எனக்கு வந்த கோவத்தை அடக்கீட்டே ஓடிப் போ, என் முன்னலே நிக்காதே!' என்று உறுமுகிருன் சின்னப்பன்.

என்ன? நான ஒடறது? என் தலே துண்டாத்தாம் போவட்டுமே!’ என்ருள் நாகமாம்ள்.

அவ்வளவு தைர்யமா உனக்கு அப்படீன இன்னக்கி அடிதடிக்கினே ஆளுகளயும் வரச் சொல்லி இருக்கிறயா? ஒரு கை பாத்துட்டுத்தாம் போக உத்தேசமா?' என்று சீறு கிருன், சின்னப்பன்.

அச்சமயம் கெட்டியப்பனும், அவனது நண்பன் செங்காளியும் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, கையில் தடி யுடன் நாகம்மாளின் துணைக்கு வருகின்றனர்.

சின்னப்பன் கடுங்கோபத்தோடு அவர்களை வைகிருன்.

ஆத்திரமுற்ற கெட்டியப்பன், கைத்தடியால் அவன் மண்டையில் ஓங்கி அறைந்து விடுகிருன் கைத்தடி சின்ன பின்னமாக முறிகிறது. -

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் சின்னப்பனின் உயிர் பிரிகிறது. குழந்தை முத்தாயா கீச்செனக் கத்தி, ராமாயியைத் தழுவுகிறது; அவள் ஹோவெனக் கதறிக் கொண்டு கணவன்மேல் விழுகிருள். . * × -



76 இதுதான் கதை. காதல் நிகழ்ச்சிகளோ, கிளர்ச்சி பூட்டும் சம்பவங்களோ இல்லாத இந்தக் கதையை வைத்துக் கொண்டு, ஒர் அருமையான நாவலை எழுதியிருக்கிருர், ஆர். ஷண்முக சுந்தரம். . .

 . . . . . ஆர்ப்பாட்டமில்லாத கதைப் போக்கு உயிர்த் துடிப் புள்ள பாத்திரப் படைப்பு: தெள்ளத் தெளிந்த சொல் லாட்சி-இவையே இந்நாவலின் சிறப்பியல்புகள்.

 பாத்திரப் படைப்பு 

இந்நாவலின் பாத்திரப் படைப்பைச் சற்று நோக்கு வோம். - . . . 

நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, முத்தாயா, காளி யம்மாள், கெட்டியப்பன், மணியக்கார ராமசாமிக் கவுண்டர், மந்திரி நாராயண முதலி ஆகியோர் இந் நாவ வின் முக்கிய பாத்திரங்கள். இவர்களின் ஒரு சிலரை யேனும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். - 

நாகம்மாளே எடுத்துக் கொள்வோம். கதாநாயகி யான அவள், இந் நாவலில் 17 அத்தியாயங்களில் நடமாடு 

முதல் அத்தியாயத்திலேயே வெங்கமேட்டுச் சந்தை யிலிருந்து, மாலையில் வீடு திரும்பும் பெண்களுடன் நாம் அவளைச் சந்திக்கிருேம். அப்பொழுது ஆசிரியர் எழுது கிருர்: - - - ਾਂ 

எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது. அப்போது மணியடித்தது போல, ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் கப்பென்று பேச்சை விட்டனர். - : - 

நா எல்லா வாங்கியும் ஒண்ணெ மறந்திட்டேனே!" என்று கணிரெனும் ஒரு குரல் எழுந்தது. ‘. . . . . . . . . .


7 7 'யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது? பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான்? இந்தப் பெண் நாகம்மாள், கணவன் இறப்ப தற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே ஒரு ராணி' போலவே நடந்து வந்திருக்கிருளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும் என்னவென்றே அவள் அறிய மாட்டாளென்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.' என்று நாகம்மாளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிருர் ஆசிரியர். (பக்கம் 7)

 ராணியைப்போல் கர்வங்கொண்ட நா கம்மாள். சின்னப்பனின் மனைவி ராமாயியை அதட்டி அதிகாரம் செய்கிருள்; ஆளுல், மாரியம்மன் உற்சவத்தின்போது, ஏழை எளியவர்களைத் துன்புறுத்தும் கெட்டியப்பனின் அட்டகாசங்களை ரசித்து மகிழுகிருள்; அவனிடம் பேசிச் சிரிக்கிருள்; பூஜை முடிந்து எல்லோரும் வீடு திரும்பும் போது, கோவிலுக்குப் பின்புறத்தில் கெட்டியப்பனுக்கு மடியிலிருந்து என்னவோ எடுத்துக் கொடுக்கிருள்!

நாகம்மாள்-கெட்டியப்பன் நட்பு சின்னப்பனுக்கும் ராமாயிக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் மனத்துக்குள் குமுறு கிருர்கள். இக் குமுறல் நாகம்மாளுக்கும் தெரிந்து விடு கிறது. எனவே, வீட்டிலும் விவசாய வேலைகளிலும் அவளது சண்டித்தனம் அதிகரிக்கிறது. . . .

. ஒரு நாள் தோட்டத்தில் எள் விதைப்பு: சின்னப்பன் உழுது கொண்டிருக்கிருன்; சந்தேகமும் வெறுப்பும் குமிழி யிட, நாகம்மாள் கூடையிலிருந்து எள்ளைக் குத்துத் குத்தாக வாரி இறைக்கிருள்! - - * - - -- -

நண்பகலில் வரப்போரத்தில் உட்கார்ந்து கசப்புடன் சிந்திக்கிருள்: "இந்த மாதிரிக் கானலிலும் காற்றிலும் உழைத்து என்ன பயன்? ஏன் இப்படி இவர்களுடன் ஒட்டுக் குடியாக வாழ வேண்டும்? இந்தப் பரந்து கிடக்கும் காட்டி லும் தோட்டத்திலும் என் கணவனுக்குச் சேரவேண்டிய