தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 09, 2016

புல்லின் இதழ்கள் - கே.பி.நீலமணி


புல்லின் இதழ்கள் - கே.பி.நீலமணி
முதல் இரண்டு அத்தியாயங்கள்

1. அருணோதயம்

வைகறை நேரம். ஞானமும் அஞ்ஞானமும் இணைந்தாற்போல ஒளியும் இருளும் கலந்து உறவாடும் நேரம். எங்கும் இளம்பனி பெய்து கொண்டிருந்தது. புல்லன் துணிகள் வைரமுடி தாங்கி ஒளிர்ந்தன. காலை நேரத்துக் குளிர்ந்த காற்று, ஆலமரத்தின் தளிர் இலைகளை மெல்லக் “கிசு-கிசு செய்து கொண்டே ஓடிற்று. 

புலர்ந்தும் புலராத அந்த இனிய பொழுதைச் சுவாமிமலை மக்கள் உறக்கத்தில் கழித்துக் கொண்டிருந் தனர். கீழைத் தெருவில் இருக்கும் மகாவித்துவான் சுப்பராம பாகவதரின் வீடு மட்( ம் விழித்துக் கொண்டி ருந்தது. பாகவதருடைய பிரதம சிஷ்யன் ஹரி தம்பூராவை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவன் நெற்றியில் அணிந்திருந்த திருநீற்றின் நறுமணம் அறை முழுவதும் கமழ்ந்தது. அவன் உடம்பெல்லாம் மணத்தது. அவன் மனம் குருவின் தியானத்தில் நிரம்பி வழிந்தது.

 உயிர்பெற்ற விரல்கள் தழுவிக்கொண்டிருந்த தம்பூ ராவின் தந்திகளை வருடின. மறுகணம் அலையலையாகப் பரவிய நாதவெள்ளம் நிறைந்து வீடு முழுவதும் பரவி, வெளியெங்கும் வழிந்தது. அந்த இனிய நாதத்தில் தன்னை மறந்து, சுருதியுடன் இணைந்து, கணிரென்று பாடிய ஹரியினுடைய குரல் தேவகானமாக ஒலித்தது, அந்த இன்னிசையில் இளந்தென்றல் தவழ்ந்தது. 

மெல்லிய துயில் நீங்கி அன்னை காவிரி சிறு சலசலப் புடன் சென்று கொண்டிருந்தாள். அழகிய கரிய கூந்தலைப் போல, ஆற்றின் இரு மருங்கிலும் நீண்டு ஒயிலாகக் கரிய நிற மணல் படிந்திருந்தது. அதன் மீது யாரோ விண்ணி லிருந்து சொரிவதே போல வெண்மையும் செம்மையும், பொன்னிறமும் நீலமும் கலந்த நறுமலர்கள் மரங்களிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. 

ஹரி பாடிக்கொண்டே இருந்தான். தெய்வீக மணத்தைப் பரப்பிய அந்த இசையில் பிரபஞ்ச மலர் ஒவ்வோர் இதழாக மலர்ந்தது. கீழ்வானம் வர்ண ஜாலங்களை வாரி இறைத்த வண்ணம் வெளுத்து வந்தது. 

ஹரியின் அந்த இசைக்குப் போட்டியாக பாடுவதே போல் பறவை யினங்கள் இனிய குரலில் சுப்ரபாதம் பாடிக் காலைக் கதிரவனை வரவேற்றன. தாய்மை பெற்ற பெண்ணின் பசுமை அழகோடு செடி கொடி மரங்கள் பூர்ண கும்பம் ஏந்தி நிற்பனபோல் தங்கள் மலர்க் கொத்துக்களைத் தாங்கிய வண்ணம் இசையில் லயித்து நின்றன.

 பாற்கடலைக் கடைவதேபோல நாபியிலிருந்து நாதத்தைக் கொணர்ந்து ஹரி பாடிக்கொண்டே இருந்தான். அமுதமென ஸ்வரக் கோர்வைகள், அவனுடைய தொண்டை யினின்றும் விளம்ப, மத்திம, துரித கால கதிகளில் புரண் டோடிக்கொண்டிருந்தன. செங்கோளமாகக் கீழ்த் திசையில் கதிரவன் உதயமானான், கமலம் நாணத்தோடு சிரித்து மலர்ந்தது. சிருஷ்டியின் அற்புதத் தத்துவத்தை விளக்கும் மலர்கள் ஆதித்தனைச் சிரம் தாழ்த்தி வணங்கின.

 இரவெல்லாம் கடுங்குளிரில் தன் காதலை நினைந்துருகிய நிலமகளை ரவி தன் பொற்கரங்களால் தாவி அணைத்தான். அந்த மஞ்சள் நிற மேனி அழகி, வைரம் பதித்த அழகிய புல்லின் இதழ்களைத் தன் மலர் விழிகளால் பார்க்கிறாள். கதிர்கள் உயிரினத்துக்குப் புத்துயிரூட்டி வாழ்த்துகின்றன. 

ஒவ்வொரு நாளும் புறத்தே நிகழும் இந்த விசித்திர மான இயற்கையின் நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் உள்ளத்திலே கண்டு, இசையிலே தோய்ந்து ஹரி அநுபவித்துப் பாடிக்கொண்டிருந்தான். இசையிலே பிறந்து இசையிலே முடியும் இந்த உலகில் ஒவ்வோர் அங்கமும் இசையின் அம்சமே அல்லவா? பூபாளம், தேவக்ரியா, ரேவகுப்தி, தேவகாந்தாரி என்று மாறி மாறி, ஆனால் அதன் அதன் உண்மை உருவம் சிறிதும் மாறாமல், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, ஞானத்தின் சிறப்பை எடை போட்டுப் பூரணத் தன்மையுடன் முறைப்படி அவன் இசைத்துக் கொண்டிருந்தான். 

தன்யாசியை அவன் பாடிக் கொண்டிருந்தபோது பூமியில் தெளிவு பளிச்சிட்டது. பைரவிக்கு வந்தான் மண்ணின் மாண்பு தெரிந்தது; மாந்தரின் குணம் புரிந்தது- o 
ஹரி பாடுவதை நிறுத்தினான். தம்பூராவை எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். கதவு மூடியிருந்ததைக் கண்டதும் "திக் கென்றது. ஒரு கணம் யோசித்தான். கதவை மூடிக்கொண்டு உட்கார்ந்ததாக அவனுக்கு நினைவில்லை. அது பழக்கமும் இல்லை, கதவை மூடிக் கொண்டு பாடக்கூடாது என்பது, பாகவதரின் - குருநாதரின் உத்தரவு, சாதகம் செய்வது தெளிவாகக் கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

 ஹரி சாதகம் செய்யும்போது அவர் கட்டிலில் படுத்திருந்தவாறே கேட்டுக் கொண்டிருப்பார். தவறு இருந்தால் உடனுக்குடன் கவனித்துக் திருத்துவது வழக்கம். இன்று அவர் ஊரில் இல்லை. ஆனால்

அந்தப் பழக்கத்தையொட்டிய தன் செய்கைக்கு இன்று ஏற்பட்ட கண்டனத்தை அவன் பூரணமாக அறியா விட்டாலும், அது யாரால் ஏற்பட்டிருக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது, அதை எண்ணிப் பார்க்கையில் மனத்துக்கு வேதனையாகவும் இருந்தது.

 சுசீலாவுக்கு ஆதியிலிருந்தே அவனிடம் வெறுப்பு. ஆனால், அது ஏன் ஏற்படவேண்டும்? அப்படி ஏற்பட நான் என்ன தவறு செய்தேன்?" என்று அவன் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறான். அப்படி அவள் நடந்து கொள்ள ஒரு குற்றமும் தான் செய்ததாக அவனுக்கு நினைவே இல்லை. ஆயினும் அவனுக்கு ஒன்று புரிந்தது: அன்பு காட்டுவதற்கும் வெறுப்பூட்டுவதற்கும் காரண காரியம் எதுவும் தேவையில்லை. எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒன்று இருக்கிறது. அது அவரவர் மனத்தைப் பொறுத்த விஷயம். அதை ஆராய்ந்து மூளையைக் குழப்பிக் கொள்வதைவிட, சுசீலாவிக்கு என்னை ஏனோ பிடிக் தி ாமற் போய் விட்டது H என்ப தை நன்கு உணர்ந்துகொள்ளுவது எளிதாக இருந்தது.

சுசீலா தன் வெறுப்பை ஒவ்வொரு சிறு செயலிலும் காண்பித்தாள். முதலாவது தன் தந்தை ஹரியைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டோடு வைத்துக்கொண்டு வித்தை சொல்லிக் கொடுத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. மற்றச் சிஷ்யர்களைவிட, அவர் அவனிடம் அதிகச் சிரத்தையும் அக்கறையும் காட்டுவது பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காயத்திரி அவனிடம் அன்போடும் கருணை யோடும் நடந்துகொள்வது கட்டோடு பிடிக்கவில்லை. தான் வெறுக்கிற ஒருவனை அக்காவும் வெறுக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.

ஆனால் விருப்பையும் வெறுப்பையும் ஒருவர் மனத்தில் பலவந்தமாகத் திணிக்க முடியாமல் இருப்பதை எண்ணித் தான் சுசீலா உள்ளத்துக்குள்ளேயே பொருமி வந்தாள். ஹரி பாட ஆரம்பித்ததும் விழித்துக் கொண்ட சுசீலா முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். தன் தாயிடம் எரிந்து விழுந்தாள். 'துரங்க விடாமல் என்ன அம்மா இது? அப்பா ஊரில் இல்லாத இந்த ஒரு நாள் சாதகம் பண்ணா விட்டால் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? பொழுது விடிந்து பாடினால் போதாதா? கூப்பிட்டுச் சொல்லேன் அம்மா' ஒன்று கெஞ்சினாள்.

'உனக்குத் துரக்கம் வந்தால் தூங்கேன்' என்று லட்சுமியம்மாள் ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள். 

பெண்ணுக்காக என்னதான் பரிந்து பேசுகிறவளாக இருந்தாலும், மகாவித்துவானுக்கு வாழ்க்கைப்பட்டு அவருடன் இத்தனை காலமாக வாழ்வதனால் லட்சுமி அம்மாளுக்குச் சிறிது சங்கீத ஞானம் ஏற்பட்டிருந்தது. பாடுகிறவனைத் தடுக்கக் கூடாது; அது தவறு. மேலும், அதற்காகத்தானே அவர் அவனை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற விஷயங்கள் அவளுக்கும் புரிந்தன. அதனால் அவள் ஏதும் கூறவில்லை. 
அக்காவிடம் சொல்லச் சுசீலாவுக்கு விருப்பம் இல்லை. 'இந்த வீட்டில் அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் ஒரே கட்சி; நான்தான் தனி என்று மனத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தோடு அவள் எழுந்தாள். ஹரி பாடிக்கொண் டிருந்த அறையின் கதவைப் படீ"ரென்று அறைந்து சார்த்தி விட்டுத் திரும்பவும் தன் படுக்கையில் வந்து தொப்பென்று விழுந்தாள்.

 இதை எல்லாம் கவனிக்காத ஹரி பாடிக்கொண்டே இருந்தான். அந்த அறையின் நான்கு சுவர்களையும் தாண்டி, சுசீலா மூடிய கதவையும் கடந்து, அந்த இன்னிசை அப்பொழுதும் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. அது காயத்திரிக்குத் தேவகானமாகவும், லட்சுமிக்கு ஆதியி லிருந்தே பழகிப் போன ஒன்றாகவும் இருந்தது. சுசீலாவுக்கு மட்டும் நாராசமாக இருந்ததோ? 
சுசீலாவின் புறச் செய்கைகளைப் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றும். ஆனால் மற்றவர் களுக்குத் தெரியாமல், அவள்தான் மற்றவர்களை விட ஆத்மார்த்தமாக ஹரியின் பாட்டைக் கேட்டு ரசித்தாள் ஆம்! ஹரியை வெறுக்க முடிந்த அவளால் அவனது கந்தர்வகானத்தை வெறுக்கவோ வேண்டாமென்று ஒதுக்கிச் செவிகளைப் பொத்திக்கொண்டு ஓடவோ முடியவில்லை.

2. நெஞ்சிலே முள்

முடியிருந்த அறையின் கதவுகளைத் திறந்து கொண்டு ஹரி கையில் தம்பூராவுடன் வெளியே வந்தான். குளுமை யான இளங்காற்று அவனைத் தழுவிக்கொண்டே அறை யினுள் புகுந்தது. காலை எட்டரை மணி வண்டிக்குப் பாகவதர் ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வர அவன் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும்.

தம்பூராவை மூலையில் சார்த்திவிட்டு அவசர அவசர மாகக் குருநாதருடைய அழுக்குத்துணிகளை மூட்டையாகச் சுருட்டிக்கொண்டு காவிரிக்குப் புரப்பட்டான் ஹரி.

சலவைக்குச் சலவை சாயம் மாறிக்கொண்டே ரு மட்டமான துணியைப் போல-கணத்துக்குக் கணம் வானத் தின் நிறம் வெளுத்துக்கொண்டே வந்தது. தெருவில் இரண் டொரு வீடுகளில் சாணம் தெளிக்கிற சத்தம் கேட்டது. காலை நீராட்டத்தை முடித்துக் கொண்டு, வைதிகர்களும், வயோதிகர்களும், சில பெண்களும் ஆற்றிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். சிலர் தெருவில் இருந்த கயிற்றுக் கட்டிலி லிருந்து எழுந்திருக்கவே இல்லை. திண்ணையில் படுத்திருந்த காளையர்களில் சிலர், போர்வை தெருவில் நழுவி விழுந்து கிடப்பதுகூடத் தெரியாமல் குறட்டை விட்டுத் துரங்கிக் கொண்டிருந்தனர்.

ஹரி வீட்டுக் கொல்லைப்புறமாகத் திரும்பிய போது யாரோ அங்கிருந்து மெல்லிய குரலில், 'ஹரி, ஹரி!' என்று தன்னை அழைக்கிற சப்தத்தைக் கேட்டுத் திரும்பினான்.

கொல்லையில் பால் கறந்துகொண்டிருந்த பாகவதரின் பெரிய பெண் காயத்திரி, கையில் இருந்த பால் பாத்திரத்து டன் அவனை நோக்கி வேகமாக வந்தாள்.

அதற்குள் ஆற்றுக்குப் புறப்பட்டு விட்டாயா ஹரி? '

 அவளுடைய கேள்விக்கு உடனடியாகப் பதில் கூற அவன் தயங்கினான்; நிலத்தையும் கட்டை விரலையும் பார்த்தபடியே நின்றான். * 

அப்பா ஊரில் இல்லாதபோதுகூட ஏன் இத்தனை சீக்கிரம் ஹரி?' என்று அவள் கேட்டாள். 

இப்பொழுது போனால்தானே கொஞ்சம் நிம்மதி யாகக் குளிக்கலாம்? அக்கம் பக்கம் மற்றவர்களுடைய செளகரியங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. இஷ்டத்துக்குத் துவைக்கலாம், மேலும், ஐயா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாமா?' என்றான்.

 *நானும் அதைத்தான் சொல்ல இங்கு வந்தேன்? அப்பா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாமா? இன்னும் இப்படி எத்தனை நாள்தான் கூச்சப்படுவாய்? அப்பா இருந்தால், உன்னை புதன்கிழமை காலையில் வெறுமனே போய் குளிக்க அநுமதிப்பாரா? கொஞ்சம் இரு; இதோ ஒரு நொடியில் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து வருகிறேன். ' .

 வேண்டாம்; அதற்கெல்லாம் நேரம் இல்லை . எட்டரை மணிக்குள் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும்? நேரமாகிவிட்டது; நான் வருகிறேன். ' 
'ஒன்றும் நேரமாகிவிடாது. மூன்று மணியிலிருந்து பாடுகிறாய். கண் வேறு சிவந்து கிடக்கிறது; நிமிஷத்தில் வந்து விடுகிறேன். பதிலுக்குக்கூடக் காத்திராமல் காயத் திரி கையில் பாலுடன் வேகமாக உள்ளே சென்றாள். ஹரி அந்தத் திசையையே பார்த்தபடி சிலைபோல் நின்று கொண்டிருந்தான்.

ஒன்பது வயதுப் பாலகனாக அந்த வீட்டில் நுழைந்தது முதல் காயத்திரியை அவனுக்குத் தெரியும். அன்பை வாரி வழங்குவதில் அவளுக்கு இணை அவளே. அதனால்தானே என்னவோ, கடவுளின் அன்புக்கே அவள்வரையில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. 

"கன்னிகாதான பலன் கிட்டவேண்டும்' என்று கருதி, ஏழு வயது காயத்திரியை, மாப்பிள்ளை என்ற பத்து வயது மணிப் பயலுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாகவதர். ஆனால் அவர் விரும்பியபடி கன்னிகாதான பலன் கிட்டியதே தவிர, கன்னிப்பெண் காயத்திரிக்கு வாழ்வு தான் கிட்டவில்லை. மணமான நாலைந்து மாதங்களுக்குள்ளேயே அவள் விதவை ஆகிவிட்டாள். ஆம்-கணவன் என்ற பதவியில் இருந்த பத்து வயது மணி, கையில் கிட்டியிருந்த கனியைப் பற்றி அறியாமல், தோட்டத்திலுள்ள மாங்கனிக் காக மரத்திலேறிக் கீழே விழுந்து உயிரை விட்டான்.

இப்படி மலராமலே வாழ்க்கையை முடித்துக்கொண்ட காயத்திரியின் கதையை அவளொத்த வயதில் அந்த வீட்டையடைந்த ஹரியினால் அப்போது புரிந்துகொள்ள முடிய வில்லை. அவளுக்காக அநுதாபப்பட தெரியவில்லை. ஆனால் இப்போது-பத்து வருஷங்களுக்குப் பிறகு அதன் ஆழம், தன்மை, வேதனையின் வேகம் எல்லாம் அவனுக்கு விளங்கின. ஆனால் அவள் யாருடைய அநுதாபத்தையும் ஆறுதலையும் விரும்பாமல், எதிர்நோக்காமல் அவற்றுக்கு அப்பாற்பட்டவளாகத் தன்னை மாற்றிகொண்டு நின்றாள். 

இப்படியே காயத்திரியின் நினைவில் நின்று நின்று ஹரிக்கு கால்கடுத்துக் காலம் கரைந்ததே தவிர, உள்ளே சென்ற காயத்திரியையும் காணோம்; எண்ணெயையும் காணோம். மாறாக, உள்ளேயிருந்து வந்த காரசாரமான விவாதங்களே அரைகுறையாக அவன் செவிகளைத் தாக்கின.

காயத்திரியிடம், ஒரு முறை எண்ணெய்க் குளி தவறி விட்டால்தான் என்ன? அதற்காக நீ ஏன் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும்?' என்ற சுசீலாவின் கேள்வி யு, ம் தாயின் சமாதானமும் அவன் செவிகளில் தேய்ந்து ஒலித்தாலும் அவை பாய்ந்து உள்ளத்துள் செல்லத் தவற. வில்லை. துக்கம் பெரும் உருண்டையாக அவன் நெஞ்சை அடைத்தது; அவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.

தான் இந்தப் புவியில் வந்த வழியையே எண்ணிக் கொண்டு சென்றவனுக்குக் காவிரிக்குச் செல்லும் வழியில் கவனம் இல்லை. கவனமில்லாமலே, பழகிப் போன கால்களை நம்பிச் சென்றான்.

துாரத்தில் சுழலிட்டு ஒடும் காவிரி கண்ணுக்குக் தெரிந்தது. அவனது எண்ணத் துரும்புகள் அலைக்கழி பட்டு அமிழ்ந்தும் மிதந்தும் போய்க் கொண்டிருந்தன.

எத்தனை முயன்றும் காயத்திரியை அவனால் மறக்க முடியவில்லை. என்னிடம் காயத்திரி ஏன் இப்படி அன்பும் அக்கறையும் காட்டி, உடன் பிறந்த வளிடமே பேச்சு வாங்கிக்கொள்ள வேண்டும்? சுசீலா கூறுவதும் மெய்தானே? பணமும் பண்டமும் கொடுத்துப் பாட்டுச் சொல்லிக் கொள்கிற எத்தனையோ சிஷ்யர்கள் இருக்கிறபோது: தண்டச்சோறு போட்டுச் சங்கீதம் செல்லிக் கொடுப்பதோடு, தீவட்டித் துரைக்கு எண்ணெய்க் குளி ஒரு கேடா? என்னால் அவர்களுக்கு என்ன உபயோகம்? அவர்களின் குடும்பத்துக்கு என்ன ஆதாயம்? உபயோகம் இல்லாத என்னிடம் அன்பும் ஆதரவும் காட்ட யார்தாம் விரும்புவார்கள்? என்னிடம் இரக்கம் காட்டுகிறவர்களைக் கூடத் தண்டிப்பேன் என்று விதி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்போது, அதை இந்தக் காயத்திரியால் எதிர்த்து வெல்ல முடியுமா? எனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்; நான் அப்படியே பழகிப்போனவன். ஆனால் என்னிடம் அன்பு செலுத்தும் குற்றத்துக்காக ஒருவர் துன்புறுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. எனக்காக யாரும் அநுதாபப்பட வேண்டாம். இதை எப்படி, யார் காயத்திரிக்குச் சொல்லுவது? இதை எண்ணித்தான் அவன் மனம் குமுறினான்.

எண்ணெயைப் போக்கச் சிகைக்காய் உண்டு, எண்ணெயால் எழுந்த வேதனையைப் போக்கக் காவிரிக்கும் வலிமைஇல்லையே!

தண்ணிரில் மூழ்கி எழுந்தான் ஹரி. குருநாதரின் துணிகளை எல்லாம் சிரத்தையுடன் துவைத்து அலசிக் கல்லின் மேல் பிழிந்து வைத்தான். சுருள் சுருளான அவனது அழகிய கேசத்திலிருந்து சிவந்தமேனியில் வழிந்துகொண்டிருந்த தண்ணிருடன், அவனது இமை வழி இறங்கிய கண்ணிரும் கலந்தது. குளித்ததனால் உடற்புழுக்கம் தணிந்தது; ஆனால் மனப் புழுக்கம் தணிய மருந்து ஏது? தலையைத் துவட்டிய போது அவன் எதிர் மண்டபத்தைக் கவனித்தான்.

சுவரில் எழுதிய சித்திரம் போல் அசைவற்று அதைப் பார்த்தபடியே அவன் ஒரு கணம் நின்றான். இளமை நினைவுகள் அவனை ஈர்த்தன.

வயிற்றுக்குச் சோறில்லாமல் வீட்டிலிருந்து அடித்துக் துரத்தப்பட்ட பாலகன் ஒருவன் இனியகுரலில், மனம் போனபடி, சங்கீத விதி எதற்கும் கட்டுப்படாமல், காலைப் பொழுதில் அந்த மண்டபத்தில் பாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அடுத்த வேளை உணவு இல்லையே என்ற நினைப்பு இல்லை. கடந்த நாள் இரவு பட்டினி கிடந்தோமே என்ற எண்ணம் இல்லை. நாம் என்ன பாடுகிறோம், யாருக்காகப் பாடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், யாருக்கும் அஞ்சாமல், குரலை உயர்த்திப் பாடிக் கொண்டிருந்தான்.

 "வள்ளிக் கணவன் பேரை 
வழிப்போக்கர் சொன்னாலும்
 உள்ளம் குழையுதடி கிளியே: 
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுது.’’

..................................