தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, October 27, 2019

நீல. பத்மநாபன் நேர்காணல் - சுபமங்களா எப்ரல்-1994 |சந்திப்பு: சா. பாலசுப்பிரமணியன்


உங்கள் இளமைக் காலத்தைப் பற்றிக் கொஞ்சம் கூறுங்களேன்? - 

என் பிள்ளைப்பிராயத்தைப் பற்றி எண்ணும்போது மறுபடியும் அந்தப் பிராயத்திற்கே இரும்பிப் போய்விட மாட்டோமா என்று என் நெஞ்சம் விம்முகிறது. அந்த அளவிற்கு அது இனிமையாக இருந்தது. எப்போதும் கலகலப்பாக இருந்த தெரு. ஓடி விளையாடத் தடை இல்லாமல் மனசில் தோன்றுவதையெல்லாம் பரிமாறிக்கொள்ள ஒத்த வயசுடைய நண்பர்கள். வீட்டில் பாசமும் பாதுகாப்புணர்வும் தர அப்பா, அம்மா, பாட்டி, அடிக்கடி சண்டை போடவும் சமாதானம் அடையவும் வீடு நிறைய தம்பி, தங்கைகள். நான் பாக்கியவான். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். தெருவின் பின்பக்கமிருந்த நாடகக் கொட்டகையிலிருந்து இரவில் சதா நேரமும் வந்து தெருவில் நிறையும் இசைவெள்ளம், வசனம், ரசிக மகா ஜனங்களின் ஆரவாரம், உன்னைப் போல் உன் பக்கத்து வீட்டுக்காரனையும் சிநேகம் கொள் என்ற சொல்லுக்கேற்ப சந்தோஷமும், துயரமும் தெருவில் வீட்டுக்கு வீடு தனியாய் இருக்கவில்லை. அது எல்லோரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த காலம். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி தனக்குள்ளே சுருங்கிக் கொள்ளாமல், அடுத்தவர்களின் சுகதுக்கங்களை, கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து கொள்ள, அதன் தீர்வுக்காகத் திட்டமிட, சிந்திக்க, நான் அறியாமலேயே ஓர் பயிற்சி காலமாய் என் இளமைக்காலம் அமைந்திருந்ததாய் இப்போது யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது.... என் கலை இலக்கிய வாழ்வுக்கு உத்வேகமாய் உதித்த சின்ன, பெரிய எத்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகள்... நினைவுகள்... பக்கத்திலிருந்த கோயில், குளம், அரச மேடை, நித்ய நூதனமாய் தெருவில் வீட்டுக்கு வீடு அரங்கேறும் சுவாரஸ்ய மிக்கதும், உப்புசப்பில்லாததுமான விஷயங்கள் இப்படி.... இப்படி.... என் உணர்ச்சிமிக்க என் இளமை உணர்வைப் படைப்பாக்கங்களுக்குப் பிரவகிக்கச் செய்யக் காரணமாய் அமைந்த உரச் செழுமைமிக்க மண்ணும் மனிதர்களும்... நான் பாக்கியவான்... மகா பாக்கியவான். 

கேரளத்தில் நீங்கள் நிலைகொண்டது ஏன்? 

என் பாட்டனார். அதாவது அப்பாவின் அப்பா வியாபார விஷயமாக கன்யாகுமரி ஜில்லாவிலிருந்து திருவனந்தபுரம் வந்தார். அப்போது கேரளா என்ற மொழிவாரி மாநிலம் அமையவில்லை. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதிதான் இன்றைய கன்யாகுமரி. அது அன்றைய திருவனந்தபுரம் ஜில்லாவின் கூடச் சேர்ந்த பாகம். தனி ஜில்லா அல்ல. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரான, தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாபபுரத்தைச் சுற்றிய சிற்றூர்களிலிருந்து புதிய தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வியாபாரிகளும், உத்தியோகஸ்தர்களும், மாணவர்களும் வருவது சகஜமாக இருந்தது. இவ்விடங்களில் புழங்கும் தமிழ், மலையாள மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாய் இணைந்தே செயல்பட்டது. என்பாட்டியின் பூர்வீகம் திருவிதாங்கோடு. இது தக்கலைக்குப் பக்கத்தில் உள்ள கேரளபுரம் எனும் இடத்தை ஒட்டிய சிற்றூர். இந்தப் பின்னணியில்தான் என் வேர் மலையாள மண்ணில் ஓடியது.... - 


உங்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளான 'தலைமுறைகள்', 'பள்ளி கொண்டபுரம்' நாவல்களின் பின்னணி பற்றியும்.... எழுதப்பட்ட பின் அந்தப் படைப்புகள் தந்த அனுபவங்களைப் பற்றியும் சொல்லுங்களேன்! 

0 முதலில் தலைமுறைகளைப் பற்றிச் சொல்கிறேன். திருவனந்த புரத்திற்கு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் குடிவந்த போதிலும், தாய்த்தமிழகமாக உள்ள தொப்புள் கொடித்தொடர்பை அறுக்க முடியாமல், தெரியாமல் ஒருவித இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்ந்து தீர்க்கிறவர்கள் நாங்கள். பிறந்த இடத்தில் ஒரு காலும், புகுந்த இடத்தில் ஒரு காலும் என்றோ , புருஷனுக்கும். அரசனுக்கும் இடையில் என்றோ இல்லை. சற்றுகூட மேலெழும்பிய நிலையில் தத்துவார்த்தமாய்ப் பார்த்தால் 'யாதும் ஊரே, உலகமே குடும்பம்' என்றெல்லாம் சொல்வதைப் போன்ற சமரசப் படுத்தப்பட்ட வாழ்க்கை . பிறந்து, வளர்ந்த. சமுதாயத்தை இரணிய லை மையமாகக் கொண்டு விலகி நின்று, ஒரு மனித இயலாளனின் நோக்கில், அதே வேளையில், இளமைக் காலக் கனவுகள். ஆசை நிராசைகள், தொலைந்த கலைப்பரவசத்துடன். உள்ளுக்குள்ளே உணர்ந்து, எடுத்தாள இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கதை வித்தைவிட ஒரு மனித சமூகத்தின், தலைமுறையாய், புராணமாய் (MYTH) கைமாறிக் கொண்டுவந்து சேர்ந்திருக்கும் வரலாற்றுப் பின்னணி கூனாங்காணிப்பாட்டா, உண்ணாமலை ஆச்சி, போன்றவர்களிலிருந்து திரவியின் தலைமுறைக்குள்ள இடைவெளி... இப்படி எத்தனையோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 
எழுதி முடித்த பின் கையெழுத்துப் பிரதியைப் படித்து மனம் திறந்து பாராட்டிய நண்பர்கள் நகுலனும், ஷண்முக சுப்பையாவும்... பிறகு பேராசிரியர் ஜேசுதாசனும், திருமதி ஹெப்சிபா ஜேசுதாசனும், ஜேசுதாசன் முன்னுரை எழுதித் தந்தார். இப்படியெல்லாமிருந்தும் நூல்வடிவம்தர எந்தப் பதிப்பாளர்களும் முன் வராததால், திருநெல்வேலிக்கு கையெழுத்துப் பிரதியை எடுத்துச்  சென்று, சொந்த முதலீட்டில் நூல் வெளியிட நேர்ந்தது. நூல் வெளிவந்த சூட்டோடு, அந்நாளில் டெல்லியிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த 'கணையாழிக்கு' மதிப்புரைக்கு அனுப்பி வைத்தேன். டில்லி இலக்கிய வாசகர் வட்டத்தின் முதல் மாதாந்திரக் கூட்டத்தில் கி. கஸ்தூரிரங்கன் 'தலைமுறைகள்' பற்றி விவாதித்த ரிப்போர்ட் மண்டையில் அடிப்பதைப் போல் பிரசுரமாகி இருந்தது அடுத்த மாத 'கணையாழி'யிலேயே. அந்நாள் வரை அம்மாமிப் பத்திரிகைகள் மூலம் இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்ட, பிராமண கொச்சை மொழியை ஆசைதீரக் கையாண்டு கொண்டிருந்த சில பிரபலங்கள் 'தலைமுறை'களின் நடைக்கு எதிராக வாள் ஓங்கியிருந்ததை அந்த  அறிக்கை பெரிதுபடுத்தியிருந்தது. நிஜமாக அந்த டில்லிக் கூட்டத்தில் நடந்தது முழுவதும் இப்போதும் எனக்குச் சரிவரத் தெரியாது. ஆனால் அதன் பின் தலைமுறைகளுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததே. அந்நாளில் க.நா.சு. டில்லியிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த தாட் (THOUGHT) பத்திரிகையில், இந்நாவலை 'நாகம்மாள்,' 'மோகமுள்', 'பொய்த்தேவு' ஆகிய மூன்று நாவல்களுடன் ஒப்பீடு செய்து, இம்மூன்று  நாவல்களை விடவும் 'தலைமுறை' ஒருபடி மேலே உயர்ந்தது என்று எழுதி இருந்தார். அவர் ஒரு ஊக்கத்திற்காக அப்படிச் சொல்லி விட்டதால் நான், சண்முகசுந்தரம், தி. ஜானகிராமன், க.நா.சு. ஆகியோரை மிஞ்சி விட்டதாய் அகம்பாவம் கொள்ளும் மௌடீகம் எனக்கில்லை . க.நா.சு.வின் பெருந்தன்மைக்குத் தலை வணங்கினேன். இதைப் போலவே சி.சு.செல்லப்பாவும் தன் 'எழுத்து' பத்திரிகையில் 1969-ல் முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து அந்த ஆண்டோடு திகைந்த 93 ஆண்டுகளில், அதுவரை வெளியான 'இருபது வருஷங்கள்', 'ஒரு புளியமரத்தின் கதை', 'மலரும் சருகும்', ஆகிய மூன்று நாவல்களுடன் தலைமுறைகளை ஒப்பீடு செய்து, 'தலைமுறை'களை, இம்மூன்று நாவல்களையும் விட உயர்ந்ததாக, சிறந்ததாக, நாவல் என்று சொல்லக் கூடியதாக இருக்கிறது என்று எழுதி இருந்தார். நாவலின் இறுதியில் வரும் குற்றாலத்தின் சாவு நிகழ்ச்சியை ஒரு களங்கமாய் விவரித்து, 'தலைமுறை'களை தலைசிறந்த நாவல் என்று சொல்லிவிடலாம். இந்த ஒரு களங்கம் மட்டும், இல்லாமல் இருந்தால் என்று எழுதியிருந்ததையும் இங்கே மறைக்க நான் விரும்பவில்லை. இப்படியே வெங்கட்சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, நா. வானமாமலை செக்கஸ்லோவியா நாட்டுப் பேராசிரியர் கமில்ஸிலபில் போன்ற பற்பல இலக்கிய விமரிசகர்களின் ஏகோபித்த புகழுரைகளும் வெளிவந்தன. ஆங்கிலம் (க.நா.சு. மொழிபெயர்ப்பு) ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் சென்றது. இதிலிருந்தெல்லாம் நான் கற்றுக் கொண்டது ஆரம்ப எதிர்ப்பிலிருந்து நிலைகுலைந்து விடலாகாது என்ற பாடந்தான். இன்று 'தேரோடும் வீதி'க்குப் பிறகும் அடி பதறாமல் இக்களத்தில் நிலைத்து நின்று பணி செய்து கிடக்க எனக்கு ஆத்ம தைரியத்தைத் தந்திருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. 
தலைமுறைகளிலிருந்து 'பள்ளிகொண்டபுரம்' முற்றிலும் மாறுபட்டிருக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் பிறந்து வளர்ந்த ஒரு நகரை நடுநாயகியாக்கி, அதன் வெவ்வேறான வீச்சுகளுக்குக் கலை வடிவம் கொடுக்க முடியுமா என்ற சோதனை. ஐதீகம். மனித மனங்களின் தர்மசங்கடங்கள், முரண்பாடுகள், ஆன்மிகத் தாக்கம், அஞ்ஞான மயக்கம் இவையெல்லாம் முன் திட்டமிடல் இன்றி இயல்பாய் இந்நாவலில் இயங்கியிருக்க வேண்டும். 'தலைமுறை'கள் போல் என்னை சிரமப்படுத்தாமல் நூல்வடிவம் பெற்றது இந்நாவல், லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் 'வாசகர் வட்டம்' மூலம். முன்பு தலைமுறைகளைத் தாக்கிய டெல்லி 'கணையாழி வாசகர் வட்டத்தில் தி. ஜானகிராமன் இந்நாவலைப் பாராட்டிப் படித்த கட்டுரை கணையாழியில் வந்தது. பரவலாய் இலக்கிய உலகிலும் வரவேற்புக கிடைத்தது. அனைத்திந்திய மொழிகளிலும், நேஷனல் புக் ட்ரஸ்ட் அந்நாவலை வெளியிட்ட போது க.நா.சு. விரிவாக ஒரு அறிமுகம் எழுதியிருந்தார். சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை என்.வி. கிருஷ்ணவாரியார் கீழே குறிப்பிட்டுள்ளவாறு அறிமுகப்படுத்தியிருந்தார். 
மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் என்னும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால் அவர்களுள் ஒருவராலும் ஸி.வி. இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரன் பிள்ளையாலோ கூட இந்த நகரின் ஆத்மாவை சிக்கெனப் பிடிக்க இயலவில்லை. மனித வாழ்வெனும் நாடகத்தை சித்திரிக்க வசதியான ஒரு பின்னணியாக, மேடையாக மட்டுமே இந்த நகரம் அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. ஆனால் நீல. பத்மநாபன் என்னும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்து தலைநகரின்  ஆத்மாவின் ஒரு தரிசனத்தைப் (COSMIC VISION) பெற முடிந்திருக்கிறது. இந்நாவலின் முக்கிய பாத்திரம் இந்த சோகக் கதையோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் நகரமே. இதுதான் இந்தப் படைப்பின் தனித்தன்மையும் மகத்துவமும் ஆகும்". 
ரஷிய மொழியில் இந்நாவலை மொழிபெயர்த்த டாக்டர். பைச்சினா என்ற ரஷ்யப் பெண்மணி, என்னையும் இந்த நாவலின் நடுநாயகமான திருவனந்தபுரத்தையும், பத்மநாப சுவாமி கோயிலையும் காண நேரில் வந்தது ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம். 

பத்து சிறந்த இந்திய நாவல்களில் ஒன்றாக உங்கள் தலைமுறைகள்' நாவலை க.நா.சு. கூறுகிறார். ஆனால் இன்று தமிழ் எழுத்துலகில் இயங்கும் சிலர் தமிழில் தல்ல நாவல்களே இல்லை என்று கூறுவது பற்றி? 

0 'மிரர்' (MIRROR) ஆங்கில இதழில் பத்து சிறந்த நாவல்கள் என்ற கட்டுரைத் தொடரில் தமிழிலிருந்து தலைமுறைகளை மட்டும் க.நா.சு.  குறிப்பிட்டிருந்தாலும், அப்போதைக்கு அப்போது தமிழில் வெளியாகும் பெயர் பிரபலமில்லாத புதியவர்களின் நாவல்கள் வரை எத்தனையெத்தனையோ பேர்களின் படைப்புகளைத் தேடிப் பிடித்து, வாசித்து, திறந்த மனத்துடன் தனது ரசனை அனுபவத்தில் திருப்தி அளித்தவை பற்றி, ஆங்கில ஏடுகளில் எழுதி தமிழுக்குத் தலை நிமிர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தலைமுறைகள் பற்றி க.நா.சு. சொல்லிவிட்டார் என்று உச்சி குளிர்ந்து நான் சும்மா இருந்ததில்லை. ஆங்கில, மலையாள மொழிகளில், வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில், தமிழின் நல்ல நாவல்களைத் தேடிப் பிடித்து அதன் நல்ல  அம்சங்களை என்னளவில் எடுத்துச் சொல்ல முனைந்திருக்கிறேன்... க.நா.சு. தம் பெயரைச் சொல்லவில்லை என்று பலருக்கும், தம் பெயரைச் சொன்ன கையோடு பெயர் தெரியாதவர்களின் படைப்புகளையும் குறிப்பிட்டு, அவர்களுக்கும் இலக்கிய அந்தஸ்து தேடிக் கொடுத்துவிட்டார் என்று சிலருக்கு அவர்மீது உளப்பூசல். இதனால்தானோ என்ன வோ அவர் மறைவுக்குப் பின்வரும் அவரின் நல்ல அம்சங்களை சௌகரியமாய் மறைத்துவிட்டு, அவர் முரண்பாடுகளை, குறைபாடுகளை , வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது சிலரின் பூரணத்துவத்திற்கான (PERFECTION) உள்ளார்த்தமான தேடல் என்று கொள்வதோ, நம்பிக்கை வறட்சியின் குரல் என்று ஒதுக்குவதோ அவரவர் விருப்பம். 
'ANTHOLOGY OF MODERN INDIAN LITERATURE.' 'MASTER PIECES OF INDIAN LITERATURE' போன்ற நூல்களுக்காக அனைத்திந்திய மொழிகளிலிருந்தும் நல்ல தீவிரமான படைப்புகளை சல்லடை போட்டுத் தேடும் சிருஷ்டி பரமான. ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெறும் இந்த நாளில், இப்படி இல்லை, இல்லையென்று மனனம் செய்து கொண்டிருப்பது தற்கொலைத்தனம் ஆகி விடாதா? - இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. உச்சமோ சாதாரணமோ சிறுகதையும் நாவலும் ஒரே திசையில்தான் சென்று கொண்டிருக்கின்றன. 
அளவுகோலுக்குத் தக்கபடி உருவாகும் ஸ்டீரியோ டைப் டு எழுத்து நாவலாக இருக்க முடியாது. ஆழமான சிந்தனைகள்தான் நாவலென்றால் கலைக்களஞ்சியத்தையோ, டாஸ் காப்பிடலையோ நாவல் என்று நவில வேண்டியது வரும். நல்ல நாவலில் சிந்தனை வெறும் Cerebral என்ற அளவில் போகாது, உள்ளுணர்வில் எங்கேனும் மறக்க முடியாத  அலைக்கழிக்கும் ஒரு நெகிழ்வை ஏற்படுத்தும். 

பிற மொழியில் உங்களுக்குப் பிடித்த நல்ல நாவல்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?

0 ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்த டால்ஸ்டாய், தாஸ்தாவஸ்கி, ஹெர்மன் ஹெஸே, போன்றவர்களின் நாவல்களைப் படித்திருக்கிறேன். வில்லியம் பாக்னரின் AS T LAY DYING, கோல்டிங்கின் LORD OF FLIES போன்றவை என் இருதயத்தைத் தழுவிய இதிகாசங்கள். மலையாளத்தில், எம்.டி. வாசுதேவன் நாயரின் 'ரெண்டா முழம்', ஆனந்தின், 'மருபூமிகள் உண்டாகுன்னது' போன்ற நாவல்கள் எனக்கு முக்கியமானவை. -

நாவலுக்கு கதை அம்சம் முக்கியமா? கதை சார்ந்துதான் நாவல் நிகழ வேண்டுமா?

0 சிறுகதை, நாவலுக்கு இன்று கதை அம்சம் முக்கியமல்ல. கதை சார்ந்துதான் நாவல் நிகழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நாவல் உலகில் முழுகும் போது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் அகப்பட்டுக் கொண்டோமா என்ற பிரமிப்பை மீறி, நம்மை கலை சார்ந்த ஒரு மயக்கம் பிடித்தாட்ட வேண்டாமா? புராண இதிகாசங்கள், நாட்டுப்புற கர்ண பரம்பரையாக கைமாறி வரும் மித்துகள் (Myths) இப்படி... இப்படி... எந்தச் சாக்கையும் இந்த நாவல் சாக்குக்குள் திணிப்பதைப் பார்க்கிறோம். லத்தீன் அமெரிக்க நாவல்களில், இறந்து போன மூதாதையரைத் தேடி ஆவி உலகுக்குச் செல்வதைக் கூட வாசித்து அனுபவிக்க முடிகிறதே... 

தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம் இவற்றைப் போல் உங்கள் உறவுகளோ, தேரோடும் வீதியோ வெற்றிகரமான நாவல்களாக அமையவில்லையே ஏன்? 

. அப்படி நான் எண்ணவில்லை. பளளிகொண்டபுரம் வந்த புதிதில் அது தலைமுறைகளைப் போல் வெற்றிகரமாக 
அமையவில்லை என்று சொன்னவர்கள் உண்டு. தி. ஜானகிராமனைப் போல் தலைமுறைகளை விட பள்ளிகொண்டபுரம் சிறந்தது என்று சொன்னார்கள். எனவே இத்தகைய அபிப்பிராயங்களை ஒரு படைப்பாளி என்ற முறையில் அப்படியே மறுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். FIXED SOCIETY எனும் சமூக அமைப்பு சிதிலமாகி, நிலையற்றதாகி (Fluid)-க் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டம்தான் "தலைமுறைகள்", 
பளிகொண்டபுரம்' இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பிட்ட சமூகத்தை விட்டு ஒரு அனுபவத்தை, அதன் முழுமைத் தேடலுடன் உறவுகளில்' எடுத்தாள முயன்றேன். அது தோல்வியுற்றதாக நான் கருதவில்லை. 'தேரோடும் வீதி நாவலை முன் தீர்ப்பின்றி பொறுமையுடன் வாசித்தவர்கள் வேறு அபிப்பிராயம் சொல்கிறார்கள். சென்னை, பழனியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 'தேரோடும் வீதியை' எம்.பில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். .

'தேரோடும் வீதியை' எழுத நேர்ந்த அனுபவம் என்ன ?

 0 சுதந்திர இந்தியாவில் இன்று ஒரு சராசரி மனிதன் அவனுக்கு ஈடுபாடுள்ள துறையில், அது விஞ்ஞான வியாபாரத் துறைகளாகட்டும், கலை இலக்கியப் பிரிவுகளாகட்டும், கட்சி அரசியல், ஆள் சுவாதீனம், சாதி, பிராந்திய சிபாரிசுகள் எதுவுமின்றி சொந்தத் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு, ஏற்கனவே பாதுகாப்பான அமைப்புகளில் நந்திகளாய் அமர்ந்திருக்கும் அமைப்புப் பிரம்மாக்களை (ESTABLISHMENTS AND ESTABLISHED PEOPLE) மீறி முன்னுக்கு வரப் படும் பாடு, பிராண அவஸ்தை ... இதுவே இந்நாவல் எழுத என்னைத் தூண்டியிருக்க வேண்டும். .

 'ஜே.ஜே. சில குறிப்புகள்' போல் 'தேரோடும் வீதி' ஏன் வெற்றிபெற முடியவில்லை ? - 

ஜே.ஜே. சில குறிப்புகளை நான் மட்டுமல்ல, க.நா.சுவோ, நகுலனோ ஒரு வெற்றிப் படைப்பாக எண்ணவில்லை. தப்போ சரியோ ஸி.ஜே. தோமஸ் போன்ற மலையாள எழுத்தாளர்களின் பெயர்களை மாற்றி, தமிழ்நாட்டு வேஷத்தில் உலவவிட்டிருப்பதாய் ஒரு வதந்தி பரவியிருந்தும் கூட, இந்நாவலை தமிழில் 'பசுவய்யா'வைப் போலவோ, அதைவிடவோ மலையாளத்தில் பிரபலமான ஆற்றூர் ரவிவர்மா என்ற கவிஞன், தம் கவிமொழியில், தமிழ்நடையின் கம்பீரம் குலையாமல் மலையாளத்தில் மொழிபெயர்த்து 'மாத்ரு பூமி' வார இதழில் தொடராக வெளியிட்டும், அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில சிந்தனைக் கீற்றுகள், கடைசியில் கெட்டிக்காரத்தனமாய் இட்டுக் கட்டி சேர்த்திருக்கும் கால விவரண பட்டியல் இவைகளை விட்டால், ஒரு கலைப் படைப்பு என்ற முறையில் எந்தவிதத்தில் இந்நாவல் வெற்றி பெற்றிருக்கிறதோ? தேரோடும் வீதியைப் பொறுத்தவரை இன்று காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுப்பப்பட்டிருக்கும் புழுதிப் படலங்கள் அமுங்கிய பின்னர், என் முந்தைய நாவல்களைப் போல் இந்நாவலையும் கலை உலகம் ஏற்றுக்கொள்ளும் என்பதே என் நம்பிக்கை.

உங்களது பல சிறுகதைத் தொகுதிகளைப் போலவே உங்களின் மூன்று கவிதைத் தொகுதியும் வெற்றி பெறவில்லையே ஏன்? 

வெற்றி பெறவில்லை என்று யார் சொன்னார்கள்? பத்திரிகைகளில் வெளியான திறனாய்வை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள் என்றால் POETRY TIME. PATRIOT, நண்பர் வட்ட ம், PRATHIPA INDIA, INDIA MAGAZINE, எல்லாம் பாராட்டி இருக்கிறார்களே! வாசகர் கடிதங்கள் என்றால் அதையும் காட்டத்
தயார். ஆங்கில, இந்தி, மலையாள தொகுப்பு நூல்களுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல அபிப்பிராயத்தைத் தேடித் தந்திருக்கின்றன. ஒரு முழு அனுபவத்தை, வாழ்க்கையைப் பற்றியுள்ள அகண்ட பார்வையை நாவலில் பரந்தும், கதையில் சூட்சுமமாகவும் மறு படைப்புப் பண்ண முயல்வது போல், நெஞ்சில் மிதக்கும் எண்ணப் பொறிகளை சுருங்கிய சொற்களில், கவிதையில் எடுத்தாள்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னே நான் சிறு கவிதைகளையும் எழுதி வருகிறேன். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. - 

தமிழ்-மலையாள இலக்கிய உலகில் நிகழும் நவீன முயற்சிகளைப் பற்றி....? 

மலையாள இலக்கிய உலகில் எல்லாவித சோதனை முயற்சிகளுக்கும் இடமுண்டு. பத்திரிகைகளும், பதிப்பகங்களும், பெயர் பிரபலமில்லாவிடினும் புதியவர்களின், இளையவர்களின் சோதனைப் படைப்புகளை வெளியிடுகின்றன. பத்திரிகை ஆசிரியர்களும் திறனாய்வாளர்களும், திறந்த மனதுடன் இப்படைப்புகளின் நவீனத்தன்மையைச் சிலாகித்து விரிவாய் திறனாய்வு செய்கிறார்கள். பிற மொழிக்காரர்களிடம் இப்படைப்புகளைப் பற்றிச் சொல்வதிலோ, மொழிபெயர்ப்புகளுக்கு வழிவகுப்பதிலோ தயக்கம் காட்டுவதில்லை. தமிழ் இலக்கிய உலகு பற்றி நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிந்ததுதானே! 

திருவனந்தபுரவாசம் உங்கள் இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது? 
விலகி நின்று சுய விமரிசன நோக்கோடு நம்மைப் பார்க்க, பிறமொழி இலக்கியத்துடன் ஒப்பீடு செய்ய ஒரு அளவிற்கு உதவியிருக்கிறது. பிரகிருதி என்கிறோமே இயற்கை அன்னையை ஒரு கலைஞன் என்ற முறையில் அவள் உபாசகனாக இருக்கப் பிரியப்படுகிறவன் நான். முற்றிலும் அழிக்கப்படாத மரங்கள், பசுமை, இதமான தட்பவெட்ப நிலை, பழக்கப்பட்ட பாதைகள், மனிதர்களின் எளிமை, இப்படி.... இப்படி... இங்கேயே முடிந்து விடத்தான் ஆசை ....

'தற்கால மலையாள இலக்கியம்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்குப் பிறகு ஏன் மொழிபெயர்ப்பில் தீவிரம் காட்டவில்லை? சாத்திக் கிடக்கும் பல சாளரங்களைத் திறக்க வேண்டியுள்ளதே? 
0 சத்தியம்தான். எதையெல்லாம் செய்வது? சொந்தமான எழுத்துக்கே நேரம் போதவில்லை. இருந்தும் வாசிக்கும்போது அதை நம் மொழிவாசகர்களுக்கு எட்ட வேண்டும் என்று தோன்றும் படைப்புகளை கூடிய மட்டும் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சிப்பதுண்டு. மொழிபெயர்ப்பை நன்றாக, மூல ஆசிரியர்களின் கலைநுட்பம் கெட்டுப் போகாமல் செய்வது என்பது மிகச் சிரமமானது. நிறைய நேரம் எடுத்துச் செய்ய வேண்டிய வேலை இது. நாராயண குருசாமிகளின் 'குருவாணி' போல், நான் மொழிபெயர்த்த மலையாளக் கவிதைகளை சமீபத்தில் வெளியான 'பெயரிலென்ன' என்ற என் கவிதைத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன். 
சாகித்ய அகாதமி பரிசு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டா? 
0 இருபத்தி ஐந்து, முப்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்தது. 

நகுலனுக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி? 

முப்பதாண்டு காலத்துக்கும் மேலான நட்பு. அபிப்பிராய வித்தியாசங்களுக்கிடையிலும் அணையாமல் தொடரும் நட்பு. நல்ல எழுத்துக்களையே தேடிப் படிக்க, அவை பற்றிப் பேச, எழுத, இந்த வயசிலும் அவர் தயங்குவதில்லை . 

மலையாளத்தில் எழுதுவதுண்டா ?
நான் மழலை பேசி வளர்ந்த இயல்பான, தன்னிச்சையான, தாய்மொழியான தமிழில் எழுதும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. கூடிய மட்டும் அதை நான் இழக்க விரும்பவில்லை. இங்கே திருவனந்தபுரத்தில், நான், நகுலன், ஷண்முக சுப்பையா ஆகியோர் சேர்ந்து செயல்பட்டு வெளியான 'குருக்ஷேத்திரம்' தொகுதிக்குப் பின், தமிழிலிருந்து சில நல்ல கதைகளை மலையாளத்தில் கொண்டு வர ஆசைப்பட்டோம். ஆக்கபூர்வமாய் தமிழ் இலக்கியத்தில் செயல்பட அன்றும் சரி, இன்றும் சரி, ஆட்கள் குறைவு. பல கொம்பர்களுக்கு எல்லாம் நானே என்ற அகம்பாவம். தனி மரம் தோப்பாகாது என்று தெரிந்து இவர்கள் செயல்படாத காரணத்தால், இந்தியாவில் பிற மொழிகளில் நம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இலக்கியத் தகுதியை உதாசீனம் செய்து, வேறு பல காரணங்களால் மலையாளம் உட்பட வேறு இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பவை நம்மை மேலும் கீழிறக்குகிறவையாக இருந்ததால், எங்கள் மலையாள மொழிபெயர்ப்புத் திட்டம் கைகூடாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. இத்தகைய கட்டத்தில்தான் 'உமக்கு நாம் சளைத்தவர்களல்ல  என்றதோர் வைராக்யத்தில் அந்த மலையாள மொழிபெயர்ப்பு வேலையை நான் மேற்கொண்டேன். 'குருக்ஷேத்ரம்' தமிழ்த் தொகுதியிலிருந்து கிடைத்த முழுப் பணத்தையும் செலவிட்டு 'குருக்ஷேத்ரம்' என்ற அதே பெயரில் மலையாளத்தில் வெளியிட்ட இந்தத் தொகுப்பின் மூலம்தான். முதன் முறையாக மௌனி, க.நா.சு, நகுலன், சி.சு. செல்லப்பா , ந. முத்துசாமி, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, ஷண்முக சப்பையா, காசியபன் என கதைகள் கேரளத்திற்கு அறிமுகமாயிற்று. இப்படித்தான் என் மலையாள மொழிப் பிரவேசம் ஆரம்பமாயிற்று. பிறகு என்.வி. கிருஷ்ண வாரியார், குஞ்சன்பிள்ளை, குப்நன் நாயர் போன்ற மலையாள இலக்கிய ஆசிரியர்களின் விடாத தூண்டுகோலும், ஊக்கமும் காரணமாய், மலையாளத்தில் நாற்பது கதைகளும் ஒரு நாவலும் எழுதினேன். அவை புத்தகங்களாக வந்துள்ளன. 
கேரள பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது? - கேரளத்தில் பத்திரிகைகளுக்குப் பஞ்சமில்லை. காதல், தியாகம் போன்ற ரொமான்டிக் அம்சங்களை, படிக்கிறவர்களைக் கிளுகிளுக்க வைக்கும் சுகத்துடன் கையாளுவதால் 'பைங்கிளிக் கதைகள்' என்று அழைக்கும் கதைகளை அதிகமாய் வெளியிடும். இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள இதழ்களான 'மலையாள மனோரமா', 'மங்களம்' போன்ற பத்திரிகைகளின் கதைகள் கூட, தமிழ் ஜனரஞ்சக பத்திரிகைகளில் வெளியாகும் கலை மென்மையோ, உருவ அடக்கமோ அற்ற பார்முலா வெளிப்பகட்டுக் கதைகளை விட எவ்வளவோ மேலே நிற்கின்றன. காரணம் என்ன? தரமான எழுத்தாளனுக்கும் தரமான வாசகனுக்கும் இடையில், கலை அனுபவத்தைப் பொறுத்தவரையில் பெரிய வித்தியாசம் இல்லை. எழுத்தாளன் அனுபவித்து எழுதியதை வாசகன் வாசித்து அனுபவிக்கிறான். எனவே ஒரு பத்திரிகை முதலாளி எழுத்தாளராக இல்லாவிடிலும் நல்ல ஒரு வாசகனாய் இருந்தால அந்தப் பத்திரிகையில் நல்லவை வெளிவரும் வாய்ப்புண்டு. முன் விதிகளுடன் எழுத்துக்களை அணுகும் எழுத்தாள - ஆசிரியனை விட, ஒருவேளை மேற்படி பத்திரிகை முதலாளி ஒரு படி மேலே சென்று விடவும் கூடும். மலையாள மனோரமா பத்திரிகையின் சாரத்தியம் வகிக்க இலக்கியத் தரமிக்க 'உறுபு' (பி.ஸி. குட்டிக்கிருஷ்ணன்)-வை ஆசிரியராக நியமிக்க அந்தப் பத்திரிகை நிர்வாகம் முன்வந்தது. மாத்ரு பூமி, குங்குமம் (இதன் ஸ்தாபகர் ஓர் தமிழர். கிருஷ்ணசாமி ரெட்டியா) பத்திரிகைகள் என்.வி. கிருஷ்ண வாரியாருக்கும். இப்போது மாத்ரு பூமி, எம்.டி.. வாசுதேவன் நாயருக்கும் ஆசிரியர் பதவியை அளிக்க முன்வந்தது. குங்குமத்தின் இப்போதைய ஆசிரியர், நவீன மலையாள இலக்கியத்தில் புகழ்வாய்ந்த இடதுசாரி விமர்சகர் பேராசிரியர் எம்.கெ. ஸானு. 'கலா கௌமுதி' பத்திரிகையின் ஆசிரியர், நவீன மலையாள இலக்கியத்தின் சகலவிதமான சோதனைகளுக்கும் திறந்த மனதுடன் இடம் கொடுக்கும் எஸ். ஜயசந்திரன் நாயர். இதற்கெல்லாம் மேலே. 'மலையாள மனோரமா' நிர்வாகத்தின் 'பாஷா போஷிணி' மாதப் பத்திரிகையில் நமது சின்ன இலக்கியப் பத்திரிகைகளில் கூட இயலாத தீவிர, விரிவான, ஆழமான இலக்கிய விவாதங்கள், கதைகள் வெளியாகின்றன. இத்தகைய ஓர் சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறதா? இனியொன்று, மலையாளப் பத்திரிகைகள், ஒரு எழுத்தாளன் 
தன்னளவில் உருவாகி, அவனறியாது அவனிடம் ஒளிந்திருக்கும் பலங்களுடன், பலகினங்களுடன் தன்னிச்சையாய் பல்வேறு திசைகளில் விகாசம் பெற அனுமதிக்கின்றன. ஆக, பத்திரிகை ஆசிரியனின் விருப்பு வெறுப்புகள், முன் விதிகள், இவைகளையெல்லாம் மீறி, எழுத்தாளனை அப்படியே உட்கொள்கின்றன. தமிழ்நாட்டில் பெரிய, சின்ன பத்திரிகைகளில் இது சாத்தியமா? மலையாளத்திலிருந்து மாறுபட்டு சின்ன பத்திரிகைகள் புதுசு புதுசாய் தமிழில் தோன்றிக் கொண்டிருக்க இதுவும் ஒரு காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டு பத்திரிகைச் சூழலில் நடக்கும். தம்மை துதிபாடுகிறவர்களுக்கு ஆடிக்களிக்க, பத்திரிகையில் இடம் கொடுக்க கௌரவமிக்க ஆசிரியர் பதவிகளைப் பயன்படுத்தல், நமக்கு வேண்டாதவர்களை வசைபாட, ஆள் சேர்க்க, முதல் முடக்கி பத்திரிகை 
ஆசிரியர் ஆவுதல் போன்ற மொழிக்குத் தீமை பயக்கும் கைங்கரியங்கள் இங்கே நடைபெறுவதில்லை . சின்னச் சின்ன (Petty) அக்கப்போர்களை விடுத்து, உயர்ந்த லெவலில் இலக்கிய வளர்ச்சியைப் பார்ப்பதால், அவர்களுக்கு இது சாத்தியமாகிறது. 
அற்ப விஷயங்களுக்காக, புத்தியைத் தீட்ட மனமின்றி கத்தியைத் தீட்டி, வெகுண்டெழுந்தான் பிள்ளைகளாய் இயங்கும் சில அரசியல்வாதிகளைப் போல், கலாசார காவலர்கள் - சீரியஸான தமிழ் எழுத்தாளர்கள் - இயங்குவது மொழிக்கு நன்மை பயக்குமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்படிச் சொல்வதினால் ஆரோக்கியமான இலக்கிய விவாதங்களை நான் வரவேற்கவில்லை என்று பொருள் கொண்டுவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 
சந்திப்பு: சா. பாலசுப்பிரமணியன் 
படங்கள்: ஓவியர் ப்ரதீப் 
சுபமங்களா எப்ரல்-1994 |
________________________________________________________________________________
க.நா.சு. விவகாரத்தில் 

க.நா.சு. வாசகரா? நிச்சயம் மாபெரும் வாசகர். ஆனால் வாசிப்பை வைத்துப் பயமுறுத்தியவர் என்ற வாதம் செல்லுபடியாகாது. தேவைக்கு மேல் எங்கும் அவர் நூல்களையும், நூலாசிரியர் பட்டியலையும் தூக்கி வைத்தவர் அல்லர். அவருடைய கட்டுரைகளை அவருக்கிணையாகக் கூறப்படும் பிற விமரிசகர்களின் கட்டுரைகளுடன் வெறுமே ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். அவருடைய புத்தக அறிவின் ஓரத்தைக் கூட தொடமுடியாதவர்கள் இன்று, கட்டுரையை விடவும் பெரிய நூற்பட்டியலை வெளியிடுகிறார்கள். 
க.நா.சு.வின் பட்டியலில் ஊசலாட்டம் உண்டா ? உண்டு. அவருடைய முடிவுகளில் பிழைகள் உண்டா ? 
ஆம், உண்டு. அவர் பலவீனங்களும், தனிநபர் சார்ந்த பிரிவுகளும் உடையவரா? ஆம், நிச்சயமாக. 
ஆனால் இதையெல்லாம் அவருடைய எதிரிகளை விட பரமசீடர்களே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீடர்களை தமிழில் உருவாக்கியதே அவருடைய சிறப்பு. 
க.நா.சு.வின் முடிவுகளுக்குப் பின்னால் எந்த அழகியல் சித்தாந்தமும் இல்லை. எனவே அவரை விமரிசகர் என்று கூறலாகாது என்கிறார் சுந்தரராமசாமி. அது முற்றிலும் உண்மை . "அவற்றில் பெரும்பகுதி சுயரசனையின் வெளிப்பாடுகள், சிறுபகுதி நடைமுறைத் தந்திரங்கள் சார்ந்தவை" என்கிறார். இதுவும் வெளிப்படை. 
ஆயினும் க.நா.சு. தமிழில் இன்றும் ஒரு சக்தி அதற்கான காரணங்கள் : தாட்சண்யமின்றிக் கூறப்படும் கருத்துக்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படைப்பு என்பது முதன்மையாக ஓர் அழகியல் நிகழ்வு. அதை அப்படியே அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் - சமூக கருத்துக்களின் அடிப்படையில் இலக்கியத்தை மதிப்பிட்ட, மதிப்பிடுகிற தமிழ்ச் சூழலில், மெய்யான வாசிப்பனுபவத்திலிருந்து ககைாத்த இத்தகைய ஆணித்தரமான குரலுக்கு இன்றும் மதிப்புள்ளது. க.நா.சு.வின் இக்குரலையே இன்று பெரும்பாலான படைப்புலகவாதிகள் முன்வைக்கிறார்கள். இயக்கம் சாராமல். நிறுவனம் சாராமல், அதிகாரத்துக்கு தலைவணங்காமல், பல்லிளிக்காமல், கைநீட்டர் பல் படைப்பாளி வாழமுடியும் என வாழ்ந்து காட்டியவர். 
விமரிசனம் * மேலும் மலகள் 
- கடிதம் 
படைப்பாளியாக க.நா.சு. ஒரு சக்தி அல்ல. அதை மதிப்பிட்டுக் கூறியதாக முத்துநிலவன் குறிப்பிடும் விமரிசகர்கள், க.நா.சு.வின் அளவுகோல்களை ஏற்று உருவானவர்கள் என்பது நினைவிருக்கட்டும். தன் அளவுகோல்கள் தன்னை நிராகரிக்குமளவு வளர்ந்தன என்றால், அது க.நா.சு.விற்குப் பெருமையே! 
இன்றைய இலக்கிய விமரிசன உலகில் அவருடைய இடம் ஈடிணையற்றதாக இருப்பதற்கு ஒரே காரணம், தன் வாசிப்பனுபவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை எந்த சித்தாந்தத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த நிர்ப்பந்தத்துக்கும் அவர் தராததுதான். 
- கெ. விஸ்வநாதன், நாகர்கோவில்.
_________________________________________________________________________ 
முத்துநிலவனும் மகிடபந்தனமும் 
காலத்தின் முன் நிறுத்தி கலைஞனை விமரிசிப்பது மேலான காரியமே. இலக்கிய மரபில் கலைஞர்களுக்கான இடம் நிரந்தரமானதல்ல. க.நா.சு.வுக்கும், கைலாசபதிக்கும் இது பொது நியதிதான். கலைஞன் காலத்தை எதிர்கொண்டு முன்சென்றாக வேண்டும். பின்தங்கும் கலைஞனை இனங்கண்டு, மரபிலிருந்து விடைதரும் பணியை இலக்கிய விமரிசனமே செய்தாக வேண்டும். ஓர் ஆரோக்கியமான இலக்கிய மரபில் இடையறாது நிகழ வேண்டிய பணி இது. இந்த நம்பிக்கையின் எதிர்பார்ப்பில்தான் ந. முத்துநிலவனின் க.நா.சு. குறித்த கட்டுரையை நாம் எதிர்கொள்கிறோம். 
க.நா.சு. குறித்த விமரிசனக் கருத்துக்களை ஒன்றுவிடாமல் தொகுத்து. கைலாசபதியிலிருந்து வெங்கட்சாமிநாதன் வரை எல்லோருடைய கண்ணோட்டங்களையும் ஒருசேரக் காணும் அரிய வாய்ப்பினை இக்கட்டுரையின் மூலம் தந்துவிட்டிருக்கிறார். இதைத் தொகுத்துத் தரும் முத்துநிலவனோ பார்வையற்ற குருடராகத் தடுமாறுகிறார். குறிப்பிட்ட விமரிசனங்களின் கண்ணோட்டமாக இவர் தந்துவிட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு முழுமையின் பகுதிகள். தான் தெரிந்தெடுத்துத் தந்திருக்கும் வரிகள் அந்த முழுமையை உணர்த்துகிறதா என்பதைப் 
சுபமங்களாமே -1991 
25 
பரிசீலிக்கும் அக்கறையோ, நேர்மையோ முத்துநிலவனுக்கு இல்லை . க.நா.சு. குறித்து அவர் முன்வைக்கும் மதிப்பீடுகள் அனைத்தும் காலம் காலமாக முன்வைக்கப்பட்டு பலத்த விவாதத்திற்குள்ளானவையே. புதிய கோணத்தில் விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் சக்தி கூட முத்துநிலவனின் எழுத்துக்களுக்கில்லை. 
க.நா.சு.வின் நாவல்களைக் குறித்த, மொழிபெயர்ப்புகள் குறித்த மேலோட்டமான கருத்துக்களையே தாம் இவருடையதாக இனங்காண வேண்டும். நாவலாசிரியனாக ஒரு கலைஞனை மதிப்பிடும் போது, குறிப்பிட்ட அவனுடைய ஒரு நாவலைக் கொண்டல்ல, படைப்புலகின் 
முழுமையைக் கொண்டே அவனை மதிப்பிட வேண்டும். அவனது சிகரங்களையும், சரிவுகளையும் கணக்கில் கொண்டாக வேண்டும். முத்துநிலவனோ க.நா.சு.வின் சரிவினைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறார். எந்த மேன்மையான கலைஞனையும் வாழ்நாளின் இறுதியில் அதலபாதாளத்தில் சரித்துவிடும் தமிழ்ச்சூழல் குறித்த உணர்வு முத்துநிலவனுக்கில்லை. 
க.நா.சு. மொழிபெயர்த்த நாவல்களில் பெரும்பான்மையானவை அவசியம் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டும் என்று மதிப்பிடக்கூடிய நாவல்களே. தெரிவு அவர் ருசி தொடர்பானது. பிரசுர வாய்ப்பு தொடர்பானது. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சில நல்ல நாவல்களைத் தமிழிற்குக் கொண்டுவர முடிந்தது. இதில், குறிப்பிட்ட நாவலை ஏன் மொழிபெயர்க்கவில்லை என்ற கேள்வி அபத்தமானது இல்லையா? மாறாக, க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகள் எந்த அளவிற்கு மொழிபெயர்ப்புகளாக வெற்றி பெற்றிருக்கிறது என்ற கேள்வியை முத்துநிலவன் 
எதிர்கொண்டிருக்கலாம். 
முக்கால் அளவில் இன்றைய க.நா.சு.வாக சுந்தரராமசாமியை முத்துநிலவன் மதிப்பிடுகிறார். மனித மேம்பாடு என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது சுந்தரராமசாமியின் படைப்புலகம். சுதந்திரத்தை எவ்வகையிலும் இழக்க விரும்பாத கலைமனம் அவருடையது. தன்னிலுள்ள மேன்மையை என்றாவது எழுத்தில் எட்டிவிட வேண்டுமென்ற பேராசை கொண்ட கலைஞன். 
அவ்வப்போது அபிப்பிராயங்களைச் சொல்வதே விமரிசனம் என்பதை, மதிப்பீட்டிற்கான பார்வைகளை முன்வைப்பது என மாற்றி அமைத்த இளம்தலைமுறை விமரிசகர்களில் குறிப்பிடத்தகுந்தவர். எதிர்கால கலைஞனுடையதான மொழியை எவ்வகையிலும் விணடிக்க விரும்பாதவர். இதில் எல்லாம் 
கொள்ளைக்காரர்கள் உங்கள் உயிரை அல்லது பணத்தைக் கேட் கிறார்கள். பெண்களோ இரண் 
டையுமே கேட்கிறார்கள். 
- சாமுவேல் பட்லர். 
சுந்தரராமசாமிக்கு எதிர் துருவத்தில்தானே க.நா.சு. இருக்கிறார். இருந்தும் 'தூய இலக்கிய கோட்பாடு' என்ற ஒன்றுதானே இவ்வாறு இனங்காண தூண்டுகிறது. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இதனைக் கண்டு மிரண்ட 'அசட்டு முற்போக்கின் எச்சம்தானே முத்துநிலவனிடம் மிஞ்சி நிற்கிறது. படைப்பில் நாம் தேடும் உன்னதமும், வாழ்வில் காணவிரும்பும் உன்னதமும் ஒன்றே என்ற உண்மையை இவர் எதிர்கொள்ளப் போவதில்லை. 
- எம். வேதசகாயக்குமார், பாலக்காடு, 
_________________________________________________________________________________
நீல.பத்மநாபன் சொல்வது சரியா? ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றி நீல. பத்மநாபன் தன் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது தவறான செய்தி. அம்மொழிபெயர்ப்பில் பங்கு பெற்றவன் என்ற முறையில் விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். 
ஜே.ஜே. சில குறிப்புகள் மறைந்த கேரள பேரறிஞரும் கவிஞருமான எம் கோவிந்தனைப் பெரிதும் கவர்ந்ததாலேயே அது மொழிபெயர்க்க ஏற்பாடாகியது. ஆற்றூர் ரவிவர்மாவிடம் மொழிபெயர்க்கச் சொன்னவர் கோவிந்தன்தான். மாத்ருபூமியில் தொடராக வெளியிடவும் அவர்தான் ஏற்பாடு செய்தார். மொழிபெயர்ப்பில் ஆற்றூர் ரவி வர்மாவிற்கு நான் உதவினேன். 
நாவல் வெளியாகி ஒரு மாதம் ஆவதற்குள் மாத்ருபூமியின் நிர்வாகத்தில் மாறுதல் வந்தது. புது நிர்வாகம் அதன் பொறுப்பாசிரியர் கே.சி. நாராயணனை கல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்தது. ஆசிரியராக எம். கோவிந்தனின் பிரதான எதிரியும், பழமைவாதியும், சம்ஸ்கிருத பண்டிதரும், சனாதனியுமான என்.வி. கிருஷ்ண வாரியார் வந்து சேர்ந்தார். இதைப் பற்றி 'ஜே ஜே சில குறிப்புகளின்' முன்னுரையில் ஆற்றூர் ரவிவர்மா இவ்வாறு குறிப்பிடுகிறார். 
"சில பகுதிகள் பிரசுரிக்கப்பட்டதும் வார இதழின் நிர்வாகத்தில் வந்த மாற்றம் இதைப் பாதித்தது. நான் எழுதிக் கொடுத்த வரிசைப்படி பிரசுரிக்கப்படவில்லை. வார்த்தைகளும் வரிகளும், பக்கங்களும் கூட விடப்பட்டிருந்தன. பத்திகள் முன்னும் பின்னும் சிதைத்தும், மாற்றியும் போடப்பட்டன. என் அனுமதி இன்றி இத்தகைய மாறுதல்கள் நிகழ்த்துவது பத்திரிகை தர்மம் அல்ல என்று பல தடவை நான் நினைவூட்டினேன்... பயனில்லை ..." 
ஆற்றூரின் சொற்களில் "வெளிப்படையானதோ கதையோட்டமுள்ளதோ அல்லாத ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற ஒரு படைப்பு முதல் வாசிய ராக சஞ்சாரம் தெளிந்து கிடைக்கும் தன்மை உடையதல்ல. வேகமாக வாசித்துப்போக வேண்டிய நேர்பாதை இதற்கு இல்லை. பல நீரோட்டங்கள் இணையக் கூடிய, உள்ளோட்டங்கள் நிறைந்த. பெரிய நதி போன்றது. ஆனால் முதல் அலை இறுதி வரை நீள்கிறது" இத்தகைய நூல் சாதாரணமாகவே வாராவாரம் ஆவலைத் 
தூண்டுவதல்ல. அது சிதறடிக்கப்பட்ட வடிவில் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியது. மிசு ஆவலுடன் வாசிக்க ஆரம்பித்த பலரும் அதைப் படித்து முடிக்கவேயில்லை என்பது உண்மையே. 
என்.வி. கிருஷ்ண வாரியர் மலையாள நவீன வாதத்துக்கு இத்தகைய எதிர்ப்புப் பணியை முன்பும் ஆற்றியவர். குறிப்பாக அய்யப்ப பணிக்கர் 
மதலியவர்களின் கதைகளோடு கடும் எதிர்ப்பும் இரிபு வேலையும் செய்தவர். இது பற்றிய விவாதம் எழுந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு நிகழ்ந்தது பற்றி நான் எழுதினேன். நால் மீது மீண்டும் கவனம் திரும்பியது. விளைவாக நால் சென்ற வருடம் புத்தக வடிவம் பெற்றது. 
புத்தக வடிவில் ஜே.ஜே. கேரளத்தில் உருவாக்கிய கவனம் இதுவரை எந்த தமிழ் நாவலாசிரியனும் உருவாக்காததாகும். சென்ற வருடம் கேரளத்தில் பிரசுரமான இரு சிறந்த நூல்களில் ஒன்று என்று அது மதிப்பிடப்பட்டது (மற்றொன்று என்.எஸ். மாதவனின் 'ஹிகுற்றா') 
கேரள இலக்கியச் சூழலின் மதிப்புக்கு உரியதாக தமிழிலக்கியம் இல்லாது போனதற்கான காரணங்களில் முக்கியமானது, தமிழின் அசல் ஆளுமை தெரியும் படைப்புகள் உரிய முறையில் மொழிபெயர்க்கப்படாமை. இரண்டு வகை படைப்புகளே இங்கிருந்து போகின்றன. ஒன்று நா. பார்த்தசாரதி வகை எழுத்து. இன்னொன்று நீல. பத்மநாபன் வகை எழுத்து. முதல் வகை அவற்றின் ஆழமின்மை காரணமாக ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் வகை ரசிக்கப்படுகின்றன, மதிக்கப்படுவதில்லை . காரணம் கேரளத்தில் வளர்ந்து, முழுமை பெற்ற, தூய யதார்த்தவாதத்தின் திவலைகளை தமிழ்ச் சூழலில் பிரதிபலிப்பவை இவை. மலையாளிகள் இத்தகைய நூல்களை தங்கள் பெரும் யதார்த்தவாத படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒருவித சுயபெருமிதம்தான் அடைகிறார்கள், அவர்கள் அகங்காரத்திற்கு இவை துணை போகின்றன. (ஆயினும் 'பள்ளி கொண்டபுரம்' தவிர நீல. பத்மநாபனின் எப்படைப்பும் சிறு கவனத்தையும் பெறவில்லை .) 
ஜே.ஜே. பற்றி "மலையாளியின் அகங்காரத்தை உடைக்கும் நாவல் இது" என்று கேரள இளம் படைப்பாளியான என். பாலகிருஷ்ணன் மாத்ருபூமியில் எழுதினார். “இன்று நாம் பேசும் மையமற்ற பின் நவீனத்துவரக எழுத்து நம் அண்டை மொழியில் பதினைந்து வருடத்திற்கு முன்பே அதன் சிறப்பான தளத்தைத் தொட்டிருக்கிறது என்று இது காட்டுகிறது" தமிழின் இயல்பு உரைநடையில் கவிதையின் த்வனியையும், இறுக்கத்தையும் அடைவது என்பதையும் மலையாள வாசகர்களுக்கு முதல் முறையாக இந்நாவல் உணர்த்தியிருக்கிறது என்று கல்பற்றா நாராயணன் என்ற விமரிசகர் குறிப்பிடுகிறார். தொடர்ந்து 'ஒரு புளியமரத்தின் கதை , 'நாளை மற்றுமொரு நாளே', 'இடைவெளி' முதலிய படைப்புகள் மலையாளத்தில் வருமானால் இக்கருத்துகள் மேலும் தீவிரமடையும். இதற்கு முன் ஜானகிராமனின் 'மோக முள்', 'அம்மா வந்தாள்', அசோக மித்ரனின் 'கரைந்த நிழல்கள்' முதலியவை மலையாளத்தில் வந்துள்ளன. அவை ஏதும் இத்தகைய கவனிப்பை அங்கு பெற்றதில்லை, குறைந்தபட்சம் பேசப்பட்டது கூட இல்லை. அவை நீல. பத்மநாபனின் நாவல்கள் போல கேரள ரசனைக்கு உள்ளே வருபவையும் அல்ல; அதை உடைத்து உட்புகுமளவு தீவிரமாக அறிமுகப்படுத்தப்படவும் இல்லை. மேலும் மிக முக்கியமாக, இவற்றின் மொழியின் கவிதைத் தன்மை மொழி பெயர்ப்பாளர்களால் சிதைக்கப்பட்டு, கேரளத்தின் யதார்த்தவாத மொழிநடைக்கு மாற்றப்பட்டதும் ஒரு பெரிய 
தர்மறை அம்சம். தமிழ் நாவல் மலையாளத்தில் கவிஞனாலேயே மொழிபெய் க்கப்பட வேண்டும் என்ற எம். கோவிந்தனின் கணிப்பு மிகக் 
விதி உன் உறவினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் உன் நண்பர்களை நீதான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறாய். 
- ஜாக்வஸ் டிலைலி. 
கச்சிதமானதாகும். இவ்வகையில் ஜே.ஜே.யின் மொழிபெயர்ப்பும், பிரசுரமும் ஒரு பெரிய போராட்டமும், ஒரு துவக்கமும் ஆகும். மலையாள வாசகர்கள் பலர் இன்னும் மலையாள நாவலுக்குரிய' தங்கு தடையற்ற ஓட்டமும் சரளமும் ஜே.ஜே.க்கு இல்லை என்று குறிப்பிடுகிறார்கள் என்பதும் உண்மையே. 
ஜே.ஜே. விமரிசிப்பவன். எனவே ஜே.ஜே. சில குறிப்புகள் எப்போதும் விமரிசிக்கப்படும். இத்தனை வருடம் கழிந்தும் அவதூறுகள் மூலமே அதைத் தோற்கடிக்க முயல்கிறார்கள் என்பதை விட அதன் முக்கியத்துவத்திற்கு அதிகச் சான்று தேவை இல்லை. 
- ஜெயமோகன், தர்மபுரி. 
_______________________________________________________________________________
கனடாவில் தமிழ்: விடுபட்டுப் 
போனவை 
தங்கள் 'சுபமங்களா'வின் ஜனவரி 94 இதழில் மகரந்தன் என்பவரால் 'கனடாவில் தமிழ்' என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
கனடாவில் இடம்பெறும் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான, கூட்டியும் குறைத்துமான திரிபுபடுத்தப்பட்ட, பல விஷயங்கள் இக்கட்டுரையில் இருப்பதாலும் பல விஷயங்கள் இல்லாது இருப்பதாலும் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது அவசியமாகும். உலகின் முடுக்குகளில் எல்லாம் சிதறியுள்ள இலக்கிய 
ஆர்வலர்களால் வாசிக்கப்படும் 'சுபமங்களா'விலுள்ள இக்கட்டுரையால், இங்குள்ள முயற்சிகள் பற்றிய தவறான பார்வை ஏற்படச் சாத்தியமுண்டு என்பதாலும், இவ்வாறான தகவல்கள் தவறான வரலாற்றுப் பதிவுக்கு இட்டுச் செல்லலாம் என ஐயுறுவதாலும் இதனை எழுத நேர்ந்துள்ளது. 
ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் குழுவினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழர் கலாச்சார அவை, மலையக எழுத்தாளர் சங்கம், முற்போக்கு அணி என்று தாம் தேர்ந்த கொள்கை (வர்க்கம், தேசியம். இடது. வலது ) சார்பாகப் பிரிந்து நின்ற காரணத்தால் பல தரமான படைப்பாளிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக அறிகிறோம். பல்கலைக்கழக மட்டத்து ஆளுமையும் இதற்குத் துணை போயுள்ளன. தவிர தமிழில் தரமான ஆக்கங்களைத் தந்த இவர்கள் தம் இனம் பற்றி எந்தவித ஆக்கபூர்வமான காரியங்களையும் செய்யாது மௌனத்தை மொழியாக்கி வந்துள்ளனர். 
பின்னால் வந்த இளைய தலைமுறையினர் தாம்
***
எழுதும் சஞ்சிகைகள் சார்ந்து நின்றாலும். (அலை இலக்கிய வட்டம், புதுசுகள், ஞாயிறு படைப்பாளிகள் வட்டம், தீர்த்தக்கரை வாசகர் வட்டம் என) நவீன கலை இலக்கியங்கள் பற்றி மட்டுமல்லாது தமது இனப்பிரச்சினை பற்றிய ஒன்றித்த கூரிய பார்வை அவர்களிடத்தே இருந்தது.
இதன் பிறகு போராட்டம் மக்களின் வாழ்க்கையாக போர்க்கால கலை-இலக்கிய நிகழ்வுகள் முதன்மைப்படுத்தப்பட்டன. மாறாக, கனத்த சினிமாத்தனமும் ஜனரஞ்சகமும் கொண்ட கலை நிகழ்வுகள் கூடுதலாக இடம் பெறுகின்றன. புலம் பெயர்ந்தோர் மத்தியில் ஒரு சிறுபகுதியினர் மட்டும் போர்க்கால இலக்கியம் படைப்பதோடு, நவீன கலை இலக்கிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிலரால் மண்ணின் யதார்த்த நிலைமை பின்னே தள்ளப்பட்டு இயக்க முரண்பாடுகள் முன் விகாரமாயிருப்பதால் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கும், அவர்களது போராட்டத்துக்கும் எதிரான அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இத்தன்மை கொண்ட அணி ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த அனைத்து நாடுகளிலும் இருப்பதைக் காணமுடிகிறது.
இந்த அணியைச் சார்ந்த ஒருவரால்தான் 'சுபமங்களா' வில் வெளிவந்த 'கனடாவில் தமிழ்' என்ற கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது குழந்தை ரகசியம். இவர்களைச் சுற்றி உள்ளவர்களையும், இவர்களால் நடத்தப்படுகின்ற தமிழர் வகைத் துறை வளநிலையத்தையும் மட்டும் பொதுப்படுத்தி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
வேண்டியவர்கள் பலர் வெளியே வீசப்பட்டுள்ளார்கள்.
பழம் பெரும் எழுத்தாளரான ஈழத்துப் பூராடனார். நாவற்குழியூர் நடராஜன், முன்னாள் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி, கமலா பெரியதம்பி, அங்கவை என்ற அருணா கணேசன், கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் குறமகள் க. நவம். உ. சேரன், அண்மைக் காலத்தில் எழுத்துக்காக சர்வதேச பரிசில்கள் பெற்ற அளவெட்டி சிறிசுக்கந்தராசா, ஆத்மாவின் ராகங்கள்' என்ற தரமான குறுங்காவியம் படைத்த இரா. சம்பந்தன், நாவல், சரித்திரம், விஞ்ஞானம் கவிதையென கால் பதித்த வ.ந.கிரிதரன், தொடர் நவீனங்களும் நெடுங்கவிதைகளும் யாத்த சக்கரவர்த்தி, திறமான கவிஞனும் 'சுயதரிசனம்' என்ற நூலின் ஆசிரியருமான ஆனந்த பிரசாத், 'இளைய நிலா' என்ற தமிழ் வீடியோ பத்திரிகை வெளியிட்ட நிலா குகதாசன், மற்றும் சபா வசந்தன், வீணை மைந்தன் அசை சிவதாசன், மாயவன் சின்னத்தம்பி வேலாயுதம், சம்பு என்ற சிவா சின்னத்தம்பி போன்றோர் பட்டியலில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இன்னும் நாட்டியம் தொடர்பாக நல்ல கட்டுரைகள் பல வரைந்துள்ள வசந்தா டானியல், புதைபொருள் ஆய்வுகள் பற்றி எழுதும் துருவசங்கரி...
பத்திரிகைகளைப் பொறுத்தவரை பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜை ஆசிரியராகக் கொண்ட 'மஞ்சரி' பற்றி கட்டுரையாளர் எழுத மறந்து விட்டார். இதில் வந்த கட்டுரைகளை, இலங்கை, இந்தியப் பத்திரிகைகள் மறுபிரசுரம் செய்திருந்தன. 'பாமதி'யை விட கனடாத் தமிழுலகுக்கு அதீதப் பணி புரிந்து வரும் தமிழோசை ஆசிரியர் பரமேஸ்வரன், கட்டுரைகள் தொடர் நாவல்கள் படைத்துள்ள எஸ்.கே. மகேந்திரன் ஆகியோர் தவறவிடப்பட்டுள்ளனர்.
கலை விழாக்களைப் பொறுத்தவரை, தமிழர் வகைத்துறை வள நிலையத்தின் நிகழ்ச்சிகளைப் பற்றியே கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உலகத் தமிழர் இயக்கம், தமிழ் இளைஞர் மன்றம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் மிகத் தரமான நாடகங்கள், நாட்டிய நாடகங்கயை மேடையேற்றியுள்ளன. ஞான ராஜசேகரனின் மரபு மற்றும் கைவிடப்படாதவை. தொலைவு. சுதந்திரப் பறவைகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. மேலும் எமது மோடி ஆட்ட வகையில் அமைந்த கூத்துவகை நாடகங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. இங்கு இயங்கி வரும் தமிழிசைக் கலாமன்றம் இசைத்துறைக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறது ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்று கெ கனடாவில் தமிழ் எழுதப்பட்டுள்ளதைத் தென் அறிய முடிகிறது.
உலகத் தமிழர் இயக்கத்தின் ஸ்காபரோ கிளையில் உள்ள தமிழ் நூல் நிலையத்தைக் சுட்டுரையாளர் தவற விட்டுள்ளார். மேலும் இவ்வியக்கத்தினரின் கல்வி அமைப்பினால் இங்குள்ள அனைத்து வகுப்புகளுக்குமுரிய மொழி' பாடமாகக் கற்பித்து வருகின்றனர். - இரு தலைமுறைகளுக்குப் பின்னர் தமிழ் தழை என்று கவலைப்படும் இவருக்கு இந்த மக முக்கியமான முயற்சி பற்றித் தெரியாமல் போக துர்பாக்கியமே.
கட்டுரையில் பல தரமான எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் வலம் வருகின்றனர் என்று ஒரு பெயர்ப் பட்டியல் போடப்பட்டுள்ளது. அதில் சிலர் தரமானவர்கள் தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர், தம்முடைய வேலைத் திட்டங்களில் இணைந்து செயல்படுவதால் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பாமதி என்பவர் இதுவரை என்ன எழுதினார் என்பதை அதீத வாசகனாகிய என்னால் கூட அறிய முடியவில்லை . மேலும் இப்பட்டியலில் முதன்மை இடத்தை நிரப்ப விடுவார்கள்.
|
Q

________________

எம்மவரின் ஆக்கங்கள் இடம் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆயினும் தங்கள் நல்நோக்கைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தவறான தகவல்களைக் கொண்ட கட்டுரையை எம்மவர் ஒருவர் அனுப்பியிருப்பது மிகவும் மனவருத்தத்துக்குரியது. அதைவிட இந்தக் கடிதத்தை எழுத நேர்ந்தது வேதனையைத் தருகிறது. எம்மவரின் ஒரு சிலரின் நேர்மையீனம் எதிர்காலத்தில் ஏனைய எழுத்தாளர்களைப் பாதிக்குமோ என்ற பயம் இருக்கிறது. ஆயினும் உங்கள் இதழ்களைக் கட்டு கட்டாக்கி, அதன் மூலம் காலம் காலமாகப் பாதுகாக்க வேண்டிய 'சுபமங்களா' இதழில் இவ்வகையான கட்டுரைகள் இடம்பெறாது பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கனடாவின் தமிழர் வகைத்துறை வள நிலையத்தினரின் தமிழ் எனக்குறிப்பிட்டிருந்தால் எமக்கு எந்தவிதப் பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் பொதுப்படையாக 'கனடாவில் தமிழ் என்று தலைப்பிட்டு தமது சாகசங்களை மட்டும் எழுதியிருப்பது தகாத செயல் என நம்புகிறேன்.
இந்தப் பட்டியல்காரர் முதலில் தங்கள் ஆக்கங்களை 'சுபமங்களா'விற்கு அனுப்பி வைப்பதுதான் நேர்மைமிக்கது. அவர்கள் தரமானவர்களா இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
- ப. ஸ்ரீஸ்கந்தன், ஒன்டாரியோ

சில வரிகள் பிரைமோ லெவியின் கனமான பிரம்மராஜனின் கட்டுரை புதிய செய்திகளைத் தெரிய வைத்தது. குறிப்பாக நாசிசத்தின் காட்டுமிராண்டித்தனத்தை.
- ஆர். வெங்கட்ராமன், தென்கீரனூர்.

இன்றைய நடைமுறை உலகில் நடக்கும் அரை வக்காட்டுத்தனமான லஞ்சத்தைப் பற்றி வெகு இயல்பாகவும் யதார்த்தமாகவும் முற்றிலும் ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்துக்களுடன் அமைந்திருந்தது ஜெயந்தனின் 'உனக்கொரு அய்யோ ! சிறுகதை.
- இல. அறிவானந்தம், மார்க்கயன்கோட்டை.

நவீன நாடகம் பற்றி, பதினான்கு பெண்களிடம் பட்டி கண்டு அவர்களின் படத்துடன் கட்டுரை தந்த சி. அண்ணாமலை மூலம், நாடக கலைஞர்கள் பற்றி அறிந்து கொண்டே
- ஆர். வேல்ச்சாமி, முண்டியம்பாக்கம்.
|________________

அந்த நான்காவது இசையை தமிழிசை பற்றி சிந்திப்பவர்கள்தான் தோற்றுவிக்க வேண்டும். இன்று மக்கள் திரையிசையைக் காட்டிலும் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கே.ஏ. குணசேகரன், தேனிசைச் செல்லப்பா பாடல்களை அதிகம் கிராமம் நகரம் எங்கும் காண முடிசிறது. காலம் மாறமாற மக்களும் மாறுவார்கள். அப்போது 'சிக்கு புக்கு ரயிலை' விட்டு இறங்கி விடுவார்கள்.
-இரத்தின புகழேந்தி, மருங்கூர்.

'வானப் பிரஸ்தம்' ஒரு வித்தியாசமான கதை. வாசுதேவன் நாயர் இதைக் கவிதையாக எழுதியுள்ளார். ஆரவாரமில்லாத இனிய எளிய சொற்களில் கதையை வளர்க்கிறார். ஓர் பள்ளி ஆசிரியரின் இளமைக் கனவு கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு அறுபதில் கனிவது வியப்புக்குரிய கற்பனை.
- முருகு சுந்தரம், சேலம்.
|
நாடக அரங்கில் பெண்களின் பங்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை என்ற ஆதாரமற்ற கருத்தை தவிடுபொடியாக்கி இருந்தனர் பேட்டியளித்த பெண்கள். விலை மதிப்பற்ற கலைச் சேவையில் தங்களது கைக்காசையும், நேரத்தை செலவழித்து ஈடுபட்டு வரும் இந்தப் பெண்மணிகளின் நவீன நாடகத்துறை அனுபவங்கள் படிப்பதற்குச் சுவையாக மட்டுமல்ல மற்றவர்களுக்குப் பாடமாகக் கூட அமைந்திருக்கிறது.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி

நீல பத்மநாபன் நேர்காணல் இவ்விதழின் சிறப்பு அம்சம். நேர்மையாகவும், மனம் திறந்தும் தன் கருத்துக்களைக் கூறியிருக்கிறார். 'கேரளப் பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அவரது பதில் மிகவும் சிந்திக்கத்தக்கது. அந்தப் பதிலின் கடைசி இரு பாராக்கள் தமிழ்நாட்டு பத்திரிகைச் சூழல் பற்றிய அவரது சொற்றொடர்கள் - மிக ஆரோக்கியமானவை. ஆணித்தரமானவை. அவர் குறிப்பிடும் வருந்தத்தக்க தீய சூழலை மாற்றியமைக்க இங்குள்ள கலை இலக்கியப் படைப்பாளிகளும் ஏடுகளும் முன் வர . வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
- தி.சு.சி, திருநெல்வேலி.
29
-
சுபமங்களா . மே-1994

No comments:

Post a Comment