தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, June 04, 2016

வாசனை - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி
ருசி ரொம்பவும் அலாதியானது. என் மூக்கிலும் வாயிலும் மட்டும் சேர்ந்து படும்படியாக அவன் அடித்துக்கொண்டிருந்தான். வேறு எந்த இடத்திலும் படவே இல்லை. அவன் கையெல்லாம் ரத்தம் ஆகிவிட்டது. அதை கைக்குட்டையால் துடைத்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. குழாய் இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான். கடைசியில் புழுதியை அள்ளி இரு கைகளையும் அதில் தேய்த்துக்கொண்டாள். ஊர்வலம் வெகுதூரம் நகர்ந்து விட்டதை நல்லவேளை யாரோ ஞாபகப்படுத்தினார்கள். ஆளுக்கு ஒரு கடைசி அடி தந்துவிட்டு. ஊர்வலத்தின் வாலைப் பிடிக்க எல்லோரும் ஓடினார்கள்.


பல்லக்குத் தூக்கிகள்
O
1973
மனசு ரொம்பவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. ஓயாமல் ஒரு துக்கம். மனம் சதா அழுதுகொண்டிருக்கும். எதற்கு என்பது தெளிவாகவில்லை. 'எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான்' என்று மனசுக்குள் கசந்த முணுமுணுப்பு வெளிப்பட்டுக்கொண் டிருக்கும். இருந்தாலும் வெளிக்குச் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தேன். நண்பன் சொன்ன மாதிரி இதில் ஒரு பயிற்சி இருந்தது. எவ்வளவு தான் தேற்றியும் தேறாமல். விஷம் நின்ற சடைநாய் மாதிரி மனம் புரண்டு புரண்டு துடித்தது. ஊர்விட்டு அலைவோமா என்று தோன்ற ஆரம்பித்தது. கஷ்டமான நாட் களை அலைந்து உடம்பை இம்சித்துக் கழித்திருந்தேன். இதில் நிவர்த்தியும் சொல்லும்படி இருந்தது இல்லை. இருந்தாலும் மூச்சுத்திணறிக் கிளம்பிச் சென்றேன். எங்கெல்லாம் சுற்றினேன் என்பது குழம்பிவிட்டது. உடம்பு கடைத் திண்ணைகளில் உட்கார்ந்து போகிறவர்கள் வருகிறவர்
ணித்து. மனசும் தளர்ந்து, களை இடுப்புக்குக் கீழ் பார்த்துக்கொண்டு கழிப்பேன். கடைசி யில் ஒரு மலைக்கோயில் போய்ச் சேர்ந்தேன்.
அங்கு போகக் காரணம் தூரத்து நண்பன் ஒருவன் மளக் கஷ்டம் ஏற்பட்ட பொழுது அங்கு சென்றான் என்று மற்றொரு நண்பன் எந்தக் காலத்திலோ சொன்னது நினைவில் முளைத் ததுதான். ஒரு ஜே ஜே ஊர். அது தான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் கால்களும் கைகளும் கொத்துக் கொத்தாய் என் முகத்தில் வந்து சரிந்து கொண்டி ருக்கும். புயல் வரப்போவது மாதிரி சதா ஒரு இரைச்சல். படிக் கட்டுகளிலும் மண்டபங்களிலும் பெண்கள் தாறுமாறாய்க் கிடக் தார்கள். தள்ளித் தள்ளிப் போனதில் ஒரு மண்டபம் வந்து சேர்ந்திருந்தது. பக்கத்தில் ஒரு சுடுகாடு இருப்பது மாதிரியும். பிணத்தைப் பொசுக்க வந்தவர்கள்தான் மண்டபத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு எண்ணம். அப்படி இல்லை சாதா இடம் தான்.
ஆட்களுக்கு வாட்ட சாட்டமான பட்டம்பு. பயில்வான்கள்பல்லக்குத் தூக்கிகள்
451
- சுந்தர ராமசாமி மாதிரி. பக்கடா மீசைகள். முண்டாசு தார்பாய்ச்சிக்கட்டு. தொடை களில் எல்லாம் அட்டைகள் சுருண்ட மாதிரி ஒரே கறுப்பு மயிர். மொத்தத்தில் எனக்கு ஒரு அருவருப்பு ஏற்பட்டது. பொல்லாத வர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. பாதங்களில் நரம்பு புடைத்துத் தெறித்துக்கொண்டிருந்ததால் நிற்க முடியவில்லை. படியில் உட் கார்ந்தேன். பின்னாலிருந்து முரட்டுத்தனமான குரலில் எச்சில் தெறிக்கக் கத்திக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. பிரியத் துடன் கெட்ட வார்த்தைகள் சேர்த்து சேர்த்துப் பேசினார்கள். அவர்களுக்கும் எனக்கும் ஏதாவது உரசல் ஏற்படும் என்று எனக்கு மணத்துக்கொண்டிருந்தது. ஒரு சிலேடையும். சில கெட்ட வார்த் தைகளும் என் ஜாதியைக் குறிப்பது மாதிரி வந்தன. நான் எங்கள் ஊரில் இருப்பது மாதிரி இல்லாமல் சரியான ஊர் சுற்றி மாதிரி இருந்ததால் அப்படி ஏதாவது கிறீச்சிட்டால் கெட்ட வார்த்தைகளைக் கத்தித் தீர்க்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்ள விரும்பினேன். என்னிடம் தோற்றோம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர்கள் என்னை வெட்டிப் புதைத்துவிடக்கூடும். இடமும் தோதாக இருந்தது.
ஒருவன் என் பின்பக்கத்திலிருந்து என் மணிக்கட்டில் உர சிக்கொள்வது மாதிரி நெருங்கி இறங்கி மண் தரையில் சாடினான். அவன் அனாவசியமாகக் கால்களை தொம்தொம் என்று வைத்து, இறங்கினான். தூசி கூடுதலாகக் கிளம்பி காலை வெயிலில் அந் . தாத்தில் மஞ்சள் குளித்த மார்பில் தூண்கள் மாதிரி உருண்டன. அவன் சாமர்த்தியசாலி மாதிரி நின்றான். அவன் சாமர்த்தியம் என்ன என்று நான் கேட்டுக்கொண்டேன் .
அவன் மேல் மனசுக்குள் ஒரு கெட்ட வார்த்தை போட்டேன். இதனால் சிறிது சந்தோஷம் ஏற்பட்டது. அவனுடைய அசைவு களும் முகபாவங்களும் தரங்கெட்ட நாடகப் பாங்காக இருந்தன. அவனுடைய கால்களுக்குப் பின்னால் கள்ளிப் புதர் பக்கம், வற் றல் கூழ் மாதிரி மலம் கழித்திருந்த வரிசைக்கு முன்னால் ஒரு பெரிய சாமான் தெரிந்தது. படுத்தாத்துணி போட்டுப் பெரிதாக மூடி வைத்திருந்தது அந்த சாமானை. என்ன அது தெரியவில்லை, வயிற்றோடு முகத்தைச் சேர்த்துக் கொண்டு தூங்கும் ஒரு ஒட்ட கத்தைப் போர்த்தி வைத்திருந்த மாதிரி இருந்தது. குரலில் வாடை கலந்து வந்தது. எல்லோரும் குடித்திருந்த மாதிரி இருந்தது. - வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தை. ஒட்டகம் வாயாலும் காங்கனாலும் படுதாத் துணியை பலாத்காரமாக இடுக்கிக் கொண் தப்பது மாதிரி, கைகளால் தேர்வடம் இழுப்பது மாதிரி நடித்துக் கா அவன் படுதாத் துணியைச் சுருட்டி இழுத்தான். என் பாயிருந்து பெரிய திரிப்புக்கள் அருவருப்பாக வந்தன. ஒரு
பல்லக்கு. அந்தக் காலம் வழிகிறது அதில். ஆகப்பழசு. தடித்தடி யாகப் பழைய காலத்துக் கட்டைகள், கட்டைகளின் தொலியை சில 3/டங்களில் பூச்சி அரித்திருந்தது. அது சட்டையில் நூலைப் பிரித்த இடம் மாதிரி இருக்கிறது. உளுத்திருக்கவில்லை . சேர்மானம் கள் நல்ல நெருக்கம். ஊதுவத்தி குத்த முடியாது. ஒரு பக்கத்துக்கு எத்தனை பேர் தூக்குவார்களோ தெரியவில்லை.
''கிளம்புங்க அப்பா'' என்று கத்தினான் பல்லக்கை வெளிப் படுத்தியவன். எல்லோரும் ஆடியாடி வந்தார்கள். முழங்காலிலும் பாதங்களிலும் ரத்த ஓட்டம் ஸ்தம்பித்து சற்று மரப்புத் தட்டி விட்டதுபோல் ஒரு தினுசாக ஆடியாடி வந்தார்கள். மண்டபத் தின் இன்னொரு பக்கத்திலிருந்து ஒருவன் ஒரு அம்மியை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்தான். பாரம் அழுந்த உயர்ந்திருந்த அவன் கைகள் நடுங்கின. அம்மி கையை மடக்கி விடும்போல் இருந்தது. கழுத்து நரம்புகளும் ஒரு மண் புழுவை நுழைத்தது போல் கவனத்தைக் கவரும்படி ஒரு நடுநெற்றி நரம்பும், புடைத் திருந்தன. அசப்பில் பின்பக்கம் திரும்பிய ஒருவன் இதைக் கவ னித்து ''விலகுங்கப்பா விலகுங்கப்பா'' என்றான். பலர் தவறாக விலகிக் கொண்டார்கள். அவன் அம்மியை மண்ணில் போட்டுவிட்டுப் பின்பக்கம் நகர்ந்தான். மண் கிழித்து புழுதி பறந்தது. சிலர் ஹம் ஹம் என்று ஒரு மூச்சுக் கலந்த அசட்டுச் சத்தத்தை ஏற்படுத்தினார்கள். அவன் ஓடிப்போய் ஒரு பெரிய குழவியை தூக்கிக்கொண்டு வந்தான். அது அம்மிக்குழவியல்ல. ஒரு ராஸ் ஆட்டுக்கல் குழவி. தலை பருத்து இடை ஒடித் தேய்ந்து பன்னம் வழவழவென்று நிறங்குறைந்து இருந்தது. இது போக இன்றும் இரண்டு சாமான்களையும் அவன் கொண்டுவந்து போட்டான். ஒரு மைல் கல். மேல் வளைவு உடைந்து, உடைத்த பகுதி அழுக்குப்படாமல் புதுசாக இருந்தது. இன்னொன்று என்னவோ ஒன்று. இது இரும்பு ஏர் மாதிரி இருந்தது. அதைப் பார்க்கும் போது அதன் கனம் நம் மனசை அழுத்தும். அது ஏதோ ஒரு யந்திரத்தின் உடைந்துபோன உறுப்பு. ரொம்ப விசித்திரமானது. அதை இழுத்துக்கொண்டுதான் வந்தார்கள். எல்லாவற்றையும் கயிற்றால் கட்டி ரொம்ப சிரமப்பட்டுப் பல்லக்குக்குள் துதி வைத்தார்கள். நான் எழுந்திருந்து அவர்கள் பக்கம் சென்று என் முகம் பார்த்தவனை எதற்கு என்று முகத்தால் கேட்டேன். அதற்கு அவன் ஒரு தினுசாகச் சிரித்தான். அது செவிடனின் மசகிப்பு மாதிரி இருந்தது. ஆனால் அவன் காது கேட்கிறவன்தான். எனக்குத் தெரிந்தது. எல்லோரும் முன்டா உததினார்கள், அப்போது மாறி மாறி எழுந்த உதறல் சத்தத்தில் யாருக்கு அதிக சத்தம் என்ற போட்டி ஏற்பட்டு காத்டவி வித்துக்கள்.
Illசுந்தர ராமசாமி
பல்லக்குத் தூக்கிகள்
453
அதில் பல கெட்ட சத்தங்களின் நினைவுகள் அவர்களுக்கு உண் டாகி. அதை உறுதி படுத்துவதுபோல் முனகல்களும் முகக் கோணல்களும் எழுந்தன. அவர்கள் எல்லோரையும் ஸ்திரீ தாகம் வாட்டி எடுப்பது மாதிரி தோன்றிற்று. அதற்காக அவர்களுடைய சதை அவர்களைக் கிள்ளிக்கொண்டிருப்பது மாதிரி இருந்தது. பல்லக்கு தோள் ஏறிற்று. நித்திய பழக்கம்போல் முன்பின் பிரிந்து கொண்டார்கள். தோள் மாற்ற கட்டைகளும் இருந்தன. அதை புளுதி பறக்கப் பொத் பொத்தென்று மண்ணில் ஊன்றிச் சென் றார்கள். நானும் அவர்கள் பாதங்களை பார்த்தபடி பின்னால் சென்றேன்.
மலைமேல் கோயில் போய்ச் சேரத்தான் புறப்பாடு என்று தோன்றிற்று. ஆனால் எத்தனை படிகள். காரை பெயர்ந்து செங்கல் உடைந்த அகலம் குறைந்த படிகள். நடு நடுவே தங்கி இளைப்பாற ஓடு வேய்ந்த கூரைகள். உடைந்து உதிர்ந்த ஒடு கள். இடையே பனங்காம்புகள். எத்தனையோ தடவை சுற்றிச் சுற்றி வந்திருந்தும் படிக்கட்டின் நுழைவு வாசல் எங்கே என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மலையில் ஆங்காங்கு மனித உருவங்கள் அசைந்தன. பெண்களின் சிவப்புப் புடவைகள் வெயிலில் பளபளத்து இங்கும் அங்கும் காட்டுத்தீ போல் தெரிந் தன. நுழைவு வாசல் எனக்குப் புலப்படாமல் போனது ஒரு குறைவாக எனக்குப் பட்டது. ஏதோ மனசில் கற்பனை செய்து கொண்டேன். அங்கு ஒரு வளைவும் அதனடியில் யானையும் நிற்கும் என்று தோன்றிற்று. யானையைப் பிச்சையெடுக்கப் பண்ணிக்கொண்டிருப்பான் யானைப்பாகன். பிச்சை எடுக்கிறோம் என்பது யானைக்குத் தெரியாததால் யானை பிச்சையெடுக்க வில்லை என்றும் பிச்சை எடுப்போனும், பிச்சை கொடுப்போனும் ஒரே அம்சம் ஆதலால் யானைப்பாகனும் பிச்சை எடுக்கமுடியாது என்றும் எங்கள் அண்டை வீட்டு வை. மு. சாஸ்திரி சொல்லக் கூடும். சில சமயம் நான் அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். இருந்தாலும் இந்தப் பல்லக்குத் தூக்கிகள் நுழைவு வாசலை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதில் எனக்கு ஏனோ கணத்திற்குக் கணம் ஆர்வம் பெருகிற்று. அவர்கள் சந்துசந்தாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள். புறப்பட்ட இடத்திற்கு இனி மேல் போக முடியாது. நான் சற்றும் எதிர்பாராத கணத்தில் வாசல் பளிச்சென்று முன்னெழும் என்ற எண்ணம் ஏற்பட்டு ஒரு கலவர உணர்ச்சி தோன்றியது.
அவர்கள் கள் நாற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலதிகாரிகளையும், போதனைகளையும் புனிதத்துவத்தையும் 5. எள்ளி நகையாடுவதில் ரொம்பவும் சந்தோஷம் வெளிப்பட்டது.
111111
பார் அழுத்தத்தால் குரல் அமுங்கி வந்ததால் காற்றை எதிர்த்து மிகுந்த ஆயாசப்பட்டுப் பேசினார்கள். மலையும். பெண்களின் சேலை நிறங்கள் விறகுத் தீ மாதிரியும் மீண்டும் தென்பட ஆரம்பித்தன. தெரிந்த கும்பல் மறைந்து, தெரியாத கும்பல் தெரிய ஆரம்பித்தது. பல்லக்குத் தூக்கிகள் முதுகுகளில் வியர்வை துளிர்த்தது. துளிகள் சேர்ந்து வியர்வைக் கோடுகள் இணைந்து கீழ் நோக்கி வேகமாக வழிந்து வேட்டிக்குள் இறங்கின. கனம் தாள முடியாமல் இறக்கக் கேவின. அவர்களுடைய அங்கங்கள் என்பது நடையின் தள்ளாட்டத்தில் தெரிந்தது. ''முருகா சோதிக் காதே அய்யா'' என்று ஒருவன் கத்தினான். ஒரு முனிவரின் முதுகில் அஸ்திரம் பாய்ந்தபோது வெளிப்பட்டதுபோல் உருக்கமாக இருந்தது. ''வந்தாச்சு. வந்தாச்சு'' என்றான் ஒருவன். படக் கென்று ஒரு திரும்பு திரும்பியது பல்லக்கு. ஒரு நுழைவு வாசல் வெளிப்பட்டது. நுழைவு வாசலில் ஒரு குட்டிக்கோவில். என்ன சாமி என்பது தெரியவில்லை. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தான் பார்க்க வேண்டும். குட்டிக் கோவிலிலிருந்து சிலகஜ தூரத்தில் ஒரு மண்டபம் தெரிந்தது. சிறுநீர் கழிக்க முட்டிப்போனது மாதிரி அவர் கள் அவசரத்துடன் பொறுமை இழந்து பல்லக்கை இறக்கினார்கள். பல்லக்கை நேர்த்தியாகத் தொட வைத்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றும் மண்டபத் தரையில் அது இடித்துக் கொண்டு உட்காரும்படி ஆயிற்று. 'முருகா . சோதிக்காதே" என்று ஒருவன் கூவினான்.
எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ஒரு ஒல்லி ஆசாமி வெளிப் பட்டான். டீக்கடை வாசலில் கறுப்புப் புதுசீட் பளபளப்பு சைக் கிளை அதன் சீட்டில் பிரியத்துடன் தட்டி முன் தள்ளி உருட்டிக் கொண்டுவந்தான். ஒரு பல்லக்குத் தூக்கி அவனைப் பார்ப்பதைப் பார்த்து. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கஷ்டத்தினால், இடைவெளி அசிங்கப்பட்டு அழுத்த. அவர்களைக் கவனியாதுபோல் அவன் பராக்குப் பார்த்துக்கொண்டே வந்தான். வேப்ப மரத்தடியில் சைக்கிளைத் தூக்கி நிற்க வைத்து மீண்டும் சீட்டில் தட்டி னான். சைக்கிள் அவனுக்குச் செல்வம். அதைச் செலுத்தித் தீரா தவன் அவன். மண்டபத்தின் முன்னால் வந்ததும் முகத்தைத் துடைத்துக் கொண்டான் நல்ல பவித்திரமாக இருந்தான். கனைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.
''எண்ணைக்கும் சொல்றத இண்ணைக்கும் சொல்றேன். அழுக்கத் தந்து சலவையை வாங்கிக்கிங்க."
அப்புறம்?
''முகத்தை வளிச்சுட்டு வாங்க. எச்சிலைத் துப்பாம இருங்க. புட்டியெச் சொறியாதீங்க.''
19.சுந்தர ராமசாமி
பல்லக்குத் தூக்கிகள்
455
'அண்ணைக்கு மட்டும்தானா?'' ''மகாராஜா வந்து போறவரை ....'' ''மகாராஜாவா?''
''இல்லை பெரியவர். அதுதான் சரி. பெரீஈஈயவர். மாத்தி மாத்திச் சொல்றாங்க. ராஜான்னு சொல்றாங்க. கவர்னர் னுடறாங்க. திவான் டோய் என்கிறாங்க. குளப்பறாங்க. பொது வாகச் சொல்றேன், பெரியவர்னு...''
''பொதுவாகப் பேசினா வம்பில்லே. பெரியவர்னு சொன்னா பெரியவர்தானே? என்னா எடை இருக்கும்?'' அ தமாஷ்க்கு இழுத்து கேலிக்கூத்தாக அடிக்கும் முனைப் புத் தெரிந்தது. சீரழித்துப் பார்க்க ஆசைப்படுவதை உணர்ந்து, பேசியவன் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டான்.
''கும்பிடுங்க. கும்பிடறது நல்லது. பவ்வியம்; பவ்வியம். ரொம்ப முக்யம். முதுகை வளைச்சு வாயைப் பொத்தி ...''
'வாயைப் பொத்தி முதுகை வளைச்சு ... முதுகை ஒடிச்சு...'' ''பெரியவர் பல்லக்கிலே ஏறிக்கிறார்...'' 'விதானத்தைத் தூக்கணும்னு சொன்னீங்க..?''
''உட்கார்ந்து நகர முடியுமானு பாக்க, அசைவும் நட மாட்டமும் பாத்துவர, முந்திவர ஊருக்குப் போயிருக்காங்கா . வந்தாத் தெரியும்.''
''என்னப்பா .... முருகா... பழனியாண்டவா...''
''முருகான்னு கூப்பிட வேண்டாம். இப்பொ இல்லை. பெரியவர் முன்னாடி. சுப்ரஹ்மண்யா. சுப்ரஹ்மண்யா அப்ப உன்னு ...''
''ரொம்பக் கஷ்டம் ... சோதிக்காதீங்க...'
''கஷ்டமில்லை . பழகணும். பழகினா நாக்கு வளையும். உடம்பும் அப்படித்தான். மனசும் அப்படித்தான். புத்தியும் அப்படித் தான்...'
''சரி. அப்புறம்?' ''சொன்னதைச் சொன்னதைச் சொல்லச் சொல்றீங்க." 'கேட்டதைக் கேக்கறதுக்கு சுகமா இருக்கு...''
''பல்லக்குத் தோளை அழுத்தறதுன்னா வழக்கம்போல ஆய்வசாய்னு கத்தப்புடாது. பெரியவருக்கு சத்தம் ஆகாது. இறக்கணும்னா, 'வள்ளி வந்தாச்சு'ன்னு சொல்லுங்க. மறுபக்கத் துக்காரங்களுக்கும் சரினு பட்டுதுனா, அவங்க. 'அதுக்கென்ன தெய்வானையும் வந்தாச்சே' அப்படீன்னு சொல்லணும். இறக்கி
தாள் ஆத்திக்கிடலாம். இறக்கிப்புட்டு எப்பவும் செய்யறாப்லே
*"குக்குள்ளே எட்டிப் பாக்கப்படாது. வேர்வையை கட்டை விரலாலே வழிக்கப்படாது...''
அண்ணைக்கு மட்டும் தானே? ''அவரு எண்ணைக்கு வாறார்னு தெரியலே?'' ''அப்படீன்னா எண்ணைக்கும் இதே வேலையா?'
ஆயுள் பரியந்தம் செய்யணும்னாலும் செய்யவேண்டியது தான். இது இல்லைன்னாலும் இது மாதிரி இன்னொண்ணத் தான் செய்யவேண்டியிருக்கு. பழகிக்கிட்டா எல்லாம் சுலபமாகத் தெரியும். பழக்கம் விட்டுப்போனா உடம்பு வலி எடுக்கும்...''
அவன் மண்டபத்திலிருந்து இறங்கி வேகமாகப் படியேறி னான். குழந்தைபோல் அனாயாசமாய் ஏறினான். சுமார் இருபது இருபத்தைந்து படிகள் ஏறியபின் சடேரென்று பின்னால் திரும் பினான். பல்லக்குத் தூக்கிகள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அவன் முகத்தில் கடுகடுப்புடன் அவர்களை வெறித்துக்கொண்டிருந்தான்.
''ஐயா. ஐயா'' என்று கத்தியபடி ஒருவன் டீக்கடை வாசலிலிருந்து வந்தான். அவன் கையில் செய்திப் பத்திரிகை ஒன்று படபடத்துக்கொண்டிருந்தது. சாக்கடையில் விழுந்த ஒன்றை இருவிரல்களால் ஓரம் பிடித்துத் தூக்கிவருவது மாதிரித் தூக்கிவந்தான். படியேறி மேலே சென்றான். அவன் அருகில் சென்று பத்திரிகையை அப்படியும் இப்படியும் திருப்பி ஒரு இடத்தை விரல் சுட்டிக்காட்டினான். அவன் செய்தித்தாளை கையில் வாங்காமல் கண்ணோட்டம் விட்டான்.
''என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள் பல்லக்குத் தூக்கிகள்.
''ஒண்ணுமில்லே. பெரியவர் யாத்திரைரத்தாகியிருக்குன்னு போட்டிருக்காங்க.''
''விடிஞ்சுதுடா அப்பா முருகா ... என் அய்யனே?'' கீழே சளசளவென்று பேச்சு ஆரம்பமாயிற்று.
''இதாப் பாருங்க. நமக்கு அதிகார பூர்வமா தெரிவிக்கலே. தூக்குங்க.''
எல்லோரும் தயங்கியவாறு நின்றார்கள். ''பழக்கம் விட்டுப் போச்சுன்னா உங்களுக்குத்தான் கஷ்டம். நாளைக்கே வாறார் என்ன அப்படினு மாத்திச் சொல்லுவாங்க. நாம நம்ம வேலை யைச் செய்துக்கிட்டே இருக்கணும்."
"அந்தக் கலப்பையை மட்டும் தூக்கி வெளியிலே வச்சுட

456 சுந்தர ராமசாமி
லாமா? அளுத்துது.'
'இருந்துட்டுப் போவுது, ஜாஸ்தி தூக்கிப் பாசிகதி பின்னாலே ஏந்தல்.’
'வழக்கம் போல முருகானு கூப்பிடறோமே...' 'உங்க இஷ்டம்.' 'முருகா முருகா' என்று கத்தியபடி பல்லக்கைத் துக்கித் தோளில் வைத்துக்கொண்டார்கள். வெயில் உச்சியில் எறி இருந்தது. О
ஞானரதம் 1973


வாசனை - சுந்தர ராமசாமி

சாம்பசிவன் தன் மனைவி லலிதாவுடன் அந்தப் புண்ணிய ஸ்தலம் வந்து சேர்ந்தபோது காலை வெயில் உக்ரம் கொள்ள ஆரம்பித்திருந்தது. அவர்கள் அதிகாலையில் சேர இருந்ததை எண்ணி வந்தவர்கள். வாகனங்கள் ஏமாற்றிப் பிந்திப்போனதில் அலுப்படைந்து வேறு பல அசெளகரியங்களையும் வழி நெடுக வார்த்தையாடி மனதில் உப்பவைத்து வந்து சேர்ந்தனர். ரயின் லிருந்து வெளிப்பட்டது தப்பித்து விரையக் குதிப்பது போலிருந் த்து.


எதிர் வெயிலில் உடல் முன் சரிய, ஒருவர் முகம் ஒருவர் பாராமல் துரிதமாக நடந்தனர். ஆடைகள் வேர்வையில் நனைந்து முதுகில் ஒட்டி பிசுபிசுத்து வெறுப்பூட்டிற்று. கோயிலில் அப் பொழுது நடை சாத்தியிருக்கக்கூடும். இருந்தாலும் வெளிப் பிரகாரத்தில் விக்ராந்தியாய்ச் சுற்றி மண்டபத்தில் படுத்துப் பேசி கடற்காற்றில் இளைப்பாறலாம் என்பதை ஓரிரு வார்த்தைகள் விட்டுக்கொண்டதிலேயே அவர்கள் மனதில் சுகந்தரும் காட்சிகள் விரிந்தன. ஒட்டல் அறை ஒன்றை அமர்த்தி, குளித்துப் புதுசு உடுத்திக்கொண்டு கிளம்பியபோது பார்ப்போர் இஷ்டப்படும்படி இருவரும் இருக்கிறோம் என்ற எண்ணமும், பரஸ்பரம் பிரியமும் அதனால் ஒரு மிதப்புணர்ச்சியும் ஏற்பட்டன.

லலிதா மாடிப்படிகளில் நாகரிகப் பாங்காக இறங்க ஆரம்பித்தாள். சாம்பசிவனின் அடிகள் அவளுடைய அசைவுகளுக்கு அனுசரணைப்படாமல் வேறுபட்டு லலிதாவின் கற்பனையை உறுத்திற்று. பூண் கட்டிய அவன் ஊன்றுகோல் வெற்று மரப் பலகைப் படிகளில் மிகையாக சப்தித்தது அவளுக்கு மனக் கூச்சம் உண்டாக்கிற்று. லலிதாவின் உணர்ச்சி இதனால் பாதிக்கப்பட்டு, கீழே நிற்காத பலர் அவளைப் பார்த்து பரிதாபம் கொள்வது போல் மனக் காட்சிகள் விரிய தன்னிரக்கம் கொண்டாள். இக்கற்பனை மறு கணம் கலையவும் விபத்தில் ஊனமாகிவிட்ட கணவனுக்கு சிச் குவுை செய்து நலியும் திரைப்பட நாயகியாகத் தன்னை பாவனை செய்துகொண்டாள். இப்பொழுது பலர் சேர நின்று அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நிகழவிருக்கும் விபத்தைத் தடுக்க ஜாக்கிரதை கொள்வது போல் அவன் அருகில் அவள் நெருங்கிக்கொண்டாள். தன்னுணர்வின்றி அவளிடம் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. சாம்பசிவன் இதை கவனித்ததும், எதற்கு என்ற அர்த்தத்தில் ம்? என்று கேட்க, 'ஒண்னுமில்லை' என்றாள் அவள் அவன், எதற்குன்னே தெரியாத சந்தோஷமா? கான் கேடறது உனக்குக் கிடைச்சுட்டுதா?’ என்றான். லலிதா சிரித்தாள். மிதப்பும், திரைப்பட உணர்வுகளும் அவள் மனதில் குழம்பிப்போலிச் சந்தோஷத்தை அளித்தன.

வெளியே வெயிலின் பிரகாசமும், உஷ்ணக் காற்றும் சகிக்க முடியாமல் இருந்தது. அந்த அக்கிரகாரம், கோயிலின் புதுப் பிரபல்யத்தில் கடைத்தெருவாய் மாற்றமடைந்து, சொற்ப வீடு களே மிஞ்சியிருந்தன. அங்கு குடும்பக் காட்சிகள் வியாபாரச் சந்த டியில் குழம்பிக்கொண்டிருந்தன. கடையோரச் சிறு நிழல்களில் ஆண்கள் கூடி அரசியல் கத்திக்கொண்டிருந்தனர். எளிய வீடுகள் முன் போடப்பட்டிருந்த கோலங்களை முரட்டுப் பாதங்கள் மிதித் துச் சிதைத்திருத்தன.

உடம்பில் படாமல் கீழ் மட்டத்தில் அடித்துக்கொண்டிருந்த உஷ்ணக் காற்று புழுதி சுருட்டிக் குப்பைகளைச் சிதறச் தள்ளிக்கொண்டிருந்தது. மறுகாற்றுக்குக் குப்பைகள் மீண்டும் மேலெழுந்து பறந்தன. நின்று. தெருவின் இருபக்கமும் பார்த்து விட்டு சாம்பசிவன் தன் அசைவுகளைத் துரிதமாக்க ஆரம்பித் தான். அவன் கைக் கழி அவன் முன் குத்திப் புழுதி கிளறிப் பின் நகர்ந்து அவனை முன் பக்கம் நகர்த்திற்று இரு கைகளும் கைத்தடி பிடித்திருக்க, அடி வயிற்றை அதன் மேல் சாய்த்து உன்னி அவன் சென்றுகொண்டிருந்தான். 'எத்தனை மைல் வேலும்னாலும் இப்படியே போகலாம். ஒண்னும் சிரமம் இல்லை' என்று அவன் லலிதாவிடம் சொல்லியிருக்கிறான். கூடாது என்று எப்பொழுதும்போல் நினைத்துக்கொண்டபோதே, அன்றும் அவள் பார்வை அவன் பதித்துச் செல்லும் ஒற்றை அடிக்கவட்டில் பதிந்தது. தனக்கும் தன் க ைவலுக்குமான இடைவெளி விரியப் பயப்படுவதுபோல் தன் வேகத்தை அனுசரணைப்படுத்தி பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் தலை மயிர் ஈரம் காய காற்றில் பறந்தது. குங்குமத்தின் சில சிதறல்கள் அவள் புருவத்தின் மேல்பக்கமும் முக்கின் துனியிலும் உதிர்ந்திருந்தன. மங்கல உணர்வையும். ஆலிங்கனம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையையும் பார்ப்போருக்கு எழுப்பும் விதமாய் அவள் தோற்றம் இருந்தது.
o

'பாப்பாத்தி. வாடி ராஜாத்தி. '' ஒரு காட்டு மிருகத்தின் சப்தம்போல் மற்ற இரைச்சலினின்று தூக்கலாயும் கரகரத்தும் அவ்வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன.

சாம்பசிவனின் அசைவு நின்றுபோக அவன் பக்கவாட்டில் பார்த்தான்.

'பாப்பாத்தி, வாடி ராஜாத்தி.' குரல் கீழ் ஸ்தாயியில் இறங்கி, இம்முறை அதில் இளப்பமும் கொஞ்சலும் கலந்திருந்தது.

டீக்கடை முன் அந்த ஆசாமி நின்றுகொண்டிருந்தான், நாலைந்து சிறுவர்கள் அவன் முன்னால் சிதறியிருந்தனர். மொட்டைக் கைகளை அந்தரத்தில் அசைத்து. பார்வைக்குப் புலனாகாமல் பறக்கும் ஈக்களைச் சாகடிப்பதுபோல் அவன் கைகள் சேர்த்து தட்டிக் கொண்டிருந்தான். நாசித் துவாரம் சிதைந்து வாய் மடையில் வழிந்திருந்தது. முகத்தில் பல இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஈரத்தொளைகள் தெரிவதுபோல் தோன்றிற்று பாதங்கள் வீங்கி அழுகிக்கொண்டிருந்தன. கட்டுப் போட்டுச் சுற்றியிருந்த துணியில் சீழ் பட்டுக் கறை படிந்திருந்தது. கால் விரல்கள் திருகி ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டிருந் தன. கழுத்தில் அழுக்குக் கயிற்றில் தொங்கிய தகரக் குவவை விலாவுக்கும் தொப்புளுக்கும் ஆடிக்கொண்டிருந்தது. - சாம்பசிவத்தின் பார்வையை சந்தித்ததும் ஒர் இயந்திரத் தின் முடுக்கல்போல் அவன் சிரித்தான். அச்சிசிப்பு வெட்கம் கெட்டதாய், பரிகாசமாய் எடுத்துக்கொள்ளும்படி இருந்தது.

சாம்பசிவனின் கவனம் லலிதா பக்கம் திரும்பியது. அவன் நின்றபோது அவள் கால்களும் நின்றுபோயிருந்தன. அவன் மனம் அந்தப் பிராந்தியத்தில் இல்லை. அவன் பார்வை கோயில் வாசலில் நுழைவோர் மீது படிந்திருந்தது. லலிதாவின் கவன மின்மை சாம்பசிவனுக்கு ஆறுதல் அளித்தது. நின்றதற்குச் சாக்குப்போல் கோபுரத்தைக் காட்டி, நியான் போட்டுக் கெடுத்து விட்டார்கள்' என்று தேலைாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். தன் அங்கiனத்தை அவன் பயன்படுத்திக்கொண்டதாக சாம்ப சிவன் மனதுக்குப்பட்டது. அதற்கு என்பது யோசித்துப் பக்கம் அவனுக்குப் பிடிபடவில்லை. லலிதா , காதில் விழுந்திருந்தால் அருவருப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி அவள் காதிலும் விழுந்திருந்தால் என்ன செய்ய முடியும் என்று அவன் யோசித்துப் பார்த்தான். கெட்ட வார்த்தைகளில் தன்னால் அவனை மிஞ்ச முடியும் என்று எண்ண இடமில்லை. மேலும் கெட்ட வார்த்தைகளை  ஒன்றின் பின் ஒன்றாய் தடங்கல் இல்லாமலும் விஷ. ஊசி போலவும் அக்ஷர சுத்தமாயும் பயன்படுத்தச் சிறு வயதிலேயே பயிற்சி பெற்றிருந்தால்தான் முடியும் என்று அவனுக்குப் பட்டது. அப்படியே சொல்ல முயன்றாலும்கூட தன் உச்சரிப்புகள் தன்னையே நாண வைக்கும் என்று தோன்றியது. தான் மறைத்து வைத்திருந்த வார்த்தைகளை ஏக காலத்தில் லலிதா கேட்க தேர்ந்து தரக்குறைவாய்த் தன்னை எண்ணிவிடுவது அவனை சங்கடப்படுத்தும். தான் ஊர்விட்டுப்போவதற்குள், அந்தப் பிச்சைக்காரன் தன்னை மீண்டும் ஒருமுறை அவன் முன் வெளிப்படுத்திக் கொள்வான் என்று சாம்பசிவனுக்கு உறுதியாய்ப்பட்டது. அவ்வாறு நிகழ்ந்தால் மனங்கூசி ஒதுங்காமல் தைரியமாய் அதை சமாளிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். லலிதா தன்னுடன் இருப்பது சாம்பசிவனுக்கு இடையூறாய்ப் பட்டது. லலிதா மீது வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தவும், அவள் உள்ளூர சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பதற்கு நேர் மாறாக, நெருக்கடி ஏற்பட்டால் அவனால் அவளுக்குப் போதிய பாதுகாப்புத் தர இயலும் என்பதை நிரூபிக்கவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனை அவனுள் மூண்டது.

லலிதா எத்தனை பிரியத்துடன் தன் மீது ஒட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை சாம்பசிவன் நினைக்க ஆரம்பித்திருந்தான். மன ஒதுக்கம் என்பதே அவளிடம் இல்லை. அதுபோல் இறுக்கமாக அவள் மீது கவிய அவனால் முடியவில்லைதான். அவள் இயல்புக்குத் தன் குணம் சமமாய் அமையவில்லை என்று அவனுக்குப்பட்டது. வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியவில்லையே தவிர மற்றபடி லலிதா மற்றபடி' என்று சில சமயம் அவ விடம் அவன் இழுப்பான் 'சரி சரி, யாரு இல்லைனு சொன்னா இப்போ " என்று அடக்குவாள் அவள். அது சாதாரணமாக சரியாகவும் இருக்கும். பிரியமாகவும் தெரியும். கேலி மாதிரியும் அர்த்தம் கொடுக்கும். லலிதா தன் மீது கொண்டுள்ள பிரியம் உடல் உறவை மையமாக வைத்து வேர்விட்டு வேறுபல மையங்களை கிளை வீசி இணைத்துக்கொண்டுள்ளதாக சாம்பசிவன் எண்ணி னான். அவளுடைய வேட்கை மிகுதியானது என்பதை விடவும் குருட்டுதனமான வெறி என்பதில் அவனுக்குத் திருட்டு சந்தோஷமுண்டு. உடலுறவு கொள்ளும்போது பின்னால் நினைத்துக் கூசும்படி அவளிடம் உணர்ச்சியின் கற்பனைகள் வெடிக்கும். அதிகாலைகளில் அவள் மீது வெட்கம் பல சமயம் கவிந்திருக்கும் என்றாலும் வாய்விட்டு எதுவும் பிரஸ்தாபித்து அவளை அவன் நாண அடித்தது கிடையாது. இது தன்னை ஒத்த கனவானின் இயல்பு என்று அவன் மனதில் கூறிக்கொண்டாலும், உண்மையான காரணம் அதைப்பற்றி பிரஸ்தாபித்தால் அவள் வெட்கம் அடைந்து காதல் விளையாட்டில் தன் உணர்ச்சியைத் தணித்துக் கொண்டு விடுவாளோ என்ற பயம்தான். இவ்வளவு ஆசைகளுக்கும் நடுவில் லலிதாவால் தன் உடற் குறையை மிச்சமின்றி விழுங்கவும் முடியவில்லை என்பதும் சாம்பசிவனுக்குத் தெரிந்திருந்தது. இருவரும் ஒன்றாகத் தெருவில் நடக்கிறபோது, (இதுபோன்ற சந்தர்ப்பங்கள் உருவாவதற்கு முன்னாலேயே லலிதா சாதுரியமாகக் கலைத்துவிடுவதுண்டு) தன் குறையைக் கவனிக்கும் பார்வைகளைத் தவிர்ப்பதற்காகத்தான் அவள் தூரத்தில் பார்வை குத்தி விறைப்புற்று செல்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சாம்பசிவனை ஒரு விசித்திரப் பிறவி என்று கற்பனை செய்துகொள்ள லலிதாவுக்குப் பிடித்திருந்தது. வேறு யாருக்கும் அடங்காத அவன் தன் மந்திரத்துக்குக் கட்டுண்டு கிடப்பதாக எண்ணம் கொள்வாள். சாம்பசிவனைப் பற்றித் தன் தாயாரிடம் 'இரண்டு ஜென்மம் அதுகூட வாழ்ந்தாலும் இன்ன சமயத்தில் அதுக்கு இன்னமாதிரி மூளை வேலை செய்யும்னு கண்டுக்கவே முடியாதம்மா...' என்பாள். இவ்வார்த்தைகளை அப்படியே வெள்ளையாக எடுத்துக்கொண்டு அவள் தாயார் அலுத்துப் பேசும்போது அவளுக்கு உள்ளுர ஒரு சந்தோஷம் கிளம்பும். இதுபோன்ற மன விளையாட்டுகளில் ஈடுபடும் நாட்களாகவே லலிதாவுக்கு வந்துகொண்டிருந்தன என்பதில்லை. சாம்பசிவன் சிறுகச் சிறுக பல மன மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருந் தான். அவனது ஆசையும் கவனமும் ஆத்மீகப் பாதையில் திரும்பிக் கொண்டிருந்தன. பிரம்மச்சரிய நெறியை மிகுந்த வைராக்கியத்தோடு அவன் பின்பற்றினான். இதில் சில சறுக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டுப்போயின என்றாலும் அவன் வயதுக்கு அவன் கொண்டிருந்த வைராக்கியங்கள் சாதாரணமானவை என்று சொல்லமுடியாது. இதற்கு அனுசரணையாக வேறு பல மனப் பயிற்சிகளும் உடல் அப்பியாசங்களும் அவன் அன்றாட வாழ்வில் இடம்பெற்று நீண்டநேரங்களை விழுங்கிக் கொண்டிருந்தன. விட்டில் தனது ஆத்மீகப் பயிற்சிகளுக்கென மேலும் ஒரு தனி அறை ஒதுக்கிக் கொண்டான் லலிதாவுக்கு அவ்வறையில் பிரவேசனம் கிடையாது என்பது வழக்கத்தில் ஆகியிருந்தது. அவனுடைய ஆத்மீக விசாரம் அவனை முழுசாக ஸ்விகரித்துக் கொண்டு தன்னை ஒதுக்கிவிடுமோ என்ற உள்பயம் அவளுக்குத் தட்ட ஆரம்பித்திருந்தது. முதல் குறைப் பிரசவத்துக்குப்பின் அவள் கருவுறவில்லை. மாசாமாசம் போய் உக்காந்துக்கோ பெத்தேனே பொண்ணை’ என்று அவளையே முழுப் பொறுப் பாக்கி அவள் அம்மா நெஞ்சில் தட்டிக் கொள்வாள். அவனுடைய ஆத்மீக வாழ்க்கைபற்றி சில சமயம் சாம்பசிவனே அவளிடம் மறைமுகமாக அபிப்பிராயம் ஆராய்வான்.  உங்க குடும் பத்துக்கு இது புதுசா பெரிய அண்ணா உங்களை இருகிளை வாரிஸு அப்டீன்னு சொல்வாராமே" என்பாள் லலிதா.

பெரிய அண்ணா என்று லலிதா குறிப்பிட்டது அவளுடைய மாமனாரை தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவர் பெயர், வித்தியாசம் இல்லாமல் அதுதான். எஸ் எஸ். அய்யர் என்பது தஸ்தாவேஜகளில் இடம்பெற்றிருந்ததோ என்னவோ, ஊரில் தனி கவுரமும் வித்தியாசமான வாழ்க்கை முறைகளும் பெற்றுப் புகழடைந்த குடும்பம் அது. நில புலன்கள் இருந்தன. ஆனால் இரண்டு தலைமுறைகளில் அவர்கள் வீட்டில் யாரும் லெளகீகம் பார்க்கவில்லை. விளைந்துவந்த வரையிலும் சரிதான் என்று விட்டிருந்தார்கள் இந்த குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்தியாசியாகச் சென்றுகொண்டிருந்தார்களாம். பெரிய அண்ணாவின் தகப்பனார் கணபதி அய்யர் தனது நாற்பதாவது வயதில் ஞான வாழ்க்கை தேடி வடக்கே சென்றுவிட்டார். பின்னால் அவரை உறவினர் யாரும் பார்க்கவில்லை. அவரைப்பற்றி யாரோ எழுதிய ஆங்கிலப் புத்தகத்தையும் அதனுள்ளே பழுப்பேறிய ஆர்ட் தாளில் அவர் படத்தையும் லலிதா சாம்பசிவனின் புத்தக அலமாரியில் பார்த்திருக்கிறாள். பெரிய அண்ணா தன் வாழ்நாளின் சத்தான பகுதியைப் பூராவும் காந்தி அடிகளைப் பின்பற்றிச் செலவழித்தவர். அவர் குடும்பம் கைதுசெய்து அழைத்துச் செல்லப்படுவதை லலிதா தன் விட்டில் சாத்தப்படும் வாசல் கதவுக்குப் பக்கத்திலுள்ள ஜன்னல் வழி பார்த்திருக்கிறாள்.

பெரிய அண்ணாவின் குடும்பம் தெருக்காரர்களின் மானசீக ஒதுக்குதல்களுக்கு ஆளாகியிருந்தாலும் லலிதாவின் சிறுவயது நினைவுகளில் இக்குடும்பம் விசேஷக் கவர்ச்சி பெற்றிருந்தது. அவளுக்கு அந்த வீட்டுக்காரர்கள் பேரில் ரொம்பவும் ஆசையாக இருந்தது. அவர் குடும்பத்தைச்சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உறவுகளிலும், அந்த வீட்டின் பகுதிகள் மீதும் அவளுக்கு ஆசையாக இருந்தது. பெரிய மா மியைத் தவிர - அவர்கள் வீட்டில் எல்லோரும் - தரை சிறுவயதிலேயே குருடாகிவிடுவார்கள் என்று அவள் நினைத்திருந்தாள். . பின்னால், சாம்பசிவன்அவளை மணந்து கொண்டபின் அவனுக்கு தெரியாத மறைந்துபோயிருந்த - குடும்ப காட்சிகளையும் விஷயங்களையும் செய்திகளையும் '' நினைவுறுத்தியிருக்கிறாள். பல காட்சிகளை நடித்தும் காட்டி யிருக்கிறாள். பெரிய அண்ணா சிறுவயதில் விதவையாகி விட்ட தன் தங்கை ஜானகியை மேல்படிப்பு படிக்கவைத்து தன் கிருஸ்துவ நண்பருக்கு கல்யாணம் செய்துவைத்திருந்தார். அவர்கள் இருவரும் திருச்சியில் கல்லூரியில் ஆசிரியர்களாக வேலை பார்த்தனர். விடுமுறை நாட்களில் சாம்பசிவனின் ஜானகி அத்தை ఆఫ్రో அவளே ஒட்டியபடி பெரிய அன்னாவின் @ు 蠶 இறங்குகிறபோது, கூடி வேடிக்கை HTఉల్త్ లే o லலிதாவும் நின்றிருக்கிறாள். ஜானகி மாமியின் ---- தோற்றமும், காரிலிருந்து திண்னைக்கு இறக்கப்படும். _ெ. ஞம், தலையணை உறைகளும், மாமியின் கைப்பையும, செருப் பும், சங்கிலி தொங்கும் தண்ணீர்ப்புட்டியும் - ஒவ்வொன்று-ே லலிதாவிடம் விவரிக்க முடியாத கனவுகளை விரிக்கும். ! Tx டாவிலும் நடுக்கூடத்தின் வாசலிலும் குழந்தைகளின் அடைசல் பெரிய இம்சையாகிப்போகிறபோது, உள்ளே இருந்து யாராவது வந்து போயுட்டு அப்புறமா ஹாங்கோ' என்று குழந்தைகளை வெளியே நக்ர்த்தி விடுவார்கள். தான் பார்த்ததை எல்லா தாயாரிடம் சொல்ல லலிதா ஒடிப்போவாள். அவள் சொல்ல ஆரம்பித்ததுமே, போகச்சொல்லு அந்த முண்டையை என்பாள் லலிதாவின் தாயார். அப்போது தன் தாயாரின் முகம் படுத்திய வெறுப்பையும், வலிப்பையும் லலிதா நடித்திருக்கிறாள். அதைப் பார்த்து அவன் கடகடவென்று சிரிக் கிறபோது நிஷ்களங்கமான அவன் குணத்திற்காக அவனை அங் கேயே அனைத்துக் கொள்ள அவள் மனதில் ஆசை எழும். நாவிதன் ராமசாமியை பெரிய அண்ணா வாங்க, போங்க என பன்மையில் அழைத்துப் பேசுவதை ஊர்க்காரர்கள் கேலிசெய்து பேசுவார்கள். வெற்றிலைப்பெட்டியை அவனுக்கு நகர்த்துவா தாம் பெரிய அண்ணா. பெரிய அண்ணாவின் தம்பி சின்னண்ணா தன் தகப்பனாரைப் பின்பற்றி, மேலும் சற்றுத் தீவிரமாக, கல்யாணத்திற்கு முன்பே புதுச்சேரி சென்று அரவிந்த யோகி யுடன் இணைந்து கொண்டார். அப்போது சாம்பசிவன் சிறு குழந்தை சாம்பசிவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அவனுக்கும் சின்ன அண்ணாவுக்கும் விட்டுப் போயி ருந்த தொடர்பு கடிதம் மூலம் புதுத் துவக்கம் கொண்டது. அவ்வப்போது சின்ன அண்ணா அனுப்பிவைத்த புத்தகங்களும் அவனுக்குத் தபாலில் வந்தன. நாள் செல்லச் செல்ல சாம்பசிவ னின் ஈடுபாடு ஆத்மீகத் துறையில் வளர்ந்து விடவே, சிவராத்திரி தோறும் அரவிந்தர் தரிசனத்துக்கு அவன் புதுச்சேரி போய் வந்தான். ஊர் திரும்பியதும் சாம்பசிவனிடம், சித்தப்பாவைப் பார்த்தேளா?' என்று லலிதா கேட்பாள் இப்போ அவர் எனக்கு சித்தப்பா இல்லேடி, அசடே' என்று அவன் பதில் சொல்வான்.


__________________



"நான் உன் புருஷன் இல்லேடீ அசடே அப்டீனு என்கிட்டேச் சொல்ல கத்துத்தந்தாரா? என்று லலிதா தொடர்ந்து கேட்பாள். அதற்கு அவன், 'இது கத்துத் தெரிஞ்சுக்கற சமாசாரம் இல்லேடீ

arē’’ ststurs

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே ஒய்ந்து விட்டோடு ஒதுங்கிவிட்டார் பெரிய அண்ணா. வயோதிகம் கவிந்து உடல் கட்டு விட்டு ஆட்டம் கண்டுவிட்டிருந்தது. ஒருநாள், வாடிக்கைப் பாலை பித்தளைச் செம்பில் வாழை இலைபோட்டு மூடி எடுத்துக் கொண்டு லலிதா பெரிய அண்ணா வீட்டுக்குப் போனாள். ஹாலில் நுழைய முடியாதபடி வழிமறித்து உட்கார்ந்தபடி சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பெரிய அண்ணாவும் மூத்த மாட்டுப்பெண் சுசியும் ஒரு கட்சியாகவும், மூத்த பிள்ளையும் கடைசிப் பெண்ணும் மறு கட்சியாகவும் ஆடிக்கொண்டிருந்தனர். தைலம் பூசியிருந்த தன் காலை நீட்டி வைத்துக்கொண்டிருந் தார் பெரிய அண்ணா. மாட்டுப் பெண்ணைச் சமமாக 5 lia, TJ வைத்துச் சீட்டு விளையாடும் பெரிய அண்ணா மீது லலிதாவுக்கு மிதமிஞ்சிய பிரியம் கவிந்து அவருக்குப் பணிவிடை செய்வதில் தன்னைப் புகுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்ற ஆரம் பித்தது. சாம்பசிவன் ஊஞ்சலில் கவிழ்ந்து படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். அவன் வலது கால் வேஷ்டிக்கு வெளியில் தெரிந்தது. கால் கும்பியிருந்தது. மற்ற இடங்களை விடவும் அக்கால் பெரிய மறுப்போல் கறுத்தும், சொரசொரப் பாகவும் ரோமம் படர்ந்தும் இருந்தது. பாதம் குறுகி சிறு குழந் தையுடையது போலிருந்தது. அவள் வந்து நின்றுகொண்டிருந் தது யாருடைய பார்வையிலும் விழவில்லை, அப்படியே நின்று கொண்டிருக்கத்தான் அவளுக்கும் ஆசையாக இருந்தது. தன் கற்பனையில் பெரிய அண்ணாவின் பிள்ளையும் மாட்டுப்பெண் ணையும் தள்ளிவிட்டு, தன்னையும் சாம்பசிவனையும் அந்த இடங்களில் இருத்தி அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பெரிய அண்ணா கட்சி, அவளுடைய இறக்கம் ஒன்று வெகு வாய்ப்பாக அமைந்துபோக, 'சபாஷ்டீ பெண்ணே, இந்தப் பயலைத் தொலச்சுப்புடறேன்' என்று அவர் சாம்பசிவனைப் பார்த்துக் கத்துகிறார். சாம்பசிவனை அடைந்துவிட வேண்டும் என்று தான் முடிவுசெய்தது அநேகமாக அந்த நிமிஷமாகத்தான் இருக்கும் எனப் பின்னால் லலிதா நினைத்துக் கொள்வதுண்டு. சாம்பசிவனும் லலிதாவும் கோயிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். சாம்பசிவனுக்கு அவசியமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் நினைவாகவே இருந்தது. அவன் மீண்டும் தன் முன் எதிர்ப்படப் போகிற இடத்தையும் நிமிஷத்தையும் எதிர்

DJ TF52 5T 465

பார்த்துக்கொண்டே வந்தான் அவன். அவன் c6tb பிரக்ஞை குறைந்து உறைந்துபோயிருந்தது. லலிதா நெகிழ்வாகவும் கலகலப்புடனும் இருந்தாள். நிறைய ஆசைப்பட்டு சிறு விஷயங்களை விரித்தும் நீட்டிக்கொண்டும் இருந்தாள். நீடித்த குடும்ப வாழ்க்கை தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்ற பிரார்த்தனையை தெய்வ சந்நிதியில் சமர்ப்பித்த பின், தன் மனச் சுமையை சேர வேண்டிய இடத்திற்குத் தள்ளி விட்டோம் என்ற நிம்மதியில் அவள் இலேசாகியிருந்தாள். ಆTLசிவனுக்குக் காதில் ஏதோ சத்தம் விழுந்துகொண்டிருந்ததே தவிர, அதன் பொருளை கிரகித்துக் கொள்ள அவன LC50 LO ஒத்துழைக்கவில்லை. தன் கவனக் குறைவு பட்டவர்த்தனமாகாத படி, அவள் பேசி நிறுத்தும்போதெல்லாம், " சரிதான் 墨 சொல்வது ரொம்ப சரி'; 'இல்லாவிட்டாலும் அப்படித்தானே என்றெல்லாம் பொதுப்படையாக உளறிக்கொண்டிருந்தான்.

டீக்கடை வாசலில் இப்போது ஒரு சிறுகூட்டம் கூடியிருந் தது. வயது வந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர். வியாதிக் காரன் வாய்கிழியக் கத்திக் கொண்டிருந்தான். சில கெட்ட வார்த்தைகள் சாம்பசிவன் காதில் விழுந்தன. அவன் தெருவின் மறுபக்கம் நகர்ந்துவிட உத்தேசித்து குறுக்காகத் தாண்டுவது தோல்வி என்று நினைத்து, இயற்கையாய் நகரும் பாவனையில் சரிவாகத் தாண்டி இடதோரம் சென்றான். அவனும் லலிதாவும்

பிச்சைக்காரனுக்கு நேராக எதிர்ப்பக்கம் வந்தபோது, '' it பாத்தி ஒதுங்கிப்போறா பாரு. ஒதுங்கி போறாப்லே ஒதுங்கிப் போய்.” மீதி சாம்பசிவன் காதில் விழவில்லை. கூட்டத்தில்

பலர் சிரித்தனர்.

சாம்பசிவன் அறைச் சாவியை லலிதா கையில் கொடுத்து, "நீ போய் ரூமைத் திற, பின்னாலே வறேன்' என்றான். தாண்டி எதிர்ப் பெட்டிக் கடைக்கு அவன் போகப்போவதாக அவள் அனுமானித்து, 'பெட்டியிலே சிகரெட் இருக்கு’ என் றாள். 'இல்லே, நீ போ, வறேன்' என்று சொல்லிவிட்டு அவன் தெருவைத் தாண்ட ஆரம்பித்தான். நடுவில் வந்ததும் திரும்பிப் பார்த்தான். லலிதா லாட்ஜில் நுழைந்து கொண்டிருந் தாள்.

கூட்டத்தின் பின்வரிசையை அடைந்ததும் சாம்பசிவன் தலையை உயர்த்திப் பிச்சைக்காரனின் கண்களைப் பார்த்தான்.

"எப்படி இந்த வியாதி வந்ததுன்னா கேக்கறாங்க. இப் பொப் போனா பாரு அதே மாதிரியா ஒரு பாப்பாத்தி ஆசையாக் கூப்பிட்டா. போனேன் . ஒரே ஒரு நா ராவுதான். இதைத் தந்துப்புட்டா சண்டாளி.'___________________







466 சுந்தர ராமசாமி

அவன் தன் மொட்டைக் கைகளை அரைவட்டத்தில் கூட்டத்தினர் முன் நகர்த்திக் காட்டினான். சிரிப்பொலிகள் எழுந் தன. சிலர் பின்பக்கம் திரும்பி சாம்பசிவன் முகத்தைப் பார்த்தனர்.

"தந்தையே தேவிடியா, திரும்ப எடுத்துண்டு போயேன்னு வாற போற பாப்பாத்தி ஒவ்வொருத்தியையும் கொஞ்சிக் கொஞ் சிக் கூப்புடறேன். தேவிடியா தாண்டித் தாண்டிப் போறாளே ஒழிய வரமாட்டேங்கறாளே. யாருகிட்டெச் சொல்லி அழ." சாம்பசிவன் அறைக்குள் நுழைந்ததும், போனேள்?' என்று லலிதா கேட்டாள்.

சாம்பசிவன் சட்டையைக் கழற்றி நாற்காலிமேல் போட் டான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். முகஞ் சிவந்து நெற்றியிலும் மூக்கிலும் வேர்வை அரும்பியிருந்தது. மார்பும் கழுத்தும் மிகவும் உஷ்ணமாக இருப்பதாக உணர்ந்தான். துண்டால் முகத்தையும் மார்பையும் துடைத்துக் கொண்டான்.

"என்ன விஷயம்?"

"எங்கே

"என்னது என்ன விஷயம்? ஒண்ணுமில்லை." சாம்பசிவன் நாற்காலியை வராண்டாவில் இழுத்துக் கொண் டான். அறைப்பக்கம் பார்த்து, "நீ தூங்கறதுன்னா தூங்கு" என்றான்.

'நீங்க ராத்திரி கண் கொட்டலியே." 'தூக்கம் வரலே.' 'படுத்துண்டு ரெஸ்ட் எடுத்துக்கலாமே." அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 'அங்கே என்ன பாக்கறேள்?" லலிதா அறையிலிருந்து வெளியே வந்தாள். டீக்கடை முன் பிச்சைக்காரனுடைய கத்தல் உச்சக்கட்டத்தில் ஏறி களைக்கட்டிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து சிரித்துக் கொண் டிருந்தனர்.

"என்ன சொல்றான் அவன்?" 'நீ போய்ப்படு' என்றான் சாம்பசிவன். அவன் சொன்ன தோரணை அவளுக்கு உறைத்துவிட்டது. தன் எதிர்ப்பைப் பின்திரும்பிச் சென்ற அசைவுகளில் காட்டிய படி அறைக்குள் நுழைந்தாள். பெட்வrட்டைத் தரையில் விரித்து, லைட்டை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

திடீரென்று விழிப்புத் தட்டியபோது வெகுநேரம் அடித்துப் போட்டாற்போல் தூங்கிய சுகம் தனக்குக் கிடைத்திருந்ததை

݂ܬ .

6F6Ds 467

லலிதா உணர்ந்தாள். எழுந்திருந்து பாத்ரும் போய்விட்டு வந்த போது பாத்ரூம் விளக்கொளியில் கட்டில் காலியாக இருப்பது தெரிந்தது. பரபரப்புடன் அறை விளக்கைப் போட்டாள். கட்டில் மெத்தையில் ஒரு உடல் சரிந்த அடையாளமே இல்லை. மேஜை மீதிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்று. சாம்ப சிவனின் சட்டையைக் காணவில்லை. கதவுப் பக்கம் நகர்ந்து வந்தாள். அடித்தாழ்ப்பாள் கீழே தள்ளப்பட்டு வெளியே இழுத்து கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை திறக்கலாமா என்ற தயக்கத் திலேயே சில நிமிஷங்கள் சென்றன. இருமிக்கொண்டே கதவை சிறிது திறந்து எட்டிப்பார்த்தாள். வராண்டா விளக்கில் பல்பு பொருத்தப்பட்டிருக்கவில்லை. வீதியில் ஒரு லாறியின் டயரைக் கழற்றி ஏதோ ரிப்பேர் செய்துகொண்டிருந்தனர். ஒரு சிறுவன் குப்பையைக் கூட்டி எரித்து அவர்களுக்கு வெளிச்சம் தந்துகொண் டிருந்தான். காற்றிற்காக சாம்பசிவன் வராண்டாவில் படுத்திருக் கலாம் என்ற நம்பிக்கையும் இப்பொழுது குலைந்து விட்டது. நாலைந்து அறைகள் தாண்டி ஒரு ரூமில் ஜன்னல்வழி விளக் கொளி வராண்டாவில் விழுந்துகொண்டிருந்தது. மன உந்துதலை வரவழைத்துக்கொண்டு அரைச் சுவர் ஒரமாய் ஏணிப்படிகள் வரை யிலும் அவள் நடந்து வந்தாள். விளக்கு எரிந்த அறையில் ஒரு வன் அண்டர்வெயர் அணிந்து வேஷ்டியின் கிழிசலுக்குத் தையல் போட்டுக்கொண்டிருந்தான்.

ஜன்னல் வழி அவன் லலிதாவைப் பார்த்தபோது அவள் மனதில் பீதி புகுந்துகொண்டது. விரைவாக நடந்து அறைக் குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். தைத்துக்கொண்டிருந் தவன் இப்பொழுது தன் அறைமுன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. விளக்கைப் போட்டு மேஜையைப் பார்த்தாள், மணி பர்ஸ் இரவு வைத்த இடத்திலேயே இருந்தது. தலையணை களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதில் சாய்ந்துகொண் டாள். விளக்கொளியில் தனிமையில் அப்படி உட்கார்ந்து கொண் டிருக்கவும் கஷ்டமாக இருந்தது. பலர் பார்க்கத் திறந்த வெளி யில் படுத்துக்கிடப்பது மாதிரி இருந்தது. தைத்துக் கொண் டிருந்தவனிடம் போய் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித் தாள். அவன் மீது சந்தேகமாக இருந்தது. தன்னை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதான் எந்த விதத்திலும் நியாயமாகப்பட்டது. தன்னுடைய உணர்ச்சிகளை அவன் எப் போதுமே மதித்ததில்லை என்று நினைத்துக்கொண்டாள். இது பற்றிப் பேச்சு எழும்போது இவ்வாறு கலவரம் அடைந்தது ரொம்பவும் அசாதாரணம் என்று அவனால் ஆக்கிவிட முடியும். அதற்கு அவசியமே இருக்கவில்லை என்று வாதாடவும் அவனால்S சுந்தர ராமசாமி

முடியும். என்ன அவசரம் என்பதை அவளால் யோசித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளால் யோசிக்கவே முடிய வில்லை. "இப்படிச் செய்திருக்க வேண்டாம்' என்ற ஒரு வாக் யத்தையே அவள் மனம் ஜபித்துக்கொண்டிருந்தது. சாம்ப சிவனின் தாத்தாவும், சின்ன அண்ணாவும் ராத்திரியில் கானா மல்போனார்கள். ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து மறைந்து போனார்கள். வெளியூரில் ஒரு ஒட்டல் அறையில் தன்னை சாத்திப்போட்டுவிட்டு அவள் கணவன் மறைந்து போவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவளுக்குத் தூக்கம் வந்தது. அது எப்பொழுதும் வரும் தூக்கமல்ல என்றும் மயக்கம் தான் வருகிறது என்றும் அவள் நினைத்துக் கொண்டாள். கதவு சாத்தியிருக்கும் நிலையில் மயக் கம் போட்டுவிட்டாலும் கூட ஆபத்து எதுவுமில்லை என்று அவ ளுக்குத் தோன்றிற்று. அவளுக்கு பெரிய அண்ணாவின் நினைவு வந்தது. இன்று அவர் உயிரோடு இருந்து இதுபற்றி அவள் சொல் லியிருந்தால் "மடையன், மடையன் படிச்சமுட்டாள்' என்று சாம்ப சிவனைத் திட்டியிருப்பார். அவர் அந்த அறையில் அவளுடன் தன் கண்களுக்குத் தெரியாமல் இருப்பது மாதிரித் தோன்றிற்று. வீட்டு ஹாலிலிருந்த அவருடைய படத்தை மனசுக்குள் கொண்டு வந்து, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தது என்பதை நினைத்துப்பார்க்க முயன்றாள்.

கதவை விரலால் சுண்டும் ஓசை கேட்டது.

"யாரு?"

"நான் தான்."

சாம்பசிவன் குரல்தான்.

லலிதா கதவைத் திறந்தாள்,

சாம்பசிவன் உள்ளே வந்து தன் ஊன்றுகோலை உயர்த்தி, 'இதால் அவனைத் தாக்கினேன்' என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று புரிந்தது.

என்ன அசட்டுத்தனம்? ஏன்? எதுக்கு?

சாம்பசிவம் விளக்கை அனைத்துவிட்டு அவளை இறுகத் தழுவியவாறு கட்டிலில் சாய்ந்தான். அவனுடைய அந்த இரவு நடததைகள தன கணவனுடையதாக அவளுக்குப் படவில்லை. ஒரு தாக்குதலாகவே அது ஆரம்பமாயிற்று. ஒரு முரட்டு ஜென்மம் அவன் உடலில் புகுந்துகொண்டு வந்திருப்பது மாதிரிப்பட்டது. அவனுள் ஏதோ ஒன்று உடைபட்டது போலிருந்தது. அவனும் ೨೩೮. தாத்தாவும் சின்ன அண்ணாவும் கட்டிக்காத்த எல்லா விரதங்களையும் அவன் அவள் உடல் மூலம் கிழித்துக்கொண்டிருப்

JTFG)GT 46.9

பது மாதிரிப்பட்டது. மூச்சுத்திணறித் தான் இறந்துபோகக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. தன் உடலில் பல இடங்களில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதுமாதிரி அவளுக்குப் பட்டது. தன கைகளால் அவன் மார்பைப் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளினாள். அவளால் அவனைத் தள்ள முடியவில்லை.

அறைக் கதவை யாரோ தட்டினார்கள். விடிய ஆரம்பித்திருந்தது. லலிதா எழுந்திருந்து பாத்ரும் கதவுக்குப் பின்னால் மறைவாக நின்று கொண்டாள்.

அவன் பாத்ரூம் வாசலில் வந்து நின்றான். அவள் சாரி யைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

'போலிஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்திருக்கிறதாம். பேசிவிட்டு வறேன்' என்று சொன்னான் அவன்.

அவன் வராண்டா வழி செல்வதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு அவன் உருவம் மறைந்ததும் லலிதா அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். O

ஞானரதம் 1973

Scanned by CamScanner%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


-

o