தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 30, 2016

இடைவெளி - சம்பத் 5 Idaiveli A novel in Tamil by S. Sampath - 5

Automated Google-Ocr + half an hour proofing work for 45 to 50 days

இடைவெளி - சம்பத் 5 Idaiveli A novel in Tamil by S. Sampath  -5

காலையில் எழுந்தபோது அவருக்கு அந்தக் கனவு ஞாபகம் இல்லை. கனவு கண்டோம் என்பதுகூட மறந்துவிட்டது. ஆனால் வெற்றி எல்லையே தெரியாமல் ஓடின குதிரைக்கனவு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என்று யோசித்தார், ஒன்றும் புரியவில்லை. இது புரியும்வரை இதை விடுவதில்லை என்று சொல்லிக்கொண்டார். கனவுகளெல்லாம் எழுதப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு முடிந்து மட்டும் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஒரு காலகட்டத்தில் அவருடைய டைரிக்குறிப்பு இவ்வாறெல்லாம் இருந்தது.

இவான்ஸ் வீட்டில் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!

பீச்சில் கோபுரம் கட்டினேன்.

சாவு என்பது ஒர் இடைவெளி.

வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.

விண்மீன்களைத் தென்னைகள் மறைக்கின்றன!

நான்கு பேர்கள் கோடுகளாகிச் சமுத்திரக் கரையில் நிற்கின்றனர்.

'வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை - ஏன் ஏன் ஏன்

சாவு என்பது ஒர் இடைவெளி-அப்படீன்னா?

அன்று மத்தியானம் வேலை செய்து கொண்டிருந்தபோது காகிதத்தை எடுத்து 'குழந்தை மல்ப்ரி இலை நிறைய சுருங்கிய செர்ரி கொடுத்தது' என்று எழுதிக்கொண்டார்.

இனிமேல் விஷயங்கள் அதனதன் இடத்தில் விழ அதிக நேரம் இல்லை என்றும் சொல்லிக்கொண்டார்.

விக்ராந்தியாக எதைப் பற்றியும் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்த பத்து நாட்களை ஓட்டினார். டீ. எச். லாரென்ஸின் "விமன் இன் லவ்"வை இன்னொரு தரம் படித்தார். மனத்திற்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவனை அவர் வியந்தார். நுண் உணர்வுகள் கொண்ட எந்த மனிதனும் அவனை வியக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தார்.

அன்று ஆபிசில் அதிகாரியிடம் 'சார்! நீங்கள்
டீ. எச். லாரென்ஸ் படித்திருக்கிறீர்களா?' என்றார்.

"அவருடைய எல்லா எழுத்துகளுமே நல்ல பதிப்புகளில் இருக்கிறது! ஆனால் எங்கே நேரம் கிடைக்கிறது. தலைப்பின் பேர் ‘ஸன்ஸ் அண்ட் லவ்வர்ஸ் தானே அது. அந்த நாவலை மட்டும் படித்திருக்கிறேன் - ஆமாம் இன்னிக்கு என்ன ரொம்ப சந்தோஷமாகக் காணப்படுகிறீர்கள்' என்றார் அதிகாரி.

"கொஞ்ச நாட்களுக்கு அடிப்படை விஷயங்களில் உழல்வதில்லை என்று இருக்கிறேன்' என்றார் தினகரன்.

'நல்லது. ரொம்ப நல்லது - பிழைத்துக்கொண்டு விடுவீர்கள்’ என்றார் அதிகாரி. தொடர்ந்து முடிச்சாச்சா' என்றார்.

'ஏதோ 75 சதவீதத்துக்கு முடிவு தேறும்" என்றார் தினகரன்.

'எனக்கு 99.9 சதவீத முடிவு வேண்டும்” என்றார் அதிகாரி சிரித்துக்கொண்ட்டே. மீண்டும் திடீரென்று நினைத்துக்கொண்டு 'தினகரன் அந்த சிமென்ட் பின்னால் ஓடுவதை நிறுத்தி விடாதீர்கள்' என்றார்.

96

“சரி சார்”

அவர் ஃபைல்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சேப்பாக்கம் போனார். அனுமார் வால்போன்று இருந்தது க்யூ! சேவகனைப் பிடித்து ஐந்து ருபாய் அழுத்தினார். அவன் பின்வழியாக வரச் சொன்னான். அதிகாரிகள் நம்பரைக் குறித்துக்கொண்டார்கள். அதோடு சரி. இரண்டு வாரம் கழித்துத் திரும்பவும் போனார். அப்போதும் ஐந்து ரூபாயை அழுத்தினார். அதிகாரிகள் நம்பரைக் குறித்துக்கொண்டார்கள். ஒன்றும் நடக்க வில்லே. அவ்வளவு ஐ. ஏ. எஸ் அதிகாரிகளும், மந்திரிகளும், பியூன்களும், கிளார்க்குகளும் எதிலெல்லாமோ ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். புலி - மான் ஆட்டத்தைவிடப் பயங்கரமான ஒரு சீட்டாட்டத்தை அந்தச் செங்கல் கட்டிடத்திற்குப் பின்னால் அவர் கண்டார். "இன்னிக்கு ஜான் சார் 25 ரூபா கொடுத்தார். நாலு நாளா ஒன்னுமே காணோமேன்னேன். இந்தாடா 25 ரூபாய்ன்னார்' என்றான் ஒருவன்.

'உன்பாடு ஜாலி. நமக்குன்னு ஒன்னு வாய்ச்சிருக்கே. அதிகமா வாங்கவும் தெரியாது, கொடுக்கவும் தெரியாது' என்றான் இன்னொருவன்.

தினகரனை இவ்வார்த்தைகள் சொல்லமுடியாத அளவுக்கு வேதனை அடையச் செய்தது. ஏன் உலகம் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?

காந்தி இப்போது இங்கு வந்தால்? என்று தோன்ற ஆரம்பித்தது. ஒரு முப்பது வருடங்களில், மஹான் என்று போற்றப்பட்டவர் எப்படிப் பொய்த்துப் போனார். காந்தி இப்போது இந்த நாட்டில் ஊழல் என்று சத்தியாக்கிரகம் பண்ணுகிறேன் என்றால் நிச்சயமாக செத்துப்போக வேண்டியதுதான். சுயநலமற்ற, அடி உதை கொடுக்கத் தயங்காத குண்டர்கள்தாம் இந்நாட்டுக்கு இப்போது தேவை என்று நினைத்துக்கொண்டார். எப்படியோ கஷ்டப்பட்டு பத்து டன் சிமென்டுக்கு ‘பர்மிட்’ வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

'மூட்டைகளே அவிழ்த்துக் கொட்டிண்டுருங்கடா - கொள்ளி வாய்ப் பிசாசு திருடன்கள் - முழு மூட்டையா வர்ரதா பாருடா தினகரன்' என்று பெரிய அதிகாரி சொல்லியிருந்தார், இவருக்கு அதில் எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை. தவித்தார். அவ்வளவு மூட்டைகளிலிருந்தும் சிமென்ட் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளத்தான் செய்தார்கள். R.P.F. சரியாகக் கண்காணிக்காததால்தான் திருட்டு நடக்கிறது என்று. சொன்னார்கள். பத்திரிகைகளோ, பெரிய பணக்காரர்களையும், மந்திரிகளையும், கான்ட்ராக்டர்களையும் பற்றியே ஏகமாகச் சொல்லிக்கொண்டிருந்தன. கடைசியில் எல்லாம் 'நீ தான் திருடன் நான் இல்லை’ தினகரன் பார்த்தார்,

மெதுவாக வேலைகளில் கவனம் திரும்ப ஆரம்பித்திருந்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி, பேப்பர். ஏதோ கொரித்தல், அலுவலகத்திற்கு ஓடுதல், தலையைத் திருப்பாமல் வேலை, மத்தியானம் ஏதோ சாப்பாடு, மீண்டும் வேலை என்பதாக இருந்தார். எப்போதாவது மத்தியானம் அதிகாரியினுடைய அறையில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பொழுது தமாஷாகவே போய்க்கொண்டிருந்தது.

அவர் சாவுப் பிரச்சினையை அடியோடு மறந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அது அவரை வாட்டிய விதம் நான்கு வாரங்களாகி விட்டன. கனவுகளற்றுத் தூங்கினார். புஸ்தகங்களைத் தவிர்த்தார்.  அறிவு செயல்படாமலிருக்க அசுர கதியில் வேலையில் கவனம் செலுத்தினார். ரிசர்வ் பாங்க் போய்விட்டு வரலானார், ஜாயின்ட் சீஃப் கண்ட்ரோலர் ஆஃப் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் ஆபிசுக்கும்தான்; அங்கு மூன்றாவது ழாடியிலிருந்து கீழேயோ, இல்லை பளீரெனப் பரவிய கடலையோ பார்வையிலிருந்து தவிர்த்தார். எல்லோரிடமும் சரளமாகப் பேசினார். பி. ஜி. வோட்ஸ் வாங்கினார். முதலில் மறந்துபோய் நாலைந்து எட்கார் வாலஸ் வாங்கிவிட்டார். வேண்டாம்! அதில் பயங்கரமான கொலை வர்ணிப்புகள் வரும். அவை வேண்டாம்’ என்று கொலுப் படிகள் பக்கமாக மேலே வைத்துவிட்டார்.
98

இப்போதுதான் சாகடிக்கப்பட்ட கனவுகளை நினைவு கூர்ந்தார்: முகம் பேயறைந்தது போலாயிற்று. அவருடைய முகமாறுதல்களை பெசன்ட் நகர் பஸ் ஸ்டாப்பில் காலை வேளைகளில் கவனிக்காதவர்கள் இல்லை. ஒருநாள் கறுப்பாகக் குண்டாக ஒருவர் இவரிடம் வந்தார். அவரை அடிக்கடி_பஸ் ஸ்டாப்பில் பார்த்திருக்கிருமோ என்கிற தயாளத்தில், கண்கள் சந்தித்துக்கொள்ளும் போது கும்பிடு போட்டார். பிடித்தது அனர்த்தம்.

"நான் உங்களைக் கவனிச்சுக்கிட்டுதான் வரேன். ரொம்பவும் சஞ்சலப்படுறவரா இருக்கிங்க. ஜாதகம் இருக்குல்ல. கொண்டு வாங்க! எல்லாத்துக்கும் கிரகங்களோட சேர்க்கைதான் காரணம்! உங்களை இப்படிச் சஞ்சலப்பட வைக்கிறதே எதிலயும் தங்கவிடாம் ஒட்டுறதே இந்தக் கிரகங்கள்தாம்! சாந்தி பண்ணிடலாம். அப்புறம் இன்னொரு விஷயமும் ஞாபகத்தில் வைச்சுக்கணும். நான் சாதாரணமாக ஐம்பது ரூபாய் வாங்குறவன். ரொம்பவும் அசாதாரணமான ஜாதகங்களைச் சேர்க்கிறவன். இதில் தப்பா எடுத்துக்க ஒன்னுமில்லே. ஜாதகமும் அசாதாரணமாகத்தான் இருக்கனும், என்ன சொல்றிங்க. ஞாயிறு வர்றீங்களா அட்ரஸ் தரட்டுமா?"

மன்னிச்சுக்கோங்கோ. எங்கிட்ட கைவசம் இப்போது ஜாதகம் இல்லை, ஊர்வருந்துதான் வரவழைக்கனும்' என்றார் .

இருந்தும் இனிமேல் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அவரையும் அறியாது, கிரகங்களின் சுட்டுச் சேர்க்கையிலும், மனிதனை அது பாதிக்கிறதிலும் நம்பிக்கை விழுந்தது. எங்கோ பெளர்ணமியிலும், அமாவாசையிலும் பைத்தியங்களின் சேஷ்டைகள் அதிகமாக இருக்கும் என்று படித்திருந்தார். மனஸ் உருவாவதற்கு சந்திரன் தான் காரணம் என்பது உபநிஷத் வாக்கு இதெல்லாம் நிஜம்தான் போலும்! ஏன் இருக்கக் கூடாது? அப்படியானால் நானும் பைத்தியம் தானா? எங்கேயாவது, மனித சஞ்சாரிமற்ற, ஊருக்கு வெளியே ஒரு பிரத்தியேக இருப்பிடத்தில், ஒரு வார்டுக்குள் ஒரு அறையில் எதையோ வெறித்து நோக்கியோ, கையில் அகப்பட்டதைத் தாக்கி எறிந்தோ, தனக்குத் தானே பேசிக்கொண்டோ விந்தைகள் பல புரிய நேரிட்டால். 'இப்போது மட்டுமென்ன பெரிய மேட்டிலிருந்து பெசன்ட் நகருக்குப் பீச் ரோட்டோட

99.

உனக்குள்ளேயே பேசிண்டு நடக்கத்தான் செய்யறே! ஷு" போட்டுண்டு டில்லியில் காலையில் இரண்டு மணிக்கு எழுந்து, ஸ்ப்தர்ஜங் விமான நிலையம் வரை நடக்கல்லே! அப்படீன்னு நான் பைத்தியம்தானா?"

'பாயைக் கிழிச்சுக்கிறாப்பிலே -இல்லை - ஆனால் ஒரிரு நரம்பு, மண்டையிலே என்னவோதான் ஆயிடுத்து' என்றாள் பத்மா. மீண்டும் எல்லாமே சகஜம்டா தினகரன்' என்றாள். (எப்போதாவது அவள் "டா” கூட போடுவாள்). '‘ஆனால் நாம் நம்மை நாமே நடத்திக் கொள்றதிலே இருக்கு...!"

'அதுக்கில்லே - பத்மா, - எவ்வளவோ மருத்துவ மாணவர்களை இது விஷயமா பேட்டி கண்டாச்சு யாருமே என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா'

"எப்போதும் போல, இது விஷயமாகூட புஸ்தகங்கள் வாங்குவது தானே?”

'‘அதிலெல்லாம் நிரம்ப அந்த மாதிரியான பாடத்திற்கே உரித்தான தனிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், எளிதில் புரியாதது நிறைய இருக்கிறதுன்னு - என்ன செய்ய பத்மா?”

'ஏன் இப்படி உங்களையே அலட்டிக்கிறேங்களே?'

"அது எப்படியாவது போகட்டும். நாளைக்கு முதல் காரியமாக சாவு பாடம் நடத்தும் ஏதாவது ஒரு விரிவுரையாளரைப் பார்க்கணும்.'

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் பக்கத்திலே இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார். மானவர்களை விசாரித்து ரீடர்' அன்ற வரைக்கும் போய்விட்டார். தன்னை, "நான் ஒரு நாவலாசிரியர். பணத்திற்காக எழுதுவதில்லை. எனக்குத் கலை கலைக்காகவேதான்!' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"அப்படின்னு நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட். எனக்கும் சின்ன வயசிலேயே எழுதணும்னு ஆசை மருத்துவத்தில் நான் இரண்டாவது வருஷம் படிக்கிறப்போ ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். அதோட எங்க ஆளுங்க கலைஞனாகிறதில் அதிசயமேயில்லை. கொஞ்சம் உள்ளுணர்வு அதிகமா

100

இருக்கிறவங்களா இருந்து, நாலு பிணத்தை அறுத்தாலே போதும். லைப் பூரா தலையைப் பிச்சுக்கலாம்.

"செகோவ் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!’

“தெரியும்" என்றார் தினகரன்.

"அவனோட வாழ்க்கைச் சித்தாந்தமே செத்துப்போன மகனைப் பத்தி குதிரை கிட்ட சொல்றதில்தான் அடங்கியிருக்குன்னு நினைக்கிறேன். டீ குடிக்கிறீங்களா?'’ என்றார்.

"சரி' என்றார் தினகரன்.

அவர் மணியை அழுத்தினார்.

'போய் வாங்கிட்டு வரணும்னு வேண்டாம். நானே இப்போது டிபனுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்."

"இல்லை.-இல்லை நிக்கிறீங்களே! உட்காருங்கோ! நீங்க உங்களை அறிமுகப்படுத்திக்கிட்ட விதம் என்னை உணர்ச்சி வசப்பட வைத்துடுச்சு. உங்களை உட்காரக்கூடச் சொல்லலை. பார்த்திங்களா? எனக்கும் உங்கள் உலகத்தில் எவ்வளவு நாட்டம் பார்த்திங்களா? எது எழுதினாலும் ஒசத்திதான். சாமர்செட் மாம்தானே அது, மூன்றாம் தரமான லெக்சரராக இருக்கலாம், ஆனால் மூன்றாம் தரமான கலைஞனாக இருக்கக் கூடாது' என்று சொன்னது. நான் அவன் சொல்வதை ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு என்னமோ கலைஞன்கிற பதமே ரொம்பப் பிடிக்கும்......ஆமாம் எப்படி நீங்க உங்க முதல் கதையை எழுதினீங்க."

'அவங்களும் ஒரு விதமா வளர்ருங்கனாலும் முதல்ல உருவா கிறதென்பது தற்செயலான ஒன்னுன்னே நினைக்கிறேன்.'

"அப்படியா' என்றார் ரீடர். "நாம் எதைப் பத்தி பேசிண் டிருந்தோம்.' உள்ளே பியூன் வந்தான். "ஆறுமுகம் இரண்டு கப் டீ போடுப்பா' என்றார்.

ரீடர் பின்னால் மேஜையில் மின்சார அடுப்பு இருக்கிறது என்பதைத் தினகரன் அப்போதுதான் கவனித்தார். ஆறுமுகம் டீ தயாரிக்கலானான்.

"செகோவ் இல்லை' எனறு தொடர்ந்தார் ரீடர் "நாம எல்லோருமே ஒருநாள் போயிடுவோங்கிறதிலை நாம

101
எல்லோருமே ஒருத்தரை இன்னொருத்தர் கவனிச்சிக்கணும். ஒருத்தர் இன்னொருத்தருக்காக வாழனும்கிறத்தைதான் அந்தக் கதையில சொன்னான். அதுகூட முக்கியமில்லை. எது ரொம்ப ஆச்சர்யமான விஷயம் - சாவு அவனுக்குள் ஏற்படுத்திய உணர்வைக் கடைசி வரைக்கும் கடைசி பூச்சுவரைக்கும் துல்லியமா காப்பாத்தி வந்ததுதான் என்றே நினைக்கிறேன்” என்றார் ரீடர். தொடர்ந்து “இப்படி நாம் சொல்லுறப்பவே அவனும் ஒரு டாக்டர்ங்கிறதை மறந்துடப்படாது” என்றார், மீணடும், 'இது என்னைப் பொருத்த வரையில் மகத்தான சாதனைன்னே நினைக்கிறேன். நமக்குள்ளே ஏற்படுற துல்லியமான உணர்வுகளைக் காப்பாத்தி ஆள்கிறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அப்பிடித்தானே?'

'வாஸ்தவம்தான்' என்றார் தினகரன், தொடர்ந்து “அதுவும் பயிற்சியினாலே ஏற்படுகிறதுதான்” என்றார்.

"அதெப்படி நீங்க சொல்ல முடியும்? ஒரு வருடம் பிணங்களைப் பார்த்ததும் மனம், அறிவு எல்லாமே மரத்து விட்டது ஸார், நீங்க ஒன்னு...”

'இன்றிலிருந்துகூட அதை நீங்க வளர்த்துக்கலாம். ஒரு சமுதாயச் சூழலோட அறிவு, அதனுடைய உணர்வுகள் இதை எல்லாம் நான் மறுக்கலை நீங்க இப்போ சொன்ன தனிப்பட்ட சூழலையும் நான் மறுக்கல்லே. ஆனா நம்மால், மனமிருந்தா வளர்த்துக்க முடியும்.'

'மனஸ் ஒன்றில் விழுறதுக்கே - உழல்றதுக்கே - நம்மையும் தாண்டி ஒன்னு வேண்டியிருக்கே, அதுக்கு என்ன செய்ய மருத்துவத்துக்கும் உங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. ஆனா நீங்க என்னைத் தேடிண்டு வரல்லை. எவ்வளவு. பேசிட்டோம்! இவ்வளவுகூட மனசு திறந்து பேச முடியறதில்லை - கடவுள் அனுப்பிய வரப்பிரசாதம் நீங்க. என்னுடைய தளர்ந்த நரம்புகளில் நீங்க சஞ்சீவியா பாயுறிங்க' என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

'நீங்க மிகைப்படுத்துறிங்க' என்றார் தினகரன் சிரித்துக் கொண்டே!

டீ வந்தது.

'உங்க பேர் என்ன?”


102
'‘தினகரன்' ’

"என் பேர் வெங்கட்ராமன், என்ன விஷயம்?"

“நீங்கள்லாம் சாவைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"நாங்க நினைப்பது கிடக்கட்டும் - நீங்க என்ன சொல்ல விரும்புநீங்க - அதைச் சொல்லுங்கோ" என்றார் ரீடர் சிரித்துக்கொண்டே.

"அதேதான்'‘ என்றார் தினகரன்,

“உங்க உலகத்திலை என்ன கஷ்டம்னா முதலில் பிரத்தியேக மொழி. பிறகு விஷயங்களை விவரிக்கும் விதம். இதைத் தாண்ட குறைந்தபட்சம் ஐந்து வருடம் ஆகும். என்னோட அனுமான ஊக உலகங்களை அதிலே ராவி மொண்ணை அடிச்சுக்க விரும்பலே...”

“மேலே சொல்லுங்கோ”


'விஷயம் இவ்வளவுதான் - உங்களுடைய மருத்துவ உலகத்தில் சாவுக்குப் பொதுப்படையான காரணங்கள் என்று ஏதாவது உண்டா?'

"பொதுப்படையா? அடிப்படையா?"

'‘வாஸ்தவம்தான். அடிப்படையில்தான்! அதாவது மேலெழுந்தவாரியாக ஏதோ காரணங்கள் என்று புலப்பட்டாகூட, அடிப்படையில் சாவுக்கு ஒரே காரணம் என்று ஏதாவது உண்டோ?"

“அது, சாவைப் பற்றிய சித்தாந்த உலகம், உடற்கூறு உலகத்திலிருந்து ரொம்ப மாறுபட்டது. நியதிகள், கோட்பாடுகள், சர்ச்சைகள் எல்லாம் உள்ளது. ஆனால் அந்த நியதிகளை, சர்ச்சைகளை சோதித்துப் பார்க்காம ஒத்துக்க முடியாது” என்றார் ரீடர். தொடர்ந்து "சிகரெட்' என்றார்

"தாங்ஸ், வேண்டாம்' என்றார் தினகரன்.

"நீங்க எனன சொல்ல விரும்புறீங்க?"

"சாவு என்பது ஓர் இடைவெளி என்று நான் கணிக்கிறேன்.” என்றார் தினகரன்.


"அப்படீன்னா......?”
1O3

“……………”

'சரி... நீங்க ‘இடைவெளி"ன்னு எதைக் குறிப்பிடுறிங்க. நீள அகலம் போன்ற இடத்தையா? இல்லை ரெண்டுக்கும் நடுவுல உள்ள நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியையா?” என்றார் ரீடர்.

"என்னைப் பொருத்தவரையில் ரெண்டுமே ஒன்னுதான்.

“அதெப்படி முடியும், ரெண்டும் ஒன்னாக முடியாது. மேலும் நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. ரொம்பவும் சாதாரணமா பார்த்தாக்கூட வாயில் இடைவெளி உள்ளது. கண்ணுக்குள்ளே இடைவெளி இருக்கு. மூக்கில் இருக்கு. ஐந்து ஐந்தா விரல்களுக்கு நடுவுவ இருக்கு...ஹா...நீங்க என்ன இப்படிப் பேசறேள். உடம்புக்குள்ளே, ஒவ்வொரு உறுப்புக்கும் நடுவே நூலிழையில் மயிரிழையில் இடைவெளிகள் - கண்ணுக்குப் புலப்படாத இடைவெளிகள் கூட எத்தனை எத்தனையோ? மூத்திரத்திற்கு இனவிருத்திக்கு என்று இரண்டு இடைவெளிகள் உள்ளன. ஆசனவாய் வேறு”

ஆயாசம் மிக, தினகரன் தன்னிடத்திலிருந்து எழுந்து கொண்டார். "நான் வர்ரேன் ரீடர். மன்னிக்கவும், உங்கள் நேரத்தை வீணாக்கிட்டேன். எனக்கு என்னவோ இடைவெளிதான் சாவுக்குக் காரணம்னு படுகிறது. 'முடியுமா சாவை கடுகாட்டில் எரித்துவிட' அப்படீன்னு ஒரு தமிழ்க் கவிஞன் பிலாக்கணம் வைச்சுருக்கான். தொன்று தொட்டு, சாவை முறியடிக்க முடியலேயே! அப்படீன்னு எவ்வளவோ பிலாக்கணங்கள்! சாவை சுடுகாட்டில் எரிச்சுட முடியாதுதான்! ஆனா அதுக்குக் காரணம் அதோட இடைவெளித் தன்மைதான்.'

'எனக்குப் புரியலை' என்றார் ரீடர்.

“எனக்குப் புரியறது. ரீடர், சாவுங்கிறது ஒர் இடைவெளி தான்! இன்னமும் சரியா புரிஞ்ச பிறகு நான் உங்களுக்கு என்னோட கோட்பாட்டை விளக்குகிறேன். நான் வரட்டுமா?’’


"நீங்க விளையாடுறிங்க. ஏதோ பெரிசா ஆரம்பிச்சுட்டு சப்புன்னு விட்டுட்டுப் போறேளே? இது நியாயமா?"

"நான் என்ன செய்யட்டும்?'’ வெளியே வந்தபோது அவர் மனிதகுலத்தின் இயலாமையை வியந்தார். சாவுக்குக் காரண
ம் இடைவெளிதான் என்பது இவர்களுக்கு இவ்வளவு காலமும் எப்படிப் புரியாமல் போயிற்று. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத அவர்கள் கொடுக்கும் மருந்தை எப்படி நம்புவது?

“ஜாக்கிரதை தினகரன். பைத்தியம்னு கல்லைவிட்டு எறியப் போகிறான்கள். அவர்களுக்கும் எக்கச்சக்க முடிவுகள் கிடைக்கவேதான் அவர்கள் அவர்களுடைய தொழிலை நம்புகிறார்கள் அதனுடன் கூடப்போய் மோதாதே! அவர்கள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள். மேலும் உன்னுடைய, இதனைச் சார்ந்த கோட்பாடுகளைக்கூட முழுமையாக உன்னால் சொல்ல முடியவில்லை,

மீண்டும் புஹாரிபோய் சோர்வுடன் உட்கார்ந்தார். அவருக்கு அந்த இடமும், அதே சர்வரும்கூட முக்கியமாகப் பட்டனர்; ஒரு காலகட்டத்தில் ஒட்டகமும், புலியும் குதிரைப் பந்தியமும் முக்கியமாகப் பட்டதுபோல்!

அவர் போய் உட்கார்ந்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் இன்னொரு சர்வர் வந்தான். “அந்த இன்னொரு சர்வர் எங்கே” என்றார் தினகரன்.

“இந்த டேபிளுக்கு நாங்க இரண்டு பேர்தான். இன்னொருத்தன் இன்னும் அஞ்சு நிமிஷத்திலே வேலைக்கு வந்திருவான். சின்ன ஆர்டரா இருந்தா நானே கவனிக்கிறேன். இல்லாட்டா அவன்கிட்ட கொடுத்துடுறேன்” என்றான்.

தினகரன் பெரிய ஆர்டராகவே கொடுத்தார். அவன் அந்த இன்னெரு சர்வர் - சாவைத் தன்வாயிலாகப் பேச வைத்தவன், இருபது நிமிடங்கள் கழித்து வந்தான். வந்தவுடனேயே தினகரனைப் பார்த்து ஏதோ சொன்னான். சிந்தனை வயப்பட்டிருந்த அவர், அவனுடைய உதடு, அசைவுகளைக் கண்டாரே ஒழிய அவன் என்ன சொன்னான் என்பதைத் துளிகூடக் கேட்கவில்லை. -

அவர் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் 'இந்தாப்பா சர்வர்' என்று கூப்பிட்டார். "நீ வந்தவுடனே என்னைப் பார்த்து என்னமோ சொன்னியே என்ன?" என்றார்.


"மன்னிச்சுக்குங்க சார் - பெரிய மனுஷனோட விளையாடக் கூடாதுதான் - ஏதோ தெரியாத்தனமாக சொல்லிட்டேன் - அதெல்லாம் ஒன்னுமில்லே- டீ கொண்டு வரட்டுமா ”.

இதைவிட அவனை எப்படி வற்புறுத்திக் கேட்பது. டீ கொண்டு வந்தபோது “சும்மா சொல்லப்பா என்னவா இருந்தாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.”

"இல்லே சார் - என்ன... ஏதாவது தூக்கு தண்டனைக் கொடுத்துட்டானா? இப்படி சாம்பல் நிறமா போயிட்டிங்களேன்னேன்” என்றான் அவன்.

அவர் ஆபீசில் சொல்லிக்கொண்டு வீடு போய்ச் சேர நாலுமணி ஆகிவிட்டது. "இதோ பாருங்கோ' என்று சுண்டு விரல் உயர்த்தினார் - “இன்னிக்கு யாரும் என் வம்புக்கு வராதேங்கோ' என்றார், ‘. . . - .

பத்மா "என்னன்ன என்னாச்சு. ஏன் சட்டுன்னு வந்துட்டேள்-சொல்லுங்கோ' என்றாள்.

“ஒன்னுமில்லே, பத்மா நான் சொல்றதைக் கேளு - ஒன்னுமில்ல்லே. இன்னி ராத்திரிக்குள்ளே எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும் - ராத்திரி முழுக்க முழிச்சுண்டு: போறேன்- தூக்குக் கயிறைத் தியானம் பண்ண! போறேன்.”

ஐயயோ! இதென்ன விபரீதம்! நான் ஒரு . பாவமும் அறியாதவ. என்னன்னா இது! அடேய் குமார் ஸ்ரீதர் ஜெயஸ்ரீ உங்க அப்பாவை பாருங்கோடா! இது என்னடா திடீர் கூத்து! தேவி கருமாரி! இவருக்கு நல்ல புத்தியக் கொடும்மா - தாயே! இதோ பாருங்கோ-என்னைப் பாருங்கோ - மூணு குழந்தையை . வைச்சுண்டு..."


“சும்மா இருடீ. நான் இப்போ தூக்குப்போட்டுக்க போறதில்லே - சும்மா இரு நூலில் தத்துவம் தெரியுதான்னு பார்க்கப் போறேன்”
106

“அப்படீன்னா”

“பெட்ஷீட்டை எடு”

‘'எதுக்கு! நான் விடமாட்டேன்!' –

"கேளுடீ - சும்மா பார்த்துண்டுதான் இருக்கப் போறேன்.”

“நானும் கூட இருப்பேன்."

'சரி இருந்து தொலை."

அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. குழந்தைகளை எல்லாம் சாமர்த்தியமாக வெளியே அனுப்பிவிட்டாள்.

“இதே பார் என்னைக் கவனி" என்றாள்.

“என்ன?"

"எக்காரணம் கொண்டும் நீ மேஜையோ, நாற்காலியோ அது பக்கத்தில் எடுத்துக்கொண்டு போகக் கூடாது"

“சரி."

"தாழ்ப்பாள் போட்டுக்கக் கூடாது."

“சரி."

அவள் அரைமனத்துடன் ஒப்புக்கொண்டாள். தினகரன் அவ்வளவு உளைச்சிலிலும் அவள் முகத்தைப் பார்த்துப் பயந்துவிட்டார், சுறுக்குக் கயிறு ஒன்று தயாரித்து அதை மின்விசிறியில் தொங்கவிட்டார். தானாகவும் பிறர் கையாலும் ஆளப்பட்ட ஒரு தத்துவம் அங்கு ஆடிக்கொண்டிருந்தது.

இரவு பத்து மணிவரை அவர் பார்த்துக் அதைப் கொண்டேயிருந்தார். ஒரு பலனும் கிட்டவில்லை. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுப் படுக்கவைத்து விட்டு அவளும் வந்தாள் .

பத்தரை மணிவாக்கில் நான்காவது முறையாக பத்மா எலுமிச்சை கலந்த தேநீர் தயாரிக்கி சமையலறை போன போது இவர் அவளைப் போய் அழைத்தார். பத்மர் “இருங்கோ தேநீர் போட்டுண்டு வர்ரேன் ”என்றாள்.

107
- "இங்கே வா! பிரபஞ்ச ரீதியில் இந்த மாதிரியான எண்ணம் இதுவரை யாருக்கும் கெடச்சிருக்காது- நீதான் என் முதல் மாணவி!'

"என்ன அப்படி பெரிசா கண்டுபுடிச்சுட்டேள்."

"என்ன தெரியறது”

“தூக்குக் கயிறு.'

"தூக்குக் கயிறு நடுவிலே பார்" என்றார் அவர்,

"என்ன“

"இடைவெளி”

அந்தத் தூக்குக் கயிறுக்கு நடுவே இடைவெளி அமைந் திருந்தது.

'இதுதான் மனிதன் கழுத்தில் சுருங்குகிறது."

“'வாஸ்தவம்தான்."

"இந்த இடைவெளிதான் மனிதனைக் கொல்லுகிறது. இது தாண்டி தத்துவம்” என்றார் அவர்.

“போதும். என்னைக் குழப்பாதீங்கோ” என்றாள் அவள். தேநீரைக் கொடுத்துவிட்டு “டியர், நான் உன்னத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள்.

“போடி பைத்தியக்காரி” என்றார் அவர்.
108
அவர் அந்தத் தூக்குக் கயிற்றைக் கையில் எடுத்துக் கொண்டார். ரொம்பவும் சின்னதாக இருந்தால் கழுத்தில் நுழையாது. ரொம்பவும் பெரிதாக இருந்தால் கழுத்தில் நுழைந்தும் பலனில்லை. அதனால் ஒரு நிர்ணயிக்கப்பட்ட இடைவெளி கனத்துடன் கழுத்தைப் பற்றும் போது சாவு சம்பவிக்கிறது.

கேள்வி: இந்த இடைவெளிதான் சாவை சம்பவிக்க வைக்கிறது என்று எப்படி சொல்ல முடியும் கால் கீழே பாவாத ஒரு அசுர உண்மை உள்ளதே! –

பதில்
: வாஸ்தவம்தான் ஆனால் அதற்குப் பிறகு, நான் மேலே சொன்ன விஷயம் தான் முக்கியமாகிறது. இடைவெளிதான் மனிதன் கழுத்தில் சுருங்குகிறது. பெரியப்பாவின் குரல்வளை, கனவில் கண்ட சுருங்கிய செர்ரிப் பழங்கள் அவர் கண்களில் நிழலாடின. இடைவெளி, இடைவெளியைத்தான் சம்பவிக்கும். சுருக்குக் கயிறு அதிர்ச்சியாக, பிளக்கும் தன்மையாகக் கழுத்தில் விழுகிறது. நெஞ்சுக் குழி தளர்ந்த பெரியப்பாவின் சாவுப் படுக்கை இரண்டு மாறுபட்ட சாவுக்கும் காரணம் இடைவெளி!

ரீடர்: நீ என்னுடைய சாதாரணக் கேள்விக்குக் கூடப் பதில் அளிக்கவில்லை.

தினகரன்: வாழ்வு என்பதைப் பற்றிய என் கணிப்பு இது தான்......எந்த ஒரு பொருளும் - திடப் பொருளாயிருந்தாலும், திரவ நிலையிலிருந்தாலும்-அது உயிர்மயம் தான். இப்படிப் பார்க்கும்போது அதில் நம்முடைய இந்த ஆராய்ச்சிக்கு முன்னமேயே இடைவெளி இருந்தால், அதை நான் உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது, வாழ்வுக்கு அனுசரணையான இடைவெளியிலிருந்து முரண்படுகிற்து. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி!”

இப்போது அவரில் இன்னொரு கேள்வி முளைத்தது.

“'ஏன் இப்படி நடக்கிறது”

“தெரியாது!’

அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? அதாவது, கன பரிமாண லோகங்களில் திரவ வஸ்துக்களில் முதலிலேயே பின்னப்பட்டிருக்கிறதா? முன்னமே பின்னப்பட்டிருந்தால் அது தனியாகவே சிந்திக்க முடியாது என்று கொள்ளலாமா?

109

அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் வெல்வேறு இயற்கை நியதிகளை அது தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது. பாறைகளுக்கு உயிர் இல்லையா, யார் சொன்னது? அமானுஷ்யமான உயிர்க் குறியீடுகள் அவை! பாறைகளில் இடைவெளியைத் தோற்றுவிப்பது எவ்வளவு கஷ்டம். பாறை, உயர்ந்தும், தன்னைப் பனியால் மூடிக் கொண்டும் லட்சக்கணக்கான வருடங்கள் இடைவெளியை ஏற்படுத்த முடியாமல் சாவைக் காக்க வைக்கிறது. இப்படிப் பார்த்தால் சாவின் பொறுமைக்கு எதன் பொறுமையை ஈடுவைப்பது. மேலும் மரம்! மேலே இடைவெளிகளையே ஏற்படுத்தி (முள்ளை முள்ளால் எடுக்கணும் என்பது போல்) உன்னை வெற்றிகொண்டு விட்டதாகத்தான் மரங்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாவதில்லை. இடைவெளியே! காலனே! நான் உன்னை வணங்குகிறேன்!

மேலும், காலன், சாவு அல்வது இடைவெளி என்பது ரொம்பவும் முக்கியமாக, எப்போதுமே வெல்ல முடியாத ஒன்று! ஏன் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் உலக மக்களே' என்றார் தினகரன். ஆம். முரண்பாடுடைய இடைவெளியை -- சாவை-வெல்ல முடியாது; ஏனென்றால், உருவம் என்று வந்த பின்பு, முரண்பட்ட இடைவெளி என அது புகுவதால், இடைவெளியைக் கையில் பிடிக்க முடியாது என்பதால், சாவு வெல்லப்படாத ஒன்று.

ஒரே ஒரு சின்னக் கேள்வி: முரண்பட்ட இடைவெளி என்றால் கத்திக்காயம் பட்டால், எல்லா ரத்தமும் வெளியே அல்லவா வந்துவிட வேண்டும்.'

"இதிலிருந்து, வாழ்வும், உயிரும் தோற்றம் கொண்டு விட்ட எல்லா நிலைகளிலும், வாழ்வின் அகோர வீர்யம் தெரிகிறது. இருந்தும் காலத்தில் முரண்பாடுடைய இடைவெளியாகத் தான் சாவு தன்னை நிர்ணயித்துக் கொள்கிறது.

இடைவெளியே, சாவே! யாருமே உன்னே ஜெயிக்க முடியாது என்றுதானே வெற்றி எல்லை தெரியாது ஓடிக் காண்பித்தாய. இப்போது நான் உன்னைக் கண்டு கொண்டு விட்டாலும் உனக்குத்தான் வெற்றி. உன்னே நான் வணங்குகிறேன்! - ."

ஒருநாள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது “இன்னுமொரு கேள்வி!” என்றது சாவு.

"என்ன?” என்றார்.

“கான்ஸர் என்று உன் இனத்தவர்கள் ஏதோ சொல்கிறார்களே? அங்கு வெள்ளை அணுக்கள் வளர்ச்சியல்லவா அடைகின்றன. வளர்ச்சி அடையும் இடத்தில் இடைவெளி ஏது? நீ சொல்வது போல் முரண்பட்ட இடைவெளியே எனினும்...”

"வாஸ்தவம்தான். ஆனால் இதைப்பற்றியும் நான் சிந்தித்து விட்டேன். தண்ணீரில் கம்புகொண்டு அடித்தால் விலகவா செய்யும்? உறவுமுறைக்கு என் பாட்டி இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ரத்தமும் தண்ணீர் அம்சம் என்று கொண்டால், அங்கு இடைவெளியைச் சமைப்பது உனக்குச் சிரமமான காரியம் போலும்! வெள்ளை அணுக்களை வளரச்செய்து சிவப்பு அணுக்களின் வாழ்வுக்கு அனுசரணையாக இருந்த இடைவெளியை உறிஞ்சி விடுகிறாய்!

"மண்டியிடு” என்றது சாவு.

“மானசீகமாகவா? உடம்பாலும் கூடவா?”

“மானசீகமாகப் போதும்!”

அவர் மண்டியிட்டார். .

• • • • • • • • • • • • • • • • • • • • • •