Wednesday, September 03, 2025

 மாய மந்திரங்கள் அன்றாட வாழ்வின் அங்கம் பேட்டி - மானுவல் ஒஸாரியோ 


தமிழில் - நடராஜன்


கல்குதிரை - காப்ரியேல் மார்க்வெஸ் சிறப்பிதழ்


&& லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்து புதிய வளமையான கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கலப்பை லத்தீன் அமெரிக்கா உணர்ந்திருக்கிறதா. 


என்னைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்ற முறையில் பல்வேறு சமுதாயங்களுடனும் அரசியல் அமைப்புமுறைகளுடனும் அடிக்கடி நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன். இதனால் லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்தின் பிற அம்சங்களை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் இந்தக் கலப்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் உணர்ந்து கொள்ளலானேன். 


ஆப்பிரிக்காவில் பயணம் செய்தபோது அங்குள்ள பாமரக்கலையின் சில வடிவங்களுக்கும் பல்வேறு கரீபியப்பிரதேசங்களிலுள்ள கலைவடிங்களுக்கும் இடையே ஒற்றுமைகளைக் கண்டேன். என் சொந்தக் கலாச்சாரச் சூழலையும் பொதுவாகப் பல்வேறு கலாச்சார அம்சங்களுக்கு இடையிலான தொடர்பையும் அறிந்துகொள்ள வாய்ப்பானது. 


இத்தகைய நுட்பமான நோக்கைக் கொண்டு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் தனித் தன்மையையும் காணப்படுகிற உலகளாவிய அம்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஜனத் தொகுதிகளிடையே எத்தனையோ தொடர்புகள் இப்படி. அவர்களே அறிந்து கொள்ளாத நிலை. 


0 அதுதான் உங்கள் நாவல்களின் தொடக்க முனையாக அமைந்துள்ளது அல்லவா. கருக்களே இத்தகையவை அல்லவா. 


எழுதும்போதெல்லாம் பன்முகக் கலாச்சாரச் செல்வாக்கு பற்றி யெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தாமாகவே வெளி வந்தவை. எழுதிய பிறகுதான் நாவல்களில் கலாச்சார அம்சங்கள் இடம் பெற்றிருப்பதை உணர்ந்தேன். அம்சங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது நாவல்களில் படிப்படியாகப் புகுந்திருக்க வேண்டும். 


லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு செல்வாக்குகள் கலந்து கண்டம் முழுவதும் பரவின. மேற்கத்திய, ஆப்பிரிக்க, கிழக்காசியக் கலாச்சாரங்கள் அத்தனையும் கொலம்பஸுக்கு முந்திய காலத்துக் கலாச்சாரத்துடன் கலந்து போயின. இதனால்தான் மெக்ஸிகோவின் கொலம்பியக் கலாச்சாரம் என்றெல்லாம் யாரும் தனித்துப்பேச இன்று முடியவில்லை. என்னைக் கொலம்பியன் என்று இதுநாள்வரை கருதியதில்லை. லத்தீன் அமெரிக்கன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன், 


0 ஆக லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் என ஒன்று இருக்கிறதை ஒப்புக்கொள்கிறீர்களா. 


ஒருசீரான லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் ஏதும் இருப்பதாக உறுதியாகக் கருதவில்லை . மத்திய அமெரிக்காவிலும் கரீபிய நாடுகளிலும் ஆப்பிரிக்கச் செல்வாக்கைக் காண்கிறேன்.மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளில் அமெரிந்தியக் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டதொன்றைக் கொண்டவர்கள் கணிசமான அளவில். வேறு பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதே நிலைதான். 


தென்னமெரிக்காவில் வெனிஸ்லாவிலும் கொலம்பியாவிலும் அமெரிந்தியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தபோதும் அந்த நாடுகளில் ஆண்டியன் அமெரிந்தியர்களைவிட கரீபிய மக்களுடன் அதிக ஒற்றுமை உடையவர்களாக இருக்கிறார்கள். பெருவிலும் ஈக்வடாரிலும் கடலோர மண்டலத்துக்கும் மலைப்பிரதேசத்துக்கும் பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது. தென்னமெரிக்கக் கண்டம் முழுவதிலும் இதே நிலைமை. இந்த வகையான செல்வாக்குகள் ஒருங்கிணைந்து லத்தீன் அமெரிக்க நாகரீகத்துக்கு தனிச்சிறப்பியல்பைக் கொடுத்து உலகின் மற்ற கலாச்சாரங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றன. 


0 சூழலில் ஸ்பானியச் செல்வாக்கின் பங்களிப்பு. 


லத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியச் செல்வாக்கின் திண்மையும் பிரேஸிலில் போர்த்துக்கீசிய செல்வாக்கின் வன்மையையும் மறுப்பதற்கில்லை. அவை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும். காஸ்டிய ஸ்பானிய மொழியைப் பேசுகிறோம். சர்ச்சைக்குரியதாயினும் செழுமையுடையது அந்தச் செல்வாக்கு என்பதில் ஐயமில்லை. கலாச்சாரத்தின் பகுதியாக அமைந்துள்ள போதும் லத்தீன் அமெரிக்காவின் ஸ்பானிய அம்சங்கள் அத்தனையையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் போக்கு காணப்படுகிறது. இப்போக்கு தேவையற்றது, ஆபத்தானது என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை அந்தக் கலாச்சாரத்தை மரபாகப் பெற்றதில் வெட்கமடையாமல் பெருமையே கொள்கிறேன். ஸ்பானியக் குடியேற்ற ஆதிக்கம் இன்று பிரச்னையாக இல்லை. ஐரோப்பியர்கள் வருகையால் உருவான உண்மை நமதானாலும் ஐரோப்பாவின் வார்ப்பாக இருக்கவில்லை. லத்தீன் அமெரிக்கா இன்று ஐரோப்பாவிலிருந்து மாறுபட்டதாகத்தான் இருக்கிறது. 


0 எழுதுவதற்கான அகத்தூண்டுதல் எங்கிருந்து. 


எல்லாமே அசைபோடும் நினைவுகளிலிருந்துதான் தோன்றுகின்றன. 


0 தாத்தாவானவர் உங்கள் குடும்பத்தின் புராண ஏடாக இருந்திருப்பாரோ. அவர் உங்களுடைய குழந்தைப்பருவத்தில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறாரோ. 


மிக அதிசயமான முதியவர். காலத்திலும் நினைவாற்றலிலுமாக ஊசலாடிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. அவரை வெகுவாக நேசித்தேன். எட்டாவது வயதில் இறந்தபோது கலங்கிப் போனேன். வாழ்க்கை பற்றியும் கிராமத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிக் பற்றியும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆதிகாலந்தொட்டு நடந்த வரலாறுகளையும் கதைப்ட் கூறுவார். பங்கு கொண்ட யுத்தங்களை வர்ணிப்பார். நான் பிறந்த வருஷத்தில் வாழைத்தோட்டங்களில் நடந்த பயங்கரமான படுகொலைகளையும் கொலம்பியாவின் வரலாற்றில் அழியாச்சுவடுகளாக அமைந்த அத்தகைய நிகழ்ச்சிகளையும் விளக்கிக் கூறுவார். 


ப எழுத்தாளன் என்ற முறையில் அம்மாவின் செல்வாக்கு பாதித்திருக்கிறதா. 


அம்மா மனங்கவரும் பெண்மணி. யாரோ ஒரு முறை "மகன் இவ்வளவு திறமைசாலியாக இருப்பதற்கு என்ன காரணம்" என்று கேட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் மேல் தான் காரணம்" என்று பதிலளித்திருக்கிறாள். குடும்பம் முழுவதும் எனக்கு முக்கியமானது. குடும்ப உறுப்பினர் அனைவரும் நாவல்களில் ஏதாவதொரு வடிவில் தோன்றிவிடுகிறார்கள். அரக்காடக்கா தபால்காரர் மகன் என்பதை ஒருபோதும் மறப்பதில்லை. 


ப நீங்கள் முதலில் கரீபியப்பிரதேசத்தில் இருந்தவர். எழுத்துக்களில் அந்த மண்டலத்தின் அடிநாதமான வாழ்வு பிரதிபலிக்கிறது. நாவல்கள் உலகெங்கும் செல்வாக்கு பெறுவதற்குக் காரணமான மயக்கும் கதையாடல்களை அங்குதான் காண்கிறீர்களா. 


முழுமையான ஒருங்கிணைப்பைக் காணமுடியும். அன்றாட வாழ்க்கை, இயற்கை உலகம் இவற்றிடையே வேறெங்கும் விட மிகுந்த இணக்கம். கொலம்பியாவின் வடக்குக் கடற்கரையோரம் சதுப்பு நிலத்தில் மனிதன் காலடிபடாத காடுகளின் மத்தியில் மறைந்துள்ள கிராமத்தில் வளர்ந்தேன். அங்குள்ள தாவரங்களின் மணமே வயிற்றைக் கலக்கிவிடும். மூலை முடுக்கிலும் கடல் ஊடுருவிச் செல்லும். சூறாவளியில் கூரைகள் அடிக்கடி பறந்துவிடும். காற்று நுரையீரலை எரியச் செய்யும். கரீபியப்பிரதேச மக்களுக்கு இயற்கை உற்பாதங்களும் மனிதரின் கொடுந்துயரங்களும் அன்றாட வாழ்வின் அங்கங்கள். அமெரிந்தியர்களின் புராணக்கதைகளும் ஆந்துலூசியக் கற்பனைக் கதைகளும் ஏராளமாக வழங்கி வந்தன. அவற்றுடன் அடிமைகள் கொணர்ந்த புராணக்கதைகளும் இரண்டறக் கலந்தன. விளைவாக எதையும் தனிக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்போக்கும் வாழ்வின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் ஒருவகை அதிசயத்தைக் காணும் மனப்பான்மையும் உருவாகின. இவற்றை என்னுடைய நாவல்களில் மட்டுமின்றி குவாடமாலாவின் மிகைல் ஏஞ்சல் அஸ்தூரியாஸ், க்யூபாவின் அலேயோ கார்பென்டியர் போன்றோரின் படைப்புகளிலும் காணலாம். 


ப படைப்புகள் நெடுகிலும் காணப்படும் அதிசயத்தைக் கவனத்தில் கொண்டு magical realist என்று விமர்சகர்கள் கூறுவது நியாயமா. 


கரீபியப்பிரதேசத்தில், பொதுவாக லத்தீன் அமெரிக்காவில், வேறெந்த இயல்பான அம்சத்தையும் போலவே மாய மந்திரங்களையும் அன்றாட வாழ்வின் அங்கமாகக் கருதுகிறோம். நிமித்திகம் தொலையுணர்வு, முன்னுணர்வுகள், மூடநம்பிக்கைகள், இயற்கை பற்றிய கற்பனைப்புனைவுகள் இவற்றை நம்புவது இயல்பாகப் போய்விட்டது. இத்தகைய நிகழ்வுகளை படைப்புகளில் நியாயப்படுத்தவோ விளக்கவோ முயன்றதில்லை. இப்படியான எழுத்தில்தான் நகர்ந்து நாம் கொண்டிருக்கிறோம். 


&& ஐரோப்பாவுக்கும் லத்தீன் அமெரிக்கா வுக்குமிடையிலான தொடர்பு தவறாள் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்து வந்துள்ளது. இந்தத் தவறான கருத்துகளை நீக்கு சீரான சமநிலையை உருவாக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறீர்களா. 


கண்டத்தை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் எண்ணற்றவை. சூழலில் நினைப்பது சரியாக இருந்தாலும் நிலைமையை தெளிவாகக் கொள்வதற்கு சிக்கல்கள் தடையாக இருக்கின்றன. தன் கலாச்சாரத்தையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பா நம்மைப் புரிந்து கொள்ளாமலிருப்பதில் வியப்பில்லை. ஐரோப்பியர்கள் பெரும் பகுத்தறியும் பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெற்றவர்கள். மற்ற பகுதிகளில் நிலவும் வேற்றுமைகளின் சொந்தக் கண்ளோட்டத்திலேயே எப்போதும் நம்மை மதிப்பிடுவது இயற்கையே. ஒருகாலத்தில் ஐரோப்பாவில் வளமைப் பெருக்கம் தேவைப்பட்டது. அதே வளமைப் பெருக்கம் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். உலகின் ஒருபகுதிமக்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு பகுதி மக்களின் நிலையை மதிப்பிட முயல்வது பயங்கரமான தப்பெண்ணங்களுக்கு வழிவகுக்கும். மக்களிடையே பிரிவினையை மேலும் வளர்த்து அவர்களைத் தனிமைப்படுத்தவே செய்யும். ஐரோப்பிய உலகம் கடந்த தன் காலத்தைப் பார்க்க வேண்டும்; அதே கண்ணோட்டத்தில் நம்மை நோக்க முயல வேண்டும். தன் வரலாற்றில் ஏற்பட்ட சூழ்நிலை மாறுபாடுகளை அது மறந்துவிடலாகாது. லண்டனைச்சுற்றி சுவர் எழுப்பி300 வருஷங்கள் தான் ஆயின என்பதை நினைவில் வைத்திருக்கிறார்களா. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை, பல நூற்றாண்டுகள் பிடித்தன என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா. ரோமுக்கு சரித்திரத்தில் இடம் தேடியவன் எட்ரூஸ்க அரசன் என்பதை அறிவார்களா. படையெடுப்பாளர்கள் இங்கு வந்தபோது அஸ்டெக் தலைநகரம் டெனோக்டிக்லான், பாரிஸை விடப் பெரிய நகரமாக இருந்தது தெரியுமா. ஐரோப்பியக் கண்டத்தில் நீதியும் மனித நேயமும் நிலவும் சமுதாயத்தை நிறுவுவதில் ஆர்வங்கொண்ட பரந்த கண்ணோட்டமுடைய நம்மை நோக்கும் முறையை மாற்றிக் கொண்டால் உண்மையில் உதவலாம். மானுடச் சகோதரத்துவம் உண்மையிலேயே நிலவும் உலகில் சொந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே கண்டத்து மக்களின் வேட்கை. கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காட்டப்படும் பரிவு வேட்கை ஈடேற உதவும் வடிவத்தில் வர வேண்டும். 


0 சிக்கல்கள் லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்குள்ளே யே தோன்றுகின்றனவா, வெளியிலிருந்து வருகின்றனவா. 


உலக வல்லரசுகளின் கருணையில் வாழ்கிறோம் எனக் கற்பனை செய்து கொண்டு லத்தல் அமெரிக்காவைப்பாதிக்கும் வன்முறை அவலம் பிரிவினை அனைத்தும் பல்லாயிரம் கிலோமீட்டரு” அப்பால் செய்யப்படும் சதிகளின் விளைவு எனக் கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏற்றத்தி" அடக்குமுறை சுரண்டல் புறக்கணிப்பை எதிர்நோக்கும் நமக்கு வாழ்க்கைதான் மறுமொழி வேண்டும். பல நூற்றாண்டுகளாக நடைபெறும் யுத்தங்கள், கொடூரங்கள் குறையவில்லை. "மன்? அற்றுப் போகும் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க மாட்டேன்" என்று நாற்பது வருஷங்கள்" 


• ஏற்றத்தாழ்வு மறுமொழியளிக்க 


ல். "மனிதகுலம் "ங்களுக்கு முன் 


46வில்லியம் ஃபாக்னர் கூறினார். அவர் அஞ்சியது இன்றைய அறிவியல் உலகில் நிகழக்கூடிய ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். நாடுகளிடையிலான தொடர்புகள் முன் எப்போதையும் விட இப்போது வலுவாக இருக்கின்றன என்பதையும் புதிய சகாப்தம் பிறந்து வருகிறது என்பதையும் பார்க்கும் அது எந்த தனிநபரும் மற்றவர்களுக்கென்று முடிவுகள் எடுக்காது இணைந்து வாழ அனுமதிக்கும் கற்பனையுலகை உருவாக்கக் காலம் கடந்துவிடவில்லை என்று நம்புகிறேன். 


ப லத்தீன் அமெரிக்காவுடனும் அதன் பிரத்தியேக குணத்துடனும் உங்களுக்குள்ள பிணைப்பை, வேட்கையைப் படைப்புகள் பிரதிபலிக்கின்றன. 


உண்மைதான். பழைய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் எனக் கருதவில்லை. கண்டத்துடனும் அதன் மூலம் உலகம் முழுவதுடனும் ஆழ்ந்த பிணைப்பு இல்லாமல் நாட்டை 


அல்லது கண்டத்தை விவரிக்க நெடுங்காலம் முயலவும் கூடாது. 


பேட்டி - மானுவல் ஒஸாரியோ 


தமிழில் - நடராஜன்


****************************


காஃப்கா வாக்கியம் கதைப்பரப்புக்குள் வீசியது பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் 


தமிழில் - சி மோகன் 


0 டேப் ரிக்கார்டர் பயன்படுத்துவது பற்றி என்ன மாதிரி உணர்கிறீர்கள். 


பதிவு செய்யப்படுகிற பேட்டி என்று உணர்ந்த மாத்திரத்திலேயே மனோபாவத்தில் மாற்றம் வருகிறது. உடனடியாக தற்காப்பு நிலையில் என்னை உணர்கிறேன். பேட்டிக்காக டேப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது நமக்கு இன்னமும் தெரியவில்லை; பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படித்தான் உணர்கிறேன். குறிப்புகள் எடுக்காமல் நீண்ட நேரம் உரையாடுவதுதான் சிறந்த வழி. பிறகு உரையாடலை நினைவுகொண்டு மனப்பதிவாக, அதே வார்த்தைகளின்றி, எழுதலாம். குறிப்புகளை, பேட்டி காணப்பட்டவர் சொன்னதற்கு நேர்மையுடன், விளக்கிப் பார்ப்பது இன்னொரு பயனுள்ள முறை. அத்தனையையும் பதிவு செய்கிறது என்பதாலேயே பேட்டி காணப்படுபவருக்கு டேப்பானது நேர்மையாக இருக்காது. காரணம், உங்களை நீங்களே மடையனாக்கிக் கொள்வதைப் பதிவு செய்கிற டேப் அதை நினைவுபடுத்தவும் செய்கிறது. இதனால்தான் டேப் ரிக்கார்டர் என்னைப் பேட்டியின்போது உறுத்துகிறது. இல்லாத போது தன்முனைப்பில்லாமல் இயல்பாகப் பேசுகிறேன். 


0 டேப் ரிக்கார்டர் உபயோகிப்பதில் குற்ற உணர்வு கொள்ள வைத்துவிட்டீர்கள். பேட்டிக்குத் தேவைப்படும் ஒன்று என்றுதான். 


எப்படியிருந்தாலும் உங்களைத் தற்காப்பு நிலையில் வைக்கத்தான் கூறி 


0 பேட்டி எடுக்கும் போது டேப் ரிக்கார்டர் பயன்படுத்தியதே இல்லையா. 


பத்திரிகைக்காரனாக உபயோகப்படுத்தியதில்லை. நல்ல ரிக்கார்டர் இருக்கிறது. பாட்டுப்போட்டுக் கேட்கப் பயன்படுத்துகிறேன். மேலும் பேட்டியே எடுத்தது கிடையாது. கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கேள்வி-பதில் பேட்டி ஊஹும். 


o விபத்து கண்ட கப்பலின் மாலுமியை பேட்டி கண்டு பிரசித்தி பெற்றிருக்கிறதே. 


கேள்வி-பதில் பேட்டி அல்ல. மாலுமி சாகசங்களைக் கூறினார். பெரும்பாலும் அதே வார்த்தைகளில் திரும்ப எழுதிப்பார்த்தேன் அவரே எழுதுவது போல. தினசரித் தொடராக இரண்டு வாரங்கள் பத்திரிகையில் அவருடைய ஒப்பத்துடன் வெளியானது. பிரசுரமாகி இருபது வருஷங்களுக்கு அப்புறம்தான் நான் எழுதியதாக அடையாளம் கண்டார்கள். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல் வெளியாகிற வரை அந்த எழுத்தை யாரும் மதிக்கவில்லை . 


0 பல காலமாக நாவல்கள் எழுதிவிட்டு மீண்டும் பத்திரிக்கைக்காரனாக இருப்பது எப்படியிருக்கிறது. 


43பத்திரிக்கைத்தொழிலை நிஜமான என் தொழிலாக நம்புகிறேன். தொழிலின் சூழல் பிடித்ததாக முன்பு இல்லை. பத்திரிகைகளின் ஈடுபாடுகளுக்கு ஏற்ப எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நாவலாசிரியனாக மாறி பொருளாதார மாற்றத்தையும் கண்டபடியால் ஈடுபாடுள்ள விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும் என் கருத்துகளுடன் அவற்றைத் தொடர்புபடுத்தவும் இப்போது முடிகிறது. என்ன இருந்தாலும் பத்திரிகை மூலமாக மகத்தான படைப்பை உருவாக்க முடிகிற வாய்ப்பு சந்தோஷத்தையே தருகிறது. 


0 அப்படியான மகத்தான படைப்பு. 


ஜான் ஹெர்ஸேவின் Hiroshima தனித்துவம் கொண்ட படைப்பு. 


0 குறிப்பாக நீங்கள் சொல்ல வேண்டிய கதை என்று மிஞ்சியிருப்பது. 


நிறைய. சிலதை எழுதியிருக்கிறேன். போர்த்துக்கீசியம், க்யூபா, அங்கோலா, வியட்நாம் பற்றி. போலந்து பற்றி எழுத விரும்புகிறேன். அங்கே நடப்பதை விவரிக்க முடிந்தால் சரியான கதையாக அமையும். ஆனால் போலந்தில் மிகக்குளிராக இருக்கும்; சிரமம்தான். ஆக வசதிகளை விரும்புகிற பத்திரிகைக்காரன் நான். 


0 பத்திரிகைத்துறையால் இயலாத விஷயங்களை நாவல்கள் தர முடியும் என்று நினைக்கிறீர்களா. 


வித்தியாசம் இருப்பதாக நினைக்கவில்லை . டானியல் டிஃபேவின் Journal of the Plague Year சிறந்த நாவல். Hiroshima பத்திரிகைக்கு ஏற்ற படைப்பு. ஆக, இரண்டின் மூலங்களும் விஷயங்களும் ஒன்றுதான். 


0 நிஜத்துக்கும் கற்பனைக்கும் சமநிலையை உருவாக்குவதில் பத்திரிகைக் காரனுக்கும் நாவலாசிரியனுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் இருக்கின்றன என்று சொல்லலாமா. 


பத்திரிகைத்துறையில் ஒரு செய்திப்பொய் கூட எழுத்தை வளைத்துவிடும். புனைகதையில் வரும் நிஜம் ஒன்றும் முழுப்படைப்புக்கும் நியாயம் சேர்த்துவிடும். இதுதான் ஒரே வித்தியாசம். எழுத்தாளனின் பொறுப்புணர்வைச் சார்ந்திருக்கிறது. மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கும் வரையில் நாவலாசிரியன் விரும்பும் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ள முடிகிறது. 


0 சில வருஷங்களுக்கு முன் பேட்டிகளில், பத்திரிகைக்காரனாக இருந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்து, எவ்வளவு வேகமாகச் செயல்பட முடிந்தது என்று வியந்திருக்கிறீர்கள். 


பத்திரிகைக்கு எழுதுவதும் சரி. நாவல் எழுதுவதும் சரி. இப்போது சிரமம். பத்திரிக்கைக்கு எழுதும் போது ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் குவிக்க வேண்டி இருக்கவில்லை. இப்போதோ அப்படி இல்லை. EI Espectador பத்திரிக்கைக்காக போகோட்டாவில் இருந்த 


49போது வாரத்திற்கு மூன்று படைப்புகள் செய்துவிடுவது வழக்கம். தினமும் இரண்டு மூன்று ஆசிரியர் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள் எழுதுவேன். இரவில், வீடு திரும்புவோரை அனுமதித்துவிட்டு, தங்கித்தான் நாவல்களை எழுதுவேன். லினோடைப் எந்திர மழை இரைச்சல் மிகவும் பிடிக்கும். நின்று போனால் தனிமைப்பட்டு விடுவேன். எழுத முடியாது. அந்த நாட்களோடு ஒப்பிடும்போது நான் எழுதிக் கொண்டிருப்பது குறைவு. சாதாரணமாக காலை மணி ஒன்பதிலிருந்து மதியம் இரண்டு மூன்று வரை எழுதுவதெல்லாம் நான்கைந்து வரிகள் மட்டுமே. அந்தப் பத்தியையும் மறுநாள் கிழித்துப் போட்டு விடுவேன். 


&& மாற்றம் ஏற்பட்டது புகழினாலா, ஒருவித அரசியல் ஈடுபாட்டாலா. 


இரண்டினாலும்தான். யாருக்காக எழுதுகிறேன் என்று நினைத்திருந்தேனோ, அதை விட கணக்கற்ற பேர் எழுத்தைப் படிக்கிறார்கள் என்ற நிதர்சன விநோதம் என்மீது எதிர்பாராத இலக்கியம் மற்றும் அரசியல் தொடர்பான பொறுப்பை சுமத்துகிறது. இதுநாள்வரையிலான படைப்புகளின் தரத்திலிருந்து தலைகுப்புற விழக்கூடாது என்ற பெருமிதமும் எனக்கு உண்டு. 


0 எழுத ஆரம்பித்தது எப்படி. 


கார்ட்டூன்கள் வரைவதிலிருந்து. படிக்கவும் எழுதவும் ஆரம்பிப்பதற்கு முன்பே வீட்டிலும் பள்ளியிலும் காமிக்ஸ் வரைந்து கொண்டிருப்பேன். உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் போது எதுவுமே எழுதியிருக்காவிட்டாலும் அந்தஸ்து கிடைத்திருந்தது வேடிக்கை தான். கடிதமோ துண்டறிக்கையோ எழுதியது நான்தான். எழுத்தாளன் ஆயிற்றே. கல்லூரிக்குப் போனபோது சராசரி நண்பர்களை விடவும் குறிப்பிடத்தக்க இலக்கியப் பின்னணி இருந்தது. போகோட்டாவில் தற்கால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிற புதிய நண்பர்களை பரிச்சயப்படுத்திக் கொண்டேன். குறிப்பிட்ட இரவில் ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறுகதைத் தொகுதியை ஒருவர் தந்து சென்றார். அறைக்குத் திரும்பி The Metamorphosis கதையைத் தொடங்கினேன். முதல் வரி படுக்கையிலிருந்து தூக்கி எறிந்தது. "தொல்லை மிகுந்த கனவுகளிலிருந்து க்ரகோர் ஸாம்ஸா காலை விழித்த போது படுக்கையில் ராட்சஸப் பூச்சியாக தான் மாறியிருப்பதைக் கண்டு" என்ற வரியை வாசித்தவுடன் வியப்படைந்து, போல எழுத யாருக்கும் அனுமதியுண்டு என அறிந்து, ஒருவித லயிப்பில் ஆழ்ந்து போனேன். அறிந்திருந்தால் எப்போதோ எழுதத் தொடங்கியிருப்பேன். ஆக சிறுகதைகள் எழுதத் தொடங்கியது இப்படித்தான். முற்றிலும் அறிவார்ந்த சிறுகதைகள். இலக்கிய அனுபவங்களின் அடிப்படையிலேயே அவற்றை எழுதினேன். அப்போது இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயான உறவை அறிந்திருக்கவில்லை. . போகோட்டாவிலிருந்து வெளியான பத்திரிகையின் இலக்கிய இணைப்பில் பிரசுரமாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. கொலம்பியாவில் அறிவார்ந்த சிறுகதைகள் எழுதியிருக்க யாருமில்லையோ. நாட்டுப்புற வாழ்க்கை, சமூக வாழ்நிலை பற்றியே எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆரம்பச் சிறுகதைகளை படித்தவர்கள் ஜேம்ஸ் ஜாய்ஸின் பாதிப்புகள் இருந்ததாக என்னிடம் சென்னார்கள். 


0 ஜாய்ஸை அப்போது படித்திருந்தீர்களா.அதுவரை படித்திருக்கவில்லை. ஆகவே Ulysses நாவலைப் படிக்கத் தொடங்கினேன். இருந்த ஒரே ஸ்பானியப் பதிப்பை வாசித்தேன். அப்புறம் ஆங்கிலத்திலும் சிறந்த ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் படித்தேன். ஸ்பானிய மொழிபெயர்ப்பு மிக மோசமானது என்று புரிந்தேன். ஆனால் எதிர்கால எழுத்துக்கு பயன்படக்கூடிய தனிமொழி உத்தியை அறிந்து கொ எடேன், வெர்ஜீனியா வுல்ஃப் எழுத்துக்களில் அதைக் கண்டேன். என்றாலும் Lazarillo ! de Termes எழுதிய பெயர் தெரியாதவர் தான் தனிமொழி உத்தியைக் கண்டுபிடித்தவர் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன். 


0 எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் பாதித்தவர்கள் யார். 


அமெரிக்காவில் தொலைந்து போன தலைமுறை எழுத்தாளர்கள் தான் சிறுகதை மீதான அறிவுபூர்வமான மனோபாவத்திலிருந்து விடுபட எனக்கு உதவியவர்கள். இலக்கியம் அவர்களுடைய வாழ்க்கையுடன் உறவு கொண்டிருப்பதையும் என் சிறுகதைகளில் அது இல்லாதிருப்பதையும் உணர்ந்தேன். இந்த மனோபாவம் தொடர்பான முக்கிய சம்பவமொன்று நடந்தது. 1948 ஏப்ரல் ஒன்பதாம் தேதி அரசியல் தலைவர் கெய்தான் சுடப்பட்டார். ஜனங்கள் பைத்தியம் பிடித்தாற் போல் கூச்சலிட்டபடி வீதிகளில் சென்றனர். விடுதிகளில் மதியவுணவு சாப்பிட உட்கார்ந்த போது செய்தியைக் கேள்விப்பட்டேன். நடந்த இடத்துக்கு ஓடினேன். டாக்ஸியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விடுதிக்குத் திரும்பும் வழியில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்து கடைகளைச் சூறையாடி கட்டிடங்களை 


எரித்தனர். அவர்களுடன் இணைந்தேன். என்ன மாதிரி நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். சிறுகதைகள் துளியும் தொடர்பு இல்லாமல் அதனுடன் இருப்பதையும் அன்று மதியத்தில், மாலையில் உணர்ந்தேன், 


குழந்தைப்பருவத்தில் வாழ்ந்திருந்த கரீபியப்பிரதேச பாரன்க்வுல்லாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டபோது அத்தகையதோர் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருந்தான் என்பதையும் எழுத விரும்பினேன் என்பதையும் உணர்ந்தேன். 


1950-51 வாக்கில் எழுத்துக்கு அடுத்த பாதிப்பு. அரக்காடக்காவில் பிறந்த வீட்டை விற்பதற்காக அம்மா கூட்டிச் சென்றாள். இடத்தை அடைந்தபோது அதிர்ச்சியடைந்தேன். இருபத்திரண்டு வயதாகியிருந்த நான் எட்டு வயதுக்குப் பிறகு போகவே இல்லை. அங்கு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலன்றி வாசிப்பதாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். சும்மா உட்கார்ந்தபடி ஏற்கனவே இருப்பதை நான் வாசித்துக் கொண்டிருப்பதை எழுதினால் போதும் என்று உணர்ந்தேன், எல்லாமே இலக்கியமாக உருப்பெற்றிருந்தன. வீடுகளும் ஜனங்களும் நினைவுகளும். ஏற்கனவே வில்லியம் ஃபாக்னரைப் படித்துவிட்டிருந்தேனா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவருடைய எழுத்துமுறை மட்டுமே பார்த்ததை எழுத்தாக்க உதவியிருக்கும் என்று இப்போது பரிகிறது. கிராமத்தின் சூழலும் வெக்கையும் வீழ்ச்சியும் கிட்டத்தட்ட ஃபாக்னரிடம் உணர்ந்ததைப் போல. வாழைத்தோட்டப் பிரதேசமான அங்கே பழக்கம்பெனிகளால் குடியேற்றப்பட்ட ஏகப்பட்ட அமெரிக்கர்கள் வாழ்ந்தது தொலைதூரத் தெற்கத்தி 


51அழுத்தாளர்களின் சூழலை ஒத்திருந்தது. என் எழுத்தில் ஃபாக்னர் செலுத்தும் பாதிப்பு பற்றி எழுத்தாளர்களின் . விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை எதேச்சையானதாகக் கருதுகிறேன். ஃபாக்னர் கையாள்கிற அதே மாதிரியான விஷயத்தைக் கையாள்கிறேன். 


இலைப்புயல் என்ற முதல் நாவலைத் திரும்பியதும் எழுத ஆரம்பித்தேன். குழந்தைப்பருவத்தில் நடந்த அத்தனையும் இலக்கியத்துவம் கொண்டவை என்பதை உணர்ந்துகொண்டு போற்றவும் தொடங்கினேன். நாவல் எழுதிய சமயத்தில் எழுத்தாளனாக விரும்பியதையும் உணர்ந்தேன். யாரும் தடுத்துவிடப் போவதில்லை. செய்ய வேண்டியது எல்லாம் உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளன் ஆக முயல்வதுதான் என்று உணர்ந்தேன். 1903 ஆம் வருஷம் இதெல்லாம் நடந்துவிட்டாலும் என் எட்டுப்புத்தகங்களில் ஐந்தை எழுதிமுடித்த பிறகு 1967-ஆம் வருஷத்தில்தான் முதல் ராயல்டித் தொகையைப் பெற முடிந்தது. 


&& குழந்தைப்பருவ அனுபவங்களின் மதிப்பை உதாசீனப்படுத்துவதும் அறிவு பூர்வமாக செயல்படுவதும் உங்களிடம் இருந்தைப் போல எழுத்தாள இளைஞர்களிடம் அதிகமாக இருக்கின்றன என்று சொல்ல முடியுமா. 


இல்லை. எழுத்தாளனின் வளர்ச்சிக்கிரமம் நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஆனால் எழுத்தாள இளைஞர்கள் தங்களுக்கு நடப்பவை பற்றி எழுதுமாறுதான் வேண்டுமென்றால் ஆலோசனை சொல்வேன். தனக்கு நேர்வதைப் பதிகிறானா, படிப்பதையோ கேள்விப்படுவதையோ மாற்றி முன்வைக்கிறானா என்பதை

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்